Showing posts with label HOW. Show all posts
Showing posts with label HOW. Show all posts

Sunday, 27 September 2020

HOW PAKISTANIS DEFEATED IN 1965 WAR

 

HOW PAKISTANIS 

DEFEATED IN 1965 WAR


.இந்திய எல்லைக்குள் நுழைந்த 

பாகிஸ்தான் படையினர் சிக்கிக் 

கொண்டது எப்படி: 1965 போர்

ரெஹான் ஃபஜல்

பிபிசி

9 செப்டெம்பர் 2017

1965 செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு முதல் 7-ஆம் தேதி காலை வேளைக்குள் பாகிஸ்தானின் பி-57 விமானங்கள் இந்திய நிலைகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அவற்றைத் தொடர்ந்து வந்த சி-130 ஹெர்குலஸ் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன.


ஒவ்வொரு விமானத்திலும் எலைட் சிறப்பு சேவைகள் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர்.இந்தியாவின் அல்வரா, ஆதம்பூர், பதான்கோட் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களில் நள்ளிரவில் பாராசூட் மூலம் இறங்குவது அவர்கள் திட்டம்.விமான நிலையங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அங்குள்ள இந்திய விமானங்களை அழிக்கவேண்டும் என்பது அவர்கள் இலக்கு.இரவு இரண்டு மணிக்கு 'மேஜர் காலித் பட்' தலைமையில் 60 பாகிஸ்தானிய கமாண்டோக்கள் பதான்கோட் விமானத் தளத்திற்கு அருகில் இறங்கினார்கள். இறங்கியவர்களை ஒன்றன்பின் மற்றொன்றாக பல சிக்கல்கள் சூழ்ந்தன.


விமான நிலையத்தைச் சுற்றி கால்வாய்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் சேறு நிறைந்த வயல்கள் அவர்களுடைய வேகத்தைத் தடுத்தன.


மூன்று மணி நேரத்திற்குள் அவர்கள் சூழப்பட்டனர். எதிரிகளின் ஊடுருவலை பார்த்த கிராமவாசி ஒருவர் பதான்கோட் ராணுவ தலைமையகத்திற்குத் தகவல் கொடுத்துவிட்டார்.தப்பித்து சென்ற கமாண்டோக்கள்

அக்கம்பக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 பேர் கூடிவிட்டனர். உடனே பல கமாண்டோக்கள் காவலில் எடுக்கப்பட்டனர். இரண்டு நாட்களில் 'மேஜர் காலித் பட்' பிடிபட்டார். அல்வாராவில் இரவின் இருள் சூழ்ந்திருந்தபோதிலும், அங்கு தரையிறங்கிய ராணுவ வீரர்களை நன்றாகவே பார்க்க முடிந்தது.



விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார். இந்திய விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவருக்கும் துப்பாக்கிகளையும், கைத்துப்பாக்கிகளையும் விநியோகித்தார்.


விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் புல்வெளிகள், மைதானங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து சந்தேகத்திற்கு இடமான யாராவது தென்பட்டாலோ நடமாடினாலோ தயங்காமல் துப்பாக்கியைப் பிரயோக்கிக்க அனுமதி கொடுத்தார்.விமானத் தளத்தின் வளாகத்திற்குள் சில பாகிஸ்தானிய கமாண்டோக்கள் இறங்கியிருந்தாலும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரே பிடிக்கப்பட்டு போர்க் கைதிகளாக்கப்பட்டனர்.


'பாகிஸ்தானுக்கான போர்' (Battle for Pakistan) என்ற புத்தகத்தில் ஜான் ஃபிரிக்கர் எழுதியிருக்கும் தகவல் சற்று வேறுபட்டிருக்கிறது.



'பாகிஸ்தான் கமாண்டோ மேஜர் ஹஜூர் ஹசைனென், ஒரு இந்திய ஜீப்பை கடத்தி, தனது சகா ஒருவருடன் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்வதில் வெற்றிபெற்றார்' என்று ஜான் ஃபிரிக்கர் குறிப்பிடுகிறார்.அல்வாரா தளத்தின் அதிகாரியும் நிதித்துறையின் பிரபலமான ஸ்காவர்டன் தலைவர் கிருஷ்ணா சிங், பாகிஸ்தானின் கமாண்டர்களின் தலைவரை தானே நேரடியாகக் கைது செய்தார். இவர் ஒருவர் மட்டுமே 1965, 1971 ஆகிய இரு போர்களிலும் வீரதீர செயல்கள் புரிந்ததற்காக 'வீர் சக்ர' விருது பெற்ற பெருமைக்குரியவர்.


