Showing posts with label 1685. Show all posts
Showing posts with label 1685. Show all posts

Thursday, 20 August 2020

FARRUKSHIYAR ,MOGHUL BORN 1685 AUGUST 20 - 1719 APRIL 19



FARRUKSHIYAR  ,MOGHUL BORN 
1685 AUGUST 20 - 1719 APRIL 19



அப்துல் முசாபர் முயினுத்தீன் முகம்மத் சா பரூக்-சியார் ஆலிம் அக்பர் சானி வாலா பாட்சா-இ-பாகர்-உ-பார் [சாகித்-இ-மசுலும்] என்னும் முழுப்பெயர் கொண்ட பரூக்சியார் (Farrukhsiyar - ஆகத்து 20, 1685 - ஏப்ரல் 19, 1719) 1713 முதல்1719 வரை முகலாயப் பேரரசராக இருந்தார். அழகானவராகக் குறிப்பிடப்படும் இவர் மிகவும் பலமற்ற ஒரு ஆட்சியாளராக இருந்தார். ஆலோசகர்களின் போக்குக்கு இலகுவாக இசைந்து கொடுக்கக் கூடியவராக இருந்தார். இவர் சுதந்திரமாக ஆட்சி செய்யக்கூடிய திறமையும், இயல்பும் அற்றவராக இருந்தார். இவரது காலகட்டத்தில் சையத் சகோதரர்களின் பலம் அதிகரித்து வந்தது. முகலாயர் ஆட்சி என்ற முகமூடிக்குப் பின்னால் இவர்களே நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தனர்.

வரலாறு
பரூக்சியார், முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் சாவின் மகனான ஆசிம் உசு சானின் இரண்டாவது மகனாவார்.இவர் தக்காணத்தில் உள்ள ஔரங்கபாத்தில் 1683 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், காசுமீரில் முகலாய சுபேதாராக இருந்த நவாப் சைசுத்தா கானின் சகோதரி சாகிபா நிசுவான் ஆவார். பரூக்சியார், டிசம்பர் 1715 ஆம் ஆண்டுக்கு முன், காசுமீரத்துப் பிரபுவான சாதாத் கான் பகதூர் என்பவரின் மகளான பக்ருன்நிசா பேகம் சாகிபா என்பவரை மணந்து கொண்டார். பின்னர் சோத்பூரின் மகாராசா அசித்சிங்கின் மகள் இந்திரா கன்வாரையும் திருமணம் செய்தார். மூன்றாவதாக இன்னொரு பெண்ணையும் இவர் மணம் புரிந்ததாகத் தெரிகிறது.

ஆட்சிக்காலம்

1713 சனவரி 10 ஆம் தேதி ஆக்ராவுக்கு அருகில் உள்ள சமுகர் என்னும் இடத்தில் அப்போதைய முகலாயப் பேரரசர் சகாந்தர் சா தோற்கடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பரூக்சியார் ஆட்சியில் அமர்வதற்கு சையத் சகோதரர்கள் உதவினர். 1713 சனவரி 11 ஆம் நாள் தனது 30 ஆவது வயதில் பரூக்சியார் ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். ஆனாலும், ஆட்சியதிகாரம் சையத் சகோதரர்கள் கையிலேயே இருந்தது.

வணிகச் சலுகை
பரூக்சியாரின் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முழு வங்காளத்திலும் வரியற்ற வணிகம் செய்வதற்கான உரிமையை ஆண்டொன்றுக்கு மூவாயிரம் ரூபாயைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டது. கம்பனியின் மருத்துவர் வில்லியம் அமில்ட்டன், பரூக்சியாருக்கு ஏற்பட்ட நோயொன்றைக் குணப்படுத்தியதனால் இவ்வாறு குறைந்த விலைக்கு இச்சலுகை வழங்கப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். சூரத்தில் இருந்த முகலாயர்களின் கடற்படையைத் தாக்கப்போவதாக வதந்தியைக் கிளப்பிவிட்டு இந்தச் சலுகையைப் பெற்றதாக வேறு சிலர் கூறுகின்றனர்.

