Showing posts with label 632. Show all posts
Showing posts with label 632. Show all posts

Friday, 28 August 2020

MOHAMED NABI1S DAUGHTER FATIMA DIED 632 ,AUGUST 28



MOHAMED NABI1S  DAUGHTER  
FATIMA DIED 632 ,AUGUST 28



முகம்மது நபியின் மகள் 
பாத்திமா இறந்தார் 632,AUGUST 28

அண்ணல் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களும் இணைந்த திருமணத்தில் முதல் குழந்தையாக காசிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அந்த குழந்தை சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்து விட்டது. காசிமின் இழப்பை ஈடுகட்ட அடுத்தடுத்து உம்முகுல்தூம், ஜைனப், அப்துல்லாஹ், ருகையா ரலியல்லாஹு அன்ஹும் போன்ற குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவர்களில் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மறைந்து விட்டார்கள்.

அண்ணலாரின் 35ஆவது வயதில் கதீஜா பிராட்டியர் கருவுற்றனர். அதன்பின் பெண் குழந்தையைப் பெற்று அதற்கு பாத்திமா என்று பெயரிட்டனர். இவர்களுக்கு வேறு பெயர்களும் இருந்தன. அவற்றில் அஸ்ஸஹ்ரா(ஒளிரும் எழில் நங்கை), ஸையிதத்துன்னிஸா (பெண் குலத்தின் பெருமகள்), அல்முபாரகா (அருட்கொடை), அல்சித்தீகா (வாய்மை நிறைந்தவர்) என்ற பெயர்களும் அவர்களுக்கு இருந்தன.

அண்ணலாருக்கு நபிப்பட்டம் கிடைத்த பிறகு, அவர்களுக்கு உறுதுணையாய் தம் அன்னையருடன் பாத்திமா நாயகி அவர்களும் இருந்தார்கள். அண்ணலார் கதீஜா நாயகியார் மறைந்தபிறகு> நான்கு குழந்தைகளை வளர்க்கக் கூடிய பொறுப்பு அவர்களை வந்தடைந்தது.

இந்நிலையில் குறைஷிகள் துன்பம் பெருகியது. அண்ணலாருக்கு பெரும் துன்பங்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஐந்து வயது சிறுமியாக இருந்த பாத்திமா நாயகி அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே சென்று விட்டால் தீயின் மீது நிற்பவர் போல் தான் துடித்துக் கொண்டிருப்பார்கள். தந்தையாருக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது அவர்கள் நலமாய் இல்லம் திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருப்பார்கள்.

அண்ணலார் ஒருமுறை வீதியின் வழியே சென்று கொண்டிருக்கும்போது ஒரு கயவன் அவர்கள் மீது மண்ணைவாரி இறைத்தான். இதைக் கண்ட பாத்திமா நாயகி அவர்கள் துடித்தார்கள். தந்தையார் மகளுக்கு இறைவன் நமக்கிருக்கிறான் என்று ஆறுதல் கூறினார்கள்.

அருமைத் தோழர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் யத்ரிப் சேர்ந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில ஏற்பாடுகள் செய்த பின்னர் தம் கண்மணி மகளார் பாத்திமா அவர்களை அழைத்து வரும்படி உண்மை ஊழியர் ஸைதை அனுப்பி வைத்தனர். சில நாட்களில் யத்ரிப் வந்து சேர்ந்தார்கள் பாத்திமா நாயகி அவர்கள்.

இளம் வயதிலேயே மனைவியை இழந்து விட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பொழுது உம்முசல்மா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் முடித்தனர். உம்முசல்மா அவர்களும், வேறு சிலரும் பாத்திமா நாயகியை கண்போல பேணிஅன்புடன் கவனித்தார்கள். அவர்களில் ஒருவர் அலி நாயகத்தின் அன்னையான பின்தே அசத் ஆவார்கள்.

அடக்கமுள்ளவர்களாயினும் பாத்திமா நாயகி அவர்கள் அழகாகப் பேசும் திறன் வாய்ந்தவர்களாக இருந்தனர். சின்னஞ்சிறு வயதில் அத்துணை நாகரீகத்துடன்பேசியவரை நான் கண்டதில்லை என்று வியந்து கூறுகிறார்கள் அஸ்மா பின்த் அனீஸ் அவர்கள்.

பாத்திமா நாயகி அவர்கள்ஒதுங்கியிருக்கும் உயர்குணம் படைத்தவர்கள். அடுத்த வீட்டு சிறுமிகளுடன் அதிகம் பழகுவதில்லை. ஆனால் அவர்களைக் காணும் போது அன்புடன் உரையாடவும் ஒருபோதும் தவறுவதில்லை. ஏதும் வேடிக்கை காணவோ, தோழிகளை வெளியே சென்று சந்திக்கவோ சென்றது கிடையாது. சிறுமிகளுடன் அவர்கள் அதிகம் கலந்து உறவாடினும் அவர்கள் அனைவரின் அன்பும் பாத்திமா நாயகி அவர்களுக்கு கிடைத்திருந்தது.

மக்கநகரில் வாழ்ந்ததுபோலவே மதீனா நகரிலும் பாத்திமா நாயகி அவர்கள் தம் காலத்தை தந்தையாரை மகிழ்விப்பதிலும், அவர்களைக் கண்ணும் கருத்துமாய்க் கவனிப்பதிலும் கழித்தார்கள். தந்தையாருடன் இருக்கும்போது அவர்கள் அதிகம் மகிழ்ச்சி கொண்டார்கள்.

பாத்திமா நாயகி அவர்களுக்கு திருமண வயது வந்தது. தம்மை அணுகி பெண் கேட்போர் அனைவருக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வின் உத்திரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’ என்று பதில் உரைத்ததைக் கண்டு கேட்டவர்கள் மௌனமாயினர். அவர்களில் அபூபக்கர் சித்தீக் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.

நாட்கள் பலவாகியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொல்லாது போகவே, பெண் கேட்டவர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்தனர். இறுதியில் தம் மருமகனார் அலி நாயகத்தை பாத்திமா நாயகிக்கு மணம் முடித்து கொடுக்க அண்ணலார் விரும்புகிறார்கள் என்று கண்டு கொண்டு, அலி நாயகத்தை பெண் கேட்டு செல்ல தூண்டினர்.

அதற்கு அலி நாயகம் தான் மிகவும் ஏழ்மையில் உள்ளேன். எனக்கு மனைவியை காப்பாற்றும் வசதி வந்ததும் பொறுத்திருக்கிறேன். என்று சொன்னார்கள். வந்தவர்கள் தாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று அலி நாயகத்திடம் சொன்னார்கள். இவர்களின் ஊக்கத்தால் உரம்பெற்ற அலி நாயகம் அவர்கள் அல்லாஹ்வின் தூதரை அணுகத் துணிந்தார்கள்.

அண்ணலாரின் வீட்டை அடைந்துத கதவை தட்டினார்கள். திறக்கப்பட்டது. தயக்கத்துடன் ஒரு மூலையில் சென்று நாணத்துடன் அமர்ந்து கொண்டார்கள். அண்ணலார் வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்தார்கள். வீட்டின் மூலையில் நாணத்துடன் அமர்ந்திருந்த அலி நாயகத்தை கண்டதும் அன்புடன் ‘நீர் என்றுமில்லாமல் அதிக நாணத்துடன் அமர்ந்திருக்கிறீர்களே’ என்று கேட்டார்கள். நீங்கள் சொல்ல வந்தவிசயத்தை தயக்கமில்லாமல் கூறுங்கள் என்று சொன்னார்கள்.

அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணலாரின் மகளை மணந்து கொள்ள அனுமதி கேட்டார்கள். அக்கணமே அண்ணலார் அலி நாயகத்;தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். சற்று முன்னர்தான் அலி நாயகத்துடன் பாத்திமா நாயகிக்கு திருமணம் நடந்தேற வேண்டுமென்று இறைவன் தெரிவித்ததாகவும் தெரிவித்தனர். அலி நாயகத்தை பள்ளிக்கு செல்லுமாறு கூறிவிட்டு, அண்ணலார் பள்ளிக்கு சென்றனர்.

அருமை பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து மக்களை கூவி அழைக்குமாறு கூறினர். பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குரல் கணத்தில் மக்களை திரட்டிவிட்டது. அண்ணலார் மேடைமீதேறி அண்ணலார் அலி நாயகத்திற்கு தம் மகளை திருமணம் முடிக்கும் விசயத்தை அறிவித்தார்கள். மக்கள் அனைவரும் ஒருமித்துத் தம் இணக்கத்தைத் தெரிவித்தனர்.

மக்களின் இணக்கத்தைப் பெற்ற அண்ணலார் தம் மகளாரின் இணக்கம் பெற வீடு சென்றனர். அலி நாயகத்தை மணக்க மகளின் ஒப்புதல் கேட்டனர். தம் மௌனத்தால் பாத்திமா நாயகி அவர்கள் ஒப்புதல் கொடுத்தனர்.

அலி நாயகத்திடம் இருந்த குதிரை ஒன்றும், ஐந்து திர்ஹம் மதிப்புள்ள இரும்பு அங்கி ஒன்றும், வாள் ஒன்றும்,ஆட்டுத் தோல் ஒன்றும்போர்வை ஒன்றும் இருந்தது. இதில் இரும்பு அங்கியை விற்று திருமணச் செலவிற்குப் பணம் பெற விரும்பினர். அலி நாயகத்தின் வறிய நிலையை உணர்ந்த உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஐந்தே திர் ஹம் மதிப்புள்ள இரும்பு அங்கியை ஐந்நூறு திர்ஹம் விலை கொடுத்து வாங்கினர். அதன்பின் அந்த அங்கியை உதுமான் நாயகம் அவர்கள் திரும்ப அலி நாயகத்திற்கே அன்பளிப்பாக அளித்துவிட்டனர்.

ஐந்நூறு திர்ஹத்தை அண்ணலாரிடம் கொடுத்தனர் அலி நாயகம் அவர்கள். அதனை அவர்கள் பெற்றுக் கொண்டு பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து திருமண விழாவிற்கான பொருட்கள் வாங்கி வரும்படி சொன்னார்கள். அதன்பிறகு இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. அப்போது பாத்திமா நாயகிக்கு வயது பதினைந்தரை. திருமணம் முடிந்ததும் திருமண விருந்தாக ஒரு கூடையில் பேரீத்தபிம் கொண்டு வந்து வைக்கபட்டது. அனைவரும் தேவையானதை எடுத்துக் கொண்டனர்.

