Showing posts with label JULY 30. Show all posts
Showing posts with label JULY 30. Show all posts

Thursday, 22 July 2021

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 1886 JULY 30 - 1968 JULY 22

 


MUTHULAKSHMI REDDY ,ACTIVIST  

1886 JULY 30 - 1968 JULY 22

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகநீதிப் போராளியுமான #முத்துலெட்சுமி மறைந்த நாள் 22 ஜூலை 1968 இன்று..



இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடிய முத்துலட்சுமி, தனது சட்டமன்றச் செயல்பாடுகளின் ஊடாக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பாலிய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப் போராடினார். இவரின் முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது.


இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை கோவிலுக்கு நேந்துவிட்டு தேவதாசியாக ஆக்கி விடுவது என்ற அவலநிலை அன்றிருந்தது.


20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவடியாக்கள்) இருந்ததாக தெரியவருகின்றது.


கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிருவாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.


 இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இன்றைக்குப் பெண்களைப் பார்த்தீர்களேயானால் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள், டாக்டர்கள், நீதிபதிகளாக வருகிறார்கள். இவர்களுக்கு அன்னை முத்துலட்சமி செயல்பாடுகளும், பெரியாரின் சமூக சீர்திருத்தங்களையும் பற்றி தெரிய வாய்ப்பில்லை.



முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டான். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண்விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.


இதற்கு பார்ப்பன பரதேசிகள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராடவைத்தனர்.


இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்கள்.


அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்க தயாராக இருந்தார்.

 

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினான். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றான்.


அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பாப்பானர்களை பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள். 


இனிமேல் அந்தத் தொண்டை உங்க உயர் சாதி பெண்களே செய்யட்டும். நீங்களும் புண்ணியம்  சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பேசினார். உங்கள் பிராமண பெண்களே தேவிடியா பணி செய்யட்டும். அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கேட்டுபோகாது என்றார்.


இதை கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வ கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது. இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

த.ப.கோ.அந்தியூர்💐💐💐

👍🏻👏🏻🌸🌺🌲👌🍇🌷😂🙏🏻


.முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.

பிறப்பு

இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.


சொந்த வாழ்க்கை

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.


இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.


அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.


இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.


திருமணத்தில் ஆர்வம் இல்லை. [சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.[1]


தமிழ்ப் பணிகள்

இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.


சமூகப்பணி

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

விருதுகள்

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.


மறைவு

முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். [2]

Friday, 31 July 2020

TRIBLE TALAQ ORDINANCE 2019 JULY 30




TRIBLE TALAQ ORDINANCE 
2019 JULY 30

.முத்தலாக் தடை சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இஸ்லாமிய பெண்களின் திருமண உறவுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யும் முத்தலாக் தடை மசோதா 2019, கடுமையான அமளிகளுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தின்படி, திருமணமான ஆண் தன் துணையிடம் மூன்று முறை தலாக் சொல்லி அந்த திருமண உறவை முறித்துக் கொள்ள இயலும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் சிலர் இந்த வழியில் தங்களின் மனைவிகளை கடந்த காலங்களில் பிரிந்துள்ளனர். 2015ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சாய்ரா பானு என்பவர் தன் கணவர் தன்னிடம் மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றுக் கொண்டார் என்று கூறி, இம்முறையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பின்பு விஸ்வரூபம் எடுக்க துவங்கியது இந்த விவகாரம்.

மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா
மாநிலங்களவையில் அதிமுகவும் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையிலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க 99-84 என்ற ரீதியில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய காங்கிரஸ், இடது சாரிகள் போன்ற எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் ஜனதா தளம் கட்சியினரும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Triple Talaq Bill 2019 key points : முக்கிய அம்சங்கள் என்னென்ன?
முஸ்லீம் ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை இந்த மசோதா தடுக்கிறது.

அப்படி விவாகரத்து செய்வது சட்ட விரோதமானது என்றும் அப்படி கூறப்படும் விவாகரத்து அதிகாரப்பூர்வமாக செல்லுபடி ஆகாது என்றும் உறுதி செய்கிறது இந்த மசோதா.

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.

இவ்வாறாக கூறி விவாகரத்து செய்யும் ஆண்கள் தங்களின் மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது இந்த மசோதா.

முத்தலாக் தொடர்பான புகாரினை பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் ரத்த சொந்தமோ அளிக்கலாம்.

ஜாமீனில் வெளிவர இயலாத வகையிலும் வழக்கு பதிவு செய்ய முடியும். அதையும் மீறி முத்தலாக் கூறிய கணவன் வெளியே வர வேண்டும் எனில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தின் அடிப்படையில் மட்டுமே பிணையில் விடுவிக்க இயலும்.

முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019 கடந்து வந்த பாதை
முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019 (Muslim Women (Protection of Rights on Marriage) Bill 2019) எனப்படும் இந்த மசோதா ஏற்கனவே பா.ஜ.கவின் கடந்த ஆட்சியின் போது மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் (2018, டிசம்பர் மாதம் 27ம் தேதி) அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த பின்னர் 245 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக மக்களவையில் வாக்களித்தனர். எதிர்த்து 11 பேர் வாக்களித்தனர்.

ஐதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் பாஜகவின் பெரும்பான்மை மாநிலங்களவையில் இல்லாத காரணத்தால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டவில்லை.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றி அரசு அமைத்த பாஜக, மழைக்கால கூட்டத்தொடரினை ஜூன் 20ம் தேதி துவங்கியது. தன்னுடைய துவக்க உரையின் போதே குடியரசுத் தலைவர், முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

பின்பு ஜூன் 20ம் தேதி மாநிலங்களவையிலும், ஜூன் 21ம் தேதி மக்களவையிலும் விவாதத்திற்கு இம்மசோதா வைக்கப்பட்டது. ஜூலை 25ம் தேதி எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்ய மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 30ம் தேதி இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாலின சமத்துவத்திற்கான முக்கியமான மைல் கல்லாக இந்த சட்டம் அமையும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
Image may contain: 1 person

Thursday, 30 July 2020

INDIANA POLIS USS SHIP WAS ATTACKED BY JAPANESE SUBMARINE ON JULY 30,1945 ,MOST DIED OF SHARK ATTACK 880


INDIANA POLIS USS SHIP WAS ATTACKED 
BY JAPANESE SUBMARINE ON JULY 30,1945 ,MOST DIED OF SHARK ATTACK 880



ஜப்பானிய நீர்மூழ்கியால் அமெரிக்க இண்டியானா போலீஸ் என்ற கப்பல் ஜூலை 30 ,1945 இல் மூழ்கடிக்கப்பட்டு 880 பேர் சுறாமீனுக்கு பலியாயினர் இன்று 75 வது ஆண்டு நிறைவு

ஜூலை 30, 1945 இல், யுஎஸ்எஸ் இண்டியானாபோலிஸ் ஒரு ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு ,மூழ்கடிக்கப்பட்டு சில நிமிடங்களில் சுறா பாதிப்புக்குள்ளான நீரில் மூழ்கும். கப்பலில் இருந்த 1,196 பேரில் 316 பேர் மட்டுமே தப்பினர். இருப்பினும், இண்டியானாபோலிஸ் ஏற்கனவே அதன் முக்கிய பணியை முடித்துவிட்டது: அணுகுண்டை .ஹிரோஷிமாவில் ஒரு வாரம் கழித்து போடும் வகையில் தென் பசிபிக் பகுதியில் உள்ள டினியன் தீவுக்கு ஜூலை 26, 1945 இல்அனுப்பப்பட்டு விட்டது
. இந்த பணி மிக ரகசியமானது மற்றும் கப்பலின் குழுவினருக்கு அதன் சரக்கு பற்றி தெரியாது. டினியனை விட்டு வெளியேறிய பின்னர், இண்டியானாபோலிஸ் குவாமில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் தலைமையகத்திற்குச் சென்று, ஜப்பான் படையெடுப்பிற்குத் தயாராவதற்காக பிலிப்பைன்ஸின் லெய்டே வளைகுடாவில் யுஎஸ்எஸ் இடாஹோ என்ற போர்க்கப்பலைச் சந்திக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 6, 1945 இல், ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியது, கிட்டத்தட்ட 130,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் நகரத்தின் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை அழித்தனர். ஆகஸ்ட் 9 ஆம் தேதி, நாகசாகி மீது இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது, அங்கு உயிரிழப்புகள் 66,000 க்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜப்பான் சரணடைந்ததாக ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அறிவித்ததன் மூலம் செய்தி மறைக்கப்படும் என்று உத்தரவாதம் அளிப்பதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அமெரிக்க இண்டியானாபோலிஸ் சோகம் குறித்து அமெரிக்க அரசாங்கம் அமைதியாக இருந்தது. இண்டியானாபோலிஸ் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் பின்னர், கப்பலின் தளபதி கேப்டன் சார்லஸ் மெக்வே,

நவம்பர் 1945 இல் ஜிக்ஜாக் முறையில் கப்பலை காக்க தவறியதற்காக வேலையை விட்டு நீக்கியது . இது அந்த பகுதியில் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைத் தவிர்க்க கப்பலுக்கு உதவியிருக்கும். போரின்போது ஒரு கப்பலை இழந்ததற்காக நீதிமன்றத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரே கடற்படை கேப்டன் மெக்வே 1968 இல் தற்கொலை செய்து கொண்டார். இராணுவம் அவரை பலிகடாவாக்கியது என்று அவரது எஞ்சியிருந்த பல பணியாளர்கள் நம்பினர். 2000 ஆம் ஆண்டில், இண்டியானாபோலிஸ் இறங்கி 55 ஆண்டுகளுக்குப் பிறகு, மெக்வேயின் பெயரை ்அழித்தது.

ஜூலை 30 நள்ளிரவுக்குப் பிறகு, குவாமுக்கும் பாதி நேரத்திற்கும் இடையில் லெய்டே வளைகுடா, ஒரு ஜப்பானிய நீர்மூழ்கி தாக்கி . கப்பலைப் பிரித்து சுமார் 12 நிமிடங்களில் மூழ்கச் செய்தது, சுமார் 300 ஆண்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். மேலும் 900 பேர் தண்ணீருக்குள் சென்றனர், அங்கு பலர் நீரில் மூழ்கி, சுறா தாக்குதல்கள், நீரிழப்பு அல்லது வெடிப்பில் ஏற்பட்ட காயங்களால் இறந்தனர்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2 ஆம் தேதி, வழக்கமான ரோந்துப் பயணத்தில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும்போது உதவிக்காக வானொலியை செய்தி அனுப்பி வீரர்களை மீட்டது



On July 30, 1945, the USS Indianapolis is torpedoed by a Japanese submarine and sinks within minutes in shark-infested waters. Only 316 of the 1,196 men on board survived. However, the Indianapolis had already completed its major mission: the delivery of key components of the atomic bomb that would be dropped a week later at Hiroshima to Tinian Island in the South Pacific.
The Indianapolis made its delivery to Tinian Island on July 26, 1945. The mission was top secret and the ship’s crew was unaware of its cargo. After
leaving Tinian, the Indianapolis sailed to the U.S. military’s Pacific headquarters at Guam and was given orders to meet the battleship USS Idaho at Leyte Gulf in the Philippines to prepare for the invasion of Japan.Shortly after midnight on July 30, halfway between Guam and Leyte Gulf, a Japanese sub blasted the Indianapolis, sparking an explosion that split the ship and caused it to sink in approximately 12 minutes, with about 300 men trapped inside. Another 900 went into the water, where many died from drowning, shark attacks, dehydration or injuries from the explosion. Help did not arrive until four days later, on August 2, when an anti-submarine plane on routine patrol happened upon the men and radioed for assistance.

