Showing posts with label JUNE 13. Show all posts
Showing posts with label JUNE 13. Show all posts

Saturday, 13 June 2020

SANJAYAN ALIAS RAMUNNI NAIR BORN 1903 JUNE 13 -1943 SEPTEMBER 13








SANJAYAN ALIAS RAMUNNI NAIR BORN 
1903 JUNE 13 -1943 SEPTEMBER 13








.சஞ்சயன் (Sanjayan) என்ற புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட மன்னிக்கோத் ராமுன்னி நாயர் (1903-1943) ஒரு மலையாள எழுத்தாளரும், பத்திரிகையாளரும் மற்றும் மலையாள இலக்கியத்தில் நையாண்டி எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் இருக்கிறார். குறிப்பிடத்தக்க மலையாள நையாண்டிகளில் ஒருவரான ஈ.வி.கிருஷ்ணப் பிள்ளையுடன், சஞ்சயன் மொழியில் எளிய கட்டுரைகளின் வகையை உருவாக்கியதாக அறியப்படுகிறது. நையாண்டிகளைத் தவிர, இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார். மேலும், இவர் ஓத்தெல்லோவை மலையாள மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

சுயசரிதை

சஞ்சயனின் நாட்களில் மலபார் கிறிஸ்தவ கல்லூரி
சஞ்சயன் 1903 சூன் 13 ஆம் தேதி தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி என்ற நகரத்தில் மடவில் குஞ்ஞிராமன் வைத்யர் மற்றும் மணிக்கோத் பாரு அம்மா ஆகியோருக்கு பிறந்தார். [1] தனக்கு எட்டு வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்துவிட்டார். இவரை அவரது தாயார் வளர்த்தார். இன்றைய அரசு ப்ரென்னன் மேல்நிலைப் பள்ளியான ப்ரென்னன் கிளைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைச் முடித்தார், பின்னர் அவர் அரசு ப்ரென்னென் கல்லூரி, தலசேரி, விக்டோரியா கல்லூரி, பாலக்காடு மற்றும் சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் படித்தார். அங்கிருந்து ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் கௌரவ பட்டம் பெற்றார். [2] இந்த நேரத்தில், இவர் ஏற்கனவே சமசுகிருத மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் அறிவைப் பெற்றிருந்தார். பட்டம் பெற்ற உடனேயே அரசுப் பணியில் எழுத்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மலபார் கிறித்துவக் கல்லூரியில் கற்பித்தல் பணியில் சேருவதற்காக எழுத்தர் பனியிலிருந்து விலகினார். [3] இந்த காலகட்டத்தில், அவர் மனம் மாறி, எஃப்.எல் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால் 1932 ஆம் ஆண்டில் மீண்டும் இளங்கலை சட்டப் படிப்பை மேற்கொண்டார். அவருக்கு ஏற்பட்ட காசநோய் காரணமாக இதுவும் பாதியிலேயே கைவிடப்பட்டது. நோய்க்கு சிகிச்சையளிக்கும் போதும், குணமடைந்தபோதும், வேதாந்தா மற்றும் இந்து சோதிடத்தைப் பயின்றார். நோயிலிருந்து மீண்ட பின்னர், 1935 ஆம் ஆண்டில் செங்கலத்து குஞ்ஞிராம மேனனால் நிறுவப்பட்ட கேரள பத்ரிகா என்ற செய்தித்தாளின் ஆசிரியர் பதவியைப் பெறுவதற்காக அவர் தனது இல்லத்தை கோழிக்கோடுக்கு மாற்றினார், ஆனால் 1938 இல், மலபார் கிறித்துவக் கல்லூரியில் மீண்டும் ஒரு ஆசிரியராக 1942 வரை பணியாற்றினார்.
சஞ்சயன் 1927 ஆம் ஆண்டில் தனது உறவினரான கார்தியாயினி அம்மாவை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தார். இவரது மனைவி குறுகிய காலமே இவருடன் இருந்தார். அவர் 1930 இல் இறந்து போனார். [1] மேலும் இவர் தனது ஒரே மகனையும் 1939 இல் இழந்தார். சஞ்சயன் 1943 செப்டம்பர் 13, அன்று தனது 40 வயதில் தனது தலசேரி இல்லத்தில் காலமானார். [3]

