Sunday 26 July 2020

GEORGE BERNAD SHAW ,PLAY WRITER BORN 1856 JULY 26 - 1950 NOVEMBER 2



GEORGE BERNAD SHAW ,PLAY WRITER
 BORN 1856 JULY 26 - 1950 NOVEMBER 2






ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.




உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை உணர்ந்து அவர் மிகுந்த கோபம் கொண்டார். மேலும் அவரது பெரும்பாலான படைப்புகள் அந்த சுரண்டலைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்தன. ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா பல சிற்றேடுகளை எழுதி சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். விரைவில் அதற்குக் காரணமாக விளங்கும் ஆணுக்கு சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் ஆகியவை தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார்.

பெர்னாட் ஷா, சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட் (Charlotte Payne-Townshend) என்ற சமூக சீர்திருத்தவாதியை திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்தார். அவர்கள் ஷா'ஸ் கார்னர் (Shaw's Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட். லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர். கீழே விழுந்ததனால் பெற்ற காயங்கள் மோசமானதால் ஏற்பட்ட நாள்பட்ட சிக்கல்களால் பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் இறந்தார்.


இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே. அவர் இவ்வெகுமதிகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார்.[1] பொது வெகுமதிகளுக்கான ஆசை தனக்கு இல்லை என்பதால் பெர்னாட் ஷா உடனடியாக நோபல் பரிசை நிராகரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரது மனைவியின் வேண்டுகோள் படி ஏற்றுக்கொண்டார்: அவரது மனைவி அதை அயர்லாந்துக்கு கௌரவம் எனக் கருதினார். பரிசுத் தொகையை அவர் நிராகரித்து அதை ஸ்வீடிஷ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான நிதியாக அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கோரினார்.[2

வாழ்க்கை[தொகு]
ஆரம்பகால ஆண்டுகளும் குடும்பமும்[தொகு]

டப்ளினில் உள்ள சிஞ்ச் ஸ்ட்ரீட்டில், 1856 ஆம் ஆண்டு ஜார்ஜ் கார் ஷா (1814–85) என்பவருக்கு ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்தார். அவர் நட்டத்தில் வியாபாரத்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு தானிய வியாபாரியாவார். சில நேரங்களில் குடிமைப் பணியாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவரது தாய் லூசிண்டா எலிசபெத் ஷா. நீ கர்லி (1830–1913) என்னும் தொழில்முறைப் பாடகியாவார். அவருக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் லூசிண்டா ஃப்ரேன்சிஸ் (1853–1920) என்னும் நகைச்சுவை இசைப் பாடகர் மற்றும் லைட் ஓப்பெரா (light opera) கலைஞர் மற்றும் எலினார் ஏக்னஸ் (1855–76) ஆகியோராவர்.

கல்வி[தொகு]


பெர்னாட் ஷா சிறிது காலம் வெஸ்லியன் கோன்னெக்ஸியல் (Wesleyan Connexional) ஸ்கூலில் படித்தார். அது மெத்தடிஸ்ட் நியூ கன்னெக்ஸியன் (Methodist New Connexion) நடத்தி வந்த இலக்கணப் பள்ளியாகும். அதற்குப் பின்னர் டால்கேவுக்கு அருகிலிருந்த ஒரு தனியார் பள்ளிக்குச் சென்றார். பின்னர் டப்ளின்'ஸ் செண்ட்ரல் ஸ்கூலுக்குச் சென்றார். டப்ளின் இங்கிலிஷ் சயிண்ட்டிஃபிக் அண்ட் கமெர்ஷியல் டே ஸ்கூலில் (Dublin English Scientific and Commercial Day School) தனது இறுதிக் கல்வியை முடித்தார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மேல் ஒரு பகை உணர்வு இருந்தது. அவர் கூறுகிறார்:

