Showing posts with label 2010. Show all posts
Showing posts with label 2010. Show all posts

Sunday, 21 March 2021

LENA HORNE AMERICAN ACTRESS,DANCER BORN 1917 JUNE 30 - 2010 MAY 9

 


LENA HORNE AMERICAN ACTRESS,DANCER BORN 1917 JUNE 30 - 2010 MAY 9



Lena Mary Calhoun Horne (June 30, 1917 – May 9, 2010) was an American dancer, actress, Grammy-winning singer, and civil rights activist. Horne's career spanned over 70 years, appearing in film, television, and theater. Horne joined the chorus of the Cotton Club at the age of 16 and became a nightclub performer before moving to Hollywood.

Horne advocated for human rights and took part in the March on Washington in August 1963. Later she returned to her roots as a nightclub performer and continued to work on television, while releasing well-received record albums. She announced her retirement in March 1980, but the next year starred in a one-woman show, Lena Horne: The Lady and Her Music, which ran for more than 300 performances on Broadway. She then toured the country in the show, earning numerous awards and accolades. Horne continued recording and performing sporadically into the 1990s, retreating from the public eye in 2000. Horne died of congestive heart failure on May 9, 2010, at the age of 92.


Early life[edit]

Lena Horne was born in Bedford–Stuyvesant, Brooklyn.[1] She was reportedly descended from the John C. Calhoun family, and both sides of her family were through a mixture of AfricanNative American, and European descent. She belonged to the upper stratum of middle-class, well-educated black people.[2][3]

Her father, Edwin Fletcher "Teddy" Horne Jr. (1893–1970),[4][5] was a numbers kingpin in the gambling trade. He left the family when she was 3 years old and moved to an upper-middle-class African American community in the Hill District community of PittsburghPennsylvania.[6][7] Her mother, Edna Louise Scottron (1894–1976), was a granddaughter of inventor Samuel R. Scottron. She was an actress with a black theater troupe and traveled extensively.[8] Edna's maternal grandmother, Amelie Louise Ashton, was Senegalese.[9] Horne was raised mainly by her grandparents, Cora Calhoun and Edwin Horne.[5]

When Horne was five, she was sent to live in Georgia.[10] For several years, she traveled with her mother.[11] From 1927 to 1929, she lived with her uncle, Frank S. Horne. He was the Dean of students at Fort Valley Junior Industrial Institute (now part of Fort Valley State University) in Fort Valley, Georgia,[11] who later served as an adviser to President Franklin Delano Roosevelt.[12] From Fort Valley, southwest of Macon, Horne briefly moved to Atlanta with her mother; they returned to New York when Horne was 12 years old.[11] She then attended Girls High School, an all-girls public high school in Brooklyn that has since become Boys and Girls High School; she dropped out without earning a diploma. At age 18, she moved to her father's home in Pittsburgh, staying in the city's Little Harlem for almost five years and learning from native Pittsburghers Billy Strayhorn and Billy Eckstine, among others.[6

Lena Horne, in full Lena Calhoun Horne, (born June 30, 1917, Brooklyn, N.Y., U.S.—died May 9, 2010, New York City), American singer and actress who first came to fame in the 1940s.

Horne left school at age 16 to help support her ailing mother and became a dancer at the Cotton Club in Harlem, New York City. In two years at the Cotton Club she appeared with such entertainers as Cab Calloway and eventually starred in her own shows. In 1935 she joined the Noble Sissle orchestra under the name Helena Horne. Horne was married from 1937 to 1944 to Louis J. Jones. In the early 1940s she was hired to sing for Charlie Barnet’s orchestra. She was discovered by producer John Hammond, and soon after she performed in a solo show at Carnegie Hall in New York City.


In 1942 Horne moved to Los Angeles, after which she appeared in such movies as Cabin in the Sky (1943), Meet Me in Las Vegas (1956), and The Wiz (1978). Her role in the film Stormy Weather (1943) included her rendition of the title song, which became her trademark. A remarkably charismatic entertainer, Horne was one of the most popular singers of her time. One of her albums, Lena Horne at the Waldorf-Astoria (1957), was a longtime best seller, and her first featured performance on Broadway—in the musical Jamaica (1957)—won her a New York Drama Critics’ Poll Award in 1958.


Lena Horne and Eddie (“Rochester”) Anderson in Cabin in the Sky

Lena Horne and Eddie (“Rochester”) Anderson in Cabin in the Sky

Lena Horne and Eddie ("Rochester") Anderson in Cabin in the Sky (1943), directed by Vincente Minnelli.

© 1943 Metro-Goldwyn-Mayer Inc.; photograph from a private collection

Though primarily known as an entertainer, Horne also was noted for her work with civil rights and political organizations; as an actress, she refused to play roles that stereotyped African American women. She was married to Lennie Hayton from 1947 until his death in 1971. Her one-woman show, Lena Horne: The Lady and Her Music (1981), garnered many awards, including a Drama Critics’ Circle Award and a special achievement Tony Award. In 1984 Horne received a Kennedy Center honour for lifetime contribution to the arts, and in 1989 she was given a Grammy Award for lifetime achievement.


Lena Horne, in full Lena Calhoun Horne, (born June 30, 1917, Brooklyn, N.Y., U.S.—died May 9, 2010, New York City), American singer and actress who first came to fame in the 1940s.

Horne left school at age 16 to help support her ailing mother and became a dancer at the Cotton Club in Harlem, New York City. In two years at the Cotton Club she appeared with such entertainers as Cab Calloway and eventually starred in her own shows. In 1935 she joined the Noble Sissle orchestra under the name Helena Horne. Horne was married from 1937 to 1944 to Louis J. Jones. In the early 1940s she was hired to sing for Charlie Barnet’s orchestra. She was discovered by producer John Hammond, and soon after she performed in a solo show at Carnegie Hall in New York City.


In 1942 Horne moved to Los Angeles, after which she appeared in such movies as Cabin in the Sky (1943), Meet Me in Las Vegas (1956), and The Wiz (1978). Her role in the film Stormy Weather (1943) included her rendition of the title song, which became her trademark. A remarkably charismatic entertainer, Horne was one of the most popular singers of her time. One of her albums, Lena Horne at the Waldorf-Astoria (1957), was a longtime best seller, and her first featured performance on Broadway—in the musical Jamaica (1957)—won her a New York Drama Critics’ Poll Award in 1958.


Lena Horne and Eddie (“Rochester”) Anderson in Cabin in the Sky

Lena Horne and Eddie (“Rochester”) Anderson in Cabin in the Sky

Lena Horne and Eddie ("Rochester") Anderson in Cabin in the Sky (1943), directed by Vincente Minnelli.

© 1943 Metro-Goldwyn-Mayer Inc.; photograph from a private collection

Though primarily known as an entertainer, Horne also was noted for her work with civil rights and political organizations; as an actress, she refused to play roles that stereotyped African American women. She was married to Lennie Hayton from 1947 until his death in 1971. Her one-woman show, Lena Horne: The Lady and Her Music (1981), garnered many awards, including a Drama Critics’ Circle Award and a special achievement Tony Award. In 1984 Horne received a Kennedy Center honour for lifetime contribution to the arts, and in 1989 she was given a Grammy Award for lifetime achievement.


Personal life




Horne at her 80th birthday party, 1997

Horne married Louis Jordan Jones, a political operative,[27][28] in January 1937 in Pittsburgh. On December 21, 1937, their daughter, Gail (later known as Gail Lumet Buckley, a writer) was born. They had a son, Edwin Jones (February 7, 1940 – September 12, 1970) who died of kidney disease.[5] Horne and Jones separated in 1940 and divorced in 1944. Horne's second marriage was to Lennie Hayton, who was music director and one of the premier musical conductors and arrangers at MGM, in December 1947 in Paris. They separated in the early 1960s, but never divorced. He died in 1971.[29] In her as-told-to autobiography Lena by Richard Schickel, Horne recounts the enormous pressures she and her husband faced as an interracial couple. She later admitted in an interview in Ebony (May 1980) that she had married Hayton to advance her career and cross the color barrier in show business, but "learned to love him very much".[30]



Horne had affairs with Artie Shaw, Orson Welles, Vincente Minnelli, and the boxer Joe Louis.[15]


Horne also had a long and close relationship with Billy Strayhorn, whom she said she would have married if he had been heterosexual.[31] He was also an important professional mentor to her. Screenwriter Jenny Lumet, known for her award-winning screenplay Rachel Getting Married, is Horne's granddaughter, the daughter of filmmaker Sidney Lumet and Horne's daughter Gail.[32] Her other grandchildren include Gail's other daughter, Amy Lumet, and her son's four children, Thomas, William, Samadhi, and Lena. Her great-grandchildren include Jake Cannavale.[33]


Horne was Catholic.[34][35]


From 1946 to 1962, Horne resided in a St. Albans, Queens, New York, enclave of prosperous African Americans, where she counted among her neighbors Count Basie, Ella Fitzgerald, and other jazz luminaries.[36]