காட்டிக்கொடுத்த நாய்களின் குரைப்பு

ஆதம்பூரிலும் பாகிஸ்தானி வீரர்கள் இதே நிலைமையைச் சந்தித்தார்கள். விமானதளத்தில் இருந்து மிகத் தொலைவில் தரையிறங்கிய அவர்களால் ஒன்றிணைய முடியவில்லை. இரவு நேரத்தில் ஓசையில்லாமல் அவர்கள் தரையிறங்கினாலும், நாய்களின் குரைப்பு அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டது.


சூரிய உதயத்தின்போது பாகிஸ்தான் வீரர்கள் சோளக்காட்டிற்குள் அடைக்கலம் புகுந்துவிட்டனர். லூதியானாவில் இருந்து வந்த தேசிய மாணவர் படை (NCC) இளைஞர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீற்றமுற்றிருந்த கிராமவாசிகள் சில பாகிஸ்தானி வீர்ர்களை கொன்றுவிட்டனர்.விமானம் மூலம் தரையிறங்கிய மொத்தம் 180 பேரில் 138 பேர் கைது செய்யப்பட்டனர். 22 பேர் ராணுவம், போலிஸ் அல்லது கிராமமக்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டனர், மீதமிருந்த 20 பேர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.



தப்பித்தவர்களில் பெரும்பான்மையோர் பதான்கோட் விமானதளத்தின் அருகே தரை இறங்கியவர்கள். அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை வெறும் பத்து மைல் தொலைவில் இருந்ததே அதற்கு காரணம்.பி.வி.எஸ் ஜகன்மோஹன் மற்றும் சமீர் சோப்ரா எழுதிய 'இந்தியா-பாகிஸ்தான் விமானப் போர்' (The India Pakistan Air War) புத்தகத்தில், "60 கமாண்டோக்களின் குழு பெரிதாக இருந்ததால் அது வெற்றி பெற்றிருக்கமுடியும். ஆனால், பெரிய குழுவாக இருந்ததால் பிறரின் கவனத்தை ஈர்க்காமல் செயல்பட முடியவில்லை. அதேபோல், இந்த எண்ணிக்கையானது தங்களைப் பாதுகாக்கும் திறனற்ற சிறிய குழுவாக இருந்தது" எனக் கூறப்பட்டுள்ளது.


இதைத்தவிர, கெளஹாத்தி மற்றும் ஷிலாங்கிலும் சில பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரையிறங்கினார்கள். ஆனால் அவர்கள் எதிர் தரப்புக்கு சேதம் எதுவும் ஏற்படுத்தும் முன்பே கைது செய்யப்பட்டனர்.

அச்சத்தில் டெல்லிக்கு விரைந்த துணை ராணுவப்படை

இரு நாடுகளிலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் பல மோசமான நிலைமைகளை உருவாக்கின. ஓர் அதிகாரியின் கனவிலும் எதிர் தரப்பின் சிப்பாய்களே தொடர்ந்து வந்தார்கள்."எதிரி, எதிரி வந்துவிட்டான், சுடுங்கள், ஃபயர்" என்று அவர் உறக்கத்திலும் உத்தரவிட்டாராம்.


காரிருள் சூழ்ந்த இரவு வேளையில் அருகில் இருப்பவர்களைக்கூட பார்க்கமுடியாது. எனவே இது கனவில் இட்ட கட்டளை என்று தெரியாமல் திடீரென்று எழுந்த பிற வீர்ர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு எதிரியை தாக்க தயாராகிவிட்டார்கள். நல்லவேளை, துப்பாக்கியை பயன்படுத்துவதற்குள் சுதாரித்துக்கொண்ட கமாண்டிங் அதிகாரி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.