தம் மகளுக்கு சீதனமாய் மூங்கில் கட்டில் ஒன்றும், தோல் விரிப்பு ஒன்றும்> தோல் தலையணை ஒன்றும்> துருத்தி ஒன்றும், குவளை ஒன்றும், வெள்ளிக் கடகம் இரண்டும், மண்குடம் இரண்டும் அளித்து மகிழ்ந்தனர்.

மணவிழா முடிந்து மக்கள் கலைந்து சென்றதும் புதுமணப்பெண்ணாய் நாயகியார் வீட்டில் வீற்றிருக்கும் வேளையில், வீட்டின் வெளியே எவரே ஒரு ஏழை யாசகம் கேட்கும் குரல் அவர்களின் செவியில் விழுந்தது. உடனே அவர்கள் தம் தந்தையார் மணவிழாவிற்கென வாங்கித் தந்த புதிய ஆடையைக் களைந்து கையில் எடுத்துக் கொண்டு பீற்றல் நிறைந்த மற்றொரு ஆடையை உடுத்துகி கொண்டு வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த ஏழையிடம் தம் மண ஆடையை மகிழ்வுடன் அளித்து விட்டார்கள்.

சற்று நேரத்தில் தம் புதல்வியைக் காண வந்த நாயகம் அவர்கள், இது பற்றி விசாரித்தபோது, பிறருக்கு நீங்கள் வழங்கும்போது உங்களிடமுள்ள சிறப்பானதை வழங்குங்கள் என்று சொன்னீர்கள். அதனால்தான் என்னிடமுள்ள ஏற்றமான அந்த உடையை வழங்கினேன் என்று சொன்னார்கள். மகள் அளித்த பதில் அண்ணலாருக்கு எல்லையில்லா மகிழ்வைத் தந்தது.

திருமணம் நிகழ்ந்து ஒரு மாதம் வரை பாத்திமா நாயகியார் தந்தையாரின் இல்லத்திலேயே இருந்தார்கள். அலி நாயகம் அவர்கள் அவர்களை தமது வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினர். நாயகம் அவர்களும் தம் வீட்டில் ஒரு சிறு விருந்து ஏற்பாடு செய்தனர். ஏழை முஸ்லிம்கள் பல வயிறார உண்டு வாழ்த்தினர்.

அதன்பிறகு அருமை மனைவியார் உம்முசல்மா நாயகியை அழைத்து பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து வரச் செய்து அறிவுரைகள் கூறி அலி நாயகத்துடன் அனுப்பி வைத்தார்கள்.

தம் அருமை மருமகள் பாத்திமா நாயகியை பின்தே அசத் அவர்கள் பொன்போல் போற்றிப் வந்தார்கள். முதிர்ந்து மூதாட்டியாக இருந்த பின்தே அசத் அவர்களை பாத்திமா நாயகியார் அசையக் கூட விடவில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களே செய்தார்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தார்கள்.

இதனால்தான் ‘என் அன்னையரும்> மனைவியும் தாயும் மகளும் போல் வாழ்கிறார்கள்’ என்று அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

இதனால் வாழ்வு மகிழ்ச்சிகரமாக சென்றது. ஆனால் எல்லாவித வசதிகளும்> சௌகரியங்களும் பெற்றிருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. வறுமை வருத்தினாலும் அலி அவர்களும்> பாத்திமா அவர்களும் எளிய உணவுடனும்> இற்ற உடைகளுடனும் பூரணத் திருப்தியுற்றனர். திருகையில் மாவரைப்பது> வீட்டைக் கூட்டிப் பெருக்குவது> துணிமணிகளைத் துவைப்பது> கிழிந்த ஆடைகளைத் தைப்பது> முதிர்ந்த மாமியாருக்கு உதவுவது> அன்புக் கணவருக்கு பணிவிடை செய்வது ஆகிய இத்தனை வேலைகளையும் பசியுடனும்> பட்டினியுடனும் பாத்திமா நாயகி அவர்கள்தாம் செய்தனர். இத்துணை வேலைகள் செய்ததும் நாயகியார் களைத்துப் போயினர். அதைக் கண்டு அலி நாயகம் அவர்களும் உதவி புரிவார்கள். சில சமயங்களில் பாத்திமா நாயகி அவர்களின் வீட்டு வேலைகளில் தந்தையாரும் பங்கு பெறுவது உண்டு.

ஒவ்வொரு நாளும் அதிகாலை பள்ளிவாசலுக்குச் செல்ல முன்னர் பாத்திமாவின் வீட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குத் திருப் பணிபுரிந்த ஒருவர் கூறுகிறார். “நபியவர்கள் எப்போதாவது பிரயாணம் செய்யப் புறப்பட்டால் இறுதியாக விடைபெறுவது பாத்திமாவிடமே. அவ்வாறே பிரயாணம் முடிந்து திரும்பி வரும் போது முதலில் சென்று சந்திப்பதும் பாத்திமாவையே.”

இதனால் தமக்கு உதவ ஒரு பணிப்பெண் வேண்டும் என்று தம் தந்தையிடம் கேட்க எண்ணினார்கள். இதற்காக அவர்கள் தம் தந்தையை சந்திக்க சென்றபோது அவர்கள் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். நாயகி அவர்கள் திரும்பி விட்டார்கள். பிறகு வீட்டிற்கு சென்றார்கள். என்னசொல்வார்களோ என்று எண்ணி தயங்கிக்கொண்டிருக்கும்போது, அலி நாயகம் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தம் மகளுக்கு பணிப்பெண் அமர்த்தும்படி கேட்டார்கள்.

அதற்கு அண்ணல் நபி அவர்கள் தம் தோழர்களில் பலர் உண்ண உணவுகூட இல்லாமல் வாடும்போது உங்களுக்கு பணிப்பெண் எதற்கு? தோழர்களின் நிலை சீராகும் வரை எம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டார்கள். எனினும் சில நாட்களில் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி வைத்தார்கள். அந்தப் பணிப்பெண்ணை அன்புடன் நடத்த வேண்டும் என்றும்> இருக்கும் வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும் என்றும் மகளாருக்கு அறிவுரை சொன்னார்கள்.

உண்மையிலேயே பாத்திமா நாயகி அவர்களுக்கு இயல்பிலேயே ஈர நெஞ்சமும், இரக்க குணமும் இருந்தது. தம் பணிப்பெண்ணை அன்புடன் நடத்தினார்கள். ஒரு நாள் பணிப்பெண் மாவு அரைத்தால், மறுநாள் திரிகை பிடிக்க வேண்டியது பாத்திமா நாயகி அவர்கள்தான். ஒரு நாள் பணிப்பெண் வீட்பை; பெருக்கினால், மறுநாள் நாயகி அவர்கள் பெருக்குவார்கள். இதனால் பணிப்பெண் பாத்திமா நாயகி மீது அளவற்ற அன்பு வைத்திருந்தாள். பாத்திமா நாயகி நோயுற்றால் அந்தப் பணிப்பெண் படும்பாடு சொல்ல முடியாது. பாத்திமா நாயகியை விட்டு அகலவே மாட்டாள்.

அதேபோல் பாத்திமா நாயகி அவர்களுக்கும் அவள் மீது அன்பு இருந்தது. சாமான்கள் வாங்கி வரும்போதெல்லாம் அவளுக்கென்று ஏதாவது ஒன்று வாங்கிவர அவர்கள் தவறுவதேயில்லை. ஏதேனும் அவள் தவறிழைத்துவிட்டால் அதைக் கண்டிப்பதும் இல்லை. தவறு நேராது ஒழுங்காக செய்யும் முறையை மட்டும் விளக்குவார்கள். கடும் சொல்லோ> சுடுச் சொல்லோ அவர்களின் வாயிலிருந்து வந்ததே இல்லை.

உஹது போரில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி பாத்திமா நாயகி அவர்களுக்கு கிடைத்ததும், உடனே போர்க்களம் விரைந்தார்கள். அங்கு அவர்கள் வந்ததை அறிந்த அலி நாயகம் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துச் சென்று காட்டியதும்தான் நிம்மதி அடைந்தார்கள். அண்ணலாரின் பற்கள் ஷஹீதாக்கப்பட்டு காயம் ஏற்பட்டு இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. தம்முடைய ஆடையைக் கிழித்து அதை எரித்து அதிலிருந்து வந்த சாம்பலை நாயகத்தின் காயத்தின் மேல் வைத்ததும்தான் இரத்தம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது.

அதேபோல் அகழி யுத்தத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல நாட்கள் பசித்திருந்து முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் போது, பாத்திமா நாயகியார் தம்மிடமிருந்த அனைத்து உணவுகளையும் கட்டிக் கொண்டு பெருமானாரிடம் சென்று சாப்பிடச் சொன்னார்கள். மகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி தாம் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு மீதத்தை பசித்திருந்த தோழர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்கள். மேலும் அபாயமான இத்தருணத்தில் இங்கு வரக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பினார்கள்.

இதன்பின்> அலி நாயகம் அபூஜஹல் மகளை மணக்கப் போகிறாராம் என்ற செய்தி மதீனத்து நகர் பெண்களிடம் பரவி பாத்திமா நாயகி அவர்களுக்கும் தெரியவந்தது. அதனால் மிகவும் கவலையுற்று, வேதனையுற்று தம் தந்தையிடம் சொன்னார்கள். தந்தையாரும் அலி நாயகத்திடம் சென்று கேட்டு வருவோம் என்றுசொல்லி தம் புதல்வியருடன் சென்று அலீ நாயகத்தை கண்டு, ‘பாத்திமாவைத் துன்புறுத்தியவர் என்னைத் துன்புறுத்தியவர். என்னைப் பயமுறுத்தியவராவார் என்பதை நீர் அறிவீர்களா?’ என்று வினவினார்கள்.

சினத்துடன் நாயகம் அவர்களின் இச்சொல் கேட்டு அலி நாயகம் அவர்கள் துடித்துப் போனார்கள். அதனை நான் நன்கு அறிவேன் நாயகமே! என்று அலி நாயகம் அவர்கள் மறுமொழி பகிர்ந்தனர்.

