Showing posts with label ECONOMICS. Show all posts
Showing posts with label ECONOMICS. Show all posts

Sunday, 18 July 2021

ROLE OF CURRENCY IN ECONOMICS

 

ROLE OF CURRENCY IN ECONOMICS



பணம் என்றவுடனேயே எல்லோருக்கும் அதன் பலா பலன்கள்தான் நினைவுக்கு வரும் . இப்படிப் பலாபலன்கள் மட்டுமே நினைவுக்கு வருவதால் பணம் ஒருவிதமான இனம் புரியாத கலவரத்தைத்தான் மனித மனதில் உண்டு பண்ணுகின்றது . சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள் . வங்கிக்குள் வரும் மனிதர்களுடைய நடவடிக்கையை வங்கிக்குள் நுழையும் முன் , வங்கிக்குள் நுழைந்த பின் என இரண்டு வகையாக பிரித்துப் பார்த்தபோது பல சுவையான விஷயங்களைக் கண்டறிந்தார்கள் . வங்கி என்பது பணம் குடியிருக்கும் இடம் . அந்த இடத்துக்குள் வரும்போது பலரும் ஒருவிதமான படபடப்புடன் செயல்படுகிறார்களாம் . மருத்துவமனை , கோயில் , பள்ளி போன்ற இடங்கள் எல்லாவற்றையும்விட வங்கிக்குள் வரும் போது மனிதர்களின் நடவடிக்கை கொஞ்சம் பரபரப்பாகவும் , தீர்க்கமாகவும் மாறிவிடுகிறதாம் . வங்கியில் மட்டுமல்ல , கொஞ்சம் பெரிய தொகையைக் கையாளும்போதே நமக்குள் ஒரு படபடப்பு வந்துவிடுவது நிஜம்தானே ! இதனால்தான் மனிதன் பணத்தை முக்கியமான விஷயமாகக் கருதுகின்றான் . கிட்டத்தட்ட வணங்கத் தகுந்த விஷயமாகவே மனிதர்கள் பணத்தைக் கையாளுகின்றனர் என்று சொல்கின்றார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள் . மிக மன நம்ப முடியவில்லை இல்லையா ? ஒரு சின்னப் பரீட்சை செய்து பார்ப்போம் . கதவு மூடப்பட்ட அறையினுள் மேஜையின் மீதிருந்து ஒரு வெள்ளைத் தாளைப் பறக்கவிட்டுப் பாருங்கள் . பிறகு அதே மேஜையில் இருந்து ஓர் ஆயிரம் ரூபாய் நோட்டை பறக்கவிடுங்கள் . வெள்ளைத்தாள் பறக்கும்போது உங்கள் நாடித் துடிப்பு எப்படி இருந்தது ? ஆயிரம் ரூபாய்த் தாள் பறக்கும்போது உங்கள் நிலை எப்படி இருந்தது ? நன்றாகவே மாறுபட்டிருந்தது , இல்லையா ? இதுதான் பணத்தின் பிரச்னை . பணமானது வெவ்வேறு முகங்களைக் கொண்டது . பாதுகாப்பு , பிரச்னை , வலிமை மற்றும் உந்துசக்தி என மூன்று முக்கிய விஷயங்ளை நமக்குத் தருவதாக இருக்கிறது . எப்படி ? நம்மிடம் பணம் இல்லாதபோது மட்டுமே இந்த உலகத்தின் குரூர முகத்தை நம்மால் முழுமையாகப் பார்க்க முடியும் . பணம் இல்லையென்றால் , நம் வாழ்க்கையை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது . பணம் வைத்திருக்கும் யாரோ ஒருவர்தான் நம் வாழ்க்கையை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் . பணம் இருந்தால் நாம் மற்றவர் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முடியும் . பணம் இருக்கும்போது பிரச்னை வந்தால் , அந்தப் பணத்தை வைத்துப் பிரச்னையை சரிசெய்துகொள்ள முடியும் . பணம் நமக்குப் பாதுகாப்பு , ஒப்புக்கொள்கிறோம் . ஆனால் , அது எப்படிப் பிரச்னை ஆகும் ? பணம் என்றவுடனேயே அதிகமாக சம்பாதிப்பது எப்படி , சம்பாதித்ததைக் கைநழுவவிடாமல் காப்பது எப்படி போன்ற பிரச்னைகள் மனதில் குடிகொள்ள ஆரம்பித்துவிடும் . இந்தப் பிரச்னைகள் நினைவுக்கு வருவதால்தான் பணம் என்றாலே பிரச்னை என்று நாம் நினைக்கிறோம் .



