Showing posts with label JUNE 3. Show all posts
Showing posts with label JUNE 3. Show all posts

Thursday, 3 June 2021

WORLD CYCLE DAY JUNE 3

 

WORLD CYCLE DAY JUNE 3



இந்த ஊரடங்கில் தத்தித் தத்தி ஒரு சிறுமி வீதியில் மிதிவண்டி ஓட்டிப் பழகுகிறார். அதைக் காணும்போது, பால்யகால மிதிவண்டி நாள்கள் நினைவுக்கு வருகிறது.
'சைக்கிள் என்பது ஓர் இரும்புக் கழுதை' என்பார், மேலாண்மை பொன்னுசாமி. அத்தனை சுமைகளை அது சுமக்கும். இன்றைக்கு வீட்டில் கார் இருப்பது எப்படி கெளரவத்தின் அடையாளமோ அதுபோல் அன்று வீட்டில் சைக்கிள் இருப்பதும். அப்பாவின் சைக்கிளை ஆசை தீர கொஞ்சிய நாள்கள் அவை. ஆதார் கார்டு இல்லாதது மட்டும்தான் குறை... மற்றபடி குடும்பத்தில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட காலம்.
#வாடகை சைக்கிள்
90-களில் சைக்கிள் ஓட்டிப் பழகிய அத்தனை பேருமே வாடகை சைக்கிள் வாடிக்கையாளர்களே. ஒருமணி நேரத்திற்கு ஒரு ரூபாய், அரை மணிக்கு ஐம்பது காசு என நேரத்தை வீணாக்காமல் செலவிட்ட நிமிடங்கள் அவை. கடைசி 10 நிமிஷம் இருக்கும்போது 'அருணாச்சலம்' ரஜினி சொன்னதுபோல 10 நிமிஷத்துல 10 சுற்று வந்து சரியான நேரத்துக்கு கடைமுன் நிறுத்துவது ஓட்டப்பந்தயத்தில் கடைசிக் கோட்டைத் தொட்டு வெற்றியடைந்தது போல.

வாடகை சைக்கிளில் மஞ்சள், சிவப்பு, பச்சை என இருக்கும். கேரியர் இருப்பது, இல்லாதது, எது ராசியானது எனச் சுழி பார்த்து மாட்டை வாங்குவது போலத்தான் வாடகை சைக்கிளை வாடகைக்கு எடுப்பதும். இந்தச் சின்ன சைக்கிள் ஓட்டிப் பழகுவது பத்து வயதுக்கு உண்டான வளர்ச்சியை அடைவதுபோல அப்போது.
#பெரிய சைக்கிள் ஓட்டுவது
கீழே விழுந்தாதான் சைக்கிள் ஓட்டிப் பழக முடியும் என்பது மிதிவண்டி ஓட்டுதலில் பாலபாடம். சென்டர் ஸ்டாண்டு எடுத்ததும் கட்டுக்கடங்காத குதிரை நம் கையில் சிக்கியது போல. அதை முழுபலத்தையும் பிரயோகித்துத் தடுத்து நிறுத்தி, நம் கட்டுக்குள் கொண்டுவருவோம்.
முதலில் தள்ளிக்கொண்டு போவது, பெடலில் ஒரிரு மணித்துளிகள் நிற்பது, டக் அடிப்பது அப்படியே ஓரிருமுறை விழுந்து எழுந்தால் குரங்கு பெடல் ஓட்டிவிடலாம். இதுதான் சைக்கிள் ஓட்டுவதற்கான எல்.எல்.ஆர் போடுவது போன்றது.
பிறகு, காலுக்கு சிறகு முளைத்து, பார் கம்பியில் பாதம் தூக்கி போட்டும் போடாமல் இருப்பது, குழந்தை குப்புற விழுவது போல் குதூகலமானது. அப்படியே அமைதிப்படை அமாவாசை மாதிரி சீட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் உட்கார்ந்து நாகராஜ சோழன் ஆகிவிடுவோம்.
#டயர் வண்டி