On August 6, 1945, the United States dropped an atomic bomb on Hiroshima, Japan, inflicting nearly 130,000 casualties and destroying more than 60 percent of the city. On August 9, a second atomic bomb was dropped on Nagasaki, where casualties were estimated at over 66,000. Meanwhile, the U.S. government kept quiet about the Indianapolis tragedy until August 15 in order to guarantee that the news would be


overshadowed by President Harry Truman’s announcement that Japan had surrendered.In the aftermath of the events involving the Indianapolis, the ship’s commander, Captain Charles McVay, was court-martialed in November 1945 for failing to sail a zigzag course that would have helped the ship to evade enemy submarines in the area. McVay, the only Navy captain court-martialed for losing a ship during the war, committed suicide in 1968. Many of his surviving crewmen believed the military had made him a scapegoat. In 2000, 55 years after the Indianapolis went down, Congress cleared McVay’s name..
.
.

PATTUKOTTAI PRABHAKAR WRITER BORN 1958 JULY 30



PATTUKOTTAI  PRABHAKAR WRITER BORN 1958 JULY 30

பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும் வெளிவந்துள்ளன.இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையுடையவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 30-7-1958 அன்று இராதாகிருஷ்ணன் & சந்திரா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்வர்னரம்யா, ஸ்வர்னபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர்.


பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய "தொட்டால் தொடரும்" ," கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர். கல்லூரியில் மேடை நாடகங்கள் எழுதிய காலம் தொட்டு தன்னைக் கவர்ந்த கலை, இலக்கிய நாடகத்துறை விற்பன்னர்களின் நகைச்சுவை உணர்வால் உந்தப்பட்டு நாவல்கள் எழுதி வருகிறார்.

`வானப்பிரஸ்த நிலை' நோக்கிப் பயணிப்பவன் நான்" - பட்டுக்கோட்டை பிரபாகர்! #WhatSpiritualityMeansToMe

தமிழ் எழுத்துலகில் தேனீயைப் போல் இயங்கி வருபவர் பட்டுக்கோட்டை பிரபாகர். பல நூறு சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்  எழுதிக் குவித்தவர். திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதி வருகிறார். அவ்வளவு ஏன் இந்த வாரம் வெளியான இமைக்கா நொடிகள் படத்துக்குக்கூட இவர் தான் வசனம்  பட்டுக்கோட்டைபிரபாகரின் ஆன்மிகம் எப்படியானது. அவரது பார்வையில் வழிபாடென்பது என்ன?
அவரைச் சந்தித்துப் பேசினேன்.  

``ஆன்மிகத்துல எனக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. அதுக்காக நான் நாத்திகவாதியும் கிடையாது. கேள்விகளுடன் இருக்கும் ஒரு மனிதன்... அவ்வளவுதான். என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கு. ஆன்மிகத்துல நிறைய கலப்படம் வந்துடுச்சுங்கிறது உண்மை.  பியூரான ஆன்மிகங்கிறது இப்போ இல்ல. பார்வை இல்லாதவன் யானையைப் பார்த்த மாதிரி, ஆன்மிகத்துல ஆள் ஆளுக்குக் கருத்துகளை அள்ளிப்போட்டு அதை வேறுமாதிரியான புரிதலுக்குக் கொண்டு போய்விட்டுட்டாங்க. இன்றைய ஆன்மிகங்கிறது அவரவர் புரிதல்ங்கிற மாதிரிதான் இருக்கு. பொதுவான புரிதலுக்கு வந்த மாதிரி எந்த ஆன்மிகமும் இல்ல.

எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. எல்லா மகான்களும் அன்பைத்தான் போதிக்கிறாங்க. அன்பு மட்டுமே அல்டிமேட்டா இருக்கிறபட்சத்துல, `என் ஆன்மிகம் சிறந்தது, உன் ஆன்மிகம்தான் சிறந்தது'ன்னு சண்டை போட்டுக்கிறதுல எந்தவித அர்த்தமும் இல்ல. போக வேண்டிய இடம் எல்லாருக்கும் ஒண்ணுதான். ஒருத்தன், பஸ்சுல போறான். ஒருத்தன் நடந்து போறான். ஒருத்தன் ஃப்ளைட்ல போறான். ஒருத்தன் உருண்டு புரண்டு போறான். அவ்வளவுதானேயொழிய, வேற எதுவும் இல்ல. ஆனா, இந்த ஆன்மிகத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஒவ்வொரு மதமும் சொல்ற சடங்குகள் சம்பிரதாயங்கள்ல எனக்குக் கேள்விகள் இருக்கு. 

அதனால, ஆன்மிகத்துல கேள்விகளுடன் நிற்கிற மனுஷனாத்தான் நான் இருக்கேன். ஆனா, அதுக்காக, அதன் மேல எந்தவித விமர்சனங்களையும் நான் வைக்கமாட்டேன். ஆன்மிகத்துல இருக்கறவங்களை முட்டாள்னு நான் சொல்லமாட்டேன்.திருமண பந்தத்தைப் பொறுத்தவரை, சீர்த்திருத்த திருமணத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனா, என் குடும்பத்தினருக்கோ சடங்கு சம்பிரதாயத்துடன் நடக்கும் திருமணத்தில்தான் நம்பிக்கை. 

என்னுடைய ரெண்டு மகள்களுக்கும் வைதீக முறையிலதான் திருமணம் நடந்துச்சு. அது, காம்ப்ரமைஸ். அவங்களோட எண்ணங்களையும்  உணர்வுகளையும் மதிக்கணுமில்லையா, அதுக்காக. அதுக்கு நான் தடையா இருக்கமாட்டேன். ஆனா, என் விருப்பத்துக்காக, தலைவர்கள், பிரபலங்களையெல்லாம் அழைச்சு அவங்க வாழ்த்துரைகளையும் சேர்த்துவச்சு, திருமணத்தை நடத்துனேன். என்னுடைய திருமணமும் அப்படித்தான் நடந்துச்சு. 
கோயிலுக்கு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் கூப்பிட்டாங்கன்னா கண்டிப்பாப் போவேன். அங்கே போயிட்டு, `நீங்க போய் சாமி கும்பிட்டு வாங்க'னு சொல்லிட்டு வெளியில இருக்க மாட்டேன். அவங்ககூடவே போய் சாமி கும்பிடுவேன். ஆனா, நானாக தனியா ஒருமுறைகூட கோயிலுக்குப் போனதில்ல.   

