Monday 27 July 2020

RAHULBOSE ,ACTOR,DIRECTOR BORN 1967 JULY 27


RAHULBOSE ,ACTOR,DIRECTOR BORN 1967 JULY 27


ராகுல் போஸ் (இந்தி: राहुल बौस, உருது: رہُل بوس: பிறந்தது 27 ஜூலை 1967) ஒரு இந்திய நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், சமூக ஆர்வலர் மற்றும் ரக்பி குழு வீரரவார்.

போஸ் ப்யார் கே சைடு எஃபெக்ட்ஸ் மற்றும் ஜங்கார் பீட்ஸ் போன்ற சில ஹிந்தி திரைப்படங்களில் தோன்றினார். டைம் ஆசியா இதழ், ஒத்த சம்பவங்கள் கொண்ட திரைப்படங்களான இங்லீஷ், ஆகஸ்ட் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர் போன்ற திரைப்படங்களில், இவரது சிறப்பான பணியினைக் கண்டு "இந்திய சினிமா கலைக்குடும்பத்தின்[1] சூப்பர் ஸ்டார்" என்று அழைத்தது. இவர் தனது சமூக சேவையின் மூலமும் அறியப்படுகிறார்: 2004 ஆம் ஆண்டு நடந்த சுனாமி தாக்குதலுக்குப் பிறகு துயர் துடைக்கும் முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டார் மற்றும் பாரபட்சம் காட்டும் செயலுக்கு எதிராக ஒரு அரசாங்கமல்லாத குழுமத்தை(என்.ஜி.ஒ) தோற்றுவித்தார்.[2] மேலும் போஸ் ஒரு முன்னாள் இந்திய சர்வதேச ரக்பி அணியின் உறுப்பினர், தேசிய இந்திய ஆரஞ்சு ரக்பி அணி உறுப்பினர்.
ஆரம்ப வாழ்க்கை

ராகுல் போஸ் ரூபென் மற்றும் குமுத் போஸ் ஆகிய இருவருக்கும் ஜூலை 27, 1967 ஆம் ஆண்டு ஹிந்து, கயஸ்த்[சான்று தேவை] குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னைப் பற்றி கூறும் போது "பாதி வங்காளி; நான்கில் ஒரு பங்கு பஞ்சாபி மற்றும் நான்கில் ஒரு பங்கு மகாராஷ்ட்ரியன்"[3] என்று கூறுவார். இவர் தனது குழந்தை பருவத்தை மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் கழித்தார். பிறகு குடும்பத்துடன் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். இவரின் முதல் நடிப்பு கதாபாத்திரம் இவரின் ஆறாவது வயதில் பள்ளியில் டாம், பைபரின் மகன் என்ற நாடகத்தின் மூலம் அரங்கேறியது. இவருடைய தாய் குத்துச் சண்டை மற்றும் ரக்பி குழுவை இவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இதன் காரணமாக குழந்தைப் பருவத்தில் விளையாட்டின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.[4] மேலும் இவர் கிரிக்கெட்டும் விளையாடினார் மற்றும் இவருக்கு கிரிக்கெட் வீரரான மன்சூர் அலி கான் பட்டோடி பயிற்சி அளித்தார்.[5]

இவர் மும்பை, கதீட்ரல் மற்றும் ஜான் கன்னோன் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். பல அமெரிக்க பல்கலைக் கழகங்கள் இவரை நிராகரித்தபோது, போஸ் சிதேன்ஹம் கல்லூரியில் சேர்ந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது பள்ளி ரக்பி அணியில் விளையாடினார், வெஸ்டர்ன் இந்தியா சாம்பியன்ஸ் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார். 1987 ஆம் வருடம் இவரது தாயின் மரணத்திற்குப் பிறகு, போஸ் ரெடிபியுஷினில் நகல் எழுத்தராக பணியாற்ற தொடங்கினார். இவரது இங்லீஷ், ஆகஸ்ட் என்ற முதல் பட வெளியீட்டுக்கு பிறகு முழு நேர நடிகராக மாற விளம்பர ஆக்க இயக்குனர் வேலையை துறந்தார்.[4]

நாடகம் மற்றும் திரைப்பட வாழ்க்கை
ஆரம்பகால வாழ்க்கை: (1993–2003)