Death

Horne died of congestive heart failure on May 9, 2010.[37] Her funeral took place at St. Ignatius Loyola Church on Park Avenue in New York, where she had been a member.[38] Thousands gathered and attendees included Leontyne Price, Dionne Warwick, Liza Minnelli, Jessye Norman, Chita Rivera, Cicely Tyson, Diahann Carroll, Leslie Uggams, Lauren Bacall, Robert Osborne, Audra McDonald, and Vanessa Williams. Her remains were cremated.[39]

Wednesday, 30 September 2020

CHANDRA BOSE ,MUSIC DIRECTOR BORN 1950 JULY 11- 2010 SEPTEMBER 30

 






CHANDRA BOSE ,MUSIC DIRECTOR 
BORN 1950 JULY 11- 2010 SEPTEMBER 30






Chandrabose (died September 30, 2010[1]) was an Indian Tamil language music composer and singer.[2][3][4] He has composed music for more than 300 movies between the late 1980s and early 1990s.[5] In 2007 he made his debut on the silver screen as an actor.[6

Personal life
Chandrabose's son, Bose Santhosh, has also worked in films as a composer, working in the Malayalam film Sandwich (2011) and the Tamil films, Meenkothi and Deva Kumaran.[7] He is married twice, since 2007 he started acting in Kalaignar TV serials.[8]

Film composer
He was during the 80s, the official composer of the AVM Productions, in particular the Tamil movies, among which some Rajini Kanth, of this decade.


Filmography
Madhurageetham (1977)[9]
Mangudi Minor (1978)
Machanai Paatheengala (1978)
Tharayil Vaazhum Meengal (1979)[2][3]
Saranam Ayyappa (1980)
Parvaiyin Marupakkam (1982)
Oru Malarin Payanam (1985)
Rajathi Rojakili (1985)
Yemaatrathe Yemaaraathe (1985)
Marumagal (1986)
Viduthalai (1986)
Shankar Guru (1987)
Makkal En Pakkam (1987)
Manithan (1987)
Michael Raj (1987)
Adhu Antha Kaalam (1988)
Annanagar Mudhal Theru (1988)
Kadarkarai Thaagam (1988)
Kai Naattu (1988)
Kaliyugam (1988)
Kadhanayagan (1988)
Thaimel Aanai (1988)
Paatti Sollai Thattathe (1988)
Kalicharan (1988)


En Vazhi Thani Vazhi (1988)
Nallavan (1988)
Kazhugumalai Kallan (1988)
Vasanthi (1988)
Chinna Chinna Aasaigal (1989)
Kuttravali (1989)
Annakili Sonna Kathai (1989)
Idhaya Deepam (1989)
Oru Thottil Sabatham (1989)
Karunguyil Kundram (1989)
Raja Chinna Roja (1989)
Pudhiya Paadhai(1989)
Vaai Kozhuppu (1989)
Vettaiyaadu Vilaiyaadu (1989)
Karunguyil Kundram (1989)
Periya Idathu Pillai (1990)
Muthalaali Amma (1990)
Nangal Puthiyavargal (1990)
Maanagara Kaaval (1991)
Sugamana Sumaigal (1992)
Varavu Ettana Selavu Pathana (1994)
Aval Potta Kolam (1995)
Naan Petha Magane (1995)
Sigamani Ramamani (2001)
Aadhikkam (2005)
Some of the hit songs he composed are:


Maam Poove Siru Mainaave (Machanai Paatheengala (1978))
Poi Inri Meiyodu (K.J. Yesudas) (Saranam Ayyappa (1980))
Kaalai Kaalai Murattu Kaalai (Manithan (1987))
Kakki Sattai Potta Machan (Malaysia Vasudevan & S.P. Sailaja) (Shankar Guru (1987))
Medhuva Medhuva (Annanagar Mudhal Theru (1988))
Dillikku Raajanaalum (Paatti Sollai Thattathe (1988))
Super Star-u Yaarunnu Ketta (Raja Chinna Roja (1989))
Pacha Pulla Azhudhuchunaa Paattu Padalaam (Pudhiya Paadhai (1989))
Thodi Raagam Paadava (K.J. Yesudas & K.S. Chithra) (Maanagara Kaaval (1991))
Some of the songs he sang :

Poonchittu Kuruvigalaa"
Yendi Muthamm yedhu punnagai"
Television
1997 Aachi International
1998 Nimmathi Ungal Choice I
1998 Nimmathi Ungal Choice II - Kannammavin Kadhai
1998 Oru Pennin Kadhai
1998 Mangai
1999 Galatta Kudumbam I
1999 Sontham
1999 Nimmathi Ungal Choice III - Thriveni Sangamam
1999 Galatta Kudumbam II - Galatta Sirippu
1999 Nimmathi Ungal Choice IV - Mavilai Thoranam
2001 Take It Easy Vaazhkai
2007 Porantha Veeda Puguntha Veeda
He is also one of the judges on Idea Super Singer

Monday, 18 May 2020

MURALI , TAMIL ACTOR BORN 1964 MAY 19 - SEPTEMBER 8,2010



MURALI , TAMIL ACTOR BORN 
1964 MAY 19 - SEPTEMBER 8,2010


.முரளி (மே 19, 1964 - செப்டம்பர் 8, 2010) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[1] கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். [2]

வாழ்க்கைக் குறிப்பு
சொந்த வாழ்க்கை
முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.

அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார.[சான்று தேவை]

திரை வாழ்க்கை
இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.[3]

அரசியல் வாழ்க்கை
இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.

நடிகர் முரளி ‘இதயம் முரளி’யாகி 25  வருடம் கம்ப்ளீட்டட். அதாங்க  தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இதயம் படம்  ரிலீஸாகி 25 வருடம் முடிகிறது. அப்போது அந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடி, அதேபோல கதையம்சம் கொண்டு புற்றீசல் போல் படங்கள் வந்தது தனிக்கதை. இருக்கட்டும் , காலையில் பிக்கப் மாலையில் ப்ரேக் அப் என்றாகிவிட்ட இன்றைய இணையக் காதலுடன் அந்தப் படத்தை ரீவைண்ட் செய்கையில் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்கிறது. 

* டைட்டில் கார்டு போடுவதிலிருந்து ஆரம்பிக்கலாம். இதயம் என்றாலே உங்கள் இதயத்தில் ஒலிக்கும் ஓசை என்ன? தட்ஸ் இட். அதே டுப் டுப் ட்ரம்ஸ் இசைதான். இசைஞானியும் இதற்கு விதிவிலக்கல்ல.  மென்மையாய் புல்லாங்குழல், வயலின், கிடார், பியானோ என்று தொடங்கும் டைட்டில் இசை சட்டென்று டுப் டுப்புக்கு மாறும். நாம் பார்ப்பதுஇதயம் சம்பந்தப்பட்ட படமாம். ஞாபகப்படுத்துகிறதாம் இசை. ராஜா நீங்களுமா?

* நல்லா இருக்கிற ஹீரோவை  வில்லனாக்கிப் பின் லவ் பண்றது 2016 ஸ்டைல். ஆனா பாவம் , ஹீரோ ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவர்னு நிரூபிக்க டைரக்டர் படாதபாடுபட்டிருப்பார். ஹீரோயின் தலையிலிருந்து பூ கீழே விழ, அதை ஹீரோ எடுத்துக் கொடுத்தாலே லவ் வந்திடணும்னு எதிர்பார்க்கிறது ரொம்பத் தப்பான ஜட்ஜ்மென்ட் சார்.
  

* ஹீரோ காதலைச் சொல்ல வர்றப்போல்லாம் ஏதாவது இடையூறு வரும். அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் க்ராஸ் பண்ணிட்டுப் போகாம அப்படியே அதே இடத்தில் ஃப்ரீஸ் ஆகி நின்னு குறுந்தொகையிலிருந்தோ பிரபல கவிதையிலிருந்தோ சில வரிகள் உருவி அதை ஹீரோவின் மைண்ட் வாய்ஸில் ஒலிக்கவிட்டு டைரக்டர் ரசிகர்களைக் கிச்சுகிச்சு மூட்டியிருப்பார்.

* ஓப்பனிங் சாங். அதுவும் ஹீரோவுக்கு இல்லை. அப்படி இருந்தும்  அந்த சாங்குக்கே ஒரு இன்ட்ரோ கொடுக்கிறதெல்லாம் அடேங்கப்பா அதகளம் இயக்குநரே.


* ஹீரோயின் அக்கம்பக்கம் ஒழுங்கா பார்க்காம வந்து ஹீரோ நெற்றியில் முட்டியதும் ஹீரோவுக்கு ஹார்மோன் கலாட்டா ஆரம்பிப்பதுகூட ஓகே. யார், என்ன, ஏதுன்னே தெரியாம  ஹீரோயின் நடந்துபோற பாதையின் செருப்பு அச்சில் தன் காலையும் பதித்து ஹீரோ நடக்க ஆரம்பிப்பது... எப்படி சார் இப்படியெல்லாம்?

