Showing posts with label AUGUST 17. Show all posts
Showing posts with label AUGUST 17. Show all posts

Tuesday, 17 August 2021

RUSHYENDRA MANI TELUGU ACTRESS BORN 1917 JANUARY 1-2002 AUGUST 17

 RUSHYENDRA MANI TELUGU ACTRESS BORN 

1917 JANUARY 1-2002 AUGUST 17




ருஷ்யேந்திரமணி (தெலுங்கு: ఋஷியேந்தராமணி; 1 ஜனவரி 1917 - 17 ஆகஸ்ட் 2002) ஒரு இந்தியப் பாடகி, நடனக் கலைஞர் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல மேடை/திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகி. [1] 1935 முதல் 1986 வரை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

அவர் ஜனவரி 1, 1917 அன்று விஜயவாடாவில் பிறந்தார். இந்திய பாரம்பரிய இசை மரபுகளில் பயிற்சி பெற்ற பாடகி மற்றும் பயிற்சி பெற்ற குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர், அவர் தனது ஏழு வயதில் மேடையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவள் பத்து வயதில் கிருஷ்ணன் மற்றும் பிரஹலாதனின் கவசத்தை அணிந்தாள். பின்னர் அவர் கொம்முரி பட்டாபி ராமையாவின் லட்சுமி விலாச நாடக சபையில் சேர்ந்தார். கப்புலவை இராமநாத சாஸ்திரி, புவூல ராமதிலகம் ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்று சிந்தாமணி மற்றும் சாவித்திரி நாடகங்களில் நடித்தார்.





அவர் வெள்ளித்திரைக்கு நகர்ந்து ஸ்ரீராஜ துலாபரத்தில் சத்யபாமாவாக நடித்தார், இது 1935 இல் ராஜாராவ் நாயுடு தயாரித்தது. இது வணிக ரீதியான தோல்வி, ஆனால் அவர் பாடும் மற்றும் நடிப்பு திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார். அவர் கடாரு நாகபூஷணம் மற்றும் பசுபுலேதி கண்ணம்பாவின் ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலத்தில் சேர்ந்தார் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா மற்றும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். ரங்கூன் ரவுடியில் பிரபாவதி மற்றும் சாவித்திரியில் நாரதராக நடித்ததற்காக அவர் பாராட்டுகளைப் பெற்றார். அவளது புகழ் மற்றும் நடிப்புத் திறமை இவருக்கு 'ராயலசீமா ராணி' என்று முடிசூட்டின.


1939 இல் ஜவ்வாடி ராமகிருஷ்ண ராவ் நாயுடுவை மணந்தார், பல மேடை நாடகங்களுக்கு இசையமைத்த ஒரு சிறந்த இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான அவர் அவருடன் மெட்ராஸ் சென்றார். ராமகிருஷ்ண ராவ் தமிழ் திரைப்படமான மாத்ரு பூமியில் இசை அமைப்பாளராக பணியாற்றினார். அந்த காலத்தின் பல நடிகர்களைப் போலவே, அவளும் ஒரு சிறந்த பாடகி. [2]





அவரது முதல் படம் ஸ்ரீ கிருஷ்ண துலாபாராம் (1935), அங்கு அவர் சத்யபாமா வேடத்தில் நடித்தார். அவர் தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கண்ணகியாக பாட்னி (1942) இல் நடித்தார். கோவலன் கதாபாத்திரத்தை கே எஸ் பிரகாஷ் ராவ் நடித்தார். இந்த படத்தின் வெற்றியுடன், அவர் திரைப்பட உலகில் உச்சத்தை அடைந்தார். செஞ்சு லட்சுமியில் அவர் ஆதிலட்சுமியாக நடித்தார், அதுவும் வெற்றி பெற்றது. மல்லீஸ்வரி, விப்ரா நாராயணா, மாயா பஜார், ஜகதேக வீருணி கதை, அக்கி ராமுடு, ஸ்ரீ கிருஷ்ண சத்யா, பாண்டுரங்க மஹத்யம், மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களை சித்தரித்த சீதா ராம ஜனனம். அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன், அவர் பாடும் திறமைக்காக கார்வேதிநகரத்தின் ராஜாவினால் 'மதுர கான சரஸ்வதி' என்ற பட்டத்தை பெற்றார். 1974 ஆம் ஆண்டு கன்னடப் படமான பூதய்யனா மக அய்யூவில் தனது பேத்தி மகள் பவானியுடன் நடித்தார், அங்கு பவானி சிறந்த நடிகை விருதை வென்றார் மற்றும் ருஷ்யேந்திரமி சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.



அவர் 17 ஆகஸ்ட் 2002 அன்று சென்னையில் இறந்தார். அவள் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன், பேரக்குழந்தைகள் மற்றும் பெரிய பேரக்குழந்தைகளைக் கொண்டிருந்தாள்

Monday, 17 August 2020

M.G.SAKKARAPANI ,TAMIL ACTOR BORN 1911 JANUARY 13 - 1986 AUGUST 17




M.G.SAKKARAPANI ,TAMIL ACTOR BORN 
1911 JANUARY 13 - 1986 AUGUST 17



எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலன் மேனன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1] சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் நினைவு நாளை ஒட்டி எம்.ஜி.ஆரின் விசுவாசி ஒருவர், அன்றைய நாளிதழில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளார். எம்.ஜி.ஆரின் பலமே அவருடைய அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தான். அவர் சொன்னதை தட்டாமல் கேட்பவர். எம்.ஜி.ஆரின் வெற்றியில் பெரும்பங்கு இவருக்குண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தன் அண்ணனைத் தான் எல்லாமுமாக நினைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.

தன் அண்ணனின் திடீர் மறைவை எம்.ஜி.ஆரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய பலம் அத்தனையும் திடீரென காணாமல் போய்விட்டது போல் உணர்ந்தார். அதன் காரணமாகவோ என்னவோ அண்ணன் மறைந்த ஒரு வருடத்திலேயே தானும் விண்ணுலகை அடைந்துவிட்டார். எம்.ஜி.ஆரின் அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி மறைந்த அன்று ஒரு பத்திரிக்கையில் வெளியான செய்தியை எம்.ஜி.ஆரின் விசுவாசி இப்போது வெளியிட்டுள்ளார். அதில்: முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் திரு. எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னும் உடல் நிலை சீரடையாமல் 1986 ஆகஸ்ட் 17ஆம் நாள் இரவு 12.00 மணி அளவில் உயிர் பிரிந்தது. அண்ணனின் உடல்நிலை மோசமடைந்ததை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தன் மனைவி ஜானகி அம்மையாருடன் அன்று இரவு 8 மணிக்கு மருத்துவமனை வந்தடைந்தார். அண்ணன் உயிர் பிரியும்போதும் அருகிலேயே இருந்த எம்ஜிஆர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். எம்.ஜி.ஆருடன், சக்கரபாணியின் மனைவி மீனாட்சி அம்மாளும், அவர்களது மகன்கள் மற்றும் மகள்களும் கதறி அழுதனர். சற்று நேரத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையிலிருந்த சக்கரபாணியின் இல்லத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எம்ஜிஆர் ஒரு பெரிய மலர் மாலையை தன் அண்ணனின் உடல்மேல் சார்த்திவிட்டு மீண்டும் கதறி அழுதார். கவர்னர் குரானா எம்ஜிஆரை தேற்றினார்.
பின் எம்.ஜி.ஆரை அருகில் உள்ள அறையில் அமர வைத்தனர். மறுநாள் உடல் அடக்கத்தின் போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் வந்தனர். திரு.கருப்பையா மூப்பனார் அவர்கள் எம்ஜிஆருடனேயே கடைசி வரை இருந்தார். இறுதிச் சடங்கின் போது சக்கரபாணிக்கு வாய்க்கரிசி போடும் நிலையில் எம்.ஜி.ஆர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அவர் கையிலிருந்த அரிசியை அண்ணனின் வாயில் போட எம்.ஜி.ஆரால் இயலவில்லை. சூழ்நிலையை உணர்ந்த மூப்பனார் அவர்கள், எம்.ஜி.ஆரின் கையை பிடித்து தட்டிவிட அரிசி அண்ணனின் வாயில் விழுந்தது. பிறகு எம்ஜிஆரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றனர். .

? இவ்வாறாக, தன் தம்பியின் திரையுலக வாழ்க்கை உச்சத்தை தொட ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இருந்த சக்கரபாணி தன் 75வது வயதில் மறைந்தார். இவர் 30 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். 1936ஆம் ஆண்டில் இரு சகோதரர்களில் எம்.ஜி.ஆருடன் சிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கி 1976ல் நாளை நமதே படத்தில் இவர் திரை அத்தியாயம் முடிந்தது. எம்.ஜி.ஆருடன் 19 படங்களில் அண்ணனாக, வில்லனாக, தந்தையாக, மாமனாராக, எம்.ஜி.ஆரை பிடிக்க அலையும் போலீஸ் அதிகாரி என பல வேடங்களில் நடித்துள்ளார். அரச கட்டளை பட இயக்குனரும் இவர் தான் என்பது பலர் அறியாதது. உலகம் சுற்றும் வாலிபன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை தயாரிக்க எம்ஜிஆருக்கு யோசனை சொன்னவரும் சக்கரபாணிதான்.



M.G.சக்கரபாணி– பிறப்பு- 13.01.1911- இறப்பு-17.8.1986 வயது-75. இவர் பிரபல தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர். எம்.ஜி.ஆரின் உடன்பிறந்த சகோதரர். இவருக்கு இரு மனைவியர். 7 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். 1936-ஆம் ஆண்டு இரு சகோதரர்கள் படம் மூலம் நடிகரானவர். மாயா மச்சீந்திரா, தமிழறியும் பெருமாள், மகா மாயா, ஸ்ரீமுருகன், ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி, அபிமன்யு, ராஜமுக்தி, பொன்முடி, மருதநாட்டு இளவரசி, என் தங்கை, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், வனசுந்தரி,ராஜ ராஜன்,ஜெனோவா, பிரேம பாசம், நாடோடி மன்னன், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ராஜா தேசிங்கு, திகம்பர சாமியார், என் தங்கை, மன்னாதி மன்னன், இதயவீணை, குலவிளக்கு போன்ற பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்தவர்.

.வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்..! என்ன காரணம்..? (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-15

‘வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்’ என சென்ற பகுதியில் நாம் பார்த்த விஷயங்களின் தொடர்ச்சிதான் இந்தப் பகுதியும்...
எம்.ஜி.ஆர் வசூல் சக்கரவர்த்தி என்றும் மினிமம் கேரன்ட்டி ராமச்சந்திரன் என்றும் படத்தின் வெற்றியால் பெயர் பெற்றிருந்தாலும் சில படங்கள் நூறு நாள்கள் ஓடவில்லை. வசூலை அள்ளிக் குவிக்கவில்லை அதற்கான காரணத்தை இக்கட்டுரை ஆராய முனைகிறது. 

ஒழுக்கமீறலால் வசூலை இழந்தவை

தாயின் மடியில், பட்டிக்காட்டுப் பொன்னையா, மாடப்புறா போன்றவை மக்கள் எதிர்பார்த்தபடி எம்.ஜி.ஆரின் ஒழுக்கம் அமையாததால் வசூலைப் பெறவில்லை. மாடப்புறாவில் அவர் காதலிப்பது ஒருத்தியாகவும் ஆனால் அவர் சந்தர்ப்ப சூழலால் திருமணம் செய்வது மற்றொருத்தியாகவும் அமைந்துவிடும். கதையின் வேகமும் காட்சியமைப்பும் சுமாராகவே இருந்ததால் படமும் சுமாராகவே ஓடியது.
தாயின் மடியில் படத்தில் இரண்டு முக்கியக் கோளாறுகள் காணப்பட்டன. ஒன்று எம்.ஜி.ஆரின் பிறப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு படத்தின் முக்கியத்திருப்பமாக அவர் தன் தங்கையையே காதலிப்பதாகக் கதையை அமைத்திருந்தது. (கடைசியில் தங்கை இல்லை என்பது தெரியவரும்). யாரோ பெற்று அனாதையாகப் போட்டுவிட்டு போன குழந்தையை (எம்.ஜி.ஆர்) ஒரு பணக்காரர் எடுத்து வளர்ப்பார். அவர்தான் குழந்தையைக் கண்டெடுத்த நாளை குழந்தையின் பிறந்தநாளாகக் கொண்டாடுவார். எம்.ஜி.ஆர் வளர்ந்த பிறகும் இக்கொண்டாட்டம் தொடரும். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர் கடுமையான கேலி கிண்டலுக்கு உள்ளாவார். இதை ரசிகர்கள் விரும்பவில்லை.


எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் வேளையில் இருவரும் ஒரு தகப்பன் வயிற்றுப் பிள்ளைகள் என்ற தகவலறிந்து எம்.ஜி.ஆர் தன் காதலைக் காரணம் சொல்லாமல் முறித்து விடுவார். பின்பு ஒரு நாள்  இந்தக் காரணத்தைச் சொன்னதும் இருவருமே தற்கொலை செய்துகொள்ளத் துணிந்து விடுவர். பின்பு இருவரின் தந்தையும் வெவ்வேறு நபர்கள் என்ற உண்மையை நாகேஷ் இவர்களுக்கு எடுத்துச்சொல்லி தற்கொலையைத் தடுப்பார். இது ரசிகர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. பாடல்கள் அருமையாக இருந்தும் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் சரியாக அமைக்கப்படவில்லை. அதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை இழந்துவிட்டது.

நாடோடி


நாடோடி படத்தில் எம்.ஜி.ஆர் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து பணக்காரரால் வளர்க்கப்பட்டவர். அதனால் அவர் காதலியை மணம் முடித்துத்தர அவளது தந்தை மறுத்துவிடுவார். காதலி தற்கொலை செய்துகொள்வார். இவளது தங்கை அக்காவின் காதலனை சாதிமறுப்புத் திருமணம் செய்யப் போவதாக சபதம் செய்வாள். படத்தில் இவளும் (சரோஜாதேவியும்) எம்.ஜி.ஆரும் பாதிநேரம் குருடாக்கப்பட்டு பிச்சையெடுக்கும் காட்சிகளில் நடித்திருப்பதைப் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பாராட்டவே, எதிரணியினர் இப்படத்தை விரும்பிப் பார்த்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குக் கண் தெரியாத எம்.ஜி.ஆரைப் பார்க்க பிடிக்கவில்லை. மேலும், பிறப்பும் தாழ்ந்ததாகச் சித்திரிக்கப்பட்டதும். திருமணம் மறுக்கப்பட்டதும் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.  பாட்டும், படிப்பும் சிறப்பாக இருந்தும் படம் வசூலில் நிமிர்ந்து நிற்கவில்லை.

பட்டிக்காட்டுப் பொன்னையா


பட்டிக்காட்டு விவசாயி, பட்டணத்துக்கல்லூரி வாலிபன் என இரண்டு வேடங்களில் சகோதரர்களாக எம்.ஜி.ஆர் இரட்டைவேடமிட்டு நடித்திருந்தார். படம் உலகம் சுற்றும் வாலிபன் வந்து மூன்றுமாதம் கழித்து (10-8-73) வெளிவந்தது. ஜெயலலிதா மற்றும் ராஜாஸ்ரீ கதாநாயகிகளாக நடித்தனர்.

கல்லூரி மாணவனாக நடித்த எம்.ஜி.ஆர் ஒரு மழையில் காதலியுடன் நனைந்து மகிழ்ந்த வேளையில் அவளிடம் வரம்பு மீறி நடந்துவிடுவார். இதனால் ஊரில் இருக்கும் தந்தைக்குக்கூடத் தெரிவிக்காமல் அவளை அவசரத் திருமணம் செய்து வீட்டு மாப்பிள்ளையாகி அவமானப்பட்டு வெளியேறுவார். இந்த எம்.ஜி.ஆரை பெண்களும் ரசிக்கவில்லை ஆண்களும் ரசிக்கவில்லை.


அரசியல் காரணங்கள்

எம்.ஜி.ஆர் படங்கள் சில வெள்ளிவிழா கொண்டாடாததற்கு சில பல அரசியல் காரணங்களும் உண்டு. கட்சிக்காரர்களின் தொல்லை அதிகமாக இருப்பதைக் கண்ட பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தன் தம்பியிடம் சொல்லி அவர் வகித்துவந்த மேல்சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யச் சொன்னார்.  எம்.ஜி.ஆர் அண்ணனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். மாலைமுரசில் செய்தி வந்தது. என் கடமை படம் அப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் காட்சிக்கு டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற திமுகவினர் பலர் மாலைமுரசு செய்தி கேட்டதும் வரிசையிலிருந்து வெளியே வந்துவிட்டனர். அண்ணா கொடுத்த எம்.எல்.சி பதவியை எம்.ஜி.ஆர் உதறித் தள்ளுவதா? என்ன ஆணவம் என்று விமர்சித்தனர். பின்பு பலரும் வேண்டிக் கொண்டதனால் எம்.ஜி.ஆர் இராஜினாமாவைத் திரும்பப் பெற்றார். அப்போது (1964) தி.மு.க ஆட்சிக்கு வரவில்லை. அண்ணா மிகுந்த செல்வாக்குடன் இருந்த காலம். இளைஞர்கள் அண்ணாவின் தம்பிகளாகத் தங்களை அறிவித்திருந்த காலம். திமுகவா? எம்.ஜி.ஆரா? என்று கேட்டால் தி.மு.க என்று நெஞ்சு நிமிர்த்திய காலம். பின்பு 1972ல் காலம் மாறிவிட்டது. திமுகவா எம்.ஜி.ஆரா? என்றால் இலட்சக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக எம்.ஜி.ஆர் என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் வந்தனர்? இதற்காக எம்.ஜி.ஆர் காத்திருந்தார். மெள்ள மெள்ள காய்களை நகர்த்தினார். “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு’’ என்று பொறுமையாக நல்லதொரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார். வாய்ப்பும் வந்தது.


அரசகட்டளை

மறு வெளியீடுகளில் இன்றளவும் வசூலை வாரிக் குவிக்கும் அரசகட்டளை படம் காங்கிரஸ் - திமுக தேர்தல் (1967) காலத்தில் வந்திருந்தால் அது ஒரு வெள்ளிவிழா படமாக அமைந்திருக்கும். ஆனால், அப்படத்தின் காட்சிகளை அண்ணனும் தம்பியும் திரும்பத் திரும்ப எடுத்ததில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணி இயக்கித் தயாரித்த படம். அவர் தன் தாயார் பெயரில் சத்யராஜா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். சரோஜாதேவிக்குத் திருமணம் ஆனதும். ஒரு தடங்கலாகிவிட்டது.
எம்.ஜி.ஆர் குண்டடிபட்டு பிழைத்து திமுக வெற்றிபெற்ற பிறகு படம் ரிலீசாயிற்று. இப்படத்தில் இருந்த புரட்சிப் பாடல்கள், காட்சிகள் ஆகியன இப்போது காலத்துக்குப் பொருந்தாதவை ஆகிவிட்டன. குண்டடிபட்ட பின்பு சரோஜாதேவியின் தாயார் ஒரு பேட்டியில் இனி எம்.ஜி.ஆரோடு என் மகள் நடிக்கமாட்டாள் என்றார். இதுவும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர் தரப்பினரும் மிகவும் ஆத்திரப்பட்டனர். இதனால் அரசகட்டளையின் இறுதிக் காட்சியில் சரோஜா தேவி இறந்துவிடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் காட்சிகள் அதிகமாக்கப்பட்டு முடிவில் அவரைத் திருமணம் செய்வதாகக் காட்டப்பட்டது. கதை முழுக்கப் போராடிய இளவரசியான சரோஜாதேவி இறந்ததும் பொருத்தமான முடிவாக அமையவில்லை. 


நாடோடிமன்னன் படத்தில் சரோஜாதேவியைக் கொண்டுவர பானுமதி எப்படி வெளியேற்றப்பட்டாரோ அதே வழியில் அரசகட்டளையில் சரோஜாதேவியும் வெளியேற்றப்பட்டார். வரலாறு திரும்பியது. தான் வந்த வழியிலேயே அவர் வெளியேறினார். இதன் பின்பு ஜெயலலிதாவின் சீசன் களைகட்டத் தொடங்கியது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்


காங்கிரஸிடமிருந்து தமிழ்நாட்டை மீட்கும் கதை அரசகட்டளை திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்கும் கதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். ஆனால், இரண்டுமே அதற்கான போராட்டம் நடக்கும்போது வரவில்லை. போராட்டம் முடிந்தபிறகு வந்ததால் அவை பழங்கதையாய் போயிற்று. வெற்றி பெற்ற பின்பு யாராவது பழைய போராட்டங்களைப் பற்றி பேசுவார்களா? எனவே, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு வந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

NIDHHI AGARWAL HINDI ACTRESS BORN 1993 AUGUST 17




NIDHDHI AGARWAL HINDI ACTRESS 
BORN 1993 AUGUST 17



Nidhhi Agerwal (born 17 August 1993) is an Indian model, dancer and actress who appears in Bollywood and Telugu films. In 2017, she made her acting debut in the film Munna Michael.[1][2] She was Yamaha Fascino Miss Diva 2014 finalist.[3] Early life
Agerwal was born in Hyderabad and brought up in Bengaluru. Born into a Hindi-speaking Marwari family, she can understand as well as speak Telugu, Tamil and Kannada.[4] Her schooling was at Vidyashilp Academy and Vidya Niketan School. She holds a graduation in Business Management from Christ University, Bengaluru.[5][6] She is well trained in ballet, kathak and belly dance.[7]
Career
In 2016, director Sabbir Khan confirmed that Agarwal was signed as the lead in his film Munna Michael, alongside Tiger Shroff. She was chosen among 300 candidates. About her acting passion she said,


"I always wanted to be an actress. Every time I saw Aishwarya Rai on a hoarding I'd tell myself that my face would be up there too one day." Nidhhi was also asked to sign a no-dating clause till completion of the film.[8][9] She also signed a film of KriArj Entertainment which will be directed by Shree Narayan Singh. This will be her second Bollywood film & Naraayan's third directional venture after Toilet: Ek Prem Katha & Batti Gul Meter Chalu. She will also star in Akshay Kumar’s Ikka directed by Ali Khan, it will be a remake of 2014 Tamil hit Kaththi[citatio





Filmography[edit]

Key
Films that have not yet been releasedDenotes films that have not yet been released
YearTitleRole(s)Director(s)Language(s)NotesRef.
2017Munna MichaelDolly / Deepika SharmaSabbir KhanHindiHindi Debut[12]
2018SavyasachiChitraChandoo MondetiTeluguTelugu Debut[13]
2019Mr. MajnuNikitha "Nikky"Venky Atluri
iSmart ShankarDr. SarahPuri Jagannadh[14][15]
2020Bhoomi daggerTBALakshmanTamilFilming
Tamil Debut
[16][17]
Ashok Galla film daggerTBASriram AdityaTeluguFilming[18][19]
JamesdaggerTBAKannadaFilming

Television[edit]

YearShowChannelNote(s)Ref.
2017The Kapil Sharma ShowSonyAs Guest with Tiger Shroff & Sabbir Khan[20]
2019Konchem Touch Lo Unte CheptaZee TeluguAs Guest with Ram Pothineni & Nabha Natesh[21]
Bigg Boss Telugu 3Star MaaAs Guest with Ram Pothineni

Awards and nominations[edit]


YearAwardCategoryFilmResultRef.
2017Zee Cine AwardsZee Cine Award for Best Female DebutMunna MichaelWon[22]
2019SIIMA AwardsBest Debut ActressSavyasachiNominated[23]

Wednesday, 12 August 2020

MOHAMED ZIA- UL-HAQ PAKISTAN PRESIDENT BORN 1924 AUGUST 12,1924 -1988 AUGUST 17




MOHAMED ZIA- UL-HAQ PAKISTAN PRESIDENT 
BORN 1924 AUGUST 12, -1988 AUGUST 17



ஜெனரல் முகமது சியா-உல்-ஹக் (உருது: محمد ضیاءالحق) (ஆகஸ்ட் 12 1924 – ஆகஸ்ட் 17 1988) பாகிஸ்தான் நாட்டின் அரசுத்தலைவராக ஜூலை 1977 முதல் ஆகஸ்ட்1988 வரையில் ஆட்சி புரிந்தவர். 1976 இல் அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியாமிக்கப்பட்ட இவர் ஜூலை 5, 1977 இல் இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சி மூலம் அன்றைய பிரதம மந்திரி சூல்பிகார் அலி பூட்டோ தலைமையிலான அரசைக் கவிழ்த்து ஆட்சிக்கு வந்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். செப்டம்பர் 1978 இவர் நாட்டின் அதிபரானார்.

இவர் ஆகஸ்ட் 17, 1988 இல் இடம்பெற்ற சந்தேகத்துக்கிடமான வானூர்தித் தீநேர்வு (விபத்து) ஒன்றில் இவருடன் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்க தூதர் ஆர்னல்ட் ராஃபெல்லுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்



பாகிஸ்தானில், மலாலா என்ற சிறுமியை சுட்டுக் கொலை செய்ய முயன்ற தாலிபானின் வன்முறை, பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலங்கள் இடம்பெற்றன. அவற்றை நமக்கு காண்பித்த சர்வதேச ஊடகங்கள், “தாலிபானுக்கு எதிரான மக்கள் எழுச்சி” நடந்ததைப் போன்று அறிவித்துக் கொண்டிருந்தன.
பாகிஸ்தானில், மலாலா என்ற சிறுமியை சுட்டுக் கொலை செய்ய முயன்ற தாலிபானின் வன்முறை, பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலங்கள் இடம்பெற்றன. அவற்றை நமக்கு காண்பித்த சர்வதேச ஊடகங்கள், “தாலிபானுக்கு எதிரான மக்கள் எழுச்சி” நடந்ததைப் போன்று அறிவித்துக் கொண்டிருந்தன.

ஆனால், பாகிஸ்தானில் உண்மையான நிலவரத்தை ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டுவதில்லை. ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்காத பாகிஸ்தானின் மறுபக்கத்தை, நாம் இங்கு ஆராய்வோம்.

பாகிஸ்தானுக்கும், நவீன இஸ்ரேலுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே ஒரே காலகட்டத்தில் மதத்தின் பெயரால் உருவான தேசங்கள். இஸ்ரேல், தன்னை ஒரு உலக யூதர்களின் தாயகமாக காட்டுவதைப் போன்று, பாகிஸ்தான் குறிப்பாக தெற்காசிய முஸ்லிம்களின் தாயகமாக காட்டிக் கொண்டது.



பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டாலும், உண்மையில் அது ஒரு மேற்கத்திய சார்புடைய, தாராளவாத கொள்கை கொண்ட நாடாகவே இருந்தது. இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய, ஸியா உல் ஹக் காலத்தில் எல்லாமே தலைகீழாக மாறின. சியா, பாகிஸ்தானை ஷரியா சட்டத்தினால் ஆளப்படும், ஒரு கடும்போக்கு இஸ்லாமியவாத நாடாக்க விரும்பினார். அதற்காக ஆர்வமுடைய மாணவர்களை தெரிவு செய்து, இஸ்லாமியக் கல்வி கற்க சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார்.

முல்லா, மௌலவி போன்ற இஸ்லாமிய மதகுரு ஆவதற்கான, இடைநிலை, உயர்தர கற்கைகளை சவூதி அரேபியா இலவசமாகவே வழங்கியது. சவூதி அரசு, வாஹபிசம் என்ற இஸ்லாமியப் பிரிவை பின்பற்றி வருகின்றது. தமது பிரிவினரே, இஸ்லாமிய மதத்தை தூய்மையாக கடைப்பிடிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானிய மாணவர்களின் மூளைகளையும் அதற்கேற்ப தயார்படுத்தினார்கள். பாரம்பரிய பாகிஸ்தானிய இஸ்லாம் (சூபிசம்), தாராளவாதக் கொள்கை கொண்டது.



அத்தகைய சமூகத்தில், கடும்போக்கு சவூதி இஸ்லாம் இறக்குமதி செய்யப்பட்டது மட்டுமல்ல, மக்களின் பேராதரவுடன் நடைமுறைப் படுத்தப் பட்டது. பாகிஸ்தானிய மக்கள் அத்தனை இலகுவாக மாறி இருக்க மாட்டார்கள். அதற்கான சமூக அரசியல் தளம் அங்கே இருந்திருக்க வேண்டும்.

இந்தியா தன்னை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக் கொள்வதைப் போன்று, பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களை எவ்வாறு கட்டியாள்வது என்பது தான் ஆட்சியாளர்களின் பிரச்சினை. பாகிஸ்தானில் ஐந்து மொழிகளைப் பேசும், நாகரிக வளர்ச்சி அடைந்த இனங்களும், அதைத் தவிர பத்துக்கும் குறையாத தனித்துவமான மொழிகளைப் பேசும் பழங்குடி இனங்களும் இருக்கின்றன.

இவர்களை எல்லாம் இஸ்லாம் என்ற மதம் மட்டும் தான் ஒன்றிணைக்கின்றது. அப்படி இருந்தாலும், கிறிஸ்தவ, இந்து மதங்களைப் பின்பற்றுவோரும் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். இந்த சிறுபான்மை மதங்களைப் பின்பற்றுவோர் பெரும்பாலும், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் ஆவர்.

அது மட்டுமல்ல, அவர்கள் பாகிஸ்தானின் பூர்வீக மக்களுமாவார். இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்த காலத்தில், இந்தியாவில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்து வந்தவர்கள் இன்றைக்கு ஆளும் வர்க்கமாக இருக்கின்றனர். ஆனால், இன்று கிறிஸ்தவ, இந்து மதங்களை பின்பற்றும் தலித் மக்களின் மூதாதையர் ஆயிரமாயிரம் வருடங்களாக அந்த மண்ணிலேயே வாழ்ந்தவர்கள்.

“குரான் நூலை எரித்த RimshaMasih

மதவாதிகள் முதலில், பலவீனமான சமூகங்களை குறிவைத்து தாக்கினார்கள். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மதத்தால் மட்டும் வேறுபட்டவர்கள் அல்ல. சாதியமைப்பிலும் தாழ்ந்தவர்கள். அதனால், அவர்களை தாக்கினால் கேட்பதற்கு யாரும் இருக்கப் போவதில்லை. ஸியா அரசு கொண்டு வந்த, மத நிந்தனைச் சட்டம் அவர்களை ஊக்குவித்தது. அண்மையில் ஒரு மூளை வளர்ச்சி குறைந்த கிறிஸ்தவ சிறுமி, “குரான் நூலை எரித்ததாக” குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வந்தது. சில நாட்களின் பின்னர் அந்த இளம்பெண் குற்றமற்றவர் என்று நிரூபணமானது. அந்த கிராமத்து பள்ளிவாசலின் முல்லா, எரிந்த குரான் தாள்களை, அந்த சிறுமியின் பையில் ஒளித்து வைத்திருக்கிறார். அந்த உண்மையை கூறியவர், பள்ளி வாசலில் தொழுகையை அறிவிக்கும் மூசேன். இருப்பினும், அந்த கிறிஸ்தவ சிறுமி, மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. குற்றமிழைத்த முல்லாவின் ஈனச் செயலுக்குப் பின்னால், அந்த ஊரில் வாழும் கிறிஸ்தவர்களை விரட்டும் சதித் திட்டம் மறைந்திருக்கலாம்.

பாகிஸ்தான் கிராமங்களில் பாதிக்கப்படும், எல்லா கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும், சர்வதேச கவனம் கிடைப்பதில்லை. ஒரு தடவை, விவசாய கூலிப் பெண்களுக்கு இடையில் நடந்த சண்டை ஒன்று, நீதிமன்றம் வரை சென்றது. அதில் குற்றஞ் சாட்டப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தப் பெண் செய்த குற்றம், வாய்த் தர்க்கத்தின் போது, மற்றவரின் (இஸ்லாமிய) மதம் பற்றி தரக் குறைவாக பேசியது. அங்கு நடந்த சச்சரவுக்கான காரணம் எதுவாக இருப்பினும், மத நிந்தனையானது நீதிபதியினால் கடுமையான குற்றமாக கருதப்பட்டது.

உண்மையில் அன்று அங்கே நடந்தது என்ன? வயல் வேலையின் நடுவில், கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து கொடுத்த கிறிஸ்தவப் பெண்ணிடம், நீர் வாங்கிப் பருக சில பெண்கள் மறுத்துள்ளனர். அதற்குக் காரணம், அந்த கிறிஸ்தவப் பெண் ஒரு தீண்டத்தகாத சாதியை சேர்ந்தவர். இந்தியாவில், இலங்கையில் இருப்பதைப் போல, பாகிஸ்தானிலும் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பது கூட தீட்டு என்று கருதப் படுகின்றது.

இதனால் ஏற்பட்ட வாய்த் தர்க்கம், மத முரண்பாடாக வளர்ந்தது. வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றாலும், நீதிபதி உயர்சாதியை சேர்ந்தவர் என்பதால், ஒரு சிறிய குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கி உள்ளார். இது தெற்காசிய நாடுகளுக்குரிய பொதுவான குணம். இன்றைக்கு யாரும் சாதி ஆதிக்க அரசியலை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். மதப் பிரச்சினை, இனப்பிரச்சினைகளுக்கு பின்னால் முகத்தை புதைத்துக் கொள்வார்கள்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு, அங்கே தாலிபான் என்ற அமைப்பை உருவாக்கியமை எல்லோருக்கும் தெரியும். கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வருகின்றது. அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆப்கானிய ஆயுதக்குழுக்களுக்கு கொடுத்து யுத்தம் செய்ய விட்டு, ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கலாம். அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடந்த முப்பதாண்டுகளாக அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றன.

Tehrik-e-Taliban of Pakistan (TTP)
உண்மையில் இவர்கள் ஆயுதங்களுக்கு செலவிட்ட பணத்தை, நாட்டை அபிவிருத்தி செய்வதில் செலவிட்டிருந்தால், பாகிஸ்தானிலும் தாலிபான் உருவாவதை தடுத்திருக்கலாம். பாகிஸ்தான் அரசு, அயல்நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கத்தை உருவாக்கி விட்டது. அவர்களின் அசுர வளர்ச்சியைக் கண்டு பிரமித்த பாகிஸ்தானிய இளைஞர்கள், தாங்களும் ஒரு தாலிபான் இயக்கத்தை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு Tehrik-e-Taliban of Pakistan (TTP) என்று பெயரிட்டார்கள். 2007 இலிருந்து, 2009 வரையில், ஆப்கான் எல்லையோரம் அமைந்துள்ள மேல் மாகாணத்தின் பல பகுதிகள் தாலிபான் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

2009 ம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில் புலிகளை அழிக்கும் நோக்குடன், ஸ்ரீலங்கா அரசு இராணுவ நடவடிக்கை எடுத்திருந்தமை அனைவருக்கும் தெரியும். அதே வருடம், அதே காலத்தில், பாகிஸ்தான் இராணுவம் தாலிபான் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது போர் தொடுத்திருந்தது. ஸ்ரீலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்று ஆதரித்த சர்வதேச நாடுகள், பாகிஸ்தான் அரசையும் ஆதரித்தன. போரின் முடிவும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது.

முற்றுகைக்குள் சிக்கிய தாலிபான்கள், இலட்சக் கணக்கான பொது மக்களை வெளியேற விடாது தம்மோடு வைத்திருந்தனர். பாகிஸ்தான் இராணுவம் கண்மூடித் தனமாக எறிகணைகளை வீசி, ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்தது. அந்த வருடம் நடந்த போரின் இறுதியில், தாலிபான் பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தானிய அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தது. இருப்பினும், தாலிபான் முற்றாக அழிக்கப் படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல்கள் தொடர்ந்தன. சமீபத்தில் நடந்த, மலாலா மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம், தாலிபான் இன்னமும் அங்கே இயங்கி வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

பாகிஸ்தானில் மீண்டும் தாலிபான் தலையெடுப்பதற்கு காரணம் என்ன? பாகிஸ்தான் அரசின், மக்கள் நலனை புறக்கணிக்கும் ஊழல் மய அரசியல் ஒரு முக்கிய காரணம். 2010, 2011 ல் பாகிஸ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணப் பொருட்களை வழங்குவதில், வழக்கம் போல அரசு அசமந்தப் போக்கை காட்டியது. இத்தனைக்கும், சர்வதேச நாடுகளின் உதவிகள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

வெள்ள நிவாரணப் பணிகள் துரிதகதியில் நடைபெறவில்லை. அந்த தருணத்தில், தாலிபான் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தது. பாகிஸ்தானிய அரசினால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் மனங்களை தாலிபான் வென்றது. அத்தகைய சூழ்நிலையில் மக்கள் யாரை ஆதரிப்பார்கள்?

பாகிஸ்தானில் அபிவிருத்தியால் பின்தங்கிய மாநிலங்களில் வாழும் மக்கள், மிகவும் வறுமை நிலையிலும், எழுத்தறிவின்றியும் வாழ்கின்றனர். அத்தகைய சமூகத்தில், தாலிபான் ஒரு மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக வளர்ந்ததில் வியப்பில்லை. அந்தப் பகுதியில், அரச பாடசாலைகளின் செலவினத்திற்காக, அரசு செலவிடும் தொகை மிகவும் சொற்பம். அந்த இடங்களில், சவூதி நிதியில் தாலிபான் கட்டிய குரான் பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அங்கே கல்வி இலவசம். அத்துடன், பிள்ளைகளுக்கு உணவும், ஆடைகளும் தருகிறார்கள். பணம் செலவழித்து பட்டணத்திற்கு அனுப்பி, தனியார் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கும் வசதியற்ற ஏழைப் பெற்றோர், தாலிபான் நடத்தும் மதராசாக்களால் ஈர்க்கப் படுவதில் வியப்பில்லை. ஆனால், அந்தப் பாடசாலைகளில், குரான் படிப்பு, கணிதம், அரபு மொழி மட்டுமே சொல்லிக் கொடுப்பார்கள்.

சமூகத்தில் படித்து முன்னேற வேண்டுமானால் அரசுப் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். அதனை தடுக்கும் நோக்குடன், தாலிபான் அரசுப் பாடசாலைகளை குண்டு வைத்து தகர்த்தது. மேலும், மேற்கத்திய கல்வியமைப்பு, பெண் கல்வி ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையாகவும் அது நடந்தது. தாலிபான்களின் கல்வி மறுப்பை எதிர்த்து போராடி பிரபலமானவர் தான், தாலிபானால் சுடப்பட்ட சிறுமி மலாலா.

தாலிபான் உறுப்பினர்கள் மத்தியிலும், அவர்களை நம்பியிருக்கும் மக்கள் மனதிலும், மதவெறி, சகிப்புத் தன்மை இன்மை,போன்றன விதைக்கப் படுகின்றன. அவர்களுக்கு எதிராக பேசும் நிராயுதபாணிகளான மக்களையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை தான். அதை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு, மலாலா துப்பாக்கிச்சூடு விடயத்தில், தாலிபானின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். நீங்கள் தொலைக்காட்சி திரையில் பார்த்தது எல்லாம் வெறும் காட்சிப் படிமங்கள் மட்டுமே.

நிஜத்தில், இன்றைக்கும் மக்கள் தாலிபானை விமர்சிக்க அஞ்சுகின்றார்கள். நேர்மையான அரசியல்வாதியாக காட்டிக் கொள்ள விரும்பும் இம்ரான் கான் போன்ற பிரபலங்கள் கூட தாலிபானை எதிர்த்து பேசுவதில்லை. அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான, இம்ரான்கானின் அமைதிவழியிலான ஊர்வலம் ஒன்றை தாலிபான் தடை செய்தது. அப்படி இருந்தும், மலாலா மீதான துப்பாக்கிச் சூட்டை பயங்கரவாத செயலாக கண்டித்த இம்ரான்கான், தாலிபானை நேரடியாக கண்டிக்க தயங்குகின்றார். அதற்கு என்ன காரணம்?

இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் யாராவது புலிகளை விமர்சித்துப் பேசினால் என்ன விதமான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்? அந்த நிலைமை தான் பாகிஸ்தானிலும் காணப்படுகின்றது. தாலிபானின் செயற்பாடுகளுடன் எல்லோரும் உடன்படுவதில்லை. அவற்றை விமர்சனத்துடன் அணுகும் மக்களும் இருக்கின்றனர். ஆனால், அதை எல்லாம் வெளியில் பேசத் தயங்குவார்கள்.

அப்படிப் பேசினால், அரச ஆதரவாளர் முத்திரை குத்தப்பட்டு விடும் என்ற அச்சம் மட்டும் காரணம் அல்ல. உண்மையில், பாகிஸ்தானிய இராணுவம் பிரயோகிக்கும் வன்முறை, தாலிபான் வன்முறையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. அதனால், எந்தக் குறை இருந்தாலும், மக்கள் தாலிபானை ஆதரிக்க வேண்டிய நிலை. இதே போன்ற நிலைமையில் தான், பெரும்பாலான தமிழர்கள் புலிகளை ஆதரித்தார்கள் என்பதை, இங்கே நான் குறிப்பிட வேண்டியதில்லை.

பாகிஸ்தானில் இன்னமும் தொடரும், அமெரிக்க ஆளில்லா வேவுவிமானங்களின் (ட்ரோன்) தாக்குதல்களால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். ஓரிரு தடவைகள், விமானக் குண்டு வீச்சில் சில பாகிஸ்தானிய படையினரும் கொல்லப்பட்டனர். அப்படி இருந்த போதிலும், பாகிஸ்தானிய அரசினால், அமெரிக்க விமானக் குண்டுவீச்சை தடுக்க முடியவில்லை.

அத்தகைய கையாலாகாத அரசின் பக்கம் இனங் காட்டிக் கொள்வதற்கு யார் விரும்புவார்கள்? மலாலா விவகாரத்தில், பாகிஸ்தானிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இனிமேல் தாலிபானின் கதை முடிந்து விடும் என்றும் நினைப்பது வெறும் கனவு. அப்படி ஒன்று நடக்க வேண்டுமென்று, பாகிஸ்தானிய, அமெரிக்க அரசுகள் மனப்பூர்வமாக விரும்பினால், முதலில் ட்ரோன் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.





ஜியா உல் ஹக் என்ற பாகிஸ்தான் பேமானி பயல் விமானத்தில் வெடிவைத்து சாகடிக்க பட்ட இன்ப நாளிது 1988 ஆகஸ்ட் 17
அதிகாரத்தைப் பிடிக்க விரும்பிய சில பாகிஸ்தானி யரும் இணைந்துதான் 1988ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக்கை திட்டமிட்டுக் கொன்றனர்
இஸ்லாமாபாத்: அமெரிக்காவும், அதிகாரத்தைப் பிடிக்க விரும்பிய சில பாகிஸ்தானியரும் இணைந்துதான் 1988ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக்கை திட்டமிட்டுக் கொன்றனர் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் உளவுப் பிரிவு (ஐஎஸ்ஐ) இயக்குநரும், ஐஎஸ்ஐ முன்னாள் தலைவருமான இம்தியாஸ் அகமது கூறியுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் டிவி ஒன்றுக்கு இம்தியாஸ் அளித்துள்ள பேட்டி...
ஜியா உல் ஹக்கைக் கொல்ல பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டது. அந்த பாகிஸ்தான் சக்திகள், அரசியல் அதிகாரத்தை ஜியாவிடமிருந்து பறிக்க விருப்பம் கொண்டிருந்தவை ஆகும். இவர்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.
ஜியா உல் ஹக் சென்ற விமானம் விபத்துக்குள்ளா கவில்லை, அது சதி வேலை என்று முன்னாள் ராணுவ தளபதி மிர்ஸா ஆலம் பேக்கும் கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் இம்தியாஸ்.
1977ம் ஆண்டு ஜூல்பிகர் அலி பூட்டோ ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார் அப்போதைய ராணுவ தளபதியான ஜியா உல் ஹக். நாட்டில் ராணுவச் சட்டத்தையும் பிரகடனம் செய்தார். முதலில் ராணுவ சர்வாதிகாரியாக செயல்பட்டு வந்த அவர் பின்னர் 1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னை நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார்.
1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜியா உல் ஹக் விமான விபத்தில் உயிரிழந்தார். அது அப்போதே சதி வேலை என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ஜியா உல் ஹக்கை அமெரிக்காதான் கொன்றது என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இம்தியாஸ் அகமது. இதுகுறித்து ஜியாவின் மகன் இஜாஸ் உல் ஹக் கருத்து தெரிவிக்கையில், விமான விபத்து குறித்து முழுமையான கிரிமினல் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முன்னாள் பைலட் அக்ரம் அவான் என்பவர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டபோது, விசாரணை யின்போது, ஜியா சென்ற விமானத்தை தகர்க்க இஸ்ரேலின் மொசாத் உபகரணங்களைக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை. விமான விபத்து குறித்த விசாரணையை நடத்த விடாமல் அமெரிக்கா தடுத்து விட்டது.
எனது தந்தையின் உடலில் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களை தொலை தூரங்களுக்கு மாற்றி விட்டனர். விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரை சந்தித்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை இல்லை.
எனது தந்தையின் மரணத்தில் இன்னும் நிலவி வரும் பல மர்மங்களை அவிழ்க்க விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் இஜாஸ் உல் ஹக்.
.

Saturday, 17 August 2019

NIDHHI AGERWAL ,TELUGU ACTRESS BORN 1993 AUGUST 17



NIDHHI AGERWAL ,TELUGU ACTRESS 
BORN 1993 AUGUST 17



Nidhhi Agerwal (born 17 August 1993) is an Indian model, dancer and actress who appears in Bollywood and Telugu films. In 2017, she made her acting debut in the film Munna Michael.[1][2] She was Yamaha Fascino Miss Diva 2014 finalist.[3] 

Early life
Agerwal was born in Hyderabad and brought up in Bengaluru. Born into a Hindi-speaking Marwari family, she can understand as well as speak Telugu, Tamil and Kannada.[4] Her schooling was at Vidyashilp Academy and Vidya Niketan School. She holds a graduation in Business Management from Christ University, Bengaluru.[5][6] She is well trained in ballet, kathak and belly dance.[7]

Career


In 2016, director Sabbir Khan confirmed that Agarwal was signed as the lead in his film Munna Michael, alongside Tiger Shroff. She was chosen among 300 candidates. About her acting passion she said, "I always wanted to be an actress. Every time I saw Aishwarya Rai on a hoarding I'd tell myself that my face would be up there too one day." Nidhhi was also asked to sign a no-dating clause till completion of the film.[8][9] She also signed a film of KriArj Entertainment which will be directed by Shree Narayan Singh. This will be her second Bollywood film & Naraayan's third directional venture after Toilet:
Ek Prem Katha & Batti Gul Meter Chalu. She will also star in Akshay Kumar’s Ikka directed by Ali Khan, it will be a remake of 2014 Tamil hit Kaththi[citatio