Friday 27 December 2019

SALMAN KHAN ,BOLLYWOOD LEGEND OF controversial BORN DECEMBER 27,1965



SALMAN KHAN ,BOLLYWOOD LEGEND OF controversial  BORN DECEMBER 27,1965



சல்மான் கான் (Salman Khan, இந்தி: सलमान ख़ान, பிறப்பு: டிசம்பர் 27, 1965) ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகரும், பாலிவுட் நடிகருமாவார்.

பீவி ஹோ தோ ஐசி (1988) என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா (1989) மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். சாஜன் (1991), ஹம் ஆப்கே ஹே கோன் (1994), பீவி நம்பர் 1 (1999) போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றி படங்களும் அவரை இந்திய திரைப்படத்துறையில் நிலைநிறுத்தி உள்ளன.

1999ல், குச் குச் ஹோதா ஹே (1998) திரைப்படத்தில் தம் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை பெற்ற கான், அப்போதிருந்து ஹம் தில் தே சுக்கே சனம் (1999), தேரே நாம் (2003), நோ என்ட்ரி (2005) மற்றும் பார்ட்னர் (2007) உள்பட பல சிறந்த மற்றும் வர்த்தகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிகள் சல்மான் கானை இந்தி சினிமாவின் மிக புகழ்வாய்ந்த முன்னனி நடிகர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.[1][2

வாழ்க்கை வரலாறு
தொழில்வாழ்க்கை
சல்மான் கான், 1988ல் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் அவர் ஒரு துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப்படமான மைனே பியார் கியா (1989) திரைப்படத்தில் தான் அவர் முதன்முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் வர்த்தரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது.

ஜோத்பூர்:


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான்கான், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்திப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார். அக்டோபர் 1-ந்தேதி இரவு இவர் வாகனம் ஒன்றில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.அவருடன் நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரும் வாகனத்தில் இருந்தனர். அவர்கள் கங்காணி கிராமப்பகுதியில் சென்ற போது ‘பிளாக்பக்’ எனப்படும் அரிய வகை மான்கூட்டம் தென்பட்டது. அதில் 2 மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியவகை மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் உள்பட 5 பேர் மீதும் ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த மாதம் 28-ந்தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்தார். பின்னர் இந்த வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அரிய வகை மான்களை வேட்டையாடிய இந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.  குற்றவாளியான சல்மான்கானுக்கு   5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சல்மான் கான் தனக்கு ஜாமீன் வழங்கி தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இதற்கிடையே, சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதியை ராஜஸ்தான் திடீரென இடமாற்றம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மொத்தம்  87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது. #tamilnews



1990ல், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான நக்மாவுடன் அவர் இணைந்து நடித்த பாக்ஹி|பாக்ஹி என்ற ஒரேயொரு திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்த படமும் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டில், பத்தர் கே பூல் , சனம் பேவஃபா மற்றும் சாஜன் ஆகிய மூன்று வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.[3] இந்த மாபெரும் ஆரம்ப பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் இருந்த போதினும், அவரின் 1992-1993-ல் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வி அடைந்தன.[3]

