Showing posts with label 1769. Show all posts
Showing posts with label 1769. Show all posts

Tuesday, 5 May 2020

NEPOLEON BONAPARTE , THE EMPEROR OF FRANCE BORN 1769 AUGUST 15 - 1821 MAY 5




NEPOLEON BONAPARTE ,
THE EMPEROR OF FRANCE 
BORN 1769 AUGUST 15 - 1821 MAY 5


.வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம் நாட்டில் இருக்கின்றது, 1815ல் ஜூன் 18ல் அங்குதான் நெப்போலியனின் இறுதி யுத்தம் தொடங்கிற்று. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி.. எல்லோரும் பயந்த எதிரணிக்கு வெலிங்டன் தலைவர் ஆனார் , பெரும் களம் கண்டவன் அல்ல எனினும் நெப்போலியனின் சமீபத்ய தோல்வி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது .நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி நின்றான், வெற்றி என்பது அவனுக்கு வாடிக்கை என்பதால் நம்பிக்கையோடு நின்றான்

கொடும் யுத்தம் தொடங்கியது, இருபக்கமும் அணல் பறந்தது, திடீரென யுத்த வியூகத்தை மாற்றினான் வெலிங்டன் .நெப்போலியனின் தளபதிகள் முடக்கபட்டனர், முன்னேறிகொண்டிருந்த நெப்போலியனின் தளபதி மைக்கேல் நொய் என்பவனும் முடக்கபட்டான். எல்லா படைக்கும் பலவீனமான பக்கம் இருக்கும், அதை வெளிதெரியாமல் காத்துகொள்வது யுத்த தந்திரம், ஆனால் நெப்போலியன் படை பலவீனம் அவன் மனைவி வழியாக எதிரி கைகளுக்கு போயிருந்தது .அவசரத்தில் திரட்டிய படை என்பதால் அவனின் வீரர்களும் அவ்வளவு திறமையாக இல்லை.தான் பின்னடையும் நேரத்தில் பெரும் படை வரவேண்டும் என ஒரு பிரிவிஒரு பிரிவினை ரிசர்வாக வைத்திருந்தான், அது வர உத்தரவும் கொடுத்தான்.ஆனால் படை வரவில்லை, ஏதோ உள்சதியால் அப்படைபிரிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை

படை வராமல் போனது, சில தளபதிகள் நடிப்பு, தன் பலவீனத்திலே அடிப்பது, அவனுக்கு அப்பொழுது தொடங்கியிருந்த வயிற்று வலி எல்லாம் சேர்ந்து அவனை தோற்கடித்தது .பல சக்திகள் தனக்கு எதிராய் இருப்பதை கண்டுகொண்ட நெப்போலியன் “எல்லாம் முயற்சித்துவிட்டேன் இனி செய்ய ஒன்றுமில்லை” என குதிரையினை விட்டு இறங்கினான்.கிட்டதட்ட பெண் மோகத்தில் தன் ரகசியத்தை சொல்லி மாட்டிகொண்ட பெரும் வீரன் சாம்சன் எனும் பைபிள் பாத்திரத்தில் நின்றான் நெப்போலியன்

பிரிட்டானியர் அவனை இங்கிலாந்து அருகில் இருந்த ஹெலனா தீவில் சிறை வைத்தார்கள். தனக்கு நிகழ்ந்த துரோகங்களை நினைத்தபடியே அங்கு சுற்றினான் அந்த சிங்கம்.பிரான்சில் நிலமை மாறியது, நெப்போலியனின் தளபதிகள் மைக்கேல் நொய் உட்பட எல்லோரும் கொல்லபட்டார்கள், ஆஸ்திரிய மனைவியும் அங்கு சென்றுவிட்டாள்.நெப்போலியன் வழக்கம் போல படிப்பதில் மனதை செலுத்தினான், ஜூலியஸ் சீசர் என்ற புத்தகத்தையும் எழுதினான்

அவன் அங்கிருந்து அமெரிக்கா தப்பியதாகவும், படை திரட்டியதாகவும் வதந்தி உண்டு ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை .வயிற்றுவலி அதிகரித்தது, உடல் வலுவிழந்தது, கிட்டதட்ட 25 வருடம் இடைவிடாத யுத்தம் நடத்தியவன் அவன், அந்த இளம் வயதில் அவன் சரியாக உண்ணவில்லை, உறங்கவில்லை அது 40 வயதிற்கு மேல் வயிற்று கோளாறு எனும் எமனாய் வந்ந்தது, மிக மோசமானது உடல்நிலை ஜோசப்பின் பிரான்ஸ் ராணுவம் என அதனையே நேசித்த நெப்போலியன் அந்த மூன்று வார்த்தைகளையும் உச்சரித்துகொண்டே தன் 51ம் வயதில் இறந்தான்

அவன் அங்கு அடக்கம் செய்யபட்டாலும் 1840ல் அவன் எலும்புகள் பிரான்ஸ் கொண்டுவரபட்டு அவனுக்கு அங்கு நினைவாலயம் எழுப்பபட்டது.
பெரும் படை நடத்தும் ராணுவ ஜெனரல் தனி தீவில் சாவார் என நாஸ்ட்ரோடாமஸ் எழுதியது அப்படி நிறைவேறிற்று .எல்பா தீவிலிருந்து தப்பி தான் நாஸ்டர்டோமஸை வென்றதாக சொன்னான் நெப்போலியன், ஆனால் நாஸ்டர்டோமஸ்தான் வென்றார்