அவ்வாறாயின் நீர் அபூஜஹலின் மகளை மணக்கத் துணிந்தீர்? என்று அண்ணல் நபி அவர்கள் கேட்டார்கள். ‘நீர் அபூஜஹலின் மகளை மணப்பதாயிருப்பின் பாத்திமாவை மணவிலக்கு செய்துவிட்டுத்தான் மணக்கலாம்’ என்று சொன்னார்கள். வியப்பும் வேதனையும் கொண்டவர்களாய் அலி நாயகம் அவர்கள் தமக்கு அவ்வித எண்ணம் இருந்ததே இல்லை என்று சொன்னார்கள். வீண் கட்டுக்கதையை நம்பி தலைகவிழ்ந்திருந்த தம் மனைவியை ஆறுதல் படுத்தி தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தமக்கிருந்த அன்பை அலி நாயகம் விரித்துக் கூறினர்.

அண்ணலார் கூறினார்கள்: ‘எவர் பாத்திமாவை மகிழ்விக்கிறாரோ அவர் என்னை மகிழ்விக்கிறார். எவர் என்னை மகிழ்விக்கிறாரோ அவர் இறைவனை மகிழ்விக்கிறார்’ என்று.

பாத்திமா நாயகி அவர்களை அடிக்கடி காண வேண்டும் என்று என்று அண்ணலார் விரும்பினார்கள். ஆனால் அவர்களின் இல்லாம் தொலைவிலிருந்தது. எனவே ஒரு நாள் தம் புதல்வியரிடம் ‘நீ என் வீட்டின் அருகிலேயே குடியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’என்றார்கள்.

நாயகத்தின் வீட்டினருகே ஹாரிஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பல வீடுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைத் தாங்கள் கேட்டால் கிடைக்கும் என்று மகள் கூறினார்கள்.

‘ஹாhஸா அவர்கள் எனக்காக எத்தனையோ வீடுகள் விட்டுள்ளார். எனவே மீண்டும் அவரிடம் வேறொரு வீடு தருமாறு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது’ என்று கூறிவிட்டார்கள்.

இதையறிந்த ஹாரிஸா அவர்கள் அண்ணலாரின் அருகிலுள்ள வீட்டை பாத்திமா நாயகிக்கு காலி செய்து கொடுத்து விட்டார்.

பாத்திமா நாயகிக்கு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு அலி அவர்கள் இட்ட பெயரான ஹர்ப் என்ற பெயரை மாற்றி ஹஸன் என்று பெயரிட்டு அகமகிழ்ந்தனர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

ஹஸன் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு பிறந்தார்கள். அவர் அமைப்பில் அருமைப் பாட்டனாரைப் போலவே இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு இரு பேரர்களின் மீதும் எல்லையில்லா அன்பிருந்தது. தம்முடைய பேரர்களுடன் அதிக நேரம் வைத்துக் கொள்வதையே விரும்பினார்கள்.

எந்தத் துன்பத்தையும் தந்தையாரிடம் கூறி ஆறுதல் பெறுவது பாத்திமா நாயகி அவர்களின் வழக்கமாகும். ஒருநாள் தந்தையாரின் மனைவியார் ஆயிஷா பிராட்டி கூறிய ஒரு சொல் பாத்திமா அவர்களின் நெஞ்சை முள்போல் குத்திக் கொண்டே இருந்தது.

தந்தையாரிடம் சென்று இதுபற்றி சொன்னார்கள். ஆயிஷா நாயகியார் என்னை விதவைத் தாய்க்குப் பிறந்தவர் என்கிறார்கள் என்றார்கள். கூறும்போதே குரல் கரகரத்தது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். இதற்காகவா துக்கப்படுகிறீர்கள்.? என் தாயார் விதவை என்பது உண்மைதான். ஆனால் தாங்கள் யாரை மணந்தீர்கள்? என் அன்னையார் கட்டிக் கழித்தவர்களைத்தாமே என்று நீர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறி இருக்க வேண்டாமா! என்று கேட்டார்கள். இந்த பதிலைக் கேட்டதும் பாத்திமா நாயகி அவர்கள் தம் துன்பத்தையெல்லாம் மறந்து விட்டார்கள்.

ஒருமுறை பாத்திமா நாயகி அவர்கள் நோயுற்று வருந்துவதை அறிந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதல்வியாரைக் காண வந்தார்கள். அப்போது நலம் விசாரித்தார்கள். பாத்திமா நாயகி அவர்கள் தமக்கு நோய் கடுமையாக இருப்பதாகவும் அதைப் பொறுத்துக் கொள்ள முயலுவதாகவும் கூறினர்.

அண்ணலார், ‘ஆம் மகளே! நீர் அகிலத்து மாதர்களுக்கோர் அரசி ஆவீர். அறிந்து மகிழ்வீர்’ என்று புகழந்துரைத்தார்கள். எனவேதான் இவர்களுக்கு ஸையிதத்துன்னிஸா என்றும்> பெண்களில் உயர்ந்தவர் என்ற பொருள் தரும் அப்ளலுன்னிசா என்ற பெயரும், பூவையரில் மேலானவர் என்று பொருள்தரும் கைருன்னிசா என்னும் பெயரும் அவர்களை அணி சேர்த்தன.

ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்த அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொல்லப்படும் நிலைக்குள்ளாகத் தம்முடைய ஒரே குழந்தையைத்தான் விட்டிருந்தார்கள். ஆனால் பாத்திமா நாயகியோ தமது இரு புதல்வரையுமே இறைவன் பேரில் அர்ப்பணித்து விட்டார்கள். எனவேதான் அவர்கள் பெரிய மர்யம் எனப் பொருள்படும் ‘மரியமே குப்ரா’ என்று குறிப்பிட்டார்கள்.

பாத்திமா நாயகி அவர்கள் கொடிய வறுமை வாழ்வை ஏற்று அதில் இன்பம் கண்டார்கள். வறுமையைத் தந்து தம்மை வருத்தும் இறைவனை அவர்கள் விரும்பினார்கள். நேசித்தார்கள். வழுத்தி வணங்கினார்கள்.

எந்நேரமும் மலர்ந்திருக்கும் முகமும், நிறைந்த உளமும், ஈரம் மாறா நெஞ்சமும் பாத்திமா நாயகி அவர்களை அணி செய்திருந்தன. ஒப்பற்ற உயரிய குணங்கள் பெற்றிருந்த பாத்திமா நாயகி அவர்கள் அழகிய துணிமணிகளையோ அலங்கார ஆடைகளையோ அணிந்ததே இல்லை. கிழிந்த ஆடைகளைக் கொண்டே அவர்கள் அளவற்ற திருப்தி அடைந்தார்கள்.

கணவருக்கும், குழந்தைகளுக்கும் துணி வாங்கும்போது கூட தமக்கென்று எதுவும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஒட்டுப் போட்ட இற்ற ஆடைகளே தமக்குப் போதும் என்று அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். தடித்த துணியால் ஆன ஆடையையே அவர்கள் விரும்பி அணிவார்கள். யாராவது உயர்தர ஆடைகளை கொடுத்தால் அவற்றை பாத்திமா நாயகி அவர்கள் ஏற்க மறுத்து விடுவார்கள். நான் வழக்கமாய் அணியும் துணிதான் எனக்குப் பிடித்தமானது என்று கூறிவிடுவார்கள்.

ஒருநாள் புதல்வியார் நோயுற்றிருக்கிறார் என்று கேள்விப்பட்டு நலம் விசாரிக்க அண்ணலார் தம்தோழர் ஒருவருடன் புதல்வியாரின் வீட்டிற்குப் புறப்பட்டனர். வீட்டை அடைந்ததும் தம் வழக்கப்படி வாயிலில் நின்றவாறு உள்ளே வர அனுமதி கேட்டார்கள்.

நோய்ப்படுக்கையில் கிடந்த மகளாரின் குரல் கேட்டது. ‘ யாரஸூலல்லாஹ்! என்னிடம் உள்ள ஆடையோ சிறியதாயிருக்கிறது. இந்நிலையில் அன்னியரை நான் எவ்வாறு வரவேற்பது?’ என்றார்கள்.

‘கண்மணியே! உம் உடலை நன்கு போர்த்திக் கொள்ளும். வாயிலில் நின்ற தந்தையார் கூறினார்கள்.

‘யாரஸூலல்லாஹ்! நானும் போர்த்தத்தான் பார்க்கிறேன். போர்வையோ பற்றவில்லை. தலையை மூடினால் கால் தெரிகிறது. காலை மூடினால் தலை தெரிகிறது’ என்று பாத்திமா நாயகி அவர்கள் சொன்னார்கள். ஆற்றாமையைப் புரிந்து கொண்டு தம் போர்வையை உள்ளே வீசியெறிந்து ‘இதைக் கொண்டு உம் உடலை நன்கு போர்த்திக் கொள்ளும்’ என்று நவின்றார்கள். அதன்பின்னர்தான் அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு முறை குளிர் அதிகமாக இருந்ததால் கடுங்குளிரில் நடுங்குவதைக் கண்ட ஜைனப் பின்தெ அதபா அவர்கள் போர்வை ஒன்றைக் கொடுத்த போது அன்புடன் அதனை மறுத்த பாத்திமா நாயகி அவர்கள் என் கணவர் தந்த போர்வையே எனக்குப் போதும் என்று கூறி அலி நாயகம் அவர்கள் வாங்கித் தந்த பழைய போர்வையைக் காட்டினார்கள்.

ஒருநாள் அண்ணலார் உணவின்றி பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்த பாத்திமா நாயகி அவர்கள் தம்மிடமிருந்த மாவில் ரொட்டி சமைத்துத் தந்தையாருக்கு கொண்டு சென்றார்கள். தந்தையார் ‘ஏது இவை?’ என்று வினவினார்கள்.

இரு பசி வேளைளகளுக்குப் பின் இது எங்களுக்கு; கிடைத்தது. தங்களின் நினைவும் கூடவே வந்தது. கொண்டு வந்தேன்’ என்றார்கள் பாத்திமா நாயகி அவர்கள். உடனே ‘ உம் தந்தையின் நாலாவது பசி வேளைகளுக்குப் பின் இது கிடைத்திருக்கிறது’ எனக் கூறினார்கள்.

