Showing posts with label REAL. Show all posts
Showing posts with label REAL. Show all posts

Tuesday, 11 January 2022

DOG - REAL FACTS

 

DOG - REAL FACTS



அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்!

ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது..?

இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள் இலை தலைகள் தங்களை வழங்கி விடுகிறது.

ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.?

உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது??வீட்டிற்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?

சாலையோர கடையிலோ தள்ளு வண்டிக் கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..?

குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்க்கு மனிதகுலம் இடம் பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்தி செய்கிறது. 

குகையில் வாழ்ந்து பழகியவன் வீடு கட்டி வாழப் பழகுகிறான். சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டி விட்டான்.

“தெரு நாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.

சொல்கிறேன்….

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும் போதும் அவன் மட்டும் வரவில்லை.தனக்கு பயன்படக்கூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.

அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”.”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.

நரி, ஓநாய், செந்நாய் குடும்ப வகையை சேர்ந்தது தான் நாயும். அவற்றைப் போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்கு தான். அவைகளுக்கு இருந்த எல்லா குணமும் நாய்க்கும் இருந்தது.

 ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அது தான் நாயை இன்று தெருவில் அலைய விட்டிருக்கிறது. அது தான் அன்பும் நன்றியுணர்வும்….. அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்…

எலித் தொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலி தான். ஆனால், அன்பைத் தவிர வேறு எதையுமே கொடுக்க முடியாததால் கை விடப்பட்டு தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்று விட்டது.

வேளாண்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூணை போன்றவற்றை மனிதன் வேட்டையாட பொழுது போக்கிற்காக நாய் தேவைப்பட்டது. 

இன்று வேளாண் செய்வதே போராட்டமாகவும் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன், காவிரி உரிமை என போராட்டமே வேளாண்குடிகளுக்கு பொழுது போக்காக ஆகி விட்டது.

வீட்டைக் காவல் காக்கும் இடத்தை சீ.சீ.டீவிகள் நிரப்பியதால் வீட்டின் மதிப்பிற்கேற்ப்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும் சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்கு தெருவே வீடாகிப் போனது.

மனிதன் social animal (சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகி விட்டது. உங்களோடு அதற்கு பேச மட்டும் தான் தெரியாது. உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்,.

 உங்கள் நண்பர் யார் பகைவர் யார் எனத் தெரியும்,. உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்டத் தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்,….அவ்,…அவ்,…என சிணுங்கத் தெரியும்.

உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பித் தாக்காமல் விளையாட்டு காட்டத் தெரியும்.

 உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்து திட்டு வாங்கியிருக்கும் ஆனால் அவள் திருமணமாகி சென்று விட்டால் மூலையில் படுத்து கவலைப்படும்.

வெளியூருக்குப் போய் வந்த நம் அப்பாவை பார்ததும் முன்னங் கால்களைத் தூக்கி மாரில் வைத்து தாடையை நக்கும். வாலை ஆட்டிக் கொண்டு மளிகைக் கடைக்கு அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும். 

உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?.. ஒரு கை பார்த்து விடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.

அப்போ, வீடு இல்லாத நாய்களின் நிலை???

வீடு கிடைத்தவை செல்லப் பிராணியாகி விடுகிறது. 

வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை என பார்க்கப்படுகிறது. பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது.

தெருநாய்கள் அடி வாங்குவதற்காகவும் வண்டியில் அடிபட்டு சாகவும் படைக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. பெரிய நாய் தெருவில் அடிபட்டுச் சாக, நாய்க்குட்டிகள் அதைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கும்.

தெருவில் அலைந்து அலைந்து

வியர்வையை விட இரத்தமே அதன் உடம்பின் மீது வழிகிறது. உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி எச்சிலே அதற்கு இரத்தமாக உடம்பில் ஓடுகிறது.

இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கும் அதே தெருவில் காட்டிலிருந்து அது நம்பி வந்த மனிதகுலம் எந்த சம்மந்தமும் இல்லாமல் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும். 

அவர்களுக்கு ஏறெடுத்து பார்க்கக் கூட நேரமில்லை என்பதை விட ஏறெடுத்து பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் என்பதை உணரும் தெரு நாயின் நிலை என்னவாக இருக்கும்?..

ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து அடியோடு அதன் குணத்தை உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு?..

 அதற்கும் மாட்டுப் பாலுக்கும் என்ன சம்மந்தம்?. அதை அவைளுக்கு உணவாகக் கொடுத்தது யார்??.. தற்போது அவைகளுக்கு அதைத் தர மறுப்பது யார்??

ஆனா பாருங்க நன்றி கெட்ட நாய் என்ற சொல்லாடலை “நாம்” வைத்திருக்கிறோம். என்ன ஒரு முரண்?அவைகளுக்கு ஆதரவா இருக்க வேண்டியது யார் கடமை?..

 சுற்றுலாவிற்க்கு செல்லும் போது அங்குள்ள விலங்குகளுக்கு உணவு காெடுக்க வேண்டாம் என சொல்வது இதற்காகத் தான்.

தெருநாய்களால் இன்று காட்டிற்குச் சென்று வாழவும் முடியாது. நாட்டிற்க்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்து கொள்ளவும் தெரியாது.

அதனால் தான் நீங்கள் சாப்பிடும் போதும் தெருவில் நின்று உங்கள் தட்டையே வெறித்துப் பார்த்து நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கிறது. 

அதன் நாக்கில் இருந்து சொட்டச் சொட்ட வழிவது எச்சில் அல்ல. கைவிடப்பட்ட ஓர் விலங்கின் கண்ணீர். உங்கள் உணவை பரிமாறி அதைத் துடையுங்கள். 

 அனைத்து உயிரினங்களுக்கும் சேர்ந்தது தான் இந்த பூமி...

Sunday, 25 July 2021

SURAIYA REAL BIOGRAPHY

 


SURAIYA REAL BIOGRAPHY



The little girl in this photograph is named Suraiya. She was only 13 years old and played her first “adult” role in Ishara released in theaters in 1943. The one that would trigger hysteria to the point of prohibiting her from going out in public a few years later had only made a few appearances. under the name of Baby Suraiya. She finally gives the reply to the great Prithviraj Kapoor, but the criticism of Filmindia is murdered  [ 1 ] : “The disappointment comes from the over-publicized Suraiya, with her puffy face and bad row of teeth. You want to laugh every time Prithviraj describes her as very pretty and runs after her. A blind man would realize that she is ugly just by touching her. Suraiya's performance is far from satisfactory and her music - God help us. "

Fortunately, she probably didn't read this nastiness because her mother, Mumtaz Begum, and even more so her grandmother, the terrible Badshah Begum, had been brooding her with an iron fist for a long time already. Suraiya was born in 1929 into a Muslim family in Gujranwala, Punjab (now Pakistan) where her father, Aziz owned a small furniture store. Her parents moved to Lahore, then the little girl followed her mother, her grandmother and her uncle Mr. Zahur to Bombay in 1933. They lived on Marine Drive and rubbed shoulders with future film stars.

