Showing posts with label PHILOSOPHER. Show all posts
Showing posts with label PHILOSOPHER. Show all posts

Saturday, 23 June 2018

KANNADASAN ,THE GREAT POET ,PHILOSOPHER BORN 1927 JUNE 24 - 1981 OCTOBER 17







KANNADASAN ,THE GREAT POET ,PHILOSOPHER
BORN 1927 JUNE 24 - 1981 OCTOBER 17



`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!
என்று தனக்கு தானே மரண பாடல் எழுதிய கண்ணதாசன் BORN ஜூன் 24 1927

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்[தொகு]

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[1] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[2],[3]. கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[4] ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.[5]

கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு[தொகு]
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.[6]

மறைவு[தொகு]

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்[தொகு]
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[7] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது

கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...
`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!

Wednesday, 20 June 2018

NICHOLA MACHIYAVALLI ,PHILOSOPHER OF POLITICS BORN 1469 MAY 3,1527,JUNE 21





NICHOLA MACHIYAVALLI ,PHILOSOPHER OF POLITICS BORN 1469 MAY 3,1527,JUNE 21


நவீன அரசியல் சிந்தனை சிற்பி மாக்கியவெல்லி
மறைவு சூன் 21, 1527


நிக்கோலோ மாக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli - மே 3, 1469 – சூன் 21, 1527) ஒரு இத்தாலிய இராசதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார்.

மக்கியவெல்லி இத்தாலிய மறுமலர்ச்சியின் முக்கியமான ஒருவரும், புளோரன்சு குடியரசின் ஊழியருமாக இருந்தார். 1498 ஆம் ஆண்டில் சவனரோலா வெளியேற்றப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளானபோது, பேரவை கூடி மாக்கியவெல்லியை புளோரன்சுக் குடியரசின் இரண்டாம் காப்பகத்தின் (Chancery) செயலராகத் தெரிவு செய்தது.

இளவரசன் (The Prince) என்னும் ஒரு சிறிய ஆக்கத்துக்காகவே இவர் கூடிய பெயர் பெற்றார். இது சில வேளைகளில் உண்மையிய அரசியல் கோட்பாடு எனக் குறிப்பிடப்படுவது உண்டு. இந்த ஆக்கமும், விரிவான இன்னொரு ஆக்கமான லெவி பற்றிய சொற்பொழிவுகள் (Discourses on Livy) மற்றும் புளோரன்சின் வரலாறு (History of Florence) என்னும் ஆக்கமும் அவர் இறந்த பின்னர் 1530களிலேயே வெளியிடப்பட்டன.

ஓர் அரசன், தன் அதிகாரத்தை நிலை நாட்டவும், மேன்மேலும் பெருக்கவும், அவன் வஞ்சகம், சூழ்ச்சி, பொய்மை ஆகியவற்றை ஈவிரக்கமற்ற அடக்குமுறையுடன் இணைத்துக் கையாள வேண்டும் என்ற கொடூரமான ஆலோசனையைக் கூறியதற்காக வசைப் பெயர் எடுத்த இத்தாலிய அரசியல் தத்துவஞானி நிக்கோலா மாக்கியவெல்லி ஆவார்.

இவரை ஒரு சாரார் பழி பாவங்களுக்கு அஞ்சாத பாதகன் என்று பழித்தனர்; இன்னொரு சாரார் கூர்த்த மதி கொண்ட உலகியல் உண்மையைத் துணிவுடன் உள்ளவாறே கூறிய உலகியல்வாதி எனப் போற்றினார். எவ்வாறாயினும் தத்துவஞானிகளாலும், அரசியல் வாதிகளாலும் உன்னிப்பாகப் படிக்கப்படும் நூல்களைப் படைத்த மிகச்சில எழுத்தாளர்களுள் மாக்கிய வெல்லியும் ஒருவர் என்பதில் ஐயமில்லை.

இத்தாலியிலுள்ள பிளாரன்சில் 1469 ஆம் ஆண்டில் மாக்கியவெல்லி பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்குரைஞர். அவர் ஓர் உயர்குடியினராயினும், செல்வ நிலையில் சீராக இருக்கவில்லை. இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கம் உச்சக் கட்டத்தில் இருந்தபோதி மாக்கியவெல்லி வாழ்ந்தார். அவருடைய ஆயுட்காலம் முழுவதிலும், இத்தாலி பல சிறிய சிற்றரசுகளாகப் பிளவுபடடுக் கிடந்தது.

அதே சமயம், பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து போன்றவை ஒருங்கிணைந்த நாடுகளாக விளங்கின. எனவே, மாக்கியவெல்லியின் காலத்தில் இத்தாலி, பண்பாட்டில் உயர்ந்திருந்த போதிலும், இராணுவ வலிமையில் மிகவும் ஆற்றல் குன்றியிருந்ததில் வியப்பில்லை.

மாக்கியவெல்லியின் இளமைப் பருவத்தின் போது வீறார்ந்த லோரன்சோ என்ற புகழ் பெற்ற மெடிசி அரசர் பிளாரன்சை ஆண்டு வந்தார். ஆனால், 1492 ஆம் ஆண்டில் லோரன்சோ இறந்து விடவே, சில ஆண்டுகளுக்குப் பிறகு மெடிசி குடும்பத்தினர் பிளாரன்சிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பிளாரன்ஸ் ஒரு குடியரசாகியது.

1498 ஆம் ஆண்டில் 29 வயதான மாக்கியவெல்லி பிளாரன்ஸ் குடியரசுக்காகப் பணி புரிந்தார். அக்குடியரசின் சார்பில் தூதுப் பணியாக பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்குச் சென்று வந்தார். இத்தாலி யிலும் விரிவாகச் சுற்றுப் பயணம் செய்தார்.

பிளாரன்ஸ் குடியரசு 1512 ஆம் ஆண்டில் கவிழ்க்க ப்பட்டது. மெடிசி மரபினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். மாக்கியவெல்லியின் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அடுத்த ஆண்டில், புதிய மெடிசி ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சதி செய்ததாக அவர் கைது செய்யப்பட்டார். அவரைச் சித்திரவதை செய்தனர். எனினும், அவர் தாம் குற்றமற்றவர் என்று வலியுறுத்தினார். அதே ஆண்டில் அவர் விடுதலையடைந்தார். அதன் பின்பு, பிளாரன்சுக்கு அருகிலிருந்த சான்காசியோனோ என்ற ஒரு பண்ணையில் அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

அடுத்த 14 ஆண்டுகளில் மாக்கியவெல்லி ஏராளமான நூல்களை எழுதினார். அவற்றுள் "இளவரசன்" (1513), டைட்டஸ் லிவியசின் முதல் பத்து ஏடுகளின் மீதான ஆய்வுரை" ஆகிய இரண்டும் மிகவும் புகழ் பெற்றவை.

"போர்க்கலை" "பிளாரன்ஸ் வரலாறு", "லா மாண்ட்ராகவோ லா" (இன்னும் நடக்கப்படும் ஒரு சிறந்த நாடகம்) ஆகியவை அவருடைய வேறு முக்கிய படைப்புகளில் குறிப்பிடத்தக்கனவாகும். இந்த நூல்கள் அனைத்திலும் அவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்தது. "இளவரசன்" என்ற நூலேயாகும்.

இவருடைய தத்துவ நூல்கள் அனைத்திலும் படிப்பதற்கு மிக எளிதாகவும், இனிமையாகவும் அமைந்துள்ளது. இந்நூல் மாக்கியவெல்லி திருமணமானவர். அவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். அவர் 1527 ஆம் ஆண்டில், தமது 58 ஆம் வயதில் காலமானார்.

ஓர் அரசுத் தலைவருக்கு நடைமுறைக்கு உகந்த அறிவுரைகளைக் கூறும் ஒரு பாட நூலாக "இளவரசன்" நூலைக் கொள்ளலாம். இந்த நூலில் வலியுறுத்தப்படும் அடிப்படைக் கருத்து இதுதான்; "ஆட்சியைப் பிடிக்க விழையும் ஓர் இளவரசன், அறநெறிக் கொள்கைகளை அடியோடு புறக் கணித்து விட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, ஓர் அரசு மிகுந்த ஆயுத பலம் கொண்டதாக இருக்க வேண்டும். தன் சொந்த நாட்டுக் குடிமக்களிலிருந்து திரட்டப்பட்ட இராணுவம் மட்டுமே நம்பத் தக்கது. கூலிப் படைகளை அல்லது மற்ற அரசுகளில் படைகளை நம்பியிருக்கும் அரசு எப்போதும் ஆற்றலற்றதாகவும், ஆபத்துக்குள்ளாகக் கூடியதாகவே இருக்கும்.

இளவரசன் தன் குடி மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாக்கியவெல்லி அறிவுறுத்துகிறார். இல்லையெனில், ஆபத்துக் காலத்தில் அவனுக்குப் புகலிடம் இருக்காது. சில சமயம், ஒரு புதிய அரசன், தன் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, குடிமக்கள் விரும்பாத சில செயல்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை மாக்கியவெல்லி உணர்த்துகிறார்.

எனினும், "...........ஆட்சியைப் பிடித்ததும், ஓர் அரசன் எல்லாக் கொடுமைகளையும் உடனடியாகச் செய்து முடித்துவிட வேண்டும். அன்றாடம் நிகழும்படி செய்யலாகாது. குடிமக்களுக்கான நன்மைகளை, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கும் வகையில், சிறிது சிறிதாக அளிக்க வேண்டும்" என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.