*  காதல் முரளி, படத்தில் காய்ச்சல் வந்த முரளி மாதிரிதான் பேசுவார். நடப்பார். மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட்  மெடிக்கல் காலேஜ் பேஷன்ட் மாதிரியே இருப்பது மெடிக்கல் மிராக்கிள் ப்ரோ.


* டூயல் ரோலுக்கு வித்தியாசம் காட்ட கன்னத்தில் மரு ஒட்டுற மாதிரியே டைரக்டர் இதில் பக்கா வித்தியாசம் காட்டியிருப்பார். ஆனால் டூயல் ரோலுக்கு இல்லை. காதலுக்கு முன்... காதலுக்குப் பின்... கா. மு முரளி தலையை வகிடு எடுத்து சீவி இருப்பார். காதல் வந்ததும் வகிடுத் தலையை கலைத்துவிட்டு மேல்நோக்கி சீவி இருப்பார். லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு டோய்.

*   எவ்வளவு ஈவ் டீஸிங் பார்த்திருப்போம். ஆனா இந்தப் படத்தில்தாங்க ஈவ் டான்ஸிங் காண்பிச்சார் டைரக்டர். பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஹீரோயினை ஒரு ரெளடிக் கும்பல் கிண்டல் செய்யும். விலகி நடக்கும் ஹீரோயினை வழி மறித்து பன்ச் பேசி கையைப் பிடித்து முறுக்கி அந்தச் சமயத்தில் ஹீரோ என்ட்ரியாகி அடித்து உதைத்து... பாஸ் பாஸ்... இது சுத்தமான காதல் கதை பாஸ். ஸோ நாம நினைக்கிற மாதிரி நடக்க கூடாதுங்கிறதில் டைரக்டர் ஸ்ட்ராங்கா இருந்திருக்கார். கேலி பேசிய கும்பல் ' ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ' என்று செம பாட்டுக்கு செம டான்ஸ் ஆட, ஹீரோயின் நடக்க ஹீரோ தனியா நின்னு பழத்தைப் பிழிவார். நிஜமாவே  ஆரஞ்சுப் பழத்தைப் பிழிவார் பாஸ். கேட்டால், பிழியணும்தான்டா நெனச்சேன்பார். அதான் பிழிஞ்சிட்டீங்களே. அப்புறம் என்ன?


* ஹீரோயின் காலையோ அவர் என்ன பிராண்ட் செருப்பு போடுறார்னு பார்க்கவோ ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆனா இந்தப் படத்து ஹீரோ என்ன காரியம் பண்ணுவார்னா 50 ரூபாய்க்கு ஒரு ரூபாய் காயின் சில்லறையா மாற்றி சட்டை மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பஸ்ஸில் ட்ராவல் பண்ணுவார். என்ன டிசைன் இதுனு கேட்கிறீங்களா? அப்போதானே கீழே குனியும்போது எல்லா சில்லறையும் கொட்டும். அதை எடுக்கிற சாக்கில் காலையும் செருப்பையும் பார்க்கலாம். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் சிந்திச்சிருக்காங்கப்பா.

* பேரும் தெரியாது. ஊரும் தெரியாது. ஏன் ஆம்பளையா பொம்பளையான்னே தெரியாது.  இப்போ லவ் பண்ற காலத்துல இருக்கோம். ஆனா 25 வருஷத்துக்கு முன்னாடி லவ்வை லெட்டர்ல எழுதி ஒரே ஒரு ரோஜாப்பூவோட சேர்த்து வெச்சு ஹீரோயின்கிட்ட கொடுக்க பிள்ளையார் கோயிலுக்குப் போய் அர்ச்சனையெல்லாம் பண்ணுவார் ஹீரோ. 'வெள்ளப்பூவே வந்துருக்கு. போற காரியம் சக்சஸ்' னு பூசாரி வாழ்த்தி வழியனுப்பி வைப்பார். ஆனா முரளி நடந்துபோய் லெட்டர் தர்றதுக்கு முன்னாடியே கார்ல ஒருத்தர் ஹீரோயினை கூட்டிட்டுப் போய்டுவார். அப்புறமென்ன  சோகப் பாட்டு பாடுவார் ஹீரோ. ஆனா படம் இன்னும் முடியலையே ப்ரோ.

* ராஜான்னு பேர் ஊருக்கு 100, தெருவுக்கு 10 இருக்கும். ஆனா ஹீரோயின் ராஜான்னு ஹீரோவைப் பார்த்துக் கூப்பிட்டதும் ' நீ அழைத்தபின்புதான் தெரிந்தது. என் பெயர் இத்தனை அழகா என்று' ஸ்டாப் பளாக்கில் கவிதை சொல்றதெல்லாம் நாயமாரே.

* லவ் ஃபெயிலியரானா இப்போ என்ன பண்றாங்க ஹீரோ? சரக்கடிச்சிட்டு 'அடியே அடியே இவளே' னு கண்டமேனிக்கி திட்டிப் பாட்டுப்பாடி நடுரோட்ல வெறித்தனமா ஆடுறாங்க. இதயம் ஹீரோ தாங்க முடியாத சோகத்தில் அழறார். ஏன்டா அழறேன்னு நண்பன் கேட்டா, நடந்த கதையைச் சொல்லணுமா இல்லையா... ஆனா. ரொம்ப கூலா 'இதயத்தில் இடி கண்ணில் மழை' னு கவிதை சொல்றதெல்லாம் அடுக்கவே அடுக்காது ஜி.


*  ஒரு பக்க, லவ் லெட்டர் கொடுக்க யோசிச்ச ஹீரோ ,தான் நான்கு வருசமா எழுதின டைரியை எல்லாத்தையும் கொடுத்து ஹீரோயினைப் படிச்சுப் பார்த்து நல்ல பதிலா சொல்லச் சொல்வார். இதுதானாய்யா லவ் ப்ரபோஸ் பண்ற டக்கு. அதெல்லாம் படிச்சுப் பார்த்து வந்து பதில் சொல்றதுக்குள்ள அந்தம்மாவுக்கு 60 வயசாகிடும். அப்போ இதயம் மட்டும் இல்ல. ஆல் பார்ட்ஸும் டேமேஜிங்லதான் இருக்கும். அந்த மாதிரி சமூகத்திலையா வாழ்ந்தோம்?

* படம் ஆரம்பிச்சு இரண்டு மணி நேரம் கழிச்சுதான் முரளிக்கு இதயத்தில் ப்ரச்னைனே தெரியவரும். ஆனா படம் ஆரம்பித்ததிலிருந்து இதயத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் கோளாறுகள் இருக்கிற மாதிரியேதான் இருப்பார். கைநடுக்கம், கோர்வையா பேச முடியாதது, ஹீரோயின் பார்வையையே எதிர்கொள்ள முடியாமல் எதற்கெடுத்தாலும் தலையைக் குனிவது என்று வித்தியாசமான வியாதிகளை டைரக்டரே கவனிக்கவில்லை போல.
* இதயத்தில் ஏற்பட்டிருக்கும் அவ்வளவு பெரிய டிசீஸுக்கு ஹீரோயினின் ஒற்றைத்துளி கன்ணீரே மருந்துனு டைரக்டர் முடித்திருக்கும் க்ளைமாக்ஸ் ஆசம் ஆசம். எவ்ளோ பெரிய வியாதி. எவ்ளோ சின்ன மருந்து.


* கடைசியா ஒண்ணே ஒண்ணுதான் பாஸ். 25 வருசமா விடை தெரியாம அலைஞ்சிக்கிட்டுருக்கேன். முரளிக்குக் காதல் தோல்வி, காதலின் விரகத்தில்தான் படம் முழுவதும் இருக்கிறார், ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை விரும்பினாலும் அவரிடம் காதலை வெளிப்படுத்த முடியாத ஏக்கமே அவரை நோய்மைக்குத் தள்ளுகிறது. ஆனால் படம் முழுவதும் ஒரு ஃப்ரேமில்கூட அவர் தாடியுடன் திரிவதுபோல் இல்லை. ஃபுல் க்ளீன் ஷேவிங்கில்தான் இருக்கிறார். அது எப்படி பாஸ் அவ்ளோ துக்கத்திலும் உங்களால் பளபள கன்னத்தோட இருக்க முடிஞ்சுது?