Thus, Suraiya is the neighbor of Nargis who was her age, and of Madan Mohan barely older than her. The future musical director takes him to All India Radio where they meet the young Raj Kapoor to sing in children's shows. But that does not mean that she intended to become an artist. She follows mundane studies in an interfaith school for girls, and at the same time, studies the Koran and Persian at home.

In 1941, his uncle M. Zahur, who was then a supporting actor employed by the studio Prakash Pictures, showed him to visit Mohan Studios where Taj Mahal was filmed The director notices her and chooses her on the spot to play the young Mumtaz Mahal. The ten-day shoot takes place in New Delhi. The 12-year-old girl thus passes in front of the camera for the first time  [ 2 ] . Her acting career is launched.

The same year, Naushad was impressed by his voice, which he heard on All India Radio. He hired her to sing two songs embodied by Methab in Sharda which was released in 1942. They were hits. Suraiya can therefore consider a career as a singer. But at this time, actors are still expected to perform their own songs themselves. This is how Suraiya would become an actress-singer, occasionally dubbing other actresses.

JPEG - 44.4 kb
Suraiya and Nur Jehan in Anmol Ghadi (1946)

His film debut was not very easy. The producers believe in her a lot, but they hesitate to make her a leading heroine. Suraiya therefore begins in secondary roles. But by the end of 1945, she was opposed to the legendary KL Saigal in Tadbir . Unfortunately, what is still called "the pride of India" is already ravaged by alcohol. He is no more than a shadow of himself and the couple they form on the screen is terribly lacking in realism. For the first time however, Suraiya wins membership as an actress. KL Saigal appreciates her voice and recommends her to accompany her in two other films: Omar Khaiyyam and ParwanaThese will be the last two films of the great Bengali artist. The songs performed by Suraiya will instantly be huge hits.

In 1946, Mehboob Khan sets a trap for him which will prove to be a formidable gift. She is simply Noor Jehan's friend in Anmol Ghadi . Despite being only 19 years old, Noor Jehan was the biggest female star of the moment. She had even placed three films at the top of the box office in 1945. Only if Noor has a golden voice, she is not very pretty, does not know how to act and is unable to dance. She can actually only sing her songs where the director put it. The music of Naushad is the real star of the film, but Suraiya establishes herself as a complete actress with a disarming smile, prematurely aging the great Noor Jehan.

1947 was a pivotal year for India and its cinema. Like millions of people, artists must choose between India and the newly created Pakistan. Although most of her family is on the Pakistani side of the newly created border, Suraiya remains in Bombay with her mother and grandmother. On the other hand, Noor Jehan, like many others, chooses to join Pakistan. In January of that year, KL Saigal died of cirrhosis at just 42 years old. The two pillars of Indian sung cinema are no longer, leaving room for other actors including Suraiya.

The years 1948-1949 are glorious. Suraiya has three milestone successes: Pyar Ki Jeet and Badi Bahen with Rehman, then Dillagi with Shyam. Her grandmother, who fosters her career with unwavering determination, gets her to become the highest paid artist in Bombay. It is reported that she was paid 65,000 rupees  [ 3 ] for Duniya , the highest salary an actor received for a film during this period, male and female alike. She shoots a lot, up to six films at the same time. Not to spoil anything, his songs are raging. Woh Paas Rahe Ya Door Rahe, O Door Jaanewale , Murliwale Murli Baja orManmor Hua Matwala are so many pieces that pass to posterity.

And then comes Vidya which will be released at the end of 1948. This is the first of seven films in which she will be opposed to Dev Anand. During the filming of Kinare Kinare Chale Jayenge , the boat capsizes and Suraiya falls into the water. She can't swim. Dev saves her. They fall in love. But Suraiya's mother and especially Suraiya's grandmother do not hear it that way. There is no question of a Hindu dating a Muslim. Their friends, like the film technicians, do everything to keep the two women away and give the young couple a little freedom. Kamini Kaushal and Durga Khote even secretly pass the little words they exchange. Dev offers Suraiya an engagement ring and they plan to run away to get married.

The grandmother gets wind of the case and threatens to send Dev to prison because Suraiya is still underage at the time. Finally, tired of war, she announces that she will kill herself if Dev marries his granddaughter. Suraiya gives up. The two lovers separate heartbroken in 1951. Dev Anand will marry Kalpana Kartik in 1954 but Suraiya will remain celibate forever.

JPEG - 34 kb
Suraiya, Her Mother and Grandmother Surrounding Frank Capra (1952)

The 1950s marked the beginning of the decline. The tremendous success of a new generation of playback singers such as Lata Mangeshkar and Mohammed Rafi allows filmmakers to use artists whose acting is the primary talent. It is time for the singer-actors to gradually leave the screen. Suraiya films no longer draw crowds like they used to. However, she tries to adapt and can count on the support of the greatest musical directors of the time. This is how she tries herself for example at a "towel song  [ 4 ]  " with Mora Nazuk Badan offered by Naushad in Deewana in 1952.

She returned to the top with Mirza Galib of Sohrab Modi in 1954. Her incarnation of a courtesan, wife of the poet Ghalib marked the spirits to the point of earning her the congratulations of Nehru, the prime minister at the time, who attended a performance of the movie. She also dances convincingly and performs among others the immortal Yeh Na Thi Hamari Kismet to music by Ghulam Mohammed.

Suraiya turns less and less in the years that follow. She returns to the screen one last time in Rustom Sohrab where she gives the answer to Prithviraj with whom she had debuted 20 years earlier. His vibrant interpretation of Yeh Kaisi Ajab Dastaan ​​Ho Gayee Hai has been remembered to this day.

Video Player
00:00
00:00
 by Rustom Shorab (1963)

Suraiya retired from the scene in 1963; tired of fame, permanent representation and striving to stay slim. She is only 34 years old but will only make a few very rare public appearances. And if she still goes to the cinema from time to time, it is hidden under a burqa so that we do not recognize her.

Her mother died in 1987, leaving her alone in the apartment on Marine Drive where she had always lived. Suraiya died in 2004 and with her, the last actress-singer of a bygone era.


1 ]  Review published in July 1943 in the monthly magazine Filmindia. For some reason, Filmindia will be very hard on Suraiya throughout her career, regularly calling her the ugly dunkling (the ugly duckling).

