Showing posts with label BICYCLE. Show all posts
Showing posts with label BICYCLE. Show all posts

Sunday, 7 June 2020

WORLD BICYCLE DAY JUNE 3







ஜூன் 3 - உலக சைக்கிள் தினம்





உலகின், 'டாப் 5' மகிழ்ச்சிகரமான நாடுகளில் ஒன்று, நெதர்லாந்து. இந்த நாட்டில், மக்கள் தொகையை விட அதிகம் இருப்பது, சைக்கிள் தான். அந்தளவுக்கு, அவர்கள் சைக்கிள் பிரியர்கள்.
தங்களது மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் காரணமாக அவர்கள் கூறுவது, சைக்கிள் சவாரியை தான். அவர்களின், 70 சதவீத போக்குவரத்து, சைக்கிளில் தான்
* பிரிட்டன் நாட்டில், தற்போது, நோய்கள் குறைந்து, மக்கள் ஆரோக்கியமாக வாழ, தினமும், 30 நிமிடங்கள், குறைந்தது ஆறு மாதங்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியை பரிந்துரைக்கின்றனர், மருத்துவர்கள்


'சைக்கிள் ஓட்டும் பயிற்சியால், மருந்துகளால் வரும் பக்க விளைவுகள் குறைகிறது; உடல் ஆரோக்கியத்திற்கென செய்யும் செலவுகளும் குறைகிறது...' என்கின்றனர்
* 'உடல் எடையை குறைக்க, வாரத்தில், ஐந்து நாட்கள், 'ஜிம்' சென்று உடற்பயிற்சி செய்வதை விட, தினமும், நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு சைக்கிளில் சென்று வந்தாலே போதும்...' என்கின்றனர், டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
'சைக்கிள் சவாரி, உடலிலிருந்து கெட்ட நீரை வெளியேற்றுவதுடன், கெட்ட கொழுப்பையும் கரைத்து, உங்கள் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது...' என்று கூறுகின்றனர்
* 'உடல் ஆரோக்கியத்திற்கும், சைக்கிள் சவாரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சைக்கிள் ஓட்டுபவர்களின் ஆயுள், சைக்கிள் ஓட்டாதவர்களின் ஆயுளை விட, 30 சதவீதம் அதிகரிக்கிறது...' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்



* உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது, சைக்கிள் பயிற்சி. சைக்கிள் சவாரி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், ஓட்டுகிறவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
* தினமும் வேலைக்கு, பஸ், கார், டூ வீலர் ஆகியவற்றில் செல்பவர்களை விட, சைக்கிளில் போவோர் தான், நாள் முழுவதும் வேலை சுமை, மனச்சுமை குறைவாக இருப்பதாக உணர்கின்றனர். மேலும், அவர்களின் வேலை திறனும் அதிகரிப்பதாக, கனடா பல்கலைக் கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்
* கால் பாதம் முதல் மூளை வரை உடலின் அனைத்து பாகங்களையும் இயக்க வைத்து, இதய துடிப்பையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது, சைக்கிள் சவாரி
* சைக்கிளை, 'பெடல்' செய்வதால், கால் மூட்டு, பலம் அடைகிறது. மற்ற எலும்புகள் வலிமை அடைகின்றன. இதனால், எலும்பு தொடர்பான நோய்கள் தவிர்க்கப்படுகின்றன
* தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆபத்துகள் குறைவாகவே இருப்பதை, பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின், 15 ஆண்டு கால ஆய்வில் கண்டறிந்துள்ளனர்
* 'இன்சோம்னியா' எனும் துாக்கமின்மை நோயை விரட்ட, சைக்கிள் பயிற்சி உதவும் என்கின்றனர்
* சைக்கிள் சவாரி சுற்றுச்சூழலுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் உதவுவதால், நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா மக்கள், சைக்கிளை பயன்படுத்த சம்பளத்தில் கூடுதல், 'அலவன்ஸ்' கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

Wednesday, 5 February 2020

History of Bicycle




History of Bicycle


சைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு, History of Bicycle

உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவரது அன்றாட பணி என்னவாக இருந்தது தெரியுமா நண்பர்களே? நேராநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் ஒருகட்டத்தில் சும்மா இருந்து இருந்து வெறுத்துப்போன ஷிவ்ராக் நேரப்போகிற்க்காக அவ்வப்போது காய்ந்த மரதுண்டுகளை செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் நேரத்தை செலவிட்டார். அப்படி ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.


சிந்தனைக்கு மரத்துண்டுகளால் உயிர்கொடுத்த ஷிவ்ராக் 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைச் சைக்கிளில் திசைமாற்றியோ (Steering), மிதிஇயக்கியோ (Pedals), தடையோ (Break) கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வுதான் சைக்கிள் உருவாவதற்கு காரணமாக இருந்தது

கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு சைக்கிளை வடிவமைத்தார்.  ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளில்தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுபவர் சீட்டில் உட்கார்ந்துகொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட சைக்கிள் இதுதான்.

