Showing posts with label JANUARY 21. Show all posts
Showing posts with label JANUARY 21. Show all posts

Monday, 14 June 2021

ANN SHERIDAN ,AMERICAN ACTRESS ,SINGER BORN 1915 FEBRUARY 21-1967,JANUARY 21

 

ANN SHERIDAN ,AMERICAN ACTRESS ,SINGER

BORN 1915 FEBRUARY 21-1967,JANUARY 21




Clara Lou "AnnSheridan (February 21, 1915 – January 21, 1967) was an American actress and singer. She is best known for her roles in the films San Quentin (1937), Angels with Dirty Faces (1938), They Drive by Night (1940), The Man Who Came to Dinner (1942), Kings Row (1942), Nora Prentiss (1947), and I Was a Male War Bride (1949).

Early life[edit]

Born in Denton, Texas, on February 21, 1915, Clara Lou Sheridan was the youngest of five children (Kitty, Pauline, Mabel and George) of George W. Sheridan and Lula Stewart (née Warren).[1][2] According to Sheridan, her father was a grandnephew of Civil War Union general Philip Sheridan.[3][4]

She was active in dramatics at Denton High School and at North Texas State Teachers College. She also sang with the college's stage band and played basketball on the North Texas women's basketball team.[5] Then, in 1933, Sheridan won the prize of a bit part in an upcoming Paramount film, Search for Beauty,[6] when her sister Kitty entered Sheridan's photograph into a beauty contest.

Career[edit]

Paramount[edit]

After the release of Search for Beauty in 1934, Paramount put the 19-year-old under contract at a starting salary of $75 a week ($1,451 today), where she played mostly uncredited bit parts for the next two years.[7] She can be glimpsed in the following 1934 films, and if credited, as Clara Lou Sheridan: BoleroCome On Marines!Murder at the VanitiesShoot the WorksKiss and Make-UpThe Notorious Sophie LangCollege Rhythm (directed by Norman Taurog whom Sheridan admired), Ladies Should ListenYou Belong to MeWagon WheelsThe Lemon Drop KidMrs. Wiggs of the Cabbage PatchReady for LoveLimehouse Blues, and One Hour Late.

Along with fellow contractees, Sheridan worked with Paramount's drama coach Nina Mouise and performed on the studio lot in such plays as The Milky Way and The Pursuit of Happiness. While in The Milky Way, Paramount decided to change her first name from Clara Lou to the same as her character Ann.[8]

Sheridan was then cast in the film Behold My Wife! (1934) at the behest of director and friend Mitchell Leisen. The role provided two standout scenes for the actress, including one in which her character commits suicide, and she attributed it with Paramount's keeping her under contract.[9]

She continued with bit parts in Enter Madame (1935), Home on the Range (1935), and Rumba (1935), until her first lead role in Car 99 (1935), with Fred MacMurray.[10] "No acting, it was just playing the lead, that's all", she later said.[9] She next had a support role as the romantic interest in Rocky Mountain Mystery (1935), a Randolph Scott Western.

She then appeared in Mississippi (1935) with Bing Crosby and W. C. FieldsThe Glass Key (1935) with George Raft, and (having one line) The Crusades (1935) with Loretta Young. In her last picture under her deal with Paramount, the studio loaned her out to Poverty Row production company Talisman to make The Red Blood of Courage (1935) with Kermit Maynard. After this, Paramount declined to renew her contract.[11] Sheridan made Fighting Youth (1935) at Universal and then signed a contract with Warner Bros. in 1936.

Warner Bros.[edit]

Sheridan's career prospects began to improve at her new studio. Her early films for Warner Bros. included Sing Me a Love Song (1936); Black Legion (1937) with Humphrey BogartThe Great O'Malley (1937) with Pat O'Brien and Bogart, her first real break;[12] San Quentin (1937), with O'Brien and Bogart, singing for the first time in a film; and Wine, Women and Horses (1937) with Barton MacLane.[13]

Sheridan moved into B picture leads: The Footloose Heiress (1937); Alcatraz Island (1937) with John Litel; and She Loved a Fireman (1937) with Dick Foran for director John Farrow. She was a lead in The Patient in Room 18 (1937) and its sequel Mystery House (1938). Sheridan was in Little Miss Thoroughbred (1938) with Litel for Farrow and supported Dick Powell in Cowboy from Brooklyn (1938).[14]

Universal borrowed her for a support role in Letter of Introduction (1938) at the behest of director John M. Stahl. For Farrow, she was in Broadway Musketeers (1938), a remake of Three on a Match (1932).

Sheridan and James Cagney in Angels with Dirty Faces (1938)

Sheridan's notices in Letter of Introduction impressed Warner Bros. executives and she began to get roles in better quality pictures at her own studio starting with Angels with Dirty Faces (1938), wherein she played James Cagney's love interest; Bogart, O'Brien and the Dead End Kids had supporting roles. The film was a big hit and critically acclaimed.

Sheridan was reunited with the Dead End Kids in They Made Me a Criminal (1938) starring John Garfield. She was third-billed in the Western Dodge City (1939), playing a saloon owner opposite Errol Flynn and Olivia de Havilland. The film was another success.

Oomph girl[edit]

"Oomph" was described as "a certain indefinable something that commands male interest."[15] In March 1939, Warner Bros. announced Sheridan had been voted by a committee of 25 men as the actress with the most "oomph" in America.[15]

She received as many as 250 marriage proposals from fans in a single week.[16] Tagged "The Oomph Girl"—a sobriquet which she reportedly loathed[17][18][19]—Sheridan was a popular pin-up girl in the early 1940s. (On the other hand, a February 25, 1940, news story distributed by the Associated Press reported that Sheridan no longer "bemoaned the 'oomph' tag."[20] She continued, "But I'm sorry now. I know if it hadn't been for 'oomph' I'd probably still be in the chorus.")[20]

Stardom[edit]

Sheridan co-starred with Dick Powell in Naughty but Nice (1939) and played a wacky heiress in Winter Carnival (1939).

She was top billed in Indianapolis Speedway (1939) with O'Brien and Angels Wash Their Faces (1939) with O'Brien, the Dead End Kids and Ronald ReaganCastle on the Hudson (1940) put her opposite Garfield and O'Brien.

