Showing posts with label KERALA. Show all posts
Showing posts with label KERALA. Show all posts

Wednesday, 4 November 2020

800 YOUNG GIRLS SOLD BY FATHER CYRIAC OF KERALA

 

800 YOUNG GIRLS SOLD BY 

FATHER CYRIAC OF KERALA



“exporting” more than 800 young Catholic girls from Kerala to Germany ON SALE
Nearly half a century ago, Father Cyriac Puthenpurackal, who was in charge of an independent diocese in Ettumanoor in Kottayam district, was accused of “exporting” more than 800 young Catholic girls from Kerala to Germany in what came to be known as the “nun-running” scandal of the 1960s and early 70s. The girls, who mostly came from poor families, were apparently under the impression that they were going to be trained as nurses or teachers; but they actually landed up doing domestic work in the convents of Germany.
In the 1960s, the German convents were finding it difficult to maintain the huge nunneries which were built at a time when many local girls were willing to take their vows. In Kerala, on the other hand, large Catholic families were still eager to dedicate some of their children to the Church. Father Puthenpurackal and his associates exploited this situation and recruited young catholic girls from the backwoods of Kerala, and sent them to Germany, promising them that they would be given vocational training.
By the mid-1960s, the export of these girls was at its peak. Each of the many convents in Kerala got at least a dozen new recruits every year. There was no shortage of nuns in Kerala. But the girls who were sent to Germany were not necessarily ones who were intending to become nuns. Only after they reached Germany did they realise they had been lured under false pretenses, and that the German convents had actually paid money to get them over to do manual work. The money went into the pockets of the priests, and the families did not even know they had sold their daughters.
A foreign newspaper broke the story of these girls who were being used as bonded labour in the convents. Soon, there was an uproar in India. The Bishops of the Syro-Malabar Church in Kerala and the Catholic Church in Germany were found to be involved in the transactions.
Many papers both in India and abroad carried articles about these girls. But not too much effort was made to trace them and bring them back. In 1983, when the old scandal was almost forgotten, the name of Father Puthenpurackal re-surfaced. He was at his old game again, and this time the girls were being sent to Italy.
Read: Kerala's nuns 'sold' to Europe: Documentary sheds light on an old scandal
‘Escape’ from Italy
Mercy and Jessy who had “escaped” from an Italian convent and returned home with the help of a relative who lived in Italy, spoke to me then as I was doing a story on this issue. They had been told they would be trained as nurses, they said, but instead as soon as they reached Rome, they were made to dress as probationers in nuns’ clothing.
The girls came from a village in Kottayam and had hardly stepped out of their own district before. Their families were poor and illiterate. They trusted the Father implicitly when he said they would be trained abroad, and would get good jobs when they returned. But instead, they said, they ended up cleaning the long corridors, large windows and huge bathrooms of the convent.Their passports were confiscated when they landed, and like the couple of other nuns from Kerala who were in the convent, they, too, were treated like bonded labour. The Church had paid Rs 15,000 per head for them, they said. They finally escaped with the help of a relative of one of the girls who lived in Italy.
Recently, a journalist and filmmaker tried to trace some of the women who had been sent to Germany with the help of old newspaper reports which specified which convents they had gone to. They could trace only a few of them. Some were in good positions in the German convents, others had died, and some had returned to India. Maybe many had also escaped.
But all that is history.
Today Kerala is also facing a shortage of nuns. Families have shrunk, educated girls seek other career opportunities and the number of girls having a true “vocation” has dwindled to three or four per year. Kerala which has one of the oldest Christian communities in the country was once the largest producer of nuns. Today, there are hardly any young nuns in the convents. More girls from Jharkhand, Chhattisgarh and the North East seem to be taking the veil.
Nuns in Kerala are not treated on par with the priests. When they enter the convent as brides of Jesus, they are expected to pay a dowry to the church. The churches therefore would prefer to get girls from well-off families who might even bring a share of their ancestral property with them. Many of them work as teachers or nurses in the institutions run by the church. The salaries they get are confiscated by the Motherhouse. While their living expenses are taken care of, they have no spending money, and many of them depend on their visiting relatives to give them a little extra money. If they leave the convent, they are supposed to get back the amount they paid and some compensation, so that they can survive on their own in the outside world; but often they have to fight for this and settle for a lesser amount.
The convent, therefore, has a kind of stranglehold on the nuns as years of living inside the cloister makes them unprepared to face the outside world. Also, since the discipline of obedience is drilled into them, they cannot escape the clutches of powerful Bishops, Priests and Mother Superiors who could turn out to be predatory.
Even when a nun is murdered inside the convent, the murderers may never be brought to justice. Take the case of 19-year-old Sister Abhaya. In 1993, her body was found floating in a well inside the premises of her convent. Twenty five years later, the case against her alleged murderers is still going on. At first her death was deemed to be a suicide, further investigation over several years finally zeroed in on three suspects: a nun and two priests whom Sister Abhaya might have found in a compromising position when she went at 4 am to get some water from the kitchen. The three were arrested only 15 years later in 2008 and were out on bail in January 2009. Two years later, they filed a discharge plea. And, seven years later in 2018, one of the priests, who was the third accused, was acquitted. Will Sister Abhaya’s family ever get the justice they seek?
Inside the convent
It is not as if the convent is a cosy, serene haven for the nuns. In 2009, Sister Jesme, who had spent more than 30 years as a nun, left the convent after she took VRS when she was the principal of a school. After she came out, she wrote a scathingly critical book called “Amen”, about the oppression nuns face within the convent. Writing from her own personal experiences, she described sexual misconduct on the part of priests as well nuns. She said she was sexually harassed by a Mother Superior of a convent who told her that this was the best kind of sexual relationship they could have as there was no danger of pregnancy. She described how senior priests preyed on novices. She also wrote of a respected priest who took her to his room when she was in Bengaluru. He stripped and ordered her to do the same and touch him. All the while, he was telling her about senior priests and bishops and the relationships they were in.
Sister Jesme’s book caused a furore and senior Church officials dismissed it as a “book of trivialities.” Even her family abandoned her as they did not want to be rejected by their society. The convent turned her out without any money though she had served them for thirty years. She was labelled a prostitute by some Church officials. Today, almost a decade later, Sister Jesme looks happier for having taken that decision to leave the convent. She has now come out with another book, this time in the form of a novel.
The alleged rape of a nun by Bishop Franco has brought all these problems to the fore again. Only this time it is a bit different. The nuns are now learning to speak for themselves and ask for justice.
To those who ask why she allowed herself to be raped repeatedly and why did she not leave the convent immediately after the first time, the answer becomes self-evident. The Bishop was the powerful one, the man she had been taught to trust and obey. Obviously, complaining to her superiors about him did not help. If she had left the convent, she would have not only been penniless she would have also have been socially ostracised.
The rise of her fellow nuns in her support is an act of great bravery. Hopefully the Church as well as society and the government will give them protection and enable them to fight for the justice they deserve.
Views expressed are the author's own.

Wednesday, 28 October 2020

MARRIAGE - FIVE IN ONE LABOUR WARD, THREE MARRIED AT A TIME IN KERALA

 

MARRIAGE - FIVE IN ONE LABOUR WARD,

THREE MARRIED AT A TIME IN KERALA



கேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்!


தன் ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்துவைக்க விரும்பினார் கேரளாவைச் சேர்ந்த ரமாதேவி.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். ஐந்து குழந்தைகளும் ஒரே பிரசவத்தில், சில நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஓர் ஆண் குழந்தை, நான்கு பெண் குழந்தைகள் என நிகழ்ந்த ரமாதேவியின் பிரசவம், கேரளாவில் கொண்டாடப்பட்டது. ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள் என கேரள மீடியாவில் அது முக்கியச் செய்தியானது.உத்திர நட்சத்திரத்தில் பிறந்த தன் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிட்டு வளர்த்தனர் பிரேம்குமாரும் ரமாதேவியும். தன் ஐந்து குழந்தைகளையும் ஐந்து ரத்தினங்கள் என்று கொஞ்சிய பெற்றோர், அவர்களை 'பஞ்சரத்னம்' என ஆசையுடன் அழைத்தனர்.


ஐந்து குழந்தைகளுக்கும் பிறந்தநாள், அவர்களை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நாள், அவர்களுக்குப் பொதுத்தேர்வு முடிவு வரும் நாள் என்று எல்லாமே அந்தக் குடும்பத்தில் அதிக மகிழ்ச்சியுடனும் உலகத்துக்கு ஆச்சர்யத்துடனுமே நடந்தது.