"இப்போது நமக்குள்ள பள்ளிகளும் பள்ளி ஆசிரியர்களும், கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாக பிரபலமானவை அல்ல, மாறாக அவை சிறைகளாகவும் அவர்கள் சிறை அதிகாரிகளாகவுமே உள்ளனர். அங்கு தங்கள் பெற்றோர்களைத் தொல்லை செய்யாமலும் கவனிக்காமலும் இருப்பதற்காக குழந்தைகள் அடைத்து வைக்கப்படுகின்றனர்"[3] கேஷெல் பைரோன்'ஸ் (Cashel Byron's) ப்ரொஃபெஷன் என்னும் படைப்பில் இளம் பைரோனின் கல்வி பற்றிய கசப்பான அறிமுகம் பெர்னாட் ஷாவின் சொந்த பள்ளி நாள் அனுபவமே ஆகும். ட்ரீட்டிஸ் ஆன் பேரண்ட்ஸ் அண்ட் சில்ட்ரன் (Treatise on Parents and Children) என்ற அவரது எழுத்துப் படைப்பில் முறையான கல்வி மேல் அவருக்கு வெறுப்பு இருந்ததற்கான காரணங்களை வலியுடன் விவரித்தார்.[4]

சுருக்கமாக தரநிலையாக்கப்பட்டுள்ள கல்வித் திட்டங்கள் வீண் எனக் கருதினார். அது ஆத்மாவை இறக்கடிக்கிறது என்றும் புத்திசாலித்தனத்தை மறக்கச் செய்கிறது என்றும் கருதினார். குறிப்பாக உடல் ரீதியான தண்டனைகளை அவர் வெறுத்தார் அக்காலத்தில் அது அதிகமாக இருந்தது.

அவரது தாயார் வீட்டை விட்டு வெளியேறி தனது குரலிசை ஆசிரியரான ஜார்ஜ் வேண்டீலியருடன் லண்டன் சென்ற போது பெர்னாட் ஷாவிற்கு கிட்டத்தட்ட பதினாறு வயதிருந்திருக்கும். அவரது சகோதரிகளும் தாயாருடன் சென்றனர்.[5] ஆனால் பெர்னாட் ஷா தனது தந்தையாருடன் டப்ளினில் இருந்துவிட்டார்.


முதலில் ஈடுபாடில்லாத மாணவராக இருந்த அவர் பின்னர் ஒரு எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். திருப்தியுடன் அந்தப் பணியைச் செய்யாவிட்டாலும் சிறப்பாக பல ஆண்டுகள் தொடர்ந்து செய்தார்.[6] 1876 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா தனது தாயாரின் லண்டன் வீட்டிற்கு சென்று சேர்ந்தார். அவரது தாயார் வேண்டீலியர் மற்றும் அவரது சகோதரி லூசி ஆகியோர் ஒரு வாரத்திற்கு ஒரு பவுண்டு பணம் என்று அவருக்கு கொடுத்தனர். அவர் அதைக் கொண்டு அங்கிருந்த பொது நூலகத்திற்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் வாசகர் அறைக்கும் அடிக்கடி சென்றார். அங்குதான் அவர் தீவிரமாகப் படிக்கவும் நாவல்களை எழுதவும் தொடங்கினார்.

வேண்டீலியரின் இசைப் பத்தியை எழுதியதன் மூலம் தனக்கான ஊதியப் படியைப் பெற்றார்.[7][8] அது லண்டன் ஹார்னெட் டில் இடம்பெற்றது. அவரது நாவல்கள் நிராகரிக்கப்பட்டன, இருப்பினும் 1885 ஆம் ஆண்டு வரை இலக்கியத்திலிருந்து பெற்ற வருவாய் புறக்கணிக்கத்தக்கதாகவே இருந்தது. அதன் பின்னரே அவர் கலை விமர்சகராகி சுய ஆதரவுள்ள மனிதராக மாறினார்.

