Showing posts with label SECURITY. Show all posts
Showing posts with label SECURITY. Show all posts

Tuesday, 11 January 2022

PRIME MINISTER SECURITY IN INDIA

 


PRIME MINISTER SECURITY IN INDIA



கோட்டு சூட்டுடன் கையில் சூட் கேஸ்.!! என்ன அது.? பிரதமரை சுற்றி இத்தனை சிறப்பா.? ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயம்..


நாடு ஏற்கனவே பயங்கரவாதத்தால் இரண்டு பிரதமர்களை இழந்திருக்கையில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில், பிரதமர் 20 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் நிறுத்தவைக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் விஷயம். இதை பல மூத்த காங்கிரஸ்காரர்களே கூறிவிட்டனர். அந்த பரபரப்பு காட்சிகளும் தற்போது வெளியாகி இருக்க, பிரதமரை அன்று அங்கு, கண் இமை போலவும், கர்ணனின் கவசம் போலவும் காத்து நின்றவர்கள் மீது, தற்போது மக்களின் பார்வை திரும்பியுள்ளது.

கோட்டு சூட்டுடன் துப்பாக்கி..? சிலர், கையில் ஏதோ File-லையும் வைத்துள்ளனர்..!! பாதுகாவலர்களா? அதிகாரிகளா? யார் அவர்கள்? அவர்கள் தான்.. “SPG” எனப்படும் Special Protection Group.. நாட்டில் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு என்று பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன. X பாதுகாப்பு, Y பாதுகாப்பு, Y plus பாதுகாப்பு, Z பாதுகாப்பு, Z plus பாதுகாப்பு மற்றும் SPG. இதில் SPG பாதுகாப்பு என்பது, பிரதமருக்கும் பிரதமரின் முதல்மட்ட குடும்பத்திற்கும் மட்டுமே வழங்கப்படுகிறது.


நாட்டின் Elite படையாக பார்க்கப்படும் இந்த SPGயில், சுமார் 3 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். Secret Service of America போல பயிற்சி அளிக்கப்படும் இவர்களிடம் FNF-2000 Assault Rifle, FN P90, FN Herstal Five-seven, Glock 19, IOF Modern Sub Machine Carbine போன்ற அதிநவீன துப்பாக்கிகள் இருக்கும். இவற்றில், FNF-2000 Assault Rifle, FN P90, IOF Modern Sub Machine Carbine போன்றவை, நிமிடத்துக்கு சராசரியாக 900 குண்டுகளை சரசரவென பாய்ச்சி சுடக் கூடியவை. Glock 19-னோ நிமிடத்துக்கு 1,100 முதல் 1,200 குண்டுகள் வரை பாய்ச்சி சுடக் கூடியது.

அதேபோல அவர்கள், கருப்பு நிறத்தில் மெலிதான Suit case போன்ற ஒன்றை எடுத்துச் செல்வர். அது, File-களை கொண்டிருக்கும் office Suit case அல்ல. அது portable folded ballistic shield. அதாவது, bullet proof shield. பிரதமரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அதை சரசரவென கேடயம் போல் விரித்து, துப்பாக்கிச் சூட்டில் இருந்து பிரதமரை அவர்கள் காப்பர்.


யாரை கவனிக்கிறார்கள் என்பது வெளியே தெரியாமலிருக்க, அவர்கள் எப்பொழுதுமே கருப்பு நிற கண்ணாடியையும் போட்டிருப்பார்கள். அவர்கள் போட்டிருக்கும் Shoe மற்றும் gloves, அவர்கள் எந்த இடத்திலும் Slip ஆகாதவாறும், ஆயுதங்கள் அவர்களது கையில் இருந்து நழுவாமல் இருக்கவும் உதவுகிறது. அவர்கள் பெரும்பாலான நாட்களில் கோட் சூட் தான் போடுவார்கள். கோடை காலத்தில் வெப்பம் ஏறாமல் இருக்க Safari உடை அணிவர்.

