Showing posts with label REVOLUTION. Show all posts
Showing posts with label REVOLUTION. Show all posts

Monday, 24 August 2020

Haitian Revolution (1791-1804)




Haitian Revolution (1791-1804)


The Haitian Revolution has often been described as the largest and most successful slave rebellion in the Western Hemisphere.  Slaves initiated the rebellion in 1791 and by 1803 they had succeeded in ending not just slavery but French control over the colony.  The Haitian Revolution, however, was much more complex, consisting of several revolutions going on simultaneously. These revolutions were influenced by the French Revolution of 1789, which would come to represent a new concept of human rights, universal citizenship, and participation in government.

In the 18th century, Saint Dominigue, as Haiti was then known, became France's wealthiest overseas colony, largely because of its production of sugar, coffee, indigo, and cotton generated by an enslaved labor force.  When the French Revolution broke out in 1789 there were five distinct sets of interest groups in the colony. There were white planters—who owned the plantations and the slaves—and petit blancs, who were artisans, shop keepers and teachers.  Some of them also owned a few slaves.  Together they numbered 40,000 of the colony’s residents.  Many of the whites on Saint Dominigue began to support an independence movement that began when France imposed steep tariffs on the items imported into the colony.  The planters were extremely disenchanted with France because they were forbidden to trade with any other nation.  Furthermore, the white population of Saint-Dominique did not have any representation in France.  Despite their calls for independence, both the planters and petit blancs remained committed to the institution of slavery.

The three remaining groups were of African descent: those who were free, those who were slaves, and those who had run away. There were about 30,000 free black people in 1789.  Half of them were mulatto and often they were wealthier than the petit blancs. The slave population was close to 500,000. The runaway slaves were called maroons; they had retreated deep into the mountains of Saint Dominigue and lived off subsistence farming.  Haiti had a history of slave rebellions; the slaves were never willing to submit to their status and with their strength in numbers (10 to 1) colonial officials and planters did all that was possible to control them. Despite the harshness and cruelty of Saint Dominigue slavery, there were slave rebellions before 1791. One plot involved the poisoning of masters.

Inspired by events in France, a number of Haitian-born revolutionary movements emerged simultaneously.  They used as their inspiration the French Revolution’s “Declaration of the Rights of Man.”  The General Assembly in Paris responded by enacting legislation which gave the various colonies some autonomy at the local level.  The legislation, which called for “all local proprietors...to be active citizens,” was both ambiguous and radical.  It was interpreted in Saint Dominigue as applying only to the planter class and thus excluded petit blancs from government.  Yet it allowed free citizens of color who were substantial property owners to participate.  This legislation, promulgated in Paris to keep Saint Dominigue in the colonial empire, instead generated a three-sided civil war between the planters, free blacks and the petit blancs.  However, all three groups would be challenged by the enslaved black majority which was also influenced and inspired by events in France.

Led by former slave Toussaint l’Overture, the enslaved would act first, rebelling against the planters on August 21, 1791. By 1792 they controlled a third of the island.  Despite reinforcements from France, the area of the colony held by the rebels grew as did the violence on both sides.  Before the fighting ended 100,000 of the 500,000 blacks and 24,000 of the 40,000 whites were killed.  Nonetheless the former slaves managed to stave off both the French forces and the British who arrived in 1793 to conquer the colony, and who withdrew in 1798 after a series of defeats by l’Overture’s forces.  By 1801 l’Overture expanded the revolution beyond Haiti, conquering the neighboring Spanish colony of Santo Domingo (present-day Dominican Republic).  He abolished slavery in the Spanish-speaking colony and declared himself Governor-General for life over the entire island of Hispaniola.

At that moment the Haitian Revolution had outlasted the French Revolution which had been its inspiration.  Napoleon Bonaparte, now the ruler of France, dispatched General Charles Leclerc, his brother-in-law, and 43,000 French troops to capture L’Overture and restore both French rule and slavery.  L’Overture was taken and sent to France where he died in prison in 1803.  Jean-Jacques Dessalines, one of l’Overture’s generals and himself a former slave, led the revolutionaries at the Battle of Vertieres on November 18, 1803 where the French forces were defeated.  On January 1, 1804, Dessalines declared the nation independent and renamed it Haiti.  France became the first nation to recognize its independence.  Haiti thus emerged as the first black republic in the world, and the second nation in the western hemisphere (after the United States) to win its independence from a European power.

