Showing posts with label SUNDARAM. Show all posts
Showing posts with label SUNDARAM. Show all posts

Thursday, 29 April 2021

SERVER SUNDARAM 1964 TAMIL MOVIE REVIEW

 



SERVER SUNDARAM 1964 TAMIL MOVIE REVIEW

சர்வர் சுந்தரம் (1964)


கடிவாளம் கட்டிய குதிரையாக ஓடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைத் திசை திருப்பிய திரைப்படங்களைத்தான் ‘டிரெண்ட்செட்டிங் பிலிம்ஸ்’ என்று கொண்டாடி வந்திருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 11- 12- 1964-ல் வெளியாகித் தமிழ் சினிமா ரசனைக்குப் புது ரத்தம் பாய்ச்சிய படமே ‘சர்வர் சுந்தரம், திரையுலகைக் கதைக் களமாக்கிய முதல் தமிழ்த் திரைப்படம்.

சினிமா ஸ்டுடியோக்களில் எப்படிப் படப்பிடிப்பு நடக்கிறது, பாடல் எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்ற ரகசியத்தை உடைத்துக் காட்டியது. இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றியும், விருதுகளும், இதே போன்ற கதையம்சத்துடன் கூடிய பல படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தன. அவற்றில் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’, சிவகுமார் நடித்த ‘ஏணிப்படிகள்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்தன.

அன்று முன்னணி நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார் நாகேஷ். எம்.ஜி.ஆர். – சிவாஜி இருவருமே தங்களது படங்களில் நாகேஷ் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் நாகேஷ் கதைகளில் நுழைக்கப்பட்டார். இரண்டு பேரின் படங்களுக்கும் சிக்கல் வராதவாறு தனது கால்ஷீட்டைக் கவனமாகப் பிரித்துக் கொடுத்து நடித்துவந்தார். என்றாலும் அதிகப் படப்பிடிப்புகள் காரணமாக எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரண்டு பேரின் படப்பிடிப்புகளுக்குப் பல சமயங்களில் தாமதமாகப் போவார் நாகேஷ். ஆனால் அவர்கள் கோபித்துக்கொண்டதில்லை.




இவ்விரு சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்துவந்த அதேவேளை தன் மனதுக்குப் பிடித்தமான குணச்சித்திர வேடங்கள் கிடைத்தால், அவற்றுக்குச் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு நடித்தார். அது போன்ற வேடங்களில் கதாபாத்திரமாக வாழ ஆரம்பித்தார். ஏ.வி.எம். செட்டியாரின் பார்வையில் நாகேஷ் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதைவிட, சிறந்த குணச்சித்திர நடிகராகத் தெரிந்தார். அப்போது தமிழ் நாடக மேடைக்கு சமகாலக் கதைகளை நாடகங்களாக எழுதிப் பெயர்பெற்று வந்தார் கே.பாலச்சந்தர். ‘சர்வர் சுந்தரம்’ கே. பாலச்சந்தர் எழுதிய நாடகம்தான். அந்த நாடகத்தைப் பார்த்த செட்டியார், அதை வாங்கித் திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ முதல் கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷிடம் டிரங்க் காலில் பேசினார் செட்டியார். அத்தனை பெரிய பட அதிபர் நம்மிடம் பேசுவதா என்று நெகிழ்ந்த நாகேஷ், படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் செட்டியாரைச் சென்று சந்தித்தார்.

“சர்வர் சுந்தரம் நாடகத்தோட ரைட்ஸ் வாங்கிவிட்டேன்” என்றார் செட்டியார். “நீங்க ஒரு முடிவு எடுத்துட்டா அது சரியா இருக்கும். ஆனால், நல்ல மார்க்கெட் உள்ள ஹீரோவா போடுங்க” என்றார் நாகேஷ். “இந்தக் கதையில நீதான் நடிக்கணும். அதுதான் சரியா இருக்கும்” என்றார் செட்டியார். “நீங்க முடிவு எடுத்துட்டா அதை மாத்த முடியுமா?” என்றார் நாகேஷ். செட்டியார் சிரித்துவிட்டார். கதை, திரைக்கதை, வசனத்தைக் கே. பாலச்சந்தர் எழுத, சமூகப் படங்களை வரிசையாக இயக்கிப் புகழ்பெற்றிருந்த கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்க, நாகேஷ் கதையின் நாயகனாக நடித்தார்.

