Showing posts with label 1869. Show all posts
Showing posts with label 1869. Show all posts

Thursday, 13 May 2021

V.S.SRINIVASA SASTRI ,FREEDOM FIGHTER BORN 1869 SEPTEMBER 22-1946 APRIL 17

 V.S.SRINIVASA SASTRI ,FREEDOM FIGHTER BORN

1869 SEPTEMBER 22-1946 APRIL 17




வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி (V. S. Srinivasa Sastri, 22 செப்டெம்பர் 1869 – 17 ஏப்ரல் 1946). இவர் இந்திய அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும் மற்றும் சொற்பொழிவுகளுக்காகவும் மிகவும் பாராட்டப்பட்டார்.[1] பிரிட்டனில் 1916 – 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட பெருமைக்குரிய சாஸ்திரிக்கு , "ரைட் ஹானரபில்" என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் வழங்கினர்.தமிழர்கள் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் சாஸ்திரி. 



வரலாறு

இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமைகளில் ஒருவர். காந்தி பிறப்பதற்குப் பத்து நாட்கள் முன்பு பிறந்தவர் சாஸ்திரி. பிற்காலத்தில் காந்தியார் இவரை அண்ணன் என்று அழைத்த வரலாறும் உண்டு.


ஒரு பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாஸ்திரி, பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர். காந்தி இந்தியா வருவதற்கு முன்பே ரானடே, கோகலே போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடியவர் சாஸ்திரி. நாடு பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்று அயராது பாடுபட்ட அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர்.


வெள்ளி நாக்கு சாஸ்திரி





பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இவரை ‘சில்வர் டங் சாஸ்திரி’ (வெள்ளி நாக்கு சாஸ்திரி) என்று அழைத்தனர். சாஸ்திரியின் ஆங்கிலப் புலமை பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் வியந்து பேசியிருக்கிறார். 1935 முதல் 1940 வரை ஐந்து ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். அப்போது தமிழகத்தின் முதல் இந்தி எதிர்ப்பின்போது மாணவர்களை லகுவாகக் கையாண்டவர் சாஸ்திரி. இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்.


முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில் சாஸ்திரியார் இந்தியப் பிரதிநிதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்காவின் பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். திருவல்லிக்கேணி அர்பன் கோ-ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் டியுசிஎஸ் அமைப்பு 1904-ல் இவரது முயற்சியால்தான் உருவானது. சாஸ்திரி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தந்தைக்கு 1869 செப்டம்பர் 22-ல் மூத்த மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். வலங்கைமானில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சாஸ்திரி பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரிப் படிப்பைக் கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் பயின்று 1888-ல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவரது தனித் திறமையால் பள்ளி, கல்லூரிப் படிப்பை ஆங்கிலேயே அரசின் கல்வி உதவி மூலம் பெற்றார்.


ஆசிரியர் பணிகள்


பிறகு, சாஸ்திரி இன்றைய மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயவரத்திலுள்ள முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் மாத ஊதியமாக ரூ.50-க்கு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மூன்றாண்டுக்குப் பிறகு 1891-ல் அவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார். அப்போது ஒரு நிகழ்வு நடந்தது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் ஒருநாள் வகுப்பில் பாடம் நடத்தும்போது, அவர் ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளது என்று சாஸ்திரி கூறியிருக்கிறார். அந்தக் கல்லூரித் தலைவரோ அதை மறுத்தார். மேலும், “தன் தாய்மொழி ஆங்கிலம். ஆகையால் தான் சொல்லுவதுதான் சரியான உச்சரிப்பு” என்றிருக்கிறார். இதை சாஸ்திரி ஏற்கவில்லை. அகராதியில் பார்த்த பிறகு சாஸ்திரி கூறியதே சரியான உச்சரிப்பு என்பது புரிந்திருக்கிறது. அந்த ஆசிரியர் வியந்துபோய் சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையைப் பாராட்டினாராம். சாஸ்திரி பிரபல ஆங்கில அகராதி வெப்ஸ்டர் முழுவதையும் நன்கு கற்று அறிந்திருந்தார் என்று பல பேர் பின்னாட்களில் கூறியுள்ளார்கள்.


1893-ல் சாஸ்திரி சேலம் முனிசிபல் கல்லூரியில் முதல்நிலை உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அப்போது சேலம் கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட சி.விஜயராகவாச்சாரியாரை அறிந்த பிறகு, பொது விஷயங்களில் ஈடுபட அவர் ஆர்வம் கொண்டார். அந்தச் சமயத்தில் ‘தி இந்து’ பத்திரிகையில் மக்களின் துயரங்களைப் பற்றி பல கட்டுரைகள் எழுதி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதற்கு அவர் மேல் ஆங்கிலேயே அரசு துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது.


பிறகு, சென்னையில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1902-ல் சாஸ்திரி திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, அந்தப் பள்ளியை மெட்ராஸ் மாகாணத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாக உயர்த்தினார் என்பது வரலாறு.


ஸ்ரீனிவாச சாஸ்திரி 17 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, தனது 37-வது வயதில் 1907-ல் பொது வாழ்க்கைக்கு வந்தார். அப்போது பூனாவில் சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி என்ற இயக்கத்தை நடத்திவந்த கோபால கிருஷ்ண கோகலேயுடன் இணைந்தார். கோகலேவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் சாஸ்திரி. அவரையே தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.


பொதுவாழ்க்கைப் பயணம்


1919-ல் முதன்முதலில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது நேஷனல் லிபரல் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா என்ற கட்சியை சாஸ்திரி தொடங்கினார். 1915-ல் கோகலே இறந்தபோது, சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியின் தலைவராக சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் பணியாற்றினார். சாஸ்திரி மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் பணியாற்றினார். மேலும், இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால், இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார்.


பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார் சாஸ்திரி. இந்தச் சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றிச் சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்பட்ட உரைகளில் ஒன்று. அவரின் விவாதத்தை நேரில் பார்க்க காந்தி பார்வையாளராக கவுன்சிலுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைவதற்கு 16 மாதங்களுக்கு முன்பு சாஸ்திரி தனது 76-வது வயதில் சென்னையில் ஏப்ரல் 17, 1946 அன்று இறந்துபோனார்.

Saturday, 27 March 2021

TYPOID MARY -STORY 1869 SEPTEMBER 23 -1938 NOVEMBER 11

 

TYPOID MARY -STORY 

1869 SEPTEMBER 23 -1938 NOVEMBER 11

  • 1915 –MARCH 27 குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.


டைஃபாய்டு மேரி (Typhoid Mary) என அழைக்கப்பட்ட மேரி மலான் (Mary Mallon, செப்டம்பர் 23, 1869 - நவம்பர் 11, 1938) என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் டைஃபாய்டு எனப்படும் குடற்காய்ச்சலுக்குக் காரணமான நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களை தன்னுடன் சுமந்து வந்து பிறருக்குப் பரப்பும் '"அறிகுறிகளற்ற நோய்க்காவியாக" கண்டறியப்பட்ட முதல் நபர் ஆவார். இவர் சமையல்காரியாகப் பணியாற்றியபோது 51 மனிதர்களுக்கு குடற்காய்ச்சல் நோய் பரவக்காரணமாக இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளார். இவர்களில் மூவர் இறந்துவிட்டனர்.[1] மக்கள் நலவாழ்வு அதிகாரிகள் இவரை இருமுறை கட்டாயப்படுத்தித் தனிமையில் வைத்திருந்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்ட பின்னர் இவர் உயிரிழந்தார்.



ஆரம்பகால வாழ்க்கை

மேரி மலான் 1869-இல் அயர்லாந்தில் குக்ஸ்டவுன் என்ற இடத்தில் பிறந்தார். 1883-ல் அயர்லாந்தை விட்டு வெளியேறிய மேரி தனது 15-ஆவது அகவையில் ஐக்கிய அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்.[2] தனது மாமா, அத்தையுடன் சிறிது காலம் தங்கிய அவர் மிகுந்த வசதிபடைத்த குடும்பங்களில் சமையல்காரியாகப் பின்னாளில் வேலைக்குச் சேர்ந்தார்.[3]


தொழில்

1900 ஆம் ஆண்டு முதல் 1907 வரை மலான் நியூயார்க் நகரப்பகுதிகளில் இருந்த ஏழு வெவ்வேறு குடும்பங்களில் சமையல்காரியாக வேலை பார்த்தார்.[4] 1900-ல், மமரோனெக் டவுன் என்ற இடத்தில் வேலைக்குச் சேர்ந்த இரண்டு வாரங்களில், அங்கு வசித்தவர்கள் டைஃபாய்டு காய்ச்சலுக்கு உள்ளானார்கள். 1901-ல் மன்ஹாட்டன் நகரில் அவர் வேலை பார்த்த குடும்ப உறுப்பினர்களுக்கு காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. அதில் அந்த வீட்டிலிருந்த சலவைத் தொழிலாளி மரணமடைந்தார். பிறகு மலான் ஒரு வழக்குரைஞர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்த எட்டுப் பேரில் ஏழு பேருக்குக் காய்ச்சல் வரவும் அவ்வீட்டைவிட்டு வெளியேறினார்.[5]



1909 செய்திப் பத்திரிகை ஒன்றில் டைபாயிட் மேரி பற்றிய செய்தி

1906-ல், ஆய்ஸ்டர் பே என்ற இடத்தில்ஒரு வீட்டில் அவள் வேலைக்குச் சேர்ந்த இரண்டே வாரங்களில் அந்த குடும்ப உறுப்பினர்கள் பதினோரு பேரில் பத்து பேர் டைஃபாய்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தன் வேலைகளை அவள் மீண்டும் மாற்றினாள். மேலும் மூன்று குடும்பங்களில் இதைப்போன்ற நிகழ்வுகள் சம்பவித்தன.[5] சார்லஸ் ஹென்ரி வாரன் என்ற புகழ்பெற்ற பணக்காரரான நியூயார்க்கின் வங்கித் தொழிலினர் வீட்டில் சமையல்காரியாக வேலை பார்த்தார். வாரன் 1906 ஆம் ஆண்டு கோடைகாலத்தைக் கழிப்பதற்காக ஆய்ஸ்டர் பே-யில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறியபோது மலானும் அவர்களுடன் சென்றாள். ஆகத்து 27 முதல் செப்டம்பர் 3 வரை,அக்குடும்பத்திலிருந்த பதினோரு பேரில் ஆறு பேர் டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அக்காலத்தில் அங்கு பணியாற்றிய மூன்று மருத்துவர்கள் ஆய்ஸ்ட்டர் பே-யில் அந்நோய் "அசாதாரணமானது" என்று கருதினர். மலானை அடுத்தடுத்து வேலைக்குச் சேர்த்துக்கொண்ட குடும்பங்களில் டைஃபாய்டு திடீரெனத் தோன்றியது.[5]


புலனாய்வு

1906-ன் இறுதியில், ஒரு குடும்பம் ஜார்ஜ் சோபர் என்ற டைஃபாய்டு ஆராய்ச்சியாளரை விசாரணைக்காக நியமித்தது. அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பின் ஆய்விதழில் சோபர் 1907 சூன் 15 இல் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். மலான்தான் இந்த திடீர் நோய்ப்பரவலுக்கு ஆதாரமனவள் என்று சோபர் நம்பினார்.[6]


"ஆகத்து 4 ஆம் தேதி அந்தக் குடும்பம் சமையல்காரியை மாற்றியது கண்டறியப்பட்டது. இது டைஃபாய்டு தொற்று பரவுவதற்கு ஏறத்தாழ மூன்று வாரங்களுக்கு முன். அவள் அந்தக்குடும்பத்தில் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்திருக்கிறாள். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு அங்கிருந்து சென்றுவிட்டாள். அந்த சமையல்காரி நாற்பது வயது மதிக்கத்தக்க உயரமான கனத்த திருமணமாகாத ஒரு ஐரியப் பெண்மணி. அவள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்பட்டாள்."


நோய்த்தொற்று ஏற்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சோபர் குறிப்பிட்டிருந்த உடல் தோற்றத்துடன் கூடிய ஐரியப் பெண்மணி சம்பந்தப்பட்டிருந்தாள் என்பதை சோபர் கண்டுபிடித்தார். அவளது இருப்பிடத்தை அவரால் கண்டறியமுடியவில்லை. ஏனென்றால், நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் அவள் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்ததுதான். பார்க் அவெனியூவில் ஒரு கொட்டிலில் நோய்த்தொற்று ஏற்பட்டதையும் அங்கு மலான்தான் சமையல்காரி என்பதையும் கண்டுபிடித்தார் சோபர். அக்குடும்பத்தின் இரண்டு வேலைக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அக்குடும்பத்தினரின் மகள் டைஃபாய்டு காய்ச்சலால் இறந்து போனாள்.[5]


மலான்தான் டைஃபாய்டு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருக்கமுடியும் என்று கருதிய சோபர் அவளை அணுகியபோது, அவள் தனது மலம் மற்றும் மூத்திர மாதிரிகளை ஆய்வுக்குத்தர பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.[7] மலான் மாதிரிகளைத்தர மறுத்ததால், மலானின் ஐந்து வருட தொழிலைப்பற்றிய தகவல்களைத் தொகுக்க முடிவு செய்தார். மலானை சமையல்காரியாக வேலைக்கமர்த்திய எட்டுக் குடும்பங்களில் ஏழு குடும்பங்கள் டைஃபாய்டு தொற்றுக்குள்ளானது என்பதை சோபர் கண்டுபிடித்தார்.[8] அவர் அவளை அடுத்த முறை சந்தித்தபோது, அவர் தன்னுடன் மற்றொரு மருத்துவரை அழைத்துச்சென்றார். ஆனால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார். மற்றொரு சமயத்தில், மலானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளைச் சந்தித்த சோபர் அவர் ஒரு புத்தகம் எழுதி அதன் உரிமை முழுவதையும் அவளுக்கே தந்துவிடுவதாகவும் கூறினார். அவரது பரிந்துரையைக் கோபமாக நிராகரித்த அவள் குளியலறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். அவர் செல்லும்வரை வெளியே வரவேயில்லை.[9]

Friday, 2 October 2020

MAHATMA GANDHI , THE MAN OF 20 TH CENTURY BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30

.


