Showing posts with label 1907. Show all posts
Showing posts with label 1907. Show all posts

Thursday, 29 July 2021

A.V MEIYAPPA CHETTIAR , PIONEER OF FILM INDUSTRY BORN 1907 JULY 28 - 1979 AUGUST 12

 

A.V MEIYAPPA CHETTIAR , PIONEER OF FILM INDUSTRY  BORN 1907 JULY 28 - 1979 AUGUST 12



ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) (28 சூலை 1907–12 ஆகத்து 1979), ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.[2] தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)[3]. தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், சிறீ வள்ளி, களத்தூர் கண்ணம்மா ஆகியன.


இளம்பருவம்

மெய்யப்பர் காரைக்குடியில் வாழும் நகரத்துச் செட்டியார் குடும்பத்தில், ஆவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் யூலை, 28, 1907.[4] ஆவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார்.[1] இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர்.[4][5] தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார்.[1][2][4] தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.[4]



திரைத்துறையில் தொடக்கக் காலம்

டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.[2] 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படமான அல்லி அருச்சுனா என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார்.[2][4] 1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார்.[4] நந்தக் குமார் என்ற இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார்.[6][7] இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார். லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே.[4] 1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார்.[1] அதே ஆண்டில், பூகைலாசு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் கன்னட மொழி நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட சபாபதி, போலி பாஞ்சாலி, என் மனைவி ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான அரிச்சந்திரன் பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.[1][7] பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.


ஏவியெம் புரொடக்சன்சு


ஏவிஎம் நிறுவன முத்திரை

நவம்பர் 14, 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) சென்னையின் சாந்தோமில் நிறுவினார். கோடம்பாக்கத்தில் இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை காரைக்குடியில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் வேதாள உலகம் ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, நாம் இருவர் என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார்.[4][8] இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது.[9] இதைத் தொடர்ந்து வெளியான வேதாள உலகம், வாழ்க்கை ஆகிய திரைப்படங்களும் பெருவெற்றியடைந்தன. பரவலாக அறியபப்டும் வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்படம் வாழ்க்கை. பின்னாளில் வைஜெயந்திமாலா புகழ்பெற்ற முன்னணி நடிகையாக விளங்கினார்.[10] 25 வாரங்கள் தொடர்ந்து வெளியான இத்திரைப்படம் ஜீவிதம் என்ற பெயரில் தெலுங்கிலும்[11], பகர் என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. வாழ்க்கை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், வங்காளம், சிங்களத்திலும் திரைப்படங்களைத் தயாரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின், ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.


1950களில்

1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்)பராசக்தி திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. மு. கருணாநிதியால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான சிவாஜி கணேசன் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[12] தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார்.[12][13][14] ஏவிஎம் வெளியிட்ட அந்த நாள் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.[15] இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன.[16] இதில் இரண்டாம் உலகப் போரின்போது ஊடுருவிய யப்பானியருடன் சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.[17] இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், அகிரா குரோசவாவின் ரசோமோன் என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில், சடகபாலா என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான சடகபாலம் என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது.[18][19] 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் பூகைலாசு என்ற திரைப்படம் வெளியானது.[20] இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை பக்த ராவணா எனத் தமிழிலும், பக்தி மகிமா என இந்தியிலும் வெளியிட்டனர்.[21]


1960கள்

1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சிவாசி கணேசன், செமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமலஃகாசன் அனாதைச் சிறுவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் நாகேசும், தொடர்ந்து வெளியான மேசர் சுந்தரராசன் திரைப்படமும் வெற்றியடைந்தன. மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் நடித்த சுந்தரராசன் தன் பெயரை மேசர் சுந்தரராசன் என் மாற்றிக் கொண்டார். ஏவியெம் நிறுவனம் வெளியிட்ட பவித்ர பிரேமா, பெஞ்சின பிரேமா, நாடி ஆட சன்மே, சிட்டி செல்லுலு, லேத மனசுல, மூக நோமு ஆகிய தெலுங்குத் திரைப்படங்களும் வெற்றியடைந்தன.




இருப்பினும் ஏவியெம்மின் பெரிய வெற்றியைத் தந்தது பக்த பிரகலாதா என்னும் திரைப்படமே. இது தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. வைணவர்களின் புராண நாயகரான நரசிம்மரை பற்றிய கதை இது. சித்திரப்பு நாராயண மூர்த்தி இயக்கத்தில், கிரணியகசிபுவக ரங்கா ராவும், பிரகலாதனாக குழந்தை ரோசாமணியும் நடித்தனர். இதை முன்பு கருப்பு வெள்ளைத் திரையில் எடுத்து வெளியிட்டார். திரைப்படம் தோல்வியடைந்தது. பிரகலாதனைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகம் அறியப்படுகிறது. சரோஜா தேவி, நாகேசு, எம். ஜி. ஆர் நடித்து வெளியான அன்பே வா என்ற திரைப்படமும் வெற்றி பெற்றது.


இந்தித் திரைப்படங்கள்

திரைத்துறையில் இணைந்ததிலிருந்து பல வட இந்திய இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். 1938 இல் வெளியான நந்தகுமார் என்னும் திரைப்படம் மராத்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் இந்தித் திரைத்துறையில் நுழைந்தார். பகார் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இதில் வைசெயந்திமாலா, கரன் திவான், பண்டரி பாய், பிரான், ஓம் பிரகாசு, டபசும் நடித்திருந்தனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான வாழ்க்கை என்னும் திரைப்படத்தைத் தழுவி வெளியானது. இது வைசெயந்திமாலாவின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டில், வைசெயந்தி மாலாவின் நடிப்பில் லட்கி என்னும் இந்தித் திரைப்படத்தைத் தயாரித்தார். இவ்விரண்டு திரைப்படங்களும் ஓரளவு வெற்றி பெற்றன. 1957 ஆம் ஆண்டில், அம் பஞ்சி ஏக் தால் கி என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதாக இருந்ததால், பிரதமர் தங்கப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார். தமிழ்த் திரைப்படமான மிச்சியம்மா இந்தியில் பாய் பாய் என்று வெளியானது. இது மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலுக்காக நன்கு அறியப்படுகிறது. பாபி என்னும் திரைப்படத்தில் ஜக்தீப், பண்டரி பாய், பால்ராஜ் சஹ்னி, நந்தா ஆகியோரும் நடித்தனர். இந்தித் திரைப்படங்களான மிஸ் மேரி, பக்தி மகிமா, பக்த் பிரக்லாத் ஆகிய திரைப்படங்கள் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை மொழிமாற்றி எடுக்கப்பட்டவை. 1961 ஆம் ஆண்டில் நிருபா ராய்க்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. ஏவியெம் தயாரித்த பிற இந்தித் திரைப்படங்களுள் சில: மன் மௌஜி, மெயின் சூப் ரகுங்கி, பூஜா கே பூல், மெக்ர்பான். மெய்யப்பரின் கடைசி இந்தித் திரைப்படமான ஜைசே கோ தைசா, 1973 ஆம் ஆண்டு கிருசுணா- பஞ்சு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது





ஏவி.எம். அறக்கட்டளை

மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அது சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது.


கட்டிடங்கள்

இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர்.


கல்வி நிறுவனங்கள்

இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.


அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு

1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த சூலை 28ஆம் நாள் சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவு, அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இது சென்னை ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. கம்பராமாயணத்தை ஆராய்ந்து வல்லுநர் ஒருவர் இந்நாளில் சொற்பொழிவாற்றுவார். அச்சொற்பொழிவு வானதி பதிப்பகத்தால் நூலாக்கப்பட்டு ஆகத்து மாத நடுவில் நடைபெறும் சென்னை கம்பன் கழக விழாவில் வெளியிடப்படும். அவ்வகையில் இதுவரை ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள்:



கருப்பு, வெள்ளை திரைப்படம், பலரது வாழ்க்கையை வண்ணமயமாக்கி விடும் என்ற காலகட்டம் அது. 1949, டிசம்பர், 22ல், வெளிவந்த, ‛வாழ்க்கை என்ற, திரைப்படமும் அப்படிப்பட்டது தான் என, ஏ.வி.எம்., எனப்படும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரிப்பில் உருவான அந்த திரைப்படத்துக்குப் பின் உள்ள வரலாற்றை, விவரித்தார் ஏ.வி.எம்.சரவணன்.


என் தந்தை, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் எப்போதும் புதுமை விரும்பி. சிறு வயதில், தாத்தாவின் வணிகத்தை கவனித்தார். பின், கிராமபோன் ரெக்கார்டுகளில், தமிழ் பாடல்களை பதிவு செய்து, விற்பனை செய்தார். பின், பாரதியார் பாடல்களை ஒலி, ஒளி அமைக்க உரிமை பெற்றிருந்தார். பேசும் படங்கள் வந்த போது, மும்பையிலும், கோல்கட்டாவிலும் இருந்த ஸ்டுடியோக்களில், படப்பிடிப்பு நடத்தி, தமிழ் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டார்; அதில், நஷ்டப்பட்டார். நஷ்டத்தை ஈடுகட்ட, சென்னையில், பிரகதி ஸ்டுடியோவை நிறுவி வெற்றிப்படங்களை கொடுத்தார். பின், பங்குதாரர்கள் ஒத்துழைப்பின்மையால், ஸ்டுடியோ விற்கப்பட்டது.


புதிய ஸ்டுடியோ அமைக்க முயற்சித்த போது, இரண்டாம் உலகப்போர் நடந்ததால், சென்னையில், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், எங்களின் சொந்த ஊரான காரைக்குடியில் இருந்த, தேவக்கோட்டையில், ஜமீன் இடத்தில், ஷெட் போட்டு, நடிகர்களை, ஆண்டுக் கணக்கில் ஒப்பந்தம் செய்து, படங்களை தயாரித்தார். படங்கள் வெற்றியடைந்ததால், திடீரென வாடகையை பல மடங்கு உயர்த்தினார் ஜமீன். காரைக்குடியில் படப்பிடிப்பு நடத்தினாலும், பிரின்ட் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு, சென்னை வர வேண்டியிருந்ததால், ஜமீன் இடத்தை காலி செய்தார். அப்போது, இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தது.