ஓர் இளவரசன் வெற்றிகரமாக ஆட்சிபுரிய வேண்டுமானால், தன்னைச் சுற்றித் திறமையும், பற்றுறுதியும் வாய்ந்த அமைச்சர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், முகப் புகழ்ச்சி செய்பவர்களைத் தவிர்த்து ஒதுக்கி விட வேண்டும் என்று மாக்கியவெல்லி எச்சரிக்கை செய்கிறார். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர் கூறுகிறார். "இளவரசன்" நூலில் 17 ஆம் அத்தியாயத்தில் இளவரசன் அன்புக்குப் பாத்திரமாவது நல்லதா, அச்சத்தை விளைவிப்பது நல்லதா என்பது குறித்து மாக்கியவெல்லி விவாதிக்கிறார்:

"இதற்கு விடை இது தான். ஒருவர் அன்புக்கு ஆட்படவும் வேண்டும்; அச்சத்தை விளைவிக்கவும் வேண்டும். ஆனால், இவ்விரண்டில் எது நல்லது எனக் கேட்பின், அன்புக்கு ஆட்படுவதைவிட அச்சத்தை விளைவிப்பதே பாதுகாப்பானது. ஏனெனில், அன்பு என்பது சங்கிலித் தொடர் போன்ற கடப்பாடுகளைக் கொண்டது. மனிதர் தன்னலம் வாய்ந்தவராக இருப்பதால் அவர்களின் நோக்கங்கள் நிறைவேறியதும் அன்பும் அறுந்து போய்விடுகிறது.

ஆனால், உறுதியாகத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சுறுத்தல் வாயிலாக அச்ச உணர்வு என்றென்றும் நிலைபெறுகிறது".இதன் 18 ஆம் அத்தியாயம் "இளவரசர்கள் நம்பிக்கையைப் பேணுவதற்கு வழிமுறை" என்ற தலைப்புடையது. இதில் மாக்கியவெல்லி இவ்வாறு கூறுகிறார்...." நம்பிக்கையைக் காப்பாற்றுவது தமது நலனுக்கு எதிரானதாக இருக்கும் என்றால், ஒரு விவேகமுள்ள அரசன் நம்பிக்கையைக் காப்பாற்றாமல் இருத்தலே நலம்...." அவர் மேலும் சொல்கிறார்.

ஓர் இளவரசன் தன் வாக்குறுதியை நிறைவேற்றா ததற்குச் சட்டப்படியான காரணங்களைக் கொண்டே போதிய சாக்குப் போக்குகள் கூறலாம். ஏனெனில், மனிதர்கள் மிகவும் அப்பாவிகள்; அவர்களை அப்போதைய வாதங்களுக்கு அடிபணிய வைப்பது எளிது. எனவே, இரண்டகம் செய்யும் எவரும் தாம் வஞ்சிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறவர்களை என்றென்றும் ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம்; ஆகவே, மற்றவர்களின் வாக்குறுதிகளை இளவரசன் எப்பொழுதும் ஐயறவுக் கண் கொண்டு பார்க்க வேண்டும்" என்று மாக்கியவெல்லி அறிவுறுத்துகிறார்.


இந்த "இளவரசன்" நூலை "சர்வாதிகாரிகளுக்கு வழிகாட்டி" என்றும் அழைப்பதுண்டு. மாக்கியவெல்லி பொதுவாகச் சர்வாதிகாரத்தை விடக் குடியரசு முறை அரசாங்கத்தையே ஆதரித்தார் என்பது அவருடைய வாழ்க்கையிலிருந்தும், மற்ற நூல்களிலிருந்தும் தெரிகிறது. ஆனால், இத்தாலியின் அரசியல் மற்றும் இராணுவ கையாலகத்தனம் கண்டு அவர் ஆத்திரம் கொண்டார்.

நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கும், நாட்டை நாசப்படுத்தும் பல்வேறு வல்லமை வாய்ந்த ஓர் இளவரசன் தேவை என அவர் விரும்பினார். இளவரசன் நடைமுறையில் எப்போதும் சீற்றங் கொள்பவராகவும், ஈவிரக்கமற்றவராகவும் இருக்க வேண்டும் என்று மாக்கியவெல்லி வலியுறுத்தி யபோதிலும், அவர் தம் வாழ்வில் கனவியற் போக்குடையவராகவும் ஆழ்ந்த நாட்டுப் பற்று வாய்ந்தவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அவர் தீவிரமாகப் பரிந்துரைத்தது போல் வஞ்சனை செய்வதில் அத்துணை தேர்ந்தவராக இருக்கவில்லை.
மாக்கியவெல்லி போல் கடுமையான கண்டன த்திற்குள்ளான அரசியல் தத்துவஞானிகள் மிகச் சிலரே, நெடுங்காலமாக, அவர், "மனித உருக்கொண்ட பேய்" என்று பழிக்கப்பட்டார். வஞ்சகத்தையும், தந்திரத்தை யும் குறிப்பதற்கு அவருடைய பெயர் கையாளப்பட்டு வந்தது. மாக்கியவெல்லியின் போதனைகளை நடைமுறையில் தீவிரமாகக் கையாண்டவர்களே அவரை வன்மையாகக் கண்டித்தது வேடிக்கையாக இருந்தது. இவர்களின் கபட நாடகத்தை மாக்கிய வெல்லியே கூட கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

அறநெறிக் காரணங்கள் காட்டி மாக்கியவெல்லி கண்டிக்கப்பட்டதைக் கொண்டு அவர் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை எனக்கூறி விட முடியாது. அவர் கூறிய கருத்துகள் அவருடைய சொந்தக் கருத்துகள் அல்ல என்று ஒரு சாரார் கூறுவர். இது ஓரளவுக்கு உண்மையே. புதிய கொள்கை எதனையும் கூறவில்லை என மாக்கியவெல்லியே அடிக்கடிக் குறிப்பிட்டுள்ளார். நினைவுக் கெட்டாத மிகப் பழங்காலம் முதற்கொண்டு, மாபெரும் வெற்றி பெற்ற பல இளவரசர்கள் ஏற்கனவே வெற்றிகரமாகக் கையாண்ட உத்திகளைத்தான் தாம் உரைப்பதாக அவர் கூறினார்.

உண்மையைக் கூறின், மாக்கியவெல்லி தாம் கூறும் கருத்துகளுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளைப் பண்டைகால வரலாற்றிலிருந்தும், அண்மைக் கால இத்தாலிய நிகழ்ச்சிகளிலிருந்தும் காட்டுவதைக் காண்கிறோம். "இளவரசன் நூலில் மாக்கியவெல்லி யின் பாராட்டுதலைப் பெறும் சீசரே போர்ஜியா தமது தந்திரங்களை மாக்கிவெல்லியிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லை. மாறாக, போர்ஜியாவிடமிருந்துதான் மாக்கியவெல்லி அவற்றைக் கற்றுக் கொண்டார்.

மாக்கியவெல்லியைப் பகிரங்கமாகப் பாராட்டிய சில அரசியல் தலைவர்களில் இத்தாலியச் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் ஒருவர். இவரைத் தவிர இன்னம் ஏராளமான புகழ் பெற்ற அரசியல் தலைவ ர்கள் நூலைத் தன் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டே உறங்கினர் என்பர். ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலின் ஆகியோ ரைப் பற்றியும் இவ்வாறு கூறுவதுண்டு. எனினும் மாக்கியவெல்லியின் சாணக்கியத் தந்திரங்கள், "இளவரசன்" நூல் வெளியாவதற்கு முன்பை விடத் தற்கால அரசியலில் அதிகமாகக் கையாளப்படுகி ன்றனவா என்பதைத் தெளிவாகக் கூற இயலவில்லை.

அந்த ஒரே காரணத்திற்காகவே, இந்த நூலில் மாக்கியவெல்லிக்கு உயரிடம் அளிக்கப்படவில்லை. ஆனால், அரசியல் நடைமுறைகளில் மாக்கியவெல்லியின் பாதிப்பு தெளிவாகத் தெரியவில்லையெனினும், அரசியல் கோட்பாட்டின் மீது அவர் பெற்ற பெருஞ்செல்வாக்கினை மறுப்பதற்கில்லை. பிளேட்டோ, புனித அகஸ்டைன் போன்ற பண்டைய எழுத்தாளர்கள் அரசியலை அறிவியலுடன் அல்லது இறைமையிலுடன் இரண்டற இணைத்திருந்தார்கள்.

மாக்கியவெல்லி, வரலாற்றையும் அரசியலையும் முற்றிலும் மனித நோக்கில் விவாதித்தார்; அறநெறி நோக்கங்களை அவர் அறவே புறக்கணித்து விட்டார். அவர், "மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்ற மைய வினாவை எழுப்பவில்லை; மாறாக, "அவர்கள் உள்ளபடிக்கு எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?" என்ற கேள்வியை எழுப்பினார்.

"யார் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்?" என அவர் கேட்கவில்லை; மாறாக, "ஆட்கள் உள்ளபடிக்கு எவ்வாறு அதிகாரத்தைப் பெறுகிறார்கள்?" என்று அவர் வினவினார். அந்த அரசியல் கோட்பாடு முன்பைவிட இன்று மிகுந்த செயல்முறை நோக்குடன் விவாதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு ஓரளவுக்குக் காரணம் மாக்கியவெல்லியின் செல்வாக்கே.

நவீன அரசியல் சிந்தனையின் முக்கிய நிறுவனர்களில் ஒருவர் மாக்கியவெல்லி எனக் கருதுவது முற்றிலும் பொருத்தமேயாகும்.

Monday, 7 May 2018

RAVINDRANATH TAGORE ,POET ,PHILOSOPHER BORN 1861,MAY 7 - 1941 AUGUST 7





RAVINDRANATH TAGORE ,POET ,PHILOSOPHER
BORN 1861,MAY 7 - 1941 AUGUST 7





இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.

இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்

தொடக்க காலம் (1861-1901)

1879 இல் இங்கிலாந்தில் கற்கும் வேளையில் தாகூர்.













1883 இல் தாகூர் தன் மனைவி மிருனாளினி தேவியுடன்.

இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி (1861-05-09) பிறந்தார். இவரது பிறந்த இடம் கொல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகை ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடிப் பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பம் எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சம‌‌‌ஸ்க்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.

இரவீந்திரநாத் தாகூர் தான் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிரைட்டண், லண்டனில் (Brighton, London) உள்ள ஒரு பள்ளியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் லண்டன் சர்வகலாசாலையில் கல்வி கற்றார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலே 1880 ஆம் ஆண்டில் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார்.
 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலைமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.

நரேனும்(சுவாமி விவேகானந்தர்) தாகூரும்
ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.
தாகூரின் பாடல்களை பலவற்றை நரேந்திரர் பாடியுள்ளார்.
நரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்.
[1]

சாந்திநிகேதன்

Black-and-white photograph of a bearded middle-aged man dressed in dark robes. He is seated on the floor of an elegantly appointed room and is in front of a plush sofa; he gazes fixedly away to the right, away from the camera.
Shot by John Rothenstein, Hampstead, 1912
Posed group black-and-white photograph of seven Chinese men, possibly academics, in formal wear: two wear European-style suits, the five others wear Chinese traditional dress; four of the seven sit on the floor in the foreground; another sits on a chair behind them at center-left; two others stand in the background. They surround an eighth man who is robed, bearded, and sitting in a chair placed at center-left. Four elegant windows are behind them in a line.
Tsinghua University, 1924

1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் என்பவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்ப நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.

இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.


சாந்தி நிகேதன் மாணவர்கள்
நோபல் பரிசு

1940 இல் சாந்திநிகேதனில் மோகன்தாசு கரம்சந்த் காந்தியையும், கஸ்தூரிபாவையும் தாகூர்(மேடையின் வலப்பக்கம்) வரவேற்கிறார்.
1913 ஆம் ஆண்டில், அவரது இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.

1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.

1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.

இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதையும், அடிமைகள் போல் நடத்தப்படுவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.

1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.

1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.

இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.

1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசீய கீதமாகவும், உருவெடுத்தன.




தாகூரின் அறை
பயணங்கள்
1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுள் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.

ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.

இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.

ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.


1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.

இறப்பு
1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் சுற்றினார். சைனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.

1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது, எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.

Thursday, 3 May 2018

MACHIAVALLI, DEEP THINKER,PHILOSOPHER BORN MAY 3,1469 -1527 JUNE 21





MACHIAVALLI, DEEP THINKER,PHILOSOPHER
BORN MAY 3,1469 -1527 JUNE 21





இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் 1469ஆம் ஆண்டு may மாதம் 3ஆம் திகதி நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை ஒரு சட்டத்தரணியாக இருந்ததுடன் புராதன வரலாறு பலவற்றையும் கற்றிருந்தார். மாக்கியவல்லி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பூர்த்தி செய்ததுடன் இலத்தீன் மொழி, மானிடவியல் ஆகிய துறைகளில் புலமை வாய்ந்தவராகவும் காணப்பட்டிருந்தார். மாக்கியவல்லியின் காலத்திற்கு இத்துறைகளில் புலமை பெறுவது அவசியமானதாகவும்,பெறுமதி வாய்ந்ததாகவும் கருதப்பட்டிருந்தது. மாக்கியவல்லி தனது 29வது வயதில் Florentine குடியரசின் இரண்டாவது Chancellor பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் வெளிவிவகாரங்களுடன் தொடர்புடைய விடயங்களுக்கு பொறுப்பாகவும் இருந்தார். இது மாக்கியவல்லி அரசியல் பற்றிய தெளிவினை பெறுவதற்கு பெரிதும் உதவியிருந்தது. 1512 ஆம் ஆண்டு புளோரன்ஸ் குடியரசு குழப்பமடைந்ததுடன், மாக்கியவல்லியின் தொழிலும் சிக்கலடைந்தது. 1512ஆம் ஆண்டு கார்த்திகை பதவியிலிருந்து விலக்கப்பட்ட மாக்கியவல்லி, 1513ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்றுக் கொண்ட மாக்கியவல்லி சிறை வாழ்க்கைக்கு பிந்திய நாட்களை தனது ஓய்விற்காக பயன்படுத்தினார். இவ் ஓய்வு காலத்தில் தனது இராஜதந்திர அனுபவங்கள், வரலாறு ஆட்சியாளனுக்கு இருக்கக் கூடிய இயல்புகள் என்பவைகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்.

மாக்கியவல்லியின் ஆய்வு நூல்களில் Prince’, ‘Discourse’ ஆகிய இரு நூல்களும் மிகவும் பிரபல்யமானதுடன் இவருடைய அனுபவத்தில் இருந்து பிறந்தவைகளுமாகும். 1513ஆம் ஆண்டு நடுப்பகுதியில் Prince என்ற நூலை எழுதியிருந்தார். மிகவும் அர்ப்பணிப்புடனும், கவனத்துடனும் எழுதப்பட்ட இந்நூல் ஆட்சியாளனுக்கு ஆலோசனை வழங்குகின்ற நூலாகவே இருந்நது. ‘Discourse’ என்ற நூலில் குடியரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கை ஒன்றிற்கு வருவதனூடாக கலப்பு அரசாங்கம் ஒன்றை உருவாக்க மாக்கியவல்லி முற்படுகின்றார். இந்நூல் பெருமளவிற்கு புளோரன்ஸ் நகரத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருந்தது. ஆயினும் 1512ஆம் ஆண்டு The Art of War என்ற நூல் ஒன்றை இதற்கு முதல் மாக்கியவல்லி எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாக்கியவல்லியின் அனேக எழுத்துக்களுக்கான சரியான காலம் இன்றுவரை தர்க்கத்திற்குரியதாகும்.

மறுமலர்ச்சியும் இத்தாலியும்

பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளை பாதித்தது போன்று இத்தாலியையும் பாதித்தது. மறுமலர்ச்சியானது மானிடத்தின் மறுபிறப்பாகவே நோக்கப்படுகின்றது. மனிதன் தனது புதிய வாழ்க்கைக்கு மீளவும் திரும்புவதாக இக்காலத்தினை குறிப்பிடுவது மிகவும் சிக்கலான ஒன்றாகவே இருந்தது.

மறுமலர்ச்சியானது தனிமனித சுதந்திரத்தினை முதன்மைப்படுத்தியதுடன் மனிதனின் சிறப்பினையும் உலகத்தின் புகழையும் முதன்மைப்படுத்தியது. மனிதன் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதை விரும்புகின்றவனாக காணப்பட்டான். மனிதன் கிறிஸ்தவ சமய செல்வாக்கில் இருந்து விடுபட்டு இயற்கை நோக்கியும், சுயமுயற்சி, சுயசிந்தனை என்பவைகள் நோக்கியும் நகர்வதில் நாட்டம் உள்ளவனாக காணப்பட்டான். இக்காலம் மானிடத்துவம் முதன்மைப்படுத்தப்பட்ட காலமாகும். மானிடத்துவம் முதன்மைப்படுத்தப்பட்டமை நவீன உலகின் பெரும் பலமாக உணரப்பட்டது. கிறிஸ்தவ சமயமும், தேவாலயமும் போதித்த மானிட வாழ்வின் பயனற்ற தன்மை, துன்பம், அடக்கம், வறுமை, துறவறம், என்பவற்றை எதிர்த்து மறுமலர்ச்சிக்காலம் மானிடத்தின் உயர்தன்மை, கௌரவம், என்பவற்றை உறுதிப்படுத்தியது. இதன்மூலம் மனிதன் சிந்திக்கும் சுதந்திரத்தை, விசாரிக்கும் சுதந்திரத்தை, வினா எழுப்பும் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டான். இச்சுதந்திரங்கள் உலகின் புதிய மனிதனை தோற்றிவித்தது. சமய விசுவாசம் என்பதற்கு அப்பால் தனிமனிதனின் சுய யதார்த்தம், மகிழ்ச்சி, புகழ், பெருமை என்பன முதன்மைப்படுத்தப்பட்டன.

மேலும் சமய சார்பற்ற அரசு என்ற எண்ணக்கரு பிரதான அரசியல் அலகாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தேசியரசு என்பது ஒரு புலக்காட்சிக்குட்பட்டது என்பதுடன் அரச இறைமை என்ற எண்ணக்கருவும் முதன்மையடைந்தது. இவற்றினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நாடுகாண்பயணங்களும், புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் நடைபெற்றன. புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை வர்த்தகம், பொருளாதார அபிவிருத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, மானிடம் நோக்கிய தத்துவங்கள் அபிவிருத்தியடைவதற்கு உதவின. அச்சு இயந்திரம், அச்சுப் பதிப்பு, நூலகம், பல்கலைக்கழகம், போன்றவற்றின் தோற்றம், கல்வியறிவில் மாற்றத்தினை ஏற்படுத்த கல்விப்புரட்சி நிகழ்ந்நது. கல்விப்புரட்சியானது பழமையான மொழிகளாகிய கிரேக்க, இலத்தீன், மொழிகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மறுமலர்ச்சியானது இத்தாலியின் பழைய வர்த்தக, பொருளாதார முறைமைகளை இல்லாதொழித்ததுடன் புதிய வர்த்தக, பொருளாதார முறைமைகளையும் தோற்றிவித்தது. அத்துடன் மறுமலர்ச்சியின் தாக்கம் இத்தாலியின் சமூக, அரசியல் நிறுவனங்களிலும் பிரதிபலித்தது. இத்தாலி அரசியல் ரீதியாக Naples, Milan, Venice, Florence, Papal என ஐந்து பெரும் அரசுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. ஐக்கிய இத்தாலியினை உருவாக்கக் கூடிய அதிகாரம் யாரிடமும் காணப்பட்டிருக்கவில்லை.