MAHATMA GANDHI , 

THE MAN OF 20 TH CENTURY  

BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30




20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மனிதர் மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 இல்பிறந்தார்


தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை… படித்து மகிழுங்கள்…

சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்… மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன. தென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். காந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.




அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. “எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்” என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார். மகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார். இந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துதான் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது. காவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம். முதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.







தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நிலவிவந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது. எனவே நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று நிர்ணயித்து ஓர் எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களால் செய்ய முடிந்த எதையும் செய்யுங்கள். செய்ய முடியும் என்று நினைக்கும் எதையும் செய்யுங்கள்!

.


மகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்


ஆன்மிகத்தின் அடிப்படை

* உண்மையை மறைக்காமல் சொல்லும் மன வலிமை வேண்டும்.

* நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.

* நல்ல நட்பைப் பெற வேண்டுமானால், நீயும் நல்ல நண்பனாக இரு.

* உடல்சோர்வு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் பலவீனம்.

* தொண்டு தான் உண்மையான அன்பை வெளிப்படுத்துமே தவிர, வெறும் வாய்ச்சொல்லால் பயனில்லை.

* பொய்மை ஒருநாள் மறைந்து போகும். உண்மையே மேலே உயர்ந்து நிற்கும்.




* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை.

* மனப்பூர்வமாக உள்ளம் கனிந்து செய்யும் பிரார்த்தனையை இறைவன் ஏற்க மறுப்பதில்லை.

* உலகிலுள்ள எல்லா சக்திகளையும் விட, ஆன்மிக சக்தியே அதிக பலம் வாய்ந்தது.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

"அவன்' பார்த்துக் கொள்வான்

* உண்மை இருக்கும் இடத்தில் தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவனின் உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது.

* பிரார்த்தனை என்பது தன்னடக்கம் நிரம்பியதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.

* உங்களுடன் பேசாதவர்களிடமும், முகம் கொடுத்துப் பேச முற்படுங்கள்.

* நல்ல நண்பனைப் பெற விரும்பினால், நீங்களும் நல்ல நண்பனாக இருக்கப் பழகுங்கள்.




* நம் எண்ணம் முழுவதையும் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், அந்த வினாடியே நமக்கு விடுதலை கிடைத்து விடும்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால், நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.

* இதயத்தில் தூய்மையுடன் செய்யும் வழிபாடு, தியானத்தை கடவுள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.

* எவ்வளவு குழப்பம் நேர்ந்தாலும், பொய் ஒருநாள் காணாமல் போகும். உண்மையோ என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விவேகத்தால் சாதிக்கலாம்

* கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லி முறையிடுவது வெறும் மூடநம்பிக்கை அல்ல.

* பலம் என்பது உடல்வலிமை மட்டுமல்ல. மனவுறுதியே உண்மையான பலம்.

* நேர்மையாக வியாபாரம் செய்வது கடினம். ஆனால் அது முடியாத செயல் அல்ல.

* தேவைகளைப் பெருக்கிக் கொள்வது அநாகரிகம். குறைத்துக் கொள்வதே நாகரிகம்.

* நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் ஒருநாள் பலன் அளித்தே தீரும் என உறுதியாக நம்புங்கள்.

* வேகத்தால் எதையும் சாதிக்க முடியாது. விவேகமானவனோ வாழ்வில் நிறைய சாதிப்பான்.




* தெய்வத்தின் கணக்குப் புத்தகத்தில் நம் செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாம் பேசியவையும், படித்தவையும் அல்ல.

* பாவத்தை மனதில் மறைத்து வைக்காதீர்கள். அது உடலில் மறைந்து கொல்லும் நஞ்சு போன்றது.

* பாவத்தை வெறுக்கலாம். பாவியை வெறுக்காதீர்.

* வாழ்நாள் முழுவதும் பழகி வந்த பழக்கத்தை நொடியில் விட்டு விட முடியாது.

தியாக மனம் வேண்டும்

* கடமையைச் சரியாக நிறைவேற்றினால் உரிமை தானாகவே வந்து சேரும்.

* கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பது சிறந்தது.

* தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து வைப்பது, ஒருவகையில் திருட்டு தான்.

* கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ளும் சக்தியை தகுந்த பயிற்சியின் மூலம் பெற முடியும்.

* பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்வது கடவுளுக்கு எதிரானது.

* பிறருக்காக தியாகம் செய்யும் மனநிலை கொண்டவனால், தனக்காக எதையும் தேட நேரம் இருக்காது.

* மனிதனின் இதயத்தில் மறைந்து கிடக்கும் நல்ல சக்திகளை மலரச் செய்வதே கலை.




* கலைஞர்கள் அவரவர்க்குரிய கலைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்த முயலவேண்டும்.

* மனிதர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதே உண்மையான கல்வியின் பயன்.

* ஏளனம் என்பது பேசும் நாவை இழிவுபடுத்துமே அன்றி, ஏசப்பட்டவனை இழிவுபடுத்துவதில்லை.

நாளை அவன் கையில்!

* அவசியமில்லாத பொருளை நமக்குத் தேவை என்று வைத்துக் கொண்டிருப்பது கூடாது. சொல்லப்போனால் அதுவும் ஒரு திருட்டு தான்.

* உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும்விட ஆன்மிக சக்தியே மிக பலம் கொண்டது.

* உங்களிடம் பேசாதவர்களிடம் பேசுங்கள். வராதவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். கோபித்தவர்களைச் சமாதானப்படுத்துங்கள். விட்டுக்கொடுத்து வாழப் பழகுங்கள்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார். நிம்மதியாக வாழ்வதற்கு இதுவே நல்வழியாகும்.

* என்ன தான் குழப்பம் நேர்ந்தாலும் பொய்மை ஒருநாள் மறைந்துபோகும். ஒருநாள் மெய்மை மேலே உயர்ந்து நின்று தர்மத்தை நிலைநாட்டும்.

* நம்முடைய ஒவ்வொரு அந்தரங்கத்தையும் கடவுள் அறிவார் என்பதை உணர்ந்தால் போதும். அந்த விநாடியே நமக்கு விடுதலை கிடைத்துவிடும்.

அச்சத்தை அறவே தவிர்!

* அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்ற சேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும்.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.

* உடலுக்கு உணவு, உயிருக்கு பிரார்த்தனை.

* உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார்.

* நல்ல நண்பனைப் பெற விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள்.

* நம் மனதில் எழும் எண்ணம் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நாம் உணர வேண்டும்.

* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்குமரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள்.

* அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.

சிறந்த வழிபாடு எது?

* ஒரு செயல் நீதிக்கும், தர்மத்திற்கும் உடன்பட்டதா என்பதை செயலாற்று பவனின் நோக்கத்தைக் கொண்டே அறிய முடியும்.

* வீடுகளில் கூட்டுப்பிரார்த்தனை மிக அவசியமானது.

* மிதமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின்னும் கொஞ்சம் பசி உணர்ச்சி இருப்பது உடல்நலனுக்கு தேவையானது.

* இறைவனோடு இரண்டறக் கலக்கும் நோக்கத்தோடு செயலாற்றுவதே வைராக்கிய வாழ்வாகும். இந்நிலை பெற மனமும் உடலும் நல்லவிஷயங்களில் மட்டுமே ஈடுபடுதல் வேண்டும்.

* பெண்ணைப் பலமற்றவள் என்று கூறுவது அவளை நிந்திப்பதாகும். பெண்ணுக்கு உடல்பலம் குறைவு என்றாலும் ஆன்மபலம் மிக அதிகம்.

* ஏழைகளுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு உலகில் வேறு கிடையாது.

* ஆழ்ந்த நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. வழிபாட்டின் திறவுகோலாக பிரார்த்தனை அமைந்துள்ளது.

அன்பு தோற்பதில்லை

* முன் நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது வைராக்கிய வாழ்வுக்கு அவசியமான பழக்கம்.

* அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆழ்ந்த நம்பிக்கை, அனுபவம் இரண்டும் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் சென்று விடும்.

* சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடை பயில வேண்டும்.

* நமக்கு கடவுளே மூலமாக இருக்கிறார். அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்.

* அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

* கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திப்பதால், மனதை லட்சியத்தை நோக்கி குவிக்கச் செய்ய முடியும்.

* கடவுள் என்ன நோக்கத்துடன் உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியத்தைக் கடவுள் மட்டுமே அறிவார்.

* அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால், அதற்குக் காரணம் நம் மனபலவீனமே ஆகும்.

சவால்களை சந்தியுங்கள்

* கருத்து ஒற்றுமை கொண்டவர்களிடம் விட்டுக்கொடுப்பது பெரிதல்ல. முரண்பட்ட கருத்து உடையவர் என்றாலும் விட்டுக் கொடுப்பதே சகிப்புத்தன்மை.

* கோழைத்தனம் நீங்குவதற்காக சிலர் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சவால்களை எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொள்வதே சரியான மருந்து.

* கடவுள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக் கொள்கிறார். ஆனால், அவருடைய பொறுமைக்கும் எல்லையுண்டு.

* கோயில்கள் வெறும் கண்காட்சிக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. தெய்வீக உணர்வை மக்களிடம் பரப்பும் பணியை மேற்கொண்டிருக்கின்றன.

* தீய செயல்களைச் செய்பவரை விட, தீய எண்ணங்களுக்கு இடம் தருபவன் அதிக தீமையைச் செய்து கொண்டிருக்கிறான்.

* குறை இல்லாத மனிதன் இல்லை. ஆனால், எதிராளியின் குறைகளை மட்டுமே மிகைப் படுத்துகிறோம். இதனால் வெறுப்புணர்வு அதிகமாகிறது.

மனம் சுத்தமாக இருக்கட்டும்!

* உண்ணாவிரதம் இருக்காமல் பிரார்த்தனை செய்ய முடியாது, பிரார்த்தனை செய்யாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது.

* கடவுளிடம் காணும் பரிபூரணத்துவத்தை வணங்குவதே தூய வழிபாட்டு நெறிமுறை. அவர் மட்டுமே சத்தியமானவர்.

* வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் நாம் சிறு துளியே. எனவே, அனைத்து உயிர்களுடனும் ஒன்றுபட்டு ஒரே அம்சமாகத் திகழ வேண்டும்.

* பகவத்கீதையை கிளிப்பிள்ளையைப் போல பாராயணம் செய்வதால் பலனேதும் இல்லை. அதுகாட்டும் உபதேசப்படி நடந்து காட்ட வேண்டும்.

* யாரை வழிபடுகிறோமோ, அந்த தெய்வம் காட்டியே வழியில் நடப்பதே உண்மையான வழிபாடு. மற்ற பிரார்த்தனைகள் எல்லாம் , நம்முடைய நேரத்தை வீணடிப்பதாகும்.

* மனதைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், இறைவன் நம் பிரார்த்தனையை அவசியம் கேட்பான்.

* மனதை அலைய விடாமல் கட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான வழிபாடாகும்.

- காந்திஜி

.கொள்கை இல்லாத அரசியலும்

இரக்கமற்ற மதமும் ஒழிக்கப்பட வேண்டியவை

காந்தி

குறிக்கோள் இல்லாத வணிகமும்

மனிதத்தன்மை இல்லாத

விஞ்ஞானமும் பயனற்றது

காந்தி

அறிவு இருந்தும் நல்ல குணம் இல்லாமை

கண்மூடித்தனமான இன்பங்கள் வருந்த தக்கது

-காந்தி


வேலை செய்யாமல் குறுக்கு வழி சம்பாத்தியம்

இந்தியாவை தள்ளாட வைக்கும்

-காந்தி

மகாத்மாவை ஏளனமாக பார்க்கும்

நீங்கள் எந்த அளவுக்கு முட்டாள்கள்

என்பது உங்கள் சிரிப்பின் நீளத்தை

பொறுத்தது

Sunday, 12 April 2020

KASTURIBA GANDHI BORN 1869 APRIL 11 - FEBRUARY 22,1944


KASTURIBA GANDHI BORN 
1869 APRIL 11 - FEBRUARY 22,1944




கஸ்தூரிபாய் (Kasturba Gandhi, ஏப்ரல் 11 1869 – பெப்ரவரி 22 1944) மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.

இளமை
இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார்[1] கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.

அரசியல்

கணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.

இந்தியா வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.


விடுதலைப் போரில் ஈடுபாடு
1915ல் இந்தியாவிற்கு திரும்பியபின்இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.

சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.

இறுதிகாலம்

ஆகா கான் அரண்மனையில் கஸ்தூரிபாய் காந்தி மற்றும் மகாதேவ தேசாயின் சமாதிகள், புனே
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.[2]



அது, ஓர் ஏழு வயது சிறுமியின் வீடு.  அந்த வீட்டில் உறவினர்களும், நண்பர்களும் கூடியிருந்தனர். அவர்களுடன், ஜோசியரும் புரோகிதரும்கூட. முக்கியமாய் பக்கத்துவீட்டு மோகன்தாஸின் அப்பா. இதனால் அங்கு, மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ''எப்போதும், நம் தந்தையைக் காண வியாபார நண்பர்கள்தானே வருவார்கள்; ஆனால், இந்த முறை இவர்கள் வந்திருப்பது எதற்கென்று தெரியவில்லையே? அது என்னவோ, நமக்கேன் வம்பு... பெரியவர்கள் விஷயம்'' என்று நினைத்தபடியே தோட்டத்துக்குள் ஓடினாள், அந்தச் சிறுமி. அவர், வேறு யாருமல்ல... மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ்) மனைவி கஸ்தூரிபாய். அவருடைய பிறந்த தினம் இன்று. 

 'டூ' விட்டுவிடுகிறார்''! 

