Showing posts with label KILLED. Show all posts
Showing posts with label KILLED. Show all posts

Tuesday, 16 March 2021

CATHOLIC NUNS KILLED BY SOVIET TROUPS 1945 FEBRUARY

 


CATHOLIC NUNS KILLED BY 

SOVIET TROUPS 1945 FEBRUARY




Researchers in Poland have discovered the remains of three Catholic nuns killed by Soviet troops toward the end of World War II.

As Sebastian Kettley reports for the Express, a team from the Polish Institute of National Remembrance (IPN), which investigates crimes committed in the country by Nazi and communist forces, uncovered 

The dig marked the culmination of a months-long search for the bodies of seven nuns from the order of St. Catherine of Alexandria. Murdered in 1945, during the Russian Red Army’s “liberation” of Poland and subsequent seizure of power, the sisters were among the hundreds of thousands of Polish civilians targeted by the Soviets during and after World War II.


Per the IPN, archaeologists had previously found the bones of Sister Charytyna (Jadwiga Fahl) and three nuns who’d served as nurses at St. Mary’s Hospital—Sisters Generosa (Maria Bolz), Krzysztofora (Marta Klomfass) and Liberia (Maria Domnik)—in Gdańsk and Olsztyn, respectively.


The team drew on archival records to locate the final three nuns’ resting place: a 215-square-foot graveyard in Orneta, writes Mindy Weisberger for Live Science. According to a statement, the exhumed skeletons’ age and sex, in conjunction with necklaces, crosses and religious garments buried nearby, gave the researchers probable cause to identify them as Sisters Rolanda (Maria Abraham), Gunhilda (Dorota Steffen) and Bona (Anna Pestka).


  



One of the nun's skeletons (IPN)

Many of the nuns suffered brutal deaths: Krzysztofora, for instance, sustained 16 bayonet wounds and had both her eyes and tongue gouged out, according to an October 2020 IPN statement. Generosa, meanwhile, succumbed to her injuries after ten days of torture, as Kettley pointed out in a 2020 Express article.



Seventy-six years after World War II drew to a close, Russia’s treatment of Poland during and after the conflict remains a significant source of tension between the two nations. On September 17, 1939, just 16 days after Nazi Germany began the war by invading western Poland, Josef Stalin’s Red Army invaded eastern Poland, promptly annexing the territory in what Deutsche-Welle’s Magdalena Gwozdz-Pallokat describes as the Soviets grabbing “their share of the spoils when Poland was as good as defeated.”


In the brief period between Stalin’s annexation and the Nazis’ capture of eastern Poland in the summer of 1941, the Soviets engaged in brutal acts of repression, including the 1940 Katyn massacre of nearly 22,000 Polish citizens. As the Red Army regained control of the region in late 1944 and early 1945, violence against Poles—particularly clergy, military, educators and others viewed as threats to communist rule—resumed: “Far from being a ‘liberator,’” wrote Polish Prime Minister Mateusz Morawiecki in a 2020 op-ed for Politico, “the Soviet Union was a facilitator of Nazi Germany and a perpetrator of crimes of its own.”


 



Skeleton found in St. Mary's Cemetery (IPN)

As Jonathan Luxmoore reported for the National Catholic Reporter’s Global Sisters Report in 2019, Soviet soldiers killed more than 100 sisters from the St. Catherine order alone during the 1945 reinvasion of Poland. Religious orders, Luxmoore added, “were seen as secretive organizations threatening the officially atheist Communist Party’s absolute power, so they became key targets for repression.”


The seven nuns at the center of the recent excavations likely died in February 1945, when Soviet troops arrived at the hospitals in Gdańsk-Wrzeszcz, Olsztyn and Orneta, according to Live Science. As the nuns attempted to protect their patients, the soldiers brutally retaliated.



Now, researchers are trying to learn more about these women’s lives. Per the October 2020 statement, pathologists at the Forensic Medicine Institute in Gdańsk are analyzing the skeletons to confirm their identities; religious officials in Poland are also seeking beatification for the murdered St. Catherine sisters.


“If we do not want a repeat of the cataclysm of World War II, the truth about the crimes of totalitarianism—Soviet and German—as well as their condemnation have to be a foundation upon which historical education and international relations rely,” an IPN spokesperson tells the Express


the women’s skeletons in Orneta, a village in northern Poland, last December.

Thursday, 28 January 2021

SANDAL WOOD VEERAPPAN CAPTURED AND KILLED 2004 OCTOBER 18

 


SANDAL WOOD VEERAPPAN 

CAPTURED AND KILLED 2004 OCTOBER 18

*குண்டு வெடித்தது!*


 சேலத்தின் புறநகர் பகுதி மாமாங்கம். இங்கே மத்திய அரசுக்குச் சொந்தமான “பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் சுரங்கம் உள்ளது. இந்நிறுவனத்தின் ஆய்வு மாளிகை பொதுமக்கள் போக முடியாத பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கிறது. எப்போதும் அமைதியானச் சூழலில் இருக்கும் இந்த ஆய்வு மாளிகை 12.10.2004 மதியம் பரபரப்புடன் காணப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தொழில் நுட்ப அணியினர் அங்கு வந்தனர். கூட்ட அறையில் ஒட்டுக் கேட்புக் கருவிகளைப் பொருத்தினர். பக்கத்து அறையில் பதுங்கி, கூட்ட அறையில் நடக்கும் உரையாடலைப் பதிவு செய்யக் காத்திருந்தனர். 

மூன்று மணிக்கு இன்னொரு படைப்பிரிவு வந்தது. கூடுதல் டி.ஜி.பி.யும் STF இன் தலைவருமான விஜயகுமார் IPS அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. கூட்டம் நடக்கும் அறையில் விஜயகுமாருக்குப் பிடித்த லெமன் கிராஸ் ரூம் ஸ்பிரே அடிக்கப்பட்டது. 

பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு ஓய்வு மாளிகை. மாலை நான்கு மணி. 

விஜயகுமார், அதிரடிப்படை எஸ்.பி-1  

செந்தாமரைக்கண்ணன், எஸ்.பி-2 

சண்முகவேல் 

மூவரும் தனித்தனி வண்டிகளில் வந்திறங்கினர். 

செந்தாமரைக்கண்ணனுடன் மிஸ்டர் எக்ஸ் என்று சொல்லப்படும் ஒருவரும் இருந்தார். 

எல்லோரும் கூட்ட அறைக்குள் சென்றனர். அடுத்த சில மணித் துளிகளில் ஹெல்மெட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். தலையிலிருந்த ஹெல்மெட்டைக் கழட்டாமலே கூட்ட அறைக்குள் சென்றனர். 

விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் எழுந்து நின்று அந்த இருவரையும் கை குலுக்கி வரவேற்றனர். ஒருவர் கொளத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் துரைப்பாண்டியன். இன்னொருவர் வீரப்பனுக்கு உறவினர். துரைப் பாண்டியன் மீது பற்றும், மரியாதையும் கொண்டவர். அந்த நட்புக்காக வீரப்பனைக் காட்டிக் கொடுத்த M-1 என்ற குறியீட்டைக் கொண்ட போலீஸ் உளவாளி. M-1 பேசத் தொடங்கினார். 

“காட்டு ராஜா நாளைக்குத் தோழரைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கிறார். தவறினால், நாளா நாளைக்கு நாங்க சந்திப்போம்”. 

“வெரிகுட். உன்னுடைய திட்டம் என்ன...?” என்ற விஜயகுமார், துரைப்பாண்டியன்  பக்கம் திரும்பினார். தனது திட்டத்தை நான்கே வரியில் சொல்லி முடிக்கிறார் துரைப்பாண்டியன். “வேண்டாம் நீயும், பாண்டிக் கண்ணனும் பல முறை கேங்கைப் பக்கத்திலிருந்து பார்த்திருக்கீங்க. ரொம்ப நாளா குளோசா வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. கேங் உங்களைப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால், நீங்க சந்திக்கும் வீட்டுக்காரர், அந்தப் பக்கம் ஆடு, மாடு மேய்க்கப் போறவங்க. வேட்டைக்குப் போறவங்க யாராவது ஒருத்தர் உங்களைப் பார்த்திருக்கலாம். நீங்க போர நேரத்தில், “அந்த ஒருத்தர்” கேங்குடன் இருக்கலாம். அப்படி இருந்துட்டா நம்ம திட்டம் எல்லாமே அவுட் ஆயிடும். வெள்ளைத் துரை இந்தப் பகுதிக்குப் புது ஆள். அவனை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவன் மேல யாருக்கும் சந்தேகம் வராது. அவன் தான் சரியான ஆள். அவனைச் சேர்த்தால் மட்டுமே இந்த ஆப்ரேஷன் சக்சஸ் ஆகும்” என்கிறார். 

“சாரி சார்... துரைப்பாண்டியன், பாண்டிக்கண்ணன் இந்த ரெண்டு பேரில் ஒருத்தரைத் தான் காட்டுராஜாவிடம் கூட்டிட்டுப் போவேன். வேறு யார் வந்தாலும் நான் இந்த வேலைக்குப் போக மாட்டேன்” என்றார் M-1. 

விஜயகுமார்-துரைப்பாண்டியன் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் தொடங்கியது. அது முடிய அரை மணி நேரமானது. வேறு எந்த இடமாக இருந்தாலும், ஏ.டி.ஜி.பி. என்ற உயரிய பொறுப்பில் இருப்பவருடன் ஒரு எஸ்.ஐ. இப்படி வாதம் செய்திருக்க முடியாது. செந்தாமரைக் கண்ணன், சண்முகவேல் இருவருமே துரைப்பாண்டியன் திட்டமே சரியானது. அதைச் செயல் படுத்தினால் மட்டுமே A1(வீரப்பன்) கதை முடிவுக்கு வரும் என்றனர். வேண்டா வெறுப்பாக விஜயகுமாரும் அதை ஏற்கிறார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் எஸ்.பி.அசோக்குமார் தொடங்கிய ஆப்ரேஷன் ரூட்ஸ் (வேர்கள்) நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கிறார். “14 ஆம் தேதி மாலை சந்திக்கலாம்” வீரப்பனிடமிருந்து அழைப்பு வந்தது. M-1 மற்றும் மிஸ்டர் எக்ஸ் என்பவரும் வீரப்பனைச் சந்தித்தனர். “17 ஆம் தேதி ஒரு தோழர் வருவார். அவர் உங்களுக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பார். என்னை கியூ பிராஞ்சு போலீஸ் தேடிக்கிட்டு இருக்காங்க.  நாளை பெரியகுளம் பகுதிக்குப் போகிறேன். அங்குள்ள தோழர்களை கூட்டிக்கிட்டு 20 ஆம் தேதி இங்கே வந்திருவேன். பிறகு, நாம எல்லோரும் கேரளா காட்டுப்பக்கம் போயிடலாம்.” என்று மிஸ்டர் எக்ஸ் அடுத்தடுத்த திட்டங்கள் பற்றி வீரப்பனிடம் விவரிக்கிறார். வீரப்பன் தனக்குத் தேவையான புதிய ஆட்களும், ஆயுதங்களும் வருகிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். 

17ஆம் தேதி மாலை ஆறு மணி, M-1 பெண்ணாகரம் பி.டி.ஓ அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அவருடன் பாண்டிக்கண்ணன் என்ற அதிரடிப்படை உளவுப் பிரிவு காவலரும் இருக்கிறார். அவர் கையில் ஒட்டுப் போட்டுத் தைக்கப்பட்ட ஒரு துணிப்பை. அதில், தனித் தனியாகப் பிரிக்கப்பட்ட ஐந்து கையெறி குண்டுகள் (Grenade) இருந்தன. இருவரும் தாசம்பட்டி போகும் சாலையில் நடந்தனர். சின்ன தும்கல் ஊரைக் கடந்தனர். அடுத்துள்ள துரிஞ்சி மரத்துப் பிரிவுக்கு சென்றனர். அங்கிருந்து மேற்கே திரும்பி கொடமாங்குளத்துப் பள்ளத்துக்குச் செல்லும் ஒத்தையடிப் பாதையில் நடந்தனர்.  இரவு எட்டு மணிக்கு சின்னாற்று காட்டை ஒட்டியிருந்த தங்கான் வீட்டை அடைந்தனர். 