அடுத்தது , வலிமை . நாம் வாழும் சமுதாயத்தில் பணம் வைத்திருப்பவர்களை பெரிய மனிதர்கள் என்று எண்ணும் எண்ணம் பெரிதாக வளர்ந்து நிற்கின்றது . இதைத்தான் வலிமை என்கின்றோம் . நினைத்ததை வாங்க முடியும் என்ற நிலையும் பணம் வைத்திருப்பவருக்கு வலிமையைத் தருகின்றது . உங்களுக்கு நாளைக்கே பெரும் தொகை கையில் கிடைக்கின்றது . என்னென்ன செய்வீர்கள் ? அந்தப் பழைய வாஷிங்மெஷினை மாற்றிவிடவேண்டும் , பெரிய கார் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றதில்லையா ! கடைசியாக , உந்துசக்தி . நம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளுமே பணம் சார்ந்ததாக இருக்கின்றது . பணம் என்பது உலகத்தில் இருக்கும் காற்று , நீர் போன்ற இன்னுமொரு விஷயம் என நினைக்காதீர்கள் . நீங்கள் யார் , என்ன செய்கின்றீர்கள் என்பதை முடிவு செய்வது உங்களிடம் இருக்கும் பணம்தான் . உலகத்தில் அனைவருக்கும் தரப்பட்ட நேரம் 24 மணி நேரம்தான் . இதில் நீங்கள் உழைப்பு என்ற எனர்ஜியை ( சக்தி ) தந்து சாப்பாட்டைத் தேடுகின்றீர்கள் . சம்பாதிக்கும் பணத்தில் நீங்கள் மீதம் வைக்கும் பணம் என்பது உங்களுடைய எனர்ஜிதான் . அதைச் சேமித்து வைக்கின்றீர்கள் . பிற்காலத்தில் அதை உபயோகிக்கவும் செய்கின்றீர்கள் . எந்த அளவுக்கு இந்த எனர்ஜியை சேமித்து வைக்கின்றீர்களோ , அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான ஆளாகின்றீர்கள் . பாதுகாப்பு , பிரச்னை , வலிமை , உந்துசக்தி ... இப்படி , பணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் . ஆனால் , ' நான் அதை நிறைய சம்பாதிக்க வேண்டும் . நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்களோ இல்லையோ , அதுபற்றி கவலையே இல்லை பணம் பண்ண நினைக்கும் மனிதர்களிடம் இருக்கும் அடிப்படை மனோ பாவம் இது ! அனாவசியமாக அடுத்தவர்களைப் பணக்காரர்கள் ஆக்காதீர்கள் என்று சொல்வேன் நான் . இது ஒரு சுயநலமான எண்ணம் நீங்கள் நினைக்கலாம் . பணத்தைத் என தேவையற்ற காரணத்துக்காக நீங்கள் செலவிடும்போது உங்களை ஏழையாக்கிக்கொண்டு நீங்கள் செலவழிக்கும் பணத்தைப் பெறுகிறவரை பணக்காரர் ஆக்குகிறீர்கள் . இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில் , தேவையில்லாத பொருளை தேவையில்லாத நேரத்தில் வாங்குவதால் , தேவையான பொருளை தேவையான நேரத்தில் வாங்க உங்களிடம் பணம் இல்லாது போகலாம் .


அடுத்து நமக்கு அடிக்கடி மனதில் தோன்றும் கேள்வி , பணம் மகிழ்ச்சியைத் தருகின்றதா ? இது ஒரு மிகப் பெரிய கேள்வி . பணம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் என்று பணம் இல்லாதவர்களும் , நிறையப் பணம் இருக்கின்றது ; மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை என்று ஒரு சாராரும் சொல்லக் கேட்கின்றோம் .