ஐந்து அரசுகளும் வௌ;வேறு திசைகளில் சென்றதுடன் சர்வாதிகாரப் போக்குடனும் செயற்பட்டன. இத்தாலியில் ஒற்றுமை காணப்படாமையால் அச்சுறுத்தலும், ஆக்கிரமிப்பும், எப்போதும் இருந்து வந்ததுடன், இதிலிருந்து மீளுகின்ற ஆர்வமும் இருக்கவில்லை. இது பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், போன்ற நாடுகளின் ஏகாதிபத்திய அபிலாசைகளுக்கு இத்தாலி விட்டுக் கொடுக்கின்றதாக இருந்தது. இத்தாலி இவ்வாறு பலவீனப்பட்டு இருக்கும் போது திருச்சபையும், பாப்பாண்டவரும், தம்மை மேலும் பலமான நிலையில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்வதிலேயே முழு முயற்சில் ஈடுபட்டனர். பாப்பாண்டவரினதும், திருச்சபையினதும் இச் செயற்பாடு மாக்கியவல்லிக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது. மாக்கியவல்லி திருச்சபைக்கும், பாப்பாண்டவருக்கும் எதிரான கருத்துக்களை உருவாக்கி திருச்சபையின் பிடியிலிருந்து இத்தாலியை மீட்க விரும்பினார்.

தற்பெருமையும் (Ego) மனிதனும்


மாக்கியவல்லியின் கருத்துப்படி மனிதர்கள் அடிப்படையில் பலவீனமானவர்களாகவும், இழிவானவர்களாகவுமே காணப்படுகின்றார்கள். நன்றியில்லாதவர்களாகவும், வஞ்சனை மிக்கவர்களாகவும், அச்சம் நிறைந்தவர்களாகவும், அபாயத்தினை சந்திக்க தயங்குகின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். மனிதர்களது மன விருப்பங்கள் நிறைவற்றனவாகவும், மனதில் திரும்பத் திரும்ப இவ்விருப்பங்கள் வருகின்றவைகளாகவும் காணப்படுகின்றன. அடிப்படையில் மனித இயல்பு சுயநலமானதும், தற்பெருமை மிக்கதுமாகும். மனித வாழ்க்கை அடிப்படையில் மிருகங்களின் வாழ்க்கை போன்றதாகும். ஆனால் தமது பாதுகாப்பு கருதி சர்வதேச ரீதியாக தமக்கிடையில் ஐக்கியப்படல் வேண்டும் என எண்ணுகின்றார்கள். ஒழுக்கக் கேடானது, தீயது என்பவற்றிலிருந்து நல்லது நேர்மையானது எனக் கருதப்படுகின்றவைகளை தரம் பிரித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதர்களிடம் காணப்படுகின்றது. ஆயினும் ஒழுக்கமற்றவர்களாகவே மனிதர்கள் வாழ்கின்றார்கள். சமூகத்தில் நல்லதை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்படுவதால் தமது ஒழுக்கமற்ற பண்பை மனிதர்கள் மறைக்கின்றார்கள் என மாக்கியவல்லி வாதிடுகின்றார்.

மனிதன் சமூக விரோதியாகவும், நேர்மையில்லாத் தன்மை கொண்டவனாகவும்,அராஜகம், பணப்பேராசை, காமவெறி போன்ற குணாம்சங்கள் கொண்டவனாகவும் காணப்படுகின்றான். சொத்துக்களை கைப்பற்றிக் கொள்வதற்காக தனது தந்தையினை கூட கொலை செய்வதை ஏற்றுக் கொள்ளுகின்ற மன உணர்வு கொண்டவனாக மனிதன் காணப்படுகின்றான். மனிதனது நாட்டமெல்லாம் அதிகாரம், சொத்து, புகழ் இம்மூன்றினையும் எவ்வாறான வழிவகைகளை பின்பற்றியாவது தேடுவது, அடைவது என்பதாகவே உள்ளது. இதனால் மனிதன் ஆக்கிரமிப்பு, சட்ட விரோதமாக கைப்பற்றுதல், போன்ற மன உணர்வினால் தூண்டப்படுகின்றவனாக காணப்பட்டான். மனித வாழ்க்கை அராஜகம், முரண்பாடு என்பவற்றினால் தீர்மானிக்கப்பட்டன. வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு வரையறையற்ற விருப்பங்களை, தேவைகளை, நிறைவேற்ற வேண்டியிருந்தது. மக்களின் சந்தோசமான மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக மாறியது. இது சமூக வாழ்க்கையில் அதிருப்தியை ஏற்படுத்த சமூக முரண்பாடு, அராஜகம் என்பன முதன்மையடையலாயிற்று என மாக்கியவல்லி கூறுகின்றார். மனிதனிடம் நேர்மையினையும், நீதியையும் அடிப்படையில் ஏற்படுத்த வேண்டுமாயின் ஒழுக்கம் நிறைந்த ஆட்சியாளனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இவ்வாட்சியாளன் மனிதர்களுக்கிடையில் பலமும், துணிவும் உள்ள தலைவனாகவும், ஆட்சியாளனாகவும், உருவாக வேண்டும் என மாக்கியவல்லி வாதிடுகின்றார்.

இளவரசனும், ஆட்சிக்கலையும்

வரலாற்றிற்கு ஊடாகவே மாக்கியவல்லி தனது சிந்தனைகளை முன்வைக்கின்றார். வரலாறு என்பது அவருக்கு கற்றுக் கொடுக்கும் ஆசானாக காணப்பட்டது. இதனால் வரலாற்றினை விரும்பிக் கற்கின்றவராக இவர் காணப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நிகழும் என்பதற்கு அப்பால் எதிர்காலத்திற்கான முன்னோக்கிய பாய்ச்சலாகும். வரலாற்று மாற்றங்கள் அபிவிருத்திப் பாதையின் படிக்கற்களாகும் என்பது இவரது கருத்தாகும். வரலாறு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்துடனும் தொடர்புடையது என்பதால் ஆட்சியாளனின் ஒவ்வொரு செயற்பாட்டுடனும் வரலாற்றினை தொடர்புபடுத்துபவராக மாக்கியவல்லி காணப்படுகின்றார்.

ஆட்சியாளனின் சட்டங்கள் அரசியலுக்கு ஆரோக்கியத்தினையும், தெளிவினையும், தருவதாக இருக்க வேண்டும். ஊழல் கொண்ட சமுதாயம் ஒரு போதும் தானாகத் திருந்தமாட்டாது. எனவே அதனை திருத்துவதற்கு ஆட்சியாளனே முயற்சி எடுக்க வேண்டும். வெற்றிகரமான அரசு ஒன்றினை உருவாக்க தனிமனிதனே முயற்சிக்க வேண்டும். மக்களின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டே சட்டங்களும், ஆட்சியும் உருவாக்கப்படல் வேண்டும். ஆட்சியாளன் புதிய அரசை உருவாக்கவும்,பழைய அரசை புதிப்பிக்கவும், பழைய அரசாங்கத்தினை புதிப்பிக்கவும் முயற்சிப்பவனாக இருக்க வேண்டும். ஆட்சியாளன் அரசை உருவாக்குகின்ற கலைஞன் மட்டுமல்ல. சமுதாயத்தினை, பொருளாதாரத்தினை,சமயத்தினை உருவாக்குகின்ற கலைஞனாகவும் இருக்க வேண்டும். பலமான அரசு ஒன்று உருவானால்த்தான் பொதுவிவகாரங்களில் மக்கள் பங்குபற்ற முடியும். குடியரசு ஒன்றில் தான் தாராண்மை என்பது சாத்தியமானதாகும். நாட்டுபற்று உள்ளவர்கள் தான் உண்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்களால் தான் தாராண்மை பாதுகாக்கப்படும். அரசு அயலவர்களை தொடர்ந்து அவதானித்து வரவேண்டும். அயலவர்களிற்குள் அரசின் குறிப்பிட்ட எதிரி காணப்படுவான். இவ் எதிரியை அழிப்பதற்காக அரசு தனது அதிகாரத்தினையும், நிலப்பரப்பினையும் அதிகரிக்க கட்டாய முயற்சி செய்ய வேண்டும். இவ்விடத்தில் அரசை மாக்கியவல்லி வரைவிலக்கணப்படுத்தும் போது “பாதுகாப்பினைப் பேணுவதற்காக பலத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டதே அரசு” என்கின்றார்.

அரசு பலம் பெறுவதற்கு இராணுவத்தின் முக்கியத்துவத்தினை மாக்கியவல்லி எடுத்துக் காட்டுகின்றார். சிறப்பானதும், பலமானதுமான அரசு மக்கள் இராணுவத்தினை கொண்டிருக்குமாயின் அது வெற்றிகரமாக செயற்படமுடியும். அரசு பலம் பெறுவதற்கு மக்கள் இராணுவ அமைப்பை சிறப்பாக கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் இராணுவம் அரசு ஒன்றின் பிரதான தூணாகும். இதற்காக மக்களில் 17 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி வழங்கப்பட வேண்டும். இவர்கள் இராணுவ நுட்பங்கள் யாவும் கற்றவர்களாகவும், உளவியல் ரீதியாக எவ்வேளையிலும் யுத்தத்தினை சந்திக்க தயாரானவர்களாகவும் இருக்க வேண்டும்.

