Sunday 1 December 2019

UYYALAWADA NARASIMHA REDDY , FREEDOM FIGHTER HANGED TO DEATH 1847 FEBRUARY 22





UYYALAWADA NARASIMHA REDDY ,
FREEDOM FIGHTER  HANGED TO DEATH 
1847 FEBRUARY  22






பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே, தென்னிந்தியாவை ஒன்றாக மாற்றும் முயற்சியில் தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரா - தெலங்கானாவும் இணைந்திருக்கிறது. ஆனால், மாநில வாரியாக இந்த இணைப்பு நடைபெறப் போவதல்ல. திரையுலகம் ரீதியாக, வியாபார ரீதியாக எப்படியும் ஒரே மாதிரியாக மாற்றிவிட வேண்டும் என்பது முன்னணி நடிகர்கள் பலரது கனவாகவும் இருக்கிறது
மகேஷ் பாபு தமிழ் ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற ஆசையில் பிரம்மோத்ஸவம் படத்தை இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் செய்தார். தமிழில் ரீமேக் செய்யப்பட்ட மகேஷ் பாபுவின் படங்கள் சூப்பர் ஹிட் ஆனது அவருக்கு இந்த ஆசையை வரவழைத்தது. ஆனால், ரூ.75 கோடியில் உருவான அந்தத் திரைப்படம் ரூ.70 கோடியை வசூல் செய்து சொதப்பியது. அதனால்தான் பல ஆண்டுகளாகக் காத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து மகேஷ் பாபு கால்ஷூட் கொடுத்து ஸ்பைடர் படத்தை உருவாக்கியிருக்கிறார். பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸும் அவரது அடுத்தத் திரைப்படமான சாஹூவைத் தமிழ் - தெலுங்கு - இந்தி என மூன்று மொழிகளில் உருவாக்குகிறார். இவர்களே தமிழில் நுழைய இவ்வளவு முயற்சி செய்யும்போது, 150 படங்களைக் கடந்து இந்தியா முழுவதும் அறியப்பட்ட சிரஞ்சீவி சாதாரணமாக விட்டுவிடுவாரா?

சிரஞ்சீவியின் அடுத்தத் திரைப்படம் ஆந்திர தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியைப் பற்றியது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என அறியப்படும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, சுதந்திரப் போராட்டம் தொடங்கியதற்கு பத்து வருடங்கள் முன்னரே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக புரட்சியைத் தூண்டியவர். 1846ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி குட்டலூருவில் தனது படையைக்கொண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்த நரசிம்ம ரெட்டியின் குடும்பத்தை, பிரிட்டீஷ்காரர்கள் கைது செய்து வைத்திருந்தனர். அதன்பின் தலைமறைவாக இருந்த நரசிம்ம ரெட்டியை பிரிட்டிஷ் படைகள் சூழ்ந்து கைது செய்து சாலைகளில் இழுத்துவந்து ஊருக்கு மத்தியில் தூக்கிலிட்டார்கள். புரட்சி செய்யும் மற்றவர்களைப் பயப்பட வைப்பதற்காக அவரது உடலை அந்த இடத்திலேயே 30 வருடங்கள் வரை அகற்றாமல் விட்டதாக அவரது வரலாறு நீள்கிறது.

இந்த வரலாறு ஆந்திராவின் எல்லை தாண்டி யாருக்கும் தெரியாமல் இருப்பதால், உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் புகழைப் பரவச்செய்ய இந்தப் படத்தை எடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.



முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னதாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ஒரு சிற்றரசனின் கதையே 'சைரா நரசிம்மா ரெட்டி'.

ஆந்திராவில் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி) ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் வளங்களைக் கண்டு அடிமைப்படுத்திய நிலையில் சிற்றரசருக்கான அதிகாரம் இல்லாவிட்டாலும் அவரை அரசராகவே பாவித்து மக்கள் வணங்கியும் மரியாதையும் செலுத்தியும் வருகின்றனர். வறட்சி, பசி, பட்டினியில் தவிக்கும் மக்களிடம் ஆங்கிலேயர்கள் வரிகட்டச் சொல்லி வற்புறுத்த, அதை எதிர்த்து ஆங்கிலேயர்களின் பகையை சம்பாதிக்கிறார் நரசிம்மா ரெட்டி. இதனால் அடுத்தடுத்து அவரை ஆங்கிலேயப் படைகள் குறி வைக்கின்றன.


ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வெல்லும் நோக்கில் தன்னுடன் இருக்கும் 60க்கும் மேற்பட்ட சிற்றரசர்களை இணைக்கும் முயற்சியில் நரசிம்மா ரெட்டி ஈடுபடுகிறார். மக்கள் கூட்டத்துக்குப் பிறகு சிற்றரசர்கள் நரசிம்மா ரெட்டியுடன் இணைந்து ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர். இதனிடையே நடக்கும் துரோகத்தால் நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது.

அதற்குப் பிறகு நரசிம்மா ரெட்டி என்ன ஆகிறார், அவரின் வீர உணர்வும் சுதந்திர வேட்கையும் என்ன ஆனது, நரசிம்மா ரெட்டிக்கு யாரால் துரோகம் நிகழ்ந்தது? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'பாகுபலி'க்குப் பிறகு தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்ட படத்தை இயக்கியுள்ளார் சுரேந்தர் ரெட்டி. இது அவருக்கு 9-வது படம். 8 படங்களை இயக்கிய அனுபவமும் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் வேலை வாங்கிய விதமும் அவரின் ஆளுமைக்கான சான்றாக இப்படத்துக்குக் கை கொடுத்துள்ளது.

1857-ல் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி. சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில் வைத்திருந்தது. போராட்டத்தில் குதிக்கும் மக்களை அச்சுறுத்துவதற்காகவே ஆங்கிலேயர்கள் இப்படிச் செய்தனர்.


