Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

Tuesday, 20 September 2016

ஆந்திர சிவாஜி நாகேஸ்வர ராவ் பிறப்பு 1920 செப்டம்பர் 20



ஆந்திர சிவாஜி நாகேஸ்வர ராவ் 
பிறப்பு 1920 செப்டம்பர் 20

அக்கினேனி நாகேஸ்வர ராவ் (Akkineni Nageswara Rao, செப்டம்பர் 20, 1924[3] - சனவரி 22, 2014) ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார். ஆந்திரத் திரைப்படத்துறையில், குறிப்பாகத் தெலுங்கு மொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர். வேளாண்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு நாடகங்கள் மூலமாக வந்தடைந்தவர். தர்மபத்தினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார்.
தொடர்ந்து 75 ஆண்டுகளாகப் பல்வேறு வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை தெலுங்கு மொழிக்கான பிலிம்பேரின் சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கிறார். இந்திய அரசின் பத்ம விபூசண், தாதாசாஹெப் பால்கே விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.





வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

நாகேசுவரராவ் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடாவுக்கு அருகில் உள்ள வேங்கடராகவபுரம் (இப்போது ராமாபுரம் என அழைக்கப்படுகிறது[4]) என்ற ஊரில்[5] அக்கினேனி வேங்கடரத்தினம், அக்கினேனி புன்னம்மா ஆகிய தம்பதியருக்கு ஐந்தாவது கடைசி மகனாக நாகேசுவர ராவ் பிறந்தார்.
இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே தந்தை இறந்து விட்டார்.[3] சகோதரர்களும் தந்தையின் வேளாண்மைத் தொழிலைக் கவனித்து வந்தனர்.











நடிப்பு[தொகு]

நாகேசுவரராவ் தொடக்கப்பள்ளி வரையே படித்தார். பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நாடகங்களில் நடிப்பதற்கு இவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. சிறு வயதில் மிக அழகாக இருப்பார். இதனால் இஅவ்ருக்குப் பெண் வேடங்களே அதிகமாகக் கிடைத்தன.[6] பள்ளிப்படிப்பில் அக்கறை கொள்ளாமல் பொழுதுபோக்காக வெளியில் நடக்கும் நாடகங்கலிலும் நடித்து வந்தார். ஸ்தானம் நரசிம்மராவ் என்ற பிரபல நாடக நடிகருடன் சிறு சிறு பாகங்களை ஏற்று நடித்து வந்தார்.[3] தம்பியின் நாடக நடிப்பில் கிடைத்த புகழை எண்ணிப் பெருமைப் பட்ட அவரது தமையனார் அவரை திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர எண்ணினார்.


தர்ம பத்தினி என்ற திரைப்படத்தின் காட்சிகள் சில கோலாப்பூர் நகரில் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பைக் காண தமையனாருடன் சென்றார் நாகேஸ்வரராவ். படத்தில் ஒரே ஒரு நிமிடம் தோன்ற ஒருவர் தேவையாக இருந்தது. கூட்டத்தில் இருந்த நாகேசுவரராவ் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். இதுவே இவர் நடித்த முதலாவது திரைப்படம் ஆகும்.[3] அடுத்ததாக, சிறீ இராஜேசுவரி பிலிம் கம்பனி தயாரித்த தல்லி ப்ரேமா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டு சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனாலும் அவரது காட்சிகள் எதுவுமில்லாமலேயே இத்திரைப்படம் 1941 இல் வெளிவந்தது.[3]

அரிச்சந்திரா, கனகதாரா, விப்ரநாராயணா, தெலுகு தல்லி, ஆசைஜோதி, சத்யான் வேஷணம் ஆகியன இவர் நடித்த பிரபல நாடகங்களாகும்.[7].

திரை உலக பங்களிப்புகள்[தொகு]

நடிகராக[தொகு]
தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 256 படங்களில் நடித்துள்ளார்.
தேவதாசு, லைலா மஜுனு, அனார்க்கலி, பிரேமாபிசேகம், பிரேம நகர், மேக சந்தேசம் என்பன அவர் நடித்த பிரபல திரைப்படங்களில் சிலவாகும்[5].

தயாரிப்பாளராக[தொகு]

1956ல் ஆந்திர மாநிலம் அமைக்கப் பட முன்னதாக தெலுங்கு மொழிப் படங்கள் அப்போதைய மதராசு மாகாண தலை நகராக இருந்த சென்னையிலேயே தயாரிக்கப்பட்டன.