பஞ்ச ரத்தினங்கள்

இதற்கிடையில், ரமாதேவிக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவச் செலவு கையை மீறிச் சென்றது. சிறு வியாபாரியான பிரேம்குமார், கடன் பிரச்னையால் மனமுடைந்து 2004-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஐந்து குழந்தைகளுடன் கஷ்டப்பட்ட ரமாதேவிக்கு கேரள அரசு, கூட்டுறவு வங்கியில் வேலை வழங்கியது. அதன்பிறகு குழந்தை களை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார் ரமாதேவி.ஐந்து குழந்தை களையும் உடை முதல் பழக்கவழக்கங்கள் வரை அனைத்திலும் ஒரே மாதிரியாக வளர்த்த ரமாதேவி, அவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்காகக் கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்.


ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ள உத்ராவிற்கு ஆயூரைச் சேர்ந்த, தற்போது மஸ்கட்டில் ஹோட்டல் மேலாளராக இருக்கும் அஜின் குமார் நிச்சயக்கப்பட்டார்.கொச்சி அமிர்தா மருத்துவக் கல்லூரியில் மயக்க வியல் டெக்னீஷியனாகப் பணிபுரியும் உத்ரஜாவுக்கு, பத்தணம் திட்டாவைச் சேர்ந்த மயக்கவியல் டெக்னீஷியன் ஆகாஷ் நிச்சயக் கப்பட்டார்.ஆன்லைன் ஊடகத்தில் செய்தியாளராகப் பணிபுரியும் உதாராவிற்குக் கோழிக்கோடைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகேஷ் நிச்சயக்கப்பட்டார்.திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீஷிசியனாகப் பணிபுரியும் உத்தமாவிற்கு மஸ்கட்டில் அக்கவுன்டன்டாகப் பணிபுரியும் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த வினீத் நிச்சயக்கப்பட்டார்.



குருவாயூரில் வைத்து நடந்த திருமணம்

கடந்த ஏப்ரல் மாதம் ரமாதேவியின் நான்கு மகள்களின் திருமணமும் ஒரே நாளில் குருவாயூரில் நடக்க இருந்தது. கொரோனா ஊரடங்குக் காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி தன் 'பஞ்சரத்னங்களில்' மூன்று பேருக்கு குருவாயூர் கோயிலில் திருமணத்தை முடித்துள்ளார் ரமாதேவி. உத்ரஜாவிற்கு நிச்சயக்கப்பட்ட வரன் குவைத்தில் பணிசெய்துவருகிறார். கொரோனா காலம் என்பதால் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் அவரால் ஊர்திரும்ப இயலவில்லை. எனவே, அவர்களது திருமணம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களது திருமணம் நடக்கும் என்கிறார் ரமாதேவி.

Tuesday, 13 October 2020

WAR TAX, MUSTAK TAX, AND BREAST TAX VIOLENCE OF KERALA NAMBOODRIS

 


WAR TAX, MUSTAK TAX, AND BREAST TAX 

VIOLENCE OF KERALA NAMBOODRIS




போர் வரி,

மீசை வரி,

முலை வரி –


திருவிதாங்கூர் பார்ப்பனியம்


மக்கள் கலை இலக்கியக் கழகம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 22,23 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தி பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள்…


ஐயா வைகுந்தர் வழிபாடு: “கருவறைக்குள் பார்ப்பான் எதற்கு? நாங்களே தமிழில் வழிபடுகிறோம்.




திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில், பார்ப்பனப் பிடியிலிருந்து வெளியேறி சாணார் (நாடார்) சாதியினருக்கான புதிய வழிபாட்டுமுறையை ஐயா வைகுந்தர் என்பார் உருவாக்கினார். இன்றளவும் அவ்வழிபாட்டினர் குமரியில் வாழ்ந்து வருகிறார்கள். ஐயா வைகுந்தர் வழிபாடு குறித்தும், அக்காலத்தின் சாதியக் கொடுமைகள் குறித்தும் மாநாட்டில் திரு. சுயம்பு (வயது 50) எடுத்துரைத்தார்.


“ஐயா வைகுந்தர் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. அரசன் பதினெட்டு வகைச் சாதிகளாக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவற்றில் நாடார் சாதியினரைப் பதினெட்டாம் சாதியாக வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.


அய்யா வைகுண்டர் வழிபாடு


அய்யா வைகுண்டர் வழிபாடு


அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும். சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.



பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.


இவற்றால் வெகுண்ட ஐயா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள். முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள். தங்கத்தில் தாலி கட்டுங்கள். இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள். கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து மேலாடை அணிந்ததற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் கட்டி வைத்து அடித்தக் கொன்றனர். சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்.


இவ்கையில், மன்னரையே எதிர்த்து, மக்களை ஒன்று சேர்ந்து மன்னரிட்ட சட்டதிட்டங்களையெல்லாம் மிதித்து மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி ஏற்பட வழிவகுத்துக் கொடுத்தார் ஐயா வைகுந்தர். அவர் மக்களோடு இணைந்து வாழ்ந்தார். மன்னரின் படைகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட பொழுது, மக்களனைவரும் மன்னரின் படைகளை எதிர்த்து வீரப்போரிட்டனர்.


172 ஆண்டுகளுக்கு முன்பே, கருவறையில் சென்று வழிபடும் நிலையை ஐயா வைகுந்தர் ஏற்படுத்தினார். எங்கள் வீட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்களை அனுமதியாமல் நாங்களே நடத்திக் கொள்கிறோம். தமிழிலேயே வழிபாடு செய்கிறோம். இன்றளவும் ஐயா வைகுந்தரை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.”


மனுதருமக் கொடுங்கோன்மை எங்கே என்போரே – இதோ இங்கே…


“மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…”


திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:


“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.


1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.


இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார்.


“தாலிக்கு ஆயம்;


சருகு முதல் ஆயம்;


கம்புத் தடிக்கு ஆயம்;


தாளமேறும் சான்றோருக்கு ஆயம்;


அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்;


வட்டிக்கு ஆயம்;


வலங்கை சென்றோர்


கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்”


என்று குறிப்பிடுகிறார்.


மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.


1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.


ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.


1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’


“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.


1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”


Very few deserve to be heroes. It is, after all, an opulence not everyone merits, and certainly not the ones who do not have the qualities we have come to associate with heroism. In a very chaotic India, where hero-worshipping is rampant (case in point—our political narrative of the past year itself has been fraught with god-like statuses for the men who have been elected to power) these lessons are frequently lost on us. Quite often, the loudest walks away with attention. Unfortunate as these instances are, there are moments when silence makes its presence felt. In the story of Nangeli, drenched in blood as it is, we find a hero whose courage might have lasted a bare few minutes, but it echoes till today, much like a substantial piece of history. One which exists to inspire and not provoke.


The Travancore of the 19th century holds within itself the vestiges of Nangeli’s youthful sacrifice. Popular notions hold the state of Kerala in the years before independence as one where caste and its allied issues had found little ground to blossom. Yet this view, one from outside the fringes of society seems hazy. To the unknown eye, the words of Dr. T.K. Ravindran, a Historian might confirm suspicions, “of all the territorial divisions in India. Kerala particularly Travancore took the sin of pride in the matter of extending the limits of social inequality (Dr. M.S. Jaya Prakash).”


It is here in this land of Travancore whose vast riches were founded on the shoulders of the ever growing and tax-paying backward classes that one finds monetary compensation levied on body parts, particularly those of women. From taxes on the right to wear jewellery to growing a moustache, a value seemed to have been placed on every aspect of their lives. Ludicrous as it may seem; a tax given the term mulakkaram was levied on breasts.


Unlike upper caste women, Avarna women, colloquially understood as Dalit, were not allowed to cover their bosom in public unless they paid taxes. This could be seen as an extension of untouchability, a method so sadistic, ensuring that the dignity of women belonging to the backward classes were taken away, leaving them with a glaring sense of loss of self. It is mortifying to think that the said tax differed according to the size of the breast.


It was during this time that Nangeli, a beautiful woman living in Cherthala belonging to the Ezhava community decided to deny the pravathiyar, the village officer responsible to collect taxes, the money sought from her. Despite the humiliation and brutality that followed such antics, alarms against such taxes had been sporadic and muted. Women ridden with shame and having lost the battle stayed away from the world, preferring to spend their days within the four corners of their homes, away from the voyeuristic eyes of men.

.

Monday, 17 August 2020

KERALA FLOODS 2019





KERALA FLOODS 2019
.26 நொடிகளில் குழந்தையை மீட்ட
கண்ணையா குமார் யார்?