போஸ் பாம்பே மேடையில் ராகுல் டி'சுனா'ஸின் டோப்ஸி டர்வி மற்றும் ஆர் தேர் டைகர்ஸ் இன் தி காங்கோ ஆகிய நாடகங்களில் நடித்துத் தன்னுடைய நடிப்புத் தொழிலை ஆரம்பித்தார். டி'சுனா'ஸின் அத்தை இயக்குனர் தேவ் பெனகலின் திரைப்படங்களான இங்லீஷ், ஆகஸ்ட் ஆகியவற்றில் பணிபுரிந்த நாடக குழு இயக்குனர் போஸை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆலோசனை கூறினார். போஸுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்த பிறகு பெனகல் அகஸ்திய சென் என்ற வேலைக்கார வேடம் தர முடிவு செய்தார்.[6] உபமன்யு சட்டர்ஜியின், அதே பெயரில் உள்ள நாவலின் அடிப்படையில் இங்லீஷ், ஆகஸ்ட் என்ற முதல் ஹிங்லீஸ் படம் போஸுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. ஏனெனில் 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் வாங்கிய முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். மேலும் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது.[7]

இங்லீஷ், ஆகஸ்ட் படத்திற்கு பிறகு போஸ் தமக்கு தொலைக்காட்சியில் வேலை இருப்பதைக் கண்டார். போஸுக்கு இந்தியாவின் முதல் ஆங்கில மொழி தொலைக்காட்சித் தொடரான எ மௌத்புல் ஆப் ஸ்கையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிபிசி நிறுவனத்தின் ஸ்டைலை இணைந்து வழங்கினார். லைலா ரௌஅஸ்சுடன் இணைந்து. 1998 இல் கைசாத் கஸ்தாத் அவர்களின் பாம்பே பாய்ஸ் என்ற படத்தில் நசிருதீன் ஷாவுடன் நடித்தார். அதன் பிறகு தேவ் பெனகலின் இரண்டாவது படமான ஸ்ப்ளிட் வைடு ஓபன் என்ற படத்திலும் தோன்றினார். சுற்றித் திரியும் விற்பனையாளர் வேடத்திருக்கு தன்னை தயார் செய்யும் பொருட்டு போஸ் மும்பையின் குடிசைப்பகுதிக்கு சென்று மருந்துகள் விற்பவரை இரண்டு வார காலத்திற்கு கூர்ந்து கவனித்தார்.[8] 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தான் இவரை அவருக்குள் இருந்த சமூக குற்ற உணர்வை தட்டி எழுப்ப காரணமாயிற்று. இவர், இதை பின்னாளில் கண்டு கொண்டார்.[9] பாலியல் குறித்து வழங்கியதால் ஸ்ப்ளிட் வைடு ஓபன் என்ற படம் இந்தியாவில் சர்ச்சையை கிளப்பியது,[10][11] எனினும் இவரின் நடிப்பிற்காக 2000 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான வெள்ளித் திரை விருதைப் பெற்றார்.[4] இவர் இங்கிலாந்தில் லீஸ்செஸ்டெர் ஹய்மார்கட் என்ற வெளிநாட்டு படத்திலும் நடித்துள்ளார். இங்குதான் டிம் முராரியின் தி ஸ்கொயர் சர்க்கிள் என்ற கதையின் ஆங்கில பதிப்பில் நடித்தார்.[12][13]

1997 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் நாவலான நடு இரவின் குழந்தைகள் (midnight's Children) என்ற படத்தை பிபிசி நிறுவனம் தயாரித்தது. போஸ் இதில் சலீம் சினை என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அரசுகள் இத்திரைப்படத்தை திரையிட மறுத்ததால் இந்த பட வேலைகள் அனைத்தும் முடங்கியது.[14] போஸை இங்லீஷ், ஆகஸ்ட் ஆகிய திரைப்படங்களில் பார்த்த இயக்குனர் கோவிந்த் நிஹலனி தன்னுடைய படமான தக்ஷகி ல் அஜய் தேவ்கனுக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தை வழங்கினார். இந்த படம் வணிக ரீதியில் வெற்றிபெறவில்லை[15] எனினும் போஸ் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[16]

2001 ஆம் ஆண்டு எவரிபடி சேய்ஸ் ஐயம் ஃபைன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ரீஹன் என்ஜினியர் மற்றும் கோயல் பூரி ஆகியோருடன் துணை கதாபாத்திரத்தில் போஸ் நடித்த எவ்ரிபடி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த படத்திற்காக பாம் ஸ்ப்ரிங்க்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனர் விருதான ஜான் ஸ்கேல்சிங்கேர் விருதை போஸ் பெற்றார்.[17] 2002 ஆம் ஆண்டில் அபர்ணா சென்னின் கலைப் படமான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர் என்ற படத்தில் கொங்கனா சென் சர்மாவுடன் நடித்தார். இந்த படம் சமூக வன்முறைகளை விவரிக்கும் படமாகும். இது ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. அதுமட்டுமல்லாது மூன்று தேசிய சினிமா விருதுகளையும் வென்றது.[18][19]