அன்றைய காலங்களில் முழுக்க முழுக்க மரதுண்டுகளால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சைக்கிளை உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி  தயாரிக்க முயற்ச்சித்தவர் லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் ஆவர். கார்ல் வோன் ட்ரைஸின் சைக்கிள் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதுவும் காலால் தரையை உந்திதள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கூட இந்த சைக்கிளின் நேர்த்தியான தோற்றம் மற்றும் இலகுவாக உருளக்கூடிய சக்கரம் ஆகியவை சைக்கிள் பிரியர்களிடையே பெரும் வரவேற்ப்பைபெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.

உலகில் முதன் முதலில் பெடலை (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவரையே சாரும் ஆகையால்தான் இன்று சைக்கிளை கண்டரிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து  நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக (Blacksmith) வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி (Steering), தடை (brake) மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.

இந்த சைக்கிளில் பின்புறச்சக்கரம் (Wheel) முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி (steering), தடை (brake), மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. இதில் இணைக்கப்பட்டிருந்த பெடலை பற்றி குறிப்பிடுவதென்றால் நாம் எல்லோரும் தையல்மிஷினை பார்த்திருப்போம்தானே. அதில் தையல்மிஷினை காலால் மிதித்து இயக்குவதற்கு அமைக்கப்பட்டிக்கும் பெடலையும் பார்த்திருப்போம்தானே. அதே செயல்பாட்டு முறையை கொண்ட பெடலைத்தான் மேக்மில்லன் தனது சைக்கிளிளும் அமைத்திருந்தார். பெடலை கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு சைக்கிள் இயங்கியது.

தையல்மிசினுக்கு வேண்டுமானால் அந்தவகை பெடல் பொருத்தமானதாக இருக்கலாம் ஆனால் சைக்கிளுக்கு அது பொருத்தமானதாக இல்லை அதனைதொடர்ந்து மேம்பட்ட பெடலை தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் மும்முறமாக இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் (Crank) மற்றும் பால் பியரிங்க்ஸ் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்ட பெடல் ஒன்றை தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த பெடலை சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு சைக்கிள் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

பின்புறசக்கரம் சிறிதாகவும் முன்புறசக்கரம் பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை கண்டு 1868-ஆம் ஆண்டு சைக்கிள் தயாரிப்பதற்க்கென்றே ஒரு நிறுவனம் ஒன்றை துவக்கினார். மிசாக்ஸ் கம்பெனி (Michaux Company) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த கம்பெனிதான் உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் சைக்கிள் தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட உலகின் முதல் சைக்கிள் கம்பெனி ஆகும்.

சைக்கிளின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சைக்கிளின் சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing) என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து சைக்கிளின் சக்கரத்தையும் (Wheel) உலோகத்தில் தயாரிக்கும் பணியில் முழுமூச்சாய் ஈடுபட்டார். முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்க்கு தேவையான சில முக்கிய பாகங்களை தயாரிப்பதில் வெற்றிகண்டனர். அந்த பாகங்கள்தான் சக்கரத்தின் ரிம் (Rim) மற்றும் ஸ்போக்ஸ் (Spokes) கம்பிகள். ரிம்மில் டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.

இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய சைக்கிள் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த சைக்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சைக்கிளைத்தான் முதன் முதலாக பெண்களும் பயன்படுத்ததொடங்கினார்கள். தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களை கொண்ட சைக்கிள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் வடிவமைத்த சைக்கிளை தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த சைக்கிள்கள் அனைத்தும் முன்புறசக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்கும் வகையில்தான் சைக்கிள் வடிவமைக்கப்பட்டிருந்து. பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி சைக்கிளை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது. இதைதொடர்ந்து இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் ஹென்றி லாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய சைக்கிள் ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.

இரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது சைக்கிளில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த பெடல் இயக்குசங்கிலி மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பெடலை மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது. அவர் வடிவமைத்த இந்த வகைச் சைக்கிளைத்தான் இன்று நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.

1888-ஆம் அண்டு ஜான் பாய்ட் டன்லூப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார், இதனை தொடர்ந்து சர் எட்முண்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் ஸ்டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன்லூப் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் (Aston) நகரில் ஹெர்குலிஸ் என்ற சைக்கிள் கம்பெனியை துவங்கினார். ஹெர்குலிஸ் சைக்கிள் கம்பெனி உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் தனது காலடி சுவடுகளை பதியச்செய்ய ஆரம்பித்தது.

நன்றி: வரலாற்று சுவடுகள்


Saturday, 29 September 2018

FIRST SAFETY BICYCLE INTRODUCED IN ENGLAND 1860







FIRST SAFETY BICYCLE 
INTRODUCED IN ENGLAND 1860













1418 Giovanni Fontana built the first human powered land vehicle -- it had four wheels and used an endless rope connected via gears to the wheels.

1493 Scetch of bicycle falsely attributed to Leonard da VinciSketches showing a primitive version of a bicycle, purported drawn by Leonardo da Vinci, surfaced in 1974. Further examination of the drawings indicates these are not by da Vinci's hand. The speculation that these are a sketch by a pupil after a lost drawing by da Vinci is also considered false.

An age test was performed, but the library in Milan (belonging to the Vatican) conceals its negative outcome, see http://www.cyclepublishing.com/…/leonardo%20da%20vinci%20bi… . Experts consider the sketches a hoax.

