Showing posts with label KANCHANA. Show all posts
Showing posts with label KANCHANA. Show all posts

Sunday, 10 November 2019

SIVANTHA MANN WHEN PICTURISED


SIVANTHA MANN WHEN PICTURISED



அந்நிய மண்ணில் ‘சிவந்த மண்’ படமாகிக்கொண்டிருந்தது. படக்குழு அப்போது பாரிஸ் நகரத்தில் முகாமிட்டிருந்தது. அன்று படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பி ஆயிற்று. அந்த ஹோட்டலின் பெரிய பூங்காவில் உலா போய்விட்டு தன் அறைக்குத் திரும்பிச் செல்ல லிப்டில் ஏறினார் கோபு. அப்போது உள்ளே நுழைந்தார் ஒருவர்.

அவர் தி.மு.க எம்.பி. முரசொலி மாறன். “என்ன கோபு சார் இங்கே. அதுவும் வேட்டியுடன்?” - மாறன் கேட்டார். “நான்தான் வேட்டி! சிவாஜி, ஸ்ரீதர் எல்லாரும் லுங்கியோட வாக்கிங் போறாங்க. ‘சிவந்த மண்’ ஷூட்டிங், இங்கதான் தங்கியிருக்கோம்” என கோபு பெருமையுடன் சொன்னார். “தப்பு பண்ணிட்டீங்களே கோபு” என்றவர், அவர்கள் படக்குழுவைக் காண வந்தார் மாறன்.

மாறனைப் பார்த்ததும் சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் வியப்பு. நல விசாரிப்புகளுக்குப் பின் முரசொலி மாறன் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். “ஸ்ரீதர்... இன்னும் ரெண்டு நாள் நீங்க இந்த ஹோட்டல்ல தங்கினீங்கன்னா ‘சிவந்த மண்’ படத்தோட பட்ஜெட் முழுவதையும் இந்த ஹோட்டலுக்கே செலவழிக்க வேண்டியிருக்கும். நல்லவேளை, நான் கோபுவைப் பார்த்தேன். உடனே காலி பண்ணிக்கிட்டு, வெளியிலே நான் சொல்லுற ஓட்டலுல போயி தங்குங்க. வசதியாவும் இருக்கும். சிக்கனமாவும் இருக்கும்” என்றார்.

ஸ்ரீதர் அலறியடித்தபடி டேராவைத் தூக்கச் சொன்னார். ஒரு நாள் தங்கியதற்கான ஹோட்டல் பில் வர, அந்த ஹோட்டல் பில்லைப் பார்த்ததுமே கோபுவின் கண்களில் ரத்த கண்ணீர் “டேய் ஸ்ரீ... இந்த பைசாவுக்கு ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ மாதிரி மூணு படங்களை எடுத்திருக்கலாம்” என்று சொல்ல, “தலைக்கு வந்தது முரசொலி மாறனால போச்சு” என்றார் ஸ்ரீதர். அனைவரும் மாறன் கூறிய ஹோட்டலில் தங்கிப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார்கள்.

நாடு திரும்பிய படக்குழு

“பார்வை யுவராணி கண்ணோவியம்’’ பாடலை ஈபிள் டவரில் படமாக்கிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா பரபரப்புடன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன. ஸ்ரீதரின் தாயார் காலமாகிவிட்டதாகத் தகவல் வந்திருப்பதாக அவர் கூறியதும் ஸ்ரீதர் அதிர்ந்து கலங்கிப்போனார். சிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக்கொண்டு, கோபுவைத் தனியே அழைத்த ஸ்ரீதர், “கோபு... கஷ்டப்பட்டு பெரிய நட்சத்திரங்களோட கால்ஷீட்டை வாங்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கோம்.

ராஜியை (சி.வி.ராஜேந்திரன்) வச்சுக்கிட்டு மீதிப் படப்பிடிப்பை முடிச்சுட்டு வந்து சேருங்க. நானும் தேவசேனாவும் கிளம்பறோம்” என்று சொன்னவுடன் கோபுவும் ராஜேந்திரனும் மறுத்து விட்டார்கள்.

“எங்களையும் பிள்ளை மாதிரிதானே உங்கம்மா பார்த்தாங்க நாங்களும் வருவோம் ஸ்ரீ” என்று சொல்லிவிட்டனர். சிவாஜி கணேசனிடம் துக்கச் செய்தியைக் கூறியபோது, அவரும் கண்டிப்புடன் கூறிவிட்டார். “கால்ஷீட் எப்ப வேணுமானாலும் கிடைக்கும்… ஆனால் அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுபடி வாய்ப்பு கிடைக்காதுப்பா! நீ துக்கப்பட்டிருக்கும்போது இங்கே படப்பிடிப்புல எங்களுக்கு எப்படிக் கவனம் போகும். எல்லாரும் கிளம்புவோம் ஸ்ரீதர். நீ எப்பக் கூப்பிடுறியோ அப்ப கால்ஷீட் தரேன்” என்று சிவாஜி கூறினார். அதே உத்திரவாதத்தை ராஜேந்திரகுமாரும் வஹீதா ரஹ்மானும் தந்தனர். உடனே அனைவரும் சென்னைக்குக் கிளம்பினோம்.

தோல்வி கண்ட ‘தர்த்தி’

தாயாரின் காரியங்கள் முடிந்ததும் சென்னையிலேயே பிரம்மாண்ட அரங்கங்களை நிர்மாணித்துப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார் ஸ்ரீதர். ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ பாடலை அமர்க்களமாகப் படம்பிடித்தார். இந்த இடத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். தமிழில் எம்.எஸ்.வி போட்டிருந்த இந்தப் பாடல் மெட்டை சங்கர் - ஜெய்கிஷன் மற்றும் லதா மங்கேஸ்கருக்குப் போட்டுக் காட்டியது சித்ராலயா.

ஈஸ்வரியின் பாட்டைக் கேட்ட லதா, “இந்த அளவு சுவாசத்தைக் கையாண்டு முனகுவது என்னால் இயலாத காரியம். அற்புதமாகப் பாடியிருக்கிறார் ஈஸ்வரி!” என்று லதாவே வியந்து பாராட்டினார் என்றால் ‘பட்டத்து ராணி’ பாடலுக்கு இதைவிட வேறு என்ன ஏற்றம் வேண்டும்?