Sources:

Friday, 21 August 2020

SLAVE REVOLUTION IN HAITI 1791 AUGUST 22



SLAVE REVOLUTION IN HAITI 1791 AUGUST 22



“ஏழை என்றும் அடிமை என்று எவரும் இல்லை பாரினில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே” என்று பாடிக்கொண்டே பாலு வந்தான். “என்ன பாட்டு பலமா இருக்கே?” என்று கேட்டார் ஞாநி மாமா.
''பள்ளிக்கூட நாடகத்தில் வருகிற பாட்டு. பயிற்சி செய்கிறேன்” என்றான் பாலு. ''எதைப் பற்றி நாடகம்?” என்று கேட்டார் மாமா. ''அடிமைத்தனத்தை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் பற்றி நாடகம்” என்றான் பாலு. ''அமெரிக்க லிங்கன் நாடகத்தில் இந்தியா பற்றி ஏன் வருகிறது?” என்று கேட்டேன். ''அதெல்லாம் ஸ்கூல் நாடகங்களில் எல்லாம் கலந்துதான் வரும்” என்று சிரித்தார் மாமா.
''லிங்கனுக்கு முன்பே அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி எல்லாம் நடந்தது தெரியுமா?” என்று கேட்டார் மாமா. 'ஸ்பார்டகஸ்' கதையை சொல்லிற்று வாலு. ''கிரேக்க அடிமைகளில் எழுச்சியை ஏற்படுத்தியவன் ஸ்பார்டகஸ். அவனை வைத்து நிறைய புத்தகங்கள், நாடகங்கள், சினிமா எல்லாம் வந்திருக்கின்றன. ஆனாலும், ஸ்பார்டகஸ் போராட்டம் வெற்றி பெறாத போராட்டம். பகத்சிங், சே குவேரா மாதிரி வீழ்த்தப்பட்ட போராட்டக்காரன் ஸ்பார்டகஸ். ஆனால், பின்னால் வெற்றிபெறும் பல போராட்டங்களுக்கு அவர்கள் உத்வேகமாக அமைகிறார்கள்,” என்றார் மாமா.

''அடிமை முறை என்றால் மனிதர்களை விலை கொடுத்து வாங்குவார்களாமே, உண்மையா?” என்று கேட்டான் பாலு.

''ஆமாம், சந்தையில் மாடு ஆடுகளை நிற்கவைத்து, பார்த்து வாங்குகிற மாதிரி, மனிதர்களை நிறுத்திவைத்து விற்கிற வழக்கம் எல்லாம் இந்த உலகத்தில் இருந்திருக்கிறது. 18, 19ம் நூற்றாண்டுகளில்தான் இதெல்லாம் மாறத் தொடங்கியது,” என்றார் மாமா.
''எப்படி மாறத் தொடங்கியது?” என்று கேட்டேன்.
''அடிமைகளுக்கும் நான் ஏன் இப்படி அடிமையாக இருக்க வேண்டும் என்ற கேள்வி மனத்தில் தோன்ற ஆரம்பித்தால்தான், மாற்றத்தை நோக்கிப் போக முடியும். அப்படி மனத்தில் கேள்வி எழுப்ப, பல இலக்கியங்கள் உதவியிருக்கின்றன. இன்னொரு நாட்டில் நடந்த போராட்டம் பற்றிய செய்திகள் தூண்டுதலாக அமைந்திருக்கின்றன,” என்றார் மாமா.

''எல்லாரும் சூடாக காபி குடித்துக் கொண்டே பேசுங்கள்” என்று சொன்னபடி அம்மா காபி கோப்பைகளை எங்களுக்குக் கொடுத்தார். குடித்தோம்.