The earliest comes from a sketch said to be from 1534 and attributed to Gian Giacomo Caprotti, a pupil of Leonardo da Vinci
. In 1998 Hans-Erhard Lessing described this as a purposeful fraud.[1][2] However, the authenticity of the bicycle sketch is still vigorously maintained by followers of Prof. Augusto Marinoni, a lexicographer and philologist, who was entrusted by the Commissione Vinciana of Rome with the transcription of da Vinci's Codex Atlanticus.[3]

Replica made 1965-72 from 
the alleged 1493 Caprotti sketch.

Later, and equally unverified, is the contention that Comte the Sivrac developed a célérifère in 1792, demonstrating it at the Palais-Royal in France. The célérifère supposedly had two wheels set on a rigid wooden frame and no steering, directional control being limited to that attainable by leaning.[4] A rider was said to have sat astride the machine and pushed it along using alternate feet. It is now thought that the two-wheeled célérifère never existed (though there were four-wheelers) and it was instead a misinterpretation by the well-known French journalist Louis Baudry de Saunier in 1891.[5][6]

1817 to 1819: the draisine or velocipede

The first verifiable claim for a practically used bicycle belongs to German Baron Karl von Drais, a civil servant to the Grand Duke of Baden in Germany. Drais invented his Laufmaschine (German for "running machine") of 1817 that was called Draisine (English) or draisienne (French) by the press. Karl von Drais patented this design in 1818, which was the first commercially successful two-wheeled, steerable, human-propelled machine, commonly called a velocipede, and nicknamed hobby-horse or dandy horse.[7]

1820 BICYCLE PATTERN 

It was initially manufactured in Germany and France. Hans-Erhard Lessing found from circumstantial evidence that Drais' interest in finding an alternative to the horse was the starvation and death of horses caused by crop failure in 1816 ("Eighteen Hundred and Froze to Death," following the volcanic eruption of Tambora in 1815).[8]

On his first reported ride from Mannheim on June 12, 1817, he covered 13 km (eight miles) in less than an hour.[9] Constructed almost entirely of wood, the draisine weighed 22 kg (48 pounds), had brass bushings within the wheel bearings, iron shod wheels, a rear-wheel brake and 152 mm (6 inches) of trail of the front-wheel for a self-centering caster effect.

This design was welcomed by mechanically minded men daring to balance, and several thousand copies were built and used, primarily in Western Europe and in North America. Its popularity rapidly faded when, partly due to increasing numbers of accidents, some city authorities began to prohibit its use. However, in 1866 Paris a Chinese visitor named Bin Chun could still observe foot-pushed velocipedes.[10]

1820s to 1850s: an era of 3 and 4-wheelers[edit]

A couple seated on an 1886 Coventry Rotary Quadracycle for two.

McCall's first (top) and improved velocipede of 1869 - later predated to 1839 and attributed to MacMillan
Though technically not part of two-wheel ("bicycle") history, the intervening decades of the 1820s-1850s witnessed many developments concerning human-powered vehicles often using technologies similar to the draisine, even if the idea of a workable two-wheel design, requiring the rider to balance, had been dismissed. These new machines had three wheels (tricycles) or four (quadracycles) and came in a very wide variety of designs, using pedals, treadles, and hand-cranks, but these designs often suffered from high weight and high rolling resistance. However, Willard Sawyer in Dover successfully manufactured a range of treadle-operated 4-wheel vehicles and exported them worldwide in the 1850s.[11]

1860s and the Michaux or "boneshaker"[edit]
The first really popular and commercially successful design was French. An example is at the Museum of Science and Technology, Ottawa.[12] Initially developed around 1863, it sparked a fashionable craze briefly during 1868-70.
Its design was simpler than the Macmillan bicycle; it used rotary cranks and pedals mounted to the front wheel hub. Pedaling made it easier for riders to propel the machine at speed, but the rotational speed limitation of this design created stability and comfort concerns which would lead to the large front wheel of the "penny farthing". It was difficult to pedal the wheel that was used for steering. The use of metal frames reduced the weight and provided sleeker, more elegant designs, and also allowed mass-production. Different braking mechanisms were used depending on the manufacturer. In England, the velocipede earned the name of "bone-shaker" because of its rigid frame and iron-banded wheels that resulted in a "bone-shaking experience for riders."

The velocipede's renaissance began in Paris during the late 1860s. Its early history is complex and has been shrouded in some mystery, not least because of conflicting patent claims: all that has been stated for sure is that a French metalworker attached pedals to the front wheel; at present, the earliest year bicycle historians agree on is 1864. The identity of the person who attached cranks is still an open question at International Cycling History Conferences (ICHC). The claims of Ernest Michaux and of Pierre Lallement, and the lesser claims of rear-pedaling Alexandre Lefebvre, have their supporters within the ICHC community.

The original pedal-bicycle, with the serpentine frame, from Pierre Lallement's US Patent No. 59,915 drawing, 1866

New York company Pickering and Davis invented this pedal-bicycle for ladies in 1869.[13][14]
Bicycle historian David V. Herlihy documents that Lallement claimed to have created the pedal bicycle in Paris in 1863. He had seen someone riding a draisine in 1862 then originally came up with the idea to add pedals to it. It is a fact that he filed the earliest and only patent for a pedal-driven bicycle, in the US in 1866. Lallement's patent drawing shows a machine which looks exactly like Johnson's draisine, but with the pedals and rotary cranks attached to the front wheel hub, and a thin piece of iron over the top of the frame to act as a spring supporting the seat, for a slightly more comfortable ride.