1969 தீபாவளித் திருநாளில் சிவந்த மண்ணும் ஒரு மாதத்துக்குப் பின் ‘தர்த்தி’ படமும் வெளியாயின. ‘சிவந்த மண்’ நன்றாக ஓடினாலும் ‘தர்த்தி’ படுதோல்வியைத் தழுவியது. இதனால் சித்ராலயாவுக்குப் பெருத்த நஷ்டம். இனி, இந்திப் படவுலகில் காலை வைக்க வேண்டாம் என்று ஸ்ரீதர் தீர்மானமான முடிவுக்கு வந்தார்.

இந்த நேரத்தில் சிவாஜி கணேசனைக் கதாநாயகனாக வைத்து, ‘ஹீரோ 72’ என்ற படத்தை அறிவித்தார் ஸ்ரீதர். அந்தப் படமே பின்னர் ‘வைரநெஞ்சம்’ ஆனது. இந்த படத்தின் நாயகியாக பத்மப்ரியா என்ற புது நடிகையை அறிமுகம் செய்யத் தீர்மானித்தார். அசப்பில், பார்ப்பதற்கு ஹேமமாலினியைப் போலவே இருந்தார் பத்மப்ரியா.

இந்த நேரத்தில் கோபு இயக்கிய ‘காசேதான் கடவுளடா’ படம் பெரும் வெற்றியைப் பெற்றது. கோபுவே இயக்குநராகி விட்டார். இனி அவர், ஸ்ரீதருடன் பணி புரிவாரா என்று பத்திரிகைகள் எழுதின. காரணம் அப்போது அவருக்குப் புதிய படங்களும் ஒப்பந்தம் ஆகத் தொடங்கியிருந்தன.

ஒரு நாள் இரவு எட்டு மணி இருக்கும். ஸ்ரீதர் தானே காரை ஓட்டிக்கொண்டு கோபுவின் வீட்டுக்கு வந்தார். உடன் அவர் மனைவி தேவசேனாவும் வந்திருந்தார். அப்போது கோபு கே.கண்ணனுக்காக ஒரு நாடகத்தை எழுதிக்கொண்டிருந்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதர், திடீரென்று, கோபுவையும் அவரது மனைவி கமலாவையும் தங்களுடன் கிளம்பச் சொன்னார். ஸ்ரீதரைப் பார்த்தபோது ஒருவித பதற்றத்தில் அவர் இருந்ததை ஊகிக்க முடிந்தது.

கோபுவும் அவர் மனைவியும் எங்கே, எதற்கு என்று கேள்வி கேட்காமல் கிளம்பினார்கள். ஸ்ரீதரின் கார் வடபழனி நோக்கி விரைந்து, அங்கிருந்த பிரிவியூ திரையரங்கு ஒன்றில் நுழைந்தது.


ஏதோ ஒரு படத்தைத் தங்களுக்குக் காட்டவே ஸ்ரீதர் தன்னை சம்சாரம் சகிதமாய் அழைத்து வந்திருக்கிறார் என்று தெரிந்துபோனது கோபுவுக்கு. “என்னடா படம்?” என்று கோபு கேட்க, ஸ்ரீதர், “தெலுங்குப் படம்டா, நாகேஸ்வர ராவ் நடிச்சது” என்று மட்டும் கூறினார். படம் ஓடத் தொடங்கியது. அந்த ‘தசரா புல்லோடு’ என்ற தெலுங்குப் படத்தில் நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ, சந்திரகலா ஆகியோர் நடித்திருந்தனர். ராஜேந்திர பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார்.

அதன் தயாரிப்பாளர் ஜக்கம்பத்தி ஆர்ட் பிச்சர்ஸ் ஸ்ரீதருக்கு நன்கு அறிமுகமானவர்கள். படம் தொடங்கியதும் கோபு படத்தின் கதையோட்டத்தில் கரைந்துபோனார். திடீரென்று, கோபுவின் காதுக்கு அருகில் வந்த ஸ்ரீதர், “கோபு... இந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. நான் ஏற்கெனவே பார்த்துட்டேன். உனக்குக் காட்டத்தான் இந்த ஸ்பெஷல் ப்ரிவியூ. இந்தப் படத்தோட உரிமையை வாங்கி தமிழ்ல எடுக்கலாம்னு இருக்கேன். நீ அபிப்ராயம் சொன்ன பிறகுதான் இறுதி முடிவு எடுப்பேன்” என்று கிசுகிசுத்தார்.


கோபுவுக்கு மகிழ்ச்சி. “கதை நல்லா இருக்கு. நீ காதல் மன்னன். நிச்சயம் இந்தப் படத்தை இன்னும் பெட்டரா எடுப்பே. நாகேஸ்வர ராவ் ரோலுக்கு சிவாஜியைப் போட்டா நல்லா இருக்கும்” என்று கோபு தன் கருத்தைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே, ஸ்ரீதர் அவர் காதில் மீண்டும் கிசுகிசுக்க, அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார் கோபு. வழக்கமாக, தெலுங்குப் படங்களைத் தமிழில் எடுக்கும்போது நாகேஸ்வர ராவ் நடித்த படங்களை சிவாஜி கணேசனை வைத்தும், என்.டி ராமராவ் நடித்த படங்களை எம்.ஜி.ஆரை வைத்தும் எடுப்பதை ஒரு ஃபார்முலாவாகவே கடைப்பிடிப்பது வழக்கம்.

அந்த எண்ணத்தில்தான், ஸ்ரீதர் தான் அந்தப் படத்தைத் தமிழில் தயாரிக்கப் போவதாகக் கூறியதும், அவரை உற்சாகப்படுத்தும் எண்ணத்துடன், “சிவாஜி கணேசனைப் போட்டு இந்தப் படம் எடுத்தால் நன்றாக ஓடும்..!” என்று கோபு கூறக் காரணம். ஆனால், ஸ்ரீதர் தனது பால்ய நண்பரின் காதில் இரண்டாம் முறையாக கிசுகிசுத்தது இதைத்தான்..