ஆளுமை
மலையாள இலக்கியத்தில் சஞ்சயனின் பங்களிப்பு முக்கியமாக சமகால சமூக அரசை விமர்சிக்கும் நையாண்டி கட்டுரைகளாகும். [4] ஈ.வி.கிருஷ்ணப் பிள்ளையுடன், மலையாள இலக்கியத்தில் நகைச்சுவை மற்றும் எளிய கட்டுரைகளின் முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். [5] [6] சஞ்சயனின் எழுத்துக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் - சஞ்சயன் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சோமராஜன் பதின்ஜரிட்டம், இவரை பி.ஜி. வுட்ஹவுஸ், ஸ்டீபன் லீகாக், ஜேம்ஸ் தர்பர், மற்றும் மார்க் டுவைன் போன்ற எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டார். [7] சமூக-அரசியல் பிரச்சினைகளை விமர்சிக்கும் போது கூட அவர் தனிப்பட்ட அவதூறுகளை நாடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஹாஸ்யஞ்சலி, சாகித்யா நிகாஷம் மற்றும் ஆறு நிரோபனங்கள் என தொகுக்கப்பட்ட இலக்கிய விமர்சனங்கள் மற்றும் வியாமாயணம் மற்றும் ஆத்யோபஹரம் போன்ற புத்தகங்களால் தொகுக்கப்பட்ட வசனங்களால் அவரது சாயல் அமைந்துள்ளது. [8] இவர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோவை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். [3] [9]
1935 ஆம் ஆண்டில் கேரள பத்ரிகாவின் ஆசிரியராக நியமிக்கப்பட்டதன் மூலம் ஒரு பத்திரிகையாளராக சஞ்சயனின் வாழ்க்கை தொடங்கியது, இது 1936 இல் சஞ்சயன் என்ற பெயரிடப்பட்ட நகைச்சுவை பத்திரிகையை நிறுவும் வரை ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. [3] பின்னர், விஸ்வரூபம் என்ற நையாண்டி இதழின் தலைமை ஆசிரியராக இருந்தார். அங்கு வள்ளத்தோள் நாராயண மேனன் போன்ற பெயர்களிலும் கூட நையாண்டி கருத்துக்களை வெளியிட்டார். [10] [11] அவர் மாத்ருபூமியிலும் எழுதினார். பிரித்தன் இராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்த அவரது நையாண்டித் துணுக்குகளில் ஒன்று செய்தித்தாளுக்கு தற்காலிகத் தடையைப் பெற்றது. [12]

VELLAI VARANANAAR ,TAMIL SCHOLAR BORN 1917 JANUARY 14 - 1988 ,JUNE 13







க. வெள்ளை வாரணனார் (சனவரி 14, 1917- சூன் 13, 1988) தமிழறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் 'இசைத் தமிழ்' என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.

இளமை[தொகு]
தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் கந்தசாமி - அமிர்தம் அம்மையார் தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935 இல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1935-37 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, 'தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு' என்னும் ஆய்வேட்டினை எழுதி முடித்தார்.வெள்ளைவாரணனார் 1938 முதல் 1943 வரை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

பணி[தொகு]
1943 இல் வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1962 இல் இவரின் புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக்கழகம் இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கியது. 1977 ஆம் ஆண்டு துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக்கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தம் 62 இம் வயது வரை அங்குப் பணியாற்றி 1979 இல் ஓய்வு பெற்றார். 1979 முதல் 1982 ஆம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.

பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் மாணாக்கரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞரகத் திகழ்ந்தார்.

இந்தி மொழி எதிர்ப்பு[தொகு]

இராஜ கோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சரக இருந்த போது 1938 இல் இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணாதுரை முதலானோர் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939 இல் 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைப் பெயரில் 'காக்கை விடுதூது' என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.

