Showing posts with label VALLABHAI. Show all posts
Showing posts with label VALLABHAI. Show all posts

Wednesday, 6 November 2019

INDIA`S IRON MAN SARDAR VALLABHAI PATEL



INDIA`S IRON MAN   SARDAR VALLABHAI PATEL 




இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• குஜராத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.
• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!
• பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
• வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
• சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
• நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.
• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
• 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Wednesday, 1 November 2017

SARDAR VALLABHAI PATEL ,THE MAN WHO CONSOLITATE 565 STATES WITHIN 2 YEARS BORN 1875 OCTOBER 31



SARDAR VALLABHAI PATEL ,THE MAN WHO CONSOLITATE 565 STATES WITHIN 2 YEARS  
BORN 1875 OCTOBER 31



"சர்தார் வல்லபபாய் படேல் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ததில்லை; அவரது குடும்பத்தாரும் "படேல் எங்களுக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடியதில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
சுதந்திரத்துக்குப் பின் தேசத்தை ஒருங்கிணைத்தவரும், நாட்டின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் 141-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தில்லியில் படேலின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நம்மிடையே உள்ள பிரிவுகள் மீது மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாலோ, ஒற்றுமை உணர்வுடன் வாழா விட்டாலோ, இந்தியாவைப் போன்ற வேறுபாடுகள் நிறைந்த நாட்டை நடத்திச் செல்ல முடியாது.

ஒற்றுமையைப் பற்றி பேசும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. நானோ பாஜகவைச் சேர்ந்தவன். சர்தார் படேலோ, காங்கிரûஸச் சேர்ந்தவர். ஆனாலும் நாம் அவரது பிறந்த தினத்தை அதே உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம்.
சர்தார் படேலின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு நான் (மோடி) யார்? என்று சிலர் கேட்பதைக் கண்டு நான் வியப்படைந்தேன். ஆனால், படேல் எப்படிப்பட்டவர் என்றால் அவருக்காக குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடியதில்லை. பொது வாழ்க்கையில் அவர் ஈடுபட்டிருந்தபோது தன் குடும்பத்திற்காக எதையும் செய்ததில்லை. அவர் எதைச் செய்தாலும் நாட்டுக்கு ஆற்றிய கடமையாகவே நினைத்து அதைச் செய்தார்.
சிலர் (படேல்) மிகவும் உயர்ந்தவர்கள். அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை மறக்கடிக்கச் செய்ய கடந்த 70 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளுக்கு வெற்றி கிட்டவில்லை.
ஆமதாபாத் நகராட்சித் தலைவராக படேல் இருந்தபோது, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அரசுக்கு படேல்தான் தலைமை தாங்க வேண்டும் என்றே பெரும்பாலான மாநிலங்கள் விரும்பின. நேரு பிரதமராக வேண்டும் என்று அவை விரும்பவில்லை. எனினும், இந்த விவகாரத்தில் காந்தியின் விருப்பத்தை படேல் ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்தே நேரு பிரதமரானார் என்றார் அவர்.
முன்னதாக, தில்லியில் படேல் செüக்கில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி நடைபெற்ற ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தில் அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவுக்கு அவர் ஆற்றிய தொண்டு மிகப்பெரியது.


சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய தேசத்தை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செயல்படுத்திய அவர், இந்தியாவை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார். இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கடவுச் சீட்டு போன்ற ஆவணங்கள் ஏதுமின்றி நாம் பயணம் செய்கிறோம்.

இதற்கு சர்தார் வல்லபபாய் படேல் என்ற ஒரு மனிதர்தான் காரணம். தேசத்தின் அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தைக் கட்டமைத்த சாதனையாளர் அவர். இப்போது இந்தியா மிகவும் பலமான, பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த நாடாக இருப்பதற்கு தேசம் ஒருங்கிணைந்ததுதான் முக்கியக் காரணம்.
எனவே, தேசத்தை பிளவுபடுத்த நினைக்கும் தீயசக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் குஜராத்தைச் சேர்ந்தவர். நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' மறைவுக்குப் பின் அளிக்கப்பட்டது