Sheridan's first real starring vehicle was It All Came True (1940), a musical comedy costarring Bogart and Jeffrey Lynn. She introduced the song "Angel in Disguise".

Sheridan and Cagney were reunited in Torrid Zone (1940) with O'Brien in support. She was with George Raft, Bogart and Ida Lupino in They Drive by Night (1940), a trucking melodrama. Sheridan was back with Cagney for City for Conquest (1941) and then made Honeymoon for Three (1941), a comedy with George Brent.

Sheridan (1950)

Sheridan did two lighter films: Navy Blues (1941), a musical comedy, and The Man Who Came to Dinner (1942), wherein she played a character modeled on Gertrude Lawrence. She then made Kings Row (1942), in which she received top billing playing opposite Ronald ReaganRobert Cummings, and Betty Field. It was a major success and one of Sheridan's most memorable films.

Sheridan and Reagan were reunited for Juke Girl (1942). She was in the war film Wings for the Eagle (1942) and made a comedy with Jack BennyGeorge Washington Slept Here (1943). She played a Norwegian resistance fighter in Edge of Darkness (1943) with Errol Flynn and was one of the many Warner Bros., stars who had cameos in Thank Your Lucky Stars (1943).

She was the heroine of a novel, Ann Sheridan and the Sign of the Sphinx, written by Kathryn Heisenfelt and published by Whitman Publishing Company in 1943. While the heroine of the story was identified as a famous actress, the stories were entirely fictitious. The story was probably written for a young teenaged audience and is reminiscent of the adventures of Nancy Drew. It is part of a series known as "Whitman Authorized Editions", 16 books published between 1941 and 1947 that always featured a film actress as heroine.[21]

Sheridan was given the lead in the musical Shine On, Harvest Moon (1944), playing Nora Bayes, opposite Dennis Morgan.[22] She was in a comedy The Doughgirls (1944).

Sheridan was absent from screens for over a year, touring with the USO to perform in front of the troops as far afield as China.[23] She returned in One More Tomorrow (1946) with Morgan. She had an excellent role in the noir Nora Prentiss (1947), which was a hit. It was followed by The Unfaithful (1948), a remake of The Letter, and Silver River (1948), a Western melodrama with Errol Flynn.

Leo McCarey borrowed her to support Gary Cooper in Good Sam (1948). She was meant to star in Flamingo Road.[24] She then left Warner Bros., saying: "I wasn't at all satisfied with the scripts they offered me."[25]

Freelance star[edit]

Her role in I Was a Male War Bride (1949), directed by Howard Hawks and co-starring Cary Grant, was another success. In 1950, she appeared on the ABC musical television series Stop the Music.

She made Stella (1950), a comedy with Victor Mature at Fox.

In April 1949, she announced she wanted to produce Second Lady, a film based on a story by Eleanor Griffin.[25][26] She was going to make Carriage Entrance at RKO.[25] They fired her and Sheridan sued for $250,000 ($2,719,231 today) [27]

Universal[edit]

Sheridan made Woman on the Run (1950), a noir, which she produced. She wanted to make a film called Her Secret Diary.[28]

Woman on the Run was distributed by Universal, and Sheridan signed a contract with that studio. While there, she made Steel Town (1952), Just Across the Street (1952), and Take Me to Town (1953), a comedy directed by Douglas Sirk.

Later career[edit]

Sheridan in her final role as Henrietta Hanks on Pistols 'n' Petticoats

Sheridan supported Glenn Ford in Appointment in Honduras (1953), directed by Jacques Tourneur. She appeared opposite Steve Cochran in Come Next Spring (1956) and was one of several stars in MGM's The Opposite Sex (1956). Her last film, Woman and the Hunter (1957), was shot in Africa.[29]

She performed in stage tours of Kind Sir (1958) and Odd Man In (1959), and The Time of Your Life at the Brussels World Fair in 1958. In all three shows, she acted with Scott McKay, whom she later married.[30][31]

In 1962, she played the lead in the Western series Wagon Train episode entitled "The Mavis Grant Story".

In the mid-1960s, Sheridan appeared on the NBC soap opera Another World.[29]

Her final work was the television comedy Western series Pistols 'n' Petticoats, which was filmed while she became increasingly ill in 1966, and was broadcast on CBS on Saturday nights.[32] The 19th episode of the series, "Beware the Hangman", aired as scheduled on the same day that she died in 1967.[33]

For her contributions to the motion picture industry, Ann Sheridan has a star on the Hollywood Walk of Fame at 7024 Hollywood Boulevard.

Personal life[edit]

Sheridan married actor Edward Norris August 16, 1936, in Ensenada, Mexico.[34] They separated a year later and divorced in 1939. On January 5, 1942, she married fellow Warner Bros. star George Brent, who co-starred with her in Honeymoon for Three (1941); they divorced exactly one year later. Following her divorce from Brent, she had a long-term relationship with publicist Steve Hannagan that lasted until his death in 1953. Hannagan bequeathed Sheridan $218,399 ($2,112,549 today).[35] On June 5, 1966, she married actor Scott McKay, who was with her when she died, six months later.[36]

Death[edit]

In 1966, Sheridan began starring in a new television series, a Western-themed comedy called Pistols 'n' Petticoats. She became ill during the filming and died of esophageal cancer[37] with massive liver metastases at age 51 on January 21, 1967, in Los Angeles. She was cremated and her ashes were stored at the Chapel of the Pines Crematory in Los Angeles until they were interred in a niche in the Chapel Columbarium at the Hollywood Forever Cemetery in 2005.

