Showing posts with label SEPTEMBER 28. Show all posts
Showing posts with label SEPTEMBER 28. Show all posts

Monday, 28 September 2020

K.A.THANGAVELU TAMIL COMEDY ACTOR DIED 1994 SEPTEMBER 28

 


 K.A.THANGAVELU TAMIL COMEDY 

ACTOR DIED 1994 SEPTEMBER 28



.

கே. ஏ. தங்கவேலு (இறப்பு: 28.9.1994), மக்களால் செல்லமாக டணால் தங்கவேலு என்று அழைக்கப்படுபவர். 1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார். 1992 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இவர் இணைந்து நடித்த கல்யாணப் பரிசு திரைப்படம் அனைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்திலும் என்றும் நிறைந்துள்ள நகைச்சுவைப்படமாகும். தனது 9-ஆவது வயதிலேயே நாடகத்தில் நடிக்க வந்தவர். நாடகக் கம்பெனிகளில் வளர்ந்து தன் இளம் பருவத்திலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஆகியோர் இருந்த கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அவர்களது ‘பதிபக்தி’ நாடகம் தான் பின்னாளில் ‘சதி லீலாவதி’ என்ற படமாகவும் வந்தது. அந்த இளம் வயதில் நாடகத்தில் இவர் நடித்துக் கொண்டிருந்த போது தங்கவேலு மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். சினிமாவிலும் அதை மாற்றிக்கொள்ளாமல் பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்பட பல படங்களில் வயதான வேடங்களில் நடித்தார். இவர் நடிகர் திலகம்-நாட்டியப் பேரொளியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள், இவரை மேலும் புகழ் பெறச் செய்தது. 1275-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.


கைதி கண்ணாயிரம், கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, நான் கண்ட சொர்க்கம், கற்புக்கரசி, எங்க வீட்டுப் பிள்ளை, சிங்காரி,அமரகவி, கலியுகம், பணம், அன்பு, திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே, பணக்காரி, பணம் படுத்தும் பாடு, பொன் வயல், அறிவாளி, தெய்வப்பிறவி, குலேபகாவலி, போன மச்சான் திரும்பி வந்தான், விளையாட்டுப் பிள்ளை, வைரமாலை போன்ற 1275-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் நாடகங்களில் நடித்துள்ளார். கலைவாணரின் இயக்கத்தில் ‘பணம்’ [1952] படத்தில் அசல் கிழவனாக அதுவும் வில்லத்தனம் கலந்து கரார் பேர்வழியாக நடித்திருப்பார் கே.ஏ.தங்கவேலு.

கே. ஏ. தங்கவேலுவும்,எம்.சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, கல்யாணப் பரிசு நூறாவது நாள் விழாவின் போது மதுரையிலுள்ள ஒரு கோயிலில் வைத்து  1959-ஆம் ஆண்டு நகைச்சுவைச் சக்கரவர்த்தி டணால் கே.ஏ.தங்கவேலு அவர்கள் நடிகை எம்.சரோஜாவைத் திருமணம் செய்துகொண்டார். எம்.சரோஜா இவரது இரண்டாவது மனைவி.இத்தம்பதியருக்கு ஒரு மகள்.

சுகம் எங்கே படத்தில் ‘டணால்னு சொல்லு’ , ‘டணால்னு அடிச்சுட்டான்’ என்று அடிக்கடி ’டணால்’ சேர்த்து வசனம் பேச அதுவே அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் அதிகப் படங்களில் நடித்தவர் கே.ஏ.தங்கவேலு. தி நகர் ராஜா பாதர் தெருவிலுள்ள தங்கவேலுவின் வீட்டுக்கு அருகில் மற்றொரு வீடும் இருந்ததாம். 1958-இல் அந்த வீட்டைச் சுற்றி பெரிய பந்தல் போட்டு தங்கவேலு ‘நவராத்திரி விழா’ ஒன்றைக் கொண்டாடினார். அதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி தமிழ்நாட்டிலேயே யாரும் நவராத்திரி விழாவை அவ்வளவு பிரம்மாண்டமாக, பிரம்மாதமாக கொண்டாடியதில்லை என்று கூறுமளவில் அதை தனி மனிதனின் சாதனையாக்கிவிட்டார்.