''இந்தக் காபிக்கு பின்னால் பெரிய அடிமைமுறை இருந்திருக்கிறது” என்றார் மாமா. “உலகம் முழுக்க காபி தோட்டங்கள், டீ தோட்டங்கள், கரும்புத் தோட்டங்கள் அமைப்பதற்கு அடிமைகளைத்தான் பயன்படுத்தி னார்கள். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் காபி கசக்கும். சர்க்கரை கூட இனிக்காது” என்றார் மாமா.
ஏன் அப்படி என்றேன். “காபி, டீ, கரும்பு எஸ்டேட் வேலைகள், கடும் உழைப்பு தேவைப்படக்கூடியவை. குறைந்த கூலிக்குக் கடும் உடல் உழைப்பைத் தரவைக்க அடிமை முறைதான் சிறந்தது என்று மனித மனம் நினைக்கிறது. அதுதான் பிரச்னை” என்றார் மாமா.
எங்கெல்லாம் இப்படி நடந்தது என்று கேட்டேன்.
''நடக்காத இடமே இல்லை” என்றார் மாமா. ''நம் நாட்டிலும் நடந்ததா?” என்றான் பாலு.

''தமிழகத்தில் அடிமைமுறை என்று பேராசிரியர் சிவசுப்பிரமணியன் புத்தகமே எழுதியிருக்கிறார். என் நூலகத்தில் இருக்கிறது. அவசியம் எடுத்துப் படியுங்கள்” என்றார் மாமா.
நம் நாட்டில் இருந்த அடிமை வணிகம் பற்றி வாலு இன்னும் கொஞ்சம் தகவல்களை எடுத்துக்கொடுத்தது. இலங்கை, மலேயா, பிஜித் தீவுகளுக்கெல்லாம் இங்கிருந்து ஆயிரக்கணக்கில் ஆட்களை எஸ்டேட் வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் குறைவான கூலிக்கு கடும்வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த வம்சாவளியில் வந்தவர்கள் இன்னும்கூட சிரமங்களில் தான் இருக்கிறார்களாம்.
''உலகத்தில் மிக அதிகமாக அடிமைகளாக்க ப்பட்டவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பின மக்கள் தான். லட்சக்கணக்கானோர் தலைமுறை தலைமுறையாக வெள்ளையர் நாடுகளில் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள்” என்றார் மாமா.
''அடிமைகளை வைத்திருப்பவர்கள் சின்ன எண்ணிக்கைதானே. லட்சக்கணக்கான அடிமைகள் அவர்களை எதிர்த்துவிட முடியாதா?'' என்று கேட்டேன்.
''தன் உண்மையான பலம் என்ன என்று தெரியாதவரை அடிமைகளாகத்தான் இருப்பார்கள். கல்வியறிவு இல்லை. இதுதான் தன் விதி. தன் முன்ஜன்ம பாவம் என்றெல்லாம் தனக்குத்தானே நியாயப்படுத்திக் கொள்வது போன்ற மனநிலையில் அடிமைகளை வைத்திருப்பது தான் ஒடுக்குபவர்களின் தந்திரம்” என்றார் மாமா.
''எங்கேயாவது அடிமைகள் போராடி வெற்றி கண்ட வரலாறு இருக்கிறதா?” என்று கேட்டேன். ''ஒரே ஒரு நாடுதான் அப்படி விடுதலை அடைந்திருக்கிறது கரிபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுதான் அது” என்றார்.
ஹைட்டி தீவின் வரலாறையே எடுத்துக் கொடுத்தது வாலு. கொலம்பஸ் தான் முதலின் அந்தத் தீவைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்தியாவைத் தேடி வந்தவர், அதுதான் இந்தியா என நினைத்துக் கொண்டார். தீவைக் கண்டுபிடித்ததும் மேலைநாட்டுக்காரர்கள் செய்யும் வழக்கமான வேலையை செய்தார்கள். உள்ளூர் ஜனங்களை அழித்துவிட்டு, ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து குடியேற்றி கரும்புத் தோட்டங்களை அமைத்திருக்கிறார்கள்.
அடுத்தடுத்து ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஹைட்டி தீவை தங்கள் அடிமை நாடாக வைத்திருக்கின்றன. 1791ல் தொடங்கிய அடிமைகளின் போராட்டம் 13 வருடம் நடந்திருக்கிறது. முடிவில் அடிமைகள் வென்றார்கள். இப்போது அங்கே 95 சதவீதம் கறுப்பர்கள்தான். மீதி கலப்பினத்தவர். 13 வருடமும் கடும் வன்முறைதான். இருபக்கமும் லட்சக்கணக்கா னோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
''அடிமைகளை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உலகத்தில் இருந்தது என்பதுதான் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது” என்றேன்.
''இருந்தது என்கிறாய். இப்போது இல்லை என்கிறாயா?' என்றார் மாமா. ''நம் நாட்டில் சாதி முறை அடிமைமுறையின் எச்சம்தானே. இன்னும் துப்புரவு, மலக்கழிவு எடுக்கும் வேலையை நாம் குறிப்பிட்ட சாதிக்கு என்றுதானே ஆக்கி வைத்திருக்கிறோம். வீட்டுவேலை செய்பவர்களை எத்தனை பேர் வீட்டில் சமமாக, கெளரவமாக நடத்துகிறோம்? இதையெல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” என்றார் மாமா. நானும் பாலுவும் ஆமாமென்றோம்.
''அடிமை முறையை பற்றி நல்ல சினிமா எடுக்க வேண்டும், அப்போதுதான் உறைக்கும்” என்றான் பாலு. 'எரியும் பனிக்காடு' என்று எஸ்டேட் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் இருக்கிறது. அதைப் படமாக்கினார்கள்.
''புத்தகத்தின் தாக்கத்தில் பாதிகூட கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன், உங்களுக்கு எல்லாம் மிகவும் பிடித்த ஜங்கிள் புக் படம் இருக்கிறது அல்லவா?” என்றார் மாமா.
அதற்கென்ன என்றேன். ''அந்தப் புத்தக்கத்தைப் படித்துப் பார். படம் வேறு, புத்தகம் வேறு என்பது புரியும்” என்றார் மாமா. படிக்க ஆரம்பித்தேன். பத்து பக்கத்திலேயே புரிந்துவிட்டது.
வாலுபீடியா 1: உலகில் அடிமை முறையை ஒழித்ததைக் கொண்டாடும் நாள் ஆகஸ்ட் 22. 1791ல் அன்றுதான் ஹைட்டியில் அடிமைகள் போராடத் தொடங்கினார்கள்.
வாலுபீடியா 2: இன்று உலகத்தில் மிக அதிகமாக வெட்டிவேர் செடியை விளைச்சல் செய்து, ஏற்றுமதி செய்யும் நாடு ஹைட்டி. மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