பணம் இருப்பவரோ இல்லாதவரோ , அவரவருக்கு உரிய எல்லைகளைத் தாண்ட நினைக்கும்போது மகிழ்ச்சி மறைந்துபோகின்றது . பணம் என்பது மனிதனுடைய தேவைகளில் தலையாயதாக இருக்கின்றது . இதில் ஒரே ஒரு பிரச்னை , பணமும் வாழ்க்கையில் உள்ள இன்னபிற விஷயங்களும் ஒன்றாக இருக்கும்போதுதான் மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு கிடைக்கின்றது . தேவைக்காகப் பணம் சம்பாதிக்க முயலும்போதும் சரி , தேவைக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முயலும்போதும் சரி , நாம் நம் குடும்பம் , நண்பர்கள் , ஏன் நம்மையே மறக்கும்போது பிரச்னைகள் பூதாகாரமாக ஆகிவிடுகின்றது . நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மறந்து நாம் பணம் சம்பாதிப்பதில் லயிக்கும்போது பணம் வரவாகவும் , மகிழ்ச்சி , பற்றாகவும் மாறி பற்றாக்குறையில் தவிக்க ஆரம்பிக்கின்றோம் . இந்த உலகில் பணம் தந்து வாங்கக்கூடியவை சில . பணம் தந்து வாங்க முடியாதவை சில . மனித வாழ்வுக்கு இந்த இரண்டும் ஒரு சீரான அளவில் சேர்ந்த கலவையாகத் தேவைப்படுகின்றது . பணம் நம் உணவில் உப்பைப் போன்றது . பணமும் சரி , அதைத் தேடுவதற்கான முயற்சியும் சரி , அளவாக இருக்கும் வரை வாழ்க்கை என்ற உணவு சுவையாக இருக்கின்றது . அது அளவுக்கு அதிகமாகப் போகும்போது சுவை குறைய ஆரம்பித்து , ஓர் அளவைத் தாண்டும்போது வாயில் வைக்க முடியாத அளவுக்குக் கெட்டுப் போய் விடுகின்றது . பெரும் பணம் செலவு செய்து ஓர் உயர் தர வெளிநாட்டு நாயை வாங்கினாலும்கூட , அது நம்மைப் பார்த்து வாலாட்ட கொஞ்ச நேரம் அதனுடன் செலவு செய்ய வேண்டும் . பெரும் பணம் தந்து நம்மை வாங்கியுள்ளாரே நம் எஜமான் என்று அதற்குத் தெரியாது . நேரத்துக்கு சோறு வைத்து , வாஞ்சையாகத் தடவித் தந்தால்தான் வாலை ஆட்டி வளைய வரும் . ஆகவே , வருமானத்தைத் தேடுங்கள் . கட்டாயமாகச் செலவுகளைக் குறையுங்கள் . சேமிப்பை அதிகமாக்குங்கள் . நஷ்டம் அடைவதைத் தவிருங்கள் . லாபகரமாக முதலீடுகளைச் செய்யுங்கள் . எதிர்கால வருமானத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் . உங்கள் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கிறதா என்று கவனியுங்கள் . இந்தப் பணவிதிகள்தான் எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்துவது .  சுலபமாக

விதிகள் இருந்தாலும் அதற்கு விளக்கங்கள் நிறையவே தேவைப்படுகின்றது . அந்த விளக்கங்களைத் தருவதுதான் பணவளக்கலையின் முக்கிய நோக்கம் . 

Friday, 5 June 2020

ADAMSMITH ,POLITICAL ECONOMICS BORN 1723 JUNE 5 - JULY 6,1790


ADAMSMITH ,POLITICAL ECONOMICS 
BORN 1723 JUNE 5 - JULY 6,1790


ஆடம் சிமித் (ஆடம் ஸ்மித்; Adam Smith; ஞானஸ்நானம் ஜூன் 16, 1723 – ஜூலை 17,1790 [பழைய முறை: ஜூன் 5, 1723 – 17 ஜூலை 1790]) ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் [1] ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு (The Theory of Moral Sentiments), நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நூல் அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்பதுடன், தற்காலப் பொருளியலின் முதலாவது நூல் என்றும் கருதப்படுகிறது.[2]