By the early 1860s, the blacksmith Pierre Michaux, besides producing parts for the carriage trade, was producing "vélocipède à pédales" on a small scale. The wealthy Olivier brothers Aimé and René were students in Paris at this time, and these shrewd young entrepreneurs adopted the new machine. In 1865 they travelled from Paris to Avignon on a velocipede in only eight days. They recognized the potential profitability of producing and selling the new machine. Together with their friend Georges de la Bouglise, they formed a partnership with Pierre Michaux, Michaux et Cie ("Michaux and company"), in 1868,

avoiding use of the Olivier family name and staying behind the scenes, lest the venture prove to be a failure. This was the first company which mass-produced bicycles, replacing the early wooden frame with one made of two pieces of cast iron bolted together—otherwise, the early Michaux machines look exactly like Lallement's patent drawing. Together with a mechanic named Gabert in his hometown of Lyon, Aimé Olivier created a diagonal single-piece frame made of wrought iron which was much stronger, and as the first bicycle craze took hold, many other blacksmiths began forming companies to make bicycles using the new design. Velocipedes were expensive, and when customers soon began to complain about the Michaux serpentine cast-iron frames breaking, the Oliviers realized by 1868 that they needed to replace that design with the diagonal one which their competitors were already using, and the Michaux company continued to dominate the industry in its first years.

Saturday, 21 July 2018

BICYCLE THEIF MOVIE CREATED DIRECTOR SATYAJIT ROY






BICYCLE THEIF MOVIE CREATED 
DIRECTOR SATYAJIT ROY



விதைகளில் இருந்து தான் ,மரங்களும் ,செடிகளும் ,கொடிகளும் உருவாகின்றன .இவ்வாறு விதைத்த விதைகளில் இருந்து தான் ஒரு சத்தியஜித் ராய் நமக்கு கிடைத்தார் .அவர் பார்த்த இந்த திரைப்படம் அவருக்கு இருந்த உணர்ச்சிகளையும் ,யதார்த்தத்தையும் 
வெளிக்கொணர்ந்தது - அந்த படம்

" bicycle thief "

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உங்கள் வாழ்வில் எப்போதேனும் நீங்கள் திருடியிருக்கிறீர்களா..? இந்தக்கேள்வியைக் கேட்டால் யாரிடமிருந்தும் ஒருமாதிரியான புன்னகைதான் பதிலாக வரும். அந்தப் புன்னகைக்கு ஆமாம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்..அல்லது இல்லையென்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உள்ளே திருடனாக ஒளிந்திருப்பதென்னவோ.. அப்பப்ப...

விளையாட்டுத்தனமாகவேனும்... சின்னச்சின்னத் திருட்டுகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதாக த்தான் இருக்கும். வெற்றிகரமான திருட்டின் சாகசத்தன்மைதான் மறுபடியும் மறுபடியும் நம்மை அதை நோக்கி தள்ளியிருக்கக்கூடும். கள்ளன்-போலீஸ்
விளையாடுகிறபோதும்கூட, ஒரு போலீஸ்காரனாய் இருந்து திருடனை கண்டுபிடிக்கும்போது கிடைக்கிற பெருமிதத்தைக்காட்டிலும், ஒரு திருடனாக மாறி, வீடுகளின் கூரைகளைத்தாவித்தாவி கடக்கிறபோதும்.. போலீசுக்கு டிமிக்கி கொடுக் கிறபோதும் அடைகிற ஆனந்தமே.. பேரானந்தமாக இன்றும் நமது நினைவின் அடுக்குகளில் ஒரு ஆதிவாசியின் பச்சிலைச் சித்திரத்தைப்போல அழியாமல் பதிந்திருக்கிறது.

ஆனால், வாழ்வின் அர்த்தங்கள் பிடிபடத்துவங்கி விட்டபின் அதே திருட்டு உங்களுக்கு பேரானந்தமாக இருப்பதில்லை. மாறாக அது உங்களை அவமானத்தி ற்குள்ளாக்குகிறது. துரத்தும் இந்த வாழ்வின் வறுமை யும், அது உருவாக்கும் போதாமையும், அதை எதிர்கொ ள்ளமுடியாத இயலாமையும், திருட்டின் வாசலில் நம்மை கொண்டுபோய் நிறுத்திவைத்து வேடிக்கை பார்க்கிறது. வயிற்றுப்பாடும் வாழ்க்கைப்பாடும், களவாண்ட பொழுதுகளில் அது ஒரு நேர்மைக்குறை வான செயல் என்று நம்மை யோசிக்க விடுவதில்லை. அதிலும், உழைப்பை நம்பி வாழ நினைக்கும் ஒருவன், திருட்டில் இறங்கும் நிலைக்கு தள்ளப்படுவது துயர மானது. அதிலும் துயரமானது, அந்த திருட்டைக்கூட செய்யத்தெரியாமல் கையும் களவுமாகச் 
சிக்கிக்கொ ள்வது.

