Sunday 8 December 2019

SHARMILA TAGORE ,A LEGEND BORN 1944 DECEMBER 8



SHARMILA TAGORE ,A LEGEND 
BORN 1944 DECEMBER 8




ஷர்மிளா தாகூர் (வங்காள: শর্মিলা ঠাকুর ஷோர்மிளா தாக்கூர்; பிறப்பு: டிசம்பர் 8, 1944) ஒரு வங்காள இந்தியத் திரைப்பட நடிகை.அவர் தன்னுடைய நடிப்புக்காக பல தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவுக்குத் தலைமை வகித்துள்ளார். டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் அவர் யூனிசெஃப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.[

பூர்வீக விபரம்
சர்மிளா தாகூர் பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷனில் ஒரு பொது மேலாளராக இருந்த கீத்ந்திரநாத் தாகூர் என்ற வங்காளிக்கும், ஆரா தாகூர் (நேரே பராவா) என்ற அஸ்ஸாமிய பெண்மணிக்கும் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தார் . கலப்பினத்தவராய் இருந்தாலும் இருவரும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூருக்கு சொந்தம் தான் .தாகூரின் மைத்துனர் புகழ்பெற்ற ஓவியரான கஜேந்திரநாத் தாகூரின் பேரன் தான் கீத்ந்திரநாத் தாகூர்.உண்மையில், ஷர்மிளா தாகூர் தனது ரபீந்திரநாத் தாகூருக்கு மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டவர்: அவரது தாய்வழி பாட்டி லத்திகா பாரு (என் தாகூர்) ரபீந்திரநாத் தாகூரின் சகோதரர் டிவிஜேந்திரநாத் தாகூரின் பேத்தி ஆவார்.ஷர்மிளா தாகூர் பழைய இந்தி நடிகை தேவிகா ராணிக்கும் சற்று தொலை தூர உறவினர் ஆவார் .

ஆரம்பகால வாழ்க்கை
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத்தில் ஒரு வங்காளக் குடும்பத்தில் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி ஷர்மிளா தாகூர் பிறந்தார், அவருடைய தந்தை கிதிந்திரநாத் தாகூர் அப்போது எல்ஜின் மில்ஸ் உரிமையாளரான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்யின் துணைப் பொது மேலாளராக இருந்தார்.ஷர்மிளா தாகூர் மூன்று குழந்தைகளில் மூத்தவராக இருந்தார், இரு இளைய சகோதரிகள், காலம் சென்ற டின்கு தாகூர் என்ற ஓந்த்ரிலா குண்டா இவர் தான் 1957 இல் காபூலி வாலா என்ற சிங்களப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் மினி என்ற சிறுமியாய் நடித்து புகழ் பெற்றவர் .அதன் பின்னரே சர்மிளா திரைப்படத்தில் நடிக்க வந்தார் . மற்றொரு சகோதரி ரோமிலா சென், பல ஆண்டுகளாக பிரிட்டானியா இன்ஸ்டிடியூட் தலைமை இயக்க அலுவலராக பணிபுரிந்த நிக்கல் சென்னின் மனைவி ஆவார்.

பள்ளி வாழ்கை
தாகூர் செயின்ட் ஜான்ஸ் மறைமாவட்டத்தின் உயர்நிலைப்பள்ளி மற்றும் அசன்சோல், லொரேட்டோ கான்வெண்ட், ஆகிய இடங்களில் கல்வி பயின்றார் . ஆனால் 13 வயதில் கல்வியில் நாட்டம் கொள்ளவில்லை . எனவே அவரால் பள்ளி படிப்பையே முடிக்க வில்லை .எனவே பள்ளியை விட்டு விலகி 14 வயதில் தன் தங்கையை தொடர்ந்து சினிமாவில் நடிக்க களம் இறங்கினார்