இந்த மாதிரி, `டிட்டாச்சுடு வித் அட்டாச்மென்ட்டா'தான் நான் இருக்க விரும்புறேன். இதை, `வானப்பிரஸ்த நிலை'னு சொல்வாங்க. எப்பேர்பட்ட மனுஷனும் ஒண்ணு பணத்துல விழுந்துடுவான். இல்ல பாசத்துல விழுந்துடுவான். அந்த இடத்துக்கு நான் இன்னும் வரலை. அதை நோக்கித்தான் நான் பயணம் பண்ணுறேன். இதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேன். அது பலவிதத்துல வெற்றி தோல்விகளைச் சமமா எடுத்துக்கிறதுக்கு உதவியா இருக்கு. ஆனா, அந்த இடத்துக்கு அவ்வளவு ஈஸியா நம்மால போயிட முடியாது. கடவுள், ஆன்மிகம் குறித்த தேடல் எல்லா மனிதர்களிடமும் நிச்சயம் இருக்கும். நானும் 1996-ல ஈஷா யோக மையத்துல தியானம், யோகா  பயிற்சிகளை எடுத்துக்கிட்டேன். அது என்னை நான் உணர்றதுக்குப் பெரிய அளவுல உதவியா இருந்துச்சு.

சென்னை அடையாறுல இருக்கிற அனந்த பத்மநாபன் கோயிலுக்கு நானும் மனைவியும் வாரா வாரம் போவோம். அப்புறம் சீரடி சாய்பாபா மேல ஈடுபாடு வந்துச்சு. ரொம்ப எளிமையா வாழ்ந்துகாட்டி நிறைய அற்புதங்களை நிகழ்த்திக்கிட்டு இருக்கார். உண்மையா ஒரு ஞானி எப்படி இருக்கணும்ங்கிறதுக்கு சீரடி சாய்பாபாவோட வாழ்க்கை உதாரணமா இருக்கு. சீரடிக்கு நானும் ஒருமுறை போயிட்டு வந்திருக்கேன்'' 

சிலிர்ப்பாகச் சொல்லி முடிக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்!  

பட்டுக்கோட்டை குமாரவேல், பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என பட்டுக்கோட்டைக்குச் சிறப்புச் சேர்த்த பெரியவர்கள் பலருண்டு என்றாலும், பட்டுக்கோட்டை என்றதுமே எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

சாவியில் நான் பணியில் சேர்ந்து, வெறுமே புரூஃப் பார்ப்பதோடு நிற்காமல், இதழுக்குப் பொறுப்பேற்று பத்திரிகைத் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டபோது, நான் என் விருப்பத்துக்கேற்ப ஒரு வி.ஐ.பி. எழுத்தாளரிடம் தொடர்கதை கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன் என்றால், அது பட்டுக்கோட்டை பிரபாகரிடம்தான். (அதற்கு முன்பு மோனா மாதமிருமுறை இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தபோது, நான் முதன்முதல் என் விருப்பத்துக்கேற்ப நாவல் வாங்கி வெளியிட்டது எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம். அது பற்றி முன்பு ஒருமுறை பதிவு எழுதியிருக்கிறேன்.)

பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன் நான் அதிகம் படித்தது மௌனி, லா.ச.ரா., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்... இவர்கள் யாருடைய கதைகளையும் அல்ல. ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்கள் இருவருடைய சிறுகதைகளையும், மாத நாவல்களையும் மட்டுமே நான் அதிகம் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.

ராஜேஷ்குமாரின் நாவல் எடுத்த எடுப்பில் யமஹா பைக் மாதிரி குபுக்கென்று வேகமெடுத்துக் கிளம்பும். வர்ணனைகளைவிட கதையின் பரபரப்புக்கும் திடுக் திருப்பங்களுக்கும் அவர் கதைகளில் அதிக முக்கியத்துவம் இருக்கும். படிக்கத் தொடங்கிவிட்டால், முடிக்கும் வரை கீழே வைக்கமுடியாது. அத்தனை விறுவிறுப்பாக இருக்கும்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கதை வேறு ரகம். மாத நாவல்களைப் பொறுத்தவரையில் முதல் அத்தியாயம் ஓர் இனிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிற விதமாக, ரசனையாகச் செல்லும். இரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கிய கதைக்குள் நுழைவார். சில வர்ணனைகளைப் படித்தபின், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அந்த வர்ணனைகளை மீண்டும் மனசுக்குள் காட்சியாக்கி ஓட்டிப் பார்த்து, அந்த ரசனையில் திளைப்பது எனக்கு மிகவும் விருப்பம். இதனால், அவரது நாவலைப் படித்து முடிக்க ரொம்ப நேரமாகிவிடும். ஒரே மூச்சில் படிக்க வேண்டுமென்று தோன்றாது. அனுபவித்து அனுபவித்துப் படிப்பேன்.

ராஜேஷ்குமாரின் கதை சூடும் சுவையும் உள்ள உயர்தரமான காபி என்றால், பட்டுக்கோட்டை பிரபாகரின் கதை நிதானமாகப் பருகவேண்டிய பழரசம். திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி - ரஜினி, கமல் என்கிற மாதிரி ராஜேஷ்குமார் - பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் நாவல் உலகில் இரு பெரும் தூண்கள் என்பது என் கருத்து.

எண்பதுகளில், திருச்சியில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அங்கே அவர்கள் சாவி பத்திரிகையைத் தொடர்ந்து வாங்கிப் படிப்பது தெரிந்தது. ஆரம்ப இதழ் முதல் அனைத்தையும் பைண்டு செய்து வைத்திருந்தார்கள். சாவி என்றொரு பத்திரிகையை முதன்முதல் அங்கேதான் பார்த்தேன். அதில் ஒரு நெடுங்கதையைப் படித்தேன். தலைப்பு ஞாபகம் இல்லை.

