Showing posts with label UP. Show all posts
Showing posts with label UP. Show all posts

Wednesday, 7 April 2021

YOGIYANAND ,UP CHIEF MINISTER BIOGRAPHY

 

YOGIYANAND ,UP CHIEF MINISTER BIOGRAPHY




யோகியை பற்றி பேச,ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது..?

2015 வருடம் என்னுடைய உத்திரப்பிரதேச நண்பர் அமித் அகர்வால் எனக்கு போன் செய்து என்னுடைய நண்பரொருவர் கோவை வருகிறார், அவரை பேரூரில் ஒரு ஆசிரமத்தில் இறக்கிவிட வேண்டும் ஒரு கார் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்.

அவர் எங்கள் ஊர் எம்பி, மிகவும் எளிமையானவர், நல்ல மனிதர் கண்டிப்பாக நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார்.

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த இடத்தில் இருந்து தேவையானவற்றை சாதித்துக் கொள்ள முடியும், நம்மிடம் ஏன் உதவி கேட்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன்.

வாய்ப்பிருந்தால் நேரில் போய்ப் பாருங்கள் உங்களுக்கு புரியும் என்றார், நானே போய் உதவுகிறேன் என்று உறுதியளித்தேன்.

 விமான நிலையத்திலிருந்து ஒரு பையை தூக்கிக் கொண்டு வேகமாக என்னை நோக்கி நடந்து வந்து, நலம் விசாரித்து வண்டியில் ஏறிக் கொண்டார், நண்பர் என்னைப் பற்றி அவரிடம் சொல்லி இருந்தார் மேலும் என்னுடைய தொலைபேசி எண்ணையும்  அவளிடம் கொடுத்து விட்டு இருந்தார்.




எனக்கும் அவரைப் பற்றி விவரங்களை எல்லாம் அனுப்பி வைத்திருந்தார், போகும் வழியில் ஒரு காபி சாப்பிடலாம் என்று கேட்டேன்.

சரி என்றார், kg மருத்துவமனை அருகில் உள்ள அன்னபூர்ணா உணவகத்திற்கு சென்றோம், அவர் எதுவும் சாப்பிடாமல் நீங்கள் ஆர்டர் சொல்லுங்கள் என்றார், 

நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்றேன்.

இல்லை எனக்கு ஒன்னும் வேண்டாம் நீங்கள் திருப்பூரில் இருந்து எனக்காக வந்து உள்ளீர்கள், கண்டிப்பாக களைப்பாக இருப்பீர்கள், நீங்கள் காபி சாப்பிடுங்கள் என்றார்.

ஐயா நீங்கள் லக்னோவில் இருந்து 2 விமானம் மாறி வந்துள்ளீர்கள், நீங்கள் தான் களைப்பாக இருப்பீர்கள் அதுவுமில்லாமல் என்னுடைய விருந்தினர் நீங்கள் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட்டாக வேண்டும் என்றேன்.

அவரோ நான் உணவு கொண்டு வந்து விட்டேன் வெளி உணவு எனக்கு சேராது இதை நான் முதலிலேயே சொல்லியிருந்தால் நீங்கள் காபி குடிக்க மாட்டீர்கள் அதனால்தான் சொல்லவில்லை என்றார். 

நான் மட்டும் ஒரு காபியை சொல்லிவிட்டு திரும்புவதற்குள் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் சப்ளையர்கள் வடநாட்டவர், மற்றும் ஊழியர்கள் மேலாளர்கள் பாகுபாடு இல்லாமல் வரிசையாக வந்து அவர் காலில் விழ ஆரம்பித்தார்கள்.

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, சூப்பர்வைசர் ஒருவர் இவர் தொகுதியைச் சேர்ந்தவர், இவரைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வரிசையாக வந்து காலில் விழ ஆரம்பித்து விட்டார்கள் என தெரிந்தது.

நான் குடித்த அந்த காபிக்கு காசு நான் தான் கொடுப்பேன் என்று அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டார்கள்..




அதன் பாராளுமன்ற உறுப்பினர் தான் பின்னோக்கி கிடந்த கோரக்பூர் தொகுதியை முன் நோக்கி இழுத்து வந்த மகத்தான பணியைச் செய்தவர், இவர் 1998 முதல் 2017 வரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தன் தொகுதி மக்களுக்கு செய்த பணிகள் மகத்தானது.

இளம் வயதில் கோரக்பூரில் மடாதிபதி ஆனவர்.