ஆந்திர மாநிலம் அமைந்த பின்னர் தெலுங்கு பட தயாரிப்பை ஐதராபாத்துக்கு மாற்ற வேண்டுமென பல தலைவர்கள் விரும்பினார்கள்.
1963ல் நாகேசுவர ராவ் தெலுங்கு பட தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது என ஐந்து அம்ச திட்டமொன்றை ஆந்திர மாநில அரசுக்கு கொடுத்தார். ஐதராபாத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் ஒரு திரைப்பட தயாரிப்பு கலைக்கூடத்தை உருவாக்கினார். அவரது மனைவி பெயரில் இந்த அன்னபூரணா ஸ்டூடியோ (Annapurna Studio) ஆகத்து 13, 1975ல் நிறுவப்பட்டது[8] .




நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு
ரஜினி நடித்த `பெத்தராயுடு'
வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்
தமிழில் வெளிவந்த "நாட்டாமை'' படம், தெலுங்கில் "பெத்தராயுடு'' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. 25 வாரங்கள் ஓடிய இப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு பெரிய தங்கக்காப்பை பழம்பெரும் நடிகர் ஏ.நாகேசுவரராவ் அணிவித்தார்.



தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் "நாட்டாமை.'' இதில் கதாநாயகனாக சரத்குமாரும், அவருடைய தந்தையாக விஜயகுமாரும் நடித்தனர்.
ரஜினி யோசனை


தெலுங்கு நடிகர் மோகன்பாபு, ரஜினியின் நண்பர். அவர் தெலுங்கில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார்.
"நாட்டாமை படம் நன்றாக இருக்கிறது. அதை தெலுங்கில் எடுக்கலாம்'' என்று ரஜினி யோசனை தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல; பட அதிபர் ஆர்.பி.சவுத்திரிக்கு போன் செய்து, நாட்டாமை கதை உரிமையை மோகன்பாபுவுக்கு வாங்கித்தந்தார்.
நண்பரின் கோரிக்கை
"தெலுங்குப் படத்தில் நீங்களும் நடிக்க வேண்டும்'' என்று ரஜினியிடம் மோகன்பாபு கேட்டுக்கொண்டார்.
"சரி. தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன்'' என்று ரஜினி கூறினார்.
மோகன்பாபுவின் "ஸ்ரீலெட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ்'' பேனரில், "பெத்தராயுடு'' தயாராகியது. ரவிராஜா பின்னிரெட்டி டைரக்ட்செய்தார்.
பானுப்பிரியா, ஆனந்தராஜ் ஆகியோரும் நடித்தனர்.
வெள்ளி விழா
படம் 1995 ஜுன் 15-ந்தேதி திரையிடப்பட்டது.
25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
வெற்றி விழா


இந்தப்படத்தின் வெற்றி விழா, திருப்பதியில் நடந்தது. வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில், பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில், ஒரு லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.




விருதுகள்[தொகு]

பத்மஸ்ரீ, 1968[8]
பத்ம பூசன், 1988[8]
ரகுபதி வெங்கையா விருது, 1989[5]
தாதா சாகேப் பால்கே விருது, 1990[8]
என்.டி.ஆர். தேசிய விருது, 1996[5]
பத்ம விபூசண், 2011[8]
இறப்பு[தொகு]

















தமது 90வது அகவையில் புற்றுநோய் வாய்ப்புற்றிருந்த நாகேசுவரராவ்
2014 சனவரி 22, அன்று ஐதராபாதில் காலமானார்[9].

Sunday, 7 August 2016

வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு சகாப்தம் - 2016 ஆகஸ்ட் 7 மறைவு

வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு சகாப்தம் 
- 2016 ஆகஸ்ட் 7 மறைவு 

சாவு என்பது நாடக அரங்கேற்றம் போன்றது. 
அதற்கான ஒத்திகைதான் வாழ்க்கை   
_வியட்நாம் வீடு சுந்தரம்


