Showing posts with label SRINIVASA. Show all posts
Showing posts with label SRINIVASA. Show all posts

Tuesday, 20 April 2021

SRINIVASA IYENGAR ADVOCATE GENERAL VS BHARADHIYAR

 


SRINIVASA IYENGAR  

ADVOCATE GENERAL  

VS 

BHARADHIYAR


மாதச் சம்பளம் ரூ.4333.60 இட்டிலியாக…



srinivasa-iyengar-150x150.jpg


1920ம் ஆண்டில் திருநெல்வேலி தாமிரவருணி ந்திக்கரையில் தமிழ் மாகாண அரசியல் மாநாடு கூடியது. அப்போதுதான் அட்வகேட்-ஜெனரல் பதவியை உதறியெறிந்து விட்டு வந்திருந்த எஸ். சீனிவாஸய்யங்கார்தலைமையில் இம்மாநாடு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது…


சீனிவாஸவரதய்யங்காரும் பாரதி மருமான் சங்கரனும் மற்றும் இருவரும் மாநாட்டுக்குப் போய்விட்டு, பாரதியைக் காணக் கடையம் சென்றார்கள்.


bharathi_chellammalஇரவு பத்து மணிக்கு பாரதியின் வீட்டை அடைந்தார்கள். செல்லம்மாவும் குழந்தை சகுந்தலாவும் உறங்குகின்றனர்; பாரதி படுக்கையை விரித்து எதிரே ஒரு கைப்பெட்டியின் முன் உட்கார்ந்து ‘சுதேசமித்திரனுக்கு’ ஒரு விலாசம் எழுதிக் கொண்டிருந்தார். அருகே ஒரு முக்காலியில் ஹரிகேன் விளக்கு; பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி. கறுப்புக் கோட்டு, வால்விட்ட தலைப்பாகையுடன்தான் அந்த நேரத்திலும் விளங்குகிறார் பாரதி.


வந்தவர்கள் பாரதியை நமஸ்கரித்தனர்.


அரசியலைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. “நாடு எப்படியும் முன்னேறப் போகிறது. தீவிரமான தீர்மானங்கள் நிறைவேறியிருக்கின்றன; காந்தியடிகள் வழிகாட்டப் போகிறார்கள். எல்லோரும் சுகமடைய வேண்டும்” என்று பாரதி சொன்னார்….


இரவு 12.30 மணிக்கு எல்லோரும் உறங்கப் போனார்கள். காலையில் நண்பர்களுக்குச் செல்லம்மா சிற்றுண்டி அளித்தார். பாரதி காலைப் பத்திரிக்கை ‘மித்திர’னைப் பார்த்தார். அப்போது உள்ளூர் பிராமணரல்லாத அன்பர்கள் சிலர் வந்து பாரதியாருடன் உரையாடினார்கள். ஆரியர்-திராவிடர் பற்றிய பேச்சு. ‘அன்பர்களே ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள், அவர்களுக்கு முன்னால் ஆதித் திராவிடர்கள். அதற்குமுன் இருந்தது மிருகங்கள், ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டி, பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் நாம் அனைவரும் அவற்றிடம் விட்டுப் போக வேண்டியதுதான்’ என்று நகைத்தார் கவிஞர்.


– பக். 162 / சித்திர பாரதி / ரா.அ. பத்மநாபன் / காலச்சுவடு வெளியீடு.


இது பாரதியார் வாழ்க்கையின் இறுதிப்பகுதி. சட்டத்தால் முடக்கப்பட்டு, சம்பிரதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வறுமையால் தாக்கப்பட்ட நிலையில் அப்போது பாரதி இருந்தார். ஆனால் இந்த சமுதாயம் வேறுபாடு இல்லாத வளர்ச்சியடைய வேண்டும்; அறிவுத் தெளிவு, செல்வச் செழிப்பு தார்மீக உணர்வு ஆகியவை இந்த மண்ணில் பெருக வேண்டும் என்ற அவருடைய நிலைப்பாட்டில் மாற்றமுமில்லை. பாரதியின் நிலைமையையும் அவருடைய காலத்தில் தமிழ்நாடு இருந்த அவல நிலையையும் இப்போது பார்க்கலாம்.


1904ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தபோது பாரதியின் பொதுவாழ்க்கை துவங்கியது. அப்போது அவருக்கு வயது 22. பாரதியின் தோற்றம், குணம் மற்றும் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட வரிகளைத் தருகிறேன்:


பாரதிக்கு உத்தம நண்பராக வாய்த்த எஸ். துரைசாமி ஐயர் பாரதியைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ‘அவருடைய முகம் மிகவும் வசீகரமாக இருக்கும், எப்போதும் உற்சாகம் நிறைந்திருப்பார். பேச்சில் தெளிவு இருக்கும். எதையும் பளிச்சென்று சொல்லி விடுவார். சூதுவாது தெரியாது. பிறர் பேச்சுத் துணையை ரஸிக்கும் ஸரஸி. நல்ல உணவு அருந்துவதில் விருப்பமுள்ளவர். அவர் உடலோ மிகப் பூஞ்சை. பலமே இல்லாத மெலிந்த தேகம். விளையாட்டாய்த் தள்ளினால்கூட விழுந்து விடுவார்….


