Wednesday 4 December 2019

INDIAN NAVY DAY DECEMER 4 இந்திய கடல் படை தினம் டிசம்பர் 4







இந்திய கடல் படை தினம் டிசம்பர் 4


1830வது வருடம் இந்தியா ஒரு குடியேற்ற நாடு என்னும் நிலையில் இருந்த வேளையில், ஹெர் மெஜெஸ்டிஸ் இண்டியன் நேவி என்ற பெயரில், பிரிட்டிஷ் இந்தியக் கடற்படை பிரிட்டிஷ் நாட்டினரால் நிறுவப்பட்டது.(அதற்கு முன் அது 1612ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியால் ஹானரபில் ஈஸ்ட் இண்டியா கம்பெனி'ஸ் மெரைன் என்று அறியப்பட்டது. முழு வரலாறு அறிய மேலே உள்ள இணைப்பைக் காணவும்). 1928ஆம் ஆண்டில் ஒரு பொறியியல் அதிகாரியாக தி ராயல் இண்டியன் மெரைனில் சேர்ந்த சப் லெஃப்டினென்ட் டி.என். முகர்ஜி என்பவரே உயர் பொறுப்பளிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். 1946ஆம் ஆண்டில் இந்திய மாலுமிகள் தமது கப்பல்களிலும் கரையோர நிறுவனங்களிலும் உருவாக்கிய தி ராயல் இண்டியன் நேவி மியூட்டினி என்று கூறப்பட்ட புரட்சியானது இந்தியா முழுவதும் பரவியது. இந்தப் புரட்சியில் மொத்தமாக 78 கப்பல்கள், 20 கரையோர நிறுவனங்கள் மற்றும் 20,000 மாலுமிகள் ஈடுபட்டனர். இந்தியா 1950வது வருடம் ஜனவரி 26 அன்று குடியரசு நிலை அடைந்தபோது, இது இந்தியக் கடற்படை என்று பெயர் பெற்றது; இதன் கலன்கள் இந்தியக் கப்பற் கலன்கள் (ஐ.என்.எஸ்) என்று பெயர் பெற்றன. 1958வது வருடம் ஏப்ரல் 22 அன்று கடற்படையின் முதல் தலைவராக வைஸ் அட்மிரல் ஆர்.டி.கடாரி பொறுப்பேற்றார்.

கோவா படையெடுப்புகள்[மூலத்தைத் தொகு]

முதன்மை கட்டுரை: Invasion of Goa
கடற்படை முதன் முதலில் ஈடுபட்ட ஒரு போராட்டம் 1961வது ஆண்டு நிகழ்ந்த ஆபரேஷன் விஜய் என்னும் கோவா படையெடுப்பு ஆகும்.

போர்ச்சுகல்லின் குடியேற்றத்திற்கு எதிரான நிலைப்பாடு மற்றும் இந்தியாவிற்கு இடையே பல வருடங்களாக அதிகரித்து வந்த அழுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்தே இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 21,1961ஆம் ஆண்டில் அஞ்சதிப் தீவில் சபர்மதி என்னும் பயணிகள் கப்பலின் மீது போர்ச்சுகீசியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார் மற்றும் இருவம் காயமடைந்தனர். இது நிகழ்ந்த சிறிது காலத்தில், இந்திய அரசாங்கம் ராணுவ இடையூட்டின் மூலம் கோவாவில் போர்ச்சுகீஸ் ஆட்சியை முடிக்கத் தீர்மானித்தது. இந்தியக் கப்பல்கள், காலாட்படை மற்றும் கடற்படையின் நிலமிறங்கும் வீரர்களுக்குத் தளவாட ஆதரவு அளித்தன. இந்தச் செயற்பாட்டின்போது, ஐ.என்.எஸ் தில்லி ஒரு போர்ச்சுகீஸ் ரோந்துப் படகை மூழ்கடித்தது. ஒரு சிறு போருக்குப் பின்னர் இந்தியப் போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ் பெட்வா மற்றும் ஐ.என்.எஸ். பியஸ் ஆகியவை என்.ஆர்.பி அஃபோன்ஸோ டெ ஆல்புகெர்க் என்னும் போர்ச்சுகீசியக் கப்பலை மூழ்கடித்தன.[16]