Monday, 11 May 2020

MRINALINI SARABHAI ,CLASSICAL DANCER BORN 1918 MAY 11 - 2016,JANUARY 21



MRINALINI SARABHAI ,CLASSICAL DANCER 
BORN 1918 MAY 11 - 2016,JANUARY 21



.மிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai, 11 மே 1918 - 21 சனவரி 2016 )[1] இந்தியாவின் பிரபலமான ஒரு நடனக் கலைஞர், பயிற்றுனர் மற்றும் நடன இயக்குனர் என்ற பன்முகங்கள் கொண்டவர் ஆவார். அகமதாபாத் நகரில் இவர் நடனம், நாடகம், இசை மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றுக்கான "தர்பனா நிகழ்த்துக் கலைக் கழகம்" என்ற இசைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.[2]. பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் மிருணாளினி 18,000 நபர்களுக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.[3]. கலைக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பத்மசிறீ, பத்மபூசண் உட்படப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன [4].
வாழ்க்கைச் சுருக்கம்
இளமையும் கல்வியும்
மிருணாளினி 1918 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் கேரளத்தில்,[1] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினர். தாய் ஒரு சமூகநலத் தொண்டர் மற்றும் சுதந்திரத் செயற்பாட்டாளர் ஆவார். இளம் வயதில் மிருணாளின் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்குள்ள டால்குரோசு நடனப் பள்ளியில் மேற்கத்திய நடனம் பயின்றார்.[5]. இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்திநிகேதனில் மிருணாளினி கல்வி பயின்றார். பின்னர் மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இங்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும் தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.

திருமணம் மற்றும் அடுத்த ஆண்டுகள்

கணவர் விக்கிரம் சாராபாயுடன் மிருணாளினி, 1948
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் இந்திய இயற்பியலாளர் விக்கிரம் சாராபாயை 1942 ஆம் ஆண்டு மிருணாளினி மணந்தார். இவருக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் மல்லிகா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களும் பிற்காலத்தில் நடனம் மற்றும் நாடகங்களில் புகழ் பெற்றனர். 1948 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மிருணாளினி 'தர்பானா' என்ற நடன நிறுவனத்தை நிறுவினார். நிறுவனம் தொடங்கிய பின்னர் ஒரு வருடம் கழித்து, இவர் பாரிசு நகரிலுள்ள தெட்ரே நேசனல் டி சாய்லோட்டு அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அதற்காக இவர் பல விமர்சனங்களைப் பெற்றார். மிருணாளினியும் விக்ரமும் தங்களது திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை எதிர் கொண்டனர். வாழ்க்கை வரலாற்றாசிரியர் அமிர்தா சாவின் கூற்றுப்படி, விக்ரம் சாரபாய் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை கொண்டிருந்தார். சமூக நலனுக்காக அறிவியலைப் பயன்படுத்துவதில் தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் அவ்வெற்றிடத்தை நிரப்ப அவர் முயன்றார். [6].

பிற பங்களிப்புகள்

முந்நூறுக்கும் மேற்பட்ட நடன நாடகங்களை நடனம் அமைத்து இயக்கியதை தவிர, மிருணாளினி குழந்தைகளுக்கான பல புதினங்கள், கவிதை, நாடகங்கள் மற்றும் கதைகளை எழுதியுள்ளார். குசராத்து மாநில கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். காந்திய கொள்கைகளை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு அமைப்பான சர்வோதயா சர்வதேச அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராகவும் மிருணாளினி செயல்பட்டார். மேம்பாட்டுக்கான நேரு அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தார் [7]. மிருணாளினியின் சுயசரிதையானது மிருணாளினி சாரபாய்: இதயத்தின் குரல் என்ற பொருள் கொண்ட "மிருணாளினி சாரபாய்: தி வாய்சு ஆஃப் தி ஆர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது[8] Her autobiography is titled Mrinalini Sarabhai: The Voice of the Heart.[9].

குடும்பம்

இவரது தந்தை சுப்புராம சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். சமூக நலத் தொண்டர் அம்மு சுவாமிநாதன் இவரது தாயாராவார். மூத்த சகோதரி இலட்சுமி சாகல் இந்திய தேசிய இராணுவத்தின் சுபாசு சந்திரபோசின் 'ஜான்சி படைப் பிரிவின் ராணியாகவும்' தளபதியாகவும் இருந்தார். மூத்த சகோதரர் கோவிந்த் சுவாமிநாதன் ஒரு சட்டத்தரணி ஆவார். இவர் உரிமையியல் சட்டம் மற்றும் நிறுவனச் சட்டத்தைத் தவிர அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தில் நிபுணராக சென்னையில் பயிற்சி பெற்றார். இவர் சென்னை மாநிலத்தின் (இப்போது தமிழ்நாடு) அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரியாக இருந்தார்.

விருதுகள்
1992 ல் இந்திய குடிமக்களின் உயரிய விருதுகளான பத்மபூசண் மற்றும் 1965 இல் பத்மசிறீ ஆகிய விருதுகளை மிருணாளினி சாராபாய் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார். [10] 1997 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் நார்விச், கிழக்கு ஆங்லியா ஆகிய பல்கலைக்கழகத்த்தின் மூலம் "கடிதங்களின் முனைவர்" என்ற பட்டம் பெற்றார். பிரெஞ்சு சர்வதேச காப்பங்களின் சங்கத்தின் "டி லா டான்ஸ்" என்ற பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் பாரிசின் சர்வதேச நடனக் குழுவின் நிர்வாகக் குழுவிற்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார். [11] 1994 இல் புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவம் வழங்கப்பட்டது. மெக்சிகோவின் பாலே நாட்டுப்புற நடனத்திற்காக மெக்ஸிகன் அரசாங்கத்தால் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. தர்பானா நிகழ்த்துக் கலைக் கழகம் அதன் தங்க விழாவை 1998 திசம்பர் 28 அன்று கொண்டாடியது. அதில் பாரம்பரிய நடன்த் துறையில் ஆண்டுதோறும் "பாரம்பைய சிறப்பிற்கான மிருணாளினி சாரபாய் விருது" அறிவிக்கப்பட்டது. கேரள அரசின் வருடாந்திர விருதான "நிசாகந்தி புரஸ்காரம்" என்ற விருதைப் பெற்ற முதல் கலைஞர் ஆவார். இந்த விருது 2013 இல் இவருக்கு வழங்கப்பட்டது. [12] 11 மே 2018 அன்று கூகிள் டூடுல் இவரது 100 வது பிறந்த நாளை நினைவுகூர்ந்தது. [13]




மக்களுக்கான கலையைப் படைத்துக் 

கொண்டே இருந்த நாட்டிய மேதை 



எஸ் வி வேணுகோபாலன் 





தேசத்தின் அற்புத நடனக் கலைஞர் பத்ம பூஷண் விருது பெற்ற மிருணாளினி சாராபாய் மறைந்துவிட்டார். அவரது அன்பு மகள், அவரும் ஒரு தலைசிறந்த நாட்டிய மேதை, மல்லிகா சாராபாய் தமது அன்னை, "நிரந்தர நாட்டியமாடச் சற்றுமுன் தான் விடைபெற்றார்" என்று உடனடியாக முக நூலில் பதிவு போட்டிருந்தார். உங்களால் எப்போதாவது நாட்டியத்தைத் தவிர்த்து இருக்க முடியுமா, ஏன் அதை விட முடியவில்லை என்று அவரிடம் கேட்கப் பட்டபோது, மிருணாளினி பதிலுக்குக் கேள்வியாளரிடம்  இப்படி கேட்டார்: "உங்களால் மூச்சு விடாது இருப்பதை யோசிக்க முடியுமா, எனக்கு நாட்டியம் அப்படித் தான்!".  