ஓட்டுதல் சைக்கிள் ஓட்டாத காலங்களில் சைக்கிள் டயர் ஓட்டுவதும் பண்டைய சிறுவர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. 90-களில் சைக்கிள் டயர் ஓட்டாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வீட்டுக்கொரு டயர் கூரைமேலேயோ, ஆட்டுக் கல்லிடையோ கிடக்கும். பார்க்கும்போதெல்லாம், 'எங்காவது கூட்டிச்செல்' என புதுமனைவி அழைப்பது போல் இருக்கும்.
டயர் வண்டிகளில் பல ரகம் உண்டு!
நாய் வாலை நிமிர்த்துவது போல சில டயர்களை எவ்வளவு நிமிர்த்தினாலும் அவை கோணல் விழுந்தே ஓடும். சில புது டயர்கள், பைக் டயர்கள், ரிம் டயர்கள் என வகை வகையாய் இருக்கும். இவை ஒட்டுமொத்தமாக ஓரிடத்திலிருந்து போட்டிக்குக் கிளம்ப காத்திருக்கும். பாகுபலி படை போல ஒட்டுமொத்தமும் ஒரே நேரத்தில் வீதியை நிறைத்து ஓடுவது கண் கொள்ளாக்காட்சி. இதற்கான ஸ்டியரிங் ஒரு அடிக்குச்சி. இதை வலது கையிலும், எப்போதும் கழன்று விழத் தயாராய் இருக்கும் டவுசரை இடது கையிலும் பிடித்துக்கொண்டு ஓடுவோம்.
கருவேப்பிலை வாங்க கடைக்குப் போவது, ரேஷன் கடை திறந்துள்ளதா எனப் பார்ப்பது என சகல வேலைக்கும் அந்த டயரே துணை.
#சைக்கிள் பராமரிப்பு
சைக்கிளைப் பராமரிக்கும்போது பியூட்டீஷியனாகவே மாறிவிடுவோம். ஹேண்டில் பார் கைப்பிடி உறை, சீட்டுக்கு முன்னே இருக்கும் பார் பகுதிக்கு ஒரு கவர், சீட்டுக்கு குஷன் கவர், இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம், சின்னச் சின்ன மணிகளை, வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாகக் கோத்துவிடுவது என மாட்டுப்பொங்கலுக்கு மாட்டை அலங்கரிப்பது போல அழகுபடுத்துவோம்.
சுத்தம் என்பது நமக்கு சுத்தமான சைக்கிள்தான். அந்த வண்டியைத் துடைப்பது, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதும், உப்புத்தாள் கொண்டு வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதும் பிரதான வேலைகள்.
* சைக்கிள் செயின் கழன்றுவிட்டால் மாட்டிவிடுவதற்கு சில தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தார்கள்.
* முழு உடல் பரிசோதனை போலத்தான் சைக்கிள் ஓவராய்லிங் செய்வதும். ஐசியு-வில் இருந்து வந்தவரைப் போல ஓவராய்லிங் செய்த சைக்கிளை எல்லாரும் வந்து பார்த்துச்செல்வார்கள்
* எடிசன் பல்பு கண்டுபிடிச்சப்ப எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ அவ்வளவு மகிழ்ச்சி, டைனமோவில் லைட் எரிவதைப் பார்ப்பது
* தங்கமணி சவுண்டு சர்வீஸ், கத்தரிகளுக்கு சாணை பிடிக்கப்படும் என விளம்பரத்தை பார் கம்பி அடியில் தகரத்தில் வைத்திருப்பார்கள்.
* இன்னும் சிலர், சைக்கிள் சைடில் ஒரு பாக்ஸ் வைத்திருப்பார்கள்.
* பல சைக்கிள் செயின் மட்கார்டுகளில் தளபதி, குணா, கேப்டன் பிரபாகரன் என அதே ஃபான்டில் எழுதியிருப்பார்கள்
#ஒரு தலைமுறையின் பெருமை
