Showing posts with label TOMB. Show all posts
Showing posts with label TOMB. Show all posts

Tuesday, 1 September 2020

TOMB OF JAHANGIR `S COLICS




TOMB OF JAHANGIR `S COLICS

ஜஹாங்கீர்மன்னரின் குடலுக்குத் தனி சமாதி

தந்தையும் பேரரசனுமான அக்பரின் எதிர்ப்பால் காதல் நிறைவேறாமல் போன சலீம், மதுவுக்கு அடிமையானதாகவும், அனார்கலி துயரத்தில் இறந்துபோனதாகவும் நம்பப்படுகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு ஜஹாங்கீர் என்ற பெயரில் சலீம் மன்னரானார்.

அனார்கலியின் இடத்தை நிரப்ப வந்தவள் மெஹருன்னிஸா. பாரசீக அழகி. கணவனை இழந்து தனிமையில் இருந்த மெஹருன்னிஸா பிறகு ஜஹாங்கீருக்கு மனைவியானார். ஜஹாங்கீர் அவருக்கு வைத்த பெயர்தான் நூர்ஜஹான் (உலகத்தின் வெளிச்சம்).

பெயரளவுக்கே ஜஹாங்கீர் மன்னன். உண்மையில் ஆட்சி செய்தது நூர்ஜஹான் தான் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

வேட்டையில் மரணம்

ஜஹாங்கீர் 1627-ன் கோடைகாலத்தில் நூர்ஜஹானுடன் நகர் சென்றார். அங்கே அவர் உடல்நிலை மோசமானது. ஆனாலும், லாகூரை நோக்கி பயணம் தொடங்கியது.

பயணத்தின் இடையே ஒருநாள் ஜஹாங்கீர் மான் வேட்டையாடினார். அப்போது செங்குத்தான பாறையிலிருந்து ஒரு வீரன் கீழே விழுந்து இறந்து போனான். தன்னையும் மரண தேவதை நெருங்கிவிட்டாள் என்னும் அறிகுறியாக இதை மன்னர் எடுத்துக்கொண்டார்.

மன்னரும் மரணத்தின் விளிம்புக்குச் சென்றுவிட்டார். அவரோடு தலைநகர் ஆக்ரா நோக்கி நூர்ஜகான் பயணித்தார். ஜம்முவை அடுத்த செனாப் நதியைத் தாண்டி, அக்னூர் கோட்டையை நெருங்கும்போது மன்னரின் மூச்சு நின்றுபோனது

குடலுக்கு சமாதி

நூர்ஜஹானின் கையில் முகலாயப் பேரரசு முழுமையாக மாறிய கணம் அது. மன்னர் இறந்த ஜம்மு-காஷ்மீரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நட்பான சூழல் கிடையாது. அவற்றின் இடையில், மன்னரின் உடலை, தலைநகர் ஆக்ரா கொண்டு செல்ல வேண்டும். மன்னரின் மூன்றாவது மகன் குர்ரம் (பின்னாளில் ஷாஜஹான்) அடுத்த அரசனாகப் பொறுப்பேற்பதற்குள், வாரிசுப் போர் வெடித்துவிடக் கூடாது. மொகலாய பேரரசுக்கு ஏற்பட்ட இந்தச் சோதனையை ஒரு பெண் புலியாக நூர்ஜஹான் எதிர்கொண்டாள்.

இறந்துபோன மன்னரை உடன் வந்தவர்கள்கூட அறியாதபடி, தோளில் தாங்கி அக்னூர் கோட்டையிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பென் பாசர் கோட்டைக்கு வந்தாள். நெருக்கமானவர்களுடன் ஆலோசனை செய்தாள். மன்னரின் குடலை அப்புறப்படுத்தி அதைக் கோட்டைக்குள் புதைத்தனர். மன்னரின் வயிற்றைச் சுற்றிக் கட்டுப்போட்டு அரச ஆடைகளை அணிவித்து யானை மீது ஏற்றினாள். எப்போதும் போதையில் இருக்கும் மன்னர் இப்போதும் நூர்ஜஹானின் தோளில் சாய்ந்திருக்கிறார் என வீரர்கள் நினைத்துக் கொண்டனர். படையினர் பின்தொடர, மன்னரின் உடல் தவி, பசந்தர், சுக்வால், தர்ணா, உகநல்லா, காலிபாடி எனப் பல நதிகளைக் கடந்தது.

இரு சமாதிகள்

அரசன் இறந்து ஒரு வாரமாகிய பிறகு, அவரது உடல் பதான்கோட்டையை அடைந்தது. ஆக்ரா போக வேண்டுமென்றால் இன்னும் ஒரு வாரமாகும். அரசன் உயிரோடு இல்லை என்று தெரிந்தால் வாரிசுப் போட்டிக்காக எதுவும் நடக்கும். எனவே, மூன்றாவது மகன் குர்ரத்தை ஆக்ராவிலிருந்து லாகூருக்கு உடனடியாக வரச் சொன்னாள். லாகூரில், மன்னரின் படுக்கை அறைக்கு வெளியே நூர்ஜஹான் நின்றுகொண்டாள். “மன்னருக்குத் தற்போது உடல்நலமில்லை. தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், தனக்குப் பின் குர்ரம் அரசனாக வேண்டும் என்று விரும்புகிறார்” என்று தெரிவித்தாள். நிலைமை சீரடைந்ததும் மன்னர் இறந்த செய்தியை அறிவித்தாள். சுமுகமாக குர்ரம் அரசனாக்கப்பட்டார்.

இதனால், லாகூரில் மன்னரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதால் லாகூரில் ஒரு சமாதியும், மன்னனின் குடல் உள்ளிட்ட உறுப்புகள் அடக்கம் செய்யப்பட்ட பாசர் கோட்டையில் ஒரு சமாதியும் அமைக்கப் பட்டன. ஏறக்குறைய 250 மைல் தூர இடைவெளியில் இரு சமாதிகள் இருப்பது ஜஹாங்கீருக்கு மட்டுமே.

தன் கணவனுக்கு அருகில், சிறிய கல்லறை ஒன்றைத் தனக்காகவும் தன் வாழ்நாளிலேயே நூர்ஜஹான் வடிவமைத்துக்கொண்டார். ஆனால், இன்று இருவரின் கல்லறைகளையும் பிரித்தபடி, இடையே ஒரு ரயில் பாதை ஓடுகிறது.


Friday, 15 November 2019

LAILA MAJNU TOMB IN RAJASTAN ??? SURPRISE ...BUT TRUE



LAILA MAJNU TOMB IN RAJASTAN ???
 SURPRISE ...BUT TRUE




Love is known to be an overwhelming, all-consuming, intense passion. But just how intense can love be? No one knows the answer, and examples of such a love are rare. But whenever one talks about the depth of love, the intensity of passion, two names almost immediately come to mind- Laila and Majnu.

The love story of Laila and Majnu is a very famous one and is no less than a legend. Even today, people know them as Laila Majnu; the "and" in between is missing. They were two in flesh, but one in spirit. It is based on the real story of a young man called Qays ibn al-Mullawah from the northern Arabian Peninsula, in the Umayyad era during the 7th century. The love story of "Laila and Majnu" is an eternal one albeit a tragic one.

Laila was a beautiful girl born in a rich family. Being no less than a princess, she was expected to marry a wealthy boy and live in grandeur and splendor. But love is born from the heart; it knows no rules. Laila fell in love with Qays and he too loved her dearly. Qays was a poet and belonged to the same tribe as Laila. He composed splendid love poems and dedicated them to his lady-love, telling in them his love for her and mentioning her name often. Qays' friends knew about his affair with Laila and they often teased and made fun of his love. But such taunts had no effect on Qays. He was deeply in love with Laila and it was her thoughts alone that possesed his mind for all time.

It had been for quite sometime that Qays toyed with the idea of seeking Laila's hand in marriage from her parents. One day, he went up to them and put the big question before them.

But Qays was a poor lad. And when he asked for Laila's hand in marriage, her father promptly refused him as he didn't want her daughter to marry below her status. It would mean a scandal for Laila according to Arab traditions.

As fate would have it, the two lovers were banished from seeing each other. Soon after, Laila's parents married her off to a wealthy man and she went on to live in a big mansion.

When Qays heard of her marriage he was heartbroken. He fled the tribe camp and wandered in the surrounding desert. His family eventually gave up on his return and left food for him in the wilderrness. He could sometimes be seen reciting poetry to himself or writing Laila's name in the sand with a stick. Day and night, he pined for her.

Laila was no better. Seperated from Qays, she was shattered in mind, body and spirit. Not long afterwards, in 688 AD, she moved to Iraq with her husband, where she fell ill and died eventually.

When Qays' friends came to know about Laila's death, they went looking for him all over to give him the news. But they could not find him.

Not much later, their search for him came to an end. Qays was found dead in the wilderness near Laila's grave. On a rock near the grave, he had carved three verses of poetry, which are the last three verses ascribed to him.

Qays went mad for his love; for this reason he came to be called "Majnu", or "Majnun Layla", which means "Driven mad by Layla".

Such a love is hard to find today. So if ever you love someone, try to love like these two did. Even today, lovers swear by their name. It is their love affair that has made Laila and Majnu immortal in the accounts of great love stories.