சென்னையில் மீண்டும் ஸ்டுடியோ அமைக்க முயற்சித்தார். வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு மேற்கில், தோல் கிடங்கு வைத்திருந்த முஸ்லிம் ஒருவர், அதைக் காலி செய்து விட்டு, பாகிஸ்தான் சென்றார். அவரின், 10 ஏக்கர் நிலத்தை, 37 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு வாங்கினார் தந்தை. அதில், சினிமா ஸ்டுடியோவுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்ததோடு, நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கவும், தனித்தனி குடில்களை அமைத்தார்; அது தான், ஏ.வி.எம்., ஸ்டுடியோ.


ஏற்கனவே, புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையும் எடுத்து, அது, டிரண்டான நிலையில், அதிலிருந்து மாறுபட்ட கோணத்தில் படத்தை எடுத்தால், நன்றாக இருக்கும் என சிந்தித்து, சமூக நாடகமான, வாழ்க்கையை, படமாக தயாரிக்க முடிவெடுத்தார். கதாசிரியர் ப.நீலகண்டனிடம் அனுமதியும் பெற்றார். அந்த படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரன், கதாநாயகன். பெண்ணை ஏமாற்றும் கதாபாத்திரத்தில், கே.டி.சந்தானம், ஏமாறும் பெண்ணாக, பண்டரிபாய், கதாநாயகியின் தந்தையாக சாரங்கபாணி என, நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


கல்லுாரி செல்லும் பாத்திரத்துக்கான கதாநாயகி கிடைக்கவில்லை. இந்த தேடலுக்கிடையில், தமிழ் தெரியாத பண்டரிபாய்க்கு, இரண்டு மாத தமிழ் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் பேசிய தமிழ் சரியாக இல்லாததால், அவரின் கதாப்பாத்திரத்தில், டி.கே.சண்முகம் நாடகக் குழுவில் நடித்த, துரவுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகி தேடலின் போது, அப்போதைய நடிகை வசுந்தராவின் மகள், வைஜெயந்திமாலாவின் பரத நாட்டிய நிகழ்ச்சியை, விக்டோரியா ஹாலில் பார்த்து வியந்த அப்பா, அவரையே கதாநாயகியாக்க முடிவு செய்தார். அவருக்கு, மாதம், 2,350 ரூபாய் சம்பளமாக நிர்ணயித்து, ஒப்பந்தம் செய்யப்பட்டது. மூன்று மாதங்களில் படம் தயாரானது.




முதலில், அலுவலர்களை படம் பார்க்க வைத்தார், அப்பா. அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில், மீண்டும் படப்பிடிப்பு நடத்தி, படத்தில் சில திருத்தங்கள் செய்து, வெளியிட்டார். முறைப்படி, 1949, டிச., 22ம் தேதி, சென்னை, பாரகன் டாக்கீசில் ரிலீசானது. ஆனால், அதற்கு முந்தைய நாள் நல்லநாள் என்பதால், காரைக்குடியில், எங்களுக்குச் சொந்தமான சரஸ்வதி டாக்கீசில் ரிலீஸ் செய்தார். படம் வெளியாகி, சென்னையில் மட்டும், 25 வாரங்கள் ஓடியது. இதில், ராஜேஷ்வரி பாடிய ‛டடடா டடடா பாடல், பலராலும் முணுமுணுக்கப்பட்டது.


அது, கிடுக்கி என்ற, தெலுங்குப் பட பாடலின் மெட்டு. இந்த படத்தில் அசோசியேட் டைரக்டர்களாக இருந்த, எம்.வி.ராமன், இதே கதையை, ஜீவிதம் என்ற பெயரில், தெலுங்கில் இயக்கினார். அதுவும், பெருவெற்றி பெற்றது. இன்னொரு, அசோசியேட் டைரக்டராக இருந்த, ப.நீலகண்டன், சி.என்.அண்ணாதுரையின் விருப்பத்தின் படி, எங்களின் அடுத்த படமான, ஓர் இரவு படத்துக்கு இயக்குனரானார். வாழ்க்கை திரைப்படத்தின் தென்னிந்திய வெற்றியை அடுத்து, ஹிந்தியில், பகார் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அப்போது, வைஜெயந்தி மாலா, ஏ.வி.எம்., நிறுவனத்தில் தொடர்ந்து நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அதனால், பகாரில், கவர்ச்சி வேடத்தில், கதாநாயகியாக நடித்தார்.


தமிழில் வாய்ப்பிழந்த பண்டரிபாய், ஹிந்தி படத்தில் நடித்தார். பகார், வட மாநிலங்களில் வியக்கத்தக்க வெற்றி பெற்றது. கதாநாயகியின், பாம்பாட்டி பாடல், அங்குள்ளவர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வெற்றிக்குப் பின், ஹிந்தி பட தயாரிப்பாளர் ஒருவர், வைஜெயந்தி மாலாவின் வீட்டுக்கே சென்று, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, 50 ஆயிரம் ரூபாய் முன்பணமும் தந்துவிட்டு, ஹிந்திப் படத்தில் நடிக்க அழைத்தார். ஹிந்தி திரை உலகில் இருந்து, தமிழ் நடிகையைத் தேடி வந்த முதல் நிகழ்வு அது தான். புதிதாக துவக்கப்பட்ட, ஏ.வி.எம்., நிறுவனம், அறிமுக இணை இயக்குனர்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் என, பலருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது, அந்த வாழ்க்கை திரைப்படம் தான்.


இவ்வாறு, அவர் கூறினார்.


எல்லா பெருமையும் ஏ.வி.எம்., - எம்.வி.ஆருக்கே

இந்த படத்தில் நடித்தது குறித்து, வைஜெயந்தி மாலா பாலி பகிர்ந்து கொண்டது: என், திரையுலக, வாழ்க்கையை துவக்கி வைத்த, வாழ்க்கையை நினைப்பதே சந்தோஷமாக உள்ளது. நான் அப்போது, சென்னை, சர்ச் பார்க் கான்வென்டில், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்று, சபாக்களில் நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த, ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும், இயக்குனர் எம்.வி.ராமனும் மிகவும் பாராட்டினர்.


எம்.வி.ராமன், எங்கள் குடும்ப நண்பர். இருவரும், என் வீட்டுக்கு வந்து, என் அப்பாவிடம், புதிய படத்தில் நடிக்க வைக்கும் படி கூறினர். முதலில், எங்கள் வீட்டில் தயங்கினாலும், படக்குழுவினர் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால் ஒப்புக்கொண்டனர். எனக்கு, படம் நடிக்க வாய்ப்பு வந்ததால், தோழிகள் கேலி செய்வரோ என, கூச்சமாகவே இருந்தது. படப்பிடிப்பு துவங்கியது. வாழ்க்கையில் நான் எப்படி இருந்தேனோ அப்படியே தான் அங்கும் இருந்தேன். படத்தில், டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரியின் பாடல்கள் இடம் பெற்றன. பாரதியார் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


பின், தெலுங்கில், ஜீவிதம் என்ற பெயரில் வெளியானது, அதில், நான் மட்டுமே தமிழ் நடிகை. அந்த படமும் சூப்பர், ஹிட் ஆனது. அதன்பின், ஹிந்தியில் தயாரானது. அங்கு, என் நாட்டியத்தையும், குழந்தைத் தனமான நடிப்பையும் வெகுவாக பாராட்டினர். அதிலும், நான் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திரம். ஹிந்தியிலும், நானே சொந்த குரலில் பேசியிருந்தேன். அதுவரை, தமிழ் நடிகையாக இருந்த நான், அந்த படத்துக்குப் பின், அகில இந்திய நடிகையாகி விட்டேன். இப்போதும், என்னைப் பார்க்கும் பலர், வாழ்க்கை படத்தைப் பற்றி நினைவு கூர்கின்றனர். அந்த புகழெல்லாம், ஏ.வி.எம்.,முக்கும், எம்.வி.ஆருக்கும் தான் போய்ச் சேரும்.


இவ்வாறு, அவர் கூறினார்.


திரையின் வெளிச்சத்தில் ஒளிரும் அந்த மூன்றெழுத்தும், அதன் பின்னணியில் ஒலிக்கும் இசையும் தரத்தின் சான்று. வன்முறையற்ற, ஆபாசமற்ற, எல்லோரும் பார்க்கத் தகுந்த திரைப்படம் என்பதன் ஐ.எஸ்.ஐ முத்திரை அது. தமிழ் திரையுலகுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் கலாபூர்வமாகவும் உயரிய அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது அந்த மூன்றெழுத்து. தமிழ் உள்ளவரை, கலை உள்ளவரை காலத்தின் உயிர்ப்பாய் நிலைத்திருக்கும் அந்த மூன்றெழுத்து... AVM.

திறன்மிக்க பல கலைஞர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவுக்கு தந்த அப்பச்சி, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிறந்தநாள் இன்று. பல்லாண்டுகள் கடந்தும், இன்றும் திரையுலகச் சின்னமாகச் செயல்படும் ஏவி.எம் நிறுவனத்தின் வேர். அவரது வாழ்க்கை சாகசங்களால் நிரம்பியது. இழப்புகளுக்கு உடைந்து போகாமல், கனவுகளைச் சிதறவிடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து அடுத்து அடுத்தென்ற அவரது நகர்வுகள், ஒரு மாபெரும் இயக்கமாக ஏவி.எம் நிறுவனத்தை வளர்த்தெடுத்தன.




உங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா!


Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.


Sign-up to our newsletter

செட்டி நாட்டின் மையமான காரைக்குடியில் 1907 ஜூலை 28-ம் தேதி பிறந்தார் அப்பச்சி. அப்பா பெயர் ஆவிச்சி செட்டியார். அம்மா பெயர், லட்சுமி ஆச்சி. 9-ம் வகுப்பு வரையே படித்த மெய்யப்பனுக்கு, ஆங்கிலத்தில் பேசுவது கனவாக இருந்தது. சுயமாக ஆங்கிலச் செய்தித்தாள்களை வாங்கிப் படித்து அகராதிகளில் பொருள்தேடிப் படித்தார். அந்த தீவிரம்தான், உலகம் முழுவதும் வெற்றியாளராக சுற்றி வரவும், ஜெர்மானியர்களோடு வணிகம் செய்யவும் காரணமாக இருந்தது.


ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நினைவு தபால் தலை 

ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நினைவு தபால் தலை

சிறு வயதிலேயே வணிகத்தில் தீவிர ஆர்வம் இருந்தது மெய்யப்பனுக்கு. அப்பா நடத்திய கடையில் அவருக்கு உதவியாக இருந்து வணிக நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். 22 வயதில் ஃபோர்டு கார் கம்பெனியின் முகவரானார். ஒரு கட்டத்தில் சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 1932 செப்டம்பரில் `சரஸ்வதி ஸ்டோர் ரெக்கார்டிங் கம்பெனி' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, கர்நாடக சங்கீத உரிமைகளைப் பெற்று இசைத்தட்டுகளை வெளியிட்டார். அந்த முயற்சி வெற்றிதேடித்தர படிப்படியாகத் திரைத்துறையில் தீவிரமானார்.




அக்காலகட்டத்தில் இந்திய திரையுலகின் மையமாக இருந்தது கொல்கத்தா. தென்னிந்தியாவில் திரைப்படம் எடுப்பதற்குரிய ஸ்டூடியோவோ, வசதிகளோ இல்லை. நண்பர்களோடு சேர்ந்து கொல்கத்தா சென்று அல்லி அர்ஜுனா, ரத்னாவளி, நந்தகுமார் போன்ற திரைப்படங்களை எடுத்தார். ஆனால், அந்தத் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. பெரும் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், முடங்கவில்லை ஏவி.எம்.


தோல்விக்கான காரணங்களை அலசினார்.


`செலவு, மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. நம்மூரில் போதிய வசதியிருந்தால் முதலீட்டைக் குறைக்கலாம்...'


அந்த சிந்தனை, நாமே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன என்ற முடிவில் வந்து நின்றது. செயலில் இறங்கினார். 1940-ல், சென்னை, விஜயநகர பேலஸில் பிரகதி ஸ்டுடியோவைத் தொடங்கினார். பூகைலாஷ், திருவள்ளுவர் போன்ற படங்களைத் தயாரித்தார். சபாபதி என்ற படத்தை அவரே இயக்கினார். அந்தப் படத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி மனம் திறந்து பாராட்டினார்.



திரைக்கலைக்கு ஏதுமொழி... தமிழைக் கடந்து கன்னடத்துக்குப் பயணமானார் ஏவி.எம். வசந்தசேனா, அரிச்சந்திரா என அவர் எடுத்த கன்னடப் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்தப் படங்களைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். திரையுலகில், ஒருமொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு டப் செய்தது அதுதான் முதல்முறை. இந்தியாவே இந்த முயற்சியை வியந்து பார்த்தது. திரை மொழியும், தொழில்நுட்பமும் மெய்யப்பனுக்கு கைவந்த கலையாக இருந்தது. கலைஞர்களை கச்சிதமாகப் பயன்படுத்தி திறனை வெளிக்கொண்டு வந்தார். படங்கள் அடுத்தடுத்து வெற்றிக்கொடி நாட்ட, கலைஞர்களுக்கும் தனி அடையாளம் கிடைத்தது.


AVM Studios 

AVM Studios

Melanie M | Wikimedia Commons | CC BY

சென்னை வடபழனியில் சுற்றும் ஏவி.எம் உலக உருண்டை சென்னைக்கு அடையாளமாக இருக்கிறது. ஆனாலும், ஏவி.எம் நிறுவனம் முதலில் இயங்கத் தொடங்கியது காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டை ரஸ்தாவில். ஜமீன்தார் நாடகக் கொட்டகை `ஏவி.எம் ஸ்டுடியோ' ஆனது. கீற்றுக்கொட்டகையில் தொடங்கிய ஏவி.எம் ஸ்டுடியோதான் இன்று பெருமரமாக விரிந்து நிற்கிறது.



ஏவி.எம்மின் முதல் தயாரிப்பு நாம் இருவர். அந்தப் படத்தில் பாரதியாரை பாடலாசிரியராக்கினார் மெய்யப்பன். பாரதியார் பாடல்களின் உரிமையை வைத்திருந்த ஜெய்சிங் லால் கே.மேதா என்பவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து பெற்று மெய்யப்பன், படத்தில் பயன்படுத்தினார். `ஆடுவோமே... பள்ளு பாடுவோமே', `வெற்றி எட்டுத்திக்கும் என கொட்டுமுரசே' போன்ற பாரதியாரின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கத் தொடங்கின.


முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பாரதியார் பாடல்களை அரசுடமையாக மாற்ற விரும்பினார். அவற்றின் உரிமையை வைத்திருந்த மெய்யப்பனை அணுகி, `எவ்வளவு பணம் வேண்டும்' என்று கேட்க, `பாரதி இந்தத் தேசத்தின் சொத்து... 1 ரூபாய்கூட வேண்டாம்' என்று மொத்தமாக அள்ளிக் கொடுத்தார் மெய்யப்பன்.



பல தொழில்நுட்பங்களைத் திரையில் அறிமுகப்படுத்தினார் மெய்யப்பன். கிராபிக்ஸ் பற்றி எவரும் சிந்தித்திராத காலகட்டத்தில் `வேதாள உலகம்' படத்தில் மந்திர, தந்திரக் காட்சிகளெல்லாம் கேமராவைப் பயன்படுத்தியே எடுத்துக்காட்டி மிரள வைத்தார். எங்கிருந்தோ ஒரு தட்டு நகர்ந்து வர, அதில் பலகாரங்கள் படிப்படியாக வந்து அமர, தானே நகர்ந்து வந்து சுற்றி நிற்கும் தட்டு ரசிகர்களைக் குதூகலிக்க வைத்தது. இந்தப் படத்தையும் ஏவி.எம்மே இயக்கினார். பாடல்களே இல்லாமல், `அந்த நாள்' படத்தை எடுத்து திரும்பிப் பார்க்க வைத்தார். அந்தப் படத்தைப் பார்த்துதான் சினிமா எடுக்க வேணடும் என்ற ஆசை வந்தது என்று கூறியிருக்கிறார் மணிரத்னம்.


ஏவி.மெய்யப்ப செட்டியார் 

ஏவி.மெய்யப்ப செட்டியார்

Photo: Vikatan

பிறகு சகல வசதிகளுடன் சென்னையில் ஏவி.எம் ஸ்டுடியோவை உருவாக்கினார் மெய்யப்பன். `வாழ்க்கை', அங்கிருந்து வெளிவந்த முதல் திரைப்படம். ப.நீலகண்டனின் கதை வசனத்தில், இதையும் மெய்யப்பனே இயக்கினார். `ஓர் இரவு' திரைப்படம் பல புதுமைகளைக் கொண்டு வந்தது. ஒரே இரவில் கதை வசனம் எழுதித்தந்தார் அண்ணா. பாரதிதாசனின், `துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற பாடல் இப்போதும் இதயத்தைத் தாலாட்டிக்கொண்டிருக்கிறது. பிறகு, பி.ஏ.பெருமாளோடு இணைந்து மெய்யப்பன் தயாரித்த `பராசக்தி' வரலாறானாது.



1956-ல் எடுத்த `குலதெய்வம்' பெண்கள் மறுமணம் பற்றிப் பேசியது. இந்தப் படத்தின் வசனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதலில் வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் வசனகர்த்தா பெயர் இல்லை. வசனம் பரபரப்பாகப் பேசப்பட்டதும் இரண்டாவது வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் `மாறன்' என்று போட்டார்கள். எந்த மாறன் என அடையாளக் குழப்பம் ஏற்பட, அதன்பின் அடிக்கப்பட்ட சுவரொட்டிகளில் `வசனம் - முரசொலி மாறன்' என்று போடப்பட்டது. `மாறன்', `முரசொலி மாறனா'னது அந்தக் கணத்தில்தான். 1933-ல் ஏவி.எம்முக்குத் திருமணமானது. மனைவி, ராஜேஸ்வரி. தன் மனைவியை சிறந்த மதியூகி என்று கூறியிருக்கிறார் ஏவி.எம். வெளியூர் சென்றால் உடன் ராஜேஸ்வரியும் வர வேண்டும் என்று விரும்புவார். கண்டிப்பாக பச்சை புடவை கட்டி வர வேண்டும் என்பது சென்டிமென்ட்.


திரைக்கலைக்காக ஏராளமான விருதுகளையும் அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பெற்றிருக்கிறார் ஏவி.எம். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்கள் ஏவி.எம்மோடு பணிபுரிந்திருக்கிறார்கள். பழனிச்சாமியாக இருந்தவரை `காக்கும் கரங்கள்' படத்தில் சிவகுமாராக்கி அறிமுகம் செய்தார் ஏவி.எம்.


தன் வெற்றிக்குப் பின்னணியாக இருந்த தொழிலாளர்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார் ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அருகிலேயே குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தார். பலருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காகத் தன் அப்பா பெயரில் பள்ளியும் தொடங்கினார். எப்போதும் எவரும் அணுகும் வகையில் இறுதி வரை வாழ்ந்தார்.



ஏவி.எம்மால் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.


``175 படங்கள்... 75 ஆண்டுகளைக் கடந்து இயங்கும் ஸ்டூடியோ... நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. இன்று ஏவி.எம் நிறுவனம் பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. என் சினிமா ஆர்வத்தைக் கண்டு தந்தை ராம சுப்பையா ஏவி.எம்மிடம் என்னை அழைத்துச் சென்றார். அப்போது நான் கண்ணதாசன் நடத்திய `தென்றல்' பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். அதைப்பற்றிக் கேட்ட ஏவி.எம், ``நீ பத்திரிகையில எடிட்டிங் பிரிவுல வேலை செஞ்சிருக்கே... சினிமா பத்தி கத்துக்க மிகச்சிறந்த இடம் எடிட்டிங் பிரிவுதான். அங்கே போ..." என்று அனுப்பி வைத்தார். 5 ஆண்டுகள் எடிட்டிங்கில் இருந்தேன். ஏவி.எம்மின் மகன் குமரனும் என்கூட எடிட்டிங் பிரிவில் டிரையினியாக இருந்தார். `களத்தூர் கண்ணம்மா' படம் எடுத்தபோது, என்னை உதவி இயக்குநராக அழைத்தார் குமரன். ஆனால் எடிட்டராக இருந்த சூர்யா என்னை அனுப்ப மறுத்தார். ஆனால், ஏவி.எம் தலையிட்டு `முத்துராமனை அனுப்பு' என்றார். அங்கிருந்துதான் என் திரைப்பயணம் தீவிரமானது.


ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 

ஏ.வி.மெய்யப்ப செட்டியார்

Photo: Vikatan

ஏவி.எம் கடுமையான உழைப்பாளி. இரவு, பகல் ஸ்டூடியோவிலேயே இருப்பார். கேட்டால், `எனக்குப் பிடித்த விஷயம் இது. அதனால் இருக்கிறேன்' என்பார். தவறுகளை நுட்பமாகக் கண்டுபிடிப்பார். குறை பொறுக்கவே மாட்டார். கடுமையாகக் கண்டிப்பார். நல்ல விஷயங்களை மனம் திறந்து பாராட்டுவார். நேரத்தை அவரளவுக்கு திட்டமிட முடியாது. காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலான வேலைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொள்வார். ஒவ்வொரு வேலையாக முடிய முடிய சீட்டில் அழித்துக்கொண்டு வருவார். ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்க மாட்டார். அவரது வழிகாட்டுதல்தான் எங்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கையைத் தந்தது. இது ஏவி.எம்முக்கு 113 வது பிறந்தநாள். காலம் இருக்கும்வரை அவர் நிலைத்திருப்பார்..." என்று நெகிழ்கிறார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்.



தான் நேசித்த கலையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, மிகவும் நேர்மையாக வாழ்ந்த ஏவி.எம் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அருகில் வந்து மகன் சரவணன் நிற்க, ``அதோ ஒரு லைட் வீணா எரியுது பார்... அணை" என்றார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள். யாருடைய பொருளாகினும் வீணாகக் கூடாது. அந்தப் பொறுப்புணர்வுதான் ஏவி.எம்மின் வெற்றி.

1979 ஆகஸ்ட் 12 அன்று அந்தப் பெருவிளக்கு அணைந்தது. ஆனால், அந்த விளக்கு எழுப்பிய வெளிச்சம் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்!


Monday, 7 June 2021

DURGA DEVI ,FREEDOM FIGHTER CALLED AS DURGA BHABI BORN 1907 OCTOBER 7 - 1999 OCTOBER 15

 

DURGA DEVI ,FREEDOM FIGHTER 

CALLED AS DURGA BHABI BORN 

1907 OCTOBER 7 - 1999 OCTOBER 15





இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழகத்தின் (எச்.எஸ்.ஆர்.ஏ) புரட்சியாளர்களின் வட்டத்தில் “துர்கா பாபி” என்று அழைக்கப்படும் துர்கா தேவி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். புரட்சியாளர்களான பகத்சிங், சுக்தேவ் தாப்பர், சந்திரசேகர் ஆசாத் மற்றும் எச்.எஸ்.ஆர்.ஏவின் பிற உறுப்பினர்களுடன் அவர் இணையாக பணியாற்றினார். அவரது கதை தைரியம், தைரியம் மற்றும் கண்ணியத்துடனும் வீரத்துடனும் போராட ஒரு அமைதியான உறுதியை நமக்குத் தூண்டுகிறது. தனது காலத்தின் பல பெண் புரட்சியாளர்களைப் போலவே, துர்கா தேவியும் தனது தாயகத்திலிருந்து எதேச்சதிகார அரசாங்கத்தை விரட்டியடித்தது மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான பாதையை வடிவமைக்கவும் போராடினார்.




ஆரம்ப கால வாழ்க்கை


1907 அக்டோபர் 7 ஆம் தேதி அலகாபாத்தில் குடியேறிய குஜராத்தி பிராமண தம்பதியினருக்கு துர்கா தேவி பிறந்தார். தாயின் மறைவு மற்றும் அவரது தந்தையின் மறுப்பு அல்லது சன்யாஸ் ஆகியவற்றின் சபதத்திற்குப் பிறகு, அவள் அத்தை பராமரிப்பில் வளர்ந்தாள். அவர் பதினொரு வயதில் பகவதி சரண் வோஹ்ராவை மணந்தார். அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அவரது ஒருங்கிணைந்த வாழ்க்கையின் தொடக்கத்திலேயே தொடங்கின.

பட ஆதாரம்: புராண இந்தியா



ஒரு புரட்சியாளரை உருவாக்குதல்

அவரது காலத்தின் பல திருமணங்களைப் போலல்லாமல், துர்கா தேவிக்கு ஒரு மனிதர் வழங்கப்பட்டார், அவர் தனது உண்மையான தோழராக ஆனார். அவர் ஏற்கனவே சுதந்திர இயக்கத்தை நோக்கி சாய்ந்திருந்தார். இவ்வாறு, துர்கா தேவி சங்கத்தின் உறுப்பினராக இருந்த தனது கணவர் மூலம் எச்.ஆர்.எஸ்.ஏவின் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டார். அவரது கணவர் பகவதி சரண் வோஹ்ரா ஒரு செல்வந்த குஜராத்தி ரயில்வே அதிகாரியின் மகன். லாகூரின் தேசியக் கல்லூரியில் படித்த அவர் அங்கு பகத்சிங்கை சந்தித்தார். அவர்களது அறிமுகம் விரைவில் வளரும் நட்பாக மாறியது, சிங், அதே போல் எச்.எஸ்.ஆர்.ஏவின் மற்ற உறுப்பினர்களான யஷ்பால் மற்றும் சுக்தேவ் ஆகியோர் அவரது வீட்டிற்கு வழக்கமான பார்வையாளர்களாக மாறினர்.



பட ஆதாரம்: இந்தியா டைம்ஸ்


அவரது கணவர் எச்.எஸ்.ஆர்.ஏ-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், துர்கா தேவி அமைப்பில் தனது முக்கியத்துவத்தை உருவாக்கி புரட்சிகர நடவடிக்கைகளில் நிரந்தர இருப்பை வளர்த்துக் கொண்டார். ஆயுதக் கிளர்ச்சியில் தீவிரமாக பங்கேற்ற ஒரு சில பெண் புரட்சியாளர்களில் இவரும் ஒருவர். எச்.எஸ்.ஆர்.ஏவில் உறுப்புரிமை பெற்ற பிறகு, துர்கா தேவி எச்.எஸ்.ஆர்.ஏவின் துணை நிறுவனமான ந au ஜவன் பாரத் சபா போன்ற பிற அமைப்புகளில் சேர்ந்தார். 1928 நவம்பர் 16 ஆம் தேதி கர்தார் சிங் சாராபின் தியாகத்தின் 11 வது ஆண்டு விழாவை அந்த அமைப்பு அனுசரித்தபோது அவர் முக்கியத்துவம் பெற்றார்.


பகத்சிங், சுக்தேவ் மற்றும் ஆசாத் போன்ற உறுப்பினர்கள் மீது அவர் பெரும் செல்வாக்கை செலுத்தினார், அவர் அவரை 'துர்கா பாபி' என்று அன்பாக அழைத்தார். திட்டமிடலில் மிகச்சிறந்தவர், அவர் எச்.எஸ்.ஆர்.ஏவின் இயந்திரமயமாக்கலில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் தனது கணவருடன் சேர்ந்து, தனது சங்கத்தின் உறுப்பினரான விமல் பிரசாத் ஜெயினுக்கு டெல்லியில் ‘இமயமலை கழிப்பறைகள்’ என்ற பெயரில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்த உதவினார். 63 நாள் உண்ணாவிரதத்தில் இறந்த பின்னர் லாகூரிலிருந்து கல்கத்தாவுக்கு ஜதிந்திர நாத் தாஸின் இறுதி ஊர்வலத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.


பெரிய தப்பித்தல்


1928 டிசம்பர் 19 ஆம் தேதி பகத் சிங் ஜே.பி. சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் பகத்சிங் ஒரு முழு பிரிட்டிஷ் படையின் வெறித்தனமான சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க முடிந்தது எப்படி என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரியாது. அவரது பெரும் தப்பிக்கும் கதை துர்கா தேவியின் நல்லெண்ணத்துடனும் தைரியத்துடனும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. கல்கத்தாவுக்குச் செல்வதற்கு முன், பகவதி சரண் துர்கா தேவியை விட்டு அவசரகால பணத்தை வைத்திருந்தார். பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் லாகூரிலிருந்து தப்பிப்பதற்கான உதவிக்காக துர்கா தேவிக்கு விஜயம் செய்தபோது இது கைக்கு வந்தது. தனது முழு உதவியையும் வழங்க அவள் உடனடியாக ஒப்புக்கொண்டாள்.


பகத் சிங் தனது தலைமுடியைக் குறைத்து, மேற்கத்திய உடையில் ஆடை அணிந்து மாறுவேடமிட்டுக் கொண்டார். மாறுவேடத்தை முடிக்க அவருக்கு துர்கா தேவி தனது மனைவியாக காட்ட வேண்டும். அவள் அவனுடன் வருவது மட்டுமல்லாமல், தயக்கமின்றி மூவருக்கும் அவசரகால தொகையை கொடுத்தாள். அவரது சகாப்தத்தின் நிறுவப்பட்ட சமூக ஆசாரத்தின் விதிமுறைகளிலிருந்து பிரிந்ததால் அவரது ஒப்புதல் முக்கியத்துவத்தின் அடையாளமாகும்.


பட ஆதாரம்: இந்தியா டைம்ஸ்

அவர் தனது குழந்தை மகன் சச்சினந்தா வோஹ்ராவை அழைத்துச் சென்று பகத்சிங்கை தனது கணவராக பிரிட்டிஷ் புத்திஜீவிகளின் மூக்கின் கீழ் அழைத்துச் சென்றார். ராஜ்குரு ஒரு வேலைக்காரனின் உடையில் அணிந்திருந்தார். தம்பதியினர் கல்கத்தாவுக்கு ரயிலின் முதல் வகுப்பு வண்டியில் ஏறினர், அதே நேரத்தில் அவர்களது ஊழியர் சாமான்களை ஒப்படைத்த பின்னர் மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினார். இதனால், அவர்கள் நிலையத்தில் ரோந்து சென்ற போலீஸ் வளைவில் இருந்து கவனிக்கப்படாமல் லாகூரிலிருந்து தப்பினர். துர்கா தேவிக்கு இல்லையென்றால் 1929 ஆம் ஆண்டின் அதிர்ஷ்டமான நாளில் பகத் சிங் தனது அடுத்த சாதனையை அடைய வாழ்ந்திருப்பார் என்று ஒருவர் ஆச்சரியப்படுவார்.