இறப்பு
ஆறு ஆண்டுகளுக்குச் சற்றுக் கூடிய காலமே பதவியில் இருந்த பரூக்சியார், சையத் சகோதரர்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்டுப் பசியால் வாடினார். 1719 பெப்ரவரி 28 ஆம் நாள், சையத் சகோதரர்களின் ஆணையின்படி பரூக்சியாரின் கண்கள் ஊசியால் குத்திக் குருடாக்கப்பட்டதுடன், 1719 ஏப்ரல் 27/28 இரவில் அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார். பின்னர் பரூக்சியாரின் ஒன்றுவிட்ட சகோதரனான ராபி-உல்-தார்சத் என்பவர் பேரரசன் ஆக்கப்பட்டார்.

.

ஜஹந்தர் ஷாவுக்குப் பிறகு, 1713 ஜனவரி 11 அன்று முகலூ சுல்தானகத்தின் சிம்மாசனத்தில் ஃபாரூக்சியர் அமர்ந்தார். ஃபாரூக்சியார் இன்றுவரை அனைத்து சுல்தான்களிலும் மிகவும் பயனற்ற மற்றும் முட்டாள் ஆட்சியாளராக நிரூபிக்கப்பட்டார். அவர் சயீத் சகோதரர்களின் உதவியுடன் அரியணையில் அமர்ந்தார், ஆனால் பின்னர் அவர்களுக்கு எதிராக சதி செய்தார். அவருக்கு தற்கொலை என நிரூபிக்கப்பட்டதை உணர்கிறேன். மார்ச் 1713 இல், ஃபாரூக்சியார் மற்றும் சையத் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.அந்த சகோதரர்கள் இருவரும் நீதிமன்றத்திற்கு வருவதை நிறுத்தினர், இதனால் ஃபாரூக்ஸியார் மிகவும் பதற்றமடைந்து மன்னிப்பு கேட்டார். இரு சகோதரர்களும் ஒப்புக் கொண்டனர், ஆனால் இந்த முறை அவர்கள் அதிகாரத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டனர், இது ஃபாரூக்ஸியாரை மிகவும் கவலையடையச் செய்தது. ஆட்சியின் அனைத்து முடிவுகளும் சையத் சகோதரர்களால் எடுக்கப்பட்டது. அவர் மீண்டும் சையித் சகோதரர்களுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தைத் தொடங்கினார்.



சையித் சகோதரர்கள் சக்கரவர்த்தியின் அனைத்து நம்பிக்கைக்குரிய மக்களையும் தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இந்த சகோதரர்கள் செய்த மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் சுல்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிய மராட்டிய மன்னர் ஷாஹுஜி மகாராஜுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்கள், அதன்படி மராட்டியர்கள் டெக்கான் பிரதேசங்களில் கைப்பற்றப்பட்டனர். வரி விலக்கு வழங்கப்பட்டது. முகலாயர்களால் சிறையில் அடைக்கப்பட்ட ஷாஹூஜியின் தாய் மற்றும் சகோதரர்களை விடுவிப்பதன் மூலம் ஷாஜூஜியின் நம்பிக்கையை வென்றார். மராட்டியர்களுடனான ஒப்பந்தத்தின் பின்னர், சையத் சகோதரர்கள் உண்மையான ஆட்சியாளர்களாக மாறினர், இப்போது அவர்கள் ஃபாரூக்சியருக்கு ஒரு பாடம் கற்பிக்க திட்டமிட்டுள்ளனர். தொடங்கியது

பிப்ரவரி 27, 1719 அன்று, சையத் சகோதரர்கள் அரண்மனைக்குள் நுழைந்து தங்கள் காவலர்களை நிறுத்தினர்.பருக்ஷியார் பயத்தால் ஜனநாகனாவில் ஒளிந்து கொண்டார். படையினர் ஃபாரூக்ஸியாரை அரியணையை விட்டு வெளியேறும்படி அல்லது மரணங்களில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.பருக்ஷியார் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து தனது தலைப்பாகையை சயீத் சகோதரர்களின் காலடியில் வைத்தார்.அவர் கைது செய்யப்பட்டார், முதலில் கண்மூடித்தனமாக சிறையில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 27 அன்று, ஃபாரூக்ஸியார் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்து ஹுமாயூனின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.