திறமை வாய்ந்ததும், சிறப்பான ஒழுக்கம் நிறைந்ததும், கீழ்படிவினைக் கொண்டதும், ஆயுதங்களைக் கொண்டதுமான இராணுவக் கட்டமைப்பினை உருவாக்கி பராமரிக்க வேண்டியது ஆட்சியாளனின் கடமையாகும். மிகவும் சிறப்பாக பயிற்றப்பட்ட இராணுவத்தினை கொண்டிருக்கும் அரசு, தனது அயலவர்களிலிருந்தும் ஏனைய ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட அரசுகளிலிருந்தும் எழும் அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும் என மாக்கியவல்லி ஆலோசனை கூறுகின்றார். மாக்கியவல்லி இது தொடர்பாக மேலும் கூறும்போது “ ஒவ்வொரு அரசினதும் பிரதான அடித்தளமாக சிறப்பான சட்டங்களும், சிறப்பான ஆயுதங்களுமே இருக்க வேண்டும். அரசு ஒன்று சிறப்பான சட்டங்களினையும், சிறப்பான ஆயுதங்களினையும் கொண்டிருக்காவிட்டால் எங்கே சிறப்பான சட்டங்களும் ஆயுதங்களும் காணப்படுகின்றனவோ அதனை தவிர்க்கமுடியாது பின் தொடர வேண்டி ஏற்படும்” என்கின்றார்.

அதிகாரமும் ஆட்சியாளனும்

மாக்கியவல்லி இளவரசனுக்கு அதிகாரத்தினை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்குகின்றார். ஆட்சியாளன் பெருந்தன்மையுடனும் தாராண்மைச் சிந்தனையுடனும் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். எப்பொழுது எது அவசியமோ அதனை வெளிப்படுத்தக் கூடிய பலமுடையவனாக ஆட்சியாளன் இருக்க வேண்டும். அரசு ஒன்றினை பலம், பாதுகாப்பு, திறமை, நீடிப்பு என்பவற்றுடன் ஆளுவது இளவரசனின் பொறுப்பாகும். எவ்வேளையிலும் பிறரைவிட உயர்நிலையினை எடுக்கக் கூடியவனாகவும், எதனையும் தொடக்கி வைக்கக் கூடியவனாகவும் ஆட்சியாளன் இருக்க வேண்டும். பயம் என்பது தெரியாதவனாக இருக்க வேண்டும். பயம் தெரியாதவனாக இருந்தால்தான் ஆட்சியாளன் மீது பயபக்தி மக்களுக்கு ஏற்படும். ஆளுவதற்கான வழிமுறைகளை தெரிவு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்துக்களையும், பெண்களையும் தனக்காக தேடுவதை விரும்பக் கூடாது. இவைகளில் ஆட்சியாளன் நாட்டமுள்ளவனாக இருந்தால் மக்களின் ஆதரவை இழப்பதுடன் மக்களில் தங்கியிருக்க வேண்டியும் ஏற்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி நற்குணத்துடனும், கொடூரத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். தனக்கு உதவியாக அலுவலர்களையும், ஆலோசகர்களையும், தெரிவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தனக்கு கீழ்படிய மறுப்பவர்களை கட்டுப்பட மறுப்பவர்களை தெரிவு செய்யக் கூடாது.

ஆட்சியாளன் தனது நிலப்பிரதேசத்தினை விஸ்தரிக்க முயற்சி செய்த வண்ணம் இருக்க வேண்டும். பலவீனமான அரசுகளை தாக்குகின்றவனாகவும், பலவீனமான அரசுகளுடன் கூட்டுச் சேர்ந்து ‘அதிகாரச் சமநிலையினை’ பேணுகின்றவனாகவும் இருக்க வேண்டும். ஆட்சியாளன் ஒரு போதும் தனித்து இயங்குகின்ற கொள்கையினை பின்பற்ற முயற்சிக்கக் கூடாது. கூட்டாக இயங்குகின்ற கொள்கையினை எப்போதும் பின்பற்றுகின்றவனாக இருக்க வேண்டும். உள்நாட்டு மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், ‘நடுநிலை வகித்தல்’ என்ற கொள்கையினை உருவாக்கி பின்பற்றுதல் என்பது சாத்தியமற்றதாகும். எனவே தான் மாக்கியவல்லி ‘சிறப்பான பக்கத்தில் சாய்ந்திருப்பது எப்போதும் சிறப்பானது’ என்ற கருத்தினை முன்வைக்கின்றார்.

மாக்கியவல்லி சட்ட ரீதியற்ற வன்முறைகளை உத்தியோகபூர்வமாக அழிப்பதற்கான ஆலோசனைகளையும் இளவரசனுக்கு வழங்குகின்றார். இளவரசன் இரக்கமற்றவனாக இருக்க வேண்டும். இது தொடர்பாக மாக்கியவல்லி கூறும் போது “ சிங்கத்தைப்போல் பலத்துடனும் நரியை போல் தந்திரத்துடனும்” இளவரசன் செயற்படல் வேண்டும்.

துணிவு, வீரம், தந்திரம், கூர்மையான மதிநுட்பம் போன்ற பண்புகள் கொண்டவனாக இளவரசன் காணப்படல் வேண்டும். இவைகள் யாவும் அதிகாரப் போராட்டத்தில் ஒரு ஆட்சியாளனுக்கு அவசியமானதாகும். ஆட்சியாளன் போதிய துணிச்சலுடன் தனது எதிரியுடன் யுத்தம் புரிய வேண்டும். பொறிகளை வைக்கக் கூடிய தந்திரம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். துணிவு, தந்திரம், இவைகள் இரண்டும் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு ஆட்சியாளனுக்கு அவசியமானதாகும்.

மாக்கியவல்லியின் கோட்பாடுகள் வரலாற்றினையும் உளவியலையும் அடிப்படையாகக் கொண்டதாகும். மாக்கியவல்லியின் அவதானத்தின்படி எல்லாம் சூழ்நிலைகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. மனமாற்றங்களுக்கான உந்துதலை உளவியலே கொடுக்கின்றன. அதாவது துணிவுடன் செயற்படுவதா? தந்திரத்துடன் செயற்படுவதா? என்பதை உளவியல் அம்சங்களே தீர்மானிக்கின்றன.

ஆயினும் மாக்கியவல்லி மனிதனின் உளவியல் தொடர்பாக கூறும் கருத்துக்கள் விவாதத்திற்குரியதாகும். மனிதன் தொடர்பாக தவறான கருதுகோள் ஒன்றினை உருவாக்கி நிரூபிக்க மாக்கியவல்லி முற்படுகின்றார் என்ற விமர்சனங்கள் உள்ளன. மனிதனுடைய நற்குணங்களை இனங் காணத்தவறும் மாக்கியவல்லி யுத்தத்தினாலும், ஆயுதமுனையிலும் ஆட்சி செய்ய முற்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாத சர்வாதிகாரக் கருத்தாகவே உள்ளது.

மாக்கியவல்லி அரசையும், ஆட்சியாளனையும் பலம், அதிகாரம் என்ற நோக்கிலேயே பார்க்கின்றார். இவரைப் போன்று இவருக்குப் பிற்பட்ட காலத்திலும் அரசையும், ஆட்சியாளனையும் அதிகார நோக்கில் பலர் பார்த்துள்ளனர்.

17ம் நூற்றாண்டில ஹெப்ஸ், ஹரிங்டன் (Hobbes, Harrington) போன்றோர்களும், 18ம் நூற்றாண்டில் ஹமில்டன், மடிசன் (Hamilton, Madison) போன்றோர்களும், 19ம் நூற்றாண்டில் மொஸ்கா, பரெரோ (Mosca, Pareto) போன்றோர்களும் 20ம் நூற்றாண்டில் லாஸ்வெல், கப்லன், ரோபேர்ட் டால் (Lasswell, Kaplan, Robert Dhal) போன்றோர்களும் அதிகாரத்தினை மையமாகக் கொண்டே தமது சிந்தனைகளை உருவாக்கியிருந்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாக்கியவல்லியின் சிந்தனைகள் இரு பெரும் சர்வாதிகாரிகளால் பின்பற்றப்பட்டிருந்தன. இத்தாலியினை 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்திருந்த முசோலினி (Mussolini) “ நான் மாக்கியவல்லியின் இளவரசனை நம்புகின்றேன். அது ஆட்சியாளனுக்கான உயர் வழிகாட்டியாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார். சீனாவின் மாக்சிச புரட்சியாளராகிய மாவோ சேதுங் துப்பாக்கி குழலிலிருந்தே அதிகாரம் பிறக்கின்றது (Power comes from the barrel of a gun) என்று கூறுவதன் மூலம் யுத்தத்தினையும், பலத்தினையும் அதன்மூலம் அதிகாரத்தினை தேடுகின்றவராகவும் காணப்பட்டிருந்தார். ஆனால் யுத்தங்கள் பெரும் அழிவினையும், இரத்தக்களரியினையுமே ஏற்படுத்தியிருந்தது. யுத்தமும் ஆயுதமும் உலகை ஆட்சி செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும்.



இத்தாலிய சாணக்கியன் மாக்கியவெல்லி 
August 03, 2017


நவீன அரசியல் சிந்தனைகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர், மாக்கியவல்லி (Niccolo Machiavelli). இவர், இத்தாலியிலுள்ள பிளாரன்சில், 1469ம் ஆண்டில் பிறந்தார். 1498ல், பிளாரன்ஸ் குடியரசில் சேர்ந்து, சில முக்கிய அதிகார பொறுப்புகளை வகித்தார். பிளாரன்ஸ் நாட்டின் தூதுவராக பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தார். இத்தாலியிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்தார்.

பிளாரன்ஸ் குடியரசு, 1512ம் ஆண்டில் கவிழ்க்கப்பட்டது. ஆட்சியைக் கைப்பற்றிய மெடிசி மரபினர், மாக்கியவல்லியை சதிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தனர். எனினும், மன்னிப்பு கேட்டு மன்றாடியதால், அதே ஆண்டில் அவர் விடுதலையடைந்தார். அதன் பின்னர், பிளாரன்சுக்கு அருகிலிருந்த சான்காசியோனோ என்ற ஒரு பண்ணையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். 

