Showing posts with label TAGORE. Show all posts
Showing posts with label TAGORE. Show all posts

Sunday, 8 December 2019

SHARMILA TAGORE ,A LEGEND BORN 1944 DECEMBER 8



SHARMILA TAGORE ,A LEGEND 
BORN 1944 DECEMBER 8




ஷர்மிளா தாகூர் (வங்காள: শর্মিলা ঠাকুর ஷோர்மிளா தாக்கூர்; பிறப்பு: டிசம்பர் 8, 1944) ஒரு வங்காள இந்தியத் திரைப்பட நடிகை.அவர் தன்னுடைய நடிப்புக்காக பல தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவுக்குத் தலைமை வகித்துள்ளார். டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் அவர் யூனிசெஃப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.[

பூர்வீக விபரம்
சர்மிளா தாகூர் பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷனில் ஒரு பொது மேலாளராக இருந்த கீத்ந்திரநாத் தாகூர் என்ற வங்காளிக்கும், ஆரா தாகூர் (நேரே பராவா) என்ற அஸ்ஸாமிய பெண்மணிக்கும் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தார் . கலப்பினத்தவராய் இருந்தாலும் இருவரும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூருக்கு சொந்தம் தான் .தாகூரின் மைத்துனர் புகழ்பெற்ற ஓவியரான கஜேந்திரநாத் தாகூரின் பேரன் தான் கீத்ந்திரநாத் தாகூர்.உண்மையில், ஷர்மிளா தாகூர் தனது ரபீந்திரநாத் தாகூருக்கு மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டவர்: அவரது தாய்வழி பாட்டி லத்திகா பாரு (என் தாகூர்) ரபீந்திரநாத் தாகூரின் சகோதரர் டிவிஜேந்திரநாத் தாகூரின் பேத்தி ஆவார்.ஷர்மிளா தாகூர் பழைய இந்தி நடிகை தேவிகா ராணிக்கும் சற்று தொலை தூர உறவினர் ஆவார் .

ஆரம்பகால வாழ்க்கை
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத்தில் ஒரு வங்காளக் குடும்பத்தில் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி ஷர்மிளா தாகூர் பிறந்தார், அவருடைய தந்தை கிதிந்திரநாத் தாகூர் அப்போது எல்ஜின் மில்ஸ் உரிமையாளரான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்யின் துணைப் பொது மேலாளராக இருந்தார்.ஷர்மிளா தாகூர் மூன்று குழந்தைகளில் மூத்தவராக இருந்தார், இரு இளைய சகோதரிகள், காலம் சென்ற டின்கு தாகூர் என்ற ஓந்த்ரிலா குண்டா இவர் தான் 1957 இல் காபூலி வாலா என்ற சிங்களப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் மினி என்ற சிறுமியாய் நடித்து புகழ் பெற்றவர் .அதன் பின்னரே சர்மிளா திரைப்படத்தில் நடிக்க வந்தார் . மற்றொரு சகோதரி ரோமிலா சென், பல ஆண்டுகளாக பிரிட்டானியா இன்ஸ்டிடியூட் தலைமை இயக்க அலுவலராக பணிபுரிந்த நிக்கல் சென்னின் மனைவி ஆவார்.

பள்ளி வாழ்கை
தாகூர் செயின்ட் ஜான்ஸ் மறைமாவட்டத்தின் உயர்நிலைப்பள்ளி மற்றும் அசன்சோல், லொரேட்டோ கான்வெண்ட், ஆகிய இடங்களில் கல்வி பயின்றார் . ஆனால் 13 வயதில் கல்வியில் நாட்டம் கொள்ளவில்லை . எனவே அவரால் பள்ளி படிப்பையே முடிக்க வில்லை .எனவே பள்ளியை விட்டு விலகி 14 வயதில் தன் தங்கையை தொடர்ந்து சினிமாவில் நடிக்க களம் இறங்கினார்