பிராந்திய சினிமாவும் வெற்றியும்: 2003- தற்போது
2003 ஆம் ஆண்டில் போஸ் ஜங்கார் பீட்ஸ் என்ற சினிமா மூலம் நடைமுறை பாலிவுட் சினிமாவில் கால் பதித்தார். இதில் இரண்டு நண்பர்களில் ஒருவராக நடித்தார். இசை போட்டியில் வென்றதன் மூலம் ஆர்.டி.பர்மன் ரசிகர்கள் மனதில் முழுவதுமாக இடம் பிடித்தார். வெற்றிகரமான இசையமைப்பின் மூலம் பெரிதும் பாராட்டப்பட்ட ஜங்கார் பீட்ஸ் திரைப்படம் நகர்ப்புற பல்படிகளில் (மல்டிப்ளக்ஸ்)[20][21] ஒரு எதிர்பாராத வெற்றியை ஈட்டியது. இது இசைக்காக பல விருதுகளை வென்றது.[22] அதே வருடத்தில் போஸ் மற்றொரு பாலிவுட் படமான மும்பை மேட்னீ யில் நடித்தார். இந்த படம் யுகே யில் ரிலீசானது. இவர் கரீனா கபூருடன் சமேலி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை பெறவில்லை, ஆனாலும் பல பிலிம் ஃபேர் மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றது.

கொங்கன சென் சர்மாவுடன் இணைத்த இரண்டாவது படமான 15 பார்க் அவென்யு என்ற படம் ஜனவரி 2006 ஆம் ஆண்டில் வெளியானது. அபர்ணா சென் இயக்கிய இந்த படம் ஆங்கிலத்தில் திரையானது. 15 பார்க் அவென்யு படம் பல்வேறு சர்வேதேச திரைப்பட விழாக்களில் திரையானது. இந்தியாவில் வெளியிடுவதற்கு ஹிந்தியில் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[23]

தனது அடுத்த முயற்சியாக காதல் கலந்த நகைச்சுவைப் படமான ப்யார் கே சைடு எஃபெக்ட்ஸ் மூலம் போஸ் மீண்டும் நடைமுறை பாலிவுட் சினிமாவில் கால் பதித்தார். இந்த படத்தின் தொடர்ச்சியாக போசின் அடுத்த படைப்பு மும்பையைச் சார்ந்த டிஜே சித் மற்றும் அவரின் பஞ்சாபி தோழி உடனான உறவை உறுதிசெய்யாததைக் கருவாகக் கொண்டது, மேலும் த்ரிஷா என்ற பாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்தார். பொதுவாக இந்திய சினிமாவில் அறியாப்படாத பயன்படுத்தாத யுக்தியை, போஸ் நான்காம் சுவரை உடைக்கும் படியான புதிய திரைக்கதையை சொல்லிய விதம் பல விமர்சனங்களை பெற்றுத்தந்தது.[24] இந்த படம் பல்படிகளில்[25] நல்ல வரவேற்பையும், வணிக ரீதியில் சுமாரான வெற்றியையும் ஈட்டியது. மேலும் 2006 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முதன்மையான இடத்தை பெற்றது.[26] போஸ் மற்றும் ஷெராவத் ஆகிய இருவரும் அவர்களுடைய நடிப்பிற்காக நேர்மறையான விமர்சனங்களை பெற்றனர். இந்த பட வெற்றியின் தொடர்ச்சியாக ஷாதி கே சைடு எஃபெக்ட்ஸ் என்ற படம் 2010 ஆம் ஆண்டில் தொடங்குகிறது.[27] ஷெராவத் மற்றும் போஸ் ஆகிய இருவரும் சேர்ந்து மற்றொரு பாலிவுட் காமெடி படமான மான் கே முகல் -இ- அசாம் -ல் நடித்தனர். இப்படம் சிக்கலான விமர்சனம் மற்றும் வணிக ரீதியில் தோல்விப் படமாகவும் அமைந்தது.[28]