அந்த துயரம்கூட உங்கள் பிள்ளையின் கண்ணெதிரி லேயே நடக்க நேர்ந்துவிட்டால்... அது உங்களை என்ன பாடுபடுத்திவிடும்... அதை நீங்கள் எப்படி எதிர்கொ ள்வீர்கள்...உங்கள் மகன் அதை எப்படி புரிந்து கொள்வா ன்... தந்தை குறித்து அவன் கட்டிவைத்திருக்கும்

மனக்கோ ட்டை சீட்டுக்கட்டைப் போல அப்படியே சரிந்துவிடாதா...? இப்படியெல்லாம் உங்களுக்கு கேள்விகள் எழுந்தால், அதற்கான பதிலை ‘விட்டோரியா டி சிகா’ வின் ‘’பை சைக்கிள் தீவ்ஸ்’’ (BICYCLE THIEVES ) என்ற இத்தாலிய மொழி படத்தில் நீங்கள் கண்டடையலாம்.


இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ரோம் நகரத்தின் புறநகர் பகுதியில் கதை துவங்குகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் அலுவலகத்தின் முன்பாக ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். சுருட்டு புகைத்தபடியே வெளியேவரும் அதிகாரி, நமது கதாநாயகன் ‘அன்டோனியா ரிசி ’ போஸ்டர் ஒட்டும் கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாகவும், நாளைக் காலையில் ஒரு சைக்கிளுடன் அங்கு சென்று ஆஜராக வேண்டுமென்றும் கூறுகிறார். சைக்கிள் இல்லை யென்றால் இந்த வேலை கிடைக்காது என்றும் தெரிவிக்கிறார். எப்படியும் சைக்கிளுடன் வந்து விடுவேன் எனக்கூறி வேலைக்கான உத்தரவை பெற்றுச்செல்கிறான் ரிசி.

ஆனால் ரிசியின் சைக்கிளோ, அடகு வைக்கப்பட்டி ருக்கிறது. வீட்டில் இருக்கும் படுக்கை விரிப்புகளை அடகுவைத்து பணம் திரட்டி சைக்கிளை மீட்டு எடுத்துக்கொண்டு போஸ்டர் கம்பெனிக்கு சென்று வேலையை உறுதிசெய்துகொண்டு ரிசியும் அவனது துணைவியான மரியாவும் வீடு திரும்புகின்றனர். வரும் வழியில் குறி சொல்லும் ஒரு பெண்ணைப் பார்த்து, அவளால்தான் வேலை கிடைத்தது என்று அவளுக்கு நன்றி சொல்லி காணிக்கை செலுத்த செல்கிறாள் .
மரியா.

ரிசிக்கு அது பிடிக்காவிட்டாலும் மனைவியின் விருப்பத்திற்காக உடன் செல்கிறான். அடகிலிருந்து மீட்டு வந்த சைக்கிளை அன்று இரவு அவர்களது மகன் ப்ரூனோ, துடைத்து சுத்தம் செய்கிறான். அடுத்த நாள் காலையில் மகனுடன் வேலைக்கு கிளம்புகிறான். மகன் ப்ரூனோவை அவன் வேலைபார்க்கும் இடத்தில் விட்டுவிட்டு மாலையில் சந்திப்பதாக சொல்லிவிட்டு உற்சாகமாக புதிய வேலைக்கு செல்கிறான் ரிசி.

கம்பெனிக்கு சென்று ஒட்டுவதற்கான போஸ்டர்க ளையும், பசைச்சட்டியையும், ஒரு ஏணியையும் பெற்றுக்கொண்டு சக ஊழியருடன் சென்ரு பணியைத் துவக்குகிறான். ஓரிடத்தில் போஸ்டர்களை ஒட்டி விட்டு, அடுத்த இடத்திற்கு ஒட்டுவதற்காக தனியே செல்கிறான்.

சைக்கிளை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு ஏணியைப்போட்டு மேலே ஏறிச்சென்று போஸ்டரை ஒட்டுகிறான். அப்போது அங்கு வரும் ஒருவன் சுற்றும்முற்றும் நோட்டம் பார்த்துவிட்டு, அந்த சைக்கிளை திருடிக்கொண்டு செல்கிறான். அதை கவனித்து திடுக்கிடும் ரிசி, ஏணியிலிருந்து குதித்து அந்த சைக்கிள் திருடனை, ‘’ பிடியுங்கள்... திருடன்... திருடன்...’’ என்று கத்தியபடியே விரட்டிச்செல்கிறான். அந்தப்பக்கமாக வரும் ஒரு காரை மடக்கி அதில் தொற்றிக்கொண்டு திருடனை விரட்டுகிறான்.

ஆனால் அவனாவது... சிக்குவதாவது...! பஞ்சாய் பறந்துவிடுகிறான். திருடனைப் பிடிக்க முடியவில்லை. பல இடங்களிலும் தேடுகிறான்..ஒன்றும் பலனில்லை. மனச்சோர்வுடன் திரும்பிவரும் ரிசி, ஆத்திரத்தில் பசைச்சட்டியை தூக்கிப்போட்டு உடைக்கிறான்.