அஸ்மா என்பவர்கள் அடிக்கடி பாத்திமா நாயகி அவர்களை வந்து காண்பது வழக்கம். அவ்வாறே ஒரு நாள் அவர் சென்றபோது பாத்திமா நாயகி அவர்கள் சோளரொட்டியைத் தண்ணீரில் நனைத்து அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

பாத்திமா அவர்கள் மென்மையான படுக்கையில் படுப்பதை என்றும் விரும்பியதில்லை. மண்தரையில்தான் படுப்பார்கள். அதில் இன்பம் கண்டார்கள்.

ஒருநாள் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அலீ நாயகம் அவர்கள் பசித்ததால் சாப்பிட ஏதும் இருக்கிறதா? என்று நாயகி அவர்களிடம் கேட்டார்கள். ஒரு கோதுமை மணி கூட இல்லை. மூன்று நாட்களாக இதே நிலைதான் என்று சொன்னார்கள்.

ஏன் என்னிடம் கூறவில்லை? என்று சொன்னார்கள். தங்களிடம் எதையும் கேட்டு தொந்திரவு செய்யக் கூடாது என்றும், தங்களை வெட்கமடையச் செய்யக் கூடாது என்றும் எனது தந்தையார் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பாத்திமா நாயகி அவர்கள் சொன்னார்கள். மனைவியாரின் மறுமொழி அலி நாயகத்தின் உள்ளத்தை குளிரச் செய்தது. பசியை மறக்கச் செய்தது.

செல்வ வீட்டுப் பெண் ஒருவர் பாத்திமா நாயகி அவர்களிடம் தங்களுக்கு ஏதும் தேவைப்படின் என்னிடம் கூறுங்கள். நான் தருகிறேன் என்றார்கள். அதற்கு பாத்திமா நாயகி அவர்கள் இப்பொழுது எனக்கு எதுவும் தேவையில்லை. தேவைப்படும் ஏழைகளுக்கு வழங்குங்கள். எப்பொழுதுமே மேல் கையானது கீழ்கையை விட மேலானது’.

ஒருநாள் அண்ணலார் ஓர் ஏழையை பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அனுப்பி தம் மகளாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஏதாவது வாங்கிக் கொடுக்குமாறு கூறினார்கள். அப்பொழுது பாத்திமா நாயகி அவர்கள் மூன்று நாட்கள் பட்டினியுடன் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை.

எளியவரை அழைத்துக் கொண்டுவந்த பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நாயகி அவர்களிடம் கூறினார்கள். அதற்குள் அந்த எளியவர் முந்திக் கொண்டு தாம் உணவருந்தி இரு நாட்களுக்கு மேலாகின்றன என்றும் நடுங்கும் குளிரில் உடலைப் போர்த்தக் கூடத் தம்மிடம் எதுவுமில்லை என்று கூறினார்கள்.

அவரின் துயர நிலை அறிந்த பாத்திமா நாயகி அவர்களின் கண்கள் கலங்கி விட்டது. மறுகணம் தம்மிடம் இருந்த குழந்தைக்கு போர்த்தக் கூடிய ஒரே போர்வையை எடுத்;து கொடுத்து விட்டார்கள். பசிக்கு ஏதாவது தாருங்கள் என்று அந்த எளியவர் கூறியதும்> தாம் பிரியத்துடன் பாதுகாத்து வந்த தம் தாயின் கழுத்தணியை எடுத்து கொடுத்து இதை விற்று உணவுப் பொருள் பெற்று வருவீர் என்று கொடுத்தார்கள்.

அவர்அதனை எடுத்துக் கொண்டு நபிகளாரிடம் வந்து நடந்ததைக் கூறினார். தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அண்ணலார் தம் மகளின் ஈகையை நினைத்து உள்ளம் பூரித்தார்கள். அதனை ஒருவர் அந்த அணிகலன்களை விலைக்கு வாங்கினார். பொன் கொடுத்து வாங்கிய அவர் அதனையும் ஒரு அடிமையையும் பாத்திமா நாயகி அவர்களுக்கு கொடுத்து அனுப்பினார்கள். அன்பளிப்பாய் வந்த அடிமையை உடனே விடுதலை செய்துவிட்டார்கள். அந்த அணிகலனை மட்டும் அணிந்து கொண்டார்கள்.

பாத்திமா நாயகியாரின் மகனார்கள் கடும் நோயால் அவதிப்பட்டனர். எல்லாவித வைத்தியமும் செய்தும் குணமடையவில்லை. இதனால் பெற்றோர்கள் மனம் கலங்கினர். அவர்கள் இருவரும் இறைவனிடம் தங்கள் பிள்ளைகள் குணமடைந்தால் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதாக வேண்டிக் கொண்டனர்.

அதன்பின் சில நாட்களுக்குள் புதல்வர்கள் இருவரும் நலம் பெற்று வந்தனர். உடனே பெற்றோர் இருவரும் நோன்பிருக்க தீர்மானித்தனர். சிறிதளவு உணவு உண்டு நோன்பு நோற்றனர். நோன்பு திறக்கும் நேரமும் வந்தது. நீர் அருந்தி நோன்பு திறந்தனர். பார்லி ரொட்டி முன் அமர்ந்து ரொட்டியை கைகள் தொட்டதும் வாயிலில் ஒரு குரல் கேட்டது: ‘ நான் பசித்தவன்.ஆண்டவனுக்காக என் பசியைத் தணியுங்கள். பசியால் இறந்து கொண்டிருக்கும் என் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று.

அடுத்தவர் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள் என்ற அண்ணல் நபியின் வாக்கு அவர்கள் முன் தென்பட்டது. உடனே அந்த ரொட்டி முழுவதையும் அந்த ஏழைக்கே கொடுத்துவிட்டார்கள்.

அதேபோல் மற்ற இரண்டு நாட்களும் வாயிலில் உணவு வேண்டி குரல் கேட்கவே, தங்களுக்கு இல்லாமலேயே இருந்த உணவுகளை கேட்ட அந்த எளியவர்களுக்கே அளித்து மனத்திருப்தி கொண்டனர்.

அல்லாஹ்வும் வஹீ மூலம் அண்ணல் நபி அவர்களுக்கு அறிவித்தான்: ‘ இவர்கள் (தாங்கள் செய்து கொண்ட பிரமாணத்தை) நேர்ச்சையை, நிறைவேற்றி வைத்தனர். நீண்ட தண்டனையுடைய நாளைப் பயந்து கொண்டிருந்தனர். மேலும் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பால் ஏழைகளுக்கும்> அனாதைகளுக்கும் சிறைப்பட்டோருக்கும் உணவளித்து வந்தனர்.(தானம் பெறுவோரிடம்) நாம் உங்களுக்கு ஆகாரம் அளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்கேவாகும். உங்களிடம் நான் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் எங்களுக்கு) நன்றி கூறுவதையோ விரும்பவில்லை. மேலும் நிச்சயமாக நாம் எமது இறைவனின் ஒரு நாளை பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டிப் போய்விடும்.(என்றே கூறி வந்தனர்)’

நாணமும்> அடக்கமும் கொண்டிருந்த பாத்திமா நாயகி அவர்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்வார்கள். பிற ஆண்களைப் பார்ப்பதை விரும்புவதில்லை. அதேபோல் தம்மை பிற ஆண்கள் பார்க்கவும் விடுவதில்லை. வாரத்தில் வியாழன், சனிகளில் மட்டும்தான் வெளியே செல்வார்கள். இந்நாட்களில் ஷுஹதாக்களின் கப்ருகளுக்கு சென்று ஜியாரத் சென்று வருவார்கள்.

தம் வேலைகளைத் தாமே செய்வார்கள். துணி தைப்பார்கள். திரிகையில் மாவரைப்பார்கள். தோல் பையில் நீர் கொணர்வார்கள். நீர் நிறைந்த கனக்கும் பை அவர்களின் மேனியில் தழும்பு உண்டு பண்ணும். திரிகையில் மாவரைக்கும் போது களைப்பால் அதன் மேலேயே சாய்ந்து விடுவார்கள். தம் குழந்தைகளுக்கும் அருள்போதம் வழங்கத் தவறுவதில்லை. தம்மிடம் கல்வி கற்க வருபவர்களுக்கு இன்முகம் காட்டி அல்லாஹ்வின் மறையும்> அவன் தூதரின் வழிமுறைகளையும் அவர்களுக்கு அழகாகக் கூறுவார்கள்.

இன்குரல் பெற்றிருந்த அவர்கள் உரத்துப் பேசியோ> சிரித்தோ அறியார்கள். பிறர் முன் மிகவும் அடக்கத்தோடு அமர்ந்திருப்பார்கள். உரையாடல்களில் கலந்து கொள்ளாது ஒதுங்கியிருந்தவாறே நிகழ்வனைத்தையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். குறுக்கே ஏதும் கூற மாட்டார்கள். நுண்ணிய அறிவும்> நினைவாற்றலும் பெற்றிருந்த அவர்கள் பேசத் தொடங்கினால் எல்லோர் கவனமும் அவர்களின் பக்கமே திரும்பும். ஆண்கள் முன்னால் மிக அடக்கத்துடனும்> முகம்> உடல் முழுவதும் திரை போர்த்தி தலை தாழ்த்தியே அமர்ந்திருப்பார்கள். மிக நெருங்கிய உறவினர் முன்னிலையிலும் கூட அவர்கள் முகத்திரையை விலக்குவதில்லை.

பெருநாட்களின் போது மக்கள் திரளில் பாத்திமா நாயகியைக் காணவே இயலாது. எங்காவது ஒரு மூலையில் எவர்க்கும் தெரியாமல் அமர்ந்திருப்பார்கள். வயதில் பெரியவர்களைக் கண்டால் அதிக மரியாதை செய்வார்கள். ஊனமுற்றோர்களுக்கு பரிவுடன் உதவிடுவார்கள்.

இறைவனை வணங்குதில் கொஞ்சம் கூட சளைக்காதவர்கள். இரவு முழுவதும் கடுமையான வணக்கத்தில் ஈடுபடுவார்கள். சுன்னத்தான நோன்புகளை பிடிக்கத் தவறுவதில்லை. அவர்கள் வாயிலிருந்து பொய் என்றும் வெளிவந்ததில்லை.