மாக்கியவல்லியின் இறுதிக்காலம் வரை, இத்தாலி பல சிறிய சிற்றரசுகளாகப் பிளவுபடடுக் கிடந்தது. அதே சமயம், பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து போன்றவை ஒருங்கிணைந்த வலிமையான நாடுகளாக விளங்கின. இத்தாலி பண்பாட்டில் உயர்ந்து விளங்கிய போதும், ஏன் பலமிக்க நாடாக உயர முடியவில்லை என்ற கேள்வி மாக்கியவல்லியைத் தீவிரமாக யோசிக்க வைத்தது. இதற்குரிய தனது பதிலை, அடுத்த 14 ஆண்டுகளில், ஏராளமான புத்தகங்களாக எழுதினார். அவற்றில், 'இளவரசன்' (The Prince), 'டைட்டஸ் லிவியசின் முதல் பத்து ஏடுகளின் மீதான ஆய்வுரை', 'போர்க்கலை' 'பிளாரன்ஸ் வரலாறு' போன்றவை புகழ்பெற்றவை.

‘ஓர் அரசன், தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னால், வஞ்சகம், சூழ்ச்சி, பொய் போன்றவற்றை கையாளத் தயங்கக்கூடாது; கருணையே இல்லாமல் மக்களை அடக்க வேண்டும்’ என்பது மாக்கியவல்லியின் அடிப்படை அரசியல் தத்துவம். அவருடைய புத்தகங்கள் வழியாக, சர்வாதிகார அரசியல் கருத்துகளுக்கு வடிவம் அளித்தது, அன்றைய அறிஞர்கள் வட்டத்தில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இதனால், பிற அறிஞர்கள் மாக்கியவல்லியை, 'மனித உருக்கொண்ட பேய்' என்று வசை பாடினர். 

எனினும், அவருடைய சிந்தனைகள், நவீன அரசியல் உலகில் இன்றளவும் தாக்கம் செலுத்தி வருவதை மறுக்க முடியாது. இவருடைய தத்துவ நூல்கள் அனைத்தும் படிப்பதற்கு மிக எளிதானவை. சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி, மாக்கியவல்லியின் நூலைத் தன் தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டே உறங்கினாராம். ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் போன்றோரும் மாக்கியவல்லியால் கவரப்பட்டவர்கள்தான். 1527ல் மாக்கியவல்லி தனது 58வது வயதில் காலமானார்.



‘மாக்கியவல்லியம்’

அரசியலில், தந்திரம் மற்றும் மோசமான சிந்தனைகளை குறிக்க மாக்கியவல்லியம் (MACHIAVELLISM) என்ற வார்த்தை பயன்படுகிறது. மாக்கியவல்லியின் சிந்தனைகளில் சில:
அதிகாரத்தை அடைய விரும்பும் ஆட்சியாளர், நியாய தர்மத்தைப் பார்க்கக் கூடாது.
ஆட்சியைப் பிடித்ததும், ஓர் அரசன் எல்லாக் கொடுமைகளையும் (மக்களின் எதிர்கால நன்மைக்காக) உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும். படிப்படியாக செய்யக்கூடாது. ஆனால், குடிமக்களுக்கான நன்மைகளை மட்டும் சிறிது சிறிதாகத்தான் செய்ய வேண்டும்.
அன்புக்கு ஆட்படுவதைவிட, பயத்தை ஏற்படுத்துவதே சிறந்தது. அன்பெனும் சங்கிலி அறுந்துவிடும். ஆனால், தண்டனை பயம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தேவைப்பட்டால், ஆட்சியாளர் நம்பிக்கை துரோகம் செய்யலாம். அதை நியாயப்படுத்த ஏதேனும் காரணங்களைச் சொன்னால், மக்கள் நம்பிவிடுவார்கள்.
ஆட்சியாளர் நடைமுறையில் சீற்றங் கொள்பவராகவும், ஈவு இரக்கமற்றவராகவும் இருக்க வேண்டும்.

Saturday, 6 January 2018

GALIL GIBRAN , POET,PHILOSOPHER BORN 1883 ,JANUARY 5





GALIL GIBRAN , POET,PHILOSOPHER 
BORN 1883 ,JANUARY 5





கலீல் ஜிப்ரான் (Khalil Gibran, xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,[1] அரபு جبران خليل جبران , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் 

வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]

லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். [2] அவரது புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். இதனால் குடும்பத்தின் எதிர்காலம் கருதி தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார் கலீல் ஜிப்ரானின் தாய். பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. 1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக் கல்வியும் பயின்றார்.[3]

1902 இல் மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1904-ல் பாஸ்டனில் நடந்த ஓவியக் கண்காட்சியில், பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை மேரி எலிசபெத் ஹாஸ்கெலைச் சந்தித்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ஹாஸ்கலுடனான அவருக்கு நட்பு ஏற்பட்டது. கலீல் ஜிப்ரானின் ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது. 1905 முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய ‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. [4]

1923 இல் ஜிப்ரான் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்) எனும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இறப்பு[மூலத்தைத் தொகு]
காசநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகளால் 1931 ஏப்ரல் 10 இல் தனது 48 ஆவது வயதில் கலீல் ஜிப்ரான் மரணமடைந்தார்.


ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட கலீல் ஜிப்ரான் பிறந்த தினம் இன்று (ஜனவரி 6). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# லெபனான் நாட்டில் பஷ்ரி என்ற நகரில் பிறந்தவர். இவரது 12-ம் வயதில் குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகள் அறிந்தவர். ஓவியத்தில் இவருக்கு இருந்த திறனை அறிந்த அவரது ஆசிரியர்கள் இவரை பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.


# அப்போது இவர் வரைந்த படங்களை ஒரு வெளியீட்டாளர் தனது புத்தகங்களின் அட்டைகளில் பயன்படுத்திக்கொண்டார். இளம் வயதிலேயே இலக்கிய உலகிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.

# 15 வயதில் பெய்ரூத் சென்று உயர் கல்வி பயின்றார். அங்கே கல்லூரி இலக்கிய பத்திரிகையை நண்பர்களுடன் சேர்ந்து வெளியிட்டார். கல்லூரி-கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிப்ரான் இலக்கிய, அரசியல் புரட்சியாளர் என்று கருதப்பட்டார்.

# 1902-ல் பாஸ்டன் திரும்பினார். இவரது கட்டுரை வடிவிலான கவிதைகள் அடங்கிய ‘தி ப்ராஃபெட்’ வெளிவந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்றார்.

# இதன் பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. இது 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அமெரிக்காவில், 20-ம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாக விற்பனையான புத்தகமாகத் திகழ்ந்தது.

# கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் இவரது புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின. அரேபிய, ஆங்கில, பாரசீக மொழிகளில் கவிதை தொகுப்புகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

# இவரது படைப்புகளை சிரத்தையுடன் தேடிக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்த பெருமை இவரது காரியதரிசி பார்பரா யங்கையே சாரும். ஜிப்ரான் தனது முற்போக்கு சிந்தனைகள் காரணமாக மதகுருமார்கள், அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளானவர். ‘ஒட்டுமொத்த உலகமும் எனக்கு தாய்நாடுதான். அனைவரும் என் சக குடிமகன்கள்’ என்று இவர் கூறுவார்.

# உலகின் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. லெபனானில் ஜிப்ரான் அருங்காட்சியகத்தில் இவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவரது புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகித்துவருகிறது.

# இவரது படைப்புகள் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. வாழ்க்கை சம்பந்தமான தீவிர சிந்தனைகள் கொண்ட இவரது படைப்புகள் உலகம் முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

# உலகின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்தாளர், ஓவியர், தத்துவவாதி, கவிஞர். உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டுவரும் கலீல் ஜிப்ரான் 48-ம் வயதில் மரணமடைந்தார்.


துன்பங்களைப் படைப்பாக்கத் தெரிந்தவர்
விவரங்கள்
எழுத்தாளர்: க.பஞ்சாங்கம்

தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்து முறையாகப் படிக்கிற பெரும்பாலான மாணவர்களுக்கு விசித்திரமான பழக்கமொன்று அவர்கள் அறியாமலேயே ஒட்டிக் கொள்வதைக் கவனித்து வந்திருக்கிறேன். நானே ஒரு தமிழிலக்கிய மாணவன் என்பதோடு ஏறத்தாழ 38 ஆண்டுகள் தமிழிலக்கியம் படிக்கிற மாணவர் பட்டாளத்தோடேயே வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதால் இந்த விசித்திரப் பழக்கத்தைத் தொடர்ந்து கவனித்து உறுதிப்படுத்தி இருக்கிறேன். என்ன அந்தப் பழக்கமென்றால் ‘காதல் கவிதை’ எழுதத் தொடங்குவதுதான். மனமெனும் புரியாப் பொருளைப் பாடாய்ப்படுத்தி அவஸ்தைக்குள் தள்ளி நையப் புடைக்கும் காதலெனும் நெருப்புச் சுவையில் துளியளவு அனுபவமும் இல்லாமல், அது குறித்துக் கவிதை எழுதத் தொடங்கி விடுவதை விசித்திரமானது எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

khalil-gibran
காவி ஆடை வேண்டாம்
கற்றைச் சடை வேண்டாம்
பாவித்தாலே போதும்
பரம நிலை எய்தலாமே!