கண்ணையா குமார், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றவந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் முக்கியமாக பேசப்படுகிறார்.

பெரியாறு நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த நேரத்தில், இடுக்கி மாவட்டம் செருதொனி பகுதியில் ஒரு தந்தையின் கைகளில் இருந்த சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஒரு பாலத்தை ஓடிக்கடந்தார் கண்ணையா. அவர் பாலத்தைத் தாண்டியதும் அந்த இடம் தகர்ந்து பாலம் உள்வாங்கி கடல்போல காட்சியளித்தது.

சென்னையில் இருந்து கேரளா வந்துள்ள 10 படைப்பிரிவுகளில், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த கண்ணையா ஒரு மீட்புப் பணி காவலர். குழந்தையை மீட்கும் பணியை முடிக்க கண்ணையா எடுத்துக்கொண்டது வெறும் 26நொடிகள் என்கிறார்கள் மீட்புக் குழுவில் உள்ள மற்ற அதிகாரிகள்.

கரையேறியதும், கண்ணையாவுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியாமல் குழந்தையின் தந்தை நெகிழ்ந்துபோனார்.

''பாதிக்கப்பட்ட எல்லோரும் என் குடும்பம்''

சமூக வலைத் தளங்களில் பிரபலமாகிவிட்ட பீகாரைச் சேர்ந்த கண்ணையாகுமார், தனது மூன்று சகோதரர்கள், பெற்றோர் என குடும்ப உறுப்பினர்களுக்கு உதவவும், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்கவும் பள்ளிப்படிப்பு முடித்ததும், அரசுப்பணித் தேர்வுகளை எழுதினார். பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

'என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான் அரசு வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது பலரையும் காப்பாற்றுகிறேன் என்பதில் மகிழ்ச்சி. எனது மூன்று சகோதரர்களில் இருவர் தற்போது இந்திய ராணுவத்தில் இருக்கிறார்கள். ஒரு சகோதரர் காஷ்மீரில் வேலைசெய்கிறார்.

நாங்கள் சந்தித்துக் கொள்வது அரிது. ஆனால் தற்போது வேலை எங்களுக்குப் பிடித்துவிட்டது. எங்கள் பெற்றோரும் பெருமையாக இருக்கிறார்கள். இப்போது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் என் குடும்பம் ஆகிப்போனார்கள்'' என்கிறார் கண்ணையா.

கேரளாவில் நடக்கும் மீட்பு பணிகள் குறித்துப் பேசிய அவர், ''வெள்ள மீட்புப் பணிகளுக்காக கேரளா செல்கிறோம் என்பது மட்டும் தெரியும். இங்குவந்தபோது நாங்கள் நிறைய வேலைசெய்யவேண்டும் என்பது புரிந்தது. நாங்கள் வந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு அதிகம்.

செருதொனி பகுதியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு, முன்பு நதி இருந்த இடத்தில் வெள்ளம் பாய்கிறது. செருதொனி பேருந்துநிலையம் இருந்த இடம் தெரியவில்லை. தென்னந் தோப்புகள் மூழ்கியுள்ளன. உதவி கேட்கும் குரலுக்காக காத்திருக்கிறோம்'' என்கிறார் கண்ணையா.

'இயற்கையை கணிக்க முடியாது''

மீட்புக்குழுவைச் சேர்ந்த மற்றொரு பணியாளர் கிரிபால் சிங் பேசும்போது வெள்ள மீட்புப் பணி அனுபவத்தை விளக்கினார்.

''இயற்கை சீற்றம் என்றால் பெரும்பாலும் நம்முடைய கணிப்பு எதுவும் சரியாக இருக்காது. எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கு சொல்லப்படும் மந்திரம்.

மீட்கப்படவேண்டியவர்கள் எவ்வளவு ஆழத்தில் சிக்கியுள்ளார்கள்? என்பதைப் பொருத்து அவர்களை கரைக்கு கொண்டுவர எடுக்கும் நேரம் முக்கியம். கரைக்கு கொண்டு வந்ததும் முதலுதவி உடனடியாக செய்யவேண்டும்.

அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு எங்கள் வேலை நம்பிக்கை கொடுக்கும். உயிரை காப்பற்றுவதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்தே செயல்படுவார்கள்'' என்றார்.

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களும் கடுமையான மழை இருக்கும் என்ற அறிவிப்பு உள்ளதால், மீட்புப்படகு, ஜாக்கெட், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக்கொண்டு மழையைக் கண்காணித்தபடி பணியில் ஈடுபட்டுள்ளனர் மீட்புப்பணியாளர்கள்.
.

94 ஆண்டுகளுக்குபின் பேரிடரை சந்தித்த கேரளா: மாநிலமெங்கும் நிவாரண முகாம்கள் அமைப்பு

கடவுளின் சொந்த தேசம்'(God's own country) என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கேரளா, 94 ஆண்டுகளுக்கு பிறகு கோரமான வெள்ள பேரிடரைச் சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கேரளாவின் 14 மாவட்டங்களும் முழுவதும் பாதிக்கப்பட்டு, 67 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக புதன்கிழமை (15ஆகஸ்ட்) அன்று 25பேர் பலியாகியுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

எல்லா மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் செயல்படத்தொடங்கியுள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து (14) மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலைகளில் சேதாரம், பல இடங்களில் போக்குவரத்து,மின்சாரம் துடிக்கப்பட்டு , கேரளாவின் பல பகுதிகள் தீவுகள் போல தோன்றுகின்றன. இதுவரை கடுமையான வெள்ளத்தைச் சந்திக்காத கொச்சின்,பாலக்காடு,வயநாடு போன்ற இடங்களில் முதல்முறையாக வெள்ளம் கரைபுரண்டு நகரம் மற்றும் கிராமங்களை சூழ்ந்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய மீட்பு படையினர் கொச்சின் பகுதியில் உள்ள கம்பெனிபாடி பகுதியில் இதுவரை வெள்ளத்தை சந்திக்காத மக்கள் சிலர் தங்கள் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தாலும் வெளியேற மனமில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.

'கம்பெனிபாடியில் சுமார் 200 குடும்பங்களை வெளியேற்றவேண்டும். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வெள்ளம் வடிந்துவிடும். நாங்கள் பிறகு வருகிறோம் என்கிறார்கள். நிலைமை மோசமாகியுள்ளது என்பதை உணர்த்தினாலும் சிலர் தங்களது உடைமைகளை விட்டுவர மறுக்கின்றனர்,'' என ஜோஸ் என்ற மீட்புப்பணியாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கேரளவில் முக்கியமாக கொண்டாப்படும் ஓணம் பண்டிகை ஆகஸ்ட்15ல் தொடங்கினாலும், பெரும்பாலான ஊர்களில் அதற்கான சுவடே இல்லை. கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் திருவிழா கொண்டாடத்தை ரத்து செய்துவிட்டு,நிவாரணப் பணிகளுக்கு நிதியை செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

கொச்சி சர்வதேச விமான நிலையமும் 18ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 27அணைகளும் முழுவதுமாக திறக்கப்பட்டதால், வீடுகள்,தென்னை,பாக்கு,தேயிலை,ரப்பர் என எல்லா விளைநிலங்களிலும் வெள்ளம் தனது தடத்தைப் பதித்துச் சென்றது. 26 ஆண்டுகளுக்கு பிறகு, இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு, பெரியார் நதி முழுவீச்சில் முன்னர் பாய்ந்த இடங்களில் தற்போது பயணிக்கிறது

இடுக்கி மாவட்டத்தில் நீரில் மூழ்கிய ஒரு தென்னைமர தோப்புக்கு சொந்தக்காரான விக்ரமன்(65) பேசும்போது தனது தென்னந்தோப்பு இருந்த சுவடுகூட தற்போது இல்லை என்கிறார்.

''இதுவரை நாங்கள் விவாசயம் செய்துவந்தோம். தற்போது அகதியைப்போல உணர்கிறோம். எங்களின் நிலங்கள் எங்கு உள்ளன என்று தெரியாது. எங்கள் ஊர் முழுவதும் வெள்ளக்காடாக கட்சியளிக்கிறது. எங்களின் தேவைகளை இந்த ஆண்டு விளைச்சலைக் கொண்டு சமாளிக்க எண்ணியிருந்தோம். அது தற்போது கானல் நீராகிவிட்டது'' என்று அவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, 300க்கும் மேற்பட்ட வெள்ளநிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால், முகாம்களில் இருந்து வெளியேற யாரும் விரும்பவில்லை.