ஒருமுறை வீட்டுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அண்ணலார் அழைக்கிறார்கள் என்று ஒரு ஆள் வந்து கூறிவிட்டுச் சென்றதும்> உடனே பாத்திமா நாயகி அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். அங்கு தமது தந்தையார் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். காரணம் வினவியபோது, அன்று இறைவனிடமிருந்து இறங்கிய வசனங்களை ஓதிக் காண்பித்தார்கள். அதைக் கேட்ட பாத்திமா நாயகி அவர்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

இந்தக்காலகட்டத்தில் பாத்திமா நாயகிக்கு முஹ்ஸின் என்னும் ஆண் குழந்தையும், ஜைனப், உம்முகுல்தூம், ருகையா என்னும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன. முஹ்ஸின் இளம்பருவத்திலேயே மறைந்துவிட்டார்கள்.

இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி வந்த அண்ணலார் நோயுற்றார்கள். அதையறிந்த மகளார் ஆறாத் துயரில் ஆழ்ந்தார்கள். அருகிலிருந்து பணிவிடைகள் செய்து வந்தார்கள். நோய் ஏற்பட்டு இருவாரங்கள் ஆகிவிட்டன. நோய் குறைந்தபாடில்லை.இறுதியில் தமது இறுதிநிலை எய்திவிட்டது என்பதை உணர்ந்த அண்ணலார் அழுது கொண்டிருந்த பாத்திமா நாயகி அவர்களை அருகே அழைத்தார்கள்.அவர்களின் செவிகளில் யாதோ கூறினார்கள். அண்ணல் அவர்களின் செய்தி கேட்டு பாத்திமா நாயகி அவர்களின் விழிகள் கண்ணீரைச் சிந்தின. உடனே அவர்கள் மீண்டும் மகளார் செவியில் மறைவாய் யாதோ சொன்னார்கள். அதனைக் காதுற்ற பாத்திமா நாயகி அவர்களின் வதனம் சிறிதே நிம்மதியடைந்தது.

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷா பிராட்டியார் அவர்களுக்கு ஏதும் புரியவில்லை.பிறகு இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது> ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முதலில் என்னிடம் தாம் மறையப் போகும் செய்தியைக் கூறினார்கள். அதைக் கேட்டு நான் கண்ணீர் சிந்தினேன். மறுகணம் என்னிடம்> நீர் தாம் முதலில் என்னை சுவர்க்கத்தில் சந்திப்பீர்’ என்றார்கள். அதைக் கேட்டு நான் அகமகிழ்ந்தேன்’ என்றார்கள்.

சிறிது நேரத்தில் அண்ணலாரின் உயிர் பிரிந்தது. அண்ணலாரை அடக்கம் செய்து விட்டு திரும்பிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து> ‘உங்களுக்கு இறைவனின் திருத்தூதர் மீது மண்ணைத் தள்ள எவ்வாறு மனம் வந்தது?என்று வருத்தத்துடன் கேட்டார்கள். அவர்களின் துக்கத்தால் அவர்கள் வீரிட்டார்கள். இந்த சப்தம் கேட்டு மெய்சிலிர்த்த அனஸ் நாயகம் அவர்கள்> இறைவனின் விருப்பத்தை யாரால் தடுத்து நிறுத்த முடியும் என்று இதமாக ஆறுதல் கூறினார்கள்.

பலபேர்களும் அவர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்கள். அப்படியும் அவர்களின் துயரத்தை குறைக்க முடியவில்லை. அவர்களின் உள்ளத்தில் அந்தளவு துக்கம் ஆழமாக படிந்து விட்டது. மனைவியாரின் கவலையை போக்க முயன்ற அலி நாயகம் அவர்களும் தம் முயற்சியில் தோற்றே விட்டார்கள் என்று சொல்லலாம்.

பாத்திமா நாயகி அவர்களுக்கு வயது 29. அன்று ரமலான் மாதம் பிறை 3. தம் புதல்வர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தம் தந்தையாரின் ரவ்லாவிற்கு சென்றார்கள். அங்கு துஆ இறைஞ்சினார்கள். பின்னர் வீடு திரும்பினார்கள். பிறகு குளித்து தூய உடை அணிந்தார்கள். ஜஃபர் அவர்களின் மனைவி அஸ்மா அவர்களிடம் எங்கும் சென்றிட வேண்டாம் என்று வேண்டியபின் படுக்கச் சென்றார்கள்.

சற்று நேரம் சென்றபின் அஸ்மா நாயகி அவர்கள் பாத்திமா நாயகியை வெளியிலிருந்தே அழைத்தார்கள். பதில் வராததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பதற வைத்ததது. ஆம். உலகை உய்விக்க வந்த உத்தம தூதரின் இதயக் கனி அன்னை பாத்திமா நாயகி அவர்கள் நீங்காத் துயில் கொண்டிருந்தனர்.

ஆறு மாதமே ஆவதற்குள் அடைந்த புண் ஆறுவதற்குள் விழுந்த துயரிலிருந்து மீளுவதற்குள் மற்றொரு பெரும் துயரம் நேர்ந்தது மக்களை நைத்தது.

அல்லாஹ்வின் தூதர் மறைவை நம்மிடையே பாத்திமா இருந்ததால் மறந்திருந்தோம். உம்முடைய முகத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் முகத்தை இனி நாங்கள் காண இயலுமா?’ என்று அலி நாயகம் பெரும்துயரத்துடன் அரற்றினார்கள்.

அளவற்ற நாணம் கொண்டிருந்ததால் பாத்திமா நாயகி அவர்களின் திருவுடல் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க. அன்னாரின் விருப்பப்படி இரவில் மதீனா நகர் வழியே எடுத்துச் செல்லப்பட்டது. அலி நாயகம் ஜனாஸா தொழுகை நடத்தினர். இறுதியில் பாத்திமா நாயகி அவர்களில் திருவுடலம் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் வழி வாழ்வோம்.
.

Tuesday, 6 March 2018

للحظات الأخيره في حياة الرسول For the last moments in the life of the Apostle 632 february 6






للحظات الأخيره في حياة الرسول
For the last moments in the life of the Apostle 
632 february 6




للحظات الأخيره في حياة الرسول
قبل الوفاة ، آخر شئ للرسول كان حجة الوداع، وبعدها نزل قول الله عز وجل  “اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا  .. فبكي أبو بكر الصديق عند سماعه هذه الآيه فقالوا له ما يبكيك يا أبو بكر إنها آية مثل كل آية نزلت علي الرسول .. فقال : هذا نعي رسول الله
وعاد الرسول .. وقبل الوفاة ب 9 أيام نزلت آخر أيه من القرآن  واتقوا يوما ترجعون فيه إلي الله ثم توفي كل نفس ما كسبت وهم لا يظلمون وبدأ الوجع يظهر علي الرسول فقال : أريد أن أزور شهداء أحد  فذهب إلي شهداء أحد ووقف علي قبور الشهداء وقال : السلام عليكم يا شهداء أحد أنتم السابقون وإنا إنشاء الله بكم لاحقون  وإني إنشاء الله بكم لاحق
وأثناء رجوعه من الزيارة بكي رسول الله صلى الله عليه وسلم قالوا ما يبكيك يا رسول الله ؟ قال : اشتقت الي إخواني  ، قالوا  أو لسنا إخوانك يا رسول الله ؟ قال : لا أنتم أصحابي ، أما إخواني فقوم يأتون من بعدي يؤمنون بي ولم يروني  . اللهم أنا نسالك أن نكون منهم
وعاد الرسول ، وقبل الوفاه ب 3 أيام بدأ الوجع يشتد عليه وكان في بيت السيده ميمونه ، فقال اجمعوا زوجاتي  ، فجمعت الزوجات ، فقال النبي :أتأذنون لي أن أمرض في بيت عائشه ؟  فقلن أذن لك يا رسول الله فأراد أن يقوم فما استطاع فجاء علي بن أبي طالب والفضل بن العباس فحملا  النبي وخرجوا به من حجرة السيده ميمونه الي حجرة السيده عائشه فرآه الصحابه علي هذا الحال لأول مره

فيبدأ الصحابه في السؤال بهلع ماذا أحل برسول الله .. ماذا أحل برسول الله فتجمع الناس في المسجد وامتلأ وتزاحم الناس عليه .فبدأ العرق يتصبب من النبي بغزاره ، فقالت السيده عائشه : لم أر في حياتي أحد يتصبب عرقابهذا الشكل . فتقول : كنت آخذ بيد النبي وأمسح بها وجهه لأن يد النبي أكرم وأطيب من يدي. وتقول :فأسمعه يقول : لا اله إلا الله ، إن للموت لسكرات مره
فتقول السيده عائشه : فكثر اللغط أي الحديث في المسجد اشفاقا علي الرسول فقال النبي : ماهذا؟. فقالوا : يارسول الله ، يخافون عليك . فقال  احملوني إليهم. فأراد أن يقوم فما استطاع فصبوا عليه 7 قرب من الماء حتي يفيق . فحمل النبي وصعد إلي المنبر .. آخر خطبه لرسول الله و آخر كلمات له
فقال النبي :  أيها الناس ، كأنكم تخافون علي  فقالوا : نعم يارسول الله . فقال : أيها الناس ، موعدكم معي ليس الدنيا ، موعدكم معي عند الحوض .والله لكأني أنظر اليه من مقامي هذا . أيها الناس ، والله ما الفقر أخشي عليكم ، ولكني أخشي عليكم الدنيا أن تنافسوها كما تنافسها الذين من قبلكم فتهلككم كما أهلكتهم  .
ثم قال : أيها الناس ، الله الله في الصلاه ، الله الله في الصلاه  بمعني أستحلفكم بالله العظيم أن تحافظوا علي الصلاه وظل يرددها ثم قال : أيها الناس إن عبدا خيره الله بين الدنيا وبين ما عند الله ، فاختار ما عند الله  فلم يفهم أحد قصده من هذه الجمله ، وكان يقصد نفسه ، سيدنا أبوبكرهو الوحيد الذي فهم هذه الجمله ، فانفجر بالبكاءوعلي نحيبه ووقف وقاطع النبي وقال : فديناك بآبائنا ، فديناك بأمهاتنا ، فديناء بأولادنا فديناك بأزواجنا ، فديناك بأموالنا ، وظل يرددها ..
فنظر الناس إلي أبوبكر ، كيف يقاطع النبي فأخذ النبي يدافع عن أبوبكر قائلا : أيها الناس ، دعوا أبوبكر ، فما منكم من أحد كان له عندنا من فضل إلا كافأناه به ، إلا أبوبكر لم أستطع مكافأته ، فتركت مكافأته إلي الله عز وجل كل الأبواب إلي المسجد تسد إلا باب أبوبكر لا يسد أبدا وأخيرا قبل نزوله من المنبر ..

