Showing posts with label BODY. Show all posts
Showing posts with label BODY. Show all posts

Sunday, 25 October 2020

LIVER FUNCTIONS IN OUR BODY


 



LIVER  FUNCTIONS IN OUR BODY

இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம்.

இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் வேலையை செய்வான்.

முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன் வடிப்பான்களை(Nephrons) தன்னகத்தே கொண்ட சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளிவிடுவான்.

பின் காலை சிறுநீர் செல்லும் வேளையில், விடிய விடிய இரத்தத்தை தூய்மை செய்யும் போது பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்பை வெளியேற்றிவிடுவான். அதனால் தான், காலை போகும் முதல் சிறுநீர் பழுப்பு நிறம் மற்றும் நாற்றம் நிறைந்ததாக உள்ளது.

அது அனைத்தும் கல்லீரலால் முறிக்கப்பட்ட நச்சுக்கள். புடுங்கும் ஆணி அனைத்தும் தேவை இல்லாத ஆணி தான். எனவே இதை பிடித்து பரிசோதனை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

பாருங்கள் உறுப்புகள் எப்படி ஒற்றுமையாக இயங்குகிறது என்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உடல் உறுப்புகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

கல்லீரல் உங்கள் இரத்தத்தை தூய்மை செய்யும் இந்த வேளையில்

நீங்கள்

இரவுப் பணியில் இருந்தாலோ !

உணவை அமுக்கிக்கொண்டு இருந்தாலோ !

கண் விழித்திருந்தாலோ !

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலோ !

கைப்பேசி நோண்டிக்கொண்டிருந்தாலோ !

கதை பேசிக்கொண்டிருந்தாலோ !

ஏதேனும் யோசனை செய்து கொண்டிருந்தாலோ !

போர்வை இழுத்து தலையுடன் போத்தி, யார் யார் என்ன என்ன Status வைத்திருக்கிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தாலோ !

கல்லீரல் இரத்தத்தை துய்மை செய்யும் வேலை ஸ்தம்பித்துவிடும். இந்த வேலை நடக்காது.

முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான், அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.

நீங்கள் அடுத்த நாளும் கல்லீரல் நேரத்தில் தூங்குவதை தவிர அனைத்து சேட்டைகளும் செய்து கொண்டிருப்பீர்கள்.

மீண்டும் முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான். அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.

மீண்டும் உங்களின் சேட்டைகள் தொடரும்.

இப்படி தொடர்ந்து நடக்கும் போது என்ன ஆகும் தெரியுமா ?

கல்லீரல் இரத்தத்தை தூய்மை செய்யும் வேலையில், நீங்கள் தூங்காமல் வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் இரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு பொடி போட்டு கலந்துகொண்டே இருந்தால் அந்த நீரின் அடர்த்தி அதிகரித்து திடமாகுமா ? அல்லது திரவமாகவே இருக்குமா ?

திடமாகும் அல்லவா. அதேப்போல் தான்.

நீங்கள் இரவு தூங்காமல், கல்லீரலுக்கு அதன் நேரத்தை கொடுக்காததால், நச்சை முறிக்க நேரம் இல்லாமல், நச்சுக்கள் அனைத்தும் இரத்தத்திலேயோ தங்கி, இரத்தம் சாக்கடை போல் கெட்டியாக மாறிவிடுகிறது.

கெட்டியான இந்த இரத்தத்தை இதயம் Pump செய்ய சிரமப்பட்டு வேகம் குறையும். இந்த நேரத்தில் நீங்கள் ECG எடுத்து பார்த்தால் இதயம் Low pump rate காட்டும். உடனே உங்களுக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிடும் ஆங்கில மருத்துவம்.

பிரச்சனை இதயத்திலா ? அல்லவே அல்ல

Low pump rate ற்கு காரணம் கெட்டியான இரத்தம்.

கெட்டியான இரத்தத்திற்கு காரணம் நீங்கள் தூங்காமல் இருந்தது.

இப்பொழுது பிரச்சனை எங்கு என்று பாமரன் கூட அறிவான்.