திருவாவடுதுறை ராஜரத்னம், காருக்குரிச்சி அருணாச்சலம், சிதம்பரம் ஜெயராமன் , ஏ.கே.சி. நடராஜன், தியாகராஜ பாகவதர் என்று ஒவ்வொரு நாளும் ஒரு இசை பிரபலத்தின் நிகழ்ச்சி நடைபெற்றதாம். 9 நாளும் கல்யாண வீடு போல் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சாப்பாடு பந்தி நடைபெறுமாம்.

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு


"கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.

தங்கவேலுவின் சொந்த ஊர் காரைக்கால். 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கி, பல நாடகக் கம்பெனிகளில் நடித்த பின்பு என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் நடித்தார். இவர் நடித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த "சதிலீலாவதி". அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் "பணம்" என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். "சிங்காரி" என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி கூறி நடித்ததால் டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்டார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "அமரகவி"யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.


800 படங்கள்


எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். "சக்ரவர்த்தி திருமகள்", "உத்தமபுத்திரன்", "குலேபகாவலி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "கற்புக்கரசி", "மங்கையர் திலகம்", "அமரதீபம்", "கல்யாண பரிசு", "எங்கவீட்டு பிள்ளை" உள்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.



டூப் மாஸ்டர்


குறிப்பாக, "கல்யாணப்பரிசு" படத்தில் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார். தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்தால், அதில் "கல்யாணப்பரிசு" தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.


நாடகக்குழு


சொந்த நாடகக்குழுவின் மூலம் "மனைவியின் மாங்கல்யம்", "விமலா", "பம்பாய் மெயில்", "லட்சுமிகாந்தன்" உள்பட பல நாடகங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த நாடகம் கோவை ஒண்டிப்புதூரில் நடைபெற்ற "சத்தசுவரங்கள்" என்ற நாடகம்.


தி.மு.க. மாநாட்டில்


1994-ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பிறகு 25-9-1994 அன்று சிறந்த நாடக நடிகர்-நடிகைகளுக்கு மைலாப்பூர் அகாடமி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.


தூக்கத்திலேயே மரணம்


தங்கவேலு சென்னை தியாகராயநகரில் உள்ள ராஜாபாதர் தெருவில் வசித்து வந்தார். 27-9-1994 அன்று இரவு 8 மணி வரை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கைக்கு சென்றார். நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து சிறிது நேரம் விழித்திருந்து விட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.

அதிகாலையில் (28-ந்தேதி) 6 மணி அளவில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 77.


கருணாநிதி இரங்கல்


தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் சென்று தங்கவேலு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அறிவிக்கப்பட்டது. தங்கவேலு மறைவையொட்டி தி.மு.கழக தலைவர் கருணாநிதி விடுத்த அனுதாப செய்தியில் கூறி இருந்ததாவது:-


கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக கலைவாணர் மறைந்த பிறகு அவர் வகித்த கலை உலகின் இடத்தை நிறைவு செய்து கொண்டிருந்த நகைச்சுவை வேந்தராக, கழகத்தின் மீதும், கழக முன்னணியினர் மீதும் எந்த நிலையிலும் நீங்காத பற்றுடையவராகவும் திகழ்ந்த தங்கவேலு அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து போனேன்.



ஜுலை 29, 30, 31-ல் மதுரையில் நடைபெற்ற கழக மாநாட்டில் கலந்து கொண்டு இரு நாட்களும் தங்கியிருந்து, மாநாட்டில் அவர் ஆற்றிய உரையையும் அந்த உரையில் இருந்த உறுதியையும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் என்னுடன் கலந்து கொண்டு உணர்ச்சி மேலிட அவர் பேசியதையும் எப்படி மறக்க முடியும்.


அவரது இழப்பால் கலையுலகம் மட்டுமல்ல. கழகமும் பெருந்துயருக்கு உள்ளாகியிருக்கிறது. நானோ மனம் மிகவும் நொந்து போயிருக்கிறேன். மறைந்த தங்கவேல் அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கும், குறிப்பாக அவரது துணைவியார் சரோஜாவுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு கருணாநிதி கூறி இருந்தார்.


குடும்பம்


தங்கவேலுவின் முதல் மனைவி பெயர் ராஜாமணி அம்மாள். அவருக்கு 2 மகள்கள். 2-வது மனைவி நடிகை எம்.சரோஜா. அவருக்கு ஒரே மகள். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது


காமெடியும் காதலும் கலந்த லவ் பேர்ட்ஸ்! - டணால் தங்கவேலு - சரோஜா மகள் சுமதி


`அதான் எனக்குத் தெரியுமே...'