“கோபு.. இந்தக் கதையைச் சற்றே மாற்றி நான் எம். ஜி. ஆரை வைத்து எடுக்கலாம் என்று இருக்கிறேன்”. ‘தனது ஆருயிர் நண்பனா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறான்’ என்று அரண்டு போனவராக ஸ்ரீதரைப் பார்த்தார் கோபு.

Sunday, 24 September 2017

KANCHANA ,THE UNFORGETTABLE ACTRESS IN KOLLYWOOD




KANCHANA ,THE UNFORGETTABLE ACTRESS IN  KOLLYWOOD



 நினைவுப் பாதையில்தான் எவ்வளவு முகங்கள்.



இரவுப் பொழுது ரயில் பயணமொன்றில் நம்முடனேயே மூங்கில் காடு, ஆறு ,மலை சமவெளி என எல்லா இடங்களும் தொடர்ந்து வந்து ,இருள் கலைகையில் சொல்லாமல்,கொள்ளாமல் சென்று விட்ட நிலாக்களும் அங்கே இருக்கின்றன.. ஆயுள் பூராவும் நம் நிழல் போல் தொடர்பவையும் உண்டு.
ஒரு வான வில் என்பது மறைந்து கொண்டிருக்கும் கணங்களிலுங் கூடத் தன் வர்ணங் களையெல்லாம் என் மனதில் நிரந்தரமாக வாரியிறைத்து விட்டுத்தான் சென்றிருக்கின்றது.
ஒரு பறவை வந்தமர்ந்து தன் மொழியால் ஏதோ பேசி விட்டுப் பறந்த இடம் என் பார்வையில் ஒரு போதும் வெற்றிடமில்லை . அது எப்போதும் என் மன விருட்சத்தின் கிளையொன்றில் உட்கார்ந்து கொண்டு தன் அலகினை உரசிய படியேதான் இருக்கின்றது.

கேலிப் பேச்சுகளும், குதூகலமும் , கும்மாளமும் எங்கள் வகுப்பறையில் பொங்கி வழிந்து கொண்டிருந்த கல்லூரிக் காலம் அது. மூன்று பாடங்களுக்கும் வந்தமரும் ஒரே ஆசிரியரின் முகத்தைப் பார்த்துச் சலித்துப் போயிருந்த எங்களுக்கு இறைவனின் ஆறுதல் பரிசாக ஒரு மாணவி வந்து சேர்ந்திருந்தாள் .அதிகமாக அவள் பேசியதில்லை.
ஒரு மழைத் தூறலாக முகத்தில் எப்போதாவது தோன்றுகின்ற அந்தப் புன்னகை கூட விழுந்த சுவடு தெரியாமல் மறு கணம் மறைந்து விடும். ஆனாலும் செஞ் சொண்டுடன் எங்கள் வகுப்பில் வந்தமர்ந்த பச்சைக் கிளி அவள். எங்கள் மரமும்,அதன் கிளைகளும் ,இலைகளும் ,பூக்களும், பிஞ்சுகளும் அந்தக் கிளியால் பொலிவுற்றன .
அழகுகள் எல்லாம் ஒரே சீருடையில் தோன்றுபவை அல்ல.! வைத்த கண்ணை நகர்த்த முடியாமல் திணற வைக்கும் காந்த ரகம்,.....மோனத் தவமியற்றும் ஆழமான ஆறு ....கிறக்கத்துள் அமிழ்த்தும் மது.....,கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் கோயிற் கருஞ் சிலைகள்.....திமிறும் வெண் குதிரை....மஞ்சள் வெயில்.....காலை மல்லிகை ...இப்படி அழகின் ரகங்கள்தான் எவ்வளவு?
எங்கள் ஊரில் மாரியின் எல்லை ஆகக் கூடினால் மூன்று மாதங்கள். எங்கள் சந்தோஷமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. கோடை மறு படியும் எங்களையும் பசும் புற்களையும் பற்றிக் கொண்டது.வகுப்பறையில் அவளுடைய இருக்கை காலியாகி விட்டது. விசாரித்துப் பார்த்ததில் அரசுப் பணியாளரான அவளுடைய அப்பாவுக்கு வெளியூர் ஒன்றுக்கு மாற்றம் கிடைத்து , குடும்பமாக இடம் பெயர்ந்து விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது. அதன் பின் அவள் பற்றிய எந்த செய்தியும் என்னை வந்தடைந்ததில்லை.

இப்படி நம் வாழ்வில் எவ்வளவோ வான வில்கள் ,மாய மான்கள்.
நடிகை காஞ்சனா என் வாழ்வின் இன்னொரு வானவில். திரை வானவில் !
ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம் மாத்திரம் கல் வெட்டாய்ப் பதிவது மனதின் விசித்திரமன்றி வேறென்ன?
இவ்வளவுக்கும் காஞ்சனா பெரியதொரு நடிகையாகத் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவரல்ல .அவர் நடித்த தமிழ்ப் படங்களின் மொத்த எண்ணிக்கை இருபதைத் தாண்டியிருக்காது என்பது என் அனுமானம். நட்சத்திர நடிகர்களுடன் முடிந்த வரை ஒட்டி உரசி,இடுப்பை நெளித்து ,ஆடிப் பாடி ஒத்துழைத்த போதும் அவருடைய சமகாலத்து நட்சத்திரங்களான ஜெயலலிதா, கே.ஆர். விஜயா ,வாணிஸ்ரீயை அவரால்
முந்த முடியவில்லை.
விமானப் பயணங்களை மேற் கொள்ளும் ஒவ்வொரு தடவையும் அங்கே சந்திக்க நேரிடும் உபசரிப்புப் பெண்களில் [ Air Hostess ] காஞ்சனாவின் முகத்தைத் தேடும் கிறுக்குத் தனம் இன்று வரை எனக்கு ஒரு வழக்கமாகி விட்டது.
வசுந்தரா என்ற இயற் பெயரையுடைய நடிகை காஞ்சனா ஆரம்பத்தில் விமான உபசரிப்புப் பெண்ணாகப் பணியாற்றிப் ,பின்னர் நடிகையானவர் என்ற தகவல் விதைத்த அசட்டுத் தனமான ஆர்வம் அது.
.1964 இல் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தின் மூலமாக நடிகை காஞ்சனா விமானத்திலிருந்து சினிமாவுக்கு வந்து சேர்ந்தார். கோடீஸ்வரர் ஒருவரின் இரண்டு புதல்விகளில் மூத்தவள் பாத்திரத்தில்