சிமித், ஒழுக்க மெய்யியலை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்|ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பட்டம் பெற்றபின்னர், எடின்பரோவில் பல வெற்றிகரமான விரிவுரைகளை நிகழ்த்தினார். பின்னர் ஸ்காட்டிய அறிவொளிக் காலத்தில் அவர் டேவிட் ஹியூம் (David Hume) என்பவருடன் சேர்ந்து பணியாற்றினார். ஒழுக்க மெய்யியல் கற்பிப்பதற்காக சிமித்துக்கு கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி கிடைத்தது. இக்காலப்பகுதியில்தான் இவர்ஒழுக்க உணர்வுக் கோட்பாடு என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் தனது வாழ்வின் பிற்காலங்களில் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கொண்ட பல கற்பித்தல் வாய்ப்புக்களைப் பெற்றார்.[3] இவற்றின் மூலம் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த பல அறிவுத்துறை சார்ந்த தலைவர்களைச் சந்தித்தார். பின்னர் சொந்த நாடு திரும்பிய அவர் அடுத்த பத்து ஆண்டுகளையும் நாடுகளின் செல்வம் என்னும் நூலை எழுதுவதில் செலவிட்டார். இது 1776 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1790 ஆம் ஆண்டில் சிமித் காலமானார்.
வாழ்க்கை வரலாறு
ஆரம்ப கால வாழ்க்கை

]ஆடம் ஸ்மித்தின் தாய் மார்க்ரெட் டக்ளசின் வரைபடம்

ஸ்மித், ஸ்காட்லாந்தில் உள்ள பிஃபே பிரதேசத்தில் உள்ள கிர்கல்கால்டி நகரில் பிறந்தார். அவரது தந்தை ஆடம் ஸ்மித் மூத்த வழக்கறிஞரான சிக்னெட், வக்கீல் மற்றும் அரசு வழக்கறிஞர் (நீதிபதி வழக்கறிஞர்) ஆகியோருக்கு ஒரு ஸ்காட்டிஷ் எழுத்தாளர் ஆவார். மேலும் கிர்கல்கால்டி சுங்க கணக்காயர் பணியாற்றினார்.[4] 1720 ஆம் ஆண்டில், அவர் பிஃபேயில் உள்ள ஸ்ட்ராட்ஹெண்டரியின் ராபர்ட் டக்ளஸ் என்பவரின் மகள் மார்கரெட் டக்ளஸை மணந்தார். ஸ்மித் பிறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது தந்தை இறந்துவிட்டார் ஆதவால் அவரது தாய் விதவையாக வாழ நேரிட்டது.[5] 1723 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி கிர்கல்கால்டி நகரத்தின் ஸ்காட்லாந்து சர்ச்சில் ஸ்மித்தின் ஞானஸ்நானம் நடைபெற்றது. இத்தேதியே அவரது பிறந்த தேதியாக அடிக்கடி கருதப்பட்டாலும் இது உண்மையா என்பது தெரியவில்லை.[6] ,[7] ஸ்மித்தின் ஆரம்பகால குழந்தை பருவ நிகழ்வுகளாக சில அறியப்படுகிறது. ஸ்காட்டிய பத்திரிகையாளரும் ஸ்மித்தின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியருமான ஜான் ரே இதனை பதிவு செய்துள்ளார். ஸ்மித் மூன்று வயதில் நாடோடிகளால் கடத்தப்பட்டார். அவரை மீட்க மற்றவர்கள் சென்ற போது அவர் விடுவிக்கப்பட்டார். ஸ்மித் உயரிய சாதனைகள் இலட்சியங்களை அடைய தாய் மார்க்ரெட் ஊக்கப்படுத்தினார் ஆதாலால் அவரது தாயிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார்.[8] கிரிகால்டி புருக் பள்ளியில் (Burgh School of Kirkcaldy) ஸ்மித் கல்வி பயின்றார். ரே (RAE) என்ற அமைப்பால் 1729 முதல் 1737 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஸ்காட்லாந்தின் சிறந்த உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்றாகக் அது தரப்படுத்தப்பட்டது. வரை அவர் லத்தீன், கணிதம், வரலாறு, எழுத்து ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.[9][10]

முறைசார் கல்வி

ஸ்மித்தின் சொந்த ஊரான கிர்கல்கால்டியில் அமைந்துள்ள ஒரு நினைவு சின்னம்

தனது பதினாறாவது வயதில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் ஸ்மித் சேர்ந்து பிரான்சிஸ் ஹட்ச்சன் கீழ் அறநெறி தத்துவத்தை பயின்றார். இங்கு ஸ்மித் சுதந்திரம், காரண காரியமறிதல் மற்றும் பேச்சு ஆகியவற்றின் மீது தனது பேரார்வத்தை வளர்த்துக்கொண்டார். 1740 ஆம் ஆண்டில், ஸ்மித் பட்டதாரி அறிஞர் ஆனவுடன் ஸ்னெல் கண்காட்சியின் கீழ் ஆக்ஸ்போர்டு பாலிஹால் கல்லூரியில் முதுகலைப் படிப்புகளை மேற்கொள்வதற்கு அனுப்பப்பட்டார்.