இந்திய-பாகிஸ்தான் போர்கள்[மூலத்தைத் தொகு]
முதன்மை கட்டுரை: Indo-Pakistani wars and conflicts

ஐஎன்எஸ் விக்ராந்த் 1971 போரில் பங்கு கொண்டது; மற்றும் அது கிழக்கு பாகிஸ்தான் கரையோரத்தை (தற்போதைய பங்களாதேஷ்) பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.
பாகிஸ்தான் நாட்டுடன் நிகழ்ந்த இரண்டு போர்களில் கடற்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 1965வது ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் நிகழ்வில் இவை பெரும்பாலும் கரையோர ரோந்துப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தன; எனினும், 1971 போர் நிகழ்வில் கராச்சி துறைமுகத்தில் குண்டு வீசியதில் இது முக்கிய பங்கு வகித்தது. டிசம்பர் 4ஆம் தேதி துவக்கப்பட்ட இந்தத் தாக்குதல் ஆபரேஷன் ட்ரைடென்ட் என்று பெயரிடப்பட்டது. இதில் அடைந்த வெற்றியின் காரணமாக, அப்போது துவங்கி இந்த தினமே கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தப்போரின் மையம் கிழக்கிந்திய-பாகிஸ்தான் எல்லைக்கும் வங்காள விரிகுடா விற்கும் நகர்வதற்கு முன்னர் இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் பைதன் என்னும் தாக்குதல் நடத்தப்பட்டது. தனது நட்பு நாடான பாகிஸ்தானுடன் தனக்கிருந்த கூட்டொருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணம்,யுனைடெட் ஸ்டேட்ஸ் யூஎஸ்எஸ் என்டர்பிரைஸ் என்பதன் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் 74 என்னும் போர்க் கப்பலை வங்காளக் கடலில் செலுத்தியது. ஐஎன்எஸ் விக்ராந்த் தலைமையில் ஒரு செயற்படை எண்டர்பிரைஸ் படையை எதிர்கொள்வதற்காக நங்கூரமிடப்பட்டிருந்தது;சோவியத் கடற்படை நீர் மூழ்கிக் கப்பல்களும் யூ.எஸ். படைகளைப் பின் தொடர்ந்தன. யூ.எஸ். படைக்கப்பல் இந்தியக் கடலை விட்டு விலகித் தென் கிழக்கு ஆசியாவை நோக்கிப் பயணப்பட்டதால், நேருக்கு நேரான ஒரு தாக்குதல் தவிர்க்கப்பட்டது.[17]

விளக்க இயலாத சூழ்நிலையில்[18], பாகிஸ்தானிய கடற்படையின் ஒரே பெருந் தொலைவு நீர் மூழ்கிக் கப்பலான பிஎன்எஸ் காஸி மூழ்கிப்போனதால், கிழக்கு பாகிஸ்தான் வழியை அடைப்பது இந்தியாவிற்கு எளிதானது.[19] ஐஎன்எஸ் நிர்காட் மற்றும் ஐஎன்எஸ் நிபாட் ஆகிய ஏவுகணைக் கப்பல்கள் இரண்டும் தலா ஒரு வெடிகுண்டு தாங்கிச் செல்லும் நீர்மூழ்கி கப்பல்களை மூழ்கடித்தன; ஐஎன்எஸ் வீர் கடற்கண்ணிவாரிக் கப்பலைத் தகர்த்தது. விக்ராந்த் போர்க் கப்பலிலிருந்து செயல்படும் ஸீ ஹாக்ஸ் மற்றும் ஆலைஸஸ் ஆகிய கடற்படை விமானங்களும் பல சிறு பீரங்கி போர்க்கப்பல்கள் மற்றும் வணிக கப்பற் கலன்கள் ஆகியவற்றை மூழ்கடிப்பதில் உறுதுணையாக இருந்தன. மிகப் பெரும் போர் விபத்து ஒன்றும் நேரிட்டது: (பிஎன்எஸ் ஹாங்கார் என்பதால் மூழ்கடிக்கப்பட்ட) குக்ரி என்னும் போர்க்கப்பல்; மேற்குப் பகுதியில் நிகழ்ந்த போரில் கிர்பான் என்னும் கப்பலும் சேதமடைந்தது. இறுதியில், பாகிஸ்தானின் படைக் கலன்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை உள்வரும் மற்றும் வெளியேறும் வழிகளான கிழக்கு பாகிஸ்தான் துறைமுகம்மற்றும் கராச்சித் துறைமுகம்[20][21] ஆகியவற்றை முழுவதுமாக சூழடைப்பு செய்வதில் இந்தியக் கடற்படை வெற்றியடைந்தது.[22] இச் செயற்பாடுகள் இந்தப் போரில் இந்தியாவின் வெற்றியை உறுதியிட்டன.