இரவு தூங்காமல், இப்படி இரத்தம் கெட்டியாகி கழிவுகள் இரத்தத்திலேயே தங்கிவிடுவதால் நச்சு வெளியேறாத இந்த இரத்தம் செல்லும் இடமெல்லாம் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடுகிறது.

என்ன நோய் என்று கேட்கிறீர்களா ? ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் உலகில் உள்ள அனைத்து நோய்களும் என்று சொல்லலாம். ஆம் இது தான் நோய்களுக்கு மிக முக்கிய காரணம்.

நீங்கள் என்ன தான் இயற்கையில் விளைந்த உணவுகளை எடுத்தாலும். இரவு நேரம் கழித்து உறங்கினால் உங்களுக்கும் இதே நிலை தான்.

உணவில் மட்டும் அல்ல, வாழ்க்கை முறையிலும் வர வேண்டும் மாற்றம்.

சிலர் சிரித்துக்கொண்டே சொல்வார்கள் பகலில் தூங்கி சமன் செய்து விடுவேன் என்று நீங்கள் சமன் செய்யவில்லை உங்களுக்கு நீங்களே சமாதி கட்டிக்கொள்கிறீர்கள்.

இரவு தூங்கினால் மட்டுமே இரத்தம் தூய்மை பெறும் உடல் உஷ்ணம் குறையும் பகலில் தூங்கினால் நோய் தான் வரும். பகலில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர தூங்க கூடாது.

No photo description available.


Wednesday, 12 February 2020

DECORATE THE DEAD BODY




பிரேதத்தை அலங்கரிப்பவள்






உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா?

இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும்.

எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே ஆமணக்கு பற்றை என்பன வளர்ந்திருக்கும் இடமாக ஒரு சில ஏக்கர் விஸ்திரணத்தில் இல்லை. அதற்கு மாறாக இது பல கிலோமீட்டர் அகல நீளமான அழகிய பூந்தோட்டம். யுகலிக்கப்ரஸ் மரங்களில் இருந்துவரும் கற்பூரவள்ளி நறுமணம் நிறைத்த காற்று சுவாசத்தை நிறைத்தபடி இருக்கும்.உயரமான மரங்கள் இடையே புகுந்து சங்கீதம் ஒலிக்கும் காற்று, குளிர்காலத்தில் உடல்மீது குளிரை வாரியிறைத்துச் செல்லும்.

இரண்டு பெரும் நெடும்சாலைகளுக்கு இடையில் மயானம் இருந்தாலும் சாலையில் செல்லும் வாகன சத்தங்கள் எதுவும் உள்ளே கேட்காது. இறந்தவர்கள் அமைதியாக உறங்குவதற்கு இதைவிட சிறந்த இடம் கிடைக்காது. யூதர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடம் இத்தாலிய பளிங்குகளால் சமாதி கட்டபட்டு அழகாக இருக்கும். ஒவ்வொரு முறையும் மயானத்திற்கு செல்லும்போது எனக்கு வழமையாக வரும் சிந்தனை, அவ்விடம் அமைதியான மயானம் என்பதுதான்.

மனதுக்குப்பிடித்தமான இடத்தில் வீடு வாங்கி குடி புகும் எவருக்கும் மனநிறைவு வருவது இயல்புதானே.

ஒருநாள் எனக்குத்தெரிந்த ஒருவரது மரணச்சடங்கு அங்கே நடந்தபோது நான்செல்ல சற்றுத் தாமதமாகிவிட்டது. அவசரமாக காரை நிறுத்திவிட்டு அங்கு சென்றபோது ஷப்பல் ஹோலில் இந்து சமயக்கிரியைகள் நடந்து கொண்டிருந்தன. இருநூறு பேர்வரையில் ஆசனங்களில் இருந்தார்கள். அவர்களில் ஒருவராக நானும் அமர்ந்தபோது, மரணம் அடைந்தவரை அருகில் சென்று தரிசிக்க முடியும் என நண்பர் ஒருவர் கண்களால் சைகை காட்டினார். காலணிகளை கழற்றிவிட்டு முன்னாலே சென்று மலர்வளயங்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த அந்த பூதவுடலை தரிசித்தபோது,அந்த மனிதர் உயிருடன் இருந்தபோதிலும் பார்க்க வெகுஅழகாக அந்த வெள்ளைப் பளிங்கு போன்ற பிரேதப் பெட்டிக்குள் இருப்பதாக ஒரு உணர்வு வந்தது.

