Thursday 16 July 2020

KATRINA KAIF ,HINDI ACTRESS BORN 1984 JULY 16



KATRINA KAIF ,HINDI ACTRESS 
BORN 1984 JULY 16




கேட்ரீனா கய்ஃப் (கேட்ரீனா டர்க்கியுட் பிறப்பு: ஜூலை 16, 1984)பிரிட்டிஷ் இந்திய நடிகை. இவர் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் முக்கியமாக ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
ஹாங்காங்கில் பிறந்த கய்ஃபின் தந்தை,[1] முகம்மது கய்ஃப் ஒரு காஷ்மீர்க்காரர், அவரது தாயார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் பின்னர் அறக்கட்டளைப் பணிகளில் ஈடுபட்டார். கேட்ரீனா இளம் வயதாக இருந்த போதே பெற்றோர் விவாகரத்து பெற்று தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். ஹாங்காங்கில் வளர்ந்த கய்ஃப் பின்னர் அவரது அம்மாவின் தாய்நாடான இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்.கேட்ரீனாவுடன் பிறந்தவர்கள் ஏழுபேர்.

தொழில் வாழ்க்கை
தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம் விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். இலண்டனில் ஒப்பந்த அடிப்படையில் மாடல்ஸ் 1 என்னும் முகமை மூலம் மாடலிங் பணியைத் தொடர்ந்த அவர் லா சென்ஸா மற்றும் அர்காடியுஸ் போன்ற நிறுவன விளம்பரங்களில் தோன்றினார், இவ்வாறு இலண்டன் ஃபேஷன் வீக் நிகழ்வுகளிலும் இடம் பெற்றார்.

கேட்ரீனாவின் மாடலிங் பணியைப் பார்த்து ரசித்த இலண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட், அவரைத் திரைப்பட நட்சத்திரமாகக் கண்டெடுத்து தனது திரைப்படமான பூம் (2003) படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். இதன் பிறகு மும்பைக்கு இடம் பெயர்ந்த கேட்ரீனாவுக்கு ஏராளமான மாடலிங் வாய்ப்புகள் குவிந்தன. எனினும் கேட்ரீனாவுக்கு ஹிந்தி பேசத்தெரியாது என்ற காரணத்தால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரைத் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய சிறிது தயங்கினார்கள்.[2]

2005 ஆம் ஆண்டில் வெளியான சர்க்கார் படத்தில் அபிசேக் பச்சனின் தோழியாக சிறுவேடத்தில் நடித்ததன் வாயிலாக கேட்ரீனா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரது அடுத்த படமான மைனே ப்யார் க்யூன் கியாவில் (2005), சல்மான் கானின் இணையாக நடித்தார்.

2007-ஆம் ஆண்டு நமஸ்தே லண்டன், படத்தில் பிரிட்டிஷ்-இந்தியப் பெண்ணாக அக்ஷய் குமாரின் ஜோடியாக நடித்த இரண்டாவது படமும் வெற்றிப்படம் ஆனது. அதற்கு முன் இதே ஜோடி நடித்த ஹம்கோ தீவானா கர் கயே (2006) திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.[3] அதன்பின்னர், அவர் நடித்த அப்னே, பார்ட்னர், வெல்கம் போன்ற அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்களாகத் திகழ்ந்தன

2008 ஆம் ஆண்டில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் முதன்முதலாக இவர் நடித்த அப்பாஸ் முஸ்தான் தயாரித்த அதிரடித் திரைப்படம் ரேஸ் வெற்றிப்படமாயிற்று. இப்படத்தில் சயிஃப் அலிகானின் செயலாளராகவும், எதிர்கோஷ்டியைச் சேர்ந்த சயிஃபின் சகோதரர் அக்ஷய் கன்னா மீது காதல் வயப்படுபவராகவும் அவர் நடித்தார்.

இதே ஆண்டு அனீஸ் பாஸ்மீயின் தயாரிப்பில் வெளியான கேட்ரீனாவின் இரண்டாவது படமான சிங் ஈஸ் கிங்கில் அவர் அக்க்ஷய்குமாரின் ஜோடியாக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே ஆண்டின் இறுதியில் சுபாஷ் கெய்யின் தயாரிப்பில் வெளியான யுவராஜ் நெருக்கடி மற்றும் தோல்வியைச் சந்தித்தது.[4] எனினும் இதன் திரைக்கதை அகாடமி ஆஃப் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் நூலகத்தில் இப்படத்தின் கலைத்திறனும், மூலத் திரைக்கதையும் மற்றும் அதனின் பொருள் மற்றும் முழுத் திரைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.