அறிமுகமானார்.கோடீஸ்வரரின் புதல்விகள் என்பதால் அவசியம் காதல் வந்திருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவை இல்லை.படத்தின் தலைப்பு 'காதலிக்க நேரமில்லை ' என்றிருந்தாலும் புத்திரிகளுக்குப் படம் முழுக்கக் காதலிப்பதும், ஆடிப் பாடுவதுந்தான் வேலை.
ஈஸ்ட்மன் வர்ணத்தின் குளுமையையின் விகிதத்தை அதிகரித்ததில் காஞ்சனாவுக்கும் முக்கிய பங்கிருந்தது.ராஜ்ஸ்ரீ தன் எண் சாண் உடம்பை இறுகக் கவ்விய ஆடை அலங்காரம் மூலம் இந்தப் படத்தில் மயக்கு வித்தைகள் புரிய முயன்ற போதும் காஞ்சனாவிடம் வெளிப்பட்ட எளிமையின் அழகு இறுதியில் மனதில் பதிந்தது ..அவருடைய பலம் உதடுகளுக்குப் பின்னால் எப்போதும் ததும்பிக்

கொண்டிருக்கும் அந்த வசீகரமான புன்னகை. படம் ஆரம்பவாவதே காஞ்சனா தோன்றும் ஒரு பாடல் காட்சியுடன்தான். அந்தப் பாடலின் முதல் வரி கூட மிகவும் சிரத்தையுடன் காஞ்சனாவை நோக்கிப் புனையப் பட்டதாகவே இன்று தோன்றுகின்றது.
' என்ன பார்வை... உந்தன் பார்வை?..'
அவருடைய காதலனாக வந்த முத்துராமன் திரு திருவென்று முழித்த படி பாடல் காட்சிகளில் காட்டிய அபத்தமான முக பாவனைகளிலிருந்து ரசிகர்களின் கவனத்தைத் திருப்பியதில் காஞ்சனாவுக்கு பெரும் பங்கிருந்தது..
பின்னர் வீர அபிமன்யுவில் [1965] ஏ.வி.எம்.ராஜனின் ஜோடி. அபிமன்யு எதிரியைத் துரத்திச் செல்லுகின்றான். காட்டின் நடுவே அந்தப் பேரழகி குறுக் கிடுகின்றாள் . 'வேலும் வில்லும் விளையாட' என்று அபிமன்யு வியப்புடன் வர்ணித்துப் பாடும் அளவு தகுதி காஞ்சனாவுக்கு இருந்தது என்பதை மஹா பாரதத்தைப் படிக்காதவர்களும் ஒத்துக் கொள்வார்கள் .


1966 இல் எம்.ஜி.ஆர். உடன் பறக்கும் பாவையில் காஞ்சனா நடித்தார். ஆனால் அதில் பறக்கும் பாவை சரோஜாதேவிதான். துரதிர்ஷ்டவசமாக காஞ்சனாவை 'இறக்கும் பாவையாக்கி இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் ,ராமண்ணாவும் ஓர வஞ்சனை செய்யாமல் காஞ்சனாவுக்கும் 'முத்தமா, மோகமா' என்றொரு பாடலை வழங்கி இருந்தார்கள். எம்.ஜி.ஆர். மீது ஒரு தலைக் காதல் வைத்து ,ஏமாந்து வில்லியாக,கொலை காரியாக மாறுவதாக இதில் காஞ்சனாவுக்குப் பாத்திரம்.
பாவம் ,காஞ்சனாவின் தோற்றம் அவர் ஒரு கேக்கை வெட்டுவதற்குக் கூடக் கத்தியைத் தூக்கக் கூடியவராகத் தோன்றவில்லை. ஒருதலைக் காதலுக்காக அவர் ஒரு கொலைகாரியாக மாறினார் என்ற திருப்பம் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதற்கு காஞ்சனாவின் வெள்ளந்தித் தோற்றம் முக்கிய காரணம். 'இத்தனை சிறிய தலையின் மீது எத்தனை' சுமைகளடா ' என்று பாட வேண்டி ஆகி விட்டது. ஒரு ரெவெரெண்ட் சிஸ்டரின் [அருட் சகோதரியியின்] கையில் பிஸ்டலைப் பார்த்தது போன்ற வரலாற்றுக் கொடுமை.


1966 இல் கலைஞரின் ' மறக்க முடியுமா?'விலும் காஞ்சனாவுக்கு இரண்டாம் நிலைப் பாத்திரந்தான். முதலாளியின் மகளாகப் பாத்திரமேற்ற காஞ்சனாவை அசடு வழிய ,வழிய எஸ்.எஸ்.ஆர் . காதலிக்கின்றார்.
அவசர அவசரமாக ,அளவு குறைவாகத் தைக்கப் பட்ட ஆடையை காஞ்சனாவுக்கு இதில் ஏனோ வழங்கியிருந்தார்கள் . எஸ்.எஸ்.ஆர் உடன் ' எட்டி எட்டி ஓடும் போது ' ' என்றொரு பாடலை மாடிப் படிகளின் கைப் பிடியில் வழுக்கியபடி அவர் பாடுவது போல் பாவனை காட்டுவார்.கைப் பிடியில் உராய்ந்தும், படிகளில் உருண்டு புரண்டும் அழுக்கை ஒரு வழியாக அவர் சுத்தம் செய்தது நல்ல காரியந்தான். ஆனால் இந்தக் காட்சி அவருக்குக் கண்ணியம் சேர்த்ததாகக் கூற முடியவில்லை.

1966 இல் அவர் நடித்து வெளிவந்த இன்னொரு திரைப்படம் மோட்டார் சுந்தரம்பிள்ளை.
சிவாஜி-சௌகாரின் ஒன்பது பிள்ளைகளில் ஆக மூத்தவர் இவர். ஆனாலும் காட்சியமைப்புகள் இளைய பெண்ணாக நடித்த ஜெயலலிதாவையே அதிக வசனங்கள் பேச வைத்தன. கணவனின் பட்டப் படிப்பு குழம்பி விடக் கூடாதே என்பதற்காகஅவனைப் பிரிந்து அப்பா வீட்டில் தங்கியிருந்து கடிதங்கள் மூலம் பேசிக் கொள்ளும் மூத்த மகள் பாத்திரம் காஞ்சனாவுக்கு.கணவனாக நடித்தவர் சிவகுமார். உடம்பில் சதை போடாத,ஒழுங்காகத் தலை வார,சீப்புக் கிடைக்காத காலத்தில் அவர் நடித்த இரண்டாவது தமிழ்த் திரைப்படம் இது.