பூரி செய்ய சொல்லிக்கொடுக்கும் காமெடியில் டணால் தங்கவேலுவும் நடிகை டி.பி.முத்துலட்சுமியும் சேர்ந்து நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருப்பார்கள். அந்த அருமையான நகைச்சுவை நடிகரின் மகள் சுமதி தங்கவேலுவைச் சந்தித்தோம்.


“என்.எஸ்.கே.பெரியப்பா - மதுரம் பெரியம்மா தம்பதிக்கு அடுத்தபடியா நகைச்சுவை தம்பதி யார்னு கேட்டா எங்கப்பாவையும் எங்கம்மா நடிகை எம்.சரோஜாவையும்தான் சொல்வாங்க. அப்பாவும் அம்மாவும் `அடுத்த வீட்டுப்பெண்', `தெய்வப்பிறவி', `கல்யாணப் பரிசு', `தேனிலவு'ன்னு நிறைய படங்கள்ல ஜோடியா நடிச்சிருக்காங்க. ஆனாலும், அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்சது, அப்பாவும் முத்துலட்சுமி அம்மாவும் ஜோடியா நடிச்ச ‘புருஷன் முதுகுக்குப் பின்னாடி தூங்கி மூஞ்சிக்கு முன்னாடி எழுந்திருக்கிற’ காமெடிதான்” என்று சிரிக்கிற சுமதி, பெற்றோர் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.



``நான் பள்ளிக்கூடம் படிக்கிறப்ப அப்பாவும் அம்மாவும் நடிப்புல செம பிஸி. பாட்டி கவனிப்புலதான் வளர்ந்தேன். சின்ன வயசுல மற்ற குழந்தைகள் மாதிரியே, `அப்பா என்னை பள்ளிக்கூடத்துல கொண்டு வந்துவிடணும்', `அம்மா மதிய சாப்பாடு ஊட்டி விடணும்'கிற ஆசையெல்லாம் எனக்கும் இருந்தது. ஆனா, அப்பாவும் அம்மாவும் ஷிஃப்ட் போட்டு நடிக்கிற அளவுக்கு பிஸி. அதனால அவங்களை அதிகமா மிஸ் பண்ணி வேதனைப்பட்டிருக்கேன்.


.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பக்தி அதிகம். அவங்க சினிமா ஷூட்டிங்கை ஒரு தடவைதான் பார்த்திருக்கேன். ஆனா, கோயில்களுக்குப் பலமுறை போயிருக்கேன்.


நவராத்திரியை அப்பாவும் கிருஷ்ண ஜயந்தியை அம்மாவும் கோலாகலமா கொண்டாடுவாங்க. இப்ப அதையெல்லாம் நான் தொடர்ந்திட்டிருக்கேன். அப்பாவுக்கு மாட்டுப்பொங்கல் அன்னிக்குதான் பிறந்தநாள். அன்னிக்குக் கிட்டத்தட்ட 1,000 பேருக்கு சாப்பாடு போடுவாரு. அவர் இருந்தவரைக்கும் இதை விடாம செய்தார்” என்கிறவரின் குரல் கம்முகிறது. சிறிய இடை வேளைக்குப் பிறகு தொடர்கிறார் சுமதி.



“ ‘தேனிலவு’ பட ஷூட்டிங்ல அம்மா, அப்பா, வைஜெயந்திமாலாம்மா மூணு பேரும் குதிரை வண்டியில போற சீன் எடுத்தாங்களாம். திடீர்னு குதிரை மிரண்டு ஓடி, காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒட்டின ஒரு தடுப்புக்கிட்ட போய் நின்னுச்சாம். உடனே கீழே குதிச்ச அப்பா, வைஜெயந்தி அம்மாவை முதல்ல இறக்கிவிட்டாராம். அம்மா ஆதங்கப்பட்டுக்கேட்டதற்கு, `உன்னை மொதல்ல இறக்கிவிட்டா, அவன் பொண்டாட்டியை மொதல்ல பத்திரமா இறக்கி விட்டுட்டான்னு சொல்லிடுவாங்க. அதான்’னு சொன்னாராம் அப்பா'' என்று சிரிக்கிறார் சுமதி.