பெரிய எஸ்கேப் பிறகு


துர்கா தேவியின் கதை தனது தோழருடன் அவர் மேற்கொண்ட அதிர்ஷ்டமான பயணத்திற்குப் பிறகு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. ஏதேனும் இருந்தால், ஆயுதமேந்திய கிளர்ச்சியின் துணிச்சலான செயல்களில் அவள் தீவிரமாக ஈடுபட்டாள். கல்கத்தாவை அடைந்த பிறகு மாறுவேடமிட்ட தம்பதியினர் பகவதி சரண் வோஹ்ராவை சந்தித்தனர். பகத்சிங்கின் கல்கத்தாவிற்கு பாதுகாப்பாக வருவதில் துர்கா தேவியின் பங்கு பற்றி பகவதி சரண் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.

கல்கத்தாவில், புரட்சியாளர்களின் குழு வெடிகுண்டுகளை தயாரிக்க கற்றுக்கொண்டது. இந்த அறிவு 1929 ஏப்ரல் 8 ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்தில் வெடித்த வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது. பகத்சிங் மற்றும் பி.கே. தத் ஆகியோரின் கடைசி தைரியமான செயல் இது, பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். செய்தி துர்கா தேவியை அளவிட முடியாத அளவுக்கு கோபப்படுத்தியது. இந்த நிகழ்வு எச்.எஸ்.ஆர்.ஏவின் புரட்சியாளர்களை கவனிக்க அதிகாரிகள் தூண்டியது. பல தேவையற்ற வீட்டுத் தாக்குதல்கள் நடந்தன, பல புரட்சியாளர்கள் தலைமறைவாகத் தொடங்கினர்.


பட ஆதாரம்: சிறந்த இந்தியா

இந்த பதட்டமான காலங்களில், துர்கா தேவி தப்பியோடிய புரட்சியாளர்களுக்கான கடிதங்களைப் பெற்றார். சங்கத்திற்கு ஆயுதங்களை வாங்குவதிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஒரு சுவாரஸ்யமான குறிப்பு கூறுகிறது, அப்போதைய இந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் ஜே.என்.ஷானி 'டெல்லியில் ஒரு ரகசிய சந்திப்பில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளுடன் அவளைக் கண்டார், அதை அவர் தனது ஆடைகளின் கீழ் மறைத்து வைத்திருந்தார்.' அவரது துணிச்சலான செயல் செய்யப்பட்டது அக்டோபர் 8, 1930, அவர் மேலும் இரண்டு கூட்டாளிகளுடன், லாமிங்டன் சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு ஐரோப்பிய தம்பதியரை சுட்டுக் கொன்றார். 1930 அக்டோபர் 7 ஆம் தேதி பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையில் அவர்கள் சீற்றத்தை வெளிப்படுத்த விரும்பினர்.

ஐரோப்பிய தம்பதியினர் தங்கள் படுகொலை முயற்சியில் சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால் இது அதிகாரிகளிடையே ஒரு பொதுவான பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். பின்னர் இந்த நிகழ்வு 'ஒரு பயங்கரவாத சீற்றத்தில் ஒரு பெண் முக்கியமாக உருவான முதல் நிகழ்வு' என்று விளக்கப்பட்டது. மனுக்களை எழுதுவதன் மூலமும், முறையீட்டிற்கான நிதி திரட்டுவதன் மூலமும், 1931 இல் காந்தி போன்ற முக்கியமான பிரமுகர்களை சந்திப்பதன் மூலமும் பகத்சிங்கை விடுவிப்பதற்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

பிற்கால வாழ்வு

பகத்சிங்கை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை சோதனை செய்யும் போது பகவதி சரண் முன்கூட்டிய வெடிப்பால் இறந்த ஒரு துயரமான சம்பவத்தில் துர்கா தேவி இளம் வயதில் விதவையானார். இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அவர், லாகூரை விட்டு வெளியேறி, தொடர்ந்து நகர்ந்தார். பின்னர், அவர் காங்கிரஸ் அரசியலில் ஈடுபட்டு 1937-38ல் டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றினார். துர்கா தேவி தீவிர அரசியலில் இருந்து விலகினார், 1940 இல், அவர் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். கல்வியை மேம்படுத்துவதில் அவர் மூழ்கி, லக்னோவில் ஒரு பள்ளியின் நிறுவனர் என்று அறியப்பட்டார், இப்போது சிட்டி மாண்டிசோரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது. 1956 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியை பிரதமர் ஜவஹர்லால் நேரு பார்வையிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு காசியாபாத்தில் அமைதியான அநாமதேயத்துடன் தனது வாழ்க்கையை வாழ்ந்தார். துர்கா தேவி 1999 அக்டோபர் 15 ஆம் தேதி தனது 92 வது வயதில் காலமானார்.



புரட்சியைக் கட்டுப்படுத்தும் சக்தி பாலினம் தனித்துவமானது அல்ல


சுதந்திரப் போராட்டத்தின் புராணக்கதைகள், கட்டுக்கதைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்தில், ஆண் புரட்சியாளர்களின் பங்கை நாங்கள் பிரபலப்படுத்துகிறோம். அவர்களின் துணிச்சலான செயல்கள் நம்மை பெருமையையும் பக்தியையும் நிரப்புகின்றன. ஆனால் இந்த கணக்குகளில் இல்லாதது புரட்சியாளர்களின் பங்கைத் தழுவி தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான பெண்கள்; அவர்களின் நடவடிக்கைகள் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளுக்கு மட்டுமல்ல, மிகுந்த ஆபத்து மற்றும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் தியாகங்களுக்கும் தள்ளப்பட்டன. பிரிதிலதா வாடேதர், மாதாங்கினி ஹஸ்ரா, லட்சுமி சாகல், அருணா அசாஃப் அலி மற்றும் பலர் காலனித்துவ ஆட்சியாளர்களின் மீது சுதந்திரத்தின் வாளைப் பயன்படுத்திய பெண்களின் உறுதியான எடுத்துக்காட்டுகள். எந்தவொரு உணர்விலும் அவர்கள் செய்த தியாகமும் செயல்களும் அவர்களின் ஆண் சகாக்களை விட குறைவாகவே இருந்தன.

அவர்களின் சமூக இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, பாசமுள்ள தாய்மார்கள் மற்றும் கடமைப்பட்ட மனைவிகளின் தொழிலாளர் பாலினப் பிரிவில் அவர்களைத் தடுத்து நிறுத்திய அவர்களின் காலத்தின் பாலின விதிமுறைகளை மீறி, இந்த துணிச்சலான பெண்கள் அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் ஆணாதிக்க மதிப்பீடுகளிலும் பெருமளவில் கிளர்ந்தெழுந்தனர். பெண்கள் என்ற நமது சுய மதிப்பின் மதிப்பையும், தேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான சக்தியையும் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.




Fondly called “Durga Bhabhi” in the revolutionaries circle of the Hindustan Socialist Republican Association (HSRA), Durga Devi was instrumental in the freedom struggle against British imperialism. She worked at par with revolutionaries like Bhagat Singh, Sukhdev Thapar, Chandrashekhar Azad and other members of HSRA. Her story inspires in us bravery, courage and a silent determination to fight with dignity and valour. Like many women revolutionaries of her time, Durga Devi fought not only to repel the autocratic government from her homeland but shape the route to women’s participation in the freedom struggle.

Early Life

Durga Devi was born on 7th October 1907 to a Gujarati Brahmin couple who had settled in Allahabad. She grew up in the care of her aunt, after her mother’s demise and her father’s vow of renunciation or sanyas. She was married at a tender age of eleven to Bhagwati Charan Vohra. The significant happenings in her life began at the onset of her conjugal life.

Image Source: Mythical India

The Making of a Revolutionary

Unlike many marriages of her time, Durga Devi was bestowed with a man who became her true compatriot. He was already inclined towards the freedom movement. Thus, Durga Devi came into contact with the revolutionaries of HRSA through her husband who was a member of the association. Her husband, Bhagawati Charan Vohra was a son of a wealthy Gujarati railway official. He studied at National College, Lahore where he met Bhagat Singh. Their acquaintance soon transformed into budding friendship and Singh, as well as other members of HSRA like Yashpal and Sukhdev, became regular visitors at his home.

Image Source: India Times

Though introduced by her husband to HSRA, Durga Devi carved out her niche in the organisation and developed a permanent presence in revolutionary activities. She was one of the few women revolutionaries who actively participated in armed rebellion. After her membership in HSRA consolidated, Durga Devi joined other organisations like Naujawan Bharat Sabha, an auxiliary of HSRA. She rose to prominence when the organisation observed the 11th anniversary of Kartar Singh Sarabh’s martyrdom on 16th November 1928.


She wielded tremendous influence on members such as Bhagat Singh, Sukhdev, and Azad who fondly called her as “Durga Bhabhi”. Meticulous in planning, she was actively involved in mechanisations of HSRA. She along with her husband, helped Vimal Prasad Jain, a member of her association to run a bomb-making factory named ‘Himalaya Toilets’ in Delhi. She also led the funeral procession of Jatindra Nath Das from Lahore to Calcutta after his death in a 63-day hunger strike.    



We are well acquainted with the incident of Bhagat Singh’s assassination of JP Saunders on 19th December, 1928. But what most of us are unaware of is how Bhagat Singh managed to escape the frenzied manhunt of an entire British force. The story of his great escape is inextricably connected to the goodwill and courage of Durga Devi. Before leaving for Calcutta, Bhagawati Charan left Durga Devi in possession of a hefty sum of emergency money. This came handy when Bhagat Singh, Sukhdev, and Rajguru visited Durga Devi for assistance in escaping Lahore. She readily agreed to extend her full assistance.


Become an FII Member

Bhagat Singh disguised himself by cutting his hair short and dressing in western attire. To complete the disguise he needed Durga Devi to pose as his wife. She agreed not only to accompany him but without hesitation gave away the emergency sum of money to the trio. Her approval is a mark of significance as it broke away from the norms of established social etiquette of her era.



Image Source: India Times

She took her infant son Sachinanda Vohra and escorted Bhagat Singh as her husband right under the nose of the British intelligentsia. Rajguru was dressed in the attire of a servant. The couple boarded the first-class carriage of the train to Calcutta while their servant after handing over the luggage boarded the third-class carriage. Thus, they escaped from Lahore unnoticed from the police cordon patrolling the station. One can wonder would Bhagat Singh have been able to live to achieve his next feat on the fateful day of 1929 if not for Durga Devi.