بدأ الرسول بالدعاء للمسلمين قبل الوفاه كآخر دعوات لهم ، فقال : آواكم الله ، حفظكم الله ، نصركم الله ، ثبتكم الله ، أيدكم الله  ..
 وآخر كلمه قالها ، آخر كلمه موجهه للأمه من علي منبره قبل نزوله  قال :أيها الناس أقرأوا مني السلام كل من تبعني من أمتي إلي يوم القيامه.
وحمل مرة أخري إلي بيته . وهو هناك دخل عليه عبد الرحمن بن أبي بكر وفي يده سواك ، فظل النبي ينظر الي السواك ولكنه لم يستطيع ان يطلبه من شدة مرضه . ففهمت السيده عائشه من نظرة النبي فأخذت السواك من عبد الرحمن ووضعته في فم النبي ، فلم يستطع أن يستاك به ، فأخذته من النبي وجعلت تلينه بفمها وردته للنبي مره أخري حتي يكون طريا عليه فقالت : كان آخر شئ دخل جوف النبي هو ريقي ، فكان من فضل الله علي أن جمع بين ريقي وريق النبي قبل أن يموت
تقول السيده عائشه : ثم  دخلت فاطمه بنت النبي ، فلما دخلت بكت ، لأن النبي لم يستطع القيام ، لأنه كان يقبلها بين عينيها كلما جاءت إليه ..
فقال النبي : ادنو مني يا فاطمه ) فحدثها النبي في أذنها ، فبكت أكثر . فلما بكت قال لها النبي ادنو مني يا فاطمه ) فحدثها مره أخري في اذنها ، فضحكت بعد وفاته سئلت ماذا قال لك النبي ، فقالت : قال لي في المره الأولي يا فاطمه ، إني ميت الليله ، فبكيت ، فلما وجدني أبكي

قال: ( يا فاطمه ، أنتي أول أهلي لحاقا بي (فضحكت .
تقول السيده عائشه : ثم قال النبي: ( أخرجوامن عندي في البيت ) وقال:  ( ادنو مني يا عائشه فنام النبي علي صدر زوجته ، ويرفع يده للسماء
ويقول : بل الرفيق الأعلي ، بل الرفيق الأعلي تقول السيده عائشه : فعرفت أنه يخير …
سيدنا جبريل دخل علي النبي وقال : يارسول الله ، ملك الموت بالباب ، يستأذن أن يدخل عليك ، وما استأذن علي أحد من قبلك . فقال النبي : إءذن له يا جبريل فدخل ملك الموت علي النبي وقال : السلام عليك يا رسول الله ، أرسلني الله أخيرك ، بين البقاء في الدنيا وبين أن تلحق بالله . فقال النبي بل الرفيق الأعلي ، بل الرفيق الأعلي ووقف ملك الموت عند رأس النبي وقال : أيتها الروح الطيبه ، روح محمد بن عبد الله ، أخرجي إلي رضا من الله و رضوان ورب راض غير غضبان.
 تقول السيده عائشه : فسقطت يد النبي وثقلت رأسه في صدري ، فعرفت أنه قد مات …
فلم أدري ما أفعل ، فما كان مني غير أن خرجت من حجرتي وفتحت بابي الذي يطل علي الرجال في المسجد وأقول مات رسول الله ، مات رسول الله . تقول فانفجر المسجد بالبكاء . فهذا علي بن أبي طالب أقعد ، وهذا عثمان بن عفان كالصبي يؤخذ بيده يمني ويسري وهذا عمر بن الخطاب يرفع سيفه ويقول من قال أنه قد مات قطعت رأسه ، إنه ذهب للقاء ربه كما ذهب موسى للقاء ربه وسيعود ويقتل من قال أنه قد مات .
أما أثبت الناس فكان أبوبكر الصديق رضي الله عنه دخل علي النبي واحتضنه وقال  وآآآ خليلاه وآآآ صفياه ، وآآآ حبيباه ، وآآآ نبياه .

 وقبل النبي وقال : طبت حيا وطبت ميتا يا رسول الله .ثم خرج يقول : من كان يعبد محمدا فإن محمدا قد مات ، ومن كان يعبد الله فإن الله حي لا يموت …
 ويسقط السيف من يد عمر بن الخطاب ،يقول : فعرفت أنه قد مات …
 ويقول : فخرجت أجري أبحث عن مكان أجلس فيه وحدي لأبكي وحدي ….
ودفن النبي  والسيده فاطمه تقول : أطابت أنفسكم أن تحثوا التراب علي وجه النبي …
ووقفت تنعي النبي وتقول يا أبتاه ، أجاب ربا دعاه ، يا أبتاه ، جنة الفردوس مأواه ، يا أبتاه ، الي جبريل ننعاه
تري ، هل ستترك حياتك كما هي بعد وصايا رسول الله صلي الله عليه وسلم لك في آخر كلمات له ؟؟
لا أدري ماذا ستفعل كي تصبر علي ابتلاءات الدنيا..












முகம்மது நபி தன் கடைசி சரித்திரம்
முக்கியத்துவம் வாய்ந்த உரை
முகம்மது நபி தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த உரையை முகம்மது நபி துல் ஹிஜ்ஜா 9 ஹிஜ்ரி 10 (9 மார்ச் 632) அன்று அரபா நாளில் நிகழ்த்தினார்.[1]
பேச்சின் இறுதியில் மக்களை நோக்கி இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.
(ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
என்று கூறியதாகவும் பதியப்பட்டுள்ளது. முஹம்மத் நபியின் ஒவ்வொரு வசனங்களும் மிக நுணுக்கமாக ஆதாரபூர்வமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வுரையை கட்டுரை வடிவில் தொகுக்க முடியாதுள்ளது
தொடக்கவுரை.[தொகு]
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்![தொகு]
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்![தொகு]
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
அராஜகம் செய்யாதீர்கள்![தொகு]
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
பணியாளர்களைப் பேணுவீர்![தொகு]

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
அநீதம் அழிப்பீர்![தொகு]
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
முறைதவறி நடக்காதீர்![தொகு]
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [2]
உரிமைகளை மீறாதீர்![தொகு]
மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்![தொகு]
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)
இரண்டைப் பின்பற்றுவீர்![தொகு]
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
எச்சரிக்கையாக இருப்பீர்![தொகு]
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)
சொர்க்கம் செல்ல வழி![தொகு]

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)
குற்றவாளியே தண்டிக்கபடுவார்![தொகு]
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)
இஸ்லாம் முழுமையாகி விட்டது![தொகு]
இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இறுதி இறை வசனம்.[தொகு]

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:
"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)





Thursday, 8 June 2017

MOHAMED NABI PROPHETமுகமது நபியின் வாழ்கை வரலாறு / ஆற்றிய உரை


MOHAMED NABI PROPHET
முகமது நபியின் வாழ்கை வரலாறு / ஆற்றிய உரை 


முகம்மது நபி மரணமடைந்தார் 8 சூன் 632
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, (அரபு மொழி: محمد; அண். 570 - 8 சூன் 632[1]), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தாலிப் இப்னு ஆசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم), மக்கா நகரைச் சேர்ந்தவர். இவரே அராபியத் தீபகற்பம் முழுமையும் இசுலாம் என்ற ஒரே மதத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், பாபிஸ்துகள், மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும் இறைவாக்கினர் என்றும் போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர் என நம்புகின்றனர்.[2]
முகம்மது நபி கிபி 570 இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார்[3][4][5]. இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர்க வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்.
வாழ்க்கை[தொகு]