குழந்தைக்கு பார் கம்பியில் சின்ன சீட், பின்னால் அம்மா நடுவில் அப்பா என மூன்று பேரை வைத்து மிதித்துள்ளனர் ஒரு காலத்தில் ஆண்கள். வெயிட் போட்டால் வீட்டுக்காரர் சைக்கிள் மிதிக்க கஷ்டப்படுவார் என ஒல்லியாகவே உடலை பராமரித்தனர் பெண்கள்.
எங்க வீட்ல வயல், மாடு கன்னு இருக்கே என்பது போல சைக்கிள் இருப்பதை பெருமை பொங்க பேசிய காலம் அது.
சிலர் பேசும்போதுகூட, சைக்கிள் சாவியை விரலில் கோத்து கையை ஆட்டி ஆட்டி பெருமை பொங்கப் பேசுவாங்க, அந்தக் காலத்து பெருசுகள்.
நான்கு பவுன் செயின் அடகு வைத்து 300 ரூபாய்க்கு சைக்கிள் வாங்கியதை இப்பவும் எங்க அம்மா பெருமை பொங்கக் கூறுவார். வீதியிலும் ராலே சைக்கிள்காரர் வீடு, மாப்பிளை ஹெர்குலஸ் சைக்கிள் வச்சிருக்கார் என்பதை காதால் கேட்ட காலம். காசு, பணம் கடன் கேட்பது போலவே சைக்கிளை கடன் கேட்கவும் அவ்வளவு யோசிப்பார்கள் அக்காலத்தில்.
முதன்முதலில் பெண்கள் பள்ளிகளுக்கு சைக்கிளில் வந்ததை சிலாகிப்பாகக் கூறுவார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
அப்பா ஓட்டிய சைக்கிள், முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம் மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.
இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு பைக், மனைவிக்கு ஆக்டீவா, மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன. குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன. வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை. ’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.
காலச் சுழற்சியில்... தொப்பையைக் குறைக்கவும் சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். ஸ்டாண்ட் போட்டு, சைக்கிளிங் பண்ணுவதற்கு, காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.
சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது. எத்தனை ராயல்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும், நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா?
#களவாடிய காலம்
நாகரிக மாற்றத்தில் சைக்கிளை தொலைத்தபோதே ஆரோக்கியத்தையும் தொலைத்துவிட்டோம். பைக், கார் வந்தபோது அதைக் கேவலமாகப் பார்த்த நாம்தான், இப்போது செகண்டு ஹேண்டு சைக்கிள் வாங்கி உடல் எடை குறைக்க அதிகாலையில் ஊர் ஊராய் சுற்றுகிறோம் அல்லது வீட்டினுள் ஓட்டுகிறோம்.
பேலன்ஸ் வீல் வைத்த சைக்கிளை குழந்தைக்குக் கொடுத்து, முயன்று தவறிக் கற்றலை முளையிலேயே கிள்ளிவிடுகிறோம். சைக்கிள் ஓட்டும் வயதில் சைக்கிள் டெஸ்ட்டுக்கு படிக்க வைப்பதில் பெருமை காண்கிறோம்.
எவ்வளவு பரபரப்பான சாலையிலும் மிதிவண்டிஓட்டும் ஒருவன், அப்போது உலகத்தை நிதானமாக வைத்திருந்தான் என்பது எத்தனை நிதர்சனமான உண்மை. எவ்வளவு வண்டிகள் வந்தாலும் இயற்கைக் காற்றையும், ஆரோக்கியமான உடலையும் தந்த சைக்கிள், ஒரு நினைவு பெட்டகமாய் நீங்காமல் நம் நினைவில் இருக்கும்.
🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️