நெப்போலியனின் வாழ்வும், போரும், வீரமும், ஆட்சியும் பெரும் ஆச்சரியங்கள்.டிவோலன், ஜிகா,டிவோலி, ஆட்ல்ட்ராலிஸ் என அவன் நடத்திய போர்கள் பெரும் நுட்பமானவை, இன்றும் ராணுவ பாடமாக வைக்கபடுபவை .அவன் முதலில் கடலில் தோற்றான், பின் ரஷ்யாவில் குளிரில் தோற்றான் அந்த குளிரினால் ஏற்பட்ட சேதத்தில் லீஸ்மெக்கில் தோற்றான்.கடைசியாக வஞ்சகமாக தோற்கடிக்கபட்டான்

தகுந்த ஒத்துழைப்பும், முறையான போரும் கிடைத்தபட்சத்தில் எல்லாம் அவனை வெல்ல யாருமே இல்லை. எத்தனையோ களங்களில் சாவின் விளிம்புவரை சென்று திரும்பியவன் அவன்.எதிரிகள் சுற்றி நின்று சுட்டபொழுது அருகிலிருந்த பிணக்களை கவசமாக கொண்டு தப்பி வந்த சாகசககரன்.திறமையான ராணுவ கமாண்டருக்கு அவனே பெரும் எடுத்துகாட்டு.நல்ல நிர்வாகிக்கும் அவனே உதாரணம், இன்றும் பிரான்ஸ் அவன் உருவாக்கிய சட்டதிட்டங்களிலே பயணிக்கின்றது, நெப்போலியன் கோட் என்பது இன்றும் உண்டு. அவன் ஏற்படுத்திய வரிவசூல் முறை இன்றும் பின்பற்றபடுகின்றது .ஷேக்ஸ்பியர் மட்டும் நெப்போலியன் காலத்திற்கு பின் பிறந்திருந்தால் ஆண்டனி கிளியோபாட்ரா, ரோமியோ ஜூலியட் வரிசையில் நெப்போலியன் ஜோசப்பின் காதலும் காவியமாகி இருக்கும், அப்படி காதல் ரசம் சொட்டும் வாழ்வு அவனது அவனின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை சொல்வார்கள், ஜோசப்பின் ஜாதகம் ராஜயோகம் கொண்டவது, அவளை கொள்பவர்கள் பெரும் உச்சம் அடைவார்கள் என்பது அவளின் ஜாதக பலன், அதுதான் நெப்போலியனை வழிநடத்திற்று, அவளை பிரிந்தபின் அவன் வீழ்ந்தான் என்பார்கள் சிலர்


நெப்போலியனை பிரிந்தபின்பும் ஜோசப்பின் வாழ்ந்தாள், அவளின் வம்சமே இன்றிருக்கும் பல ஐரோப்பிய அரசகுடும்ப ராணிகள் (பிரிட்டன் தவிர), ஐரோப்பாவை அவர்கள் ஆள்கின்றார்கள் > ஆனால் நெப்போலியன் அவளை பிரிந்தபின் வீழ்ந்தான்.போப்பாண்டவரை பாடாய் படுத்திய சாபம் என்றோரு பக்கம் சொல்வார்கள். நெப்போலியனுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தது, தன் ஜோசியன் கணிப்பை மீறி ரஷ்யா மீது படை எடுத்ததே காரணம் என்பார்கள்
ஆனால் உண்மை காரணம் மிக எளிதானது.நெப்போலியன் பிரான்சின் மன்னனாக இருந்து அதை காத்த்திருந்தால் ஒரு சிக்கலும் வந்திருக்காது, அவன் மக்களாட்சியின் தலைவனாக இருந்தால் கூட சிக்கல் இல்லை.ஆனால் ஐரோபாவில் பிரான்ஸ் தலமையில் வல்லரசு, ஒரே அரசு என்ற குறிக்கோளில் இறங்கினான், அதுதான் தவறு

பிரான்சில் மதவாதிகளையும், பணக்காரர்களையும் பகைத்து அவன் அரசியல் செய்தது இன்னொரு தவறு.பல தேசிய இனமக்களை தன் ராணுவ பலத்தால் ஒரே குடையில் கொண்டுவர விரும்பினான், அது ஒருகாலமும் நடக்காது என காலம் காட்டிற்று .நெப்போலியன் வாழ்வு சொல்வது அதுதான் .தேசிய இனங்களை ஒரே நாடாக இணைத்து செல்ல பெரும் நுட்பம் வேண்டும். பல இனம் ஒரே நாடு என்பது எளிதில் சாத்தியமில்லை, மதவாதிகளையும் பணக்காரர்களையும் எதிர்த்து நிலைப்பதும் சாத்தியமில்லை.ஐரோப்பாவில் நெப்போலியனுக்கு அதுதான் நடந்தது .பின் ஹிட்லர் காலமும் அப்படியே நடந்தது, உலகெல்லாம் மிரட்டி பெரும் சாம்ராஜ்யம் அமைத்த பிரிட்டனின் சாம்ராஜ்யமும் அப்படியே உடைந்தது .இன்று பல நாடுகளில் இந்த சிக்கலை நீங்கள் காணலாம், இந்தியினை டெல்லி திணித்தபொழுது தமிழகம் வெகுண்டு எழுந்த காலமும் அப்படித்தான். பெரியார் போன்றவர்கள் திராவிட நாடு கேட்டதும் இப்படித்தான்