M-1 ஐப் பார்த்த அந்த வீட்டுப் பெண் கும்பிட்டார். “அரை மணி நேரத்துக்கு முன்னமே வந்துட்டாங்க. அந்தப் பள்ளத்தாண்ட இருக்காங்க. உங்களை வரச் சொன்னாங்க...” என்றார். வீட்டின் முன் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து வீட்டினுள் வைத்தார். வீட்டுக்கு மேற்கிலிருந்த சின்னாற்று காட்டுக்குள் சென்ற M-1, “அண்ணா அண்ணா...” என்கிறார். சத்தம் கேட்டு சந்திரகவுடா முதலில் வருகிறார். அடுத்து, சேதுமணி, கோவிந்தன், வீரப்பன் என நால்வரும் வந்தனர். தங்கான் வீட்டு அடுப்பில் வீரப்பனுக்குப் பிடித்த நாட்டுக் கோழி இறைச்சி வெந்து கொண்டிருந்தது. வீரப்பன் உள்ளிட்ட ஐந்து பேரும் வீட்டுக்கு வருகின்றனர். கட்டிலில் உட்கார்ந்திருந்த பாண்டிக் கண்ணனை “இவர் தான் அண்ணன் அனுப்பிய தோழர்..” என M-1 அறிமுகம் செய்கிறார். வீரப்பனும், பாண்டிக் கண்ணனும் கை குலுக்கினர். பிறகு கோவிந்தன் வரவேற்றார். M-1 வாங்கிப் போயிருந்த அல்சர் மாத்திரையைச் சந்திரகவுடாவிடம் கொடுக்கிறார். பீடிக்கட்டை சேதுமணியிடம் கொடுக்கிறார். வீட்டுக்குப் பின்பக்கம் புகைக்கப் போன சேதுமணி, அங்கிருந்தபடியே யாராவது வருகிறார்களா...? என்ற கண்காணிப்பை மேற்கொள்கிறார். பாண்டிக்கண்ணன், தான் வந்துள்ள நோக்கத்தைச் சொல்கிறார். “சாப்பிட்ட பின்னால காட்டுக்குள்ளார போயிறலாம்...” என்றார் சேத்துக்குழி. “பத்து நிமிஷ வேலை தான் தோழர், இங்கேயே சொல்லிக் குடுத்திட்டு நான் ராத்திரியே கிளம்பணும். அப்பத்தான் வெள்ளனா மதுரைக்குப் போகமுடியும்...” என்கிறார் பாண்டிக்கண்ணன். 

பாலில்லாத தேநீர் வந்தது. எல்லோரும் குடித்தனர்.  “சரி, இங்கேயே பார்த்திருவோம் வாங்க...” என்ற வீரப்பன் அந்தக் கூரை வீட்டினுள் செல்கிறார். பாண்டிக்கண்ணன், கோவிந்தன் இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். வீட்டின் நடுவே மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பாண்டிக்கண்ணன் அதை எடுத்து ஓரமாக வைக்கிறார். இடுப்பில் மாட்டியிருந்த டார்ச் லைட்டை எடுத்த கோவிந்தன் அதை எரிய விட்டார். கீழே உட்கார்ந்த பாண்டிக்கண்ணன் பையில் இருந்து பிரித்துப் போட்ட கையெறி குண்டுகளின் உதிரிப் பாகங்களை எடுக்கிறார். பாடி, டைனமெட், ஜெலட்டின், லாக், லிவர், சேப்டி பின், பியூஸ், சேப்டி ரிங், ஸ்ட்ரிக்கர், ஸ்ட்ரிக்கர் ஸ்பிரிங் என ஒவ்வொரு பாகமாக அதன் பெயரைச் சொல்லி இணைக்கிறார். வீரப்பன், கோவிந்தன் இருவரும் அதை வியப்புடன் பார்த்தனர். இரண்டு நிமிடத்தில் குண்டு தயாரானது. அவர் சொன்னபடியே செய்கிறார் வீரப்பன். இரண்டாவது குண்டும் தயாரானது. அடுத்து கோவிந்தனிடம் “நீங்க ஒன்றை போட்டுப் பாருங்க... தோழர்” என்கிறார் பாண்டிக்கண்ணன். கோவிந்தன் வெளியிலிருந்த சந்திரகவுடாவைக் கூப்பிட்டார். டார்ச் லைட்டை அவரிடம் கொடுத்தார். புன்சிரிப்புடன் ஒவ்வொரு பாகமாக இணைக்கிறார். மூன்றாம் குண்டு தயார். வீரப்பன் இதையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறார். “சேதுவையும் கூப்பிடு அவனும் ஒன்னை செய்யட்டும்...” என்கிறார் வீரப்பன். சேதுமணியும் வருகிறார். அடுத்து சந்திரகவுடா. இப்போது ஆளுக்கு ஒரு கையெறி குண்டைத் தயாரித்து முடித்திருந்தனர். பாண்டிக் கண்ணனைச் சுற்றியிருந்த நால்வருமே அவர் செய்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். “இப்போ நீங்களே இதைத் தனித்தனியா கழட்டிக்கலாம். அதுக்கு இந்த லிவரைக் கீழே தள்ளணும். இனி தூக்கிப் போட்டாலும் குண்டு வெடிக்காது. நீங்க பாதுகாப்பா எவ்வளவு தூரம் வேணுன்னாலும் எடுத்துக்கிட்டுப் போகலாம்”. என்றவர், அடுத்தக் குண்டை வீரப்பன் கையில் வைக்கிறார். குண்டின் லிவரைக் கீழே தள்ளச் சொல்கிறார். வீரப்பன் லிவரைத் தொட்ட நேரத்தில் 180 டெசிபில் சத்தத்தில் அந்த குண்டு வெடித்தது. 

அங்கிருந்த ஐந்து பேரின் மூக்கு, வாய், கண், காது என அத்தனை துவாரங்களிலும் நைட்ரேட் புகை ஏறியது. தும்மல் வந்தது. கண் கிறுகிறுத்தது.  பார்வை போனது. காதுகளில் கிர்... என்ற சத்தம் மட்டுமே கேட்டது. வட்டம் போட்டு உட்கார்ந்திருந்த வீரப்பன், சேதுமணி, கோவிந்தன், பாண்டிக்கண்ணன் உள்ளிட்ட நால்வரும் நினைவிழந்து விழுந்தனர். நின்ற நிலையில் டார்ச் லைட்டைக் கையில் வைத்திருந்த சந்திரகவுடா வீட்டை விட்டு வெளியே போக முயற்சிக்கிறார். முடியவில்லை, இரண்டு நொடியில் அவரும் மயங்கி விழுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. வீடு முழுவதும் புகையால் மூடியிருந்தது. 

வீட்டு உரிமையாளர் தங்கான், அவருடைய மனைவி, மகன் முருகேசன் மூவரும் உண்மையிலயே பதட்டமடைந்தனர். M-1 மட்டும் பதட்டமடைந்தது போல நடித்தார். என்ன நடந்தது...?, என்ன செய்வது...? ஒருவருக்குமே வழி தெரியவில்லை. வீட்டுக்குப் பக்கத்து வயலின் பொலி மீது ஏறி நின்றனர். வடக்குப் பக்கமிருந்த பாப்பான் மெட்டு கரட்டில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் எட்டு அதிரடிப்படை வீரர்கள் காத்திருந்தனர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அந்த வீட்டை நோக்கி ஓடி வந்தனர். நின்று கொண்டிருந்த நால்வரையும் வளைத்துப் பிடித்தனர். “இங்கே நடந்த எதுவும் வெளியே தெரியக் கூடாது. உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. விஷயம் வெளியே தெரிஞ்சா அட்ரஸ் இல்லாம போயிருவீங்க...” என எச்சரித்தனர். நால்வரையும், தனித்தனியே சிறை வைத்தனர். பத்து நிமிடங்கள் போனது. வீட்டைச் சூழ்ந்திருந்த புகை மூட்டம் கலைந்தது. மாஸ்க் அணிந்த நால்வர் உள்ளே சென்றனர். மயங்கிக் கிடந்த ஐந்து பேரையும் வெளியே கொண்டு வந்து போட்டனர். வீரப்பன் உள்ளிட்ட நால்வரின் கைகளைப் பின்புறமாகக் கட்டினர். ஒருவர் மட்டும் மீண்டும் பாப்பான் மெட்டு கரட்டுக்குச் செல்கிறார். அணைத்திருந்த வாக்கிக்கு உயிர் கொடுக்கிறார். 

“ஆப்ரேஷன் சக்சஸ்” என்கிறார். கோடுபட்டி பக்கமிருந்து வேன் வந்தது. பெரிய தும்கல் ஏரிக்கரை பஸ் ஸ்டாப்பில் நின்றது. செந்தாமரைக் கண்ணன், விஜயகுமார் இருவரும் இறங்கினர். சீருடை இல்லாத இரு வீரர்கள் வரவேற்றனர்.  ஊஞ்ச மரங்கள் நிறைந்த வழியில் நால்வரும் கால் மணிநேரம் நடந்தனர். மயங்கிக் கிடந்த வீரப்பனைப் பார்த்தனர். 17 ஆண்டுகளாகத் தேடப்பட்ட வீரப்பன் பிடிபட்டு விட்டார். விஜயகுமார் இரண்டாம் முறை அதிரடிப்படைக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. 

54 ஆண்டுகள் பத்து மாதம் வாழ்ந்த வீரப்பன் கதை இன்றுடன் முடியப் போகிறது. மயங்கிக் கிடந்த வீரப்பனின் ஆழ் மனதில் சிறுவயது நினைவுகள் அணி வகுத்து வந்தது. கிழிந்த கோவணத்துடன் வீரப்பன் விளையாடிய செங்கப்பாடி கிராமம் கண் முன் வருகிறது. அங்கே சிறுவயது வீரப்பன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்.

பெ. சிவசுப்பிரமணியம்.




*வீரப்பனின் வரலாறு தொடங்குகிறது.*

*1. வீரப்பன் ஊரும், குடும்பமும்!*

1920 ஆம் ஆண்டு, அன்றைய சென்னை மாநிலம் சாம்பள்ளி என்ற ஊருக்கருகில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ஆங்கில அரசு முடிவு செய்தது. காவேரிபுரம், நாயம்பாடி, கோட்டையூர் என 66 ஊர்கள் அணைக்குள் மூழ்கியது. அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. அந்த ஊர்களில் வாழ்ந்த மக்களை வெளியேறச் சொல்லி அரசு உத்தரவிட்டது. காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் சொந்த நிலம், வீடு, வாசல் என வாழ்ந்த மக்கள் எல்லோரும் அகதிகளாயினர். கையில் எடுக்க முடிந்ததை எடுத்துக் கொண்டு வாழ்விடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். காட்டுப் பகுதியிலிருந்த சமமான நிலப் பரப்பில் குடியேறினர். அணைக்குள் மூழ்கிய ஊர்களின் பெயரையே புதிய ஊருக்கும் சூட்டினர். 

கருங்கல்லூர் பகுதியிலிருந்து புறப்பட்ட ஒரு பிரிவினர் ஒகேனக்கல் செல்லும் காட்டு வழியில் நடந்தனர். கோட்டையூருக்கு வடக்கிலிருந்த சமமான நிலப்பரப்பில் வீடுகளை அமைத்தனர். அவ்வூருக்கு ஆத்தூர் என்று பெயரிட்டனர். 

