Sunday 12 July 2020

DARASINGH ,BOXER ,HINDI ACTOR BORN 1928 NOVEMBER 19 - 2012 JULY 12


                   DARASINGH ,BOXER ,HINDI ACTOR 
               BORN 1928 NOVEMBER 19 - 2012 JULY 12


தாரா சிங் (பஞ்சாபி: ਦਾਰਾ ਸਿੰਘ; 19 நவம்பர் 1928 – 12 ஜுலை 2012) ஒரு பஞ்சாபி மல்யுத்த வீரராக இருந்து பிறகு நடிகரானவர். 1952-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், இந்தியாவின் ராஜ்ய சபாவிற்கு முதலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஆகஸ்ட் 2003 – ஆகஸ்ட் 2009 வரை பணியாற்றினார்.[1][2]

இவர் ஜுலை 12, 2012-ம் நாள் காலை 7.30 மணிக்கு அவருடைய மும்பை வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.[3][4]ஆரம்ப கால வாழ்க்கையும் தொழிலும்[தொகு]
தாரா சிங், சூரத் சிங் மற்றும் பல்வந்த் கவுர் என்ற் சீக்கியர்களுக்கு[5] மகனாக நவம்பர் 19, 1928-ல் அமிர்தரஸ் மாவட்டத்தில் உள்ள தர்முசக் கிராமத்தில் பிறந்தார்.

மல்யுத்தம்[தொகு]
இவர், 132 கிலோ எடையும், 6'2" அடி உயரமும் இருந்தார். இவர் ஆரம்பகாலத்தில் கரலாகட்டை என்னும் பெல்வானி வகை மல்யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பல்வேறு அரசர்கள் முன்னிலையிலும், வெளிநாடுகளிலும் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.

விருதுகளும் அங்கீகாரமும்[தொகு]
1947-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் பங்குபெற்றும், மலேசியாவில் நடைபெற்ற போட்டியிலும் கோப்பையை வென்றுள்ளார்.
1960 ஆம் ஆண்டு உலக மல்யுத்தப் பட்டம்[6]
திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும்[தொகு]
1952-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் (சாங்க்திள்) நடிக்க ஆரம்பித்தார்.[1] 1960 முதல் 69 வரை முன்னனி நடிகராக இருந்த இவர் அதன் பிறகு பிற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர் சுமார் 140 திரைப்படங்களில் நடித்துள்ளார். 6 தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் இராமாயன் தொடரில் நடித்த அனுமான் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

தாரா படப்பிடிப்பகம்[தொகு]
1978-முதல் பெரிய அளவில் மொஹாலியில் உள்ள தாரா படப்பிடிப்பகத்தின் உரிமையாளரும் இவரே.[7] அனைத்து வசதிகளுமுடைய இப்படப்பிடிப்பகத்தினை சிறிய நகரம் என்றும் கூறுவர்.[8]

# பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தர்மூசக் என்ற இடத்தில் பிறந்தார் (1928). தாராசிங் ரன்தாவா என்பது இவரது முழு பெயர். தந்தை பெரும்பாலும் வெளியூர்களிலேயே இருந்ததால் மூத்த மகனான இவர் வயல்களில் வேலை செய்து வந்தார். சிறு வயதிலேயே பயில்வானாக வேண்டும் என்பது இவரது ஆசை

# பாதாம் கொட்டைகளை வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு, நிறைய பாலையும் குடித்துவிட்டுப் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம். இதனால் வயதுக்கு மீறிய வளர்ச்சியடைந்தார். 6.2 அடி உயரமும் அதற்கேற்ப ஆஜானுபாகான தோற்றமும் கொண்டிருந்தார்.

# இவரும் இவரது தம்பியும் ஊர் ஊராகச் சென்று மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றனர். 1947-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு பல போட்டிகளில் வென்றார். 1954-ல் இந்தியா திரும்பியபின் இந்திய மல்யுத்த சாம்பியனாக உயர்ந்தார்.

# 1959-ல் முன்னாள் உலக சாம்பியனை வென்று காமன்வெல்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 1968-ல் அமெரிக்க சாம்பியன் லவ் தேஸை முறியடித்து ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து கனடா, நியுசிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், இங்கிலாந்து நாட்டு வீரர்களை வென்றார்.