பல தேசிய இனங்களை அடக்கி ஆள்வது என்பது முடியவே முடியா காரியம், உரிமைகள் கொடுக்காமல் ஒருமித்து வாழவே முடியாது.அதுவும் மதவாதிகளை எதிர்த்தால் எப்படி எல்லாமோ அடிப்பார்கள், மதம் இருக்கும் வரை மன்னன் தனி ஒருவனாக வரமுடியாது

இந்த விஷ பரிட்சையினை அன்றே பரிசீலித்து , முயற்சித்து பார்த்து பின் உண்மையினை ஒப்புகொண்டு தனி தீவில் இறந்தவன் நெப்போலியன்.அவன் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது.சாதாரண சிப்பாயாக இருந்து படிபடியாக முன்னேறி பெரும் வியத்தகு யுத்தங்களை புரிந்து, மன்னனாகி ஐரோப்பா மொத்தமும் அலற வைத்து, சர்வ சக்தி மிக போப்பாண்டவரையே நிற்க வைத்து கேள்வி கேட்டு , மிக எளிய மன்னனாய் வாழ்ந்து, வரலாற்றில் மிகபெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டு சென்ற நெப்போலியனின் பாதிப்பு கொஞ்சம் அல்ல‌.இவ்வுலகில் ராணுவம் , அரச நிர்வாகம் , காதல் , நாட்டுபற்று, வீரம் என்ற விஷயங்கள் பேசபடும்பொழுதெல்லாம் நிச்சயம் நெப்போலியனும் பேசபடுவான், அதனால் கால காலத்திற்கும் நிலைத்திருப்பான்.எனினும் பல தேசிய இனங்களை அடக்கி பெரும் வல்லரசு, ஓரரசு என முயற்சித்தால் என்னாகும் என்பதற்கும், மதவாதிகளும் பணக்காரர்களும் சொந்த நாட்டு வீரனையே எப்படி கொல்வார்கள் என்பதற்கும் கல்லறையே சாட்சி, அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்து பல தடங்களை பதித்துவிட்டு இன்று அதில்தான் அடங்கி கிடக்கின்றான்

முற்றும்




.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரா ன்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெ ளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கி யமான வேற்றுமை இருந்தது. ஒரு மன் னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்க த்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிற ந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல் முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற அடைமொழியும் அவரு க்கு உண்டு. ஒரு ‘சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்‘

1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள் ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றா ல் என்னவென்று அறியாத வனாக வளர்ந்தார் நெப்போ லியன். அரசின் சலுகை பெ ற்று வியந்நாவிலும் பாரிசி லும் உள்ள இராணுவப் பள் ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியி யல் ஆகியவை அவ ருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போ லியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படை த்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினி யப் படைகளை வெற்றிகரமாக முறியடித் தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அள வில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இரு வருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றி னார்.

1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதி ல் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற் குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந் தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடு த்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப் பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர் த்தகமும் புரியக்கூடாது என்று கட்ட ளையிட் டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததா ல் சினம்கொண்டெழுந்த நெப்போலி யன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812.

நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண் டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளி ரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித் துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கு ம் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியா யினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளை யிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீர ர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயி ரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வர லா ற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்ட ன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய வற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வி யைச் சந்தித்தார் நெப்போலியன்.

கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வை க்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறை யிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண் டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போ லியன். புதிய படை யை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல் ஜியத்தி ன் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலி யன். அவரை சிறைப் பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்மு றை ஆப்பிரிக்கா வுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என் ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலி யனுக்கு வயிற்று புற்று நோய் ஏற்பட் டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப் போலியன் என்ற வீர சகாப்தம் முடிவு க்கு வந்தது.

பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தி னால் உருவானவர்தான் நெப் போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அ மைதி நிலவியது. பொருளா தார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயி ண்ட் ஆற்றுக்கு மேல் பாலங் கள் கட்டினார். வீதிகளை திரு த்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண் ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெ ருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உரு வாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனி ன் மிகப் பெரிய பங்களிப்பு அவ ர் வகுத்துத் தந்த Civil Code என் ற புதிய சட்டங்கள். அந்தச் சட் டங்கள் Code of Napoleon என் றும் அழைக்கப் படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச் சட்டங்கள் மூலம் நெப்போலி யனுக்கு கிடைத்த து.

சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்ற ன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளி ல் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாரா ம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச் செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச் சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது. “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பி க்கையின் மீதி” இதுதான் நெப்போ லியன் என்ற மாவீரனின் தாரக மந் திரமாக இருந்தது. அந்த மந்திரம் தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

“முடியாது என்ற சொல் என் அகரா தியில் கிடையாது” என்பது நெப் போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடி கொ ண்டிருந்த துணிவு, நம்பிக்கை மட்டும் தான் “

Wednesday, 29 April 2020

ARTHER WELLESLEY , 1 ST DUKE OF WELLINGTON BORN MAY 1,1769 -1852 SEPTEMBER 14




ARTHER  WELLESLEY ,
1 ST DUKE OF WELLINGTON
 BORN MAY 1,1769 -1852 SEPTEMBER 14


வெல்லெஸ்லி பிரபு (1798 - 1805)

ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். பேரரசுக் கொள்கையுடைய அவர் தம்மை 'வங்கப்புலி' என்று கூறிக்கொண்டார். அவர் ஆதிக்கக் கொள்கையைப் பின்பற்றி 'இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு' என்பதற்குப்பதில் 'பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு' ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே இந்தியாவுக்கு வந்தார். தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய திட்டம் "துணைப்படைத் திட்டம்" என்று அழைக்கப்படுகிறது.

வெல்லெஸ்லி பதவியேற்ற போது இந்திய அரசியல் நிலைமை

வடமேற்கு இந்தியாவில் எந்நேரமும் சாமன் ஷா படையெடுக்கலாம் என்ற செய்தி பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அச்சத்தை கொடுத்தது. இந்தியாவின் வடக்கிலும், மத்தியிலும் மராட்டியர்கள் வலிமையான அரசியல் சக்தியாக விளங்கினர். ஹைதராபாத் நிசாம் தனது படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரெஞ்சுக்காரர்களை நியமித்தார். கர்நாடகப் பகுதியில் குழப்பம் நீடித்தது, பிரிட்டிஷாருக்கு திப்பு சுல்தான் சமரசத்துக்கு உடன்படாத எதிரியாகவே தென்பட்டார்.

காரன்வாலிஸ் பிரபுவுக்குப் பிறகு தலைமை ஆளுநராக பொறுப்பு வகித்த சர் ஜான் ஷோர் ஆட்சிக் காலத்தில் அவர் பின்பற்றிய தலையிடாக் கொள்கையால் இந்தியாவில் அரசியல் குழப்பமே எஞ்சியது. இதனால் ஆங்கிலேயரின் புகழ் பாதிக்கப்பட்டது, அவரது தலையிடாக் கொள்கை பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகள் பெருகவும் காரணமாயிற்று. மேலும், நெப்போலியனின் கீழைப்படையெடுப்பு குறித்த செய்திகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை கொடுத்தது. இத்தகைய பின்னணியில் தான் வெல்லெஸ்லி தமது கொள்கையை வகுத்தார். பிரிட்டிஷ் புகழைத் தக்கவைப்பது, இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் குறித்த அச்சத்தை அகற்றுவது ஆகிய இரண்டுமே அவரது முக்கிய குறிக்கோள்களாக இருந்தன.

இந்திய அரசுகளில் நிலவிய கொடுங்கோன்மை மற்றும் ஊழலைக்களைவதற்கு இந்தியாவில் ஒரு வலிமைமிக்க பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் கருதினார். ஆகவே தலையிடாக் கொள்கையைக் கைவிட்டு 'துணைப்படைத் திட்டம்' என்ற தமது குறிக்கோள் நிறைந்த திட்டத்தை அவர் வகுத்தார்.

துணைப்படைத் திட்டம்

வெல்லெஸ்லிக்கு முந்தைய ஆட்சியாளர்கள்கூட அயோத்தி நவாப், ஹைதராபாத் நிசாம் போன்ற இந்திய அரசர்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். இந்திய அரசுகளை பாதுகாப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு ஆகும் செலவினங்களை ஈடுகட்ட அந்தந்த ஆட்சியாளர்களிடமிருந்து உதவித்தொகையையும் அவர்கள் பெற்றனர். இவ்வாறு ஏற்கனவே நடைமுறையிலிருந்த வழக்கத்தை வெல்லெஸ்லி தமது திட்டமாக விரிவுபடுத்தினார். இருப்பினும், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில்தான் அவரது தனித்தன்மை வெளிப்பட்டது.

துணைப்படைத் திட்டத்தின் சிறப்புக் கூறுகள்

1 பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பும் இந்திய அரசர் தனது ஆட்சிப்பகுதியில் பிரிட்டிஷ் படையை வைத்து பராமரிக்க வேண்டும். இப்படைக்கு பிரிட்டிஷ் அதிகாரி தலைமை வகிப்பார். அத்தகைய இந்திய அரசு 'பாதுகாக்கப்பட்ட அரசு' என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு 'தலைமை அரசு' என்று குறிக்கப்படும். அயல் நாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டு அமைதி ஆகியவற்றை பாதுகாப்பது பிரிட்டிஷாரின் கடமையாகும். படைகளுக்கு ஆகும் செலவினை சரிகட்ட 'பாதுகாக்கப்பட்ட அரசு' ஒரு தொகை அல்லது ஒரு நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு கொடுக்க வேண்டும்.