சொந்த வாழ்க்கையும் அரசியல் செயல்பாடுகளும்[தொகு]

இப்போதுள்ளபடி ஷா'ஸ் கார்னரின் முன்பகுதி
அவரது வாசிப்புகளால் பாதிக்கப்பட்ட அவர் அர்ப்பணிப்புள்ள சமதர்மவாதியாகவும் ஃபேபியன் சொசைட்டியின் (Fabian Society)[9] நிறுவன உறுப்பினராகவும் ஆனார். அது 1884 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நடுநிலை வகுப்பு அமைப்பாகும். அமைதியான வழிகளில் சிறிது சிறிதாக சமதர்மத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்ட அமைப்பாகும்.[6] அவரது அரசியல் செயல்பாடுகளின் காலத்தின் போது அவர் சார்லோட் பாய்னெ-டௌன்செண்டை (Charlotte Payne-Townshend) சந்தித்தார் அவர் அயர்லாந்து வாரிசாவார்.

அவர்கள் இருவரும் 1898 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். 1906 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா குடும்பத்தினர் ஒரு வீட்டிற்கு குடிபுகுந்தனர். தற்போது அது ஷா'ஸ் கார்னர் என அழைக்கப்படுகிறது. அது ஹெர்ட்ஃபோர்ட்ஷைரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஆயோட் செயிண்ட் லாரன்ஸில் உள்ளது; அவர்களது எஞ்சிய காலத்தை அவர்கள் அந்த வீட்டிலேயே கழித்தனர், இருப்பினும் அவர்களுக்கு லண்டனில் 29 ஃபிட்சோரி ஸ்கொயரில் (Fitzroy Square) ஒரு வீடும் இருந்தது.

பெர்னாட் ஷாவின் நாடகங்கள் 1890களில் முதன்முதலில் நடத்தப்பட்டன. பத்தாண்டு முடிவில் அவர் ஒரு பெரிய நாடக ஆசிரியராகியிருந்தார். அவர் அறுபத்து மூன்று நாடகங்களை எழுதினார். ஒரு நாவலாசிரியர், விமர்சகர், கட்டுரையாசிரியர் மற்றும் தனியார் கடிதவியலாளராகவும் அவர் ஆற்றிய பங்கு சிறப்பானதாகும். அவர் 2,50,000 கடிதங்களை எழுதியுள்ளார் என அறியப்படுகிறது.[10]

சிட்னி வெப் மற்றும் பீட்ரைஸ் வெப் மற்றும் க்ரஹாம் வால்லஸ் ஆகிய ஃபேபியன் சொசைட்டி உறுப்பின ர்களுடன் இணைந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தை 1895 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா நிறுவினார். ஹென்றி ஹண்ட் அவர்கள் ஃபேபியன் சொசைட்டிக்கு வழங்கிய அன்பளிப்பான £20,000 தொகையும் மற்றும் தனியார் தன்னார்வளர் அமைப்பின் நிதியும் இந்த நிறுவனத்திற்கு உதவியாக இருந்தது. பெர்னாட் ஷாவின் நினைவாக LSE இல் உள்ள ஒரு நூலகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது; அதில் அவரது வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்புகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது.[11]

இறுதி வருடங்கள்[தொகு]

அவரது இறுதி ஆண்டுகளில் பெர்னாட் ஷா, ஷா’ஸ் கார்னரின் மாநாடுகளுக்குச் செல்வதன் மூலம் மகிழ்ந்தார். அவர் தனது 94 ஆம் வயதில் மரம் வெட்டும் போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களினால் உருவான சிறுநீரக செயலிழப்பால் ஏற்பட்ட வீழ்ப்படிவுகளால் இறந்தார்.[12] அவரது சாம்பலும் அவரது மனைவியின் சாம்பலும் அவர்களது தோட்டத்தில் இருந்த செயிண்ட் ஜோன் சிலைக்கு அருகிலும் அதன் நடை பாதைகளைச் சுற்றிலும் தூவப்பட்டது.[13]


* புத்தகம் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பாடகியான தாய், சிறுவன் பெர்னாட் ஷாவையும் அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்தார். வாரா வாரம் அம்மா தரும் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார். சிறு வயதில் தாயிடம் கற்ற இசை, பின்னாளில் இவரை இசை விமர்சகராக மிளிரவைத்தது.