போர் சில நாட்களில், சில சமயங்களில் சில மணி நேரத்திலும்கூட முடிவடையலாம். ஆனால் அதில் பங்குபெற்றவர்களின் வாழ்நாள் முழுவதிலும் போரின் நினைவுகளும், பாதிப்புகளும், தாக்கங்களும் தொடர்வது மட்டும் முடிவடையாது.ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோயி தன்னுடைய நினைவுகளை பிபிசியுடன் பகிர்ந்துக்கொள்கிறார், "அல்வாராவில் பாராசூட் மூலம் பாகிஸ்தானி வீர்ர்கள் இறங்கியதும், டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமானத்தளத்திலும் எதிரிகள் புகுந்துவிடலாம் என்று ஊகங்கள் பரவின. ஹிண்டனில் வீரர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்தனர். எனவே, தங்கள் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிடலாம் என்று அங்கிருந்த தலைமை அதிகாரி அறிவுறுத்தினார். எனவே, அந்த நேரத்தில் உடனே கிடைத்த வாகன்ங்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்தவர்கள் டெல்லிக்கு விரைந்தார்கள்."



தங்களுக்குள்ளே தவறுதலாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு

மற்றொரு சுவாரஸ்யமான சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது. சர்கோதா விமான நிலையத்தில் இந்திய பாராசூட் வீரர்கள் இறங்கப்போகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. உடனே பாகிஸ்தானின் விமானத் தலைமையகம், கமாண்டோக்களுடன் C-130 விமானத்தை சர்கோதாவுக்கு அனுப்பி வைத்தது.


வெளிச்சம் இல்லாத இரவு நேரத்தில் பாகிஸ்தான் வீர்ர்கள் தரையிறங்க முற்பட்டப்போது, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட்து.


பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி

தளத்தில் இருந்த மற்றும் தரையில் இறங்கிய பாகிஸ்தானி வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தவறான புரிதலால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. (ஏர் கமாண்டர் மன்சூர் ஷா, த கோல்ட் வர்ட்: பாகிஸ்தான் அண்ட் இட்ஸ் ஏர்ஃபோர்ஸ்)



லெஃப்டினெண்ட் பதானியா

பட மூலாதாரம்,PUSHPINDER SINGH

படக்குறிப்பு,

லெஃப்டினெண்ட் பதானியா


அதேபோல், பதான்கோட்டில் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதமாக அங்கிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் 9 மி.மீ ஸ்டென் கார்பைன் துப்பாக்கி வழங்கப்பட்டது. விமான ஓட்டி லெப்டினெண்ட் பதானியாவுக்கும் ஸ்டென் கார்பைன் துப்பாக்கி ஒன்று கிடைத்தது.


பதானியாவுக்கு துப்பாக்கியை இயக்கவே தெரியாது. எனவே லெப்டினன்ட் துஷார் சென் துப்பாக்கியை இயக்க அவருக்கு கற்றுக்கொடுத்தார்.


அப்போது துப்பாக்கியில் விரல் தவறாகப்பட்டு, இலக்கு மாறி சீறிப்பாய்ந்த 9 மி.மீ குண்டுகள், அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சக விமானிகளின் தலைக்கு மேல் பாய்ந்தது. தலைக்கு மேல் சில அங்குல தொலைவில் சீறிப் பாய்ந்த குண்டுகளைக் கண்டு அவர்கள் வெலவெலத்துப் போனார்களாம்.


அதற்கு பின் லெப்டினெண்ட் பதானியாவின் துப்பாக்கியால் சுடும் திறமைக்கு, சக ஊழியர்களின் சன்மானம் என்னவாக இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளலாம்.




Sunday, 7 June 2020

KATHALIKKA NERAMILLAI MOVIE , HOW DIRECTED ?



KATHALIKKA NERAMILLAI  MOVIE ,
HOW DIRECTED ?


பாலையா நாகேஷ் கதை சொல்லுவது படத்தின் ஹை லைட் சுவாரசியம் இந்த டேக் எடுக்க பத்து தடவை யாவது சீனை கட் பண்ணி எடுக்கணும் ஆனா இந்த ஸீன் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதை இன்னும் ஆச்சர்யத்தோடு நினைவு கூறுகிறார் காஞ்சனா

நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாண பரிசு போன்ற உள்ளத்தை உருக்கும் படமாக எடுத்த, ஸ்ரீதர், அடுத்து, ஒரு முக்கோண கதைக்கான, 'டிஸ்கஷ'னுக்கு அழைத்தார். அப்போது, 'ஒரு மாறுதலுக்கு, முழு நீள காமெடி படம் எடுப்போம்...' என்றார், கோபு.
'என்னை வச்சு காமெடி படமா... அதற்கு நான் சரிப்பட்டு வருவேனா... ஜனங்கள் ஏத்துக்குவாங்களா...' என்று, அதிர்ச்சியுடன் தயங்கினார், ஸ்ரீதர். பேசி, ஸ்ரீதரை சம்மதிக்க வைத்தார், கோபு.
ரவிச்சந்திரன் காதலியாக, முதலில், நிர்மலாவை ஒப்பந்தம் செய்து, ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. திடீரென ஸ்ரீதருக்கு, தான், 'ட்ராக்' மாறுவதாக பயம் வந்து விட்டது.

படத்தை அப்படியே கைவிட்டு, வேறு ஒரு பட வேலையில் இறங்கி விட்டார். அது தொடர்பாக, ஸ்ரீதர் சந்திக்க வந்த போது, முகத்தை, 'உர்'ரென்று வைத்துக் கொண்டார், கோபு.
ஸ்ரீதருக்கு விஷயம் புரிந்து போனது, 'இப்ப என்னாங்கிறே... காதலிக்க நேரமில்லை படத்தை எடுத்துட்டு தான், அடுத்த வேலைங்கிற, அப்படித்தானே... சரி, உன் இஷ்டம்...' என்றார்.
காமெடி தான் கதையின், 'ஹீரோ' என்றானதும், கோபுவிடம் இருந்து நகைச்சுவை வற்றாமல் ஊற்றெடுத்தது. காட்சிகளை, 'டெவலப்' செய்து கொண்டே போனார். சினிமா பைத்தியம் பிடித்த மகன் வேடத்தை விரிவுபடுத்தினார். நாகேஷும், தன் திறமையை வெளிப்படுத்தினார்.



ரவிச்சந்திரனை காப்பாற்ற, அப்பா வேடத்தில், பாலையாவின் வீட்டிற்கு வந்திருப்பார், முத்துராமன். அப்போது, எதிர்பாராத விதமாக, முத்துராமனின் அப்பாவும் அந்த வீட்டிற்கு வந்து விடுவார் என்று, கோபு வைத்த, 'ட்விஸ்ட்' ரொம்பவும் பிடித்துப் போனது, ஸ்ரீதருக்கு.
கோபுவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பட, 'டைட்டிலில்' கதை, ஸ்ரீதர் - கோபு என்று, தனக்கு சமமாக, கோபுவின் பெயரை இடம் பெறச் செய்தார்.
'என்னப்பா... இது, சட்டைப்பா...' என்பது போல, படத்தில் இடம் பெற்ற, கோபுவின் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விழுந்து விழுந்து சிரித்தனர், ரசிகர்கள்.
கடந்த, 1964ல் வெளிவந்த இந்த படம் தான், தமிழில் வெளியான முதல் முழு நீள வண்ணப்படம். ரவிச்சந்திரன், 'ஏர்ஹோஸ்டஸ்' ஆக இருந்த, காஞ்சனா உள்ளிட்ட நிறைய பேர், அந்த படத்தில் புதுமுகங்களாக இடம் பெற்றிருந்தனர்.
'என்ன பார்வை... மாடி மேலே... உங்கள் பொன்னான கைகள்... அனுபவம் புதுமை... நாளாம் நாளாம்... மலரென்ற முகமொன்று... காதலிக்க