அதேபோல பிரதமரின் வாகன cavalcade-டையும் இவர்களே கையாள்வார்கள். அதன்படி, இரண்டு Armoured BWW 7 Series Sedan, ஆறு BMW X5, ஒரு Mercedes Benz ambulance, Toyota Cruiser (க்ரூய்ஸர்), புதிதாக வாங்கப்பட்ட Mercedes-Benz Maybach S 650 மற்றும், 100 மீட்டர் வரை பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் antenna (ஆண்டனா) பொருந்திய Tata Safari Jammer ஒன்றும் செல்லும். இந்த கார்கள் அனைத்தும், Bullet proof கொண்டவை. துப்பாக்கிச்சூடு மட்டுமின்றி Grenade தாக்குதலால் கூட காருக்குள் இருப்பவரை தாக்க முடியாத அளவுக்கு அந்த கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


மேலும், அவற்றின் tyre-கள் முற்கம்பிகளால் Puncture செய்யப்பட்டால் கூட கிட்டத்தட்ட 320 கிலோ மீட்டர் தூரம் வரை, மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறையாமல் செல்லும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் SPG-யின் முழு கட்டுப்பாட்டிலேயே இயங்கும். SPG-யுடன் NSG படைகளும் இருக்கும். இவர்களும் SPG-யின் உத்தரவுப்படியே நடப்பார்கள்


பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் என்பது முழுவதும் விமானப்படையால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும், அங்கு முன்னரே சென்று இடத்தையும் ஆய்வு செய்வர். பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மட்டும் பிரத்தியேகமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Air India One விமானம் செயல்படும். அதில் அதிகாரிகளுடன் SPG மற்றும் NSG படைகளும் இருப்பார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இத்தனை சிறப்புகளுடன் இயங்கும் இந்த SPG-யே, நிஜ “காப்பான்”.—– நன்றி, அருண் –


Monday, 12 April 2021

INDIAN REGIMENT BORDER SECURITY FORCE

 

INDIAN REGIMENT BORDER SECURITY FORCE



ஏப்ரல் 3, 2020 அதிகாலையில், எல்லை கட்டுபாட்டு கோடருகே 8ஆவது ஜாட் படையணி காவல் காத்து வந்த பகுதியில் கம்பி வேலிகள் பாகிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் வெட்டப்படுகிறது, இதன் பின்னர் நமது எல்லைக்குள் ஊடுருவி வருகின்றனர்.

 

திடீரென அந்த பகுதிக்கு ரோந்து வந்த 8ஆவது ஜாட் படையணி பனியில் காலடி தடங்கள் மற்றும் வெட்டப்பட்ட கம்பி வேலியை கண்டு உஷார் அடைந்து ராணுவ கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் அனுப்புகிறது.


உடனடியாக அருகில் இருந்து 41 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் 57ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் அந்த மொத்த பகுதியையும் தப்பிக்க ஒரு வழியும் இல்லாதபடி சுற்றி வளைக்க அனுப்பபட்டனர்.


இனி பயங்கரவாதிகளை நேரடியாக எதிர்கொள்ள 4ஆவது பாரா சிறப்பு படை களமிறக்கப்பட்டது. நடுநிசியில் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வீரர்கள் மலையின் மேலிருந்து கீழ் நோக்கி பயங்கரவாதிகளை சல்லடை போட்டு தேடி கொண்டு வந்தனர்.


 

அதிகாலை 4.30மணியளவில் 8ஆவது ஜாட் படையணி சுற்றி வளைத்து இருந்த பகுதியில் 4ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் வந்த போது பயங்கரவாதிகளுடன் முதல் மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த கீழ் நோக்கி தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க சுபேதார் சஞ்சீவ் குமார் தனது படையணியுடன் மிக வேகமாக முன்னேறினார்.