சென்னைக்கு வந்த புதிதில் பாரதிக்கு அரசியல் ஈடுபாடே கிடையாது. தேசபக்தித் துடிப்பும் இல்லை. இந்திய சமூகம் திருந்த வேண்டும், விரைவில் திருந்த வேண்டும் என்ற கருத்துக்கொண்ட சமூக சீர்திருத்தவாதியாகவே அவர் விளங்கினார்…


பல ஜாதிகளைச் சேர்ந்த, பல மதங்களைச் சேர்ந்த பாரதி முதலிய இளைஞர்கள், தங்களுள் பிராமணரல்லாத ஒருவரைச் சமைக்கச் செய்து, அந்த உணவை விருந்தாக எல்லோரும் சேர்ந்து உண்டார்கள். டாக்டர் ஜெயராம் நாயுடுதான் சமையல் செய்தார். சென்னையில் இது பரபரப்பை உண்டாக்கியது…


– பக்.26 / சித்திர பாரதி / ரா.அ. பத்மநாபன் / காலச்சுவடு வெளியீடு


Sister Nivedita‘சாதி ஒழிப்பு’ என்ற சிந்தனை ஈ.வே.ரா.வுக்கு ஏற்படாத காலத்திலேயே பாரதியார் சமபந்தியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். சுதேசமித்திரன் நாளிதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்த பாரதி வங்கப் பிரிவினைக் கிளர்ச்சியின் போது அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்குச் சென்றபோது சுவாமி விவேகாநந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியைக் கொல்கத்தாவில் சந்தித்தார்.


நாடெங்கும் தீவிரமாக வளர்ந்து வந்த தேசபக்தியை தமிழர் மனதிலும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்று விரும்பினார் பாரதி. அந்த நோக்கத்தில் உருவானது ‘இந்தியா’ வார இதழ் (1906). எம்.பி. திருமலாச்சாரி என்ற புரட்சி வீரர் இந்த இதழின் காரியாலய நிர்வாகஸ்தராக இருந்தார்.


தமிழ் பத்திரிகைகளில் முதல்முதலாகக் கருத்துப்படம் (Cartoon) வெளிவந்தது இந்தியாவில்தான். அதை உருவாக்கியவர் பாரதிதான்.


‘எலும்பும் தோலுமான இந்தியர்கள் பட்டினி கிடக்க, ஒரு கப்பலில் இந்திய கோதுமையை ஏற்றிச் செல்வதாக’ ஒரு கருத்துப்படம் ‘இந்தியா’வில் வெளியானது.


இந்தக் கருத்துப் படத்துக்காகவும் அரசியல் கட்டுரைகளுக்காகவும் 1908ல் பிரிட்டிஷ் அரசு ‘இந்தியா’ இதழ் மீது நடவடிக்கை எடுத்தது. பாரதி பாண்டிச்சேரிக்குச் சென்றார்.


1908 முதல் 1918 வரை பாரதி, பாண்டிச்சேரியில் தங்கியிருந்தார். அரவிந்தரோடு தொடர்பு, வ.வே.சு. ஐயரோடு நட்பு ஆகியவை அங்கே ஏற்பட்டது. ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, பாஞ்சாலி சபதம்’ போன்ற கவிதைகள் இந்தக் காலத்தில் வெளிவந்தன.


1918ல் பிரிட்டிஷ் இந்தியாவில் நுழைந்த பாரதி கடலூரில் கைது செய்யப்பட்டு 34 நாட்களுக்குப் பின் விடுதலையானார். அங்கிருந்து செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு வந்தார்.


கடையத்தில் இருந்தபோதுதான் ஆரிய-திராவிட விவகாரம் குறித்து ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அருமையான கருத்தை பாரதி தெரிவித்தார்.


விவசாயிகளின் துன்பத்தைச் சுட்டிக் காட்ட பாரதி வெளியிட்ட கருத்துப்படம்தான் அவரை பாண்டிச்சேரிக்கு அனுப்பிவைத்தது என்பதைப் பார்த்தோம்.


இனி, அவருடைய காலத்தில் விவசாயம், மற்றும் விவசாயிகளின் நிலைபற்றிப் பார்ப்போம். நீதிக்கட்சி ஆட்சியில் விவசாயிகளின் நிராதரவான நிலை மற்றும் இயந்திரத் தொழிலின் நிலைபற்றிப் பார்ப்போம். தமிழக விவசாயிகள் பட்ட கடன் கொடுமைக்கு 1937ல் ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசால் முடிவு ஏற்பட்டது என்ற நல்ல சேதியை மட்டும் நான் முதலில் சொல்லிவிடுகிறேன்.


தேவ. பேரின்பன் மற்றும் கா.அ. மணிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொள்வோம். தேவ. பேரின்பன் எழுதியது தமிழகத்தின் பொருளாதார வரலாறு இதை வெளியிட்டது நியு செஞ்சரி புக் ஹவுஸ். மணிக்குமாரின் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் வான்முகிலன். நூலின் பெயர் 1930களில் தமிழகம். இது அலைகள் வெளியீட்டகத்தின் பதிப்பு.


முதலில் தேவ. பேரின்பன்.


1870களில் தமிழக வேளாண்மையில் நெருக்கடி ஏற்பட்டதோடு 1876-78 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது.


பிரிட்டிஷாரின் வரிக் கொடுமை, விவசாயிகளின் கடன் சுமை போன்ற கொடுமைகளோடு வறட்சியும் நோயும் ஏற்படுத்திய பாதிப்புகள் தமிழக மக்களைப் பெரும் துயரத்திற்கு ஆட்படுத்தியது. பசியும் நோயும் வறட்சியும் ஆற்றுப்படுகை அல்லாத மேட்டுநிலத் தமிழகத்தை அதிகமாக வாட்டியது….


