Showing posts with label July 26. Show all posts
Showing posts with label July 26. Show all posts

Monday, 13 September 2021

U.R.JEEVARATNAM ,ACTRESS -SINGER BORN 1927 SEPTEMBER 14 - 2000 JULY 26

 

U.R.JEEVARATNAM ,ACTRESS -SINGER BORN 

1927 SEPTEMBER 14 - 2000 JULY 26




யூ. ஆர். ஜீவரத்தினம் (U. R. Jeevarathinam, 1927 செப்டம்பர் 14[1] - 2000, சூலை 26) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு ஈரோடில் சுப்பிரமணியம், குஞ்சம்மாள் ஆகியோருக்குப் பிறந்த ஜீவரத்தினம், அவரது 9வது வயதிலேயே சென்னையில் கிருஷ்ணையா நாடகக் கம்பனியில் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜீவரத்தினம் கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் போன்றோரிடம் பல ஆண்டுகள் முறையாக இசைப் பயிற்சி பெற்றார்.

1937 ஆம் ஆண்டில் வெளிவந்த மாடன் தியேட்டர்சின் சதி அகல்யா என்ற படத்தில் தேவலோகப் பெண்ணாகத் தோன்றினார். தொடர்ந்து பத்ம ஜோதி (1937), தாயுமானவர் (1938), சந்தனத்தேவன் (1939), ராக யோகம், சதி மகானந்தா, உத்தம புத்திரன், சத்தியவாணி, பரசுராமர் (1940) போன்ற படங்களில் நடித்தார். பக்த கௌரி திரைப்படத்தில் இவர் பாடி நடித்த தெருவில் வாராண்டி வேலன்.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கண்ணகி (1942) படத்தில் கௌந்தியடிகள் வேடத்தில் நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில் இவர் பாடிய மாநில மீதில் ஜீவகள் வாழும் வாழ்விது நாடகமாகும், பூதலம் புகழும் ஜோதி ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இத்திரைப்படத்தில் மாதவியாக நடித்த எம். எஸ். சரோஜாவுக்கு ஜீவரத்தினம் பின்னணி பாடியிருந்தார்.

திருவாரூரில் கண்ணகி படத்தின் பொன்விழா கொண்டாடிய போது சுவாமி தினகர் ஜீவரத்தினத்துக்கு இசைக்குயில் என்ற பட்டம் அளித்தார்.

தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் முதல் திரைப்படமான பூம்பாவை (1944), ஜெகதல பிரதாபன், ராஜராஜேஸ்வரி (1944), என் மகன் (1945), வால்மீகி ஸ்ரீ முருகன் (1946) போன்ற படங்களில் நடித்தார்.

1945 இல் டி. எஸ். வெங்கட்சாமி என்பவரைத் திருமணம் முடித்தார். 70களில் நாடகங்களில் ஜீவரத்தினம் நடித்துப் பாடிக் கொண்டிருந்தார். 1971 ஆம் ஆண்டு கணவர் இறந்ததும் ஜீவரத்தினம் ஒருவரே குடும்பத்தை சுமக்க வேண்டியிருந்தது. டி. ஆர். மகாலிங்கம்திருச்சி லோகநாதன் போன்றோர்களுடன் ஜீவரத்தினம் பாடி பல நாடகங்களில் நடித்தார்.






மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சுந்தரத்திடம் ஒரு குழந்தையை அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். அந்தக் குழந்தைக்கு எதாவது வாய்ப்புகள் தரும்படி கேட்கின்றனர். பாடச் சொல்லிக் கேட்கிறார் சுந்தரம். அக்குழந்தை உச்சஸ்தாயில் பாடுவது மேற்கத்திய கிளாசிக்கல் வாய்ப்பாட்டு வடிவமான ஓபராவைக் (Opera)கேட்பதுபோல் இருக்கிறது.இவ்வளவு சிறப்புமிக்க அந்தப் பெண் குழந்தைக்கு அப்போது வயது 9தான். சுந்தரம் அக்குழந்தையின் பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறார். அப்பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே மாடர்ன் தியேட்டர்ஸில் 5ஆண்டுகளுக்குப் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு எடுக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களிலெல்லாம் அந்தக் குழந்தையின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. அவர்தான் யூ.ஆர்.ஜீவரத்தினம்.


யூ.ஆர்.ஜீவரத்தினம் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலூரில் பிறந்தார். இவருடைய தந்தை சுப்ரமண்யம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். தாயின் பெயர் குஞ்சம்மாள். சிறுவயதிலேயே ஜீவரத்தினம் நாடகம் மற்றும் வாய்ப்பாட்டில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறார். இவருடைய ஆற்றலை மேலும் வளர்த்தெடுக்கச் சரியான வாய்ப்பு மெட்றாஸில் கிடைக்கும் என்பதால் 9ஆம் வயதிலே ஜீவரத்தினம் வாய்ப்பு தேடி மெட்றாஸ் வந்தார். நடிகை அங்கமுத்துவின் சிபாரிசுவின் பேரில் கிருஷ்ணய்யா நாடகக் கம்பெனியில் 6மாதகாலம் இருந்தார். அதன் பிறகு அவருடைய திரைப்பட ஆர்வத்தின் காரணமாக சேலம் வந்து மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தைச் சந்தித்துள்ளார்.1937ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘சதி அகல்யா’மூலம்தான் ஜீவரத்தினத்தின் திரைப்பட வாழ்க்கை தொடங்குகிறது. இந்தப் படத்தில் அவர் தன் முதல் பாடலைப் பாடினார். 1941இல் எடுக்கப்பட்ட ‘பக்த கெளரி’ படத்தில் தலைப்பு வேடம் ஏற்று நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய ‘தெருவில் வாரான்டி, வேலன்...’ என்னும் பாடல் மெட்றாஸ் மாகாணத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்பட்டது. ஒருபக்கம் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்தாலும் அவர் சி.எஸ்.ஜெயராமன், குன்னக்குடி வெங்கட்ராம அய்யர் போன்றோர்களிடம் சாஸ்திரிய சங்கீதம் கற்பதைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.


மாடர்ன் தியேட்டர்ஸின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் ஜூபீட்டர் ஃபிம்ஸின் படமான கண்ணகியில் கெளதி அடிகளார் வேடம் ஏற்று நடித்தார். 1942இல் வெளிவந்த இப்படத்தில் ஜீவரத்தினத்தின் நடிப்பு பாராட்டப் பெற்றது. இதில் நாயகன் - நாயகி வேடம் ஏற்று நடித்த பி.யூ.சின்னப்பா - கண்ணாம்பா இருவர்களையும் ஒப்பிடும்போது ஜீவரத்தினத்திற்கு மிகச் சிறிய வயது. உருவத்திலும் அவர் மிகச் சிறியவராகவே தெரிந்தார். பி.யூ.சின்னப்பாவும் - கண்ணாம்பாவும் இவரைக் குழந்தை என்றே அழைத்துள்ளனர். ஆனால் இப்படத்தில் ஜீவரத்தினம் உச்சஸ்தாயில் பாடும்போது இருவரும், இவரையா நாம் குழந்தை என்றோம்? என வியந்தனர். 1944இல் வெளிவந்த பூம்பாவையில் ஜீவரத்தினத்தின் நடிப்பையும் பாட்டையும் கல்கி தன் விமர்சனத்தில் புகழ்ந்துள்ளார். இதைத் தொடந்து ஜெகதாளப்பிரதாபனில் பி.யூ.சின்னப்பாவுக்கு ஜோடியாகிறார்.


ஜீவரத்தினம் ஜூபீட்டர் ஃபிம்ஸின் மேலாளர் டி.எஸ்.வெங்கடசாமியை மணமுடித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் போன்றவர்களுக்கு முதல் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர்கள் வெங்கடசாமி-ஜீவரத்தினம் தம்பதியினரே. இவர்கள் மெர்குரி ஃபிலிம்ஸ் என்னும் பெயரில் பட நிறுவனத்தைத் தொடங்கிச் சில படங்களைத் தயாரித்தனர். பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க மேடை நாடகங்களில் நடித்தார். கச்சேரிகளில் பாடினார்.


நடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் ஜீவரத்தினம் தன் குரல்களால் வெகுகாலம் தமிழ் சினிமாவில் நினைவுகூரத்தக்கவராக இருந்தார். அவர் 2000ஆம் ஆண்டு ஜூலை 26இல் மரணமடைந்தார். ‘தமிழுக்கு உயிர் கொடுப்போம்! தயங்காதே தோழா!’ என்னும் பாடல் வரிகள் மூலம் தமிழகம் தாண்டி இலங்கையில் உள்ள தமிழர்களின் நினைவிலும் நீங்காத இடம் பிடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம்.








x

மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சுந்தரத்திடம் ஒரு குழந்தையை அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். அந்தக் குழந்தைக்கு எதாவது வாய்ப்புகள் தரும்படி கேட்கின்றனர். பாடச் சொல்லிக் கேட்கிறார் சுந்தரம். அக்குழந்தை உச்சஸ்தாயில் பாடுவது மேற்கத்திய கிளாசிக்கல் வாய்ப்பாட்டு வடிவமான ஓபராவைக் (Opera)கேட்பதுபோல் இருக்கிறது.இவ்வளவு சிறப்புமிக்க அந்தப் பெண் குழந்தைக்கு அப்போது வயது 9தான். சுந்தரம் அக்குழந்தையின் பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறார். அப்பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே மாடர்ன் தியேட்டர்ஸில் 5ஆண்டுகளுக்குப் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு எடுக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களிலெல்லாம் அந்தக் குழந்தையின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. அவர்தான் யூ.ஆர்.ஜீவரத்தினம்.