The graves of Layla and Majnun,
where people come to seek blessings

Laila Majnu Ki Mazar (in Hindi लैला मजनू की मज़ार and in Punjabi ਲੈਲਾ ਮਜਨੂ ਦੀ ਮਜ਼ਾਰ) or the mausoleum of Layla and Majnun is situated at Binjaur, a village near Anupgarh in the Sri Gangannagar district of Rajasthan. According to the local legend, the famous lovers Laila and Majnu died here. A fair, held annually in the month of June, is attended by hundreds of couples and newlyweds


Mazar and its background
Many people associate this Mazar with the lovers Laila and Majnun. According to them, Laila-Qais were from Sindh and came to this place escaping from the clutches of Laila's parents and her brother, who were against love of Laila-Majnun. But, there was a huge sand dune during that time and they could not cross the desert because they were thirsty and finally Laila's parents followed them to only find them both dead in the desert. Thus, this place became a symbol of love and people come here to seek blessings of Laila and Majnu. According to the local people, on festivals, couples come to the graves of Laila and Majnu to seek their blessings for lifelong togetherness.

Some people, such as Rani Raisikh, one of the early caretakers of this Mazar, the mausoleum is not related to the mythical Laila-Majnu but are the two graves of a great teacher and his devoted student. The mausoleum is a symbol of mutual respect and love between that teacher and his student.


Development of the Mausoleum
Laila Majnu Mazar
Inside tomb people are offering prayers

Tomb of Laila Majnun where two graves are located
The mausoleum is part of old graveyard of Muslims and Hindus. In the beginning, these graves were under a shed cover. According to a local legend, miracles made people devotees of the grave and people began to visit this place. Now a small room (tomb) has been built here.

Annual fair
Laila Majnu Mazar
Inside tomb people are offering prayers
Hundreds of people visit this place for a fair, in the month of June (14 June). Many couples get lined up here to seek blessings from legendary Laila-Majnun. The visitors a lay a chadar (cloth-sheet) on their holy shrines and offer prayers.

During the fair, prasaad and Langar (free meal) is offered to the visitors by devotees. At night, devotional song's programmes are also organised by devotees.

Tomb of Laila Majnun
where two graves are located

Before the Kargil war, this place was also open for Pakistani visitors. Later, the border was closed for them

Saturday, 19 October 2019

ADITYA CHOLAN 871-907 TOMB NEAR KALAHASTHI







ADITYA CHOLAN  871-907 
TOMB NEAR KALAHASTHI

ஆதித்த சோழன் பள்ளிப்படை க்கான பட முடிவு


ஒவ்வொரு கல்லிலும் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு உபானம் (அதிஷ்டானம்) முதல் பிரஸ்தாரம் (entablature) வரை அடித்தளத்தை வலிவாக்கி  விமானச் சுவர்களின் கருங்கற்களை பிரித்து அடுக்கிக் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குமுதப்படையில் நான்கு புறமும் காணப்பட்ட அரிய கல்வெட்டுகளின்மேல் சிமென்ட் காரை அப்பியிருந்தது. அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் சன்னதி, பிற்காலத்தில் இக்கோவிலுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அம்பாள் சன்னதியில் தினசரி பூசைகள் இடற்பாடின்றி நடந்து வந்தன.

பொக்கிசம்பாளம்

ஸ்ரீ காளஹஸ்தி நகருக்கு அருகே 15.6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொக்கிசம்பாளம். இவ்வூரிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி நகருக்குப் பேரூந்து மற்றும் ஷேர் ஆட்டோக்கள் சென்று வருகின்றன. இவ்வூர் இராயசீமா பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 13° 42′ 16.9956” N அட்சரேகை 79° 39′ 23.4932” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 68 மீ. ஆகும். இவ்வூரின் மக்கள் தொகை 837 (ஆண்கள் 613 பெண்கள் 224) ஆகும்.

ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில்

கிழக்குப் பார்த்தவாறு அமைந்த ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில் வளாகம் பொக்கசம்பாளம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இக்கோவிலில் எந்தவிதமான சிக்கலான வடிவமைப்புகள் எதுவும் இல்லை. இக்கோவில் சோழ வழித்தோன்றல்களால் விரிவாக்கப்படவுமில்லை. கட்டடக்கலைக் கூறுகள் சோழர்களின் கலைப்பாணியைப் பிரதிபலிக்கின்றன. விசாலமான இக்கோவில் வளாகம் செவ்வக வடிவச் சுற்று மதிற்சுவர் சூழ அகன்ற பிரகாரங்களுடன் காணப்படுகிறது. மூன்று நிலைகளுடன் கூடிய இராஜகோபுரம், பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் கச்சிதமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  எளிய கவர்ச்சிமிக்க சுதை உருவங்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன. இங்கு சோழர்பாணி துவாரபாலர்களைக் காண இயலவில்லை. நுணுக்கமாக செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கத்தை நோக்கியவாறு அமர்த்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலவரின் விமானம் அளவில் சிறியதாகவும் சதுரவடிவிலும் அமைந்து கருவறையையும், அர்த்தமண்டபத்தையும் பெற்றுள்ளது. உபானம் முதல் பிரஸ்தாரம் வரையிலான உறுப்புகள் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. சிகரம் உள்ளிட்ட மேற்கட்டுமானம்  செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையில் கட்டப்பட்டு மீண்டும் கருங்கல் சிகரமாக மாற்றப்பட்டுள்ளது. அன்று நான் கண்ட விமானத்தில் சிகரம் இல்லை. சீரமைப்பு பணி நடைபெற்றதால் சிகரம் புதிதாக எழுப்பப்படவிருந்தது. இரண்டு மீட்டர் அளவுள்ள சதுரக் கருவறையில் சிவலிங்கம் சுமார் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையை ஒட்டி அர்த்தமண்டபம் அமைந்துள்ளது.

விமானத்தின் அடித்தளம் எளிய பாதபந்த அதிஷ்டானம் பெற்றுள்ளது. உபபீடம், உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், கோட்டங்களின் கீழே சிலம்புக் குமுதம் ஆகிய கூறுகளைப் பெற்றுள்ளது.  சிலம்புக் குமுதத்திற்கு மேல் உள்ள வரியில் புடைப்புடன் சிங்கமுக உருவ வரிசை காணப்படுகிறது.

வெளிச்சுவர் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டு அரைத்தூண்களால் வரம்பு கட்டப்பட்டுள்ளது. மூலைகளில் கர்ண பத்தி என்னும் கர்ண பத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் சாலபத்தி என்னும் சாலபத்திரங்களில் ஒன்று அல்லது அதற்கு  மேற்பட்ட சாலகோட்டங்கள் சிறிது பிதுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் இந்தச் சாலகோட்டங்கள் தெய்வ உருவங்கள் நிறுவும் அளவிற்குப் போதிய ஆழம் இல்லை. தற்போதைய சாலகோட்ட தெய்வங்கள் பிற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம். அன்று சாலகோட்டங்களில் தெய்வங்களைக் காண முடியவில்லை.

ஸ்ரீ காமாட்சி அம்மன் மூலவர் சன்னதிக்கு இடப்புறம் தனிக்கருவரையில் கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறார்கள். நவக்கிரக மேடை ஒரு புறம் அமைந்துள்ளது. இந்த அம்மன் மற்றும் நவக்கிரக சன்னதிகள்  பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருக்கலாம்.

முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871-907)

விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871-907) தன் தகப்பன் காலத்திலேயே இளவரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டு, திருப்புறம்பியப் போரில் வெற்றிகளைக் குவித்தவர்.   அபராஜிதவர்ம பல்லவனைத் தோற்கடித்துத் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றினார். அதனால் அவர் “தொண்டை நாடு பாவிய சோழன்” என்று பட்டம் பூண்டார். கொங்குமண்டலத்தையும் இவர் கைப்பற்றினார். அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்குப் பொன் வேய்ந்தார். இவருடைய ஆட்சியில் சோழர்களின் ஆட்சி பரப்பு விரிந்தது. இவருக்கு இளங்கோப்பிச்சி, திருபுவனமாதேவி என இரு மனைவியர்களும், முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 – 955), கன்னர தேவன் (இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் (கிபி 939 – 967) என இரண்டு புதல்வர்களும் இருந்தனர்.

இவர் சைவசமயத்தை சார்ந்திருந்தார். இவருடைய காலத்தில் பல சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. காவிரியாறு தொடங்கும் சஹ்ய மலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவன் கோவில்களைக் கட்டியதாக சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு குறிப்பிடுகிறது. இவரது காலத்தில் தான் பல செங்கற் கோவில்கள் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டன. .ஸ்ரீரங்கபட்டிணம் அரங்கநாதர் கோவிலைக் கட்டுவதற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றிக் கல்வெட்டுகள் பேசுகின்றன. திருவாரூர் கோவிலுக்கு அதிக மானியங்களை வழங்கியுள்ளார். திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது. இவர் சைவ சமயத்தவர் என்றாலும் மிகுந்த மதச் சகிப்புத் தன்மை கொண்டிருந்தார். மக்கள் அச்சமின்றி தாங்கள் விரும்பிய கடவுளை வழிபட்டார்கள்.