கஸ்தூரியின் வீட்டுக்கு அவர்கள் வந்திருந்த அன்றைய நாள்தான், காந்திக்கும் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள். இருவருக்கும் ஏழு வயதானபோது நிச்சயிக்கப்பட்ட திருமணம், பின்பு ஆறாண்டுகள் கழித்து... அவர்களுடைய பதின்மூன்றாவது வயதில் திருமணம் நடந்தேறியது. இல்லற வாழ்க்கையே என்னவென்று தெரியாத ஓர் இனம்புரியாத வயதில், அவர்களுக்குள் இருந்த விட்டுக்கொடுக்காத பிரச்னைகளால் ஆரம்பத்தில் சிறுசிறு சலப்புகள் ஏற்பட்டன. ஆனாலும், தன் மனைவி மீது மாறாத அன்புகொண்டு அவரை லட்சியமிக்கவராக மாற்றியவர் மகாத்மா. ஆரம்பத்தில், ''நான் உன் கணவன், ஞாபகமிருக்கட்டும்'' என்று காந்தி கட்டளையிட்டபோதுகூட, அதற்கு கஸ்தூரிபாய், ''ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என்னை உருட்டி, மிரட்டி அடிமைப்படுத்திவிட முடியாது'' என்றா

அன்பு நிறைந்த வாழ்க்கை யாருக்குக் கிடைக்கிறதோ... அதை அகிலமே கிடைத்துவிட்டதாகத்தான் அவர்கள் நினைப்பார்கள்.  அப்படியான வாழ்க்கைதான் இவர்களுக்கும் கிடைத்தது. அவர்கள் இருவரும், ஒருவர் மீது ஒருவர் விட்டுக்கொடுக்காமல்வைத்த அன்புதான், அவர்களை உலகம் அறியும் அளவுக்கு உயர்த்தியது. ''மாமனார் தங்கமானவர்; மாமியார் அன்புத் தெய்வமாக இருக்கிறார்; மைத்துனர்களும், அவருடைய மனைவிமார்களும் நேசம் பாராட்டுகின்றனர்; ஆனால், அவர் மட்டும் ஏன் என்னை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? என் வயதுதானே அவருக்கும்! சரி, கணவர்தான். இருக்கட்டுமே... அதற்காக என்னை அடிமைபோல் நடத்த வேண்டுமா; அவர் வழிக்கு நான் போகிறேனா; அவர் மட்டும் ஏன், என் இஷ்டத்தில் குறுக்கிட வேண்டும்? என்மீது அவருக்கு என்ன கோபமோ... அடிக்கடி என்னிடம் 'டூ' விட்டுவிடுகிறார்'' என்று ஆரம்ப நாள்களில் கவலைப்பட்ட கஸ்தூரிபாய், பின்னர் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் புகழும் அளவுக்கு மிகவும் பக்குவம் பெற்ற பெண்ணாகப் பயணிக்கலாயினார். 

வாழ்க்கைச் சம்பவங்கள்!
கஸ்தூரியின் மீது காந்திக்கிருந்த அளவற்ற அன்பால், ''இனி, தினமும் அவளுக்கு நாலு எழுத்து சொல்லித் தரவேண்டும். அறியாமை நீங்கிவிட்டால், கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவள் தெரிந்துகொண்டுவிடுவாள்'' என்று காந்தி சிந்தித்தார். காந்தியின் மீது கஸ்தூரிக்கிருந்த கண்ணியமான காதலால், ''ஐயோ... இந்தப் பாழாய்ப்போனவன், என் கணவரைப் படுகுழியில் தள்ளிவிடுவானே? இதை எப்படியாவது அவரிடம் பக்குவமாகச் சொல்ல வேண்டும்'' என்று  தீய நண்பரிடம் சிக்கிக்கொண்ட காந்திக்காக, கஸ்தூரிபாய் ஏங்கினார். அதற்காக அவர், ''இதோ பாருங்கள்... நான் சொல்கிறேன் என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. அந்த அயோக்கியனுடன் சேராதீர்கள். அவன், பெரிய போக்கிரி. அவன், சகவாசமே வேண்டாம்'' என்று வேண்டுகோள்வைத்தார். அவருடைய கோரிக்கையைக் காந்தி, அப்போது ஏற்காதபோதும் நாளடைவில் உண்மையிலேயே மாறித்தான் போனார். அந்த மாற்றம், பின்னாளில் அவர்களுக்குள் அன்பை விதைத்தது. அதை உணர்த்தும் நிகழ்வாக அவர்களுடைய வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

கஸ்தூரியைச் சிரிக்கவைத்த காந்தி!

ஒருமுறை தன் கணவரிடம்... கஸ்தூரிபாய், ''படிப்பு முடிந்துவிட்டதா'' என்றார். அதற்குக் காந்தி, ''படிப்புக்கு முடிவே கிடையாது. நான் அடுத்தபடி கல்லூரியில் சேரப்போகிறேன்'' என்று பதிலளித்தார். ''எத்தனை வருஷம்'' என்று அவர் கேட்க, ''நாலு வருஷம். பி.ஏ. படிக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா'' என்று மகிழ்ச்சிப்பொங்க கேட்டார் காந்தி. அதற்கு கஸ்தூரிபாய், ''பி.ஏ. படிக்கவா'' என்று சிரித்தபடியே கேட்டுக்கொண்டு ஓடினார். இதேபோன்று, வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காகத் தென்னாப்பிரிக்கா வரும்படி காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்குச் செல்வதற்கு முன் காந்தி... தன் மனைவியிடம், ''தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும்போது உனக்கு என்ன வேண்டும், சொல்'' என்று கேட்டார். அதற்கு அவர், ''ஒரு நல்ல புடவையாகக் கிடைத்தால் வாங்கிக்கொண்டு வாருங்கள்'' என்றார். ''பைத்தியம்... இங்கே இல்லாத புடவையா அங்கே? புது ஃபேஷனா ஒரு 'கவுன்' வாங்கிக்கொண்டு வரட்டுமா? உனக்கு ரொம்ப அழகாக இருக்கும்'' என்றார். அதைக் கேட்டதும் கஸ்தூரி பாய்க்கு சிரிப்பு வந்துவிட்டது. ''எப்படியோ, நீ சிரித்துவிட்டாய்; அதுபோதும்'' என்றபடியே அங்கிருந்து நடையைக் கட்டினார் காந்தி.

கஸ்தூரியிடம் பயந்த காந்தி!

இப்படியாகக் கடந்துகொண்டிருந்த அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் ஒருநாள், பகல்வேளை உணவை முடித்து... சமையல் அறையைச் சுத்தமாகவைத்துவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார், கஸ்தூரிபாய். உழைப்பின் அசதியால் அவர், உறங்கிவிட்டார். அந்த நேரத்தில், மோதிலால் நேருவும், அவருடன் சிலரும் அங்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டும். அதற்காகக் கஸ்தூரிபாய் இருந்த அறையை எட்டிப்பார்த்தார், காந்தி. அவர், உறங்கிக்கொண்டிருந்ததால், அவரை எழுப்பாமல் பணியாட்களைக்கொண்டு உணவு தயார் செய்யச் சொன்னார், காந்தி. பின்னர், முன்பு இருந்த மாதிரியே அறையையும் சுத்தமாக வைக்கச் சொன்னார். அப்போது, ஒரு பாத்திரம் கீழே விழுந்ததில் 'தடால்' எனச் சத்தம் எழுந்தது. இதில், விழித்துக்கொண்ட கஸ்தூரிபாய், ''ச்சீ... வரவர இந்தப் பூனை தொந்தரவு பொறுக்க முடியவில்லை. சிறிதுநேரம்கூடப் படுக்கவிட மாட்டேன் என்கிறது, சனியன்'' என்றபடியே எழுந்துவந்து எட்டிப்பார்த்தார். ''இது என்ன கலாட்டா'' என்று அவர் கேட்க, அதற்கு அங்கிருந்த பணியாட்கள், ''பாபுஜிதான் செய்யச் சொன்னார்;  யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்களாம்'' என்றனர். ''ஓஹோ, இதெல்லாம் அவருடைய வேலையா'' என்றவர், அடுத்துக் களத்தில் இறங்கி... அருமையான உணவைச் சமைத்து அவர்களை அசத்தினார். 

பின்னர், அன்று மாலை தனியாக இருந்த காந்தியிடம், ''இதெல்லாம் என்ன விளையாட்டு? அந்தக் கத்துக்குட்டிகளை எதற்காகச் சமையல் செய்யச் சொன்னீர்கள்? நான்தான் ஒருத்தி கல்லுக்குண்டு மாதிரி இருக்கிறேனே, என்னிடம் சொல்லக்கூடாதா'' என்றார், கஸ்தூரிபாய். அதற்கு காந்தி, ''உள்ளே வந்து பார்த்தேன். நீ தூங்கிக்கொண்டிருந்தாய்...'' என்றார். ''தூங்கிக்கொண்டிருந்தால் என்ன, எழுப்பினால் எழுந்திருக்க மாட்டேனா? அத்தனை சோம்பேறி என்று என்னை நினைத்துக்கொண்டிருக்கீறீர்களா'' என்று கேட்டார், கஸ்தூரி. ''அது, இல்லை கஸ்தூரி. உன்னை எழுப்புவதற்கு எனக்குப் பயமாக இருந்தது. நீ, திடீரென்று கோபப்பட்டுவிட்டால்...'' என்றார், காந்தி. அதைக் கேட்டதும் கஸ்தூரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ''என்னது, என்னிடம் உங்களுக்குப் பயமா? வேடிக்கையாகத்தான் இருக்கிறது'' எனக் கஸ்தூரி சொல்ல, ''உண்மையைச் சொல்கிறேன் கஸ்தூரி. இந்த உலகத்திலேயே உன் ஒருத்தியிடம்தான் எனக்குப் பயம், தெரியுமா'' என்றார் காந்தி. 

'ஒரு கணவனின் உரிமைதானே?''

எங்கேயும் விட்டுக்கொடுத்துச் சென்றால் வெற்றிபெற்றுவிடலாம் என்பதற்கு உதாரணமாக, காந்தி  - கஸ்தூரிபாய் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதை இதன்மூலம் நன்கு உணரமுடிகிறது. தன் கணவரை எந்த விஷயத்திலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர் கஸ்தூரிபாய் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் இதோ... ஒருமுறை, கஸ்தூரிபாய்க்கு பணக்காரப் பெண் ஒருவர் மடல் எழுதியிருந்தார். அதைப் பிரித்து அவரிடம் படித்துக் காட்டினார் ஒரு பெண்மணி. அதில், ''தாங்கள் மகாத்மாவை மணம் புரிந்துகொண்டதால் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது'' என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கான பதிலை அந்தப் பெண்மணியிடம் இப்படி எழுதச் சொன்னார், கஸ்தூரிபாய். அவர் சொன்ன பதிலில் சில இதோ... ''காந்திஜி என் வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாக ஆக்கிவிட்டார் என்று நீ எப்படிக் கண்டுபிடித்தாயோ தெரியவில்லை. நான் சோகமாக இருந்ததையும் சோறு இல்லாமல் பட்டினி கிடந்ததையும் நீ இங்குவந்து நேரில் பார்த்தவள்போல் அல்லவா பேசுகிறாய்? எனக்கு வாய்த்ததுபோல் ஒரு கணவர் உலகத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் கிடைத்திருக்க முடியாது. சத்தியநெறியைக் கடைப்பிடிக்கும் அவரை, உலகமே போற்றிப் புகழ்கிறது. அவர் உதவியை நாடி ஆயிரமாயிரம் பேர் தினமும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இன்றுவரை தக்க காரணமின்றி அவர் என்னைக் கடிந்துகொண்டதே இல்லை. நான் தவறுசெயதபோது அதைச் சுட்டிக்காட்டித் திருத்தியிருக்கிறார். அவ்வளவுதான். அது, ஒரு கணவனின் உரிமைதானே? 

''காந்திதான் காரணம்!''

என்னிடம் என் கணவர் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். மனைவிக்குரிய மதிப்பும், மரியாதையும் கொடுத்து என்னுடன் பழகுகிறார். எனக்குக் கிடைத்திருக்கும் புகழுக்கெல்லாம் அவர்தான் காரணம். அப்படியிருக்கையில், நான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை நடத்தவில்லை என்று எப்படி நீ துணிந்துகூறுகிறாய்? ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தற்காலத்துப் பெண்களைப்போல் எனக்கு நடந்துகொள்ளத் தெரியாது. கணவரைக் கிள்ளுக்கீரையா நினைத்து அதிகாரம் செய்து அவரைத் தம் கைக்குள் போட்டுக்கொள்ள நினைக்கும் நாகரிக மனைவிகள், கணவர் தங்கள் வழிக்கு வராவிட்டால், தங்கள் இஷ்டப்படி வாழ்க்கை நடத்துவதற்குத் துணிந்துவிடுகிறார்கள். அப்படிச் செய்வது இந்து தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணுக்கு அழகல்ல. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் கணவனாக அடைய வேண்டும் என்று பார்வதி தேவி வேண்டிக்கொண்டதை உனக்கு நினைவுபடுத்த வேண்டுகிறேன்'' என்று தன் கணவரின் உணர்வையும், வாழ்க்கையின் உண்மையையும் அவருக்கு உணர்த்தியிருந்தார்.
அண்ணலுடனும், அவர் குடும்பத்தினருடனும் அன்பாகவும், அழகாகவும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட கஸ்தூரிபாய், தன்னுடைய இறுதிக்காலத்தில் காந்தியின் மடியில் தலைவைத்துப் படுத்தப்படியே, ''எனக்குத் தூக்கம் வருகிறது... தூங்கட்டுமா'' என்று சிறு குழந்தையைப்போல் காந்தியிடம் கேட்ட அவர், அதற்குப் பிறகு கண்திறக்கவே இல்லை.

- ஜெ.பிரகாஷ்

காந்திமகான் பொறுமையின் சிகரமாக விளங்குபவர். வாழ்க்கையில் ஏற்படும் துன்ப துயரங்களை யெல்லாம் சகித்துக்கொள்ளும் ஆற்றலுடையவர். இத்தகைய மகாத்மாவே கண்ணீர் விடும்படியான சம்பவம் நேர்ந்துவிட்டதென்றால், சாதாரண மக்களின் துக்கத்துக்கு ஓர் எல்லைதான் ஏது? பூனா நகரின் அருகாமையிலுள்ள ஆகாகான் மாளிகைச் சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, தேசத்தின் அன்னையாக விளங்கிய கஸ்தூரிபாய் அம்மையார் காலமான செய்தியை நினைக்கும்போதெல்லாம் மயிர்க்கூச்செறிகிறது.

அன்று, வனவாசத்திற்குப் புறப்பட்ட ராமனை பின்பற்றிச் சென்ற சீதையைப் போல், சிறை வாசத்திற்குப் புறப்பட்ட காந்தி மகானைப் பின்தொடர்ந்து கஸ்தூரிபாயும் 1942-ல் சிறைவாசம் ஏற்றார். முதுமைப் பருவத்தில் இந்தத் தியாகத்தை மேற்கொண்டதற்குப் பலனையும் அடைந்தார்!