* இங்கிலாந்து சென்று எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்தார். அப்போது நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை திரும்பி வந்தாலும், தொடர்ந்து எழுதினார். பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகத் தொடங்கின.

* ‘விடோயர்ஸ் ஹவுசஸ்’ என்ற முதல் நாடகத்தை 1892-ல் எழுதினார். 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். பல நாடுகளில் இவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

* அந்த காலக்கட்டத்தில் லண்டன் நாடக மேடைகள் உற்சாகமான, சென்ட்டிமென்ட் நிறைந்த, பொழுதுபோக்கு அரங்குகளாக இருந்தன. அதை நீதி, அரசியல், பொருளாதார விவகாரங்களை எடுத்துக்கூறும் மன்றங்களாக மாற்றினார்.

* இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன. அவரது எழுத்து போலவே நிஜ வாழ்வின் பேச்சிலும் நகைச்சுவை, நையாண்டி அதிகம் கலந்திருக்கும். 5 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.

* பிரிட்டன் சோஷலிஸ்ட் அமைப்பான ஃபேபியன் சொசைட்டி உறுப்பினர்களுடன் இணைந்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸ் நிறுவனத்தை 1895-ல் தொடங்கினார்.

* நாவல் ஆசிரியர், கதாசிரியர், விமர்சகர், கடிதவியலாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இவர் சுமார் 2.50 லட்சம் கடிதங்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. நாடகங்களுக்கு நீண்ட முன்னுரை எழுதுவார். இவை சில நேரம், நாடகத்தைவிட பெரிதாக இருக்கும். இவரது இசை விமர்சனங்கள் ஷா’ஸ் மியூசிக் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

* இலக்கியத்துக்காக நோபல் பரிசு (1925), பிக்மலியன் என்ற படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது (1938) ஆகிய இரண்டு பிரதான விருதுகளையும் பெற்ற ஒரே படைப்பாளி இவர். புகை, மது தொடாதவர். சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றியவர்.

* தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பாக மாநாடுகளுக்குச் செல்வதும் உரையாற்றுவதுமாக சுழன்றார். படிப்பதையும் எழுதுவதையும் இறுதிவரை நிறுத்தவே இல்லை. ஆங்கில இலக்கிய உலகில் மகத்தான பங்களிப்பை வழங்கிய பெர்னாட் ஷா 94 வயதில் (1950) மறைந்தார்.


பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்43

பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். நாடகங்களுக்கு மதிப்புரை எழுதுவதற்காக ஷாவை அவர் நியமித்துக்கொண்டார்; அப்போதுதான் G.B.S. (ஜார்ஜ் பெர்னார்ட்ஷா) என்ற மூன்று எழுத்துக்கள் ஷாவைக் குறித்து உலகம் முழுவதும் அறிய முற்பட்டன. ஷாவின் புகழ் பரவுவதற்கு முதன் முதலில் ஆரீஸ் காரணமாக இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஷா, ஆரீஸுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த உலகத்தில், எந்தப்பகுதியிலாவது நீங்கள் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் வரையில் அந்தப் பத்திரிகையில் என்னுடைய கட்டுரைகள் வெளிவரும் என்று நீங்கள் தயங்காமல் எதிர்பார்க்கலாம்” என்று தம்முடைய நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்.

ஷாவை உலகுக்கு அறிமுகப்படுத்திய அந்த ஆரிஸ் பிற்காலத்தில் வாழ வழியின்றி துன்புற்றார். பத்திரிகைத் தொழிலில் அவருக்கு இடம் இல்லாமல் வருந்தினார்.

ஆஸ்கார் ஒயில்டைப் பற்றியும், ஷாவைப் பற்றியும் வரலாறுகள் எழுதிப் பணம் சேர்க்கலாம் என்ற முயற்சியில் ஆரிஸ் ஈடுபட்டு வந்தார். முயற்சி முடிவடையும் முன் வறுமையில் வாடி, வருந்தி, இறந்து போனார்.

No comments:

Post a Comment