யூ.ஆர்.ஜீவரத்தினம் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலூரில் பிறந்தார். இவருடைய தந்தை சுப்ரமண்யம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். தாயின் பெயர் குஞ்சம்மாள். சிறுவயதிலேயே ஜீவரத்தினம் நாடகம் மற்றும் வாய்ப்பாட்டில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறார். இவருடைய ஆற்றலை மேலும் வளர்த்தெடுக்கச் சரியான வாய்ப்பு மெட்றாஸில் கிடைக்கும் என்பதால் 9ஆம் வயதிலே ஜீவரத்தினம் வாய்ப்பு தேடி மெட்றாஸ் வந்தார். நடிகை அங்கமுத்துவின் சிபாரிசுவின் பேரில் கிருஷ்ணய்யா நாடகக் கம்பெனியில் 6மாதகாலம் இருந்தார். அதன் பிறகு அவருடைய திரைப்பட ஆர்வத்தின் காரணமாக சேலம் வந்து மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தைச் சந்தித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

Monday, 10 August 2020

BHOOLANDEVI - TERRORIST TURNED POLITICIAN BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26



BHOOLANDEVI - 
TERRORIST TURNED POLITICIAN 
BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26




பொள்ளாச்சி கொடூரம், காசியின் காமவேட்டை, சிறுமி ஹாசினி துயரம், டெல்லி நிர்பயா கொலை உள்ளிட்ட எந்தச் செய்தியைக் கேட்டாலும் ஒரு பொதுஜன மனநிலை எப்படி இருக்கும்? குழந்தைகளின், பெண்களின் ரத்தம் குடித்த அந்த ஓநாய்களை நடுரோட்டில் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொந்தளிக்கும். அது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் அதுதான் சரியான நீதி என பொதுஜனம் புலம்பித் தவிக்கும். அதைத்தான் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்தார். தன் உடலைத் தின்ற 22 பேரை நடுரோட்டில் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டார். அவரை பொதுஜனங்கள் ‘துர்கை’யாக வழிபட்டனர். அவர்தான், தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட கொள்ளை ராணி - பெண் அரசியல்வாதி- வெற்றிகரமான இந்திய எம்.பி…. ‘பூலான் தேவி’.

யார் அந்தப் பூலான் தேவி?

இந்திய நாட்டில் பெண்ணாகப் பிறந்தாலே பல சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தால் சொல்லவா வேண்டும்... இன்னும் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் வசதியற்ற படகோட்டியின் மகளாக பிறந்தால் எப்படி இருக்கும்? மேற்சொன்ன சிந்தனைகளின் உயிர் உருவமே பூலான் தேவி.1963-இல் உத்திரப்பிரதேசத்தின் கங்கை நதிக்கு உணவாகாமல் தப்பிப் பிறந்த பெண் சிசுக்களில் அவரும் ஒருவர். பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால், தந்தையால் வெறுக்கப்பட்டவர். 11 வயதில் திருமணத்திற்குத் தயார் செய்யப்பட்ட பூலான், தன்னை விட 20 வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள அப்பாவோடு காலமும் கட்டளையிட்டது. அப்போது திருமணமான குழந்தைகள் வயது வரும் வரை தந்தை வீட்டில்தான் இருப்பர். ஆனால், அவர் கணவன் புட்டிலாலோ திருமணம் ஆனதும் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமி என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தல் தருகிறார். மிச்ச நேரங்களில் வீட்டு வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார் பூலான். இதனால் மனமுடைந்த பூலான் கணவனுக்குத் தெரியாமல் தன் தந்தை வீட்டுக்கு வந்துவிடுகிறார்.

சுரண்டிய சொந்தங்கள்:

கணவனுக்குத் தெரியாமல் வீட்டுக்கு வந்த பூலானை தந்தை ஏற்க மறுக்கிறார். இருப்பினும், ஊர் பெரியவர்களின் அறிவுறுத்தல் படி சிலகாலம் பெரியப்பா கருதயாளின் வீட்டில் தங்கவைக்கப் படுகிறார் பூலான். ஆனால், எல்லாவற்றையும் கேள்வி கேட்டுப் பழகிய பூலான் தனது தந்தையின் நிலத்தை அபகரித்துள்ள பெரியப்பாவிடம் நிலத்தைக் கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெரியப்பா கருதயாள், பூலானை வீட்டை விட்டுத் துரத்துகிறார். மீண்டும் வீட்டிற்குச் சென்றால் பெற்றோர் மனம் வருந்துவர் என்பதால் மறுபடியும் கணவன் புட்டிலால் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால், கணவன் இன்னொரு மனைவியோடு குடும்பம் நடத்துவதைப் பார்த்ததும் கையறு நிலையில், மீண்டும் தன் கூட்டிற்கு வந்தடைகிறது அந்தப் பெண் புறா.
வீட்டிற்கு வந்த பிறகும் தந்தை நிலத்தை அபகரித்த பெரியப்பாவை எதிர்த்து அவ்வப்போது பேசியும், போராடியும் வந்தார் பூலான். எப்படியாவது தங்கள் நிலத்தை மீட்க வேண்டும் என நினைத்த பூலானின் செயல்பாடுகள் பெரியப்பாவையும் அவர் மகனையும் தூங்க விடாமல் செய்தது. இந்நிலையில், மாமா என்ற உறவு முறையில் வீட்டிற்குள் நுழைந்தது வேறொரு பிரச்சனை. பூலானின் மாமா அடிக்கடி பூலானை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தினார். பூலானின் வயதான தந்தையால் இதெல்லாம் தட்டிக் கேட்க முடியவில்லை. உடன் பிறந்த நான்கு சகோதரிகளுக்கும் ஒரு சின்ன தம்பிக்கும் இந்தக் கொடுமைகளை எதிர்க்கும் வலு போதுமானதாக இல்லை.

மறுமணமும் திருட்டுப் பழியும் :

நிலப் பிரச்சனையைக் மீண்டும் மீண்டும் கிளரும் பூலான் மீது பெரியப்பா குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்தனர். அவரைப் பழி தீர்க்க சமயம் பார்த்தனர். இந்நிலையில் கைலாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட பூலான், பூலான் கைலாஷாக மாறினார். திருமணம் முடிந்ததும் இனி கைலாஷ்தான் எல்லாம் என நினைத்தார். சந்தோஷமான எதிர்கால வாழ்க்கையை அடிமனதில் அசைபோடத் தொடங்கினார் பூலான். ஆனால், கையைக் கசக்கிக்கொண்டு நம்பியாரைப் போல கொடூரத்திட்டம் தீட்டியது, விதி. பூலானின் நெருக்கடிக்கு முடிவுகட்ட நினைத்த பெரியப்பா கருதயாளின் மகன், தன் தங்கக் கடிகாரத்தைத் திருடி விட்டதாக போலீசில் பொய்ப் புகார் கொடுத்தார். ஏன் என்று கேட்க நாதியில்லாத பூலானை போலீஸ் கைது செய்கிறது. ஆம் நீங்கள் யோசித்தது சரிதான், போலீஸும் அவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகிறது. பிறகு நீதிபதியின் கருணையால் அவர் விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வரும் பூலானை, ஊர் மக்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். வேறுவழி தெரியாத கைலாஷ் தன் கொள்ளைக்கார நண்பர்களுடன் மனைவி பூலானை சில காலம் அனுப்ப முடிவு எடுக்கிறார். நம்பி வந்த கணவனின் கைவிரிப்பு பூலானுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. கொள்ளையர்களுடன் செல்லும் முடிவில் பூலானுக்குச் சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அவரின் உடன்பாடுகள் எல்லாம் ஒருபோதும் கேட்கப்பட்டதே இல்லை. 

கொள்ளைக் காதல் :


கைலாஷோடு இருந்த போதே பூலானின் மீது ஆசை கொண்டிருந்தான் கொள்ளை நண்பன் பாபு குஜ்ஜர். இந்நிலையில் கைலாஷ், பூலானை அவனோடு அனுப்பி வைக்க, பாபுவின் கொரூர மனம் விழித்துக்கொண்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவன்தான், பாபு குஜ்ஜர். பாபு குஜ்ஜருக்கு அடுத்த இடத்தில் இருந்தவன் விக்ரம் மல்லா. பூலானை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று வீசிவிட திட்டமிட்டு, காய் நகர்த்தினான் பாபு. ஆனால் இந்தத் திட்டம் அறிந்து பாபு குஜ்ஜரோடு சண்டையிட்டான் விக்ரம் மல்லா. சண்டையில் பாபு கொல்லப்பட்டான். விளைவு, விக்ரம் மல்லா கொள்ளைக் கும்பலின் தலைவன் ஆனான். சாதி பார்க்காமல் கொள்ளையடித்தனர். ஆனால், கொள்ளையர்களுக்குள் சாதி பார்த்தனர். கொல்லப்பட்ட பாபு குஜ்ஜர் உயர்சாதியாகக் கருதப்பட்ட தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர். கொலை செய்த விக்ரம் தாழ்த்தப்பட்ட மல்லா இனத்தைச் சேர்ந்தவர். அவ்வளவு தான், கூட்டத்தின் ஒரு பகுதி விக்ரமைக் கொலை செய்யும் சந்தர்ப்பத்திற்குச் சமயம் பார்த்தது. இந்நிலையில், விக்ரம் மல்லா- பூலான் தேவியைத் திருமணம் செய்து கொள்கிறான். அதுவரை தனக்கு யாரும் வழங்காத சுயமரியாதையை விக்ரம் அளித்தது பூலானுக்குப் பிடித்திருந்தது. குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல் என சகல வித்தைகளையும் கற்று தேர்ந்த கொள்ளை ராணியாக உருவெடுத்தார், பூலான்.  