2 ]  Some cite Usne Kya Socha, released in 1937, as her first role. However, it seems unlikely that she participated in this film, one of the last of Imperial Films Co. Others also cite Bilji or Farzand-e-Vatan released in 1939 as films in which she would have participated. But they are now lost or inaccessible which prohibits any verification. Several actresses were named Suraiya at the time, which could explain the confusion.

3 ]  That's roughly 10 years of a film technician's salary. Filmindia magazine cost 2 rupees that year.

4 ]  Many years later, Kajol would make a close number on Mere Khwabon Mein in Dilwale Dulhania Le Jayenge .

Tuesday, 23 February 2021

ETTAYAPURAM REAL HISTORY

 



ETTAYAPURAM REAL HISTORY 


எட்டையபுரம் வரலாறு-05

நான் ஓர் வரலாற்று ஆய்வாளரல்ல,ஆர்வலரே.



வரலாற்றுச் செய்திகளை எழுதும்பொழுது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்கவேண்டும். படித்த வரலாற்றுப் புத்தகங்கள், சில குழுமங்களின் விவாதங்கள், வரலாற்றுடன் இணைந்தவர்கள், வரலாற்று ஆய்வு செய்துள்ள ஓர் பல்கலைப் பேராசிரியர் கொடுத்த தகவல்கள், மன்னர் காலத்திலேயே வாழ்ந்து அங்கு நடப்பனவற்றைப் பார்த்தவள் என்ற முறையில் செய்திகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன். என் நெஞ்சில் ஒன்று முள்ளாகக் குத்திக்கொண்டு, அது அசைக்கப்படும் பொழுதெல்லாம் வலிக்கின்றது. மனச்சுமையை இறக்கவே எழுதிக் கொண்டிருக்கின்றேன். அவ்வளவுதான். குறிப்புகள் எங்கிருந்த எடுத்தன என்ற விபரங்களை இறுதியில் குறிப்பிடுவேன். இப்பொழுது கதைக்குச் செல்லலாம். சில நூற்றாண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.


சுருக்கமாக சில தகவல்கள் மட்டும் கூற விரும்புகின்றேன். தெரிந்த விஷயங்களாக இருப்பினும் அவைகளைச் சுட்டிக் காட்டினால்தான் சொல்லப்போகும் செய்திகள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.


தமிழ் மன்னர்கள் என்று கூறினால் உடனே நாம் மூவேந்தர்களை நினைப்போம். மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை கிடையாது என்பதும் தெரியும். பாரதத்தில் கூடக் குறிப்பிடும் அளவு பெருமை பெற்றிருந்த பாண்டிய அரசு பலஹீனமடைந்து பாமர மக்களுடன் கரைந்துவிட்டனர். அதன் பின் பாண்டிய நாடு பலர் கையில் பந்தாடப்பட்டது. நாயக்கர்கள் வந்தார்கள். ஆனால் மாலிக்காபூர் மதுரையை தரை மட்டமாக்கினான். மீனாட்சி அம்மன் கோயிலில் அடையாளத்திற்கு இரு தூண்கள் மட்டும் மிச்சம். அதன் பின் மீண்டும் வந்த நாயக்கர்கள் காலூன்றினர். அவர்கள் ஆட்சியில் பல சிறப்புகள் பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்டதை மறத்தல் இயலாது. உலக அதிசயங்களுடன் போட்டி போடும் அளவில் மீனாட்சி அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டுவிட்டது.


விஜயபுர அரசின் பிரிதிநிதிகள் மதுரையில் அமர்ந்து ஆட்சி செய்தனர். நிர்வாகம் சரியாக நடக்க அவர்களுக்குட்பட்ட இடங்களை 72 பாளையங்களாக்கப்பட்டு பாளையக்காரர்கள் அமர்த்தப்பட்டனர். அவர்களின் முக்கிய பணி வரி வசூல் செய்து ஒரு பகுதியை அரசுக்குச் செலுத்த வேண்டும். அடுத்து அவர்கள் பகுதியில் சிலருக்குப் போர்ப்பயிற்சி கொடுத்து, அரசர் வேண்டும் பொழுது அந்தப் படைகள் உதவிக்கு வரவேண்டும். மற்றபடி பாளையக்காரர்களின் உரிமைகளில் அரசு தலையிடாது. காலம் செல்லச் செல்ல அதிகாரத்துடன் வாழ்ந்த பாளையக்காரர்கள் தங்களை மன்னர்களாகவே நினைக்க ஆரம்பித்தனர். அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களையும் மக்களையும் நேசிக்கத் தொடங்கி அவரவர் தன்மைக்கேற்ப ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.


எட்டயபுரமும் அப்படி வந்த பாளையப்பட்டுகளில் ஒன்றே.அதன் வரலாற்றின் தொடக்கம்தான் நாம் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.


சில கிராமங்களை உள்ளடக்கிய சந்திரகிரியில் வருடம் 856AD-ல் பெரிய நாயக்கர் என்று ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய பரம்பரையினர் சில நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து வந்தனர். அந்த பரம்பரையில் உதித்தவர் நல்லம நாயக்கர்.


ஒரு சமயம் நல்லம நாயக்கர் தன் தம்பி வடலிங்கம நாயக்கருடன் விஜயபுர அரசர் சம்புராஜாவைக்காணச் சென்றார். வழியில் ஒரு தடை ஏற்பட்டது. சோமன் என்ற மல்லன் பாதையின் குறுக்கே ஒரு சங்கிலியைக் கட்டி வைத்து அந்தப் பாதையைக் கடக்க வேண்டுமென்றால் சங்கிலியைத் தூக்கிக் குனிந்து செல்ல வேண்டும். அல்லது அவனுடன் போர் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருந்தான். நல்லம நாயக்கரும் அவர் தம்பியும் மல்லனுடன் போர் புரிந்து அவனைக் கொன்று விடுகின்றனர்.


அப்பொழுது மல்லனின் எட்டு சகோதரகள் ஓடி வந்து “ இனி எங்களைப் பாதுகாப்பவர் யார்? “ என்று புலம்பினர். உடனே நல்லம நாயக்கர், “ கவலை வேண்டாம் இனி நீங்கள் என் பிள்ளைகள் உங்களுக்கு நானே அப்பன் “ என்று கூறினார். மன்னர் மகிழ்ந்து நல்லம நாயக்கருக்கு எட்டுப் பிள்ளைகளுக்கு அப்பனாகியதால் இனி எட்டப்பர் என்ற பட்டத்தைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். அத்துடன் மல்லனை வென்றதற்கு, ஒரு தலை உருவம், அடுத்து கால் பிணைக்கும்


சங்கிலி இவைகளைத் தங்கத்தில் செய்து கொடுத்து, எட்டப்பன் என்ற பட்டத்தை இனி வரும் சந்ததிகள் பட்டப் பெயராக சேர்த்துக் கொள்ளும் உத்திரவையும் பிறப்பித்தார்.


