Showing posts with label SPEAKER. Show all posts
Showing posts with label SPEAKER. Show all posts

Thursday, 1 October 2020

ANNIE BESANT ,WRITER ,SPEAKER,ACTIVIST , WOMAN ,FREEDOM, BORN, 1847, OCTOBER 1, 1933 ,SEPTEMBER 20,

 

ANNIE BESANT ,WRITER ,SPEAKER,ACTIVIST 

FOR WOMAN FREEDOM BORN 

1847 OCTOBER 1 - 1933 ,SEPTEMBER 20



அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.வாழ்க்கைக் குறிப்பு
ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கணவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார். கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி கணவரிடம் இருந்து 1873 இல் பிரிந்து வாழ முடிவெடுத்தார்.

1880களில் அன்னி பெசண்ட்




கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னி. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். அன்னியின் அரசியல் போக்குகணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இறுதியாக கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாகப் பிரிவினை கிடைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார்[1].

சீர்திருத்தவாதி
"நியூமால் தூசியன் அமைப்பு" என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார் அன்னி பெசண்ட். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வற்புறுத்தி கூட்டங்களில் பேசினார். "லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ஒல்கொட் (இடது), லெட்பீட்டர் ஆகியோருடன் அன்னி பெசண்ட்
பிரம்மஞான சங்கம்
The Secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889 ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். இதனை அடுத்து மார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். 1891 இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார். அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.

1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் அமெரிக்கக் கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது.

1874 லண்டனில் (Colby Road, London SE19) அன்னி பெசண்ட் வாழ்ந்த வீடு
இந்தியாவில் அன்னி பெசண்ட்
இந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்துபல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைவு
அன்னி இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைமைப் பதவி
1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழூவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசண்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.

அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917, ஜூன் 15 ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.

டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். லாகூரில் ஜவகர்லால் நேருவின் தலைமையில் 1929 இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரஸ் சோசலிச சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்க வில்லை. இதனால் அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். 1929 இல் "பொதுநலவாய இந்தியா" என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்[2].

இறுதிக் காலம்
தனது எண்பத்தியோராவது அகவையில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். எண்பத்தேழாம் அகவையில் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் ""ஹப்பி வலி பாடசாலை"யை அமைத்தார்கள்.இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக பெசண்ட் ஹில் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.

Image may contain: 1 person, closeup

Thursday, 22 February 2018

SOLOMON PAPPAIYA , TAMIL SCHOLAR,SPEAKER BORN 1936 FEBRUARY 22






SOLOMON PAPPAIYA ,
TAMIL SCHOLAR,SPEAKER


BORN 1936 FEBRUARY 22








சாலமன் பாப்பையா (பிறப்பு: பிப்ரவரி 22, 1936) மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் ஆவார். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில்[மூலத்தைத் தொகு]

இவர் சங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Solomon Pappaiah (Tamil:சாலமன் பாப்பையா) (born 22 February 1936), also known as Solomon Pappiah and Salomon Pappayah is an Indian scholar and a television icon in Tamil Nadu, India. He is best known for moderating Tamil language debate talk shows, known as 'patti mandrams', which have been airing on Sun TV for quite a long time. He is credited for taking social themes to the masses and has so far moderated over 5,000 debates programmes across the globe
Early life[edit source]
Born as the ninth child in a family of 12 to Mr.A.Sundaram and Mrs.S.Pakkiam, Pappaiah had his job cut out as his father was a mill worker and did not have the wherewithal to financially support his studies. With financial help from his friends, he was able to continue his education. His drawing master at American College Higher Secondary School, Arasu, taught him the skills. Professor Jothi Muthu of American College groomed his love for the language. Pappiah joined Thiagarajar College to pursue Post-Graduation in Tamil and became the first batch of M.A Tamil students. He entered the public stage fray in 1960, when he became a teacher at The American College. Eventually, he created a social awakening in the evolution of patti mandrams. He has also written and directed plays at college.[3]