புயலில் சிக்கிய பூச்செடி:

பூலான் இந்தக் கொள்ளை வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், அவருக்கு இப்போது இதுதான் ஒரே பாதுகாப்பு. கொள்ளைக் கூட்டத் தலைவன் விக்ரம் மல்லாவின் மனைவியாகக் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தார், பூலான் தேவி. அவரைக் கண்டு அனைவரும் மரியாதை தந்தனர். ஆண்கள் அவரை மதித்தனர். சில காலம் நீடித்தது இந்தச் சுயமரியாதை வாழ்க்கை. ஆனால், மீண்டும் கையைக் கசிக்கிக்கொண்டு புதுத் திட்டத்தோடு வந்து நின்றது விதி. 1980 ஆகஸ்ட் 13-இல் கொள்ளைக் கூட்டத் தலைவன் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். பூலானை, உயர்சாதி கூட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ‘பேமாய்’ என்னும் கிராமத்திற்குக் கடத்திச் சென்றனர். மீண்டும் பாலியல் துன்புறுத்தல்கள், அடி, உதை, அவமானம். கிட்டத்தட்ட 3 வாரங்கள் தொடர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார் பூலான். ‘பேமாய்’ கிராமத்தில் உள்ள வேறு சில உயர்சாதி கழுகுகளும் அவரின் உடலைச் சுற்றி வட்டமிட்டன. தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளையும் தாங்கிக்கொண்ட பூலான், தனக்கான நீதியைத் தானே எழுதத் துணிந்தார். இப்போது, அவர்களைப் பழி தீர்ப்பது மட்டும்தான் பூலானின் ஒற்றை நோக்கம். வாய்ப்பு வசப்பட்டது, தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் உதவ அங்கிருந்து தப்பினார் பூலான்.

பதவி விலகிய வி.பி.சிங்:



உடலும் மனமும் வலுவிழந்த நிலையில், வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகலாம் என நினைக்கும் சராசரிப் பெண் அல்ல பூலான் தேவி. தப்பித்த சில நாட்களிலேயே விக்ரம் மல்லாவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கிறார். 14 ஃபிப்ரவரி 1981,  தன் உடலைக் கொத்திய கழுகுகளையும், கடித்துக் குதறிய ஓநாய்களையும் பழி தீர்க்கும் வெறியோடு ‘பேமாய்’ கிராமத்தில் தடம் பதித்தார். அவ்வளவாக அந்த உருவங்கள் அவருக்கு நியாபகம் இல்லை, விசாரித்ததில் அகப்பட்ட 22 ஆண்களை வரிசையாக நிற்கவைத்தார். தோட்டாக்கள் சீறித் தெறித்தது. இந்தியாவே கொந்தளித்தது. காரணம் கொலை செய்யப்பட்ட 22 பேரும் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த ஆண்கள். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாய் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விளைவு, அன்றைய உத்திரப்பிரதேச முதல்வர் வி.பி.சிங் பதவி விலகினார்.



பூலானின் தலைக்கு 2 லட்சம் விலை வைத்துத் தேடியது அரசு. சில காலம் மத்திய பிரதேச மற்றும் உத்திரப்பிரதேச அரசுகளுக்குப் போக்கு காட்டிக் கொண்டிருந்த பூலானுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் ஆதரவாகத் துணை நின்றனர். தங்களைக் காக்கவந்த “துர்கா தேவி” என பூலானை வணங்கினர். வட மாநிலங்கள் முழுதும் அரசுக்குப் பெரும் தலைவலியாக இருக்கும் பூலானை சரணடையவைக்க அரசுத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர் போராட்டங்களால் சற்று உடல் நலிவுற்று இருந்தார் பூலான். இந்நிலையில், போலீஸ் தேடுதலால் அங்கும் இங்கும் ஓட முடியாத நிலையில் இருந்த பூலான் அரசின் சமரச போக்கைப் பயன்படுத்தி சரண் அடைந்து நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்ப நினைத்தார். “யானை படுத்தாலும் குதிரை மட்டம்” என்பதுபோல சரணடைவதற்குச் சில நிபந்தனைகளை விதித்தார் பூலான்.



வெளிவந்த பெண் சிங்கம்:



‘கை விலங்கு போடக் கூடாது’, ‘தனக்கோ தன் கூட்டத்தினருக்கோ தூக்குத் தண்டனை வழங்கக்கூடாது’, ‘தனி நீதிமன்ற விசாரணை அமைக்க வேண்டும்’, ‘8 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும்’, ‘எனக்கு உத்திரப்பிரதேச போலீசாரின் மீது நம்பிக்கை இல்லை, அதனால் நான் மத்தியப் பிரதேசத்தில் சரணடைய அனுமதியளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட அவரின் பல்வேறு நிபந்தனைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.



Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History


1983-இல் மத்தியப்பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் பூலான் தேவி சரணடைய மேடை அமைக்கப்பட்டது. மேடையில் தேசப்பிதா காந்தியின் புகைப்படமும், கடவுள் துர்க்கா தேவியின் புகைப்படமும் இருக்கிறது. பூலான் சரணடையும் நிகழ்ச்சியைக் காண அனைத்துப் பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். காரணம், பூலானின் பெயர் அறிமுகமான அளவுக்கு அவரின் உருவம் அறிமுகம் இல்லாமல் இருந்தது.



தலையைச் சுற்றி சிவப்புத் துணி, காக்கி உடை, இடுப்பில் பெல்ட், முதுகில் பெரிய துப்பாக்கி எனக் காட்சியளித்தார் பூலான். வட மாநிலங்களையே தன் செய்கையால் கொலை நடுங்கச் செய்த 26 வயதே ஆன பூலானின் உயரம் 4 அடி 11 அங்குலம் மட்டுமே. பூலானும் அவரின் படையும் துப்பாக்கியைக் கைவிட்டு முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் சரணடைந்தனர்.   



பாலம் போட்ட பா.ம.க.:



எத்தனை முறை விதியின் வசத்தால் வீழ்ந்தாலும், பூலான் ஒருபோதும் விதிக்கு அஞ்சியதில்லை. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் புதிய அத்தியாயத்தைத் தேடியே அவரின் சிறகுகள் விரியும். இந்த முறையும் அப்படித்தான் பூலானின் விடுதலை தாமதிக்கப்பட மத்திய, மாநில அரசுகளின் ஆட்சி மாற்றம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில், வேறொரு விஷயமாக அடிக்கடி சிறைக்கு வந்து போன உமத் சிங் என்பவர் பூலானைச் சந்திக்கிறார். பூலானின் வலி நிறைந்த வாழ்வில் பங்கேற்கிறார் உமத் சிங். அவரின் ஆறுதல் வார்த்தைகள் பூலானின் கடந்த கால காயங்களுக்கு களிம்பு தடவியது.



கொள்ளை ராணியாகச் சிறை சென்ற பூலானை அம்பேத்கரின் புத்தகங்கள் கொள்கைவாதியாக வெளியேற்றியது. ஆம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு 37 ஆவது வயதில் (1994 ஃபிப்ரவரி 19) விடுதலை செய்யப்பட்டார் பூலான் தேவி. அப்போது உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் முலாயம்சிங், பூலானின் மீது இருந்த 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்தார். இதனால் சுதந்திரப் பறவையாக வெளியில் வந்தார் பூலான் தேவி. கலவரங்கள் அற்ற சாதாரண வாழ்கையை அமைத்துத் தர விரும்புவதாகச் சொன்ன உமத் சிங்கோடு பூலானின் திருமணம் எளிய முறையில் நடந்துமுடிந்தது.



Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History


விடுதலைக்குப் பிறகு அவரின் முதல் அரசியல் நிகழ்ச்சிக்கு மேடை அமைத்தது தமிழகம். 1994  ஆம் ஆண்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற “மது ஒழிப்பு, ஆபாசப் படம் தடை மற்றும் மகளிர் இயக்கம்” குறித்த மாநாட்டில் பங்கேற்றார், பூலான் தேவி. துப்பாக்கிகளுக்கும் துரோகங்களுக்கும் நடுவே வாழ்ந்தவரை அரசியல் மேடைக்கு அழைத்து வர பாலமாய் இருந்தது பா.ம.க. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடிகள் அவர் வாழ்வில் அரங்கேறியது. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான அரசியலில் தீவிரமாகக் களம் இறங்குகிறார் பூலான். 

பூலான்தேவி., எம்.பி!

சமாஜ்வாதி கட்சி சார்பில் இரண்டு முறை உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் தொகுதி சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 1996 –இல் மக்களவை சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பூலான்தேவி. காடுகளிலும் மேடுகளிலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடித்திரிந்த பூலானின் கால்கள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தது. காலமெல்லாம் நசுக்கப்பட்ட பூலான் நாடாளுமன்றத்தில் பெருங்குரலெடுத்து பேசினார். தன் தொகுதி மக்ககளின் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். விளைவு அடுத்து நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலுவான ஆளுமையாக உருவெடுத்தார். 

வாழ்வின் அத்தனை அசவுகரியங்களையும் சகித்துக் கொண்டு வாழத் தயாரானவரை இந்த உலகம் இறுதி வரை வாழவிடாமலேயே செய்தது. அதேசமயம் தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநியாயங்களுக்கு எதிராகவும் சோர்ந்துவிடாமல் போராடிக் கொண்டிருந்த பெண்
சிங்கத்தை 5 தோட்டாக்கள் சரித்தது. 2001 ஜூலை 25 அன்று வீட்டு வாசலில் கார் ஏற வந்த பூலானை முகமூடியிட்ட மூன்று மர்ம நபர்கள் சுட்டு வீழ்த்தினர். சம்பவ இடத்திலேயே பூலான் பலியானார். விரைவில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரணையில், பேமாய் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 22 பேரின் மரணத்திற்காக பழி தீர்த்தாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர் கொலையாளிகள். பாட்சாவாக இருக்கும்வரை பூலானை நெருங்க பயந்த கூட்டம், மாணிக்கமானதும் மண்ணில் வீழ்த்தி பகைமுடித்தது.