After the Great Escape

The story of Durga Devi never halted after the fateful journey she took with her comrade. If anything, she became more actively involved in daring acts of armed rebellion. After reaching Calcutta the disguised couple met Bhagwati Charan Vohra. It is accounted that Bhagawati Charan was elated to hear about the role of Durga Devi in Bhagat Singh’s safe arrival at Calcutta.


In Calcutta, the group of revolutionaries learned to manufacture bombs. This knowledge was employed in the making of the bomb that exploded on 8th April 1929 in the Central Assembly in Delhi. This was the last daring act of Bhagat Singh and BK Dutt after which they were arrested and sentenced to death. The news angered Durga Devi beyond measure. The event triggered the authorities to take notice of the revolutionaries of HSRA. There were several unwarranted house raids and many revolutionaries started absconding.



Image Source: The Better India

In these tensed times, Durga Devi received letters for fugitive revolutionaries. She also involved herself in procuring weapons for the association. An interesting anecdote states that the then editor of the Hindustan Times, JN Shani ‘saw her in a secret meeting in Delhi with pistols sourced from the North-Western Frontier Province, which she kept concealed under her clothes.’ Her audacious act was performed on 8th October 1930 when she along with two other accomplices, shot at a European couple outside the police station in Lamington Road. They intended to display their outrage at the death sentence accorded to Bhagat Singh, Sukhdev, and Rajguru on 7th October 1930.


Also read: Nagammai: The Fearless But Forgotten Feminist Activist | #IndianWomenInHistory


The European couple escaped their assassination attempt with minor injuries. But this led to a general furor amongst the authorities. She was arrested and awarded three years in prison. Later this event was interpreted as “the first instance in which a woman figured prominently in a terrorist outrage.” She actively campaigned for the release of Bhagat Singh by writing petitions, raising funds for the appeal, and meeting important dignitaries like Gandhi in 1931.


Later Life

Durga Devi became widowed at a young age in a tragic incident when Bhagawati Charan died of premature explosion while testing a bomb made to free Bhagat Singh from jail. Deeply impacted by this, she left Lahore and was continuously on the move. Later, she got involved with Congress politics and served as president of the Delhi Congress Committee in 1937-38. Durga Devi withdrew from active politics and in 1940, she withdrew from public life. She immersed herself in furthering education and was known to be the founder of a school in Lucknow, now known as City Montessori School. The school was visited by Prime Minister Jawaharlal Nehru in 1956. She lived her life in quiet anonymity in Ghaziabad after independence. Durga Devi died on 15th October 1999 at the age of 92. 



Image Source: Wikipedia

The Power To Wield Revolution Is Not Gender Unique

In anecdotes, fables and popular representation of freedom struggle we tend to singularly popularise the role of male revolutionaries. Their daring acts fill us with pride and devotion. But what remain absent in these accounts are the brave women who laid down their lives by embracing the role of revolutionaries; their activities relegated not only to armed rebellions but sacrifices in the face of utmost danger and British aggression. Pritilata Waddedar, Matangini Hazra, Lakshmi Sahgal, Aruna Asaf Ali and others are concrete examples of women who wielded the sword of freedom upon the colonial rulers. In no senses were their sacrifice and deeds less than their male counterparts.


Also read: Padmaja Naidu : The Longest Serving Female Governor | #IndianWomenInHistory


Defying the gender norms of their time that restricted their social mobility and constricted them in the gendered division of labour of affectionate mothers and dutiful wives, these brave women rebelled not only against the government but also patriarchal values at large. They have taught us the value of our self worth as women and the power they have to change the destiny of the nation.  

புரட்சியைக் கட்டுப்படுத்தும் சக்தி பாலினம் தனித்துவமானது அல்ல


சுதந்திரப் போராட்டத்தின் புராணக்கதைகள், கட்டுக்கதைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்தில், ஆண் புரட்சியாளர்களின் பங்கை நாங்கள் பிரபலப்படுத்துகிறோம். அவர்களின் துணிச்சலான செயல்கள் நம்மை பெருமையையும் பக்தியையும் நிரப்புகின்றன. ஆனால் இந்த கணக்குகளில் இல்லாதது புரட்சியாளர்களின் பங்கைத் தழுவி தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான பெண்கள்; அவர்களின் நடவடிக்கைகள் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளுக்கு மட்டுமல்ல, மிகுந்த ஆபத்து மற்றும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் தியாகங்களுக்கும் தள்ளப்பட்டன. பிரிதிலதா வாடேதர், மாதாங்கினி ஹஸ்ரா, லட்சுமி சாகல், அருணா அசாஃப் அலி மற்றும் பலர் காலனித்துவ ஆட்சியாளர்களின் மீது சுதந்திரத்தின் வாளைப் பயன்படுத்திய பெண்களின் உறுதியான எடுத்துக்காட்டுகள். எந்தவொரு உணர்விலும் அவர்கள் செய்த தியாகமும் செயல்களும் அவர்களின் ஆண் சகாக்களை விட குறைவாகவே இருந்தன.




இதையும் படியுங்கள்: பத்மஜா நாயுடு: நீண்ட காலம் பணியாற்றும் பெண் ஆளுநர் | # இந்திய வுமன்இன்ஹிஸ்டரி

அவர்களின் சமூக இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, பாசமுள்ள தாய்மார்கள் மற்றும் கடமைப்பட்ட மனைவிகளின் தொழிலாளர் பாலினப் பிரிவில் அவர்களைத் தடுத்து நிறுத்திய அவர்களின் காலத்தின் பாலின விதிமுறைகளை மீறி, இந்த துணிச்சலான பெண்கள் அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் ஆணாதிக்க மதிப்பீடுகளிலும் பெருமளவில் கிளர்ந்தெழுந்தனர். பெண்கள் என்ற நமது சுய மதிப்பின் மதிப்பையும், தேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான சக்தியையும் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.




[08:27, 6/7/2021] +91 99416 91766: 19 டிசம்பர், 1928, நள் இரவு,, லாகூர்.. அந்த   பங்களாவின்   திட்டி வாசல்  போன்ற  ரகசிய கதவு  ,  சங்கேத மொழியில் தட்டப் படுகிறது.. ...


 கதவை திறந்தது ஒரு அழகிய இளம் பெண், இடுப்பில்  குழந்தையுடன்.. வந்த நால்வரை  பார்த்த உடன் அவர் முகம் மலர்கிறது. ,


 உள்ளே.. அமரச் செய்து உணவளிக்கிறர். வந்தவர்கள் எல்லோரும், இளைஞர்கள் HSRA  (ஹிந்துஸ்தான் ஸோஷியலிஸட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) என்ற தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள்.  அவர்கள் தாழ்ந்த குரலில்  பேசிக் கொள்ளுகிறார்கள,


என்ன பிரச்சினை? அவர்களை இன்றைய தேதியில்   லாகூரில்   500 போலீசார் வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்... ,


காரணம்? இரண்டு நாட்கள் முன் தான் இந்த நால்வரும்  லாகூரின்  டெபுட்டி  போலீஸ்  சூப்பிரன்டென்டன்ட்  John P Saunders மற்றும் ஒரு கான்ஸடேபிளை சுட்டு கொன்று விட்டு   தப்பியவர்கள்... . .


 ( அவர்கள் குறி வைத்தது என்னமோ பஞ்சாப்   சிங்கம்   லாலா லஜ்பத் ராய் அவர்களின் வீர மரணத்திற்குக்கு காரணமான  போலீஸ்  சூப்பிரன்டென்டன்ட்  "ஜேம்ஸ் A. ஸ்காட்டுக்கு" குறி தப்பியது, . "Mistaken identity," )


 நால்வருக்கும். லாகூர்  இப்போது   HOT POT.. ... இங்கிருந்து  தப்பியே , ஆக வேண்டும்... இருக்கும் ஒரே எஸ்கேப் ரூட் விடியற்க் காலை கிளம்பும் "லாகூர்   -via "லக்னோ / கான்பூர்  டிரைன்" தான், "


திட்டம் தயார்..   இளைஞர்களில்  ஒருவரான" பகத் சிங் "தன் தாடி மீசை எடுத்து விட்டு  ஒரு பணக்கார  பிரபு  வேஷத்திலும் , மற்றொரு வரான  ராஜ்குரு ..... அவருடைய வேலைக்காரன் போலவும்... ,


 போலீசை ஏமாற்ற.. அவர்களால் மரியாதையாக  துர்கா Bhabhi  . என அழைக்கப்பட்ட இளம் பெண் (துர்காவதி தேவி) பகத் சிங்கின் மனைவி, போல் கை குழந்தை சச்சின் வோரா  உடனும்.... 


மற்ற இளைஞர் சந்திரசேகர ஆசாத்  தங்கள் சஹா வான  சுக் தேவின்  தாய், மற்றும் தங்கையை காசிக்கு புனித யாத்திரை  அழைத்தப் போகும் சன்யாசி வேஷத்தில்.... .


 கான்பூருக்கு   .போய்.. . அங்கிருந்து பகத் சிங் போலி தம்பதி, குழுவினர் கல்கட்டாவிற்கு... ஆசாத், குழுவினர்  காசிக்கு  ரயில் மாறி  நழுவி  விட வேண்டும்


 இதற்க்கு தேவையான,மாறு வேட  உடைகள் போதுமான (5000 ரூபாய் ) , பணம... தேவையானால் பயன் படுத்த   துப்பாக்கிகள் (துர்கா Bhabhi க்கு ) .. எல்லாம் துர்கா Bhabhi  தயாராக வைத்திருந்தார் .....


ஏன் கல்கட்டாவிற்க்கு,? அங்குதான் துற்கா. Bhabhi யின் 26 வயது, கணவர் "பகவதி சரண் ஓரா" ,BA, செல்வந்தர், HSRA இயக்கத்தின் முக்கிய ரகசிய நபர், , இயக்கத்தின்  மீட்டிங்கில் கலந்து கொள்ள போய் இருக்கிறார்...


துர்கா Bhabhi யே  தன் கைப் பட தயாரித்து கொடுத்து அனுப்பியுள்ள ஒரு  வெடி குண்டுடன்.(அதில் அவர் ஒரு நிபுணர்) அடுத்த தாக்குதலுக்கு....


, திட்டம் அச்சு பிசகாமல் ,. நடந்தேறுகிறது, பறவைகள் லாகூர்  விட்டு சிட்டாக   பறந்து விடுகின்றன. (இது பற்றிய என் பதிவு ஒன்று உண்டு)... 