Saturday, 3 October 2020

RADHA,MALAYALAM ACTRESS BORN 1964 JUNE 3

 


RADHA,MALAYALAM ACTRESS BORN 1964 JUNE 3



.ராதா (மலையாளம்: രാധ; பிறப்பு சந்திரிகா 3 ஜூன் 1966)[1] ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[2] 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.


ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


வாழ்க்கை குறிப்பு

திருவனந்தபுரம் மாவட்டம் கல்லராவில் பிறந்த இவருக்கு அம்பிகா மற்றும் மல்லிகா என இரண்டு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது சகோதரிகளுள் ஒருவரான அம்பிகாவும் இவரது காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவராவார்.


இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட் விருதினை வென்றுள்ளன.



இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

Sunday, 7 June 2020

WORLD BICYCLE DAY JUNE 3







ஜூன் 3 - உலக சைக்கிள் தினம்





உலகின், 'டாப் 5' மகிழ்ச்சிகரமான நாடுகளில் ஒன்று, நெதர்லாந்து. இந்த நாட்டில், மக்கள் தொகையை விட அதிகம் இருப்பது, சைக்கிள் தான். அந்தளவுக்கு, அவர்கள் சைக்கிள் பிரியர்கள்.
தங்களது மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் காரணமாக அவர்கள் கூறுவது, சைக்கிள் சவாரியை தான். அவர்களின், 70 சதவீத போக்குவரத்து, சைக்கிளில் தான்
* பிரிட்டன் நாட்டில், தற்போது, நோய்கள் குறைந்து, மக்கள் ஆரோக்கியமாக வாழ, தினமும், 30 நிமிடங்கள், குறைந்தது ஆறு மாதங்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியை பரிந்துரைக்கின்றனர், மருத்துவர்கள்


'சைக்கிள் ஓட்டும் பயிற்சியால், மருந்துகளால் வரும் பக்க விளைவுகள் குறைகிறது; உடல் ஆரோக்கியத்திற்கென செய்யும் செலவுகளும் குறைகிறது...' என்கின்றனர்
* 'உடல் எடையை குறைக்க, வாரத்தில், ஐந்து நாட்கள், 'ஜிம்' சென்று உடற்பயிற்சி செய்வதை விட, தினமும், நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு சைக்கிளில் சென்று வந்தாலே போதும்...' என்கின்றனர், டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
'சைக்கிள் சவாரி, உடலிலிருந்து கெட்ட நீரை வெளியேற்றுவதுடன், கெட்ட கொழுப்பையும் கரைத்து, உங்கள் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது...' என்று கூறுகின்றனர்
* 'உடல் ஆரோக்கியத்திற்கும், சைக்கிள் சவாரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சைக்கிள் ஓட்டுபவர்களின் ஆயுள், சைக்கிள் ஓட்டாதவர்களின் ஆயுளை விட, 30 சதவீதம் அதிகரிக்கிறது...' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்



* உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது, சைக்கிள் பயிற்சி. சைக்கிள் சவாரி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், ஓட்டுகிறவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
* தினமும் வேலைக்கு, பஸ், கார், டூ வீலர் ஆகியவற்றில் செல்பவர்களை விட, சைக்கிளில் போவோர் தான், நாள் முழுவதும் வேலை சுமை, மனச்சுமை குறைவாக இருப்பதாக உணர்கின்றனர். மேலும், அவர்களின் வேலை திறனும் அதிகரிப்பதாக, கனடா பல்கலைக் கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்
* கால் பாதம் முதல் மூளை வரை உடலின் அனைத்து பாகங்களையும் இயக்க வைத்து, இதய துடிப்பையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது, சைக்கிள் சவாரி
* சைக்கிளை, 'பெடல்' செய்வதால், கால் மூட்டு, பலம் அடைகிறது. மற்ற எலும்புகள் வலிமை அடைகின்றன. இதனால், எலும்பு தொடர்பான நோய்கள் தவிர்க்கப்படுகின்றன
* தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆபத்துகள் குறைவாகவே இருப்பதை, பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின், 15 ஆண்டு கால ஆய்வில் கண்டறிந்துள்ளனர்
* 'இன்சோம்னியா' எனும் துாக்கமின்மை நோயை விரட்ட, சைக்கிள் பயிற்சி உதவும் என்கின்றனர்
* சைக்கிள் சவாரி சுற்றுச்சூழலுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் உதவுவதால், நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா மக்கள், சைக்கிளை பயன்படுத்த சம்பளத்தில் கூடுதல், 'அலவன்ஸ்' கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

Wednesday, 3 June 2020

KARUNANIDHI FORMER CHIEF MINISTER BORN JUNE 3,1924 - AUGUST 7,2018




KARUNANIDHI FORMER CHIEF MINISTER
 BORN JUNE 3,1924 - AUGUST 7,2018


.கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முன்னெடுத்த திட்டங்கள் குறித்து விரிவாக 
கல்வி, மருத்துவம், தொழில்வளர்ச்சி என பல துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக விளங்குவதற்கு பின்னணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள்தான் காரணமாக இருக்க முடியும். அத்தகைய திட்டங்களை பெருமளவு முன்னெடுத்தவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதும் ஏழைச் சிறுவர், சிறுமியர்கள் முதன்முறையாக பள்ளிக்கூடத்தில் காலடி எடுத்துவைத்தனர். ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வந்தது காமராஜர் என்றால் அதை நீடிக்கச் செய்து, அவர்களுக்கான உதவிகளை வழங்கி, பள்ளிகள் மட்டுமல்லாமல், தொழிற்கல்விகள், மருத்துவப் படிப்புகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் அமைத்து, படிப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது பின்னர் வந்த திராவிட கட்சிகள் தான். அதிலும் குறிப்பாக தனது இறுதி மூச்சுவரை அதற்கான பணிகளை மேற்கொண்டுவந்தது கலைஞர் கருணாநிதிதான் என்று அடித்துக்கூறலாம்.