1870களில் ரயில்வேக்களின் வளர்ச்சியும், வர்த்தகத்தின் வளர்ச்சியும் வேளாண்மைப் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் ஐரோப்பிய மூலதனத்திற்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சர்வதேச மார்க்கெட்டுக்கு பருத்தி, நிலக்கடலை, சர்க்கரை போன்றவை ஏற்றுமதிக்கான சரக்குகளாயின. தமிழக விவசாயத்தில் இந்த அவசியத்துக்கான பயிர் சாகுபடி மாற்றங்கள் ஏற்படத் துவங்கின…


டெல்டா பிரதேசத்து மிராசுகள் நிலத்தை பிறருக்குக் குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருவாயில் நகர வாழ்வுக்குச் சென்றனர்…


ஆற்றுப்படுகை அல்லாத தமிழகப் பகுதிகளில் பணப்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக (1861) பிரிட்டனுக்கு பருத்திவரவு தடைப்பட்டது. இதனால் இந்தியா பருத்தி உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை காலனி ஆட்சியாளர் ஏற்படுத்தினர்.


கோவையிலும், திருநெல்வேலியிலும் பருத்தி சாகுபடி பரவலாகியது. வட ஆற்காடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டது. தென் ஆற்காடு, தஞ்சை மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்பட்டது.


1930களில் மேட்டூர் அணை கட்டப்பட்டதோடு காவிரி பாசனப் பகுதி விரிவுபடுத்தப்பட்டது. இதே காலங்களில் கிணற்றுப் பாசனம் விரிவுபடுத்தப்பட்டது…


அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்ததும் (1865) பிரிட்டிஷார் மீண்டும் அமெரிக்காவிடமே பருத்தி வாங்கினார். இந்தியாவில் பயிரிடப்பட்ட பருத்திக்குச் சர்வதேச சந்தையில் இடமில்லாது போனதும் இந்தியாவிலேயே நூற்பாலைகள் தோன்ற ஆரம்பித்தன…


இனி, இந்தியாவின் தொழில்வளர்ச்சி பிரிட்டிஷ் அரசால் எப்படித் தடை செய்யப்பட்டது என்பதையும் அந்தக் கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் நில உடைமை, விவசாயிகளின் கடன்சுமை மற்றும் நீதிக்கட்சியின் ஏழைகளுக்கு எதிர்ப்பான நிலை பற்றியும் கா.அ. மணிக்குமார் சொல்வதைக் கேட்கலாம்.


1908ல் உதகமணடலத்தில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் மதராஸ் வர்த்தக சபையின் பிரதிநிதியாகப் பங்கேற்ற சிம்சன், மாகாணத்தின் தொழில்மயமாக்க தொழில்துறை இயக்குனர் சேட்டர்டன் எடுத்துவந்த முன்முயற்சிகளை ஆட்சேபித்தார்.


பின்னி, ஹார்வே போன்ற ஐரோப்பிய நிறுவனங்களோடும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான பொருட்களோடும் போட்டியிட வேண்டிய நிலைமை இந்திய முதலீட்டாளர்களுக்கு இருந்தது.


ஐரோப்பிய வர்த்தகத்தை ஆதரிப்பவர்கள் அரசிடம் முறையிட்டு தமிழகத்தில் தொழில்துறை முன்னேற்றத்தைத் தடை செய்யும்படி கோரிக்கை வைத்தனர். மதராஸ் அரசும் அவர்கள் கேட்டபடி 1910ல் உத்தரவு வழங்கியது.


சென்னை மாகாணத்தில் இருந்த தேயிலை மற்றும் காபி தோட்டங்களும் சில பருத்தி ஆலைகளும், சில இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்களும், அரிசி ஆலைகளும், பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகளும் இங்கிலாந்து வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.


1921ம் வருடக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டனர். சென்னை மாகாணத்தின் சராசரி நில உடைமை அளவு சிறியது. தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிப்பதை இது சாத்தியமற்றதாக்கியது. மூன்று விதமான நில உடைமை முறை மதராஸ் மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. 1. ரயத்வாரி, 2.ஜமீன்தாரி, 3. இனாம்.


ரயத்வாரி முறைப்படி ஒவ்வொரு பயிரிடப்பட்ட நிலத்தின் வருவாயையும் அரசாங்கம் கணக்கிட்டது. இந்தக் கணக்கீடு முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டது. நிலத்தில் தனிஉடைமை என்பதை ரயத்வாரி முறை அறிமுகப்படுத்தியது. ரயத்வாரி பகுதியில் பயிரிடுவோர் உழவர் என அழைக்கப்பட்டனர்.


ஜமீன்தாரி முறையில் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஜமீன்தார்கள் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினார்கள். அதற்குப் பதிலாக அவர்களுக்கு பண்ணை மீதான உரிமை அளிக்கப்பட்டது. மாகாணத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்த நில உடைமை முறையின் கீழ் இருந்தது. மாகாணத்தில் 1500 ஜமீன்தார்கள் இருந்தனர். ஜமீன்தாரி முறையில் பயிரிடுவோர் குத்தகைக்காரர் என்று அழைக்கப்பட்டனர்.


முந்தைய அரசாங்கங்களால் அளிக்கப்பட்டவையே இனாம் அல்லது மானிய நிலங்கள். மதரீதியான சேவைகளுக்காகவும் அரசாங்க சேவைகளுக்காகவும் இனாம்கள் அளிக்கப்பட்டன.