1994ல், மாதுரி தீட்சித்துடன் அவர் இணைந்து நடித்த ஹம் ஆப்கே ஹே கோன் திரைப்படத்தில் (சூரஜ் பர்ஜத்யாவுடனான அவரின் இரண்டாவது கூட்டணியில்) மீண்டும் வெற்றி நாயனாக மாறினார். அந்த படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் அதுவரை பாலிவுட்டின் மிகப் பெரிய வசூல் சாதனை அளித்த திரைப்படங்களில் ஒன்றாகவும் அது மாறியது. அதுவரையிலான காலத்தில், மிக அதிக வசூல் அளித்த திரைப்படங்களில் இந்த படம் நான்காவது இடத்தைப் பிடித்தது.[4] ஒரு வர்த்தகரீதியான வெற்றிப்படமாக மட்டுமில்லாமல், சல்மான்கான் அவரின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். இது சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரையிலும் அவரை இரண்டாவது முறையாக கொண்டு சேர்த்தது. கான் நடித்த மூன்று திரைப்படங்கள் அந்த ஆண்டிலேயே வெளியாயின. ஆனால் அவரின் முந்தைய படங்களைப் போன்று அவற்றில் ஒன்று கூட பாக்ஸ் ஆபீசில் வெற்றியைக் காட்டவில்லை. எவ்வாறிருப்பினும், அமீர்கானுடன் அவர் இணைந்து நடித்த அண்தாஜ் அப்னா அப்னா திரைப்படத்தில் அவர் நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார். 1995ல், அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, ராகேஷ் ரோஷனின் கரண் அர்ஜூன் வெற்றிப்படத்தில் மீண்டும் தம்மை நிலைநிறுத்தி கொண்டார்.[3] அந்த திரைப்படம் அவ்வாண்டின் இரண்டாவது மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கரண் என்ற அவரின் கதாபாத்திரம் அவரை மீண்டும் ஒருமுறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கு கொண்டு சென்றது. ஆனால் தவிர்க்க முடியாமல் கரண் அர்ஜீனில் அவருடன் இணைந்து நடித்த ஷாருக்கான் அம்முறை விருதை வென்றார்.

1996-ஆம் ஆண்டு சல்மான் கானின் இரண்டு படங்கள் வெளியாயின. ஒன்று, அறிமுக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியால் இயக்கப்பட்டு மனிஷா கொய்ராலா, நானா பாட்டேக்கர் மற்றும் சீமா பிஸ்வாஸ் ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த காமோஷி: தி மியூசிக்கல் என்ற படமாகும். பாக்ஸ் ஆபீஸ் அளவில் இது தோல்விப்படமாக இருந்த போதினும், இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது. அடுத்ததாக அவரும், சன்னி தியோல் மற்றும் கரிஷ்மா கபூரும் இணைந்து நடித்த ராஜ் கன்வரின் அதிரடி படமான ஜீத்" வெளியாகி இருந்தது.

1997ல், ஜூடுவா மற்றும் அவ்ஜார் ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. முந்தையது கரிஷ்மா கபூருடன் இணைந்து, டேவிட் தாவனினால் இயக்கப்பட்ட நகைச்சுவை படம். இதில் அவர் பிறந்த போதே பிரிக்கப்பட்ட இரட்டையர்களின் கதாபாத்திரத்தை ஏற்று இரட்டை வேடத்தில் நடித்தார். அப்படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இரண்டாவது படம் பெயரளவிற்கே பிரபலப்பட்டது.

1998-ஆம் ஆண்டு சல்மான் கான் நடித்த ஐந்து வித்தியாசமான திரைப்படங்கள் வெளியாயின. கஜோலுடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை படமான பியார் கியா தோ டர்னா கியா திரைப்படம் அவருக்கு அவ்வாண்டின் முதல் படமாக அமைந்தது. அது அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இதை தொடர்ந்து வெளியான ஜப் பியார் கிசிசே ஹோதா ஹே]] திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.[3] இந்த படத்தில் கானின் நடிப்பு அவருக்கு பல நல்ல பாராட்டுக்களைப் பெற்று தந்தது என்பதுடன் விமர்சகர்களிடம் இருந்தும் ஆதரவான விமர்சனங்களை அளித்தது. அவர் அதே ஆண்டில் அறிமுக இயக்குனரான கரண் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஷாருக்கான் மற்றும் கஜோலுடன் இணைந்து நடத்த இப்படத்தில், அவர் அமன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் பின்பகுதியில் சிறிய காட்சியில் மட்டுமே தோன்றி இருந்தார். எவ்வாறிருப்பினும், அதுவும் அவருக்கு பாராட்டைப் பெற்று தந்தது.