Tuesday, 30 June 2020

Glorious Revolution.1688



            Glorious Revolution.1688



மாண்புமிகு புரட்சி அல்லது 1688 ஆம் ஆண்டுப் புரட்சி என்பது 1688 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சியாகும். இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மற்றும் அயர்லாந்தின் இரண்டாம் ஜேம்சு) மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்ட பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் அம்மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றி, டச்சுப் பிரதேச ஆட்சியாளரான (Stadtholder) மூன்றாம் வில்லியத்தையும் அவரது மனைவியும் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின் மகளுமான இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும் ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.[1] இறுதியில் வெற்றிபெற்ற பாராளுமன்றத்தினரால் உருவாக்கப்பட்ட உரிமைகள் மனு (Bill of Rights) எனும் ஒப்பந்தப் பத்திரத்தில் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் கையெழுத்திட்டதன் மூலம் புதிதாக இங்கிலாந்தில் அரசியலமைப்பு முடியாட்சி ஆரம்பமானது.

1685 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினைப் பின்பற்றினர். எனினும் இரண்டாம் ஜேம்சு மன்னன் கத்தொலிக்க மதத்தைச் சேர்ந்தவராவார். மன்னனின் மதச் செயற்பாடுகளிலும் பிரான்சு நாட்டுடனான உறவை மேற்கொள்ளலிலும் புரட்டஸ்தாந்து மதத்தைப் பின்பற்றும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் இடையூறு விளைவித்தனர். இந்நிலை 1688 ஆம் ஆண்டு சூன் 10 ஆம் திகதியில் இரண்டாம் ஜேம்சுக்கு மகன் பிறந்த போது உச்சநிலையில் காணப்பட்டது.