இந்த வரலாறு ஆந்திராவின் எல்லையைக் கடந்து இந்திய தேசத்துக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்திலும் நரசிம்மா ரெட்டியின் தியாகம், புகழ் குறித்து அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையிலும் 'சைரா நரசிம்மா ரெட்டி' படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி அந்த நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார். ஆனால், ஒரு சரித்திரப் படம் அதனால் மட்டும் முழுமையடையும் என்று சொல்லிவிடமுடியாது. படத்தின் தொடக்கக் காட்சியாகவோ அல்லது நரசிம்மா ரெட்டியின் அறிமுகக் காட்சியாகவோ இருந்திருக்க வேண்டிய காட்சி ஒரு மணிநேரத்துக்குப் பிறகே வந்து பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

அதற்கு முன்னதாக வரும் நரசிம்மா ரெட்டியின் கதாபாத்திரத்தை நிறுவுவதற்காக தவம், வீரம், காதல், குழந்தைத் திருமணம், யாகம், தீபம் ஏற்றுதல், ஏழைக்கு இரங்குதல், வீர உணர்ச்சியை ஊட்டும் விதத்தில் பேசுதல் எனப் பல அம்சங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை தயவு தாட்சண்யமின்றித் தவிர்த்திருக்கலாம்.

நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்துக்கு சிரஞ்சீவி வலு சேர்த்துள்ளார். தண்ணீருக்குள் இருந்து தவம் இருக்கும் அமைதியான குணத்தையும், வெள்ளையனை விரட்டும் ஆவேசத்திலும், தமன்னா மீதான அன்பைச் சொல்லும் விதத்திலும், திருமணதுக்குக் கட்டுப்பட்டு நெறி பிறழாது நடக்கும்போதும், வீரர்களை ஒன்றிணைத்து மக்கள் தலைவனாக உயரும் போதும் மனதில் நிறைகிறார். அரவிந்த்சாமியின் பின்னணிக்குரல் சிரஞ்சீவிக்கு ஆரம்பத்தில் சற்று உறுத்தலாகத் தெரிந்தாலும் போகப்போக அது குறையாகத் தெரியவில்லை.

சிரஞ்சீவிக்குப் பெருமை சேர்க்கும் விதத்திலேயே தமன்னா, நயன்தாரா, அனுஷ்கா என்று முப்பெரும் நாயகிகள் இதில் நடித்துள்ளனர் என்று சொல்லலாம். ஜான்சிராணியாக நரசிம்மா ரெட்டியின் வரலாறைச் சொல்லும் அனுஷ்காவுக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. நரசிம்மா ரெட்டியின் மனைவி சித்தம்மாவாக நயன்தாரா தன் பங்களிப்பை நிறைவாகச் செய்துள்ளார். கண்ணீருடன் ஒரு முறை உங்களைப் பார்த்துக்கவா என்று கணவனிடம் கேட்கும் நயன், என் தலைவனையே போருக்கு அனுப்பியிருக்கேன் என்று சொல்லும் அளவுக்கு மாற்றம் அடைவது என பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். இவர்கள் இருவரைக் காட்டிலும் தமன்னா நாட்டியக் கலைஞராகவும், சிரஞ்சீவியின் காதலியாகவும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

சிரஞ்சீவியின் குருவாக அமிதாப் பொருத்தமான பாத்திர வார்ப்பு. நிழல்கள் ரவியின் பின்னணிக் குரலும் நெருடல் இல்லாமல் சீராக உள்ளது.

நாசர், அஜய் ரத்னம், ஜெகபதி பாபு, ஆனந்த், சுதீப், விஜய் சேதுபதி, ரோகிணி என பல நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள். இதில் சுதீப் அதிக கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரின் கதாபாத்திரப் பரிமாணங்கள் நம்பும்படி உள்ளன. ராஜபாண்டி கதாபாத்திரத்தில் தமிழ் வீரனாக விஜய் சேதுபதி இயல்பாக நடித்துள்ளார்.

கோட்டை, போர்க்களக் காட்சிகளில் ரத்னவேலுவின் கேமரா நம் தோள்களில் பயணிப்பதைப் போல பிரமிப்பைத் தருகிறது. அமித் திரிவேதியின் இசையில் டைட்டில் பாடல் உத்வேகம் அளிக்கிறது. ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த பலம். ஸ்ரீகர் பிரசாத் காதல் காட்சிகளுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.

ஒரு நதியின் போக்கைப் போல நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு சொல்லப்படுகிறது. ஆனால், கதாநாயகக் கட்டமைப்பில் சிரஞ்சீவி சில காட்சிகளில் மட்டுமே அப்ளாஸ் பெறுகிறார். ஆங்கிலேயரை எதிர்த்து வரி கொடுக்க முடியாது என்று பயமுறுத்தி அனுப்புவது, நரசிம்மா ரெட்டியாக தண்ணீருக்குள் இருந்துகொண்டு ஆங்கிலேயப் படைத் தளபதியின் உயிரைப் பறித்து முழக்கமிடுவது, தூக்குமேடைக் காட்சியில் சுதந்திர உணர்வு கொப்பளிக்கப் பேசி எதிரியை மரணத் தருவாயிலும் பந்தாடுவது என சில காட்சிகள் சிரஞ்சீவியின் நாயகத்தன்மைக்கு ஆதாரமான சான்றுகள்.

முதல் பாதியின் தொடக்கக் காட்சிகள் கதாநாயகன் எப்படிப்பட்டவன் என்பதைச் சித்தரிக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. நேராகக் கதைக்களத்துக்குள் வராமல் இழுவையாக நீள்கிறது. இரண்டாம் பாதி எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் தேமே என்று நகர்கிறது. சென்டிமென்ட் காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை. பார்வையாளர்கள் ஒன்றமுடியாத அளவுக்கு அழுத்தமில்லாமல் கடந்து செல்கிறது. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் நினைவுக்கு வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை.

கதையின் போக்கைப் பார்வையாளர்கள் ஊகித்துவிட்ட பிறகு அதன் திசை கொஞ்சமும் மாறாமல் அப்படியே பயணிப்பது அலுப்பையும் சோர்வையும் வரவழைக்கிறது. கலை இயக்கம், உடைகள், மேக்கப், ஒலி வடிவமைப்பு, கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தி பளிச்சிடும் சைரா நரசிம்மா ரெட்டி திரைக்கதையால் மட்டும் கொஞ்சம் சறுக்கலைச் சந்தித்துள்ளது.