இன்று பூலான் நினைவு நாள்!





.

Sunday, 26 July 2020

A.V.M. RAJAN ,TAMIL ACTOR PRODUCER,PRIEST BORN 1935 JULY 26





A.V.M. RAJAN ,TAMIL ACTOR PRODUCER,PRIEST 
 BORN 1935 JULY 26






ஏ. வி. எம். ராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.70 வதுகளின் இறுதியிலும் 80 களிலும் வந்த தமிழ் சினிமாவில் மிக மோசமான சினிமாக்களை கொடுத்ததில் சிவாஜி கணேசனின் பங்கும் அதிகம். தில்லான மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று பல படங்களில் மிக சிறப்பாக நடித்து ‘நடிகர் திலகம்’ என்று பெயர் பெற்ற அவருக்கு எதிராக, அவரே வைத்துக் கொண்ட சூனியங்களுக்கு பலபெயர்கள் உண்டு. அதில் குறிப்பாக ஒன்றுக்கு பெயர் ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு.’

சண்முகசுந்தரம், அவரது மேடைப் பெயரால் அறியப்பட்ட ஏ.வி.எம். ராஜன், (26 ஜூலை 1935) 1960 கள் மற்றும் 1970 களில் தீவிரமாக செயல்பட்ட தமிழ் சினிமாவில் ஒரு முன்னாள் இந்தியர். புதுக்கோட்டையில் பிறந்த சண்முகசுந்தரம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும் சினிமாவில் சேர மிகவும் ஆர்வமாக இருந்தார். [1] கிறிஸ்டியன் ஸ்வீடன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் அவரது உயர்நிலை. அவரது பெற்றோர் அவரை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்க விரும்பினர்.

அவர் தேர்வு எழுத மெட்ராஸுக்கு வந்தார், ஆனால் தேர்வுக்கு அமரவில்லை. 14 வயதில் இடது கை முறிந்தவலி தாங்க முடியாததால் பரீட்சை எழுத முடிய வில்லை .அதற்கு பதிலாக, ராஜ் பவன் கிண்டி சென்னையில் பணிபுரிந்தபோது, ​​சினிமாவில் தனது அதிர்ஷ்டத்தை ஒவ்வொரு திரைப்பட நிறுவனத்தின் கதவுகளையும் தட்டி சிறந்த வருமானத்தை ஈட்ட முயன்றார். நீண்ட காலமாக, அயிராம் காலத்து பயிரு திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்பைப் பெறுவதன் மூலம் அவரது அயராத முயற்சிகள் பலனளித்தன, அதில் அவர் 'ராஜா பி.ஏ.' என்று அறிமுகப்படுத்தப்பட்டார். விரைவில், ஏ.வி.எம் திரைப்படமான நானும் ஓரு பென்னிலும் நடிக்க அவர் கையெழுத்திட்டார். [2]
எஸ்.எஸ்.ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நானும் ஒரு பெண் என்ற ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ராஜன் நடித்தார். எனவே அவர் 'ஏ.வி.எம்.' ராஜன்ஆனார் . அதே படத்தில் தமிழ் நடிகை புஷ்பலதா .ஒரு ஜோடி ., பின்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பல படங்களில் ஒரு ஜோடியாக நடித்தனர், இதில் கற்பூரம் (1967), சிறந்த நடிகருக்கான தமிழக மாநில திரைப்பட விருதை வென்றார். ஏ.வி.எம்.ராஜனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்த மகள் மஹாலட்சுமி 80 - 90 களில் ஒரு நடிகை. ராஜன் பின்னர் 1988 முதல் ஒரு முழுநேர பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ
போதகரானார் [3] பின்னர் அதன் பின்னர் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவரது மனைவி புஷ்பலதா பிறப்பால் கத்தோலிக்கர். இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ராஜனின் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் முழுநேர ஊழியத்தில் பணியாற்றி வருகின்றனர்
அந்தப் படத்தின தயாரிப்பாளர், நடிகர் ஏ.வி.எம். ராஜன். தீவிர இந்து மத உணர்வாளராக இருந்த, முருகன் அடிமை ஏ.வி.எம். ராஜனையே, இயேசுவின் அடிமை ஏ.வி.எம். ராஜனாக மதம் மாற வைத்துவிட்டார் சிவாஜி கணேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், அவர் அடைந்த நஷ்டத்தால், ‘இனி சிவாஜி கணேசன் இருக்கிற இந்து மதத்தில் நான் இருக்க மாட்டேன்’ என்பதுபோல் மதம் மாறி கிறிஸ்டியனா போயிட்டாரு ஏ.வி.எம்.ராஜன்.

ஏ. வி. எம். ராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.

ஜெமினி கணேஷ் சாயலில் சிவாஜி கணேசன் போல நடித்தால் எப்படி இருக்கும். அது தான் AVM ராஜன். 1963ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர்-விஜயகுமாரி-ரங்காராவ்-எம்.ஆர்.ராதா நடித்த ‘நானும் ஒரு பெண்’ படத்தில் அறிமுகமானவர் ஏ.வி.எம் ராஜன். அவரிடம் ஒரு ஸ்டைல் இருந்தது. தமிழ் திரை கண்ட பட்டதாரி நடிகர்களில் ஒருவர்.இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்.
பி.யு.சின்னப்பா,ஜெமினிகணேஷ்,ஏ.வி.எம் ராஜன் மூவரும் புதுக்கோட்டைக்காரர்கள்!
திருமணமாகி குழந்தை உள்ள நிலையிலேயே கடுமையாகப் போராடி திரைக் கதாநாயகனாக வாய்ப்பைப் பெறமுடிந்தது. தனக்கு முன் சினிமாவில் நடித்து, நானும் ஒரு பெண் படத்தில் இவர்’ ஏமாறச்சொன்னது நானோ?’ என பாடி கிண்டல் செய்த புஷ்பலதாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
பார் மகளே பார் படத்தில் இவர் நடித்து, பல காட்சிகள் படத்தில் வெட்டப்பட்டன.ஒரே ஒரு காட்சியில் மட்டும் வருவார்.
ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.
பெயர் சொல்லும்படியாக1965ல் ‘ என்ன தான் முடிவு?’ ’வீர அபிமன்யு’ படங்கள்.1966ல் பாலச்சந்தர் படம்’மேஜர் சந்திரகாந்த’ படத்தில் ரஜினிகாந்த் என்ற பாத்திரம். இந்தப்பெயரைத்தான் பின்னால் சிவாஜிராவுக்கு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில்அறிமுகப்படுத்தியபோது பாலச்சந்தர் வைத்தார்.

,மேஜர் சந்திரகாந்தில்’நேற்று நீ சின்ன பப்பா! இன்று நீ அப்பப்பா!’ இந்தப் பாடல் ஏவிஎம் ராஜன் -ஜெயலலிதாவுக்கு.