அதுவும் எந்திரன் படத்தில் ரஜனிகாந்தின் ரோபோ வேடத்தில் இருந்த உருவம் என நினைக்கத் தோன்றியது. எந்தக் குறும்போ நகைச்சுவை உணர்வோ எனக்கு இல்லை. எந்திரனையும் அந்த இறந்த மனிதரையும் ஒப்பிடும் நினைவு தேவையில்லாமல் அக்கணம் வந்தது. நீங்கள் நினைப்பதுபோல் உயிருடன் இருக்கும்போது அவரை நான் வெறுக்கவில்லை. பலதடவை சந்தித்து பேசி இருக்கிறேன். இலங்கையில் அரச சேவையில் இருந்த மனிதர் பின்னர் ஓய்வூதியம் எடுத்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்.

நீங்கள் யாரையாவது வெறுத்திருந்தால், துலைவான் எப்ப சாவான் என நினைத்திருந்தால் குறிப்பிட்ட மனிதர் இறந்த பின்பு அழகாக கண்ணுக்குத் தோன்றலாம். அத்தகைய மனிதரைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை.

பெரும்பாலான ஐரோப்பியருக்கு ஹிட்லர் இறந்தபின்பு அந்தச் சடலத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அழகாகத் தோன்றி இருக்கலாம்.மயிர்க் கொட்டிபோல் மேல் உதட்டில் ஒட்டியிருந்த அந்த அருவருப்பான மீசைகூட இறந்தபின்பு அழகாக தோன்றியிருக்கலாம். அதே போல் ஸ்ராலினது சடலம் ருஷ்ய மக்களுக்கும் குருஷ்ஷேவிற்கும் அழகாக இருந்திருக்கலாம். கூட்டுக் குடும்பத்தில் கூட வாட்டி வதைக்கப்பட்ட மருமகளுக்குக்கூட ஆவி துறந்த மாமியின் முகத்தில் அன்பும் அழகும் சொட்டுவதாக எண்ணத் தோன்றலாம். இப்படியான எதிர்முரணான மன நிலை ரீதியான அழகுணர்வை நான் இங்கு சொல்ல வரவில்லை.

அன்று அந்த மயானத்தில் அந்த மனிதரின் சடலத்தை பார்த்தபொழுது அக்கணத்தில் எனக்கு ஏற்பட்ட அந்த உணர்வு எனக்கே அதிர்ச்சியளித்தது. நெருங்கிய உறவினர் காம உணர்வுடன் கனவில் வந்தால் விடிந்ததும் மனதில் ஏற்படும் வெட்கத்திற்கு சமமாக இருந்தது.

என் உணர்வின் தார்ப்பரியத்தை கொஞ்சம் விரிவாக விளக்கமாக கூற விரும்புகிறேன். உயிரோடு இருக்கும்போது அவரைப் பார்த்தபோது மத்திய வயதைக் கடந்தவராக இருந்தால் அவரது இளமைக்காலம் எனக்கு தெரியாது. நான் அவரைப்பார்த்த காலத்தோடுதான் ஒப்பிடமுடியும். அவரது நரைத்த தலைமயிருக்கு அவர் கருப்பு சாயமடித்தாலும்கூட ஒழுங்காக அடிப்பதில்லை என நினைக்கிறேன். மூன்று மாதத்திற்கு ஒருமுறை அடிப்பதால் தேங்காய் நார்த் தும்பின் நிறத்தில் கரிய வானத்தில் தோன்றும் பிறைச்சந்திரனை போல் காட்சியளிக்கும். நிலக்கரி நிறத்தில் முகத்தில் சுருக்கங்கள் கண்களுக்கு தெரியாவிடினும் அவரது தாடைப்பகுதியில் சுருக்கங்கள் தெரியும். மனிதரின் வாய் திறந்து பேசும் போது சைனீஸ் சாப்பாட்டுக்கடையில் அதிகமாக பொரித்த கலவாய் மீன் போன்று இருக்கும் இதற்கு மேல் ஒருவரது அங்க லாவண்யங்ளை எழுதாமல் விடுவதுதான் நாகரீகம்.