Uyyalawada Narasimha Reddy
Telugu soil has seen some brave freedom fighters who have given enough push in The Indian Independence Struggle. One such brave heart who was one of the early freedom fighters was the fierce Uyyalawada Narasimha Reddy. In the early colonial rule, British rulers oppressed the Indian rulers in their expansion mode. They fleeced the local rulers and chieftains, to forcefully collect the taxes from people. Many feared to revolt, but some of them came forward to fight the injustice.
One such ruler was Uyyalawada Narasimha Reddy of Rayalaseema Region. He was born around early 1800’s to the local chieftains’ (Zamindari) family in the present Kurnool district on the banks of Kundi River. Uyyalawada Narasimha Reddy is one of the earliest freedom fighters in India. Reddy, who had 66 villages under his control and an army of 2000 men, could not contain the atrocities committed by the corrupt officials of EIC (East India Company) and the suffering his people had to go through under their colonization

The Rayalaseema region was transferred to the British by the Nizam and Reddy refused pay taxes directly to the British. On 10 June 1846 he raided the treasury at Koilakuntla and marched towards Kambham, Andhra Pradesh (Prakasam District). On the way, at Rudravaram he killed the forest ranger. This being a serious matter, the then Collector Thomas Monroe issued orders to arrest him. The EIC put a price on his head Rs. 5000 and Rs. 10,000 for his head.

Reddy, with his army mounted a serious attack on the British forces camped at Giddaluru on 23 July 1846 and defeated them. Unable to capture him, the British deceptively imprisoned his family at Kadapa. Narasimha Reddy moved to Nallamalaforest to save his family butthe British forces were tipped off by someone about the hideout of Mr. Reddy. To avoid being caught by the British in the Nallamala area, Narasimha Reddy returned to Koilkuntla area and hid in Jagannatha Konda.

Unable to be at large for a long period, Reddy was caught as the army moved in upon a tip-off and arrested him and his followers at mid night of 6 October 1846. The EIC put heavy fetters on him and paraded him right in the streets of Koilkuntlabefore his people with blood-stained clothes so that it would be a warning to them. Around 112 of his followers were arrested and convicted for 5 to 14 years and some of them were jailed in Andaman. The special commissioner of Kadapa conducted the trial and Narasimha Reddy was charged with revolt, murder and being a dacoit and was convicted on all charges. He was publicly hanged on 22nd February 1847, on the banks of nearby river in the presence of Collector Kokcrane. His head was kept on the fort wall in public view for 30 years from 1847 to 1877 to instill fear in the people so that another rebellion won’t be tried by others against the British.

Another blot in the British India history. A patriot was dubbed as a murderer and robber and, at last, was mercilessly killed by the early British rulers.His revolt in India against the British occupation was 10 years earlier than India’s First War of Independence of 1857 also known as Sepoy Mutiny of 1857. The vestiges of the early events are well frozen in the ruins of the fort at Kotthakota, near Giddalur. Plans are afoot to erect a statue in honour of Reddy and the government also has plans to include his brave story in the school text books.

Uyyalawada Narasimha Reddy Movie
Now this epic historic story is being made as a feature film for the prestigious 151stfilm of Megastar Chiranjeevi. The story has been penned down by Sai Madhav Burra, Vema Reddy and Paruchuri brother on Uyyalawada Narasimha Reddy who bared his chest and dared the British.Director Surender Reddy is directing the film and being bankrolled by Ram Charan under Konidela Productions banner. The movie is probably being made in Telugu, Tamil and Hindi and would start regular shoot from August.



Uyyalawada Narasimha Reddy or Majjari Narasimha Reddy (died on 22 February 1847) was the son of a former Indian Telugu Polygar Mallareddy and Seethamma who was born in Rupanagudi village, Uyyalawada Mandal, Kurnool district. He was at the heart of freedom fighters in 1846, where 5,000 commoners rose up against the British East India Company in Kurnool district, Rayalaseema Region of Andhra Pradesh. They were protesting against the changes to the traditional agrarian system introduced by the British in the first half of the eighteenth century. They included the introduction of the ryotwari system and other attempts to maximize revenue impacted lower-status cultivators by depleting their crops and leaving them impoverished.[1]
Early life
The father of Narasimha Reddy was related to the Polygar (jagirdar) family of Uyyalawada in Koilkuntla taluk who had married two daughters of the Polygar of Nossam. He had three sons, of whom Narasimha was the youngest.[1] His first wife was Siddamma.

Causes of rebellion
The EIC's introduction to the Madras Presidency of the 1803 Permanent Settlement, which had first been enacted in Bengal Presidency ten years previously, replaced the agrarian socio-economic status quo with a more egalitarian arrangement where anyone could cultivate provided that they paid a fixed sum to the EIC for the privilege of doing so.[1]

The Polygars and other higher-status people who preferred the old agrarian system "represented the decadent social order", were in many cases "upstarts" and "were also the heirs of a social system in which various orders of Hindu society were integrated through ages". These people were dispossessed of their lands, which were then redistributed, but the primary purpose of the changes was to increase production rather than to restructure the social order. In some cases, it coincided with a punishment because among the dispossessed were those who had recently been involved in fighting the EIC in the Polygar Wars. Some received pensions in lieu of the lost lands but at inconsistent rates.[1]

The changes, which included the introduction of the ryotwari system and other attempts to maximise revenue, deprived village headmen and other higher-status people of their role as revenue collectors and position as landholders, while also impacting on lower-status cultivators by depleting their crops and leaving them impoverished. The population came to the view that the British were taking their wealth and that those who were dependent on the traditional system no longer had a means of making a living. As the old order collapsed into disarray, the once-authoritative Polygars, including Narasimha Reddy, became the focus of attention from sufferers, whose pleas fell on deaf British ears. The Polygars saw a chance to mobilize peasant opposition both for genuine social reasons.[1]