நேரமில்லை...நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா...' என்பது போன்ற, எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்களை கொண்ட படம்.
இதெல்லாம் பரவாயில்லை... அதுவரை கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த, சச்சுவை, நகைச்சுவை நடிகையாக்கியதும், இந்த படம் தான். இதற்காக, கோபு, சச்சுவின் வீட்டிற்கு போன போது, 'ஒன்லி ஹீரோயின் ரோல் தான் நடிப்பார்...' என்று சொல்லி, அவரது பாட்டி மறுத்து விட்டார்.
பிறகு, 'படத்தில், மூன்றாவது, 'ஹீரோ' நாகேஷ். அவருக்கு ஜோடி என்றால், 'ஹீரோயின்' தானே...' என்று எதை எதையோ சொல்லி, ஒப்பந்தம் செய்து விட்டார்.
'என்னுடைய, 'ட்ராக்'கையே மாற்றியவர், கோபு தான்...' என்று, இப்போதும், சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார், சச்சு.
கவியரசு கண்ணதாசன்-, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், 'காம்பினேஷனில்' பாடல்கள் எல்லாம், 'ஹிட்!'
வெளியூர் போய் திரும்பிய விஸ்வநாதனிடம், 'நீ பாட்டுக்கு வெளியூர் போயிட்ட... எனக்கு யாரு வேலை கொடுப்பா விஸ்வநாதா... இப்ப வேலை கொடு...' என்று, செல்ல கோபத்துடன் கேட்டார், கண்ணதாசன்.
இதை கவனித்த ஸ்ரீதர், இதையே வரியாக போட்டு, பாட்டு எழுத சொன்னார். அது தான், 'விஸ்வநாதன் வேலை வேணும்...' என்ற பாடல். அந்த பாடல் வரிக்காகவே, பாலையாவின் பெயரையும் விஸ்வநாதன் என்று மாற்றினார்.
'இதுவரை, தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்தது இல்லை; இனி வரப்போவதும் இல்லை...' என்று சொல்லும் அளவிற்கு, 'சூப்பர் டூப்பர் ஹிட்'டானது. பியார் கியா ஜா என்ற பெயரில், ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது. இதற்காக, ஹிந்தியில் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் போடப்பட்டது.
படத்தில், பாலையாவிற்கு, நாகேஷ், மர்ம கதை சொல்லும் காட்சி தான், படத்தின், 'ஹைலைட்!'
'அசோகர் உங்க மகராமே...' என்று, மகன் என்ற வார்த்தையைக் கூட மரியாதையாக கூறும், பாலையாவின் பேச்சு, வசன உச்சரிப்பை கூட செய்து விடலாம். ஆனால், நாகேஷிடம் கதை கேட்கும் போது, மிரண்டு போய், நொடிக்கு நொடி, தன் முக பாவத்தை மாற்றும் வித்தையை பாராட்ட வேண்டும்.
அந்த காட்சிக்கு, பாலையா எவ்வளவு உயிர் கொடுத்து இருப்பார். இப்படி ஒரு காட்சி, கோபுவின் சிந்தனையில் எப்படி வந்தது என்பது தெரிந்தால், மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்?

காதலிக்க நேரமில்லை
படத்திற்கு ரஜினியின், 'கமென்ட்!'
பழைய படங்களை அதே தலைப்புடன் இரண்டாம் பாகமாக எடுக்கும், 'டிரண்ட்' தற்போது கோலிவுட்டில் நிலவி வருகிறது.
காதலிக்க நேரமில்லை படத்தை எடுக்கலாம் என்று, ஆளாளுக்கு முயற்சி எடுத்தனர். இந்த ஆர்வத்தை பார்த்த ரஜினி, 'எல்லா காலகட்டத்திலும் யாராவது காதலிக்க நேரமில்லை படத்தை பற்றி பேசிக்கிட்டே இருக்காங்க. நான் அந்தப் படத்தைப் பார்த்தாகணும்...' என்று, கோபுவிடம் பேசி, சி.டி., வாங்கி, படத்தை முழுமையாகப் பார்த்தார்.
பின்னர், 'படத்தில் நிஜமான, 'ஹீரோ' பாலையா தான். அவர் மாதிரி நடிக்க, இன்னைக்கு ஆள் கிடையாது. அதனால, காதலிக்க நேரமில்லை, 'பார்ட் - 2'க்கு வாய்ப்பே இல்லை...' என்று, சொல்லி விட்டார்.

Tuesday, 17 July 2018

AAKRI RAASTHA , HOW FILMED








AAKRI RAASTHA , HOW FILMED


திரைக்கதைத் திலகம்’என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ். கடந்த வாரம் இந்து டாக்கீஸ் இணைப்பி தழில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ பத்தியைப் படித்திருக்கிறார். கையோடு தொலைபேசியில் என்னை அழைத்தார் ‘ கைதியின் டைரி’ படத்துக்கான கதை உருவான பின்னணியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். உடனே நேரில் சந்தித்தேன். விவரிக்க ஆரம்பித்தார். விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒரு பர்சனல் டயரியைப் படிப்பதுபோன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது அவர் விவரித்த விதம். இனி எல்லாம் அவர் சொன்னதே...
மும்பையில் சந்தித்தேன்