ராஜநீதி(Raajneeti) புத்தக வெளியீட்டு விழாவில் கத்ரீனா கைப் 2012
2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கேட்ரீனா ஜான் ஆப்ரஹாமுடன் நடித்த நியூ யார்க் வணிக அளவில் பெரிய வெற்றி பெற்றது.[5] இப்படத்தில் கேட்ரீனாவின் நடிப்பைத் திறனாய்வாளர் தாரன் ஆதர்ஷ் பின்வருமாறு பெரிதும் பாராட்டினார்: ”கேட்ரீனா இப்படத்தில் பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறார். கவர்ச்சி வேடத்தில் மட்டுமே நடித்த அவர், தற்போது இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் எதிர்பார்க்கும் நடிப்பைத் தன்னால் வெளிப்படுத்த முடியும் என இவ்வேடத்தின் வாயிலாக மெய்ப்பித்துள்ளார். அவர் முனைப்பானவர். இன்னும் சொல்லவேண்டும் எனில் மக்கள் புதிய மாறுபட்ட கேட்ரீனாவை இனி பார்க்கப்போகிறார்கள்.”[6]

இதையடுத்து கேட்ரீனா பல நட்சத்திரங்கள் நடித்த அதிரடித் திரைப்படமான ப்ளூவில், சிறுவேடத்தில் தோன்றினார். இது இந்தியாவிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்ட ஆழ் கடல் திகில் படமாகும்.[7], இது வர்த்தகரீதியாக சிறிய வெற்றியை மட்டுமே பெற்றது. இது ஒரு வெற்றிப்படமாக கருதப்படவில்லை.[8]

அவ்வருடத்தின் இறுதியில், ரன்பீர் கப்பூருடன் இணைந்து அஜப் பிரேம் கி காசாப் கஹானி மற்றும் அக்ஷய் குமாருடன் இணைந்து தே தான தன் ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் வர்த்தகரீதியாக வெற்றிபெற்றன.

2010 இல் இவரது முதல் படமான ராஜ்நீதியில் ரன்பீர் கப்பூருடன் இணைந்து நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. கேட்ரீனா தற்பொழுது அக்ஷய் குமாருடன், ஃபாரா கானின் தீஸ் மார் கான் நடித்து வருகிறார். இப்படம் 24 டிசம்பர் 2010 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 2010 செப்டம்பரில், ஒரு செய்தித்தாளில் வெளியான செய்தியில் பாலிவுட்டின் மிகச்சிறந்த ஆறு நடிகைகளில் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் மற்றும் கங்கனா ரணவத் ஆகியோருடன் பட்டியலிடப்பட்டார்.

ஊடகங்களில்
நடிகர் சல்மான்கானுடன் 2003 ஆம் ஆண்டு தொடங்கி நெருக்கமான நட்பை கேட்ரீனா பேணிவருகிறார்.[9]. கேட்ரீனா இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஈஸ்டன் ஐ பப்ளிகேஷன் 2008 ஆம் ஆண்டில் நடத்திய வாக்கெடுப்பில் ஆசியாவின் இனக்கவர்ச்சி மிக்க பெண்ணாகவும், அதே 2008 ஆம் ஆண்டில் கூகுள் இந்தியா இணையத்தில் அதிகமாக வலைதளத்தில் தேடிய நபராகவும் அறியப்பட்டார்.[10] அண்மையில் நியூயார்க் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் ரியாலிட்டி ஷோவான தஸ் கா தம் நிகழ்ச்சியில் நீல் நிதின் முகேஷ் உடன் தோன்றினார்.[11] தான் நடித்த யுவராஜ் படத்தை விளம்பரப்படுத்தும் பாட்டுப்போட்டித் திறன் நிகழ்ச்சியான ஸரிகமப-வில் சல்மான்கானுடன் தோன்றினார்.[12] செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில் வெளியான மேட்டல்’ஸ் பாலிவுட் பொம்மை விளம்பரத்திலும் கேட்ரீனா மாடல் ஆகத் தோன்றியுள்ளார்.[13]

விருதுகள்
2006: ஒட்டுமொத்த நடிப்பிற்கான ஸ்டார்டஸ்ட் விருது (பெண்), மைனே ப்யார் க்யூன் கியா?
2008: ஸீ சினிமா விருதுகள், பிரித்தானிய இந்திய நடிகருக்கான விருது 2008
2008: ஐ ஐ எஃப் ஏ விருதுகள் அந்த ஆண்டின் ஸ்டைல் தோற்றத்திற்கானது.
2008: சப்சே ஃபேவரிட் கான் விருதுகள், சப்சேவின் அபிமான கதாநாயகி, சிங் இஸ் கிங்
2009: ராஜிவ் காந்தி விருது[14]

தாராள மனம் கொண்டவர் மற்றும் கனிவானவர் நயன்தாரா என்று இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தி திரையுலகில் ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துப் பிரபலமானவர் கத்ரீனா கைஃப். தற்போது உள்ள நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் கத்ரீனா கைஃப் தான் எனத் தகவல் வெளியாகியுள்ளது.