மேலும் தலை கழுத்து முகம் போன்ற பகுதிகள் மட்டும் தான் எனக்கு அந்தச்சவப்பெட்டியில் தெரிந்தவை. நான் பார்த்த போது அவரது உதடுகள் அழகாக குவிந்து சுருக்கங்கள் எதுவும் அற்று காலையில் மழையில் நனைந்து மலரத் தயாரான ரோஜா மொட்டுப்போல் இருந்தது. அசாதாரணமான எந்த அலங்காரமும் இல்லை ஆனாலும் பகல் நேரத்திலும் அங்கு எரியும் மின்சார விளக்கின் ஒளி அவரது முகத்தில் தெறித்தது. அவரது முகத்தில் நிச்சயமாக ஏதாவது கலரற்ற கிறீம் தடவி இருக்க வேண்டும். தலைமயிர் ஒழுங்காக சீவப்பட்டு கருப்பாக சாயமடிக்கப்பட்டு இருந்தது. அணிந்திருந்த சேட் வெள்ளை நிறத்திலும் அதற்கு பொருத்தமான வயலட் நிறத்தில் சில்க் கழுத்து ரை மற்றும் கருப்பு சூட்டுன் அவரது கம்பீரமான தோற்றத்தை பார்த்தபோது, மனிதர் வயது கூடி இறப்பதற்கு பதிலாக பதினைந்து வயது குறைந்து இறந்திருக்கிறரர் என எண்ணத் தோன்றியது.

இப்படியான இராசாயன மாற்றத்தை நடத்துபவர்கள் யார்?;

உடலைப் பொறுப்பெடுத்து நடத்தும் மரணச்சடங்கு சேவையினரா?

அவர்கள் என்பாமிங் என்று உடலில் உள்ள அங்கங்கள் சிலவற்றையும் மூளைப்பகுதியையும் வெளியெடுத்து பின்பு இங்கு காகிதம் போன்ற பொருட்களை வைத்து போமலீன் மற்றும் பல இரசாயன கலவைகளை இரத்த குழாய்கள் உள்ளே செலுத்துவார்கள் என எங்கோ படித்தது தெரிந்திருந்தாலும் இவ்வளவு அழகாக மாற்றுவது என்பது ஒரு கலை.ஒரு விதத்தில் பண்டைக்காலத்தில் எகிப்தியர்களின் மம்மியாக்கத்தின் தொடர்ச்சியானது என நினைத்துக்கொண்டு அந்த மயானத்தில் இருந்து வெளியேறினேன்

ஒரு சனிக்கிழமை மதியம் கடந்தபின் எனது கிளினிக்கில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தபோது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி கதவைத் தட்டினாள்.கதவைத் திறந்தபோது ஒலிவ் நிறத்தில்; இருந்த கன்னக்கதுப்பு சாம்பல் பூத்த கருத்தகொழும்பான் போன்று மெதுவான வெளிறலுடன் இருந்தது. செவ்வரியோடிய விழிகள் சிவந்து தடித்த இமைகளுடன் இரண்டு கண்களின் கீழும் கருவளையங்கள். ஏதோ நித்திய சோக சாகரத்தில் மூழ்கி எழுந்தவள் போன்றிருந்தாள்.

