Showing posts with label VAJPAYEE. Show all posts
Showing posts with label VAJPAYEE. Show all posts

Thursday, 4 June 2020

VAJPAYEE VS SUBRAMANIAN SWAMY WHY ?




VAJPAYEE VS SUBRAMANIAN SWAMY WHY ?


வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே என்ன பகை?
ரெஹான் ஃபஜல்
பிபிசி

ஒருவர் தனது சுயசரிதை எழுவதற்கு பிபிசி காரணமாவது என்பது அரிதான நிகழ்வே. ஆனால் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஷ்னா சுவாமி தனது சுயசரிதை எழுதியதற்கு பிபிசியே காரணம் என்கிறார்.
மனைவி ரேக்‌ஷனா உடன் , சுப்பிரமணியன் சுவாமி

"எவால்விங் வித் சுப்ரமணியன் சுவாமி: எ ரோலர் கோஸ்டர் ரைடு" (Evolving with Subramanian Swamy - A roller coaster ride) என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் ரோக்ஷ்னா சுவாமி, அண்மையில் பிபிசி ஸ்டுடியோவுக்கு வருகை தந்திருந்தபோதும் அதை குறிப்பிட்டுச் சொன்னார்.

"நாட்டில் எமர்ஜென்சி அமலில் இருந்த காலகட்டத்தில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி பேட்டி எடுக்கவேண்டும் என்று பி.பி.சி செய்தியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைபேசியில் கேட்டார். அப்போது, ஆரம்பத்தில் மறுத்த நான், மீண்டும் கோரியபோது ஒரு நிபந்தனையின்கீழ் நேர்காணல் வழங்க தயார் என்று ஒப்புக்கொண்டேன். அடல் பிஹாரி வாஜ்பாயை எமர்ஜென்சி காலகட்டத்தில் நான் சந்தித்தது பற்றிய தகவலை வெளியிடவேண்டும் என்பதே நான் முன்வைத்த நிபந்தனை" என்றார் ரோக்ஷ்னா சுவாமி,
இந்திராகாந்தியுடன் சுப்ரமணியன் சுவாமி


"ஆனால் அந்த வாக்குறுதியை பிபிசி நிறைவேற்றவில்லை, தனது நேயர்களின்முன் முன்னாள் பிரதமரின் சிறப்பான பகுதியையே காட்ட விரும்பியதால் பிபிசி எனது நிபந்தனையை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். எனவே, பொதுவெளியில் எனது கருத்தை வெளியிடுவதற்காக ஏன் சுயசரிதை எழுதக்கூடாது என்று தோன்றியது. கேள்விக்கான பதிலே இந்தப் புத்தகம்" என்கிறார் ரோக்ஷ்னா சுவாமி.
பிபிசி தரப்பில் அன்று ரோக்ஷ்னா சுவாமியை தொடர்பு கொண்டது நான்தான். வாக்குறுதியை நான் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கிறீகளா?


எமர்ஜென்சி அமலில் இருந்த காலகட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமி தலைமறைவாக இருந்தார் என்ற சிறிய பகுதி அடங்கிய நேர்காணல் அது. அந்த விஷயத்தை முக்கியமாக குறிப்பிடவேண்டும் என்பது ரோக்ஷ்னாவின் விருப்பம். அதைத்தவிர, நேரக்குறைவும் ஒருகாரணம் என்று சொல்லலாம்.