“எட்டப்பன்” என்பது பட்டப் பெயர். குடும்பப் பெயர். அவர் அன்பு மனத்திற்கும், உடனே அரவணைத்து அடைக்கலம் கொடுத்தமைக்கும் விஜய நகர அரசரால் பெருமைக்குக் கொடுத்தப் பட்டபெயர்.


பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்பினர். அவர்கள் வழித்தோன்றல் குமாரமுத்து எட்டப்ப நாயக்கர் காலத்தில் மதுரை நகர் வந்தனர். அங்கிருந்த விஜயநகர அரசு பிரதிநிதி அவர்களுக்கு இலம்புவனம் கொடுத்து அங்கே போய் ஆட்சி செய்யச் சொன்னார்.


இலம்புவனத்தில் இருந்து ஆண்டு கொண்டிருந்தவர்கள் எட்டயபுரம் ஊரை நிர்மாணித்துத் தங்கள் தலை நகரை மாற்றிக் கொண்டனர்.


எட்டப்பப் பரம்பரை ஊரானதால் எட்டயபுரம் என்ற பெயர் வந்ததாகச் செவிவழிச் செய்தி ஒன்றுண்டு. நான் சிறு பெண்ணாக இருக்கும் பொழுது அரண்மனையில் இதுபற்றி கேட்டேன். அப்பொழுது இன்னொன்றும் சொன்னார்கள். எட்டப்பன் என்ற பட்டம் அவரின் அன்பு மனத்திற்காகத் தரப்பட்டது. இந்த ஊரை ஆளும் பொழுது எல்லோரிடமும் அன்பாகவும் அக்கறையுடனும் இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே அதே பெயர் கொண்டு ஊர் பிறந்தது என்றார்கள்.


இதற்கு ஆதாரம் நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுடன் சரி.


ஒரு சமயம் மதுரை அரசர் கட்டளையின்படி எட்டயபுர மன்னர்களில் ஒருவர் திருவனந்தபுரம் சென்று ஒரு கோட்டையை அழித்துவிட்டுத் திரும்பும் பொழுது யாரோ ஒருவரால் வில்லெறிந்து கொல்லப் படுகின்றார். இதன் காரணமாக அவர்கள் குடும்பத்திற்கு கழுகுமலை, இரத்தமான்யமாக வழங்கப் பட்டது. அத்துடன் “அய்யன்” என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டது அதுமுதல் எட்டயபுரம் ஜமீன் ஆள்பவர்களின் பெயர்கள் கீழ்க்குறித்தவாறு இருக்கும்.


ராஜா ஜெகவீர ராமா (அப்பொழுது இருக்கும் ராஜாவின் பெயர்) எட்டப்ப நாயக்கர் அய்யன்.


உதாரணத்திற்கு முத்துக்குமார வெங்கடேஸ்வர என்பது அவரின் சொந்தப்பெயர். பட்டம் கட்டிய பின்னர் அவர் பெயர் ராஜா ஜெகவீர ராமா முத்துக்குமார வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் அய்யன் என்று அழைக்கப்பட வேண்டும். வரலாறு எழுதும் பொழுதும் முழுப்பெயர் வரும் ஆனால் இடையில் அவர்களது சொந்தப் பெயர் வருவதால் குழப்பம் இருக்காது.முன்பு விளக்கம் தராமல் எழுதியதால் இப்பொழுது பிரித்துக் காட்டுகின்றேன்.எட்டயபுரம் தோற்றுவித்தவர் ஜகவீர ராமா என்பதால் அவர் பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள்.


பேச்சு வழக்கில் சில நேரங்களில் பட்டங்களை முன்பின்னாகக் கூறுவதும் உண்டு.அதே போல் அவர்கள் ஜமீன்தார்களாக இருந்த போதும் அங்கே வாழ்ந்தவர்கள் மஹாராஜா என்றுதான் அழைத்தனர். மனித நேயத்திற்காகக் கிடைத்த பட்டப் பெயர் “எட்டப்பன் “ விபத்தால் சிதைக்கப் பட்டது. அதன் வரலாற்றைப் பார்ப்போம்.


சுதந்திரம் கிடைத்த பின்னர் மாநிலங்களின் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. வேங்கடம் முதல் குமரி வரை தமிழகத்தைச் சேர்ந்தவை என்று கூறினாலும் ஆந்திரா, தங்களுக்கு வேண்டும் என்றனர். அப்பொழுது ம. பொ. சி அய்யா தமிழரசுக் கட்சியின் தலைவர். எல்லைகளுக்காகப் போராடினார். திருப்பதி கிடைக்கவில்லை, ஆனால் திருத்தணி கிடைத்தது. அந்தப் பெருமை சிலம்புச் செல்வருக்கே உரித்தாகும். அவர் கட்டபொம்மன் வரலாற்றை எழுதினார். அதில் இருக்கும் சில வாசகங்களுக்கு எட்டயபுரம் அரண்மனை மறுப்பு கொடுத்தது. ஆனால் புத்தகம் வெளிவந்தபின் மறுப்பு வந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சலசலப்பு கொஞ்சம் அடங்கியது. ஆனால் சோதனை வேறு வடிவில் வந்தது.


”வீரபாண்டியக் கட்டபொம்மன்” திரைப்படம்.


நடித்தவர் நடிப்பு இமயம் சிவாஜி கணேசன் அவர்கள். நடிப்பின் பல்கலைகழகம் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். கலைஞரின் வசனமும் சிவாஜியின் குரலும் சங்கமம் ஆகவும் திரையுலகில் புது அத்தியாயம் தோன்றியது. முன்னதாக கே. ஆர். ராமசாமி அவர்கள் அருமையாக வசனம் பேசிவந்தார். ஆனால் சிவாஜி அவர்கள் வரவால் அவருடன் யாரும் போட்டியிட முடியவில்லை.