சினிமாவில் பெரிய நடிகனாகப் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வருகிறார் நாகேஷ். எனினும் தனது தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறார். வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் முன் வயிற்றைக் காயவிடக் கூடாது அல்லவா? அதற்காக உணவு விடுதி ஒன்றில் சர்வராக வேலை செய்கிறார். நாகேஷின் உணவு பறிமாறும் குறும்புகளைப் பல வாடிக்கையாளர்கள் ரசிக்கிறார்கள்.

சிலர் சிடுசிடுக்கிறார்கள். அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மேஜர் சுந்தரராஜன். அவரது மகள் கே.ஆர். விஜயா அங்கே அடிக்கடி வருகிறார். நாகேஷைப் பாராட்டுகிறார். தனது முதலாளியின் மகள் என்பதை அறியாத நாகேஷ், கே.ஆர்.விஜயாவின் ஊக்குவிப்பால் உந்தப்பட்டு அவர்பால் ஈர்க்கப்படுகிறார். பிறகு அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். கே.ஆர்.விஜயாவோ தனது கல்லூரி நண்பரான முத்துராமனைக் காதலிக்கிறார். முத்துராமன், நாகேஷின் உயிர் நண்பன்.

ஒருநாள் முத்துராமனிடம் சென்று கே.ஆர். விஜயாவைக் காதலிப்பதாகச் சொல்கிறார் நாகேஷ். அதைக் கேட்டு காதலனாகிய முத்துராமன் துடிக்கிறார். அதைக் காதலியிடம் சொல்ல, அவரும் துடிக்கிறார். நட்பாகப் பழகியது தப்பாகிவிட்டதே என கே.ஆர். விஜயா தவிக்கிறார். இதற்கிடையில் நாகேஷின் திரையுலகத் தேடல் தீவிரமாகிறது. ஒரு கட்டத்தில் நாகேஷின் திறமை கண்டறியப்பட்டு நாடு போற்றும் நடிகனாகிவிடுகிறார். பணம், புகழ், அந்தஸ்து எல்லாமே கிடைக்க, சர்வர் சுந்தரம் இப்போது ஆக்டர் சுந்தரம்.

வாழ்க்கையில் எண்ணியதெல்லாம் கிடைத்த பிறகு அடுத்து என்ன? தனது காதலைத் தெரிவிக்கக் கையில் பூங்கொத்தை ஏந்தியபடி கே.ஆர்.விஜயாவைத் தேடி வருகிறார். அப்போது காதலனும் உடன் இருக்க, நாகேஷ் தன் காதலைச் சொல்ல, அந்த நொடியில் ஆரம்பிக்கும் உணர்ச்சிப் போராட்டம் படத்தின் முடிவாக அமைந்தது. காதல் ஒரு மனிதனை உயர்த்தும். அதேநேரம் அதுவே தோல்வியில் முடிந்தால் அந்த மனிதனின் மனதை உடைப்பதற்குப் பதிலாகப் பண்படுத்தும் என்ற கருத்தைத் தூக்கிப்பிடித்தது பாலச்சந்தரின் தேர்ந்த திரை எழுத்து.

காதல் தோல்விக்குப் பிறகு தாயின் இறப்பை எதிர்கொள்ளும் சர்வர் சுந்தரம், ஒரு எளிய மனிதனாக சர்வர் வேலைசெய்தபோது கிடைத்த நிம்மதி, நடிகனாக உயர்ந்தபோது இல்லை என்பதைப் புரியவைப்பதோடு படம் முடியும். வில்லன் இல்லாத படம்.