பின்னர், தனது சைக்கிளைக் காணவில்லையென போலீசில் புகார் செய்கிறான். போலீஸ் அதிகாரியோ, சைக்கிள் கிடைத்தாலும் கிடைக்கலாம்... அல்லது கிடைக்காமயே போனாலும் போகலாம் அலட்சியமாகக் என கூறுகிறான். மனம் உடைந்த நிலையில் தனக்காக காத்திருக்கும் மகனை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறான். சைக்கிள் எங்கேப்பா.. எனக்கேட்கும் மகனிடம், அது உடைந்துவிட்டதாக பொய் சொல்கி றான். வீட்டிற்கு வந்து மகனை விட்டுவிட்டு, தனது நண்பன் பையாக்கோவைச் சந்தித்து சைக்கிள் திருடு போய்விட்ட விஷயத்தை சொல்கிறான்.

மறுநாள் பழைய மற்றும் திருட்டு பொருட்களை விற்பனை செய்யும் ஒரு மார்க்கெட் பகுதிக்கு சென்று தேடுகிறார்கள். ரிசி, ப்ரூனோ, பையாக்கோ, அவந்து நண்பர்கள் சிலர் என ஆளுக்கு ஒரு பகுதியாக பிரிந்து சென்று பறி கொடுத்த சைக்கிளை தேடுகின்றனர். அது கிடைத்தபாடில்லை.

அங்கு ஒருவன் ஒரு சைக்கிளின் பிரேமுக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அவனிடம் சென்று விசாரிக்க... அவனோ காச்மூச்சென்று கத்த... கடைக்கா ரன் மனைவியும் வந்து சண்டை போட... போலீஸ் வந்து விசாரிக்கிறது.. கடைசியில் அது ரிசியின் சைக்கிள் அல்ல என தெரிகிறது. ஏமாற்றத்துடன் திரும்புகி றார்கள். அடுத்த நாள் மற்றொரு மார்க்கெட் பகுதிகு சென்று தேடுவதென முடிவு செய்து, அதன்படியே ரிசியும் ப்ரூனோவும் அங்கு செல்கின்றனர். அப்போது பலத்த மழை கொட்டுகிறது. தந்தையும் மகனும் ஒரு சுவற்றின் ஓரம் ஒதுங்கி நிற்கின்றனர்.

அந்த சமயத்தில் அங்கு வரும் ஒருவனைப் பார்த்ததும், தனது சைக்கிளைத் திருடியவனோ என ரிசிக்கு சந்தேகம் வர, ஒரு கிழவனிடம் பேசிக்கொண்டிருக்கும் அவனை துரத்துகின்றனர். அவனோ தப்பியோடி விடுகிறான். அந்த கிழவனைப் பிடித்து விசாரிக்கலா மென அவனைப் பின் தொடர்கின்றனர்.

அந்தக் கிழவனோ, தனக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறிவிட்டு அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனை ரிசி விடுவதாக இல்லை. விடாமல் பின்தொடர்கின்றனர். அந்தக்கிழ வன் ஒரு தேவாலயத்திற்குள் நுழைந்துவிடுகிறான். ரிசியும் பின் தொடர்கிறான்.

அங்கு பிரார்த்தனை தொடங்குவதற்கான நேரம். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துவிடும் கிழவனை, ரிசி அங்கேயும் விடுவதாக இல்லை. உன்னிடம் பேசிக்கொ ண்டிருந்த சைக்கிள் திருடனைப் பற்றிக் கூறாவிட்டால் விடமாட்டேன் என கட்டாயப்படுத்துகிறான். ஆனால் தனக்கு யாரையும் தெரியாது எனக்கூறும் அந்தக் கிழவன் சமயம் பார்த்து அங்கிருந்து தப்பிவிடுகிறான்.

விரக்தியுடன் திரும்பிவரும் தந்தையிடம், நானாகயி ருந்தால் அப்போதே பிடித்திருப்பேன்... இப்படி தப்பிக்க விட்டுவிட்டீர்களே அப்பா... என மகன் ப்ரூனோ கேட்க, அவனை ஆத்திரத்தில் அடித்துவிடுகிறான் ரிசி. அதனால் கோபித்து கொள்ளும் ப்ரூனோவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறான். அவனை உணவுவிடுதிக்கு அழைத்துச்சென்று அவனுக்கு பிடித்தமானவைகளை வாங்கித்தருகிறான்.

தானும் சிறிது ஒயின் குடிக்கிறான். அப்போது, மீண்டும் வேலைக்கு போய் நிறைய சம்பாதிப்பேன் மகனே... அப்போது நாம் மிகுந்த சந்தோஷமாக இருக்க லாம்..என்று நம்பிக்கையுடன் கூறுகிறான்.

வீட்டிற்கு திரும்பும் வழியில், தனது மனைவியிடம் குறி சொன்ன சந்தோனாவின் வீட்டிற்கு சென்று, தனது சைக்கிள் மீண்டும் கிடைக்குமா என்று கேட்கிறான். அவளும் போலீஸ் அதிகாரி சொன்னது போலவே, கிடைத்தாலும் கிடைக்கலாம்...கிடைக்காமலும் போகலாம்.. என்று சொல்கிறாள். வெளியே வரும்போது, ஒருவனைப் பார்த்ததும் தனது சைக்கிளைத் திருடியவனோ என சந்தேகம் எழ, அவனைத்துரத்துகிறான்.