26 வயதில் எம்பி ஆகப் பதவி ஏற்றுக் கொண்டவர், இவருடைய குடும்பத்தினர் யாருக்கும் இவரால் ஒரு காரியங்கள் கூட செய்து தரப்படவில்லை.

உடன்பிறந்தவர்கள் பெட்டிக்கடை மற்றும் சாலையோரத்தில் வியாபாரம் செய்தும் பிழைத்து வருகிறார்கள் என்று விபரம் தெரிந்தது.

ஒவ்வொரு நிமிடமும் புதிய  அனுபவம் கிடைத்தது, எனக்கு உயர்வாக தெரிந்த அந்த மனிதரை ஹிந்தி தெரிந்த காரணத்தினால் பல விஷயங்களைப் பேசி புரிந்து கொள்ள முடிந்தது.

Rss வளர்ப்பு, மக்கள் நலனில் மட்டுமே பற்று, பிரம்மச்சாரி, எதற்கும் ஆசைப்படாதவர், அவருடைய கையால் அன்று இரவு கோதுமை ரொட்டி சுட்டுக் கொடுத்தார்.

அவர் அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்தார், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் போன் செய்வார் நானும் போவேன்.

பூஜை செய்வது, உபதேசம் செய்வது, கோசாலை பராமரிப்பது, என்று ஏதாவது ஒரு இறைபணி செய்து கொண்டே இருப்பார்.

வெறும் நிலத்தில் தான் படுத்து உறங்குவார்.

அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு நான் உடன் சென்று டெல்லிக்கு வழியனுப்பி வைத்தேன்..

அன்று முதல் இன்று வரை தினமும் நினைவில் வரும் ஒரு மாமனிதர், அவர் கையால் எனக்கு உணவு தயாரித்துக் கொடுத்தவர், நாட்டு நலனையும், மக்கள் வளம் பெறவும், பல கருத்துக்களை வித்தியாசமான கோணத்தில் சொல்லிக் கொடுத்தாவர்,

உத்திரபிரதேசம் மாநிலத்தை இப்பொழுது வேகமாக வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் மாமனிதர்.

அவர் தான் இன்றைய உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்..

நன்றி.இராஜேஷ்வரீ விஸ்வநாதன்.






முதல்வரான யோகி ஆதித்யநாத் குறித்து உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்? : ஒரு ரிப்போர்ட்

கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் 21வது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கோரக்பூர் மடத்தின் தலைவர் யோகி ஆதித்யநாத் குறித்து, மதவாத முத்திரையுடன் சிலர் விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர் மதப் பாகுபாடு காட்டுபவரில்லை என்று கூறுகிறார் இஸ்லாமியர் ஒருவர்.

உத்தர பிரசேத்தில் புகழ்பெற்ற கோரக்நாத் கோயிலில் தொண்டாற்றும் தன்னார்வலர்களில் முகம்மது (30) என்ற முஸ்லிம் இளைஞரும் இடம்பெற்றுள்ளார். இவர், கோயிலின் தலைமைத் துறவியும், உ.பி.முதல்வருமான யோகி ஆதித்யநாத்தின் அன்புக்குரியவராகத் திகழ்கிறார்.

கோரக்நாத் கோயிலை அடுத்து 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது ஒரு கோசாலை. இங்கே 500க்கும் மேற் பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களில் ஒருவர் முகம்மது (30) என்ற இஸ்லாமிய இளைஞர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது 10-ம் வயது முதல் இங்கே தொண்டாற்றி வருகிறார். உணவுடன் சிறு தொகை அவருக்கு ஊதியமாகத் தரப்படுகிறது. பசுக்களைக் குளிப்பாட்டுவது, அவற்றுக்கு உணவளிப்பது உள்ளிட்ட பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

தீவிர இந்துத்துவவாதி என்று முத்திரை குத்தப் பட்டு, வெறுப்பு விமர்சனங்களை பலரும் முன்வைக்கும்போது, இது குறித்து கருத்து தெரிவித்தார் முகம்மது.

அவர் கூறிய போது, “குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் இங்கு இருந்து வருகிறேன். இதுதான் எனது வீடு. என் மீது யோகிஜிக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனது வாழ்நாள் முழுவதும் நான் இங்கு இருப்பேன். யோகிஜியை ஒரு மதவாதத் தலைவர் என்று கூறுகிறார்கள். ஆனால், பொதுவாக அவர் வெளியில் வந்துவிட்டால், எவரிடமும் தனிப்பட்ட முறையில் மதப் பாகுபாடெல்லாம் காட்ட மாட்டார். உ.பி., முதல்வராக அவர் அனைத்து சமூகத்தின் வளர்ச்சியையும் உறுதிசெய்வார்” என்றார்.