இன்னொரு குழுவினர், எறக்கியம் பள்ளத்தின் கரையோரத்தில் குடிசைகளை அமைத்தனர். அந்த ஊருக்கு செங்கப்பாடி என்று பெயரிட்டனர். 

1930 ஆம் ஆண்டுகளில் நிலத்தைச் சமன் செய்து விவசாயம் செய்யப் போதிய கருவிகள் இல்லை. அதனால், கல்லும், பாறைகளும் மிகுந்த அந்த நிலத்தில் கொத்துக் காட்டு விவசாயம் செய்தனர். விவசாயத்துடன், வேட்டையாடுதல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் போன்ற பகுதி நேர வேலைகளிலும் ஈடுபட்டனர். 

தமிழகம்-கர்நாடகம் எனப் பிரிக்கப்படாத சென்னை மாநிலத்தில் வாழ்ந்த அம்மக்கள் கோவை மாவட்டம், கொள்ளேகால் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 

1956 நவம்பர் முதல் மொழிவாரி மாநிலங்கள் உருவானது. காவிரி மற்றும் பாலாற்றின் அக்கரையிலிருந்த நிலப்பகுதி கர்நாடக மாநிலமானது. இக்கரையில் இருந்த நிலம் தமிழகத்தில் சேர்ந்தது. செங்கப்பாடி கிராமம் 

“எங்க ஊர் புளியம்பட்டி. மேட்டூர் அணை கட்டுனப்போ ஊரெல்லாம் தண்ணிக்குள்ளே போயிட்டுது. அதனால, எங்க தாத்தா, அப்பாவெல்லாம் இந்த ஊருக்கு குடி வந்தாங்க. எங்க அப்பா பேரு முனியக்கவுண்டர். அம்மா பேரு பொன்னுத்தாயி. நாங்க ரெண்டு பேர் அண்ணன் தம்பிகள். அப்பா குடுத்த சொத்து ஆளுக்கு நாலு ஏக்கர் பூமி. அதுவும் தண்ணி வசதியில்லை. மேட்டுக் காடு தான். சோளம், கம்பு, ராகின்னு மானாவாரி விவசாயம் செய்வோம்.” என்கிறார் வீரப்பனின் சித்தப்பா பொன்னுசாமி. 

முனியக் கவுண்டருக்கு கூசன் என்கிற முனுசாமி, கீரியான் என்கிற பொன்னுசாமி என இரு மகன்கள். முதல் மகன் முனுசாமியின் மனைவி பெயரும் பொன்னுத்தாயி, இத்தம்பதிக்கு மாதையன், வீரப்பன், முனியம்மாள், அர்ஜுனன், மாரியம்மாள் என ஐந்து குழந்தைகள். 

இத் தொடரின் நாயகனாக வரும் வீரப்பன் 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 18 இல் பிறந்தவர். முனுசாமியின் நான்கு ஏக்கர் நிலத்தில் விளைந்த தானியங்கள் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் உணவுத் தேவைக்குப் போதவில்லை. அதனால், காட்டில் வேட்டைக்குச் சென்று தான் கஞ்சி குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் முனுசாமி. ​ இந்தப் பகுதியில் உள்ள அனைவருக்குமே பட்டப்பெயர் உள்ளது. 

பூர்வீகமாக வாழ்ந்த ஊரின் பெயர், குடியிருக்கும் காடு, வீடு உள்ள இடங்களின் பெயர் அல்லது அவருடைய உருவ அமைப்பைக் கொண்டே அடையாளம் சொல்லப் படுகிறார்கள். முனுசாமி யாரிடமும் கூச்சமில்லாமல் பழகக் கூடியவர். அதனால், கூசன் என்று அழைத்துள்ளனர். 

அவருடைய தம்பி பொன்னுசாமியின் மூக்கும், கண்களும் கீரியைப் போல இருக்கும். அதனால், அவரை கீரியான் என்று அடையாளப் படுத்தினர். 

வீரப்பனுக்கு பத்து வயது இருக்கும் போது தலையில் வண்டு கடி ஏற்பட்டது. இதனால், முடி முழுவதும் கொட்டி தலை மொழுமொழுவென இருந்தது. அதிலிருந்து வீரப்பனுக்கு “மொழுக்கன்” என்ற பட்டப் பெயர் வந்தது. 

வீரப்பனின் அண்ணன் பெயர் மாதையன். இந்த ஊரில் பல மாதையன் இருந்ததால், கூசனின் மகன் மாதையன் என்பதை கூச மாதையன் என்றனர். 

வீரப்பன் குடும்பத்திலிருந்த யாருக்கும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 

வீரப்பனின் தம்பி அர்ஜுனன் மட்டும் ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளார். வறுமையின் காரணமாகப் பள்ளிக்குப் போக வேண்டிய வயதில் வீரப்பன் மாடு மேய்க்கப் போனார். சிறுவனாக இருந்த நேரத்தில் அவருக்குப் போட்டுக் கொள்ளச் சட்டை, ட்ரவுசர் கூட இல்லை. தன்னுடைய சம்பாத்தியத்தில் துணி எடுத்துப் போடும் வரை கோவணமே கட்டிக் கொண்டிருந்தார். 

“அந்தக் காலத்தில் தின்பண்டம் வாங்க எங்களுக்கு வசதியில்லை. எங்கம்மா சாமை குத்திச் சோறு ஆக்குவாங்க. மிச்சமிருக்கும் தவுட்டைத் துணியில் மூட்டை கட்டி எடுத்துட்டுப் போவோம். மாடு மேய்க்கும் காட்டில் நானும், வீரப்பனும் அதைத் தின்னு தான் வாழ்ந்தோம். அப்பவே வீரப்பனுக்குப் பெரிய வேட்டைக்காரனுக்கு உள்ள குணம் இருந்தது. தனக்குச் சோறு இல்லாமப் போனாலும், பசியோடு வந்தவர்களுக்குத் தூக்குப் போசியை எடுத்துக் குடுப்பான். அந்த அளவுக்கு அடுத்தவங்களுக்கு உதவும் குணம் அவங்கிட்டே இருந்தது” என்கிறார் வீரப்பனின் வயதை ஒத்த ஐயந்துரை. 

மாவட்டத் தலைநகர் மைசூரிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செங்கப்பாடி. அடர்ந்த காடுகளுக்கு நடுவில் வாழ்ந்த இப்பகுதி மக்களுக்கு மருத்துவம், கல்வி என அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிடைப்பதற்கு ஏற்ற சூழலும் இல்லை. அரசு என ஒன்று உள்ளதே பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. பரந்த காடுகளின் உள்ளே வாழ்ந்த அம் மக்களுக்குச் சட்டங்களும், சட்ட மீறல்களும் தெரியாது. செங்கப்பாடிக்குப் பேருந்து வசதியில்லாத காலம். வெளியூர் போகவேண்டுமெனில் காவிரி ஆற்றங்கரை ஓரமாகவே தெற்கே 16 கிலோமீட்டர் நடந்து பாலாறு வரவேண்டும். 

இன்னொரு வழி, அதே காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் வடக்குப் பக்கமாக 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மாறுகொட்டாய் வரை போகலாம். அங்கிருந்து காவிரி ஆற்றைக் கடந்தால் ஒகேனக்கல். 

மூன்றாவது வழி. செங்கப்பாடியில் இருந்து நேர் மேற்கே அடர்ந்த காடுகளுக்குள் 14 கிலோமீட்டர் நடந்தால் ஒடக்காப்பள்ளம் என்ற ஊர் வரும். இந்த மூன்று இடத்திலும் இருந்தே பேருந்து மூலம் வெளியூருக்குப் போகமுடியும். 

இதில், முதல் இரண்டு வழிகளைத் தான் இன்றளவும் மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். செங்கப்பாடியில் இருந்து எந்தப் பக்கம் போனாலும் மூன்று மணிநேரம் காட்டுக்குள் நடந்தே ஆகவேண்டும். இந்தக் காட்டில் யானை, புலி, சிறுத்தை எனப் பல விலங்குகளும் இருந்தன.  இந்த விலங்குகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துப்பாக்கி தேவைப் பட்டது. இதற்காக அவர்கள் நாட்டுத் துப்பாக்கியைத் தங்களின் உடைமையாகவே பயன் படுத்தினர். 

பன்றி, மான், போன்ற விலங்குகளை வேட்டையாட துப்பாக்கிகள் பயன்பட்டது. பெண் மானைக் கொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆண் மான்களை வேட்டையாட ஆங்கில அரசு அனுமதித்தது. 

1972 வரை இச்சட்டம் நடைமுறையிலும் இருந்தது. மனித இனத்தின் முதல் தொழிலே வேட்டை. நீண்ட காலத்துக்குப் பிறகே வேளாண்மையை கற்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி இந்த ஊரில் வாழ முடியாது என்பதால் கூசன் (எ) முனுசாமி முழுநேர “சிகாரி” வேட்டைக்காரனாக இருந்தார். பெரும்பாலான நாளில் காலை நேரம் மயிலமலைக் காட்டுக்குள் போவார். மதியம் ஒரு முசுக்கொந்தியை (கருங்குரங்கு) சுட்டு எடுத்து வந்து, மனைவி பொன்னுத்தாயிடம் கொடுப்பார். அதைக் கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு காவிரியின் அக்கரையில் (தருமபுரி மாவட்டம்) உள்ள சிகரல்பட்டி என்ற ஊருக்குப் போவார். அங்கே முசுக்கொந்தியை விற்பார். அந்தக் காசில் ராகி மாவும், சர்க்கரையும் வாங்கிக் கொண்டு வருவார். அதை வைத்துத் தான் வீரப்பன் குடும்பம் அடுத்த சில நாட்களுக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. இதை வீரப்பனே என்னிடம் சொல்லியுள்ளார். 

நன்றி:- வை.கதிரவன், செய்தியாளர். சேலம் 

இடுப்பில் கோவணத்துடன், சாமை அரிசித் தவிடு தின்று வாழ்ந்த மொழுக்கன் என்கிற வீரப்பன். இந்தியாவில் யாருடைய தலைக்கும் இல்லாத விலையாக ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கும் அளவுக்கு மிகப் பெரிய குற்றவாளியாக உயர்ந்தார். ஏன்...? எப்படி...? எதனால்...? என்பதை அடுத்தடுத்தப் பகுதிகளில் காண்போம்.

பெ. சிவசுப்பிரமணியம்.



Tuesday, 20 October 2020

AL.GADAFFI ,2011 OCTOBER 20 ,LOST SOME OPPURTUNITY

 


AL.GADAFFI ,2011 OCTOBER 20 ,

LOST SOME OPPURTUNITY


.முஅம்மர் முகம்மது அபு மின்யார்


அல்-கதாஃபி (Muammar Muhammad Abu Minyar al-Gaddafi[1] (அரபு மொழி: مُعَمَّر القَذَّافِي Muʿammar al-Qaḏḏāfī இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க; சூன் 1942 – 20 அக்டோபர் 2011), அல்லது பொதுவாக முஅம்மர் கதாஃபி (Muammar Gaddafi) அல்லது கேர்னல் கடாஃபி அல்லது முஅம்மர் அல்-கத்தாஃபி, லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக[2][3] 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர். கதாஃபி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார்.


1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார்[4]. இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது[5][6]. எரிபொருள் விலை அதிகரிப்பு, பெற்றோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினதும் வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது[7][8]. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கதாஃபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார்[9]. ஐரியக் குடியரசுப் படை, மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பு கதாஃபியின் லிபியாவை "ஒதுக்கப்பட்ட நாடு" என அறிவித்தது[10][11]. 1980களில் உலகின் பல நாடுகளும் கதாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன[12].