இலகுலீச பாசுபதம்

கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம் செல்வாக்குப்பெற்றது. காயாவரோஹன அல்லது காயாரோகணம் என்ற பெயரில் நாகபட்டினம், கும்பகோணம், காஞ்சிபுரம் போன்ற தலங்களில் பாசபத நெறியில் தோன்றிய கோவில்கள் காரோணம் என்று பெயர் பெற்றன. தமிழகத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட, பாசுபத சமயப்பிரிவைச் சேர்ந்த, மடங்களான காளாமுக மடம், கபாலிக மடம், வீரசைவ மடம், கோளகி மடம் ஆகிய மடங்கள் இருந்துள்ளமை பற்றித் தமிழகத்தில் லகுலீச பாசுபதம் என்னும் நூல் விவரிக்கிறது. பாசுபத மடத்தலைவர்களின் இயற்பெயர்களுடன் பட்டர், பட்டாரகர் போன்ற ஈற்றொட்டுகளை இணைத்தும் ஈசான ஆச்சார்யா, சைவ மாமுனி போன்ற பொதுப்பெயர்களாலும்  அழைக்கப்பட்டுள்ளனர். சைவர்கள் குரு ஒருவரிடம் தீட்சை பெறவேண்டும் என்ற சைவக் கோட்பாடுகளுக்கேற்ப சோழ மன்னர்கள் அரசவையில் வட நாட்டு சைவ அந்தணர்களான ஈசான பண்டிதர், சர்வசிவ பண்டிதர், பவன பிடாரன் போன்றோர் அரச குருக்களாக விளங்கினார்கள். இந்த ராஜகுருக்கள் ராடதேசம், கெளடதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். ஈசான பண்டிதரது மகன் ஈச்வர சிவர் என்ற சோமேஸ்வரர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ராஜகுருவாக விளங்கினார்.

திருவொற்றியூர், இலகுலீச பாசுபதத்தின் மையமாகத் திகழ்ந்துள்ளது. சர்வசிவ பண்டிதரின் முன்னிலையில் திருவொற்றியூர் கோயில் கற்றளியாகக் கட்டப் பட்டது. வாகிஸ்வர பண்டிதர் மற்றும் சதுராண பண்டிதர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இக்கோவில் மடம் திகழ்ந்துள்ளது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருச்சி திருவானைக்காவில் பாசுபத கிரஹஸ்த மடம், இயங்கியுள்ளது.

பள்ளிப்படைக் கோவில்கள்

பாசுபத மகாவிரதிகள் மற்றும் பண்டிதர்களின் கட்டுப்பாட்டில் சோழர்களின் கோவில்கள், குறிப்பாக பள்ளிப்படைக் கோவில்கள், இருந்துள்ளன. மாகேஸ்வர பெருந்தரிசனத்தார் என்பவர் பாசுபத சைவ மார்க்கத்தை சார்ந்த மாவிரதிகளாவர். இறந்துபோன சோழ அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோவில்களில் பூசைக்கும் நிருவாகத்துக்கும் மகாவிரதிகளான பாசுபத மதகுருக்கள் அமர்த்தப்பட்டனர். இவர்களே இந்தப் பள்ளிப்படைகளையும், நிர்வாகித்தனர். பள்ளிப்படைக் கோவில்கள் பற்றிப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறியுள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

“ஆதித்தீஸ்வரா தொண்டமாநாட்டில், முதலாம் பரந்தகனால் அவரது தந்தைக்குப் பள்ளிப்படையாக எழுப்பப்பட்டது; அரிஞ்சிகை ஈஸ்வரா மேல்பாடியில் முதலாம் இராஜராஜனால், ஆற்றூரில் மரணமடைந்த அரிஞ்சய சோழனை நினைவூட்டுவதற்காகக் கட்டப்பட்டது; இராமநாதன் கோயிலில் உள்ள பஞ்சவன்மாதேவீஸ்வரா முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இவையெல்லாம் கவனத்தைக் கவர்கிற எடுத்துக்காட்டுகளாகும்.” ஆதாரம்: பேராசிரியர். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள்

பள்ளிப்படை (sepulchral shrine) என்றால் சோழ அரசனின் அஸ்தியின் மேல் எழுப்பப்படும் சிவாலயம் என்று பார்த்தோம்.  வழக்கமாகத் துறவிகள், ஞானிகள், மற்றும் முனிவர்களுக்கு,  அந்திமக் கிரியைகளுக்குப்பின் இவர்களுடைய அஸ்தியின் மேல் ஈமக் (funerary) கோவில்களை அமைப்பதுண்டு. ஏறத்தாழ 16 பள்ளிப்படைக் கோவில்கள் சுட்டிக் காட்டப்பட்டாலும், மூன்றே பள்ளிப்படைக் கோவிகளில் மட்டுமே, இக்கோவில்களின்  சுவர் அல்லது அடித்தளத்தில் காணப்படும் கல்வெட்டுகளின் அடிப்படையில், பள்ளிப்படைக் கோவில்கள்தான் என்று அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள்.

ஆதித்தீஸ்வரா கோவில் இராஜகேசரி முதலாம் ஆதித்த சோழனின் அஸ்தியின் மீது முதலாம் பாரந்தக சோழன் தொண்டமாநாட்டில் எடுப்பித்த பள்ளிப்படைக் கோவிலாகும். இது போல மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம் என்னும் பள்ளிப்படைக் கோவில் ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்த முதலாம் பாரந்தக சோழனின் மகனான அரிஞ்சய சோழனுக்கு (கி.பி. 956-957) முதலாம் இராஜராஜ சோழனால் எழுப்பப்பட்டது. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைக் கோவில் இராமநாதன் கோவிலில் (பட்டீஸ்வரத்தில்) மாமன்னர் முதலாம் இராஜராஜனின் ஐந்தாவது மனைவியான பஞ்சவன்மதேவிக்கு முதலாம் இராஜேந்திர சோழனால் எழுப்பப்பட்டது. லகுலிச பாசுபத மதப்பிரிவினர் சோழர்கள் காலத்தில் (10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில்) மயானத்தில் பள்ளிப்படைக் கோவிலை அமைத்துள்ளார்கள்.

கம்பவர்மன் காலத்துப் பள்ளிப்படை ஒன்று உண்டு. அஃது இராசாதித்தன் என்ற தலைவன் தன் தந்தையான பிருதிவி கங்கராயன் என்பவன் இறந்த இடத்தில் எழுப்பிய சமாதி கொண்ட கோவிலாகும். பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டின் பகுதியை ஆட்சி செய்த வீரபாண்டியன் தனது சகோதரன் சுந்தரபாண்டியன் நினைவாக எழுப்பிய பள்ளிபடைக் கோவில் சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்ற பெயரில் பள்ளிமடம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திருப்புறம்பியப் போரில் மரணமடைந்த கங்க மன்னன் பிரதிவீபதியின நினைவைப் போற்றும் விதமாக சோழப் பேரரசன் முதலாம் பராந்தகன் காலத்தில் திருப்புறம்பியத்தில் பள்ளிப்படை கோவிலொன்று எழுப்பப்பட்டது. கோனேரிராஜபுரத்தில் கண்டராதித்த சோழரின் பிராட்டி செம்பியன் மகாதேவியார் தனது கணவரின் பெயரில் திருக்கற்றளி ஒன்றை எடுப்பிய செய்தியை இவ்வூரிலுள்ள சாசனம் ஒன்று பதிவு செய்துள்ளது.

மீதியுள்ள 13 பள்ளிபடைக் கோவில்களை (1) அடையாளம் காணமுடியவில்லை; அல்லது (2) அறிஞர்கள் மத்தியில் பள்ளிப்படையை அடையாளம் காண்பது குறித்த ஆதாரங்கள் பற்றி ஒத்த கருத்துக்கள் நிலவவில்லை. சோழர்களின் பள்ளிப்படையில் உள்ள இக்கல்வெட்டுகள் சோழ அரசன் அல்லது அரசியைத் துதித்து இவர்களின் மரணத்தை நினைவுகூருகின்றன. இறந்த அரசன் அல்லது அரசிக்கு பள்ளிப்படைக் கோவில் எடுப்பிக்கும் சடங்கு மற்றும் இக்கோவில்களை பெருமைப்படுத்துதல் அல்லது வழிபடுதல் போன்ற சடங்குகள் சோழர்களின் காலத்திற்குப்பின் புழக்கத்தில் இல்லை. பள்ளிப்படை பற்றி இந்து கோவில் ஆகமங்கள் எந்தவிதமான விதிகளையும்  நிர்ணயிக்கவில்லை.

பள்ளிப்படைக்கோயில்கள் மக்களால் போற்றப்படவில்லை. சில அழிந்தே போயிருக்கவேண்டும். பள்ளிப்படைக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் எண்ணிக்கையும் குறைவே.

கல்வெட்டு

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஸ்ரீ காளஹஸ்தி, தொண்டைமண்டலம் (ஜெயம்கொண்ட சோழமண்டலம்), திருவேங்கட கோட்டம், பெரும்பாணப்பாடி நாடு ஆற்றூர் வருவாய் பிரிவில் அடங்கிய  ஊராக இருந்து வந்துள்ளது. இவ்வூர் வடபகுதி ஜெயம்கொண்ட சோழமண்டலத்தின் கஜானாவாகவும் திகழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே இவ்வூருக்கு பொக்கிஷம்பாளையம் என்ற பெயர் வந்ததாகத் தெரிகிறது.  வசூலிக்கப்பட்ட வரியை வாங்கிச் செல்வதற்கு இங்கு வந்த முதலாம் ஆதித்த சோழன் காய்ச்சல் கண்டு கி.பி. 907 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இறந்துவிட்டான். ஆதித்த சோழனின்  நினைவாக அவனது அஸ்தியின் மீது முதலாம் பராந்தக சோழனால் எழுப்பப்பட்டதுதான் இந்த கோதண்டராமேஸ்வரம் என்னும் ஆதித்தேஸ்வரம் என்ற பள்ளிப்படைக் கோவிலாகும்.

கோண்டராமேஸ்வர சுவாமி கோவில் மூலவர் விமானத்தின் திரிபட்ட குமுதப்படையில் முதலாம் பராந்தக சோழனின் விரிவான 34 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.  (South Indian Inscriptions Vol. VIII, No. 529 (A.R. No. 230 of 1903).

ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொணட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு முப்பத்துனாலாவது திருவெங்கடகொட்டத்து ஆற்றூர்னாட்டு தொண்டைமான் பெராற்றூர் ஸபையோமு[ம்] நகரத்தொமும் பள்ளிப்படை வாமிஸ்வரத்து  மடாரர் ஸ்ரீ கோதண்டராமிஸ்வரமாகிய ஆதிதெஸ்வரக்ரஹத்து ஆள்வாருக்கு (மூலவர்) புரட்டாசித்திங்கள் திருக்கெட்டை (கேட்டை) முதல் எதி ரெழு நாளுந் திருநக்ஷத்திரமாகிய திருச்சதையத்த்தன் றுந் திரு உத்ஸவஞ்  செய்வதற்கும் போஜனத்துக்கும் பள்ளிபடை வாமிஸ்வரத்து மடாரர்  தொண்டைமான்  பெராற்றூர் ஸபையோமு[ம்] நகரத்தொமும் வழி           இய____ஞ் செய்வதாக எங்கள் வழி வைத்த பொன் கட்டு வெட்டிச் சூடு[க்]க[டு]த்து திப்பொக்கி ஊர்க்கற்செ[ம்]மை முதல் நூற்றைங்  கழஞ்சும் வாமிஸ்வரவணிக னென்னும் பூண்டும் __னால் நிறைத்தளவு தூநெல் நாலாயிரக் காடியும் இன்நெல் நாலாயிரக்காடிக்கும் ஆ[ண்]டுவரை ஐங்காற் பலிசையால் வந்த நெல் ஆயிரக்காடி யிந்நெல் ஆயிரக்காடிக்குந் திருவிழாவெடுக்கும் ஏழுநாளும் நிசதிப்படி ஸ்ரீமஹாவ்ரதிகளுள்ளிட்ட ஆறுசமயத்துத்தவஸ்விகளும்  ஆக இருநூற்றுவரும் ஸ்மரணர் முன்நூற்றுவருமாக  அஞ்னூற்றுவரும் பக்தராயின பலசமை[ய] அஞ்னூற்று வருமாக ஆயிரவர்க்கும் பத்தெ[ட்டுக்கு]த்தல் மெய்யாலரிசி நாடுரியாக நிசத மரிசி  முப்பத்தெழு காடி ஐந்தூம்பாக  ஏழுநாளும் ஊட்டி[ச்] செலவுபெறுமரிசி  இருநூற் றறுபத்திருகாடி ஐந்தூம்[பி]னால் ஐந்திரண்டு வண்ண நெல்லாக்கி அறுநூற் றைம்பத்தாறு காடி இருதூம் பிருநாழியும் திருவிழாப்

2  போதுந் தே[வர்க்கு] திருவமிர்தரிசி நசி[தி] . . . ழியாத எழுநாளைக்கு இருகாடி அறு றூம்பு நாழியுந் தீர்த்தத்து நாளால் திருக்காளத்தி ஆள்வார்க்குப் பெருந் திருவமிர்த்துக்கு கரிக்குந் தயிர்க்கும் [நெ]ய்க்கும் உள்ளிட்டு நாற்காடி ஒரு [தூ]ம்பி[ரு] நாழியும் சாலைக்குக் கறிக்கு நிசதி இருகாடியாக நெற் பதினாறு காடியும் மோர்க்கு நெல் நிசதி பதிநைங்காடியாக எழுபத்தெழு காடியும் உப்புக்கு நிசதி  நெல்லு ஒரு காடியாக ஏழுகாடியும் புளிப்பழவடை எ . க்கு நெல்லு ஏழுகாடியும் இலை இடுவானுக்கு நெல்லு ஏழுகாடியும் நீராட்டுவானுக்கு நெல்லு பதின்காடியும் கலமிடுங் குசவனுக்கு நெல் முப்பதின் காடியும் __________ கறிக்கு கொள்ளு நிசதி இருகாடிக்கு நெல் முக்காடியாக ஏழுநாளைக்கும் நெல்லு இருபத்தொருகாடியும்  பூவிடு மாலைக்காரனுக்கு ஏழு காடியும் இப்படி பந்மாகேஸ்வரக் கண்காணியொடு நின்[றி]வ்வழிவு  கணக்கறுத்து குடு[க்க] கடவ இவ்வூர் மாதேஸ்வரனுக்கு நெல்லு  இருபதின்காடியும் சாலைக்களந்த வரிசியிலெய் இவனுக்கு நிசத மரிசி நானாழியும் திருச்சுண்ணத்துக்கு மஞ்சளுக்கு நெல்லு இருகாடி ஒன்பதின் றூம்பு முன்னாழியும் ஆக நெல் எண்ணூற்றெழுபத்துமுக்காடி நீக்கி நின்ற நெல் நூற் றிருபத்தேழு காடியால்ப் பொன் முக்கழஞ்செ மூன்று மஞ்சாடியுங் குன்றியும் பொன் னூற்றைங் கழஞ்சினாலும் ஆண்டுவரை பலிசையால் வந்த பொன் பதின்முக் கழஞ்செ அரைக்காலும் ஆகப்பொன் பதினாறு கழஞ்செ ஆறுமஞ்சாடியில் நிசதிப்படி உண்ணும் ஆயிரவர்க்கும் ஏழுநாளைக்கும் உண்ண . . . . ண்காடி இருதூம்பு ஆழாக்கு [இ]ந்திரவிழாவினுக்குமாக விளக்[கினுக்கு] [நெ]ய் மேல்படி நாளைக்கு [நாற்காடி] எழுதூம்ப முன்னாழி முழாகை அழாக்குமாக நெய் பதின்முக்காடிக்கு . . . . .றுகழ . . . .டு மாணிகள் பதின்ம  . . . . ழஞ்செ காலும் பலகாயத்துக்கு வெறுங்காய் பதினாயிரத்துக்கு கழஞ்சும் வெறுவி-

3. லைப் பற்று  முன்னூற்றுக்கு கழஞ்சரையுந் கண் . . . . . . [ரு] கழஞ்சும் அரங்கழிவு சொன்றுடனுன்றிசக்குந் தச்சனுக்கு . . . . . . ஸபையார் கூத்தடினார்க்கும் பாடினார்க்குமாக பூஜைனைக்கு முக்கழஞ் . . . . . .ன் பதினாறு கழ . . . . . னகவுமிப்பொன்னு . . . . . . . . வத் செலுத்துவொமாகவு மிவ்வழி விப்பரிக் வழுவாமெய் இவ்வாதித்தீஸ்வரக்ரகத் திருக்கும் மஹாவ்ரதிகளும் காவிரிபாக்கத்து திருபன்றீஸ்வரத்துப் பிரதிவிடங்கக் கணப்பெருமக்களும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் இம்மூன்று திறத்தாரும் எங்களைத் தாங்கள் வெண்டிக் கொ[ச்செ]யது இயன்றும் செலுத்துவிக்கப்பெறுவீராகவும் மிப்படி இத்தரும __________ வத் வைத்தமையி லிப்படி வழுவின நான்று அன்றான்கொவினுக்குநூற்றுகழஞ்சு பொன் தண்டமும்பட்டு இத்ய __ மி[ப்ப]டி  வழுவாமெ செலுத்துவோமாகவு மித்திருவிழாச்  சுட்டிப் பணிசெய்மக்களுக்குச் சொற்றால் வந்த அழிவெல்லா மிவ்வேழாயிரவரி __மெய் செலவுபெறுவதாகவு மிப்பரிசொட்டிச் செலுத்துவோமாகவுப் பள்ளிப்படையுடைய வாமீஸ்வரபண்டிதமடாரர் க்கு ஒப்புக்குடுத்தொம் தொண்டைமான்பெராற்றூர் ஸபையோமும் நகரத்தொமும் இத்தர்மத்துக்கு சுஹித[ம] நினைத்தார்  __ மையிடை குமரி இடை எழுநூற்றுக் காததிலுஞ் செய்தார் செ[ய்]த  பாவத்துப் படுவார்  இத்தர்மத்தை வழுவாமெ(ச்) செலுத்தி ரக்ஷித்தார் ________ பெறுவார்.

கழஞ்சு = ஒரு கழஞ்சு 5.4 கிராம்; இரண்டு குன்றிமணி என்பது ஒரு மஞ்சாடி. 10 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு ஆகும். கழஞ்சு என்பது தற்போதைய எடையில் 5.4 கிராம் ஆக கணக்கிடப்பட்டது.
காடி = தானியத்தின் முகத்தலளவுள் ஒன்று. நெல் முதலியவற்றை அளக்கப் பயன்பட்டது.
பலிசை = வட்டி: கோயில் கருவூலத்தில் குறிப்பிட்ட பணம் செலுத்தி, அதில் வரும் பொலிசை (வட்டி) யிலிருந்து அரிசி, நெய், தயிர், உப்பு, கறி(காய்), இன்னும் பல பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தி கொள்வதாகக் கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர்.
ஊரோம், சபையோம் நகரத்தோம் என்ற சொற்கள் பொதுவாக ஊர் நிர்வாகத்தைக் குறிப்பிடுகிறது.
மகாசபை, பெருங்குறி மகாசபை ஆகிய சபைகள் பிரமதேயம் எனப்படும் அந்தணக் குடியிருப்புகளை நிர்வாகித்தனர்.
ஊரோம் என்ற சொல் வேளாளர் குடியிருக்கும் ஊர்களை நிர்வாகித்தனர். நகரத்தோம் என்ற சொல் வணிகர்கள் குடியிருக்கும் நகரங்களை நிர்வாகித்தனர்.
நிசதி = தவறாது ஒவ்வொரு நாளும்
ஸ்ரீமஹாவ்ரதி=மகாவிரத சமயத்தைச்சார்ந்த சைவத்துறவியர்
ஸ்மரணர் = துறவியர்
ஆறுசமயத்துத்தவஸ்வி = சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளாகும். பண்டைய நூல்கள் கூறும் அகச் சமயம் ஆறு: சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள்.
பந்மாகேஸ்வரக் கண்காணி = (பள்ளிப்படைக்) கோவிலில் நிவந்தங்களைக் கண்காணிக்கும் நிர்வாகிகள்.
தன்மம் = தருமம். தன்மத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதாக கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பன்மாகேசுவரர் கண்காணித்து காப்பாற்றுவதாக  உறுதியளிக்கிறார்கள்.
காவிரிபாக்கத்து திருபன்றீஸ்வரத்துப் பிரதிவிடங்கக் கணப்பெருமக்கள் = காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்கள்.