முகம்மது, இங்கே பசுக்களைப் பராமரித்து வந்தாலும், தொழுகை உள்ளிட்ட இஸ்லாமிய நடைமுறைகளை அவர் வழக்கப்படி பின்பற்றி வருகிறார்.

முகம்மதுவின் தந்தையும் இங்குதான் பணியாற்றினாராம். அவர் தற்போது சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஜ் கஞ்ச் நகரில், தனது வீட்டில் வசித்து வருகிறார். முதுமைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மருத்துவச் செலவை, யோகி ஆதித்யநாத்தான் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

கோரக்பூரின் வணிகரான மொகம்மத் காலீம் ஃபாரூகி என்பவர், யோகி ஆதித்யநாத் குறித்து கூறியபோது, “உபி.,யின் முதல்வராக யோகியை தேர்ந்தெடுத்த செயலை வரவேற்கிறோம். அவரது வரவால், கோரக்பூருக்கும், மாநிலம் முழுமைக்குமே ஒரு நல்ல மாற்றம் வரும். அரசு என்பது ஒரு தனிப்பட்ட நபரின் அரசு அல்ல. நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த அரசை தேர்ந்தெடுத்திருக்கிறோம். அவர் நிச்சயமாக மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறோம். நாங்கள் இதய பூர்வமாக இதனைக் கூறுகிறோம். இப்போது நாங்கள் எங்குச் சென்றாலும், நாங்கள் முதல்வரின் ஊரில் இருந்து வருகிறோம் என்றே பெருமையுடன் கூறுகிறோம்” என்றார்.

அவரது ஹிந்துத்துவா இமேஜ் குறித்து சிலர் பேசிக் கொண்டிருக்க, உள்ளூரில் உள்ள பலரும் அவரது வளர்ச்சிப் பணிகளைச் சொல்லிச் சொல்லி வாழ்த்துகிறார்கள். எம்.பி.யாக இருந்து கோரக்பூரில் எய்ம்ஸ் கொண்டுவரப் பாடுபட்டதும், ஒரு உரத் தொழிற்சாலையை அமைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் என!

பெருமளவிலான இஸ்லாமியர்கள், யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதை பெரும் மகிழ்ச்சியுடன் இனிப்பு கொடுத்து வரவேற்றுக் கொண்டாடினார்கள்.

 பாஜகவின் அல்பசங்க்யாக் மோர்ச்சாவின் உறுப்பினர் இர்பான் அஹ்மத் என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், அவர் எங்கள் முதல்வர். அதற்கு மேல் எதையும் நாங்கள் எவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. எங்கள் பிரச்னைகள் என்ன என்பது அவருக்குத் தெரியும். அவற்றை விரைவில் அவர் தீர்த்து வைப்பார். நாங்கள் இன்று ஹோலியை அவரது வண்ணத்துடன் சேர்த்துக் கொண்டாடுவோம்” என்றார்.

யோகி ஆதித்யநாத் நடத்தி வரும் ஜுண்டா தர்பாருக்கு வரும் எவரும் வெறும் கையுடன் திரும்பியதில்லை. ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள தனது பெயரைச் சேர்க்க பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த சௌத்ரி கைஃபுல் வாரக், இதனை பெருமையுடன் கூறுகிறார். இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “இங்கே யார் வந்தாலும் அவரது வேலை சுலபமாக முடிந்துவிடும். சில நாட்களுக்கு முன், ஆக்கிரமிப்பால் சீரழிந்திருந்த மசூதியின் நிலையை எடுத்துச் சொல்லி, உதவிகேட்க வந்திருந்தோம். அதனை மகராஜ்தான் தீர்த்துவைத்தார்.” என்றார் பெருமையுடன்.