பெப்ரவரி 2011 இல் எகிப்து, மற்றும் துனீசியாவில் இடம்பெற்ற எழுச்சிப் போராட்டங்களை அடுத்து, கதாஃபியின் ஆட்சிக்கெதிராக ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இவை பின்னர் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. கதாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் பெங்காசி நகரில் தேசிய இடைக்காலப் பேரவை என்ற பெயரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்நாட்டுப் போரை தோற்றுவித்தது. லிபியாவின் வான் எல்லைப் பரப்புத் தடை, மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்களை ஐநா பாதுகாப்புச் சபை அறிவித்தது. இதற்கமைய நேட்டோ தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உதவிகளைத் தாராளமாக வழங்கினர். கதாஃபி மற்றும் அவரது உறவினர்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மனித இனத்துக்கு எதிராகச் செயல்பட்டமைக்காக 2011 சூன் 27 இல் பன்னாட்டுக் காவலகம், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன கதாஃபி மீதும், அவரது மகன் சைஃப் அல்-இசுலாம் ஆகியோருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்தன[1][13][14][15]. 2011 ஆகத்து மாதத்தில் தலைநகர் திரிப்பொலி கிளர்ச்சிப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 2011 செப்டம்பர் 16 இல் ஐநா சபையில் லிபியாவின் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவை பிடித்தது[16]. ஆனாலும், கதாஃபியின் சொந்த இடமான சேட் மற்றும் சில இடங்களை கதாஃபியின் ஆதரவுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கதாஃபி தலைமறைவானார்[17]. இறுதியில், 2011 அக்டோபர் 20 ஆம் நாள் கிளர்ச்சிப் படையினர் சேர்ட் நகரைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். கதாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டார்[18].



•    மப்றூக்


இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமானால், கப்பல் அனுப்பி வைத்து முஸ்லிம் மக்கள் அனைவரையும் கடாபி தன்னுடைய நாட்டுக்கு எடுத்து விடுவார் என்று எங்களூர் பெரிசுகள் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் பேசிக் கொண்ட கதைகள் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன.


பச்சை நிறத்திலான அரபு எழுத்துக்களுடன் லிபியத் தலைவர் கடாபியின் (அவரின் சரியான முழுப் பெயர் முஅம்மர் முஹம்மது அபு மின்யார் அல் - கதாஃபி என்பதாகும்) உருவம் கொண்ட வெள்ளை நிற ரீ சேட்களை எங்கள் கிராமத்தின் அப்போதைய இளைஞர்களில் சிலர் அணிந்து கொண்டு வலம் வந்த நினைவுகள் மறக்க முடியாதவை!


சில தசாப்தங்களுக்கு முன்னர் தேசங்கள் கடந்து லிபியத் தலைவர் கேணல் கடாபி – ஒரு ஹீரோவாக முஸ்லிம் மக்களால் நேசிக்கப்பட்டார், மதிக்கப்பட்டார். கடாபி என்கின்ற சொல் - விடுதலையை விரும்பும் முஸ்லிம் வீரர்களின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டது.


ஆனால், அதே கடாபி – அவரின் தேசத்து மக்களாலேயே அடித்து இழுத்துக் கொண்டு சென்று கொல்லப்பட்டுள்ளார் என்பதை – நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் தங்கள் இதயங்களில் கடாபியை ஒரு ரோசாப்பூவைப் போல் சூடியிருந்த லிபிய மக்கள் - இன்று ஒரு எச்சில் இலை போல தூக்கி எறிந்திருக்கின்றார்கள் என்றால், இதற்கு என்னதான் காரணம்??



நம்மில் அநேகமானோர் நம்பிக் கொண்டிருப்பது போல் கடாபி அத்தனை நல்லவரில்லை! ஆனால், கேணல் கடாபி அத்தனை கெட்டவருமில்லை!!


லிபியாவை ஜனநாயகமற்றதொரு நாடாகவே கடாபி ஆட்சி செய்தார். அங்கு கட்சிகள் இல்லை, தேர்தல்கள் இல்லை, நாடாளுமன்றம் என்று எதுவுமேயில்லை! ஆனாலும், லிபியர்களை கடாபி தனது ஆட்சிக் காலத்தில் செல்வந்தர்களாக மாற்றினார். அந்த மக்களுக்கு - அதிக பொருளாதார சலுகைகளை வழங்கினார். நம்பினால் நம்புங்கள், லிபிய மக்கள் 'கரண்ட் பில்' கட்டுவதேயில்லை. லிபியர்களுக்கு மின்சாரத்தைக் கூட கடாபி இலவசமாகவே வழங்கினார்.


பிறகேன் கடாபிக்கு எதிரான புரட்சி வெடித்தது என்கிறீர்களா? எல்லாமே கடாபிதான் - கடாபிதான் எல்லாமே என்கிற 40 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதிகாரம் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், ஆத்திரமுமே புரட்சியாக வெடித்தது! இந்தப் புரட்சிக்கு எண்ணெய் ஊற்றி உசுப்பேத்தி விட்டன அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும்!


ஒருவரின் மரணத்தின் பிறகுதான்- அவர் அதிகம் பேசப்படுவார், விமர்சிக்கப்படுவார். கடாபியின் மரணம்தான் அவரின் எல்லாக் கோணங்களையும் பேசச் செய்கிறது!


கடாபி ஒன்றும் ராஜ வம்சத்து ஆளில்லை! ஆடுகளையும், ஒட்டகைகளையும் மேய்த்துத் திரிந்த நாடோடிப் பெற்றோருக்குப் பிறந்தவர்தான் இந்த மனிதர். ஆனால், தனது 27ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றி – சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு சக்கரவர்த்தியைப் போல் ஆண்டு அனுபவித்தார்!


இயற்கையில் கடாபி ஒரு ரசனையாளர். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதிப் பிரியங் கொண்டவர். ஒரு நாளில் ஏராளமான தடவைகள் ஆடைகளை மாற்றிக் கொள்வார். தன்னைச் சந்திக்க விருந்தினர்கள் வந்து காத்துக் கொண்டிருக்கும் போதும், தனது அறைக்குச் சென்று மீண்டும் ஆடைகளை மாற்றிக் கொண்ட பிறகுதான் சந்திக்க வருவார். அதிலும், வெள்ளை நிறம் சார்ந்த ஆடைகளில் கடாபிக்கு நிறையப் பிரியம்.


லிபிய அதிபர் கேணல் கடாபி பற்றி அவரின் மருத்துவத் தாதிகளில் ஒருவராகப் பணியாற்றிய உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஒக்சானா பலின்ஸ்கயா எனும் யுவதி கூறும் தகவல்களைக் கேட்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.



'எனக்கு அரபு மொழியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அதிபர் கடாபிக்கு எங்களிடையே 'பபிக்' என்று ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தோம். 'பபிக்' என்றால் ரஷ்ய மொழியில் சிறிய தந்தை என்று அர்த்தம்.


நான் தாதியாகக் கடமையாற்றிய காலத்தில் எனக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. இரண்டு படுக்கையறை கொண்ட வீடு, அழைத்தவுடன் ஆஜராகும் சாரதி என்று எல்லாமே சௌகரியமாகத்தான் இருந்தன. ஆனால், என்னுடைய நடத்தைகள், செயற்பாடுகள் என்று - எனது தனிப்பட்ட வாழ்க்கையின் அத்தனை விடயங்களும் கண்காணிக்கப்பட்டன' என்கிறார் ஒக்சானா!


அதிபர் கடாபி 1942ஆம் ஆண்டு பிறந்தவர். மரணிக்கும் போது 69 வயது. ஆனால், அவரின் உடல் ஆரோக்கியம், குறிப்பாக - இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை எப்போதும் ஓர் இளைஞனுடையவை போன்று மிகவும் சிறப்பாக இருக்கும் என்கிறார் மருத்துவத்தாதி ஒக்சானா.


'உக்ரேன் நாட்டு ஊடகங்கள் எங்களை கடாபியின் 'அந்தப்புரத்துப் பெண்கள்' என்றுதான் எழுதும். உண்மையில் அது முட்டாள்தனமானதொரு கூற்றாகும். கடாபியின் மருத்துவத் தாதிகளாகப் பணியாற்றிய எங்களில் எவரொருவரும் அவரின் காதலியாகவோ, அந்தப்புரத்து நாயகியாகவோ இருந்ததில்லை! இன்னும் சொன்னால், அவரின் இரத்த அழுத்தத்தைப் பார்ப்பது போன்ற மருத்துவக் கடமைகளின் போது மட்டும்தான் அவர் மீது எங்கள் கைகள் படுவதுண்டு!




கடாபி கவர்ச்சியான உக்ரேன் பெண்களையே அவரின் தாதியர்களாகத் தெரிவு செய்து வைத்திருந்தார். எங்களுடைய தோற்றம் அதற்கு முக்கியமானதொரு காரணமாக இருந்திருக்கலாம். தன்னைச் சுற்றி அழகிய பொருட்களும், அழகிய மனிதர்களும் இருப்பதை அவர் பெரிதும் விரும்பினார்' என்கிறார் ஒக்சானா!


கடாபியிடம் விசித்திரமான பழக்க வழக்கங்கள் இருந்தன. அரபுப் பாடல்களை பழைய 'கசற் பிளேயர்'களில் கேட்பதில் அவருக்கு அலாதிப் பிரியம்.


ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் வேளைகளில் ஏழைச் சிறுவர்களைக் கண்டால் கடாபி தனது வாகனத்திலிருந்தபடியே காசையும், இனிப்புப் பண்டங்களையும் வெளியில் வீசி எறிவார். அவரின் வாகனத்தைத் துரத்தியபடியே சிறுவர்கள் அவற்றினைப் பொறுக்கிக் கொள்வார்கள். ஆனால், ஒருபோதும் அந்தச் சிறார்களின் அருகில் கடாபி சென்றதேயில்லை. காரணம், அவர்களிடமிருந்து தனக்கு நோய்கள் ஏதாவது தொற்றி விடுமோ என்கிற பயம்தான்.




இவை மட்டுமல்ல, கடாபி வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்கு தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களால் சூழப்பட்ட கூடாரத்தினுள்தான் தூங்குவாராம் என்றும் கூறப்படுகிறது.


இப்படி லிபியத் தலைவரிடம் நிறையவே விந்தையான பழக்க வழங்கங்கள் இருந்தன!


கடாபி வெளிநாடு செல்லும் போது, நல்ல 'மூட்'டில் இருந்தால், தன்னுடன் வருகின்ற தனது அலுவலர்கள் அனைவரையும் கடைகளுக்குச் சென்று விரும்பியவைகளையெல்லாம் வாங்கிக் கொள்ளுமாறு கூறுவார். எதிர்பாராத நேரங்களில் போனஸ் கொடுப்பார். தனது உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கடிகாரங்களை ஒவ்வொரு ஆண்டும் தனது அலுவலர்களுக்கு பரிசளிப்பதை கடாபி ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்.


கடாபியின் மருத்துவத்தாதி ஒக்சானா - கடாபி பற்றியும் அவருக்கெதிராக நிகழ்ந்த புரட்சி பற்றியும் இப்படிக் கூறுகின்றார். 'லிபியாவின் எல்லாமாக கடாபியே இருந்தார். அவருக்கு ஸ்ராலினை (ரஷ்ய நாட்டு சர்வதிகாரி ஜோசப் ஸ்ராலின்) ரொம்பப் பிடிக்கும். கடாபி அனைத்து அதிகாரங்களையும், சௌபாக்கியங்களையும் கொண்டிருந்தார். எகிப்தில் இடம்பெற்ற புரட்சியை முதன் முதலாக தொலைக்காட்சியில்தான் நான் பார்த்தேன். ஆனால், அவ்வாறானதொரு புரட்சியை எங்கள் 'பபிக்'குக்கு (கடாபி) எதிராக எவராவது மேற்கொள்வார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால், ஒரு சங்கிலித் தொடர்ச்சியாக அந்தப் புரட்சி துனூசியா, எகிப்து என்று – லிபியாவையும் தொற்றிக் கொண்டு விட்டது'!




அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கடாபிக்கும் வரலாற்றில் எப்போதும் முறுகல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. 1986ஆம் ஆண்டு பேர்லின் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் குண்டு வெடிப்பொன்று நிகழ்ந்தது. இதில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டு வெடிப்பின் பின்னணியில் லிபியா செயற்பட்டதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, லிபியாவின் தலைநகரான திரிப்போலியிலும் மற்றும் பெங்காசி நகரிலும் கடுமையான விமானத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் கடாபியின் வளர்ப்பு மகளொருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


லிபியா மீது அந்த அமெரிக்க வான்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் றீகன் பதவி வகித்தார். கடாபியோடு மிகக் கடுமையாக மோதிப் பார்த்த அமெரிக்கத் தலைவர்களில் றீகன் குறிப்பிடத்தக்கவர். ஒருமுறை கடாபியை 'மத்திய கிழக்கின் பைத்தியக்கார நாய்' (Mad dog of the Middle East) என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் றீகன் சாடியிடிருந்தமையை உலகு அத்தனை இலகுவில் மறந்திருக்காது. இதை வைத்தே – கடாபி மீது அமெரிக்கா கொண்டிருந்த குரோதத்தை ஓரளவேனும் நாம் புரிந்து கொள்ள முடியும். அந்தக் குரோதங்களின் நீட்சியும், உச்சகட்டக் காட்சியும்தான் - நேட்டோவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட புரட்சியும், கடாபியின் கறை படிந்த மரணமுமாகும்!


கடாபியின் சரி – பிழைகளுக்கப்பால், வரலாற்றின் அதிக பக்கங்களில் அவர் - இனி ஒரு கொடுங்கோலனாகவே நமது குழந்தைகளால் வாசிக்கப்படுவார். ஏனெனில், துரதிர்ஷ்டவசமாக கடந்த சில தசாப்தங்களாய் வரலாறுகளை - அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளுமே தமக்கு ஏற்றாற் போல் புனைந்து வருகின்றன.


கடாபி ஒரு வரலாற்று நாயகன் என்பதில் இரண்டு கதைகள் இல்லை. ஆனால், அந்த நாயகன், நம்மில் அநேகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது போல் - அத்தனை நல்லவருமில்லை, அத்தனை கெட்டவருமில்லை!!!




Tuesday, 4 August 2020

.PANDIYAS KILLED SAMANARS BY IMPALMENT



 .PANDIYAS KILLED SAMANARS
BY IMPALMENT  



சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.[1][2] ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.[சான்று தேவை]

அந்நூலில் எட்டு குன்றுகளில் வசித்த எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினார்கள் என்றும் செய்தியுள்ளது.[3] இந்நிகழ்வின் உண்மைத் த‌ன்மை குறித்துப் பல்வேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன. நன்றி...

மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற

[4] எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது.[5] மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.[6]

கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை. மதுரைக்கு மேற்கில் உள்ள சமணப் பள்ளிகளில் கழுவேற்றம் நடந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு எக்கல்வெட்டும் எழுதப்படவில்லை. இந்த இடைவெளி இப்பகுதியில் சமண ஆதிக்கத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், கழுவேற்றம் பற்றிய செய்தி இவ்வீழ்ச்சியின் குறியீடாக இருக்கலாம் என்றும் சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[5][6][7]

பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள சமணர் கழுவேற்றம்
தமிழில் இயற்றப்பட்ட பெரியபுராணத்தின் படி நின்றசீர்நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது சமண மதத்தினை ஆதரித்தார். அதனால் மக்களும், அரசவை அறிஞர்களும் சமண மதத்திற்கு மாறினார்கள். அப்பொழுது, பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியாரும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைபிடித்தார்கள்.

மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தினால் நெருப்பு வைத்தார்கள். அதிலிருந்து தப்பித்த திருஞான சம்மந்தர், இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டியன் மீது கோபமுற்றார். அக்கோபம் வெப்பு நோயாக பாண்டியன் மன்னனைத் தாக்கியது. மருத்துவர்களும், சமணர்களும் முயன்றும் வெப்பு நோய் தீரவில்லை.

பாண்டிய மகாராணி மங்கையற்கரசியார் திருஞான சம்மந்தரிடம் மன்னனின் வெப்புநோய் தீர்க்க வேண்டினார். அதனையடுத்து திருஞான சம்மந்தர் திருநீற்றை தந்து மன்னனின் நோயை குணமாக்கியதால் மன்னன் சைவமதத்தை தழுவினான். இதனால் கோபம் கொண்ட சமணர்கள், திருஞான சம்மந்தரை வாதத்திற்கு அழைத்தனர்.


அனல் வாதம் எனப்படும் நெருப்பில் ஏடுகளை இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. அதனையடுத்து புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சமணர்கள் அழைத்தார்கள். இந்த வாதத்திலும் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் என்றார்கள். அதனையடுத்து நிகழ்ந்த புனல் வாதத்தில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்மந்தரின் ஏடு நீரின் எதிர்திசையில் மிதந்தது வந்தது. திருஞான சம்மந்தர் வென்றார்.

இந்நிகழ்வினை அடுத்து சமணர்கள் கழுவேறியதாக பெரியபுராணம் கூறுகிறது.

விமர்சனங்கள்
பெரிய புராணத்துக்கு உரை எழுதிய சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார், மேற்குறிப்பிட்ட பாடலைப் பற்றி “இனி ஒருசார் நவீன ஆராய்ச்சியாளர் இக்கழுவேற்றிய அரசதண்டம் நிகழ்ந்ததே இல்லை என்று முடிக்கவும் துணிந்தனர்; அவர் கூற்றுக்கள் சிலரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில பேசவேண்டியது அவசியமாகின்றது.” என்று சொல்லி சமணர் கழுவேற்றத்தை நிறுவும் விதமாகச் சில ஆதாரங்களைத் தந்துள்ளார்.[8] தனது சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலில் திரு.வி.க போதிய அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.

"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.[9]

கழுவேற்றம்(Impalement) என்பது மரண தண்டயிலேயே கொடுமையான ஒன்று. வலிமையான மரத்தினை செதுக்கி அதன் முனையை கூறாக்கி அதில் எண்ணையை தடவி கழுமரம் உருவாகிறது. உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கழுமரத்தின் மீது அமர வைப்பதால் ஆசனவாய் வழியாக அது உடலில் ஏறி வாய் வழியாக துடிதுடிக்கச் செய்து வெளியேறும்.
பொதுவாக மரணித்தவர்களை எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். ஆனால் கழுமரத்தில் ஏற்றியவர்களை அப்படியே விட்டுவிடுவார்கள். கழுகுகளும் நரிகளுமே அந்த உடல்களை கொத்தி தின்னும். இத்தனை பெரிய தண்டனை யாருக்கு கொடுப்பார்கள் என்ற கேள்வி எழலாம்.

திருடர்கள்,கொலையாளிகள் முக்கியமாக அரசிற்கு எதிராக குற்றம் செய்தவர்களுக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்து சமயத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் பல்வேறு கலாச்சாரத்தில் இந்த கழுவேற்ற சம்பவம் சிறு சிறு பரிணாம வேறுபாடுகளோடு அரங்கேறியிருக்கிறது.

உடன்கட்டை ஏறுதல், நவகண்டம் என மறுக்கபட்ட வழக்கங்கள் போல கழுவேற்றமும் காலாப்போக்கில் காலாவதியானது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கழுமரங்கள் காணக்கிடைக்கும். திருப்புல்லாணி என்கிற இடத்தில் 5 இரும்பாலான கழுமரங்களை வணக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் போன்ற அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது ராமநாதபுரம், ஈரோடு என தமிழகத்தின் மற்ற சில இடங்களில் கழுவேற்றம் தொடர்பான பழங்கால ஓவியங்களும் சிற்பங்களும் அங்காங்கே காணக்கிடைக்கின்றன.

குற்றம் புரிந்தவர்கள் எனினும் கழுமரத்தில் இறந்தவர்களின் ஆன்மா அதில் இருக்கிறது என்ற ஐதிகத்தில் கழுமரங்கள் இன்றளவும் வணங்கப்படுகின்றன. வேதனையில் உயிர்துடித்து ரத்த கறை படிந்த மரத்தால் ஆனா கழுமரங்கள் இன்னனும் உயிர்பெற்று இருக்கவில்லை.

அதனால் வெங்கழு எனப்படும் இரும்பாலான கழுமரங்களை உருவாக்கி அதனை மக்கள் வழிபடுகின்றனர். பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஈரோடு பகுதியில் மிச்சமிருக்கும் ஒரேயொரு பனை மரத்தால் ஆன கழுமரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை திருவிழாவில் ஆறாம் நாள் சமயத்தில் சுந்தரரும் மீனாட்சியும் சிவகங்கை குளத்தில் ஜமீன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்கள். அப்போது அங்கே சைவ சமய ஸ்தாபித வரலாறு பாடலாக ஓதப்பட்டது. கழுவேற்றம் எனப்படும் இந்த நிகழ்வில் சைவத்தின் புகழை பற்றி நிறைய பாடல்கள் படிக்கப்படும்.

இந்த வழக்கம் மதுரையில் நின்றசீர் நெடும் பாண்டியன் ஆட்சியின் போது 8000 சமணர்களை(Jains) கழுவேற்றியதன் தொடர்ச்சியாக கடைபிடிக்க படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இவ்வாறான ஒரு தண்டனையை சைவ சமயம் பெருமை கொண்டு எதற்காக கொண்டாடுகிறது? யார் அந்த சமணர்கள்?
பன்னெடுங்காலமாகவே தென்னாட்சியில் புத்த/சமண மதங்கள் தங்களது பங்கை ஆற்றியுள்ளன. ஜெயின் எனப்படும் சமண மதத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கென தனி வழிபட்டு முறையை கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் சமணம் தழைந்தோங்க அவர்களை கட்டுப்படுத்த சைவ சமய காவலர்கள் பல ஒழிப்பு நடவடிக்களில் ஈடுபட்டனர்.

அப்படி ஒரு புராண சம்பவம் தான் இன்றும்கூட விவாதத்திற்கு ஆளாகி கொண்டே இருக்கும் சமணர் கழுவேற்றம் நிகழ்வு. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் அற்புதங்களில் ஒன்றாக சமண கழுவேற்றம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

அன்றைய மதுரையை ஆண்ட கூண் பாண்டியன் சமண மதத்தை ஆதரித்து போற்றியதால் அமைச்சர்களும் ஏனைய மக்களும் அதன் ஏற்றக்கொள்ள வேண்டிப்பட்டது. மகாராணியான மங்கையற்கரசியாரும் மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைபிடித்தார்கள். மனச்சோர்வடைந்த அரசி திருஞானசம்பந்தரை மதுரை விஜயத்துக்கு அழைத்தார்.

மன்னரை மனம் மாற்ற வந்த சம்பந்தரை தடுக்கும் விதமாக சமணர்கள் அவர் இருந்த மாளிக்கைக்கு தீவைத்ததாகவும் இதனால் கோபமுற்ற சைவ பெரியவர் சமணருக்கு ஆதரவு தந்த மன்னர் மீது சினமடைந்தார். இது சாப நோயாக பாண்டியனை தாக்கியது.
சமண முனிகள் எவ்வளவு முயன்றும் அரசனின் நோயை தீர்க்க முடியவில்லை. பின்னர் மங்கையர்க்கரசியின் வேண்டுக்கோளுக்கு இணைய திருஞானசம்பந்தர் திருநீற்றை தந்து நோயை குணப்படுத்தினார். மன்னரும் தான் சைவத்திற்கு திரும்பவதாக ஒப்புக்கொண்டார். இப்போது சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் நேரடியாக போர் மூண்டது.