காஞ்சனா நாயகியாக நடித்த அதே கண்கள் திரைப் படம் 1967 இல் வந்தது. நாயகியின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப் படுகின்றார்கள்.நாயகியும் இலக்கு வைக்கப் படுகின்றாள் .கொலையாளி மட்டுந்தான் படத்தில் இறுதியாக மிஞ்சுவானோ என ரசிகர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில் நல்ல வேளையாக கொலையாளி மடக்கப் பட்டு விடுகின்றான். நாயகன் கொலையாளியுடன் போராடி அவளை மீட்டு விடுகிறான்.

14 நாட்கள் விடுமுறையில் வரும் நாயகி தன் தோழிகளுடன் 'பூம் பூம் பூம் ...மாட்டுக் காரன் ' பாடலைப் பாடிக் கொண்டே சமூக சேவை செய்கிறாள் .தோழியர்களின் ஆடை அலங்காரங்களைக் கண்டு மாடு கடைசி வரை மிரளவில்லை என்பது இங்கே அவசியம் குறிப்பிடப் பட வேண்டிய விஷயம்.

1967 இல் வந்த 'தங்கை' திரைப் படத்தில் காஞ்சனா இரவு விடுதி நடனக்காரி.தங்கையைக் குணப் படுத்த வேறு வழியில்லாமல் சூதாடியாகி விட்ட ஒருவனை [நல்ல வேளையாக அவன் டாக்டர் ஆகும் வரை தங்கை காத்திருக்கவில்லை ] ஒருதலையாக நேசிக்கும் பாத்திரம். கடைசியில் நாயகனைக் காப்பாற்றுவதற்காக வில்லனின் துப்பாக்கிக் குண்டுகளை மார்பினில் தாங்கி தியாகச் சாவைப் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுகிறாள்.

காஞ்சனாவின் நடனத்தில் ,எல்.ஆர்.ஈஸ்வரியின் கிறக்கமூட்டும் குரலில் ஒலிக்கும் ' நினைத்தேன் உன்னை...' யும்
தத்தித்... தத்தி ..' யும் உற்சாகம் தந்தாலும் அவற்றுக்கு நடனமாடும் காஞ்சனா வழி தப்பிச் செல்லும் ஆட்டுக் குட்டி போல்தான் அங்கே தோன்றினார்.விஜயலலிதாவும் ,ஜோதிலட்சுமியும் வெளியூர் சென்று விட்ட ஒரு விடுமுறை காலமாகக் கூட அது இருந்திருக்கலாம்.

டி .எஸ். பாலையாவின் மூன்று மருமகள்களில் ஒருத்தியாக காஞ்சனா பாத்திரமேற்ற பாமா விஜயம் 1967 இல் வந்தது. ' பக்கத்து பங்களாவுக்குக் புதிதாகக் குடி வந்திருக்கும் பாமா என்ற சினிமா நடிகையால் மூன்று மருமகள்களின் குடும்பங்களிலும் உண்டாகும் அதிரடி மாற்றங்கள்தான் இந்தத் திரை நாடகத்தின் உள்ளடக்கம்.. முகங்களைச் சொடுக்குவதிலும், உதடுகளைச் சுளிப்பதிலும் , வக்கணை பேசுவதிலும் கே.பாலச்சந்தர் படங்களில் சிறந்து விளங்கிய சௌகார் ஜானகி, ஜெயந்தி ஆகியோருக்கு மத்தியில் கண்ணாடி அணிந்த காஞ்சனாவும் தன் முகத்தைக் காட்ட வேண்டியிருந்தது.. 

அவர்களின் அமுக்குப் பிடியை மீறி , ஜோடியாக வழமை போல் திரு திருவென்று முழித்த படி நடித்துக் கொண்டிருக்கும் முத்துராமனுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு , அதே வேளை சௌகார் ஜானகி ,ஜெயந்தி ஆகியோரின் அமுக்குப் பிடியையும் மீறி , தன்னை நிரூபிக்க வேண்டிய கஷ்டமான நிலைமை காஞ்சனாவுக்கு.
காஞ்சனாவின் வசீகரம் இந்தப் படத்தின் இரண்டு பாடல் காட்சிகளில் மிகச் சிறப்பாக வெளிப் பட்டன. 


மூன்று மருமக்களும் சேர்ந்து பாடும் 'ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே' என்ற பாடல் காட்சி அவற்றில் ஒன்று..
மற்றையது படுக்கையறையில் கணவனுடன் சரசமாடிக் கொண்டு பாடும் 'நினைத்தால் சிரிப்பு வரும், நினைவில் மயக்கம் வரும் ' என்ற பாடல் காட்சி. அவர் சரிந்து சரிந்து கணவன் மேல் சாயும் பாவனையில் காமத்தின் உள்ளடக்கம் ஒளிந்திருந்தது .

1969 இல் பெரும் பணச் செலவில் ,ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று படமாக்கப் பட்ட ஒரு படத்தின் நாயகியாகவும் காஞ்சனா இருந்திருக்கிறார் . படத்தின் பெயர் 'சிவந்த மண் '.இந்தியாவின் சமஸ்தானம் ஒன்றின் மஹா ராஜாவின் மகளான நாயகி லண்டனில் கல்வி பயில்கிறாள். அதே சமஸ்தானத்தின் உயர் போலிஸ் அதிகாரியின் மகனும் அங்கே கல்வி பயில்பவன். குடும்ப பின் புலங்களை பரஸ்பரம் அறிந்து கொள்ளாமலேயே காதல் மலர்கின்றது. ஏனைய தமிழ்க் கதாநாயக நாயகிகளுக்கு கிட்டாத அதிர்ஷ்டம் 1969 இலேயே இவர்களுக்குக் கிட்டியதென்பது வரலாற்றில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம்.
கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் பாடலொன்றின் தொகையறாவை லண்டனிலும்,சரணத்தை பிரான்சிலும் ,பல்லவியை ஸ்விட்சர்லாந்திலும் பாடினார்கள்.ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தையும்,, அழகிய ரைன் நதிக் கரை ஓரத்தையும் ஒரே பாடலில் 1969 இலேயே பார்த்த தமிழ் ரசிகர்களும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! 