ஆதித்த சோழன் பிறந்த நட்சத்திரம் சதயம் ஆகும். எனவே சதய நட்சதிரத்து நாளிலும் ஒரு விழா எடுக்க வகை செய்யப்பட்டிருந்தது. கி.பி. 940 ஆம் ஆண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதித்தன் மறைந்த கேட்டை (18 ஆவது நட்சத்திரம் முதல்) ஆதித்தன் பிறந்த சதயம் (24 ஆவது நட்சத்திரம் வரை) ஏழு நாட்கள். ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தீஸ்வரத்து மூலவருக்கு புரட்டாசி மாதம் (தமிழ்) கேட்டை நட்சத்திரம் தொடங்கி  சதய நட்சத்திரம் வரை திருவிழா எடுப்பதற்கும் ஏழு நாட்களுக்கு உணவு அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியை முதலாம் பராந்தகனின் கல்வெட்டு பதிவு செய்துள்ளது. இக்கல்வெட்டு இந்த ஏழு நாள் விழாவை, தேவர்களின் தலைவனும், இடி மற்றும் மழையின் கடவுளுமான, இந்திரனுக்கு அர்ப்பணிக்குமாறு அறிவுறுத்துகிறது.

விளம்பி ஆண்டு புரட்டாசி மாதம் 1 ஆம் தேதி (17 – 9 – 2018) அன்று கேட்டை நட்சத்திர தினம் ஆகும். அதாவது 1078 ஆம் ஆண்டு நினைவு தினம். இன்று புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி (23 – 9 – 2018) அன்று சதய நட்சத்திர தினம் ஆகும். முதலாம் ஆதித்தனின் பிறந்தநாள் ஆகும்.

மகாவிரதி வாகிஸ்வர பட்டாரர் என்பவர் மேற்பர்வையிலிருந்த இக்கோவிலில் இந்திரவிழா எடுப்பதற்கான செலவினங்களுக்காக 105 கழஞ்சு (ஒரு கழஞ்சு 5.4 கிராம்) பொன்னையும் 4000 காடி (தூணி) நெல்லையும் வைப்பு நிதியாக (Deposit fund) கோவில் கருவூலத்தில் செலுத்தி அதில் வரும் பொலிசைக்காக (வட்டி) 1000 காடி நெல்லை கோவிலுக்கு அளிக்க வேண்டும்  என்பது ஏற்பாடு. இவ்வாறு வட்டியாகப் பெறப்பட்ட நெல்லிலிருந்து ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பது இக்கல்வெட்டு நடைமுறைப்படுத்திய செயல்முறை.

உணவளிக்கத் தகுதியான ஆயிரம்பேர் யார் யார்? பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர் ஆயிரம் பேரில் 500 பேர் அனைத்து சமயங்களைச் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். ஸ்ரீமஹாவ்ரதிகளுள்ளிட்ட ஆறுசமயத்துத்தவஸ்விகளும் மகாவிரதிகள் உள்ளிட்ட ஆறு சமயத்துத் தபஸ்விகள் 200 பேர் இருக்க வேண்டும். சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளாகும். பண்டைய நூல்கள் கூறும் அகச் சமயம் ஆறு: சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஸ்மரணர் முன்நூற்றுவருமாக துறவு பூண்டஅந்தணர்கள் 300 பேர். இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல் சமணம்.

இந்திர விழாவிற்காக போலிசையாகப் பெறப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் ஆகியோருக்கு நெல் அளந்து கொடுத்தனர். இவர்கள் மட்டுமின்றி இக்கோவிலில் இருந்த பாடசாலைக்குக் கூட ஒவ்வொரு ஆண்டும் நெல் வழங்கப்பட்டது. இக்கல்வெட்டு காட்டும் மிக முக்கியமான செய்தி இக்கோவிலில் ஒரு அரங்கம் இருந்துள்ளது. இந்திரவிழாவை முன்னிட்டு கூத்து, நாட்டியங்கள் மற்றும் நாடகங்கள் இவ்வரங்கில் நடத்தப்பட்டன. இங்கு கூத்து நிகழ்த்தியோருக்கும் பாடகர்களுக்கும் பலிசையிலிருந்து நெல் வழங்கப்பட்டது. அரங்கத்தில் ஏற்பட்ட பழுதினை வேண்டும்போது சரிசெய்வதற்கு நியமிக்கப்பட்ட தச்சனுக்கும் நெல் வழங்கப்பட்டது.

இந்தத் தன்மத்தை பள்ளிப்படைக் கோவிலில் இருந்த மகாவிரதிகளும், பந்மாகேஸ்வரக் கண்காணியும், காவிரிப்பாக்கத்து கோவில் பெருமக்களும் காத்துத் தருமாறு கல்வெட்டு அறிவுறுத்துகிறது.

இந்திர விழா

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பித்துப் போற்றும் வண்ணம் தமிழகத்தில் எடுக்கப்பட்ட விழாவாகும். இந்திர வழிபாடும் இந்திரனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் சங்க காலத்திலேயே இருந்துள்ளதை சங்க இலக்கியமான ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.”தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன்” என்ற சோழ மன்னன் இந்திர விழாவைத் தொடங்கினான் என்றும் இந்தக் காதல் விழா தான் காமன் விழா என்றும் குறிப்பிடுவர். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. மணிமேகலை விழாவறை காதையில் இந்திர விழா தொடங்கிய முறையை அறிந்து கொள்ள முடிகிறது. புகார் நகரில் இந்திர விழாவினை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் தொடங்கி ,இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடும் மரபு இருந்துள்ளது. மதுரையிலும் இந்திரவிழா, வில்விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. “கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்” (சிலப்பதிகாரம். மதுரை: ஊர்காண்: 110 – 111.) இந்தக் கல்வெட்டில் ஆதித்தனின் நினைவைப் போற்றும் வண்ணம், ஆதித்தீசுரத்து ஆழ்வாருக்கு புரட்டாசி மாதம் கேட்டையில் தொடங்கி சதயம் வரையிலான ஏழு நாட்களுக்கு இந்திர விழாவாகக் கொண்டாட அறிவுறுத்தியது   சற்று வியப்பாக உள்ளது.

Friday, 31 August 2018

THE TOMBS OF JAHANGIR IN LAHORE -THE STORY







THE TOMBS OF JAHANGIR 
IN LAHORE -THE STORY

ஜஹாங்கீர்மன்னரின் குடலுக்குத் தனி சமாதி

தந்தையும் பேரரசனுமான அக்பரின் எதிர்ப்பால் காதல் நிறைவேறாமல் போன சலீம், மதுவுக்கு அடிமையானதாகவும், அனார்கலி துயரத்தில் இறந்துபோனதாகவும் நம்பப்படுகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு ஜஹாங்கீர் என்ற பெயரில் சலீம் மன்னரானார்.

அனார்கலியின் இடத்தை நிரப்ப வந்தவள் மெஹருன்னிஸா. பாரசீக அழகி. கணவனை இழந்து தனிமையில் இருந்த மெஹருன்னிஸா பிறகு ஜஹாங்கீருக்கு மனைவியானார். ஜஹாங்கீர் அவருக்கு வைத்த பெயர்தான் நூர்ஜஹான் (உலகத்தின் வெளிச்சம்).

பெயரளவுக்கே ஜஹாங்கீர் மன்னன். உண்மையில் ஆட்சி செய்தது நூர்ஜஹான் தான் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

வேட்டையில் மரணம்

ஜஹாங்கீர் 1627-ன் கோடைகாலத்தில் நூர்ஜஹானுடன் நகர் சென்றார். அங்கே அவர் உடல்நிலை மோசமானது. ஆனாலும், லாகூரை நோக்கி பயணம் தொடங்கியது.

பயணத்தின் இடையே ஒருநாள் ஜஹாங்கீர் மான் வேட்டையாடினார். அப்போது செங்குத்தான பாறையிலிருந்து ஒரு வீரன் கீழே விழுந்து இறந்து போனான். தன்னையும் மரண தேவதை நெருங்கிவிட்டாள் என்னும் அறிகுறியாக இதை மன்னர் எடுத்துக்கொண்டார்.