ஆக்ஸ்போர்டை காட்டிலும் கிளாஸ்கோவில் போதிக்கும் போதனைகளை நன்றாக இருப்பதாக ஸ்மித் கருதினார்.[11] தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ் என்ற ஐந்தாம் புத்தகத்தின் அத்தியாயம் II இல், ஸ்மித் "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், பொதுப் பேராசிரியர்களின் பெரும்பகுதியினர் பல ஆண்டுகளாக போதிக்கும் போதனையைப் போலவே அவர்களது பாசாங்கு உள்ளது." என எழுதினார். டேவிட் ஹியூமின் ட்ரெடிஸின் மனித இயல்பு பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்தார் என்பதற்காக ஆக்ஸ்போர்டு அதிகாரிகளா்ல் கண்டறியப்பட்டு பின்னர் அப்புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கடுமையாக தண்டிக்கப்பட்டார்.[12][13][14] வில்லியம் ராபர்ட் ஸ்காட் படி, "ஸ்மித்தின் ஆக்ஸ்போர்டு காலம் அவரது வாழ்வாதாரத்திற்கு எவ்வித உதவியும் அளித்துவிடவில்லை.[15] இருப்பினும், ஆக்ஸ்போர்டினட போட்லியன் நூலகத்தில் இருந்து பல புத்தகங்களைப் படித்ததன் மூலம் ஸ்மித்தின் பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு ஸ்மித் வாய்ப்பு கிடைத்தது.[16] ​​ஆக்ஸ்போர்டில் இருந்த போது அவர் தனது கல்வியை மகிழ்ச்சியுடன் சுயமாக கற்காதது அவருடைய கடிதங்களின் படி அறியமுடிகிறது.[17] அவரது படிப்பு காலம் முடிவதற்கு நெருக்கத்தில் ஸ்மித் வலிப்பு மற்றும் நடுக்கத்தால் பாதிக்கப்பட்டார். ஒருவேளை இது நரம்பு முறிவின் அறிகுறிகளாக இருந்திருக்கலாம்.[18] 1746 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் படிப்புதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே விலகிவிட்டார்.[19][20]

“தேசங்களின் செல்வம்” புத்தகம் 5 இல் ஸ்மித், ஸ்காட்டிஷ் சகாப்தங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த தர அறிவுறுத்தல்கள் மற்றும் ஆங்கிலப் பல்கலைக் கழகங்களில் மிகவும் அறிவார்ந்த செயல்பாட்டைக் குறிப்பிடுகிறார்

ஆசிரியப் பணி
கேம்ஸின் ஆதரவின் கீழ் எடின்பர்க் தத்துவ சமூகம் நிதியுதவியின் கீழ் ஸ்மித் 1748 ஆம் ஆண்டில் எடின்பரோவில் பொது விரிவுரையை வழங்கத் தொடங்கினார்.[21] பின்னர் "ஆற்றலுடைய முன்னேற்றம்" என்பதன் பொருள்படக்கூடிய அவரது விரிவுரை தலைப்புகள் சொல்லாட்சிக் கலை மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.[22] "இயற்கை சுதந்திரத்தின் தெளிவான மற்றும் எளிமையான அமைப்பு" என்ற இந்த பிந்தைய தலைப்பில் அவர் தனது பொருளாதார மெய்யியலை முதலில் வெளிப்படுத்தினார். ஸ்மித் பொதுமக்கள் மத்தியில் பேசுவதில் திறமையானவர் இல்லை என்றாலும், அவரது விரிவுரைகள் வெற்றி பெற்றன.[23]

A man posing for a painting
ஸ்மித்தின் சமகாலத்திய நண்பரும் ஒரு நண்பர் டேவிட் ஹியூமின்