மறைவு[தொகு]
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது.எனவே தில்லை சென்று தங்கி வாழ்ந்திருந்த வெள்ளைவாரணனார் 1988 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

HISTORY OF PUNITHA ANTHONIYAAR BORN AUGUST 15,1195 -1231 JUNE 13




HISTORY OF PUNITHA ANTHONIYAAR BORN AUGUST 15,1195 -1231 JUNE 13




திருச்சபை வரலாற்றில் நாம் காணும் புனிதர்களில் மிகவும் புகழ்பெற்று விளங்குபவர் புனித அந்தோனியார். அதற்குக் காரணம் அவர் புரிந்த கோடி அற்புதங்கள் மட்டுமல்ல ஒரு சிறந்த மறை போதகராகவும் மறை வல்லுனராகவும் அவர் விளங்குவதேயாகும்.
போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் பிறந்த இவரை பாதுவா நகரின் புனிதர் என்றுதான் அழைக்கின்றோம். 1195 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி அன்னைமரியின் விண்ணேற்பு தினத்தன்று புனித அந்தோனியார் பிறந்தார். அங்கிருந்த பேராலயத்தில் பேர்டினன்ட் எனும் பெயர் சூட்டி திருமுழுக்கு அளிக்கப்பட்டது.

இன்றைய பாதுவா:

இத்தாலியின் வடகிழக்கு மாநகரமான பாதுவா வெனிசியா என்றழைக்கப்படும் பிராந்தியத்தின் முக்கியமானதொரு நகரமாகும். புக்சிகிக்லியோன் நதியோரத்தில் பிரபல வர்த்தக நகரமாகிய வெனிசிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. இதன் தெருக்கள் மிக அழகாக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய கட்டிடங்கள் காணப்பட்டாலும் அவை சீராக அமைக்கப்பட்டுள்ளன.

கட்டிடங்கள் தளமட்டத்தில் தெருவோரமாய் பெரும் விறாந்தைகள் உள்ளவையாக இருக்கின்ற நகரில் நடுவிலேயே ஒரு நதி செல்வதால் அதனைக் கடக்கும் பாலங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
ஒரு காலத்தில் இந்நகர் ஒரு பெரும் கோட்டை மதிற்சுவருக்கு மத்தியில் இருக்க பகைவர் அதனை நெருங்காதிருக்க சுற்றிலும் நீர் நிலைகளும் அகழிகளும் இருந்துள்ளன. வடஇத்தாலிய நகர்களிலேயே பாதுவாதான் மிகத் தொன்மையானது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

விர்ஜிலின் ஏனிட் எனப்படும் வரலாற்றுப் புகழ் பெற்றவரால் இந்நகர் உருவாக்கப்பட்டது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவரது கல்லறையை கண்டு பிடித்துள்ளனர். உரோமையின் பண்டைய வரலாற்றுக் காலத்திலேயே இந்நகர் குதிரைகளுக்கும் செம்மறிமயிருக்கும் பெயர் பெற்றது. பாதுவா தன் மக்களின் அநேகரை உரோமைப் படைக்கு கொடுத்துள்ளது.