வியட்நாம் வீடு  சுந்தரம் திருச்சியில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார் . அவர் கைக்குழந்தையாய் இருந்த போது அவருடைய அன்னை காந்தியை பார்க்க 1945 இல் மெட்றாஸ் பட்டணத்திற்கு வந்தார் .தொடர்ந்து பஞ்சம் ,பசி இவற்றால் துரத்தப்பட்ட இவரது அன்னை மெட்றாசுக்கு 1955 இல் குடி  பெயர்ந்தார் சுந்தரத்திற்கு சிறு வயதில் படிப்பு ஏறவில்லை -எனவே சென்னையில் டன்லப் தொழிற்சாலையில் பணியாற்றினார் .படிப்படியாய் உயர்ந்து மிசின் ஆப்பரேட்டர் ஆனார்   

அப்போது ஒய் .ஜி .பார்த்தசாரதி ,அவரது மனைவி மற்றும் பட்டு இவர்களின் பரிச்சயம் ஏற்பட்டது . அவர்களிடம் வசனம் எழுதும் வித்தையை கற்றார் .பின்னாளில் "சோ" ராமசாமி அவர்களும் பட்டுவிடமே தொழில் கற்றார் 

தன்னுடைய 15 ஆம் வயதில்  1958ம் ஆண்டு டன்லப் தொழிற்சாலையில் முதலாண்டு விழாவில் மேடை ஏற்றிய முதல் நாடகம் மூலம் அன்றைய சிறப்பு விருந்தினர் எம்.ஜி.ஆரால் விசேஷ பாராட்டைப் பெற்றார். அந்த நாடகத்தில் –

‘கடைசி வரைக்கும் 
உன் கை வானம் பார்க்கக்கூடாது;
 தலை பூமி பார்க்கக்கூடாது’’ என்று வந்த வசன வரிகளை வெகுவாகப் பாராட்டிய எம்.ஜி.ஆர், எதிர்காலத்தில்
 நீ பிரமாதமாய் வருவாய் என்று வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது





பின்னாளில் எம்ஜியார் படமான   " நாளை நமதே " விற்கு கதை வசனம் 
எழுதினார்   


அதிலிருந்து நாடகங்களை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு, வியட்நாம் வீடு உள்ளிட்ட நாடகங்களை எழுதினார். இந்த நாடகம், சிவாஜி நடிப்பில் மாதவன் இயக்கத்தில் படமாக்கப்பட்டது. அதிலிருந்து வியட்நாம் வீடு சுந்தரம் என அறியப்பட்டவர், சிவாஜி நடித்த கௌரவம், விஜயா, ஞானப்பறவை ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.


நாடகத்தின் மூலமாக திரைத்துறைக்கு வந்தவர்களில் சுந்தரமும் ஒருவர். இவர் எழுதிய வியட்நாம் வீடு’ நாடகம் சிறப்பாக வரவே அதை அப்படியே படமாக இயக்கினார் மாதவன். இதில் சிவாஜி ஹீரோவாக நடிக்க, பத்மினி ஹீரோயினாக நடித்தார். சுந்தரமே கதை, வசனம் எழுதினார். இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. வியட்நாம் வீடு’ தந்த புகழ், சுந்தரத்தை வியட்நாம் வீடு’ சுந்தரமாக்கியது.


சிவாஜி நடித்த கெளரவம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு சுந்தரத்தையும் நல்ல இயக்குநராக இந்த திரையுலகில் அடையாளம் காட்டியது. தொடர்ந்து பயணம், விஜயா, தேவிஸ்ரீ கருமாரியம்மன், ஞானபறவை உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.

 சிவாஜி மட்டுமல்லாது எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், முரளி, கார்த்திக் முத்துராமன், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.


வியட்நாம் வீடு, 












ஞான ஒளி, 











ஜஸ்டிஸ் கோபிநாத், 
கெளரவம், 











சத்யம், 
கிரகப்பிரவேசம், 
அண்ணன் ஒரு கோயில், 













ஒரு மலரின் பயணம், 
கீதாஞ்சலி, 

தர்மம், 

நாளை நமேதே, 












நான் ஏன் பிறந்தேன், 












ஜல்லிக்கட்டு, 















சூரசம்ஹாரம், 
ராஜமரியாதை, 
ஆனந்த் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனம் எழுதியுள்ளார்.