1750 ஆம் ஆண்டில், தத்துவவாதி டேவிட் ஹியூமுடன் ஸ்மித் சந்தித்தார், இவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவரது மூத்தவராக இருந்தார். வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம் மற்றும் மதம் ஆகியவற்றை உள்ளடக்கிய அவர்களின் எழுத்துக்களில், ஸ்மித் மற்றும் ஹியூம் இருவருக்குமிடையே ஸ்காட்டிஷ் அறிவாற்றல் மற்ற முக்கிய நபர்களுடன் ஒப்பிடுகையில் நெருக்கமான அறிவார்ந்த மற்றும் தனிப்பட்ட பந்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.[24]

1751 ஆம் ஆண்டில் ஸ்மித் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவ ஆசிரியராகப் பணியாற்றினார், 1752 இல் அவர் எடின்பர்க் தத்துவ சமூகம் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் லார்டு கேம்ஸ் மூலம் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் அறநெறி தத்துவவியல் துறைத் தலைவர் இறந்துவிட்டால் ஸ்மித் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.[25] அடுத்த பதின்மூன்று ஆண்டுகளுக்கு அவர் ஒரு கல்வியாளராகப் பணியாற்றினார். அக்காலத்தை "இதுவரை மிகவும் பயனுள்ள மற்றும் அவரது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மிகவும் கெளரவமான காலம் ” என வகைப்படுத்துகிறார்.[26]

கிளாஸ்கோவின் விரிவுரைகளில் சிலவற்றைத் தழுவி ஸ்மித் 1759 இல் “அறநெறி தத்துவக் கோட்பாடு” (The Theory of Moral Sentiments) என்ற நூலை வெளியிட்டார் .[27][28][29] மனித உழைப்பு எவ்வாறு முகவர் மற்றும் பார்வையாளர், அல்லது தனிப்பட்ட மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடையே அனுதாபத்தை சார்ந்துள்ளது என்பதில் இந்த வேலை அக்கறை கொண்டிருந்தது.ஸ்மித் "பரஸ்பர அனுதாபத்தை" தார்மீக உணர்ச்சிகளின் அடிப்படையாக வரையறுத்தா





.

Monday, 11 May 2020

AMERICAN ECONOMICS AND SUICIDES



AMERICAN ECONOMICS AND SUICIDES



'சேமிப்பு' ன்றது மருந்துக்குக் கூட கிடையாது. சேர்ந்த மாதிரி ரெண்டு மாசம் கூட அவங்களால வேலையில்லாம சமாளிக்க முடியாது. 90-கள்ள, உலகம் முழுக்க  ஒரு பொருளாதார தேக்கம் வந்தப்போ, அமெரிக்கால நிறைய பேர வேலைய விட்டுத் தூக்குனாங்க. அதுல ஏகப்பட்ட பேர் தற்கொலை பண்ணிட்டான்.

ரெண்டு வருஷம் முன்ன, இங்க நம்ம ஊரு பல் டாக்டர்ட்ட ஒரு நாலுபல்லு வேல பாத்ததுக்கு... 17 ஆயிரம் செலவாச்சு. அதே ட்ரீட்மெண்டுக்கு சென்னையில கேக்கும் போது, 60 ஆயிரம் சொன்னாங்க. அமெரிக்கால இருக்குற சொந்தக்காரப் பொண்ணுட்ட பேசும் போது, அதே ட்ரீட்மெண்டுக்கு அங்க எவ்ளோ ஆகும்னு கேட்டா... பல் டாக்டர்ட்ட பேசிட்டு, அடுத்த நாள் கூப்ட்டு... 21/2 to 3 லட்சம் வரைக்கும் ஆகும்னுது. மேலும், அமெரிக்கால இருக்குற நம்மாளுங்க... எந்தப் பெரிய வைத்தியமும் அங்க பண்ணிக்க மாட்டாங்களாம். மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரியான சமாச்சாரங்கள் இருக்குறதால, அந்த பூர்வக்குடிங்க தப்பிச்சுட்டு திரியுது. இல்லன்னா... அனேகம் பேர் செத்து சுடுகாட்டுக்கு போயிருப்பான். அந்தளவுக்கு, மருத்துவ செலவு மட்டுமே அவ்ளோ காஸ்ட்லியாம். 