மன்னரும் மரணத்தின் விளிம்புக்குச் சென்றுவிட்டார். அவரோடு தலைநகர் ஆக்ரா நோக்கி நூர்ஜகான் பயணித்தார். ஜம்முவை அடுத்த செனாப் நதியைத் தாண்டி, அக்னூர் கோட்டையை நெருங்கும்போது மன்னரின் மூச்சு நின்றுபோனது

குடலுக்கு சமாதி

நூர்ஜஹானின் கையில் முகலாயப் பேரரசு முழுமையாக மாறிய கணம் அது. மன்னர் இறந்த ஜம்மு-காஷ்மீரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நட்பான சூழல் கிடையாது. அவற்றின் இடையில், மன்னரின் உடலை, தலைநகர் ஆக்ரா கொண்டு செல்ல வேண்டும். மன்னரின் மூன்றாவது மகன் குர்ரம் (பின்னாளில் ஷாஜஹான்) அடுத்த அரசனாகப் பொறுப்பேற்பதற்குள், வாரிசுப் போர் வெடித்துவிடக் கூடாது. மொகலாய பேரரசுக்கு ஏற்பட்ட இந்தச் சோதனையை ஒரு பெண் புலியாக நூர்ஜஹான் எதிர்கொண்டாள்.

இறந்துபோன மன்னரை உடன் வந்தவர்கள்கூட அறியாதபடி, தோளில் தாங்கி அக்னூர் கோட்டையிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பென் பாசர் கோட்டைக்கு வந்தாள். நெருக்கமானவர்களுடன் ஆலோசனை செய்தாள். மன்னரின் குடலை அப்புறப்படுத்தி அதைக் கோட்டைக்குள் புதைத்தனர். மன்னரின் வயிற்றைச் சுற்றிக் கட்டுப்போட்டு அரச ஆடைகளை அணிவித்து யானை மீது ஏற்றினாள். எப்போதும் போதையில் இருக்கும் மன்னர் இப்போதும் நூர்ஜஹானின் தோளில் சாய்ந்திருக்கிறார் என வீரர்கள் நினைத்துக் கொண்டனர். படையினர் பின்தொடர, மன்னரின் உடல் தவி, பசந்தர், சுக்வால், தர்ணா, உகநல்லா, காலிபாடி எனப் பல நதிகளைக் கடந்தது.

இரு சமாதிகள்

அரசன் இறந்து ஒரு வாரமாகிய பிறகு, அவரது உடல் பதான்கோட்டையை அடைந்தது. ஆக்ரா போக வேண்டுமென்றால் இன்னும் ஒரு வாரமாகும். அரசன் உயிரோடு இல்லை என்று தெரிந்தால் வாரிசுப் போட்டிக்காக எதுவும் நடக்கும். எனவே, மூன்றாவது மகன் குர்ரத்தை ஆக்ராவிலிருந்து லாகூருக்கு உடனடியாக வரச் சொன்னாள். லாகூரில், மன்னரின் படுக்கை அறைக்கு வெளியே நூர்ஜஹான் நின்றுகொண்டாள். “மன்னருக்குத் தற்போது உடல்நலமில்லை. தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், தனக்குப் பின் குர்ரம் அரசனாக வேண்டும் என்று விரும்புகிறார்” என்று தெரிவித்தாள். நிலைமை சீரடைந்ததும் மன்னர் இறந்த செய்தியை அறிவித்தாள். சுமுகமாக குர்ரம் அரசனாக்கப்பட்டார்.

இதனால், லாகூரில் மன்னரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதால் லாகூரில் ஒரு சமாதியும், மன்னனின் குடல் உள்ளிட்ட உறுப்புகள் அடக்கம் செய்யப்பட்ட பாசர் கோட்டையில் ஒரு சமாதியும் அமைக்கப் பட்டன. ஏறக்குறைய 250 மைல் தூர இடைவெளியில் இரு சமாதிகள் இருப்பது ஜஹாங்கீருக்கு மட்டுமே.

தன் கணவனுக்கு அருகில், சிறிய கல்லறை ஒன்றைத் தனக்காகவும் தன் வாழ்நாளிலேயே நூர்ஜஹான் வடிவமைத்துக்கொண்டார். ஆனால், இன்று இருவரின் கல்லறைகளையும் பிரித்தபடி, இடையே ஒரு ரயில் பாதை ஓடுகிறது.

- கட்டுரையாளர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி







The Tomb of Jahangir (Urdu: مقبرہُ جہانگیر‬‎, Template:Lang-farsi) is a 17th century mausoleum built for the Mughal Emperor Jahangir. The mausoleum dates from 1637, and is located in Shahdara Bagh in Lahore, Punjab, Pakistan, along the banks of the Ravi River.[1] The site is famous for its interiors that are extensively embellished with frescoes and marble, and its exterior that is richly decorated with pietra dura. The tomb, along with the adjacent Akbari Sarai and the Tomb of Asif Khan, are part of an ensemble currently on the tentative list for UNESCO World Heritage status.[

Location
The tomb is located in Shahdara Bagh, northwest of the Walled City of Lahore. The tomb is located across the River Ravi from Lahore, in what was a rural area known for its numerous pleasure gardens.[3] The tomb in located in Nur Jahan's pleasure garden, the Dilkusha Garden, that had been laid out in 1557.[4] The Tomb of Asif Khan, built in 1645, and the Akbari Sarai, built in 1637, are located immediately west of Jahangir's tomb complex, and the three form an ensemble oriented on a east-west axis. The last of the Shahdara Bagh monuments, the tomb of Jahangir's wife Nur Jahan is located slight southwest of Asif Khan's tomb.

Background

Much of the mausoleum's interior is adorned with Mughal-era frescoes.

The tomb was built for Emperor Jahangir, who ruled the Mughal Empire from 1605 to 1627 C.E.. The emperor died in the foothills of Kashmir near the town of Rajauri on 28 October 1627. A funeral procession transferred his body from Kashmir and arrived in Lahore on Friday, 12 November 1627.[5] The Dilkusha Garden in which he was buried was a "favourite spot" of Jahangir and his wife Nur Jahan, when they lived in Lahore.[3][6] His son, the new Mughal Emperor Shah Jahan, ordered that a "mausoleum befitting an Emperor" should be built in his father's honour to inter his remains.[3]

History


The use of minarets reflects a renewed interest in Timurid architecture during the reign of Jahangir.[7]


Though contemporary historians attribute construction of the tomb to Jahangir's son Shah Jahan, the tomb may have been the result of Nur Jahan's vision.[8] Taking inspiration from her father's burial place, she is said to have designed the mausoleum in 1627,[8] and possibly helped fund it.[3] Construction started in 1627,[3] requiring ten years for completion,[9] and cost Rs 10 lakh.[8]

Repair works were undertaken at the tomb in 1814 according to Sikh court records.[10] The tomb complex, however, was also desecrated under Sikh rule when they were pillaged by the army of Ranjit Singh,[11][12] with building materials used for decoration of the Golden Temple in Amritsar.[13][14] The pillaged grounds were then converted for use as a private residence for an officer in the army of Ranjit Singh, Señor Oms, who was also known as Musa Sahib.[15][16] Ranjit Singh further desecrated the mausoleum once more when he ordered that Musa Sahib be buried on the tomb's grounds after dying from cholera in 1828.[16] By 1880, a rumour had begun circulating which alleged that the tomb once was topped by a dome or second storey that was stolen by Ranjit Singh's army,[12] though no evidence has been found to suggest that a dome or second story ever existed at the tomb.[10]

The Shahdara ensemble of monuments suffered further under British rule, when a railway line was built between the tombs of Asif Khan and Nur Jahan.[11] The site was then repaired by the British between 1889-1890.[17]

Flooding from the nearby River Ravi threatened or damaged the site in 1867, 1947, 1950, 1954, 1955, 1957, 1958, 1959, 1962, 1966, 1973, 1976, 1988, and 2010.[11] The site sustained water damage during flooding in 1988 that covered much of the site in 10 feet of water for 5 days.[11]

Architecture

The walls of the tomb are inlaid with carved marble.
The tomb was constructed in a Mughal style influenced by Safavid-style architecture from Persia,[18] which may have been introduced into the Mughal Court by Nur Jahan[18] - who was of Persian origin. The mausoleum is laid out as a takhtgah - or a mausoleum built upon a podium which serves as a takht, or "throne."[8]

Exterior

Arcades surround the tomb and feature ghalib kari, or ribs inlaid into arched surfaces on the arch's curved areas

In keeping with Sunni religious tradition, Jahangir's great grandfather Babur chose to be buried in a tomb open to the sky at the Gardens of Babur. Jahangir's tomb broke with this tradition by including a roof. In order to forge a compromise with Sunni tradition, Jahangir expressly forbade the construction of a dome over his tomb,[10] and so the roof is simple and free from architectural embellishments which later featured prominently at the Taj Mahal.[19] The mausoleum's façade is embellished with red sandstone inlaid with marble motifs.

The square-shaped mausoleum is a 22 foot tall, single-story plinth with arcades lining all four sides of the structure. Vaulted bays along the perimeter of the tomb reflect Timurid architectural styles from Central Asia.[20] The mausoleum's façade of red sandstone is inlaid with motifs forged of white marble.[10]

From the building rise four octagonal ornamental minarets projecting from each corner of the building, decorated with geometric inlaid stone. The use of minarets, absent from early Mughal commissions, reflects a renewed interest in Timurid architecture from Central Asia during the reign of Jahangir.[7] The minarets are divided into three sections, with the tomb forming the base, upon which the body of the minaret rests, called by white marble cupolas. The minarets rise to a height of 100 feet (30m).

Interior

The burial chamber contains the Emperor's cenotaph.

The mausoleum building is divided into a series of vaulted compartments which are richly embellished with Mughal buon fresco. Carved jali screens admit light in various patterns facing toward Mecca.

Cenotaph
At the centre of the mausoleum is an octagonal chamber lined with carved marble in which the remains of the Mughal Emperor rest in a crypt below a cenotaph. The interior of the tomb features a white-marble cenotaph inlaid with pietra dura in vegetal patterns,[10] as well as the 99 Names of Allah,[10] a common theme in Islamic mysticism.