வெளியூர்களில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிவரும் லாரிகள் கேரளாவுக்கு வருவதில் சிரமம் உள்ளது.

வெளிமாநில லாரிகள் வந்துசேரும் முக்கிய சாலையான கண்டைனர் சாலை முழுவதுமாக மூழ்கியுள்ளது என்பதால் பல லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. ''இடுக்கி அணையில் உள்ள நீர் கண்டைனர் சாலைக்கு அருகில் உள்ள ஏரிகளுக்கு வந்து கடலில் சேரும். இங்குள்ள கடைகள் முழுவதுமாக மூழ்கிவிட்டன. லாரிகளை நிறுத்திவிட்டு எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,'' என்கிறார் வணிகர் சுந்தரம்.
.

Sunday, 14 June 2020

CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK , WHILE BIRTH OF HIS CHILD IN KERALA





CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK ,
            WHILE BIRTH OF HIS CHILD IN KERALA

அவர் முகத்தை ஒருமுறையாவது எனக்குக் காட்டுங்களேன்......
 நான் ஒரு பாவி ஆயிட்டேனே....என்று கணவரின் சடலத்தைக் கண்டு ஆதிரா அழுதது அனைவரின் இதயத்தையும் பிழிந்து விட்டது.......
 குழந்தை பிறந்த அன்றே கணவரும் இறந்த அதிசயக் கொடுமை கேரளாவில் நடந்துள்ளது.!!!!கேரளா மாநிலம் கோழிக்கோடு பரம்பரா பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் - ஆதிரா தம்பதியினர்..


நிதின் துபாயில் வேலை பார்க்கிறார்.
ஆதிராவும் கணவருடனேயே துபாயில் இருந்தார்.
இந்நிலையில், ஆதிரா கர்ப்பமானார்.. துபாயில் கொரோனா தொற்று அதிகம் என்பதால், மனைவி அங்கிருப்பது சரியில்லை என்று நினைத்தார்..இதே சமயம் கர்ப்பிணியை உடனிருந்து கவனித்துக் கொள்ள முடியாது என்பதாலும் கேரளாவுக்கு ஆதிராவை அனுப்ப முயற்சி எடுத்தார். ஆனால் உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.. பிறக்கப் போகும் குழந்தைக்கும், தாய்க்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றார்..ஏப்ரல் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதியும் பெற்றார்.
பிறகு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்... அதில் ஆதிராவும் ஒருவர்.. அவர் கர்ப்பிணி என்பதால், முன்னுரிமை தரப்பட்டு, முதல் ஃபிளைட்டிலேயே கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டார் ...சொந்த ஊருக்கு மனைவி வந்து சேர்ந்த பிறகே நிதினுக்கு நிம்மதி ஆனது..அதன்பிறகு தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்..


 நிதினுக்கு ஏற்கனவே ஹார்ட் ஆபரேஷன் ஆகி உள்ளது.. மேலும் ஹை-பி.பி.யும் உள்ளது.. ஆனால் ஆதிரா பக்கத்தில் இல்லாததால் எந்த மருந்ததையும் எடுத்துக் கொள்ளாமல் அசால்ட்டாக விட்டு விட்டார்.
அவர் இருக்கும் வரை எல்லா மாத்திரைகளையும் சரியாக எடுத்துத் தந்து வந்தார்.. இப்போது அஜாக்கிரதையால் மாத்திரை சாப்பிடாமல் போகவும் நிதினுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது.. துபாய் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிர் போய் விட்டது..நிதின் சடலமாகும் சமயம் தான் ஆதிராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.. குடும்பத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்..அப்போது நிதின் இறந்த தகவல் சொல்லப்பட்டது..


ஆனால் ஆதிராவின் உடல், மனநிலையை கருத்தில் கொண்டு டாக்டர்களும், உறவினர்களும் விஷயத்தை மறைத்து விட்டனர். ஆதிராவிற்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.. குழந்தை பிறந்ததும் நிதினுக்குத் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று போனை எடுத்தார் ஆதிரா.ஆனால் குடும்பத்தினர் ஏதேதோ சொல்லி அவரைத் தடுத்து வந்தனர்.. ஒவ்வொரு முறையும் அவரைத் தடுத்து நிறுத்துவதே பெரும் சிரமமாகி விட்டது.. இப்படியே 2 நாள் ஓடியது.. நிதினுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு, பிறகு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த பிறகு தான் ஆதிராவுக்கு விஷயத்தை சொன்னார்கள்.


 நிதின் உடலும் கேரளா வந்து சேர்ந்தது.. நேராக ஆதிரா அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்குத் தான் உடல் கொண்டு போகப்பட்டது.. எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டிருந்த ஆதிரா கணவரின் சடலத்தை பார்த்ததும் கதறி விட்டார்.ஆனால் வெறும் 2 நிமிடங்கள் தான் கணவரின் முகத்தை பார்க்க அனுமதி தரப்பட்டது.. "ஒருமுறையாவது அவர் முகத்தை எனக்குக் காட்டுங்க" என்று கெஞ்சி அழுதார் ஆதிரா.ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் இதைப் பார்த்து கலங்கி விட்டனர்.. அது ஆஸ்பத்திரி என்பதால் அதிக நேரம் அங்கே சடலத்தை வைக்க முடியாத சூழலே இதற்குக் காரணம்.தன் மனைவிக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக நிதின் சுப்ரீம் கோர்ட் வரை சென்று எடுத்த முயற்சியால், இன்று தாய்-சேய் உடல்நிலை நன்றாக உள்ளது.. ஆனால் குழந்தை முகத்தைப் பார்க்காமலேயே நிதின் உடல் பிரிந்தது..


உங்க முகத்தைக் கூட பார்க்க முடியாத பாவியாகி விட்டேனே" என்று ஆதிரா அழுது கொண்டே இருக்க, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து நகர ஆரம்பித்தது.

Thursday, 4 June 2020

bombing of elephant in pine apple in kerala


bombing of elephant in pine apple in malappuram , kerala 

அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம்




அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம்
.ஆற்றில் இறங்கி அசைவற்று நிற்கும் யானை குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் ஆகிய கும்கி யானையுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

`கேரளா’ என்றால் நம் மனத்துக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களில் யானைக்கு முக்கிய இடம் இருக்கும். கோயில் திருவிழாக்கள் தொடங்கி மலை வாழ் மக்களின் அன்றாட பணிகள் வரை கேரளாவில் யானைகள் முதல் வரிசையில் நிற்கும். உருவத்தில் யானை பெரிதென்றாலும் மனிதர்களுடன் எளிதில் பழகும் தன்மை கொண்டது. அப்படியான கேரள மாநிலத்தில், கர்ப்பிணி யானை ஒன்றுக்கு நேர்ந்தது கொடுமையின் உச்சம்.ஆம், இன்னும் 18-20 மாதங்களில் அழகான யானைக் குட்டியை ஈன்று அதனுடன் கொஞ்சி விளையாட இருந்த பெண் யானைக்கு பழத்தில் வெடிமருந்து நிரப்பி கொடுத்திருக்கிறார்கள் மனிதர்கள். கொடூரத்தின் உச்சமான இந்தச் சம்பவம் தற்போது வனத்துறை அதிகாரி ஒருவரின் முகநூல் பதிவுமூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மலப்புறம் வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்னன் இந்த கொடூர சம்பவம் குறித்து முகநூலில், `உணவுக்காக இந்தப் பெண் யானை, வனத்தில் இருந்து மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்திருக்கிறது. உணவு தேடி சாலைகளில் அலைந்திருக்கிறது. அப்போது, அடையாளம் தெரியாத சிலர் அந்த யானைக்கு அன்னாசிப் பழம் கொடுக்கவும், அவர்களை முழுவதுமாக நம்பி அதை ஏற்றிருக்கிறது. அங்கு இருந்த அனைவரையும் அவள் நம்பியிருக்க வேண்டும்.

