BURMESE -ANGLO WARS 1824 -1826
BURMESE -ANGLO WARS 1824 -1826 முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (First Anglo-Burmese War) (5 மார்ச் 1824 – 24 பிப்ரவரி 1826), பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே 1824 -26-களில் நடைபெற்ற முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் ஆகும். இப்போர் 1 ஆண்டு, 11 மாதங்கள் மற்றும் 19 நாட்கள் நடைபெற்றது. போரின் முடிவில் ஆங்கிலேயர்கள் வென்றதால், யாந்தபு உடன்படிக்கையின் படி, பர்மிய அரசு, அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம், அரக்கான், கச்சர் மற்றும் ஜெயந்தியா இராச்சியத்தின் மலைப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவிற்கு விட்டுக் கொடுத்ததுடன், போர் ஈட்டுத் தொகையாக ஒரு மில்லியன் பவுண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு செலுத்தியது.[ போருக்கான காரணங்கள் பர்மியப் பேரரசர் வங்காளத்தை கைப்பற்ற ஆணையிடல், 1823 கிபி 1822ல் பர்மியப் பேரரசின் தலைமைப் படைத்தலைவர் மகா பந்துலா, பிரித்தானிய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளான மணிப்பூர், அசாம் பகுதிகளை கைப்பற்றி, பிரித்தானிய இந்தியாவுடன் நெடும் எல்லையை உருவாக்கினார். பர்மிய ஆக்கிரமிப்புக்கு பயந்த, இந்தியாவின் வடகிழக்கில் இருந்த கச்சார் மற்றும் ஜெயந்தியா பகு...