நடித்த திரைப்படங்கள்[தொகு]

எண்ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
11984பிரேம பர்வாகன்னடம்
2பூவிலங்குபாண்டியன்தமிழ்
3இங்கேயும் ஒரு கங்கைகாத்தமுத்துதமிழ்
4புதியவன்மனோகர்தமிழ்
51985பகல் நிலவுசெல்வம்தமிழ்
6கீதாஞ்சலிஜேம்ஸ்தமிழ்
7அந்தஸ்துதமிழ்
8அஜேயாகன்னடம்
9இளங்கன்றுதமிழ்
101986புதிர்தமிழ்முதல் இரட்டை வேடம்
11ஒரு மலரின் பயணம்தமிழ்
12மண்ணுக்குள் வைரம்தமிழ்
13காலமெல்லாம் உன் மடியில்தமிழ்
141987வண்ணக்கனவுகள்மூர்த்திதமிழ்
15வளையல் சத்தம்தமிழ்
16துளசிசிவாதமிழ்
17அவள் மெல்ல சிரித்தால்தமிழ்
18மீண்டும் மகான்தமிழ்
191988புயல் பாடும் பாட்டுதமிழ்
20குடும்பம் ஒரு கோவில்தமிழ்
21தப்புக்கணக்குதமிழ்
221989தங்கமணி ரங்கமணிரங்கமணிதமிழ்
23கைவீசம்மா கைவீசுதமிழ்
24நினைவுச்சின்னம்தமிழ்
251990புது வசந்தம்பாலுதமிழ்
26பாலம்தமிழ்
27வெற்றிமாலைதமிழ்
28சிலம்புதமிழ்
29நானும் இந்த ஊருதான்தமிழ்
30நாங்கள் புதியவர்கள்தமிழ்
31சிறையில் சில ராகங்கள்தமிழ்
32புதியக்காற்றுதமிழ்
33நம்ம ஊரு பூவாத்தாதமிழ்
341991சாமி போட்ட முடிச்சுதமிழ்
35இதயம்ராஜாதமிழ்
36குறும்புக்காரன்தமிழ்
37இரவுச்சூரியன்தமிழ்
381992தங்க மனசுக்காரன்முருகேஷ் (முருகன்)தமிழ்
39சின்ன பசங்க நாங்கமுத்துக்காளைதமிழ்
40தங்கராசுதங்கராசுதமிழ்
41என்றும் அன்புடன்தமிழ்
42தாலி கட்டிய ராசாதமிழ்
431993மணிக்குயில்தமிழ்
44தங்கக்கிளிமூர்த்திதமிழ்
451994மஞ்சுவிரட்டுதமிழ்
46அதர்மம்தமிழ்
47என் ஆசை மச்சான்சுப்ரமணிதமிழ்
48சத்யவான்தமிழ்
491995ஆகாயப் பூக்கள்தமிழ்
50தொண்டன்தமிழ்
511996பூவே உனக்காகஅவராகவேதமிழ்சிறப்புத் தோற்றம்
52பூமணிதமிழ்
531997காலமெல்லாம் காதல் வாழ்கதமிழ்
54பொற்காலம்மாணிக்கம்தமிழ்
55ரோஜா மலரேகண்ணன்தமிழ்
561998காதலே நிம்மதிமோகன்தமிழ்
57தினம்தோறும்தமிழ்
58வீரத்தாலாட்டுதமிழ்
59ரத்னாரத்னா, முத்துவேல்தமிழ்
60பூந்தோட்டம்தமிழ்
61என் ஆச ராசாவேதமிழ்
62உன்னுடன்சந்தோஷ்தமிழ்
63தேசியகீதம்தமிழ்
641999கனவே கலையாதேஆனந்த்தமிழ்
65ஊட்டிபாலுதமிழ்
66பூவாசம்தமிழ்
67இரணியன்இரணியன்தமிழ்
682000வெற்றிக் கொடி கட்டுசேகர்தமிழ்
69மனுநீதிமுரளிதர்மா
702001கண்ணுக்கு கண்ணாகதர்மாதமிழ்
71சொன்னால் தான் காதலாமுரளிதமிழ்
72ஆனந்தம்மாதவன்தமிழ்
73சமுத்திரம்தங்கராசுதமிழ்
74அள்ளித்தந்த வானம்மாதவன்தமிழ்
75கடல் பூக்கள்கருத்தையாதமிழ்சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
762002சுந்தரா டிராவல்ஸ்கோபிகிருஷ்ணாதமிழ்
77காமராசுகாமராசுதமிழ்
78நம்ம வீட்டு கல்யாணம்ரவிதமிழ்
792003காதலுடன்கல்யாதமிழ்
802004அறிவுமணிஅறிவுமணிதமிழ்
812006பாசக்கிளிகள்செவத்தய்யாதமிழ்
822009எங்கள் ராசி நல்ல ராசிவிஜய்தமிழ்
83நீ உன்னை அறிந்தால்கோபால்தமிழ்
842010பாணா காத்தாடி'இதயம்' ராஜாதமிழ்சிறப்புத் தோற்றம்

மறைவு[தொகு]

இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.[4]

Saturday, 16 May 2020

ANURADHA RAMANAN , WRITER BORN JUNE 29,1947 - MAY 16,2010



ANURADHA RAMANAN , WRITER BORN 
JUNE 29,1947 - MAY 16,2010




..அனுராதா ரமணன் (Anuradha Ramanan) (ஜூன் 29, 1947 – மே 16, 2010)[1] சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.
வாழ்க்கைக் குறிப்பு
1947 இல் அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.[2] இவர் கணவர் பெயர் ரமணன்[3]. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.

ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.[2] பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.[2]

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்[4] 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.[2] அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது.[3] இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[3] கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.[2] அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. [5] இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.[6] மேலும் இவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.[3] தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.[3]
திரைப்படங்கள்
சிறை

கூட்டுப்புழுக்கள்
ஒரு மலரின் பயணம்
ஒரு வீடு இருவாசல்
தொலைக்காட்சித் தொடர்கள்
பாசம்
புன்னகை
அர்ச்சனைப் பூக்கள்
பன்னீர் புஷ்பங்கள்
பதக்கம்
1978 ஆம் ஆண்டு எம். ஜி. ஆரிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற்றார்.

இறப்பு
மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.[3]


ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஜெயேந்திரர் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசினார், கையைப் பிடித்து இழுத்து மிகஅநாகரீகமாக நடந்து கொண்டார், தனது ஆசைக்குப் பணியுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஜெயேந்திரர்குறித்து பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.

காவல்துறையிடம் ஒரு பெண் எழுத்தாளர் புகார் கூறியிருப்பது குறித்து தகவல்கள் கிடைத்தவுடன், அது அனுராதாரமணன் தான் என்றும் தெரியவந்தது. ஆனால், அவரது பெயரைக் கெடுக்க வேண்டாம் என்பதால் நிருபர்கள்அனைவருமே பெயரைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்தனர்.பல ஆண்டுகளுக்கு முன் அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டதாககடந்த ஆண்டு தான் அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.ஜெயேந்திரரின் அந்தரங்க அசிங்க வாழ்க்கை குறித்து குமுதம் வார இதழில் அவர் தொடராக எழுத ஆரம்பித்தார்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த சில பிரபல பாஜக தலைவர்களின் இருண்ட முகங்கள் குறித்தும் அவர் எழுதினார்.ஆனால், பல்வேறு தரப்பு பிரஷர்களால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது.


தற்போது சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நேர்ந்தஅவமானத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் அனுராதா. சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைஅவர் சந்தித்தார். பேச்சின்போது பலமுறை உடைந்த அழுதார்.

சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண்என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப்
பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம்சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாகஎன்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர்.அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும்
அநாகரீகமானவை. அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறேஅங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்)எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார். பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையேசீரழித்து விடுவேன் என்று மிரட்டினார். புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயே இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே
என்றுகூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன். மறுநாள் என்னைசங்கர மடத்துக்கு அழைத்துப் போன பெண் தன் கணவருடன் என் வீட்டுக்கு வந்தாள். இருவரும் குடித்திருந்தனர்.இருவரும் சேர்ந்து மடாதிபதியை எதிர்த்துப் பேசுறியா என்று கேட்டபடி அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அதிர்ந்து போனேன். அடுத்து உடல் நலமும்பாதிக்கப்பட்டது. இந்தத் தகவலை அப்போது உயர் பதவியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தனியே சந்தித்துக் கூறினேன்.அவர் உடனே புகார் கொடுங்க.. அவனை உள்ளே வைக்கிறேன் என்றார். ஆனால், சங்கர மடத்தின் பலம் அறிந்தவள் நான். இதனால் புகார் கொடுக்க நான் தயாராக இல்லை என்றேன்.அவரிடம் கதறி அழுதபடியே எழ முயன்றேன். அப்போது எனக்கு ஒரு கால் வரவில்லை, தொடர்ந்து ஒரு கையும் வரவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது. சரிந்துவிழுந்த என்னை அந்த அதிகாரி தான் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு வைத்து என்னைக் கொலை செய்யவும் முயற்சிநடந்தது. சங்கர மடத்து ஆட்கள் இருவர் விஷ ஊசியுடன் அங்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாகநல்லவர்கள் சிலரின் துணையால் தப்பிவிட்டேன். ஒரு வழியாய் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தேன். ஆனால், மடத்தில் எனக்கு நடந்த ஆபாசம் என் மனதைபுண்படுத்தியிருந்தது. இதனால் ஒரு வருடம் எழுதுவதையே கூட நிறுத்திவிட்டேன். அப்புறம் நடந்து சென்றபோது லாரி ஏற்றிக் கொல்லவும் அவர்கள் முயற்சித்தார்கள். அதிலிருந்தும் நான்மீண்டேன்.