அவருக்காக சிறப்பாக வசனம் எழுதப் பட்டது. அவர் நடிப்பாலும் பேச்சாலும் கட்டபொம்மனுக்குப் பெருமை சேர்ந்தது. திரைக்கதை இலக்கணப்படி நாயகன் ஒருவன் இருந்தால் வில்லன் ஒருவன் இருக்க வேண்டும். வில்லன் என்றால் அவன் செயல்களைப் பார்த்தவர்கள் அவனை வெறுக்க வேண்டும். அதற்கேற்ப பேச்சும் முக பாவங்களும் இருக்க வேண்டும். வி.கே.ராமசாமி அவர்கள் வில்லனக வந்தார். சூழ்ச்சிகள் செய்கின்றார். வில்லன் சிரிப்பு. அற்புதமான நடிப்பு. அந்தப் பாத்திரத்தின் மேல் எல்லோருக்கும் வெறுப்பு வந்தது. அந்தப் பாத்திரத் திற்கு எட்டப்பன் என்று பெயர் கூறப்பட்டதால் துரோகிக்கும், காட்டிக்கொடுப்பவனுக்கும் எட்டப்பன் என்று புதுச்சொல் அகராதியில் சேர்ந்து விட்டது.மக்கள் மனத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டது .எட்டயபுரம் முழு வரலாறு தெரிந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது.அத்தனைஆராய்ச்சிகள் செய்து கதை எழுதிய கல்கியின் பொன்னியின் செல்வனிலேயே பல வரலாற்றுப் பிழைகள் உள்ளன. இலக்கியவாதிகள் வரலாற்றை ஆர்வத்துடன் எழுதும் பொழுது இத்தகைய பிழைகள் நேர்ந்துவிடுகின்றன.


அதோ போறான் பாரு அவன் ஒரு எட்டப்பன்!


அவன் எட்டப்பன் வேலை செய்கின்றான். !


உன் ஊரில் எத்தனை எட்டப்பர்கள் இருக்கின்றார்கள்?


இப்படி எத்தனை எத்தனை வசைச் சொற்கள்.


துரோகிக்கு மாற்றுச்சொல் எட்டப்பன் என்றாகி விட்டது.


எட்டயபுர மன்னர்கள் அத்தனை பேர்களும் எட்டப்பர்களே.


அவர்களின் சாதனைகள் என்ன? மாற்றி எழுதவோ, கிழித்துப்போடவோ உண்டான சாதனைகள் இல்லை.


உமறுப்புலவர் பொய்யில்லை. சீறாப்புராணமும் அவர் சரிதமும் நிலையாக நின்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது. பாலுசாமி தீட்சதரும் முத்துசாமி தீட்சதரும் சங்கீத வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள். நாடக உலகில் மும்மூர்த்திகளில் ஒருவர் காசி விஸ்வநாதப் பாண்டியன். பாரதியாரும் கற்பனைப் பாத்திரமல்ல. முத்தமிழ் சாதனையாளர்களின் புரவலர்கள் எட்டயபுர ஜமீன்தார்கள். அவர்களின் பட்டப் பெயர் எட்டப்பர். ஊர்ப்பெயரிலும் எட்டப்பர் இருக்கின்றாரே. யாரும் தன்னை எட்டயபுரவாசி என்று சொல்லிக் கொள்ள முடியாத அவலம் நேர்ந்து விட்டது.


இது வேண்டுமென்று யாரும் செய்யவில்லை. ஓர் விபத்து. இந்த புதுச்சொல் அடங்கிவிடும் என்று பொது மக்களும் அமைதி காத்தனர். ஆனால் சமீபகாலமாக மீண்டும் இந்தச் சொல் அதிகமாகப் புழங்கப்பட ஆரம்பித்ததால் பேசி விளக்கம் தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்வாணன் கட்டபொம்மனைக் கொள்ளைக்காரன் என்று எழுதினார். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. கட்டபொம்மன் சிறப்பிக்கபட வேண்டியவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை.


ஓரளவாவது சில விளக்கங்கள் கொடுக்க விரும்புகின்றேன்.நான் தரும் விளக்கங்களுக்குச் சான்றுகள் இருக்கின்றன.


வரலாற்றைப்பற்றி ஆய்வாளர்கள் கவனித்துக் கொள்ளட்டும். ஆனால் இந்த சொல் “எட்டப்பன் “ என்பதை துரோகிக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்துவது நிறுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே எட்டயபுர வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.இது எட்டயபுர மக்களின் சார்பாக வேண்டுகோளைப் பதிவு செய்கின்றேன் அடுத்த பதிவில் விளக்கங்கள் தருவேன்.


அலைகள் மீண்டும் வரும்.


POSTED BY சீதாம்மா AT 11:12 PM

TUESDAY, MARCH 27, 2012

LABELS: வரலாறு






The past unfurls as parallel stories in the sleepy town of Ettayapuram's dusty, narrow streets, row houses and forgotten palaces. This ancient Pandya province now just a shadow of its past, still retains the stories of its heroes and villains, told over many generations, within the walls of its ancestral homes. Ettayapuram appears out of nowhere about 40 km from Kazhugumalai, and is a picture postcard of any south Indian town — temples, memorials, thatched roofs and large bolted doors. Ilasanadu, as it was earlier called, was ruled by the Pandya kings until Ettappan was appointed the zamindar. About 150 years and one historic betrayal later, the town, then ruled by his descendants came to be known as Ettayapuram, after the man who allegedly tattled on Veerapandiya Kattabomman.


We find this town in the midst of its afternoon siesta and, with excitement, head to the birth place of Bharathiar. The century-old house is vaguely similar to his home in Triplicane, Chennai bunched with the rest of the row houses, its pyol reaching out to us from under the inviting shade of a sloping roof. The house has thick, wooden doors and is about 150 years old. As we crouch to enter the wonderfully cool, low-ceilinged house, (the upper portion is not accessible) we find a bust of the poet in a cordoned off area — the spot where he was born in 1882. To see the humble beginnings of this great man was worth the long-winded search for his house. The poet's handwritten poems, letters and speeches are encased in a wooden cupboard with a glass top, the slants and serifs of his Tamil font visibly clear on the yellowing paper.


The walls bear evidence of his glory, covered as they are with his poems, photos and awards. There are family portraits, photos of him with freedom fighters and framed black-and-white photographs of his descendents.


From here, the Ettappan palace is only a stone's throw but no one seems to know exactly where their king once lived. As the car trudges through the sandy roads, we turn off into a corner with a large, broken gate. Inside, past a wide, empty area and a palatial mansion that seems uninhabited, is a white, domed building in a corner besides what seems to be a broken down stable. One look at this enormous white-stone palace, with its tapering, circular domes, intricate floral carvings along the walls, shuttered windows, and stone lion turrets, and we know that this was the home of the Raja of Ettayapuram. Legend has it that Ettapan had given out information about the whereabouts of Veerapandiya Kattabomman (who was in hiding) to the British and this caused the braveheart's death by hanging. The area surrounding this grand, dilapidated palace is empty and we're left alone wondering about the stories that lie untold within its cold, stone walls.



Ettayapuram is a small sleepy town in the district of Tuticorin in South India. Ettayapuramm was ruled by the Pandya Kings until they lost the province to the Nayak Kingdom. Ettappan was appointed as the Zamindar by the Madurai Nayak dynasty under the supervision of Vijayanagar kingdom.