“வாழ்க்கையில் சுகமும் துக்கமும் மாறி மாறி வரும் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்றாகவே வந்தது. ‘முந்தானை முடிச்சு’அபார வெற்றி பெற்று, எனக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அதேநேரத்தில் என் மனைவி பிரவீணா என்னை விட்டுப் பிரிந்தாள். சென்னையில் இருந்தால் அவளது ஞாபகமே வந்து என்னைச் சோகத்தில் மூழ்கடிக்கிறது என்று கோவா சென்றேன். அங்கேயும் அதே நிலை. பிறகு மும்பை சென்றேன். அங்கே சீராக் ஹோட்டலில் தங்கினேன். ஹோட்டலில் வேலை செய்துவந்த தமிழ் ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து “உங்கள் டைரக்டர் இங்குதான் தங்கியிருக்கிறார்” என்று கூறினார். அவர் சன்னி தியோலை இயக்கவிருக்கும் இந்திப் பட வேலைக்காக வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். அவரது வேலையில் குறுக்கிடாத வண்ணம் இரவு ஒரு மணிக்கு அவர் அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன். அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். ஆழ்ந்த சிந்தனை யில் இருந்த அவர் முகத்தில் கவலை தெரிந்தது.

கைவிடப்பட்ட ‘டாப் டக்கர்’

நலம் விசாரித்தபடி பேச்சுக்கொடுத்தேன். கமலை வைத்து ‘டாப் டாக்கர்’ என்ற படத்தை சுமார் 5 ஆயிரம் அடி எடுத்த பின் நிறுத்திவிட்டதாகக் கூறினார். ஏன் என்றபோது, “அந்தக் கதை சிவப்பு ரோஜாக்கள் போலவே உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. எனவே அதை நிறுத்திவிட்டு , வேறு கதை எடுப்போம் என்று நானும் கமலும் முடிவெடுத்துவிட்டோம்” என்றார். பிறகு அவரே தொடர்ந்தார். “கிழக்கே போகும் ரயிலை இந்தியில் சன்னி தியோலை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தேன். ஒப்பந்தம் செய்தபோது சன்னி பெரிய ஹீரோ அல்ல, இப்போது கமர்ஷியல் ஹீரோவாக மாறிவிட்டார். கழுதைமேல் அவரை உட்காரவைத்து ஊர்வலம் விடுவது போன்ற காட்சிகள் இருப்பதால் சன்னி தியோலின் அப்பா தர்மேந்திரா இந்தக் கதையை வேண்டாம் என்று கூறிவிட்டார். இரண்டு படங்களி லுமே முட்டுக்கட்டை” என்றார்.

லட்சுமி வந்துவிட்டாள்

கண் முன்னால் குருநாதர் கவலையுடன் பேசுவதை எந்த மாணவன்தான் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பான். நான் சென்னை திரும்பியதும் ‘டாப் டக்கர்’ கதையில் ஏதாவது பண்ண முடியுமா என்று பார்க்கி றேன் என்று அவரிடம் கூறினேன். “நீ இப்போது உதவி இயக்குநர் கிடையாது. பெரிய ஹீரோ, பிரபலமான இயக்குநர்” என்றார். “ நான் என்றும் உங்கள் மாணவன்” என்றேன்.

சென்னை திரும்பியதும் அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் “ லட்சுமி வந்து விட்டாள்” என்று கூறி வரவேற்று அழைத்துப்போய் கதை சொன்னார். ‘டாப் டக்கர்’ இன்னொரு ‘சிகப்பு ரோஜாக்கள்’ போலத்தான் இருந்தது. எழுத்தாளர் பாக்யராஜுக்கு சென்னை அடையாறு பார்க் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறை போடப்பட்டது. இதுநாள் வரை நடிகர் பாக்கியராஜுக்கு ஏற்ற கதையை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த நான், அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து சிந்தித்தேன்.

அன்றிரவு 2 மணிக்கு ஒரு பொறி தட்டியது. மறுநாள் காலை, பாரதிராஜா சாருக்கு போன் செய்து உடனே வருமாறு கூறினேன். “அதற்குள்ளேயா?” என்று ஆச்சரியப் பட்டார். கதையின் அவுட்லைனைக் கூறினேன். அந்த நிமிடமே கமலிடம் தொடர்பு கொண்டார். அவுட்லைன் சொல்ல வேண்டும் என்றார்.