கலைந்த கேசங்கள் சிலும்பியபடி நிற்கும் தோற்றத்துடன் எதுவித அலங்காரமும் இல்லாமல் சற்று நேரத்திற்கு முன்னால்தான் படுக்கையை விட்டு எழுந்து வந்தவள் போல் அவசரகோலத்தில் தோன்றினாள். அவளது கால்களில் காலணியில்லை. பாதத்து விரலின் நகங்கள் கூட ஒழுங்காக வெட்டப்படவில்லை. நீலநிற நைடிக்கு மேல் ஒரு கோட்டை போட்டிருந்தாள். வேகமான காற்றுப்போல அவசரமாக உள்ளே வந்தவளது கையில் சிறிய மோல்ரீஸ் இனநாய் வெள்ளையாக சிறியதாகவு இருந்தது. அவளின் பின்னால் ஏழு அல்லது எட்டுவயது மதிக்கத்தக்க சிறுவன் அப்படியே அவளை அச்சில் வார்த்தது போன்ற முகத்தோற்றத்துடன் வந்தான். நான் கேட்காமலே ‘பக்கத்து வீட்டு நாய் வந்து எனது லிசியை கடித்து விட்டது. கழுத்தில் காயம். சுவாசிக்க சிரமப்படுகிறது’ என்றாள்


அச்சமயம் எனக்கு ஒரு உதவியளர் இல்லாத போது நாயை பார்க்க தயக்கமாக இருந்தாலும் பரிசோதனை மேசைக்கு கொண்டு வரும்படி கூறினேன்.

மேசையில் வைத்து சோதித்து பார்த்துவிட்டு “லிசியின் கழுத்தில் கடித்ததால் கழுத்தில் உள்ள சுவாசக்குழாய் நசுங்கியுள்ளது. ஆனாலும் சுவாசத்திற்கு பாதிப்பு இலiல என நினைக்கிறேன். எதற்கும் இன்று இரவு மயக்கத்தில் வைத்து சுவாசக்குழாய்குள் குழாயை வைத்து ஒட்சிசன் கொடுக்க விரும்புகிறேன். நாளைக்கு வந்து உங்கள் லிசியை எடுத்துச் செல்லுங்கள்.” என்றேன்

ஓரளவு பரபரப்புக் குறைந்து தனது விபரங்களை காகிதத்தில் எழுதித் தந்துவிட்டு வந்த வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டாள்

லிசி அடுத்தநாள் நல்ல நிலைக்கு வந்துவிட்டது.

லிசியை வந்து எடுத்து போகும்படி கூறுவதற்கு எனது நர்ஸ் தொலைபேசி எடுத்தால் அவள் வீட்டில் ஒருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை.

அடுத்த நாளும் முயன்றோம். எவரும் தொலைபேசியை எடுக்கவில்லை. முன்றாவது நாள் மாலைக்குள்; இந்தப் பெண் வராவிடில் கவின்சிலில் நாயை ஒப்படைப்பதாக தீர்மானித்து இருந்தபோது திடீசென்று அந்தப் பெண் வந்தாள்.

“இரவில் வேலை செய்துவிட்டு பகலில் நித்திரை கொள்வதால் விழித்தெழுவதற்கு நேரமாகிவிடுகிறது. அதனால்தான் உடனே வரமுடியவில்லை” எனச்சொல்லிவிட்டு பச்சைநிறத்து சில நூறு டொலர் தாள்களை எமக்கு கொடுத்து விட்டு, இரண்டு நாட்கள் தாமதித்து வந்தமைக்குரிய தண்டப்பணம்.”என்றாள்.

நான் ஆச்சரியப்பட்டு, உரிய கட்டணத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு மிகுதியை திருப்பிக் கொடுத்தபோது பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

சில வருடங்களின் பின்னர் ஒரு பெரிய நாயை அழைத்துவந்து சத்திரசிகிச்கைக்கு அனுமதித்துவிட்டு சென்றவளை அதன் பின்னர் இரண்டு நாட்கள் காணவில்லை.இம்முறை அவளது தாமதம் பதற்றத்தை தரவில்லை. ஏற்கனவே அவள் அறிமுகமானவள் என்பதும் காரணம்தான்.

இரண்டு நாட்கள் கடந்தபிறகு மிகுந்த மன்னிப்புக்கோரியவாறு வந்து, நாயை எடுத்துச் சென்றாள்.

“அடுத்தமுறை உமது நாயை நாங்கள் பார்க்கப்போவதில்லை” என்று வேடிக்கையாகச் சொன்னபோது, “ என்னசெய்வது எனது வேலைஅப்படி..” எனக்கூறி நகர்ந்தாள்.

“இவளது வேலை என்ன?” என்று எனது நேர்ஸ் என்னிடம் கேட்டாள்.