இரண்டாம் ஜேம்சின் ஊகிக்கப்படும் வாரிசும் புரட்டஸ்தாந்து மதத்தைச் சார்ந்தவருமான இரண்டாம் மேரியையும் அவளது இளைய சகோதரனும் இரண்டாம் ஜேம்சின் வெளிப்படை வாரிசுமான ஜேம்சையும் நாடு கடத்தியமை போன்ற இரண்டாம் ஜேம்சு மன்னனின் நடவடிக்கைகள் பாராளுமன்றத்தினரை மேலும் வெறுப்புக்குள்ளாக்கின.
இரண்டாம் மற்றும் ஏழாம் யேம்சு (James II and VII, 14 அக்டோபர் 1633பழைய நாட்காட்டி – 16 செப்டம்பர் 1701) என்பவர் இங்கிலாந்து, மற்றும் அயர்லாந்து ஆகியவற்றின் இரண்டாம் யேம்சு மன்னராகவும், இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மன்னராகவும்,[2] 1685 பெப்ரவரி 6 முதல் 1688 வரை பதவியில் இருந்தவர். 1688 இல் இடம்பெற்ற புரட்சியில் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவரே இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் கடைசி ரோமன் கத்தோலிக்க மன்னராக இருந்தார்.

முதலாம் சார்லசு மன்னரின் உயிருடனிருந்த இரண்டாவது மகனான இரண்டாம் யேம்சு,[3] இவரது சகோதரரான இரண்டாம் சார்லசு இறந்ததை அடுத்து மன்னராக முடிசூடினார்.[4] பிரித்தானியாவின் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்த சீர்திருத்தவாதிகள் இவரை பிரெஞ்சு-சார்பானவராகவும், கத்தோலிக்க-சார்பானவராகவும், ஒரு முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியாளராக சந்தேகக் கண்ணோடு நோக்கினர்.[5] இரண்டாம் யேம்சு தனது வாரிசாகக் கத்தோலிக்கரான இளவரசர் யேம்சு பிரான்சிசு எட்வர்டு ஸ்டுவர்ட்டை அறிவித்ததை அடுத்து இங்கிலாந்தில் புரட்சி வெடித்தது. மன்னரின் புரட்டத்தாந்து மருமகனான மூன்றாம் வில்லியமை நெதர்லாந்தில் இருந்து படையினரைக் கொண்டு வந்து அரசனுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபடுமாறு தூண்டினர்.[6] 1688 ஆம் ஆண்டில் இப்புரட்சி இடம்பெற்று வெற்றி பெற்றது. இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து வெளியேறினார்.[7] இங்கிலாந்து நாடாளுமன்றம் 1688 டிசம்பர் 11 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என அறிவித்தது. இசுக்கொட்லாந்து நாடாளுமன்றம் 1689 ஏப்ரல் 11 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவித்தது. யேம்சின் மூத்த மகளும், புரொட்டத்தாந்து மதத்தவருமான இரண்டாம் மேரியையும், அவரது கணவர் ஒரேஞ்சின் வில்லியமும் மன்னர்களாக
அறிவிக்கப்பட்டனர்.[8] இரண்டாம் யேம்சு 1689 இல் அயர்லாந்து வந்திறங்கிய போது ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தார். 1690 சூலையில் இடம்பெற்ற போரில் இவரது படையினர் தோல்வியடைந்தனர்.[9][10] இதனை அடுத்து யேம்சு பிரான்சு திரும்பினார். தனது வாழ்வின் இறுதிப் பகுதியை அவரது மைத்துனரான பிரான்சின் பதினான்காம் லூயியின் ஆதரவில் கழித்தார். யேம்சு 1701 செப்டம்பர் 16 அன்று மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[11]

இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்து நாடாளுமன்றத்துடனான முரண்பாடுகள், மற்றும் ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்கர்களுக்கும், புரட்டத்தாந்து எதிர்ப்பாளிகளுக்கும் சமயச் சுதந்திரம் கிடைக்க ஆதரவளித்தமை போன்றவற்றுக்காக பெரிதும் அறியப்பட்டார்.

.

இரண்டாம் மேரி (Mary II, 30 ஏப்ரல் 1662 – 28 டிசம்பர் 1694) என்பவர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் அரசியாக அவரது கணவர் மூன்றாம் வில்லியத்துடன் இணைந்து 1689 முதல் அவரது இறப்பு வரை ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சி வரலாற்றாளர்களால் வில்லியமும் மேரியும் இணைந்த ஆட்சி என வர்ணிக்கப்படுகிறது. வில்லியமும் மேரியும் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். மாண்புமிகு புரட்சியின் பின்னர் வில்லியம் அரசராகவும், மேரி அரசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் மூலம் மேரி ஆங்கிலேய உரிமைகளின் சட்டவரைவை ஏற்றுக் கொண்டு, தனது உரோமன்-கத்தோலிக்கத் தந்தை இரண்டாம் யேம்சின் உரிமையையும் விட்டுக் கொடுத்தார். 1694 இல் மேரி இறந்ததை அடுத்து வில்லியம் 1702 இல் இறக்கும் வரை தனித்து ஆட்சி செய்தார். வில்லியத்துக்குப் பின்னர் மேரியின் சகோதரி ஆன் முடி சூடினார்.