Narasimha Reddy's own objections too was based on their outcomes. Compared to the Polygar of Nossam, the pension awarded to his family upon their dispossession was paltry and the authorities refused to increase it by redistributing some of the Nossam monies when that latter family became extinct in 1821. At the same time, some of his relatives were facing proposals for further reductions in their land rights, including by a reform of the village policing system.[citation needed]

Rebellion
Things came to a head 1846 when the British authorities assumed land rights previously held by various people who had died in the villages of Goodladurty, Koilkuntla and Nossum. Encouraged by the discontent of others, Reddy became the figurehead for an uprising.[1]

An armed group, initially comprising those dispossessed of inam lands around Koilkuntla, was led by Reddy in July 1846. The Acting Collector for the area Lord Cochrane, believed that Reddy had material support from fellow pensioners in Hyderabad and Kurnool, whose land rights had also been appropriated. The group soon attracted support from the peasantry and was reported by British authorities to have rampaged in Koilkuntla, looting the treasury there and evading the police before killing several officers at Mittapally. They also plundered Rudravaram before moving to an area near to Almore, pursued by the British military forces who then surrounded them.[1]

A battle between Reddy's 5000-strong band and a much smaller British contingent then took place, with around 200 of the rebels being killed and others captured before they were able to break out in the direction of Kotakota, Giddalur where Reddy's family were situated. Having collected his family, he and the rest of the rebels moved into the Nallamala Hills. The British offered incentives for information regarding the rebels, who were again surrounded amidst reports that unrest was now growing in other villages of the area. In a further skirmish between the rebels and the British, who had sent for reinforcements, 40–50 rebels were killed and 90 were captured, including Reddy.[1]

Warrants were issued for the arrest of nearly 1,000 of the rebels, of which 412 were released without charge. A further 273 were bailed and 112 were convicted. Reddy, too, was convicted and in his case received the death penalty. On 22 February 1847, he was executed in Koilkuntla in front of a silent crowd of over 2000 people.[1]

British kept his head on the fort wall in public view until 1877. The East India Company reported in their district manual of 1886 that
Since 1839 nothing of political importance has occurred, unless we mention the disturbance in 1847 caused by Narasimha Reddy, a pensioned Poligar of Uyyalavada in Koilkuntla Taluk, then part of Cuddapah district. He was a poor man in receipt of a pension of Rs.11 a month. As a grandson of Jayaram Reddy, the last powerful Zamindar of Nossam, he was sorely disappointed when the Government refused to pay him any portion of the lapsed pension of that family. Just before this time the question of resuming Kattubadi Inams has been brought under the consideration of Government, which made the Kattubadis discontented. Narasimha Reddy collected these men and attacked the Koilkuntla treasury, which, however, was well defended. He moved from place to place and sheltered himself in thepi hill forts of the Erramalas and Nallamalas, and though pursued by troops from Cuddapah and Kurnool, he continued to commit his ravages in Koilkuntla and Cumbum. At Giddalur he gave battle to Lieutenant Watson and killed the Tahsildar of Cumbum. He then escaped into the Nallamalas, and after roving about the hills for several months was caught near Perusomala on a hill in Koilkuntla taluk and hanged. His head kept hung in the fort on the gibbet till 1877, when the scaffold falling into decay, it was not thought necessary to repair it.[2]

Legacy
The Renati Surya Chandrula Smaraka Samithi was formed to preserve the memory of Reddy and the philanthropist Budda Vengal Reddy, both of whom were born in Uyyalawada village. The committee published a book in both Telugu and English, titled Renati Surya Chandrulu (The Sun and Moon of Renadu), in 2015. It contains excerpts from research papers by historians.[citation needed]

In popular culture
A movie based on Narasimha Reddy's inspiring life, Sye Raa Narasimha Reddy directed by Surender Reddy and starring Chiranjeevi was released in the Telugu film industry on 2 October 2019.[3] He was referred as a decoit by British as he was helping people[citation needed]


சைரா நரசிம்மரெட்டி’ படம் வெளியாவதற்கு முன்பாகவே பட்ஜெட் தொகையை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பதிவு: செப்டம்பர் 28,  2019 11:27 AM
திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து, 41-வது ஆண்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி, இன்றளவும் நடிப்பிலும், இளம் தலைமுறை நடிகர்களுக்கே சவால்விடும் வகையில் நடனத்திலும் ஜொலித்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அவரை திரையில் பார்க்கும்போது, அவரது 60 வயதை தெரியப்படுத்தும் விதமாக ஒரு காட்சியைக் கூட நாம் பார்க்க முடியாது. அப்படி ஒரு இளமை ததும்பும் குறும்புடன் சுறுசுறுப்பாக நடிப்பவர் சிரஞ்சீவி.
சினிமாத்துறையில் நல்லநிலையில் இருக்கும்போதே, அரசியல் கட்சி தொடங்கினார். அரசியல் பணி காரணமாக 10 ஆண்டுகள் அவரால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு விலகியவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘கைதி-150’ என்ற படத்தின் மூலமாக மீண்டும் சினிமாத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். அந்தப் படம் அடைந்த அதிரிபுதிரி வெற்றி, அவரை தெலுங்கு சினிமா ரசிகர்கள் இன்னும் தலையில் வைத்து கொண்டாடுவதையும், தெலுங்கு திரையுலகில் அவருக்கு இருக்கும் வரவேற்பையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

அந்த வெற்றி தந்த உற்சாகத்தில், பிரமாண்டமான ஒரு கதையில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்தார். அதன்படி தேர்வு செய்யப்பட்டதே, ‘சைரா: நரசிம்மரெட்டி’ திரைப்படம். இந்தப் படத்தின் கதை, ஆந்திராவில் கி.பி.1800- களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய உய்யலவாடா நரசிம்மரெட்டி என்பவரின் வாழ்க்கைத் சரித்திரம் ஆகும். ‘பாகுபலி’ போன்று பிரமாண்ட படத்தில் நடிக்கும் அதே நேரத்தில், வரலாற்றோடு தொடர்புடைய உண்மைக் கதையில் நடிக்கும்போது, அந்த திரைப்படத்தை இன்னும் நெருக்கமாக மக்களை உணர வைக்க முடியும் என்பதே, சிரஞ்சீவி இந்தப் படத்தை தேர்வு செய்ததற்கான காரணம் என்கிறார்கள்.