ஆனால், இதை போலீசில் சொல்லவில்லை. என்னையும் என் இரு மகள்களையும் அவர்கள் அழிக்கும் சக்திபடைத்தவர்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என் மகள்கள் மீது ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டினார்கள். கணவர் இல்லாத நான் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வரையிலாவது உயிரோடு இருக்க வேண்டுமேஎன்பதற்காக அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன். என் மகள்களுக்கு மணமுடித்த பின்னர் என் ஒட்டுமொத்த மன பலத்தையும் திரட்டிக் கொண்டு வார இதழ் ஒன்றில்மடத்தில் நடந்த ஆபாச சம்பவத்தை தொடராக எழுத ஆரம்பித்தேன். இதையடுத்து எனக்கு மடத்திலிருந்து மிரட்டல்கள் வந்தன. அந்தப் பத்திரிக்கைக்கும் பல வகையில் மிரட்டல்கள்வந்தன. இதனால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னை கூப்பிட்டு அனுப்பியது மடம். இந்த முறை சிலரது துணையுடன்அங்கு போனேன். அப்போது நடந்த சம்பவத்தை அப்படியே மறைத்துவிட வேண்டும், என்னை மன்னிக்கவேண்டும், இதை யாரிடமும் சொல்லக் கூடாது. எவ்வளவு பணம் வேண்டும் என்று பேரம் தொடங்கினார்சங்கராச்சாரியார். ஆனால், உன்னை நானும் கடவுளும் மன்னிக்க வேண்டும் என்றால், உன் காவி உடையை உடனே நீகலைந்துவிட்டு மடாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். அது தான் நீ செய்துள்ள பாவங்களைப் போக்கஒரே வழி என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். லட்சக்கணக்கான குடும்பங்களில் கடவுளாக பூஜிக்கப்படும் ஒரு மனிதரின் மறு பக்கம் எனக்குத் தெரியவந்தபோது நான் மிகவும் அதிர்ந்து போனேன். அவர் தற்போது செய்திருக்கும் செயல்கள் கடவுளால் கூடமன்னிக்க முடியாதது. அந்த கருப்பு மனிதரின் முகத் திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு நேர்ந்த அவமானத்தைஇப்போது வெளியிட்டுள்ளேன். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. மேலும் என் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பல செய்தி ஊடகங்களும் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில்,இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதால் வெளியில் சொல்கிறேன் என்றார். பேசும்போது பல முறை மூத்த எழுத்தாளரான அனுராதார ரமணன் உடைந்து போய் அழுததும், தனக்கு நேர்ந்தஅவமானங்களை கண்ணீருடன் அவர் சொன்னதும் மனதை பெரிதும் வருத்தியது. பேட்டியின்போது இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பைச் சேர்ந்த சுதா சேஷய்யன் உள்ளிட்ட மகளிர்அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். அனுராதாவின் சார்பில் மடத்துக்கு எதிராக வழக்கை நடத்தவும்அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. அனுராதாவிடம் போலீஸ் விசாரணை: இந் நிலையில் அனுராதா ரமணன் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் சுமார் 4 மணி நேரம்விசாரணை நடந்துள்ளது. மடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியிடம் விளக்கினார். இதை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளது.      

.- எஸ்.ரஜத்

இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் - பாலா) இருவரில், சுரேஷின் மனைவியும், அனுராதா ரமணனின் தங்கையுமான ஜெயந்தி சுரேஷ், 33 ஆண்டுகள், அனுராதா ரமணனுடன், அவர் நிழல் போல வாழ்ந்தவர். அவருக்கு செகரட்டரியாக, உற்ற தோழியாக, உடல் நலம் பேணுபவராக, நெருக்கமான துணையாக, அவர் எழுத்துக்களுக்கு முதல் வாசகியாக, வாழ்ந்திருக்கும் ஜெயந்தி சுரேஷ், சமீபத்தில் காலமான அனுராதா ரமணன் பற்றி நினைவு கூர்கிறார்...
சொந்தத்தில், அனு எனக்கு அக்கா என்றாலும், அவரது இரு மகள்கள் சுதா, சுபா இருவரைப் போலவே, எனக்கும் அவர் பாசமிக்க அனும்மா தான். அவர், எழுத்துலகிற்கு வந்த ஆண்டு 1977. எழுதிய சிறுகதைகள், ஆயிரத்திற்கும் மேலே. எழுதிய நாவல்கள், தொடர் கதைகள் 850க்கும் மேல். திரைப்படமான நாவல்கள் பல. தொலைக்காட்சி தொடர்கள் பலப்பல. அவரது 18ம் வயதில், அவருக்கு திருமணம் நடந்தது; அவருடைய 28 வயதில், அவர் கணவர் ரமணன் இறந்தார்.
மொத்த திருமண வாழ்க்கை, பத்தே ஆண்டுகள் தான்.
ஓவியம் வரைவதில் வல்லவர். சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில், முறையாக ஓவியம் பயின்றார். பரீட்சை சமயத்தில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்படவே, இடது கையினாலும் வரையப் பயின்று, பரீட்சையில் வெற்றி பெற்றார்.
இந்தியன் ஹவுஸ் ஒய்ப், மங்கையர் மலர், அதன் இந்தி பதிப்பு மூன்று இதழ்களிலும், "லேஅவுட்' ஓவியராக அவர் பணியாற்றிய சமயம். தினமணி கதிரில், உதவி ஆசிரியர் சி.ஆர்.கண்ணனை நேரில் சந்தித்து, ஓவியங்கள் வரைய வாய்ப்பு கோரினார். அப்போது, அவர் மறந்துவிட்டுச் சென்ற பென்சில் ஓவியங்கள், அவற்றில் இருந்த குறிப்புகளை ரசித்த கண்ணன், "நீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகள் நன்றாக, வித்தியாசமாக இருக்கின்றன... எழுதுங்கள்!' என்று உற்சாகப்படுத்தினார். அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் உருவானார்.
சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் என்ற பரிமாணங்களைத் தவிர, அனுராதா ரமணன் செய்த மற்றொரு முக்கிய சாதனை, பல்லா யிரக்கணக்கான வாசகர்களின் சொந்த வாழ்க்கை யில் ஏற்படும் பிரச்னைகளை, கனிவாக புரிந்துகொண்டு, அவற்றுக்கு யதார்த்தமான தீர்வுகள் கூறியது தான்.

தினமலர் வாரமலர் இதழில், 15 ஆண்டு களுக்கு மேலாக, ஒவ்வொரு வாரமும், "அன்புடன் அந்தரங்கம்' பகுதியில், இவர் எழுதிய பயனுள்ள ஆலோசனைகனை, ஏராளமான வாசகர்கள் படித்து, பயன் பெற்றனர். ஒரு வார இதழில், தொடர்ந்து, ஒரு எழுத்தாளர் இத்தனை வருடங்கள் எழுதியிருப்பதும் மாபெரும் சாதனை.
தினமலர் வாரமலர் மூலம், ஆலோசனை பெற்ற பலர், அவரது விலாசம் அறிந்து, வீட்டுக்கும் சென்று தொடர்பு கொண்டனர். அவர்களோடு பேசி, பிரச்னைகளை அலசி, தீர்வு சொல்லும் நேரடி கவுன்சிலிங், கடந்த 10 ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்தது.
மே 2000ல், இவருக்கு, "பைபாஸ் சர்ஜரி' - இதய மாற்றுவழி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 35 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். "நான் பிழைச்சு வந்ததே பெரிய விஷயம். நான் வாழ்கிற ஒவ்வொரு நாளுமே, எனக்கு போனஸ் மாதிரி தான்!' என்றார். அதை அடுத்து எடுத்த முடிவு தான், நேரம் கிடைக்கும் போதெல் லாம் நேரடி கவுன்சிலிங்.
டெலிபோனில், நேரில், வாரமலர் இதழ் மூலம், அக்கறையாக பிரச்னை களுக்கு தீர்வு சொல்வார். அவரை ஒரு தாயாக, சகோதரியாக, நல்ல தோழியாக மற்றவர் கள் கண்டனர். தனக்கு கிடைக் கிற நேரத்தை கூட, மத்தவங்க வாழ்க்கை சிறப்பாக, சரியாக வேண்டும் என்பதற்கே முன்னுரிமை அளிப்பார்.