தொழில் வாழ்க்கை

ஷர்மிளா தாகூர் ஒரு நடிகையாக 1959 ஆம் ஆண்டு சத்யஜித் ரேயின் திரைப்படமான அபுர் சன்ஸார் (அபுவின் உலகம்) மூலம் தொடங்கினார், இதில் முதன்மை கதாபாத்திரத்தின் அவலநிலையிலுள்ள மணமகளாகத் தோன்றினார். சத்யஜித்ரேவுக்கான அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பது போல், "அப்போது அவர் வெறும் பதினான்கு வயதே நிரம்பியிருந்தார், அதற்கு முன் அவருக்கு எந்த நடிப்பு அனுபவமும் இருந்ததில்லை. ஷூட்டிங் தொடங்கியதும், டேக்குகளின் போது நெறிமுறைகளுக்காக சத்யஜித் ரே ஷர்மிளாவைத் திட்டவேண்டியிருந்தது.என்றாலும் சத்யஜித் ரே தன்னுடைய அடுத்த படமான தேவி யிலும் கூட அவரை நடிக்க வைத்தார்."[2] அவர் ரேயின் பல திரைப்படங்களில் தோன்றினார், மீண்டும் மீண்டும் அவர் சௌமித்திர சாட்டர்ஜி உடன் இணைந்து நடித்தார்.

1964 ஆம் ஆண்டில் சக்தி சமந்தாவின் காஷ்மீர் கி காளி திரைப்படத்தின் மூலம் அவர் இந்தி திரைப்படத்தின் பிரபல நடிகையாக உருவானார். சக்தி சமந்தா மீண்டும் அவரைப் பல வெற்றிப் படங்களில் நடிக்க வைத்தார், திரைப்படத்தில் முதன் முறையாக பிகினி நீச்சல் உடை அணிந்து நடித்தார் .குறிப்பாக ஆன் ஈவனிங் இன் பாரிஸ்1967, ஒரு இந்திய நடிகை பிகினி அணிந்து தோன்றிய முதல் தோற்றமாக இருந்தது. இதன் மூலம் இந்தியாவில் முதன் முறையாக பிகினி உடை அணிந்து நடித்தவர் என்ற பெயருடன் சினிமாவில் வலம் வந்தார்,[3][4] இது பழம்பாணியிலிருந்த இந்தியப் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்ல[5][6] இது பல நடிகைகள் பிகினி அணிந்து வரக்கூடிய சூழலை உருவாக்கி, பர்வீன் பாபி (யே நஸ்தீகியான் , 1982[7]), சீனத் அமான் (ஹீரா பன்னா 1973; குர்பாணி , 1980[7]) மற்றும் டிம்பிள் கபாடியா (பாபி , 1973[7]), ஆகியோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது, ஆனால் இது பாலிவுட்டில் தாகூரின் கதாபாத்திரத்தை ஒரு பாலியல் குறியீடாக உருவாக்கியது.[8][9][10] பிகினியை அணிந்ததால் இந்தியப் பத்திரிக்கைகள் எல்லா
காலங்களுக்குமான பத்து ஹாட்டஸ்ட் நடிகைகளில் ஒருவராக அவருடைய பெயரைப் பரிந்துரைத்தன, இது அடக்க ஒடுக்க நிலையிலான பெண்ணின் இயல்பை அடையாளப்படுத்தி செயல்படுத்தி வந்த மும்பை திரைப்படங்களுக்கு எதிரான வரம்பு மீறிய செயலாக இருந்தது.[11] ஆனால், தாகூர் சென்ட்ரல் போர்ட் ஆஃப் ஃபிலிம் சர்டிஃபிகேஷன் தலைவராக இருந்தபோது, இந்திய சினிமாக்களில் பிகினி அணிவது அதிகரித்து வருவதைப் பற்றி தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார்.[12]