முற்பிறப்பு, மறு பிறப்பு போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்த குடும்ப மரபில் வந்த மிருணாளினி, எங்கிருந்தோ தமக்குக் கையளிக்கப்பட்ட பெரும்பேறு தான் நடனம் என்று சொல்வதுண்டு. பிறந்த குடும்பத்திலோ, புகுந்த வீட்டிலோ அவருக்குமுன் நாட்டியத்தைப் பயின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த சுவாமிநாதனும் (அவரது தந்தை), சாராபாயும் (கணவரது குடும்பப் பெயர்) அதற்குமுன் நடனம் ஆடி இருக்கவில்லை என்று புன்னகை ததும்ப ஓர் உரையாடலில் அவர் அளித்த பதிலை யூ டியூபில் இப்போதும் பார்த்து ரசிக்க முடியும். 
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அம்மு சுவாமிநாதன் தான் அவரது தாய். இந்தப் பெயரை வாசகர்கள் உடனே அடையாளம் காணக் கூடும். நேதாஜி அவர்களது இந்திய தேசிய இராணுவத்தில் பங்கெடுத்த போராளி  கேப்டன் லட்சுமியின் சகோதரிதான் மிருணாளினி! இவர்களது சகோதரர் கோவிந்த் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். தேச விடுதலைப் போரில் இடையறாத பங்களிப்பில் அக்கறை கொண்டிருந்த தாய் அம்மு, குழந்தைகள்  சுதந்திர சிந்தனையோடு வளர்வதை உறுதி செய்தார். இள வயதிலேயே நடனம் தான் தமது வாழ்க்கை என்று முடிவெடுத்துக் கொண்டார் மிருணாளினி.  நடனமே வாழ்க்கை என்று சொல்லிக் கொள்வதை விட, அது ஓர் அர்ப்பணிப்பு என்று குறிப்பிடவே விரும்புகிறேன் என்பார் மிருணாளினி.  

தென்றலை வருணிக்கும் "பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து...." என்னும் அழகான திருவிளையாடற் புராண செய்யுள், "அங்கங்கே கலைகள் தேறும் அறிவன் போல்" என்று  காற்றுக்கு அறிவைத் தேடிச் செல்லும் மாணவரை உவமை ஆக்கியிருக்கும். வாசம் மிகுந்த மலர்கள், குளிர்ச்சியான நீர் நிலை பரப்புகள் எங்கணும் புகுந்து நுழைந்து அந்த மணத்தையும், மென்மையையும், குளிர்ச்சியையும் தாம் பெற்றுக் கொள்கிற தென்றல் காற்றைப் போலவே மிருணாளினி, பல்வேறு இடங்கள், நாட்டியத்தின் வெவ்வேறு துறை வல்லுநர்கள், சமூகத்தின் பலதரப்பு மனிதர்கள், இயற்கையின் வசீகர தலங்கள் எல்லாம் கண்டடைந்து மகத்தான கலையை வளர்த்தெடுக்கும் சிறப்பான இடத்தை எட்டியவர். பரதம், கதகளி என அந்தந்தநாட்டிய மரபுக்கேற்ற ஆசான்களிடம் மிகுந்த தேர்ச்சியுரக் கற்றதோடு, அவற்றைச் செவ்வனே வெளிப்படுத்தும் மேதைமையும் பெற்றார். பரத நாட்டியத்தை, பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முத்துக்குமார பிள்ளை இவர்களிடம் பயின்றவர், புகழ்வாய்ந்த கல்யாணிக்குட்டி அவர்களிடம்   மோகினி ஆட்டத்தையும், குரு ஆசான் குஞ்சு குரூப் அவர்களிடம் கதகளியையும் கற்றார். ஆனால் தமது குரு என்று அவர் எல்லாக் காலங்களிலும் சொல்லிக் கொண்டிருந்தது, ரவீந்திர நாத் தாகூரைத் தான்! சாந்திநிகேதனில் படித்த காலத்தில், அவரது தீர்க்கமான பார்வை, ஆளுமை தம்மை மிகவும் ஈர்த்ததாக மிருணாளினி குறிப்பிடுவதுண்டு.  

பெங்களூரில் சென்று படிக்கையில்தான் எதிர்காலத்தில் இந்தியாவின் விண்வெளி அறிவியலுக்கு அடித்தளமிட இருந்தவரான  விக்ரம் சாராபாய் அவர்களைச் சந்தித்தார். விடுதலை போராட்டத்தில் சக பங்கேற்பாளராக இருந்தவர்கள் இந்த இருவரது அன்னையரும்! அன்பின் நட்பு மணவாழ்க்கையில் இணைய வைத்தது. விக்ரம் சாராபாய் அவர்களது குடும்பம் வாழ்ந்துவந்த குஜராத் பகுதிக்குப் பெயர்ந்தது மிருணாளினியின் வாழ்க்கை. நடனம் என்பதைப் பெண்கள், அதுவும் சாராபாய் போன்ற பெரிதும் அறியப்பட்ட குடும்பத்துப் பெண்கள் நாட்டிய மேடையில் தோன்றுவது யோசிக்க முடியாதிருந்த காலத்தில் அந்தக் கற்பிதத்தை உடைத்துப் போட்டார் மிருணாளினி. ஏளனம் செய்யவும், இழிவு செய்யவுமாகக் குழுமிய சுற்றமும் நட்பும் இவரது நாட்டியத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறது. அதுதான் கலையின் ஆற்றல் என்பார் மிருணாளினி. பின்னாளில், வெளிநாட்டுப்  பயணம் ஒன்றின்போது, "ஓ, சாராபாய் குடும்பமா, அது நடனக் கலைக் குடும்பமாயிற்றே" என்று யாரோ கேட்டதை சுவாரசியமாகச் சொல்லிக் கொள்வதுண்டு. மிருணாளினியைத் தொடந்து மல்லிகா, அப்புறம் அடுத்த தலைமுறை என்று நாட்டிய பாரம்பரியம் தொடர்கிறது.  