ஐம்பதாண்டுகள் மேலாக இன்றும் கொண்டாடப்படும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இன்றைய தலைமுறை ரசிகர்கள் பார்த்தால் அதன் திரைக்கதை நேர்த்தியை, கதாபாத்திரங்களின் கட்டமைப்பைப் பாராட்டித் தள்ளுவார்கள். சிவந்த நிறமும், எடுப்பான தோற்றமும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நாயகனாக உருவாக முடியும் என்ற மூடநம்பிக்கையைச் சர்வர் சுந்தரம்தான் முதன்முதலாக உடைத்தெறிந்தது.

இந்தப் படத்தில் சர்வர் சுந்தரமாக வாழ்ந்த நாகேஷின் நடிப்புத் திறமை எல்லாப் பரிமாணங்களிலும் சிறப்பாக வெளிப்பட்டு நின்றது. அவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. படத்தில் வரும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்ற பாடலில் தனது நடனத் திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தியதால் ‘அழகிய மனம்’ கொண்ட கதாபாத்திரமாக நாகேஷை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாக்கியது.

இந்தப் படத்தின் வழியாகப் பிரபலமாகி ஒரு நட்சத்திர எழுத்தாளராகவும், இயக்குநராகவும் உயர்ந்தார் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். இப்படம் தேசிய விருதைப் பெற்றதோடு, இந்தி உட்பட பல மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றிகளைக் குவித்தது.


Tuesday, 15 September 2020

K.P.KAMATCHI SUNDARAM LYRICS WRITER



K.P.KAMATCHI SUNDARAM
 LYRICS WRITER

கே.பி.காமாட்சி 
[வில்லன் நடிகர் மற்றும் கவிஞர்]

கண்ணதாசனுடைய முந்தைய தலைமுறைப் பாடலாசிரியர் கவிஞர் கே.பி.காமாட்சி. இவருடைய முழு பெயர் கே.பி.காமாட்சி சுந்தரம். ஏழு வயதிலேயே நாடகக் குழுவான பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து, 22 வயதிற்குள் ஆயிரம் நாடக மேடைகளில் நடிக்கும் சாதனையைப் புரிந்தவர் கே.பி.காமாட்சி.

ஆரம்ப கால பேசும் படங்களிலும் முன்னோடி நடிகராக உருவானவர். வில்லன் நடிப்பில் ரி.எஸ்.பாலையாவிற்கு முன்னுதாரணம் கே.பி.காமாட்சிதான்.

‘பதி பக்தி’ படத்தில் 1936-இல் நடிக்கத் தொடங்கியவர். 1941-இல் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சொந்தப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவராக சிறப்பாக நடித்தவர். படத்தில் சில பாடல்களும் எழுதினார் கே.பி.காமாட்சி.

கலைஞர் மு.கருணாநிதியின் உரை நடையில் சிவாஜிகணேசனின் வசன அம்புகளால் தாக்கப்படும் கோயில் பூசாரியாக ‘பராசக்தி’யில் நடித்தவரும் இந்த கே.பி.காமாட்சி தான். நடிப்பு வாய்ப்பு பறி போனவுடன், பாடலாசிரியராக மாறி சக்கைப் போடு போட்டார் கே.பி.காமாட்சி.

1949-இல் வெளிவந்த “வாழ்க்கை” படத்தில் ’உன் கண் உன்னை ஏமாற்றினால்’, 1952-இல் வெளிவந்த “பராசக்தி”யில் ‘ஓ ரசிக்கும் சீமானே வா”, 1954-இல் வெளிவந்த ”எதிர் பாராதது” ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே’, 1957-இல் வெளிவந்த “அமரதீபம்” படத்தில் ‘தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு’ முதலிய வெற்றிப் பாடல்களை எழுதியவர் கே.பி.காமாட்சி. இவரும் கவிஞர் கம்பதாசனும் நெருங்கிய நண்பர்கள்.