எனினும், இப்போது வாய்ப்பும் கால நேரமும் கூடி வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோக்ஷ்னா சொல்லாத, முக்கியமான பல தகவல்களை தற்போது அவர் கூறுகிறார். ஆனால் அதற்கு முன்பு...பேராசிரியர் சாமுவேல்சனின் கணக்கை சரி செய்த சுப்ரமணியன் சுவாமி
இவால்விங் வித் சுப்ரமணியன் சுவாமி:
எ ரோலர் கோஸ்டர் ரைடு


ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் பால் சாமுவேல்சன் கரும்பலகையில் போட்ட ஒரு கணக்கை தவறு என்று சுட்டிக்காட்டியபோது, சுப்ரமணியன் சுவாமியின் மேல் அனைவரின் கவனமும் குவிந்தது.
ரோக்ஷ்னா சுவாமி சொல்கிறார், 'இந்தியாவில் நாம் கணிதம் கற்றுக் கொள்ளும்போது சூத்திரங்கள் முதலியவற்றை மிகவும் ஆழமாக கற்றுக்கொள்கிறோம். நாம் கணித சூத்திரங்களை பிரத்யேக முறையில் மனப்பாடம் செய்வோம். அமெரிக்கர்கள் அதிக பகுப்பாய்வு செய்கிறார்கள் மற்றும் சூத்திரங்களை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் என்று கருதுவதில்லை என்று சுவாமி என்னிடம் சொல்வார்.'.

சாமுவெல்சன் கரும்பலகையில் கணக்கை போடும்போது அதில் இருந்த தவறை சுட்டிக்காட்டினார் சுவாமி. சாமுவெல்சன் எழுதியிருப்பதுபோல் கணக்கை போட்டால், விடை வேறாக வரும் என்பதை எடுத்துக்கூறினார் சுவாமி.

முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன், புகழ்பெற்ற பேராசிரியரின் கணக்கில் தவறு கண்டறிந்ததை கண்டதும் வகுப்பறையில் சங்கடமான சூழ்நிலை நிலவியது.

ஆனால் தன்னுடைய தவறை புரிந்துகொண்டு அதை சரிசெய்த சாமுவேல்சன், சுவாமிக்கு நன்றி தெரிவித்தார். பிறகு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உருவான நட்பு, சாமுவேல்சன் 2009இல் இறக்கும்வரை தொடர்ந்தது."

சந்திப்புக்கு காரணமான ரவிஷங்கர்

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த ரோக்ஷ்னாவும், சுப்ரமணியன் சுவாமியும் அங்குதான் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அதைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிடாவிட்டாலும், பிபிசியுடனான நேர்காணலில் அதைப் பற்றி ரோக்‌ஷனா கூறினார்.

" கிரேட்டர் பாஸ்டன் இந்திய சங்கத்தின் உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, பண்டிட் ரவிஷங்கரின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். காண்டீனில் அமர்ந்து நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார்" என ரோக்ஷ்னா நினைவுகூர்ந்தார்,"சேலை கட்டியிருந்த நான் காண்டீனுக்குள் வந்ததைப் பார்த்த அவர் என்னை நிறுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்திய பாரம்பரிய இசை பற்றி எதுவுமே தெரியாது, மேற்கத்திய இசை பற்றி கொஞ்சம் தெரியும் என்று அவரிடம் கூறிவிட்டு, இதுவே மேற்கத்திய இசைக் கச்சேரியாக
இருந்தால், கண்டிப்பாக டிக்கெட் வாங்குவேன் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்" என்று சொல்கிறார் ரோக்ஷ்னா.
"பிறகு ரவிஷங்கரின் கச்சேரிக்கான டிக்கெட் மட்டுமல்ல, போஸ்டன் சிம்பொனி இசைக்குழுவின் கச்சேரிக்கான டிக்கெட்டையும் தன்னுடைய பணத்திலேயே எனக்கு வாங்கிக்கொடுத்தார். டிக்கெட் விலை மிகவும் அதிகம் என்பதையும் சொல்லவேண்டும். சுவாமியுடனான என்னுடைய முதல் உரையாடலுக்கான காரணமாக இருந்தது ரவிஷங்கரின் இசைக் கச்சேரிதான்" என்று முதல் சந்திப்பை நினைவுகூர்கிறார் ரோக்ஷ்னா.