2. பாதுகாக்கப்பட்ட அரசு ஆங்கிலேயர் தவிர வேறு ஐரோப்பிய அரசுகளுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும். குறிப்பாக பிரஞ்சுக்காரர்களுடன் உறவு முற்றிலும் தடை செய்யப்பட்டது. மேலும் பிரிட்டிஷாரின் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட அரசு வேறு இந்திய அரசுகளுடனும் அரசியல் தொடர்பு வைக்கவும் தடை விதிக்கப்பட்டது.3. பாதுகாக்கப்பட்ட அரசின் ஆட்சியாளர் தனது படைகளைக் கலைப்பதுடன், ஒரு பிரிட்டிஷ் தூதுவரையும் தனது அரசவையில் வைத்துக்கொள்ள வேண்டும். தலைமை அரசின் அனுமதியின்றி அவர் ஐரோப்பியர்களை பணியில் அமர்த்தக்கூடாது.

4. பாதுகாக்கப்பட்ட அரசின் உள்விவகாரங்களில் தலைமை அரசு தலையிடக்கூடாது.

பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட நன்மைகள்


பிரிட்டிஷ் பேரரசுக் கொள்கையின் திறமைமிக்க செயல்களில் ஒன்றாக வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டம் கருதப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட அரசுகளின் செலவில் வணிகக்குழு இந்தியாவில் தனது படை வலிமையை பெருக்கிக்கொண்டது. வணிகக் குழுவின் ஆட்சிப் பகுதிகளில் போர்க்கால அழிவுகள் ஏற்படாமல் இத்திட்டம் பாதுகாத்தது. இதனால், இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சி நன்கு நிலைப்படுத்தப்பட்டது. இந்தியாவிற்குள்ளிருந்த மற்றும் அயல்நாட்டு பகைவர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சி மேலும் வலிமையடைந்தது. இத்திட்டத்தின்கீழ் பிரிட்டிஷ் ஆட்சி மேலும் எளிமையாக விரிவடைந்தது. வெல்லெஸ்லி பிரபுவின் இத்தகைய அரசியல் வெல்திறனால் பிரிட்டிஷார் இந்தியாவின் தலைமையிடத்தைப் பிடித்தனர்.

துணைப்படைத் திட்டத்தின் குறைகள்


இந்தியப் பகுதிகளில் பிரிட்டிஷ் துணைப்படையை நிறுத்திவிட்டு இந்திய அரசர்கள் தங்களது படைகளைக் கலைத்து வீரர்களை வீட்டுக்கு அனுப்பியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. வேலையிழந்த வீரர்கள் கொள்ளையில் ஈடுபட்டதால் ஏற்கனவே பிண்டாரிகளின் தொல்லைக்குட்பட்டிருந்த மத்திய இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும், துணைப்படைத்திட்டம் பாதுகாக்கப்பட்ட அரசுகளின் ஆட்சியாளர்களிடையே பொறுப்பின்மையை ஏற்படுத்தியது. அயல்நாட்டு அச்சம், உள்நாட்டு கலகம் ஆகியவற்றிலிருந்து அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதால் தங்களது ஆட்சி பொறுப்புகளை அவர்கள் அலட்சியம் செய்தனர்.
உல்லாச வாழ்க்கையில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் முறைகேடான நிர்வாகம் தோன்றியது. காலப்போக்கில் இத்தகைய அரசுகளில் நிலவிய முறைகேடான ஆட்சியினால், பிரிட்டிஷாரே அவற்றை இணைத்துக் கொள்ளவும் வழிவகுத்தது. இவ்வாறு துணைப்படைத்திட்டம் நாடுகளை இணைப்பதற்கு அடிகோலியது. மேலும் பாதுகாக்கப்பட்ட அரசுகளிடமிருந்து பிரிட்டிஷார் அதிகபட்ச உதவித்தொகையை வாங்கியதால் பொருளாதாரமும் வெகுவாக பாதித்தது.


துணைப்படைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

ஹைதராபாத்

வெல்லெஸ்லி வகுத்த துணைப்படைத்திட்டம் 1798ல் முதன்முதலில் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்காலிகமானதாகும். அதன்படி துணைப்படை நிர்வாகத்துக்காக ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்த பிரஞ்சுப்படைகள் முழுவதும் வெளியேற்றப்பட்டன. அதற்கு பதில் பிரிட்டிஷாரின் துணைப்படை நிறுத்திவைக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைப்படி நிசாம் பெரும் நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தார். இப்பகுதி 'கொடை மாவட்டங்கள்' எனப்படும்.

அயோத்தி

ஆப்கானிய சாமன் ஷாவின் படையெடுப்பு அச்சத்தை காரணமாகக் காட்டி வெல்லெஸ்லி அயோத்தி நவாப் மீது துணைப்படை ஒப்பந்தத்தை திணித்தார். இதன்படி, நவாப் செல்வ வளமிக்க பகுதிகளான ரோகில் கண்ட், கீழ் தோ ஆப், கோரக்பூர் போன்றவற்றை பிரிட்டிஷாருக்கு வழங்கினார். அயோத்தி தலைநகரில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் துருப்புக்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. நவாப்பின் படையில் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது. அயோத்தியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க விதிமுனறகளை ஏற்படுத்தும் பொறுப்பையும் பிரிட்டிஷாரே மேற்கொண்டனர். இதனால், அயோத்தியின் உள்விவகாரங்களிலும் அவர்கள் தலையிடும் உரிமையைப் பெற்றனர். வணிகக் குழுவிற்கு வளமிக்க நிலப்பகுதிகள் கிடைக்க வழிசெய்த போதிலும், வெல்லெஸ்லியின் வரம்பு மீறிய இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தஞ்சாவூர், சூரத், கர்நாடகம்