விவசாயி நிலவரியை செலுத்திய பிறகு மிஞ்சியது அநேகமாக எதுவுமேயில்லை. சென்னை மாகாணத்தின் முதன்மையான பிரச்னையாக இருந்தது. விவசாயிகளின் கடன்சுமைதான் என்றாலும் அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளவில்லை.


இந்தியாவின் விவசாயத்தைப் பற்றி எதுவும் அறிந்திராத ஆங்கிலேய அதிகாரிகள் விவசாயத் துறையில் இருந்தனர். மாகாணத்தின் விவசாய நடைமுறைகள், பயிர்கள் மற்றும் பயிரிடும் காலம் போன்ற அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதிலளிக்க முடியாதவராக சென்னை அரசாங்க விவசாயத் துறைத் தலைவர் இருந்ததைக் கண்டு இந்திய விவசாயத்தின் மீதான ராயல் கமிஷன் திடுக்கிட்டது.


இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தாறு வருடங்களில் தமிழ் நாடு ஏழு வருடங்கள் பஞ்சத்தை அனுபவித்துள்ளது.


இந்த சூழ்நிலையில் மாதம் ரூ. 4333-60 சம்பளம் பெற்றுவந்த சென்னை மாகாண நீதிக்கட்சி அமைச்சர்களைத் தமிழர்கள் வெறுத்தார்கள்.


விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைப்பதற்காக நில வருவாயைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்கிற தீர்மானத்தை தேசியவாதிகள் சட்டசபையில் கொண்டு வந்தனர். எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் அதற்கு ஆதரவாகப் பேசி வாக்களித்த போது நீதிக்கட்சியினர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.


ஜமீன்தாரி நில உடைமை முறையை ஒழிப்பதற்கான இயக்கங்களுக்கு சில காங்கிரஸ்காரர்கள் தலைமை ஏற்றனர்.


‘இந்த மாகாணத்தில் பிளேக் நோய் போல நீதிக்கட்சி மக்களை வேதனைப்படுத்தி அவர்களது இதயத்தில் நிரந்தரக் கசப்புணர்வை விதைத்துள்ளது’ என்று விவசாயிகளின் பத்திரிகை எழுதியது.


விவசாயிகளின் நலனில் நீதிக்கட்சி அக்கறை காட்டாததின் காரணம் என்ன? விவசாயிகளின் கடனைப்பற்றி அவர்கள் கவலைப்படாததின் பின்னணி என்ன? என்று கேட்பவர்களுக்கு நீதிக்கட்சியின் தலைவர்கள் பட்டியலைப் படித்துக் காட்டுகிறேன்.


பனகல் அரசர், பொப்பிலி ராஜா, செல்லப்பள்ளி குமார ராஜா, தெலப்ரோல் ஜமீன்தார், வெங்கடகிரி ராஜா, இளவரசநேந்தல் ஜமீன்தார், ஊத்துக்குளி ஜமீன்தார், சிங்கம்பட்டி ஜமீன்தார், தோதப்ப நாயக்கனூர் ஜமீன்தார், குருவிகுளம் ஜமீன்தார், புதுக்கோட்டை ராஜகுமார் ஆகியோர் நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்கள்.


1917ல் நடந்த சென்னை மாகாண நீதிக்கட்சி மாநாட்டுக்கு வந்த பிரபலஸ்தர்கள் இதோ: சர்.பி. தியாகராய செட்டியார் (பிரபல வியாபாரி), சர்.பி.டி. ராஜன் (நிலப்பிரபு), குமாரராஜா முத்தையா செட்டியார் (வட்டித் தொழில்), ராவ்பகதூர் ஆர். வேங்கடரத்னம் நாயுடு, சர்.கே.வி. ரெட்டி, ராவ்சாஹிப் வெங்கடரத்தினம் நாயுடு, ராவ்பகதூர் சூரிய நாராயணமூர்த்தி நாயுடு, சர்.ஏ.பி. பாத்ரோ, மேடை தளவாய் திருமலையப்ப முதலியார் (நிலப்பிரபு), திவான் பகதூர் கோபதி நாராயண செட்டியார், சர்.ஏ. ராமசாமி முதலியார், திவான் பகதூர் சிவஞானம் பிள்ளை, திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டிய நாடார் (நிலப்பிரபு).


இவர்களெல்லாம் வட்டி கொடுக்கும் வாய்ப்பில்லாதவர்கள்; விவசாயிகளின் கண்ணீரையும் கடனையும் பற்றி அறியாத உயரத்தில் வாழ்ந்தவர்கள்; வளைத்துப் போட்ட வயல்கள் போதாது என்று அரசியலில் ஈடுபட்டு மாதம் ரூ.4333-60 அரசுச் சம்பளமாக பெற்றுக் கொண்டவர்கள். ஏழ்மையும் வறுமையும் அவர்கள் பார்த்த நாடகங்களில் மட்டும்தான் இருந்திருக்கும்.


kamarajarஒன்பது வருடங்கள் தமிழக முதல்வராக இருந்தவர் காமராஜர். பிறகு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். அந்த வீட்டின் படத்தை போஸ்டரில் போட்டு (1971) ‘சோலை நடுவே வாழும் சோஷலிசப் பிதா’ என்று தி.மு.க. கேலி செய்தது. தி.மு.க, சாமானியர்களின் கட்சி என்கிறார் தமிழக முதல்வர். சாமான்யர்களின் முன்னோர்கள் பெற்ற மாதச் சம்பளம்தான் ரூ. 4333-60.