சுப்ரமணியன் சுவாமியை ரோக்ஷ்னா அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்டார். பார்சி இனத்தை சேர்ந்த ரோக்ஷ்னாவின் திருமணம் இந்து முறைப்படி நடப்பதை அவரது தாயார் விரும்பவில்லை என்பதால் அமெரிக்காவில் சிவில் திருமணம் செய்துகொண்டார்கள்.

படிப்பு முடிந்த பிறகு தம்பதிகள் இந்தியா திரும்பினார்கள். டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொருளாதார ஆசிரியராக பணியைத் தொடங்கிய சுவாமி பிறகு அரசியலிலும் நுழைந்தார். பாரதிய ஜனசங்கம் சார்பில் உத்தரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டில் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, சுப்பிரமணியன் சுவாமி தலைமறைவானார்.

தலைமறைவாக இருந்த சுவாமி, அப்போதைய அரசுக்கு எதிராக நானாஜி தேஷ்முக் உடன் இணைந்து பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

"நானாஜி டிரைவர் வைத்துக்கொள்ளவில்லை, அவர்கள் மூலம் அரசுக்கு தகவல்கள் செல்லலாம் என்று அவர் எச்சரிக்கையாக இருந்தார். எனவே நான் அவருக்கு வாகன ஓட்டியாகவும் செயல்பட்டேன். ஒருநாள் எனக்கு சில வேலைகளை கொடுத்து அனுப்பினார் நானாஜி, ஆனால் இதற்கிடையில் அவரே பிடிபட்டுவிட்டார்".
சீக்கியராக மாறுவேடம் பூண்ட சுப்ரமணியம் சுவாமி

தலைமறைவாக இருந்த சுவாமிக்கு உதவிய நரேந்திர மோதி








தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் போலிசிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக, தலைப்பாகையும், தாடியும் வைத்து சீக்கியராக மாறுவேடம் பூண்டிருந்த சுவாமி பெரும்பாலும் குஜராத் மற்றும் தமிழ்நாட்டிலேயே சுற்றிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறவில்லை.

குடும்பத்தினருடன் சுப்பிரமணியம் சுவாமி
"மணிநகர் ரயில்நிலையத்தில் இறங்குமாறும், அங்கு என்னை அழைத்துச் செல்வதற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்க உறுப்பினர் ஒருவர் வருவார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. அவர் வந்து என்னை மாநில அமைச்சர் மக்ரந்த் தேசாயியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்."

மூவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து அகமதாபாதில் இருக்கும் பிரபல ஃப்ரூட் ஐஸ்க்ரீம் கடைக்கு சென்று ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். நாற்பது ஆண்டுகள் கழித்து அந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் இந்திய பிரதமரானார். அவர்தான் நரேந்திர மோதி.சில நாட்களுக்குப் பின்னர், எமெர்ஜென்சி பற்றிய நிலவரத்தை உலக அளவில் எடுத்துச் சொல்வதற்காக சுப்பிரமணியம் சுவாமி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.

அரசு அனுமதியின்றி ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்பது அன்றுமட்டுமல்ல இன்றும் அமலில் இருக்கும் சட்டம். எனவே இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார் சுப்பிரமணியன் சுவாமி.

"பான்-எம் விமானத்தில் லண்டன்-பாங்காக் பயணம் செய்வதற்காக பயணச்சீட்டை வாங்கினேன். எனவே டெல்லியில் இறங்கியவர்களின் பட்டியலில் என் பெயர் இல்லை, விமானம் காலை மூன்று மணியளவில் டெல்லி வந்தடைந்தது. கைப்பையை மட்டும் வைத்திருந்த நான் பாதுகாப்பு சோதனை செய்பவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டையை காட்டியதும் அவர் எனக்கு சல்யூட் வைத்தார். அங்கிருந்து டாக்ஸி மூலம் ராஜ்தூத் ஹோட்டல் சென்றேன்", என்று சுவாமி தெரிவித்தார்.
மெக்கானிக் வேடத்தில் சுவாமி