தஞ்சாவூர், சூரத், கர்நாடகம் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு அந்த அரசுகளின் நிர்வாகத்தை வெல்லெஸ்லி தாமே எடுத்துக்கொண்டார். தஞ்சையை ஆண்ட மராட்டியருக்கிடையே வாரிசுரிமைச் சிக்கல் நிலவியது. 1799-ல் தஞ்சை அரசர் சரபோஜியுடன் வெல்லெஸ்லி உடன்படிக்கை செய்து கொண்டார். இதன்படி, ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷாரே ஏற்றனர். சரபோஜி, 'ராஜா' என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதுடன் ஆண்டுக்கு நான்கு லட்ச ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார்.

Raja Sarbhoji
ராஜா சரபோஜி
[ ராஜா சரபோஜி பண்பு நலனும் ஒழுக்கமும் நிரம்பியவர் கவார்ட்ஸ் என்ற அறிஞரின் சீடர். தஞ்சையில் இவர் ஏற்படுத்திய சரஸ்வதி மகால் நூலகத்தில் பல அரிய புத்தகங்களும் கையேடுகளும் உள்ளன. இவர் கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்]

1759 ஆம் ஆண்டிலேயே சூரத் பிரிட்டிஷாரின் காப்பரசாக மாறியது. 1799ல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தின் நவாப் மறைந்தார். அவரது சகோதரர் ஆட்சிக்கு வந்தார். இத்தருணத்தை நன்கு பயன் படுத்திக்கொண்ட வெல்லெஸ்லி சூரத்தின் ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றார். நவாப்பிற்கு பட்டத்தை சூட்டிக்கொள்ளும் உரிமையும் ஆண்டுக்கு ஒரு லட்சரூபாய் ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.

கர்நாடகத்தில் வாழ்ந்த மக்கள் நீண்டகாலமாகவே இரட்டையாட்சியின் கொடுமையை அனுபவித்து வந்தனர். நவாப் உமாதத் உல் - உமாரா திறமையற்றவராகவும் செலவாளியாகவும் இருந்தமையால் முறைகேடான ஆட்சி ஏற்பட வழிவகுத்தது. 1801 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். அவரது மகன் அலி உசேன் நவாப் பதவியை ஏற்றார். ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஆட்சியை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்குமாறு வெல்லெஸ்லி அவரிடம் கூறினார். அதற்கு, நவாப் மறுக்கவே 1801 ஆம் ஆண்டு மறைந்த நவாப்பின் ஒன்றுவிட்ட மகனான ஆசிம் உத் தௌலாவுடன் வெல்லெஸ்லி ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். இதன்படி கர்நாடகத்தின் ராணுவ மற்றும் சிவில் ஆட்சி முழுவதும் பிரிட்டிஷாரின் கைக்கு வந்தது.

நான்காம் ஆங்கிலேய - மைசூர் போர் (1799)

நான்காம் மைசூர் போருக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். பிரிட்டிஷாரிடம் அடைந்த படுதோல்விக்கும், தன்மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கும் பழிவாங்குவதற்கான தருணத்தை திப்புசுல்தான் எதிர்நோக்கி இருந்தார். மேலும், மைசூரை ஒரு வலிமைவாய்ந்த அரசாக மாற்றவும் அவர் தீர்மானித்தார்.

பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போரிட பல்வேறு உதவிகளை திப்பு நாடினார். பிரான்சு, அரேபியா, துருக்கி போன்ற நாடுகளின் உதவியைப் பெற முயற்சிகள் மேற்கொண்டார். 1798 ஜூலையில் பிரஞ்சு புரட்சி அரசாங்கத்துடன் அவர் தொடர்பு கொண்டார். ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஜாகோபியின் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பிரெஞ்சு குடியரசின் கொடியும் அங்கு பறக்கவிடப்பட்டது. சுதந்திர மரம் நடப்பட்டது. பின்னர் நெப்போலியன் ஆட்சிக்கு வந்தபிறகு, அவரிடமிருந்து நட்புக்கடிதம் ஒன்றையும் திப்பு பெற்றார். (அப்போது நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்திருந்தார்).

tipu-sultan
திப்பு சுல்தான்

இத்தருணத்தில்தான் வெல்லெஸ்லி பிரபு கல்கத்தாவை அடைந்தார். வரும்போதே நெப்போலியப் படையெடுப்பு குறித்த அச்சம் அவருக்கு இருந்தது. எனவே மைசூருக்கு எதிராகப் போரிடுவது என அவர் தீர்மானித்தார். இதற்காக 1790 ஆம் ஆண்டு முக்கூட்டிணைவை மீண்டும் புதுப்பிக்க அவர் முயற்சியெடுத்து மராட்டியருடன் தொடர்பு கொண்டார். அவரது யோசனையை மராட்டியர் ஏற்கவில்லை. இருப்பினும் நடுநிலை வகிப்பதாக உறுதியளித்தனர். இதற்கிடையில் ஹைதராபாத் நிசாமுடன் துணைப் படை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அங்கிருந்த பிரஞ்சுப்படை விலக்கப்பட்டது.