வழி வழியாக எடுத்துக் கொள்ளப்பட்ட கருப்பொருள்களை மிகக் கவனத்தோடு கடந்து போகத் தொடங்கியதுதான் மிருணாளினி அவர்களது பரவசமிக்க பண்பாக்கம். சமூகக் கருத்துக்களை எனது கலை வெளிப்படுத்தும் என்றார். சமூக உணர்வுகளை பிரதிபலிப்பதுதானே கலை, நான் ஒரு கண்ணாடிதான் என்றார் அவர். நடனம் என்பது மக்களுக்காக -  மேல்தட்டு ரசனைக்கு மட்டுமல்ல என்பதில் அவரது குரல் தெளிவாக இருந்து வந்தது..சமூக விஷயங்கள் மீது மனசாட்சியைத் தூண்டும் நோக்கில், வரதட்சணைக் கொடுமையை சாடும் அவரது நாட்டிய நாடகம் மிகவும் பரந்த அளவில் கொண்டாடப் பட்டது.  மூன்று பெண்கள் உற்சாகமாகத் தமது நாட்டிய அடவுகளைத் தொடங்குகின்றனர். அடுத்துச் சில நிமிடங்களில் ஒருத்தி தனித்து நிற்கிறாள். மற்றவர்கள் இருவரும் விஷ அம்புகள் எய்வதைப் போன்ற உடல் மொழியில் அவதூறுகளை அவள் மேல் பொழிகின்றனர். நிர்க்கதியாகத் தள்ளப்படும் நிலையில் அந்தப் பெண் தற்கொலை நோக்கித் தள்ளப்படுவதைப் படிப்படியாக நாட்டிய நாடக பாவங்களில் அதிர்ச்சி அடியாக அரங்கேற்றிக் காண்பித்தார் மிருனாளினி.  மனிதர்களது தவிப்புகளை, வாழ்க்கைப் போராட்டங்களை, சமூகத்தின் பல பிரச்சனைகளை அவரது நாட்டியங்கள் மேடையில் விவாதிக்கத்  தொடங்கின. 



தர்ப்பண் அகாதமி என்னும் நாட்டியப் பயிற்சி மையத்தை 1948ல் நிறுவியது, மிருணாளினி அவர்களது மகத்தான பங்களிப்பு. எண்ணற்ற நடன விருப்பம் கொண்டோரை  ஆட்கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்ததோடு குழு நாட்டிய நாடங்களில் அவர்களை மிகச் சிறந்த முறையில் பிரகாசிக்க வைத்தார் மிருணாளினி. உலக நாடுகளுக்கு இங்கிருந்து சென்று நமது பாரம்பரியக் கலையை அறிமுகப் படுத்தி நிகழ்ச்சிகளை நடத்திய முதல் நடனக் கலைஞர் என்ற பெருமைக்குரியவர் அவர்.



"எனது நாட்டியத்தில் மொழி தேவைப்படவில்லை.....சொல்லுக்கட்டு (தா..தை...தித் தை...தத் தித் தா...) மட்டுமே உண்டு. ஆனால்  உடல் மொழியும், நடன பாவங்களும், அடவுகளும் எந்த விஷயத்தையும் மேடையில் எடுத்து வைக்கப் போதுமானதாக இருந்தது" என்றார் மிருணாளினி. "என் இயற்கை மகன் கார்த்திகேயன் பிறந்த பிறகு அவனது வளர்ச்சியின் ஒவ்வொரு சிறிய அம்சங்களையும் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன்....அதன் அழகிய அனுபவத்திலிருந்து மனித வாழ்க்கையை நாட்டிய நடனமாக்கும் எனது "மனுஷ்யா" தோன்றியது....இப்படி பலவற்றை நடன அரங்கிற்குக் கொண்டு செல்ல முடிந்தது.." என்று ஒருமுறை குறிப்பிட்டார் அவர். 



இதிகாசங்கள், புராணங்கள் இவற்றில் ஆழ்ந்த பற்றுதலும், நம்பிக்கையும் அவருக்கிருந்தது. ஆனால் அவற்றை மரபார்ந்த முறையில் காட்சிப் படுத்துவதற்கு அப்பால் அவரது படைப்பு மனம் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால்தான், மகாபாரதக் கதையை, அவர் வன்முறை குறித்த விசாரணையாக சித்தரிக்க முற்பட்டார். பறவைகள், விலங்குகள், காடுகள், மலைகள் என இயற்கையைக் கொண்டாடியபடி மனிதகுலம் அமைதியுற வாழும் ஓர் உலகைக் கனாக் கண்ட அவரது கலைக் கண்ணோட்டம் அவரைச் சுற்றுச் சூழலியலாளராகவும்  உருப்பெற வைத்தது. வண்ணங்களும், இனிய ஓசைகளும் அவரது நாட்டியக் குழுவினரின் அசாத்திய மேடை நடனத்தில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். 



அவரது பாதங்கள் ஆடியபடி இருக்கும்போதே, அவரது சிந்தனையின் கரங்கள் கவிதை தீட்டத் தொடங்கும். அந்தக் கவிதையின் வரிகள் அமர்க்களமான ஒரு நடன நாடகமாக பொதுவெளியில் பார்வையாளரை அசர வைக்கும். கலையே வாழ்க்கை, வாழ்க்கையே கலைக்கு அர்ப்பணிப்பு எனத் தொடர்ந்த பயணத்தில் தமது கள அனுபவங்களை, சிந்தனைகளை நூலாகவும் கொண்டு வந்தார் மிருணாளினி. 2004ல் வெளிவந்த "இதயத்தின் குரல்" என்ற அவரது புத்தகம் அதைப் போல் இன்னொன்று இல்லை என்று பெரிதும் போற்றப்பட்டது. 