ஜாகிர் அலி வார்ஸி என்பவரும் ஆதித்யநாத் குறித்து பெருமிதத்துடன் கூறினார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையுடன் இருக்கும் கோரக்பூரின் மான்வேலா கிராமப் பகுதியில், பாஜக 2014 பொதுத் தேர்தல் நேரத்தில் பிரசாரக் கூட்டம் நடத்த இடத்தைக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள். இதற்கு மோடியின் மீதான மதிப்பு என்பதை விட, ஆதித்யநாத் மீதான நன்றியுணர்வு என்றே சொல்லலாம். கோரக்புர் வளர்ச்சி முகமையின் பிடியில் விரும்பத்தகாத வகையில் வளைக்கப் பட்டிருந்த ஏழை இஸ்லாமியர்களின் பெரும்பாலான நிலங்களை மீட்டுக் கொடுத்தவர் ஆதித்யநாத். 2017 தேர்தலில் அவர் 175 பேரணிகளை இங்கே நடத்தியுள்ளார் என்றார் ஜாஹிர் அலி வார்ஸி.

இன்னும் கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் (21/03/2017) வெளியிட்டுள்ளன.

குறிப்பு;இவரை பார்த்து  கேள்வி கேட்க ஸ்டாலினுக்கு என்ன தகுதியுள்ளது..?


Thursday, 25 February 2021

THUMBS UP

 



THUMBS UP

தம்ஸ் அப்



''ச்சே... இதென்ன பள்ளிக்கூடமா... சந்தைக் கடையா... இல்லே, கட்சி, 'மீட்டிங்' நடக்கற மைதானமா... முதலில், மாணவர்களை அதட்டி, வகுப்பறைக்கு போக சொல்லுங்க... அப்புறம் அந்த கூட்டத்தை அனுப்பி வைக்கிற வழியை பாருங்க,'' டீச்சர் தயாமலரிடம், எரிந்து விழுந்தார், தலைமையாசிரியர்.

பள்ளி மைதானம் முழுக்க ஒரே கூட்டம். மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் கூடியிருந்தனர். கோபம், ஏமாற்றம், ஆதங்கம், பரிதவிப்பு, ஆவல்... இப்படி, பல உணர்வுகள் பூசியிருந்தன, அவர்களின் முகங்களில்.

'போராடுவோம்... போராடுவோம்...'

'தயா டீச்சரை அனுப்பாதே...'

'தயா டீச்சர் சேவை, எங்களுக்கு தேவை...'

'மாட்டோம், போக விடமாட்டோம்... தயா டீச்சரை போக விடமாட்டோம்...' 

இதுவரை இந்த பள்ளிக்கு எத்தனையோ பேர் மாற்றலாகி வந்தும், போயும் உள்ளனர். ஆனால், 'தயா டீச்சருக்கு, மாற்றல் உத்தரவு வந்துள்ளது...' என்ற விஷயம் கசிந்ததுமே... கூட ஆரம்பித்தது கூட்டம். பெற்றோரும் கூடுவர் என்பது, பள்ளி வரலாற்றிலேயே, புது அத்தியாயம்!

நகரமுமில்லாத, கிராமமும் இல்லாத, ரெண்டுங்கெட்டான் ஊர் அது. இங்கே, பிளஸ் 2 வரை, அரசு பள்ளி இருந்தும், பிள்ளைகள் சேர்க்கை குறைவு... பெற்றோருக்கும், பிள்ளைகளை, பள்ளிக்கு அனுப்புவதை விட, ஒரு நாள் கூலி முக்கியமாக பட்டது.

அக்கறையும், கவனிப்பும் காட்டாத பள்ளி வகுப்பறையும் ஜெயிலாக தோன்றியது, பிள்ளைகளுக்கு. 'படித்தால் படி, இல்லையெனில் தொலை...' என்ற விட்டேற்றியான மனநிலையில், ஆசிரியர்கள்... 

இந்நிலையில் தான், அங்கு பணியாற்ற வந்தாள், தயாமலர் டீச்சர். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, பள்ளி நேரம் போக, பெற்றோரை சந்தித்தாள். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாள். 

அந்த ஊரிலேயே வீடு எடுத்து தங்கினாள், தயாமலர். குழந்தைகளுக்கு, இலவச, 'டியூஷன்' எடுத்தாள். ஏழை குழந்தைகளுக்கு, உணவிலிருந்து, புத்தக வினியோகம் வரை, பார்த்து பார்த்து செய்தாள்.

மெல்ல மெல்ல மாற்றம் வர ஆரம்பித்தது. பள்ளி வளாகத்திலும், வெற்றாய் கிடந்த இடங்களில் தோட்டம் போட வைத்தாள். குழந்தைகளின் பிறந்தநாளுக்கு, மரக் கன்றுகளை பரிசாக தந்து, வளர்க்க செய்தாள். ஒவ்வொரு கன்னும், அவரவர் பெயரை தாங்கியபடி வளர்ந்தது.