அதற்குக் கமல், “நேற்று நீங்கள் பாக்கியராஜை சந்தித்தும் கதையை விவாதித்ததும் என் காதுக்கு வந்துவிட்டது. இப்போது கதையைச் சொல்ல வேண்டியதில்லை. படப்பிடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் சொன்னால் போதும்” என்று கூறிவிட்டார்.

ஒரு கைதியின் டைரி

முழுத் திரைக்கதை உருவானதும் அதை குருநாதரிடம் கொடுத்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். அதுதான் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம். படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவந்தது.

இதற்கிடையில் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவுக்கு ஒரு இந்திப் படம் எடுத்துக்கொடுப்பதாக நான் வாக்களித்திருந்தேன். இப்போது ‘ஒரு கைதியின் டைரி’ இந்திப் பதிப்பை நான் இயக்க விரும்புகிறேன்.அதில் அமிதாப் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். அவர் அமிதாப்பிடம் பேசி, கதை கேட்க ஏற்பாடு செய்தார். அமிதாப் சென்னை வந்தார். மொத்தக் கதையையும் நடித்தே காண்பித்துவிட்டேன். உடனே ஒப்புக்கொண்டார். நான் தயாரிப்பாளர், ஹீரோ இருவரிடமும் ஒரு நிபந்தனையை வைத்தேன். “என் கதையைத்தான் எடுப்பேன். எனது குருநாதர் பாரதிராஜா மாற்றங்களுடன் எடுத்துவரும் படத்தை நான் மறுஆக்கம் செய்ய மாட்டேன்” என்றேன். இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
க்ளைமாக்ஸ்
இரண்டு கதைகளுக்கும் முக்கியமான சில வேறுபாடுகள் இருக்கின்றன. கல்லறையில் தந்தையும் மகனும் சந்திக்கும் காட்சி என் கதையின் முக்கிய கட்டம். அது இந்தியில் இருந்தது, தமிழில் இல்லை. அதேபோல் க்ளைமாக்ஸ். தமிழில் கதாநாயகன் சிவாஜி சிலைபோல் அசையாமல் நின்று வில்லன் நெருங்கியதும் பழி வாங்குவார். அது என் குருநாதர் செய்த மாற்றம்.

நான் எனது க்ளைமாக்ஸை இந்தியில் வைத்தேன். ஆனால் தமிழ்ப் பதிப்பின் க்ளைமாக்ஸையே இந்தியிலும் எடுக்க வேண்டும் என்று அமிதாப், தயாரிப்பாளர், கேமராமேன், சண்டைப் பயிற்சி இயக்குநரான வீரூ தேவ்கன் (அஜய் தேவ்கனின் அப்பா) என அனைவரும் ஆசைப்பட்டனர். எனது க்ளைமாக்ஸை எடுத்துப் போட்டுப்பார்ப்போம், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தமிழ்ப் பட க்ளைமாக்ஸை எடுத்துத் தருகிறேன் என்று கூறினேன்.
அனைவரும் ஒப்புக்கொண்டு முழுமனதுடன் ஒத்துழைப்பு தந்தார்கள். படம் தயாரானதும் போட்டுப் பார்த்தோம். அனைவருக்கும் எனது க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது. அந்தப் படம்தான் அமிதாப்புக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘ஆக்ரி ராஸ்தா’.
ஒரு சின்ன ப்ளாஷ் பேக்

அமிதாப் தன் மனைவியின் கல்லறையில் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் என் ரசிகர்களுக்குப் புரியாது என்று மறுத்தார். நீங்கள் ஆங்கிலத்தில் புலமை அடைந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் மனைவியிடம் சொல்வதுபோல காட்சியை அமைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் இந்தக் காட்சிக்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்றேன். கொஞ்சம் தயங்கியவாறு அரைமனதுடன் ஒப்புக்கொண்டவர் அந்தக் காட்சிக்கான வசனத்தையும் அவரே எழுதி அற்புதமாக நடித்துக்கொடுத்தார்.