மக்காவில் பிறந்த முகமது, தனது வாழ்நாளில் 52 வருடங்களை அங்கேயே கழித்தார். இந்த 52 வருடக்காலத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கின்றனர், அவை:
இறைதூது கிடைக்கும் முன் முகம்மது நபியின் வாழ்க்கை.
இறைதூதர் என தன்னை அறிவித்தப் பின்னர் முகம்மது நபியின் வாழ்க்கை.
இறைத்தூது கிடைக்கும் முன்[தொகு]
முகமது அவர்கள் கி.பி. 570 ஆண்டு பிறந்தார். அவர் இசுலாமிய நாட்காட்டியின் முன்றாவது மாதமான ரபியுல் அவ்வல்[6] மாதத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பனு ஹாஷிம் எனும் குலத்தை சேர்ந்த மக்காவின் மிகவும் பிரபலமான குடும்பத்தில் அவர் பிறந்தார்.[3][7] . குரைஷ் எனும் பழங்குடியின மக்களின் ஒரு இனமே இந்த பானு பனு ஹாஷிம். ஆபிரகா எனும் அக்குசுமைட் மன்னன் தனது யானை பலம் பொருந்திய படையுடன் மக்காவை தாக்க முயன்று தோல்வியுற்றதனால், கி.பி 570-ஆம் வருடத்தை யானை ஆண்டு என கூறி வந்தனர். அந்த வருடத்தில் முகமது நபி பிறந்ததாக கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் வல்லூனர்கள் இந்த தோல்வியுற்ற யுத்தத்ததை ஓரிரு வருடங்கள் பின்தள்ளி வைக்கின்றனர்.[8]. மேலும், சின்னம்மை தொற்றே அந்த அக்குசுமைட் படையின் தோல்விக்குக் காரணம் என்கின்றனர்[9].
திருகுர்ஆன் 105வது அத்தியாயத்தில் யானை படை அழிவைப் பற்றி கூறப்பட்டுள்ளது
முகமதின் பிறப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னரே அவரது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார்.[13]. பாலைவனமே குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என கருதி, சிறுபிள்ளையான முகம்மதை பாலைவனத்தில் உள்ள ஓர் பெதாவுன் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தனர்.[14]செவிலித்தாய் ஹலிமா பின்த் அபு துயப் மற்றும் அவளது கணவரின் பாதுகாப்பில் இரண்டு வயது வரை முகம்மது வளர்ந்தார். ஆனால், சில மேற்கத்திய இசுலாமிய வல்லுனர்கள் இதை மறுக்கின்றனர்.[14]ஆறு வயதில் தன்னைப் பெற்ற தாயான அமீனாவை பறிகொடுத்து அனாதையானர் முகம்மது நபி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனது தந்தை வழி தாத்தா அப்து அல்-முத்தலிப் அவர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்.[15][16] . தாத்தாவின் மரணத்திற்குப்பின் பனு ஹாஷிமின் புதிய தலைவரான தனது சிறிய தந்தை அபு தாலிப் அவர்களின் மேற்பார்வையில் வளர்ந்தார். ஆறாம் நூற்றாண்டு அரபு தேசத்தில், ஒரு குலத்தின் வலுவற்றவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என இசுலாமிய வரலாற்று எழுத்தாளரான வில்லியம் மோன்ட்கோமேரி வாட் கருதுகிறார். அவர் எழுதுகையில், 'சிறுவனான முகம்மது சாகாமல் இருக்க மட்டுமே உணவு அளித்து வந்தனர் காப்பாளர்கள், ஏனெனில் அப்பொழுது பனு ஹாஷிம் குலம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது'[17].
பதினம் வயதில் முகம்மது, அவரது சிறிய தந்தையுடன் சிரியா தேசத்திற்கு வணிகம் செய்ய ஒத்தாசையாகச் சென்றுள்ளார்[15][17]. இசுலாமிய வல்லுநர்கள் இந்த நிகழ்வு முகம்மது அவர்களின் ஒன்பதாவது அல்லது பன்னிரெண்டாவது வயதில் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். மேலும், இது போன்ற ஓர் வணிகப் பயணத்தின் பொழுது, பஹிரா எனும் கிறிஸ்த்துவ துறவியை முகம்மது சந்தித்துள்ளார். அந்த துறவி முகம்மது இறைதூதராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்[18].
முகம்மதின் இளைய வயதை பற்றி தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மேலும், சில நிகழ்வுகள் வரலாறா அல்லது கதையா என முடிவு செய்ய இயலவில்லை[15][17]. முகமது அவர்கள் ஓர் வணிகராக பணிப்புரிந்துள்ளார். நடுநிலக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் இடையே நடந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்[19]. அவரது நேர்மையை பாராட்டி, அவருக்கு அல்-அமீன் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது[20]. முகமதுவை 'பேதமற்ற நடுவர்' என அக்காலத்தில் அவரை பலர் நாடியுள்ளனர்.[5][3][21]. அவரது இந்த புகழால் 595-ஆம் ஆண்டில் கதீஜா எனும் நாற்பது வயது விதவை பெண் அவரை திருமணம் செய்ய விரும்பினார். முகம்மது கதீஜாவை மணம் முடித்த பின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது[15][19].
வரலாற்றாசிரியர் இப்னு இஷாக் அவர்கள் விவரிக்கையில், கிபி 605 ஆம் ஆண்டு காபாவில் கல் பதிப்பு நிகழ்வில் முகம்மது அவர்களின் பங்கு இருப்பதாகக் கூறுகிறார். காபாவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பொருட்டு அதில் இருந்த புனித கருப்புக் கல் அகற்றப்பட்டது. ஆனால், அந்த கல்லை திரும்ப அதே இடத்தில் எந்த குலத்தை சேர்ந்தவர் நிறுவுவது என்பதில் மக்காவின் தலைவர்கள் மத்தியில் சமரசம் எட்டப்படாமல் போனது. அவ்வழியே யார் அடுத்து வருகிறார்களோ, அவரே அத்திருப்பணியை செய்யத் தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அப்பொழுது அவ்வழியே முகம்மது நபி வந்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு துணியில் அந்த கருப்பு கல்லை தாங்கி, மற்றவர் உதவியுடன் அதனை காபாவிற்கு எடுத்து சென்று, முகமது அவர்கள் அக்கல்லை காபாவில் திரும்ப நிறுவினார்[22].
இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.[தொகு]

ஜபல் அல்-நூர் எனும் மலையில் அமைந்துள்ள ஹிரா எனும் குகையில் தான் முகம்மதுக்கு குரான் ஓதப்பட்டதாக இசுலாமிய வரலாறு கூறுகிறது.
மக்காவில் உள்ள ஹிரா எனும் மலைக் குகையில், முகம்மது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம்[23][24].கிபி 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அம்மலைக்குச் சென்றபோது, கபிரியேல் எனும் இறைத்தூதர் அவருக்கு சில வாக்கியங்களை கூறி ஒப்பிக்க சொன்னதாகவும், பின் அதுவே குரானில் இடம்பெற்றதாகவும் இசுலாமிய வரலாறு கூறுகிறது[25]. காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ நண்பரான வரக்கா இப்னு நஃபல்[26] இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகம்மது அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது[27]. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து "உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை[28][29][30]." எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்.
"மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின" என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஒவ்வொரு தெய்வ வாசகம் தோன்றிய பிறகு, நபிகளின் நெற்றியில் வியர்வை துளிகள் தோன்றும்" என்று அவரது மனைவி ஆயிஷா கூறினார். தனது யோசனைகளையும் தெய்வ வாக்குகளையும் பிரிக்கும் திறன் தமக்கு இருந்ததாக முகம்மது அவர்களே நம்பிக்கைக் கொண்டார். குர்ஆனின்படி, உலகின் இறுதிகால தண்டனைகளை பற்றி இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுத்து கூறவே முகம்மது இறைத்தூதராக வந்ததாகக் கருதப்படுகிறது. சில இடங்களில், குரான் தீர்ப்பு நாளைப் பற்றி நேரடியாகச் சொல்லாதபோதும், முன்னர் அங்கு இருந்த சமூகங்களின் அழிவை எடுத்துக்காட்டி, முகம்மது காலத்தில் வாழ்ந்தவர்களை எச்சரிக்கிறது. கடவுளின் வாசகங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை எச்சரிப்பதோடு நில்லாமல், தீயவைகளை துறப்பவர்களுக்கும், தெய்வீக வாசகங்களை கேட்பவர்களுக்கும், கடவுளுக்கு சேவகம் செய்பவர்களுக்கும் நற்செய்தி கூறினார். ஓரிறைவாதமே முகமதின் முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. அல்லாஹ்வின் பெயரை அறிவிக்கவும் மற்றும் புகழவும் மற்றும் சிலைகளை வழிப்படுதல் அல்லது வேறுக்கடவுளுடன் அல்லாஹ்வை ஒப்பிடுதளையும் தவிர்க்குமாறு குரான் முகம்மது அவர்களுக்கு கட்டளை இடுகிறது.
தன்னைப் படைத்தவரிடம் காட்டவேண்டிய பொறுப்புகள், இறந்தவர்களை உயிர்ப்பித்தல், இறைவனின் கடைசி தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து சொர்க்கம் மற்றும் நரகத்தை பற்றிய விரிவான விளக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் அத்தனைக் கோணங்களிலும் கடவுளின் அறிகுறிகள் என பல்வேறு விஷயங்கள் குரானின் முதல் வரிகளில் அடங்கியுள்ளன. இறைநம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண்சிசுவதைக்குத் தடை என இசுலாமியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.[3]
முகமதுநபி(ஸல்) திருமணம் செய்த
10 பெண்கள்[தொகு]

கதிஜா
சௌதா பிந்த் சமா
ஆயிஷா
ஹவ்சா பிந்த் உமர்
சைனாப் பிந்த் குசைமா
உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா
யுவேரியா பிந்த் ஹரித்
உம் ஹபிபா ரம்லா
சபியா பிந்த் ஹீயாய்
மைமுனா பிந்த் அல் ஹரித்
எதிர்ப்பு[தொகு]