வில்லியம் இங்கிலாந்தில் இருந்த போது, மேரி தனது பெருமாலான அதிகாரங்களை தனது கணவருக்கு அளித்து விட்டார். ஆனாலும், வில்லியம் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேரி தனித்தே செயல்பட்டார். இதன் மூலம் அவர் ஒரு சக்தி வாய்ந்த, உறுதியான, திறமையான ஆட்சியாளராக தன்னை நிரூபித்துக் கொண்டார்.
ஆரம்ப வாழ்க்கை
மேரி இலண்டனில் சென் யேம்சு அரண்மனையில் 1662 ஏப்ரல் 30 இல் யோர்க் இளவரசருக்கும் (பின்னாளில் இரண்டாம் யேம்சு மன்னருக்கும்), அவரது முதல் மனைவி ஆன் ஹைடுக்கும் மூத்தவராகப் பிறந்தார். மேரியின் மாமா இரண்டாம் சார்லசு மன்னர், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து என்ற மூன்று இராச்சியங்களையும் ஆண்டவர். மேரி ஆங்கிலிக்க வழிபாட்டு முறையைப் பின்பற்றியவர். இவரது மூதாதை ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் நினைவாக மேரி எனப் பெயரிடப்பட்டார்.[1] மேரியின் தாயாருக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர் எனினும், மேரி, மற்றும் அவரது இளைய சகோதரி ஆன் ஆகியோரைத் தவிர்த்து ஏனையோர் சிறு வயதிலேயே இறந்து போயினர். தந்தை இரண்டாம் சார்லசுவிற்கு சட்டபூர்வமாக பிள்ளைகள் இல்லாததால், தந்தைக்குப் பின்னர் மேரியே அடுத்த வாரிசாக இருந்தார்.[2]


திருமணத்திற்கு ஓராண்டுக்கு முன்னர் மேரி
மேரியின் தந்தை ரோமன் கத்தோலிக்கராக 1668 இலும், தாய் எட்டாண்டுகள் பின்னரும் ரோமன் கத்தோலிக்கராக மதம் மாறினர். ஆனாலும் மேரியும், ஆனும் ஆங்கிலிக்கர்களாகவே தொடர்ந்தும் இருந்தனர்.[3] இவர்கள் இருவரும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து ரிச்மண்ட் அரண்மனையில் வளர்ந்து வந்தனர்.[4] 1671 இல் தாயார் இறக்கவே, தந்தை 1673 இல் மேரி என்னும் கத்தோலிக்கரைத் திருமணம் புரிந்தார். இவர் மேரியை விட 4 வயதே மூத்தவர்.[5]

15-வது அகவையில், மேரியை ஒல்லாந்தைச் சேர்ந்த வில்லியமுக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கப்பட்டது. வில்லியம் இரண்டாம் சார்லசு மன்னரின் சகோதரி மேரியின் மகன் ஆவார். இவர் புரட்டஸ்தாந்து மதத்தவர்.[6] ஆரம்பத்தில், இரண்டாம் சார்லசு, இடச்சு ஆட்சியாளருடன் சம்பந்தம் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் மேரியை பிரெஞ்சு இளவரசர் லூயிக்குக் கொடுக்க விரும்பியிருந்தார். லூயி கத்தோலிக்கராக இருந்ததால் அவர் பிரான்சுடன் இணைப்பை ஏற்படுத்த விரும்பியிருந்தார். ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அழுத்தத்தினால் வில்லியமை ஏற்றுக் கொண்டார்.[7] தந்தை யேம்சு வில்லியமை மணக்க மேரியிடம் கூறிய போது, "அவள் அன்று முழுவதும், அடுத்த நாளும் கண்ணீர் சிந்தியபடி இருந்தாள்" என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[8]