கடற் கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கைகள்[மூலத்தைத் தொகு]
1999வது வருடம் அக்டோபர் மாதம் கடத்தப்பட்ட ஜப்பானிய சரக்கு கப்பலான எம்வி அலோந்த்ரா ரெயின்போ , இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கரையோர காவல் படையின் ஒருங்கிணைந்த முயற்சியால் கடற் கொள்ளைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.[43]

சோமாலியாவின் பெரும்பான்மையான கடல் வணிக கப்பல்கள் அதன் கடற் பகுதியைத் தாண்டியே செல்ல வேண்டியிருந்ததால் சோமாலியாவின் கடற் பகுதியில் நடந்து வந்த கொள்ளைகள் இந்தியாவைக் கவலை கொள்ள வைத்தன.[44] இந்தக் கவலைகளுக்குத் தீர்வு காண, இந்தியக் கடற்படை 2008வது வருடம் அக்டோபர் மாதம் ஏடன் வளைகுடாவில் ஐஎன்எஸ் தபார் என்னும் போர்க்கப்பலை நிறுத்தியது. அந்தப் பணியை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே தபார் , இரண்டு சரக்குக் கப்பல்களைச் சூறையாட கொள்ளையர்கள் செய்த முயற்சியை முறியடித்து மற்றும் கொள்ளையர்களின் "தாய்க் கப்பல்" என்று அறியப்பட்ட முக்கிய கப்பலையும் அழித்தது.[45] அந்தப் போர்க்கப்பலானது, 2008வது வருடம் நவம்பர் மாதம் வரையில், கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட பகுதி என்று கூறப்பட்ட பகுதியின் வழியாகவே 35 கப்பல்களைப் பாதுகாத்து அழைத்துச் சென்றது.[46] மீன் பிடிக்கும் பைவலை என்னும் இழுப்புப் படகு ஒன்றைத் தாய்லாந்திலிருந்து கடத்தி வந்து அதனைத் தங்கள் தாய்க் கப்பலாக கடற் கொள்ளையர்கள் மாற்றியிருந்தார்கள்.[47] கடற் கொள்ளைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐஎன்எஸ் தபார் கப்பலுக்குக் கூடுதல் உதவி புரிவதற்காக ஐஎன்எஸ் மைசூர் என்னும் வெடிகுண்டு தாங்கி நீர்மூழ்கிக் கப்பலையும் இந்தியா பணியில் அமர்த்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.[48] 2008வது ஆண்டு நவம்பர் 21 அன்று சோமாலியாவின் கடலோர எல்லைப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான கலன்களை இடைமறிக்க இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.[49] ஏடன் வளைகுடாவில் ஒரு வணிகக் கப்பலைக் கடத்துவதற்கு முற்பட்ட 23 கடற்கொள்ளையர்கள் இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.[50] செஷல்ஸ் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கடற் கொள்ளையர்களுக்கு எதிராக ரோந்து சுற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.[51] இதன் விளைவாக ஒன்பது கடற் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.[52] இந்த கடற் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஊக்கமூட்ட, மேலும் சில கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.[53] லிபெரியன் கலமான எம்வி மௌட் என்னும் கலத்தின் மீதான கொள்ளையர் தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையில் 2 கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மீதமிருந்த அறுவர் கைது செய்யப்பட்டனர்.[54] 2009வது வருடம் டிசம்பர் 07 அன்று சோமாலியாவின் கரைப்புறமாக, ஏடன் வளைகுடாவில் இருந்த ஒரு யூஎஸ் பீரங்கிக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஒரு கொள்ளையர் தாக்குதலை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக முறியடித்தது.[55] ஏடன் வளைகுடாவில் கடற் கொள்ளையர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக யூ.என். இந்தியக் கடற்படைக்கு விருது வழங்கியது.[56]

No comments:

Post a Comment