வெல்லெஸ்லி திப்பு சுல்தானுடனும் துணைப்படை ஒப்பந்தம் செய்துகொள்ள விழைந்தார். பிரஞ்சுக்காரர்களை விரட்டும்படியும் ஆங்கிலத் தூதரை ஏற்கும்படியும் வணிகக் குழுவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் இணக்கமாக செல்லும்படியும் கோரி வெல்லெஸ்லி திப்புவுக்கு கடிதங்கள் எழுதினார். இவற்றை திப்பு அலட்சியப்படுத்தியதால் நான்காம் மைசூர் போர் தொடங்கியது. இப்போர் குறுகிய காலமே நடைபெற்றது. ஆங்கிலேயரின் திட்டப்படி பம்பாய் ராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் மேற்கிலிருந்து மைசூரைத் தாக்கியது. தலைமை ஆளுநரின் சகோதரர், ஆர்தர் வெல்லெஸ்லியின் சென்னைப் படைகள் திப்புவை அவரது தலைநகர் ஸ்ரீரங்கபட்டணத்திற்கே பின்வாங்கும்படி செய்தது. படுகாயம் அடைந்த நிலையிலும் திப்பு இறுதிவரை போரிட்டார். ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது. திப்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

போருக்குப்பின் மைசூர்


திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, மைகுர் வெல்லெஸ்லியின் காலடியில் கிடந்தது. மைசூர் அரசின் மையப் பகுதியில் மீண்டும் இந்து அரசை அவர் ஏற்படுத்தினார். மூன்றாம் கிருஷ்ணராஜா என்ற ஐந்து வயது சிறுவன் மன்னராக முடி சூட்டப்பட்டான். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மைசூர் தலைநகராகியது. முந்தைய அமைச்சரான பூரணய்யா திவானாக நியமிக்கப்பட்டார். மைசூர் அரசின் எஞ்சிய பகுதிகளை பிரிட்டிஷாரும் நிசாமும் பங்கிட்டுக் கொண்டனர். கனரா, வையநாடு, கோயம்புத்தூர், தர்மபுரி, ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகியவற்றை பிரிட்டிஷார் தம்வசமே வைத்துக்கொண்டனர். கூட்டியை சுற்றியிருந்த பகுதிகள், சித்தூரின் ஒரு பகுதி, சித்தலதுர்க்கா மாவட்டங்கள் ஆகியவை நிசாமுக்கு கொடுக்கப்பட்டன. மைசூரில் ஆங்கிலேய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெல்லெஸ்லியும் மராட்டியர்களும்




துனணப்படைத் திட்டத்திற்கு உட்படாத ஓரே பகுதி மராட்டியமாகும், மராட்டியர்களின் தலைவராக நானா பட்னாவிஸ் திறம்பட செயல்பட்டார். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் சிக்காமல் மராட்டிய அரசை சுதந்திரமாக வைத்திருக்க அவர் பாடுபட்டார். திப்புவுக்கு எதிராக காரன் வாலிசுக்கு உதவியதால், மைசூரிலிருந்து பெரும் நிலப்பகுதிகள் அவருக்கு கிடைத்தன. 1800 ஆம் ஆண்டு நானா பட்னாவிஸ் மறைந்தது மராட்டியருக்கு பேரிழப்பாகும்.

Baji_Rao_II
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் கல்விமானாகவும் தோற்றப் பொலிவுடனும் இருந்தபோதிலும், அவரிடம் அரசியல் அறிவு குறைவாகவே காணப்பட்டது. மராட்டிய தலைவர்களுக்கிடையே காணப்பட்ட உட்பூசல் அழிவுக்கே இட்டுச் சென்றது. ஜஸ்வந்த் ராவ் ஹோல்கரும், தௌலத்ராவ் சிந்தியாவும் ஒருவருக்கொருவர் சச்சரவிட்டுக் கொண்டனர். பேஷ்வா ஹோல்கருக்கெதிராக சிந்தியாவை ஆதரித்தமையால், ஹோல்கர் பேஷ்வாமீது படையெடுத்தார். இப்போரில் பேஷ்வா, சிந்தியா இருவரும் தோல்வியடைந்தனர். பூனாவைக் கைப்பற்றிய ஹோல்கர் அந்நகரை சூரையாடினார். பெரும் கொள்ளைப் பொருளுடன் தமது தலைநகர் திரும்பினார்.


பீதியடைந்த பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பசீன் என்ற இடத்துக்கு தப்பியோடினார். 1802ல் அலர் பசீன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஒரு துணைப்படை ஒப்பந்தமாகும். இதன்படி பேஷ்வா மீண்டும் மராட்டிய அரசின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இது பெயரளவுக்கே என்ற போதிலும், பசீன் உடன்படிக்கை வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடமாக கருதப்படுகிறது.

ஏனெனில், இவ்வுடன்படிக்கைப்படி மராட்டியரின் அயலுறவுச் கொள்கை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதனால் மராட்டியத் தலைவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக செயல்படுவது தவிர்க்கப்பட்டது. எனவேதான் மராட்டியர்கள் இந்த உடன்படிக்கையை அடிமை சாசனம் என்று குறிப்பிட்டனர்.