“அம்மா அப்பா ரெண்டு பேருமே ஒருநாள் கூட என்னைப் பார்த்து கை ஓங்கியது கிடையாது. ஜஸ்ட் ஒரு பார்வைதான். என் தப்பு எனக்குப் புரிஞ்சிடும். என் முன்னாடி கெட்ட வார்த்தை, கெட்ட விஷயங்கள் எதுவும் பேசாம, கவனமா என்னை வளர்த்தெடுத்தாங்க. நேரம் கிடைக்கிறப்போ என்னையும் என் ரெண்டு அக்காக்களையும் (பெரியம்மா பெண்கள்) ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொல்வாங்க. டான்ஸ் ஆடுறது உடம்புக்கு நல்ல எக்ஸர்சைஸ்னு அம்மா சொல்வாங்க.


.

அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க வைக்கிற மீன் குழம்புன்னா அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அம்மா கைப்பக்குவம் எனக்கும் வந்துடுச்சுபோல... நான் சமைக்கிற பிரியாணின்னா அம்மா அப்பா ரெண்டு பேருமே ருசிச்சு சாப்பிடுவாங்க. ‘ஹோட்டல் பிரியாணியைவிட நீ பண்றதுதாம்மா நல்லாருக்கு’ன்னு அப்பா சொல்வாரு” என்கிற சுமதியின் குரலில் இப்போதும் பெருமிதம்.


``எனக்குக் கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க. கணவர் பிசினஸ்மேன்'' என்கிறவரின் பேச்சு மறுபடியும் பெற்றோர் பக்கமே திரும்புகிறது.


“கோயம்புத்தூர்ல ஒரு நாடகம் நடிக்கிறதுக் காக அம்மாவும் அப்பாவும் கிளம்பணும். திடீர்னு அம்மாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாயிடுச்சு. அப்பாவுக்கு அம்மாவை விட்டுட்டுக் கிளம்ப மனசே இல்லை. வீட்டுக்கு வந்த டாக்டர்கிட்ட ‘அவளை எப்படியாவது எழுப்பி உட்கார வெச்சிடுங்க. அவ மேடைகூட ஏற வேண்டாம். சும்மா என்கூட வந்தா போதும் டாக்டர்’னு சொல்லிட்டே இருந்தார். பிறகு வேறு வழியில்லாம அப்பா அரைமனசாவே கிளம்பிப்போனார். போயிட்டு வந்த பத்து நாள்ல 1994 செப்டம்பர் 28-ம் தேதி அப்பா தவறிட்டார்.


‘லவ் பேர்ட்ஸ் மாதிரி இருந்தோமே. என் பறவை பறந்துபோயிடுச்சே’ன்னு அம்மா சொல்லி அழுதுட்டே இருப்பாங்க. அப்பாவுக்கு ஒரு சமாதி அமைக்கணும்னு அம்மாவுக்கு ரொம்ப ஆசை. அப்பாவுக்கு அப்புறம் எங்கேயும் வெளியே வர மாட்டேன்னு அம்மா சொல்லிட்டாங்க. கலைஞர் ஐயாதான் ஃபிலிம் சிட்டி அவார்டு கமிட்டியில ஒரு போஸ்ட்டிங் கொடுத்தார். அதுல அஞ்சு வருஷம் இருந்தாங்க. ஒரு நாள் டிபன் சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தாங்க. அப்படியே என்னை விட் டுட்டுப் போயிட்டாங்க. இப்போ அவங்க ரெண்டு பேர் நினைவுகளோடும் அவங்க விட்டுட்டுப் போன பெருமைகளோடும்தான் நான் வாழ்ந்திட்டிருக்கேன்” என்கிறவரின் கண்களில் மெலிதாக ஈரம் படர ஆரம்பிக்கிறது.

.



சந்திரபாபுவைப் போலவே 1950-களில் நல்ல மார்க்கெட்டில் இருந்த காலம் தொடங்கி, பின்னால் நாகேஷ் காலம், சோ, தேங்காய் சீனிவாசன்,சுருளி ராஜன் காலங்களையும் தாண்டிக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு இவருடையது.


‘கல்யாண பரிசு’ பைரவன் மட்டுமல்ல. ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவியில் “அடியே, நீ என்ன சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்டே”, “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக் கேட்டியா” போன்ற பல வசனங்கள் பிரபலம். வீரக்கனல்’ படத்தில் “தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுருச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று தங்கவேலு பேசும் வசனம்! 