இதனிடையே, தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு கே பியூட்டி என்று பெயர் வைத்துள்ளார் கத்ரீனா கைஃப். இது பற்றிய செய்தி அறிக்கையில், "நம்மை எது மகிழ்ச்சியாக்குகிறதோ அதில்தான் அழகு இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். எனக்கு நினைவு தெரிந்து, ரன்வேயிலிருந்து பெரிய திரை வரை, ஒப்பனை என் பயணத்தில் ஒரு முக்கியப் பங்காக இருக்கிறது. இப்போது அதன் மீது எனக்கிருக்கும் அன்பை கே பியூட்டி, எனது முதல் அழகு சாதன பிராண்ட் மூலமாகக் காட்டியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஷாரூக்கானின் `ஸீரோ', ஆமீர்கானின் `தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார் கத்ரீனா. கடைசியாக இவர் நடித்து வெளியான `ஜக்கா ஜசூஸ்' படமும் வெற்றிபெறாததால், ஹிட் கொடுப்பாதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறார் கத்ரீனா.

தற்போது நடிக்கும் இரண்டு படங்களும் மிகப் பெரிய படங்கள் என்பதால், ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் கத்ரீனா. இந்த பிரேக்கில் தமிழகத்துக்கு வந்து திண்டுக்கலில் இருக்கும் தன் அம்மாவை சந்திக்க இருக்கிறாராம். திண்டுக்கலின் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றுகிறார் கத்ரீனாவின் அம்மா சூசன் கைஃப்.

அறக்கட்டளையின் சார்பாக ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் அம்மாவை சந்தித்து, ஒரு நாள் முழுக்க அந்தக் குழந்தைகளுடன் செலவழிக்க இருக்கிறாராம் கத்ரீனா

இந்த கே பியூட்டி விளம்பரங்களில் கத்ரீனாவுடன் நயன்தாராவும் நடித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அழகான தென்னக சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்குப் பெரிய பெரிய நன்றி. அவரது வேலைப் பளுவுக்கு நடுவில் கே பியூட்டியின் விளம்பரங்களில் பங்கெடுக்க மும்பை வந்திருந்தார்.

தாராள மனம் கொண்டவர், கனிவானவர். என்றும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன். நாளை முதல் விளம்பரங்கள் வரும். பார்த்துக்கொண்டே இருங்கள்" என்று தெரிவித்துள்ளார் கத்ரீனா.

தற்போது கே பியூட்டி தொடக்கத்துக்காக பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கத்ரீனாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

.மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் பத்திரிகையாளர்களை மீண்டும் மிரட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சேர்ந்து பார் பார் தேகோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் பிசியாக உள்ளார்.இது தவிர அவர் தனது முன்னாள் காதலர் ரன்பிர் கபூருடன் சேர்ந்த ஜக்கா ஜசூஸ் படத்தில் நடித்து வருகிறார்.
கத்ரீனா கத்ரீனா கைஃபுக்கு தனது அனுமதி இல்லாமல் புகைப்பட பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தால் சுத்தமாக பிடிக்காது. அவ்வாறு யாராவது புகைப்படம் எடுத்தால் கூலான கத்ரீனா ஆங்ரி பேர்டாக மாறிவிடுகிறார்.உடல்நலக்குறைவு கத்ரீனா வேர்ல்டு டூர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யாவின் ஸ்டுடியோவில் நடனப் பயிற்சி எடுத்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
புகைப்படம் டாக்டர் வந்து கத்ரீனாவை பரிசோதனை செய்துவிட்டு ஓய்வு எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு செல்ல ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்த கத்ரீனாவை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.மிரட்டல் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்ததால் கத்ரீனா கோபம் அடைந்தார். காரில் ஏறியவர் கீழே இறங்கி வந்து பத்திரிகையாளர்களை பார்த்து, போலீசில் புகார் அளிப்பேன் என மிரட்டினார். கத்ரீனா பத்திரிகையாளர்களை மிரட்டுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
சல்மான் கான் ‘பாரத்’ படத்தின் இரண்டாவது அட்டவணையைத் தொடங்குகிறார்
சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் உறவு பாலிவுட்டின் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகும். அவர்களின் திரை, மற்றும் ஆஃப்-ஸ்கிரீன் வேதியியல் ஆகியவை அவர்களை தொழில்துறையில் பிடித்த இரட்டையர்களில் ஒருவராக ஆக்குகின்றன.

அவர்களது உறவு நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்தாலும், அவர்களின் ஒருகால காதல் கதை அவர்களின் ரசிகர்களின் மனதில் இன்னும் புதியது.