நேரடி கவுன்சிலிங் போது, எப்போதும் கூடவே இருந்தவள் என்ற முறையில், அனு கையாளும் பலவிதமான பிரச்னைகளைக் கண்டு, வியந்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாதது, புரிதல் இல்லாதது, பல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துவிட்ட ஒரு இளம் பெண்ணை, முதலில் சாப்பிட வைத்து, அன்பாக பேசி, அவரது பிரச்னைக்கு காரணம் கண்டு, சரி செய்து, மீண்டும் நம்பிக்கையோடு வாழ வைத்திருக்கிறார்.
மறக்க முடியாத அனுபவம் ஒன்று:
தன் காதலனை நம்பி, கர்ப்பமாகிவிட்ட இளம் பெண்; துபாயில் பணி புரியும் இளைஞர். கர்ப்பத்தை இனியும் மறைக்க முடியாத நிலை. உடனே சென்னைக்கு வர முடியாத சூழ்நிலையில் காதலன். தன் சொந்த செலவில், துபாய்க்கு அன்று மட்டும் ஐந்து முறை பேசி, காதலனை கன்வின்ஸ் பண்ணி, இளம் பெண்ணை, அவர் உடனே ஏற்றுக் கொள்ளச் செய்தார். இரு குடும்பங் களும், அவர்கள் காதலை ஏற்று, இப்போது கணவன், மனைவி, குழந்தை மூவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
நம்மில் பலருக்கு, உடல்நிலை பிரச்னை, ஆபரேஷன், ஐ.சி.யு., வாசம் என்றாலே பயம் தான் வருகிறது. ஆபரேஷன், சிகிச்சை என்று பல தடவை மருத்துவமனை வாசம், அதிலும் ஐ.சி.யு., என்பதை சிறிதும் கவலையின்றி, நகைச் சுவையோடு பார்க்கவும், ஐ.சி.யு.,க்கு செல்வதை ஒரு பிக்னிக் போல என்று வர்ணிக்கவும் அனுவால் மட்டும் தான் முடியும். மருத்துவமனையில் இருந்தாலும், "பளிச்'சென்று, சிரித்த முகத்தோடு, நன்றாக உடையணிந்து இருப்பார். இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் கூட, "எல்லா பேஷன்ட்களும் உங்களை மாதிரி குதூகலமாக, சிரித்துக் கொண்டு இருந்தால், எங்களுக்கு ரொம்ப தெம்பாக இருக்கும்...' என்பார்.
சுயசரிதம் என்றோ, வாழ்க்கை வரலாறு என்றோ, பிரத்யேகமாக அவர் புத்தகம் எழுதவில்லை. ஆனாலும், தன் வாழ்க்கை அனுபவங்களை, தன் உணர்வுகளை, எண்ணங்களை, நான்கு மாறுபட்ட புத்தகங்களாக எழுதியிருக்கிறார். "மீண்டும் மீண்டும் உயிர்த் தெழலாம்!' என்ற தலைப்பில், மங்கையர் மலரில் தொடராக எழுதினார்.
எப்போதுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கணும் என்பது அனுவின் நித்ய மந்திரம். வீட்டிலோ, விழாவிலோ, மருத்துவமனையிலோ... எந்த இடமாக இருந்தாலும் சரி, கண்ணுக்கு மை, உதட்டுக்கு லிப்ஸ்டிக், திலகம் பொட்டு, கீழே வெள்ளை சாந்தில் பிறை நிலா, கீழே அரக்கு நிற சாந்து பொட்டு, பளிச்சென்று பட்டுப்புடவை. இவை அவரது டிரேட் மார்க் தோற்றம்.
"என் இறுதி யாத்திரையின் போது, எதுவும் கலைந்தோ, சரியாக இல்லாமலோ இருக்கக் கூடாது...' என்பது, அவர் எனக்கு இட்ட கட்டளை. அவருக்கு மிகவும் பிடித்த அரக்குப் புடவை கட்டி, அவருக்கு பிடித்த டிரேட் மார்க் தோற்றத்துடன், அவர் இறுதி யாத்திரை நடைபெற்றது. திருமணமாகி, அமெரிக்காவில் வசிக்கும் தன் மகள்கள் சுதா, சுபா இருவரிடம், அனும்மா சொன்ன கடைசி வார்த்தைகள் - "பீ பாசிடிவ்!' இறப்பற்கு முந்தைய நாள், என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள், "எப்போதும் சிரிக்கக்கிட்டே இரு!' - பிறகு நினைவு தவறியது.
அனு, எங்களை விட்டுப் போனது, மே 16ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. அன்று அட்சய திரிதியை. தான் இறந்த பிறகு, தன் உடலை மருத்துவ படிப்பிற்காக, தானம் செய்ய விரும்பினார். 33 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் உடலை தானம் செய்ய இயலவில்லை; ஆனால், கண்கள் மட்டும் நன்றாக இருந்தன. சங்கர நேத்ராலயாவிற்கு போன் செய்து வரச் சொன்னேன். உடனே வந்து, அவரது கண்களை எடுத்துச் சென்றனர். இனி யாரோ இருவர், அனுவின் கண்களால் பார்வை பெறுவர். அட்சய திரிதியை அன்று, தானம் கொடுக்க வேண்டும் என்பர். அதற்கேற்ப, அனுவின் கண்கள், அன்று தானம் செய்யப்பட்டன.

நீளமாக மை தீட்டிய கண்கள், நீண்ட திலகம், நிறைய கற்கள் வைத்த மூக்குத்தி, பளீர் சிரிப்பு என தமிழ் எழுத்து உலகில் மறக்கமுடியாத குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரர் அனுராதா ரமணன். ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வெகுஜன வாசகர்களை தம் பக்கம் இழுத்தவர். அவருடனான தன் மலரும் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பல காலம் அவருடன் இருந்த அவருடைய சகோதரி ஜெயந்தி. “அக்காவிற்கு உடன் பிறந்த சகோதரர்கள் இரண்டு பேர். சகோதரி ஒருவர். அக்காதான் மூத்தவர். 1947ல் பிறந்தார். அக்காவின் அம்மா வழி தாத்தா ஆர். பாலசுப்ரமணியம் பிரபல நடிகர். ‘மதுரை வீரன்’ படத்தில் பானுமதிக்கு அப்பாவாக நடித்தவர். அக்காவின் பெற்றோர் மேட்டூரில் வசித்தபோது அக்கா மட்டும் சென்னையிலே அவரது தாத்தா வீட்டிலே வளர்ந்தார்.

அக்காவிற்கு பதினெட்டு வயது இருக்கும் போது திருமணம் நடந்தது. இரு மகள்கள் பிறந்தனர். பெரிய கொண்டாட்டமில்லாத திருமண வாழ்க்கை. அதுவும் பத்து வருடங்களில் முடிந்து போனது. நான் அக்காவிற்கு பெரியப்பா மகள். சொந்த சகோதரியாக இல்லாதபோதும் சின்ன வயதில் இருந்தே அக்காவுக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது.அவர் கணவர் இறந்தபோது நான் அடிக்கடி அக்காவைப் பார்க்க போவேன். அவரது சொந்த சகோதரிக்கு அப்போதுதான் திருமணம் முடிந்து வெளியூரில் இருந்ததால் அக்காவிற்கு நான் ஒரு சிறந்த துணையாகிப் போனேன். அக்கா ஓவியம் நன்றாக வரைவார். அதனால் கணவர் இறந்தபிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக சென்னையில் ஒரு பத்திரிகையில் ஒரு வருடம் லே அவுட் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றினார்.

ஒரு சமயம் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என பத்து நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்தார். பத்து நாட்கள் விடுமுறை முடிந்து போனால் அங்கு இன்னொரு ஓவியர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து மோதலில் அக்கா அந்த வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தார்.‘இன்னும் ஆறு மாதங்களில் மஞ்சள் பத்திரிகையைத் தவிர என் பெயர் எல்லா பத்திரிகைகளிலும் வரும்படி செய்வேன்’ என ஒரு கோபத்தில் கூறி விட்டு வெளியே வந்தார். அந்தப் பத்திரிகையில் இருந்து வெளியே வந்த பின் அங்கிருந்தபோது உடன் வேலை பார்த்த உதவி ஆசிரியை ஒருவரின் கதைகளை ஃபேர் காப்பி எழுதி கொடுக்க ஆரம்பித்தார்.

அக்கா அந்தக் கதைகளில் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போன அந்த உதவி ஆசிரியர் ‘நீயே கதை எழுதலாம். உனக்கு அந்த திறமை இருக்கு’ என ஊக்குவித்தார். அடுத்து ‘மங்கை’ என்ற பத்திரிகையில் வேலை விஷயமாக போய் பேசிய போது அதன் ஆசிரியர் நீங்களே ஒரு கதை எழுதி அதற்கு படமும் வரைந்து வாருங்கள் எனச் சொல்லி அனுப்பினார்.

அடுத்து ‘தினமணிக் கதிரில்’ ஓவியர் வேலை விஷயமாக சென்ற போது அக்கா தனது ஓவிய புத்தகத்தை அங்கேயே மறந்து வைத்து விட்டு வந்துவிட்டார். எப்போதும் தனது ஓவியப்புத்தகத்தில் தனக்குப்பிடித்த ஓவியங்களை வரைவதோடு அது சம்பந்தப்பட்ட சில விஷயங்களையும் சுவாரஸ்யமாக எழுதும் பழக்கம் உடையவர் அக்கா.