மறு பிறவி என்று உண்மையில் ஒன்று இருக்குமானால், நீங்கள் என்னவாக விரும்புவீர்கள் என்று ராஜீவ் மெஹ்ரோத்ரா தமது நீண்ட உரையாடலில் அவரைக் கேட்கையில், "ஓர் ஓவியராக, எழுத்தாளராக, முடியுமானால் ஒரு பாடகராக!" என்று புன்னகை சிந்தியபடி பதில் அளித்தார் மிருணாளினி. தமது மகள் மல்லிகா சாராபாய் சிறந்த நாட்டிய மேதை, மகன் கார்த்திகேயன் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் செயல்பாட்டாளர் என்பதில் அவருக்கு நிரம்ப பெருமிதம் இருந்தது.  சிறந்த கலை ரசிகரான தமது கணவர் விக்ரம் சாராபாய் குறித்த பெருமை சூழ்ந்திருக்கும் எப்போதும் அவர் முகத்தில். தமது வளர்ச்சி குறித்த பெரிய அக்கறை எதுவும் காட்ட முடியாதபடிக்கு சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்தார் தனது தாய் என்ற குறையை அவரது நேர்காணல் ஒன்று வெளிப்படுத்தியது. ஆனால் தமது கடைசி நாட்களில் தாயைத் தான், அம்மு சுவாமிநாதனின் மலையாள மொழியைத்தான் அவர் உதடுகள் பேசிக் கொண்டிருந்தது. செம்மாந்த கலை வாழ்க்கையை, மக்களுக்கான கலையை வாழ்ந்தும், வாழ்வித்தும் தமது 97ம் வயதில் இயற்கையோடு நிரந்தரமாகக்  கலந்துவிட்டார் மிருணாளினி.  அன்னையின் அரசியல் வாழ்க்கையில் இருந்துதான் மக்களுக்கான கலையை அவரது படைப்புமனம் உருவாக்கிக் கொண்டே இருந்தது. இனியும் உலகம் அதைக் கொண்டாடிக் கொண்டேதான் இருக்கும்......



******************************

மறைவு

உடல்நலக் குறைவின் காரணமாக 21 சனவரி 2016 அன்று அகமதாபாத்தில் காலமானார்.[14

தாயின் உடலுக்கு நடனம் ஆடி அஞ்சலி செலுத்திய மகள்; மிருணாளினி சாராபாய் இறப்பில் உருக்கம்!
 பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் உடலுக்கு அவரது மகள் மல்லிகா சாராபாய் நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினார்.






`அப்பாவிடம் எனக்கு பிடிக்காத ஒரு குணம் அவர் என்னுடைய வீட்டுப் பாடங்களில் என்றுமே எனக்கு உதவியதில்லை.'' - மல்லிகா சாராபாய்

ஒலியின் இரைச்சல்களுக்கிடையே இசையைக் கேட்க முடிந்தவர்களால் பெரும் உயரங்களை எட்ட முடியும்! - டாக்டர் விக்ரம் சாராபாய், இஸ்ரோ நிறுவனர்.

டாக்டர் விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்ததினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்திய விண்வெளிக் கனவுகளின் தந்தையான அவர், மல்லிகா, கார்த்திகேய என இரண்டு பிள்ளைகளின் அப்பாவாக ஆனந்தப் பெருமை சுமந்தவர். கார்த்திகேய சாராபாய், சூழலியல் கல்விச் செயற்பாட்டாளர்; மல்லிகா புகழ்பெற்ற நடனக்கலைஞர், பத்மபூஷன் விருது பெற்றவர். தந்தையின் நூறாவது பிறந்த தினத்தில் விக்ரம் என்ற குடும்பஸ்தரை பற்றிய உருக்கமான சில நினைவுகளை க்வின்ட் வலைதளத்துக்குப் பகிர்ந்திருக்கிறார் மல்லிகா.

''குடும்பத்துக்காக அப்பா குறைந்த நேரமே செலவிட்டாலும் அந்த நேரத்தில் நிறைந்த அன்பும் கொண்டாட்டமும் தளும்பியிருக்கும். அவரது இரண்டு கைகளின் ஆட்காட்டி விரல்களையும் இறுகப் பிடித்துக்கொள்வேன். அவர் மெதுவாக 'Bridge on the river kwai' என்னும் ஆங்கிலப் படத்தின் பாடலை விசிலடிக்கத் தொடங்குவார். நான் அவர் விசிலடிப்பதற்கு ஏற்ப மார்ச் ஃபாஸ்ட் செய்தபடி வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவேன். இரவு உணவு நேரத்தில் எனக்குப் பிடித்தமான உணவின் சிறு பகுதியை அவருக்காக எனது தட்டில் எடுத்துவைப்பேன். தனது உணவைச் சாப்பிட்டுவிட்டு நான் அவருக்காக ஆசையாக எடுத்துவைத்ததைச் சாப்பிடுவார். அம்மா மிருணாளினி ஒரு நடனக் கலைஞர். அவர் அதிகம் பயணம் செய்யவேண்டியிருக்கும் என்பதால் அப்பாதான் என்னை பள்ளியில் விடுவார். நான் வகுப்பில் ஏதேனும் சேட்டை செய்தால் அப்பாதான் ஆஜராக வேண்டும். தன் மகள் செய்யும் சேட்டைகளில் அவருக்குக் கொஞ்சம் பெருமிதமும் இருந்தது உண்டு.