இயக்குநர், வசனகர்த்தாவாக மட்டுமல்லாது நடிகராகவும் பாராட்டைப் பெற்றவர் சுந்தரம். வெள்ளித்திரையில் அப்பு உள்ளிட்ட சில படங்களிலும், சின்னத்திரையில், 
மை டியர் பூதம், 
கிருஷ்ணதாசி, 
ராஜ ராஜேஸ்வரி, 
மர்மதேசம், 
மெட்டிஒலி, 
அத்திப்பூக்கள்
வள்ளி”உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

அப்பு, 
கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களிலும் நடித்திருக்கும் 
இவர், 15-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

வியட்நாம் வீடு சுந்தரம் தன் குடும்பம் வேறு சினிமா உலகம் வேறு 

என்பதை நன்கு புரிந்து கொண்டிருந்தார்

25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் ஆகியவற்றை எழுதியிருக்கும் சுந்தரம், மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார்.



நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர். 
ஷ்ரவந்த் என்ற இளைஞர் பட்டாளத்தை துணைக்கு வைத்துக் கொண்டு  2 ஆண்டுகளாக ‘மைம்’  (மவுன மொழி) நாடகங்களை மேடையேற்றி வந்தவர். ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

ஒய்.ஜி.மகேந்திரா அனுதாபம்
கடைசி வரைக்கும் நாடகமே சுவாசமாக இருந்தவர் வியட்நாம் வீடு சுந்தரம். எங்கள் குழுவோடு 56 ஆண்டுகாலம் நெருங்கிய பழக்கம். எங்கள் குழுவுக்கு அவர் தந்த நாடகம் கண்ணன் வந்தான். பின்னாளில் சிவாஜியின் நடிப்பில் கவுரவமானது. குடும்பப்பாங்கான– கதைகளுக்கு உணர்ச்சிகரமான வசனங்களை எழுதியவர். இவரது இழப்பு– எங்களுக்கெல்லாம் தனிப்பட்ட பேரிழப்பு என்று கூறினார் ஒய்.ஜி.மகேந்திரன்.

சாவு என்பது நாடக அரங்கேற்றம் போன்றது. அதற்கான ஒத்திகைதான் வாழ்க்கை  என்று வியட்நாம் வீடு சுந்தரம் அடிக்கடி கூறுவார். இன்று நாடகத்தை  அரங்கேற்றிவிட்டார் என கூறியபடி கண்ணீர் மல்க தனது அஞ்சலியை செலுத்தினார்  ஒய்.ஜி.மகேந்திரன்.

வியட்நாம் வீடு, ஞானஒளி, கவுரவம்– ஆகிய வெற்றிப் படங்களைத் தந்தவர். கலையுலகின் பிதாமகன்களில் அவரும் ஒருவர் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

நாடகக்குழுக்களின் சார்பில் டி.வி.வரதராஜன், வி.கே.ஆர். சுபாஷ், சி.வி.சந்திரமோகன், ராஜா ஆகியோரும் வியட்நாம் வீடு சுந்தரம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுந்தரத்தின் உடல், சென்னை  திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



கடந்த சில நாட்களாகவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73  வயதுமூப்பு காரணமாக, சென்னை, தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று நள்ளிரவு உயிர் பிரிந்தது.அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

படவுலகப்பிரமுகர்கள் கதை வசனகர்த்தா டைரக்டர் சித்ராலயா கோபு,  நடிகர்கள் சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரா, மனோபாலா, சி.சுந்தர், மக்கள்  குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும், நாடக –  டெலிவிஷன் நடிகர்களும் நேரில் சென்று சுந்தரம் உடல் மீது மாலை வைத்து  மரியாதை செலுத்தினார்கள்.

சுந்தரத்துக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இன்று மாலை ஐஜி ஆபீஸ் பின்புறம் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வியட்நாம் வீடு’ படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு. தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம். வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் “வியட்நாம் வீடு