Ettappan was believed to be a traitor as he gave away information to the British that lead to the capture and hanging of Veerapandiaya Kattabomman (Veerapandiya Kattabomma was a courageous 18th-century chieftain who fought agaisnt the British rule). In fact, Ettappan came to be used as a metaphor for a whistle-blower or traitor.

The Ettappan palace is now in ruins and the entire compound is closed off . By the time I got there the sun was setting and there were hardly any people around . I have to say there was something very eerie and spooky about the place, with the palace run down like in all the horror movies and all I could see and hear were peacocks – lots and lots of them .. They were everywhere ; on the roof , on the compound walls, crossing my path… got a weird feeling like I was being watched.

Sunday, 8 November 2020

LEGEND OF REAL FATHER

 

LEGEND OF REAL FATHER



 ஒரு தந்தையாவது மிகவும் 

இலகுவானது..!ஆனால்,

ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது..!!


அப்பா...


ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.اஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்ன வோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்து ட்டால் பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.


நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி  அவசியமானது. இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.


ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள். தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.


ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை , அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்?பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?


எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?

அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?

எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?


முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...

நரம்பு தெரியும் கைகளில் ...

நரை விழுந்த மீசைகளில் ...

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.


தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?

ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?

மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம், துணிச்சல்,

விடாமுயற்சி,

நம்பிக்கை, உழைப்பு..

இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் , யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ ,  யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,

குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதே”

“ஒன்றுக்கும் யோசிக்காதே”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதே”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.

அப்பாக்கள் : 

➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்

➡பிள்ளைகளின் அச்சாணிகள்

➡பிள்ளைகளின் சூரியன்கள்

➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்

➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்

➡பிள்ளைகளின்  நம்பிக்கைகள்


அப்பா: 

தூய்மையான அன்பு,

போலியற்ற அக்கறை,

நேர்மையான வழிகாட்டல், 

நியாயமான சிந்தனை, 

நேசிக்கத்தக்க உபசரிப்பு, 

மாறுதலில்லா நம்பிக்கை, 

காயங்களற்ற வார்த்தை,  

கம்பீரமான அறிவுரை,

கலங்கமில்லா சிரிப்பு,

உண்மையான அழுகை,

என அத்தனையும் உளமகிழ்ந்து 

செய்து வளர்த்தவர். 

தோழனுக்கு தோழனாய் 

தோள் கொடுப்பவர் அப்பா.


அப்படியொரு அப்பாவாக இருப்பதில் ஒவ்வொரு தகுதியுள்ள  அப்பாக்களும் மகிழ்ச்சியுருவர். இதுவரை இல்லாவிடிலும் இனியாவது இப்படிப்பட்ட அப்பாவாக இருக்க இப்போதிருந்தே  தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பிப்பர்.


Saturday, 17 October 2020

WHO ARE YOU ? SMITHA PATIL......REAL STORY

 


யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’

சிறு கதை / உண்மை கதை

-வேணுவனம்

----------------------------------------------------------------------------------



கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது.

ஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுணிலிருந்து ஒரு அழுத்து அழுத்தினால் பதினைந்து நிமிடங்களில் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் பக்கம் போய் விடலாம். அதற்குப் பக்கத்தில்தான் சஞ்சீவி மாமாவின் வீடு. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியிலிருந்து பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, சமாதானபுரம் பஸ்ஸ்டாப் பக்கத்தில் ‘காதி வஸ்திராலயத்தில்’ சஞ்சீவி மாமாவின் தலை தெரிந்தால் உடனே இறங்கி விடுவேன். அருகில் போய் ‘மாமா’ என்றழைத்தாலும் உடனே ஏதும் பேசிவிட மாட்டார். ஒரு சின்ன சிரிப்பைக் கூட எதிர்பார்க்க முடியாது. சில நிமிடங்கள் கழித்து, அவராகப் பேசத் தொடங்குவார். முரட்டு கதரில் முழுக்கைச் சட்டையும், கதர் பேண்டுமே சஞ்சீவி மாமாவின் உடை. நடுமுதுகு வரைக்கும் புரளும் நீண்ட தலைமுடி. பின்னால் இருந்து பார்க்கிறவர்கள், திருநவேலி ஊருக்குள் பேண்ட் சட்டையில் ஒரு பெண் போகிறாள் என்று சந்தேகித்து முன்னால் வந்து பார்த்து, சஞ்சீவி மாமாவின் தொங்கு மீசையைப் பார்த்து முகம் கோணி, நாணி பின்வாங்குவதை பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன். மாமாவுடன் அவரது ராஜ்தூத் பைக்கின் பின்னால் உட்கார்ந்து ஒருமுறை கிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருக்கும் போது, மற்றொரு பைக்கில் ஒரு இளைஞன் எங்களை ரொம்ப நேரமாகப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தான். கூந்தல் பறக்க மாமா பைக் ஓட்டுவதைப் பின்னால் இருந்து பார்த்தவன், ஒரு முடிவோடு எங்களை முந்தாமல் வந்து கொண்டிருந்தான். இதை புரிந்து கொண்ட மாமா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் அவன் அசரவில்லை. கிருஷ்ணாபுரம் வந்தவுடன் மாமா, ஓரமாக பைக்கை நிறுத்தியபிறகு, வேறு வழியில்லாமல் கடந்து சென்றபடி திரும்பிப் பார்த்தவன், தன்னை மறந்து ‘ச்சை’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கி பறந்தான்.

அன்றைக்கு முழுவதும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களை சஞ்சீவி மாமா புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவைதான். ஆனால் அவற்றை சஞ்சீவி மாமாவின் புகைப்படங்களில் அவரது கேமரா கோணங்களில் பார்க்கும் போது, அச்சிற்பங்கள் அனைத்தும் ஓர் இனம்புரியாத அழகும், உயிர்ப்பும் அடைந்து விடும். சிற்பங்கள் மட்டுமில்லை. மனிதர்களும்தான். மாமாவின் புகைப்படங்களில் சாலையோரத்தில் நுங்கு விற்பவர்கள், ரைஸ்மில்லிலிருந்து மரப்பொடி சுமந்து திரும்புபவர்கள், திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டுவிட்டு சந்தனத் தலையோடு பேரூந்தின் ஜன்னலோரம் தூங்குபவர்கள், சின்ன டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டபடியே மார்க்கெட் பூக்கடையில் பூ சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள், வேண்டா வெறுப்பாக புத்தப்பை சுமந்து வாடிய முகத்துடன் தளர்ந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்து குதூகலத்துடன் துள்ளலாக நடந்து வரும் அதே குழந்தைகள் என சஞ்சீவி மாமாவின் கேமராவில் சிக்கிய முகங்கள் ஏராளம்.