ஏற்கெனவே, மகாதேவ தேசாயைப் பிரிந்து மனம் வாடிய காந்திமகானுக்கு, கஸ்தூரிபாய் அருகிலிருந்தது ஆறுதலாயிருந்திருக்கும். இன்று அந்த ஆறுதலும் அவருக்கு இல்லாமற் போய் விட்டது. இதைக் குறித்து, ஞானியான மகாத்மாவே மனம் கலங்குகிறாரென்றால் அவரைத் தேற்றுவதற்கு வேண்டிய தகுதி யாருக்கு இருக்கிறது? எனவே, இந்தச் சம்பவத்தின் பலனாக மகாத்மா மனத்தளர்ச்சி பெறாமல் அவரைப் பாதுகாக்கக் கடவுள்தான் அருள் புரிய வேண்டும்!

Sunday, 30 December 2018

RASPUTIN ,THE RUSSIAN MONK NOTORIUS STORY JANUARY 22 - DECEMBER 29




RASPUTIN ,THE RUSSIAN MONK  NOTORIUS  STORY  JANUARY 22 - DECEMBER 29



கிரிகோரி யெஃபிமோவிச் ரஸ்புடின்(உருசிய மொழி: Григорий Ефимович Распутин [ɡrʲɪˈɡorʲɪj jɪˈfʲiməvʲɪtɕ rɐˈsputʲɪn]) (22 ஜனவரி [யூ.நா. 10 சனவரி] 1869 – 29 டிசம்பர் [யூ.நா. 16 டிசம்பர்] 1916) ஒரு ரஷ்ய மிஸ்டிக் ஆவார், அவர் அவருடைய பின்னாட்களில் ரஷ்ய டிசர் நிக்கோலஸ் II, அவரது மனைவியான டிசரிட்சா அலெக்ஸாண்டிரா மற்றும் அவர்களது ஒரே மகன் டிசரிவிச் அலெக்ஸி ஆகியோரின் தாக்கத்தைக் கொண்டிருந்ததாக அறியப்பட்டார். அவரை ஒரு "ஸ்ட்ரன்னிக்" (அல்லது சமய யாத்ரீகர்) மற்றும் ஸ்ட்டாரட்டுகள் கூட (ста́рец, "எல்டர்" என்ற தலைப்பானது, வழக்கமாக பாவமன்னிப்பு வழங்கும் துறவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) என்று மற்றவர் கருதுகையில், ரஸ்புடின், பெரும்பாலும் "மேட் மன்க்"[1] என்று அறியப்பட்டார், மேலும் ஆவி ஆற்றலுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் மற்றும் நம்பிக்கை குணப்படுத்துபவராக அவர் நம்பப்படுகிறார்.[1]

டிசரிஸ்ட் அரசாங்கம் ரஸ்புடினுக்கு உதவுவாமல் அவமானப்படுத்தியதே, 1917 இல் ரோமனவ் அரசகுலம் அழிந்ததற்குக் காரணம் என விவாதங்கள்[2] நடந்தேறின. ரஸ்புடினின் சமகாலத்திய மதிப்பீட்டாளர்கள், ரஸ்புடினை தெய்வத்தன்மையுடைய மிஸ்டிக், அசாதரணமான முன்னறித்திறமுள்ளவர், குணப்படுத்துபவர் மற்றும் தீர்க்கதரிசி அல்லது ஒழுக்கக்கேடான சமயத்தைப் ஏமாற்றும் நேர்மாறானவராக, பல்வேறு அம்சங்களுடன் கண்டுள்ளனர். நிச்சயமற்ற வாழ்க்கைக் குறிப்புகள், வதந்தி மற்றும் கட்டுக்கதையின் அடிப்படையில் ரஸ்புடினின் வாழ்க்கை கணக்கிடப்படுவதால், ரஸ்புடினின் வாழ்க்கை மற்றும் தாக்கத்தின் மேல் அதிகப்படியான ஐயப்பாடு உள்ளது.[1]
ஆரம்பகால வாழ்க்கை
ரஸ்புடின், சைபீரியாவின் டோபோல்ஸ்க் கஃபெர்னியா வில் (தற்போது டியூமன் ஆப்லாஸ்ட்) துரா ஆற்றின் ஓரமாக உள்ள போக்ரோவ்ஸ்கோயேயின் சிறிய கிராமத்தில் ஒரு உழவராகப் பிறந்தார்.[3] இன்றும் அவரது பிறந்ததேதி ஐயத்திற்கிடமாக இருக்கிறது, மேலும் 1863 மற்றும் 1873 க்கு இடையில் உள்ள காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[4] அண்மையில், ரஸ்புடினின் பிறந்த தேதியானது (22 ஜனவரி 1869 N.S. க்கு சமமான)[5] 10 ஜனவரி 1869 O.S. என புதிய ஆவணங்கள் மேம்போக்காக வெளிப்படுத்தப்பட்டது.

அவரது குழந்தைப் பருவத்தையும், பெருமளவு உண்மை நிகழ்வுகளை அவரது குடும்ப உறுப்பினர்கள் வழியாக அறியப்பட்டவையும் பற்றி அதிகமாகத் தெரியவில்லை. இவருக்கு, மரியா என்றழைக்கப்படும் ஒரு சகோதரியும், டிமிட்ரி எனப் பெயரிடப்பட்ட ஒரு மூத்த சகோதரருமான இரண்டு உடன்பிறந்தவர்கள் இருந்தனர் என அறியப்பட்டுள்ளது. வலிப்பு நோயராக இருந்த அவரது சகோதரி மரியா, ஆற்றில் மூழ்கினார் எனக் கூறப்படுகிறது.[3] ஒரு நாள், ரஸ்புடின் அவரது சகோதரருடன் விளையாடிக் கொண்டிருக்கையில், டிமிட்ரி குளத்தில் விழுந்து விட்டார், அவரைக் காப்பாற்றுவதற்கு ரஸ்புடின் குளத்தில் குதித்திருக்கிறார். அவர்கள் இருவரும், வழிப்போக்கர் ஒருவரால் நீரில் இருந்து வெளியே கொணரப்பட்டுள்ளனர், ஆனால் விளைவாக டிமிட்ரி, நிமோனியாவில் இறந்துவிட்டார். இந்த இரண்டு மரணங்களும், ரஸ்புடினை பாதித்தது, பின்னர் அவரது இரண்டு குழந்தைகளுக்கு மரியா மற்றும் டிமிட்ரி எனப் பெயரிட்டார்.

அவரது குழந்தைப் பருவம் முழுவதும் சூப்பர்நேச்சுரல் ஆற்றல்களின் அடையாளங்களாக அவரைக் காட்டுவதற்காக கட்டுக்கதையால் சூழப்பட்ட ரஸ்புடின் உருவகப்படுத்தப்பட்டார். இந்தப் புகழ்வாய்ந்த ஆற்றல்களின் ஒரு உண்மையற்ற எடுத்துக்காட்டாக, கிரிகோரியின் தந்தையான எஃபிம் ரஸ்புடினின் குதிரைகளில் ஒன்று திருடப்பட்ட போது, அந்தத் திருட்டைச் செய்த மனிதனை ரஸ்புடினால் அடையாளம் காண முடிந்ததாக வலியுறுத்தப்பட்டது.[3]

ரஸ்புடினுக்கு பதினெட்டு வயதிருக்கும் போது, மூன்று மாதங்கள் வெர்க்கோடரி துறவிமடத்தில் தங்கியிருந்தார், அவர் செய்த ஒரு திருட்டிற்குப் பிராய்சித்தமாக அங்கு தங்கியிருக்கக்கூடும். அங்கு அவரது அனுபவமானது, கடவுளின் தாயாரின் பரந்தப் பார்வையில் ஒருங்கிணைந்து அவர் திரும்பும் போது, சமய மிஸ்டிக் மற்றும் நாடோடியாக அவரது வாழ்க்கையை அது மாற்றியது. மேலும், இது க்ஹெலிஸ்டி என்றழைக்கப்படும் (பிளாக்லெண்ட்கள்) தடைசெய்யப்பட்ட கிறிஸ்துவ சமய உட்பிரிவுடன் தொடர்பில் இருப்பதற்கு வழிவகுத்தது, இந்த தடைசெய்யப்பட்ட உட்பிரிவின் தீவிரமிக்க சேவைகள், உடல் உடல் உணர்விழப்பில் இறுதியடைந்தது, மேலும் சமயம் மற்றும் பாலுணர்வு பரவசம் இதன் சமயசடங்குகளில் ஒன்று சேர்ந்துள்ளது என்ற புரளிகளுக்கும் வழிவகுத்தது. க்ஹெலிஸ்டுகளில் ஒருவரான ரஸ்புடினின் வாழ்க்கை முடிவுறுவதற்கு அவரது மதிப்பு உரிமை அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம் என்ற
(வரலாற்று நிபுணர்களால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கும்) சந்தேகங்கள் உள்ளது. அலெக்ஸாண்டர் குக்கோவ், சட்டவிரோதமான மற்றும் வெறியாட்ட சமய உட்பிரிவில் உறுப்பினராக இருந்ததற்காக ரஸ்புடினுக்கு தண்டனையளித்துள்ளார். இந்த டிசர், அவதூறின் மிகவும் உண்மையான அச்சுறுத்தலில் அடையாளம் காணப்பட்டார், மேலும் அவரது சொந்த விசாரணைகளின் மூலம் உத்தரவிட்டாலும் அது நிகழவில்லை, இறுதியில், ரஸ்புடினை அவரது தாக்கத்தின் நிலையில் இருந்து விடுவித்தார்; மேலும் நேர்மாறாக "அழுத்துவதின் மேல் கவனம் இல்லாமல் இருந்ததற்காக" அவரது மந்திரியை பதவி நீக்கம் செய்தார் (அப்போதிருந்த நிக்கோலஸிற்கான சிறந்த முன்னுரிமையாக தணிக்கை செய்தல் இருந்தது). பின்னர் அவர், இந்த நிகழ்ச்சியானது வாதத்திற்கு தனியாக மூடப்பட்டு விட்டது என உச்சரித்தார்.[6]

இவர் துறவிமடத்தில் இருந்து வெளியேறிய பிறகு விரைவில், மக்கரி என்று பெயரிடப்பட்ட ஒரு சமயத்தொடர்புள்ள மனிதரை ரஸ்புடின் காணச்சென்றார், அவரது குடில் மிக அருகில் இருந்தது. மக்கரி, ரஸ்புடினின் மேல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டிருந்தார், மேலும் அவருக்குப் பின்னால் தானாகவே உருமாதிரியாகச் செயல்பட்டார். ரஸ்புடின் 1889 இல், பிரஸ்கோவியா ஃபியோடோரோவ்னா டுப்ரோவினாவை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு டிமிட்ரி, வர்வாரா மற்றும் மரியா என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். ரஸ்புடின், மற்றொரு பெண்ணுடனும் மற்றொரு குழந்தைக்கு தந்தையானார். 1901 இல், ஒரு ஸ்ட்ரான்க் காக (அல்லது யாத்திரிகராக) போக்ரோவ்ஸ்கோயின் இல்லத்தில் இருந்து அவர் வெளியேறினார், அவர் பயணம் செய்த நேரத்தில் போது, கிரீஸ் மற்றும் ஜெருசலத்திற்கு ரஸ்புடின் பயணித்தார். 1903 இல், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை ரஸ்புடின் அடைந்தார், அங்குதான் ரஸ்புடின் அவரது குணப்படுத்துதல் மற்றும் தீர்க்கதரிசிகுரிய ஆற்றல்களுடன் ஒரு ஸ்டாரெட்ஸ் ஸாக (அல்லது சமயதொடர்புள்ள மனிதராக) மக்களின் எதிர்பார்ப்பைப் படிப்படியாகப் பெற்றார்.

அலெக்ஸிக்கு குணப்படுத்துதல்

ரஸ்புடின்
ரஸ்புடின், டிசரெவிச் அலெக்ஸியின் நோயைப் பற்றி அறியும் போது, சைபீரியாவில் உள்ள யாத்திரீகராக நீண்ட பயணம் செய்திருந்தார். அலெக்ஸிக்கு இரத்தம் உறையா நோய் இருந்தது பற்றி, 1904 இல் எல்லோராலும் அறியப்படவில்லை, அலெக்ஸியின் கொள்ளுப்பாட்டியான பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் மரபில் இருந்து பரவலாக ஐரோப்பிய அரச குடும்பத்தினர் பலருக்கு இந்த நோய் தாக்கியிருந்தது. அலெக்ஸியை குணப்படுத்துவதற்கு மருத்துவர்கள் உதவி புரியாத போது, டசரிட்சா அனைத்து பகுதியில் இருந்தும் உதவியை நாடினார், இறுதியில் அவரது நெருங்கிய தோழியான அன்னா விருபோவாவின் மூலம், 1905 இல், தெய்வசக்தியுடைய உழவரும் குணப்படுத்துபவருமான ரஸ்புடினின் உதவியைக் கொண்டார்.[7] அலெக்ஸி இறந்து விடுவார் என மருத்துவர்கள் கணித்திருந்தாலும், இறைவழிபாடு மூலமாக குணப்படுத்தும் திறமையை சொந்தமாகப் பெற்றிருப்பதாகவும், அதன் மூலம் உண்மையில் சிறுவனுக்கு சில நோவுதணிப்பை கொடுக்க முடியும் எனவும் ரஸ்புடின் கூறினார்.[7] ஒவ்வொரு சமயமும், சிறுவன் காயமுறும் போது, உடலின் உள்ளேயோ அல்லது வெளியிலோ இரத்தக்கசிவு ஏற்பட்டது, ஆனால் ரஸ்புடினை டிசரிட்சா அழைத்த பிறகு, இந்தப் பிரச்சனையில் இருந்து டிசரிவிச் சரிபடுத்தப்பட்டார்.[சான்று தேவை] இதன் மூலம், அலெக்ஸியை ரஸ்புடின் பயனுள்ள முறையில் குணப்படுத்துகிறார் எனத் தெரிந்தது.