படம் வெளியான அன்று இரவு ஒரு மணிக்கு அமிதாப் போனில் பேசினார். “நீங்கள் சரி, நான் தவறு. ஆங்கிலத்தில் நான் பேசிய காட்சிக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு” என்றார். “என் மனைவி, இது உங்கள் படமல்ல. இயக்குநர் பாக்கியராஜின் படம் என்று கூறினாள்” என்றார்.

பிறகு இந்திப் படத்தைப் பார்த்த எனது குருநாதர் பாரதிராஜா “என்ன மாயம் செய்தாய்? நீ எடுத்த இரண்டு காட்சிகளையும் க்ளைமாக்ஸையும்தானே நான் எடுக்கவில்லை. என் படம் ஆக்‌ஷன் படமாக அமைந்தது. உன் படமோ எமோஷனல் மூவியாக இருக்கிறதே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ சார் உங்களது நாயகன் இளைஞர், உங்கள் கதையை அந்த இளைஞர் மீது எடுத்துச் சென்றீர்கள். என் நாயகனோ நடுத்தர வயதுக்காரர். எனவே நான் சிறைக் கைதி மீது கதையை எடுத்துச் சென்றேன். இதுதான் வித்தியாசம் என்றேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்திப் படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தார்.

இந்தப் பாராட்டுக்களைப் போலவே மிக முக்கியமாக நான் கருதியது பாலிவுட்டின் அந்நாளைய பிரபல திரைக்கதை எழுத்தாளர்கள் ‘ஷோலே’ படப்புகழ் சலீம் - ஜாவேத் இரட்டையர்களின் பாராட்டு. “ஒரு காட்சியிலாவது அவரை ஆங்கிலத்தில் பேச வைக்க முயன்றோம். முடியவில்லை. நாங்கள் செய்ய முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இதன் மூலம் கதாசிரியர் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர் என்பதை அமிதாப்புக்கு உணர்த்திவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.

படத்தின் மாபெரும் வெற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியான ஜூன் 6-ம் தேதியை நினைவில் வைத்து, படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் அபிதாப். இதுதான் ‘ஒரு கைதியின் டைரி’, ‘ஆக்ரி ராஸ்தா’(கடைசி வழி) படங்களின் பின்னணிக் கதை” என்று நினைவுகூர்ந்தார் பாக்யராஜ். 

Wednesday, 16 May 2018

HOW TO LIVE





HOW TO LIVE


*ஒரு எளிமையான கதை ...மனதை கவர்ந்தது*.


அடர்ந்த காடு ஒன்று இருந்தது.

அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன.

அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.

அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு வயதாகிவிட்து.

அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .

அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது.

கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.

நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர்.

இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது .

இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி.

தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை.

எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார். 
🌸
மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .

" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி .

இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான்.

இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும், நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும்.

நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள்.


நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் .

தீர்ந்த பிறகு காட்டில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் தீ வைத்துக் கொளுத்துங்கள் .

அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் .

உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.

மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் .
🌸
பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும்.

அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும்.

அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் .

இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும்.

ஆனால் சோள அடையோ, சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.

🌸
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள்.

போட்டி ஆரம்பமாகிவிட்டது .

இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள்.

இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.

🌸
நாட்கள் ஓடின.

மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது.

உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.

அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான்.

இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,

"தலைவா, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன்.

அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான். 
💪
தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது .

இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார்.

இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன.

தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது .

தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். 
🌸
படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .

இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது.

அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ?

என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது.

ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு.
🌸
இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.

🌸
கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.

அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். 
*முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான்*.

தலைவரை வணங்கி வரவேற்றான்.

" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான்.

உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான்.

தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே .

நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய்.

நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
🌸
"கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே" என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான்.

அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. 
🌿🌿🌿🌿
அவன் சொன்னான்,
"தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன்.

இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது.

நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன்.

இந்த நான்கு மாதம் மட்டுமல்ல .

இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.
🌸
தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

"நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ *உன் அறிவாலும், உழைப்பாலும்* என்னைத் திணறடித்து விட்டாய்.

காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி" என்றார்.
🌸
*செல்லமே, கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள்.*

*அது பொருளாக இருந்தாலும், வாழ்க்கையானாலும், நேரமானாலும்.