தொழில் வாழ்க்கை

ஷர்மிளா தாகூர் ஒரு நடிகையாக 1959 ஆம் ஆண்டு சத்யஜித் ரேயின் திரைப்படமான அபுர் சன்ஸார் (அபுவின் உலகம்) மூலம் தொடங்கினார், இதில் முதன்மை கதாபாத்திரத்தின் அவலநிலையிலுள்ள மணமகளாகத் தோன்றினார். சத்யஜித்ரேவுக்கான அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பது போல், "அப்போது அவர் வெறும் பதினான்கு வயதே நிரம்பியிருந்தார், அதற்கு முன் அவருக்கு எந்த நடிப்பு அனுபவமும் இருந்ததில்லை. ஷூட்டிங் தொடங்கியதும், டேக்குகளின் போது நெறிமுறைகளுக்காக சத்யஜித் ரே ஷர்மிளாவைத் திட்டவேண்டியிருந்தது.என்றாலும் சத்யஜித் ரே தன்னுடைய அடுத்த படமான தேவி யிலும் கூட அவரை நடிக்க வைத்தார்."[2] அவர் ரேயின் பல திரைப்படங்களில் தோன்றினார், மீண்டும் மீண்டும் அவர் சௌமித்திர சாட்டர்ஜி உடன் இணைந்து நடித்தார்.

1964 ஆம் ஆண்டில் சக்தி சமந்தாவின் காஷ்மீர் கி காளி திரைப்படத்தின் மூலம் அவர் இந்தி திரைப்படத்தின் பிரபல நடிகையாக உருவானார். சக்தி சமந்தா மீண்டும் அவரைப் பல வெற்றிப் படங்களில் நடிக்க வைத்தார், திரைப்படத்தில் முதன் முறையாக பிகினி நீச்சல் உடை அணிந்து நடித்தார் .குறிப்பாக ஆன் ஈவனிங் இன் பாரிஸ்1967, ஒரு இந்திய நடிகை பிகினி அணிந்து தோன்றிய முதல் தோற்றமாக இருந்தது. இதன் மூலம் இந்தியாவில் முதன் முறையாக பிகினி உடை அணிந்து நடித்தவர் என்ற பெயருடன் சினிமாவில் வலம் வந்தார்,[3][4] இது பழம்பாணியிலிருந்த இந்தியப் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்ல[5][6] இது பல நடிகைகள் பிகினி அணிந்து வரக்கூடிய சூழலை உருவாக்கி, பர்வீன் பாபி (யே நஸ்தீகியான் , 1982[7]), சீனத் அமான் (ஹீரா பன்னா 1973; குர்பாணி , 1980[7]) மற்றும் டிம்பிள் கபாடியா (பாபி , 1973[7]), ஆகியோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது, ஆனால் இது பாலிவுட்டில் தாகூரின் கதாபாத்திரத்தை ஒரு பாலியல் குறியீடாக உருவாக்கியது.[8][9][10] பிகினியை அணிந்ததால் இந்தியப் பத்திரிக்கைகள் எல்லா
காலங்களுக்குமான பத்து ஹாட்டஸ்ட் நடிகைகளில் ஒருவராக அவருடைய பெயரைப் பரிந்துரைத்தன, இது அடக்க ஒடுக்க நிலையிலான பெண்ணின் இயல்பை அடையாளப்படுத்தி செயல்படுத்தி வந்த மும்பை திரைப்படங்களுக்கு எதிரான வரம்பு மீறிய செயலாக இருந்தது.[11] ஆனால், தாகூர் சென்ட்ரல் போர்ட் ஆஃப் ஃபிலிம் சர்டிஃபிகேஷன் தலைவராக இருந்தபோது, இந்திய சினிமாக்களில் பிகினி அணிவது அதிகரித்து வருவதைப் பற்றி தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார்.[12]