ரூ. 4333-60 மாதச் சம்பளம் பெரிதா என்று சிலர் சந்தேகப்படலாம். கொரியர் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞர் இன்று இதைத்தானே சம்பாதிக்கிறார் என்று கேள்வி எழுப்பலாம்.


ஐயா, இந்தச் சம்பளம் பெறப்பட்டது, 1930 இல் என்பதை நினைவுபடுத்துகிறேன். அப்போது ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.12.00; பவுன் விலை ரூ.13.00; எட்டு கிலோ அரிசி விலை ரூ.1.00; 64 இட்லிகளின் விலை ரூ.1.00 என்ற விவரங்களைக் கொடுக்கிறேன்.


மற்றபடி, மாதம் ரூ.4333-60 ஊதியம் பெற்றுக் கொண்ட நீதிக்கட்சி அமைச்சர்கள் எத்தனை இட்லி சாப்பிட்டிருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.


மேற்கோள் மேடை:


எகிப்து, கம்போடியா பருத்திப் பயிர் வந்ததன் மூலம் நாட்டின் செல்வநிலை பெரிதும் உயர்ந்திருக்கிறது. மேலும் உயர்வடையக் கூடிய குறிகளும் காணப்படுகின்றன.


– கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் பருத்திப் பயிருக்கு விலை கிடைக்காமல் பரிதவித்த 1917ல் பி.டி. தியாகராயர் ஆற்றிய உரை / பெஜவாடா நீதிக்கட்சி மாநாடு.


DIFFICULTIES IN CHENNAI SRINIVASA IYENGAR VS CHIDAMBARANAAR சென்னை தந்த துயர வாழ்வு

 




வ.உ.சி.150 நினைவலைகள் (பதிவு எண். 10/150)


DIFFICULTIES IN CHENNAI  SRINIVASA IYENGAR 

VS 

CHIDAMBARANAARசென்னை தந்த துயர வாழ்வு



பெரியவர் வ.உ.சி.க்கு தெரிந்த நல்ல தொழில் வக்கீல் தொழிலே. வெள்ளையர் அரசாங்கம் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காட முடியாதபடிக்கு  வக்கீல் சன்னத்தை (உரிமம்) பறித்து விட்டது. சென்னையில் வீட்டுக் கடனை அடைக்க பல தொழில்கள் செய்ய முயன்றார். அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.


தெரியாத தொழில்கள் எல்லாம் செய்து பார்த்தார். சிந்தாதரிப் பேட்டையில் நெய்கடை வியாபாரம் செய்துள்ளார்.  பின்பு மளிகைக் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் கை கூட வில்லை. மண்ணெண்ணெய் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் போணியாக வில்லை. மண்ணெண்ணெய் கடை வைப்பதற்காக ரூபாய் பத்து கடன் வாங்கி அதற்காக பிராம்சரி நோட்டும் எழுதிக் கொடுத்துள்ளார். அந்தக் கடையும் உருப்படியாகவில்லை.


தொழிற்சங்க நண்பர்களான வி.சக்கரைச் செட்டியார், கஜபதி செட்டியார் போன்றோர் முன்வந்து அவர்களாகவே அரிசிக் கடையைப் பிடித்து தந்து  அரிசி மூட்டைகளும் வாங்கித் தந்து வியாபரம் செய்ய உதவினார்கள்.  கப்பல் வணிகத்தைச் சிறப்பாக நடத்திய பெரியவருக்கு அரிசிக் கடையை லாபகரமாக நடத்த முடியவில்லை. கடையை நண்பர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.


1917-18 வாக்கில் பஞ்சம் வந்த போது பிரிட்டீஷ் சர்க்கார் தினமும் 5000 நபர்களுக்கு ரூபாய்க்கு நான்கு படி அரிசி நியாய விலைக் கடை மூலம் அளித்தது. அச் சமயம் தண்டபாணி பிள்ளை தனது பங்களா வீட்டை அரிசி கடையாக மாற்றி வ.உ.சி.க்கு அரிசிக் கடையில் வேலையும் அளித்தவர். அவருக்கான வேலை அரிசியை கொண்டு வரவும், விற்பனை செய்து தருவதுமான வேலை. இதற்கு சம்பளமாக தினமும்  தன் வீட்டுக்கு ரூபாய்க்கு 4 படி அரிசியும் மாதம் ரூபாய் 100/- ம் சம்பளம் பெற்றுச் செல்வது வழக்கம். இந்த அரிசி கடையில் வேலை செய்வதை பிரீட்டீஷ் அரசாங்கத்திற்கு தெரிய வந்து வ.உ.சி.க்கு வேலை அளிக்கப்பட்ட காரணத்துக்காக தண்டபாணி பிள்ளையின் அரிசிகடையின் உரிமத்தையும் சேர்த்து ரத்து செய்து மூடிவிட்டார்கள். இதனால் அப்பகுதி தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய அரிசியும் கிடைக்காமல் அவர்களது வாயிலும் மண்ணைப் போட்டு விட்டது பிரிட்டீஸ் அரசாங்கம்.


அச் சமயம் தமிழ்நாடு காங்கிரசின் மிகப் பெரிய தலைவராக இருந்தவர் சீனிவாச அய்யங்கார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அரசியல் ஆசான். இவர். சென்னையின் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். திக்கற்ற நிலையில் இருந்த பெரியவர் வ.உ.சி.க்கு தொடர்ந்து வேலை தேடிய படலத்தில் இருந்தார். இந்த நிலையில் தனக்குத் தெரிந்த வக்கீல் வேலையை சீனிவாச அய்யங்காரிடம் கேட்டால் தருவார் என்ற நம்பிக்கையில் அவரிடம் போய் வேலை கேட்கப் போகிறார்.