Gardens

The tomb's gardens are laid out in the Persian Chahar Bagh style.

The gardens surrounding the tomb are vast, and laid out in the Persian Chahar Bagh, or Paradise garden.[21] The garden is divided into four squares by paved walkways (khiyabans) and two bisecting central water channels which are designed to reflect the four rivers that flow in jannat, the Islamic concept of paradise. Each of the four square is further divided into smaller squares with pathways, creating into 16 squares in all. The garden forms a quadrangle measuring approximately 500 metres on each side.[19]

Layout
The mausoleum is set in a large quadrangle with gates facing each of the cardinal directions. Entry to the quadrangle is via the western edge through the Akbari Sarai - a gate featuring a small mosque. To the immediate west of the Akbari Sarai is the Tomb of Asif Khan - Jahangir's brother-in-law.

Conservation

The site is protected by the Federal Antiquities Act 1975,[11] though stipulations of the law are frequently neglected,[11] resulting in damage to the site and surrounding area. The act forbids construction within 200 feet of the site,[11] though private homes have been built that are located a few metres from the boundary walls of the site.[11] The site was inscribed on the tentative list for UNESCO World Heritage Site status in 1993.[22]

Monday, 23 October 2017

Genghis Khan ,in search of his tomb



 Genghis Khan ,in search of his tomb





செங்கிஸ் கானின் பொக்கிஷம்!

அது மட்டும் கிடைத்துவிட்டால், உலகின் பல வரலாற்று நூல்களை மாற்றி எழுத வேண்டியிருக்கும். ஏராளமான பேர் 800 ஆண்டுகளாக அதைத் தேடுகிறார்கள்... ஆனால், கிடைக்கவில்லை. வரலாற்றில் சாகாவரம் பெற்ற மர்மங்களில் ஒன்றாக அதைச் சொல்கிறார்கள். 

‘செங்கிஸ் கானின் கல்லறை எங்கே இருக்கிறது?’

‘செங்கிஸ் கானின் கல்லறை எங்கே இருக்கிறது?’ என்ற தேடல்தான் அது. வெறுமனே வரலாற்றை மாற்றுவதற்கு மட்டும்தான் இந்தத் தேடலா? இல்லை. செங்கிஸ் கான் தன் வாழ்நாள் முழுக்க நடத்திய போர்களில் கைப்பற்றிய அத்தனை பொக்கிஷங்களும் இந்தக் கல்லறையில்தான் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் இன்றைய மதிப்பை வைத்து, பல தேசங்களையே விலைக்கு வாங்கலாம். அதை அடையவே இந்த வேட்டை!

ஆசியாவின் அழிவு மையம் 

‘செங்கிஸ் கான்’... 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து, மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர், ஒரு கட்டத்தில் நிகரற்ற பேரரசனாக உருவெடுத்தார். பிரமாண்ட மாட்டு வண்டியில் - நகரும் கூடாரத்தில் - அமர்ந்து செங்கிஸ் கான் நடுநாயகமாக வர... வெடிமருந்துகளை வீசி எதிரிக் கோட்டைகளை நிலைகுலையச் செய்து வீழ்த்தும் குதிரைப்படையினர் அவரைச் சூழ்ந்திருப்பார்கள். ‘செங்கிஸ் கான் படையெடுத்து வருகிறார்’ என்ற ஒற்றை வரித் தகவலே பல நாடுகளை வீழ்த்தியது; பல மன்னர்களை மணிமுடி துறக்கச் செய்தது; பல படைகளை ஓடச் செய்தது. அவர் உருவாக்கிய மங்கோலியப் பேரரசு அளவுக்கு, இந்தப் பூமியின் பெருநிலப் பரப்பை வேறு எந்த இனமும் ஆண்டது இல்லை.

மரண ரகசியம் 

அவரது போர்முறைகள் போலவே, மரணமும் மர்மங்களின் கலவை. அவர் எப்படி இறந்தார் என்பதிலிருந்தே மர்மம் தொடங்குகிறது. 1227-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி செங்கிஸ் கான் இறந்தார். அப்போது அவருக்கு வயது 65 என்று சிலர் சொல்கிறார்கள்; முதுமையின் தள்ளாட்டத்தில், 72 வயதில் இறந்தார் என்றும் சொல்கிறார்கள். எந்த வயதில் இறந்தார் என்பது போலவே, அவர் எப்படி இறந்தார் என்பதும் மர்மம். சீனாவின் மேற்கு ஜியா பேரரசோடு போர் புரிந்து வெற்றி பெற்றபோது, போரில் ஏற்பட்ட காயத்தால், யின்சுவான் என்ற இடத்தில் தன் குதிரையிலிருந்து விழுந்து இறந்தார் என்கிறார்கள். ‘மங்கோலியர்களின் ரகசிய வரலாறு’ எனும் பழைமையான நூல், ‘வேட்டைக்குச் சென்றபோது ஏற்பட்ட காயத்தால் செங்கிஸ் கான் இறந்தார்’ என்கிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற வெனிஸ் யாத்ரீகரான மார்க்கோ போலோ, ‘கடைசிப் போரின்போது செங்கிஸ் கான் உடலில் துளைத்த அம்பு ஒன்றினால் ஏற்பட்ட காயம் ஆறவே இல்லை. அதில் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார்’ என எழுதியிருக்கிறார். ‘கடைசிப் போரில் மேற்கு ஜியா நாட்டின் இளவரசியை செங்கிஸ் கான் அபகரித்து வந்தார். ஓர் அந்தரங்கமான தருணத்தில் அவள் குறுவாளால் செங்கிஸ் கானைக் குத்திக்கொன்றாள்’ என 17-ம் நூற்றாண்டு வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்கிறது. மின்னல் தாக்கி இறந்ததாகவும் சொல்கிறார்கள்.

செங்கிஸ் கான் வென்ற பொக்கிஷங்கள் 

உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாக இருந்த செங்கிஸ் கான், இறந்த பிறகு தன் கல்லறை யார் கண்ணிலும்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதற்காகத் தன் மகன்களிடமும் நெருக்கமான தளபதிகளிடமும் சத்தியம் வாங்கியிருந்தார். ‘‘என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள், மரணத்துக்குப் பிறகான பயணத்தில் என்னை வழிநடத்தட்டும்’’ என்று கேட்டிருந்தார். பூனைகளை மட்டுமல்ல... செங்கிஸ் கான் வென்ற பொக்கிஷங்கள் பலவற்றையும் கல்லறையில் புதைக்க முடிவெடுத்தார்கள். அதோடு, அந்தக் கல்லறையை படு ரகசியமாக வைத்திருக்கவும் முடிவெடுத்தார்கள்.
ஒரு படுபயங்கர பயணம் தொடங்கியது. 

பிணத்தை கண்டவர்கள் அனைவரும் கொலை 


செங்கிஸ் கானின் சடலத்தை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆயிரம் வீரர்களும் ஏராளமான அடிமைகளும் கிளம்பினார்கள். ‘பேரரசரின் சடலத்தைப் புதைப்பதற்காக எடுத்துச் செல்கிறார்கள்’ என்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, தங்கள் விதி என்ன ஆகும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘இந்த வழியாகத்தான் செங்கிஸ் கானின் சடலத்தை எடுத்துப் போனார்கள்’ என்று சொல்வதற்குக்கூட ஆள் இருக்கக் கூடாது என முடிவெடுத்து இருந்ததால், அவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். தற்செயலாக அந்தப் பாதையில் எதிர்ப்பட்டவர்களின் கதியும் இதுதான். மங்கோலியாவில் மக்கள் நெருக்கம் மிகக் குறைவு. ஓர் ஊரைத் தாண்டினால் அடுத்த கிராமம் மிக நீண்ட பயணத்துக்குப் பிறகே வரும். அதனால், சில நூறு பேரை மட்டுமே கொன்றுவிட்டு, செங்கிஸ் கானின் சடலப் பயணம் தனது இலக்கை அடைந்தது. 

கல்லறைகளின் புதைவிடம் 

‘கல்லறைக்கான பள்ளத்தை அடிமைகள் தோண்டி முடித்தனர். பேரரசரின் அடக்கம் முடிந்ததும், அத்தனை அடிமைகளும் கொல்லப்பட்டார்கள். பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட அந்தக் கல்லறையை ரகசியமாக்கிவிட்டு, அதன் பின்னர் ஆயிரம் வீரர்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர்’ என மங்கோலிய வரலாறு கூறுகிறது. புதிதாக மண்ணைத் தோண்டிய தடயம் தெரியக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் ஆயிரம் குதிரைகளை ஓடவிட்டு, எல்லா இடங்களையும் ஒரே மாதிரி சமப்படுத்திக் குழப்பியதாக ஒரு தகவல். இன்னொரு தகவல் இன்னும் பயங்கர மானது. ‘ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியைச் சில மணி நேரங்கள் வேறு திசையில் திருப்பிவிட்டு, அந்த நதியின் பழைய பாதையில் கல்லறையை அமைத்து முடித்து, நதியை பழையபடி தன் பாதையில் ஓடவிட்டார்கள்’ என்பதே அந்தத் தகவல்.