பாராவீரர் பால் க்ரிஷன் – இமாச்சல பிரதேசம்,

மறுபடியும் காலை 8.30மணியளவில் பயங்கரவாதிகளுடன் இரண்டாவது மோதல் ஏற்படுகிறது. சுபேதார் சஞ்சீவ் குமார் பாராவீரர்கள் அமித் மற்றும் சத்ரபாலை கூட்டி கொண்டு சிறிது தூரம் சுற்ற சென்று அங்கிருந்து பயங்கரவாதிகளை மடக்க செல்கின்றார்.



திடீரென பனி இடிந்து விழ பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிக்கு மிக மிக நெருங்கிய நிலையில் சிறிய ஓடையில் மூவரும் விழ, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

 

மூன்று வீரர்களும் கடுமையான தோட்டா காயங்களை உள்வாங்குகின்றனர், சுபேதார் சஞ்சய் மற்றும் சத்ரபால் உடல்களை பல தோட்டாக்கள் துளைத்த நிலையில் பாராவீரர் அமித் உடலை சுமார் 15தோட்டாக்கள் சல்லடையாக துளைத்து இருந்தன. 


எனினும் மூவரும் சற்றும் பின்வாங்காமல் எதிர் தாக்குதல் நடத்தி 2 பயங்கரவாதிகளை கொல்கின்றனர்.


பாராவீரர் அமித் குமார் – உத்தராகண்ட், இவருக்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

துப்பாக்கி சண்டை நடந்த திசையில் ஹவில்தார் தாவேந்தர் சிங் மற்றும் பாரா வீரர் பால் க்ரிஷன் விரைந்தனர்.


 படுகாயமடைந்த தங்களது நண்பர்களை காப்பாற்ற சென்ற போது பதுங்கி இருந்த மற்ற 2 பயங்கரவாதிகளும் இரண்டு ராணுவ வீரர்கள் மீதும் கடுமையான தாக்குதலை பிரயோகித்தனர்.


இதில் கடுமையான காயமடைந்த இருவரும் 2 பயங்கரவாதிகளையும் கொன்றொழித்தனர்.


5 சகாக்களும் சில நிமிடங்களில் நாட்டுக்காக ரத்த வெள்ளத்தில் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.


தப்பியோடிய கடைசி பயங்கரவாதியின் உடல் 8ஆவது ஜாட் படையணியால் சல்லடையாக்கப்பட்டது.


பாராவீரர் சத்ரபால் சிங் – ராஜஸ்தான் (22 வயதே நிரம்பிய இளைஞன்).

4ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியனுடைய படையணி திறம்பட செயல்பட்டது. நட்புக்கும் தேசப்பற்றிற்கும் இலக்கணமாக ஐவரும் விளங்கினர்.


கடந்த 2016 ஆண்டுக்கு பின்னர் சிறப்பு படைகளுக்கு தற்போது தான் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் இதே 4ஆவது பாரா சிறப்பு படை தான் 2016ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர் நடிகையர் என்ன உடை அணிந்தார்கள் என பட்டிமன்றம் நடத்தும் ஊடகங்கள் இத்தகைய தியாகங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.


1)சுபேதார் சஞ்சீவ் குமார் – இமாச்சல பிரதேசம்,

2)ஹவில்தார் தாவேந்தர் சிங் – உத்தராகண்ட்,

3)பாராவீரர் பால் க்ரிஷன் – இமாச்சல பிரதேசம்,

4)பாராவீரர் அமித் குமார் – உத்தராகண்ட், இவருக்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

5) பாராவீரர் சத்ரபால் சிங் – ராஜஸ்தான் (22 வயதே நிரம்பிய இளைஞன்).


நமக்காக நாட்டைக் காக்க தனது இன்னுயிரை ஈந்த சிங்கங்களுக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவோம்


அவர்களது குடும்ப சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வீர வணக்கத்தை செலுத்துவோம்.