போஸ் 2006 ஆம் ஆண்டில் முதன் முதலில் மூவர் இணைந்து பாடும் இசைக்கூறு கொண்ட அநிருத்த ராய் சௌத்ரியின் அனுரணன் என்ற வங்காளி படத்தில் நடித்தார். அனுரணன் திரைப்படம் தொடர் விழாக்காலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வங்காளத்தில் மூன்று மாதங்கள் வெற்றிகரமாக ஓடியது. பிறகு இது ஹிந்தியில் மொழி மாற்றம் அடைந்து நாடு முழுவதும் வெளியானது.[29] போஸின் இரண்டாவது வங்காளி படமான கால்புருஷ் வணிகரீதியாக ஏப்ரல் 2008 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த கால்புருஷ் திரைப்படம் தந்தை-மகன் உறவைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. இப்படத்தை எழுதி இயக்கிய புத்ததேவ் தாஸ்குப்தாவிற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. 2009 ஆம் ஆண்டில் போஸ், அந்தஹீன் என்ற படத்திற்காக சௌத்ரியுடன் மீண்டும் சேர்ந்தார். இந்த படம் இணையத்துடனான தொடர்பைப்பற்றி விவரிக்கிறது. அனுரணன் போன்று அந்தஹீனும் வணிக ரீதியில் மேற்கு வங்காளத்தில் வெளியானது. மகிந்திரா இந்தோ-அமெரிக்க கலைக்குழு பட விழா (MIACC) மற்றும் இந்திய சர்வதேச பட விழா (IFFI) உட்பட பல திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் திரையானது.[30][31]

போஸ் 2008 ஆம் ஆண்டில் ஆங்கில மொழி படமான பிஃபோர் தி ரெயின்ஸ் உட்பட பொதுவான மற்றும் கலைப்படம் ஆகிய இரண்டும் கலந்த படங்களில் தொடர்ந்து நடித்தார். பிபோர் தி ரெயின்ஸ் திரைப்படம் யு.எஸ் மற்றும் யு.கே வில் வெளியானது. இதில் போசின் நடிப்பைப் பலரும் பாராட்டினர். எனினும் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் போஸ், ராணுவ நீதிமன்ற நாடகம் இடம்பெறும் எ பியு குட் மென் என்ற அமெரிக்க திரைப்படத்தில் ஷௌர்யா என்ற கதாப்பாத்திரம் ஏற்று நடித்தார். போசின் நடிப்பை பலரும் பாராட்டினர். விமர்சகர் தரன் ஆதர்ஷ், "இவரின் நடிப்பு அவருடைய மிகச் சிறந்த நடிப்புகளில் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது' என்று கூறினார்.[32] தில் கபடி என்ற படத்திற்காக கொங்கனா சென் ஷர்மாவுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்தார். இதில் திருமண சிரமங்களை எதிர் கொள்ளும் கணவன் மனைவி வேடங்களை ஏற்று நடித்திருந்தனர்.[33]

இவர், 2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் [34] மொஹ்சின் ஹமிடின், மோத் ஸ்மோக் என்ற நாவலை தழுவி திரைப்படமெடுக்க திட்டமிட்டார். ஆனால் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக இந்த திட்டத்தைத் தள்ளி வைத்தார்.[35] இவர் நடித்துள்ள அபர்ணா சென்னின் மூன்றாவது படமான ஜப்பானிய மனைவி என்ற படம் ஏப்ரல் 6 2010-ஆம் ஆண்டில் வெளியானது.[36][37] போஸ் அடுத்து, திகில் படமான ஃபையர்ட் உட்பட மும்பை சகாசக் , ஐ ஆம் மற்றும் குச் லவ் ஜைஸா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.மேலும் அவர் தீபா மேத்தா வின் நடு இரவின் குழந்தைகள் (மிட் நைட் சில்ட்ரென்) என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

விளையாட்டு வாழ்க்கை
போஸ் 1998 இல் நடந்த ஆசிய ரக்பி ஃபுட்பால் சாம்பியன் என்ற சர்வதேச அளவிலான போட்டியில் முதன் முதலாக பங்கேற்ற இந்திய அணியின் வீரராக இருந்தார்.[38] இவர், ஸ்க்ரும்- ஹாப் மற்றும் வலது-விங்கர்ஆகிய இரண்டு நிலைகளிலும் விளையாடினார்.[39] போஸ், டெய்லி நியுஸ் & அனலைஸிஸ் என்ற பத்திரிக்கை பேட்டியின் பொது 2009 பருவத்தில் தாம் அணிக்கு திரும்பப்போவதில்லை என்று கூறினார்.[40]

பொதுஈடுபாடு
போஸ், 2004 ஆம் ஆண்டில் நடந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் நடைபெற்ற மீட்பு பணிகளில் உதவி புரிந்தார். இதன் விளைவாக போஸ், தன்னுடைய பௌண்டேசன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் அந்தமான் மற்றும் நிகோபார் உதவி முயற்சியை தொடங்கினார். இந்த உதவித்தொகை திட்டம் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் சமூகத்தில் கீழ் நிலையில் வாழும் குழந்தைகளின் படிப்பிற்கு துணைபுரியும் திட்டமாகும்.[41]