மிகுந்த நம்பிக்கையுடன் சென்ற பெரியவர் வ.உ.சி.யை வரவேற்றார் சீனிவாச அய்யங்கார்.


வாங்கோ… வாங்கோ என்று மகிழ்ச்சி பொங்கிட வரவேற்ற அய்யங்கார் காபி கொடுத்து உபசரித்தார். பின்னர்


வராதவர் வந்திருக்கிறீர்களே…. ஏதாவது விசேசமா என்று விசாரிக்கிறார் அய்யங்கார்.


சற்று தயக்கத்துடன் பெரியவர் “ உங்களிடம் ஒரு வேலை தேடி வந்தேன் என்கிறார்.


“வேலையா… என்னிடமா? உங்களுக்குப் போய் நான் வேலை தர முடியுமா? என்கிறார் சீனிவாச அய்யங்கார்.


“எனக்குத் தெரிந்த தொழில் வக்கீல் தொழில்தான். அந்த தொழிலை நான் செய்ய முடியாமல் அரசாங்கம் தடை விதித்து விட்டது. நீங்கள் இப்போது சிறந்த வக்கீலாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏராளமான வழக்குகள் கிடைத்திருகின்றன. உங்களிடம் வரும் வழக்குகளுக்கான கேஸ் கட்டுகளை என்னிடம் கொடுங்கள். நீங்கள் கோர்ட்டில் வாதாட வசதியாக சட்ட ரீதியான விசயங்களை தயாரித்து தருகிறேன். இப்பணிக்காக மாதம் ஒரு தொகையை கொடுத்தால் எனக்கு பேருதவியாக இருக்கும் என்றார் பெரியவர் வ.உ.சி.


சீனிவாச அய்யங்காருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் கொஞ்ச இருங்கோ பிள்ளைவாள், இதோ நொடியில் வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு மாடிப்படிக்குப் போனார்.


மாடியிலிருந்து இறங்கி வந்த போது, அய்யங்கார் கையில் ஒரு கவர் இருந்தது. அதில் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருந்தது.


“பிள்ளைவாள்… நீங்க ரொம்பவும் பெரியவாள். உங்களுக்கு நான் வேலை கொடுப்பது என்பது என்னால் நினைத்து பார்க்க முடியாத காரியம். என்னாலே முடிந்த உதவி இது. இதை நீங்கள் பெற்றுக் கொண்டால் நான் ரொம்பவும் சந்தோசப்படுவேன் என்றார்.


அந்தப் பணத்தை கையால் தொடவே இல்லை பெரியவர் வ.உ.சி.


ரொம்ப நன்றிங்க. நான் உங்களிடம் வேலை தேடித்தான் வந்தேன். வேலை செய்து சம்பாதித்துதான் எனக்குப் பழக்கம். யாசகம் வாங்கிப் பழக்கமில்லை என்று உணர்ச்சிப் பொங்கிட கூறிவிட்டு , வக்கீல் சீனிவாச அய்யங்காரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.


வறுமையிலும் செம்மையாக தனது வாழ்வினை அடையாளப்படுத்தியவர் பெரியவர் வ.உ,.சி.


ஒரு மனிதனுக்கு அடுக்கடுக்காய் துன்பம் நேர்கையில் மனம் பக்குவப்பட்டு ஞானியாகிறான். பெரியவருடைய வாழ்க்கை 1908 ஆம் ஆண்டில் இருந்து சிறை வாழ்வையும் முடித்து வந்த பிறகும் கூட சென்னையில் அவர் பட்ட வாழ்வின் துயரங்கள் இராமச்சந்திர கவிராயரின் தனிப்பாடலான


 ”ஆவீன மழை பொழிய இல்லம் வீழ” என்ற தனிப்பாடல் என் மனதில் எதிரொலிக்கிறது.


சென்ற வாரம் பெரியவர் சென்ற அதே சீனிவாச அய்யங்காரின் வீட்டைத் தேடி ஆழ்வார்பேட்டை  அம்புஜம்மாள் வீதியில் அமைந்துள்ள காந்தி அமைதி நிறுவன அலுவலகம் சென்று அலுவலக இயக்குனரிடம் விசாரித்தோம். 


மேற்குறித்த விசயங்களைப் பற்றி பேசினேன். அதற்கு  இந்த நிகழ்வு நீங்க சொல்லித்தான் எங்களுக்கே தெரிய வருகிறது என்று கூறி விட்டு கப்பல் விட்ட வ.உ.சி..க்கு இப்படியான துன்பங்களா! எல்லாம் நாம் மறந்து விட்டோமே என்று சொல்லி அவரும் கண்கலங்கி விட்டார்.


மூலம்: சின்ன குத்தூசி. எத்தனை மனிதர்கள். விகடன் பிரசுரம்.


என். தண்டபாணி பிள்ளை.  சில சுவையான குறிப்புகள்! வ.உ.சி.யைப் பற்றி… நாரதர் இதழ்.


படம்: எஸ். சீனிவாச அய்யங்கார்

(தேச பக்தனாக இருந்தது பாவமா?.

இந்த தேச நலனையே தன் மூச்சாகக் கொண்ட ஒரே காரணத்திற்காக ஒரு மாமனிதனின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?.நினைக்கவே மனம் பதறுகிறது.மனம் கொதிக்கிறது.அவர் அனுபவித்ததில் சிறு பகுதியே இது. ஆனாலும் கடைசி வரை தேசாபிமானத்தைப் போல தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காத பெரியவர்.)