ஆராதனா (1969) மற்றும் அமர் பிரேம் (1972), போன்ற திரைப்படங்களுக்காக சமந்தா பின்னாளில் தாகூரை ராஜேஷ் கண்ணாவுடன் இணைத்தார் . பின்னர் கூறிய திரைப்படத்தில் தாகூர் என்றும் நினைவைவிட்டு நீங்கா கதாபாத்திரமான புஷ்பாவாக, கொல்கத்தா நகரின் அரசவை பரத்தையாக, மீண்டும் ராஜேஷ் கண்ணாவுக்கு ஜோடியாகத் தோன்றினார், இதில் ராஜேஷ் கண்ணா அடிக்கடி கூறும் வசனம் "புஷ்பா நான் கண்ணீரை வெறுக்கிறேன்..." இடம்பெற்றது. இதர இயக்குநர்கள், அவர்கள் இருவரையும் இணைத்து டாக் (1973), மாலிக் (1972) மற்றும் சஃபார் (1970) ஆகிய திரைப்படங்களைக் கொடுத்தனர். அவர் குல்சாரின் 1975 ஆம் ஆண்டு திரைப்படம், மௌஸம் மில் தோன்றினார், மேலும் அவர் மீரா நாயரின் 1991 ஆம் ஆண்டு திரைப்படம் மிஸ்ஸிஸிப்பி மசாலா வில் கதாநாயகி சரிதா சௌத்ரியின் தாயாக ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.


அவருடைய சமீபத்திய வெளியீடு, அமோல் பலேகரின் மராத்திய திரைப்படமான சமான்தார். அவருடைய முந்தைய வெளியீடுகள் விது வினோத் சோப்ரா திரைப்படம், Eklavya: The Royal Guard, நிஜ வாழ்க்கை தாய் மற்றும் மகன், ஷர்மிளா தாகூர் மற்றும் சயிஃப் அலி கான்ஐ இணைக்கிறது. ஆஷிக் ஆவாரா (1993) வுக்குப் பிறகு முதல் முறையாக அவர்கள் திரையில் ஒன்றாக பங்குபெறுகிறார்கள்.

சொந்த வாழ்க்கை

படௌடியின் நவாப், மன்சூர் அலி கான் படௌடியை ஷர்மிளா தாகூர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்: சைய்ஃப் அலி கான் (பி. 1970), சபா அலி கான் மற்றும் சோஹா அலி கான் (பி. 1978).

விருதுகள்

1969 - பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது - ஆராதனா
1970 - பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது (நியமனம்) -சஃபார்
1976 - சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது - மௌசம்
1997 - ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
2002 - ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது
2004 - சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருது - அபார் ஆரன்யே
2004 - கமாண்டர் ஆஃப் தி [[ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் ஆஃப் ப்ரான்ஸ்
2006 - நியமனம், பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது - பாமலி கம்ஸ் ஃபர்ஸ்ட்
2007 - வாழ்நாள் சாதனையாளர் தேசிய விருது (நடிகை) - ஜர்னலிஸ்ட் ஆசோசியேஷன் ஆஃப் இண்டியா



சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுகள், பல பில்ம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஷர்மிளா தாகூர் சுமார் 50 படங்களில் தனது தனித்துவமான நடிப்பு முத்திரையை பதித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மன்சூர் அலி கான் பட்டவ்டியை 1969-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட ஷர்மிளா தாகூர், இஸ்லாமியரான கணவரின் மதத்தை தழுவி, தனது பெயரை ஆயிஷா சுல்தானா என்று மாற்றி கொண்டார்.

இந்த தம்பதியருக்கு சைப் அலி கான், சாபா அலி கான், சோஹா அலி கான் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மன்சூர் அலி கான் பட்டவ்டி கடந்த 2011-ம் ஆண்டு காலமான பின்னர், 2013-ம் ஆண்டு பத்மபூஷன் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பி.ஹெச்.டி. அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் தற்போது 72 வயதாகும் ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிரி கோட்டை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா பிரசாத், டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் இந்த விருதை அவருக்கு வழங்கி வாழ்த்தினர்.


இந்திப்பட தயாரிப்பாளரும், கவிஞருமான முசாபர் அலி, பாடகி உஷா மங்கேஷ்கர் உள்ளிட்டோருக்கும் சிறப்பு விருதுகள் அளிக்கப்பட்டன.





சத்யஜித்ரேயின் "அபுர்சன்சார்' படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ஷர்மிளா தாகூர். 60 முதல் 70 ஆம் ஆண்டுகளில் "காஷ்மீர் கி கலி' , "ஆராதனா' , "அமர்பிரேம்' , "மவுசம்' , "ஈவினிங் இன் பாரிஸ்' , "சஃபர்' போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் அன்றைய இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்ததை மறக்கமுடியாது. வழக்கமான பாணியிலிருந்து விலகி குல்சாரின் மவுசம் படத்தில் விலைமாதாக நடித்தது, அவரது நடிப்பு திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே இவர் தேர்ந்தெடுத்ததும் இவரது புகழுக்கு காரணமாகும்.
 இந்திய கிரிக்கெட் குழுவின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியை இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வந்த செய்தி திரையுலகத்தையே திகைக்க வைத்தது. வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இத்திருமணத்திற்கு பூரி சங்கராச்சாரியார் உள்பட பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் ஷர்மிளா மதம் மாறாமலேயே பட்டோடியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினார். பட்டோடியும் வற்புறுத்தவில்லை. கொல்கத்தாவில் உள்ள நண்பர் வீட்டில் திருமணம் நடந்தது. பின்னர், பிரச்னைகளுக்கு முடிவுகட்ட மும்பையிலிருந்து தில்லியில் குடியேறினார். இதனால் திரைப்பட வாய்ப்புகளையும் தவிர்த்தார்.

ஆனால், திருப்தி மித்ரா என்ற நடிகை அவரது வாழ்க்கையில் வெற்றி பெற சந்தித்த இன்னல்களையும், பின்னர் அவரது தனிமை வாழ்க்கையை விளக்கும் அறுபதுகளில் பிரபலமான பெங்காலி மேடை நாடகத்தை, 1997- ஆம் ஆண்டு அருண் சுக்ரே என்ற இயக்குநர் 'அபராஜிதா' என்ற பெயரில் தயாரித்தபோது, தானே விருப்பப்பட்டு அதில் நடிக்க ஷர்மிளா ஒப்புக் கொண்டார். வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் மற்றவர்களுக்காக அதாவது கணவர், தந்தை அல்லது சமூகத்திற்காக செய்ய வேண்டிவரும். அதே நேரத்தில் சில விஷயங்களை நம் ஆத்ம திருப்திக்காகவும், மகிழ்ச்சிகாகவும் செய்ய வேண்டி வரலாம். அதுபோன்ற ஒரு வாய்ப்பாகவே அபராஜிதாவில் நடிக்க ஒப்புக் கொண்டேன்' என்று ஷர்மிளா கூறினாராம்.

 2011-ஆம் ஆண்டு செப்.22 -ஆம் தேதி என்னுடைய கணவர் பட்டோடி காலமானது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று கூறும் ஷர்மிளா, தனது இன்றைய வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார்: மீண்டும் திரைப்படங்களில் குறிப்பிட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்று என் ரசிகர்கள் வற்புறுத்தவும் இல்லை. நானும் நினைக்கவும் இல்லை. ஆனால் நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் நடிக்கலாமென்ற எண்ணம் இருக்கிறது.

திருமணமான நடிகைகளில் பலர் குடும்பத்துடன் ஒன்றி போவதுண்டு. என்னைப் பொருத்தவரை குடும்பத்தை கவனிப்பதோடு, எங்களுடைய பண்ணைகளை கவனிக்கும் பொறுப்பும் எனக்குள்ளது. பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒவ்வொரு பிரச்னை இருப்பதால் அதை கவனிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. ஒருவகையில் இது வித்தியாசமான அனுபவம்தான். பெரிய வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை புரியுமென நினைக்கிறேன்.

இன்றைய நடிக - நடிகைகள் நவீன தொழில் புரட்சிகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். டிஜிட்டல் மீடியா மூலம் மக்களை தொடர்பு கொள்வது சுலபமாக இருப்பதுடன் செலவும் குறைவு. நம்முடைய கருத்துகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவதற்கும், கருத்து பரிமாற்ற விளக்கமளிக்கவும். இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி உதவுகிறது. இதனால் திரைப்படங்கள் மூலம் நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறைந்து விடுமென கருத முடியாது. டிஜிட்டல் மீடியா மூலம் தொடர்பு கொள்வதால் பணம் மற்றும் நேரம் விரயமாவது குறைகிறது. திரைப்படங்களுக்குள்ள செல்வாக்கு குறைய வாய்ப்பில்லை.

என்னுடைய காலத்தில் என்னுடன் நடித்துக் கொண்டிருந்த பல நடிக - நடிகையரை இத்திரையுலகம் புறக்கணித்து விட்டதாக சொல்ல முடியாது. வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. வயதுக்கேற்ப ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு வயதாகி வருவதால் பொது வாழ்க்கையிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. எனக்கு திருமணமாகி, குழந்தைகளுக்குத் தாயாகி, கணவரை இழந்து, இப்போது பாட்டியாகி உள்ளேன். நரை விழுந்த முடியை மறைக்க நான் சாயம் பூசுவதில்லை. 70 வயதாகும் ஒரு பெண் 18 வயது பெண் போன்று செயல்பட முடியாது என்றாலும், என்னைப் பொருத்தவரை குனிந்து என் பாதத்தை தொடும் சக்தியும், நடப்பதற்கான சுறுசுறுப்பும் எனக்கிருக்கிறது. என்னை நானே கவனித்துக் கொள்கிறேன்.

என் குடும்பத்தில் என்னுடைய மகன் சயீப் அலிகானின் மகன் மற்றும் மகள் சோஹா அலிகானின் மகள் என இரு புதிய வரவுகள் சேர்ந்துள்ளனர். இவர்களுடன் பொழுதுபோக்குவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இந்த வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர்கள் வளரும்போது ஒருவேளை என்னைச் சுற்றிலும் உள்ள சூழ்நிலை மாறலாம். அதுவரை இந்த வாழ்க்கையை அனுபவிக்கலாமே'' என்கிறார் ஷர்மிளா தாகூர்.









தேர்வுசெய்யப்பட்ட திரைப்பட வரலாறு[தொகு]


ஆண்டுதிரைப்படம்பாத்திரம்இதர குறிப்புகள்
1959அபுர் சன்சார் (அபுவின் உலகம் )அபர்ணா
1960தேவி/தி காடஸ்டோயாமோயீ
1963நிர்ஜான் சாய்கேதேரேணு
1963சாயா ஷுர்ஜோகென்டூ
1964காஷ்மீர் கி காளிசம்பா
1965வக்த்ரேணு கண்ணா
1966அனுபமாஉமா ஷர்மா
தீவார்
நாயக்அதிதி
1967ஆன் ஈவனிங் இன் பாரிஸ்தீபா மாலிக்/ரூபா மாலிக் (சுஸி)
ஆம்னெ சாம்னெ
1968மேரி ஹம்தான் மேரி தோஸ்த்அனிதா
1969யகீன்ரீடா
சத்யகாம்ரஞ்சனா
ஆராதனாவந்தனா த்ரிபாதிவெற்றியாளர், ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகை விருது'
1970ஆரன்யெர் தின் ராத்ரி (காட்டில் பகலும் இரவும்)அபர்ணா
1971சீமாபத்தாதுடுல்
சோட்டி பஹு
1972அமர் பிரேம்புஷ்பா
1973தாக்சோனியா கோஹ்லி
ஆ கலே லக் ஜாபிரீத்தி
1975மௌஸம்சந்தா/கஜ்லிவெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தேசிய விருது
சுப்கே சுப்கேசுலேகா சதுர்வேதி
ஃபரார்மாலா / ஆஷா
1977அமானுஷ்ரேகா
1982நம்கீன்நிம்கி
தேஷ் பிரேமிபாரதி
1984சன்னிசன்னியின் தாயார்
1991மிஸ்ஸிஸிப்பி மசாலாகின்னு
1993ஆஷிக் ஆவாராதிருமதி. சிங்
1999மான்தேவின் பாட்டி
2000தட்கன்தேவின் தாயார்
2005விருத் ஃபேமிலி கம்ஸ் ஃபர்ஸ்ட்சுமித்ரா பட்வர்தன்ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது, நியமனம்
2006Eklavya: The Royal Guardசுஹாசினிதேவி
2007ஃபூல் அண்ட் ஃபைனல்பாபி
2008தஸ்வீர் 8*10சாவித்ரி புரி
2009மார்னிங் வாக்நீலிமா
சமான்தார்ஷாமா வேஸ்மராத்தி