இளமைத் துடிப்புமிக்க சூரியன்
samayam tamil
மிக இளம் வயதிலேயே பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, திமுக எம்எல்ஏ, திமுக பொருளாளர், இந்தியாவிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமைகள் கலைஞரைச் சேரும். பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள், திமுக தலைவராகவே 50 ஆண்டுகள், திரைத்துறையில் 60 ஆண்டுகள் என கலைஞரின் சாதனைகள் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை.

கலைஞர் ஆட்சிக்கு வந்த 1969ஆம் ஆண்டிலிருந்து 1976 வரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக இளமைத் துடிப்ப்புடன் அவர் நட்ட விதைகள் இன்று விருட்சமாய் வளர்ந்துள்ளன. இப்போதும்கூட பல மாநிலங்களில் இல்லாத பல முக்கியத் திட்டங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.

ஆரம்பமே அமர்க்களம்
samayam tamil

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியம், சுற்றுலா வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றை உருவாக்கியது கலைஞர். ஆதிதிராவிடர் இலவச கான்கிரீட் வீட்டு வசதி திட்டம், சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதி திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம், பிற்படுத்தப்பட்டோர் நல குழு அமைத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது, பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்து கழகங்கள் உருவாக்கம், அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம், விவசாய தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை உரிமைச் சட்டம், சேலம் உருக்காலை திட்டம்..

நல் விதையிட்ட வித்தகன்
samayam tamil

15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 876 விவசாயிகளுக்கு வழங்கியது, சிப்காட் தொழில் வளாகங்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் கருணை இல்லங்கள் உருவாக்குதல், கை ரிக்‌ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண சட்டம், அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு திட்டம், பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திட்டம், மாநில திட்ட குழு உருவாக்கம், காவல் ஆணையம் அமைத்தல்.

எதிர்ப்புகளை உரமாக்கிய கலைஞர்!
samayam tamil

நம்ப முடிகிறதா மேற்சொன்ன திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது என்று. நம்பித்தான் ஆகவேண்டும், அதனால்தான் இங்கு இங்கு போட்டோஷாப் பயன்படுத்தாமலே வளர்ச்சியடைய முடிந்திருக்கிறது.

கலைஞர் தன் வாழ்வில் நீண்ட நெடிய ஓட்டத்தை மேற்கொண்டவர். முதல்வராக அமர்ந்த முதல் ஏழு ஆண்டுகளிலேயே நவீன தமிழ்நாட்டிற்கான அஸ்திவாரத்தை மிக வலுவாக போட்டுவிட்டார். ஆனாலும் அவர் அதற்கு பின் ஆட்சியில் அமர 13 ஆண்டுகள் பிடித்தது. எம்ஜிஆர் என்ற மந்திரச் சொல் தமிழகத்தை மயக்கியிருந்த நேரம் எதிர் வரிசையில் அமர்ந்துகொண்டு அதைவிட பல மடங்கு தமிழ், தமிழ்நாடு வளர்ச்சிக்கு பங்காற்றினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர், ராஜீவ்காந்தி மரணத்தால் தனது ஆட்சியை இழந்தார். அந்த இரண்டு ஆண்டு காலத்தில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மக்கள் நலனுக்கு எவ்வாறு பயன்படுத்தினார் என்பதன் பட்டியலைப் பாருங்கள்..

சமூக நீதி காவலன்!


samayam tamil
தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகைகள், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம், ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், ஈவேரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம், ஆதிதிராவிடர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வருமான வரம்புக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, பின்னர் இது முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியாக மாற்றியமைக்கப்பட்டதும் கலைஞரின் ஆட்சி காலத்தில்தான். கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், வன்னியர் சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு, ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்ணயித்து பழங்குடி இனத்தவருக்கு ஒரு விழுக்காடு தனி இட ஒதுக்கீடு, மகளிருக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.