ஆராதனா (1969) மற்றும் அமர் பிரேம் (1972), போன்ற திரைப்படங்களுக்காக சமந்தா பின்னாளில் தாகூரை ராஜேஷ் கண்ணாவுடன் இணைத்தார் . பின்னர் கூறிய திரைப்படத்தில் தாகூர் என்றும் நினைவைவிட்டு நீங்கா கதாபாத்திரமான புஷ்பாவாக, கொல்கத்தா நகரின் அரசவை பரத்தையாக, மீண்டும் ராஜேஷ் கண்ணாவுக்கு ஜோடியாகத் தோன்றினார், இதில் ராஜேஷ் கண்ணா அடிக்கடி கூறும் வசனம் "புஷ்பா நான் கண்ணீரை வெறுக்கிறேன்..." இடம்பெற்றது. இதர இயக்குநர்கள், அவர்கள் இருவரையும் இணைத்து டாக் (1973), மாலிக் (1972) மற்றும் சஃபார் (1970) ஆகிய திரைப்படங்களைக் கொடுத்தனர். அவர் குல்சாரின் 1975 ஆம் ஆண்டு திரைப்படம், மௌஸம் மில் தோன்றினார், மேலும் அவர் மீரா நாயரின் 1991 ஆம் ஆண்டு திரைப்படம் மிஸ்ஸிஸிப்பி மசாலா வில் கதாநாயகி சரிதா சௌத்ரியின் தாயாக ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.


அவருடைய சமீபத்திய வெளியீடு, அமோல் பலேகரின் மராத்திய திரைப்படமான சமான்தார். அவருடைய முந்தைய வெளியீடுகள் விது வினோத் சோப்ரா திரைப்படம், Eklavya: The Royal Guard, நிஜ வாழ்க்கை தாய் மற்றும் மகன், ஷர்மிளா தாகூர் மற்றும் சயிஃப் அலி கான்ஐ இணைக்கிறது. ஆஷிக் ஆவாரா (1993) வுக்குப் பிறகு முதல் முறையாக அவர்கள் திரையில் ஒன்றாக பங்குபெறுகிறார்கள்.

சொந்த வாழ்க்கை

படௌடியின் நவாப், மன்சூர் அலி கான் படௌடியை ஷர்மிளா தாகூர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்: சைய்ஃப் அலி கான் (பி. 1970), சபா அலி கான் மற்றும் சோஹா அலி கான் (பி. 1978).

விருதுகள்

1969 - பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது - ஆராதனா
1970 - பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது (நியமனம்) -சஃபார்
1976 - சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது - மௌசம்
1997 - ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
2002 - ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது
2004 - சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருது - அபார் ஆரன்யே
2004 - கமாண்டர் ஆஃப் தி [[ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் ஆஃப் ப்ரான்ஸ்
2006 - நியமனம், பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது - பாமலி கம்ஸ் ஃபர்ஸ்ட்
2007 - வாழ்நாள் சாதனையாளர் தேசிய விருது (நடிகை) - ஜர்னலிஸ்ட் ஆசோசியேஷன் ஆஃப் இண்டியா



சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுகள், பல பில்ம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஷர்மிளா தாகூர் சுமார் 50 படங்களில் தனது தனித்துவமான நடிப்பு முத்திரையை பதித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மன்சூர் அலி கான் பட்டவ்டியை 1969-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட ஷர்மிளா தாகூர், இஸ்லாமியரான கணவரின் மதத்தை தழுவி, தனது பெயரை ஆயிஷா சுல்தானா என்று மாற்றி கொண்டார்.

இந்த தம்பதியருக்கு சைப் அலி கான், சாபா அலி கான், சோஹா அலி கான் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மன்சூர் அலி கான் பட்டவ்டி கடந்த 2011-ம் ஆண்டு காலமான பின்னர், 2013-ம் ஆண்டு பத்மபூஷன் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பி.ஹெச்.டி. அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் தற்போது 72 வயதாகும் ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிரி கோட்டை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா பிரசாத், டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் இந்த விருதை அவருக்கு வழங்கி வாழ்த்தினர்.


இந்திப்பட தயாரிப்பாளரும், கவிஞருமான முசாபர் அலி, பாடகி உஷா மங்கேஷ்கர் உள்ளிட்டோருக்கும் சிறப்பு விருதுகள் அளிக்கப்பட்டன.