போஸ், அக்ஷரா மையம், பிரேக்துரு, குடிமக்களின் நீதி மற்றும் அமைதி, மற்றும் இந்திய ஸ்பஸ்டிக்ஸ் சங்கம் போன்ற பல அறக்கட்டளைகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார். போஸ், கூடுதலாக 2007 ஆம் ஆண்டு ஆக்ஸ்போம் நிறுவத்தின் உலகளாவிய தூதுவராக இடம்பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.[42] போஸ், 51 மும்பை அறக்கட்டளை நிறுமங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவைகளை ஒரே குடையின் கீழ் உள்ளடக்கிய குழுக்களின் குழு என்ற நிறுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகி ஆவார்.[43] மேலும் இவர் அமெரிக்க இந்திய பௌண்டேசன், உலக இளைஞர் அமைதி இயக்கம்[44] மற்றும் கோள் எச்சரிக்கை[45] போன்றவற்றிற்கு தூதுவராக இருக்கிறார். மேலும் இவர் நர்மதா அணையை கட்டும் திட்டத்தை எதிர்க்கும் நர்மதா பச்சாவ் ஆந்தோலன் என்ற இயக்கத்திற்கு தனது குரல் மொழி ஆதரவை அளித்து வருகிறார்.[46][47] குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஒலி புத்தகங்களை வெளியிட்டார். அவை தேர்ரே தேஸ் ஹோம்ஸ், குட்குடி கர்னா, கலே லகானா; ஸ்பர்ஷ் கே நியம் சீகியே இங்லீஷ்: டிக்கிள் அண்ட் ஹக்ஸ்: லேர்னிங் தி டச்சிங் ரூல்ஸ் ஆகும்.[48]

போஸ் 2004 ஆம் ஆண்டு நடந்த உலக இளைஞர் அமைதி மாநாடு மற்றும் ஆக்ஸ்போர்ட் இல் ஆண், பெண் சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்.[1] 2009 ஆம் ஆண்டு கனடா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பருவ நடவடிக்கை குழுமத்திற்காக உலகில் ஏற்படும் பருவ கால மாற்றம் குறித்து சொற்பொழிவு மேற்கொண்டார். அது மட்டுமல்லாது கோபென்ஹகேன் பருவ மாற்ற கூட்ட எதிர்ப்பாளர்களிடமும் எடுத்துக்கூறினார்.[49][50]

தனிப்பட்ட வாழ்க்கை
ராகுல் போஸ், முன்னதாக தான் இயக்கிய எவ்ரிபடி சேஸ் ஐ அம் ஃபைன் என்ற படத்தில் நடித்த கோயல் பூரியுடன் இணைத்திருந்தார். மேலும், ஏற்கனவே இந்த ஜோடி 2004 ஆம் ஆண்டில் வெளியான ஒயிட் நாய்ஸ் என்ற படத்திலும் இணைந்து நடித்திருந்தனர்.[51][52]

பிரபல இந்தி நடிகர் ராகுல்போஸ். இவர் தமிழில் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக ராகுல்போஸ் சண்டிகர் சென்று இருந்தார். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பிறகு 2 வாழைப்பழங்களுக்கு ஆர்டர் செய்தார். ஓட்டல் ஊழியர்கள் அவரது அறைக்கு வாழைப் பழங்களை கொண்டு வந்து கொடுத்தனர். பில்லில் 2 வாழைப்பழங்கள் விலை ரூ.442 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து அவர் அதிர்ச்சியானார். இதைத்தொடர்ந்து பழங்களையும் பில்லையும் வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார்.
அதில் இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். பழத்துடன் வந்துள்ள பில்லை பாருங்கள் இந்த 2 வாழைப்பழங்களின் விலை ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ.442.50. இதற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை என கேலியாக பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.


இதைத்தொடர்ந்து கலால் மற்றும் வரி விதிப்பு ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார். பழங்களுக்கு வரி விதிப்பது இல்லை என்றும், ஓட்டல் நிர்வாகம் வரிவிதித்தது எப்படி என்று கேட்டு நோட்டீசும் அனுப்பினர். இந்த நிலையில் 2 வாழைப்பழங்களுக்கு ரூ.442.50 வசூலித்த அந்த ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தங்கள் ஓட்டலில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள் இலவசமாக தரப்படும் என்று ஓட்டல் நிர்வாகம் தற்போது அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment