Showing posts with label KASTHURI. Show all posts
Showing posts with label KASTHURI. Show all posts

Friday, 1 May 2020

ACTRESS, KASTHURI, 1974 ,MAY 1,



ACTRESS KASTHURI BORN 1974 ,MAY 1



கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.[1]
இளமைக்காலம்
இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.[2] இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.[3]


ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர்.[4][5] கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் என்னும் இந்தி குறும்படத்திலும், 2010இல் தமிழ் படத்தின் வாயிலாகம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.[6]
தடவுவது பற்றி நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை விமர்சிக்க பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர். நடிகை லதாவை தடவியதை மேற்கோள் காட்டினார் நடிகை கஸ்தூரி.

அதற்கு லதா உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கஸ்தூரியும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.

பிக்பாஸ் நிர்வாகம், வனிதாவுக்கு மாற்றாகவே என்னை எண்ணி, உள்ளே அனுப்பியது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடையில் சென்று, சில நாட்களிலேயே திரும்பி வந்த கஸ்தூரி, தன்னுடைய தைரியமான, சர்ச்சைகள் நிறைந்த ட்விட்டர் கருத்துகளுக்குப் பெயர் போனவர். அதையே பிக்பாஸிலும் மக்கள் எதிர்பார்த்தனர், அது நடந்ததா, அந்நிகழ்ச்சியின் கொள்கைகள், எதிர்பார்ப்புகள், நிஜங்கள் என்ன? விரிவாகப் பேசுகிறார் கஸ்தூரி.
இதில் பங்கேற்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
3 வருடங்களாக மறுத்த பிறகு, இந்த முறை ஒப்புக்கொண்டேன். ஏனெனில் நான் அப்போது கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். என்னால் மறுக்க முடியாத வகையில் என்னை அழைத்தனர். என்னை நானே சுய பரிசோதனை செய்துகொள்ளவும் விரும்பினேன்.

குறிப்பிட்ட சில ஒழுக்க நெறிமுறைகளைக் கடைபிடிக்க முடியாமா என்று தெரிந்துகொள்ளவே சென்றேன். அமைதியையும் தெளிவையும் எனக்குள்ளேயே கண்டுகொண்டேன்.


வெளியில் இருக்கும் கஸ்தூரியாகவே பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இருந்தீர்களா?
இதைக் கமல் கேட்டார். எல்லோரும் கேட்கின்றனர். கஸ்தூரி, கஸ்தூரியின் வீட்டுக்குள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது, அவர்களுக்கு ட்விட்டரில் இயங்கும் 'பிராண்ட் கஸ்தூரி'யை மட்டுமே தெரியும். நான் கால்பந்து குறித்து எழுதுகிறேன் என்பதற்காக, வீட்டுக்குள் கால்பந்து விளையாட வேண்டுமா என்ன?

குறிப்பிட்ட ஒருவரின் அதிகாரம், புகழ் ஆகியவற்றைப் பார்க்காமல் தைரியமாக விமர்சிப்பவர் என்னும் பெயர் இருக்கிறது. ட்விட்டரில் கருத்து சொல்கிறேன்; விமர்சனம் வைக்கிறேன் என்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் கேட்கப்படும் முதிர்ச்சியற்ற அவதானிப்புகளுக்கு பதில் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் பார்க்க நேரிட்டவற்றுக்கு நான் பொறுப்பலல.

மக்களின் தவறுகளை மட்டுமே பூதக்கண்ணாடி வைத்து பிக்பாஸ் பார்ப்பது ஏன்?
அவர்கள் பெண்கள் மீதான வெறுப்பைக் கொண்டாடினர். இன்னும் அதைச் செய்கின்றனர்.

மக்கள் கஸ்தூரியை வனிதாவுக்கு மாற்று என்று எதிர்பார்த்தார்களா?
மக்களைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிக்பாஸும் அதன் தயாரிப்பாளர்களும் அது மாதிரியான கடுமையான அணுகுமுறையைத்தான் என்னிடம் எதிர்பார்த்தனர். என்னுடைய ட்விட்டர் டைம்லைனை வைத்து அவ்வாறு தவறாக எண்ணி, அனுப்பினர்.

நீங்கள் என்னுடைய ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர்பவர்களாக இருந்தால், சுமார் 10 ஆயிரம் ட்வீட்டுகளைக் காண வேண்டும். அதில் 3 ட்வீட்டுகள் வேண்டுமெனில் அரசியல் கருத்தாகவோ, விமர்சனமாகவோ இருக்கும். அவைதான் சர்ச்சையாக உருமாறி, செய்தியாகின்றன. அதனால் அப்படிப்பட்ட பிம்பம் ஏற்பட்டுவிட்டது.

மதுமிதா வெளியேற்றத்தின்போது எப்படி உணர்ந்தீர்கள்?
அப்போது எனது இதயம் நொறுங்கி விட்டது. அதுகுறித்துப் பேசுவதே கடினமாக இருக்கிறது. அந்த நாளில் அடிப்படை மனிதத் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய மூளையில் முதலில் தோன்றியது மதுமிதாவுக்கு மருத்துவ உதவி வேண்டும் என்பதுதான்.

நான் முழுமையாக வெறுப்பவர்கள் எதாவது முட்டாள்தனத்தை செய்து, ஆபத்தில் இருந்தாலும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் தோன்றும். இரண்டாவதாக இதை மீண்டும் செய்யாதீர்கள் என்று சொல்லத் தோன்றும். கேலி செய்வதோ, கிண்டலுக்கு ஆளாக்குவதோ, அவர்களைக் குறிவைப்பதோ, விமர்சிப்பதோ, விலக்கிவைப்பதோ என்னுடைய அகராதியில் இல்லை. யாராவது ஆபத்தில் இருக்கும்போது, நீங்கள் அவரை எவ்வளவு வெறுக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, அவர்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்பதுதான் அவசியம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்கள்?
வெற்றி மட்டுமே அனைத்துமல்ல. சென்று சேரும் இடமும் அதற்கான பாதையும்தான் முக்கியம்.

படங்கள் எதிலாவது கமிட் ஆகியிருக்கிறீர்களா?
'தமிழரசன்', 'வெல்வெட் நகரம்' ஆகியவை வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. இந்த மாதத்தில் இன்னும் சில படங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இவை தாண்டி கையில் கல்வி சம்பந்தமான ஒரு வேலையும் காத்திருக்கிறது.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.

-ராஜஸ்ரீ தாஸ், தி இந்து (ஆங்கிலம்)


திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி, நடிகைகள் கஸ்தூரி,காயத்ரி ரகுராம் ஆகியோரை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் கள்ளக்குறிச்சியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.திருமாவளவனைப் பற்றி ட்விட்டரில் இழிவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிட்ட நடிகைகள் மற்றும் வலைத்தளங்களில் இவர்களை பின் தொடர்ந்து இழிவாகப் பின்னூட்டம் இட்டவர்களையும், கொலை மிரட்டல் விடுத்தவர்களையும் கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று புகார் அளித்தனர்.