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கதை சுருக்கம்


வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்ற ரீதியில் சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் "வியட்நாம் வீடு'. நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை வாங்கி படமாக்கினார்கள், சிவாஜி பிலிம்ஸார்.
அந்தப் பிராமணக் குடும்பத் தலைவனாக தன்மானத்திற்காக உயிரையும் விடும் ரிட்டையர்டு "பிரிஸ்டீஜ்' பத்மநாப அய்யராக சிவாஜி நடித்தார். அவர் மனைவியாக மடிசார் மாமியாக பத்மினி நடித்தார்.
ஒரு மனிதனின் அந்தஸ்து என்பது அவனது கெளரவத்திலும் தன்மானத்திலும் அடங்கியது என்ற கொள்கையில் வாழ்ந்து வருபவர் பிரிஸ்டீஜ் பத்மநாப அய்யர். வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழி போல வீட்டுக்கு வீடு குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளால் சண்டை சச்சரவு வரும். அவை, வந்த வேகத்தில் மறைந்து விடும். இந்த வியட்நாம் வீட்டுச் சச்சரவுகள் தொடர்கதையாக தொடர்கிறது. மன அமைதி குறைந்து வீட்டுப் பிரச்னைகள் மரண வாயில் வரை அழைத்துச் செல்கிறது.
பிரிஸ்டிஜ் என்ற வார்த்தையை, அடிக்கடி கூறிக்கொண்டு சிங்கம்போல உலவி வரும் குடும்பத் தலைவன் பத்மநாப ஐயர். அந்தக் கதாபாத்திரத்தின் கம்பீரத்தையும் நேர்மையையும், மிகத் திறமையோடு வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார் சிவாஜி.
ஒரு பிராமண குடும்பத்தின் அறுபதாம் ஆண்டு விழாவை நேரில் பார்ப்பதுபோல் காட்டிய, டைரக்டருக்கு நன்றி சொல்ல வேண்டும். சாதாரண பாமர ரசிகர்களும் கூட, ரசிக்கும்படியாக, விலாவாரியாக காட்டுவார்கள்.
அதில் சிவாஜி தனக்கே உரிய குறும்புகளை செய்து நகைச்சுவை உணர்வை ஏற்படுத்துவது சாதாரண காரியமல்ல. அத்துடன் பாசத்தை காட்டுகிற இடங்களில் உள்ளத்தின் மென்மையான இடத்தை தொட்டு விடுகிறார். இவருக்கு இணையாக நடிக்கக்கூடிய ஒரே நடிகை பத்மினி மட்டும்தான். ஜோடிப் பொருத்தம் மட்டுமல்லாது, அவருக்கு ஈடு கொடுத்து பிராமண பாஷை பேசி திகைப்படைய வைத்து விடுகிறார்.
உடன் நடித்தவர்கள் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. நாடகமாக பலமுறை மேடை ஏறியதால், திரைக்கதையில் மெருகு ஏற்றப்பட்டு, ஒளி வீசியது.
பாலகாட்டு பக்கத்திலே பாடலில் தொனிக்கும் நகைச்சுவை உணர்வுடன் கூடிய சிவாஜியின் நடிப்பு மறக்க முடியாத ஒன்று. உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் கண்ணீர் பெருக்கெடுக்க வைத்து விடுகிறார்கள். பிராமண குடும்பத்தின் வாழ்க்கை கொண்ட "வியட்நாம் வீடு' படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு.
தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம்.
நடிக, நடிகையர்    :சிவாஜிகணேசன், நாகேஷ்,
பத்மினி,ஸ்ரீகாந்த், எம்.பானுமதி
கதை, வசனம்    : கே.சுந்தரம்
பாடல்கள்    : கண்ணதாசன்
இசை    : விஸ்வநாதன்
தயாரிப்பு    : சிவாஜி புரொடக்ஷன்ஸ்.

Saturday, 6 August 2016

நடிகையர் திலகம் சாவித்திரி மடிந்த கதை

நடிகையர் திலகம் சாவித்திரி
மடிந்த கதை 







ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

ஊமை உள்ளங்கள் படத்தில், தான் நடிப்பதில்லை என, முடிவு எடுத்த ஜெமினி, அதன்பின், சாவித்திரியைப் பார்ப்பதையே தவிர்த்தார். சாவித்திரியிடம், எப்போதும் தலை தூக்கும் உயர்வு மனப்பான்மை, இங்கேயும் தலை தூக்கியது. தன்னை அவமானப்படுத்த முயலும்
 ஜெமினி முன், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உணர்வு, 
அவருக்குள் மேலோங்கியது. இச்சூழலில் படம் தயாரிக்க வேண்டுமாயின், சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைப்பது தான் சிறந்தது என, அவர் மனதில் தோன்றியது.

ஊமை உள்ளங்கள் என்ற படம், பிராப்தம் என,பெயர் மாற்றப்பட்டது.

ஜெமினியோடு, சாவித்திரிக்கு நடந்த சண்டை, சிவாஜிக்குத் தெரியாது. தன் தங்கை இயக்கப் போகும் படத்தில் நடிப்பது அண்ணனின் கடமை என்ற எண்ணத்தில், கதாநாயகனாக நடிக்க, ஒப்புக் கொண்டார் சிவாஜி.