‘அடுத்தமுறை தையல் வெட்ட வரும்போது அவளிடம் கேள்’’ எனச் சொல்லிவிட்டேன்

எந்தக் காலத்திலும் ஒரு சிறிது மேக்கப்கூட இவள் முகத்தில் இல்லை. ஆனால் வேலை செய்வதாக கூறிக்கொணடு எப்பொழுதும் பச்சை நோட்டாக தருகிறாள்

ஒரு நாள் எனது நேர்ஸ்,“ ஹனாவின் வேலை என்ன தெரியுமா?”

“அவளது பேரே எனக்கு தெரியாது. பைபிளில் இருந்து வந்த பெயர்” என்றேன்.

“இல்லை எனக்கு சொல்லிவிட்டாள்”

“என்ன வேலை?”

—-

அன்று மதியம். மதிய உணவுக்காக அருகில் இருந்த சுப்பர் மார்க்கட்டின் கபேக்குச் சென்றேன். அங்கு எனது நண்பன் ஒருவன் தனது பாஸ்போர்ட் படமெடுக்க வந்தாக கூறி சில நிமிடநேரம் பேசிவிட்டு சென்றான்.அவன்போனபின்பு நிமிர்ந்து பார்த்தபோது ஹனா எனக்கு இரண்டு மேசைதள்ளி இடது பக்கத்தில் இருந்து சான்விச் சாப்பிட்டபடி இருந்தாள்.எந்த ஒப்பனையும் இல்லாத முகத்துடன் வழக்கம் போல் இருந்தாள்

சில மணித்தியாலங்களுக்கு முன்பு எனது நேர்ஸ் சொன்னது நினைவுக்கு வந்தது.

மற்றவர்கள் நிம்மதியாக உறங்கும் இரவு நேரத்தில் உயிரற்ற பிரேதத்தை குளிப்பாட்டி முகத்தை சவரம் செய்து அவர்களது தலைமுடி நிறத்திற்கேற்ப சாயம் அடித்து கண்களின் இமைகளை ஒரு விதபிசினால் ஒட்டி மூடிவிட்டதும். வாயின் மேல்தாடையையும் கீழ்த்தாடையையும் மூக்கின் உள்பக்கத்தால் செலுத்திய சிறிய வயரால் கட்டி வைப்பதால் வாய் மூடியபடியான தன்மை உருவாகிறது. உதட்டுக்கு ஈரலிப்பான வசலீன் தடவிய பின்பாக முகத்திற்கு மெதுவான கிறிம்தடவி அலங்காரம் செய்தபின் உடையலங்காரம் செய்வதுதான் அவளது வேலை. இந்தவேலையை இரவில் செய்து முடித்தால்தான் பகலில் பிரேதங்களை தேவாலயங்களில் அஞ்சலிக்கு வைக்க முடியும். இந்தவேலையை பத்து வருடங்களாக செய்வதாகச் சொன்னாள்.

நம்மவர்கள் பிரேதத்தை ஏன் இப்படி அலங்கரிக்க வேண்டும் எனக்கேட்கலாம்.

அக்கால எகிப்தியர்கள், இறந்த மன்னர்கள் கிரீடத்தை தவிர மற்றைய சகல பொருட்களுடன் விண்ணுலகம் செல்வார்கள்என்ற நம்பிக்கையில்தான் அவர்களின் ஆடை அணிகலன்களுடன் மட்டுமல்ல அவர்களது இறந்த செல்லப்பிராணிகளையும் மம்மியாக புதைத்தார்கள்

இப்பொழுது எனது மனதில் தோன்றிய கேள்வி இதுதான்.

இவ்வளவு அழகாக பிரேதங்களுக்கு அலங்காரம் செய்பவள், தன்னை ஏன் அலங்கரிக்க மறந்துவிடுகிறாள்?

அது ஏன்?