அக்கால முறைப்படி சம்பந்தரை வாதத்திற்கு அழைத்தனர் சமணர்கள். வாதத்தில் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் எனவும் சபதமிட்டனர். முதல் போட்டி அனல் வாதல் – ஏடுகளை நெருப்பில் இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. பனை ஓலைக்களுக்கு பதிலாக பிராய் போன்ற மரப்பட்டைகளை பயன்படுத்தி சூழ்ச்சி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இரண்டாவது போட்டி புனல் வாதம் – ஏடுகளை ஆற்றில் வீசி எறிந்த போது சம்பந்தரின் ஏடுகள் மட்டும் நீரோட்டத்திற்கு எதிர் திசையில் அடித்துக் கொண்டு வந்தன. ஆனால் சம்பந்தர் இதில் சூட்சமமாக ஓடும் நீரில் எதிர்திசையில் நகரும் கருட சஞ்சீவி வேரை சுவடிகளோடு மலர் போல கட்டிவிட்டிருக்கிறார். இயற்கையில் இப்படி ஓர் அதிசய வேர் இருப்பதே சமணர்கள் அறியாதிருந்தனர்.

போட்டியில் தோற்றதால் சாமணத்தம் என்ற இடத்தில் எண்ணாயிரம் சமணர்கள் வரிசையாக கழுவேற்றப் பட்டதாக சொல்கிறது பெரிய புராணம்.

மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
“துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க” வென்று கூற

இதற்கு சைவ ஆதரவாளர்கள் சார்பாக பல்வேறு சான்றுகள் சமர்பிக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கழுகுமலை சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் தொடர்பான ஓவியங்கள் இருக்கின்றன. மேலும் ஆவுடையார் கோயில், சிதம்பரம் நடராஜர் போன்ற இடங்களில் கழுவேற்ற சிலைகள் கிடைக்கின்றன.பிற்கால புலவரான ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப்பரணி, திருவிளையாடல் புராணம் இதனை வழிமொழிகின்றன. ஆரம்பத்தில் எல்லோராலும் ஏற்றக்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் இதன் நம்பகத்தன்மை குறித்த விவாதம் அதிகரிக்க தொடங்கியது.
என்னதான் சைவ புராணங்கள் மாற்றி மாற்றி இதைப் பற்றி குறிப்புகளை தந்தாலும் எந்த சமண நூல் இலக்கியமும் கல்வெட்டும் இந்த நிகழ்வினை குறிப்பிடவில்லை. மதுரைக்கு மேற்கில் உள்ள சமணப் பள்ளிகளில் கழுவேற்றம் நடந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு எவ்வித கல்வெட்டும் இல்லை.

இது அந்த சமயத்தில் நடந்த சமண வீழ்ச்சியை குறிப்பதாக எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னர் வந்த சமண கல்வெட்டுகள் ஏன் இதனை குறிக்கவில்லை என தெரிவில்லை. அதன் பின் வந்த பல்வேறு அறிஞர்கள் வெவ்வேறு விதமான கருத்துகளை வெளிப்படுத்தினர்.

இதனை சந்தேகிக்க காரணம் பல உண்டு. தமிழ் மரபில் உடன் கட்டை ஏறுதல், தோற்றவர்களை கழுவேற்றுதல் போன்ற கொடுரமான பலியிடல் முறைகள் இருந்தபோதும் சமணர்களுக்கு அவ்வாறில்லை. வடக்கு நோம்பிருந்து உயிர்விடல் எனும் முறையே இருந்தது. மேலும் புத்த பிட்சு, சமண முனி ஆகியோரை கொன்றால் ஜென்ம சாபம் வந்து சேரும் என இந்து மன்னர்கள் நம்பினர் என்பது யாவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட ஒரு சமூகம் ஒரு சமண குழுவை பலியிட்டதா எனும் போது கேள்விகள் எழமால் இல்லை. போட்டியில் தோற்றதால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம். காலப்போக்கில் அது சைவத்தின் வெற்றியை போற்றும் விதமாக மருவியிருக்கலாம்.

முக்கியமாக எண்ணாயிரம் என்பது 8000 சமண முனிகளை குறிப்பிடவில்லை, அது ஒரு குறுப்பிட்ட குழுவினரையோ ஊரையோ பற்றி சொல்கிறது என முன்மொழியப்பட்டது. முனைவர் கொடுமுடி ச.சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.பிற்காலத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வில் எண்ணாயிரம் என்பது ஒரு இடத்தை குறிக்கிறது என ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே 8000 சமணர்கள் கொல்லப்படவில்லை. ஒரு குழுவினர் மட்டுமே என தெரியவந்தது. அதன்பின்னர் இது தொடர்பான உண்மை அறியும் வேட்கையும் அதிகரித்தது.

திரு.வி.க தான் எழுதிய இளமை விருந்து நூலில் போதிய சான்றுகள் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தை ஏற்க மறுத்தார். ஜெயமோகன் தனது வலைப்பதிவு ஒன்றில் சமணர் கழுவேற்றம் என்பது ஆதாரங்கள் அற்ற ஒரு புராண கதை மட்டுமே என எழுதியுள்ளார்.  2017 ல் கோ.செங்குட்டுவன் எழுதிய சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் என்ற புத்தகம் இதன் மொத்த சரித்திரத்தையும் அலசி ஆராய்கிறது.

இன்று நாம் அறிந்திருக்கும் பழமை தமிழ் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியம் எல்லாமே சங்க தமிழ் நூல்களில் இருந்து பெறப்பட்டதே. திருமண முறைகள், உணவு பழக்கம், குடும்ப சடங்குகள், போர் கலாச்சாரம் என யாவுமே நம்மிடம் கடத்தப்பட்டது இவ்வழியே. எனவே புராணங்களை அப்படியே ஒதுக்கிவிடலாகாது.

ஓவியங்களும் சிற்பங்களும் சில நேரம் கற்பனை கலந்து இருப்பது தான் யதார்த்தம். உதாரணமாக கோவில்களில் காணப்படும் யாளி யை முழவதும் நிஜமென கருதமுடியாது. முறையான தொல்லியல் ஆராய்ச்சியும் கலாச்சார வரலாற்று கட்டமைப்பையும் செய்து அறிஞர் சபையில் என்றுமே விவாதிக்க பட வேண்டியது சமணர் கழுவேற்றம்.
அன்புள்ள  ஆனந்த்,

உபயோகமான இணைப்பு.

நான் எப்போதுமே இந்த சமணர் கழுவேற்றம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதே என்னுடைய எண்ணம். அது ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்றுத்தகவல் அல்ல, ஓரு தொன்மம் மட்டுமே. அதை அரசியல் காரணங்களுக்காக வரலாற்றுத்தகவலாக ஆக்குகிறார்கள்.

எந்த ஒரு வரலாற்றுத்தகவலுக்கும் அதை மறுக்கிறவர்களிடம் அதை நிரூபிக்க ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக வரலாற்றில் பெரும்பாலான விஷயங்களைப்போலவே இதிலும் தொன்மம் அப்படியே வரலாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய ஆராய்ச்சி கூடச் செய்யப்படவில்லை.

சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு இருக்கும் ஆதாரம் என்பது சைவசமயப்பாடல்களுக்கு பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் தொன்மம் மட்டுமே. அந்தப்பாடல்களை எடுத்துப்பார்த்தால் சைவக்குரவர்களின் மூல வரிகளில் கழுவேற்றம் குறித்த தெளிவான குறிப்புகள் ஏதுமில்லை. சமணர்களை வாதில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே உள்ளது.

கழுவேற்றம் நடந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் போன்ற அக்காலத்தைய  ஆதாரங்கள் ஏதுமில்லை. மறுபக்கம் சமணர்களின் நூல்களில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தமைக்கான சான்றுகள் இல்லை. சமணர்களின் தென்னகத்தலைநகரமான சிரவணபெளகொளாவில் உள்ள சமண ஆவணங்களில் ஏதேனும் சான்று உள்ளதா என இன்றுவரை எவரும் ஆராய்ந்ததில்லை.

அந்த தொன்மத்தை அப்படியே வரலாறாக எடுப்பதற்கான தடை என்ன? இச்சம்பவம் நடந்தபின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணர்கள் தமிழ்நாட்டில் மிக வலுவாக இருந்திருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில்கூட பாண்டியநாட்டில் அவர்கள் நிறையபேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எங்குமே எதையுமே சொல்லவில்லை.

இரண்டாவதாக, இந்தக்கதையை நம்புவதாக இருந்தால் சைவக்குரவர்களை சமணர்கள் கொடூரமாக துன்புறுத்திய கதைகளையும் நம்பவேண்டும். சுண்ணாம்பு காளவாயில் அப்பரை போட்டதும் தந்திரங்கள் மூலம் சம்பந்தரை கொல்ல முயன்றதும், பதினாறாயிரம் சைவர்களை கொல்ல சதிசெய்ததும், கோயில்களை அழித்ததும் எல்லாம் உண்மையாகிவிடும்.  இந்தியாவில் எங்குமே சமணம் அப்படி நடந்துகொண்டது என்பதற்கான ஒரு சான்றுகூட இல்லை. அப்படி சமணத்தை அவதூறு செய்ய எவருக்குமே உரிமை இல்லை.
மூன்றாவதாக, சமணர்களுக்கும் சைவர்களுக்கும் நடந்த விவாதத்தில் ஏடுகளை நீரிலும் தீயிலும் போட்டுத்தான் எது புனிதமானது என நிரூபித்தார்கள் என்று நம்ப வேண்டியிருக்கும். பகுத்தறிவாலார் அபப்டி நினைக்கிறார்கள், எனக்கு அது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது.

சமணமும் சைவமும் தத்துவ மோதல்களில் ஈடுபட்டது ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில். சைவம் பெரிய இயக்கமாக வளர்ந்தது மேலும் மூன்று நான்கு நூற்றாண்டு கழித்துத்தான். சைவப்பெருமதம் உருவானபோது அதற்கே உரிய தொன்மக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. நாயன்மார்களின் தொன்மங்கள் அவ்வாறு உருவாக்கப்பட்டன. ஆகமங்கள் உருவாக்கப்பட்டன. சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்டன.

இக்காலகட்டத்தில்தான் சைவக்குரவர்களைப் பற்றியும் உக்கிரமான தொன்மங்கள் பல உருவாயின. வெள்ளெலும்பை பெண்ணாக்கியது. கோயில் கருவறை கதவு திறக்கவும் மூடவும் பாடியது இவைபோல. இவை நூல்களில் உரைக்குறிப்பாகவும் இடைச்செருகல்களாகவும் சேர்க்கப்பட்டன. அப்பர் கல்லைக்கட்டி கடலில் போடப்பட்டது, சம்பந்தர் சமணரை கழுவேற்றியது எல்லாம் அப்போது உருவாக்கப்பட்ட தொன்மங்களே. சைவக்குரவர்களை தெய்வங்களின் தளத்துக்குக் கொண்டுசெல்வதற்காக உருவாக்கப்பட்ட மிகையான தொன்மங்கள் இவை.