சேஷாத்திரி ஸ்ரீனிவாச ஐயங்கார் (S. Srinivasa Iyengar) சி.ஐ.இ. (செப்டம்பர் 11, 1874 - மே 19, 1941) என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒரு இந்திய வழக்கறிஞராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல்வாதியாகவும் இருந்தார். ஐயங்கார் 1916 முதல் 1920 வரை சென்னை மாகாணத்தின் வழக்கறிஞர்-ஜெனரலாக இருந்தார். 1912 முதல் 1920 வரை சென்னை மாகாணத்தின் சட்ட உறுப்பினரும் 1923 முதல் 1930 வரை இந்திய தேசிய காங்கிரஸின் ஸ்வராஜியக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். ஸ்ரீனிவாச ஐயங்கார் புகழ்பெற்ற முதல் இந்திய வழக்கறிஞரான சர். வேம்பகும் பாஷ்யம் ஐயங்காரின் மருமகன் ஆவார். வழக்கறிஞர் ஜெனரல் சர் வேம்பகும் பாஷ்யம் ஐயங்காரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் தென்னிந்திய சிங்கம் என்று அழைத்தனர்.

சென்னை மாகாணத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீனிவாச ஐயங்கார் பிறந்தார். அவர் சட்டத்தில் பட்டம் பெற்றார் மற்றும் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 1916 இல் வழக்கறிஞர்-ஜெனரல் ஆக பதவி உயர்வு பெற்றார். அவர் பார் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றினார் மற்றும் ஆளுநரின் நிறைவேற்றுக் குழுவின் சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர் தனது வழக்கறிஞர் ஜெனரல் பதவியை, ஆளுநர் நிறைவேற்றுக்குழுவின் அவரது இருக்கையை ராஜினாமா செய்து சி.ஐ.இ. க்குத் திரும்பினார்.

1920 ஆம் ஆண்டு ஜலியன்வாலா பாக் படுகொலைக்கு எதிராக, இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றார். 1923 ஆம் ஆண்டில், மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் போன்ற தலைவர்களோடு சேர்ந்து மகாத்மா காந்தியுடன் தேர்தல்களில் பங்கேற்றார். பிரிவினை பிரிவுக்குப் பின்னர் ஸ்வராஜியக் கட்சி உருவாக்கப்பட்டது. 1926 தேர்தல்களில் பெரும்பான்மை பெற்றிருந்த போதிலும், ஐயங்கார் மாகாணத்தில் அரசாங்கத்தை அமைக்க மறுத்தபோது, அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பின்னர் சென்னை மாகாண ஸ்வராஜ்ய கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

பின்னர் அவர், இந்திய லீக்கின் சுதந்திரத்தை நிறுவி, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டங்களை ஒழுங்கமைத்தார். மற்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 1941 ஆம் ஆண்டு மே 19 இல், ஐயங்கார் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

ஸ்ரீனிவாச ஐயங்கார் சென்னை சட்டப்பேரவையில் இருந்து வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இளைய வக்கீல் ஆவார். ஸ்ரீனிவாச ஐயங்கார் சுதந்திர போராட்ட வீரர்களான யு. முத்துராமலிங்கம் தேவர் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டியாகவும் இருந்தார். பின்னர் 1954 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார். மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றிய கே. காமராஜ் அவரது மிகப்பெரிய வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். ஸ்ரீனிவாச ஐயங்கார் 1939 இல் எழுதிய "மேனேஸ் ஹிண்டு லாஸ்" புத்தகம் மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் நன்கு படிக்கப்பட்ட புத்தகம் ஆகும்.

Tuesday, 9 January 2018

SRINIVASA RAMANUJAM ,MATHEMATICIAN BORN DECEMBER 22,1987






SRINIVASA RAMANUJAM ,MATHEMATICIAN
BORN DECEMBER 22,1887-1920 April 26









சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.[1]
பிறப்பு[மூலத்தைத் தொகு]

குடந்தை சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர்.இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.[2]

இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். [சான்று தேவை] ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.

கல்வி[மூலத்தைத் தொகு]
இராமானுசம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக்கல்வியை நிறைவு செய்தார்.[2]

1897 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.[2]


கும்பகோணத்தில் சாரங்கபாணித் தெருவில் உள்ள இராமானுசனின் வீடு

கணக்கியலர்[மூலத்தைத் தொகு]
கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும். வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல் (convergence), இருப்பு (existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும் விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன்.

கற்பிக்கப்படாத மேதை[மூலத்தைத் தொகு]
மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707–1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804–1851). ஆனால் இவ்விருவருக்கும் கல்லூரிப் படிப்பின் முழு வலுவும் ஆழமான அடித்தளமாக இருந்தது. இராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்னமேயே அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார். ஒருவேளை அப்படிக் கற்பிக்கப் படாதிருந்ததால் தான் அவரால் அவ்வளவு சாதிக்க முடிந்ததோ என்னமோ? அப்படி திருத்தப்பட்டிருந்தால் அவர் கணிதத்தில் எடுத்துவைத்த அடிகள் ஒவ்வொன்றும் அவரை தயக்கப்படவும் செய்து பின்னுக்கு இழுத்திருக்கலாம். ஆய்லருடனோ அல்லது ஜாகோபியுடனோ, ஏன், எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை ‘படிக்காதவர்’ என்றே கூறவேண்டும். தன்னால், தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 18, 19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது. இவ்வளவிருந்தும், ஒரு சில சம்பவங்களின் திருப்பங்களன்றி அவரை இக்கணித உலகம் அறவே இழந்திருக்கவும் கூடும் என்பதும் உண்மையே.