மத்தபடி... வீடு, கலர் கலரான காருக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இருக்காது. பூராமே லோனு, கிரெடிட் கார்டு தான். காய்கறி மார்க்கெட்ல, தினமும் சரக்கடிக்குற லோடுமேனுக்கு, வாரம் பூரா அட்வான்ஸ் குடுத்துட்டு... வார கடேசில சம்பளம் குடுக்கும் போது மொத்த அட்வான்சையும் புடிச்சுக்குவான். லோடுமேன் கைல பணத்தக் குடுத்துட்டு திருப்பி வாங்குற வேலை எல்லாம் கனவுலயும் நடக்காது. அமெரிக்க ஹைடெக் கூலிகளும்... அதே மானங்கெட்ட பொழப்பு தான் பொழைக்குறாங்க. அவங்களுக்கு நேர் மாறானவங்க நம்மாளுங்க. தயிர் சோத்துக்கு, மட்டை ஊறுகா வரைக்கும் நம்ம அண்ணாச்சிக் கடைலயே வாங்கி பேக்பண்ணிக் கொண்டு போயிடுறாங்க. பாரம்பர்யமாவே நம்ம ஆளுங்களுக்கு சேமிப்பு பழக்கம் இருக்குறதால தான், அங்க இருக்குற நம்ம ஆளுங்க டாப் லெவல்ல இருக்காங்க. 

நாமெல்லாம் வெள்ளிக் கிழமைன்னா... பசங்க வேலைக்கு கிளம்பும் போதே, "இன்னைக்கு சாயங்காலம் வரும் போது மாரியம்மன் கோயிலுக்கு போய்ட்டு, பிரசாதம் வாங்கிட்டு வாடா" ன்னு, சொல்லி அனுப்புவோம். பிரசாதம் வாங்கிட்டு வர்றானோ இல்லையோ... அம்மா சொன்னதுக்காக, ஒரேவொரு கோட்டரோட, வீடு வந்து சேருவான். ஆனா அதுங்க... வெள்ளிக்கிழம காலைல வேலைக்குக் கிளம்பும் போதே, 'பார்ட்டி டிரெஸ்' ன்னு சொல்லி ஒரு ஜட்டி, பனியன மஞ்சப்பையில சுத்திக் கொண்டு போயிரும். சாயங்காலம், ஆபீஸ் பாத்ரூம்ல அப்டியே துணிய மாத்திட்டுப் போய் பாருக்குள்ள பூந்ததுன்னா... ஞாயித்துக் கிழம நடுஜாமத்துல, ஒரு பத்திருபது உருப்படிகள ஒன்னா JCB-ல வழிச்சுத் தூக்கி டிப்பர்ல போட்டு... ஒவ்வொரு வீடா கொண்டாந்து தூக்கி விட்டுட்டுப் போவாங்க. மிகப் பெரிய நிறுவனங்கள்ள வேலை பாக்குற அமெரிக்கனும் சரி, நம்மவூருல சனிக்கிழமை சம்பளம் வாங்குற தண்ணிவண்டி கொத்தனாரும் சரி... ரெண்டுபேரு பொழப்பும் ஒன்னு தான். 

திங்கக்கிழம காலைல, அரை டீ-க்கு... டீ-கடக்காரன்ட்ட, 'ஆத்தா அம்மா'ன்ற வார்த்தைய கேட்டுட்டு நிப்பான் 

சரி விஷயத்துக்கு வருவோம். இப்ப அங்க அத்தனாயிரம் பேர் செத்துட்டு இருக்கான்... ஆனா இந்த பயலுவ, லாக்டவுன கேன்சல் பண்ணனும்னு போராட்டத்த ஆரம்பிச்சுட்டாங்க. சரி இங்கயாவது மனிதாபிமானம் இருக்கு, ஆளாளுக்கு போட்டி போட்டு, தேடிக் கொண்டு போய் சாப்பாடு குடுக்குறாங்க. அங்க, அவனவன் பொழப்பே நாறிட்டு கிடக்கு.  பீரோ நிறைய சரக்கு பாட்டில் தான் அடுக்கி வெச்சிருப்பான். பெரும்பாலும் ரெடிமேட் புட் தான். பூராம் காலி ஆயிருக்கும். சுட்டுப் போட்டாலும் சமைக்க வராது. அங்க எவனும் அன்னதானமும் பண்ண மாட்டான். போராடாம என்ன செய்வான் ? உலகத்துலயே, காஸ்டலியான ஹைடெக் பிச்சக்காரன்னா... அது அமெரிக்கன் தான் !!!