நாத்திகவாதிகள் அதை அவர் அறிதுயில்நிலையில் செய்திருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர், ஒரு ஆய்வின் படி, உண்மையில் அது அறிகுறிகளைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் அது அழுத்த நிலைகளைக் குறைக்கின்றது, மேலும் ஆகையால் இரத்தம் உறையா நோயின் நோய்க்குறியியலைக் குறைக்கிறது[8]. எனினும், 1912 இல், போலந்தின் ஸ்பாலாவில் குறிப்பிட்ட முறையில் சமாதிப் பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில், ரஸ்புடின் சைபீரியாவில் அவரது இல்லத்திற்கு ஒரு தந்திச் செய்தியை அனுப்பினார், இதன்மூலம் துன்பம் எளிதாகும் என அவர் நம்பினார். "மருத்துவர்கள் அவரை அதிகமாக தொல்லையளிக்க அனுமதிக்க வேண்டாம்; அவர் ஓய்வெடுக்கட்டும்" போன்ற ஆலோசனைகளை உள்ளடக்கி அவரது நடைமுறைக்கேற்ற அறிவுரை இருக்கும். இதுவே அலெக்ஸிக்கு நிம்மதியளிக்க உதவியாக இருந்தது என எண்ணப்படுகிறது, மேலும் குழந்தையின் சொந்தமான இயற்கையாகக் குணப்படுத்தும் செயல்பாடின் சில தெளிவிற்கும் இடமளித்தது.[9] ரஸ்புடின், சிறுவனுக்கு சிகிச்சையளிப்பதற்கு
அட்டைகளை பயன்படுத்த முயற்சிக்கிறார் என உண்மையாக இருக்கக்கூடிய ஆலோசனையை பலர் வழங்கினர். அட்டையின் உமிழ்நீரானது, ஹிருதின் போன்ற உறைவு எதிர்ப்பிகளைக் கொண்டுள்ளது, இந்த சிகிச்சையானது, நோவுதணிப்பதற்குப் பதிலாக அலெக்ஸியின் இரத்தம் உறையா நோயை பெருமளவு மோசமாக்கும் என அதிகமாகக் கூறப்பட்டது. அக்காலத்தில் புதிதாகக் கிடைக்கப்பெறும் (1899 இல் இருந்து) வலி-நிவாரண (நோவகற்றும் மருந்து) "அதிசய மருந்தான" ஆஸ்பிரினின் ஆதிக்கத்தை உள்ளிட்ட ரஸ்புடினின் குணப்படுத்தும் ஆலோசனைகளை டியர்முய்டு ஜெஃப்ரீஸ் குறிப்பிடுக் காட்டுகிறார். ஆஸ்பிரின் மேலும் ஒரு உறைவு எதிர்பியாக உள்ளது, இந்த இடையீடானது, அலெக்ஸியாவின் மூட்டுகளின் வீக்கம் மற்று வலிக்கு காராணமாகும் மூட்டு இரத்தக் கட்டை மட்டுப்படுத்துவதற்கு உதவியாக உள்ளது.[10]

டிசர், ரஸ்புடினை "அவரது நண்பராகவும்", ஒரு "தெய்வீகமான மனிதராகவும்" குறிப்பிட்டார், அந்த நம்பிக்கையின் அடையாளமாக, அவரது குடும்பமானது ரஸ்புடினைப் பின்பற்றியது. ரஸ்புடின், அலெக்ஸாண்டிராவின்[11] முக்கியம் வாய்ந்த மனிதராகவும், அரசியல் செல்வாக்கு கொண்டவராகவும் இருந்தார், மேலும் டிசர் மற்றும் டிசரிட்சா இருவரும், ரஸ்புடினை ஒரு கடவுளின் மனிதர் என்றும், ஒரு சமயம்சார்ந்த தீர்க்கதரிசி என்றும் நம்பினர். ரஸ்புடினின் வழியாகக் கடவுள் பேசுவதாக, அலெக்ஸாண்டிரா நம்பினார். ஐயத்துக்கிடமின்றி, இந்த உறவானது ரஷ்ய வைதீகமான தேவாலயம் மற்றும் ரஷ்ய தலைமைப் பதவிக்கு இடையில் மிகவும் பலமான, சம்பிரதாயமான, மிகவும் பழமையான பிணைப்பின் சந்தர்ப்பமாகப் பார்க்கப்பட்டது. டிசரிட்சாவின் ஜெர்மன்-சீர்த்திருத்த பிறப்பிடத்தைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டுமென்பது மற்றொரு முக்கியமான காரணக்கூறாகும்: அதாவது, இறைவழிபாடின் குணப்படுத்தும் ஆற்றல்களின் நம்பிக்கையின் வைதீகமான சமயம் கொடுக்கும் சிறந்த பங்கை, டிசரிட்சாவின் புதிய வைதீகமான வெளிப்பார்வையின் மூலம் கண்டிப்பாக உயர்ந்த அளவில் அவர் மயக்கப்பட்டிருந்தார்.

சர்ச்சை

ஆர்வலர்கள் பலருள் ரஸ்புடின், 1914
ரஷ்புடின், விரைவில் ஒரு சர்ச்சைக்குரிய பிரபலமாக மாறினார், அதாவது முடியாட்சிக் கோட்பாளர், முடியாட்சியின் எதிர்ப்பாளர், அரசியல் புரட்சியில் ஈடுபடுபவர் மற்றும் பிற அரசியல் சார்ந்த அமைப்புகள் மற்றும் ஆர்வங்களில் ஈடுபடும் கடுமையான அரசியல் போராட்டங்களின் எடுத்துக்காட்டாக ரஸ்புடின் இருந்தார். அரச குடும்பத்தின் மேல் வரம்பு மீறிய அரசியல் ஆதிக்கத்திற்கு (கன்னித்துறவியை கற்பழித்தது உள்ளிட்ட)[12] ஒரு கட்டுப்பாடற்ற பாலுணர்வு வாழ்க்கையில் இருந்து வரிசைப்படுத்தப்பட்டு, பல்வேறு தவறான செயல்களுக்காக பல மேம்பட்ட நபர்களின் மூலம் ரஸ்புடின் குற்றஞ்சாட்டப்பட்டார்.[சான்று தேவை]

ரஸ்புடின் மூலமாக ஈர்க்கப்பட்டிருந்தாலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரமுகர்கள் ரஸ்புடினை பரவலாக ஏற்றுக்கொள்ளவில்லை: அரச குடும்பத்துடன் பழகுவதற்கு ரஸ்புடின் ஏற்றவர் அல்ல என்றும், அவரும் ரஷ்ய வைதீகமான தேவாலயமும் ஒரு பதற்றமான உறவைக் கொண்டிருப்பதாகவும் கூறினர். பல்வேறான ஒழுக்ககேடான அல்லது மோசமான பயிற்சிகளின் ரஸ்புடினை குற்றஞ்சாட்டி, ஹோலி சைனோட் ரஸ்புடினை தொடர்ந்து தாக்கியது. ரஸ்புடின் ஒரு நீதிமன்ற
ஆணையாளராக இருந்ததால், அவரும், அவருடைய குடியிருப்பும் 24-மணி நேர கண்காணிப்பிலேயே இருந்தது, மேலும், அதன் விளைவாக, பிரபலமான "படிக்கட்டுகளின் குறிப்புகளின்" அமைவில், அவரது வாழ்க்கை பாணி பற்றி, அங்கு சில நம்பிக்கைக்குரிய சான்றுகள் உள்ளன — காவல்துறை உளவாளிகளிடம் இருந்து கொடுக்கப்பட்ட, டிசருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டாத, ஆனால் செய்தித்தாள்களில் வெளியான செய்திகளும் உள்ளன.

ரஸ்புடினின் மகள் மரியாவைப் பொறுத்தவரை, ரஸ்புடின் க்ஹெலிஸ்டி சயம உட்பிரிவில் "காணப்பட்டார்", ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார். "ரீஜாய்சிங்" (радение) என அறியப்படும் ஒரு க்ஹெலிஸ்ட் பயிற்சியானது, குழுவான பாலுணர்வு செயல்பாடுகளை வசீகரிப்பதன் மூலம் மனித பாலுணர்வு தூண்டுதல்களை வெற்றிபெற முடியும் சமய சடங்காக உள்ளது, அதனால் மனமார ஒன்றிணைந்து பாவம் செய்வதால், மனிதனின் மேல் இந்தப் பாவத்தில் ஆற்றலானது இரத்து செய்யப்படுகிறது.[13] தற்செயலாய், அவர் எழுதுகையில், அவரது தந்தை அசாதாரணமான நீண்ட ஆணுறுப்பைக் கொண்டிருந்தாகவும் எழுதியுள்ளார்.[மேற்கோள் தேவை] ரஸ்புடின், தானாகவே-கசையடி கொள்வதன் மூலமாக இறையருள் உணரப்படும் என நம்பப்படுவதன் மூலமாக குறிப்பாக திகைக்கச்செய்துள்ளார்.

பல ஆன்மிக-மனதுடைய ரஷ்யர்களைப் போன்றே, ரஸ்புடின் கடவுளின் ஆன்மாவை உள்ளேயே தேடுவதைக் காட்டிலும் சமய குருக்கள் மற்றும் தேவாலயங்கள் மீது குறைவான சார்ந்திருக்கும் பாவ விமோசனம் பற்றிப் பேசினார். மேலும் அவர் பாவம் மற்றும் செய்த தவறுக்கு வருந்துதல் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்றும், பாவ விமோசனத்திற்கு இது முக்கியமானது என்றும் வலியுறுத்தினார். ஆகையால், சபலத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மையை (மேலும் அவருக்கு தனிப்பட்ட முறையில், இது பாலுறவு மற்றும் ஆல்ஹகாலைக் குறிக்கிறது) அவர் வலியுறுத்தினார், (கர்வத்தின் பாவத்தை மறையச் செய்வதற்கு) அவமானத்தின் நோக்கங்களுக்காக் கூட, தவறு நடந்ததற்கு வருந்துதல் மற்றும் பாவ விமோசனத்திற்கு செயல்படுவதற்கு இது தேவைப்படுகிறது. ரஸ்புடின், அரசியல் பெரழிவிற்கு முக்கியமாக நிகழக்கூடிய ஒன்றாக மற்றும் நன்னெறி சார்ந்த பார்வையுடன் இரு பக்கங்களிலும், போருக்கு ஆழமான எதிர்ப்பாளர் ஆவார். முதல் உலகப் போர் நடந்த ஆண்டுகளின் போது, ரஸ்புடினின் அதிகப்படியான குடிமயக்கம், பாகுபாடற்ற பாலியல் முறை மற்றும் (அவரது குடியிருப்பிற்கு கூட்டமாக வரும்
மனுதாரர்களுக்கு உதவுவதற்காக பிரதி உபகாரமாக) இலஞ்சங்களை ஏற்றுக் கொள்ளும் விருப்பம், அதே போல் அவரை விமர்சித்தவர்களை பதிவி நீக்கம் செய்த அவரது விளைவுகளானது, அவரை மென்மேலும் குற்றங்காண்பவராக உருவாக்கியது. மெய்யெனத் தோன்றும் பாவம் வழியாக தெய்வீக அருளை முயன்று பெறுவது, இவரது இரகசிய போதனைமுறைகளின் ஒன்றாக இருந்தது, சமுதாயப் பெண்களுகளின் அவரது உள் வட்டத்திற்கு அறிவுரை (மற்றும் பயிற்சியும்) கூற விளைந்தது.

முதல் உலகப்போரின் போது, நீதிமன்றத்தில் நாட்டுப்பற்றில்லாத தாக்கத்தால் ரஸ்புடின் மற்றவர் மேல் பழிசுமத்தும் சூழ்நிலைக்கு ஆளானார்; இதற்கிடையில், ஜெர்மனி வீழ்ச்சியடைந்து டிசரிட்சா மதிப்பற்று விட்டார், மேலும் அவர் ஜெர்மனியால் பயன்படுத்தப்பட்ட உளவாளியாக நடித்ததற்கு குற்றஞ்சாட்டப்பட்டார்.

போருக்கு முன்பு, படைவீரர்களுக்கு முன்பு சென்று அவர்களை ஆசிர்வதிக்கும் ஆர்வத்தை ரஸ்புடின் வெளிப்படுத்திய போது, அவ்வாறு ரஸ்புடின் துணிந்து செய்தால் அவரைத் தூக்கில் இடுமாறு படைத்தளபதியான கிராண்ட் டக் நிக்கோலஸ் உறுதியளித்தார். டிசர் தனிப்பட்ட முறையில் ஆணையை எடுக்காதவரை, ரஷ்ய படையினர் வெற்றியடைய மாட்டார்கள் என்ற செய்தியை ரஸ்புடின் வெளிப்படுத்தினார். இதனுடன், மோசமாகத் தயார்ப்படுத்தப்பட்ட டிசர் நிக்கோலஸ், அவருக்காகவும் ரஷ்யாவிற்காகவும் மிகக் கொடிய விளைவுகளுடன், ரஷ்ய இராணுவத்தை தனிப்பட்ட முறையில் ஆணையை ஏற்குமாறு கூறினார்.