இவற்றில் ஏதேனும் உண்மை இருக்குமா? சமணர்கள் கழுவேற்றப்பட்டிருக்கலாமா? ஆ. ஈசுவரமூர்த்திப்பிள்ளை சொல்வதைப்போல சமண-சைவ பூசலில் சமணர்கள் சிலர் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை வாது வைத்திருக்கலாம், அப்படி ஒரு வழக்கம் முன்னும் பின்னும் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. எண்ணாயிரம் என்பது குலப்பெயராக இருக்கலாம். வணிகர்கள் எண்ணாயிரம் கூட்டம் நாலாயிரம் கூட்டம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறார்கள்

ஆனால் அதற்குள் எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற அதிகொடூரச் சித்திரம் உருவாக்கப்பட்டுவிட்டது. அதை தமிழ்ச் சமூகம் குற்றவுணர்ச்சி இல்லாமல் ஏற்றது என்கிறார்கள். அஞ்சினான் புகலிடம் அமைத்து மன்னர்களையே உள்ளே வரவிடாமல் தார்மீக தடை விதித்தவர்கள் சமணர்கள். ஒரு சமணமுனி இறந்தால்கூட அந்த பாவம் பலநூற்றாண்டுகள் பின்னால் வரும் என நம்பிய  தமிழ்ச்சமூகம் இது. ஆனால் அந்த மாபெரும் கொலை வேறு எங்குமே பதிவாகவில்லை என்றும் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

மேலே உள்ள கழுவேற்ற சிலையை பாருங்கள்.  இதை ஒருவர் சமணார் கழுவேற்றத்துக்கான ஆதாரம் என்கிறார். என்ன ஒரு ஆதாரம்! சமணர் எக்காலத்தில் முடிவளர்த்தார்கள்? அது சமணக் கோட்பாட்டுக்கே எதிரானது. நீள்குடுமியும் அரைக்கச்சையும் அவனை ஒரு படைவீரனாகவே காட்டுகின்றன. மீசைவேறு.
இப்படி போலி ஆதாரம் கொடுத்தாவது ஒரு தொன்மத்தை உண்மையாக்கவேண்டும் என்பது யாருடைய கட்டாயம்? அப்படி சமணர்களை, சைவர்களை, தமிழ்ச்சமூகத்தை ஒட்டுமொத்தமாக சித்தரிப்பதன் மூலம் யார் என்ன அடைகிறார்கள்?

ஆ.ஈசுவரமூர்த்திப்பிள்ளை அக்காலகட்டத்து சைவ அடிப்படைவாதிகளில் ஒருவர். செந்தமிழ்ச்செல்வியில் நிறைய எழுதியிருக்கிறார். சமணர்களை அவர் சைவர்களை கொடுமைப்படுத்திய கொடூரர்களாகவே சித்தரிக்கிறார். ஆனால் சம்பந்தரை கொல்ல முயன்ற சில சமணர்களே மன்னரால் கழுவேற்றப்பட்டார்கள் என்கிறார் . அக்டோபர் 2009 ‘ரசனை’ மாத இதழில்  ஈசுவரமூர்த்திப்பிள்ளை  அவர்கள் எழுதிய சமனர் குறித்த கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது

 கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர்.

சமணர் கழுவேற்றம் :

சமணம் தழைத்தோங்கி இருந்த காலகட்டம் அது , வைதீக மதம் நலிந்து வேதத் தொழில் பாதிப்புக்கு உள்ளானது , சோழ நாடான சீர்காழியில் சிவபாத விருதையர்-பகவதி ஆகிய ‘பிராமண’ வைதிக தம்பதிகளுக்குப் பிறந்தவர் சம்பந்தர் , தனது தந்தையாரின் கலக்கத்தை தமிழ் கற்ற மகன் தேற்றுகிறான் , "அப்பா அழாதே, எவ்வாறாயினும் இந்த சமணப் பூண்டை வேரறுக்க நமது குடும்பம் தியாகம் செய்ய வேண்டுமே தவிர, புலம்புவதால் பயனில்லை" என்று தேற்றினார் , அவர் இவ்வாறு சூளுரைத்து வீட்டை விட்டு கிளம்புகிறார் ….

சம்பந்தர் தனது மதுரைப்பாடல்களில் :

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."

"அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச்

சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே..."

"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."

மேலே உள்ள வரிகள் மூலம் திருஞானசம்பந்தர் சமணர்களை வெறுத்தார் என்று தெரிய வருகிறது. ஆனால் எதற்கு அவர்களை வெறுத்தார் என்பதே நாம் அறிய வேண்டியது. சமணர்கள் வேத வேள்விகளை மதிப்பதில்லையாம்... அந்தணர்கள் சொல்லையும் கேட்பதில்லையாம்...அதனாலே திருஞானசம்பந்தர் அவர்களைச் சாடுகின்றார். அதனாலையே சாடுகின்றாரே தவிர அவர்கள் சைவத்தினை மதிப்பதில்லை என்பதற்காக சாடவில்லை.

வேதத்தையும் வேள்வியையும் திட்டிக் கொண்டு திரியும் பயனற்றவர்களான சமணர்களையும் பௌத்தர்களையும் நான் வாதத்தில் வென்று அழிக்க விரும்புகிறேன் என்கிறார்.

நின்றசீர் நெடுமாறன் என்கிற கூன் பாண்டியன் (கிபி 640–670) சமணத்தை தழுவியிருந்தான் அவனது மனைவி மங்கையற்கரசி மற்றும் மந்திரி குலச்சிறை தீவிர சைவர்களாக இருந்தனர் , எப்படியாவது பாண்டியனை சைவ மதத்திற்கு மாற்றும் பொருட்டு சம்பந்தரை அழைத்தனர் , கூன் பாண்டியனுக்கு சூலை நோய் (வயிற்று வலி) வரும்படி செய்து அதற்கான மாற்று மருந்தை ராணியின் கையால் கொடுக்க செய்தார் சற்று நேரத்தில் அவர் மீது திருநீறு பூசி அதன் காரணமாக வயிற்று வலி நீக்கியதாக நாடகமாடினார் , இந்த விவரம் தெரியாத சமணர்கள் அவரது வயிற்று வலியை இன்னதென்று புரியாமல் நீக்க முடியாமல் திணறினர்.

மந்திரமாவது நீறு! வானவர் மேலது நீறு!

சுந்தரமாவது நீறு! தந்திரமாவது நீறு! …

இந்த இடத்தில் சமணர்கள் குறுக்கிட்டதால் சமயத்தில் உதவுவது திருநீறு என்று சொல்லி அள்ளி பூசுகிறார் , மாற்று மருந்து ராணியார் கொடுத்ததால் வயிற்று வலி நீங்கப்பெற்றார்.

அடுத்து அனல்வாதம் செய்ய சமணர்களை அழைத்தார் , அதன் படி ஒரு ஓலையில் தங்கள் மதம் சார்ந்த குறிப்புகளை எழுதி அதை நெருப்பில் போட வேண்டும் , சமணர் இட்ட ஓலை எரிந்து கருகியது , சம்பந்தர் "போகமார்த்த .." என்ற பாடல் எழுதிய ஓலை எரியாமல் அப்படியே இருந்தது , கந்துசேனர் குறுக்கிட்டு அந்த அதிசயமான சைவ ஓலையை அனைவரிடமும் காட்டு என்கிறார் , சம்பந்தர் தயங்க கந்துசேனர் அதை தரையில் பிடுங்கி எறிகிறார் , அது இரும்பு தகடினால் எழுதப்பட்ட ஓலை , இதை வைத்து தான் "தகிடுதத்தம்" என்ற வழக்கு உண்டாயிற்று. இப்படி சமணர் ஓலைகளை அழித்து முடித்தார்.

அடுத்து புனல் வாதம் இது தான் இறுதி இதில் தோற்பவர் கழுவேற்றப்பட வேண்டும் என்கிறார் சம்பந்தர், சமணர் "அத்தி நாத்தி " என்றெழுதிய ஓலை தண்ணீரில் மூழ்கவே , சம்பந்தர் தன் "வாழ்க அந்தனர் .." என்று தொடங்கும் பாடல் ஓலையை இடுகிறார் அதுவும் மூழ்கவே , மந்திரி குலச்சிறை அந்த ஓலை தண்ணீரில் எதிர்த்து வேகமாக நீந்துவதாக சொல்லி அந்த ஓலையை பின்தொடர்வதாக சொல்லி தன் குதிரையில் கிளம்புகிறார் திரும்பி வந்து அதே பாடல் கொண்ட ஒரு பிரதி ஏட்டை காட்டி திருவேடகம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிக்கருகில் சென்று ஏடு அப்படியே நின்றுவிட்டது என்றும் கதை விடுகிறான். பாண்டியனும் நம்புகிறான் தன் சூலை நோய் தீர்ந்ததிலேயே சம்பந்தன் பக்கம் சாய்ந்திருந்த பாண்டியன் மந்திரி சொன்னதை உண்மை என்று ஏற்றான் , சமணர்கள் கண் முன்னே நடந்த மோசடியை நிரூபிக்க முடியாமல் திண்டாடினர் , கழுவேற்றம் நிகழ்ந்தது. சமணர் குடும்பங்களை ஆங்காங்கே அழிக்க உத்தரவு பறந்தது , மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த விவரம் தெரிந்த பலர் உத்திராட்ச கொட்டை திருநீறு அணிந்து சிவசிவா என்று சொல்லி தப்பினர், சிலர் சொக்கநாதர் கோயிலுக்குள் சென்று மதம் மாறி விட்டதாக அறிவித்தனர் , விசயம் தெரியாத சமணர்கள் ஏன் கொல்லப்படுகின்றோம் என்று தெரியாமலேயே கழுவேற்றப்பட்டனர்.

“சம்பந்தர் : குழந்தை, குட்டிகள், பெண்டுகள், பெரியவர்கள் என்று பார்க்க வேண்டாம். சமணப் பூண்டு ஒன்றுகூட இருக்கக் கூடாது! நாங்கள் பார்க்க வருவோம்" என்று உத்தரவிடுகிறார்.

மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 8000 சமணர்களை கழுவேற்றியதாக பெரியபுராணம் கூறுகின்றது , அதோடு அல்லாமல் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் என்று பின்னர் வந்த சமய அறிஞர்கள் கழுவிலேற்றிய நிகழ்வு நடந்ததாகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.

மதுரை சித்திரை திருவிழா ஆறாம் நாளின் போது அங்கே கழுவேற்ற வரலாறு பாடலாக ஓதப்படுகிறது , திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழாவின் போதும் சைவ ஸ்தாபித வரலாறான கழுவேற்றம் ஓதப்படுகிறது, திருமங்கலம் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது, இதை கொண்டாட நியாயமான ஒரு கதை இருக்க வேண்டுமல்லவா ? சமணர்கள் கொடுமை செய்பவர்கள் அல்லவே அப்புறம் எப்படி ? , அதற்கு தான் , சமணர்கள் சம்பந்தரை தீயிட்டு கொளுத்த திட்டமிட்டதாகவும் , அதிலிருந்து தப்பி மன்னரின் சூலை நோயை தீர்த்து காத்ததாகவும் அதோடு திருநீற்றுப்பதிகமும் பாடி சமணரை அனல்-புனல் வாதில் வென்றதாக பெரியபுராணத்தில் கதையாக உள்ளது. பிற்காலத்தில் தனது பதினாறாவது அகவையில் அவருக்கு திருமணம் சீர்காழிக்கு அருகில் உள்ள ஆச்சாள்புர சிவ ஆலய மண்டபத்தில் நடந்த போது அக்கினியை வலம் வருகையில் ஏற்பட்ட தீயில் உண்மையில் சிக்கி மாண்டார் , அதையே சிவனோடு சோதியில் ஐக்கியமானார் என்று கூறி அந்த நிகழ்வை வைகாசி மூலத்தன்று சோதியில் ஐக்கியமான திருமண விழாவாக அவருக்கு நடத்துகின்றனர்.

வடக்கில் சமணத்தை அசோகர் அழித்தார், சமணர்களின் தலையை கொண்டு வருபவருக்கு வெள்ளி காசுகள் பரிசளித்தான். அவர் வழியில் மோரிய வம்சத்தின் கடைசி வாரிசை ராணுவ அணிவகுப்பின் போது கொன்று பதவிக்கு வந்த படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கா என்ற பிராமணர் பௌத்தர்களை அழிக்க அசோகர் வழியையே பின்பற்றினார், வைதீக மதம் இவர் காலத்தில் தான் வளர்ச்சியடைந்து நிலை பெற்றது. வடக்கில் அசோகரும் , சுங்கரும் சமண -பௌத்தத்தை அழித்தனர், தெற்கில் சம்பந்தர் அருள் பெற்ற கூன் பாண்டியன் அதே பணியை செய்து முடித்தார். 400 ஆண்டுகள் கழித்து 9, 10 ம் நூற்றாண்டில் அச்ச நந்தி போன்றவர்களால் மீண்டும் சமணம் எழுந்து பிறகு 13,14ம் நூற்றாண்டு வாக்கில் மீண்டும் வீழ்ச்சி அடைந்தது.