जहांदार शाह के बाद फर्रुखसियर 11 जनवरी 1713 को मुग़ल सल्तनत के सिहांसन पर बैठा .फर्रुखसियर अब तक के  सभी सुल्तानों में सबसे निकम्मा और बेवकूफ शासक साबित हुआ .वो सैय्यद बंधुओं की मदद से गद्दी पर बैठा था लेकिन बाद में उनके खिलाफ ही साजिशें करना लगा जो उसके लिए आत्मघाती साबित हुआ .मार्च 1713 में फर्रुखसियर और सैय्यद बंधुओं के बीच कलह की शुरुआत हो गई .दोनों भाइयों ने दरबार में आना छोड़ दिया जिससे फर्रुखसियर काफी घबरा गया और उनसे माफी मांगने जा पहुंचा. दोनों भाई मान तो गए लेकिन इस बार उन्होंने सत्ता पर अपनी पूरी पकड़ बना ली जिससे फर्रुखसियर काफी चिंतित हो गया .शासन के सारे फैसले सैय्यद बंधू ही लेते थे .जाहिर है फर्रुखसियर को अपनी सत्ता हाथ से निकलती हुई लगी. उसने एक बार फिर सैय्यद बंधुओं  के खिलाफ षड़यंत्र शुरू कर दिया.
सैय्यद  बंधुओं ने सम्राट के सारे विश्वासपात्र लोगों को अपनी ओर मिला लिया .इन भाइयों ने जो सबसे बड़ा काम किया वो ये था कि सल्तनत के लिए सबसे बड़ा खतरा बन चुके मराठा राजा शाहूजी महाराज से एक संधि की जिसके मुताबिक़ मराठों को दक्खन के प्रदेशों में कर वसूली की छूट दे दी .उन्होंने मुगलों की कैद में रह रही शाहूजी की माता और भाइयों को आजाद कर शाहूजी का विश्वास जीत लिया .मराठों  से संधि होते ही सैय्यद बंधू ही असली शासक बन बैठे और अब वो फर्रुखसियर को सबक सिखाने की योजना बनाने लगे. 

27 फरवरी 1719 को सैय्यद  बंधुओं    ने महल में घुसकर अपने पहरेदार तैनात कर दिए .फर्रुखसियर डर के मारे जनानखाने में जा कर छुप गया. सैनिकों ने फर्रुखसियर को गद्दी छोड़ने या मौत में से किसी एक को चुनने को कहा .फर्रुखसियर ने जिन्दगी चुनी और अपनी पगड़ी सैय्यद बंधुओं   के चरणों में रख दी .उसे गिरफ्तार कर पहले अंधा किया गया फिर कैदखाने में डाल दिया गया .27 अप्रैल को फर्रुखसियर का गला घोंटकर उसे मार डाला गया और हुमायूं के मकबरे के पास दफना दिया गया. 

Tuesday, 6 February 2018

CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE DIED 1685 FEBRUARY 6












CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE


DIED 1685 FEBRUARY 6



இரண்டாம் சார்லசு (Charles II, 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர்.

இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரண்டாம் சார்லசுவின் தந்தையும் இங்கிலாந்தின் பேரரசருமான முதலாம் சார்லசு 1649 சனவரி 30 அன்று வைட்ஹால் அரண்மனையில் தூக்கிலிடப்பட்டார். இசுக்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை இசுக்கொட்லாந்தின் அரசராக 1649 பெப்ரவரி 5 இல் அறிவித்தது.[2] ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் பொதுநலவாய இங்கிலாந்து என்ற இடைக்கால அரசை அமைத்து, [ஆலிவர் கிராம்வெல்]]லின் தலைமையில் குடியரசானது. கிராம்வெல் 1651 செப்டம்பர் 3 இல் வூஸ்டர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் இரண்டாம் சார்லசுவைத் தோற்கடித்தார்.[3] இதனை அடுத்து சார்லசு பிரான்சுக்குத் தப்பி ஓடினார். கிராம்வெல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளினதும் ஆட்சியாளராக இருந்தார். இரண்டாம் சார்லசு அடுத்த ஒன்பதாண்டு காலம் நாடு கடந்த நிலையில் பிரான்சு, டச்சுக் குடியரசு, எசுப்பானிய நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.[4]