Sunday, 22 July 2018

ACTRESS KASTHURI ANSWERED / ADVISED TO SRI REDDY ABOUT GREEDY AND UNSOCIAL





ACTRESS KASTHURI  ANSWERED/ADVISED TO SRI REDDY ABOUT  GREEDY AND UNSOCIAL





தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.தற்போது அவரது கவனம் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா இயக்குனர்கள்,நடிகர்கள் மீது புகார் கூறி வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ்,நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எனினும் தொடர்ந்து தனது ஃபேஸ்புக்
பக்கத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் ஸ்ரீரெட்டி இதுவரை காவல்துறையினரிடமோ,சம்பந்தப்பட்ட திரைத்துறை அமைப்புகளிடமோ புகார் தெரிவிக்கவில்லை.இதனால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில்,ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று தான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன்.சினிமா ஆசைகாட்டி,தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார்.மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார்.இவர் கூடவா என்று சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது.ஆனால்,அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன. ஸ்ரீரெட்டியின் நிலை நமக்கு உணர்த்துவது இதைத்தான்.லஞ்சம் வாங்குவதும் குற்றம்,கொடுப்பதும்
குற்றம்.கொடுப்பதே லஞ்சம்,இதில் கொடுத்த லஞ்சத்துக்கு வாங்கியவர்கள் உண்மையாக இல்லை என்று பிறகு கூப்பாடு போடுவது... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இல்லையா? அதிலும்,ஒரு ஊரில் பல பேரிடம் ஏமாந்து,பிறகு அடுத்த ஊரிலும் அதே தவறையே மறுபடி மறுபடி செய்வதற்குப் பெயர் என்ன?குறுக்கு வழி, ஏமாற்றம் நிறைந்தது.அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர்.ஒருமுறை கூட அந்த வழி பயன் தரவில்லை.அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப் பெண் உணரவில்லை? அப்படியென்றால்,சினிமாவுக்குத் தேவையான தகுதியோ,திறமையோ தனக்கு இல்லை,சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்தப் பெண்
யோசித்ததாகவே தெரிகிறது.தகுதிக்கு மேல் பேராசைப்பட,சமரசம் செய்யக்கூட ஒரு மனநிலை வேண்டும்.எல்லோருக்கும் அது கை கூடாது. திருடித் தின்பது சுலபமென்றால்,எல்லோரும் திருடர்களாகத்தான் இருப்பார்கள்.நேர்வழி தான் கடைசியில் நிலைக்கும் என்பதை,பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.நம் முன்னோர்கள் நமக்கு அதைச் சொல்லித்தந்து போயிருக்கிறார்கள்.அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்காமல் போகலாம்.ஆனால்,என்றும் சீராக, இழப்பில்லாமல் செல்லும். ஸ்ரீரெட்டி செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று,அவர் இன்று வரை உணர்ந்தாரா எனத் தெரியவில்லை.அவர் சினிமாவில் உள்ள ஆண்களைத் தவறாக எடைபோட்டு,ஏமாந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.இல்லை,அவர் தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான். எல்லா நடிகைகளும் இயக்குநர்கள்,நடிகர்களுக்கு இணங்கிதான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்.சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார்.
சினிமாவை மிகத் தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறார் . இணங்கினால் தான் சான்ஸ் கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிகப்பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல,திறமையையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னைப் போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு... சினிமாவில் நிறைய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரையும் இப்பெண் சந்திக்கவேயில்லையா? இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.நான் ஒரு பெரிய நடிகருடன் கதாநாயகியாக நடித்த படம்.அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு.ஜனத்திரள் மிகுந்த காட்சி. அங்கே,ஒரு டீன் ஏஜ் பெண்...ஸ்டைலான,நாகரிகமான அழகிய பெண்,நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்கிறார்.வேறு பக்கம் அமர்ந்திருந்த என் காதில் அவர்கள் பேச்சு தெளிவாகக் கேட்டது. பெண்: சார்... நான் உங்க பெரிய ரசிகை.உங்களோட தனியா பேச முடியுமா? நடிகர்: தனியாவா? இங்கேயே சொல்லுமா பெண்: உங்க கூட நடிக்கணும் சார்.அதுக்கு நான் என்ன வேணா பண்ணத் தயாரா இருக்கேன் சார். நடிகருக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது.எனினும் குரலை
உயர்த்தாமல் மிகக் கடுமையான தொனியில் சொன்னார்.பைத்தியமா உனக்கு?படிக்கிற பொண்ணு பேசுற பேச்சா இது? என்னை என்னானு நினைச்சுப் பேசுறே? என்கிட்டே சொன்ன மாதிரி வேற யாருகிட்டயும் போய் பேசிடாத. இடியட், உங்க அப்பா - அம்மாவுக்குத் தெரியுமா உன் சினிமா ஆசை? நீ ஒரு குழந்தை,சினிமாவுக்கு நீ பொருத்தமாக இருக்க மாட்டாய்.மொதல்ல ஊரு போய் சேரு.படிக்கிற வேலையப் பாரு. மறுபடியும் இதுபோல் யோசிக்காதே... இன்றும் எனக்கு அந்த ஹீரோவின் சொற்கள் நன்றாக நினைவில் உள்ளன.இத்தனைக்கும் அந்த ஹீரோ தொடர்ச்சியாக அவதூறில் மாட்டியவர் தான்.ஆனால்,யாரையும் ஏமாற்றுமளவுக்கு கேவலமான எண்ணம் கொண்டவர் இல்லை. எதற்கு சொல்கிறேன்
என்றால்,சினிமாவில் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லை.இன்னும் சொல்லப்போனால்,ஏமாற்றுபவர்கள் கூட எல்லோரிடமும் வம்புக்குப் போக மாட்டார்கள்.நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்துதான் நம்மிடம் எதிராளி நடந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்