மூன்று காதல் பாடல்களுக்குப் பின் ஒரு கட்டத்தில் இருவருக்கும் முழிப்பு நிலை ஏற்பட்டு விடுகின்றது. தங்கள் சொந்த பூமியில் தன் கைகளுக்குள் ஆட்சியதிகாரத்தைக் கபடத் தனமாகக் கொண்டு வந்து விட்ட திவான் நிகழ்த்தும் அராஜகங்களுக்கு முடிவு கட்டப் புரட்சிப் படை அமைக்கின்றனர். திவானைத் தீர்த்துக் கட்டக் கூட காஞ்சனா அரை குறை ஆடையுடன் , 15 தடவைகள் சாட்டையடி பட்டு 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வையை' மேடையில் ஆடிப் , பாட வேண்டி இருக்கிறது.


மனோகரா பாணியும் ,ஹொலிவூட் பாணியும் பின்னிப் பிணைந்த சிவந்தமண்ணின் அழகில் காஞ்சனாவுக்கும் , வெளி நாட்டுக் காட்சிகளுக்கும் முக்கிய பங்கு இருந்தன. ஆனாலும் வீர சாகசங்களின் திருவுருவாகக் காட்டப் படும் நாயகனின் சிம்மக் குரலின் முன்னே காஞ்சனா ஒரு மருண்ட முயலாக ஆனதுதான் வரலாறு.
என்னுடைய கணிப்பில் காஞ்சனாவின் திரையுலகப் பயணத்தில் அவருக்குப் பெருமை சேர்த்த படங்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று ஒன்று 1969 இல் வெளியான சாந்தி நிலையம். மற்றையது 1971 இல் வெளியான ' அவளுக்கென்று ஓர் மனம்'.



'SOUND OF MUSIC' ஐத் தழுவி வந்த சாந்தி நிலையத்தில் காஞ்சனாவுக்குக் கச்சிதமான வேஷப் பொருத்தம். SOUND OF MUSIC திரைப் படத்தின் ஜீவநாடி ஜூலி ஆண்ட்ரூஸ் [JULIE ANDREWS ] என்ற நடிகை.கிட்டத் தட்ட அந்தத் துடிப்பையும், தாய்மையின் பரிவையும், இளவயதின் கனவுகளையும் , மென் சோகத்தையும் காஞ்சனா இதில் மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.அந்தக் காலகட்டத்தில் புகழில்காஞ்சனாவை விட மிகவும் ஸ்திரமாக இருந்த ஜெயலலிதா , கே.ஆர்,விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்களுக்கு ஒரு போதும் சித்திக்காத வரம் அது.

சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த 'இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்' பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது.காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது.

'அவளுக்கு என்று ஓர் மனம்' வெளி வந்த ஆண்டு 1971.
தன்னை உருக்கி ,பிறருக்கு ஒளி வழங்கும் மெழுகுவர்த்தியைப் போன்ற தியாகப் பாத்திரம் இதில் நடிகை பாரதிக்குப் போய் விட்டது.ஆனாலும் காஞ்சனாவுக்கும் இந்தப் படத்தில் முக்கியத்துவம் கிடைத்திருந்தது. தன் மனதுக்குள் வைத்துப் பூசித்து நேசித்தவனை தோழி திருமணம் செய்து கொள்ளுகின்றாள் .தோழியுடன் ஒருகாலத்தில் தனக்கு இருந்த காதல் விவகாரத்தை அம்பலப் படுத்தப் போவதாகப் பழைய காதலன் மிரட்டுகின்றான். தன் நேசத்துக்குரியவனதும் , தன் தோழியினதும் வாழ்க்கை சீர் குலைந்து போய் விடக் கூடாது என்பதற்காக அந்த அயோக்கியன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனுடைய கைச் சங்கிலி நாய் போல் பின்னால் செல்லுகின்றாள் நாயகி.. மையப் பாத்திரம் நடிகை பாரதிக்கு வழங்கப் பட்டிருந்த போதிலும் காஞ்சனாவும் தன் பங்கை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.
1971 இல் ஸ்ரீதரின் முகாமில் இருந்த என்.சி,சக்கரவர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்த 'உத்தரவின்றி உள்ளே வா ' படத்திலும் காஞ்சனாதான் கதாநாயகி.காதலிக்க நேரமில்லை,அதே கண்கள் திரைப் படங்களின் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனுடன் இதிலும் ஆடிப் பாடியதைத் தவிர விசேஷமாக எதையும் குறிப்பிடத் தோன்றவில்லை.

காஞ்சனாவின் அழகில் அமைதியின் நதி ஒளிந்திருந்தது.
ஆடைக் குறைப்புகளால் அந்த மௌனக் குகையின் ரகசியத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்றே தமிழ்த் திரையுலகம் முயன்றதாகத் தெரிகின்றது.ஆனால் அது தரிசித்தது உண்மையான அவரல்ல. அமைதியான ஆறு ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கின்றது.
பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருக்கின்றார். ஆனால் அந்த வெற்றி அவரால் வந்து சேர்ந்ததல்ல.

எனினும் அந்த வெற்றிகளைக் கேடயமாக்கிக் கொண்டு திரையுலகில் போராடி அவர் முன்னுக்கு வந்திருக்க வேண்டும். சவாலான பாத்திரங்களில் அவர் நடித்துத் தன்னை நிரூபித்திருக்க வேண்டும். தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்கள், குட்டி ராஜாக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்துங் கூட காஞ்சனாவால் 'பட்டத்து ராணி'யாக கடைசி வரை முடியவில்லை. பந்தயத்தில் காலம் அவரை ஜெயித்து விட்டது.

இழப்பு காஞ்சனாவுக்கா ,தமிழ் ரசிகர்களுக்கா என்பதைத்தான் தீர்க்கமாக சொல்ல முடியவில்லை.