சத்யஜித்ரேயின் "அபுர்சன்சார்' படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ஷர்மிளா தாகூர். 60 முதல் 70 ஆம் ஆண்டுகளில் "காஷ்மீர் கி கலி' , "ஆராதனா' , "அமர்பிரேம்' , "மவுசம்' , "ஈவினிங் இன் பாரிஸ்' , "சஃபர்' போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் அன்றைய இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்ததை மறக்கமுடியாது. வழக்கமான பாணியிலிருந்து விலகி குல்சாரின் மவுசம் படத்தில் விலைமாதாக நடித்தது, அவரது நடிப்பு திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே இவர் தேர்ந்தெடுத்ததும் இவரது புகழுக்கு காரணமாகும்.
 இந்திய கிரிக்கெட் குழுவின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியை இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வந்த செய்தி திரையுலகத்தையே திகைக்க வைத்தது. வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இத்திருமணத்திற்கு பூரி சங்கராச்சாரியார் உள்பட பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் ஷர்மிளா மதம் மாறாமலேயே பட்டோடியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினார். பட்டோடியும் வற்புறுத்தவில்லை. கொல்கத்தாவில் உள்ள நண்பர் வீட்டில் திருமணம் நடந்தது. பின்னர், பிரச்னைகளுக்கு முடிவுகட்ட மும்பையிலிருந்து தில்லியில் குடியேறினார். இதனால் திரைப்பட வாய்ப்புகளையும் தவிர்த்தார்.

ஆனால், திருப்தி மித்ரா என்ற நடிகை அவரது வாழ்க்கையில் வெற்றி பெற சந்தித்த இன்னல்களையும், பின்னர் அவரது தனிமை வாழ்க்கையை விளக்கும் அறுபதுகளில் பிரபலமான பெங்காலி மேடை நாடகத்தை, 1997- ஆம் ஆண்டு அருண் சுக்ரே என்ற இயக்குநர் 'அபராஜிதா' என்ற பெயரில் தயாரித்தபோது, தானே விருப்பப்பட்டு அதில் நடிக்க ஷர்மிளா ஒப்புக் கொண்டார். வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் மற்றவர்களுக்காக அதாவது கணவர், தந்தை அல்லது சமூகத்திற்காக செய்ய வேண்டிவரும். அதே நேரத்தில் சில விஷயங்களை நம் ஆத்ம திருப்திக்காகவும், மகிழ்ச்சிகாகவும் செய்ய வேண்டி வரலாம். அதுபோன்ற ஒரு வாய்ப்பாகவே அபராஜிதாவில் நடிக்க ஒப்புக் கொண்டேன்' என்று ஷர்மிளா கூறினாராம்.

 2011-ஆம் ஆண்டு செப்.22 -ஆம் தேதி என்னுடைய கணவர் பட்டோடி காலமானது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று கூறும் ஷர்மிளா, தனது இன்றைய வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார்: மீண்டும் திரைப்படங்களில் குறிப்பிட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்று என் ரசிகர்கள் வற்புறுத்தவும் இல்லை. நானும் நினைக்கவும் இல்லை. ஆனால் நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் நடிக்கலாமென்ற எண்ணம் இருக்கிறது.

திருமணமான நடிகைகளில் பலர் குடும்பத்துடன் ஒன்றி போவதுண்டு. என்னைப் பொருத்தவரை குடும்பத்தை கவனிப்பதோடு, எங்களுடைய பண்ணைகளை கவனிக்கும் பொறுப்பும் எனக்குள்ளது. பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒவ்வொரு பிரச்னை இருப்பதால் அதை கவனிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. ஒருவகையில் இது வித்தியாசமான அனுபவம்தான். பெரிய வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை புரியுமென நினைக்கிறேன்.

இன்றைய நடிக - நடிகைகள் நவீன தொழில் புரட்சிகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். டிஜிட்டல் மீடியா மூலம் மக்களை தொடர்பு கொள்வது சுலபமாக இருப்பதுடன் செலவும் குறைவு. நம்முடைய கருத்துகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவதற்கும், கருத்து பரிமாற்ற விளக்கமளிக்கவும். இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி உதவுகிறது. இதனால் திரைப்படங்கள் மூலம் நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறைந்து விடுமென கருத முடியாது. டிஜிட்டல் மீடியா மூலம் தொடர்பு கொள்வதால் பணம் மற்றும் நேரம் விரயமாவது குறைகிறது. திரைப்படங்களுக்குள்ள செல்வாக்கு குறைய வாய்ப்பில்லை.