ஆனால் அவள், அன்னாசி பழத்தை உண்ணத் தொடங்கியதும் அது வாயிலே வெடித்திருக்கிறது. ஆம், அன்னாசிப் பழத்தில் வெடி மருந்தை நிரப்பி அளித்திருக்கிறார்கள் மனிதர்கள். தனக்குள் வெடிமருந்து வெடித்தபோது, நிச்சயம் அவள் தன்னைக் குறித்து சிந்தித்திருக்க மாட்டாள். அவளின் சிந்தனை முழுவதும் அவளின் வயிற்றில் இருக்கும் குட்டி மீதுதான் இருந்திருக்கும்’ என்கிறார் அதிர்ச்சி குறையாமல்.வாயில் வெடித்த வெடிமருந்து அதிக சக்தி கொண்டதாக இருந்திருக்க வேண்டும். காரணம், அந்த வெடிப்பில் அந்த யானையின் வாயும் நாக்கும் முழுமையாக சேதமடைந்திருக்கிறது. மிகக் கடுமையான காயங்களுடன் அந்த தெருக்களில் யானை அலைந்தபோதும், அங்கு இருந்த யாரையும் தாக்கவோ, கோபத்தில் பொருள்களைத் தூக்கி வீசவோ இல்லை. அமைதியாகவே நடந்து சென்றிருக்கிறது. உணவுக்காக வந்த யானைக்கு இன்னும் உணவு கிடைக்கவில்லை. கடும் பசி, வாயில் கொடூரமான வலி. இரண்டுக்கும் நடுவில் அந்த யானை நரக வேதனைக்கும் மேலான வேதனையில் துடித்திருக்கிறது.

இதுகுறித்து மோகன கிருஷ்ணன் தனது பதிவில், ``வலிகளுடனும் வேதனையுடனும் அந்தத் தெருக்களில் அவள் அலைந்தபோதும் ஒரு வீட்டைக்கூட சேதப்படுத்தவில்லை. அதனால்தான் சொல்கிறேன், அவள் நன்மைகளால் நிறைந்தவள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய யானை, அருகில் இருந்த வெள்ளியாறு நதியில் இறங்கி நின்றது. கடுமையான, பொறுக்க முடியாத வலியால் அந்த யானை தனது தும்பிக்கையையும் வாயையும் தண்ணீரிலே வைத்திருக்கிறது. `தனது காயத்தில் மற்ற பூச்சிகள் வந்து இருந்திராமல் இருக்க அது அப்படி செய்து இருக்கலாம்’ என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆற்றில் இறங்கி அசைவற்று நிற்கும் யானை குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் ஆகிய கும்கி யானையுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர். மோகன கிருஷ்ணன், ``அவளுக்கு ஆறவது அறிவு இருந்திருக்க வேண்டும். அவள் எங்களை எதுவும் செய்ய அனுமதிக்கவில்லை” என்கிறார் வேதனையுடன். பல மணி நேரம் முயன்றும் யானையை நீரில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. இந்த நிலையில், கடந்த மே மாதம் 27 -ம் தேதி மாலை 4 மணி அளவில் தண்ணீரில் நின்ற நிலையிலே அவளின் உயிர் பிரிந்தது.பின்னர், அந்த யானை லாரி மூலம் காட்டுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. ``அந்த யானைக்கு தகுதியான பிரியாவிடை தரவேண்டியது கடமை. அதனால் அதை லாரியில் காட்டுக்குள் எடுத்துச்சென்றோம். அங்கு அவள் வளர்ந்த, விளையாடிய நிலத்தில் விறகுக் கட்டைகளின் மேல் படுக்கவைக்கப்பட்டாள். அப்போது அங்கு உடற்கூறாய்வுக்கு வந்த மருத்துவர் என்னிடம், `அவள் தனியாக இல்லை. அவள் வயிற்றில் ஒரு உயிர் இருக்கிறது’ என்றார். இதனை என்னிடம் சொன்ன மருத்துவரின் முகத்தை அவர் அணிந்திருந்த மாஸ்க் காரணமாக பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அவரின் வேதனையை என்னால் உணர முடிந்தது. பின்பு, அவளது உடலை தகனம் செய்தோம். அவளின் முன்பு குனிந்து நின்று எங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினோம்” என்கிறார் மோகன கிருஷ்ணன்.

கேரளாவில் நடந்த இந்தக் கொடூர சம்பவம், படிக்கும் அனைவர் மனத்தையும் உலுக்கிவிடும். மோகன் கிருஷ்ணனின் பதிவை படித்த பலரும் ,`தங்களின் வாழ்வில் இத்தனை வேதனை தரும் பதிவைப் படித்ததில்லை’ எனக் கண்ணீர் வடித்தனர்.

விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்...

Wednesday, 3 June 2020

MISS KERALA 1972 RANI CHANDRA ,ACTRESS BURN`T IN BOMBAY FLIGHT CRASH 1976,OCTOBER 12








MISS KERALA 1972  RANI CHANDRA ,ACTRESS

BURN`T IN BOMBAY FLIGHT CRASH 1976,OCTOBER 12


ராணி சந்திரா (Rani Chandra, 1949 – 12 அக்டோபர் 1976) என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். கேரளத்தின் அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.[1] இவர் பல மலையாள, தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் இறந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
ராணி சந்திரா திருவிதாங்கூர்–கொச்சியில் 1949 ஆண்டில் சந்திரன், காந்திமதி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] எர்ணாகுள்ம் புனித தெரேசசு கல்லூரியில் கல்வி கற்றார். இவர் நடனக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.[2] 1972 ஆம் ஆண்டில் கேரள அழகுராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]




இவரது முதல் திரைப்படம் அஞ்சுசுந்தரிகள் ஆகும். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த கடைசித் தமிழ்த் திரைப்படம் பத்ரகாளி இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.

மறைவு[தொகு]




பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார்.[4] கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமானநிலயத்துக்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா, அவரது தாயார், மூன்று தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோர் உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.[5]

இதனால், இவர் நடிக்க இருந்த பத்ரகாளி தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்.[6][6][7][8]



விருதுகள்[தொகு]
1975 சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது
நடித்த சில திரைப்படங்கள்[தொகு]
மல்லனும் மாதேவனும் (மலையாளம், 1976)
பத்ரகாளி (தமிழ், 1976)
தேன்சிந்துதே வானம் (தமிழ், 1975)
ராதா (தமிழ், 1973)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பலியான ~வாங்கோண்ணா' புகழ் ராணி சந்திரா
பத்ரகாளி என்ற படத்தின் கதாநாயகியாக நடித்தவர் ராணி சந்திரா. இவர் கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி. 1965 ஆம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’) ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உட்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெற வேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை.

எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976 இல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார்.

எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை. கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தமானார். கதாநாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடினார்கள். கடைசியில் ராணி சந்திராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

திறமையும், அழகும் கொண்ட ராணி சந்திராவை ‘காயத்ரி’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திருலோகசந்தர் முடிவு செய்தார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகளே பாக்கி. இந்த சமயத்தில் விதி விளையாடியது. டுபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டுபாய் நாட்டுக்கு ராணி சந்திரா (வயது 22) சென்றார்.

அவருடன் தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோரும் சென்றார்கள். கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விமானத்தில் ராணி சந்திரா திரும்பினார். விமானம் பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததால் வேறு விமானத்தில் இவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.

11.10.1976 நள்ளிரவு 1.40 மணிக்கு (அதாவது 12ம் திகதி அதிகாலை) விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் தீப்பிடித்து விமான நிலையத்திலேயே நொறுங்கி விழுந்தது. விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்தார்கள். அனைவரும் கருகி மாண்டனர். ராணி சந்திராவுடன் அவர் தாயாரும், 3 தங்கைகளும் இறந்துபோனார்கள்.

ராணி சந்திராவின் கலைக்குழுவில் இடம்பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே. கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம்.கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ். மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும்பலியானார்கள்.

இதே விமானத்தில் பயணம் செய்த தமிழக சட்டசபை முன்னாள் உறுப்பினரும், காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ் கட்சித் தலைவருமான பொன்னப்ப நாடாரும் (வயது 53) பலியானார்.

இவர், 1971 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராணி சந்திராவின் உடலும், அவருடைய தாயார், 3 தங்கைகள் உடல்களும் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன. உடல்களைப் பார்த்து ராணி சந்திராவின் தந்தை சந்திரன், சகோதரர் ஜாஜி, மூத்த சகோதரி ஆயிஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

திரை உலகினர் திரளாக வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல்கள் நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

இதற்கிடையே ‘பத்ரகாளி’ படத்தை முடிப்பது எப்படி என்று டைரக்டர் திருலோகசந்தர் தீவிரமாக ஆலோசித்தார். கதையை மாற்ற முடியாது. ராணி சந்திரா சம்பந்தப்பட்ட ‘கிளைமாக்ஸ்’ காட்சியை படமாக்கியே தீர வேண்டும். இந்த இக்கட்டான நிலையில் ராணி சந்திரா மாதிரி தோற்றமுள்ள துணை நடிகை யாராவது கிடைப்பாளா என்று அலசிப் பார்த்தார்.