இசுலாமிய வரலாற்றுப்படி, முகம்மது நபியை இறைத்தூதர் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார்[31]. கதீஜாவை தொடர்ந்து முகம்மது நபியின் சிறிய தந்தை மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பக்கர் மற்றும் வளர்ப்பு மகன் சையித் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர்[31]. கிபி 613-ஆம் வருடத்தில், முகமது பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran 26:214).[32]. மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர் எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் - என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர்[33].
சிலை வழிபாடு மற்றும் பல இறைக்கொள்கை பின்பற்றிய மக்காவின் முன்னோரை முகம்மது நபி கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார்[34]. ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறது[35].அந்நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, பலர் பின்பற்றும் முகம்மது நபி எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது.மக்காவின் முந்தைய மதத்தை முகம்மது நபி கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்[33].வணிகர்கள் மத்தியில் பெரும்பதவி மற்றும் திருமணம் மூலம் முகம்மது நபியைத் தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் முகம்மது நபி மறுத்தார்[33].
முகம்மது நபி மற்றும் அவரை பின்பற்றியவர்களை பலர் துன்புறுத்தினர். அபு ஜஹ்ல் எனும் மக்காவின் தலைவரின் அடிமையான சுமையா பின்த் கபாப் எனும் பெண் தான் இசுலாத்தின் முதல் தியாகி ஆவார். இசுலாத்தைத் துறக்கக் கூறி அவளை ஈட்டியால் குத்திக் கொன்றனர். இசுலாத்தில் இருந்து மதம் மாற வற்புறுத்தி வேறொரு அடிமையான பிலால் இப்னு ரிபாவின் மார்பில் கல்லை வைத்துக் கொடுமை படுத்தினார் உமையா இப்னு கலப். முகம்மது நபி பானு ஹஷிம் இனத்தை சேர்ந்ததனால், அவருக்கு யாரும் தீங்கு இழைக்கவில்லை
கிபி 615-ஆம் ஆண்டில் முகம்மது நபியைப் பின்பற்றிய சிலர் எத்தியோபியாவின் அக்குசுமைட் பேரரசிற்குப் புலம்ப்ப்பெயர்ந்தனர். அங்கே, எத்தியோபியாவின் கிறிஸ்த்துவ பேரரசர் ஆஷாமா இப்னு அப்ஜர் பாதுகாப்பில் ஓர் சிறிய குடியிருப்பை உருவாக்கினர். இவ்வாறு இருவேறு புலம்பெயர்தலை இப்னு சாத் கூறுகிறார். அவர் கூறுகையில், ஹிஜ்ராவிற்கு முன்னாரே அதில் பல இசுலாமியர்கள் மக்காவிற்குத் திரும்பியதாகவும், மற்றும் அடுத்த குழு இவர்களை மதினாவில் சேர்ந்தனர். எனினும், இப்னு ஹிஷாம் மற்றும் தபரி எத்தியோபியாவிற்கு ஒரே புலம்பெயர்தல் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். மக்காவில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே, தன்னை பின்பற்றுபவர்களை அபிசீனியாவில் உள்ள கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குடியேறும் முடிவை முகமது எடுத்திருக்கலாம் என்பதும், இவர்களின் கூறுதல்களும் ஒற்று போகின்றன.
அல்-தபாரியில் பாதுகாக்கப்பட்ட உர்வாவின் கடிதத்தின்படி, மக்காவில் உமர் மற்றும் ஹம்ஸா இஸ்லாத்திற்கு மதம் மாறியப்பின், பல இசுலாமியர்கள் தங்களின் சொந்த ஊரிற்குத் திரும்ப தொடங்கினர். இருப்பினும், இசுலாமியர்கள் எதியோப்பியாவிலிருந்து மக்கா திரும்பியதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இந்த காரணத்தை அல்-வகிடி, இப்னு சாத் மற்றும் தபரி கூறுகின்றனர், ஆனால், இப்னு ஹிஷம் மற்றும் இப்னு இஷாக் கூறவில்லை[36]. தனது பிறப்பு குலத்துடன் ஒன்றிணைய முகம்மது அவர்கள், அல்லாவின் புதல்விகள் என கருதப்பட்ட மூன்று மக்காவின் பெண் கடவுள்களை பற்றிய வரிகளை கூறுகிறார். மறுநாளே, கப்ரியலின் வற்புறுத்தலின் காரணமாக, சாத்தான் அந்த வரியை தனக்கு ஓதியதாக கூறி, அந்த வரியை பின்வாங்குகிறார். [37][n 1]இந்த ஒரு நாள் வழுவை தவிர்த்து, குரான் வேறு எங்கும் புறச்சமயம் மீது கருணை காட்டவில்லை. இந்த வரியும் அப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது." [38] இந்த "நாரைகளின் கதை"(மொழிபெயர்ப்பு: قصة الغرانيق, Qissat al Gharaneeq) எனும் நிகழ்வு தான் "சாத்தானிக் வெர்சஸ்" என்று அறியப்படுகிறது. இந்த கதையின்ப்படி, இது முகம்மது நபி மற்றும் மக்காவினர் மத்தியில் இணக்கம் ஏற்பட வழிவகுத்தது, மற்றும் அபிசீனியா சென்ற இசுலாமியர்கள் வீடு திரும்ப வழி வகுத்தது. அவர்கள் வீடு திரும்பிய சமயம், இந்த இரண்டு காராணிக் வரிகளும் அல்லா கூறியதல்ல என்றும், சாத்தானின் சதிவேலை என்றும் தேவதூதன் கப்ரியல் முகமது அவர்களுக்கு அறிவித்தார்.
குறிப்பிடத்தக்க சமகால அறிஞர்கள் இந்த கதை மற்றும் வரிகளை மறுத்துள்ளனர். [39][40][n 2]பின்னர், இந்த நிகழ்வுக்கு சில ஒப்புதல்கள் வரத்தொடங்கின, எனினும், 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு தொடர்கிறது. இந்த கதை மற்றும் வரிகளை எதிர்ப்பது மட்டுமே இசுலாமிய நிலை என கருதும் அளவிற்கு எதிர்ப்புகள் தொடர்கின்றன. [41]
617ஆம் ஆண்டு, மக்ஸும் மற்றும் பனு அப்து-ஷம்ஸ் எனும் இரு முக்கிய குரைஷ் குலத்தின் தலைவர்கள், தங்களது வணிகரீதியான எதிரியான பானு ஹஷிம் குலத்திற்கு எதிராகப் புறக்கணிப்பு நிகழ்த்தினர். முகமதுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பானு ஹஷிம் திரும்பப் பெறவே இந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்தது[42][43]. இந்தப் புறக்கணிப்பு மூன்று வருடங்கள் நீடித்தது, எனினும், இதன் கொள்கையில் வெற்றிபெறாமல் சரிந்தது. இந்தக் காலக்கட்டத்தில் முகமது புனித பயண மாதங்களில் மட்டுமே அறவுரை கூற முடிந்தது. ஏனெனில், இந்த மாதங்களில் மட்டுமே அரேபியர்கள் மத்தியில் சண்டைகள் நிறுத்திவைக்க பட்டிருந்தன.[44]
இசுலாமிய வரலாற்றின்படி, "இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்" என்றழைக்கப்பட்ட நெடு-இரவு பயணத்தை தேவதூதர் கப்ரியலுடன் முகம்மது நபி 620-ஆம் ஆண்டு நிகழ்த்தினார். அப்பயணத்தின் தொடக்கமான "இஸ்ரா"வில், "புராக்" எனும் இறக்கை முளைத்த போர்க்குதிரையில், முகம்மது நபி மக்காவிலிருந்து "தூரத்து மசூதிக்கு" (அரபு மொழியில் "மஸ்ஜிது அல்-அக்சா") பறந்தார். பின்பு, மிஃராஜ் பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பயணித்தார் முகம்மது. முந்தைய இறைத்தூதர்களான ஆபிரகாம், மோசஸ், மற்றும் இயேசு ஆகியோருடன் உரையாடினார். [44][46] முகமதின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய இப்னு இஷாக், இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக வழங்கியுள்ளார். பின்வந்த அல்-தபரி மற்றும் இப்னு கதிர் போன்ற வரலாற்றாசிரியர்கள், இதனை ஓர் உடல்சார்ந்த அனுபவமாக வழங்கியுள்ளனர்[46]. மக்காவில் உள்ள ஓர் புனித இடத்திலிருந்து "அல்-பைது ல-மமூர்" எனும் காபாவின் வானுலக மாதிரிக்கு சென்ற பயணமே இஸ்ரா மற்றும் மிராஜ் என்கின்றனர் சில மேற்கத்திய அறிஞர்கள். பின்பு வந்த அறிஞர்கள் இதனை மக்காவில் இருந்து ஜெருசேலம் சென்ற பயணம் என்றே குறிப்பிடுகின்றனர்.[47]
மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறல்.[தொகு]

முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622ம் வருடம் இசுலாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.
மதீனா வாழ்க்கை[தொகு]

முதன்மைக் கட்டுரை: முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை
மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார்.[48][49] முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார்.[50] மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.[51]
முகம்மது நபியின் போர்கள்[தொகு]
முதன்மைக் கட்டுரை: முகம்மது நபியின் இராணுவச் செயல்பாடுகள்
மக்கா எதிரிகள் பல நிலைகளிலும் முகம்மது நபிக்குத் தொல்லைக் கொடுத்தார்கள். அவர்களைச் சமாளிக்க முகம்மது நபி பல போர்களில் ஈடுபட்டார். பதுருப் போர், உஹத் யுத்தம், கைபர் போர், அகழ்ப்போர், தபூக் போர், ஹுனைன் போர் உள்ளிட்ட பல போர்களில் முகம்மது நபி ஈடுபட்டார்.[52]
மக்கா வெற்றி[தொகு]
முகம்மது நபி ஹிஜ்ரி 8 இல் ரமலான் 17 அன்று (கி.பி.630) மக்கா நகருக்கு தமது படையினருடன் அணிவகுத்துச் சென்றார். இராணுவ சண்டை இல்லாமலேயே மக்கா நகரம் முகம்மது நபியின் வசம் வந்தது.[53][54][55]
இறுதிக் காலம்[தொகு]
இறுதி ஹஜ்[தொகு]

மக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியப் பின்னர் மதீனா திரும்பினார்.[56] அதில் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
இறப்பு[தொகு]

தமது கடைசி ஹஜ் யாத்திரைக்கு சில மாதங்களுக்கு பிறகு, முகம்மது காய்ச்சல், தலைவலி மற்றும் பலவீனத்தால் பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டார்.[57].அவர் கி.பி.632 ஆம் வருடம் ஜூன் 8 ஆம் தேதியன்று, மதினாவில் 62 அல்லது 63 வது வயதில், அவரது மனைவி ஆயிஷாவின் வீட்டில் மரணமடைந்தார்[58], அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



முகம்மது நபி தன் கடைசி சரித்திரம்
முக்கியத்துவம் வாய்ந்த உரை
முகம்மது நபி தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த உரையை முகம்மது நபி துல் ஹிஜ்ஜா 9 ஹிஜ்ரி 10 (9 மார்ச் 632) அன்று அரபா நாளில் நிகழ்த்தினார்.[1]
பேச்சின் இறுதியில் மக்களை நோக்கி இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.
(ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
என்று கூறியதாகவும் பதியப்பட்டுள்ளது. முஹம்மத் நபியின் ஒவ்வொரு வசனங்களும் மிக நுணுக்கமாக ஆதாரபூர்வமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வுரையை கட்டுரை வடிவில் தொகுக்க முடியாதுள்ளது
தொடக்கவுரை.[தொகு]
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்![தொகு]
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்![தொகு]
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
அராஜகம் செய்யாதீர்கள்![தொகு]
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
பணியாளர்களைப் பேணுவீர்![தொகு]

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
அநீதம் அழிப்பீர்![தொகு]
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
முறைதவறி நடக்காதீர்![தொகு]
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [2]
உரிமைகளை மீறாதீர்![தொகு]
மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்![தொகு]
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)
இரண்டைப் பின்பற்றுவீர்![தொகு]
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
எச்சரிக்கையாக இருப்பீர்![தொகு]
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)
சொர்க்கம் செல்ல வழி![தொகு]

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)
குற்றவாளியே தண்டிக்கபடுவார்![தொகு]
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)
இஸ்லாம் முழுமையாகி விட்டது![தொகு]
இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இறுதி இறை வசனம்.[தொகு]

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:
"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)