கத்ரீனா கைஃப்ட்விட்டர்
மேலும், அவர்களின் தற்போதைய நட்பு சமன்பாடு ஒவ்வொரு முறையும் கண் இமைகளை ஈர்க்கும் என்பதால், அவர்கள் பிரிந்த பின்னரும் கூட அவர்கள் இப்போது பகிர்ந்து கொள்ளும் பிணைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. சல்மான் தான் தனது ஆதரவு அமைப்பு என்று கத்ரீனா பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். மிஸ் கைஃப் தனது குடும்பத்தின் ஒரு பகுதி என்று பைஜான் கூட ஒப்புக்கொண்டார். பரத் நடிகை சல்மானை தனது “பெரிய அண்ணன்” என்று அழைத்ததற்கு அதுவே காரணமாக இருக்கலாம்.

கத்ரீனா கைஃப் ஒருமுறை சல்மானை தனது சகோதரர் என்று அழைத்தார்
ஆமாம், பைஜானுடன் பிரிந்த பிறகு, நடிகை ரன்பீர் கபூருடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். “சல்மான் கான் எனது பெரிய சகோதரர்” என்று கூறியபோது கத்ரீனா ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டை வெளியிட்டார்.

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவுக்காக ‘ஜப் தக் ஹை ஜான்’ முழு நடிகர்களும் கொல்கத்தாவில் இருந்தபோது இது நிகழ்ந்தது, இது அனைவரையும் திகைக்க வைத்தது. உண்மையில், ஷாருக்கானும், அனுஷ்கா ஷர்மாவும் தங்கள் ஒப்புதல் நடிகரிடமிருந்து இந்த வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்தனர்.‘அஜப் பிரேம் கி கசாப் கஹானி’ படத்திற்காக கத்ரீனா ரன்பீர் கபூருடன் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தியபோது, ​​36 வயதான நடிகை தனது சக நடிகருக்காக விழத் தொடங்கினார், எனவே அவர் சல்மானுடனான தனது உறவை ஒரு உரை மூலம் முடித்தார் செய்தி. அவள் வீடு திரும்பும் வரை காத்திருக்க விரும்பவில்லை.

எனவே, கத்ரீனா சல்மான் கானுக்கு தனது பக்கத்திலிருந்து முடிந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பினார், ஆனால் அவர்கள் இன்னும் நண்பர்களாக இருக்க முடியும். 54 வயதான நடிகர் மிகவும் கோபமடைந்தார், பின்னர் அவர் தனது செட்களில் வந்தார், பின்னர் அவர்கள் ஒரு சண்டையை ஏற்படுத்தினர், இது இருவருக்கும் இடையே விரிசலை உருவாக்கியது மற்றும் அவர்களது உறவு முறிந்தது.இருப்பினும், பைஜான் எப்போதும் தனது பெண்மணியுடன் இருந்தார், அவளை மறக்க முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ரன்பீரிடமிருந்து பிரிந்தபின் ஒரு கடினமான நேரம் இருந்தபோது அவர் அவளை மிகவும் ஆதரித்தார், இது மிகவும் மென்மையான இயல்பு.

கேட்டின் அறிக்கை குறித்து சல்மானிடம் கேட்கப்பட்டபோது, ​​கத்ரீனா அவரை ‘பைஜான்’ என்று அழைப்பதை விரும்பவில்லை என்று கூறினார்.

அதன்பிறகு, ஒரு நேர்காணலில் கத்ரீனா கைஃப் அவர்களிடம் கேட்கப்பட்டார், நடிகை பதிலளித்தார், “நிச்சயமாக, அவர் என் சகோதரர் அல்ல. அவர் ஒரு நண்பர், ஆனால் அவர் அறியப்பட்ட நகைச்சுவை பற்றியும் இதுதான்” என்று கத்ரீனாவை மேற்கோள் காட்டி இந்தியா டுடே கூறியது.சல்மானின் நகைச்சுவை உணர்வைப் பற்றி பேசிய கத்ரீனா, “அவர் அனைவரின் காலையும் இழுக்கிறார். அவரது ஆளுமைதான் அனைவருக்கும் வசதியாக இருக்கிறது. எல்லோரும் அவரைச் சுற்றி புன்னகைக்கிறார்கள் .. நான் ஒரு அமைதியான ஆட்டுக்குட்டி அல்ல. நான் இருக்கும்போது அதைத் திருப்பித் தருகிறேன்.”

உண்மை வெளியே இருந்தாலும், இப்போதைக்கு, அவளுடைய சிறிய ‘சகோதர’ குண்டு வெடிப்பு நிறைய பேரை திகைக்க வைத்ததாகத் தெரிகிறது. சல்மான் மற்றும் கேட் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிகரமான திட்டமான ‘பாரத்’ படத்தில் இந்த ஜோடி கடைசியாக ஒன்றாகக் காணப்பட்டது

No comments:

Post a Comment