1999ல், கான் மூன்று வெற்றிப்படங்களில் நடித்தார்: ஹம் சாத் சாத் ஹே: வீ ஸ்டேண்ட் யுனெடட் என்ற படம் சூரஜ் பர்ஜத்யாவுடன் அவரை மூன்றாவது முறையாக அணி சேர்த்தது; பீவி நம்பர் 1, இது அந்த ஆண்டில் அதிக வசூலீட்டிய திரைப்படமாக அமைந்தது; ஹம் தில் தே சுக்கே சனம், இது ஒரு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன், அவரை மற்றொரு முறை மீண்டும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கான பரிந்துரையிலும் கொண்டு வந்து சேர்த்தது.

2000-ஆம் ஆண்டு, கான் ஆறு படங்களில் நடித்திருந்தார். இவற்றில் சுமாரான வெற்றியைப் பெற்ற ஹர் தில் ஜோ பியார் கரேன்கா மற்றும் சோரி சோரி சுப்கே சுப்கே ஆகிய இரண்டு படங்களைத் தவிர பெரும்பாலானவை படுமோசமாகவும், வர்த்தகரீதியாகவும் தோல்வி அடைந்தன. அந்த இரண்டு படங்களிலும் முறையே ராணி முகர்ஜி மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். 2001 வரை தாமதமாகி வெளியான சோரி சோரி சுப்கே சுப்கே திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் கான் ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் கதாபாத்திரத்தைக் கையாண்டிருந்தார்.[5][6]

2002-ஆம் ஆண்டு வெளியான ஹம் தும்ஹாரே ஹே சனம் படத்திலும் இவர் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபிஸில் ஓரளவிற்கு வெற்றி பெற்றது.

2003-ஆம் ஆண்டு வெளியான தேரே நாம் படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்யும் வரை கானின் தொடர்ச்சியான படங்கள் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தன. இந்த படம் நல்ல வசூலை எட்டியது. அத்துடன் அவரின் நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. "சல்மான் கான் அந்த T கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக பொருந்துகிறார். சிரமமான காட்சிகளிலும் அவர் அற்புதமாக நடிக்கிறார்." என்று திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டார்.[7] அவர் தொடர்ந்து முஜ்சே ஷாதி கரோகி (2004) மற்றும் நோ என்ட்ரி (2005) ஆகிய நகைச்சுவை படங்களுடன் பாக்ஸ் ஆபீசில் தமது வெற்றியைத் தொடர்ந்தார்.[3] ஜானே மன் மற்றும் பாபுல் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் சரியாக வெற்றியடையாததால் 2006ஆம் ஆண்டு அவருக்கு ஒரு தோல்விகரமான ஆண்டாக அமைந்தது.

2007ஆம் ஆண்டை, சல்மான் கான் சலாம் ஈ இஸ்க் படத்துடன் தொடங்கினார். அதுவும் பாக்ஸ் ஆபிசில் வெற்றியைக் காட்டவில்லை. அவரின் அடுத்த படமான பார்ட்னர் பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றி பெற்றது,[8] அடுத்ததாக அவர் தம் முதல் ஹாலிவுட் திரைப்படமான மேரிகோல்டு: அட்வன்சர் இன் இந்தியா என்ற படத்தில் அமெரிக்க நடிகை அலி லார்டெருடன் நடித்தார். ஓர் இந்திய ஆணுக்கும், ஓர் அமெரிக்க பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சொல்லும் இப்படம் வர்த்தகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.

2008 முழுவதும் கான் மூன்று படங்களில் நடித்தார், அவை அனைத்துமே தோல்வி அடைந்தன. ஜிம் கேரியின் ஹாலிவுட் வெற்றிப்படமான புரூஸ் ஆல்மைட்டி என்பதை தழுவி காட் துஸ்சே கிரேட் ஹோ என்ற படம் என்பது உருவாக்கப்பட்டது. இந்த படம் படுமோசமான தோல்வியைத் தழுவியது.[9] அந்த ஆண்டின் இரண்டாவது படமான ஹீரோஸ், விமர்சகர்களிடம் இருந்து பாராட்டைப் பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக வெற்றியடையவில்லை என்று கூறப்பட்டது.[10]