என்பார் பாரதியார். அதுபோல தமிழிலக்கியம் படிக்கிற மாணவர்கள் தங்களைக் காதலர்களாகப் பாவித்துக் கொள்வது என்பது எளிமையான ஒன்றாக அமைந்து விடுகிறது. காரணம், சங்க இலக்கியம் தொடங்கிப் பாரதிதாசன் வரைக்கும் அது பக்திப் பாடலாக இருந்தாலும் கூட காதல் என்கின்ற ஆட்டிப் படைக்கும் உணர்ச்சியின் மேல் கட்டப்பட்ட கவிதைகளைத்தான் அவர்கள் பாடமாகப் படிக்கிறார்கள். பாடம் நடத்துகிற பேராசிரியர்களும் அதை ஒரு வித்தாரமாக விதந்து ஓதுவார்கள். தமிழர்களுக்குக் காதலும் வீரமும் இரண்டு கண்களெனக் கொண்டாடிக் கூத்தாடுவார்கள். பிறகென்ன? அந்த வாலிப மனசு மிக எளிதாகக் காதலனாகத் தன்னைப் பாவித்துக் கொள்கிற மனப்பான்மைக்கு உள்ளாகிவிடும். விளைவு காதல் கவிதைகள் வெளிப்பாடு. நானும் கூட அப்படித்தான் காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கும் போது இன்று வேடிக்கையாக இருக்கிறது. எனக்குள் தமிழிலக்கியப் பாதிப்போடு காண்டேகர், தாகூர், வால்ட் விட்மன் என்று மொழிபெயர்ப்பில் பிறந்த காதல் எழுத்துக்களோடும் பரிச்சயம் ஏற்பட்டு ஒருவிதமான கற்பனாவாத மனிதனாக என் வாலிபப் பருவத்தில் இருந்திருக்கிறேன். எனவே மிக எளிதாக உணர்ச்சி வசப்பட்டு உணர்ச்சிகரமான வார்த்தைகளுக்குள் என்னை இழந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் மராட்டிய மொழி எழுத்தாளரான காண்டேகர் எழுத்துக்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழிபெயர்ப்பில் ஓடி ஓடிப் படித்திருக்கிறேன். அந்தப் பாதிப்பில் இப்படி ஒரு கவிதை:

ஒரு தடவை கூடக்
காதலிக்காதவன்
பன்றிப்பால் குடித்தே வளர்ந்திருக்க 
வேண்டுமென்று
பம்பாய்க்காரன்
ஒருவன் சொன்னான்;;.

ஐயோ…! 
அந்தப் பால் குடித்தே- நான்
வளர்ந்திருக்கக் கூடாதா?

பாரதி கூறியது போல “பாவித்துக் கொள்வதுதான்” யதார்த்தத்தைவிட ஆற்றலோடு விளங்குகிறது. மனித வாழ்வு வரையும் கோலங்களின் அழகுதான் எத்தனை? எத்தனை?

இவ்வாறு பாவித்துக் கொள்கிற பழக்கத்தை என்னுள் பெரிதும் வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில்தான் கவிஞர் மீரா மூலம் உலகப் புகழ்பெற்ற அராபியக் கவிஞர் கலீல் ஜிப்ரான் (1883-1931) எனக்கு அறிமுகமானார். தமிழ் வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு புதுக்கவிதை மிகச்சிறப்பாக இருந்து விட்டால், அக்கவிதைக்கான மூலத்தை கலீல் ஜிப்ரானிடமும் தாகூரிடமும் காண்டேகரிடமும் தேடிக் கண்டுபிடிக்கும் பழக்கும் தமிழர்களிடையே நிலவியது. அப்படியொரு கட்டுரையை ‘தாமரை’ இதழில் வாசித்த நினைவிருக்கிறது. அந்த அளவிற்கு ஜிப்ரான் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் மீரா மூலம் ஜிப்ரானின் புகழ்பெற்ற “புரோக்கன் விங்க்ஸ்” (Broken Wings) என்ற ஆங்கில நூல் என் வாசிப்பிற்குக் கிடைத்தது. நான் ஆங்கில மொழியில் முழுமையாக வாசித்த முதல் புத்தகமும் அதுதான். அந்நூல் குறித்து எனக்குள் சென்றுவிழும்படிச் சொல்லப்பட்ட மதிப்பீடுகள் என்னைப் பெரிதும் தூண்டிக் கொண்டே இருக்க பக்கத்தில் லிப்கோ அகராதியை வைத்துக் கொண்டு வாசித்து முடித்த அருமையான புத்தகம் அது. 


ஒரு கிராமத்தானுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில மொழி அறிவோடு வாசிக்கும் போதே வசன கவிதை போல அமைந்த அந்த உண்மைக் கதை, கற்பனாவாத மனநிலையில் இருந்த எனக்குள் புகுந்து பலநாள் படாதபாடு படுத்தியது. நானே காதலித்துத் தோற்றது போல ஓர் உணர்வில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டேன். பாதி புரிந்தும் பாதி புரியாமலும் வாசிக்கிற வாசிப்பு அனுபவம் எத்தகைய வீச்சோடு உள்ளே கிடந்து உயிரைக் குடையும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

பின்னால் 1988-இல் முழுமுதலோன் (தி.க.சி அவர்களின் மகன்-கணபதி) மொழிபெயர்ப்பில் “முறிந்த சிறகுகள்” என்று அது வெளிவந்தது; அப்போது வாசிக்கும் போதும் எனக்குள் ஊறிய துக்கத்திற்கு அளவில்லை; அப்போது என் கணக்கில் இரண்டு ஆண் குழந்தைகள் சேர்ந்து விட்டார்கள் என்பதையும் சேர்த்து எண்ணிப் பார்த்தால் ஒரு மொழிவழிப்பட்ட படைப்பின் மூலம் எத்தகைய திருவிளையாடல்களை எல்லாம் நிகழ்த்திக் காட்டமுடியும் என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட வேண்டியதிருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதுவதற்காக இப்போதும் படித்துப் பார்க்கிறேன். இப்போது மூன்று பேரப் பிள்ளைகள். ஆனாலும் அந்தப் படைப்பு இன்றைக்கும் புத்தம் புதிய வார்த்தைகள் போல எனக்குள் மளமளவென்று தங்கு தடையில்லாமல் பாய்ந்து பரவுகின்றது.

கவிஞர், ஓவியர், புனைகதையாளர், சிற்பி, நாடக ஆசிரியர், தத்துவ அறிஞர் என்று பன்முகங் கொண்ட ஜிப்ரானின் மொழி, நமக்கு இரண்டு மொழி தாண்டி வந்து சேர்கிறது. மூலமொழி வாசகர்களுக்கு அது என்னவாகத் தோன்றுகிறதோ தெரியவில்லை; ஆனால் இரண்டு மொழி தாண்டி வரும் போது மூலத்திலிருந்து எவ்வளவோ தூரம் விலகி இருக்கலாம் என்றாலும் இப்படி விலகி வருவதனாலேயே தனியான ஒருவகைப்பட்ட ‘மொழிக் கவர்ச்சி’ வந்து கூடுகிறதோ எனச் சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்றைக்கும்கூட தாய்மொழியில் எழுதப்பட்ட நமது சமகாலக் கவிதைகளை வாசிப்பதற்கும் சமகால மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பதற்கும் இடையில் ஏதோ ஒரு மனநிலை புகுந்து மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்குக் கூடுதலான கவர்ச்சி ஊட்டுவதாக எனக்கு அடிக்கடித் தோன்றுகிறது; பரிச்சயம் ஆகிவிடாத தன்மை, புரியாத் தன்மை மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு இருப்பதால் இப்படி நிகழ்கிறதோ என்னமோ!

“முறிந்த சிறகுகள்” சொந்த சோகக்கதை. அந்தச் சோகம் நடந்த போது ஜிப்ரானுக்கு வயது பதினெட்டு; எனவே அந்த வயதுக்குரிய வேகத்தோடு மொழியும் வேகமாக வந்து விழுகிறது. மொழியைச் சீவி சீவிக் கூர்மையாக்குவது கவிதையாக்கத்தின் முதல்படி; அதுவே முடிவானதும்கூட. ஆங்கில மொழியோடு இந்திய மொழித்தனத்தையும் குறிப்பாக மலையாள மொழித்தனத்தைக் கலந்து பிசையும் போது அருந்ததிராய்க்கு “காட் ஆப் சுமால் திங்க்ஸ்” எழுத ஒரு புதிய மொழி கிடைக்கிறது. கலீல் ஜிப்ரான் எழுத்து அனைத்தும் அப்படியொரு புதிய மொழியைக் கண்டுபிடித்துச் சமைக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.

ஜிப்ரானின் எழுத்தின் ஒவ்வொரு அசையிலும் துக்கம் அதன் கனத்தோடு கசிந்து கொண்டிருக்கும். ‘முறிந்த சிறகுகளில்’ அவரே ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார் காதலி சொல்வது போல:-

ஒரு கவிஞன் தனது துயர எண்ணங்களைக் காதலிப்பது போல
நீங்கள் என்னைக் காதலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

எனவே ஜிப்ரானுக்குள் துக்கம் என்பது ஒரு வரமாக இருந்து வினைபுரிந்துள்ளது. புலம்பெயர்ந்த நியூயார்க் நகரத்தில் 1931-ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தனது 48-வது வயதில் எலும்புருக்கி நோயினால் (அந்தக் காசநோய்க்கு அப்பொழுது மருந்து கண்டுபிடிக்கவில்லை) இறந்து போன ஜிப்ரான் இன்றைக்கு லெபனான் என அறியப்படும் நாட்டில் 1883 ஜனவரி 6-ஆம் தேதி பிறந்தார். தன் தாய் கமிலாவிற்கு 30-வயதாக இருக்கும் போது தாயின் மூன்றாவது கணவனான கலீல் என்பானுக்குப் பிறந்தார். தாத்தா ஒரு பாதிரியார். தனது குடும்பத்தின் ஏழ்மையினால் சிறுவர் பருவத்தில் கல்வியைப் பெறமுடியாமல் போன ஜிப்ரான் தனது வீட்டிற்கு வருகை தரும் பாதிரியாரான தாத்தா மூலம் பைபிளையும், அராபிக், சிரியாக் ஆகிய மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஜிப்ரானுக்கு எட்டு வயது வாக்கில் அவருடைய தந்தை ஊழல் குற்றத்திற்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவருடைய குடும்பச் சொத்துக்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகைய கையறு நிலையில் குடும்பம் 1895-இல் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தது. அமெரிக்காவில் அவருடைய தாய், வீடு வீடாகச் சென்று தைக்கிற தையற்காரியாகவும், நாடா, துணி மணி விற்பவராகவும் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளார்.