1658 இல் கிராம்வெல்லின் இறப்பை அடுத்து இடம்பெற்ற அரசியல் சிக்கல் நிலையில், முடியாட்சி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு,[5] முடிக்குரியவராக இருந்த இரண்டாம் சார்லசு பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டார்.[6] 1660 மே 29 இல் அவரது 30வது அகவையில் இலண்டனில் அவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 1660 முதல், அனைத்து அரச ஆவணங்களும் அவர் 1649 இல் தந்தைக்குப் பின்னர் ஆட்சிப் பொறுபை ஏற்றவர் என்று மாற்றப்பட்டன.

சார்லசுவின் இங்கிலாந்து நாடாளுமன்றம் இங்கிலாந்து திருச்சபையின் நிலையை உயர்த்திக் கொள்ள கிளாரண்டன் குறியீடு என அறியப்படும் சட்டங்களை இயற்றியது. சார்லசு மதசகிப்புத் தனமைக் கொள்கைக்கு ஆதரவளித்தாலும், கிளாரண்டன் குறியீட்டு சட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டியதாயிற்று.[7] இவரது ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் இரண்டாம் ஆங்கிலேய-டச்சுப் போர் இடம்பெற்றது. 1670 இல், அவரது தாய்-வழிச் சகோதரரான பிரான்சின் பதினான்காம் லூயி அரசனுடன் டோவரில் ஓர் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதன்படி மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போரில் லூயி சார்லசுவிற்கு உதவியளிக்க முன்வந்தார்.[8] பதிலுக்கு சார்லசு தான் கத்தோலிக்கத்துக்கு நாள் குறிப்பிடப்படாத பின்னொரு நாளில் மதம் மாறுவதாக லூயியிற்கு இரகசிய வாக்குறுதி அளித்தார். இரண்டாம் சார்லசு தனது 1672 ஆம் ஆண்டு அரசப் பிரகடனம் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டத்தாந்து எதிர்பாளர்களுக்கும் சமயச் சுதந்திரம் அளிப்பதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் அப்பிரகடனத்தைத் திரும்பப் பெற்றார். 1679 இல் சார்லசுவின் சகோதரரும், அடுத்த முடிக்குரியவருமான யோர்க் இளவரசர் இரண்டாம் ஜேம்சு ஒரு கத்தோலிக்கர் என்பது தெரிய வந்தது. இந்த நெருக்கடியின் மூலம் நாடாளுமன்றத்தில் முடியாட்சிக்கு எதிரான விக் கட்சியும், சார்பான டோடி கட்சியும் உருவாயின. 1683 இல் சார்லசையும், ஜேம்சையும் படுகொலை செய்வதற்கான திட்டமும்
வெளிக்கொணரப்பட்டது. விக் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டனர். சார்ல்ஸ் 1781 இல் நாடாளுமன்ரத்தைக் கலைத்து, 1685 பெப்ரவரி 6 இல் இறக்கும் வரை தனியாக ஆட்சி நடத்தினார். இவர் இறக்கும் தறுவாயில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறினார்.


ஆலிவர் கிராம்வெல், மற்றும் பியூரித்தான்களின் பத்தாண்டுகளுக்கும் மேலான கடுமையான ஆட்சிக் காலத்தின் பின்னர் சார்லசுவின் ஆட்சிக்காலத்தில் நாடு வழமை நிலைக்குத் திரும்பியதன் மூலம் சார்லசு ஒரு "களிப்பு மிக்க பேரரசன்" என மக்களால்
அறியப்பட்டார். சார்லசின் மனைவி கேத்தரினுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லை.[9] ஆனாலும், சார்லசுசிற்கு வேறு தகாத உறவுகளின் மூலம் 12 பிள்ளைகள் இருந்தனர். சார்லசிற்குப் பின்னர் இரண்டாம் ஜேம்சு பேரரசான முடி சூடினார்.