Speaking style[edit source]
Pappaiah is known for his ‘down to earth' speaking style. His command of Tamil enables him to get complex literary issues across to the common man. This has enabled him to take social themes to the masses and bring about a social awakening in the evolution of patti mandrams in Tamil Nadu and beyond.[4]

Awards and titles[edit source]
He was awarded Kalaimamani by the Government of Tamil Nadu in 2000 [5]
Annamalai University conferred him with "Muthamizh Perarignar" award in 2010 [6]
He is referred to as "Tamil Arignar" and "Iyal Kalai Arignar" [7]
Writing[edit source]
Solomon Pappaiah has penned four books:

Pattukottai Kalyanasundaram: Or Paarvai
Urai Malargal
Urai Kothu
Tirukkural Uraiyudan
Acting[edit source]
Pappaiah also appeared in two of director Shankar's film: Boys and Sivaji: The Boss.

Personal life[edit source]
He is born at sathangudi, Thirumangalam talk, madurai. Pappaiah and his wife Jeyabai reside in Madurai India. They have a son and a daughter [8]

Thursday, 19 October 2017

G. GNANASAMBANDAM , HUMOURIST,SPEAKER,ACTOR





G. GNANASAMBANDAM , HUMOURIST,SPEAKER,ACTOR






கு. ஞானசம்பந்தன். இவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரை நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்வுகள்[மூலத்தைத் தொகு]
பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் பல பங்களிப்புகளைச் செய்துவருகிறார். குறிப்பாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்று சிறப்பித்துவருபவர்.
ஜெயா தொலைக்காட்சியில் தினமும் காலை மலர் நிகழ்வில் “இன்றைய சிந்தனை” எனும் தலைப்பில் ஜூன் 12, 2006 முதல் தொடர்ந்து சிறப்புத் தகவல்களை வழங்கி வருகிறார்.

தமிழ்ச் சொற்பொழிவுகள்[மூலத்தைத் தொகு]
தமிழ்நாடு தவிர தில்லி, மும்பை, கல்கத்தா, திருவனந்தபுரம், ஹைதராபாத், அந்தமான் என இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்களில் சிறப்புச்சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூர், மலேசியாத் தலைநகர் கோலாலம்பூர், அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் அரபு நாடுகளில் சவூதி அரேபியா, குவைத், ஜெத்தா என அயல்நாட்டுத் தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்று வந்துள்ளார்.

நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]

இவர் “விருமாண்டி”, “இதயத் திருடன்”, “கைவந்த கலை”, “ஆயுதம் செய்வோம்”, “சிவா மனசுல சக்தி” "ரஜினி முருகன்" "பசங்க 2" "உத்தம வில்லன் (2015 திரைப்படம்)" "கேரளநாட்டிளம் பெண்களுடனே" "பிரம்மன் (திரைபடம்)" "நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)" "கொம்பன்" "மருது" போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சின்ன வயசிலேயே எனக்குப் புத்தகம் படிக்கிறதில தீராத ஆர்வமுண்டு. மதுரை பக்கத்தில இருக்கும் சோழவந்தான் நான் பிறந்த ஊரு. அங்கே நான் படிச்ச பள்ளிக்கூடத்தில வாரம் ஒருமுறை நூலகத்திலருந்து புத்தகம் எடுத்துப் படிக்கலாம்.

“பழைய புத்தகம் கிழிஞ்சி போயிடும். புதுப் புத்தகம்ன்னா நீங்க கிழிச்சிடுவீங்க”ன்னு சொல்லி நூலகரு தர மாட்டாரு. அதனால அவரு சொல்லாமலேயே தண்ணீர்ப் பிடிச்சு பித்தளைப் பாத்திரத்தில ஊத்துவேன். அப்பத்தான் படிக்கப் புத்தகம் எடுக்க விடுவாரு. எனக்குப் பிடிச்ச புத்தகம் நூலக அடுக்கில எங்கே இருக்குன்னு முதல்லேயே பார்த்து வச்சிக்குவேன். படக்கதைகள், அம்புலிமாமா, துப்பறியும் கதைகள் இதெல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