பேர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள பேராலயத்தின் அருகில் அந்தோனியார் வாழ்ந்த வீடு இருந்தது. சிறு வயதிலிருந்தே ஏழைகள் மீது பரிவிரக்கம் கொண்டிருந்தார். தன் அன்னையிடம் மன்றாடி ஏராளமான ரொட்டிகளைப் பெற்று தினமும் ஏழைகளுக்கு உணவளித்து மகிழ்வார். திருத்தலத்தின் அருகில் உள்ள பள்ளியில் ஆரம்ப கல்வியைக் கற்றார். தனது 15வது வயதில் புனித வின்சென்ட் மடத்தில் அகஸ்டினியர் துறவியானார். அடிக்கடி வருகை தந்த நண்பர்களைத் தவிர்க்க விரும்பி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கோயிம்பிரா மடத்தில் சேர்ந்து 8 ஆண்டுகள் செபதபம் செய்து வேதம் கற்றார். இறைவார்த்தையை கற்றறிவதிலும் மறைநூல் வல்லுனர்கள் எழுதிய நூல்களையும் ஆழமாக கற்றுத் தேர்ந்து இறையியல் ஞானத்தின் களஞ்சியமானார். இக் காலத்தில் ஆபிரிக்காவின் மொரோக்கோ தேசத்தில் நற்செய்தியாளர்கள் சிலர் மறைசாட்சிகளாக மரித்தார்கள் எனக் கேள்வியுற்று தாமும் அவ்விடத்திற்கு செல்ல வேண்டும் என விரும்பி பயணத்தை மேற்கொண்டார். ஆனால் இறைச் சித்தம் வேறாக இருந்தது. தாம் சுகவீனமுறவே அவர் மீண்டும் போர்த்துக்கலுக்கே வரப்புறப்பட்டார். ஆனால் கப்பலோ அவரை இத்தாலிக்கு கொண்டு வந்து விட்டது. அங்கே தென் இத்தாலியின் மெசினா நகரில் இருக்கும் போது அசிசி நகரில் துறவிகளின் ஒன்று கூடல் ஒன்று நடக்க இருப்பதை அறிந்து அங்கே புறப்பட்டார். அங்கே அவர் பலருடன் பழகினாலும் தன் கல்வி மற்றும் பாண்டியத்தைப் பற்றி எவருடனும் கூறவில்லை. இயேசு வைப்பின் சென்று தானும் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதே அவரது அவாவாக இருந்ததே அல்லாமல் தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்வதாக இருக்கவில்லை.

பிரான்சிஸ் குவின் பாதையிலே...

இக்காலத்தில் இத்தாலி நாட்டின் அசிசி நகரைச் சார்ந்த புனித பிரான்சிஸ் துறவற சபை ஒன்றை ஆரம்பித்திருந்தார். இது துறவற வாழ்க்கையில் ஓர் பெரிய திருப்பத்தையே ஏற்படுத்தியிருந்தது. கத்தோலிக்க திருச்சபைக்கு மறு வாழ்வைக் கொடுத்த இச்சபையின் செயற்பாடுகள் பேர்னன்ட் அடிகளாரின் மனதைத் தொட்டது. இதன்படி அகுஸ்தீனார் சபையின் தலைவர்களின் அனுமதியுடன் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். கி. பி. 1221ன் முதல் பகுதியிலேயே பிரான்சிஸ்கன் சபைக்குரிய உடையை கொயிம்றோ நகருக்கருகாமையிலிருந்த ஒலிவாறேஸ் எனும் ஊரிலிருந்த மடத்தில் பெற்றுக்கொண்டார். அப்போது 26 வயதை அடைந்திருந்த அவர் அந்தோனி எனும் பெயரையும் சூட்டிக்கொண்டார். அருகில் உள்ள போர்லி நகரில் ஒரு குருத்துவ அருட்பொழிவு வைபவத்திற்கு அவர் செல்ல நேர்ந்தது. அங்கே சிறப்புரை ஆற்றுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார் அந்த வாய்ப்பு அந்தோனியாரை தேடி வந்தது.

அங்கே அவர் ஆற்றிய உரை அவர் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. இறை வார்த்தையில் புதைந்து கிடந்த அற்புத கருத்துக்களை அவர் எடுத்து விபரிக்க விபரிக்க அதிபர்களும் கூடியிருந்தோரும் இத்தகைய சிறப்பு இவருக்கு எங்கிருந்து வந்தது என வியந்து போயினர். இதனைக் கேள்வியுற்ற பிரான்சிஸ் அசிசியார் துறவற மடத்தில் இறையியல் கற்பிக்க 1224இல் இவரை அழைத்தார்.

அந்தோனியார் ஒரு சிறந்த பேராசிரியராக இருந்தாலும் அவரது சிறப்பு அவர் கற்பித்த கல்லூரி வகுப்புகளில் இருந்ததை விட மக்களுக்கு வழங்கிய போதனையில் தான் இருந்தது. சிறந்த போதகராக இருக்க வேண்டிய அத்தனை தகைமைகளும் அவரிடம் தாராளமாகவே இருந்தது. அவருடைய நல்ல குரல் வளம் அவருக்கு மிக உதவியாக இருந்தது.