சுவாமி மேலும் கூறுகிறார்: "ஹோட்டலில் இருந்து என் மனைவியை தொலைபேசியி்ல் தொடர்புகொண்டு, உங்கள் அத்தை இங்கிலாந்தில் இருந்து ஒரு பரிசை அனுப்பியிருக்கிறார், அதை வாங்கிச் செல்ல ஒரு பெரிய பையை எடுத்துவாருங்கள் என்று சொன்னேன். 'சர்தார் வேடத்திற்கு தேவையான தலைப்பாகை, தாடி சட்டை பேண்ட் கொண்டு வரவேண்டும்' என்பதற்கான ரகசிய சங்கேத குறியீடு இது".

"ரோக்ஷ்னா தனது பங்கை சரியாக செய்தார். டி.வி மெக்கானிக்காக வேடம்பூண்டு மாலையில் வீட்டிற்கு வருவதாக மனைவியிடம் சொன்னேன். அதேபோல் டி.வி மெக்கானிக்காக வீட்டிற்கு சென்ற நான் ஐந்து நாட்கள் வீட்டிற்கு வெளியே செல்லவில்லை. நான் வீட்டிற்குள் இருந்தது வெளியே இருந்த போலிசாருக்கு தெரியவேயில்லை" என்கிறார் சுவாமி.

மொரார்ஜி தேசாய் உடன் சுப்பிரமணியன் சுவாமி
1976 ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று மாநிலங்களவைக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட முடிவு செய்த சுப்ரமணியன் சுவாமியை தனது பியட் காரில் அழைத்துச் சென்றார் மனைவி ரோக்ஷ்னா.

சுவாமியை நாடாளுமன்றத்தின் நான்காம் எண் வாயிலில் விட்ட அவர், அருகில் இருந்த புகழ்பெற்ற தேவாலயத்துக்கு அருகில் காத்திருந்தார்.

எந்தவித இடையூறுமின்றி நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்ற சுப்ரமணியன் சுவாமி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

அப்போது கம்யூனிஸ்ட் உறுப்பினர் இந்திரஜித் குப்தா, சுவாமியை பார்த்துவிட்டார்.

`நீ எப்படி இங்கே? என்று கேட்ட அவரைப் பார்த்து நகைத்த சுவாமி, அவருடன் கைகோர்த்தவாறு மாநிலங்களவைக்குள் நுழைந்தார்.

'நாடாளுமன்றத்தில் இன்று ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடைபெறப்போகிறது என்று பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளரிடம் ஏற்கனவே ரோக்ஷ்னா கூறியிருந்தார்.

சுவாமி சரியான நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு சென்றுவிட்டார். காலம் சென்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களின் பெயர்கள் அப்போது வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.அவைத் தலைவரும், குடியரசுத் துணைத்தலைவருமான பாசப்ப தானப்பா ஜத்தி இறுதி பெயரை வாசித்தவுடன், உரத்த குரலில் பேசிய சுவாமி, "ஐயா, சில பெயர்களை விட்டுவிட்டீர்கள், ஜனநாயகத்தின் பெயர் விட்டுப்போய்விட்டது" என்று சொன்னதும், அவையில் அமைதி ஆட்கொண்டது.

உள்துறை அமைச்சர் அச்சத்துடன் மேஜைக்கு கீழே ஒளிந்துக்கொள்ள முயற்சித்தார். சுப்ரமணியன் சுவாமியின் கையில் எதாவது குண்டு இருக்கிறதோ என்று அவர் அச்சப்பட்டாராம். சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய உத்தரவிடாத பாசப்ப தானப்பா ஜத்தி, மறைந்த உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.

பிர்லா ஆலயம்
'புத்தகம் வெளியிடப்பட்டது'

இந்த குழப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட சுப்பிரமணியம் சுவாமி, அவையை விட்டு வெளியேறுவதாக முழக்கமிட்டுக் கொண்டே விரைவாக நடந்து சென்று நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்து, ரோக்ஷ்னா காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தார்.