பசீன் உடன்படிக்கையின் உடனடி விளைவாக பிரிட்டிஷ் படைகள் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையின் கீழ் பூனாவிற்கு சென்று அங்கு பேஷ்வாவை மீண்டும் பதவியில் அமர்த்தியது. ஹோல்கர் பூனாவிலிருந்து தப்பியோடினார்.

இரண்டாம் மராட்டியப் போர் (1803 - 1805)

தௌலத்ராவ் சிந்தியாவும், இரகூஜி பான்ஸ்லேயும் பசீன் உடன்படிக்கையை மராட்டியரின் தேசத்திற்கு ஏற்பட்ட இழுக்காக கருதினர். இவ்விரு தலைவர்களின் படைகளும் ஒன்றிணைந்து நர்மதை ஆற்றைக் கடந்து வந்தன. 1803 ஆகஸ்டில் வெல்லெஸ்லி மராட்டியருக்கெதிராக போர் அறிவிப்பு செய்தார். 1803 ஆகஸ்டில் அகமது நகரை கைப்பற்றிய ஆர்தர் வெல்லெஸ்லி மராட்டியக் கூட்டுப்படைகளை அவுரங்காபாத்துக்கு அருகிலுள்ள அசே என்ற இடத்தில் முறியடித்தார்.

பின்னர், மராட்டிய தேசத்துக்குள் நுழைந்த ஆர்தர் வெல்லெஸ்லியின் படைகள் போன்ஸ்லேயை அரகான் சமவெளியில் தோற்கடித்தன. இதன் விளைவாக, வெல்லெஸ்லி போன்ஸ்லேயுடன் தியோகன் உடன்படிக்கையை செய்துகொண்டார். இதுவும் ஒரு துணைப்படை ஒப்பந்தமாகும். இதன்படி ஒரிசாவின் கட்டாக் மாகாணம் பிரிட்டிஷாருக்கு கிடைத்தது.

சிந்தியாவுக்கு எதிராக பிரிட்டிஷ் படைத்தளபதி லேக் மேற்கொண்ட படையெடுப்பு பிரமிக்கத் தக்கதாகும். வரலாற்றுப் புகழ்வாய்ந்த டெல்லி நகருக்குள் நுழைந்த லேக். அங்கிருந்த முகலாயப் பேரரசர் ஷா ஆலத்தை பிரிட்டிஷாரின் பாதுகாப்பில் கொண்டு வந்தார். பரத்பூர் அரசருடன் பேச்சுவார்த்தை நடத்திய லேக் ஆக்ராவை ஆக்ரமித்துக் கொண்டார். இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கான மராட்டிய வீரர்கள் கொல்லப்பட்டனர். சிந்தியா பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொண்டார். இது கர்ஜி - அர்ஜூன்கான் உடன்படிக்கை எனப்படும்.
சிந்தியாவின் பகைவர் என்பதால், ஹோல்கர் இப்போரில் மராட்டியரை ஆதரிக்காமல் தனிமை காத்தார். வெல்லெஸ்லி ஒப்பந்தம் செய்யத் தூண்டியபோது பெரும் கோரிக்கைகளை ஹோல்கர் முன்வைத்தார். இதனால், வெல்லெஸ்லி அவர்மீது போர் தொடுத்தார். இப்படையெடுப்பு நன்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் ஆங்கிலேய தளபதிகளின் சில தவறுகளால் ஹோல்கரை வெல்லத் தவறினார்.

வெல்லெஸ்லி பற்றிய மதிப்பீடு

ஆதிக்கக் கொள்கையை பின்பற்றிய வெல்லெஸ்லி நாடுகளை வென்று இணைப்பதிலேயே குறியாக செயல்பட்டார். பேரரசுக்கு அடிகோலிய மாமனிதர்களில் வெல்லெஸ்லியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு என்பதை பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு என்று மாற்றிய பெருமை அவரையே சாரும். இந்தியாவில் பிரிட்டிஷ் தலைமையை ஏற்படுத்தியதே அவரது முக்கியச் சாதனையாகும். இந்திய அரசுகளின் பலவீனத்தை கண்டறிந்து தனது அரசியல் நுட்பத்தை (துணைப்படைத் திட்டம்) அவர் நன்கு பயன்படுத்தினார். கர்நாடகம், தஞ்சாவூர் அரசுகளை இணைத்தமையால் சென்னை மாகாணம் உருவாக அவர் வழிவகுத்தார். சென்னை மாகாணத்தையும் ஆக்ரா மாகாணத்தையும் உருவாக்கியவர் என்று இவரை அழைக்கலாம். இத்தகைய வழிகளில், இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி வணிகக்குழுவின் பாதுகாப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது. "வாணிப கழகமாக இருந்த கிழக்கிந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தியாக இவர் மாற்றினார்".

அடுத்த தலைமை ஆளுநராக சர் ஜார்ஜ் பார்லோ (1805 - 1807) இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். இவரது ஆட்சியின் போதுதான் 1806 ஆண்டு வேலூர் சிப்பாய் கலகம் நடை பெற்றது.

.