அவர் ஆலயத்தில் ஒரு மூலையில் நின்று பேசினால் அது மற்ற மூலைக்கு கேட்கும் அளவுக்கு உரத்த குரலாய் இருக்கும் அதில் தெளிவு இருக்கும். எப்போதுமே அவர் முகத்தில் பெரும் மலர்ச்சி காணப்பட்டது. அபாரமான ஞாபக சக்தியும் தீர்க்கதரிசன வரமும் புதுமைகள் செய்யும் ஆற்றலும் அவரிடம் காணப்பட்டன.
ஒரு அப்போஸ்தலருக்கே உரிய தீவிர மறைபரப்பு ஆர்வம் சமுதாயத்தை மாற்றியே ஆகவேண்டும் என்ற அவா அவரை ரிழி நடத்திக் கொண்டிருந்தன. குறிப்பாக அன்றைய மக்கள் மத்தியில் வெகுவாக பரவியிருந்த ஆடம்பர சொகுசு வாழ்வு பேராசையினால் பொருள் தேடிக் குவித்தல் வலுவிழந்தோரை ஆட்டிப் படைக்கும் ஆட்சியாளரின் செருக்கு முதலியவற்றை அவர் உற்று நோக்கி சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக சாடுவதற்கு பின்னிற்கவில்லை. இதையொட்டி அவரது மறை உரைகள் மிகக் கடுமையாக இருந்தன.

ஒரு காலத்தில் மொனட்பெய்யர் மற்றும் ரூலுஸ் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தாலும். சபையின் பல்வேறு நிலைகளில் இருந்தாலும், இறுதியில் பாப்பரசர் 9 ஆம் கிறகரி ஆண்டகையின் அனுமதியைப் பெற்று திருமறைப் போதகத்தில் ஈடுபட்டார். இத்தாலியின் பாதுவா நகரத்தை மையமாகக் கொண்டு சேவை செய்த புனிதர் பிரசித்தி பெற்றிருந்ததன் காரணமாக, அவருடைய மறையுரையைக் கேட்க இலட்சக் கணக்கில் விசுவாசிகள் வந்து குவிந்தனர். நெருக்கடியைக் குறைக்கும் நோக்கத்தில் மறையுரை இடம்பெற்ற தினங்களில் அரச நீதிமன்றத்தையும் மூடி விடுவார்கள். இவை எல்லாமே 5 வருடங்களுக்கு மாத்திரமே இடம்பெற்றது.

புதுமையின் நாயகன்:

பேராசிரியராக அல்லாமல் நாவண்மை படைத்த மறைபோதகராகத் தான் புனிதர் ஏராளமான ஆன்மாக்களை அறுவடை செய்ய முடிந்தது. மரியன்னையிடம் மிக அதிக பக்தி, பற்று தொடர்பு கொண்டிருந்த புனிதர் தாழ்ச்சியோடு சேர்ந்து அனைத்து நற்குணங்களையும் கொண்டிருந்தார்.
இவர் செய்த புதுமைகள் நாத்திகரையும் விசுவாசம் குன்றியவர்களையும் மனந்திருப்பியது. புனிதர் கரங்களில் ஏந்தியிருந்த தூய நற்கருணையை மண்டியிட்டு ஆராதிக்கும் வரை ஒரு கழுதை அதன்முன் வைத்திருந்த புல்லரிசி கூல வகை உணவை 3 நாட்களாக உண்ணவில்லை. புனிதரை சோதித்துப் பார்க்க நஞ்சு கலந்த உணவை அவருக்கு அளித்தனர். தீர்க்கதரிசனமாகத் தெரிந்து கொண்ட புனிதர் சிலுவை வரைந்து உணவை உட்கொண்டார் ஒன்றும் ஆகவில்லை.
பதுவையிள் அருகில் ப்ரென்டா ஆற்றங்கரையில் மறையுரை ஆன்றிய புனிதரின் அருகில் உரையைக் கேட்க ஏராளமான மீன்கள் உற்சாகத்துடன் துள்ளி எழுந்தன. மறையுரை கேட்க மனமற்ற மக்கள் வெட்கடையுமாறு புனிதர் இப்புதுமையை ஆற்றினார். இன்னும் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்ட புதுமை, தாயை உதைத்த காலை வெட்டிய மகனின் காலை ஒட்ட வைத்த புதுமை ‘’உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கிறது’’ (மத்.6:21) என்ற இறைவார்த்தையை மையமாக கொண்டு நிகழ்ந்த புதுமை.
புனிதர் மிகுந்த களைப்புடன் வெகுதூரம் நடந்து கொண்டிருந்த போது கரத்தைக் காரண் சொன்ன பொய் மெய்யான புதுமை இவ் வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். புதுமைகளின் இருப் பிடமாக விளங்கிய இவரை கோடியற்புதர் என்றும் அழைக்கின்றோம். ஒருமுறை திருத்தந்தை 9ஆம் கிரசோரியார் உரோமையில் புனிதரின் மறையுரையைக் கேட்க நேர்ந்தது. புனிதரின் மறைநூல் ஞானத்தைக் கண்டு பெரும் வியப்படைந்து அந்தோனியாரை ‘வேதாகமப் பேழை’ என்று அழைத்தார்.

இறுதி நாட்கள்:
அந்தோணியார் பதுவா நகருக்கு போதித்து வந்த போது உடல் நிலை மிகவும் மோசமானது. எனவே அவர் தனது இறுதி நாட்கள் அருகில் இருப்பதை உணர்ந்தார். தன்னை பதுவா நகருக்கு கொண்டு செல்ல கேட்டு கொண்டார்.
ஆனால் அவர் பதுவா வருவதற்கு முன்பே Arcella என்னும் ஊரிலே தனது 36 வயதில் இறந்தார். அவர் இறந்த ஒரு வருடத்தில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

------------------------------------------------------------------------

Wednesday, 13 June 2018

AN ASSASSINATION ATTEMPT MADE ON JUNE 13,1981 ON ELIZABETH II







AN ASSASSINATION ATTEMPT MADE 
ON JUNE 13,1981 ON ELIZABETH II BY TEENAGER MARCUS SARJEANT AGED 17


புகழுக்காக அரசி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல முயற்சி நடந்தது ஜூன் 13 ,1981

A Teenager's named Sarjeant aged 17 Assassination Attempt on Queen Elizabeth II on June 13, 1981,

it could have all been undone by a teenager. On that day, the Queen was riding her horse on her way to the annual Trooping the Colour ceremony when six shots rang out. She was unharmed, and though her horse was spooked, the sovereign was able to calm him and continue along the parade route.

Security rushed into the crowd to find the would-be assassin wearing a “Charles and Di” pin—and they were surprised to discover that he had fired six blank shots. Seventeen-year-old Marcus Sarjeant was obsessed with the assassination attempts on Ronald Reagan and Pope John Paul II, and idolized Lee Harvey Oswald and Mark David Chapman.

After the attempt on Reagan in March 1981, Sarjeant remarked that he wanted to be the first one to “have a pot-shot” at the Queen. Hoping to reach the same levels of fame as his idols, the teen wrote about his plans to “stun and mystify the world with nothing more than a gun” and even sent photos of himself posing with his father’s revolver to various media outlets prior to the attempt.

Fortunately, Sarjeant was unable to obtain ammunition in the U.K. Instead, he settled for the next best thing by carrying out what the judge later called “a fantasy assassination” via blanks. Sarjeant was sentenced to five years under the 1848 Treason Act, but was released in October 1984. After his time in a psychiatric prison, Sarjeant apparently changed his mind about wanting fame and notoriety. Upon his release, he changed his name, and, according to the BBC, started a new life.