கேமரா மட்டுமல்ல. கிதார் என்னும் வாத்தியத்தை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவரும் சஞ்சீவி மாமாதான். அதற்கு முன்னால் கிதார் என்றால் எனக்கு ’மூடுபனி’ திரைப்படத்தின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் கையிலும், இன்னும் வேறு சில ஹிந்தி திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். கிதாரில் எத்தனை வகைகள் உள்ளன, அவை என்னென்ன போன்றவற்றை சஞ்சீவி மாமாதான் விளக்கினார். மாமாவிடம் நான்கைந்து கிதார்கள் இருந்தன. ’இது அகௌஸ்டிக், இது எலக்ட்ரிக், இப்படி வாசிக்கறது லீட் கிதார், இப்படி வாசிச்சா பாஸ்’. இவை போக சின்ன கிதார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த மாண்டலினும் மாமாவிடம் இருந்தது.

‘நம்ம ஊர்ல எல்லா பயலுவளும் பேஸ் கிதார்னு சொல்லுதானுவொ. பாஸ் கிதார்னுதான் சொல்லணும்’.

மாமா திருத்துவார். தேவ் ஆனந்தின் ‘Guide’ படப்பாடலான ‘தேரே மேரே சப்னே’ பாடலையெல்லாம் கிதாரில் வாசிக்க முடியும் என்பது, சஞ்சீவி மாமா வாசிக்கும்போதுதான் தெரிந்தது. நிறைய பழைய ஹிந்தி பாடல்களை கிதாரில் வாசித்து காண்பிப்பார். தமிழ்ப் பாடல்களும் வாசிப்பார்தான். அப்படி மாமா அடிக்கடி தன்னை மறந்து ஒரு பாடலை ரகசியக் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று பாடியவாறே ரசித்து வாசிப்பார். அதற்கு முன்னர் அந்தப் பாடலை நான் கேட்டதே இல்லை. ‘இந்தப் பாட்ட மட்டும் இல்ல மாப்ளெ . . இந்தப் படத்தயும் ஒரு பய பாக்கல. படம் பேரு ‘ஈரவிளிக்காவியங்கள்’. ஒவ்வொரு முறை அந்தப் பாடலை வாசித்து முடிக்கும் போதும் ’ராஸ்கல்’ என்று முணுமுணுக்க மாமா தவறுவதில்லை.

நான்கைந்து வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டின் ஒரு மாடியறையில் மாமா தனியாகவே இருந்தார். மாமாவின் மனைவி எதிரே உள்ள பெரிய வீட்டில் தனது சகோதரர்களுடன் வசித்தார். சஞ்சீவி மாமாவுக்கும், அத்தைக்கும் பேச்சு வார்த்தை அறவே இல்லாமல் போனதற்கு அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரே ஒருமுறை இது பற்றிப் பேசும் போது மாமா தனக்குத் தானே சொல்வது போல, ‘எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தாச்சு. கம்ப்ளெயிண்ட் எண்ட்ட இல்லன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. அதுல ஒங்க அத்தைக்கு தாங்கல’ என்றார். அதற்கு ஏற்றாற் போலத்தான் அத்தையின் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தையின் தகப்பனார் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் போதுமான அளவுக்கு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல், வீட்டு வாடகைகள், நிலபுலன்கள் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் சகோதரர்களின் குடும்பங்களையும் கவனிக்கும் அளவுக்கு அத்தை செழிப்புடனே வாழ்ந்து வந்தார். மாமாவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ‘அவன்’ என்று ஒருமையிலேயே சொல்லுவார். மாமாவை விட அத்தை ஒரு வயது மூப்பு என்றும் ஒரு தகவல் உண்டு. ‘என்ன சொல்லுதான் ஒன் மாமன்காரன்?’ ஆனால் என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ’மருமகனே’ என்றழைப்பார். ‘நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவமில்லாம எறங்கி அவன் கூட ஓட்டலுக்கு கீட்டலுக்கு போயிராதெ. சாப்ட்டுட்டு போ’ என்பார். ‘என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமா புடிச்சு போச்சு?’ வியப்புடன் மாமாவிடம் ஒருமுறை கேட்டேன். ‘நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா? அதான்’ . சிரித்தபடி சொன்னார்.

சஞ்சீவி மாமாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வைணவ குடும்பத்தில் பிறந்தவரான மாமா, திருநெல்வேலி மாவட்டத்திலுல்ள ‘நவதிருப்பதி’ கோயில்கள் அனைத்துக்கும் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு வந்தாலும் அவரது கேமராவுக்குத்தான் வேலை. சிற்பங்கள், அக்ரஹாரத்து திண்ணைகள், ஆடுமாடுகள், மண் தெருக்கள், பழைய வீடுகள், டூரிங் தியேட்டர் போஸ்டர்கள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை மாமாவுடன் சென்றிருந்த போது மாமா கோயிலுக்குள் வரவேயில்லை. ‘நீ போயிட்டு வாடே’ என்று சொல்லிவிட்டு கேமராவுடன் வாசலிலேயே நின்று கொண்டார். இருட்டுக்குள் இருந்த பெருமாளைப் பார்த்து

‘ஓடும் புள்ளேறி சூடும் தன்துழாய்

நீடுநின்றவை ஆடும் அம்மானே

அம்மானாய் பின்னும் எம்மாண்பும் ஆனான்

வெம்மாவாய் கீண்ட செம்மா கண்ணனே’

என்று உருகி வணங்கி விட்டு வெளியே வந்தால், தயிர் விற்கும் ஒரு மூதாட்டியுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார், மாமா. ஒருசில தினங்களில் அவற்றை பிரிண்ட் போட்டு காண்பித்தபடி சொன்னார். ‘இந்த அம்மா மொகத்துல இருக்குற சுருக்கங்கள பாத்தியா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கத சொல்லுது, பாரு. அவ ஸ்கின் டோன கவனி’.

***************** ******************** *********************

வழக்கமாக மாமா தென்படும் ‘காதி வஸ்திராலயம், காளி மார்க் கேண்டீன், வ.உ.சி மைதானம்’ போன்ற எந்த இடத்திலும் மாமாவை சில நாட்கள் பார்க்க முடியாமல் போனது. எங்கெல்லாமோ தேடிப் பார்த்து விட்டு அத்தையிடமும் கேட்காமல் விட்டு விட்டேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு மாமாவின் வீட்டுக்குச் சென்ற போது, மாமாவின் வீட்டில் ராஜ்தூத் நின்று கொண்டிருந்தது. உடனே மாமாவைப் பார்க்க சென்றால் அத்தை ஏசுவார் என்பதால் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாடியறைக்குச் சென்றேன். குமார் கந்தர்வாவின் ஹிந்துஸ்தானி சங்கீதம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் போன்ற ஏதோ ஒரு வடநாட்டு ராகம். மாமா ஒரு புகைப்படத்தை எடுத்து என் முன்னால் இருந்த சிறிய மர மேஜையில் போட்டார். மாமாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்துகிற ஒரு பெண்ணின் புகைப்படம். வியப்புடன் எடுத்துப் பார்த்தேன். ‘யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’. இந்தக் கேள்விதான் என்னிடமிருந்து வரும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தவராக, ‘அவளேதான்’ என்றார், மாமா. ‘அவளேதான்’ என்று அவர் சொன்னது ஸ்மிதா பாட்டீலை இல்லை. சுமி அக்காவை. சுமி அக்காவை சஞ்சீவி மாமா, ஸ்மிதா பாட்டீலாகவேதான் நினைத்தார்.

அருஞ்சுணை காத்த அய்யனார் கோயிலில் வைத்து சுமி அக்காவை முதன் முறையாக எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போதும் ‘இது ஸ்மிதா’ என்றார். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்பிள்ளைகள் மாதிரி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி சுமி அக்கா, ‘எப்டி இருக்கெ மக்கா?’ என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச்சென்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ’நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்டா?’ என்றேன். சட்டென்று சிரித்தபடி ’அடப்பாவி’ என்றாள். சுமி அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடித்து போய்விட்டது. என்னைவிட நான்கு வயது அதிகமான அவளை ‘சுமி அக்கா’ என்று இயல்பாக என்னால் கூப்பிட முடிந்தது.

சுமி அக்காவுக்கு திருச்செந்தூர் பக்கம் என்றார் மாமா. தாய், தந்தை இல்லாத சுமி அக்கா முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தாள். ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு மாமா சென்றிருந்த போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுமி அக்காவின் வருகைக்குப் பிறகு சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாமாவும் ‘என்னடே ஆளையே காணோம்?’ என்று சம்பிரதாயமாகக் கேட்பதோடு சரி. ஒருநாள் மாமா தன் கிதார் ஒன்றின் கம்பிகளை சரி பார்த்துக் கொண்டிருக்க, நான் அவரது புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அதுவரைக்கும் மாமாவின் மாடியறைக்கு வந்தேயறியாத அத்தை, மூச்சு வாங்க மாடியேறி வந்து, அந்த அறையில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்த சுமி அக்காவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தார். வேறேதும் பேசாமல் கீழே இறங்கி சென்று விட்டார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மாமா எழுந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்க குனிந்தார். ‘நான் எடுக்கென் மாமா’. மாமாவைத் தடுத்து விட்டு, ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொறுக்கி எடுத்தேன். ’பூமிகா’ திரைப்படத்தின் ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்தும் விதமாக கழுத்திலும், காதுகளிலும் நகையணிந்து சிரித்தபடி சுமி அக்கா இருக்கும் கிழிந்த, கசங்கிய புகைப்படத்தை மாமாவின் மேஜை டிராயரில் வைத்தேன். மாமா என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாக கிடார் கம்பிகளில் மும்முரமாக ஏதோ செய்யும் பாவனையில் இருந்தார். அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக எனக்கும் சஞ்சீவி மாமாவுக்குமான உறவு குறைந்து போனது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் சஞ்சீவி மாமாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். பிறகு ஏதேதோ காரணங்களால் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு புதிய இடத்துக்கு வருவது போல தோன்றியது. அத்தை வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. வீட்டுக்கு உள்ளே அத்தை சோஃபாவில் சாய்ந்திருந்தார். முன்பை விட உடல் கனம் கூடியிருந்தது. உடன் ஏதேதோ புதிய மனிதர்கள். என்னைப் பார்த்ததும் உடனே அடையாளம் பிடிபடாமல், பிறகு சுதாரித்து, சிநேகப் பார்வை பார்த்து ‘வந்துட்டியா? ம்ம்ம், போ. அங்கனயேதான்’ என்று மாடியை காண்பித்தார்.

சுற்றிலும் கிதார்கள்,பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உட்பட பழைய புத்தகங்களின் வாசனையுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் சஞ்சீவி மாமா தூங்குவது போல கண்மூடி படுத்திருந்தார். நெற்றியில் சூர்ணம் இடப்பட்டிருந்தது. அருகில் அத்தையின் சகோதரர் அமர்ந்திருந்தார். ‘வெயில் தாள எடுத்துரலான்னு இருக்கொம்’ என்றார். நான் பார்க்காத காலங்களில் மாமாவின் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என ஆராயும் விதமாக மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘நீங்கள்லாம் மெட்ராஸ்ல இருக்கணும் மாமா’. பலமுறை சொல்லுவேன்.

‘மெட்ராஸ்ல இருந்து?’ எதிர்க்கேள்வி கேட்பார்.

‘பெரிய ஆளா ஆயிரலாம்லா’. சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லியிருக்கிறேன்.

‘பெரிய ஆளுன்னா என்னதுடே?’. என்பார்.

அதற்குள் கீழே இருந்து சத்தம் கேட்டது. ‘நவநீதா சீக்கிரம் கீள வா. அந்த முண்ட வந்திருக்கா’.

அத்தையின் இன்னொரு சகோதரரின் குரலது. என்னருகில் இருந்தவர், ‘இந்தா வாரேன்’ என்று பாய்ந்து செல்லவும், நிலைமையை உணர்ந்து அவருக்குப் பின்னால் மாடிப்படிகளில் இறங்கி ஓடினேன். காம்பவுண்டுக்கு வெளியே அழுதபடி சுமி அக்கா நின்று கொண்டிருந்தார். உடன் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். சிறு வயது புகைப்படத்தில் சஞ்சீவி மாமா இருப்பது போலவே இருந்தான். அத்தையின் சகோதரர்கள் இருவரும் சுமி அக்காவை, ‘எங்கெட்டி வந்தெ?’ என்று சத்தம் போட்டபடியே நெருங்கினார்கள். அவர்கள் சுமி அக்காவை எதுவும் செய்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் நான் அவர்களைத் தாண்டிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட சுமி அக்கா, ‘மக்கா’ என்று என் கைகளைப் பிடித்து, என் மீது சாய்ந்த படி கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த அத்தை, முறைத்தபடி நிற்கும் தன் சகோதரர்களிடம், ‘எல, இங்கெ வாங்க’ என்று அதட்டி அழைத்தார். சுமி அக்காவுடன் நிற்கும் என்னைப் பார்த்து, ‘மருமகனே, அவள மச்சுக்குக் கூட்டிட்டு போ’ என்றார்.

Image may contain: 1 person
Image may contain: one or more people
No photo description available.
No photo description available.