Wednesday 1 November 2017

SARDAR VALLABHAI PATEL ,THE MAN WHO CONSOLITATE 565 STATES WITHIN 2 YEARS BORN 1875 OCTOBER 31



SARDAR VALLABHAI PATEL ,THE MAN WHO CONSOLITATE 565 STATES WITHIN 2 YEARS  
BORN 1875 OCTOBER 31



"சர்தார் வல்லபபாய் படேல் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ததில்லை; அவரது குடும்பத்தாரும் "படேல் எங்களுக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடியதில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
சுதந்திரத்துக்குப் பின் தேசத்தை ஒருங்கிணைத்தவரும், நாட்டின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் 141-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தில்லியில் படேலின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நம்மிடையே உள்ள பிரிவுகள் மீது மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாலோ, ஒற்றுமை உணர்வுடன் வாழா விட்டாலோ, இந்தியாவைப் போன்ற வேறுபாடுகள் நிறைந்த நாட்டை நடத்திச் செல்ல முடியாது.

ஒற்றுமையைப் பற்றி பேசும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. நானோ பாஜகவைச் சேர்ந்தவன். சர்தார் படேலோ, காங்கிரûஸச் சேர்ந்தவர். ஆனாலும் நாம் அவரது பிறந்த தினத்தை அதே உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம்.
சர்தார் படேலின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு நான் (மோடி) யார்? என்று சிலர் கேட்பதைக் கண்டு நான் வியப்படைந்தேன். ஆனால், படேல் எப்படிப்பட்டவர் என்றால் அவருக்காக குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடியதில்லை. பொது வாழ்க்கையில் அவர் ஈடுபட்டிருந்தபோது தன் குடும்பத்திற்காக எதையும் செய்ததில்லை. அவர் எதைச் செய்தாலும் நாட்டுக்கு ஆற்றிய கடமையாகவே நினைத்து அதைச் செய்தார்.
சிலர் (படேல்) மிகவும் உயர்ந்தவர்கள். அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை மறக்கடிக்கச் செய்ய கடந்த 70 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளுக்கு வெற்றி கிட்டவில்லை.
ஆமதாபாத் நகராட்சித் தலைவராக படேல் இருந்தபோது, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அரசுக்கு படேல்தான் தலைமை தாங்க வேண்டும் என்றே பெரும்பாலான மாநிலங்கள் விரும்பின. நேரு பிரதமராக வேண்டும் என்று அவை விரும்பவில்லை. எனினும், இந்த விவகாரத்தில் காந்தியின் விருப்பத்தை படேல் ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்தே நேரு பிரதமரானார் என்றார் அவர்.
முன்னதாக, தில்லியில் படேல் செüக்கில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி நடைபெற்ற ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தில் அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவுக்கு அவர் ஆற்றிய தொண்டு மிகப்பெரியது.


சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய தேசத்தை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செயல்படுத்திய அவர், இந்தியாவை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார். இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கடவுச் சீட்டு போன்ற ஆவணங்கள் ஏதுமின்றி நாம் பயணம் செய்கிறோம்.

இதற்கு சர்தார் வல்லபபாய் படேல் என்ற ஒரு மனிதர்தான் காரணம். தேசத்தின் அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தைக் கட்டமைத்த சாதனையாளர் அவர். இப்போது இந்தியா மிகவும் பலமான, பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த நாடாக இருப்பதற்கு தேசம் ஒருங்கிணைந்ததுதான் முக்கியக் காரணம்.
எனவே, தேசத்தை பிளவுபடுத்த நினைக்கும் தீயசக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் குஜராத்தைச் சேர்ந்தவர். நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' மறைவுக்குப் பின் அளிக்கப்பட்டது 

No comments:

Post a Comment