கல்கட்டாவில், மனைவியை சந்தித்த ஓரா, அவருடைய தீரச் செயலை கேட்டு மகிழ்ந்து, எல்லோர் முன்பும் கை குலுக்கினாராம், இவர் முகம் சிவக்க. சில நாட்கள் கழித்து ஒரு ஏழை பெண் வேஷத்தில்  அதே டிரைனில் குழந்தையுடன் இரண்டாம் பேர் அறியாமல் லாகூர் திரும்பி விடுகிறார் துர்கா Bhabhi.வந்து, வழக்கம் போல் அவர்கள் நடத்தும் ஹிமாலையன் ஸ்டோரஸ். என்ற கடையின் வியாபரத்தை கவனிக்கிறார்.


உண்மையில்... ஹிமாலையன் ஸ்டோரஸ் ஒரு திரை தான், அதன்  திரை மறைவில்   இயங்குவது ஒர் வெடிகுண்டு தொழில் சாலை.  அதன் Chieh Technician துர்கா Bhabhi தான்...1929  டிசம்பர் இல்  வைசிராய் லார்ட் இர்வின் பிரயாணம் செய்த ரயிலின் அடியில், கணவர் ஓராவினால் வைக்கப்பட்டு வெடித்த குண்டு இவர் கையால் செய்யப்பட்டது தான்.

கல்கட்டாவில் இருந்து திரும்பி வருகிறார் ஓரா, பின்னாலேயே அந்தச் செய்திகளும் , வருகின்றன... சுக் தேவ், ராஜ் குரு, பகத் சிங், அசெம்பிளி யில்  குண்டு வீசியது. (Smoke bomb) பின் அவர்கள் பிடி பட்டு   லாகூர்  சிறையில் அடைக்கப்பட்டு லாகூர் சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது முதலியன....

ஓரா தம்பதியினரும்.. HSRA இயக்கமும்  சிறைப்பட்ட  புரட்சியாளர்களை சிறை மீட்கக்  சிறையை வெடி  குண்டு வைத்து தகர்க்க   திட்டம் இடுகின்றனர், மாதிரி வெடி குண்டு ஒன்றை  துர்கா Bhabhi தயாரிக்கிறார்

 ஆனால் என்ன துர் அதிஷ்ட்டம் ... மாதிரி  குண்டை  ரவி  நதிக்கரையில் பரிசோதிக்க ஓரா  முயலும் போது, அது எதிர் பாராமல் சீக்கிரமே வெடித்து, ஓரா இறந்து விடுகிறார்... வயது 26 தான்.

துர்கா Bhabhi தன் 23ம் வயதிலேயே கைம்பெண்... மனம் உடைத்தாலும் அவர், "தன் நம்பிக்கை" , "தேசபக்தியை" இழக்க வில்லை.

அரசாங்கம் லாகூர் சதி வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது, குற்றவாளிகள்  24 வயது கூட  நிரம்பாத ததால் அவர்களின்  இளமை கருதி அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என சட்ட, வீதி போராட்ட ங்கள் வெடிக்கின்றன.

ஆனால் , பஞ்சாப் கவர்னர்   லார்ட், ஹெய்லி   தூக்கு தண்டனையை உறுதி செய்ய கடும் முயற்ச்சி  எடுக்கிறார்... கூடக்   குரல் கொடுப்பது யார்? அட, அது, நம். M. K. காந்தீஜீ, ஹரிஜனில்.அடக் கொடுமையே 

துர்கா Bhabhi தன் நகைகளை விற்று,  (4000 ரூபாய்) குற்றவாளிகளின்  தண்டனை குறைப்பதற்கு சட்டப் போராட்டம்... பலன்  இல்லை,


 அவர்கள் . மூவரும் 23 rd மார்ச் 1931 அன்று சிறை வளாகத்தில் தூக்கில் இடப்படுகிறர்கள. 


கொதித்து எழுகிறார் துர்கா Bhabhi , பழிக்கு, பழி, பஞ்சாப் கவர்னர் பழி வாங்கப்பட வேண்டும்.. ...... அன்று  கவர்னர் மாளிகை அருகில் மறைந்திருந்து.. , கவர்னர் வெளிவரும் போது துப்பாக்கியால் சுட ( நான்கு ரவுண்டு ) துர் அதிஷ்ட வசமாக?? அந்த  நேரத்தில் குறுக்கே வந்த வேறு இரு பிரிட்டீஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டு கவர்னர் தப்பி விடுகிறார்...


துர்கா Bhabhi கைது  செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது, ஆனல் பஞ்சாப் மக்களின் வீதி, சர்தார் படேலின்  சட்டப்  போராட்டம்  , அவருடைய இளம் வயது,... குழந்தை  என்ற காரணங்களினால்  , தண்டனை ஐந்தாண்டு காலமாக குறைக்கப் பட்டு, பின் விடுதலை..


விடுதலை ஆன பிறகும் அவருடைய உதவி, பங்களிப்பு தீவிரவாத விடுதலை போராளிகளுக்குத் தொடர்கிறது...


குறிப்பாக, 1926 . இல்... அவர்   HSRA போராளி, தியாகி  கத்தார் சிங் அவர்களின் நினைவு நான் அனுசரிப்பில் அவர்  பெரும் கூட்டத்திற்க்கு. லாகூரில் தலைமை தாங்கியது....


 மற்றொன்று 

போராளி ஜித்ரேந்ததிர நாத் தாஸ் சிறையில் 65  நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, இறந்தபோது, அவருடைய இறுதி உர்வலத்திற்க்கு லாகூரில் இருந்து , கல்கட்டா  வரை ரயிலிலும். நடந்தும்  தலைமை தாங்கியது... , பின் தொடர்ந்த மக்கள் கூட்டம் 4 /5 மைல் நீளம் இருந்ததாம்..


 15. ஆகஸட் 1947,  இந்தியாவிற்கு சுதந்திரம்...


ஏராளமானவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் என்று, பட்டம், பதவி, பணம், செல்வாக்கு, நிலம் பெற்றனர்,


 சரோஜனி நாயுடு, அருணா ஆசப் அலி, விஜயலட்சுமி பண்டிட், ருக்மணி லட்சுமிபதி போன்ற பெண்மணிகள்  உட்பட...


துர்கா Bhabhi போன இடம் தெரிய வில்லை.... அரசுக்கு எந்த துப்பும் இல்லை, அரசை எந்த விதத்திலும் அவர் நெருங்க வும்  இல்லை,


 சில வருடங்கள் கழித்து அவர் கஸியாபாத்தில் இருப்பதாக கேழ்விப்பட்டு. சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் அவரை சந்தித்து அரசு உதவி, பதவி  offer  பண்ணிய போது, மறுத்து விட்டாராம். 

 நேரு மாமாவை  அவர் சந்திக்க கூட... மறுப்பு 


பிற்க்காலத்தில் ஒரு நேர்காணலில்  அவர் குறிப்பிட்டது....


"பாரத்தின் சுதந்திரத்திற்க்காக தன் உடல், பொருள், ஆவி, இளமை,, எல்லாவற்றையும் மனப்பூர்வமாக, என் கணவர் போல் தியாகம் செய்த நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து உள்ளேன்.. . அவர்கள் தியாகத்தின் முன் என்னுடையது கால் தூசி கூட இல்லை... அதை காட்டி எந்த சலுகையும் அடைய என் மனசாட்சி ஒப்பாது .. ,அதுவும் காங்கிரஸ் இடம்.

 அந்த வீரர்கள் புகழ் பரப்புவது,... நினைவை போற்றுவது  தான்  என் பணி. " என்றார்


தன் சொத்துக்களை  விற்று லக்னோவில் ஒரு பெண்கள்  பள்ளி ஆரம்பித்து , அதே பள்ளியில் ஒரு சதாரண ஆசிரியை ஆகவே இறுதி வரை பணி ஆற்றுகிறார்  .... 


1907   ¶இல் கஸியாபாத்தில் ஒரு வசதியான  பிராமண குடும்பத்தில் பிறந்து, சிறு வயதில் பெற்றோரை இழந்து, சித்தியால் வளர்க்கப்பட்டு,படித்து, ,பகவதி சரண் வோரா என்ற படித்த, பணக்கார பிராமண  இளைஞ்ஞரை 13 ம் வயதில் கைபிடித்து.. அவருடைய சுதந்திர  போராட்ட, காரியம் யாவிலும் கை கொடுத்து, ஒரு குழந்தைக்கு 18 ம் வயதில் தாயாகி,  23ம் வயதில் கணவரை  இழந்து, துப்பாக்கி பிடித்து நாட்டு  விடுதலைக்காக போராடி, அப்பழுக்கற்ற  வீர தேசபக்தி/தியாக  வாழ்வு வாழ்ந்து.. தன் 92ம் வயதில்  1999 இல்  கஸியாபாத்தில் மறைந்தார். 


அவர் இறுதி விருப்பப்படி  அவர் மறைவிற்க்குப் பின்  அவர் நிறுவிய  அந்தப்  பள்ளிக்கு  அவர்  பெயரோ , அவர் கணவர் பெயரோ,  .வைக்கப் பட வில்லை. . அது வெறும் "பெண்கள் பள்ளி" என்றே அழைக்கப்பட்டது. 

 

அந்தப் பள்ளி இன்றும் உள்ளது பெயர், .... "பெண்கள் பள்ளி " 


இதுவல்லவோ, வீர தியாக வாழ்வு


வாழ்க அவர் புகழ்.. வந்தே மாதரம்

[09:51, 6/7/2021] 👍: DURGA DEVI ,FREEDOM FIGHTER 


Saturday, 20 February 2021

Ziegfeld Follies (1907–1931),

 

 Ziegfeld Follies (1907–1931), 





The Ziegfield Follies is the equivalent of the Folies Bergères, but in New York, this cabaret has seen many actors and dancers, called the Ziegfeld Girls, who will sometimes become stars. The story of this cabaret was adapted to the cinema in 1936 with the film "The Great Ziegfeld" which won several Oscars [...]


Les Ziegfield Follies c’est l’équivalent des Folies Bergères mais à New York, ce cabaret a vu passer de nombreux acteurs et danseuses, appelées les Ziegfeld Girls, qui deviendront parfois par la suite des stars. L’histoire de ce cabaret a été adapté au cinéma en 1936 avec le film « Le Grand Ziegfeld » qui remportât plusieurs oscars […]




Ziegfeld Girls were the chorus girls and showgirls from Florenz Ziegfeld's theatrical Broadway revue spectaculars known as the Ziegfeld Follies (1907–1931), in New York City, which were based on the Folies Bergère of Paris.