அதை பார்த்த தினமணிக்கதிரின் ஆசிரியர் சி.ஆர்.கண்ணன் இவரை கூப்பிட்டு ‘தமிழில் பெண் எழுத்தாளர்கள் அவ்வளவாக இல்லை. நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். கதை எழுதுங்கள். நன்கு வளரமுடியும்’ என ஊக்குவித்தார். இளம் பருவத்திலேயே அக்காவிற்கு நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்தது. நல்ல கற்பனைத்திறனும் இருந்தது. மேலும் இப்படி பலரும் சொல்லவே அக்கா கதை எழுத ஆரம்பித்தார்.

அக்காவின் முதல் கதை ‘கனவு மலர்கள் கருகும் போது'...  ‘மங்கை’ இதழில் வெளியானது. அதில் படத்திற்கு மட்டும் ‘அனு’ என தன் சொந்த பெயரைப் போட்ட அக்கா கதையை ‘சாம்பவி’ என்ற புனைப்பெயரில் எழுதி இருந்தார். அந்த கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த ‘சாம்பவி’ யார் என கேட்டு நிறைய பேர் கடிதம் எழுதி இருந்தனர்.

அதன் பிறகு ‘தினமணிக்கதிரில்’ தனது சொந்தப் பெயரிலே அக்கா கதை எழுதினார். அதற்கும் நல்ல பாராட்டு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். சில கதைகள் திரும்பி வந்த போதும், கதையில் குறைவில்லை. இந்தந்த இடத்திற்கு இப்படி கதைகள் எழுத வேண்டும் என புரிந்து கொண்டார். எந்தப் பத்திரிகைக்கு எந்த கதை சரியாக இருக்கும் என பார்த்து அனுப்பி வைப்பார். அது வெளியாகும். அதன் பிறகு அவரது எழுத்துலக வாழ்க்கை வேகம் பிடிக்க ஆரம்பித்தது.

‘இதயம் பேசுகிறது’ 1978ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் அக்காவின் கதை தங்கப் பதக்கம் பெற்றது. அப்போதைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர் கையில் அக்கா அந்த தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அனு அக்கா நாவல்களும் எழுத ஆரம்பித்தார். நாவல்களுக்கு நடுவில் ஒரு மாற்றத்துக்காக சிறுகதைகள் எழுதுவார். தொடர்களும் எழுத ஆரம்பித்தார். 

ஆண்டு தொடக்கத்தில் இரண்டு பெரிய டைரிகள் வாங்குவார். அதில் ஒன்றில் தனிப்பட்ட விஷயங்களும் மற்றொன்றில் கதைக்கான குறிப்புகளும் எழுதி வைப்பார். தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை சின்ன கருக்களாக குறித்து வைத்துக் கொள்வார். இந்த சமயத்தில் இந்தப் பத்திரிகைக்கு இது சரியாக இருக்கும் என அந்தக் கருவை கதையாக எழுதுவார்.

அவரது நாவல்கள் சில சினிமாவாக வெளிவந்தன. ‘கூட்டுப்புழுக்கள்’, ‘சிறை’ ஆகிய நாவல்களை ஆர்.சி. சக்தி படமாக்கினார். ஆர்.சி. சக்தி அக்காவின் எழுத்துக்கு நல்ல ரசிகர். நடிகை லஷ்மி அக்காவின் தோழி. அவர் ‘சிறை’ கதையை படித்து அது தனக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஆர்.சி. சக்தியிடம் அது குறித்துச் சொல்லி ‘இந்த கதையை நீங்கள் படமாக எடுத்தால் நான் நடிக்கிறேன்’ என சொன்னாராம்.

பின்னர் அதன்படி நடிக்கவும் செய்தார். அந்தப் படம் நல்ல வெற்றி பெற்றது. அந்தக் கதை ‘ஆனந்த விகடன்’ நடத்திய போட்டிக்காக நான் அனுப்பியது. அக்கா ‘நீயே ஏதாவது ஒரு கதையை அனுப்பி வை’ என்றார். அக்கா எழுதியதில் இந்தக் கதைதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அதையே அனுப்பிவைத்தேன்.

‘சிறை’ யில் வருவதுபோன்ற ஒரு சம்பவத்தை அக்கா பார்த்திருந்ததால் அதன் பாதிப்பில் அப்படி ஒரு கதையை எழுதி இருந்தார். விகடன் பொன்விழாவில் அந்தக் கதை முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய் பெற்றது. அந்தக் கதை வெளியானபோது பிராமணர் சங்கத்தினரிடம் இருந்து பயங்கர எதிர்ப்பு வந்தது. வீட்டுக்கு வந்து மிரட்டினர்.

அக்கா அசரவில்லை. ‘எனக்கோ, என் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணுக்கோ நடந்திருந்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றியதை எழுதினேன்’ என வலிமையாக பேசி அவர்களை அனுப்பி வைத்தார். அந்தக் கதை தேர்வுக் குழுவில் எழுத்தாளர் லஷ்மி இருந்தார். பரிசு அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் ஒரு சமயம் அக்காவிடம் ‘உன் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நீ நன்றாக வருவாய்’ என பாராட்டினார். எங்களுக்கு விருந்து வைத்தார். அதற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் அம்மா - மகள் போன்ற ஒரு அன்பு இருந்தது. அக்காவின் பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்தன. நான் பல சமயங்களில் அக்காவுக்குத் துணையாக இருந்தேன். எனக்குத் திருமணமான பின்னரும் கூட அக்காவிற்கு உதவியக இருந்தேன்.

ஆனால் குழந்தைகள் பிறந்தபிறகு என்னால் அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. என் குழந்தைகள் வளர்ந்த பிறகு மறுபடி அக்காவிற்கு உதவியாக இருக்க ஆரம்பித்தேன். அக்கா எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் கற்றுத்தருவார். மனிதர்களுடன் பேசுவது எப்படி, பழகுவது எப்படி என கற்றுத் தந்தார். மனிதநேயத்தையும் கற்றுத் தந்தார்.

எனக்கும் என் கணவருக்கும் (இரட்டையர்கள் எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலா(சுபா) இணையில் சுரேஷ்) திருமணம் பேசி முடித்து வைத்ததும் அக்காதான். சீரியஸாகப் பெண்களின் கதையை எழுதினாலும் அக்காவிற்கு ஜனரஞ்சகமான படங்கள் பார்க்கத் தான் பிடிக்கும். துன்பியல் படங்களை பார்க்க விரும்ப மாட்டார். புதிதாக எழுத வருபவர்களுக்கு வழிகாட்டுவார்.ஏதாவது ஒரு உதவி தேவைப்பட்டால் செய்வார். அக்காவிற்கு சமையலில் தனிப்பிரியம். நன்கு ருசியாக சாப்பிடக் கூடியவர். யாராவது பத்திரிகையாளர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருமுன்னே சமைத்து வைத்துவிடுவார். அவர்கள் சாப்பிடாமல் திரும்பிப் போக முடியாது.வீட்டில் இப்படி, பார்த்துப் பார்த்து ருசியாக சமைத்து சாப்பிடுபவர் வெளியிடங்களில் யாரேனும் அன்பாக பரிமாறும் விருந்து சுமாராக இருந்தாலும் நன்றாக இருக்கிறது எனச் சொல்லி சாப்பிடுவார். ‘நம் வார்த்தை அவர்களுக்கு எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறது பார்’ என்பார். பெண்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு பத்திரிகையுடன் இணைந்து ஒரு நலத்திட்டத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் சிலருக்கு உதவிகளும் செய்தார். ஆனால் அதனை தொடர முடியாமல் போய்விட்டது.

தன் கணவர் இறந்தபோதும் தன்னை யாரும் பரிதாபமாக பார்க்கக் கூடாது என்று விரும்பினார். அதனால் எப்போதும் தன்னை நன்கு அலங்கரித்துக்கொள்ள விரும்புவார். எவ்வளவு உடம்பு முடியாத போதும் காலை எட்டு மணிக்கெல்லாம் தயாராகிவிடுவார். பைபாஸ் சர்ஜரிக்கு பின் ஏதாவது நல்ல விஷயம் செய்ய வேண்டும் என நினைத்து ‘அன்புடன் அந்தரங்கம்’ பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்கள் எழுதினார்.அது பல பெண்களுக்கு வழிகாட்டியது. பலர் நேரிலும் கவுன்சிலிங்கிற்காக வர ஆரம்பித்தார்கள். ஏழைகளிடம் அவர் ஒரு போதும் பணம் வாங்கியதே இல்லை. அதுமட்டுமில்லாமல் யார் எந்த நேரத்தில் வந்தாலும் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து உட்கார்ந்துவிடுவார். தன் கண்களை தானம் செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லி இருந்தார்.அதன்படி 2010ம் ஆண்டு அவர் மறைந்த போது அவரது கண்களை தானம் கொடுத்தோம். தனது கடைசி காலம் வரை அவர் எழுத்தை கைவிடவில்லை. அவர் இறந்தபோது பல கதைகள் பாதியில் நின்று போயின. தான் இறந்த பிறகும் தன்னை அழகுப்படுத்த வேண்டும் என்று அக்கா கேட்டுக்கொண்டதால் அவருக்கு மேக்கப் போடும் பியூட்டீசியனை அழைத்து வந்து மேக்கப் போட்டோம்.