அவன் ஓடிச்சென்று ஒரு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்துவிட, ரிசியும் பின் தொடர்கிறான். அங்கும் சண்டையாகி... அவனை வெளியே தள்ளிக்கொண்டு வந்து விசாரிக்கிறான். அப்போது அவனுக்கு ஆதரவாக அப்பகுதியிலிருப்பவர்கள் கூடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து ரிசியின் மகன் ப்ரூனோ, போலீசை அழைத்துவருகிறான். போலீசுடன் சென்று அந்த இளைஞனின் வீட்டிற்குள் சைக்கிள் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். எதுவும் கிடைக்கவில்லை. போலீஸ் ரிசியை எச்சரித்து அனுப்புகிறது.

தனது முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடிவதால், ரிசி மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகி றான். தந்தையும் மகனும் பல இடங்களிலும் திருடு போன தங்கள் சைக்கிளைத் தேடி அலைகி றார்கள். அப்போது ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வருகிறார்கள். அந்தத் தெருவின் நடைபாதையில் மிகுந்த சோர்வுடன் உட்கார்ந்து விடுகிறார்கள். அந்தவழியே ஏராளமான மனிதர்கள் விதவிதமான சைக்கிள்களை ஓட்டிச் செல்வதை பார்க்கிறார்கள். இருவருக்கும் சோர்வும் துக்கமும் பீறிடுகிறது. மைதானத்திலிருந்து கிளம்பும் ஆர்ப்பரிப்பு சத்தம் அவர்களை மேலும் துயரத்துக்குள்ளாக்குகிறது. மைதானத்திற்கு வெளியே விடப்பட்டிருக்கும் சைக்கிள்களின் வரிசை ரிசியை துன்புறுத்துகிறது. துக்கமும், இயலாமையும் ரிசியையும் ப்ரூனோவையும் பிடித்து ஆட்டுகிறது.

அந்த மைதானத்திற்கு அடுத்திருக்கும் ஒரு சாலையை ரிசி கவனிக்கிறான். அந்தச் சாலையின் ஓரிடத்தில், ஒரு வீட்டின் முன்புறம் ஒரு சைக்கிள் நிறுத்திவைக்க ப்பட்டிருக்கிறது. அந்தச் சைக்கிளையே நோட்டம்விடும் ரிசி ஒரு முடிவுக்கு வருகிறான். தனது மகனிடம் காசு கொடுத்து, அருகிலுள்ள ஒரு இடத்திற்கு சென்று காத்திரு... நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்... என்று கூறுகிறான்.

அப்போது அந்தப்பகுதிவழியே வரும் டிராம் வண்டியில் ஏறிச்செல்லுமாறும் சொல்கிறான். தந்தையின் பதட்டமான நடவடிக்கைகளையே கவனித்துவரும் சிறுவன் ப்ரூனோ, ஒன்றும் புரியாதவனாய் டிராம் வண்டியை நோக்கிச் செல்கிறான். ரிசியோ.. ஒரு தீர்மானகரமான முடிவோடு.. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளை நோக்கிச்செல்கிறான்.

ப்ரூனோ டிராமில் ஏறுவதற்குள் வண்டி புறப்பட்டு விடுவதால்... அங்கேயே நின்றுவிடுகிறான்.அப்போது ரிசி சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளை நோக்கிப்பாய்ந்து... அதை திருடிக்கொண்டு... ஏறி மிதித்து தப்பிக்க முயற்சிக்கிறான். அதை கவனித்துவிட்ட அந்த சைக்கிளின் உரிமையாளன், திருடன்..திருடன்... பிடிங்க...பிடிங்க... என்று கத்தியபடியே ரிசியை துரத்துகிறான்.

அவன் குரல் கேட்டு அருகிலிருப்பவர்களும் ரிசியைத் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ரிசி முயலும்போது, டிராம் வண்டியொன்று குறுக்கே வந்துவிடுகிறது. அதனால் ரிசியால் தப்பிக்க முடியாமல் கூட்டத்தினரிடம் மாட்டிகொள்கிறான் . அதை சிறுவன் ப்ரூனோவும் பார்த்துவிடுகிறான். அவன் கண்ணெதிரிலேயே ரிசியை கூட்டத்தினர் கண்டபடி தாக்குகின்றனர்.

அப்பா..அப்பா...அடிக்காதீங்க... என சிறுவன் கதறுகிறான். கீழே விழுந்துகிடக்கும் தனது தந்தையின் தொப்பியை எடுத்து அதில் ஒட்டியுள்ள மண்ணை தட்டித்தட்டி துடைக்கிறான். கூட்டத்தினர் ரிசியை போலீசிடம் ஒப்படைக்க இழுத்துச் செல்கின்றனர். ப்ரூனோ ஓடிவந்து அப்பாவின் கால்களைக் கட்டிக்கொள்கிறான். சைக்கிள் உரிமையாளன் தந்தையும் மகனையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, போலீசில் ஒப்படைக்க வேணாம்... ஒருமுறை மன்னித்து விடலாம்... எனக்கூறி போய்விடுமாறு கூறுகிறான்.