நவீன சென்னையை வரைந்த ஓவியன்!
.

சென்னையை நோக்கி இன்று உலக நாடுகளின் நிறுவனங்கள் தொழில் தொடங்க போட்டிபோட்டுக்கொண்டு வருகிறது என்றால் அந்த பெருமையும் கலைஞரையே சாரும். 1996ஆம் ஆண்டு மீண்டும் அரியணை ஏறிய கலைஞர் முன்னெடுத்த முத்தான திட்டங்கள் அப்படி..

உயர்கல்வித்துறை உருவாக்கம், நெடுஞ்சாலைத்துறை உருவாக்கம், தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கம், சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை உருவாக்கம், சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம், உழவர் சந்தைத் திட்டம் வருமுன் காப்போம் திட்டம், கால்நடை பாதுகாப்பு திட்டம், பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம், விவசாய தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலனுக்கு என தனித்தனி நல வாரியங்கள், தாய் மொழி வளர்ச்சிக்கு தனி அமைச்சகம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம், தென் குமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை, ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டு கிடந்த உள்ளாட்சி
அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல், கிராமங்கள் தோறும் சிமெண்ட் சாலைகள், வரலாறு காணாத வகையில் ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற பெண்களுக்கு தொழில் கல்லூரி, தொழிற் கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு,
கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம், சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம், சேமிப்புடன் கூடிய மகளிர் சிறு வணிக கடன் திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைக்கப்பட்டது, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 10,000 சாலை பணியாளர்கள் நியமனம், 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்.


ஓய்வறியா சூரியன்!
.


22 லட்சத்து 40 ஆயிரத்து 239 விவசாய குடும்பங்களுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான நெல்கொள் முதல் விலை உயர்த்தப்பட்டது, மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள் மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டது, கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது, ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்தின் மூலம் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் 5 கோடியே 25 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது, காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம், மேலும் இரண்டு லட்சம் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிட்டார் கலைஞர்.

இலவசங்கள் அல்ல; வாழ்க்கைத் தரம் உயர்த்துதல்!
.

ஒரு கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குதல், 660 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்குதல், ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 27 விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம், 8 லட்சத்து 30 ஆயிரத்து 497 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவில் வாரம் 5 முட்டைகள், முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழங்கள் வழங்குதல், தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பு கட்டணங்களும், பதினோரு லட்சம் மாணவ மாணவியர்களுக்கு 10, 12 வகுப்பு அரசு தேர்வு கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டன.

தலைமுறைகள் போற்றும் நாயகன்!
.


தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து, சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகியஇடங்களில் ஐந்து புதிய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள், ஒரத்தநாடு, பெரம்பலூர், சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெண்ணாகரம், திருப்பத்தூர், வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள், 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம், நலமான தமிழகம் திட்டம், இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம், இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு, அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டது, பெரியார் நினைவு சமத்துவபுரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், அடையாறு தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்ட அமைப்பு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றம், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் ரத்து, பறக்கும் சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலைஞர் அரசு மேற்கொண்டது.

வரலாற்றை உருவாக்கியவனுக்கு வாழ்த்துகள்!
.

கலைஞர் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக முன்னெடுத்த இத்தனை திட்டங்கள் அணிவகுத்து நிற்பதால்தான் தமிழ்நாடு இப்போதும் வளர்ச்சியில் முன்னணியில்நிற்கிறது. நிர்வாக ஊழல் குற்றச்சாட்டுகள் திமுக மீது சுமத்தப்பட்டிருந்தாலும் கலைஞர் கருணாநிதி இந்த மக்கள் நலத் திட்டங்களால் என்றென்றைக்கும் நினைவுகூரும் தலைவராக வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.

.

RADHA , TAMIL ACTRESS BORN 1966 JUNE 3




RADHA , TAMIL ACTRESS BORN 1966 JUNE 3




.ராதா (மலையாளம்: രാധ; பிறப்பு சந்திரிகா 3 ஜூன் 1966)[1] ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[2] 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வாழ்க்கை குறிப்பு
திருவனந்தபுரம் மாவட்டம் கல்லராவில் பிறந்த இவருக்கு அம்பிகா மற்றும் மல்லிகா என இரண்டு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது சகோதரிகளுள் ஒருவரான அம்பிகாவும் இவரது காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவராவார்.



இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட் விருதினை வென்றுள்ளன.



இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் இடையே பெருமளவில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அம்பிகாவின் சகோதரியும் ஆவார்.

radha 3
ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.





டைரக்டர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய கலைஞர்கள் எவரும் சோடை போனதில்லை. இப்போது அறிமுகமாகியுள்ளவர் ராதா. 'அலைகள்  ஓய்வதில்லை' படத்திற்கு யாரை கதாநாயகியாகப் போடலாம் என்று பாரதிராஜா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது தயாரிப்பாளர் ஆர்.சி.பிரகாஷ் வந்தார். . 'உங்கள் படத்தில்  கதாநாயகியாக நடிக்கப்  பொருத்தமானவளாக இருந்தால் பாருங்கள்' என்று அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்தார்
"இந்தப் பெண் மிகவும் நன்றாக இருக்கிறாளே ! உடனே  நேரில் பார்க்க  வேண்டும்!" என்றார் பாரதிராஜா.

ஆர்.சி.பிரகாஷ் மூலம் தகவல் கிடைக்கவே சரசம்மாவும், அம்பிகாவும் உதயசந்திரிகாவை பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்றார்கள்.

பாரதிராஜ பல கோணங்களில் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார் "கொஞ்சம் சிரி" என்றார். . சிரித்ததும், அழத் தெரியுமா என்றதும் கிளிசரின் போடாமலேயே அழுது காட்டினாள் அவள். "வெரி  குட், நடிக்கிறியாமா நீ?"என்று கேட்டதும், "சரி சார், நடிக்கிறேன்!  என்று ஒப்புக் கொண்டாள் . "அலைகள் ஓய்வதில்லை"  படத்தின் கதாநாயகியாக அந்தப் பெண் ஒப்பந்தம் செய்யப்பட்டாள் . அவளது இயற்ப்பெயரான உதயசந்திரிகாவை "ராதா" என்று மாற்றினார் பாரதிராஜா.

ராதாவை சந்திக்கிறோம்.

முதல் முறையாக நடிக்கும் போது  படப்பிடிப்பில் உங்கள் அனுபவம் எப்படி?

முதன் முறையாக கேமராவுக்கு முன்னால் நின்ற போது கொஞ்சம் பயமாகத்தான்  இருந்தது. ஆனால் டைரக்டர் தைரியம் சொல்லி நடிக்க வைத்தார். ஆனால் முதல் ஷாட் 'ஓகே' என்று டைரக்டர் சொன்ன பின்னாடிதான் நிம்மதியே வந்தது.

நடிப்பில் போதிய முன் அனுபவம் இல்லாத உங்களால் " அலைகள்  ஓய்வதில்லை" படத்தில் எப்படி திறம்பட நடிக்க முடிந்தது?

டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நடித்தேன். அவ்வளவுதான்.

தொடர்ந்து  நடிப்பதால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட் டீர்களா?

"நோ! நோ! இப்போதும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். தபால் மூலம் படிப்பதால் நோ ப்ராபளம்.

பாரதிராஜாவால் அறிமுகபடுத்தப்பட்டு நல்ல கேரக்டரை ஏற்று நடித்துள்ள நீங்கள், தொடர்ந்து எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிப்பீர்கள் ?

படம் பார்க்கிற ரசிகர்களுக்கு முழுமையான மன நிறைவை ஏற்படுத்துகிற வகையில் அந்த கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று கருதுகிறேன்.  கதைக்கும் காட்சிக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமாக இருந்தால் அதிக கவர்ச்சியாக கூட நடிக்கலாம்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ்)


1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் இடையே பெருமளவில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அம்பிகாவின் சகோதரியும் ஆவார். adha 3
ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.radha 1 1
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். மேலும் மகள்கள் கார்த்திகா துளசி இருவரும் சில திரைப் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

radha 2 1
நடிகை ராதாவிற்கு மும்பையில் உணவு விடுதிகள் உள்ளது. மேலும் கேரளாவில் Uday Samudra Leisure Beach Hotel & Spa, Uday Suites – The Garden Hotel, Uday Backwater Resort’ என மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளது. மேலும் இங்கிலாந்தில் “ராக் அன் ரோல் கிச்சன்” (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது.