Sunday 25 October 2020

LIVER FUNCTIONS IN OUR BODY


 



LIVER  FUNCTIONS IN OUR BODY

இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம்.

இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் வேலையை செய்வான்.

முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன் வடிப்பான்களை(Nephrons) தன்னகத்தே கொண்ட சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளிவிடுவான்.

பின் காலை சிறுநீர் செல்லும் வேளையில், விடிய விடிய இரத்தத்தை தூய்மை செய்யும் போது பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்பை வெளியேற்றிவிடுவான். அதனால் தான், காலை போகும் முதல் சிறுநீர் பழுப்பு நிறம் மற்றும் நாற்றம் நிறைந்ததாக உள்ளது.

அது அனைத்தும் கல்லீரலால் முறிக்கப்பட்ட நச்சுக்கள். புடுங்கும் ஆணி அனைத்தும் தேவை இல்லாத ஆணி தான். எனவே இதை பிடித்து பரிசோதனை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

பாருங்கள் உறுப்புகள் எப்படி ஒற்றுமையாக இயங்குகிறது என்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உடல் உறுப்புகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

கல்லீரல் உங்கள் இரத்தத்தை தூய்மை செய்யும் இந்த வேளையில்

நீங்கள்

இரவுப் பணியில் இருந்தாலோ !

உணவை அமுக்கிக்கொண்டு இருந்தாலோ !

கண் விழித்திருந்தாலோ !

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலோ !

கைப்பேசி நோண்டிக்கொண்டிருந்தாலோ !

கதை பேசிக்கொண்டிருந்தாலோ !

ஏதேனும் யோசனை செய்து கொண்டிருந்தாலோ !

போர்வை இழுத்து தலையுடன் போத்தி, யார் யார் என்ன என்ன Status வைத்திருக்கிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தாலோ !

கல்லீரல் இரத்தத்தை துய்மை செய்யும் வேலை ஸ்தம்பித்துவிடும். இந்த வேலை நடக்காது.

முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான், அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.

நீங்கள் அடுத்த நாளும் கல்லீரல் நேரத்தில் தூங்குவதை தவிர அனைத்து சேட்டைகளும் செய்து கொண்டிருப்பீர்கள்.

மீண்டும் முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான். அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.

மீண்டும் உங்களின் சேட்டைகள் தொடரும்.

இப்படி தொடர்ந்து நடக்கும் போது என்ன ஆகும் தெரியுமா ?

கல்லீரல் இரத்தத்தை தூய்மை செய்யும் வேலையில், நீங்கள் தூங்காமல் வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் இரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு பொடி போட்டு கலந்துகொண்டே இருந்தால் அந்த நீரின் அடர்த்தி அதிகரித்து திடமாகுமா ? அல்லது திரவமாகவே இருக்குமா ?

திடமாகும் அல்லவா. அதேப்போல் தான்.

நீங்கள் இரவு தூங்காமல், கல்லீரலுக்கு அதன் நேரத்தை கொடுக்காததால், நச்சை முறிக்க நேரம் இல்லாமல், நச்சுக்கள் அனைத்தும் இரத்தத்திலேயோ தங்கி, இரத்தம் சாக்கடை போல் கெட்டியாக மாறிவிடுகிறது.

கெட்டியான இந்த இரத்தத்தை இதயம் Pump செய்ய சிரமப்பட்டு வேகம் குறையும். இந்த நேரத்தில் நீங்கள் ECG எடுத்து பார்த்தால் இதயம் Low pump rate காட்டும். உடனே உங்களுக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிடும் ஆங்கில மருத்துவம்.

பிரச்சனை இதயத்திலா ? அல்லவே அல்ல

Low pump rate ற்கு காரணம் கெட்டியான இரத்தம்.

கெட்டியான இரத்தத்திற்கு காரணம் நீங்கள் தூங்காமல் இருந்தது.

இப்பொழுது பிரச்சனை எங்கு என்று பாமரன் கூட அறிவான்.

இரவு தூங்காமல், இப்படி இரத்தம் கெட்டியாகி கழிவுகள் இரத்தத்திலேயே தங்கிவிடுவதால் நச்சு வெளியேறாத இந்த இரத்தம் செல்லும் இடமெல்லாம் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடுகிறது.

என்ன நோய் என்று கேட்கிறீர்களா ? ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் உலகில் உள்ள அனைத்து நோய்களும் என்று சொல்லலாம். ஆம் இது தான் நோய்களுக்கு மிக முக்கிய காரணம்.

நீங்கள் என்ன தான் இயற்கையில் விளைந்த உணவுகளை எடுத்தாலும். இரவு நேரம் கழித்து உறங்கினால் உங்களுக்கும் இதே நிலை தான்.

உணவில் மட்டும் அல்ல, வாழ்க்கை முறையிலும் வர வேண்டும் மாற்றம்.

சிலர் சிரித்துக்கொண்டே சொல்வார்கள் பகலில் தூங்கி சமன் செய்து விடுவேன் என்று நீங்கள் சமன் செய்யவில்லை உங்களுக்கு நீங்களே சமாதி கட்டிக்கொள்கிறீர்கள்.

இரவு தூங்கினால் மட்டுமே இரத்தம் தூய்மை பெறும் உடல் உஷ்ணம் குறையும் பகலில் தூங்கினால் நோய் தான் வரும். பகலில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர தூங்க கூடாது.

No photo description available.


No comments:

Post a Comment