Saturday, 28 April 2018

MA`NENE FESTIVAL IN INDONESIA








MA`NENE FESTIVAL IN INDONESIA



Indonesian villagers dig up their ancestors every three years and dress them in new clothes in ancient ritual to show 'love and respect'

Photos show the Ma'nene Festival in Indonesia where bodies of dead relatives are dug up and dressed up
The ritual has been going for more than a century and is celebrated by the Torajan people in Indonesia
Relatives parade decomposing bodies dressed in new clothes and pose for photos with the corpses
The festival's name means 'The Ceremony of Cleaning Corpses' and it takes place every three years


The Torajan people of Indonesia proudly display their dead relatives after digging them up and dressing them in new clothes in an ancient ritual that is meant to show respect for their late loved ones.

Every three years, the tribe from Sulawesi island exhume their dead, who they wash and dress in fresh clothes and then pose for family photographs in a festival known as Ma'nene.

The ritual, which translates as 'The Ceremony of Cleaning Corpses,' has been going for more than a century.


 











 A grandosn combs the hair of his dead grandparents during the Ma'nene ritual which takes place every three years

One of the most important events in the lives of the Torajan people, an ethnic group indigenous to the mountainous region of Tana Toraja, is the funeral.

Most save money their entire lives so they can have a respectable burial for themselves or family m

In some cases the deceased's funeral is held several weeks or even years after their death so the family have can have time to save up and pay for an extravagant funeral.

But the funeral is never the last time their relative's body is seen. Whenever an elderly villager dies, their body is wrapped in several layers of cloth to prevent decay.

Then, they are dug up every three years, admired by loved ones and dressed in different clothing.


Relatives carefully dress a dead man in fresh clothes before reburying him on the island of Sulawesi in Indonesia
 
 










The body of L Sarungu, an army veteran dead for 10 years, is carefully cleaned and groomed during the Ma'nene ritual at Panggala Village


Another important element of the Ma'nene festival is replacing and repairing the coffins to stop bodies from decomposing.

The Torajan people live high in the mountains of Sulawesi in Indonesia. The area is so remote that many of the villages were completely autonomous until the 1970s, when the area was exposed to the outside world by Dutch missionaries.


Relatives clean the body of Ne'Tampo, dead for 30 years, during the Ma'nene ritual at Panggala Village


The villagers are encouraged to marry within their family - but only beyond the fourth cousin.

In the Torajan belief system, death is not a final step, but just one step in an ongoing spiritual life.
The funeral is a pivotal point of transition, and some funerals will last up to a week with elaborate celebrations.

Torajan people believe the spirit of a dead person should always return to their village of origin, a belief which has deterred many from ever leaving their home in case they die while on the journey and their body cannot be returned.

On rare occasions a villager dies away from home, family members often venture to the location and carry the body home.



 











Locals carefully maneuver a corpse before delicately grooming them and dressing them in new clothes



An army veteran dead for 10 years is redressed and groomed by loving relatives in Indonesia as part of the festival
 

Thursday, 8 June 2017

PARSI SURRENDERED THEIR BODY FOR BIRDS AND ANIMALS



PARSI  SURRENDERED THEIR BODY 
FOR BIRDS AND ANIMALS




கழுகுகளுக்கு உடலைத் தரும் பார்சி மக்கள்!
தமிழகத்தில் ராஜாராஜ சோழனின் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அதாவது கி.பி. பத்தாம் நூற்றாண்டில்(சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு) இந்தியாவில் நிகழ்ந்த சிறுகுடியேற்றங்களில் ஒன்று பார்சி மக்களின் வரவு. அன்றைய பாரசீக தேசமான, இன்றைய ஈரான் நாட்டிலிருந்து இனமோதல் காரணமாக பார்சி இன மக்கள் அகதிகளாக தப்பித்து விபாபாரக் கப்பல்களில் ஏறி இந்தியாவுக்கு குடும்பம் குடும்பமாக வந்துசேர்ந்தனர். இப்படி வந்தவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குடியேறினார்கள். இந்தியாவில் இன்று வாழும் பார்சி இனத்தவரின் மக்கள் தொகையானது 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே. பார்சி மக்களின் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக அதிக குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் முறையை குஜராத்தில் உள்ள பார்சி முன்னேற்றச் சங்கம் கடைபிடித்து வருகிறது. தங்கள் தாய் மண்ணை விட்டு வந்துவிட்டாலும் தங்களது கலாசார பழக்க வழக்கங்களை அவர்கள் கடைபிடிக்கத் தவறவில்லை. அதில் ஒன்று இறந்த பிறகு தங்கள் உடல்களை கழுகுகளுக்கு திண்ணக் கொடுக்கும் இறுதிச்சடங்கு முறை. தமிழர்களின் ஆதிமரபில் கழுவேற்றமும், கழுவேற்றிய உடலை மலைக்குன்றின் மீது எறிந்து பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தின்னக்கொடுக்கும் வழக்கத்தையும் இந்த இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 