அங்கிருந்து காரில் பிர்லா மந்திர் என்ற ஆலயத்திற்கு சென்ற அவர், அங்கு வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு தலையில் காந்தி குல்லாவை அணிந்துக் கொண்டார்.

பிர்லா மந்திரில் இருந்து ஆட்டோவில் ரயில்நிலையத்தை அடைந்து ஆக்ரா செல்லும் ரயிலில் ஏறிய சுவாமி மதுராவில் இறங்கி அருகிலுள்ள தந்தி அலுவலகத்திற்கு சென்று 'Book released' (புத்தகம் வெளியிடப்பட்டது) என்று மனைவிக்கு தந்தி அனுப்பினார்.

ரோக்‌ஷ்னாவுக்கு ஏமாற்றம் அளித்த அடல் பிஹாரி வாய்பாயி
டெல்லியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டதற்கான ரகசிய சங்கேத குறியீடு அது.சுவாமி தப்பிவிட்ட செய்தி அரசுக்கு தெரிந்ததும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டது. ரோக்ஷ்னா சுவாமியும் பல சிக்கல்களை எதிர்கொண்டார். வீடு சோதனையிடப்பட்டது, அவரின் இரண்டு கார்களும், பொருட்கள் அனைத்தையும் அரசு கைப்பற்றியது.

சட்டப்படிப்பு படித்து வந்த அவர், டெல்லி பல்கலைக்கழகத்திற்கு பேருந்தில் செல்லும்போது, டெல்லி போலிசாரின் வாகனமும் பேருந்தை தொடர்ந்து வரும்.

பாரதிய ஜன சங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அடல் பிஹாரி வாஜ்பாயை சந்தித்து உதவி கேட்ட ரோக்ஷ்னா, வெறும் கையுடனே திரும்ப நேர்ந்தது.

"மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி நீக்கப்பட்டது நியாயமற்றது என்று நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய விரும்பினோம். ஜன சங்கத்தின் சட்ட விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்த அப்பா கடாடேயிடம் சென்று பேசினேன். இந்த விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று கூறிய வாஜ்பாய், டாக்டர் சுவாமிக்கும் நமது கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று சொன்னதாக அவர் கூறிவிட்டார்."
"ஃபெரோஸ் ஷா சாலை இல்லத்தில் வசித்துவந்த வாஜ்பாயை சென்று பார்த்தேன். அப்பா கடாடேயிடம் வழங்கிய அறிவுறுத்தலுக்கான காரணத்தை நான் வாஜ்பாயிடம் கேட்டபோது, சுவாமி செய்த தவறுகளால் ஜன சங்கத்திற்கு பெருத்த அவமானம் நேரிட்டதாக அவர் சொன்னார்".

"நான் அவரிடம் விளக்கம் கேட்டதற்கு, சுவாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறினார். நாடாளுமன்றத்திற்கு வராத நேரத்திற்கான தொகையை கோரி தவறான கணக்கு அளித்ததாக வாஜ்பாய் கூறினார், ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு பிறகு சுவாமி நாடாளுமன்றத்துக்கு செல்லவில்லை" என்றார் ரோஷ்னா.

வாஜ்பாய்க்கு சுவாமியை பிடிக்காதது ஏன்?

"பெங்களூரில் இருந்து வந்த சுவாமி, நாடாளுமன்றத்திற்கு செல்வதாக இருந்ததால், டி.ஏ தொகைக்கான விண்ணப்பத்தை முதலிலேயே கொடுத்திருந்தார். நான் பூர்த்தி செய்த அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டது மட்டும்தான் அவர். ஆனால் விண்ணப்பம் கொடுத்தபிறகு அவரவது திட்டம் மாறிவிட்டது. எனவே இந்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏனெனில் சுவாமிக்கு உதவ வாஜ்பாய் விரும்பவில்லை, அவர் சொல்வது வெறும் சாக்குபோக்கு என்பதை புரிந்துக்கொண்டேன்"
வாய்பாய்க்கும் சுப்ரமணியம் சுவாமிக்கும் ஒத்துப்போகாததற்கான காரணம் என்ன என்று திருமதி சுவாமியிடம் கேட்டேன்.
எமர்ஜென்சி அமல்படுத்துவதற்கு முதல் நாள் டெல்லி
 ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில்
ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய்,
 நானாஜி தேஷ்முக், சுப்ரமணியன் சுவாமி