செங்கிஸ் கானின் கல்லறை கிடைக்கவில்லை

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் மங்கோலியாவின் ஜியாங்கு மன்னர்களுக்கு அமைக்கப்பட்ட கல்லறைகள் விநோதமானவை. தரைக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் ஒரு குட்டி அரண்மனைபோல இதை அமைப்பார்கள். நடுநாயகமாக மன்னரின் உடல் வைக்கப்படும். அவர் அணிந்திருந்த நகைகள், பயன்படுத்திய பொருள்கள், பயணித்த தேர் எனச் சகலமும் அந்தக் கல்லறையில் வைக்கப்படும். அதன் பிறகு அதை மூடிவிட்டு, அந்தக் கல்லறை அமைந்த இடத்தில் தரைக்கு மேலே சதுரக் கற்களை வரிசையாக நட்டு வைப்பார்கள். இது அடையாளத்துக்காக. செங்கிஸ் கான் கல்லறையில் இந்த நடைமுறைகளை எல்லாம் செய்துவிட்டு, தரைக்கு வெளியில் சதுரக் கற்களை மட்டும் வைக்கவில்லை. அதனால்தான், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜியாங்கு மன்னர்களின் கல்லறைகள் எல்லாம் கிடைத்துள்ளன; செங்கிஸ் கானின் கல்லறை கிடைக்கவில்லை.

தேடுதல் வேட்டை 

அமெரிக்க தங்க வியாபாரியான மௌரி கிராவிட்ஸ், 40 ஆண்டுகளாக செங்கிஸ் கானின் கல்லறையைத் தேடும் முயற்சியில் இருந்தவர். ‘‘ஒவ்வொரு நாட்டையும் வென்ற பிறகு, அங்கிருந்து பெரிய மாட்டு வண்டிகளில் தங்கமும் விலையுயர்ந்த கல் நகைகளுமாக சூறையாடி வருவது செங்கிஸ் கானின் வழக்கம். அவர் வைத்திருந்த உடைவாளின் கைப்பிடிகூட தங்கத்தால் ஆனது. இப்படி ஏராளமான ஆயுதங்கள் செங்கிஸ் கானின் அரண்மனையில் இருந்தன. பல நாடுகளிலிருந்து வண்டி வண்டி யாகக் கொண்டுவந்த எந்தப் பொக்கிஷமும் இப்போது மங்கோலியாவில் இல்லை. இங்கிருந்து வெளியில் போகவும் இல்லை. அப்படியானால், அவை எங்கே? அந்தக் கல்லறையில்தான் புதைக் கப்பட்டன’’ என்கிறார் கிராவிட்ஸ்.
இந்தப் பொக்கிஷங்களுக்காகப் புதையல் வேட் டைக்காரர்கள் ஒருபுறம் தேட, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு புறம் தேடினர். நீண்ட மணல் பரப்புகளும், நிறைய மலைகளுமாக இருக்கும் மங்கோலியாவில் இந்தக் கல்லறையைத் தேடுவது என்பது, கிட்டத்தட்ட வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போன்றது.

‘பேசக் கூடாத பெரிய இடம்

செங்கிஸ் கானின் கல்லறை, கென்டி மலைப் பகுதியில் இருப்பதாக மங்கோலியாவில் உலவும் செவிவழிச் செய்திகள் சொல்கின்றன. இளம் வயதில் போரில் தோற்று தலைமறைவாக இருந்தபோது செங்கிஸ் கான் இங்குதான் இருந்திருக்கிறார். ‘‘என் இறுதிக்காலத்தில் இங்கு தான் வருவேன்’’ என்று சொல்லியிருந்தாராம். அதனால், இங்கு ஒரு கும்பல் தேடி வருகிறது. செங்கிஸ் கான் பிறந்த இடம், புர்கா கால்டுன் மலைப் பகுதி. இங்கு ஓனோன் நதி ஓடுகிறது. இங்கு ஓரிடத்துக்கு ‘இக் கோரிக்’ என்று பெயர். மங்கோலிய மொழி வார்த்தையான இதற்கு ‘பேசக் கூடாத பெரிய இடம்’ என அர்த்தம். ‘‘இங்குதான் நதிக்கு அடியில் கல்லறை உள்ளது. இதைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதால்தான் இந்த இடத்துக்கு இந்தப் பெயர் வந்தது’’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், ‘‘ரகசியமான இடத்துக்கு யாராவது இப்படிப் பெயர் வைப்பார்களா?’’ என்று கிண்டல் செய் பவர்களும் உண்டு. 


செங்கிஸ் கானின் அரண்மனை


ஜப்பானிய தொல்பொருள் நிபுணர்களும் மங்கோலிய தொல்பொருள் துறையும் இணைந்து இங்கு அகழ்வாராய்ச்சி நடத்தி, கடந்த 2004-ம் ஆண்டு செங்கிஸ் கானின் அரண்மனையைக் கண்டறிந்தார்கள். ‘அரண்மனை இங்கே இருக்கிறது என்றால், பக்கத்தில்தான் கல்லறை இருக்கும்’ என்று தேடினார்கள். ஆனால், மங்கோலியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இங்கு ரகசியத் தேடலில் ஒரு பெரிய கும்பலே இறங்கியுள்ளது.
அமெரிக்கரான மௌரி கிராவிட்ஸ் தேடியது, ஓக்லோக்சின் கெரெம் என்ற இடத்தில். ஆனால், அவருக்கு விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தேடுதல் குழுவில் இருந்தவர்கள் சிலர், திடீரென பாம்பு கடித்துச் செத்துப் போனார்கள். மலைப்பாதைகளில் சில வாகனங்கள் தானாகவே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின. மங்கோலிய எதிர்க்கட்சிகள் இந்தக் குழுவின் தேடலுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்களை வெளியேறச் சொல்லிவிட்டது அரசு. ‘செங்கிஸ் கானின் கல்லறையை இரண்டு மைல் நீளமுள்ள ஒரு சுவர் பாதுகாக்கிறது. இந்தச் சுவர் கற்களால் கட்டப்படவில்லை. முழுக்க முழுக்க பாம்புகள் பிணைந்திருக்கும் சுவர் இது. நெருங்கும் யாரையும் இந்தப் பாம்புகள் உயிரோடு விட்டு வைக்காது’ என அப்போது ஒரு ‘பயங்கரக் கதை’ பரவியது. 

செங்கிஸ்கான் வழிபாடு 

இப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆல்பர்ட் லின் யு-மின் என்பவர், செயற்கைக்கோள் படங்கள், தரையைத் துளைத்துப் பார்க்கும் ரேடார் பதிவுகள் ஆகியற்றின் மூலம் இந்தக் கல்லறையைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
மங்கோலியர்கள், மரணம் குறித்துப் பேசுவதைப் பாவச் செயலாகவே கருதுகிறார்கள். இறந்தவர்களைப் புதைத்த இடத்தைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அவர்களின் நம்பிக்கை. அதிலும் செங்கிஸ் கான் குறித்து அவர்களுக்குப் பெருமிதம் உள்ளது. தங்கள் இனத்தின் வீரத்தை உலகத்துக்கு உணர்த்திய தலைவராக அவரைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் செங்கிஸ் கானின் ஓவியத்தை வைத்து வழிபடுகிறார்கள். சாக்லேட் முதல் ரூபாய் நோட்டு வரை எல்லாவற்றிலும் செங்கிஸ் கானின் உருவம் இருக்கும். மங்கோலிய மக்கள் எல்லோருமே தங்களை செங்கிஸ் கானின் குழந்தைகளாக நினைக்கிறார்கள். ‘செங்கிஸ் கானின் கல்லறையை யாராவது கண்டுபிடித்துத் திறந்துவிட்டால், அதுவே இந்த உலகத்தின் கடைசி நாள்’ என நம்புகிறார்கள். 

ஆசியா ஐரோப்பா இணைப்பு 

கடந்த 1941-ம் ஆண்டு மங்கோலிய அரசர் டாமர்லேன் என்பவரின் கல்லறையை சோவியத் ரஷ்யாவின் தொல்பொருள் ஆய்வாளர்கள் திறந்தபோது, இரண்டாம் உலகப் போர் மூண்டது. நாஜி படைகளின் தாக்குதலால் ரஷ்யா பெரும் சேதத்தைச் சந்தித்தது. அதைத்தான் முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள். மிருகத்தனமான தாக்குதல்கள் நடத்தி பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த மன்னனாக வரலாறு அவரை அடையாளப்படுத்துகிறது. எனினும், இந்த வரலாற்றை வேறுவிதமாகச் சொல்பவர்களும் உண்டு. 

‘‘அலெக்ஸாண்டரையும், சீஸரையும், நெப்போலியனையும் மாவீரர்களாக மேற்கத்திய உலகம் சித்திரிக்கிறது. அவர்களும் போர்களில் கொல்லத்தான் செய்தார்கள். அவர்களைவிட அதிக நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் செங்கிஸ் கான். ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்து, முதன்முதலில் இந்த உலகை ஒருங்கிணைத்தவர் அவர். இரண்டு கண்டங்களுக்கும் வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றமும் அதனால்தான் நிகழ்ந்தது. மதச் சுதந்திரம் மக்களுக்குக் கிடைத்தது. நிலப்பிரபுகளின் அதிகாரத்தை ஒழித்தார். 

சீனாவிலிருந்து காகிதம் ஐரோப்பாவுக்குப் போவது அவரால்தான் சாத்தியமானது. காகித கரன்சி, தபால் முறையை எல்லாம் அறிமுகம் செய்தார். அவர் உலகை ஆக்கிரமித்தவர் அல்ல, நாகரிகப்படுத்தியவர்’’ என்கிறார்கள் மங்கோலியர்கள். அதனால்தான் உலகமே செங்கிஸ் கானின் கல்லறையைத் தேடினாலும், அதைத் தொந்தரவு செய்யாமல் பாதுகாக்க வேண்டும் என மங்கோலிய மக்கள் நினைக்கிறார்கள்.