எங்க ஊர்லயும் சிறிய நூலகம் ஒண்ணு இருந்துச்சு. பள்ளிக்கூடம் லீவுன்னா உடனே நூலகத்துக்குப் போயிடுவேன். நூலக வாசல்ல பதிவேட்டில கையெழுத்துப் போடுறதில அப்படியொரு சந்தோசம் எனக்கு. புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டா கையிலே கிடைக்கிற எல்லாப் புத்தகத்தையும் படிப்பேன். தமிழாசிரியரா இருந்த அப்பாவுக்கு உரைநடை அவ்வளவா பிடிக்காது. ஆனா, நான் உரைநடை, கவிதை, வரலாறு, சமூகம் என எல்லாத்தையும் படிப்பேன்.
எங்க பக்கத்து வீடுகள்ல வாரப் பத்திரிகைகள்ல வர்ற தொடர்கதை, படக் கதைகளை பைண்டிங் செஞ்சு வச்சிருப்பாங்க. அவங்க வீட்டில சொல்ற வேலைகளை நாம செஞ்சா, அந்த பைண்டிங் புத்தகங்களைப் படிக்கத் தருவாங்க. அதுவும் அவுங்க வீட்டு வராந்தாவிலேயே உக்காந்து படிச்சிட்டுக் கொடுத்திடணும். அப்படித்தான் பல நூல்களைப் படிச்சேன்.
சங்க இலக்கிய நூல்கள் தொடங்கி, சமகால இலக்கியம்வரை எல்லாத்தையும் விடாம படிச்சிக்கிட்டுவர்றேன். கல்கி, மாதவையா, புதுமைப்பித்தன், சுஜாதா, ரா.கி.ரங்கராஜன் எழுதிய படைப்புகளையெல்லாம் படிச்சி, பெரிதும் வியந்திருக்கேன்.


எனது பயணம் எப்போதும் புத்தகங்களால நிறைஞ்சிருக்கும். படிக்க கையில் ஒரு புத்தகமும், குடிக்கக் கொஞ்சம் தண்ணீரும் இருந்துவிட்டாலே போதும். நான் பயணிப்பது பேருந்தா, ரயிலா, விமானமா என்று தெரியாது. நான் பயணப் பொழுதில் படிக்கும் புத்தகத்தின் மீதேறி, அது காட்டும் உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பேன்.

மு. அருணாசலம் எழுதிய ‘தமிழ் இசை இலக்கிய வரலாறு’, ‘தமிழ் இசை இலக்கண வரலாறு’ எனும் இரு நூல்களையும் சமீபத்தில் படிச்சேன். தமிழிசை வரலாற்றைப் பற்றிய மிக முக்கியமான நூல்களான இந்த இரு தொகுதிகளும் சுமார் 1,400 பக்கங்களைத் தாண்டும். பல்லாண்டு காலமாகப் பதிப்பிக்கப்படாமலிருந்த இந்த இசை வரலாற்றுப் புத்தகங்களை இப்போ கடவு பதிப்பகம் வெளியிட்டிருக்கு.

சங்க இலக்கியம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையிலான இசை வரலாற்றை 17 அத்தியாயங்கள்ல முதல் தொகுதி பேசுது. இசைத் தமிழின் இலக்கண வரலாற்றை 16 அத்தியாயங்கள்ல பேசுது இரண்டாம் தொகுதி. இத்தொகுதிகளின் பிற்பகுதியில இசைவாணர்களின் வாழ்க்கை வரலாறும் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

என் வீட்டில மிக முக்கியமான தமிழ் நூல்கள் 3,000-க்கும் மேல் சேகரிச்சு வெச்சிருக்கேன். என் மாணவர்கள் அதை ‘அமுதகத்தின் அறிவகம்’ என்பார்கள். யார் வந்தாலும் படிக்கவும், பரிமாறவும் காத்திருக்கின்றன என் நூலகத்தோட புத்தகங்கள்.
- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்