1967ல் ’பந்தயம்’ படம் – ஜெமினியுடன் இணைந்து நடித்தார்- இந்த படம் ஏ.வி.எம். ராஜனை உயர்த்தியது.பூரிப்பான அந்த முகத்துடன் ‘இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது.’ பாடலுக்கு அவர் நடிப்பு ரொம்ப பிரமாதமாக இருக்கும்.
’கற்பூரம்’ படத்தில் புஷ்பலதாவும் இவரும் அற்புதமாக நடித்தார்கள். ஏ.வி.எம் ராஜன் -புஷ்பலதா நாடகக்குழுவின் நாடகம் தான் படமானது.
ஏ.வி.எம் ராஜன் -புஷ்பலதா ஜோடி நடித்த சில படங்கள் அவர்களின் சொந்தத்தயாரிப்புகள்.
ஜெமினி கணேஷ்,நாகேஷ் என்று ஜாம்பவான்கள் ‘சக்கரம்’(1968) படத்தில் இருந்தார்கள். ஆனால் ஏ.வி.எம்.ராஜன் அவர்களையெல்லாம் அந்தப் படத்தில் ’ப்பூ் என்று ஊதித்தள்ளி விட்டார் என்று சொன்னால் அது மிகையேயல்ல. அப்படி ஒரு பெர்ஃபாமன்ஸ்!
’துணைவன்’ ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேவர் படம்.அதில் கதாநாயகன் ராஜன் முருகபக்தன்.
சிவாஜியுடன் ’கலாட்டா கல்யாணம்’, தில்லானா மோகனாம்பாள்
எம்ஜிஆருடன் ’எங்கள் தங்கம்’
‘அன்னையும் பிதாவும்’
துலாபாரம்’.‘பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே’
பால்குடம் படத்தில் எஸ்.பி.பி யின் “ மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக”
மகிழம்பூ, தரிசனம், ஜெயலலிதாவுடன் அனாதை ஆனந்தன்,புட்டண்ணாவின் இருளும் ஒளியும்.
ரவிச்சந்திரனுடன் ‘ஏன்’,’ஜீவநாடி’,புகுந்த வீடு
ஜெய்சங்கருடன் ’மன்னிப்பு’ ’தாய்க்கு ஒரு பிள்ளை’. இந்தப்படங்களில் யார் பெயரை முதலில் போடுவது என்ற ஈகோ பிரச்னை. டைட்டிலில் இருவர் பெயரையும் போடவில்லை.
’திருமகள்’ என்று ஒரு படம். ஜெமினி, பத்மினி்,லட்சுமி யெல்லாம் நடித்த படம். அதில்”உள்ளங்கள் பல விதம், எண்ணங்கள் ஆயிரம்,உறவுகள் வளர்வதற்கு மனம் தானே காரணம்’‘ பாட்டில் சிவகுமார் காலை மாற்றி மாற்றி ஸ்டெப் வைப்பது பார்க்க சகிக்காது. ஆனால் ராஜன் சரணத்தில் ஸ்டைலாக நடந்தவாறே”அழித்தால் அழிவதில்லை ஆனந்த நினைவுகளே”என்ற வரியில் தியேட்டரில் அப்ளாஸ் தூள் பறக்கும்.
நடிகர் சிவகுமார் இந்த வாரக் குமுதத்தில் ராஜன் பற்றி ‘நடிப்புக்கடல்’ என்று சொன்னது வாஸ்தவம் தான். மதுரை மிட்லண்ட் தியேட்டரில் ‘சக்கரம்’ படத்தில் ராஜனின் நடிப்பைக் கண்டு பரவசமான ஒரு அப்பாவி தரை ரசிகர் “செத்தாண்டா சிவாஜி கணேசன். இவன் கிட்ட சிவாஜி பிச்சை வாங்கனும்டா!” என்று உணர்ச்சி வசப் பட்டு கூப்பாடு போட்டார். .
ஏ.எம்.ராஜா மீண்டும் பாட வந்த போது ஜிக்கியுடன் ஜெமினிக்கு ரங்கராட்டினத்தில் ‘முத்தாரமே!உன் ஊடல் என்னவோ.’ பாடினார்.
ராஜனுக்கு புகுந்த வீட்டில்’செந்தாமரையே!செந்தேனிதழே!பொன்னோவியமே!கண்ணே வருக!’
வீட்டு மாப்பிள்ளை யில் ‘ராசி நல்ல ராசி! உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி’ ’மலரே நீ என் மலரல்ல!நான் உன் வண்டல்ல’
தாய்க்கு ஒரு பிள்ளை யில் ‘சின்னக்கண்ணனே! நீ பிள்ளையென நான் தந்தையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது.’ என்று பல பாடல்கள் ஏ.எம்.ராஜா தான் பாடினார்.
.
சிவாஜியுடன் மீண்டும் ‘சிவகாமியின் செல்வன்’, ’ரோஜாவின் ராஜா’
’சக்கரம்’ படத்தின் வெற்றி இவருக்கு அதே மாதிரி ’போலீஸ் விரட்டுகிற’ சப்ஜெக்ட் உள்ள பல படங்களில் தள்ளிவிட்டதோ என்னமோ. முருகன் காட்டிய வழி,ஒரே சாட்சி என்று பல படங்களில் போலீஸுக்கு பயந்து ‘மகமாயி ம்கமாயி’ என்று அரற்றிக்கொண்டே ஓடி,ஓடி ஒளிந்தே மார்க்கெட்டிலிருந்து ஒழிந்தே போனார்.
.
சித்ரமஹால் கிருஷ்ண மூர்த்தி என்று ஒரு தயாரிப்பாளர். ’செல்லப்பெண்‘ என்று ஒரு சோகப்படம் எடுத்தார்.நம்ம‘Poor man’s SivajiGanesan’ ஏ.வி.எம் ராஜனே தான் கதாநாயகன்!படம் சோகமோ சோகம்.படம் பூரா ஹீரோவின் ஊளை அழுகையும் ’மகமாயி’ மகமாயி’ ஒப்பாரியும். தீபாவளி ரிலீஸ். மதுரையில் சித்ரமஹால் தீபாவளியன்று முதல் காட்சியில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு ரசிகரிடம் ‘படம் எப்படி?’ என்று மெதுவாகத்தான் கேட்டார். ஒரு கொட்டாவி விட்ட அந்த ரசிகர் . சீறியிருக்கிறார்.

சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்திக்கு இது ஒரு ஞானம் கிடைக்க வழியேற்பட்டது. அவர் உடனே,உடனே ஒரு முக்கிய தீர்மானம் எடுத்தார். ’இனிமேல் சிரிப்புப் படங்கள் மட்டுமே தான் இந்த சித்ரமஹால் கிருஷ்ண மூர்த்தி எடுப்பான்.’ அதன் பின் அவர் எடுத்த படங்கள் ’தேன் கிண்ணம்’, ’ஹலோ பார்ட்னர்’,’உங்கள் விருப்பம்’ ‘கல்யாணமாம் கல்யாணம்’ஆகியவை.

மார்க்கெட் போன பின் ஏ.வி.எம் ராஜனுக்கு தயாரிப்பாளர் ஆக ஆசை வந்தது.கே பாலாஜி ஸ்டைலில் நாம் சிவாஜி படங்களின் தயாரிப்பாளராக ஜெயிப்போமே என்று. அது தான் சனியன்.
.
சொந்தப்படம் எடுத்துக் கடனாளியாகி சொத்தெல்லாம் கரைந்து போய்விட்டது.
புஷ்பலதா அப்போது படங்களில் துணை நடிகையாகி தேங்காய் சீனிவாசனுக்கும், மேஜர் சுந்தர ராஜனுக்கும் ஜோடியாக நடிக்க வேண்டிய நிலையாகி விட்டது.சரியாக அந்த நேரத்தில் புஷ்பலதா கேட்டார். ;சாமி சாமின்னு அலைஞ்சீங்களே.இப்பவாவது இனிமேலாவது ஏசுவை நம்புறீங்களா?‘ஏவிஎம் ராஜன் – புஷ்பலதா வின் மகள் மகாலட்சுமி (ராணித்தேனி படத்தில் அறிமுகமானவர்) பல கன்னடப் படங்களில் நடித்தார். நடிகர் ராஜீவ் வுடன் ஒரு கட்டத்தில் இணைத்துப் பேசப்பட்டார். பின் ஒரு கன்னட இயக்குனரை காதலித்து திடீர் திருமணம் செய்துகொண்டார். இதுவும் ஏவிஎம் ராஜனை,புஷ்பலதாவை மிகவும் பாதித்திருக்கும்.

பெந்தகோஸ்த் கிறிஸ்தவர் ஆக மாறும் மனநிலை குடும்பம்,தொழில் சரிவை சந்தித்தவர்களுக்கு, பெரு நோயாளிகளுக்கு, மரணதண்டனை,ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சுலபமாக சாத்தியமாகிவிடுகிறது.‘ஏசுவின் அடிமை’ என்றே தன்னைப் பற்றி பிறகு ராஜன் சொல்லிக்கொண்டார். ‘ஏவிஎம் ராஜன் செத்துவிட்டான். நான் இப்போது ஏசுவின் அடிமை.’ராசுக்குட்டி ஷுட்டிங் போது மனோரமா சொன்னார்.”புஷ்பலதா கிறிஸ்தவப் பெண் என்பதால் ராஜனை மாற்றி விட்டாள்.”
நடிகர் கல்யாண்குமாருக்கு திரையுலகில் ஒரே ஒரு நண்பன் யார் தெரியுமா?ஏவிஎம் ராஜன் தான்! ஆனால் ராஜன் peak ல் இருந்த காலங்களில் ஸ்டுடியோவில் கல்யாண்குமாரைப் பார்த்தால்கூட முகத்தைத் திருப்பிக்கொள்வாராம்.பார்க்காத மாதிரி கடந்து போய்விடுவாராம்.ஏசுவின் அடிமை யாக மாறியபோது கல்யாண்குமாரை பார்த்தபோது தேம்பித் தேம்பி அழுதார். கல்யாண்குமாருக்குமே அவருடைய மத மாற்றத்தில் ஒப்புதல் இல்லை. நடிகர் விஜய் வீட்டில் ஏவிஎம் ராஜன் நடத்திய பிரார்த்தனைக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அழைத்துப் போய் இருக்கிறார். ராஜனைப் பார்த்து தன்னை ‘bless’ செய்யுமாறு சொத்தெல்லாம் இழந்துவிட்ட கல்யாண்குமாரும் வேண்டியபோது ராஜன் அழுது தேம்பி’ ரொம்ப நல்ல ஜீவன் என் நண்பன். ஏசுவே என் நண்பனை கடைத்தேற்றும்.ரொம்ப நல்ல ஜீவன்’ என்றாராம்.

ஒரு ஹீரோ நடிகனின் வாழ்க்கை luxury.erotic ஆனது.
ஏவிஎம் ராஜன் தூய வெள்ளையுடையில் வெய்யிலுக்கு ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு எளிமையுடன் நடந்துபோவதைப் பார்த்த கல்யாண்குமார் தான் தன் நண்பனிடம் மிகப்பெரிய transformation
ஏற்பட்டிருப்பதை அன்று உணர்ந்ததாக என்னிடம் கூறினார்.
அழகான ஒரு மனிதன் ஆடி ஓய்ந்தபின் ஆன்மீகத்தில் உண்மையாக மூழ்கி ’சாது’வாகிறதென்பது என்ன ஒரு அற்புத நிகழ்வு!
.

GEORGE BERNAD SHAW ,PLAY WRITER BORN 1856 JULY 26 - 1950 NOVEMBER 2



GEORGE BERNAD SHAW ,PLAY WRITER
 BORN 1856 JULY 26 - 1950 NOVEMBER 2






ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.




உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை உணர்ந்து அவர் மிகுந்த கோபம் கொண்டார். மேலும் அவரது பெரும்பாலான படைப்புகள் அந்த சுரண்டலைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்தன. ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா பல சிற்றேடுகளை எழுதி சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். விரைவில் அதற்குக் காரணமாக விளங்கும் ஆணுக்கு சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் ஆகியவை தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார்.