"வாஜ்பாய் ஆரம்பத்தில் இருந்தே பொறாமைக்காரராக இருந்தார், வேறு யாரையும் மேலே வர அவர் அனுமதிக்கவில்லை. சுவாமியை மட்டும் அல்ல, இன்னும் பலரை அவர் அழுத்தியே வைத்திருந்தார். பாரதிய ஜனதா கட்சி உருவான பிறகும், குறிப்பிட்ட சிலருக்கு கட்சியில் இடம் கொடுக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்ஸிடம் வாஜ்பாய் நிபந்தனையை முன்வைத்தார்"

"இதில் முக்கியமானவர் நானாஜி தேஷ்முக். நானாஜி ஜன சங்கத்திற்கு ஆற்றிய அளவு சேவைகளை வேறு யாருமே செய்ததில்லை. மிகவும் திறமையான அவர் வாஜ்பாயைவிட சீனியராக இருந்தாலும், அவருக்கு ஒத்து ஊதாதவர்.

வாய்பாய்க்கு பிடிக்காதவர்கள் பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்தவர் தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி. அவர் தனது திறமையால் பாரதிய தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி விரிவுபடுத்தினார். அவருக்கும் பாரதிய ஜனதா கட்சியில் இடம் இல்லை என்று வாய்பாய் கூறிவிட்டார். இதன் விளைவாக இவர்கள் இருவரும் டெல்லியில் இருந்து வெளியேறி சிறிய கிராமங்களில் பணியாற்ற நேரிட்டது.

வாஜ்பாய்க்கும், சுப்ரமணியம் சுவாமிக்கும் இடையிலான பகைமை எந்த அளவுக்கு போனது?

.1998 இல், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவைத் தொடர வேண்டுமானால் சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையை ஜெயலலிதா முன்வைத்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, தனது அரசு பதவி இழப்பது பரவாயில்லை என்று வாஜ்பாய் கருதினார்.

ஒரு காலத்தில் சுவாமியுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த ஜெயலலிதா பிறகு எதிரியானார். ஒருகாலத்தில் சுப்ரமணியன் சுவாமியை கைது செய்வதற்காக தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்திய இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமான நட்பு கொண்டார் சுவாமி.

சுப்ரமணியம் சுவாமியின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு நிரந்தர நண்பர்களோ அல்லது நிரந்தர எதிரிகளோ இருந்ததில்லை.

Sunday, 21 April 2019

Atal Bihari Vajpayee Ji who saved Rahul Gandhi from spending "128 years of jail





It was former PM Atal Bihari Vajpayee Ji who saved Rahul Gandhi from spending "128 years of jail term" when he was arrested in the US in 2001 for carrying drugs and 1,60,000 Dollars!



Atal Bihari Vajpayee is called a statesman, he was known for his humble attitude but a strong conviction towards Nation. He was respected by all leaders across party lines. He was the first non-Congress person to become the Prime Minister. Apart from his political inclination he is a great poet who enjoyed writing poems on Nation.

In the year 1996, Vajpayee was sworn in as the Prime Minister for the very first time, but sadly he wasn't able to declare majority on the floor of the house which made him resign just 13 days after swearing in. In 1998, the BJP emerged as the single largest party and Vajpayee formed the government with the support of allies. But the government only lasted for one year after J Jayalalitha withdrew her support to the government. But in 1999, Vajpayee was again elected as Prime Minister of India with BJP being the single largest party. He completed a full term and was called one of the most successful PM of India, for his various path breaking steps in reforms.