டவர் ஆஃப் சைலன்ஸ் பார்சி இனத்தில் ஒருவர் இறந்த பிறகு அந்த உடலில் இருந்து தலைமுடி, நகங்கள் ஆகியவை நீக்கப்பட்டு, உடலை பாலில் நீராட்டி, இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்று 'டவர் ஆப்ஃ சைலன்ஸ்' என்று அழைக்கப்படுகின்ற ஒரு வட்டவடிவ உயரமான கோபுரத்தில் உடலைக் கொண்டுபோய் கிடத்தி விடுவார்கள், அங்கே தயாராக இருக்கும் பிணந்தின்னிக் கழுகுகள் கன நேரத்தில் உடலை தின்றுவிடுகின்றன. இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் நீர், நெருப்பு, பூமி இவைகள் புனிதமான மூலங்களாக கருதப்படுவதால் மரணத்தின் மூலமாக அவைகள் களங்கமுறக்கூடாது மும்பை மாநகரில் ஜி.எஸ்.டி அருகிலுள்ள உள்ள டவர் ஆப்ஃ சைலன்ஸ், மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, முதல் அடுக்கில் ஆண்களின் உடல்களுக்கும், அதற்கு அடுத்த அடுக்கில் பெண்களின் உடல்களுக்கும்,நடுவில் உள்ள அடுக்கில் சிறு குழந்தைகளின் உடல்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கழுகுகள் தின்றது போக மீதம் உள்ளவைகள் மழை காரணமாக சுத்தம் செய்யப்பட்டு, இறுதியாக கடலில் கலக்கப்படுகின்றது, இங்கு பார்சிகள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. பார்சி இனமக்களின் மக்கள் தொகையைப் போலவே இன்று கழுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைந்துவிட்டது. இதனால் மும்மை மற்றும் குஜராத்தின் சூரத் நகரில் வசிக்கும் பார்சிக்கள், பிணம் தின்னிக் கழுகுளுக்காக இறந்த உடல்களை வைத்தபோது கடந்த இரண்டு வருடங்களாக கழுகுகள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை. இதனால் உடல்கள் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கின.


 பெரும் சுகாதாரப் பிரச்சினையாக இது உருவெடுத்தது. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைப் பாருங்கள். 2010ஆம் ஆண்டு சூரத் நகரை சேர்ந்த, அம்பிகா நிகேதன் பகுதியில் வசித்த பார்சி இனத்தவர் நரிமன் தபோவாலா (74) உடல்நலக்குறைவால் இறந்தார். இறுதி சடங்குகள் முடிந்து, மத வழக்கப்படி பரண் மீது அவரது உடலை வைத்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி கழுகுகள் வரவில்லை. உடல் அழுகத்துவங்கியது. இதனால் சங்கடப்பட்ட அவரது மனைவி குல், வழக்கத்திலிருந்து மாறுபட்டு கணவரது உடலை எரியூட்டுமாறு கூறிவிட, உம்ரா என்ற இடத்திலுள்ள எரிவாயு மேடைக்கு எடுத்துச் சென்று எரியூட்டப்பட்டுள்ளது. சூரத்தில் பார்சி இன குடும்பத்தினர் இறந்தவரின் உடலை எரியூட்டியது, இதுவே முதல் நிகழ்வு. அதன் பின்பும் ஓரிரு எரியூட்டு நிகழ்வுகள் நடந்தன என அறியமுடிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டவர் ஆஃப் சைலன்ஸ் அன்று
டவர் ஆஃப் சைலன்ஸ் இன்று