திருமணம்

Portrait by Peter Lely, 1677
வில்லியமும் மேரியும் 1677 நவம்பர் 4 இல் திருமனம் புரிந்து கொண்டனர்.[9] திருமணத்தின் இருவரும் டென் ஹாக் சென்றனர்.[10] மேரி பல முறை கருத்தரித்தும் ஒவ்வொரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டது.[11] பிள்ளைகள் இல்லாதது மேரி வாழ்வில் பெரும் சோகத்தைத் தந்தது.[12]

மன்னர் இரண்டாம் சார்ல்சு 1685 பெப்ரவரியில் வாரிசு எவரும் இல்லாமல் இறந்தார். இதனை அடுத்து யோர்க் இளவரசரும் மேரியின் தந்தையுமான இரண்டாம் யேம்சு மன்னரானார்.[13]

மாண்புமிகு புரட்சி
முதன்மைக் கட்டுரை: மாண்புமிகு புரட்சி

மேரி, 1685
இங்கிலாந்தின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரட்டஸ்தாந்து மததைச் சேர்ந்தவர்கள். மன்னர் யேம்சு கத்தோலிக்கர். புரட்டஸ்தாந்து அரசியல்வாதிகள் மேரியின் கணவர் வில்லியமுடன் தொடர்பில் இருந்தனர்.[14] மன்னர் யேம்சு கத்தோலிக்கர்களுக்கும் அதிருப்திவாதிகளுக்கும் மதச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஆங்கில்க்க மதத்தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் அரசியல்வாதிகளிடையே யேம்சுக்கு எதிரான கருத்து வலுப்பட்டது.[15] யேம்சின் மனைவி மேரிக்கு (மொதீனா) 1688 சூனில் மகன் யேம்சு பிரான்சிசு எட்வர்ட்) பிறந்ததை அடுத்து இச்சர்ச்சை மேலும் வலுவடைந்தது.

யேம்சை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மேரியின் கணவன் வில்லியமை நாடு திரும்புமாறு இரகசியமாக நெதர்லாந்துக்கு செய்தி அனுப்பப்பட்டது.[16] மேரியின் சம்மதத்துடன் வில்லியம் இடச்சுப் படைகளுடன் 1688 நவம்பர் 5 இல் இங்கிலாந்து வந்தார்.[17] ஆங்கிலேய இராணுவமும் கடற்படையும் வில்லியமுக்கு சார்பாக சண்டையிட்டன.[18] தோல்வியடைந்த யேம்சை நாட்டை விட்டு வெளியேற வில்லியம் அனுமதித்தார். 1688 டிசம்பர் 23 இல் 11 இல் யேம்சு பிரான்சு வந்ஹு சேர்ந்தார். இறக்கும் வரை பிரான்சிலேயே தங்கியிருந்தார்.[19]

1689 பெப்ரவரி 13 இல், நாடாளுமன்றம் யேம்சை பதவியில் இருந்து அகற்றியது.[20][21] யேம்சின் மகனுக்குப் பதிலாக, யேம்சின் மகள் மேரியையும் வில்லியமையும் இணைந்த அரசர்களாக அறிவித்தது.[20]

மறைவு

ஐந்து கினி நாணயத்தில் வில்லியமும் மேரியும், 1692
1694 இறுதியில், மேரி பெரியம்மை நோயினால் பீடிக்கப்பட்டார்.[22] மேரி 1694 டிசம்பர் 28 காலையில் கென்சிங்டன் அரண்மனையில் காலமானார்.[23] ஆட்சிப் பொறுப்பில் பெரிதும் மேரியையே தங்கியிருந்த வில்லியமுக்கு மேரியின் இறப்பு பேரிழப்பாக இருந்தது.[22] பிரித்தானியாவில் மேரிக்கு பெருந்தொகையானோர் அஞ்சலி செலுத்தினர்.[24] அவரது இறுதி நிகழ்வுகள் மார்ச் 5 இல் வெஸ்ட்மினிஸ்டர் மடத்தில் இடம்பெற்றது.[25]

குறிப்புகள்
 இரண்டாம் மேரி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் 1689 பெப்ரவரி 13 இலும், இசுக்கொட்டிய நாடாளுமன்றத்தால் 1689 ஏப்ரல் 11 இலும் அரசியாக அறிவிக்கப்பட்டார்