# ஏறக்குறைய உலகின் அனைத்து மல்யுத்த வீரர்களுடனும் மோதி வென்றுள்ளார். உலகிலேயே தனது அனைத்து எதிரி சாம்பியன்களையும் அவர்கள் நாடுகளிலேயே வென்று பட்டங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெருமை பெற்றார். 55 வயதுவரை 500 தொழில்முறை போட்டிகளில் பங்கேற்றார்.

# அத்தனை போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினார். 1983-ல் இறுதியாகக் களம் இறங்கிய போட்டியிலும் வென்று வெற்றி வீரனாகவே ஓய்வு பெற்றார். இடையிடையே திரைப்படங்களிலும் நடித்து வந்தார். முதலில் பாலிவுட் திரைப்படங்களில் ஸ்டன்ட் நடிகராக தோன்றினார். 1952-ல் ‘சங்தில்’ என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

# இதில் நடிகை மும்தாஜுடன் இணைந்து நடித்திருந்தார். ரசிகர்களிடையே அமோக ஆதரவு பெற்ற இந்த இணை தொடர்ந்து 16 திரைப்படங்களில் ஜோடி சேர்ந்தது. ‘சிகந்தர்-இ-ஆஸம்’, ‘காகான், லுடேரா’, ‘டாகூ மங்கள்சிங்’ மற்றும் ‘இன்சாஃப்’ ஆகிய திரைப்படங்கள் இவரை மிகவும் பிரபலமாக்கின. பல படங்களை இயக்கிய இவர், திரைக்கதைகளையும் எழுதியுள்ளார்.

# மொஹாலி என்ற இடத்தில் தாரா ஸ்டுடியோவைத் தொடங்கி பல படங்களையும் தயாரித்துள்ளார். தனது தாய்மொழியான பஞ்சாபி யில் முதன்முதலாக ‘நானக் துனியா சப் சன்சார்’ என்ற படத்தைத் தயாரித்தார். திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது.

# 50 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த இவரது திரையுலக வாழ்க்கையில் இந்தியிலும் பஞ்சாபி மொழியிலும் சேர்த்து 110-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2003-ல் ராஜ்ய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2007-ல் வெளிவந்த ‘ஜப் வி மெட்’ திரைப்படம்தான் இவரது கடைசி திரைப்படம்.

# மல்யுத்த வீரராக, சினிமா நடிகராக அவருக்குக் கிடைத்த புகழை விட பன்மடங்குப் புகழையும் பெயரையும் ராமாயணம் தொலைக் காட்சித் தொடரில் இவர் ஏற்ற ஹனுமான் கதாபாத்திரம் இவருக்குப் பெற்றுத் தந்தது. மல்யுத்த வீரர், நடிகர், இயக்குநர் ஆகிய பன்முகத் திறன் கொண்டிருந்த தாராசிங் 2012-ம் ஆண்டில் ஜூலை மாதம் 12-ம் தேதி 83-ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.

இந்தியாவின் மல்யுத்த வீரரும் நடிகருமான தாரா சிங் காலமானார்.

கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து 83 வயதான அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து புதன்கிழமை இரவு அவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரது மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்த பின்னர் அவர் தமது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காலமான தாரா சிங் 1960 ஆம் ஆண்டு உலக மல்யுத்தப் பட்டத்தை வென்றவர். பின்னர் பல ஹிந்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.

இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் அவர் ஹனுமானாக நடித்தார். அதன் மூலம் அவர் மேலும் மக்களிடம் பிரபலமானார்.

அவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை உறுப்பினராகவும் இருந்தார்.
கிங் காங், ஃபௌலத், கல் ஹோ நா உட்பட பல ஹிந்தி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஜம் வி மெட் எனும் திரைப்படமே அவரது இறுதி திரைப்படம்.

மறைந்த தாரா சிங் குறிப்பிடத்தகுந்த ஒரு திரைப்பட நடிகர் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமான மல்யுத்த வீரர் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமது அஞ்சலியில் தெரிவித்துள்ளார்.அவர் மிகச்சிறந்த ஒரு மனிதர் என்றும், மதிப்பு மிக்க பிரபலமான ஒரு இந்தியர் என்று நடிகர் அமிதாப் பச்சன் டிவிட்டரில் கூறியுள்ளார்.பிரபல நடிகர் மகேஷ் பட் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கலில், நமது சிறு வயது கதாநாயகர்கள் காலமாகும் போது, உலகமே வெறுமையானது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment