Friday 24 July 2020

VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR BORN 1975 JULY 24


VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR
 BORN 1975 JULY 24




விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
வாழ்க்கை வரலாறு
விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.
இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும்.

மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு திரைப்படமாகும்.
2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காகப் பெற்றார்.
தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.
மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்.
வர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி தொடர்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த முதல் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் ஆகும். இதனை தொடர்ந்து இவர் 2006-ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள், 2007-ஆம் ஆண்டு காதலிக்க நேரமில்லை தொடங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் இசையமைத்த தொலைக்காட்சி நாடக தொடர்களின் பிரபலத்தை தொடர்ந்து இவர் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
பிரபலம்
இவர் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி ஆத்திசூடி, டைலாமோ, நாக்கு முக்க பாடல்கள் மூலம் திரையுலகில் பிரபலமானவர். இவர் 2012-ஆம் ஆண்டில் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் தேர்ந்தேடுக்கும் திரைக்கதை முற்றிலும் மாறுபட்ட காரணத்தால் இவர் திரைத்துறையில் இவரின் திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கின்றது.
அங்கீகாரம்
2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காக பெற்றார்.தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.

கரோனா பாதிப்பால் அவதிப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது சம்பளத்தைத் தானாகக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.
கரோனா பாதிப்பால் அவதிப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது சம்பளத்தைத் தானாகக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா பெருந்தொற்று தென்னிந்தியத் திரையுலகத்தையும் பெரிதாகப் பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒப்புக்கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு ‌கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், அவர் நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடையவுள்ளார்கள்.

இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு:
விஜய் ஆண்டனி தற்போது பெப்சி சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.
எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கரோனா ஊரடங்கு தமிழ் சினிமாவை மொத்தமாகப் புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்தப் பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி விட்டார். இந்தச் சம்பளக் குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டைக் குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார்.
விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் டி. சிவா மனமுவந்து பாராட்டி, இவ்வாறு கூறினார்:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும் ஒரு நடவடிக்கை. அவரைப் போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். அப்படி செய்தால் தான், தற்போது வெளியாகக் காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதிச் சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதார பாராட்டுகிறேன் என்றார்.
@mangeshkarlata

No comments:

Post a Comment