'படம் தயாரிக்காதே என்று சொல்லியும் கேளாமல், சிவாஜியை வைத்து படம் எடுக்கிறாளே...' என, ஜெமினிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதனால், சாவித்திரியிடம் பேசுவதையே, குறைத்துக் கொண்டார்.

உயிருக்கு உயிராக நேசித்த அத்தம்பதி, தங்களை அறியாமலேயே, தங்களுக்கிடையே ஒரு பெரிய கோடு ஒன்றை இட்டுக் கொண்டனர் என்றால், அதன் பெயர் தான் விதி!

பிராப்தம் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக, ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றங்கரையில், 'செட்' அமைத்தார், சாவித்திரி. முகமனசுலு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடைபெற்றது. 'சென்டிமென்ட்' கருதி, அதே இடத்தில், படப்பிடிப்பை நடத்த விரும்பினார், சாவித்திரி.


ஆனால், படப்பிடிப்பிற்காக சென்ற போது, கன மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த, 'செட்'டுகள் தன் உருவத்தை தொலைத்திருந்தது. இதனால், படப்பிடிப்பு நடத்த முடியாமல், சிவாஜியின் கால்ஷீட்டை இழந்து, பெருத்த பண விரயத்துக்கு ஆளானார், சாவித்திரி.

மீண்டும் அதே இடத்தில், 'செட்'டுகள் அமைத்து, சிவாஜியின் கால்ஷீட்டை மறுபடியும் வாங்கி, படப்பிடிப்பை நடத்தினார். படம் வளர வளர, சாவித்திரியின் பணம், கரைய ஆரம்பித்தது.

பிராப்தம் படம் பூஜை போட்ட சில நாட்களிலேயே, கணிசமான தொகைக்கு விலை பேசினர், வினியோகஸ்தர்கள்.

ஆனால், சாவித்திரிக்கு யோசனை கூறிய சிலர், 'படப்பிடிப்பு முடிந்த பின் படத்தை விற்றால், அதிக லாபத்தை சம்பாதிக்கலாம்...' எனக் கூறி, படம் விற்பனையாவதை தடுத்தனர்.

விலை பேச வந்த வினியோகஸ்தர்கள், படத்தை வாங்க முடியாமல் திரும்பினர். அன்று, பிராப்தம் படத்தை விற்றிருந்தால், அவர் வாழ்க்கையில் அரங்கேறிய கசப்புகள், அவரை சந்தித்து இருக்காது; விதி வேறொரு பக்கமாக விளையாட்டு காட்டியது.

சாவித்திரியை அழிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது.
 சாவித்திரியின் மூத்த சகோதரி மாருதி, 
அவரது கணவர் மல்லிகார்ஜுன ராவ் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவர், ஆகியோர் அதில் முதன்மையானவர்கள்.

பிராப்தம் படவேலை, ஜெமினி கொடுத்த மன அழுத்தம் மற்றும் படத் தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதம் என, மன உளைச்சலில் இருந்த சாவித்திரிக்கு, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது.

கடமைக்குத் தான் மருத்துவரை போய் பார்த்தார் சாவித்திரி; அப்போது தான், அவருக்கு சர்க்கரை நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது.

சாவித்திரியிடம் பேசுவதை ஜெமினி தவிர்த்திருந்தாலும், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள சாவித்திரியின் வீட்டுக்கு வருவதை, அறவே கைவிடவில்லை.

சாவித்திரி உணர்ச்சிவசப்பட்டு பேசிய சில சொற்கள், ஜெமினியை பெரிதும் காயப்படுத்தி இருந்தது என்றாலும், குழந்தைகளைப் பார்க்க வருவது போல, சாவித்திரியை பார்த்து விட்டுச் சென்றார்.

சாவித்திரியை, எச்சூழலிலும் ஜெமினியோடு சேர விடக் கூடாது என்று நினைத்தவர்களுக்கு, ஜெமினியின் வருகை இனிக்கவில்லை. திட்டமிட்டு அவரை அவமானப்படுத்தும் செயல்களில் இறங்கினர்; அதில், வெற்றியும் அடைந்தனர்.

சாவித்திரியின் உழைப்பில், அவர் தாய்வழி குடும்பங்கள் அனைத்தும், பராமரிக்கப்பட்டு வந்தது. தன்னை நம்பி வந்தவர்களை எச்சூழலிலும் கை விட்டதில்லை, சாவித்திரி. 