Tuesday, 16 August 2016

INDIAN ACTRESS KANCHANA BORN 16 AUGUST 1939


INDIAN ACTRESS KANCHANA BORN 16 AUGUST 1939





Vasundhara Devi, known by her stage name Kanchana (born 16 August 1939) is a noted Indian actress of the 1960s and 1970s. She acted in all four major south Indian languages:
Telugu, 
Tamil, 
Kannada, and 
Malayalam, as well as in a few
 Hindi films

Early life[edit]


She was born as Vasundhara Devi in a wealthy family originally from Vijayawada, Andhra Pradesh. They moved to Madras (present Chennai) in Tamil Nadu, where Kanchana was born.[3] She learnt Bharata Natyam and Music.

Career[edit]


Her father suffered business losses, and she went to work as an air hostess to support her family, when she was discovered by the film director C. V. Sridhar on a plane where he was a passenger. 

He gave her the lead role in his film Kaadhalikka Neramillai in 1963 and changed her name to Kanchana, since there was already another actress named Vasundhara Devi, mother of star Vyjayanthimala.[4] Kanchana acted in over 150 films – Tamil, Telugu, Kannada and Hindi, with a successful acting career.


She had extremely successful career in Tamil films especially between 1964 and 1977 as lead heroine. 
Her critically acclaimed films include 
Kaadhalikka Neramillai, 
Thedi Vantha Thirumagal, 
Parakkum Paavai, 
Kodimalar, 
Adhey Kangal, 
Bama Vijayam, 
Naalum Therindavan, 
Thangai, 
Thulabaram, 
Ponnu Mappilai, 
Shanti Nilayam, 
Chella Penn,
Uthiravindri Ulle Vaa, 
Vilaiyaattu Pillai, 
Sivanda Mann, 
Nyayam Ketkirom, 
Avalukendru Oru Manam, 
Pattondru Ketten, 
Engalakkum Kaadhal Varum. 

She retired from films in the early 1980s.[5] 

In 2005, she was presented with the MGR award and
 in 2007 the ANR Swarna Kankanam award.[6][7]

In Tamil, she acted with R. Muthuraman in about 19 films including Kaadhalikka Neramillai, Kodimalar, Thulabharam (Tamil version), Thangai, Bama Vijayam and Avalukendru Oru Manam. 

















She also acted with Sivaji Ganesan in Sivandha Mann, Vilayattu Pillai and Avan Oru Sarithiram. 


She did two films with MGR, Naan Yen Pirandhen and Parakkum Paavai.

 Apart from that, she was paired with many Tamil heroes like A. V. M. Rajan, S. S. Rajendran, Gemini Ganesan , Jaishankar, Ravichandran and Sivakumar.Her last film as lead heroine was Avan Oru Sarithiram in 1977 in Tamil.



She was appropriately known as the Queen of the Seventies in South Indian film industry. Her performances in the movies Pavitra Bandham, Manchivaadu were well appreciated and recognised.[8] She played the role of Uttara in the film Veerabhimanyu. The following year she acted in the Annapurna pictures film Aatma Gowravam with veteran director K. Viswanath.

She acted with Krishnam Raju in some glamorous roles in 
Neeti Nijayitee (1972), 
Parivartana (1975), 
Nenante Nene and 
Dharma Daata. 


Not only in social roles, she acted some mythological roles in pictures likeShri Krishnavataram (1967). 

After retirement as heroine, she acted in some good films including Ananda Bhairavi and Shrimad Virat Veerabrahmendra Swami Charitra in 1984.





After her retirement as a heroine, she acted in some good films including Ananda Bhairavi, Shrimad Virat Veerabrahmendra Swami Charitra, Johnny, Sigappu Rojakkal, Mouna Ragam and more as a supporting role.



There were rumours floating around a few years ago about her living in penury. A popular Tamil magazine, Kumudam, published a report that Kanchana was relying on the prasadam served at a Temple. However, in a press release, Kanchana refuted all this with deep anguish. 


She cited her existing legal tangles as a reason for reluctance for not suing the magazine.

Personal life[edit]

The actress later won back her properties in T.Nagar, Chennai of around 6 grounds, with the Court ruling against her parents. It was learnt that one day her father took signature of Kanchana on a white paper and without her knowledge converted total assets on his name. After a long legal battle she won and regained her wealth.

Kanchana along with her Sister Girija Pandey donated their property in Chennai worth then around Rs. 150 million to Tirumala Tirupati Devasthanams (TTD) on 25 October 2010.[9][10]


Tamil[edit]

YearMovieCo-starRoleNote
1964Kaadhalikka NeramillaiRavichandran, Muthuraman, RajasriKanchanaDebut film
1965Veera AbhimanyuA.V.M Rajan, Gemini GanesanUttara
1966Motor Sundaram PillaiSivaji Ganesan, Ravicandran, Sivakumar, Sowcar Janaki, Jayalalitha
1966Thedi Vantha ThirumagalS.S Rajendran, Ravichandran, Vijayakumari
1966Parakkum PaavaiM.G.R, Saroja DeviShantha
1966KodimalarMuthuraman, A.V.M Rajan, Vijayakumari
1966Marakka MudiyumaaS.S Rajendran, Devika
1967Adhey KangalRavichandran, S.A Ashokan, NageshSusheela
1967Bama VijayamMuthuraman, Nagesh, Major Sundrrajan, Rajasri, Sowcar Janaki, Jayanthi
1967ThangaiSivaji Ganesan, Muthuraman, K.R. VijayaLalitha
1968Naalum TherindhvanRavichandran, Nagesh, V.K. Ramasamy
1969Chella PennRavichandran, A.V.M Rajan, Pushpalatha
1969Ponnu MappillaiJaishankar, Nagesh, V.K Ramasamy
1969Shanti NilayamGemini Ganesan, Nagesh, Pandari BaiMalathi
1969ThulabaramA.V.M Rajan, Muthuraman, SaradhaVatsala
1970Noorandu Kaalam VazghaMuthuraman, A.V.M Rajan, L. Vijayalakshmi
1970Sivandha MannSivaji Ganesan, Muthuraman, M.N NambiarChitralekha
1970Vilaiyaattu PillaiSivaji Ganesan, Sivakumar, Padmini
1970Kadhal JothiJaishankar, Nagesh, Thengai Srinivasan
1971Avalukendru Oru ManamGemini Ganesan, Muthuraman, Bharathi
1971Uttharavindri Ulle VaaRavichandran, Nagesh
1971Pattondru KettenA.V.M Rajan, Ravichandran, Rajasri
1972Naan Yen PirandhenM.G.R, K.R VijayaRadha
1973Nyayam KetkiromMuthuraman, Nagesh, Lakshmi
1975Engalakkum Kaadhal VarumRavichandran, Nagesh
1977Avan Oru SarithiramSivaji Ganesan, Manjula Vijayakumar
1978Sigappu RojakkalKamal Hassan, Sri Devi
1979Jaya Nee JayichutteMajor Sundarrajan, Jayachitra, Prameela
1980JohnnyRajinikanth, SrideviJohnny's mother
1981Lorry Driver RajakannuSivaji Ganesan, Jaiganesh, Sri Priya
1983Gramathu KiligalRajeev, Subathra
1985Kattukkulle ThiruvizhaVijayendra, Viji
1986Mouna RaagamMohan, Karthik, RevathiLawyer
1987Naanum NeeyumCharu Hassan, Sonika Gill
1987Kizhakku Africavil SheelaSuresh, Shakeela
1994Neethiyaa NyayamaaCho