நாலைந்து நண்பர்கள். அவர்களில் ஒருவன், துப்பறியும் சிங்கமாக வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, எப்போதும் அது பற்றியே பேசிக்கொண்டு இருப்பான். ஒருமுறை, அவன் துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதாக ஒரு சம்பவம் நிகழும். ரிமோட் ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில், ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, ஹாலில் ஒரு பெண் கொலையுண்டு கிடப்பது தெரியும். போலீசுக்கு போன் செய்து வரவழைத்து, அதிரடியாக அந்த வீட்டின் கதவைத் தட்டி உள்ளே போனால், யாரும் கொலையுண்டதற்கான தடயமே இருக்காது. தான் கண்ணால் பார்த்ததாகச் சொல்வான். ‘மாடியில் என் மகள் படித்துக்கொண்டு இருக்கிறாள். அவளைத் தவிர, வேறு பெண்கள் கிடையாது’ என்று சொல்லி, அவளைக் கீழே கூப்பிடுவார் அந்த வீட்டின் ஓனர். அவள் கீழே இறங்கி வர, ‘இவள்... இவள்தான் இறந்துகிடந்தாள்’ என்று அலறுவான்.

இப்படியாக, மிக மர்மமாகச் செல்லும் கதை கடைசியில், அவனது துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதற்காக நண்பர்களாகச் செய்த செட்டப் அது என்று முடியும். ரொம்பவும் ரசித்துப் படித்தேன். லயித்துப் படித்தேன். யார் எழுதிய கதை இது என்று பெயரைப் பார்த்தேன். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமானது அப்போதுதான்.

அதன்பின்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் தொடர்கதை (அது அவரின் முதல் தொடர்கதை) ஒன்று சாவி இதழில் வெளியானது. மன்னிக்கவும், அதன் தலைப்பும் மறந்துவிட்டது. (வயசாகிறது அல்லவா!) யார் எழுதுகிறார் என்று கதாசிரியர் பெயரே இல்லாமல் வெளியான தொடர்கதை அது. கதையின் விறுவிறுப்பிலும் சுவாரசியத்திலும், அதை எழுதுவது யார் என்று தெரிந்துகொள்ள சாவி வாசகர்கள் பெரிதும் ஆர்வப்பட்டார்கள். நானும்! பட்டுக்கோட்டை பிரபாகர் என்று கடைசி அத்தியாயத்தில் பெயரை வெளியிட்டார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் என் மனதில் பதிந்தது அப்போதுதான்!

எழுத்தாளரின் பெயரை வாசகர்களின் மனதில் நிலை நிறுத்த சாவி சார் கையாண்ட உத்தி அது. அவரே ஆனந்தவிகடனில் ‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதியபோது, தன் பெயரையே போட்டுக் கொள்ளாமல், கடைசி அத்தியாயத்தில்தானே பெயரை வெளியிட்டார்! அவருக்குப் பின் அதே பாணியில் கடைசி அத்தியாயத்தில் தன் பெயரை வெளிப்படுத்திக்கொண்டவர் எனக்குத் தெரிந்து பட்டுக்கோட்டை பிரபாகர் மட்டும்தான். சாவி ‘ஆப்பிள் பசி’ என்று நாவல் எழுதினார். அந்தத் தலைப்பை மிகவும் ரசித்து, அதே பாணியில் ‘விஸ்கி தாகம்’ என்று தலைப்பிட்டு ஒரு நாவல் எழுதினார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

வர்ணனைகளே இல்லாமல் வெறுமே டயலாக்குகளிலேயே ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாகர். (தலைப்பு ‘தொடரும்’ என நினைக்கிறேன்). முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒரு நாவல் எழுதினார் (இதன் தலைப்பு ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ என நினைக்கிறேன்). இப்படி அவரது பல நாவல்களை நான் ரசித்துப் படித்திருக்கிறேன். ‘ஆகாயத்தில் ஆரம்பம்’ என்று ஒரு மாத நாவல். விமானத்தில் ஒரு விஞ்ஞானியைக் கடத்துவார்கள். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத கதை அது.

பிரபாகரின் நாவலில்தான் முதன்முறையாக வில்லன்கள் கொடூரமாகப் பேசாமல், காமெடியாகப் பேசி நான் படித்திருக்கிறேன்.

சாவியில் பொறுப்பேற்றபோது, தொடர்கதை கேட்டு பட்டுக்கோட்டை பிரபாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘அடுத்த வாரம் விளம்பரத்தில் அறிவிக்க ஒரு தலைப்பு கொடுங்கள்’ என்று என் கடிதத்தில் கேட்டிருந்தேன். ‘சாவியிலிருந்து கதை கேட்டுக் கொடுக்காமல் இருப்பேனா’ என நெகிழ்ச்சியோடு, உடனே பதில் போட்டிருந்தார். கதைத் தலைப்பு: திண்ணை வைத்த வீடு. அந்த இதழிலேயே விரைவில் பட்டுக்கோட்டை பிரபாகரின் புதிய தொடர்கதை ‘திண்ணை வைத்த வீடு’ ஆரம்பிக்கவிருப்பதாக சாவியில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். சொன்னது போலவே உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதி, உடனே அனுப்பி விட்டார். ஆழ்ந்து அனுபவித்துப் படித்து ரசிக்க வேண்டிய தொடர்கதை அது.

பின்னர் நான் விகடனில் சேரும் வரைக்கும்... ஏன், சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகும்கூட பட்டுக்கோட்டை பிரபாகரை நேரில் சந்தித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் மகள் திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக விகடன் அலுவலகம் வந்திருந்தார். அப்போது சந்தித்ததுதான்! அதற்கு முன்பு வரை வெறும் தொலைபேசித் தொடர்புதான்.

திருமணப் பத்திரிகையையும் புதுமையான முறையில் வெளியிட்டிருந்தார். ஒரு சி.டி. தயார் செய்து, அதில் இன்விடேஷன், மணமகன், மணமகள் புகைப்பட ஆல்பம் மட்டுமின்றி, சார்லி சாப்ளின், லாரல்-ஹார்டி காமெடிக் காட்சிகளையும் பதிந்து தந்திருந்தார். ரசனை மனம் உள்ளவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் யோசிக்க முடியும்.

அவரின் மகள் திருமணம் சென்னை, விஜயா மஹாலில் (பழைய நாகேஷ் தியேட்டர்) நடந்தது. அதற்குச் சென்றிருந்தேன். அங்கேதான் முதன்முறையாக ராஜேஷ்குமாரையும் சந்தித்தேன்.

ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் தன் நண்பர்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி வைத்துவிடுவார் பட்டுக்கோட்டை பிரபாகர். ஒவ்வொரு முறையும் ஒரு ‘தீம்’ எடுத்துக்கொண்டு, விசேஷ கவனத்தோடு அந்த வாழ்த்து தயாரிக்கப்பட்டிருக்கும். அறிஞர்களின் பொன்மொழிகள், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், குட்டிக் குட்டிப் புதுக் கவிதைகள் என வருஷா வருஷம் புத்தாண்டு வாழ்த்து வேறுபடும். இத்தனை வேலைகளுக்கிடையில் எப்படித்தான் இவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ என்று பிரமிப்பாக இருக்கும்.

நானெல்லாம் சுத்த சோம்பேறி. புத்தாண்டு வாழ்த்துகளை எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்புவதற்குக்கூட எனக்குக் கை வராது. ஒரு சில ஆண்டுகள், ரொம்பப் பிரயத்தனப்பட்டு கிரீட்டிங் கார்டுகள் வாங்கிச் சிலருக்கு அனுப்பினேன். புத்தாண்டு தொடங்கி நாலைந்து நாட்களுக்குப் பிறகு கூட நிதானமாக அனுப்பியிருக்கிறேன். வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதுவதற்குக்கூடச் சோம்பேறித்தனம். புத்தாண்டு என்றில்லை; தீபாவளி, பொங்கல் என எந்த விசேஷத்துக்குமே நான் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அனுப்புவதை ஒரு கடமையாக நினைக்கவில்லை. அதற்காக நான் நண்பர்களை மதிக்கவில்லை என்றோ, மறந்துவிட்டேன் என்றோ அர்த்தமில்லை. தெரியவில்லை; ஏனோ, வாழ்த்துக்கள் அனுப்பத் தோன்றவில்லை.இந்த ஆண்டும் பிரபாகரிடமிருந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்து வந்தது. என் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அது. அதைப் பார்த்ததுமே சட்டென்று என் இதயம் நெகிழ்ச்சியில் கரைந்தது. இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி முன்னேற்றத்தில் போட்டோவுடன் கூடிய பிரத்யேகமான வாழ்த்து தயார் செய்வது ஒன்றும் கடினமில்லைதான்! ஆனாலும், ஒவ்வொரு நண்பருக்கும் அவருடைய புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அனுப்புவோம் என்கிற அந்த எண்ணம்... நட்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மெனக்கிடல், அந்த அக்கறை, அன்பு... அதற்கு ஈடாக எதையுமே என்னால் சொல்ல முடியவில்லை.

பிரபாகர் - தி கிரேட்!

எனக்கெல்லாம் அவரின் பக்குவம் சுட்டுப் போட்டாலும் வராது. பாருங்களேன்... தொலைபேசியிலோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, ஈ-மெயிலிலோ அவருக்கு இன்னும் நன்றிகூடத் தெரிவிக்காமல் வலைப்பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன் நான்!

***
அந்நியரை நேசியுங்கள். ஒவ்வொரு சிறந்த நண்பரும் ஒரு சமயம் அந்நியராக இருந்தவர்தான்!


பரிசல்காரன் said...
உங்கள் ஜூனியரில் அவரது நாவலைப் பாராட்டி நான் எழுதிய கடிதத்திற்கு பதில் போடும்போது அவர் எழுதிய ‘நல்ல நடை.. நீங்களும் எழுதலாமே’ என்ற வரிகள்தான் என்னையும் எழுதத் தூண்டியது. பிறகு உ.ஜூ-வின் வாசகர் சிறப்பிதழைத் தயாரிக்க சென்னை சென்றபோது என்னைத் தனியே அழைத்து என் கடிதங்களின் நேர்த்தியையும், எழுத்து நடையையும் பாராட்டினார்.

எழுத்துக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும், மோனாவில் வெளிவந்த ஒரு நாவல் (செங்கல்வராயன் - ஹீரோ!) என நகைச்சுவையிலும் கொடிகட்டிப் பறந்ந்தவர்! பரத் சுசீலாவை விடுங்கள். தயாளன், அலெக்ஸ் கூட்டணி என்று எழுத்துலகில் அவர் செய்த அதகளம் கொஞ்சமா நஞ்சமா!!

நீங்களாவது ஒரு விஐபி. நான் அவர் வாசகன். எனக்கும் சென்ற ஆண்டுவரை புத்தாண்டு வாழ்த்து அட்டை (நீங்கள் குறிப்பிட்ட ஸ்வர்ணரம்யாவின் திருமண அழைப்பும்கூட) வந்துகொண்டுதான் இருந்தது.



பழைய நாட்களை நினைவுபடுத்திய பதிவு!
.
.






.

Wednesday, 22 July 2020

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST BORN 1886 JULY 30 - 1968 JULY 22



MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 
BORN 1886 JULY 30 - 1968 JULY 22



.முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.
பிறப்பு
இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.

சொந்த வாழ்க்கை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

திருமணத்தில் ஆர்வம் இல்லை. [சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.[1]

தமிழ்ப் பணிகள்
இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.

சமூகப்பணி
1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
விருதுகள்
முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.

மறைவு
முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். [2]




தேவதாசி சட்டம் கொண்டுவர சட்டமன்றத்தில் உறுதிகுரல் எழுப்பிய முத்துலட்சுமி ரெட்டி! #DrMuthulakshmiReddy

பண்பாடு என்பதே காலம்தோறும் மாறிவருவதுதான். ஆனாலும், அதன் பெரும்பாலான கூறுகள், பெண்களை ஒடுக்கும் விதத்தில் இருப்பது கண்கூடு. உலகம் தழுவிய அளவிலும் இதேபோன்ற முறைகளே இருப்பதைப் பார்க்க முடியும். இதை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் போராடியுள்ளனர்; போராடி வருகின்றனர். கணவன் இறந்ததும், அவனை எரிக்கும் சிதையில் மனைவியையும் உயிரோடு எரிக்கும் உடன்கட்டை ஏறும் கொடும் வழக்கம், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்டோரின் பெரும் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அதேபோல, பெண்களைப் பொட்டுக்கட்டி 'தேவதாசி' எனக் கோயிலுக்கு அர்ப்பணிக்கும் பழக்கம் நிலவிவந்தது. பெண்களை அடிமைப்படுத்தும் இந்த முறையை மாற்ற, தமிழகத்தில் பெரியார், மூவலூர் ராமாமிருதம் அம்மையார் உள்ளிட்டோர் போராடினார்கள். இறுதியாகத் 'தேவதாசி ஒழிப்புச் சட்டம்' நிறைவேறியது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.