குழந்தைகளுக்கு அகச் சுத்தம் மற்றும் புறச் சுத்தம் பற்றி போதித்தாள். இருள் அகன்று, துடைத்து விடப்பட்ட மனசில் ஈரம் படர, கல்வி விதை, வேரை ஆழப் பாய்ச்சியது. முதன் முறையாக, இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்வாகினர்...

பள்ளியின் பெயரை விட, 'தயா டீச்சர்' பெயர், அதிகம் உச்சரிக்கப்பட... விஷமிகளுக்கு எரிச்சல்; அதன் விளைவு... மாற்றல் உத்தரவு!

கைகளை கூப்பியபடியே, மைதானத்திலிருந்த உயரமான மேடையில் ஏறினாள், தயாமலர் டீச்சர்.

அவளை கண்டதுமே, கூட்டம் சற்றே அமைதி காத்தது.

முன் வரிசையில் நின்றிருந்த பொம்மி என்ன நினைத்தாளோ, சட்டென்று மேடையேறி, டீச்சரின் முழங்காலை பற்றி, மண்டியிட்டு அழுதாள். 'நீங்க போகக் கூடாது டீச்சர்... நீங்க இல்லைன்னா, நான் பள்ளிக்கூடமே வந்திருக்க முடியாது...' என்றதும், கூட்டமே ஸ்தம்பித்தது.

இதோ, மாணவர் தலைவனாக நின்று, முறைத்துக் கொண்டிருக்கிற வெங்கிடபதி கூட, ஒரு காலத்தில், இந்த பள்ளிக்கே சிம்ம சொப்பனமாக இருந்தவன். ஏழாம் வகுப்பிலேயே ஆசிரியர்களுக்கே சவால் விடுபவனாக... ஏன், சமயத்தில் ஆசிரியர் தலையையே குறி வைப்பவனாக இருந்தவன் தான். அப்படிப்பட்டவனை வழிக்கு கொண்டு வர, இவளும் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது. 

வீட்டு வாசலில் முறுக்கியபடி நின்றவனை, மெதுவாக அழைத்து பேசினாள். அவன் முரடனில்லை, அன்புக்கு ஏங்குகிற குழந்தை என்பதை புரிந்து கொண்டதுமே, வேலை சுலபமாகி விட்டது... அன்பு கிடைக்காத வீடு, அவனை சுலபமாக முரடனாக்கி விட்டிருந்தது... அந்த முகமூடியை கழற்றி துார விட்டெறிய வைக்க, அவளுக்கு பல மாதங்கள் பிடித்தது...


தொண்டையை செருமிக் கொண்டாள், தயா டீச்சர். நெஞ்சு விம்மியது. அவளும் சாதாரண மனுஷி தான் என்பதை நினைவூட்டியது, அந்த செருமல்.

குழந்தைகள் அனைவரின் மீதும், அவள் பார்வை வருடிச் சென்றது... அழுகையில் அதுங்கும் பிஞ்சு முகங்கள்... அன்பை தேக்கி வைத்த முகங்கள்... ஏமாற்றமடைந்த முகங்கள்... மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள், தயா டீச்சர்.

பொம்மியை துாக்கி, தன்னோடு அணைத்துக் கொண்டவள், ''எல்லாரும் கண்ணை துடைச்சுக்கோங்க... நான் சொல்வதை கேட்பீர்கள் தானே... சொல்லுங்க,'' என்றாள். 

ஆனால், அழுகையும், விம்மலும் அதிகமாகியது.

''ஷ்... இப்போ எல்லாரும் வகுப்புக்கு போகணும்... சாயந்தரமா வீட்டுக்கு வாங்க... இன்னிக்கு பவுர்ணமி... ஞாபகம் இருக்கு தானே... இங்கே பாருங்க, யாரும் அழக்கூடாது... என் பிள்ளைகள் அழுமூஞ்சிகளா இருக்கக் கூடாது... வீரர்களா இருக்கணும்... புரிஞ்சுதா?''

மாணவர்கள், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஒவ்வொரு பவுர்ணமியும், கூட்டாஞ்சோறு ஆக்கி, குழந்தையோடு குழந்தையாக மாறி, கையில் கவளம் உருட்டிப் போட்டு விளையாடும் டீச்சரை, எல்லாருக்கும் பிடிக்க தான் செய்யும்.

''டீச்சரம்மா... நீங்க ஊரை விட்டு போகக் கூடாது,'' என்றது, ஒரு குரல். 