பெர்னாட் ஷா, சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட் (Charlotte Payne-Townshend) என்ற சமூக சீர்திருத்தவாதியை திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்தார். அவர்கள் ஷா'ஸ் கார்னர் (Shaw's Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட். லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர். கீழே விழுந்ததனால் பெற்ற காயங்கள் மோசமானதால் ஏற்பட்ட நாள்பட்ட சிக்கல்களால் பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் இறந்தார்.


இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே. அவர் இவ்வெகுமதிகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார்.[1] பொது வெகுமதிகளுக்கான ஆசை தனக்கு இல்லை என்பதால் பெர்னாட் ஷா உடனடியாக நோபல் பரிசை நிராகரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரது மனைவியின் வேண்டுகோள் படி ஏற்றுக்கொண்டார்: அவரது மனைவி அதை அயர்லாந்துக்கு கௌரவம் எனக் கருதினார். பரிசுத் தொகையை அவர் நிராகரித்து அதை ஸ்வீடிஷ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான நிதியாக அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கோரினார்.[2

வாழ்க்கை[தொகு]
ஆரம்பகால ஆண்டுகளும் குடும்பமும்[தொகு]

டப்ளினில் உள்ள சிஞ்ச் ஸ்ட்ரீட்டில், 1856 ஆம் ஆண்டு ஜார்ஜ் கார் ஷா (1814–85) என்பவருக்கு ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்தார். அவர் நட்டத்தில் வியாபாரத்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு தானிய வியாபாரியாவார். சில நேரங்களில் குடிமைப் பணியாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவரது தாய் லூசிண்டா எலிசபெத் ஷா. நீ கர்லி (1830–1913) என்னும் தொழில்முறைப் பாடகியாவார். அவருக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் லூசிண்டா ஃப்ரேன்சிஸ் (1853–1920) என்னும் நகைச்சுவை இசைப் பாடகர் மற்றும் லைட் ஓப்பெரா (light opera) கலைஞர் மற்றும் எலினார் ஏக்னஸ் (1855–76) ஆகியோராவர்.

கல்வி[தொகு]


பெர்னாட் ஷா சிறிது காலம் வெஸ்லியன் கோன்னெக்ஸியல் (Wesleyan Connexional) ஸ்கூலில் படித்தார். அது மெத்தடிஸ்ட் நியூ கன்னெக்ஸியன் (Methodist New Connexion) நடத்தி வந்த இலக்கணப் பள்ளியாகும். அதற்குப் பின்னர் டால்கேவுக்கு அருகிலிருந்த ஒரு தனியார் பள்ளிக்குச் சென்றார். பின்னர் டப்ளின்'ஸ் செண்ட்ரல் ஸ்கூலுக்குச் சென்றார். டப்ளின் இங்கிலிஷ் சயிண்ட்டிஃபிக் அண்ட் கமெர்ஷியல் டே ஸ்கூலில் (Dublin English Scientific and Commercial Day School) தனது இறுதிக் கல்வியை முடித்தார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மேல் ஒரு பகை உணர்வு இருந்தது. அவர் கூறுகிறார்:

"இப்போது நமக்குள்ள பள்ளிகளும் பள்ளி ஆசிரியர்களும், கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாக பிரபலமானவை அல்ல, மாறாக அவை சிறைகளாகவும் அவர்கள் சிறை அதிகாரிகளாகவுமே உள்ளனர். அங்கு தங்கள் பெற்றோர்களைத் தொல்லை செய்யாமலும் கவனிக்காமலும் இருப்பதற்காக குழந்தைகள் அடைத்து வைக்கப்படுகின்றனர்"[3] கேஷெல் பைரோன்'ஸ் (Cashel Byron's) ப்ரொஃபெஷன் என்னும் படைப்பில் இளம் பைரோனின் கல்வி பற்றிய கசப்பான அறிமுகம் பெர்னாட் ஷாவின் சொந்த பள்ளி நாள் அனுபவமே ஆகும். ட்ரீட்டிஸ் ஆன் பேரண்ட்ஸ் அண்ட் சில்ட்ரன் (Treatise on Parents and Children) என்ற அவரது எழுத்துப் படைப்பில் முறையான கல்வி மேல் அவருக்கு வெறுப்பு இருந்ததற்கான காரணங்களை வலியுடன் விவரித்தார்.[4]

சுருக்கமாக தரநிலையாக்கப்பட்டுள்ள கல்வித் திட்டங்கள் வீண் எனக் கருதினார். அது ஆத்மாவை இறக்கடிக்கிறது என்றும் புத்திசாலித்தனத்தை மறக்கச் செய்கிறது என்றும் கருதினார். குறிப்பாக உடல் ரீதியான தண்டனைகளை அவர் வெறுத்தார் அக்காலத்தில் அது அதிகமாக இருந்தது.

அவரது தாயார் வீட்டை விட்டு வெளியேறி தனது குரலிசை ஆசிரியரான ஜார்ஜ் வேண்டீலியருடன் லண்டன் சென்ற போது பெர்னாட் ஷாவிற்கு கிட்டத்தட்ட பதினாறு வயதிருந்திருக்கும். அவரது சகோதரிகளும் தாயாருடன் சென்றனர்.[5] ஆனால் பெர்னாட் ஷா தனது தந்தையாருடன் டப்ளினில் இருந்துவிட்டார்.


முதலில் ஈடுபாடில்லாத மாணவராக இருந்த அவர் பின்னர் ஒரு எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். திருப்தியுடன் அந்தப் பணியைச் செய்யாவிட்டாலும் சிறப்பாக பல ஆண்டுகள் தொடர்ந்து செய்தார்.[6] 1876 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா தனது தாயாரின் லண்டன் வீட்டிற்கு சென்று சேர்ந்தார். அவரது தாயார் வேண்டீலியர் மற்றும் அவரது சகோதரி லூசி ஆகியோர் ஒரு வாரத்திற்கு ஒரு பவுண்டு பணம் என்று அவருக்கு கொடுத்தனர். அவர் அதைக் கொண்டு அங்கிருந்த பொது நூலகத்திற்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் வாசகர் அறைக்கும் அடிக்கடி சென்றார். அங்குதான் அவர் தீவிரமாகப் படிக்கவும் நாவல்களை எழுதவும் தொடங்கினார்.

வேண்டீலியரின் இசைப் பத்தியை எழுதியதன் மூலம் தனக்கான ஊதியப் படியைப் பெற்றார்.[7][8] அது லண்டன் ஹார்னெட் டில் இடம்பெற்றது. அவரது நாவல்கள் நிராகரிக்கப்பட்டன, இருப்பினும் 1885 ஆம் ஆண்டு வரை இலக்கியத்திலிருந்து பெற்ற வருவாய் புறக்கணிக்கத்தக்கதாகவே இருந்தது. அதன் பின்னரே அவர் கலை விமர்சகராகி சுய ஆதரவுள்ள மனிதராக மாறினார்.

சொந்த வாழ்க்கையும் அரசியல் செயல்பாடுகளும்[தொகு]

இப்போதுள்ளபடி ஷா'ஸ் கார்னரின் முன்பகுதி
அவரது வாசிப்புகளால் பாதிக்கப்பட்ட அவர் அர்ப்பணிப்புள்ள சமதர்மவாதியாகவும் ஃபேபியன் சொசைட்டியின் (Fabian Society)[9] நிறுவன உறுப்பினராகவும் ஆனார். அது 1884 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நடுநிலை வகுப்பு அமைப்பாகும். அமைதியான வழிகளில் சிறிது சிறிதாக சமதர்மத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்ட அமைப்பாகும்.[6] அவரது அரசியல் செயல்பாடுகளின் காலத்தின் போது அவர் சார்லோட் பாய்னெ-டௌன்செண்டை (Charlotte Payne-Townshend) சந்தித்தார் அவர் அயர்லாந்து வாரிசாவார்.

அவர்கள் இருவரும் 1898 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். 1906 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா குடும்பத்தினர் ஒரு வீட்டிற்கு குடிபுகுந்தனர். தற்போது அது ஷா'ஸ் கார்னர் என அழைக்கப்படுகிறது. அது ஹெர்ட்ஃபோர்ட்ஷைரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஆயோட் செயிண்ட் லாரன்ஸில் உள்ளது; அவர்களது எஞ்சிய காலத்தை அவர்கள் அந்த வீட்டிலேயே கழித்தனர், இருப்பினும் அவர்களுக்கு லண்டனில் 29 ஃபிட்சோரி ஸ்கொயரில் (Fitzroy Square) ஒரு வீடும் இருந்தது.