மல்லி! உன்னால் முடியும். உனக்கு முடியாததை உனது ஆசிரியர் எப்போதும் செய்யச் சொல்ல மாட்டார்.
மல்லிகா சாராபாய்

அப்பாவிடம் எனக்குப் பிடிக்காத ஒரு குணம், அவர் என்னுடைய வீட்டுப் பாடங்களில் என்றுமே எனக்கு உதவியதில்லை. ஏதாவது உதவி கேட்டால் அவர் சிரித்தபடியே, 'மல்லி... உன்னால் முடியும். உனக்கு முடியாததை உன் ஆசிரியர் எப்போதும் செய்யச் சொல்ல மாட்டார்' என்பார்.
அப்பாவும் எங்கள் உறவினர்களும்தான் எனக்குள் சமூக அரசியல் பொறுப்புணர்வை விதைத்தார்கள் என்பேன். எனக்கு 12 வயது இருக்கும். அப்போது பள்ளியில் இரண்டு மாணவர்கள் என்னை காரணமாக வைத்து சண்டை போட்டுக்கொண்டனர். பள்ளிக்கூட நிர்வாகம் இதில் சம்பந்தமே இல்லாத என் அப்பாவை பள்ளியில் ஆஜராகச் சொன்னது. அப்பாவை அவர்கள் அழைத்தது எனக்குக் கவலை என்றால், தன் 12 வயது மகளைக் காரணம் காட்டி இரண்டு பையன்கள் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள் என்பது அப்பாவுக்கு விநோதமாக இருந்தது. அப்பா என்னை அழைத்துப் பேசினார். 'மல்லி! இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, சொன்னதைக் கேட்டு நடப்பவர்கள். இரண்டாம் வகை, சொன்னதை ஏன் என்று கேள்வி கேட்பவர்கள், தங்களுக்கான விதிகளைத் தாங்களே நிர்ணயித்துக்கொள்பவர்கள்.நானும் உன் அம்மாவும் இரண்டாவது ரகம். நீ யார் என்பதை நீ தெரிவு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது' என்றார். நானும் இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

அவரது இந்த உறவு அம்மாவுக்கு மிகுந்த மனவேதனையைத் தரக்கூடியதாக இருந்தது. அம்மா வேதனைப் படுவது எனக்கு வேதனை அளித்தது.
மல்லிகா சாராபாய்
அப்பாவுக்கு கமலா சவுத்ரியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டபோது, எந்த மகளையும்போல நானும் முதலில் வெறுத்தேன். எனது 13 வயது வரை அவர் மீதான எனது வெறுப்பு அப்படியே இருந்தது. அவரது இந்த உறவு அம்மாவுக்கு மிகுந்த மனவேதனையைத் தரக்கூடியதாக இருந்தது. அம்மா வேதனைப்படுவது எனக்கு வேதனை அளித்தது. ஆனால் அதன் பிறகு அவருடனான எனது உரையாடல்கள் அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில், என்னால் அவரது மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. உண்மையில் அவரும் மனவேதனையில் இருந்தார்.

தான் செய்யும் செயல் தன் மனைவிக்கு வேதனையளிக்கிறதே என்கிற வேதனை அவருக்கு இருந்தது. தன்னை நேசித்த இரண்டு பெண்களை அவரால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நேசம் ஒருவரிடமே மட்டும் வருவதில்லை, தான் செய்தது சரி என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் இன்றளவும் அவர் செய்தது என்னைப் பொறுத்தவரையில் தவறுதான். அம்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் சுயமரியாதையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி இருப்பேன்.
52 வயதில், முடிவுபெறாத வாழ்க்கையாக மரணம் அப்பாவின் ஆயுளை முடித்துவிட்டது. அவர் இறந்த நேரம், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக என்னையும் அம்மாவையும் மும்பைக்கு வந்து அப்பா ஊருக்குச் அழைத்துச் செல்வார் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். அப்பாவின் இறப்புச் செய்திதான் வந்தது.

அப்பா உயிருடன் இருந்திருந்தால் இன்றைய சமூகச் சூழலைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார். கல்வி கற்பதற்கும் கொள்கை நிலைப்பாடு எடுப்பதற்குமான வசதி இருக்கும் இடத்தில் அதை தவறுகளைச் சரி செய்வதற்குப் பயன்படுத்தவேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது அப்பாவும் அம்மாவும்தான். அதனால்தான் மக்கள் பேசத் தயங்கும் பலவற்றை எனது நடனங்களின் வழியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயக ஆட்சி என்பது எதிர் விமர்சனங்களையும் சிந்தனைகளையும் வரவேற்பது, அதற்கான இடமளிப்பது. அதற்கான குரலாகத்தான் நான் தற்போது இருக்கிறேன். ஒருவேளை அப்பா உயிருடன் இருந்திருந்தால் என்னைப் பார்த்து நிச்சயம் பெருமிதம் கொண்டிருப்பார்.








Wednesday, 23 January 2019

K.A.CHOKKALINGA BHAGAVATHAR BORN 1907 - 2002 JANUARY 21




K.A.CHOKKALINGA BHAGAVATHAR 
BORN 1907 - 2002 JANUARY 21



கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்[1] (பிறப்பு: 1907[2] - இறப்பு: ஜனவரி 21, 2002, வயது 92)[3]) ஒரு பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர். திலோத்தமா, துகாராம், வீடு, இந்தியன், சந்தியா ராகம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.

ரம்பையின் காதல் படத்தில் நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர். அதன் பின், பாலு மகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் படங்களில் நடித்த பிறகுதான் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.[
வாழ்க்கைக் குறிப்பு
சொக்கலிங்க பாகவதர் சிறு வயதிலேயே நன்றாகப் பாடக்கூடியவர். இவரது குரல் இனிமையைக் கேட்டு 1921-ல் காளி என். ரத்தினம் தான் நடித்துக் கொண்டிருந்த 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில் இவரைச் சேர்த்துவிட்டார். 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தில் 'காக்க வேணும் ராமா' எனும் பாட்டை பாடினார். அதன் பின்னர் திருப்பாப்புலியூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நாடகங்களில் நடித்து, இறுதியில் சென்னை வந்து சேர்ந்தார். 1922-இல் 'மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபை'யில் சேர்ந்து நடித்தார்.[4]

இவருடன் சேர்ந்து நாடகங்களில் நடித்து பின்னர் புகழ் பெற்றவர்களில் எம்.ஜி.ஆர், எம். ஜி. சக்ரபாணி, எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா ஆகியோர் குறிப்படத்தக்கவர்கள்.[4]