ஆந்திர மாநிலத்தின் கர்னூர் மாவட்டத்தில் அமைந்திருந்த இடம்தான் உய்யலவாடா. இந்தப் பகுதியில் நரசிம்மரெட்டியின் தாத்தா ஜெயராமி ரெட்டியும், தந்தை பெத்தமல்ல ரெட்டியும் சிற்றரசர்களாக இருந்துள்ளனர். அவர்களின் வாரிசாக வந்த நரசிம்ம ரெட்டி, கிடலூரு என்ற இடத்தில் இருந்த ஆங்கிலேயர்களின் முகாமை தாக்கி, அவர்களை ஓடஓட விரட்டினார்.

இதையடுத்து நரசிம்ம ரெட்டியின் மீது வஞ்சம் கொண்ட ஆங்கிலேயர்கள், அவரைப் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால், நரசிம்ம ரெட்டியை நெருங்கக் கூட முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தன் குடும்பத்தாரை விடுவிப்பதற்காக படைகளைத் திரட்டியபடி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார் நரசிம்மரெட்டி. ஆனால் கிராமத்தினர் சிலர் காட்டிக் கொடுத்ததன் விளைவாக, நரசிம்ம ரெட்டியை ஆங்கிலேயர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

‘இனி ஒருவன் தங்களை எதிர்க்க பயப்பட வேண்டும்’ என்று நினைத்த ஆங்கிலேயர்கள், நரசிம்ம ரெட்டியை சங்கிலியால் பிணைத்து சித்ரவதை செய்தபடியே ஊர் தெருக்களின் வழியாக இழுத்துச் சென்றனர். நரசிம்ம ரெட்டியோடு இருந்த பலரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சிலர் விடுவிக்கப்பட்டனர். சிலர் 5 முதல் 14 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றனர். நரசிம்ம ரெட்டி மட்டும் தூக்கில் இடப்பட்டார் என்பதாக அவரது வரலாறு சொல்லப்படுகிறது. இந்தக் கதையை மையப் படுத்தி தான் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் உருவாகி உள்ளது.

இதில் நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். பிரமாண்டமான கதைக் களத்திற்கு மேலும் பிரமாண்டம் சேர்க்கும் வகையிலும், இந்திய அளவில் இந்தப் படத்தை வணிகம் செய்வதற்காகவும், இந்தப் படத்தில் இந்திய சினிமாவின் பல மொழிகளைச் சேர்ந்த உச்சநட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதன்படி பாலிவுட் உச்சநடிகர் அமிதாப் பச்சன், தமிழ் மொழியின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள  ஜெகபதிபாபு, கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப், நயன்தாரா, தமன்னா, ‘கபாலி’ படத்தில் நடித்த ஹுமா குரேஷி என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதனால் இந்திய அளவில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சுமார் ரூ.300 கோடியில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படம், தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் 2-ந் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. ரசிகர்களிடம் இருந்தும், பொதுவான சினிமா வட்டாரத்தினரிடம் இருந்தும் இந்த டிரைலருக்கு நல்லமுறையிலான வரவேற்பே கிடைத்திருக்கிறது. ‘பாகுபலி’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூட இந்த படத்தின் டிரைலரை பாராட்டி பேசியிருக்கிறார்.

‘அதனொக்கடே’, ‘அதிதி’, ‘கிக்’, ‘கிக்-2’, ‘ரேஸ்குர்ரம்’ உள்ளிட்ட அதிரிபுதிரியான வெற்றியைப் பெற்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய சுரேந்தர்ரெட்டி, முதன் முறையாக வரலாற்றுக் கதை ஒன்றை கையில் எடுத்திருக்கிறார். அவரது இயக்கத்தில் இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பாகவே, படத்திற்கு செலவிட்ட பட்ஜெட் தொகை வசூலாகிக்கொண்டிருப்பது, அந்தப் படக்குழுவினருக்கு அதிக மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் தயாரிக்கிறார். சிரஞ்சீவியின் சம்பளம் நீங்கலாக இந்தப் படத்திற்கான பட்ஜெட் சுமார் ரூ.300 கோடி என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு விட்ட நிலையில், இதன் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் வாங்கியிருக்கிறது. அந்தத் தொகை ரூ.125 கோடி என்கிறார்கள். இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தின் உரிமையை, இதே நிறுவனம் ரூ.110 கோடிக்கு வாங்கியிருந்ததே அதிகத் தொகைக்கு ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்டதாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ‘சைரா’ முறியடித்திருக்கிறது. தவிர இசை உரிமை உள்ளிட்ட மற்ற உரிமைகளும் விற்பனையாகும்போது, படம் வெளியாவதற்கு முன்பாகவே, படத்தின் பட்ஜெட் தொகையான ரூ.300 கோடி வசூலாகிவிடும் என்கிறார்கள். தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்காக தியேட்டர் உரிமை, அதன் மூலம் கிடைக்கும் வசூல் போன்றவை தயாரிப்பாளருக்கு கிடைக்கும் கூடுதல் லாபமாகவே இருக்கும்.

இந்த விஷயம் தயாரிப்பு நிறுவனத்திற்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இன்னும் படத்திற்கு அதிக விளம்பரம் செய்து, படத்தின் வசூலை பன்மடங்காக பெருக்கு வதற்கான உத்திகளை அவர்கள் கையாண்டு வருகிறார்களாம்.

ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு, அதன் பட்ஜெட் தொகையை விட அதிக வசூலை வரவழைத்துக் கொடுப்பது, பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் அந்தப் படம் ரசிகர்களை எந்த அளவுக்கு திருப்திபடுத்துகிறது, அது மக்களின் மனதில் எப்படி சிம்மாசனம் போட்டு அமர்கிறது என்பதில்தான், படத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது.