பெர்னாட் ஷாவின் நாடகங்கள் 1890களில் முதன்முதலில் நடத்தப்பட்டன. பத்தாண்டு முடிவில் அவர் ஒரு பெரிய நாடக ஆசிரியராகியிருந்தார். அவர் அறுபத்து மூன்று நாடகங்களை எழுதினார். ஒரு நாவலாசிரியர், விமர்சகர், கட்டுரையாசிரியர் மற்றும் தனியார் கடிதவியலாளராகவும் அவர் ஆற்றிய பங்கு சிறப்பானதாகும். அவர் 2,50,000 கடிதங்களை எழுதியுள்ளார் என அறியப்படுகிறது.[10]

சிட்னி வெப் மற்றும் பீட்ரைஸ் வெப் மற்றும் க்ரஹாம் வால்லஸ் ஆகிய ஃபேபியன் சொசைட்டி உறுப்பின ர்களுடன் இணைந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தை 1895 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா நிறுவினார். ஹென்றி ஹண்ட் அவர்கள் ஃபேபியன் சொசைட்டிக்கு வழங்கிய அன்பளிப்பான £20,000 தொகையும் மற்றும் தனியார் தன்னார்வளர் அமைப்பின் நிதியும் இந்த நிறுவனத்திற்கு உதவியாக இருந்தது. பெர்னாட் ஷாவின் நினைவாக LSE இல் உள்ள ஒரு நூலகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது; அதில் அவரது வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்புகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது.[11]

இறுதி வருடங்கள்[தொகு]

அவரது இறுதி ஆண்டுகளில் பெர்னாட் ஷா, ஷா’ஸ் கார்னரின் மாநாடுகளுக்குச் செல்வதன் மூலம் மகிழ்ந்தார். அவர் தனது 94 ஆம் வயதில் மரம் வெட்டும் போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களினால் உருவான சிறுநீரக செயலிழப்பால் ஏற்பட்ட வீழ்ப்படிவுகளால் இறந்தார்.[12] அவரது சாம்பலும் அவரது மனைவியின் சாம்பலும் அவர்களது தோட்டத்தில் இருந்த செயிண்ட் ஜோன் சிலைக்கு அருகிலும் அதன் நடை பாதைகளைச் சுற்றிலும் தூவப்பட்டது.[13]


* புத்தகம் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பாடகியான தாய், சிறுவன் பெர்னாட் ஷாவையும் அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்தார். வாரா வாரம் அம்மா தரும் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார். சிறு வயதில் தாயிடம் கற்ற இசை, பின்னாளில் இவரை இசை விமர்சகராக மிளிரவைத்தது.

* இங்கிலாந்து சென்று எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்தார். அப்போது நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை திரும்பி வந்தாலும், தொடர்ந்து எழுதினார். பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகத் தொடங்கின.

* ‘விடோயர்ஸ் ஹவுசஸ்’ என்ற முதல் நாடகத்தை 1892-ல் எழுதினார். 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். பல நாடுகளில் இவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

* அந்த காலக்கட்டத்தில் லண்டன் நாடக மேடைகள் உற்சாகமான, சென்ட்டிமென்ட் நிறைந்த, பொழுதுபோக்கு அரங்குகளாக இருந்தன. அதை நீதி, அரசியல், பொருளாதார விவகாரங்களை எடுத்துக்கூறும் மன்றங்களாக மாற்றினார்.

* இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன. அவரது எழுத்து போலவே நிஜ வாழ்வின் பேச்சிலும் நகைச்சுவை, நையாண்டி அதிகம் கலந்திருக்கும். 5 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.

* பிரிட்டன் சோஷலிஸ்ட் அமைப்பான ஃபேபியன் சொசைட்டி உறுப்பினர்களுடன் இணைந்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸ் நிறுவனத்தை 1895-ல் தொடங்கினார்.

* நாவல் ஆசிரியர், கதாசிரியர், விமர்சகர், கடிதவியலாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இவர் சுமார் 2.50 லட்சம் கடிதங்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. நாடகங்களுக்கு நீண்ட முன்னுரை எழுதுவார். இவை சில நேரம், நாடகத்தைவிட பெரிதாக இருக்கும். இவரது இசை விமர்சனங்கள் ஷா’ஸ் மியூசிக் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

* இலக்கியத்துக்காக நோபல் பரிசு (1925), பிக்மலியன் என்ற படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது (1938) ஆகிய இரண்டு பிரதான விருதுகளையும் பெற்ற ஒரே படைப்பாளி இவர். புகை, மது தொடாதவர். சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றியவர்.

* தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பாக மாநாடுகளுக்குச் செல்வதும் உரையாற்றுவதுமாக சுழன்றார். படிப்பதையும் எழுதுவதையும் இறுதிவரை நிறுத்தவே இல்லை. ஆங்கில இலக்கிய உலகில் மகத்தான பங்களிப்பை வழங்கிய பெர்னாட் ஷா 94 வயதில் (1950) மறைந்தார்.


பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்43

பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். நாடகங்களுக்கு மதிப்புரை எழுதுவதற்காக ஷாவை அவர் நியமித்துக்கொண்டார்; அப்போதுதான் G.B.S. (ஜார்ஜ் பெர்னார்ட்ஷா) என்ற மூன்று எழுத்துக்கள் ஷாவைக் குறித்து உலகம் முழுவதும் அறிய முற்பட்டன. ஷாவின் புகழ் பரவுவதற்கு முதன் முதலில் ஆரீஸ் காரணமாக இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஷா, ஆரீஸுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த உலகத்தில், எந்தப்பகுதியிலாவது நீங்கள் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் வரையில் அந்தப் பத்திரிகையில் என்னுடைய கட்டுரைகள் வெளிவரும் என்று நீங்கள் தயங்காமல் எதிர்பார்க்கலாம்” என்று தம்முடைய நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்.

ஷாவை உலகுக்கு அறிமுகப்படுத்திய அந்த ஆரிஸ் பிற்காலத்தில் வாழ வழியின்றி துன்புற்றார். பத்திரிகைத் தொழிலில் அவருக்கு இடம் இல்லாமல் வருந்தினார்.

ஆஸ்கார் ஒயில்டைப் பற்றியும், ஷாவைப் பற்றியும் வரலாறுகள் எழுதிப் பணம் சேர்க்கலாம் என்ற முயற்சியில் ஆரிஸ் ஈடுபட்டு வந்தார். முயற்சி முடிவடையும் முன் வறுமையில் வாடி, வருந்தி, இறந்து போனார்.

U.R.JEEVARATNAM ACTRESS / SINGER BORN 1927 SEPTEMBER 14 - 2000 JULY 26


U.R.JEEVARATNAM ACTRESS / SINGER BORN 
1927 SEPTEMBER 14 - 2000 JULY 26




யூ. ஆர். ஜீவரத்தினம் (U. R. Jeevarathinam, 1927 செப்டம்பர் 14[1] - 2000, சூலை 26) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாடு ஈரோடில் சுப்பிரமணியம், குஞ்சம்மாள் ஆகியோருக்குப் பிறந்த ஜீவரத்தினம், அவரது 9வது வயதிலேயே சென்னையில் கிருஷ்ணையா நாடகக் கம்பனியில் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜீவரத்தினம் கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் போன்றோரிடம் பல ஆண்டுகள் முறையாக இசைப் பயிற்சி பெற்றார்.

1937 ஆம் ஆண்டில் வெளிவந்த மாடன் தியேட்டர்சின் சதி அகல்யா என்ற படத்தில் தேவலோகப் பெண்ணாகத் தோன்றினார். தொடர்ந்து பத்ம ஜோதி (1937), தாயுமானவர் (1938), சந்தனத்தேவன் (1939), ராக யோகம், சதி மகானந்தா, உத்தம புத்திரன், சத்தியவாணி, பரசுராமர் (1940) போன்ற படங்களில் நடித்தார். பக்த கௌரி திரைப்படத்தில் இவர் பாடி நடித்த தெருவில் வாராண்டி வேலன்.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கண்ணகி (1942) படத்தில் கௌந்தியடிகள் வேடத்தில் நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில் இவர் பாடிய மாநில மீதில் ஜீவகள் வாழும் வாழ்விது நாடகமாகும், பூதலம் புகழும் ஜோதி ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இத்திரைப்படத்தில் மாதவியாக நடித்த எம். எஸ். சரோஜாவுக்கு ஜீவரத்தினம் பின்னணி பாடியிருந்தார்.

திருவாரூரில் கண்ணகி படத்தின் பொன்விழா கொண்டாடிய போது சுவாமி தினகர் ஜீவரத்தினத்துக்கு இசைக்குயில் என்ற பட்டம் அளித்தார்.

தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் முதல் திரைப்படமான பூம்பாவை (1944), ஜெகதல பிரதாபன், ராஜராஜேஸ்வரி (1944), என் மகன் (1945), வால்மீகி ஸ்ரீ முருகன் (1946) போன்ற படங்களில் நடித்தார்.

1945 இல் டி. எஸ். வெங்கட்சாமி என்பவரைத் திருமணம் முடித்தார். 70களில் நாடகங்களில் ஜீவரத்தினம் நடித்துப் பாடிக் கொண்டிருந்தார். 1971 ஆம் ஆண்டு கணவர் இறந்ததும் ஜீவரத்தினம் ஒருவரே குடும்பத்தை சுமக்க வேண்டியிருந்தது. டி. ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன் போன்றோர்களுடன் ஜீவரத்தினம் பாடி பல நாடகங்களில் நடித்தார்.





மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சுந்தரத்திடம் ஒரு குழந்தையை அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். அந்தக் குழந்தைக்கு எதாவது வாய்ப்புகள் தரும்படி கேட்கின்றனர். பாடச் சொல்லிக் கேட்கிறார் சுந்தரம். அக்குழந்தை உச்சஸ்தாயில் பாடுவது மேற்கத்திய கிளாசிக்கல் வாய்ப்பாட்டு வடிவமான ஓபராவைக் (Opera)கேட்பதுபோல் இருக்கிறது.இவ்வளவு சிறப்புமிக்க அந்தப் பெண் குழந்தைக்கு அப்போது வயது 9தான். சுந்தரம் அக்குழந்தையின் பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறார். அப்பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே மாடர்ன் தியேட்டர்ஸில் 5ஆண்டுகளுக்குப் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு எடுக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களிலெல்லாம் அந்தக் குழந்தையின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. அவர்தான் யூ.ஆர்.ஜீவரத்தினம்.