தனிப்பட்ட வாழ்க்கை
கான், புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான சலீம் கான் மற்றும் அவர் முதல் மனைவி சல்மா கானுக்கு (மணமாவதற்கு முன்னிருந்த பெயர் சுசீலா சரக்) பிறந்த மூத்த மகனாவார். சல்மான் கானுக்கு, அர்பாஜ் கான் மற்றும் சோஹேல் கான் என்ற இரண்டு சகோதரர்களும், அல்விரா மற்றும் அர்பிதா எனும் இரண்டு சகோதரிகளும் உண்டு.

தீவிர உடற்பயிற்சி செய்வதில் சல்மான் கான் மிகவும் ஆர்வம் கொண்டவர். 2004ல், உலகின் அழகான ஆண்களில் 7வது இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அமெரிக்காவின் பீப்பிள் இதழாலும் இந்தியாவில் அழகான ஆண்மகன் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] சல்மான் கான் பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.[12]

ஐஸ்வர்யா ராய், சோமி அலி மற்றும் சங்கீதா பிஜ்லானி போன்ற நடிகைகளுடன் சல்மான் கான் தொடர்புபடுத்தப்பட்டார். 2003-ஆம் ஆண்டு டேட்டிங் மாடல் மற்றும் நடிகையான கேத்ரீனா கெய்ப் உடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டார்.[13]

2007, அக்டோபர் 11ல், இலண்டனில் உள்ள மேடம் துஷ்சாட்ஸ் மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில் அவரின் மெழுகு பொம்மையை வைக்க சல்மான் கான் சம்மதம் தெரிவித்தார். அந்த அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட நான்காவது இந்திய திரைப்பட கலைஞரின் மெழுகு பொம்மை என்ற பெருமையுடன், 2008, ஜனவரி 15ல், இறுதியாக அவரின் ஆள் உயர மெழுகு பொம்மை அங்கு நிறுவப்பட்டது.[14][15]

வழக்கு
2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.[16]

சர்ச்சைகள்
சட்டரீதியான பிரச்சனைகள்
2002, செப்டம்பர் 28ல், வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காக சல்மான் கைது செய்யப்பட்டார். அவர் கார் மும்பையில் உள்ள ஒரு பேக்கரியின் மீது மோதியது; பேக்கரியின் வெளியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ஒருவர் அதில் இறந்தார் என்பதுடன் அந்த சம்பவத்தில் மேலும் மூன்று நபர்கள் காயப்பட்டார்கள்.[17] அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டன. எவ்வாறிருப்பினும், அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அவர் தொடர்ந்து வழக்குகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.[18]

2006, பிப்ரவரி 17ல், அழிந்து வரும் உயிரினமான சின்காராவை வேட்டையாடியதற்காக கான் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை மேல்முறையீடின் போது உயர் நீதி மன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.[19] 2006, ஏப்ரல் 10ல், அழிந்து வரும் சின்காராவை வேட்டை ஆடியதற்காக சல்மானுக்கு ஐந்தாண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிணையம் வழங்கப்படும் வரை அவர் அங்கு ஏப்ரல் 13 வரை சிறையில் இருந்தார்.[20] 2007, ஆகஸ்டு 24ல், சின்காரா வேட்டையாடிய வழக்கில், அவரின் மேல்முறையீட்டின் 2006 தீர்ப்பிற்கு எதிராக, ஜோத்பூர் வரைவு நீதிமன்றம் அவரை ஐந்து ஆண்டு கால சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டது. அப்போது, அவர் வேறெங்கோ படப்பிடிப்பில் இருந்தார் என்பதால் அவர் சகோதரி அந்த வழக்குகளில் நேரில் ஆஜரானார்.[21] அதற்கடுத்த நாள், வேட்டையாடியதற்காக அவருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவர் ஜோத்பூரில் போலீஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டார். 2007, ஆகஸ்ட் 31ல், ஆறு நாட்கள் சிறையில் கழித்த பின்னர், ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து கான் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புகளுடனான பிரச்சனைகள்
ஐஸ்வர்யா ராயுடனான அவரின் நெருங்கிய உறவு இந்திய ஊடகத்தில் அதிகமாக வெளியான ஒரு விஷயமாகும். மேலும் அது தொடர்ந்து வதந்திகளை எழுப்பி வந்தது.[22] 2002 மார்ச்சில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னர், தம்மை அவர் தொந்தரவு செய்வதாக ராய் குற்றஞ்சாட்டினார். தங்களின் உறவு முறிவு குறித்த விஷயத்தில் சல்மான் கான் உடன்படாமல், தன்னை தொடர்ந்து துரத்திக் கொண்டிருப்பதாக ராய் அறிவித்தார்; ராயின் பெற்றோர்கள் கானுக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்கள்.[23]