அந்தப் பெண் ‘இதுவரை யாருக்கும் இப்படி செய்ததில்லை. அம்மா என்பதால்தான் போடுகிறேன். இப்படி அவர்களுக்கு மேக்கப் போடுவேன் என நினைக்கவில்லை’ என அழுது கொண்டே மேக்கப் போட்டுவிட்டார். கடைசி காலத்தில் கூடவே உதவி யாய் இருந்த ஒரு பெண் இப்போது வந்தாலும் அக்காவை நினைத்து வருந்துவார். ‘அம்மா போன பின்தான் எனக்கு சாப்பாட்டின் அருமையே தெரிகிறது’ என்பார்.அக்கா கடைசியாக மருத்துவரிடம் பேசும்போது ‘இன்னும் இரண்டு ஆண்டுகள் நான் உயிரோடு இருக்க வேண்டும். எனக்கு சில கடமைகள் உள்ளன’ என சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் என்ன செய்ய நினைத்திருந்தார் என்பது தெரியாமலே போய்விட்டதுதான் வருத்தம். கடைசியாக ஆம்புலன்ஸில் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வர மருத்துவர்கள் என்னை வண்டியில் ஏறச் சொன்ன போது ‘எப்போதும் என் கூடவே இருந்தாய், கடைசியாக இப்போதும் எனக்குத் துணையாக வா’ என அக்கா சொல்வது போல் இருந்தது.

எனக்குத் தாங்க முடியவில்லை. எத்தனை முறை அவரோடு இந்த வழியில் பயணித்திருக்கிறேன் என நினைத்து நெஞ்சம் கலங்கிவிட்டது” என சொல்லும் போது தன் சகோதரியை நினைத்து ஜெயந்தியின் கண்கள் குளமாகி இருந்தன. எழுத்து அவருக்கு சுவாசித்தல் மாதிரி சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் அனுராதா மேடத்தின் உதவியாளராக இருந்தவர் சர்ச்சில் பாண்டியன். ஒரு சிஷ்யனாக ஒரு குருவை பற்றி மரியாதையுடனும், பரவசத்துடனும், லயிப்புடனும் அவர் நம்மோடு அனுராதா ரமணன் குறித்து பகிர்ந்து கொண்டார்.“பல படங்களில் நடித்தவர் ஆஜானுபாகுவான தோற்றமும் ராஜ லட்சணமும் கொண்ட ஆர். பாலசுப்ரமணியம். அவரின் பேத்தி என்பதாலோ என்னவோ அதே கம்பீரத் தோரணை அமையப்பெற்றதோடு நெஞ்சில் ஈரமும் மனித நேயத்தோடும் வளர்ந்தவர் அனுராதா மேடம். எழுத்துத் திறமையும், ஓவியத் திறமையையும் ஒரு சேர அமையப்பெற்றவர். ஒன்றின் அடிப்படை - மனித உணர்வு, மற்றொன்றின் அடிப்படை- அழகுணர்ச்சி.

ஓர் உன்னத கலைஞரை உருவாக்க இது தானே தேவை? சொந்த வாழ்வின் சோகத்தைத் துரத்த பேனாவைக் கையில் எடுத்தவருக்கு கடைசிவரை அதுவே உற்ற துணையாக மாறியது.  கடைசி வரையில் பேனா மட்டுமே அவருக்கு சம்பாதித்துக் கொடுத்த கற்பதரு. சந்தோஷத்தை அள்ளித் தெளித்த சினேகிதி. மனக்கவலைக்கு அருமருந்து. கணவன்… கடவுள்... எல்லாம்.எழுதுவது என்பது சுவாசித்தல் மாதிரி இவருக்கு இயல்பானது. வாசகர்களை மட்டுமே முன்னிறுத்தி, எதையும் நேர்மையாக எழுத வேண்டும் என்பது எழுத்து பற்றிய இவரது தெளிவு. எப்போதும் கறுப்பு நிற மையில் அடித்தல், திருத்தல் இல்லாமல், கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி முத்து முத்தாய் எழுதுவார். எந்த ஒரு சூழலிலும் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு பேனாவை கையில் எடுத்து ‘இது நன்கு வரவேண்டுமே’ என்று அறிமுக எழுத்தாளரை போன்ற உத்வேகத்தோடு எழுதுவார். நான் அறிந்த வகையில் ஒரு போதும் கதைக்காக அவர் சிரமப்பட்டதே இல்லை. உண்மைச் சம்பவங்களோடு புதிய திருப்பங்களை கற்பனை செய்து படிப்போர் மனதை சிறை வைத்துவிடுவார். உபநிஷத் கதைகளில் வரும் ஒரு சின்ன வார்த்தை கூட இவரது கைவண்ணத்தில் நட்சத்திர சிறுகதை ஆகி விடும்.‘நாவல் மற்றும் தொடர்கதை எழுதுவது என்பது பங்களாவில் ஐந்தாறு அறைகளில் வசதியாக வாழ்வது மாதிரி. எப்படி வேண்டுமானாலும் அந்த வீட்டை அலங்காரம் செய்யலாம். ஆனால் சிறுகதை என்பது ஒரே அறையில் வாழ்வது மாதிரி. அந்த சிறிய அறையை அழகாக காட்டுவது பளிச்சென்று வைத்துக்கொள்வது என்பதுதான் சவால்’ என்பார்.

இவரது கதைகளின் முதல் வரியே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடும். படித்து முடித்துவிட்டு தான் புத்தகத்தை கீழே வைக்கத் தோன்றும். அதே போல் முடிவும் பளீரென பொட்டில் அறைந்த மாதிரி இருக்கும். இவரது எழுத்துக்கள் நடுத்தர குடும்பத்து சாதாரண மனிதர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவை. ‘பெண்ணே உன்னால் முடியும்’ என்று பெண்களுக்கு ஒரு பிடிப்பையும் தன்னம்பிக்கையையும் தருபவை.எழுத்தாளர் என்பதைத் தாண்டி இவர் சிறந்த ஒரு மனிதாபிமானி. எழுத்தாளர்களை நேரில் பார்ப்பது சிரமம் என்றிருந்த காலத்தில் எல்லோருடனும் இயல்பாக பழகியவர். இவரைத்தேடி வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தனது அலுவல், உடல்நிலை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்போதும் போல் அதே புன்சிரிப்புடன் வரவேற்று அன்பாய்ப் பேசி அனுப்பி வைப்பார்.
அழுத்தமான சம்பவங்கள், ஆழமான பாத்திரப்படைப்பு, விரிவான கண்ணோட்டம், அன்றாட பிரச்னைகளின் அலசல் என தன் வாசகர்களோடு எழுத்துச் சங்கிலியால் தன்னை பிணைத்துக்கொண்டவர். தனது ஆலோசனைகள் மூலம் தாயாய், சகோதரியாய், தோழியாய் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.

‘வாழ்க்கையை துணிச்சலாக எதிர் கொள்ளுங்கள். தோல்வி என்பது கவனக்குறைவாக இருக்கும் போது நமக்கு ஏற்பட்ட சறுக்கல் அவ்வளவே தானே தவிர வாழ்க்கை இதோடு முடிந்து போவதில்லை. மீண்டும் முயன்றால் உற்சாகமாய் உயிர்த்தெழலாம்’ என்பார். தன்னை இலக்கியவாதி என ஒருபோதும் அவர் காட்டிக்கொள்ள விரும்பியதே இல்லை. ‘இலக்கியம் என்பது பயமுறுத்தும் வார்த்தை.எனக்கு இலக்கியம் தெரியாது. இதயங்கள்தான் தெரியும்’ என்பார். இன்று பத்திரிகை உலகில் இருக்கும் சிலர் இவரால் முன்னுக்கு வந்தவர்கள். உடல் நிலை முடியாத பல சமயங்களில், ஏன் தீவிர சிகிச்சையில் இருந்த போதும் கூட அவர் முகத்தில் குறையாத அலங்காரம் குறித்து டாக்டர் செரியன் வியந்து போனதை நான் பார்த்திருக்கிறேன். உடல் ரீதியான சவால்களை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு வெளியே சிரித்தபடி வளைய வர அவரால் முடிந்ததற்கு கடவுள் தந்த அவரது வெள்ளை மனம்தான் காரணம். கதை நாயகியாய் 25 ஆண்டு காலம் தமிழ் பத்திரிகை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் ‘பத்திரிகை உலகிற்கு நான் தேவைப்படும்போதே இந்த உலகில் இருந்து நான் விடைபெற்றுக்கொள்ள வேண்டும் பாண்டியன்’ என்பார்.அதன்படியே நடந்தது. மூக்கிலும், வாயிலும் டியூப்புகள் சொருகப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த போதும் அத்தனை சிரமத்திலும் கூட என்னை பார்த்து தனது வலது கையை உயர்த்தி ‘தம்ஸ் அப்’ காட்டிய அந்தத் தருணங்கள் இன்றைக்கும் என் கண்களில் நீரை பெருக்குகிறது.”