யூ.ஆர்.ஜீவரத்தினம் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலூரில் பிறந்தார். இவருடைய தந்தை சுப்ரமண்யம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். தாயின் பெயர் குஞ்சம்மாள். சிறுவயதிலேயே ஜீவரத்தினம் நாடகம் மற்றும் வாய்ப்பாட்டில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறார். இவருடைய ஆற்றலை மேலும் வளர்த்தெடுக்கச் சரியான வாய்ப்பு மெட்றாஸில் கிடைக்கும் என்பதால் 9ஆம் வயதிலே ஜீவரத்தினம் வாய்ப்பு தேடி மெட்றாஸ் வந்தார். நடிகை அங்கமுத்துவின் சிபாரிசுவின் பேரில் கிருஷ்ணய்யா நாடகக் கம்பெனியில் 6மாதகாலம் இருந்தார். அதன் பிறகு அவருடைய திரைப்பட ஆர்வத்தின் காரணமாக சேலம் வந்து மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தைச் சந்தித்துள்ளார்.


1937ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘சதி அகல்யா’மூலம்தான் ஜீவரத்தினத்தின் திரைப்பட வாழ்க்கை தொடங்குகிறது. இந்தப் படத்தில் அவர் தன் முதல் பாடலைப் பாடினார். 1941இல் எடுக்கப்பட்ட ‘பக்த கெளரி’ படத்தில் தலைப்பு வேடம் ஏற்று நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய ‘தெருவில் வாரான்டி, வேலன்...’ என்னும் பாடல் மெட்றாஸ் மாகாணத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்பட்டது. ஒருபக்கம் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்தாலும் அவர் சி.எஸ்.ஜெயராமன், குன்னக்குடி வெங்கட்ராம அய்யர் போன்றோர்களிடம் சாஸ்திரிய சங்கீதம் கற்பதைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.




மாடர்ன் தியேட்டர்ஸின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் ஜூபீட்டர் ஃபிம்ஸின் படமான கண்ணகியில் கெளதி அடிகளார் வேடம் ஏற்று நடித்தார். 1942இல் வெளிவந்த இப்படத்தில் ஜீவரத்தினத்தின் நடிப்பு பாராட்டப் பெற்றது. இதில் நாயகன் - நாயகி வேடம் ஏற்று நடித்த பி.யூ.சின்னப்பா - கண்ணாம்பா இருவர்களையும் ஒப்பிடும்போது ஜீவரத்தினத்திற்கு மிகச் சிறிய வயது. உருவத்திலும் அவர் மிகச் சிறியவராகவே தெரிந்தார். பி.யூ.சின்னப்பாவும் - கண்ணாம்பாவும் இவரைக் குழந்தை என்றே அழைத்துள்ளனர். ஆனால் இப்படத்தில் ஜீவரத்தினம் உச்சஸ்தாயில் பாடும்போது இருவரும், இவரையா நாம் குழந்தை என்றோம்? என வியந்தனர். 1944இல் வெளிவந்த பூம்பாவையில் ஜீவரத்தினத்தின் நடிப்பையும் பாட்டையும் கல்கி தன் விமர்சனத்தில் புகழ்ந்துள்ளார். இதைத் தொடந்து ஜெகதாளப்பிரதாபனில் பி.யூ.சின்னப்பாவுக்கு ஜோடியாகிறார்.

ஜீவரத்தினம் ஜூபீட்டர் ஃபிம்ஸின் மேலாளர் டி.எஸ்.வெங்கடசாமியை மணமுடித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் போன்றவர்களுக்கு முதல் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர்கள் வெங்கடசாமி-ஜீவரத்தினம் தம்பதியினரே. இவர்கள் மெர்குரி ஃபிலிம்ஸ் என்னும் பெயரில் பட நிறுவனத்தைத் தொடங்கிச் சில படங்களைத் தயாரித்தனர். பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க மேடை நாடகங்களில் நடித்தார். கச்சேரிகளில் பாடினார்.

நடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் ஜீவரத்தினம் தன் குரல்களால் வெகுகாலம் தமிழ் சினிமாவில் நினைவுகூரத்தக்கவராக இருந்தார். அவர் 2000ஆம் ஆண்டு ஜூலை 26இல் மரணமடைந்தார். ‘தமிழுக்கு உயிர் கொடுப்போம்! தயங்காதே தோழா!’ என்னும் பாடல் வரிகள் மூலம் தமிழகம் தாண்டி இலங்கையில் உள்ள தமிழர்களின் நினைவிலும் நீங்காத இடம் பிடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம்.
யு.ஆர்.ஜீவரத்னம் [பின்னணிப் பாடகி மற்றும் நடிகை]
இவரது தந்தை பெயர் சுப்பிரமணியம், தாயார் பெயர் குஞ்ஞம்பாள். தந்தை கிராம கர்ணமாக இருந்தவர். அன்றைய பெரியார் [ஈரோடு] மாவட்டம், ஊஞ்சலூர் தான் இவர்களது சொந்த ஊர். இவர்களது மகளாக 1927-ஆம் ஆண்டு பிறந்தார் யு.ஆர்.ஜீவரத்னம்.

பள்ளி நாட்களிலேயே இவருக்கு இசை மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் நாடங்களிலும், திரைப்படங்களிலும் மிகவும் பிரபலமாக இருந்தவர் தமிழ்த் திரையுலகின் முதல் நகைச்சுவை நடிகை அங்கமுத்து. அவர் யு.ஆர்.ஜீவரத்னத்திற்கு நாடகங்களில் நடிப்பதற்கு உதவி செய்தார். அப்போது இவரது வயது 10. இங்கு ஒவ்வொரு நடிகருடைய நடிப்பையும் கவனிக்கலானார் ஜீவரத்னம்.

இந்நிலையில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் 1937-இல் உதயமானது. இங்கு ஒரு நடிகையாக சேர்ந்தார் ஜீவரத்னம். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “சதி அகல்யா” 1937-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் முதன் முதலாக ஜீவரத்னம் நடித்தார். இதற்குப் பிறகு ஜீவரத்னம் இவரது சொந்த ஊருக்குச் சென்றபோது இவருக்கு அமோக வரவேற்பினை, சிவப்புக் கம்பள விரிப்புடன் மக்கள் இவருக்கு அளித்தனர். அதன் பின்னும் பல படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஜீவரத்னம். எனினும் தனது பதினான்காவது வயதில் “பக்த கௌரி” [1941] என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. குறிப்பாக “தெருவில் வாராண்டி வேலன் தேரில் வாராண்டி” மூலை முடுக்குகளெல்லாம் ஓங்கி ஒலித்து இவரை மிகவும் பிரபலப்படுத்தியது. இப்பாடலை இப்போதும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது.

1942-இல் வெளிவந்த பி.யு.சின்னப்பா நடித்த “கண்ணகி” படத்தில் இவர் ‘கௌந்தியடி”களாக நடித்திருந்தார். இப்படத்திலும் இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் மிகப் பிரபலமானது. பி.யு.சின்னப்பாவில் மற்றொரு வெற்றிப்படமான “ஜெகதலப்பிரதாபன்” படத்தில் 5 கதாநாயகியர்களுள் ஒருவராக இவர் நடித்திருந்தார். மற்றொரு புகழ்பெற்ற கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி நடித்த, இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் முதல் திரைப்படமான “பூம்பாவை” படத்தில் அவருடன் கதாநாயகியாக நடித்தார். இப்படங்களுடன் பத்மஜோதி, தாயுமானவர், சந்தனத்தேவன், ராஜயோகம், சதிமகந்தா, பி.யு.சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன், சத்யவாணி, அருந்ததி, ராஜராஜேஸ்வரி, போஜன் போன்ற மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலும் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீமுருகன்,வால்மீகி, என் மகன், அபிமன்யு, தேவ கன்யா போன்ற வெளிப் படங்களிலும் நடித்தார்.

திருவாரூரில் கண்ணகி படத்தின் பொன்விழா கொண்டாடிய போது சுவாமி தினகர் யு.ஆர்.ஜீவரத்தினத்துக்கு இசைக்குயில் என்ற பட்டத்தை அளித்தார்.

செண்டரல் ஸ்டூடியோவில் மேலாளராக இருந்த ரி.எஸ்.வெங்கடசாமி என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பின் இவர் சொந்தமாக மெர்க்குரி பிலிம்ஸ் என்ற திரைப்படக் கம்பெனியை உருவாக்கி அதன் மூலம் 1954-ஆம் ஆண்டு ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ என்ற படத்தை முதன்முதலாக தயாரித்தார். இப்படத்தில் ஸ்ரீராம் மற்றும் குசலகுமாரி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் வெற்றிப்படமானது. இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான ‘வாழ்விலே ஒரு நாள்’ படத்தில் சிவாஜிகணேசனும் ஜி.வரலட்சுமியும் இணைந்து நடித்தனர். மூன்றாவதாக எம்.ஜி.ஆரை வைத்து சிரிக்கும் சிலை என்றொரு படத்தைத் தயாரித்தனர். அப்படமும் வளரவில்லை. அத்துடன் ‘அடிச்சது யோகம்’ என்ற படத்தை ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க தயாரானது. இப்படமும் பாதியிலேயே நின்று போனதால் பெரும் இழப்பு ஏற்பட்டது.

ஜீவரத்னத்தின் கணவர் 7.4.1971 அன்று காலமானார். ஜீவரத்னம் 26.7.2000 அன்று காலமானார். இவரது பூத உடல் இவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில் தகனம் செய்யப்பட்டது.




நடித்த திரைப்படங்கள்
சதி அகல்யா
பத்மஜோதி
தாயுமானவர்
சந்தனத்தேவன்
ராஜயோகம்
சதி மகானந்தா
உத்தம புத்திரன்
சத்தியவாணி
பரசுராமர்
பக்த கௌரி
கண்ணகி
பூம்பாவை
ஜகதலப் பிரதாபன்
ராஜ ராஜேஸ்வரி
என் மகன்
வால்மீகி
ஸ்ரீ முருகன்
அபிமன்யூ
ஸ்ரீ ஆண்டாள்
போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
வாழ்விலே ஒரு நாள் (1956)