2001-ஆம் ஆண்டு, மும்பை போலீஸால் இரகசியமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் அழைப்பு என்று கூறப்பட்டதை 2005ல் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. மும்பை சட்டவிரோத பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்படும் சமூக நிகழ்வுகளில் தோன்ற ராயைக் கட்டாயப்படுத்தும் ஒரு முயற்சியில், அவர் ஐஸ்வர்யா ராயை அச்சுறுத்த செய்யப்பட்ட அழைப்பாக அது தோன்றியது. இந்த அழைப்பு, பிற நடிகர்களின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் தீய கருத்துக்களுடனான தொடர்புகளையும் எடுத்துக்காட்டியது. எவ்வாறிருப்பினும், சண்டிகர்|சண்டிகரில் உள்ள இந்திய அரசின் தடயவியல் ஆய்வகத்தில் அந்த சந்தேகத்திற்கிடமான ஒலிநாடா பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அது போலியானது என்று தீர்மானிக்கப்பட்டது.[24][25]

சல்மானுக்கு எதிரான ஃபாத்வா
2007, செப்டம்பரில், ஒரு விநாயகர் பூஜையில் கலந்து கொண்டதற்காக கானுக்கு எதிராக ஒரு முஸ்லீம் அமைப்ப பாத்வாவை வெளியிட்டது. உருவ வழிபாடு இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, கான் கல்மாஸ் (சத்தியம் பிரகடனம்) படித்தால் ஒழிய, அவர் மீண்டும் ஒரு முஸ்லீமாக சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என்று அந்த அமைப்பு அறிவித்தது. ஆனால், பாந்த்ராவில் கான் அவர் குடும்பத்துடன் விநாயகர் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த விழாவில் நடனம் ஆடியவர்களில் கானும் ஒருவராக இருந்தார். அவர் தந்தை, சல்மான் எதுவும் தவறாக செய்துவிடவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார்.[26]

கான் தமது உருவ மெழுகு பொம்மையை உருவாக்க இலண்டனின் மேடம் துஷ்சாஷ்ட்ஸிற்கு அனுமதி அளித்ததற்காக, இந்தியாவின் ஒரு முஸ்லீம் பிரிவான முப்தி சலீம் அஹ்மத் காஸ்மியால் மற்றொரு பாத்வா அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த பொம்மை சட்டவிரோதமானது என்று முப்தி குறிப்பிட்டது. அதே அருங்காட்சியகத்தில் ஷாருக்கானின் மெழுகு பொம்மை வைக்கப்பட்டிருக்கும் போது, உடன் முஸ்லீமான அவருக்கு எதிராக எவ்வித பாத்வாவும் வெளியிடாத நிலையில், இது பத்திரிக்கைகளில் பல்வேறு ஊகங்களை எதிரொலித்தது. "இந்த பாத்வாக்கள் ஒரு நகைச்சுவை விஷயமாகி வருகின்றன" என்று சல்மான் கான் கூறினார்.[27]