இந்தியில் 1500 தியேட்டர்

தெலுங்கில் தயாராகி உள்ள ‘சைரா நரசிம்மரெட்டி’ திரைப்படம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இதில் பாலிவுட்டில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறதாம். ‘பாகுபலி’ உருவான இடத்தில் இருந்து இன்னொரு பிரமாண்டமான சினிமா வருவதை பாலிவுட் உலகம் உற்றுநோக்குகிறது. சிரஞ்சீவி ஏற்கனவே இந்தியில் ‘பிரதிபாந்த்’, ‘ஆஜ்கா குண்டராஜ்’, ‘தி ஜென்டில்மேல்’ ஆகிய நேரடிப் படங்களில் நடித்திருக்கிறார். தவிர அவரது 30-க்கும் மேற்பட்ட படங்கள் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் பாலிவுட் ரசிகர்கள் பலரும் சிரஞ்சீவியை அறிந்திருக்கவே செய்வார்கள். மேலும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சனும் நடித்திருக்கிறார். இதுவும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எனவே ‘சைரா நரசிம்மரெட்டி’ திரைப்படத்தை இந்தியில் 1500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வருமானத்தில் பங்கு


‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்ததற்காக சிரஞ்சீவி இதுவரை சம்பளம் வாங்கவில்லையாம். இந்தப் படத்திற்கு அவரது மகன் ராம்சரண்தான் தயாரிப்பாளர் என்றாலும், ஒரு படத்தின் நடிகருக்கு அவருக்குரிய சம்பளத்தைக் கொடுத்துதானே ஆக வேண்டும். எனவே சம்பளம் வாங்காத சிரஞ்சீவிக்கு, படத்தின் வருமானத்தில் ஒரு பங்கை கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம், ராம்சரண்.








கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்

கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள் கம்பளத்தார் : கம்பளம் என்ற நாடு ( தற்போது பெல்லாரி - ஆந்திர கர்நாடக எல்லையில் உள்ளது ) . கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் கம்பளத்தார் என்று ஆனார்கள் என்று கூறப்படுகிறது . இவர்கள் தங்களை தொட்டிய நாயக்கர் என்றும் அழைத்து கொள்கிறார்கள் .1850 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் அல்லாத தெலுங்கு மொழியை பேச கூடியவர்களில் மக்கள் தொகையில் இவ்வினத்தவர்கள் அதிகம் இருந்து வந்து உள்ளனர் . இவர்கள் முகமதியர் படை எடுப்பின் காரணமாக தமிழகம் வந்ததாக கூறபடுகிறது . இவர்கள் அதிகம் கரிசல் நில பகுதிகளிலும் , மலை சார்ந்த பகுதிகளிலும் குடியேறினர் . 16 ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மை மக்கள் வடக்கு , மேற்கு திண்டுக்கல் பகுதிகளில் அதிகம் குடியேறினர் .வார்ப்புரு:Pg no - 9 மதுரையை 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர்கள் ஆண்டு வந்ததால் , பெரும்பான்மையான பாளையங்களில் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர் . இவர்கள் மதுரை கசட்டுகளில் tottiyans , kappiliyan போன்ற ஜாதிகளாக குறிப்பிட்டு உள்ளனர் . இவர்கள் பெரும்பாலும் தனித்தே வாழும் பழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் எனவே பிற ஜாதியினரை தங்கள் பகுதிகளில் அனுமதிக்காமல் வாழ்ந்து வந்து உள்ளனர் . இவர்கள் வேட்டையாடுவது , சேவல் சண்டை விடுவது போன்றவற்றில் பொழுது போக்கி வந்து உள்ளதாக குறிப்புகளில் பதிய பட்டுள்ளது . இவர்கள் வைணவ வழிபாட்டை விரும்புபவர்கள் . உடன் கட்டை ஏறும் வழக்கமும் இம்மக்களிடம் இருந்து வந்து உள்ளது , தற்போது அது இவர்களால் கடை பிடிப்பது கிடையாது . இவர்கள் தங்கள் சுக , துக்கங்கள் அனைத்தையும் கடவுளிடம் பாடல் மூலம் முறையிடும் வழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் . வீரர்களாக தங்களை அடையாள படுத்தி கொள்வர் என்றும் கூறபடுகிறது . பிராமணர்களை எந்த நிகழ்சிகளிலும் இவர்கள் அழைப்பது கிடையாது மாறாக தங்கள் இனத்திலேயே பெரியவரை - தலைவரை தேர்ந்து எடுப்பார் , இவரே இம்மக்களின் திருமணம் முதலிய சடங்கை செய்து விப்பார் . இவரை கோடாங்கி நாயக்கர் என்றும் ஊர் நாயக்கர் என்றும் அழைகிறார்கள். இம்மக்கள் பெரும்பான்மையான பாளையங்களை ஆண்டு வந்து உள்ளனர் . [[1]] பாளைய முறை : ஆந்திராவின் தற்போதைய தெலங்கானாவில் ககதிய பேரரசுகளால் பாளைய முறை ஏற்பட்டது என்று ஒரு சில வரலாற்று அறிஞ்சர்கள் கூறுகிறார்கள் . இருந்தாலும் விஜயநகர பேரரசுகளில் முக்கியமான அரசரான குமார கம்பனனால் கி.பி 1336 -. கி.பி. 1378 மதுரையை பிடித்து , அவ்வாரே கேரளா , ஆந்திரா , கர்நாடகா , தமிழ்நாடு என்று துங்கபத்ரா நதிக்கரைக்கு தெற்கில் உள்ள அனைத்து பகுதியையும் தன் வசம் கொண்டு வந்து விரிந்த சமஸ்தானத்தை ஏற்படத்தி கொண்டார் . விரிந்த பெரிய சமஸ்தானமாக இருந்து வந்ததால் சிறு சிறு நாடுகளாக பிரித்து அரசாங்க வசதிக்காக அமைத்து கொண்டார் . இதுவே பின்னாளில் " விசுவநாத நாயக்கரின் " மந்திரியாக இருந்த " அரியநாத முதலியால் " 72 பாளையங்களாக மதுரையை மயமாக கொண்டு பிரிக்க பட்டன . இது பின்னாளில் அனைத்து பகுதிகளிலும் அமலாக்க பட்டு 200 பாளையம் வரை பிரிக்க பட்டுள்ளன . பாளையத்தை ஆண்டவர்கள் " பாளையக்காரர்கள் " என்று அழைக்க பட்டனர் .[[2]] குறிப்பிடும் பாளையங்கள் :: பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்டபொம்மன் எட்டயபுரம் - எட்டப்பன் நெற்கட்டும் சேவல் - பூலித்தேவர் திண்டுக்கல் - கோபாலசாமி நாயக்கர் நாயக்கர்களின் ஆட்சி காலம் நடைபெற்றதால் பெரும்பாலான பாளையங்கள் ராஜ கம்பளம் சமுதாய மக்களால் ஆளப்பட்டுள்ளது .வார்ப்புரு:Pg no: 11- 16 கம்பளதார்களிடம் அதிகம் பாளையம் வர காரணம் மதுரை நாயக்கர்கள் அதிக ஜாதி உணர்வு கொண்டு , தங்கள் இனத்தவர்களே ஆளவேண்டும் என்று எண்ணியதால் , பூர்வகுடியினரான மறவர் மக்களிடம் வலுகட்டாயமாக நிலங்களை அபகரித்து , தெலுங்கு மொழியை பேச கூடிய ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர்கள் என்று சொல்லப்படும் இனத்தவர்களிடம் பாளையங்களை கொடுத்து ஆள செய்தனர் . இந்த நாயக்கர்கள் வடுகர் என்று தமிழ் மக்களால் அழைக்க பட்டனர் . இவர்கள் பெரும்பாலும் கோயம்புத்தூர் , மதுரை , திருச்சி , செங்கல்பட்டு , திருநெல்வேலி , சேலம் போன்ற பகுதிகளில் தங்களை குடி அமர்த்தி கொண்டு ஆள தொடங்கினர் . பொதுவாக மறவர் பாளையங்கள் கிழக்கு பகுதிகளிலும் , ராஜகம்பளம் பாளையங்கள் மேற்கு , கொங்கு நாடுகளிலும் அதிகம் இருந்து வந்து உள்ளது . ராஜகம்பளம் மக்கள் பொதுவாக அதிகாரம் மற்றும் வீரத்தால் பாளையங்களை கை பற்றினர் என்றும் , மறவர்கள் பூர்வ குடியினராக இருந்து வந்து பாளையங்களை ஆண்டனர் என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள் . மதுரையை மயமாக கொண்டு பிரிக்க பட்ட 72 பாளையங்களில் 1707 முதல் 1947 வரை தெற்கு பகுதிகளில் உள்ள பிரேதேசங்கள் ஆற்காடு - முகமதியர்கள் கூர்க் - நாயக்கர்கள் கடப்பா - நாயக்கர்கள் கண்டி கோட்டை - நாயக்கர்கள் கூட்டி- போயர்( ஒட்டர் ) , உடையார் குளத்தூர் - கம்பளத்து நாயக்கர்கள் மதுரை - நாயக்கர்கள் ராம்நாடு - மறவர்கள் சிவகங்கை - சேர்வை , அகமுடையார் , கள்ளர் இனம் தஞ்சாவூர் - நாயக்கர்கள் விஜயநகரம் - நாயக்கர்கள் - கம்பளத்தார்கள் பாளையங்கள் : ஏற்ர சக்க நாயக்கனூர் - கந்தப்ப நாயக்கர்[[4]] தேவாரம் போடிநாயக்கனூர் - திருமலை