டிசர் நிக்கோலஸ் II அங்கிருந்து விலகிசென்று இருக்கையில், டிசரிட்சா அலெக்ஸாண்டிரா ரஸ்புடினின் மேல் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டார். விரைவில் அவர், அலெக்ஸாண்டிராவின் நம்பகமான மற்றும் தனிப்பட்ட ஆலோசகராக மாறினார், மேலும் அவர் தானாகவே தேர்ந்தெடுத்த சில நபர்களை அரசாங்க அதிகாரிகளாக நியமிக்கும் படி டிசர்ட்சாவை நம்பவைத்தார். அவரது ஆற்றலின் முன்னேற்றத்தில் கூடுதலாக, அரசியல் சலுகைகளை அளிப்பதற்கு பிரதி உபகாரமாக மேல்-வகுப்பு பெண்ணுடன் ரஸ்புடின் கூடிவாழ்ந்தார். முதல் உலகப்போர் காரணமாகவும், பியூடலிசத்தின் வலுவற்ற விளைவுகளாலும், மேலும் இரகசியமான அரசாங்க அதிகாரிகளின் ஆட்சி காரணமாகவும், ரஷ்யாவின் பொருளாதாரமானது மிகவும் துரிதமான வேகத்தில் நலிவுற்றது. அச்சமயத்தில், அலெக்ஸாண்டிராவின் செல்வாக்கில் ரஸ்புடின் இருப்பதைக் காரணம் காட்டி பலர், அலெக்ஸாண்டிரா மற்றும் ரஸ்புடினைக் குற்றஞ்சாட்டினர். இங்கு அதற்கு கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டு, பின்வருமாறு:

விலாடிமி புரிஷ்கெவிச் என்பவர், டுமாவில் கருத்தைக் கூறுவதில் அச்சம் இல்லாதவராக இருந்தார். நவம்பர் 19, 1916 இல், டுமாவில் புரிஷ்கெவிச் பரபரப்பட்டும் சொற்பொழிவை ஆற்றினார், அந்த சொற்பொழிவில் அவர் பேசியதாவது, "டிசரின் மந்திரிகள் கைப்பாவைகளாக மாறி உள்ளனர், அந்தக் கைப்பாவைகள் கயிறானது, ரஷ்யாவின் படுமோசமான அறிவாளியான ரஸ்புடின் மற்றும் டிசரிட்சாவான பேரரசி அலெக்ஸாண்டிரா பியோடோரோவ்னாவின் கைகளில் உறுதியாகப் பிடிக்கப்படுள்ளது ... ரஷ்ய சிம்மாசனத்தில் ஜெர்மனியர்களான இவர்கள் எஞ்சியுள்ளனர், மேலும் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் விருப்பத்திற்கு ஒவ்வாதவர்களாக உள்ளனர்" என்று உரைத்தார். அந்த சொற்பொழிவில் கலந்து கொண்ட பெலிக்ஸ் யூஸுபுவ், பின்னர் புரிஷ்கெவிச்சைத் தொடர்பு கொண்டு, விரைவில் ரஸ்புடினைக் கொலை செய்வதில் பங்கேற்றபதற்கும் ஒத்துக்கொண்டார்.[14]

அரச குடும்பத்தின் மேல் ரஸ்புடினின் செல்வாக்கானது, அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது, மேலும் அரசகுலத்தின் வாய்மை பலவீனமாவதை விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகை எழுத்தாளர்கள் மூலமாக ரோமனோவ்கள், முழுமையான அரசியல் அதிகாரத்தைக் கொடுப்பதற்கும், ரஷ்யாவின் வைதீகமான தேவாலயத்தை மாநிலத்தில் இருந்து பிரிப்பதற்கும் வலுக்கட்டாயப்படுத்தினர். சமயகுருமார்களின் உறுப்பினர்களுடன் பொது விவாதம் மூலமாக அவர்களது கொள்கைப் பிரச்சாரத்திற்கு, டிசர் மற்றும் டிசரிட்சா இருவரிடமும் அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பற்றி தற்பெருமை கொள்வதற்கு விருப்பமில்லாமல் ரஸ்புடின் தனது பங்களிப்பை அளித்தார், மேலும் அவரது ஒழுக்ககேடு மற்றும் மிகவும் பொதுவான வாழ்க்கைமுறையும் இதற்கு காரணமாகும். டிசரை சுற்றி செல்வாக்கான நிலைகளில் இருக்கும் உயர்குலத்தினரும், டூமாவின் சில கட்சியினரும் நீதிமன்றத்தில் இருந்து ரஸ்புடினை நீக்குவதற்காக ஆர்பரித்தனர். கவனக்குறைவின் காரணமாக, ரஸ்புடின் அவருக்கான மரியாதையின் குறைக்கிற டிசரின் பொருள்களை சேர்த்துக் கொண்டார்.

மனிதக்கொலை
ரஸ்புடினின் இறப்பை சுற்றியுள்ள கட்டுக்கதைகள், அவரது வாழ்க்கையைக் காட்டிலும் மிகவும் இரகசியமானதாகவும், விபரீதமானதாகவும் உள்ளது. கிரேக் கிங்கின் 1996 புத்தகமான த மேன் ஹூ கில்லுடு ரஸ்புடினை ப் பொறுத்தவரை, சைபீரியாவில் துரா ஆற்றின் பக்கம் உள்ள அவரது சொந்த ஊரான போக்ரோவ்ஸ்கோயிக்கு அவரது மனைவி மற்றும் குழுந்தைகளை ரஸ்புடின் பார்க்க சென்ற போது, நடந்த முந்தைய முயற்சி ரஸ்புடினின் வாழ்க்கையில் தோல்வியடைந்தது. ஜூன் 29, 1914 இல், ரஸ்புடின் ஒரு தந்திச் செய்தியை பெற்ற பிறகோ அல்லது தேவாலயத்தில் இருந்து வெளியேறும் போதோ, முன்னாள் விலைமகளாக இருந்து துறவிமட லியோடரின் சீடராக மாறிய, கேனியா குசேவா மூலம் தீடிரெனத் தாக்கப்பட்டார். லியோடர், ஒருகாலத்தில் ரஸ்புடினின் நண்பராவார், ஆனால் அவருடைய நடத்தையாலும், அரச குடும்பத்தைப் பற்றிய அவமரியாதையான பேச்சாலும் ரஸ்புடினின் மேல் முழுமையாக வெறுப்படைந்து, ஒரு பரஸ்பர ஆதரவுக் குழுவை அமைப்பதற்கு, ரஸ்புடின் மூலமாக தீங்கிழைக்கப்பட்ட பெண்ணின் உதவியை நாடினார். குசேவா, ரஸ்புடினின் அடிவயிற்றில் கத்தியால் குத்தினார், இதனால் அவரது குடல்கள் வெளியே வந்து, இறந்து விடும் காயம் உண்டானது. குசேவா தனது வெற்றியில் திருப்தியடைந்து, "நான் கிறிஸ்துவுக்கு எதிரானவரைக்! கொன்று விட்டேன்" என உத்தேசமாகக் கத்தினார்.

எனினும், தீவிரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ரஸ்புடின் உயிர் பிழைத்தார். "அவரது உடலின் தையல்களானது, வெறுக்கத்தக்க குடியானவனின் ஆன்மாவாக உள்ளது" என அவர்உயிர்பிழைத்துக் கொண்டது பற்றிக் கூறப்பட்டது. அவரது மகள் மரியா தனது வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிட்டிருந்த போது, அதற்குப் பிறகு ரஸ்புடின் முன்பிருந்தது போல் இல்லை: அவர் மிகவும் எளிதாக சோர்வடைவதாகக் காணப்பட்டார், மேலும் அடிக்கடி வலி நிவாரணத்திற்காக அபின் உபயோகித்தார்.


ரஸ்புடின் கவரப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும், மோய்கா ஆறுடன் சேர்ந்த மோய்கா அரண்மனை
ரஸ்புடினின் கொலையானது, ஒரு கட்டுக்கதையாக மாறியது, அதில் சில ரஸ்புடினை கொலை செய்தவரைக் கண்டுடித்திருந்தது, இதனால் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்று நுணுக்கமாக ஆராய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. டிசம்பர் 16, 1916 இல், டிசரிட்சாவின் மேல் ரஸ்புடினிடம் இருந்த செல்வாக்கானது, பேரரசுக்கு அவரின் மேல் மிகவும் அதிகமான அபாயகரத்தை உண்டு செய்தது, இதனால் இளவரசர் பெலிக்ஸ் யஸுபூவ் மூலமாக வழிநடத்தப்பட்ட உயர்குலத்தோரின் குழுவினர் மற்றும் கொள்ளுப்பேரன் டிமிட்ரி பவ்லோவிச் மற்றும் அவர்களது அரசியல் ஆதரவாளரான விலாடிமிர் புரிஷ்கெவிச், ஆகியோர், யஸூபூவ்ஸின்' மோய்கா அரண்மனை[15] க்கு ரஸ்புடினை வெளிப்படையாய் அழைத்துள்ளனர், பிலெக்ஸியின் மனைவி இளவரசி இரீனா, நண்பர்களை வரவேற்று பரிசளிப்பதாகக் கூறி இவ்வாறு ரஸ்புடினை வரவழைத்தனர் (உண்மையில் அப்போது, இளவரசி கிரீமியாவை விட்டு வெளியே சென்று இருந்தார்).[16] அக்குழுவினர், ரஸ்புடினை நிலவறைக்குக் கூட்டிச் சென்றுள்ளது, அங்கு அவருக்கு அதிக அளவிளான விஷம் கலந்த கேக்குகள் மற்றும் சிகப்பு வைனை அவர்கள் பரிமாறியுள்ளனர். அந்தக் கட்டுக்கதையைப் பொறுத்தவரை, ஐந்து நபர்களைக் கொல்லுவதற்குப் போதுமான விஷத்தை வாசிலி மக்லாகோவ் வழங்கிய போதும், ரஸ்புடின் அதனால் பாதிக்கப்படவில்லை. இதற்கு நேர்மாறாக, மரியா தனது சுய வரலாற்றில், தனது தந்தை விஷத்தை உண்டோ அல்லது அருந்தியோ இருந்தால், அது கேக்குகள் அல்லது வைன் மூலம் உறுதியாய் இருக்கமுடியாது எனக்கூறியுள்ளார், ஏனெனில் குசேவாவினால் தாக்கப்பட்ட பிறகு ரஸ்புடின் அதியமிலத்தினால் துன்பமுற்றதாகவும், அதனால் இனிப்புடன் கூடிய எந்த பொருளையும் தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. உண்மையில், அவர் கண்டிப்பாக விஷம் அருந்தியிருப்பதில் சந்தேகத்தை மரியா வெளிப்படுத்தியுள்ளார். மிதிரிடடிசம் காரணமாக விஷத்தில் பாதிக்கப்படாத திறமையை ரஸ்புடின் வளர்த்துக் கொண்டார் என மற்றொரு வழியில் அறிவுறுத்தப்பட்டது.[1]

யஸுபுவ் தனது பணியை நிறைவு செய்ய உறுதியாய் இருந்து, ரஸ்புடின் காலை வரை பிழைத்திருக்கக் கூடும் என ஆவலாக இருந்தார், இந்த சதியைச் செய்தவர்கள் அவரது உடலை மறைத்து வைப்பதற்கு நேரம் இல்லாத காரணத்தால் அங்கிருந்து விலகி சென்று விட்டனர். இதனால் மற்றவர்களுடன் ஆலோசிப்பதற்கு யஸுபுவ் மேல்தளத்திற்கு ஓடினார், பின்னர் துப்பாக்கியால் ரஸ்புடினை சுடுவதற்கு மீண்டும் கீழே இறங்கி வந்தார். இதனால் ரஸ்புடின் கீழே விழுந்தார், மேலும் சிறிது நேரத்திற்கு சக தோழர் அந்த இடத்தை விட்டு விலகினார். யஸுபூவ், அங்கிருந்து அவரது மேலங்கி இல்லாமல் புறப்பட்டார், ஆனால் அதில் ஒன்றை எடுத்து வருவதற்கு அங்கு திரும்ப முடிவெடுத்தார், மேலும் அந்த உடலை ஆய்வதற்காக அந்த இடத்திற்கு அவர் சென்றார். திடீரென, ரஸ்புடின் அவரது கண்களைத் திறந்து இளவரசர் யஸுபுவ்வின் மேல் பாய்ந்தார். இளவரசர் யஸூபுவ்வை ரஸ்புடின் கைப்பற்றி, அவரை அச்சுறுத்தும் வகையில் யஸூபுவ்வின் காதில் "நீ கெட்டவன்" எனக்கூறி, அவரது குரல்வளையை நெறிக்க முயற்சிக்கிறார். எனினும், அந்த சமயத்தில், அந்த சதித்திட்டத்தை நிகழ்த்திய மற்றவர்கள் அங்கு வந்து ரஸ்புடினை சுட்டனர். மூன்று முறை பின்னால் அவரைத் தாக்கிய பிறகு, மீண்டும் ஒருமுறை ரஸ்புடின் கீழே விழுந்தார். அவரது உடலுக்கு அருகில் இருந்த அந்தக் குழுவினர், அவர் இன்னும் இறக்காமல் இருப்பதையும், எழுந்திருக்க சிரமப்படுவதையும் உணர்ந்தனர். ரஸ்புடினைக் கட்டுப்படுத்துவதற்காக, அவர்கள் ஒன்றிணைந்து அவரது இனப்பெருக்க ஆற்றலை அழித்தனர். ஒரு தரைவிரிப்பில் அவரது உடலை போர்த்திக் கடுப்படுத்திய பிறகு, அவர்கள் ரஸ்புடினை குளிர்ச்சியான நேவா ஆற்றில் எரிந்தனர். ரஸ்புடின், அவரைப் போர்த்தியிருந்த தரைவிரிப்பின் கட்டுக்குள் இருந்து கிழித்துக் கொண்டு வெளியே வந்தார், ஆனால் ஆற்றில் மூழ்கிப் போனார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, விஷம் கொடுக்கப்பட்டு, நான்கு முறைகள் சுடப்பட்டு, மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட ரஸ்புடினின் உடல் நேவா ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டது. அவரது பிரேத பரிசோதனையில், நீரில் மூழ்கி மூச்சுத் திணறியதால் இறப்பு ஏற்பட்டதாக விவரிக்கப்பட்டது. அவரது கைகளானது, மேலே செங்குத்தாக உயர்த்தப்பட்ட நிலையில் இருந்தது, உறைநீரின் கீழே இருந்து வெளியேறுவதற்காக முயற்சித்து இவ்வாறு செய்திருக்கலாம் என யூகிக்கப்பட்டது. உண்மையில் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதும், ஆனால் அவரைக் கொல்வதற்கு விஷம் மட்டும் போதுமானதாக இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் கைப்பற்றப்பட்ட பிறகு அளிக்கப்பட்ட ஒரு அறிக்கையானது, அவரது நுரையீரலில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனால் பகுதியளவு உறைந்திருந்த ஆற்றில் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்பு உயிரோடு இருந்திருப்பார் என்ற யோசனைக்கு ஆதரவளித்தது.[17] பின்னர், டிசரிட்சா அலெக்ஸாண்டிரா டிசர்ஸ்கோயே செலோவின்வின் நிலத்தில் ரஸ்புடினின் உடலை புதைத்து விட்டார், ஆனால், பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து வந்த பணியாளர்கள் குழு, அவர் புதைத்த இடத்தில் இருந்த எஞ்சியவற்றை, அருகில் இருந்த வனத்திற்குள் எடுத்துச் சென்று சாம்பலாக்கி விட்டனர். ரஸ்புடினின் உடல் எரிந்து கொண்டிருக்கையில், அவர் அங்கு தோன்றி நெருப்பில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் எழுந்து நகரும் தெளிவான முயற்சிகள், அங்கு நின்று கொண்டிருந்தவர்களுக்கு பேரச்சத்தை ஏற்படுத்தியது. இந்த விளைவானது, அவரது உடலை சரியாக எரிக்காததால் நிகழ்ந்திருக்கலாம் என காரணம் கற்பிக்கப்பட்டது;[சான்று தேவை] அவரது உடல் அனுபவமற்று இருந்த காரணத்திலாலும், அவரது தசைநார்கள் எரிப்பதற்கு முன்பு வெட்டப்பட்டு இருக்காது. ஆகையால், அவரது உடல் வெப்பமடைந்த போது, தசைநார்கள் சுருங்கி, அவர்களுடைய கால்கள் மடங்குவதற்கு தள்ளியிருக்கிறது, மேலும் அவரது உடலின் இடுப்புப்பகுதியில் மடங்கி இருக்கிறது, இதன் விளைவாக அவர் எழுந்து அமர்வது போல் தோற்றம் உருவாகியுள்ளது. இந்த இறுதி வாய்ப்பு மட்டுமே, கட்டுக்கதைகளும், இரகசியங்களும் ரஸ்புடினைச் சுற்றி உருவாவதற்குக் காரணமாக அமைந்தது, இதனால் அவர் இறந்த பிறகும் தொடர்ந்து உயிர் வாழ்கிறார் என்றும் கருதப்படுகிறது.