''ஒரு டீச்சரம்மா, ஒழுங்கா வேலை செய்துடக் கூடாதே,'' என்று, இன்னொரு குரல்.

'தயாமலர் டீச்சரை போக விடக்கூடாது. வாங்க, வண்டி கட்டிகிட்டு, 'டவுனு'க்கு போயி, கலெக்டர் ஆபீஸ் முன், தர்ணா பண்ணலாம்...' என்று, யாரோ கொளுத்திப் போட... கூட்டம் ஆக்ரோஷமாய் ஆரவாரித்தது.

குன்றிப் போனாள், தயாமலர். சங்கடம் நிறைந்த முகத்துடன், கைகளை தலைக்கு மேலே துாக்கி கும்பிட்டாள். 

''இங்கே பாருங்க... உங்க அன்புக்கு நன்றி! இந்த பள்ளியை, குழந்தைகளை நான் ரொம்பவே நேசிக்கிறேன்... ஏன் தெரியுமா... உங்களுக்காக... வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை என்னிடம்.''

சின்ன இடைவெளி விட்டு, ''இங்கே படிக்கிற குழந்தைகளுக்கு, யார் யார் மீதோ கோபம்... யார் யார் மீதோ எரிச்சல்... உங்களுக்கோ, வாழ்க்கையின் மீது கோபம்... பணமில்லாத எரிச்சல்... நீங்க, கள்ளுக் கடையில் நிம்மதியை தேட, வீட்டு பெண்களுக்கு, உங்க மேல எரிச்சல்... 

''தேவைகளின் நெருக்கடியால், குழந்தைகள் மீது கோபத்தை காட்ட, ஒருவித அக்கறையில்லாத தன்மை எல்லாவற்றின் மேலும்... இதோ, இந்த குழந்தைகள் எல்லாம், ஏதோ அக்கறையே காட்டாத ஜெயிலில் தங்களை தள்ளி விட்டதாக நினைச்சாங்க... 

''இதுல பாதி குழந்தைகள், இதை பெரிய விடுதலையா நினைச்சாங்க... ஆக, இவங்க எல்லாருக்கும் ஒரே பெரும் நோக்கமாயிருந்தது; தேவையாயிருந்தது, கொஞ்சம் அன்பும், அக்கறையும் தான். உண்மையான அன்புக்கு ஏங்குகிற ஏக்கத்தை உணர முடிஞ்சது...

''அதனால், பாசத்துடன் கொஞ்சம் அன்பையும் ஊட்டி வளர்த்தேன். நீங்களும் என்னுடன் அன்புடன் பழகினீர்கள்... ஆனா, இந்த பரிசுத்தமான அன்பை, எனக்காக பயன்படுத்திக்கிட்டா, நான் ரொம்பவும் கேவலமானவளா ஆகிடுவேன்... உங்க அன்புக்குரிய நான், கேவலப்படுவதை நீங்க விரும்புவீங்களா?'' எனக் கேட்டாள்.

'இல்லை... இல்லை!' என்ற குரல்கள், அலை அலையாக வந்தன. 

''இந்த மாற்றல் உத்தரவு, எனக்கும் கஷ்டம் தான்... ஆனால், ஒவ்வொரு ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு இருக்கும் தானே... அது தான் இது. இதை எதிர்த்து, நீங்க, போராட்டம், அது இதுன்றது நல்லா இல்லை,'' என்றாள், தயாமலர்.

''கடைசியா ஒரு வார்த்தை சொல்லணும் உங்களுக்கு... நீங்கள்லாம் நல்லா படிச்சு, 'டாக்டர், கலெக்டர், இன்ஜினியர்' ஆகறது சந்தோஷம் தான். ஆனா, அதையும் விட, மேன்மையான நல்ல மனிதர்களா வாழணும்... இது தான், எனக்கு நீங்க தர்ற உண்மையான மரியாதை; அன்பு. அப்படி வாழ, நானும் ஒரு துாண்டுகோலா இருந்திருக்கிறேன்னா... அது தான், என் முழுமையான சந்தோஷம்,'' என, முடித்தாள் தயாமலர்.

கை தட்டினாள், பொம்மி. கைகூப்பி கண்ணீர் விட்டான், வெங்கிடபதி. தலைக்கு மேலே இரு விரல்களால், 'தம்ஸ் அப்' காட்டினான், காதர். 


ஜே.செல்லம் ஜெரினா