போடி நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்ட பொம்மு நாயக்கர் எட்டயபுரம் - ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர் அம்மைய நாயக்கனூர் - கத்திற நாயக்கர் அம்பாத்துரை - மோபால நாயக்கர் தவசு மடை - சுடலை நாயக்கர் எம்மகலாபுரம் மாரநாடு - சின்ன அழகிரி நாயக்கர் மதூர்- வேங்கடசாமி நாயக்கர் சொக்கம் பட்டி - பள்ளமுத்து நாயக்கர் ஏற்றியோடு - முத்து குமாரவேலு வெல்ல கொண்டாம நாயக்கர் பள்ளியப்பா நாயக்கனூர் - பள்ளியப்பா நாயக்கர் இடைய கோட்டை - மம்பார நாயக்கர் மம்பாரா - சக்காராம் தொம்ம நாயக்கர் பழனி - வேலையாத நாயக்கர் ஆயக்குடி - கொண்டாம நாயக்கர் விருபாக்ஷி - குப்பால நாயக்கர் கன்னிவாடி - ஆண்டியப்ப நாயக்கர் நாகலாபுரம் - சவுந்துர பாண்டிய நாயக்கர் எதிலப்பா நாயக்கன் பட்டி - தளி எதிலப்பா நாயக்கர் காடல்குடி குளத்தூர் மேல்மாந்தை ஆற்றங்கரை கோலார்பட்டி கடம்பூர் ஊற்றுமலை ஜமின் தொட்டப்ப நாயக்கனூர் கம்பம் காசியூர் வாராப்பூர் ஆத்திப்பட்டி கண்டவநாயக்கனூர் தும்பிச்சி நாயக்கனூர் நத்தம் சக்கந்தி பெரியகுளம் குருவி குளம் இளசை மதுவார்பட்டி கோம்பை வடகரை மலயபட்டி ரோசலை பட்டி படமாத்தூர் எழுமலை சுரண்டை நிலகோட்டை முள்ளியூர் 200 பாளையங்களாக மாற்ற பட்ட போது : கருநாடகா , ஆந்திரா , கேரளா போன்ற வற்றையும் இணைத்தஉடன் 200 பாளையங்களாக பிரிக்க பட்டது . அதில் கருநாடக பெரும்பான்மை பகுதிகள் போயர் என்று சொல்ல படுகின்ற ஒட்டர் இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பாளையங்கள் காப்பு இனத்தவர்களாலும் ஆளப்பட்டது . ஆந்திராவில் பெரும்பான்மை காப்பு இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பகுதியை ரெட்டி இனத்தவரும் ஆண்டுள்ளனர் . தமிழகத்தை பொருத்த வரையில் பெரும்பான்மையாக கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களால் பாளையங்கள் ஆளப்பட்டுள்ளது . கிழக்கு பகுதி பூச்சிய நாயக்கர் லேக்கையா நாயக்கர் காமைய நாயக்கர் லிங்கமா நாயக்கர் முத்தையா நாயக்கர் வல்ல கொண்டாம நாயக்கர் சாமைய நாயக்கர் அம்மையா நாயக்கர் அப்பையா நாயக்கர் குலப்பா நாயக்கர் புசில்லி நாயக்கர் தெற்கு பகுதி கூடலூர் இழுபயூர்- காமாட்சி நாயக்கர் ஜல்லிபட்டி ஜோட்டில் நாயக்கனூர் - ஜோட்டில் நாயக்கர் குருக்கல் பட்டி ( திருநெல்வேலி ) மன்னர் கோட்டை ( புதுகோட்டை ) - ராமசாமி சின்ன நாயினிகாரு - கவரா இனம் மருநாடு - அம்மையா நாயக்கர் குமாராவாடி ( மணப்பாறை ) - லெக்கைய நாயக்கர் மணப்பாறை - லக்ஷ்மி நாயக்கர் மருங்காபுரி - பூசைய நாயக்கர் ( திண்டுக்கல் ) பெரியகுளம் - ராம பத்திர நாயக்கர் மயிலாடி - லேக்கையா நாயக்கர் புளியங்குடி - மடவா நாயக்கர் சாந்தையூர் - கோபிய நாயக்கர் சாப்டூர் - ராமசாமி காட்டைய நாயக்கர் சென்னியவாடி - சம்பா நாயக்கர் தவசி மலை - சொட்டால் நாயக்கர் தொண்டாமதூர் தொட்டியன் கோட்டை - மக்கால நாயக்கர் உத்தமபாளையம் ஏற்றமா கோட்டை ( கமுதி - ராமநாதபுரம் ) - சின்னம்மா நாயக்கர் காமைய நாயக்கனூர் ( கடவூர் ) - காமைய நாயக்கர் கன்னிவாடி - அப்பு நாயக்கர் கோம்பை( மதுரை ) - கன்னட தொட்டிய நாயக்கர் இனம் காடல்குடி கோலார் பட்டி - கலங்க நாயக்கர் தொட்டப்ப நாயக்கனூர் ஆவுலப்பன் பட்டி - குச்சிலி பொம்மு நாயக்கர் ஆலங்குளம் ( சிவகாசி ) அருப்புகோட்டை ஆற்றங்கரை - பெதன்ன நாயக்கர் கொல்லப்பட்டி ( நில கோட்டை ) - மக்கால நாயக்கர் - கவரா இனம் பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர் கொங்கு நாடு :: சேந்தமங்கலம் - ராமச்சந்திர நாயக்கர்[[5]] ஓமலூர் - சேலபட்டி நாயக்கர் தலைமாலை - ரோமச்சந்திர நாயக்கர் சத்தியமங்கலம் தேன்கனி கோட்டை கீழமங்கலம் ரத்தினகிரி வெங்கடகிரி கோட்டை ஆலம்படை பாகலூர் சூலகிரி அனுககிரி புங்கனூர் பெத்தநாயக்கன் பாளையம் - பெத்த நாயக்கர் ஆனைமலை - யதுல நாயக்கர் ஆண்டிபட்டி ( கரூர் )- சக்க பொம்மு நாயக்கர் அய்யகுடி ( கோயம்பத்தூர் ) - பெத்த கொண்டாம நாயக்கர் பர்கூர் - குட்டலு குறப்ப நாயினிகாரு - பலிஜா இனம் மங்களம் ( கோயம்புத்தூர் ) - தொண்டம நாயக்கர் மேட்டுரடி ( உடுமலைபேட்டை ) - பாலால நட்டமா நாயக்கர் குருன்சேரி சல்லிபட்டி - தொட்டிய நாயக்க பெத்து பெரியபட்டி ( கோயம்புத்தூர் ) - சித்தமா நாயக்கர் நிலகோட்டை- மக்கால நாயக்கர் பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர் நாமகிரி - சாமையா நாயக்கர் சேலம் - செல்லபட்டி நாயக்கர் சல்லிபட்டி - ஏற்ரம்ம நாயக்கர் சொட்டம்பட்டி - சாலி குச்சி பொம்மு நாயக்கர் தாலயூர்- சுந்தர பாண்டிய ராயர் - முத்தரையர் நாயக்கர் இனம் திருமலை ( புதுக்குடி )- திருமலை நாயக்கர் துங்கவை( உடுமலை ) - சித்தமா நாயக்கர் வீரமலை பாளையம் - காமைய நாயக்கர் ஜொடியன் பட்டி ( உடுமலை பேட்டை ) - பொள்ளாச்சி - சுப்புராய தேவ நாயக்கர் மத்திய பகுதி ரெண்கப்பா நாயக்கர் ராமச்சந்திரா நாயக்கர் வடமராசு நாயக்கர் தேப்பளு ராசு முத்தையா நாயக்கர்[[6]] வடக்கு காப்பு எனப்படும் கிளை சாதியினர் ஆண்ட பகுதி காளகஸ்தி - சென்னப்ப நாயக்கர் சந்திரகிரி - புளிசிரிலா நாயிநிகாரு சித்தூர் - சென்ன அங்கம்மா நாயுடு வீரபலி - சிவராம நாயுடு[[7]] ஆந்திரா வேங்கடபதி நாயுடு - அனந்தபூர் மதகரி நாயக்கா - சித்திரை துர்கா ராஜ வெங்கடப்ப நாயக்கா- சுரப்பூர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி - கர்னூல் பெல்லாரி - அனுமப நாயக்க பெரிகை- லிங்க பலிஜா இனம் பொதமனறு( கர்னூல் ) - ஏற்ற தென்னிரா ரெட்டி - காப்பு இனம் தேசரி பள்ளி - பாளையக்கார நாயுடு இனம்

No comments:

Post a Comment