பள்ளிப் பருவத்திலேயே கணித ஆய்வு[மூலத்தைத் தொகு]

பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

இராமானுஜனுடைய ஆய்வுக்குறிப்பேடுகள் ("நோட்புக்குகள்")[மூலத்தைத் தொகு]

சிறுவன் இராமானுஜன் லோனியின் முக்கோணவியலையும் கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் (நோட்புக்கில்) எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.

இளமையும் கல்வியும்[மூலத்தைத் தொகு]

இராமானுசன் அஞ்சல் தலை
1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.பின்னர் இவர் பச்சையப்பா கல்லூரியிலும் கல்வி கற்றார். இங்கு எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து விடை காண்பார்கள்.[ எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்களில் ஒருவர். இவரை ’கிடி’ என்று செல்லமாக அழைப்பது சுவாமி விவேகானந்தரின் வழக்கம்]. இன்றும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ’எஸ்.பி.சிங்காரவேலு முதலியார்’ பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[3]

1907-11 இல் படைப்பு வெள்ளம்[மூலத்தைத் தொகு]
மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.[4] ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.[http://www.hinduonnet.com/fline/fl1617/16170810.htm

கலங்கரை வெளிச்சத் தொடர்[மூலத்தைத் தொகு]

சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910இல் இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடி திருக்கோவிலூருக்கு ஓடினார். இராமானுஜன் என்ற மேதையை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை வெளிச்சத் தொடர் சங்கிலியில் முதல் வளையமாக இருந்தவர் இந்த ராமஸ்வாமி அய்யர் தான். அவருடைய அறிமுகத்தில் பேராசிரியர் சேஷு அய்யர் அணுகப்பட்டார். அவர் நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திவான் பகதூர் ஆர். ராமச்சந்திரராவிடம் அனுப்பினார். டிசம்பர் 1910 இல் முதலில் நடந்த சந்திப்பில் வள்ளல் ராமச்சந்திர ராவினுடைய மனதைத் தொட்ட போதிலும் இராமானுஜனின் மேதை அவருடைய அறிவைத் தொடவில்லை. அடுத்த முறை சந்தித்தபோது இராமானுஜன் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவைகளை மாத்திரம் காட்டினார். அவைகளிலிருந்து அவர் இராமானுஜன் கணிதத்தில் சாதனை செய்யக்கூடியவர் என்று அறிந்து கொண்டு இராமானுஜனுடைய செலவுகளைச் சிறிது காலத்திற்கு தானே ஏற்று நடத்தி வந்தார்.

இராமானுஜன் இவ்வேற்பாட்டை நெடுநாள் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒரு எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911 இல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஒரு நிலையான உதவிச் சம்பளம் வாங்கித் தந்துவிட பல பேர் முயன்றனர். இந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ராமச்சந்திர ராவ், சென்னை பொறியியல் கல்லூரிப் பேரா. சி.எஸ்.டீ. க்ரிஃப்பித், லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா. எம். ஜி.எம். ஹில், முனைவர் கில்பர்ட் வாக்கர் (தலைவர், இந்திய வானிலைத்துறை), பேரா.பி. ஹனுமந்த ராவ் (தலைவர், சென்னை பல்கலைக் கழகத்தின் பாட மையம்), மற்றும் நீதிபதி பி. ஆர். சுந்தரம் அய்யர். இந்த முயற்சிக்கெல்லாம் பயன் கிடைத்தது. மே 1, 1913 முதல் இராமானுஜன் (அவரது 26வது வயதில்) சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில்.

பேரா. ஜி. ஹெச். ஹார்டி[மூலத்தைத் தொகு]
1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் ‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம்.

ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது குடும்பச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான்.


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சக கணிதவியலாளர்களுடன் ராமானுசன் (நடுவில் இருப்பவர்)
நான்கு பொன்னான ஆண்டுகள்[மூலத்தைத் தொகு]

கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.

இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.

சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.

ஒரே ஒரு இராமானுஜன் கணிதத்துளி[மூலத்தைத் தொகு]
இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம்.

முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார்.

இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்:

{\displaystyle x^{2}-10y^{2}=+1or-1} {\displaystyle x^{2}-10y^{2}=+1or-1}

மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்:

{\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+\dotsb }}}}}}}}} {\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+\dotsb }}}}}}}}}

இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார்.

இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு

3 + 1/6 = 19/6.

x =19, y = 6 இரண்டாவது விடை.

{\displaystyle 19^{2}-10*6^{2}=361-360=1} {\displaystyle 19^{2}-10*6^{2}=361-360=1}

மூன்றாவது ஒருங்கு:

{\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6}}}}} {\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6}}}}}

இது கொடுக்கும் விடை: x = 117, y = 37

இதுவும் ஒரு சரியான விடைதான்.

நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228.

இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதைமை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது தான்.

இன்னொரு நோட்புக்கின் அற்புதம்[மூலத்தைத் தொகு]
துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919–20 இல் செய்த ஆராய்ச்சிகள்.

ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது:

• மூன்று நோட்புக்குகள்

• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913–1914)

• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்

• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்

இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது. பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’.

சிறப்புக்கள்[மூலத்தைத் தொகு]
1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.
ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
இவருடைய "மாக் தீட்டா ஃபங்சன்ஸ்" எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.