பாகவதர் பெயர்
1934 ஆம் ஆண்டு சென்னையில் மியூசிக்கல் புராடக்ஸ் லிமிடெட் (Musical Products Ltd.) என ஒரு கம்பெனி உருவானது. இவர்கள் 10 அங்குல விட்டமுடைய இசைத்தட்டுகளை அறிமுகப்படுத்தினார்கள். வழமையான 78 ஆர்.பி.எம். இசைத்தட்டுகள் 12 அங்குல விட்டம் கொண்டிருக்கும். அவற்றில் மூன்றரை நிமிடம் வரையான பதிவுகளை செய்தார்கள். ஆனால் இந்த 10 அங்குல இசைத்தட்டுகளில் நான்கரை நிமிடம் வரையான பதிவுகளைச் செய்ய முடிந்தது. இந்த இசைத்தட்டுகள் புரோட்காஸ்ட் (Broadcast) என்ற (label) லேபிளைக் கொண்டிருந்தன. இதனால் சாதாரண மக்கள் புரோட்காஸ்ட் ரெக்கார்ட் கம்பெனி என இந்த நிறுவனத்தைக் குறிப்பிட்டனர். இந்த நிறுவனம் தனது முதல் வெளியீடாக ஏழு இசைத்தட்டுகள் கொண்ட சீதா கல்யாணம் என்ற தொகுதியை வெளியிட்டது. 7 இசைத்தட்டுகளும் ஒரு உலோகப் பேழையில் பொதியாக்கப்பட்டு 11 ரூபா 4 அணாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் விளம்பரம் வெளியானது.[5] இந்த சீதா கல்யாணம் இசைத்தட்டுத் தொகுதியிலுள்ள பாடல்களைத் தான் பாடியதாகவும் அதனால் அந்த நிறுவனம் தம்மை பாகவதர் எனப்பெயரிட்டு அழைத்ததாகவும் சொக்கலிங்க பாகவதர் ஒரு தமிழ் இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.[4]

இவர் நடித்த முதல் திரைப்படம் எஸ். சவுந்தரராஜ ஐயங்கார் எடுத்த 'சம்பூர்ண மகாபாரதம்'.[4]

சன் டிவியில் தொடராக வந்த 'குடும்பம்' உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்தார்.[4]

விருது
இவரது 90 வயதில் தமிழக அரசு கலைமாமணி விருதும், குடியிருக்க வீடும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[4]

நடித்த திரைப்படங்கள்
துகாராம் (1938) [6]
ரம்பையின் காதல் (1939)[7]
தானசூர கர்ணா (1940)[8]
வீடு (1988)[9]
சந்தியா ராகம் (1989)[10]
தையல்காரன் (1991) [11]
ஜென்டில்மேன் (1993) [11]
அம்மா பொண்ணு (1993)[11]
சதி லீலாவதி (1995 திரைப்படம்) (1995)[11]
இந்தியன் (1996)[11]
ராமன் அப்துல்லா (1997) [11]
பெரிய இடத்து மாப்பிள்ளை (1997)[11]
வேலை (1998) [11]
Branchie (இத்தாலிய திரைப்படம்) (1999)[12]

கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் 1995-இல் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடிய “சதி லீலாவதி” படத்தில் ரமேஷ் அரவிந்த்-தின் வயதான தந்தையாக நடித்திருந்தவர் இந்த சொக்கலிங்க பாகவதர். இவர். பழம்பெரும் தமிழ் நடிகர். இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.

1921-இல் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம் அவர்கள் இவரைப் பற்றி அறிந்து இவரை ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி ‘யில் சேர்ந்து கொள்ளச் சொல்லி சேரவும் வைத்தார். அப்போது ஒரு மாத்த்திற்கு ஐந்து ரூபாய் இவருக்கு சம்பளம். ஐந்து ரூபாய் அப்போது பெரிய மதிப்பு மிக்கதாயிருந்தது.

முதன் முதலாக அக்காலத்திய ‘சம்பூர்ண மகாபாரதம்’ படத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வேடத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.

1938-இல் வெளிவந்த “துக்காராம்”, 1939- இல் வெளிவந்த ‘ரம்பையின் காதல்”அல்லது ”யத்ப விஷ்யன்”, 1988- இல் வெளிவந்த ”வீடு” , 1991- இல் வெளிவந்த “சந்தியா ராகம்” மற்றும் “தையல்காரன்”, 1993- இல் வெளிவந்த “ஜெண்டில் மேன்”, இதே ஆண்டில் வெளிவந்த “அம்மா பொண்ணு”, 1996- இல் வெளிவந்த ”இந்தியன்”, 1997- இல் வெளிவந்த “பெரிய இடத்து மாப்பிள்ளை”, 1997- இல் வெளிவந்த “ராமன் அப்துல்லா” போன்ற சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். 1939 – ஆம் ஆண்டிலேயே ‘ரம்பையின் காதல்’ அல்லது யத்ப விஷ்யன் என்ற படத்தில் நாரதராக நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலு மகேந்திராவின் ‘வீடு’ [1989], ‘சந்தியா ராகம்’ படங்களில் நடித்த பிறகுதான் இக்காலத்து ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.

சொக்கலிங்க பாகவதர்
பாலுமகேந்திரா 1989ல் சந்தியாராகம் என்று வயதான சொக்கலிங்கபாகவதர் வார்க்கை பிரச்சனையை மையபடுத்தி ஒரு படம் எடுத்தார்... அது தமிழின் மாற்று சினிமா...

அந்த படம் தேசிய விருது வாங்கியதோடு சரி... அப்படி ஒரு படம் இருக்கின்றது என்பது கூட பலருக்கு தெரியாது... அதுதான் தமிழ் சினிமா...

ஒரு பேட்டியில் இயக்குனர் பாலா... சந்தியாராகம் சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருந்தது....அப்போது விழாமுடிந்து வெளியே வந்த சொக்கலிங்க பாகவதர் செல்ல ஆட்டோவுக்கு பைசா கூட இல்லாமல் அவர் ரோட்டில் நடந்து போனதாக ஒருபேட்டியில் பாலா சொல்லி படித்ததாக எனக்கு ஞாபகம்....

விருது வாங்கிய கிழக்கலைஞன் தெருவில் நடந்து போனான்.... சொக்கலிங்க பாகவதர் நடித்த வீடு ,சதிலீலாவதி போன்ற படங்களில் அவருடைய கேரக்டர்கள் சிலாகிக்கபட்டன... அனாலும் அதற்க்கான அங்கீகாரம் சரியாக இல்லை என்பதுதான் வருத்தம்