ரிசியையும் ப்ரூனோவையும் கூட்டத்தினர் தள்ளிவிடுகின்றனர். தந்தையும் மகனும் மெல்ல நடக்கின்றனர். ரிசி அவமானத்தால் துடிக்கிறான். ப்ரூனோ தொப்பியை தருகிறான். அதை வாங்கி அணிந்து கொண்டு நடக்கிறான் ரிசி. மகனும் உடன் நடக்கிறான். துக்கம் தாளாமல் நடக்கும் ரிசி, மகனின் கைகளை பிடித்துக்கொள்கிறான். அழுகை வெடிக்கிறது. குலுங்கி... கதறி... அழுகிறான். அதைக் காணும் ப்ரூனோ, அப்பாவின் கைகளை இறுக்கிப்பி டித்துக்கொள்ள... துயரம் வழியும் இசையுடன் நிறைவடைகிறது படம்.

1940 களில் இத்தாலியில் உருவான நியோ-ரியலிச கோட்பாட்டு கலைப்படைப்பான இப்படம், உலகின் மிகச்சிறந்த திரைக்காவியங்களில் முதன்மையானது. சத்யஜித் ரே உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரையும் ஆகர்ஷித்த படம் இது. வறுமையும் வேலையின்மையும், எளிய மனிதர்களை திருடச்செ ய்யும் அளவுக்கு தள்ளுவதை.. அதன் வலியோடு சொல்கிற படம் இது.

இப்படத்தின் கதா நாயகனாக நடித்திருக்கும் லேம்பெ ர்ட்டோ மேகியோரனி, ஒரு சாதாரண ஆலைத்தொழிலாளி தான். தான் வேலை பார்த்த ஆலையில் இரண்டு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு இப்படத்தில் நடித்திருந்தார். ப்ரூனோவாக வரும் சிறுவன் ஸ்டெயோலா, படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கவந்த ஒரு சிறுவன்தான். அவனின் நடிப்பும் பாத்திரப்படைப்பும் அற்புதமாக வடிவமைக்க ப்பட்டிருக்கும். உலகம் முழுக்க திரைப்படக் காதலர்க ளால் பெரிதும் கொண்டாடப்படும் இந்தப்படம் பல விருதுகளையும் பெற்றது.

இந்தத் திரைப்படம் முன்வைக்கும் சமூகப்பார்வை மிகவும் முக்கியமானது. படத்தை பார்க்கும் எந்த ஒரு சாதாரண பார்வையாளன்கூட எந்தக் குழப்பமும் இல்லாமல் படத்துடன் பயணிக்கமுடியும். அத்துடன் ஒன்றிவிடமுடியும். ஒரு எளியவனின் நேர்மை எப்படி காயடிக்கப்படுகிறது என்பதை பார்வையாளனுக்கு எந்தக்குழப்பமும் இல்லாமல் தனது திரைக்கதையின் வழியே சொல்லியிருப்பார் படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா. பிரபல திரைப்பட விமர்சகர் ஆந்த்ரே பாஸன் சொல்வதைப்போல, தங்கள் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக எளிய மக்கள் திருடி வாழ நிர்பந்திக்கப்பட்ட நிலையில், தனது ஒரே சேமிப்பான சைக்கிளை திருடு கொடுக்கும் ஒருவனைப் பற்றிய இந்தப்படம், பிரச்சார நெடியின்றி... உண்மையின் சாட்சியாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் திரைக்கதை வலிமைக்கு சான்றாகும்.

இந்த உத்திரவாதமற்ற வாழ்வு சாதாரண மனிதர்களை இப்படித்தான் கேலிசெய்து பார்க்கிறது. அவர்களின் நேர்மையோடு விளையாடிப்பார்க்கிறது. நெருக்கடியின் முச்சந்தியில் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. அதன் உக்கிரத்தை தாங்கமுடியாமல் நாமும் ரிசியைப் போல தடுமாறி விடுகிறோம். அந்த தடுமாற்றத்தின் பிரதிபலனாய் காலமெல்லாம் கண்ணீர் வடித்துக்கொண்டேயி ருக்கிறோம். மரியாவைப் போல.. ரிசியைப் போல... 
குறி சொல்பவர்களை நாடுகிறோம்.

கடவுள்களின் சன்னதிகளில் சரணடைகிறோம். எந்த சாமிகளாவது வந்து நம்மைக் கரையேற்றிவிடாதா என கைகளைக் காற்றில் துழாவுகிறோம். சாமிகள் வராவிட்டாலும் ப்ரூனோக்கள் வருவார்கள்.. தங்களின் கறைபடியாத பிஞ்சுக் கைகளைத் தந்து நம்மை தாங்கிப்பிடித்துக்கொள்வார்கள்.

அந்தக் கைகளை சேர்த்து இறுகப் பற்றியபடியே நாம் நடந்துகடந்துவிடலாம் இந்த வாழ்வை. எங்கே அந்த ப்ருனோக்கள் என தேடுகிறீர்களா... அவன் இந்த சைக்கிள் திருடனுக்குள்தான் ஒளிந்திருக்கிறான். நீங்கள் படத்தைப் பார்த்தால், ஒருவேளை அவன் உங்கள் கைகளை ஆதரவாகப் பற்றி நடக்கக்கூடும்.