1886 ஜூலை 30-ம் நாள், புதுக்கோட்டையில் பிறந்தவர், முத்துலட்சுமி. தந்தை பிரபல வழக்கறிஞராக இருந்தாலும், பெண்கள் கல்வி கற்பது அபூர்வமான காலம் அது. ஆனால், முத்துலட்சுமிக்கு படிப்பின் மீது பெரும் ஆர்வம். ஆனால், பள்ளிக் கல்வி முடிந்ததுமே திருமணம் செய்துவைக்கும் முயற்சி நடந்தது. இவர் கல்லூரிக்குச் செல்வதில் குறியாக இருந்தார். குடும்பத்தினர் இவரின் மேற்கல்வியை மறுத்ததற்கு முக்கியக் காரணம், புதுக்கோட்டைக் கல்லூரியில் பெண்கள் யாரும் வருவதில்லை. இன்னொரு காரணம், பெற்றோரிடம் பெரிய அளவில் பொருளாதார வசதியில்லை.

முத்துலட்சுமி தளர்ந்துவிடவில்லை. புதுக்கோடை மகாராஜாவின் உதவியோடு கல்லூரியையும் மருத்துவப் படிப்பையும் முடித்தார். ஒரு வரியில் இதைச் சொல்லிவிட்டாலும், அந்தக் காலகட்டத்தில் இது மாபெரும் விஷயம். முத்துலட்சுமிதான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்றால், அதன் பின்புலம் புரியும். கல்வி அறிவுப் பெறுகையில் அடிமைப்பட்டிருக்கும் தாய்நாட்டைப் பற்றியும் கவலைகொண்டார். சரோஜினி நாயுடு, பாரதியாருடன் உரையாடும் தருணங்கள் இந்த உணர்வை இன்னும் மேலெழுப்பின.


28 வயதில் மருத்துவர் டி.சுந்தர ரெட்டியைச் சடங்குகளைத் தவிர்த்து திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக்கூடாது என்ற நிபந்தனையுடனே மணமுடித்தார். 1926-ம் ஆண்டு பாரீஸில் நடந்த அகில உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, 'ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட வேண்டும்' என முழங்கினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில், நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பனகல் அரசரின் உதவியோடு, லண்டனுக்கு மேற்படிப்புக்குச் சென்றார். 1926-ம் ஆண்டு, பெண்களும் தேர்தலில் போட்டியிடும் உரிமை கிடைத்தது. சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 

முத்துலட்சுமி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்ததன் மூலம், எண்ணற்றோரின் துயரங்கள் நீங்கின. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், இருதாரத் தடைச் சட்டம்,, பால்ய விவாகத் தடை சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. அவற்றைவிட குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, தேவதாசி ஒழிப்புச் சட்டம். இந்தச் சட்டம் வந்துவிடக் கூடாது எனச் சனாதானிகள் ஏராளமான குறுக்கு வேலைகளைச் செய்தனர். இந்தச் சட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் எனச் சிலர் கூறிய யோசனைக்கு, தந்தை பெரியார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 'குடியரசு' இதழில், 'ஒரு கணமும் எந்தக் காரணத்துக்காகவும் தாமதிக்கக்கூடாது' என உறுதிப்பட எழுதியிருந்தார்.


காலம் காலமாக நாம் பின்பற்றும் வழக்கத்தையும் பண்பாட்டையும் மாற்றக்கூடாது என்றும், தேவதாசி என்பது கடவுளுக்கே பணி செய்யும் அற்புத விஷயம் என்றும் சட்டடபையிலே சிலர் பேசி, இந்தச் சட்டத்தை நிறுத்த முயன்றனர். அதற்குத் தகுந்த பதிலடியாக, 'கடவுளுக்கே செய்யும் பணி என்றால், இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்களைச் செய்ய சொல்லலாமே' என்றார் முத்துலட்சுமி. 

இந்தப் பதில் பலரையும் மெளனத்தில் ஆழ்த்தியது. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. அதுவரை சொல்லொண்ணா இன்னல்களில் தவித்த தேவதாசிப் பெண்கள், விடுதலைக் காற்றைச் சுவாதித்தனர். சமூக நீதி வரலாற்றில் முத்துலட்சுமி ரெட்டிக்குச் சிறப்பான இடத்தையும் புகழையும் வழங்கியது இந்தச் சம்பவம். அதன்பின், பல்வேறு பதவிகளை வகித்தார். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று உரை நிகழ்த்தினார். சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை தேவை என்பதை வலியுறுத்தினார். இவரின் தொடர் முயற்சியால் 1952-ம் ஆண்டு, அடையாறு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அவரின் சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது.


1968 ஜூலை 22, முத்துலட்சுமி இயற்கை எய்தினார்.

பெண்கள் கையில் அதிகாரம் கிடைக்கும்போதே, சமூக நீதிக்கான பயணம் விரைவுபடுத்தப்படுகிறது என்பதற்கு முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை ஓர் உதாரணம். 1913-ம் ஆண்டில், அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பே சடங்கு மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இவரின் பெயரில், 'டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு மண நிதி உதவித் திட்டம்' எனும் பெயரில், கலப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது. முத்துலட்சுமி ரெட்டிக்கு மத்திய அரசு, 'பத்ம பூஷண்' விருது அளித்தது. 