இறுதியில், ஏறக்குறைய ராணி சந்திரா போலவே தோற்றம் உள்ள புஷ்பா என்ற நடிகை கிடைத்தார். அவரை வைத்து இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார் திருலோகசந்தர். டைரக்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் திறமையால் அக்காட்சிகளில் ராணி சந்திராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்திருக்கிறார் என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

படம் 10.12.1976 அன்று ரிலீஸ் ஆயிற்று. பொதுவாக, படம் வெளியாவதற்கு முன் அதன் முக்கிய நட்சத்திரம் இறந்து போனால் அந்தப் படம் சரியாக ஓடாது. இதற்கு முன் உதராணங்கள் பல உண்டு.

ஆனால் ‘பத்ரகாளி’ படம் பிரமாதமாக ஓடியது. அதில் அசல் பிராமணப் பெண்ணாகவே மாறி, ‘வாங்கோண்ணா....’ என்று சிவகுமாருடன் ஆடிப்பாடிய ராணி சந்திராவைப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு அழகான திறமையான நடிகைக்கா இத்தகைய சோக முடிவு’ என்று கண்கலங்கினர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ராணி சந்திரா பற்றி ஆரூர் தாஸ் 


பிராமணக் கலாசாரக் கதையான ‘பத்ரகாளி’ தொடர்ந்து படமாகிக் கொண்டிருந்தது. இப்பொழுது அந்த மலையாள மின்னல் மோகினிப்பெண் ராணி சந்திரா வசனம் பேசுவதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டாள்.

ஆனாலும், அவ்வப்பொழுது, ஆங்காங்கே தாய்மொழியான மலையாளம் சற்றுத் தலைகாட்டியதால் என் பிராமணத் தமிழ் வசனத்திற்கு அந்த ‘ஸ்லாங்’ என்னும் கொச்சை மொழி பொருந்திப்போய்விட்டது.

அந்தப் பெண்ணின் ‘விழி’ அழகாக இருந்தது. அது பழகும் ‘வழி’யும் ஒழுங்காக இருந்தது. அதனால் ‘மொழி’ ஒரு பிரச்சினையாக எனக்குத் தோன்றவில்லை.


ஆனால், உண்மையில் என்னுடன் பிரச்சினை பண்ணியது, கதாநாயகியின் தந்தையாகவும் (தொவப்பனார்) குருக்களாகவும் நடித்த நண்பர் மேஜர் சுந்தர்ராஜன்தான்.

பொதுவாக எனக்கு பிராமணத் தமிழ் பேசவும் எழுதவும் நன்றாக வரும். அதற்குக் காரணம் இளம் மாணவப் பருவத்திலிருந்தே எங்கள் திருவாரூரில் எனக்கு பிராமண நண்பர்கள் அதிகம்.

‘லேங்வேஜ் டிபன்ஸ் ஆன் அசோசியேஷன்’

‘மொழி, நாம் சம்பந்தப்படும் இடத்தைப் பொறுத்தது.’

அதனால், பிராமணர் அல்லாத அதிலும் ஒரு கிறிஸ்துவரான நான் – ஒரு பிறவிப்பிராமண எழுத்தாளரைக் காட்டிலும் சிறந்த முறையில் இந்தப் படத்திற்கான வசனங்களை அமைக்கவேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு ‘சங்கற்பம்’ செய்து கொண்டேன். அதனால் இக்காலத்துப் பெரும்பாலான பிராமண வீடுகளில் புழக்கத்தில் இல்லாத ‘நேக்கு’ – ‘நோக்கு’ என்ற அக்கால வழக்குச் சொற்களைக் கையாண்டிருந்தேன்.

இதை மாற்றி, மேஜர் சுந்தர்ராஜன் ‘எனக்கு உனக்கு’ என்று கூறிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டித்து நான் எழுதியிருப்பதை அப்படியே பேசச்சொன்னேன். அதற்கு அவர்...

மேஜர் சுந்தர்ராஜன்:– இப்போல்லாம் எங்க வீடுகள்ளேயே அந்தப் பழைய பிராமணத் தமிழ் அதிகமாகப் பேசப்படுறதில்லே. அதனாலதான்...

நான்:– (குறுக்கிட்டு) எனக்குத் தெரியும் மேஜர். நானே ஒரு பாதிப் பிராமணன். நீர் பூணூல் போட்டுண்டிருக்கீர். நான் போடலை. உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் அது ஒண்ணுதான். இது முழுக்க முழுக்க பழைய பிராமணக் கலாசாரத்தைக் கொண்ட ஒரு குருக்கள் குடும்பத்துக்கதை. எனக்கு அந்தப் பழைய ‘பிரமினிக்கல் டிக்ஷன்தான்’ வேணும். அதுக்காகத்தான் நான் சிரமப்பட்டு, ஒவ்வொரு வார்த்தையா பொறுக்கிப் பொறுக்கிப் போட்டிருக்கேன். அதை நீர் சொல்லலேன்னா உம்மை விடமாட்டேன். ‘வித் த பர்மிஷன் ஆப் த டைரக்டர்’ என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.

இயக்குனர் திருலோகசந்தரும் என் கருத்தில் ஒருமித்திருந்தார். எனக்கும் அவருக்கும் எப்பொழுதுமே ஒரு ‘புரிதல் உணர்வு’ உண்டு. இல்லையேல் அவர் இயக்கத்தில் பெரும்பாலான – இருபது படங்களுக்கு மேல் நான் எழுதியிருக்க வாய்ப்பிருக்காது.

நண்பர் சிவகுமாரின் நாக்கு, கொங்கு நாட்டுத் தமிழ் பேசிப் பழக்கப்பட்டது. அதனால் அவருக்கும் என் பக்கா பிராமணத் தமிழ் சற்று நெருடலாயிருந்தது. அதையும் நான் உணர்ந்திருந்தேன். ஒரு கொங்கு நாட்டுக் கவுண்டரும், ஒரு மதுரை பெரியகுளம் அய்யங்கார் பிராமணரும் சேர்ந்து, இந்த தஞ்சாவூர்க்கார வசனகர்த்தாவை அவ்வப்போது இலைமறைவு காய் மறைவாக எட்டத்தில் இருந்து கேலி பேசுவதை நான் ஜாடைமாடையாகக் கவனித்துத் தெரிந்து கொண்டேன்.

என்னைப்பற்றிய ‘மேஜர்’ சுந்தர்ராஜன் – ‘மைனர்’ சிவகுமார் ஆகிய இருவரின் ‘இன்டைரக்ட் காமென்டரி’யுடனும், என் கண்டுபிடிப்பான இந்த விசித்திர நட்சத்திரத்தின் அப்பாவி நடிப்புடனும், அந்தப் பிராமணக்கதை ‘பிக்சரைஸ்’ ஆகிக்கொண்டிருந்தது.

ஒருநாள் மாலை. எதிர்பாராமல் இந்த இள நடிகை என் இல்லத்திற்கு வந்தாள். முன் அறிவிப்பு எதுவும் இன்றி திடீரென வந்தது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் அவளை என் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன். அவளை ஏற இறங்கப் பார்த்த என் மனைவி முகம் மலர்ந்து...

மனைவி:– சார் சொன்னதைவிட நேருல பார்க்கும்போது நீ இன்னும் ரொம்ப அழகா இருக்கியே. உங்கம்மாவும் உன்னை மாதிரியே இப்படி கலரா இருப்பாங்களா?

அவள்:– இல்லேம்மா. எங்கம்மா மாநிறந்தான். நான் என் பாட்டி மாதிரின்னு அம்மா சொல்வாங்க.

மனைவி:– பரவாயில்லியே. நீ சரியா தமிழ் பேசமாட்டேன்னு இவர் சொன்னாரே. இவ்வளவு நல்லா பேசுறியே.