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்த கர்ணனை போல, தன் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க, சேரக் கூடாத சிலரை, தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அவர்களில் சாவித்திரியின் தாய்வழி சொந்தமான சரஸ்வதியின் குடும்பமும் ஒன்று!

சாவித்திரியை, எப்படியாவது ஜெமினியோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று, பின்னாளில், சாவித்திரியின் மருமகனான கோவிந்தராவின் தகப்பனார், பெரிதும் பாடுபட்டார்.

ஆனால், தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மதுசூதனராவின் மனைவி வி.சரோஜினி, மல்லிகார்ஜூன ராவ் மற்றும் சாவித்திரி புரொடக் ஷன்ஸ் மேலாளர் சுப்ரமணியம் ஆகியோர், இவரின் முயற்சியை தடுத்து, சாவித்திரியை ஜெமினியோடு ஒட்டாமல் பார்த்துக் கொண்டனர்.

அன்று — 
அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று, அடம் பிடித்து அழுதாள், சாமுண்டீஸ்வரி; செய்தி ஜெமினிக்குப் போனதும், துடித்து விட்டார்.

குழந்தைகள் மீது, எப்போதுமே ஜெமினிக்கு பாசம் அதிகம். சாமுண்டீஸ்வரி அப்பா செல்லம்; சிறுவயதில் இருந்து, அவள் அதிக நேரம் செலவிட்டது, தன் அப்பாவுடன் தான். அப்பாவை பிரிவது, அவளுக்கு முடியாமல் போனது.

சாமுண்டீஸ்வரி அழுகிறாள் என்றவுடன், 'என்ன நடந்தாலும் பரவாயில்லை, சாவித்திரி வீட்டிற்குப் போகலாம்...' என, முடிவெடுத்தார் ஜெமினி.


உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பிராப்தம் படப்பிடிப்பை இடையில் நிறுத்தி, வீட்டில் ஓய்வில் இருந்தார், சாவித்திரி.
கதையாசிரியை சரோஜினி, காலையிலேயே சாவித்திரி வீட்டிற்கு வந்து விட்டார். அவர் வந்தாலே, சாவித்திரியின் நிலைமை வேறு மாதிரியாகி விடும்.

சரோஜினி வாயில் எப்போதுமே, 'குட்கா' என்ற புகையிலை இருக்கும். 'மது குடிப்பதற்கு தனக்கு ஒரு துணை வேண்டும் என்று, சாவித்திரியை வற்புறுத்தி, தன் வழிக்கு அழைத்துப் போனவர்...' என்ற குற்றச்சாட்டும், இவர் மீது உண்டு.

சாவித்திரி என்ற பிம்பத்தை, ஒட்டுமொத்தமாக சீர்குலைத்ததில் சரோஜினியின் கைவரிசையும் ஒரு காரணம்.


சாவித்திரி வீட்டிற்கு வந்திருந்த சரோஜினி, சாவித்திரியை மது அருந்த அழைத்தார்; ஆனால், உடல்நிலை சரியில்லாததால், வேண்டாம் என மறுத்து விட்டார் சாவித்திரி. எப்படியோ பேசி, சாவித்திரியை தன் வழிக்குக் கொண்டு வந்தார், சரோஜினி; மது மயக்கம் இருவரையும் அணைத்திருந்த நேரத்தில், மகள் சாமுண்டீஸ்வரியைப் பார்க்க, வீட்டிற்குள் நுழைந்தார் ஜெமினி.

அங்கு இருந்த சூழலை பார்த்ததும், தன்னையும் அறியாமல் கோபம் அதிகமாகி, சரோஜினியை கடுமையான சொற்களால் திட்டி, வீட்டை விட்டு வெளியேறும்படிக் கூறினார், ஜெமினி.

விதி, வேறு விதமாக விளையாடியது. சாவித்திரியோ, தன் தோழிக்காக, ஜெமினியை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினார்.

ஜெமினியின் தலையில், யாரோ பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட உணர்வு. சாவித்திரியின் அறியாமையை நினைத்து, மனதுக்குள் அழுதார்.

சரோஜினிக்கு வந்த வேலை சுலபத்தில் முடிந்தது. இத்தருணத்திற்காக காத்திருந்த மல்லிகார்ஜூன ராவ், தனக்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்.