Description



Sheet music cover for "Shine on Harvest Moon" with Ruth Etting of the Ziegfeld Follies

These showgirls followed on the heels of the Florodora girls, who had started to "loosen the corset" of the Gibson Girl in the early years of the 20th century. These beauties, decked out in Erté designs, gained many young male admirers and became objects of popular adoration. All of the showgirls looked very similar, both in appearance and in stature. They danced in complete synchronization, and were the only act that was uniform in the Ziegfeld Follies. Many were persuaded to leave the show to marry, some to men of substantial wealth. The Ziegfeld Ball in New York City continued as a social event of the season for years after the last production of the Follies.


In 1897, Ziegfeld married Anna Held, one of his Ziegfeld girls, by common-law. They never legally were married, but lived together long enough to be legally considered so. In 1913, Held divorced from Ziegfeld because of his infidelities with Lillian Lorraine, another Ziegfeld girl. Held died soon after. Following that, Ziegfeld married yet another Ziegfeld girl, future film star Billie Burke. Although Ziegfeld had several affairs, Burke claimed that Lorraine was the only one that made her jealous.[1] Ziegfeld remained married to Burke (and in love with Lorraine) until his death in 1932.


List of Ziegfeld girls



Anastasia Reilly, 1923

Over the years, the Ziegfeld girls included many future stars such as Fanny Brice, Marion Davies, Paulette Goddard, Joan Blondell, Olive Thomas, Jeanne Eagels, Barbara Stanwyck, Billie Dove, Lilian Bond, Louise Brooks, Nita Naldi, Julanne Johnston, Mae Murray, Dorothy Mackaill, Odette Myrtil, Lilyan Tashman, Claire Dodd, Cecile Arnold, Dolores Costello, Dorothy Sebastian, Juliette Compton, Mary Nolan, Iris Adrian, Annette Bade. Other Ziegfeld girls went onto societal and business successes such as Peggy Hopkins Joyce, Helen Gallagher, Anastasia Reilly,[2] Sybil Carmen, and Irene Hayes. Other Ziegfeld girls included Leone Sousa, Monica Van Munster,[3] Mildred Chris Kennedy,[4] Irene Amelia Melfi, Dorothy Hale, and Helen Morgan.


Mona Louise Parsons was a Ziegfeld girl who was later a member of the Dutch resistance during the Second World War.


Declined members



Dolores Costello as a Ziegfeld girl, ca. 1923

Although many future stars started out as Ziegfeld girls, many others were turned down by Florenz Ziegfeld to appear in his revue. Norma Shearer (in 1919 and 1920), Alice Faye (in 1927), Joan Crawford (in 1924), Gypsy Rose Lee (in 1927), Lucille Ball (in 1927 and 1931), Phyllis Haver (in 1915), Eleanor Powell (in 1927), Ruby Keeler (in 1924), Hedda Hopper (in 1913), and June Havoc (in 1927 and 1931) were among the many hopefuls that the master showman discarded after auditions. In 1957, the then-current members were featured as mystery guests on the television panel show What's My Line?[5]


Last survivors

The survivors of the chorus lines of the last century are The Rockettes of Radio City Music Hall. Doris Eaton Travis became the last surviving Ziegfeld Girl after the death of Dorothy Raphaelson in 2005.[6] Travis died on May 11, 2010 at the age of 106.[7]



Sunday, 27 September 2020

QING DYNASTY-QIU JIN - Chinese feminist & revolutionary martyr BORN NOVEMBER 8,1875 - 1907 JULY 15

 



QING DYNASTY-QIU JIN - Chinese feminist & revolutionary martyr

BORN NOVEMBER 8,1875 - 1907 JULY 15



Qiu Jin (1875–1907) was a Chinese writer & poet, a strong-willed feminist who is considered a national hero in China. Also called “Jianhu Nüxia” (Woman Knight of Mirror Lake”), she was executed after participating in a failed uprising against the Qing Dynasty.

Qiu Jin was born in 1875 to a family of the gentry, and received an excellent education as was typical for a young woman of her position. She always loved to write, and in this period of her life she wrote many joyful poems on subjects ranging from flowers and the four seasons to visiting historical places and domestic activities. She also wrote about female heroes and warriors from Chinese history, in inspiring poems about their strength, courage, and beauty. One of her poems begins “Don’t tell me women / are not the stuff of heroes”. Her poetry reflected her self-confidence and desire to become an excellent female writer as valued by traditional Chinese culture.

When Qiu Jin was 19, she obeyed her father and married the son of a wealthy merchant, against her own wishes. Qiu became extremely unhappy in her marriage. She wrote of her husband, “That person’s behavior is worse than an animal’s….He treats me as less than nothing.” and “When I think of him my hair bristles with anger, it’s absolutely unbearable.” Her previous self-confidence was shaken and her dreams of becoming a recognized poet were abandoned. Her poetry from this period of her life was full of self-doubt and loneliness.

Boxer Rebellion Soldiers

Boxer Soldiers, courtesy Wikimedia Commons




During this period Qiu also began writing poetry about current events and the fate of China. After hearing of events such as the Boxer Rebellion and occupation of Beijing, she used her poetry, with literary allusion to heroines of the past, to express her conern about the fate of China and Chinese women. Qiu longed to serve her country but realized that that wasn’t possible as long as she was trapped in a conventional married life. Her marriage was an important catalyst in her development as a feminist and revolutionary.

In 1903, Qiu Jin moved with her husband to Beijing where he had purchased an official post. In Beijing, Qiu started reading feminist writings and became interested in women’s education.

Qiu Jin finally left her husband in 1903, leaving to study in Japan. She became vocal in her support for women’s rights, pressed for improved access to education for women in her journals and speech, and spoke out against the practice of foot-binding. Returning to China in 1905, she joined the Triads, an underground society who advocated for the overthrow of the Qing Dynasty, and other anti-Qing societies both Chinese and Japanese. She admired the Japanese for their disciplined military spirit and thought that it played an important role in the modernization of Japan.

“With all my heart I beseech and beg my two hundred million female compatriots to assume their responsibility as citizens. Arise! Arise! Chinese women, arise!”


In 1906 Qiu founded her own journal, “Zhongguo nubao” (Chinese women’s journal), which featured nationalist and feminist writings. Unlike traditional and other nationalist views that held women’s place as mothers and educators in a traditional family role, Qiu Jin saw the traditional family as oppressive to women.

Qiu was appointed head of the Datong school in the city of Shaoxing, Zhejiang Province, in 1907. The school was supposedly for sport teachers, but was actually used for the military training of revolutionaries. In the final years of her life, she frequently cross-dressed, wearing western-style men’s clothing, and practiced military drills and training with her students. She became well-known as a chivalrous woman for helping the poor and weak.

At this time, Qiu was working with her cousin Xu Xilin to unite and train fellow revolutionaries who also believed that China needed a western-style government. On July 6, 1907, Xu was caught and tortured for information before an uprising they had scheduled in Anqing in Angui Province. He was executed the next day.

Qiu Jin learned about her cousin’s death and the failed uprising a few days later. She was warned that officials would be coming for her at the Datong school, but she stayed anyway, writing to her sword sister Xu Yunhua that she was determined to die for the cause. On July 13, Qiu was arrested. Even after being tortured she refused to talk about her involvement in the scheduled uprising, but incriminating evidence was found at the school. On July 15, 1907, Qiu Jin was beheaded publicly in her home village of Shanyin, at the age of 31.

Shocked by the brutal execution of a woman, many Chinese were strengthened in their resentment of the Qing dynasty. Qiu Jin immediately became a national hero, and was the subject of poetry, drama, and numerous works of fiction. Much of her writing, including her poetry and letters to family and friends, was published after her death.

To this day, Qiu Jin is a symbol of women’s independence in China. She is now buried by Xī Hú (West Lake) in Hangzhou, where a statue of her marks her tomb.

Statue of Qiu Jin, feminist revolutionary, at her tomb by West Lake

Statue of Qiu Jin at her tomb by West Lake, courtesy Autumn-Gem.com

Image may contain: 1 person




சியூ சின் (Qiu Jin: நவம்பர் 8, 1875 – ஜூலை 15, 1907), (Xuanqing (சீனம்: 璿卿; பின்யின்: Xuánqīng) and Jingxiong (எளிய சீனம்: 竞雄; மரபுவழிச் சீனம்: 競雄; பின்யின்: Jìngxióng), sobriquet Jianhu Nüxia (எளிய சீனம்: 鉴湖女侠; மரபுவழிச் சீனம்: 鑑湖女俠; பின்யின்: Jiànhú Nǚxiá; நேர்பொருளாக "Woman Knight of Mirror Lake"), ஒரு சீனப் புரட்சியாளரும் பெண்ணிய எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். சிங் அரச மரபை எதிர்த்து செய்த கிளர்ச்சியில் தோல்வி கண்டார். பின்னர் தூகிலிடப்பட்டார். இவர் தேசிய போராட்ட வீராங்கனையாக சீனாவில் மதிக்கப்படுகிறார்.[1]
இளமை
1875 இல் சீனாவில் ஓர் உயர்குடியில் சின் பிறந்தார். சிறந்த கல்விகற்ற சின் எப்பொழுதும் எழுதுவதையே விரும்பினார். இக்காலத்தில் அவர் பல கருப்பொருட்களில் கவிதைகளை எழுதினார். மலர்கள், பருவகாலங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், நாட்டு நடவடிக்கைகள் குறித்த மகிழ்வுக் கவிதைகளை அவர் எழுதினார். மேலும் சீனவரலாற்றில் இடம்பெற்ற பெண் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள் ஆகியவர்கள் குறித்து எழுதினார். இவர்களைப் பற்றிய கவிதைகளில் அவர்களுடைய வலிமை, வீரம், அழகு ஆகியவற்றைக் குறித்து எழுச்சிமிகு பாடல்கள் இடம்பெற்றன. அவருடைய ஒரு கவிதை என்னிடம் சொல்லாதெ பெண் என்பவள் ஆணுக்குப் பயன் தருபவள் என்று எனத் தொடங்குகிறது. சியூவின் கவிதைகள் அவருடைய தன்னம்பிக்கையையும் அவருடைய பாரம்பரியமிக்க சீனக் கலாச்சாரத்தின் மதிக்கப்படக்கூடிய ஒரு சிறந்த பெண் எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பத்தையும் எதிரொளித்தது.