 தினமலர் பல்சுவை மலரிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

.

Tuesday, 31 July 2018

VIETNAM VEEDU SUNDARAM ,DIALOGUE,DIRECTOR BORN 1940 JULY 31





VIETNAM VEEDU SUNDARAM ,DIALOGUE,DIRECTOR
BORN 1940 JULY 31




Vietnam Veedu" Sundaram born 1940 ,july 31 was a popular Tamil scriptwriter and director.

He has written scripts for nearly all the actors and wrote for 8 films starring Sivaji Ganesan after 1970. His directorial ventures Gauravam, Gnana Paravai, Vijaya, Devi Sri Kumariamman and Payanam are considered cult classics. He was the writer for Tamil classics like Vietnam Veedu, Gnana Oli, Satyam, Grihapravesam, Justice Gopinath Annan Oru Koyil starring Sivaji Ganesan, Naan Yen Pirandhen, Naalai Namadhe starring M. G. Ramachandran. He has directed more than a dozen films and is well known for his family themes. His stories have been made into films in Telugu, Kannada and Hindi.[2] He has turned actor on the small screen and films after 1998 and has to his credit quite a few television serials.

Early life[edit]

Sundaram's mother brought him to Madras from Tiruchirapalli in 1945 to see Mahatma Gandhi at Island Grounds. Then he moved to Madras for good in 1955.

As he was not well educated he was made to work in a factory even at a very young age. In 1955-56 he joined Dunlop factory as a machine operator.

In the mean time he was also working as a service boy in United Amateur Artistes run by Y.G. Parthasarathy, his wife and Pattu. That kindled his interest in drama and cinema. He used to narrate real life incidents with imagination and make it an interesting story. This made him a good storyteller among his friends.Slowly he graduated himself in theatrics and play writing. Soon he became a good screenplay and dialogue writer.

Film career[edit]

He was the mastermind behind creating the highly successful play "Vietnam Veedu," hence the prefix for his name. Vietnam Veedu Sundaram played the hat-trick in films too with the same titles, all acted by the Nadigar Thilagam Sivaji Ganesan, the Thespian of Indian cinema.[3] He is known as the ‘founder’ of social mythology. The well known movies which he wrote include Vietnam Veedu, Gnana Oli, Naan En Piranden, Naalai Namadhe,Satyam, Gruhapravesam, Justice Gopinath, Anaan Oru Koyil, Oru Malarin Payanam, Navagraha Nayaki, Geethanjali, Aayiram Kannudayaal,Dharmam, Piranthn Valarthen, Nambinar Keduvathillai, Jallikattu, Raja Mariyadhai, Velundu Vinaiyillai, Soora Samhaaram. He also wrote story for Kannada film Anupama. He gained national fame for writing the story for 1978 Hindi film Devata starring Sanjev Kumar in the lead.
He cast the ever green K. R. Vijaya in the role of goddess in "Namma Veetu Deivam", the first time social mythology in Tamil, which was remade into Malayalam, Telugu and Kannada. That set the social mythology trend in films and televisions. He has directed more than dozen films and is well known for his family themes with one of them Gouravam being a cult classic.[4] His stories have been made into films in other languages also. He started acting in films since 1999.He turned actor on the small screen from 1998 and has to his credit quite a few television serials. He has worked as a writer for films with many popular stars including M. G. Ramachandran, Sivaji Ganesan, Rajinikanth, Kamal Hassan, K. R. Vijaya, Sathyaraj and Karthik Muthuraman.[5]

Death[edit]

Sundaram died on 6 August 2016 at the age of 73 due to age related ailments.[6] He is survived by his wife Chella and daughter Anu Parthasarathy who is a costume designer.[1][7]

Awards and nominations[edit]
"Vietnam Veedu" Sundaram won the Tamil Nadu State Film Award for Best Dialogue Writer for his magnum opus, Vietnam Veedu in 1970. He also won the Arignar Anna Award in the Tamil Nadu State Film Honorary Award in 1991.