சமூகப் போராளி டாக்டர்
                 #முத்துலட்சுமி_ரெட்டி.
         பிறந்தநாள் இன்று - சூலை 30.
~~~~~~~~
   
இந்தியாவின் #முதல்பெண்டாக்டர் #முத்துலட்சுமிரெட்டி
அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் #அவ்வை_இல்லத்தைத் தொடங்கினார். தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும்.

இன்று (ஜூலை 30-ந் தேதி) இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்தார். இதனை நேரில் பார்த்ததால் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும். நம்முடைய தாயை போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே அவருக்குள் ஆணிவேராக வளர்ந்தது.


1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இவர், படிப்பில் சிறந்து விளங்கியதால் பல்வேறு சான்றிதழ்களையும், தங்க பதக்கங்களையும் பெற்றார்.

கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார அனுமதிப்பது இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை பாடத்தில் முத்துலட்சுமி #தங்கப்பதக்கம் பெற்ற பிறகு, மனம் மாறிய பேராசிரியர், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் தனது வகுப்பில் பெண்களும் உட்காரலாம் என்று கூறினார்.

1912-ம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் #முதல்_பெண் #மருத்துவராக பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும் புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.

1926-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், 1933-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவிலும் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடுகளில் இந்திய பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் பணியாற்றி, அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் 1925-ம் ஆண்டு சட்டசபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் சில புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். அவற்றில் #தேவதாசி #முறைஒழிப்பு, #இருதாரதடைச்சட்டம், #பெண்களுக்கானசொத்துரிமை வழங்கும் சட்டம், #பால்யவிவாக #தடைச்சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆணாதிக்கமிக்க அந்த காலத்தில் தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்காக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். பின்னர் 1947-ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அந்த சட்டம் அமலுக்கு வந்தது.

அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை தொடங்கினார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கென நிதி திரட்டி 1952-ம் ஆண்டு அடையாறில் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பெற்று 1954-ல் தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும். 1956-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 1968-ம் ஆண்டு தனது 81-வது வயதில் காலமானார்.

இவரது நினைவைப் பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசால்.                   ‘#டாக்டர்முத்துலட்சுமிமகப்பேறு_நிதி #உதவித்திட்டம்’ ஏழை கர்ப்பிணிகளுக்காக தொடங்கப்பட்டது. தற்போது, 2018-ம் ஆண்டு முதல் பேறுகால உதவியாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி பிறந்தநாளான ஜூலை 30-ந் தேதியை அரசு மருத்துவமனைகளில் ‘மருத்துவமனை தினமாக’ கொண்டாட தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் பல்வேறு மருத்துவ சேவைகள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

‘#பட்டங்கள்ஆள்வதும்சட்டங்கள் #செய்வதும்
#பாரினில்பெண்கள்நடத்த_வந்தோம்
#எட்டுமறிவினில்ஆணுக்கிங்கேபெண்
#இளைப்பில்லைகாணென்றுகும்மியடி

என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் #டாக்டர் #முத்துலட்சுமி_ரெட்டி ஆவார். வாழ்க்கையில் எத்திசையில் திரும்பினாலும் தொல்லையும் துயரமும் உங்களுக்கு வந்தாலும் டாக்டர் முத்துலட்சுமியை நினைத்து கொள்ளுங்கள். துணிவும் தன்னம்பிக்கையும் உங்களுக்குத் தானாக வரும்.

#மருத்துவர்முத்துலட்சுமிரெட்டி

புகழ் என்றும் வாழ்க.
.🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தவிட்டுபாளையம் அந்தியூர் பெரியார் மாவட்டம்..🙏🙏🙏

Saturday, 31 March 2018

CHRISTOPHER NOLAN , HOLLYWOOD DIRECTOR BORN 1970 JULY 30





CHRISTOPHER NOLAN ,
HOLLYWOOD DIRECTOR
BORN 1970 JULY 30




கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைகதைகளை எழுதுயுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். அவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கினார்.
ஆரம்பக்கால வாழ்க்கை

இலண்டனில் பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் அவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில வாத்தியாராக பணிப்புரிந்துள்ளார். [2][3][4]இலண்டன் மற்றும் சிகாகோ என இரு நகரங்களில் அவரது சிறு வயது கழிந்தது. அவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது.[5][6] அவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர். [7]நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார்.[8][9] தனது பதினோராவது வயதிலிருந்து, அவர் ஓர் இயக்குனர் ஆக வேண்டும் என கனவு கண்டார்.[7]


ஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரியில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை அவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்த கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்பட கருவிகள் தான். [10] திரைப்பட குழுவின் தலைவராக நோலன் இருந்தார். எம்மா தாமஸ் உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களை திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார். [11]

அவரது கல்லூரி காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, "டாரன்டெல்லா" எனும் 8 மிமீ படமே அவரது முதல் படமாகும்.[12] 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான அவரது இரண்டாவது படம் "லார்சனி".[13] நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்த படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது.[14]
வரவேற்பு

அக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான பால்லோவிங் வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது த டார்க் நைட் திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது.[15]


Directed features[edit source]

Critical, public and commercial reception to Nolan's directorial features as of 15 March 2018.

YearFilmRotten Tomatoes[319]Metacritic[320]BFCA[321]CinemaScore[322]BudgetBox office[323]
1998Following79% (24 reviews)60 (11 reviews)N/AN/A$6 thousand$48.4 thousand
2000Memento92% (169 reviews)80 (34 reviews)90/100N/A$9 million$39.7 million
2002Insomnia92% (199 reviews)78 (36 reviews)93/100B$46 million$113.7 million
2005Batman Begins84% (271 reviews)70 (41 reviews)91/100A$150 million$374.2 million
2006The Prestige75% (191 reviews)66 (36 reviews)83/100B$40 million$109.6 million
2008The Dark Knight94% (326 reviews)82 (39 reviews)96/100A$185 million$1.005 billion
2010Inception86% (337 reviews)74 (42 reviews)94/100B+$160 million$825.5 million
2012The Dark Knight Rises87% (345 reviews)78 (45 reviews)91/100A$250 million$1.085 billion
2014Interstellar71% (325 reviews)74 (46 reviews)80/100B+$165 million$675.1 million
2017Dunkirk92% (375 reviews)94 (53 reviews)90/100A−$100 million$525.6 million