Monday, 7 May 2018

RAVINDRANATH TAGORE ,POET ,PHILOSOPHER BORN 1861,MAY 7 - 1941 AUGUST 7





RAVINDRANATH TAGORE ,POET ,PHILOSOPHER
BORN 1861,MAY 7 - 1941 AUGUST 7





இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.

இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்

தொடக்க காலம் (1861-1901)

1879 இல் இங்கிலாந்தில் கற்கும் வேளையில் தாகூர்.













1883 இல் தாகூர் தன் மனைவி மிருனாளினி தேவியுடன்.

இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி (1861-05-09) பிறந்தார். இவரது பிறந்த இடம் கொல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகை ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடிப் பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பம் எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சம‌‌‌ஸ்க்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.

இரவீந்திரநாத் தாகூர் தான் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிரைட்டண், லண்டனில் (Brighton, London) உள்ள ஒரு பள்ளியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் லண்டன் சர்வகலாசாலையில் கல்வி கற்றார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலே 1880 ஆம் ஆண்டில் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார்.
 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலைமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.

நரேனும்(சுவாமி விவேகானந்தர்) தாகூரும்
ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.
தாகூரின் பாடல்களை பலவற்றை நரேந்திரர் பாடியுள்ளார்.
நரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்.
[1]

சாந்திநிகேதன்

Black-and-white photograph of a bearded middle-aged man dressed in dark robes. He is seated on the floor of an elegantly appointed room and is in front of a plush sofa; he gazes fixedly away to the right, away from the camera.
Shot by John Rothenstein, Hampstead, 1912
Posed group black-and-white photograph of seven Chinese men, possibly academics, in formal wear: two wear European-style suits, the five others wear Chinese traditional dress; four of the seven sit on the floor in the foreground; another sits on a chair behind them at center-left; two others stand in the background. They surround an eighth man who is robed, bearded, and sitting in a chair placed at center-left. Four elegant windows are behind them in a line.
Tsinghua University, 1924

1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் என்பவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்ப நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.

இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.


சாந்தி நிகேதன் மாணவர்கள்
நோபல் பரிசு

1940 இல் சாந்திநிகேதனில் மோகன்தாசு கரம்சந்த் காந்தியையும், கஸ்தூரிபாவையும் தாகூர்(மேடையின் வலப்பக்கம்) வரவேற்கிறார்.
1913 ஆம் ஆண்டில், அவரது இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.

1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.

1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.

இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதையும், அடிமைகள் போல் நடத்தப்படுவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.

1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.

1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.

இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.

1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசீய கீதமாகவும், உருவெடுத்தன.




தாகூரின் அறை
பயணங்கள்
1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுள் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.

ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.

இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.

ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.


1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.

இறப்பு
1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் சுற்றினார். சைனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.

1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது, எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.