Telugu[edit]

YearMovieCo-starRoleNote
1965Aatma GowravamANR, RajasriSavitri/Sarala
1965Manchi KutumbamANR, Krishna, Chandramohan, Sowcar Janaki, Vijayanirmala, Vijayasree
1965Preminchi ChooduANR, Jaggaiah, Rajasri
1965VeerabhimanyuNTR, Sobhan BabuUttara
1966NavarathriANR, Jaggaiah, Savitri
1966Dr. AnandNTR, Anjali Devi
1967Ave KalluKrishna, Gummadi, RanjanalaSusheela
1967Prana MithruluANR, Jaggaiah, Savitri
1967KanchukotaANR, Anjali Devi
1967Private MasterRam Mohan, Krishna, SukanyaSundari
1967Shri KrishnavataramNTR, Devika
1968Bandhipotu DongaluANR, Jaggaiah, JamunaMalli
1968Nenante NeneKrishna, Krishnamraju, Sriranjini
1968'Deva KanyaKantha Rao, Rajasri
1968VeeranjaneyaKantha Rao, Anjali Devi
1968Kalisochina AdrushtamNTR, Sathyanarayana
1969Manushulu MaraliSobhan Babu, Saradha
1969SaptaswaraluKantha Rao, Rajasri, Vijayalalitha, Vijayanirmala
1969Natakala RayuduNagabhushanam, HemalathaGeetha Devi
1970Dharma DaataANR, NagabhushanamPadma
1971Kalyana MandapamSobhan Babu, Jaggaiah
1971Pavitra BandhamANR, Vanisri
1971AmayakuraluANR, Saradha
1973Bhakta TukaramANR
1973Devudu Chesina ManushuluNTR, Jaggaiah, Jayalalitha
1973Manchi VaduANR, Vanisri
1975Maya MaschindraNTR, VanisriMohini
1975Annadammula AnubandhamNTR, Murali Mohan, LathaGeetha
1976Mahakavi KshetrayyaANR, Anjali Devi, Manjula
1976SecretaryANR, Chandramohan, Vanisri, Jayasudha
1977Daana Veera Soora KarnaNTR, Balakrishna, Saradha
1977IndradhanusuKrishna, Saradha
1979Driver RamuduNTR, JayasudhaKalavathi
1981Gadasari Attaha Sosagara KodaluKrishna, Bhanumathi
1984Shrimad Virat Veerabrahmendra Swami CharitraNTR, Balakrishna, Rathi
1985Shri Datta DarshanamSarvadaman D. Banerjee, Jyotirmayi

Malayalam[edit]

YearMovieCo-starRoleNote
1966PriyathamaPrem Nazir, Sheela
1968ThirichadiPrem Nazir, Sheela
1968KodungalloorammaPrem Nazir, K.R Vijaya
1970Othenante MakanPrem Nazir, Ragini, Sheela
1972PrathikaaramJayabharathi, Thikkurissi Sukumaran Nair
1972ManthrakodiPrem Nazir, Vijayasree
1973Azhakulla SaleenaPrem Nazir, JayabharathiLucyamma
1974ThumbolaarchaPrem Nazir, Sheela, Srividya
1974Jeevikkan Marannupoya SthreeSheela, Mohan Sharma
1977Ammaayi AmmaSukumari, Jayabharathi
1979Nithya VasanthamKundara Johny, Vidhubala
1979Rakthamillatha ManushyanM.G Soman, Jayabharathi
1982InaRaghu, DeviAunty
1984Sreekrishna ParunthuMohanlal, Aruna
1985Njaan Piranna NaattilMohanlal, ArunaNandini

Kannada[edit]

YearMovieCo-starRoleNote
1977BabruvahanaRajkumar, Saroja Devi, JayamalaUloopi
1978Nanobba KallaRajkumar, Lakshmi
1978Shankar GuruRajkumar, Jayamala, Padmapriya
1982Pedda GeddaDwarakish, Aarathi
1982Prachanda KullaVishnuvardhan, Dwarakish, Raadhika
1984Ananda BhairaviGirish Karnad, Malavikka
1984Biligiriya BanadalliVishnuvardhan, M.P Shankar
1984Samayada GombeRajkumar, Roopadevi, Menaka
1991Devatha ManushyaRajkumar, Geetha

Hindi[edit]

YearMovieCo-starRoleNote
1967FarzJeetendra, Babita
1968Teen BahuraniyanPrithviraj Kapoor, Ramesh DeoRemake of Bhama Vijayam
1970Samaj Ko Badal DaloAjay Sahni, Saradha, Aruna IraniRemake of Thulabaaram
1974Prem NagarDancerRemake of Vasantha Maligai
1975Alakh NiranjanMohinidubbed from Maya Maschindra
1977Veer ArjunUloopidubbed from Babruvahana
1987Waqt Ka Shahenshahdubbed

Awards[edit]

Tamil Nadu State Film Honorary Award[edit]

  • She was presented with the MGR award in 2005.

Other awards[edit]

  • ANR Swarna Kankanam award in 2007.[6]