Unlike Indira and Rajiv, Vajpayee did not get power as a heredity factor but with hard work and 50 years struggle he achieved something he deserved the most.

But there is an incident which he may always repent in his life. An incident which probably helped Congress come back to power in the 2004 elections, which can be called the biggest disaster to India. A hard earned power by Vajpayee was given away to Congress by a silly mistake. In the 10 years Congress rule, the party drowned the Indian economy, tarnished India's image and made our country irrelevant in the global world. The National security was compromised, terrorists given free hand, Jammu Kashmir neglected and East-India betrayed. The economy which was growing at 8.6% in the year 2004 had fallen to 4.3% in just 10 years!

In a way, it was the negligence of the BJP government and Atal Bihari Vajepayee who indirectly helped Sonia Gandhi get back to power.

In the year 2001, Rahul Gandhi who was traveling to America was stopped in the Boston Airport, it is said that he was caught carrying 1,60,000 USD in CASH and a bag of white powder. The preliminary reports indicated that the white powder was Heroine (banned drug). The FBI had detained him and taken into private room for interrogation. Sonia Gandhi then had requested the then Prime Minister Mr Vajpayee to meddle in and help Rahul Gandhi. She had promised Vajpayee that she will help Parliament function and will not disrupt developmental plans. Mr. Vajpayee could have ignored the request, but however he saw no grudge against Sonia Gandhi and had instructed his principle secretary Brajesh Mishra to callCondoleezzaRiceand had asked for the immediate release of Rahul Gandhi.

The crime was serious as Rahul Gandhi was said to be carrying drugs and huge cash of 1,60,000 USD without declaration. The American law lets you carry only 10,000 USD in cash and anything above the amount requires an official declaration which otherwise will lead to 8 years imprisonment for every 10 thousand you exceed. Which means Rahul Gandhi had 1,60,000 USD , that is 16 times more than the limit which would have given him 128 years of Jail term!

It is said that Atl Bihari Vajyapee used all his influence and powers only to save this Crook family from a crime. The Bush government had considered the request and asked the FBI to let Rahul Gandhi off the hook stating that it will affect the Indo-US relationship. The FBI agreed to the request with a condition that Rahul Gandhi must appear before the FBI when called and took a written assurance for the same. After 8 hours of questioning, a case was booked and he was let free.

This one incident gave another life to Sonia Gandhi and Rahul Gandhi who otherwise would have lost relevance 15 years back for the grave act they did. Today when we look back, we wonder why it is necessary to be tough at times and show no sympathy to criminals.

The history also teaches many lessons as to how many Indian rulers had forgiven Moghals and British only to be back stabbed and killed later by unethical means.

Source: http://subramanianswamy.blogspot.in/2013/04/dr-subramanian-swamy-explains-how-sonia.html

Tuesday, 26 December 2017

VAJPAYEE, EX- PRIME MINISTER OF INDIA BORN 1924 DECEMBER 25




VAJPAYEE, EX- PRIME MINISTER OF INDIA 
BORN 1924 DECEMBER 25




அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.


பிறப்பு: 25 டிசம்பர் 1924 (வயது 88)

பிறப்பிடம்: குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது), ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா

பணி: அரசியல்வாதி, கவிஞர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும்  பள்ளி ஆசிரியர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.


ஆரம்பகாலப் பணிகள்

தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார். இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

அரசியல் பிரவேசம்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து

மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார். ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார். அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.

பிரதமராக வாஜ்பாய்

1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.


ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார். 1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நியமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.

கார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று, அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.

மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.

எழுத்தாளராக வாஜ்பாய்


அவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.

விருதுகள்

1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார்.
1994 – ‘லோகமான்ய திலகர் விருது’
1994 –  ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது.
1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்.