Marcus Sarjeant
Born Marcus Simon Sarjeant
1964 (age 53–54)
Dover, Kent, England
Nationality British
Known for 1981 Trooping the Colour ceremony incident
Marcus Simon Sarjeant (born 1964) is a Briton who fired six blank shots at Queen Elizabeth II as she rode down The Mall to the Trooping the Colour ceremony in 1981.[1

Background
Sarjeant, who was from Capel-le-Ferne, near Folkestone, Kent, went to Astor Secondary School in Dover. He was a member of the Scouts, becoming local patrol leader before leaving to join the Air Training Corps in 1978. In the ATC, Sarjeant won a marksman's badge, and he owned an air rifle. After leaving school in May 1980 with seven CSE passes, Sarjeant applied to join the Royal Marines but could not accept the discipline and left after three months, claiming that officers bullied him. He also tried to join the Army but stayed only for two days of an induction course.[2]

After failed applications to join the police and the fire service, he worked at a zoo and at an arts centre in Folkestone. Under the Youth Training Scheme he worked at a youth centre in Hawkinge.[3] Friends reported that Sarjeant joined the Anti-Royalist Movement in October 1980. At the time of the incident at the Trooping the Colour, he was unemployed and living with his mother, while his father was working abroad.[3]

He tried unsuccessfully to find ammunition for his father's .455 Webley revolver, and to get a gun licence of his own, he joined a local gun club. Through mail order he paid £66.90 for two blank-firing replica Colt Python revolvers. In the run-up to the annual Trooping the Colour ceremony, Sarjeant sent letters to two magazines, one of which included a picture of him with his father's gun. He also sent a letter to Buckingham Palace which read "Your Majesty. Don't go to the Trooping the Colour ceremony because there is an assassin set up to kill you, waiting just outside the palace". The letter arrived on 16 June,[2] three days after the ceremony.

Trooping the Colour incident

On 13 June 1981, Sarjeant joined the crowds for Trooping the Colour, finding a spot near the junction between The Mall and Horseguards Avenue. When the Queen came past riding her 19-year-old horse Burmese, Sarjeant quickly fired six blanks from his starting pistol. The horse was momentarily startled but the Queen brought her under control; she was unharmed. Nearby service personnel quickly reacted and subdued Sarjeant, who told them "I wanted to be famous. I wanted to be a somebody".[2][4] Corporal Galloway, and McNeill who were closest to Sarjeant, grabbed him by the hair, and pulled him over the crowd control barriers, before wrestling him to the ground and disarming him.[5]

The incident happened fifteen minutes after the Queen's departure from Buckingham Palace. Immediately the Sovereign's Escort was ordered by the Gold Stick-in-Waiting to "close up" around Her Majesty. The Queen continued to Horse Guards Parade.

Investigation

In questioning, Sarjeant said he had been inspired by the assassination of John Lennon in December 1980,[6] and the attempts on the lives of Ronald Reagan and Pope John Paul II. In particular he noted the ease with which Mark David Chapman had become famous after killing Lennon. A friend said that at the time of John Hinckley, Jr.'s attempt on the life of President Reagan, Sarjeant had said "I would like to be the first one to take a pot shot at the Queen".[6] The police found that Sarjeant had written "I am going to stun and mystify the world. I will become the most famous teenager in the world." Investigations by psychiatrists found that Sarjeant did not have any abnormalities within the Mental Health Act 1983.

Trial
Sarjeant became the first person since 1966 to be prosecuted under the Treason Act 1842,[7] and was brought to trial before the Lord Chief Justice, Lord Lane, on 14 September 1981. He pleaded guilty, and Lord Lane, in sentencing him to five years' imprisonment, said that "the public sense of outrage must be marked. You must be punished for the wicked thing you did".[8] He was found guilty of an offence under Section Two of the Treason Act in that he "wilfully discharged at or near Her Majesty the Queen a gun with the intent to alarm or distress Her Majesty."[9] Sarjeant appealed against the length of the sentence, but the appeal was refused.[10]

Release
After three years in jail which were mostly spent at Grendon Psychiatric Prison in Buckinghamshire,[11] Sarjeant was released in October 1984 at the age of 20. He changed his name and began a new life.[1]