சிகையுடன் காட்சியளிக்கும் ஆசீவக/சாவக சமணரின் கழுவேற்றம் :


படம் : கூகுள்

ஜைன (அருகர்கள்) சமணர்கள் தான் தலையை மழித்து இருப்பர். ஆசீவகர்களும், சாவகர்களும் (இல்லற சமணர்கள்) நீண்ட சிகையுடன் இருப்பர்.

References:

Sunday, 1 December 2019

RANVIR SENA OF BIHAR TERRORIST OF HIGHER CASTE ORGANISATION KILLED 63 ON DECEMBER 1,1997



RANVIR SENA OF BIHAR TERRORIST OF 
HIGHER CASTE ORGANISATION
KILLED 63 ON DECEMBER 1,1997




ரன்வீர் சேனா (Ranvir Sena இந்:रणवीर सेना) எனப்படுவது, பீகாரிய சாதிவாரி நிலக்கிழாரிய படையணிகளில் ஒன்றாகும்[1]. இது 1994ம் ஆண்டு தரிசன் சவுத்ரி மற்றும் பிரம்மேசுவர் சிங் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் பூமிகார் நிலக்கிகிழார்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன் அவர்களது நில மேலாண்மையை உறுதி செய்வது ஆகும். இந்த இயக்கம் பல முறை தலித், பழங்குடி மற்றும் பொதுவுடமைவாதிகளின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும் இலச்மண்பூர் பதே மற்றும் பதனி டோலா படுகொலைகளிலும் இது ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது[2][3][4]. இதன் காரணமாக இந்திய அரசு இதை ஒரு தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தியுள்ளது. பீகார் அரசும் இதனை யூலை 1995ல் முதல் சட்டப்பூர்வமாக தடை செய்துள்ளது[5].

பெயர் காரணம்

ரன்வீர் எனும் பெயர் ரன்வீர் பாபா எனப்படும் பூமிகார் சாதியை சேர்ந்த ஒரு மகானின் பெயரில் இருந்து வந்தது. மேலும் 19ம் நூற்றண்டைச் சேர்ந்த பூமிகார் இராணுவ வீரரான ரன்வீர் சவுத்ரி என்பவரின் பெயரும் இதற்கான இன்னொரு முக்கிய காரணம். ரன்வீர் சவுத்ரி, அவரின் காலத்தில் போஜ்பூர் மாவட்டத்தில் நிலவி வந்த இராசபுத்திரர்களின் நில மேலாண்மையை தகர்த்து, பூமிகார் பிராமிண்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டியத்தில் முக்கிய பங்காற்றியவர்[6]. எனவே இவர்களின் பெயரை சேர்த்து ரன்வீர் சேனா (ரன்வீரின் படைகள்) என இந்த இயக்கம் பெயரிடப்பட்டது.

வரலாறு

1962ல் ஏற்பட்ட இந்திய சீனப் போரை தொடர்ந்து இந்திய பொதுவுடமைக் கட்சி இரண்டாக பிரிந்தது. இது மார்க்சிய லெனினிய இயக்கங்களின் தோற்றத்திற்கு அடிகோலாக அமைந்தது. ஆயுதம் தாங்கிய இந்த புரட்சிக் குழுக்கள் முதலில் மேற்கு வங்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கின. பின்னர் 1970களின் ஆரம்பத்தில் இவை பீகார் மாநிலத்திலும் தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கின. அடித்தட்டு மக்களின் சார்பாக இயங்கிய இந்த அமைப்புகள், பெரும் நிலக்கிழார்களிடமிருந்த நிலங்களைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தன. இது பெரும் நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட பிராமண மற்றும் ஆதிக்க சாதி மக்களுக்கு பெரும் நட்டத்தைத் தோற்றுவித்தது. மேலும் அதிக அளவிலான தாழ்த்தப்பட்ட மக்கள் இவ்வகையான புரட்சி இயக்கங்களில் சேர்வதும், அவற்றின் பலம் பெருகுவதும் தங்களின் நலனுக்கு எதிரானதாக இம்மக்களால் பார்க்கப்பட்டது.

எனவே இந்த இயக்கங்களை எதிர்க்கும் வகையில் தங்களுக்கான தனியார் படையணியை இம்மக்கள் அமைத்துக்கொண்டனர். இது ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் நிலக்கிழார்களின் கூட்டுப் படையணியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு 1979ல் இராசபுத்திரர்களால் கவுர் சேனா எனப்படும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ந்து 1990 வரை பல்வேறு சாதியினராலும் வெவ்வேறான பகுதிகளில் வெவ்வேறான பெயர்களில் பல நிலக்கிழாரிய படைகள் அமைக்கப்பட்டன.

இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட படைகளில் சுவர்னா லிபரேசன் பிரண்ட் மற்றும் சன்லைட் சேனா ஆகியவற்றை இணைத்து, புதியதாக ரன்வீர் சேனா உருவாக்கப்பட்டது. இதனை தரிசன் சவுத்ரி எனபவர் செப்டம்பர் 1994ல் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பேளூர் எனும் கிராமத்தில் வைத்து ஆரம்பித்தார். பிரம்மேசுவர் சிங் இந்த இயக்கத்தின் தோற்றத்தில் பங்குகொண்டதுடன் அதன் தளபதியாகவும் இருந்தார்[7]. இந்த இயக்கமானது, அளவிலும் கட்டமைப்பிலும் மற்ற இயக்கங்களை விட சிறந்ததாக வடிவமைக்கப்பட்டது. பூமிகார் மற்றும் பிற பிராமணிய சாதியினர் மட்டுமே இதன் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இதன் தொண்டர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது[8].

கொள்கைகள்

பூமிகார் நிலக்கிழார்களின் நலன் காப்பது ரன்வீர் சேனாவின் முக்கிய கொள்கை. அதோடு பீகாரில் கம்யூனிச ஒழிப்பு என்பது மற்றொரு முக்கிய கொள்கை[5][8]. இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பதன் அடிப்படையில் இந்த இயக்கம் இயங்குகின்றது. இந்த இயக்கம் தனது தாக்குதல்களைப் பெரும்பாலும் தலித், பழங்குடி மற்றும் பொதுவுடமைவாதிகள் மீதே தொடுக்கின்றது. சில நேரங்களில் பிற சாதி மற்றும் இசுலாமியர்களின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தலித் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக, அந்த குழந்தைகள் பின்னாட்களில் நக்சலைட்டுகளாக மாறலாம் எனவும், பெண்கள் அவ்வாறான நக்சலைட்டுகளை பெற்றெடுக்கலாம் என்பதாவும் ரன்வீர் சேனா கூறுகின்றது[1][9]

தாக்குதல்கள்
ரன்வீர் சேனா பல மனித உரிமை மீறல்களை பீகாரில் நடத்தியுள்ளது[10]. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.


ரன்வீர் சேனா மேற்கொன்ட தாக்குதல்கள்[8]
ஆண்டு தாக்குதல் மொத்த பலி
1995
ஏப்ரல் 4 - போஜ்பூர் மாவட்டம் கொபாரியாவில் 3 பேர் படுகொலை.
யூலை 25 - போஜ்பூர் மாவட்டம் சர்துவா நகரில் 6 பேர் படுகொலை.
9
1996
பெப்ரவரி 7 - போஜ்பூர் மாவட்டம் பதன்புராவில் 4 பேர் படுகொலை.
ஏப்ரல் 22 - போஜ்பூர் மாவட்டம் நன்பூரில் 3 பேர் படுகொலை.
மே 5 - போஜ்பூர் மாவட்டம் நதி நகரில் 5 பேர் படுகொலை.
மே 19 - போஜ்பூர் மாவட்டம் நதி நகரில் 3 பேர் படுகொலை.
யூலை 11 - பதனி டோலா படுகொலைகள். 22 பேர் படுகொலை.
நவம்பர் 26 - போஜ்பூர் மாவட்டம் புர்கராவில் 4 பேர் படுகொலை.
திசம்பர் 12 - போஜ்பூர் மாவட்டம் கானட்டில் 5 பேர் படுகொலை.
திசம்பர் 22 - போஜ்பூர் மாவட்டம் எக்பாரியில் 6 பேர் படுகொலை.
52
1997
மார்ச் 23 - ஃகபீசுபூர் படுகொலைகள். 10 பேர் படுகொலை.
ஏப்ரல் 10 - எக்வாரி படுகொலைகள். 10 பேர் படுகொலை.
நவம்பர் 3 - செகனாபாத் மாவட்டம் கடாசினில் 8 பேர் படுகொலை.
நவம்பர் 22 - செகனாபாத் மாவட்டம் கடேசர் நலாவில் 6 பேர் படுகொலை.
திசம்பர் 1 - இலச்மண்பூர் பதே படுகொலைகள். 58 பேர் படுகொலை.
92
1999
சனவரி 25 - சங்கர்பிகா படுகொலைகள். 23 பேர் படுகொலை.
பெப்ரவரி 10 - செகனாபாத் மாவட்டம் நாராயன்பூரில் 11 பேர் படுகொலை.
ஏப்ரல் 21 - கயா மாவட்டம் செந்தனியில் 12 பேர் படுகொலை.
46
2000
யூன் 16 - மியாபூர் படுகொலைகள். 35 பேர் படுகொலை.
செப்டம்பர் 10 - போஜ்பூர் மாவட்டம் துமாரியாவில் 6 பேர் படுகொலை.
41
2001
செப்டம்பர் 13 - கயா மாவட்டம் பரியா தொடர்வண்டி நிலைய தாக்குதல். 7 பேர் படுகாயம்.
நவம்பர் 18 - செகனாபாத் மாவட்டம் சுனாதி மோர் கிராமத்தில் 2 பேர் படுகொலை. இருவர் படுகாயம்.
2
2002
மார்ச் 16 - அர்வால் மாவட்டம் புத்துபிகா கிராமத்தில் 3 பேர் படுகொலை.
ஏப்ரல் 27 - போஜ்பூர் மாவட்டம் ஆராவில் 2 சிறுவர்கள் படுகொலை.
மே 5 - போஜ்பூரில், இராசசுத்தானைச் சேர்ந்த 6 தலித் கூலிகள் படுகொலை.
செப்டம்பர் 23 - செகனாபாத் மாவட்டம் மஜித்பூர் கிராமத்தில் 5 நக்சலைட்டுகள் படுகொலை.
அக்டோபர் 8 - செகனாபாத் மாவட்டம் நுவான் கிராமத்தில் ஒரு பெண் மற்றும் அவரது 3 வயது குழந்தையும் படுகொலை செய்யப்பட்டது.
அக்டோபர் 24-25 - போஜ்பூர் மாவட்டம் குர்முரி கிராமத்தில் 6 பேர் படுகொலை.
அக்டோபர் 2 - செகனாபாத் மாவட்டம் நோவாமா கிராமத்தில் ஒருவர் கொலை.
25
2003
பெப்ரவரி 11 - கயா மாவட்டம் நெவுதி கிராமத்தில் ஒருவர் படுகொலை. 2 பேர் படுகாயம்.
1
2004
சனவரி 3 - அர்வால் மாவட்டம் பரியாரி கிராமத்தில் 5 பேர் படுகொலை.
மார்ச் 28 - செகனாபாத் மாவட்டம் பிசுகின்புகா கிராமத்தில் 3 பேர் படுகொலை.
ஏப்ரல் 26 - அர்வால் மாவட்டத்தில் 3 நக்சலைட்டுகள் படுகொலை.
யூலை 29 - செகனாபாத் சிறை ககண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்துக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடப்பட்டது.
11