என்னுடைய காலத்தில் என்னுடன் நடித்துக் கொண்டிருந்த பல நடிக - நடிகையரை இத்திரையுலகம் புறக்கணித்து விட்டதாக சொல்ல முடியாது. வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. வயதுக்கேற்ப ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு வயதாகி வருவதால் பொது வாழ்க்கையிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. எனக்கு திருமணமாகி, குழந்தைகளுக்குத் தாயாகி, கணவரை இழந்து, இப்போது பாட்டியாகி உள்ளேன். நரை விழுந்த முடியை மறைக்க நான் சாயம் பூசுவதில்லை. 70 வயதாகும் ஒரு பெண் 18 வயது பெண் போன்று செயல்பட முடியாது என்றாலும், என்னைப் பொருத்தவரை குனிந்து என் பாதத்தை தொடும் சக்தியும், நடப்பதற்கான சுறுசுறுப்பும் எனக்கிருக்கிறது. என்னை நானே கவனித்துக் கொள்கிறேன்.

என் குடும்பத்தில் என்னுடைய மகன் சயீப் அலிகானின் மகன் மற்றும் மகள் சோஹா அலிகானின் மகள் என இரு புதிய வரவுகள் சேர்ந்துள்ளனர். இவர்களுடன் பொழுதுபோக்குவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இந்த வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர்கள் வளரும்போது ஒருவேளை என்னைச் சுற்றிலும் உள்ள சூழ்நிலை மாறலாம். அதுவரை இந்த வாழ்க்கையை அனுபவிக்கலாமே'' என்கிறார் ஷர்மிளா தாகூர்.









தேர்வுசெய்யப்பட்ட திரைப்பட வரலாறு[தொகு]


ஆண்டுதிரைப்படம்பாத்திரம்இதர குறிப்புகள்
1959அபுர் சன்சார் (அபுவின் உலகம் )அபர்ணா
1960தேவி/தி காடஸ்டோயாமோயீ
1963நிர்ஜான் சாய்கேதேரேணு
1963சாயா ஷுர்ஜோகென்டூ
1964காஷ்மீர் கி காளிசம்பா
1965வக்த்ரேணு கண்ணா
1966அனுபமாஉமா ஷர்மா
தீவார்
நாயக்அதிதி
1967ஆன் ஈவனிங் இன் பாரிஸ்தீபா மாலிக்/ரூபா மாலிக் (சுஸி)
ஆம்னெ சாம்னெ
1968மேரி ஹம்தான் மேரி தோஸ்த்அனிதா
1969யகீன்ரீடா
சத்யகாம்ரஞ்சனா
ஆராதனாவந்தனா த்ரிபாதிவெற்றியாளர், ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகை விருது'
1970ஆரன்யெர் தின் ராத்ரி (காட்டில் பகலும் இரவும்)அபர்ணா
1971சீமாபத்தாதுடுல்
சோட்டி பஹு
1972அமர் பிரேம்புஷ்பா
1973தாக்சோனியா கோஹ்லி
ஆ கலே லக் ஜாபிரீத்தி
1975மௌஸம்சந்தா/கஜ்லிவெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தேசிய விருது
சுப்கே சுப்கேசுலேகா சதுர்வேதி
ஃபரார்மாலா / ஆஷா
1977அமானுஷ்ரேகா
1982நம்கீன்நிம்கி
தேஷ் பிரேமிபாரதி
1984சன்னிசன்னியின் தாயார்
1991மிஸ்ஸிஸிப்பி மசாலாகின்னு
1993ஆஷிக் ஆவாராதிருமதி. சிங்
1999மான்தேவின் பாட்டி
2000தட்கன்தேவின் தாயார்
2005விருத் ஃபேமிலி கம்ஸ் ஃபர்ஸ்ட்சுமித்ரா பட்வர்தன்ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது, நியமனம்
2006Eklavya: The Royal Guardசுஹாசினிதேவி
2007ஃபூல் அண்ட் ஃபைனல்பாபி
2008தஸ்வீர் 8*10சாவித்ரி புரி
2009மார்னிங் வாக்நீலிமா
சமான்தார்ஷாமா வேஸ்மராத்தி

No comments:

Post a Comment