விநாயக சதுர்த்தி கான் தம் வீட்டில் அவர்தம் குடும்பத்துடன் கொண்டாடியதற்காக, செப்டம்பர் 2008ல் மீண்டும் சல்மான் கான் மீது பாத்வா எழுப்பப்பட்டது. புது டெல்லியில் உள்ள ஆலோசனை குழு உறுப்பினரால் அந்த பாத்வா எழுப்பப்பட்டது. அந்த விழாவில், அவர் தந்தை சலீம் மீண்டும் பாத்வா மீது கேள்வி எழுப்பினார், அத்துடன் அதை எழுப்பியவர்களையும் விமர்சித்தார்.[28][29]

விருதுகளும் தேர்ந்தெடுப்புகளும்
பிலிம்பேர் விருதுகள்
வெற்றியாளர்
1990: மைனே பியார் கியா படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
1999: குச் குச் ஹோதா ஹே படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரைக்கப்பட்டவை
1990: மைனே பியார் கியா படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
1995: ஹம் ஆப்கே ஹே கோன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
1996: கரண் அர்ஜூன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
1997: ஜீத் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
1999: பியார் கியா தோ டர்னா கியா திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
2000: ஹம் தில் தே சுக்கே சனம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது
2000: பீவி நம்பர் 1 படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
2004: தேரே நாம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
2004: பக்ஹ்பன் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
2006: நோ என்ட்ரி படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
2004: தேரே நாம் படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருது
2005: கர்வ்: பிரைட் அண்டு ஹானர் என்ற படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருது
ஜி சினி விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
2004: தேரே நாம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஜீ சினி விருது
2005: முஜ்சே ஷாதி கரோகி படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஜீ சினி விருது
2006: நோ என்ட்ரி படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஜீ சினி விருது
பாலிவுட் திரைப்பட விருதுகள்
வெற்றியாளர்
2002: பாலிவுட் திரைப்பட விருது - சிறந்த உணர்வுப்பூர்வமான நடிகர், சோரி சோரி சுப்கே சுப்கே
தேசிய விருதுகள்
2007: பொழுதுபோக்கில் அவரின் நிகரற்ற சாதனைக்காக ராஜீவ் காந்தி விருது [30]
இந்திய தொலைக்காட்சி விருதுகள்
2008: சிறந்த நிகழ்ச்சியாளர் , தஸ் கா தம்

பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கக் கூடாது: சல்மான் கான் By Siva | Published: Wednesday, November 4, 2015, 12:37 [IST] மும்பை: கலை மற்றும் பொழுதுபோக்கிற்கு எல்லை இல்லை. அதனால் பாகிஸ்தான் நடிகர், நடிகைகளை பாலிவுட்டில் நடிப்பதை தடுத்து நிறுத்த முடியாது என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகளை பாலிவுட் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற விவாதம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை மும்பையில் நடத்த சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பவாத் கான் மற்றும் மாஹிரா கான் ஆகியோரையும் சிவசேனா குறி வைத்துள்ளது

இது குறித்து சிவசேனாவின் திரைப்பட பிரிவு பொதுச் செயலாளர் சித்ராபத் சேனா கூறுகையில், நம் ராணுவ வீரர்களை கொலை செய்யும் அவர்கள் நாட்டு கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும். எதிரிகளுடன் கலாச்சார தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றார். இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறுகையில், கலையையும், அரசியலையும் கலக்கக் கூடாது. ஒரு கதாபாத்திரத்தை பாகிஸ்தான் நடிகர் சிறப்பாக செய்வார் என்று நினைத்தால் அவரை நடிக்க வைக்க யாரும் தடை போடக் கூடாது. பாகிஸ்தானில் உள்ளவர்களில் பலர் பாலிவுட் ரசிகர்கள். தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்தியர்கள் பாகிஸ்தானிய நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். அதனால் கலைக்கும், பொழுதுபோக்கிற்கும் எல்லை இல்லை என்றார்.

No comments:

Post a Comment