அமெரிக்காவில்தான் ஜிப்ரான் 1895-லிருந்து முறையாகப் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியுள்ளார். கூடவே ஒரு கலைப் பள்ளியிலும் சேர்ந்து பயின்றுள்ளார். இந்நிலையில் மேற்குலக அழகியல் பண்பாட்டைவிடத் தன் மண்ணின் பண்பாட்டையும் மரபையும் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கில் அவருடைய தாய் மீண்டும் ஜிப்ரானை லெபனானுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். அப்பொழுது அவருக்கு வயது 15. பல ஆண்டுகள் கழித்து உயர்கல்வியை பெய்ரூட்டில் முடித்த பிறகு 1902-இல் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்பினார். அவர் திரும்புவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்புதான் அவருடைய சகோதரி சுல்தானா காசநோயினால் தனது 14 வயதில் இறந்திருந்தார். ஜிப்ரான் அமெரிக்காவிற்கு வந்த அடுத்த ஆண்டில் அவருடைய சகோதரர் பீட்டர் அதே நோயினால் இறந்தார். தாய் புற்றுநோயினால் இறந்தார். சகோதரி மரியன்னாதான் ஜிப்ரானைக் கவனித்துக் கொண்டார். அவள் ஓர் ஆடை அலங்காரக் கடையில் பணியாற்றினாள். கலை மனம் மிக்க ஜிப்ரானுக்குள் இத்தகைய வாழ்க்கை கொடுத்த துக்கம்தான் அவர் எழுத்துக்களுக்குள் துன்பமாகவும் தத்துவமாகவும் கேலியும் கிண்டலுமாகவும், விளையாட்டாகவும் விரவிக் கிடக்கின்றன. 1923-இல் ஆங்கிலத்தில் எழுதிய தீர்க்கதரிசி (The Prophet) என்ற நூல் அவருக்கு உலகப் புகழ் வாங்கித்தந்தது.

1912-இல் அராபிக் மொழியில் வெளிவந்த “முறிந்த சிறகுகள்” என்ற படைப்பில் காணப்படும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்குள் சோகத்தை மீட்டுவதாக அமைந்துள்ளன. ‘முறிந்த சிறகுகள்’ முன்னுரையை இப்படித்தான் தொடங்குகிறார்:-

காதல் தன் மந்திரக் கதிர்களால் என் கண்களைத் திறந்து என்
ஆன்மாவைத் தன் நெருப்பு விரல்களால் முதல் தடவையாகத் தொட்ட 
போது, எனக்கு வயது பதினெட்டு. 

செல்மா காரமி தன் அழகால் என்
ஆன்மாவை எழுப்பிப் பகல்கள், கனவுகளைப் போலவும் இரவுகள்,
திருமணங்களைப் போலவும் கழிகிற, உயர்ந்த அன்பென்னும் 
தோட்டத்திற்கு இட்டுச் சென்ற முதல் பெண்.
(மொ.பு.முழுமுதலோன்)

காதல் அரும்பிய நெருப்புக்கனல் பறக்கும் அந்தக் காலகட்டத்தில் தன் நிலை எவ்வாறு இருந்தது என்பது இவ்வாறு சித்திரிக்கின்றார்:-

தனிமை துயரத்தின் கூட்டாளி என்பதோடு ஆன்மீக மேம்பாட்டின்
தோழனும் ஆகும். துயரத்தால் தாக்கப்படுகின்ற இளைஞனின் ஆன்மா,
இதழவிக்கின்ற வெள்ளை லில்லியைப் போன்றது. அது தென்றலின் முன்
நடுங்கி, விடியலுக்குத் தன் இதயத்தைத் திறந்து இரவின் நிழல் 
வரும்போது இதழ்களைத் திரும்ப மூடிக்கொள்கிறது. …அவனுடைய
வாழ்க்கை சிலந்தி வலைகளை மட்டுமே காணமுடிகிற பூச்சிகளின்
ஊர்ந்து செல்லும் ஓசைகளை மட்டுமே கேட்க முடிகிற குறுகிய ஒரு
சிறைச்சாலை போன்றதாய் இருக்கும்.

காதலி செல்மா வேறொருவனைக் கைப்பிடித்த நிலையில் காதலன் பேச்சாக வருகிற பகுதிகள், காதலித்தவர்கள் மட்டுமே உணரக்கூடியவைகளாகும்.

காதற் கிண்ணத்திலிருந்து ஒயினை உறிஞ்சிக் குடிக்காதவன் என்ன 
மனிதப் பிறவி? ஆண் பெண் இவர்களின் இதயங்களைத் தரையாகவும்,
இரகசியக் கூடாரமான கனவுகளைக் கூரையாகவும் கொண்ட
கோயிலின் ஒளியூட்டப்பட்ட பீடத்திற்குமுன் பயபக்தியோடு நிற்காத
ஆன்மா என்ன ஆன்மா? ஒருதுளிப் பனியைப் புலர் காலைப் பொழுது
இதழ்களின்மீது ஒரு போதும் தூவாத மலர் என்ன மலர்? கடலுக்குச்
செல்லாமல் தன் போக்கை விட்டுவிட்ட ஓடை என்ன ஓடை?


இப்படி ‘முறிந்த சிறகுகள்’ முழுவதும் காதலும் கண்ணீரும் கலந்து கிடந்து வாசகனைப் படாதபாடு படுத்துகின்றது. கொடுமைக்காரக் கணவனிடம் மாட்டிக் கொண்ட செல்மாவின் குழந்தை இறந்து விடுகிறது; அதை ஜிப்ரான் இவ்வாறு கூறுகிறார்:-

அவன் ஒரு எண்ணத்தைப் போலப் பிறந்தான்; ஒரு பெருமூச்சைப் போல
இறந்தான்; நிழலைப் போல மறைந்தான்.

மகனை இழந்துவிட்ட தாய் சொல்லுகிறாள்:-

என் குழந்தையே! நீ என்னை எடுத்துச் செல்ல வந்திருக்கிறாய்.
கரைக்கு வழிகாட்டும் பாதையை எனக்குக் காட்ட வந்திருக்கிறாய்.
இதோ நானிருக்கிறேன்; என் குழந்தையே! என்னை வழிநடத்து. நாம்
இந்த ‘இருட்குகையை’ விட்டுச் செல்லலாம்.

மறுநாள் ‘ஒரே சவப்பெட்டியில் இரண்டு சடலங்கள்’-

“சவக்குழி தோண்டுபவன் பாப்ளர் மரங்களுக்குப் பின் மறைந்த போது, அதற்கு மேலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. நான் செல்மாவின் கல்லறையின் மேல் விழுந்து அழுதேன்”

என்று ‘முறிந்த சிறகுகள்’ முடியும் போது இதயம் கண்ணீரில் மிதப்பதை எந்த வாசகராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு ஒரு படைபோல ஆயிரம் கரங்களோடு புறப்படும் துன்பங்களைப் படைக்கத் தெரிந்த ஜிப்ரான் அங்கதச் சுவையோடு நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பல குட்டிக் கதைகளையும் எழுதியுள்ளார். நான் சிரித்துச் சிந்தித்த ஒரு கதை, ‘உறக்கத்தில் நடப்பவர்கள்’ என்பதாகும். அந்தக் குட்டிக்கதை இதுதான்:-

நான் பிறந்த அந்த நகரத்தில் ஒரு தாயும் மகளும் வாழ்ந்தார்கள்; அவர்கள் இருவருமே உறக்கத்தில் நடக்கிற ஒருவிதமான நோய்க்கு ஆளானார்கள்.

எங்கும் அமைதி நிலவிய ஒருநாள் இரவு அந்தத் தாயும் மகளும் ஒருவர்பின் ஒருவராக உறக்கத்தில் எழுந்து நடந்தனர்; நடந்து பனி மூடிய ஒரு மலர்த் தோட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

முதலில் தாய் பேசினாள்: இறுதியாய்; இறுதியாய்; கண்டு கொண்டேன்; 
நீதான் என் எதிரி! உன்னால்தான் என் இனிய இளமை 
அழித்தொழிக்கப்பட்டது; எனது அழிவின் மேல்தான் நீ உனது 
வாழ்க்கையை எழுப்பிக் கொண்டாய்; நான் உன்னைக் கொன்றிருக்க
வேண்டும்.

இதைத் தொடர்ந்து மகள் பேசினாள்:-

ஓ! வெறுக்கத் தக்க, சுயநலமிக்க, கிழட்டுச் ஜென்மமே! நீதானே
எனக்கும் எனது சுதந்திர உணர்விற்கும் நடுவில் நின்றாய்! உன்னுடைய
சொந்த பட்டுப்போன வாழ்வின் எதிரொலியைத் தானே எனது வாழ்வாக 
நீ சமைத்தாய்! நீ செத்தொழிய வேண்டியவள்

இப்படி உரையாடல் போய்க் கொண்டிருந்த அந்தக் கணத்தில் ஒரு சேவல் உரக்கக் கூவியது. இரண்டு பெண்களும் விழித்துக் கொண்டனர். உடனே தாய்க்காரி சொன்னாள்:-

அன்புக்குரியவளே! இங்கே நின்று கொண்டிருப்பது என் செல்லமகள்
நீயா?

மகள் பாசம் மிளிர மெதுவாகப் பதில் சொன்னாள்:-

அன்புள்ள அம்மா! ஆமா நானேதான்!
- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8.