புதிய ஆதாரம்

இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.

ரஸ்புடினின் பிரேத பரிசோதனை புகைப்படம், அவரது நெத்தியில் குண்டு துவாரத்தைக் காட்டுகிறது
பெலிக்ஸ் யஸுபுவ் மூலமாகக் கொல்லப்பட்ட விவரங்கள் எப்போதுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர் பல்வேறு முறை தனது அறிக்கையை மாற்றியுரைத்தார்; டிசம்பர் 16, 1916 இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் காவல்துறையினர் கொடுத்த அறிக்கையில், 1917 இல் கிரீமியாவுற்கு நாடுகடத்தப்பட்ட போது கொடுத்த அறிக்கையை கூறினர், இறுதியாக, அவரது 1927 புத்தகத்தில், சத்தியப் பிரமானத்தின் ஒரு அறிக்கையைக் கொடுத்துள்ளார், 1934 இன் வழக்கு முடிவுகளுக்கு, 1965 வெளிவந்த அனைத்தும் மாறுபட்டு விரைவுபடுத்தப்பட்டுள்ளது, மேலும் தற்போது வரை நம்பத்தகுந்த வேறு எந்தத் தகவலும் இல்லை, ஆதாரம்-சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டே கிடைக்கப்பெறுகின்றன.

1916 இல், பேராசிரியர் கோஸோரொட்வ் மூலமாக வெளியிடப்படாத பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பொறுத்தவரையும், அதே போன்று 1993 இல் டாக்டர் விலாடிமிர் ஜாஹரோவ் மற்றும் 2004/05 இல் பேராசிரியர் டெரிக் பவுண்டர் ஆகியோரால் பின்னர் நடந்த திறனாய்வுகளிலும், ரஸ்புடினின் அடிவயிற்றில் எந்த விஷமும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொடிய விஷமானது, போறணையில் அவரது உடல் சுடப்பட்டதால் சுடப்பட்டதால் ஏற்பட்ட உயர்ந்த வெப்பத்தினால ஆவியாயிருக்கக்கூடும் என இதில் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கமாக இருந்தது.

அவர் மூழ்கியதால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி விளக்கப்படவில்லை, ஏனெனில் அவரது நுரையீரலில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி பிரேதப் பரிசோதனையில் கூறப்படவில்லை. அனைத்து மூன்று மூலக்கூறுகளும், ரஸ்புடின் கூர்மையான ஆயுதத்தால் அடிக்கப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளார் என்பதை ஏற்றுக் கொள்கிறது, ஆனால், மிகவும் முக்கியமாக, எத்தனைக் கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன என்பதில் முரண்பாடுகள் உள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பானது, ரஸ்புடினின் இறப்பைப் பற்றியக் கூற்று மற்றும் ஆதாரத்தை முழுமையாக குறிப்பிடத்தக்க வகையில் மாற்றுகிறது. 1916 இல், லண்டன் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு இடையில் பிரிட்டிஷ் நுண்ணாய்வு அறிக்கைகளில், ரஷ்ய அரசாங்கத்திற்கு சாதகமான பிரிட்டிஷ் மந்திரிகளை ரஸ்புடின் பதிவியில் இருந்து நீக்கியது மட்டுமே பிரிட்டிஷ்ஷின் தீவிரமான கருத்தாக இல்லை, ஆனால் அதைவிட முக்கியமாக, முதல் உலகப்போரில் ரஷ்யப் படையினரை மீண்டு அழைக்குமாறு ரஸ்புடின் ஆணையிட்டதைக் குறிப்பிட்டுக் கூறப்பட்டிருந்தது. இந்த பின்வாங்கலால், ஜெர்மானியர்கள் அவர்களது கிழக்கு முன்னணிப் படைகளை மேற்கு முன்னனிப் படைக்கு மாற்றுவதற்கு இடமளித்தது, இது நேசநாடுகளை மொத்தமாக தோற்கடிப்பதற்கு வழிவகுக்கும் என்ற அச்சுறுத்தலுக்கும் வழிவகுத்தது. இது உண்மையில் ரஸ்புடினின் உள்நோக்கமாக இருக்கலாம் அல்லது (டிசரிட்சாவின் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக) போரில் இருக்கும் அதிக எண்ணிகையான நபர்களைப் பற்றி கவலை கொண்டிருக்கலாம், ஆனால் போரின் விளைவுக்கு ரஸ்புடின் அச்சுறுத்தலாக இருந்தார் என்பது தெளிவாகிறது.

பேராசிரியர் பவுண்டர், ரஸ்புடினின் உடலில் நான்கு முறை சுடப்பட்டுள்ளது, அதில் (அவரது நெற்றியில் சுடப்பட்ட) மூன்றாவது குண்டு உடனடி மரணத்தை ஏற்படுத்தியிருக்கும் எனக்கூறினார். இதில் மூன்றாவது சுடப்பட்டது, சதித்திட்டத்தின் சில ஆதாரங்களையும் வழங்கியுள்ளது. பவுண்டரின் பார்வையில், லண்டனின் ஆயுதப்படைத் துறையின் பேரரசைச்சார்ந்த போர் அருங்காட்சியகமானது, அவரது உடலில் காயத்தை ஏற்படுத்திய குண்டுகளில் மூன்றாவது சுடப்பட்டது வேறு ஒரு துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டதாகும் என்பதை ஒத்துக்கொண்டது. அதன் "தேய்த்து எடுக்கப்பட்ட அளவு மற்றும் மேம்பாடு", ஒரு பெரிய முக்கியமான உரையிடப்படாத குண்டாக இருந்ததென அறிவுறுத்தப்பட்டது. அந்த சமயத்தில், அதிகப்படியான துப்பாகிகளில் உறுதியான உலோகத்தால் உரையிடப்பட்ட குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது, ஆனால் பிரிட்டன் அவர்களது அலுவலர்களின் வெப்லே கைத்துப்பாக்கிகளில் முக்கியமான உரையிடப்படாத குண்டுகளைத் தனியாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்தியது. பவுண்டர் இதைப் பற்றி முடிவுக்கு வருகையில், மரணம் விளைவிக்கக்கூடிய அந்த குண்டானது வெப்லே .455 அங்குல உரையிடப்படாத சுற்றாக இருக்கும் என மருத்துவ ஆய்வில் கிடைக்கப்பெற்ற ஆதாரம் மூலம் கூறுனார்.

அச்சமயத்தில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிரிட்டிஷ் சீக்ரெட் இண்டலிஜென்ஸ் சர்வீஸின் (SIS) இரண்டு அலுவலர்கள் இருந்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் SIS நிலையத்தில் பிரிட்டிஷ் அலுவராக பணியாற்றிய துணை அதிகாரி ஆஸ்வால்ட் ரேனரிடம் மட்டும் அச்சமயத்தில் வெப்லே கைத்துப்பாக்கி இருந்தது, எனக் கொலை நடந்த போது இருந்த சான்றுகள் கூறுகின்றன. யஸுபுவ்வின் பழைய பள்ளித் தோழரான ஒரு இளைய ஆங்கிலமனிதனின் (ஆக்ஸ்போர்டில் யஸுபுவ்வைப் பற்றி ரெய்னர் அறிந்திருந்தார்) மேல் சந்தேகப்படுவதாக நிக்கோலஸ் தெரிவிக்கையில், பிரிட்டிஷ் அரசுத் தூதர் சர் ஜார்ஜ் பச்னன் மற்றும் டிசர் நிக்கோலஸுக்கு இடையில் இருந்த சபையோர் மூலம் இக்கூற்று ஆதரவளிக்கப்பட்டது. அச்சமயத்தில் இருந்த இரண்டாவது SIS அலுவலரான கேப்டன் ஸ்டீபன் அலே, 1876 இல் யஸுபுவ் அரண்மனையில் பிறந்தவராவார். இரண்டு குடும்பங்களும் மிகவும் வலுவாக நட்பு கொண்டிருந்ததால், யார் இதற்கு பொறுப்பாளி என்பதில் முடிவுக்கு வருவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

யஸுபுவ்வுடன் ரெய்னர் (மற்றொரு அலுவலர் கேப்டன் ஜான் ஸ்கேலுடன் இணைந்து) வாரக்கணக்கில் சந்தித்து கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதானது, அவர்களது ஓட்டுனர் வில்லியம் காம்ப்டன் மூலமாக அவர்களது வருகைகள் அனைத்து பதிவு செய்யப்பட்டு குறிப்பேடில் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இறுதி பதிவானது, அன்றிரவு கொலை நடந்த பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளது. காம்ப்டன் கூறியபோது, "ரஸ்புடின், ஒரு ரஷ்யரால் சுட்டுக்கொல்லப்படவில்லை என்பது அறியப்பட்ட ஒரு சிறிய கூற்றாகும், ஆனால் ஒரு ஆங்கில மனிதனால் இது செய்யப்பட்டு இருக்கலாம்" என்று கூறினார், மேலும் அந்தக் குற்றத்தைச் செய்தவர் நாட்டின் அதே பகுதியைச் சார்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார், என அவராகவே காம்ப்டன் கூறினார். காம்படனின் சொந்த ஊரில் இருந்து பத்து மைல்கள் தொலைவில் ரெய்னர் பிறந்துள்ளார், அவரது வாழ்க்கை முழுவதும், தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டார், ஆனால் அந்தத் தொழிலில் என்றுமே அவர் பயிற்சி மேற்கொண்டதில்லை என்பது சிறிய சந்தேகமாக உள்ளது.[சான்று தேவை]

கொலை நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு ஸ்கேலுக்கு அலே எழுதிய கடித்தத்தில் கிடைத்த குறிப்பில், திட்டப்படி முழு முயற்சிகான ஆதாரம் அழிக்கப்படவில்லை : "இங்கு நடந்த விசயங்கள் திட்டம் முழுமையாக நடக்கவில்லை என்றாலும், நம்முடைய இலட்சியத்தை முழுமையாக அடைந்து விட்டோம். ... இந்த விசயத்தில் செயல்பட்டதற்கான சில அருவருக்கத்தக்க கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளன. ரெய்னர் இலகுவாக முடிச்சிட்டார், மேலும் நீங்கள் அதைப் பற்றிக் சந்தேகிக்க வேண்டாம்" என்று இருந்தது.

இங்கிலாந்திற்கு அவர் திரும்புகையில், ஓஸ்வால்ட் ரெய்னர் ரஸ்புடினின் கொலையில் பங்கேற்று இருந்ததை அவரது உறவினர் ரோஸ் ஜோன்ஸிடம் கூறியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் அந்த கொலையில் பெற்ற குண்டையும் காட்டினார்.[சான்று தேவை] தீர்மானமான ஆதாரம் கிடைக்காமல் போனது, எனினும் 1961 இல், ரெய்னர் இறக்கும் முன்பு அனைத்து ஆவணங்களையும் எரித்து விட்டார், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது ஒரே மகனும் இறந்து விட்டார்.

மகள்
ரஸ்புடினின் மகள், மரியா ரஸ்புடின் (மேட்ரியோன ரஸ்புடினா) (1898–1977), அக்டோபர் புரட்சிக்குப் பிறகு பிரான்ஸிற்கு குடிபெயர்ந்து விட்டார், அதற்குப் பிறகு U.S.க்கு குடிபெயர்ந்தார், அங்கு ஒரு நடனக்கலைஞராகவும், பின்னர் ஒரு சர்கஸில் புலி-பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அவரது தந்தையைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை[18] மரியா விட்டுச் சென்றுள்ளார், அந்த இடத்தில் ரஸ்புடினின் பெரும்பாலான புனிதருக்குடைய படங்களை வரைந்துள்ளார், ரஸ்புடினின் எதிரிகள் மூலமாக தவறாக விளக்கம் அளிக்கப்பட்டு, அவதூறு பேசியவர்களைச் சார்ந்த பெரும்பாலான எதிர்மறையான கதைகளை வலியுறுத்தி இந்தப் படங்களை அவர் வரைந்திருந்தார்.

பெயர் பொருள்

இந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும். (April 2008)
ரஸ்புடின் என்ற பெயர், ரஷ்யாவின் வழக்கத்திற்கு மாறான துணைப்பெயர் அல்ல, மேலும் இப்பெயர் எந்த வகையிலும் அவப்பேறாகும் கருதப்படவில்லை. ரஷ்யா வில், பெரும்பாலும் கூறப்பட்டது போது இதன் அர்த்தம் "ஒழுக்கக்கேடானது" அல்ல. எனினும், அதே பொருளை ஒத்த ரஷ்ய பெயரெச்சமான ரஸ்புட்னி (распу́тный), இதன் பொருளை "ஒழுக்கேடானது" எனக் குறிக்கிறது— அதே போல் அதற்கு பொருந்தியிருக்கும் "ரஸ்புட்னிக்" என்ற பெயர்சொல்லும் அதேயே குறிக்கிறது. சிலர் அவரது பெயரின் அர்த்தத்தை "தீயொழுக்கம்" என்றும் அறிவுத்துகின்றனர்.[19] இப்பெயருக்கு குறைந்தது இரண்டு விருப்பத்தேர்களான அடிச்சொற்கள் உள்ளன: அதில் ஒன்று "புட்" ஆகும், இது "வழி", "சாலை"யைக் குறிக்கிறது, மேலும் பிற அருகாமைப் பெயர்சொற்களான ரஸ்புட்யே , சாலைகளில் பிரியும் அல்லது நெருங்கும் இடத்தைக் குறிக்கிறது, மேலும் ரஸ்புட்டிட்சா (распу́тица) என்பது, "சகதி சாலைப் பருவத்தைக்" குறிக்கிறது. சில வரலாற்று அறிஞர்கள், ரஸ்புடினின் குடும்பம் பிறந்தது மற்றும் அவரது உடன்பிறந்தவர்கள் இறந்த பகுதியை விளக்கி, ரஸ்புடின் என்பது ஏதாவது ஒரு இடத்தின் பெயராக இருந்திருக்கலாம் என வாதிடுகின்றனர், "இரண்டு ஆறுகள் சந்திக்கும் ஒரு இடத்தை" தோராயமாக தெரிவிப்பதில் இருந்து இவ்வாறு தெரிவிக்கின்றனர். மற்றொரு சாத்தியக்கூறாக, "புட்'" எனக்கூறும் சொல்லானது, "புட்டட்" என்ற வினையை உயர்த்துகிறது, இது "சிக்கலாக்கு" அல்லது "கலக்கு" எனப்பொருள் படுகிறது — "ரஸ்புட்டட்' " அதன் எதிர்பதமான — "சிக்கலகற்று", "முடிச்சவிழ்", "கருத்து வேற்றுமைகளை அகற்று" ஆக உள்ளது. எனினும், மிகவும் நன்றாக அறியப்பட்ட விளக்கமானது, பழைய சால்விக் பெயரான "ரஸ்புட்யா" ("ரஸ்புட்கோ") இல் இருந்து (பதினாறாவது நூற்றாண்டிற்கு முற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட) தரமான ரஷ்யாவின் துணைப்பெயர் மூலத்தில் இருந்து வந்ததாகும், "மோசமான நடத்தையைக் கொண்ட குழந்தை" என இதற்குப் பொருளாகும், இவர்கள் பாரம்பரியங்களுக்கு எதிராகவும் அல்லது பெற்றோர்களின் விருப்பமாகவும் இருப்பர்.

அதிகத் தெளிவில்லாத "நோவேக்"கிற்கு (உருசியம்: Новыx) அவரது பெயரை மாற்றுவதற்கு ரஸ்புடின் மாற்ற முயற்சித்தார் எனக் கூறப்பட்டது, "புதியவர்" எனப் பொருள்படும் (Новый ரஷ்யர்களிடம் இருந்து, "புதிது" எனப் பொருளாகும்) புனித இடமான — "நோவேக்"கிற்கு அவர் முதன் முதலில் யாத்திரிகராக சென்ற பிறகு நடந்ததாகும் — ஆனால் அது அதிகப்படியான சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.

பிரபல கலாச்சாரத்தில்
இசை
1978 இல், போனி எம் இசைக்குழு, பகுதி வரலாற்றுப் பாடலான "ரஸ்புடினை" வெளியிட்டனர்.[20] 2007 இல், இப்பாடலானது, டரிசாஸ் இசைக்குழுவால் மீண்டும் இயற்றப்பட்டது.
2007 இல், டைப் ஓ நேகட்டிவ், அவர்களது புதிய ஆல்பமான டெட் அகைனின் மேலட்டையில் ரஸ்புடினின் உருவப்படத்தை அளித்திருந்தது.
கலிபோர்னியாவில் வரிசையான ரஸ்புடின் இசையகங்கள், ரஸ்புடினுக்காக பெயரிடப்பட்டதாகும், இதன் விளம்பரங்களில் உருவப்படங்களைக் கொண்ட விளம்பரங்களும் ரஸ்புடினின் திருத்தப்பட்ட உருவப்படங்களையும் கொண்டுள்ளது. இந்த இசையகத்தின் சின்னமானது, அதன் வலைத்தளத்தில் இசைகளை தொகுக்கும் DJ வாக ரஸ்புடினின் முதல்தரமான உருவப்படத்தை அளித்துள்ளது.
மாஸ்டூடோன் இசைக்குழு, அவர்களது ஆல்பமான கிராக் த ஸ்கை முழுவதும் ரஸ்புடினை மேற்கோள் காட்டியுள்ளது.
அரங்கம்
ரஸ்புடினின் வாழ்க்கையின் இறுதி நாட்களானது, ரிவர்ஸ் ஆப் பிளட்டின் [2] நாடகத்தில் சித்தரிக்கப்பட்டது, இது அமெரிக்கக் கவிஞர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஜே ஜெஃப் ஜோன்ஸால் எழுதப்பட்டதாகும். 1983 இல் லண்டனில், இந்நிகழ்ச்சி வழங்கப்பட்டது, மேலும் இது ஐரிஸ்ட் நாவலாசிரியர் மற்றும் கவிஞர் டெர்மோட் ஹீலியால் இயக்கப்பட்டதாகும். இந்நிகழ்ச்சியில் (நாவலாசிரியர் மற்றும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைக்கதை எழுத்தாளர் ஷேன் கொன்னஹ்டனின் சகோதரர் [3]) கேப்பிரியல் கோன்னஹ்டன், ரஸ்புடினின் பாத்திரத்தில் நடித்தார்.

திரைப்படங்கள்
ரஸ்புனின் கதையானது, 1920களின் இருந்து பலத் திரைப்படங்களில் புனையப்பட்டுள்ளது. ரஸ்புடின், த பிளாக் மோன்க் அவரைப்பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும், இது அக்டோபர் 1917 இல் வெளியானது, ஆனால் இதன் அனைத்து பிரதிகளும் காணாமல் போய்விட்டது.

1932 இல், MGM ஸ்டுடியோஸ் வழங்கிய ரஸ்புடின் அண்ட் த எம்ப்ரஸ் திரைப்படத்தில் ரஸ்புடின் பாத்திரத்தில் லியனல் பேரிமோர் சித்தரிக்கப்பட்டார். சிசரினா பாத்திரத்தில் எத்தல் பேரிமோர் மற்றும் இளவரசர் பால் செகொடிஃப் பாத்திரத்தில் ஜான் பேரிமோரும் சித்தரிக்கப்பட்டனர். 1938 இல், லா டிராகெடி இம்பெரிலா (a.k.a. ரஸ்புடின் ) என்றழைக்கப்பட்ட ரஸ்புடினின் வாழ்க்கையைப் பற்றிய ஃப்ரன்ச் திரைப்படம் வெளியானது, ஆல்பிரட் நியூமனின் நாவலைச் சார்ந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ஹேரி பார் நடித்தார், மேலும் மார்சல் எல்'ஹெர்பியர் இத்திரைப்படத்தை இயக்கினார்

1966 ஹாமர் திரில்லர் திரைப்படமான Rasputin: The Mad Monk இல் ரஸ்புடினின் பாத்திரத்தில் கிறிஸ்டோபர் லீ சித்தரிக்கப்பட்டார், மேலும் 1971 திரைப்படம் நிக்கோலஸ் அண்ட் அலெக்ஸாண்டிரா வில் டாம் பேக்கர் நடித்தார்.

சோவியத் திரைப்படமான அகோனி/அகோனியா|அகோனி/அகோனியா வில் (1975/1981) அலெக்ஸி பிட்ரென்கோவின் மூலமாக கவனிக்கத்தக்க ரஸ்புடினின் உருவப்படம் வழங்கப்பட்டது.

1980 ஆஸ்திரேலிய ஹாரர் திரைப்படமான ஹர்லேகியுன் , ரஷ்ய அரசகுடும்பத்துடன் மரபுவழியாகவும், நட்பும் வைத்திருந்த ரஸ்புடினைக் குற்றஞ்சாட்டி எடுக்கப்பட்டதாகும்.

1996 இல், Rasputin: Dark Servant of Destiny இல் ரஸ்புடினாக சித்தரிக்கப்பட்டதற்காக, நடிகர் ஆலன் ரிக்மன் கோல்டன் குளோப் மற்றும் எம்மி இரண்டயுமே வென்றார்.

கிறிஸ்டோபர் லியோடு மற்றும் ஜிம் கம்மிங்ஸ் (அவரது பாடல் குரலை வழங்கி) மூலமாக ரஸ்புடினின் பாத்திரம் உச்ச அளவில் புனையப்பட்டது, 1997 அனிமேட்டடு திரைப்படம் அனஸ்டாசியா வில் முதன்மை எதிரிகளாக இவர்கள் நடித்திருந்தனர். ரோமனோவ் அரசபரம்பரை மற்றும் ரஷ்ய புரட்சிப் பற்றிய பிற வரலாற்று சரிநுட்பமில்லாமையுடன் பாசுரத்தொகுதி இதில் அமைக்கப்பட்டிருந்தது, டிசர் நிக்கோலஸிற்கு முன்னாள் ஆலோசகராக ரஸ்புடின் இதில் சித்தரிக்கப்பட்டிருந்தார், இவர் ஒரு போலி மருத்துவர் என அறிந்த பிறகு துரோகி என ரஸ்புடினை நாடு கடத்துகிறார். மேலும் ரோமனோவ்ஸ்ஸை அளிப்பதற்காக அவரது விற்கும் ஒரு பிணமாகவும் சித்தரிக்கப்பட்டார், மேலும் அவரது ஒப்பந்தத்தின் மூலம் தற்போது ஒரு இரகசியமான மந்திரக்கவசமாக இசைவளிக்கப்பட்டுள்ளார்; அந்த மந்திரக்கவசம் அவரை 'இறப்பில்' இருந்து உயிர்தெழ இடமளிக்கையில், அனஸ்டாசியா வரை சிறையில் அடைக்கப்படுகிறார், ரோமனோவ்ஸின் கடைசி மனிதர் கொல்லப்பட்டதில், மந்திரக்கவசைத்தை அளித்ததால் ரஸ்புடின் நிரந்திரமாக இறக்க நேரிடுகிறது.

2004 திரைப்படமான ஹெல்பாயில் , கரேல் ரோடனான ரஸ்புடின் சித்தரிக்கப்பட்டார், மனிதக்கொலை செய்வதால் வாழ்பவராகவும் இதில் சித்தரிக்கப்பட்டிருந்தார், பாதாள உலகத்துடன் இணைக்கப்பட்டு சிறந்த இரகசியமான திறமையகளுடன் செயல்படும் நாசிஸ்களுடன் பணிபுரிவதை அதில் காணமுடிந்தது. ரஸ்புடின் ஒரு இறப்பற்றவராக இதில் சித்தரிக்கப்பட்டார்; ஒவ்வொரு சமயமும் இவர் இறக்கும் போது, அவரது உடலினுள் உள்ள கடவுளின் பகுதியுடன் உயிர்த்தெழுகிறார். எனினும், நரகத்தை கட்டவிழ்பதற்கு அவரது பேய்த்தனமான பரம்பரை சொத்தை பணிந்து விடுவதற்கு ஹெல்பாயை ரஸ்புடின் கட்டாயப்படுத்த முயற்சிக்கிறார், ஆனால் ஹெல்பாயின் தோழரான ஜான் மேயர்ஸ் ஹெல்பாயின் மனிதத்தன்மையை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்து, ரஸ்புடினை எதிர்த்து நிற்பதற்கு ஹெல்பாயிற்கு பலத்தைக் கொடுக்கிறார் (எனினும் அவரது நடவடிக்கைகளானது, ரஸ்புடினின் கடவுள் உலகத்தினுள் வெளிப்படுவதற்கு விளைவாகிறது).

தொலைக்காட்சி
ஒரு பிரபலமான அனிமே நிகழ்ச்சியான பிளட்+ , "டூ யூ ரிமம்பர் த பிராமிஸ்?" என்று தலைப்பிடப்பட்ட ஒரு எபிசோடைக் கொண்டிருந்தது, இதில் முக்கியப் பாத்திரமான சாயா, 1920களின் போது ரஸ்புடினை வேட்டையாடுவதை நினைவு கொள்கிறார்.[21]

டாக்டர் ஹூ என்ற நிகழ்ச்சியானது பாஸ்ட் டாக்டர் அட்வென்சர்ஸ் நாவலான த வேஜஸ் ஆப் சின் னைக் கொண்டு எடுக்கப்பட்டதாகும், லிஸ் ஷா மற்றும் ஜோ கிரான்ட் இணைந்த மூன்றாவது மருத்துவர், விருப்பமின்றி 1916 இல் நுழைந்து ரஸ்புடினை சந்திக்கிறார், மேலும் ரஸ்புடினைப் பற்றிய தவறான மதிப்பு அவர் இறந்த பிறகு எதிரிகளால் உருவாக்கப்பட்டது என அறிகிறார், மேலும் உண்மையில் ரஸ்புடின் மிகவும் நட்பார்ந்த முறையில் இருப்பதையும் அறிகிறார். இதன் விளைவாக, இந்த மருத்துவர் ரஸ்புடினின் இறப்பு வரலாற்றை கெடாமல் காக்கும் சாட்சியமாக இருக்க உந்தப்படுகிறார், மேலும் அவரை நீரில் இருந்து மூழ்குவதில் இருந்து காப்பதற்கு வாய்ப்பாகவும் இது அமைகிறது.

சர்க்கஸ்
த மாஸ்கோ ஸ்டேட் சர்க்கஸானது, தற்போது யுனைட்டடு கிங்க்டத்தில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறது, அதன் தயாரிப்பை ரஸ்புடினின் பார்வைகள் மற்றும் வாழ்க்கையின் பார்வையிடைய வாழ்க்கைக்கு அர்பணித்துள்ளது. அதன் ரிங்மாஸ்டர், ரஸ்புடினைப் போன்று தாடி மற்றும் அதே போன்ற அடைகளுடன் சித்தரிக்கப்படுகிறார். இதைப் போன்ற நடவடிக்கைகளுக்கு இடையில் ரஸ்புடினின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு ஞாபகப்படுத்தி கதையாய் கூறுகின்றனர்.

ஆல்கஹால்
கலிபோர்னியாவின் நார்த் கோஸ்ட் பிரீவிங் கம்பெனி என்ற மது உற்பத்தி செய்யும் நிறுவனமானது, ஓல்ட் ரஸ்புடின்[22] என்றழைக்கப்படும் ரஷ்யன் இம்பெரல் ஸ்டோட்டைத் தயாரிக்கின்றனர், இது மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.
1990களின் முற்பகுதியில், வோட்கா "ரஸ்புடின்" ரஷ்யாவில் பெருமளவில் விற்கப்பட்டது மேலும் TV இல் விளம்பரப்படுத்தப்பட்டது.