அவள்:– எல்லாம் சாரோட டிரைனிங்தான்! கோவிலுக்குப் போறேன். அப்படியே உங்களைப் பார்க்கலான்னு வந்தேன்... (என்னிடம்) சார்! நாளைக்கு ஒரு கலை நிகழ்ச்சியில கலந்துக்குறதுக்காக நான் எங்கம்மா, சிஸ்டர்ஸோட துபாய்க்குப் போறேன். ரெண்டு நாள்ள வந்திடுவோம். இதை நேருல சொல்றதுக்காகத்தான் வந்தேன். துபாய்லேருந்து திரும்பினதும் எங்கம்மாவை அழைச்சிக்கிட்டு மறுபடியும் நான் இங்கே வர்றேன் பைம்மா! என்று விடைபெற்றாள். அவள் சென்ற அரை மணி நேரத்திற்குள்ளாக என் தொலைபேசி மணி ஒலித்தது. ரிஸீவரை எடுத்தேன். அந்த நடிகையின் குரல்:–

அவள்:– சார்! நான்தான் பேசுறேன். நாளைக்கு துபாய்க்குப் போறேன்னு போன்ல சொன்னா மரியாதையா இருக்காதுன்னு உங்ககிட்டே – நீங்க இல்லேன்னா அம்மாகிட்டேயாவது நேருல சொல்றதுக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன். கேரளக் கலை நிகழ்ச்சிகளுக்கு ‘ஆர்கனைஸ்’ பண்ற ஒரு மலபார் பார்ட்டி எங்களை அழைச்சிக்கிட்டுப் போறாங்க. ரெண்டே நாள்தான் அங்கே கேம்ப்!

இந்த புரோகிராம் விஷயம் நம்ம டைரக்டருக்குத் தெரியாது. நான் சொல்லலே. ஏன்னா அக்ரிமெண்ட்படி படம் ஷூட்டிங் முடியிறதுக்கு முந்தி பர்மிஷன் இல்லாம வெளியூர் – அதுவும் துபாய்க்கு போகக்கூடாதுன்னு எங்கே டைரக்டர் சொல்லி ஸ்டாப் பண்ணிடுவாரோன்னு பயந்துதான் சொல்லாம உங்ககிட்டே வந்தேன். தயவு செய்து நான் திரும்பி வர்ற வரைக்கும் நீங்களும் அவர்கிட்டே சொல்லவேண்டாம். ஒன்லி டு டேஸ்! வர்ற சனி, ஞாயிறு ரெண்டு நாள் புரோகிராம் முடிஞ்சதும் திங்கட்கிழமை சாயந்திரம் புறப்பட்டு இங்கே வந்திடுவோம். சரியா?

நான்:– (தயக்கத்துடன்) சரிம்மா...

அவள்:– அப்புறம்... என் ஞாபகார்த்தமா துபாய்லேருந்து உங்களுக்கும், அம்மாவுக்கும் ஏதாவது பொருள் வாங்கிக்கிட்டு வந்து கொடுக்கணும்னு நான் ஆசைப்படுகிறேன். உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க... பிளீஸ். அம்மாவையும் கேளுங்க.

நான்:– ஒண்ணும் வேண்டாம். கலை நிகழ்ச்சிங்க முடிஞ்சு நீ நல்லபடியா சீக்கிரம் வந்து சேர்ந்தா போதும். ஏன்னா, கிளைமாக்ஸ் ஷூட்டிங்குக்காக டைரக்டர் ‘செட்’ போட்டு ரெடிபண்ணிக்கிட்டிருக்காரு. இந்தச் சமயம் பார்த்து நீ துபாய் போறேங்குறே. அவருக்குத் தெரிஞ்சா கண்டிப்பா போகக்கூடாதுன்னு சொல்லித் தடுத்திடுவாரு. அதனால நான் சொல்லமாட்டேன். எனி ஹவ்! ஹேப்பி ஜர்னி.

அவள்:– தேங்க்ஸ்!

அவள் துபாய்க்கு புறப்பட்டுச் சென்ற அடுத்த ஆறாவது நாள். அன்றைய காலைப் பத்திரிகைகளில் காணப்பட்ட செய்தி:–

‘‘இன்று காலை பம்பாய் ‘ஸாந்தாகுரூஸ்’ விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட ‘கேரவல்’ பயணிகள் விமானம் அதிகாலை 4.31–க்கு மேலே கிளம்பி உயரே சென்றதும், நடுவானத்தில் தீப்பற்றி எரிந்து கீழே தரையில் விழுந்து நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்தவர்கள் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை. அத்தனை பேருமே எரிந்து கருகி இறந்துவிட்டனர்.’’

இறந்தவர்களின் மரணப் பட்டியலில் – அந்தோ! குறுகிய காலத்திற்குள்ளாக, எங்கள் குடும்பத்தாரின் நெஞ்சங்களில் குடிபுகுந்து அன்பைப்பொழிந்த அந்த இளம் நடிகையின் பெயரும் இருந்தது. அவள் மட்டும் அல்ல. அவளுடைய தாயார் மற்றும் மூன்று சகோதரிகள் – ஆக மொத்தம் ஐந்து பேருமே குடும்பத்துடன் அந்தக் கோர விமான விபத்தில் பலியாகிவிட்டனர்.

விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அவர்கள் துபாயிலிருந்து பம்பாய்க்கு திரும்பி வந்துவிட்டார்கள். துபாயில் அவர்கள் வாங்கியதும், பரிசாகப் பெற்றதுமான பல வெளிநாட்டுப் பொருள்களுக்கு சுங்கவரி கட்டுவதற்குப் போதிய இந்தியப் பணம் இல்லாமல், விமான நிலைய பயணிகள் அறையிலேயே அவர்கள் தங்க நேரிட்டுவிட்டது. பிறகு சென்னையில் அவர்களுக்குத் தெரிந்த சிலருடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக பம்பாயில் பணம் ஏற்பாடு செய்து வரியைக்கட்டிப் பொருள்களை மீட்டுக்கொண்டு ஒருநாள் தாமதமாகப் புறப்பட்டிருக்கிறார்கள்.

அன்றைக்கு என்று அங்கு காத்திருந்த காலன், விதியின் ஏவுதலால் அவர்களை வானத்திலேயே வைத்துக் காவு கொண்டுவிட்டான்.

விதியின் சதியினால் கொழுந்துவிட்டு எரிந்த தீயின் நாக்குகள், ஒரு வெள்ளை ரோஜாவையும், அதன் குடும்பத்தினரின் உயிர்களையும் கொள்ளை கொண்டுவிட்டது.

இடி விழுந்தது போன்ற இந்தக் கொடிய செய்தியைப் படித்ததுமே நானும் என் மனைவியும் பதறிப்போய் விட்டோம். எங்கள் குடும்ப உறவினர்களை இழந்ததைப் போன்ற துயர நிலைக்கு ஆளானோம். அன்று முழுவதுமே தாங்க முடியாதத் துக்கத்தால் தண்ணீரைத்தவிர வேறு எதையுமே உண்ணாமல் நான் ‘உபவாசம்’ இருந்து என் வயிற்றை வருத்திக் கொண்டேன். அந்த மயக்க நிலையிலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை.

இன்றுவரையில் – என் சினிமா வாழ்க்கையில் நான் ஒரு முழு நாளும் ‘உபவாசம்’ இருந்தது மூன்று நடிகைகளுக்காக மட்டுமே. ஒருவர் என் அன்பிற்கினிய அண்ணி ‘சாவித்திரி!’ இரண்டாவது எங்கிருந்தோ வந்து என் பாசத்தைப் பகிர்ந்து கொண்ட இந்தப் பத்தரை மாற்றுப் பசும்பொன் பெண்! மூன்றாவது, என் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டு, என் மனதில் இடம் பிடித்த சுடர் விளக்கு சுஜாதா! இம்மூன்று பேரும் மரணித்த நிலையில், அவர்களுடைய முகங்களை இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.



One is not really sure when the first beauty pageant was held in the State. But the first one that really hogged the limelight was the one held at Thrissur in 1965. A high school student from Fathima Girls High School, Fort Kochi, went on to win the Miss Kerala crown. The rumour at that time was that the very intention to organise this contest was to find a new, young heroine for a film they had planned.

The girl who won the crown was Rani Chandra and the film planned was Daivathinte Maranam (Death of God). This film did not take off but the victory in the beauty contest and news that she was going to be cast in a film gave Rani Chandra an unexpected celebrity status. Magazines and newspapers published her photographs and some of them even called her Kerala Beauty.

This entire attention and media glare ignited in Rani Chandra a desire to act in films. Those were days when she was seriously into dance, something she had begun to study when she was just out of her primary school. She continued her dance training even when she was in college. At the back of her mind there remained the burning desire to be a film star.

Rani Chandra did not have to wait long. She made her debut in P.A. Thomas’s Pavappettaval . However, in the credits and song book of this film she is simply referred to as Miss Kerala. The film, released in 1967, had Sathyan, Kamaladevi, Adoor Bhasi and Sukumari in lead roles.

That was the start Rani Chandra was looking for but she had to wait for a whole year to get her first film and her name into the credits. She was cast in an important role in Anchu Sundarikal (1968). The film directed by M. Krishnan Nair had Prem Nazir, Jayabharathi, Adoor Bhasi, G.K. Pillai, Paravur Bharathan in lead roles.

She literally danced her way into Tamil films too. Director A.V. Francis, who happened to watch one of Rani Chandra’s dance performances in Madras, offered her a role in his film Porchilai (1969). Though in her rather brief career she did not act in many Tamil films, Rani Chandra did make an impact in films like Bhadrakali .

Born in 1949 at Alappuzha as the second daughter of Chandran and Kanthimathi, Rani Chandra had acted in school plays before moving seriously into dance. Her family moved to Kochi and this went a long way in nurturing her dance and her desire to star in films. Those days Madras was the centre for Malayalam and Tamil films. As Rani Chandra began to get more and more film offers the family moved to Madras.

Proficient in all the South Indian classical dance forms Rani Chandra had a troupe of her own in which some of the gifted musicians and singers were associated. Dance and films kept her busy.

From a greenhorn Rani Chandra evolved into a fine actor even going on to win the Kerala State award for Best Actress for her role in K.G. George’s debut film Swapnadanam .

Among Rani Chandra’s noted films are Prathidwani , Chembarathi , Nellu , Boyfriend , Amba Ambika Ambalika , Anaavaranam , Hello Darling , Ulsavam , Naathoon , Kaamini , Swapnam , Kaapalika etc.

Like it happens to most stars Rani Chandra was drawn into the vortex of commercial cinema. She really never got that many chances to prove her acting skills. Rani Chandra did get her share of criticism for simply agreeing to do the glamour roles, even doing 13 films in one year. But whenever she got that rare chance, even if it was a character role like in Naathoon or Swapnadanam for that matter, Rani Chandra did prove that she was not just a glamour doll.

Just when Rani Chandra was finding her feet in films Fate cut short her life. She, along with her mother and three sisters died in an Indian Airlines crash on a return flight from Bombay on October 12, 1976. She was returning after a dance performance in West Asia. In a career spanning hardly 10 years and around 60 films, Rani Chandra left behind unfulfilled dreams.



.‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் பலியானார். அவருடைய தாயாரும், 3 தங்கைகளும் இதே விபத்தில் மாண்டனர். ராணி சந்திராவுக்கு வயது 22. கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி. 1965-ம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’) ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உள்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெறவேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை.
எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976-ல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார். எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை. கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தம் ஆனார். கதாநாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடினார்கள். கடைசியில் ராணி சந்திராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
திறமையும், அழகும் கொண்ட ராணி சந்திராவை ‘காயத்ரி’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திருலோகசந்தர் முடிவு செய்தார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகளே பாக்கி. இந்த சமயத்தில் விதி விளையாடியது. துபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் துபாய் நாட்டுக்கு ராணி சந்திரா சென்றார். அவருடன் தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி(13) ஆகியோரும் சென்றார்கள். கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விமானத்தில் ராணி சந்திரா திரும்பினார். விமானம் பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததால் வேறு விமானத்தில் இவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
11-10-1976 நள்ளிரவு 1-40 மணிக்கு (அதாவது 12-ந்தேதி அதிகாலை) விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் தீப்பிடித்து, விமான நிலையத்திலேயே நொறுங்கி விழுந்தது. விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்தார்கள். அனைவரும் கருகி மாண்டனர். ராணி சந்திராவுடன் அவர் தாயாரும், 3 தங்கைகளும் இறந்து போனார்கள். ராணி சந்திராவின் கலைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே.கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம்.கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ்.மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும் பலியானார்கள்.
ராணி சந்திராவின் உடலும், அவருடைய தாயார், 3 தங்கைகள் உடல்களும் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன. உடல்களைப் பார்த்து ராணி சந்திராவின் தந்தை சந்திரன், சகோதரர் ஜாஜி, மூத்த சகோதரி ஆயிஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
திரை உலகினர் திரளாக வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல்கள், நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. இதற்கிடையே ‘பத்ரகாளி’ படத்தை முடிப்பது எப்படி என்று டைரக்டர் திருலோகசந்தர் தீவிரமாக ஆலோசித்தார். கதையை மாற்ற முடியாது. ராணி சந்திரா சம்பந்தப் பட்ட ‘கிளைமாக்ஸ்’ காட்சியை படமாக்கியே தீர வேண்டும். இந்த இக்கட்டான நிலையில், ராணி சந்திரா மாதிரி தோற்றமுள்ள துணை நடிகை யாராவது கிடைப்பாளா என்று அலசிப் பார்த்தார். இறுதியில், ஏறக்குறைய ராணி சந்திரா போலவே தோற்றம் உள்ள புஷ்பா என்ற நடிகை கிடைத்தார். அவரை வைத்து இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார், திருலோகசந்தர். டைரக்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் திறமையால் அக்காட்சிகளில் ராணி சந்திராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்திருக்கிறார் என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.
படம் 10-12-1976 அன்று ரிலீஸ் ஆயிற்று. பொதுவாக, படம் வெளியாவதற்கு முன் அதன் முக்கிய நட்சத்திரம் இறந்து போனால் அந்தப்படம் சரியாக ஓடாது. இதற்கு, முன் உதாரணங்கள் பல உண்டு. ஆனால், ‘பத்ரகாளி’ படம் பிரமாதமாக ஓடியது. அதில், அசல் பிராமணப்பெண்ணாகவே மாறி, ‘வாங்கோண்ணா…’ என்று சிவகுமாருடன் ஆடிப்பாடிய ராணி சந்திராவைப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு அழகான -திறமையான நடிகைக்கா இத்தகைய சோக முடிவு’ என்று கண்கலங்கினர்.
http://www.maalaimalar.com/2012/02/17200935/pathrakali-film-actress-dead-p.html -லிருந்து எடுக்கப்பட்டது.
நன்றி:மாலை மலர்
‘செம்பரத்தி’ [1972] மலையாளப் படத்தில் ராணி சந்திரா

NEW DELHI, Tuesday, Oct. 12 (AP)—An Indian Airlines Caravelle jet en route to Madras crashed just after takeoff from Bombay's Santa Cruz Airport early today, killing all 89 passengers and six crew members, India's national news agency Camacher reported.The three‐engine jetliner crash‐landed at the end of the runway after one of its engines caught fire on takeoff at 1:40 A.M., the news reports said.K. D. Gupta, the pilot, tried to bring the plane back down and even signaled the tower for permission, but flames engulfed more of the French‐built aircraft, witnesses reported.

Emergency crews said much of the plane and many of the bodies were charred by fire, according to the reports.The flight from Bombay on the west coast to the southern city of Madras on the east coast had been scheduled for departure earlier on a Boeing aircraft, but that plane developed engine trouble on the ground and was replaced by the Caravelle. Reports said 17 of the 89 passengers and two members of the crew were women. Many friends and relatives who saw the flight off watched from the terminal as flames erupted from one engine and the plane plunged back onto the runway. Officials said Captain Gupta managed to keep the disintegrating aircraft away from airport hangars and gasoline tanks.

India's last major air disaster occurred in New Delhi on May 31, 1973, when an Indian Airlines Boeing 737 on a flight from Madras crashed and burned while approaching Delhi airport, killing 48 of the 65 persons aboard. Bombay was the scene of two near disasters in 1975. An Air France Boeing 747 was destroyed by fire just before takeoff on June 12 but all 360 passengers and crew escaped. On June 17 another Indian Airlines Caravelle with 93 persons aboard overshot the runway at Santa Cruz airport and crash landed, but no one was injured.

It was three minutes after take-off. The "Fasten Your Seat Belts" and "No Smoking" signs still glowed its warning red light. Many of the 89 passengers who had waited out the over-six hour delay at the airport were dozing off. It was the Bombay-Madras flight. Waiting relatives started to depart from the visitor's gallery at Santa Cruz airport. The keen-eyed among them saw the aircraft blossom into a "ball of fire". The plane banked steeply to attempt an emergency landing. At about 200-300 feet above ground level the plane suddenly seemed to "drop like a piece of stone".
Within minutes it was over. As fire engines and ambulances rushed to the crash site, what remained was only the charred remnants of the 89 passengers and six crew members.


As the news of the worst-ever disaster in Indian aviation history hit the headlines, panicky passengers cancelled their otherwise hard-to-get air bookings for the slower, but what they felt safer, form of transport-railways. An airlines' official lamented: "It is probably the safest time to fly, since the airlines are bound to be extra conscious about safety."







.