“தங்கவேலு சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்ததும் நாங்களே!” என ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் பேசுவதும் மறக்க முடியாதது. ‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு கற்றுக்கொள்ளும் தங்கவேலு. அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டுத் தவிக்கிற காட்சி!


‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’


‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுலதான் செத்தான்!’’ என்ற வசனம். இவையெல்லாம் அந்தக் கால திரைப்பட நகைச்சுவையில் முத்திரை வசனங்கள்! வடிவேலுவின் வசனங்களையும் கவுண்டமணியின் கவுன்டர்களையும் வைத்து இன்று இணைய உலகின் ‘நையாண்டி’ பதிவுகளும் பின்னூட்டங்களும் பிழைப்பு நடத்துவதுபோல் அன்றைய திண்ணைப் பேச்சுப் பெரிசுகளுக்குத் தங்கவேலுவின் வசனங்கள்தான் வாய்ச்சரக்கு.


சந்தானம் தனக்குப் பிடித்த காமெடியன்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். சந்தானத்தின் நடிப்பில் கவுண்டமணி தெரியும் அளவுக்கு தங்கவேலு தெரிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் தங்கவேலுவின் நாசூக்கான நடிப்புதான். தங்கவேலு எந்தப் படத்திலும் கல்யாணப் பெண்- மாப்பிள்ளையைப் பார்த்து “இவ என்ன யாரோடயாவது ஓடிப் போயிட்டாளா? இல்ல இவன்தான் செத்துப் போயிட்டானா?” என்று கேட்கவே மாட்டார். தொந்தரவான வில்லனைக் கூட “அட நீ நல்லாருக்க” என்பார்.

‘பணம்’(1952) படத்தில் வயதானவராக நடித்த பின்தான் தங்கவேலு பிசியான நடிகரானார். ‘பணம்’ படத்தில் நடித்ததற்காகப் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தக் காலத்தில் தங்கவேலுவுக்கு 5,000 ரூபாய் கொடுத்தாராம். இவரும் அந்தப் பணத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் காட்ட, இவருடைய பெரியப்பா “அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல கன்னமிடலாமாடா? கலைவாணர்கிட்ட திருடுனா நீ விளங்கவே மாட்ட”ன்னு திட்டி அடித்து இழுத்துக்கொண்டு என்.எஸ்.கேயிடம் அழைத்துக்கொண்டு போனார். என்.எஸ்.கே “அந்த பணம் தங்கவேலுவுக்கு நான் கொடுத்த சம்பளம்” என்று சொன்னபோதுதான் சமாதானம் ஆனாராம்.


எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதி லீலாவதி’ (1936) திரைப்படத்தில் தங்கவேலுவுக்கு ஒரு சின்ன பாத்திரம். அதே படத்தில் என்.எஸ்.கே, டி.எஸ் பாலையா போன்றோரும் நடித்தார்கள். “இன்னைக்கு உன்னை ஷூட் பண்ணப் போறோம்”னு இயக்குநர் தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கே-விடம் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! ஒன்னைப் படம் பிடிக்கப் போறாங்கடா!” என்று என்.எஸ்.கே விளக்கம் சொன்னாராம்.தங்கவேலுவுக்கு பின்னணிப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன்.‘கண்ணே நல்வாக்கு நீ கூறடி, நான் நாலு நாளில் திரும்பிடுவேன். என் செல்வக் களஞ்சியமே! என் சின்னக்கண்ணு மோகனமே!’

சீர்காழி சில பாடல்கள் பாடினார். பிரபலமான ‘ரம்பையின் காதல்’(1956) படப் பாடல். ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’சுடுகாட்டில் தங்கவேலு பாடுவதாகக் காட்சி.

பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடியிருக்கிறார். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ ரொம்பப் பிரபலம். கண்களை நன்கு உருட்டி நடிக்கத் தெரிந்த நடிகர்களில் தங்கவேலு டாப்கிளாஸ் நடிகர்.

தங்கவேலு 10/10


1.புதுச்சேரி மாநிலம் காரைக்கால்தான் தங்க வேலுவின் சொந்த ஊர்.

2.பத்து வயதுமுதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய தங்கவேலு 20 வயதில் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். அப்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவுக்குத் தன் நண்பரான தங்கவேலுவை இழுத்துக்கொண்டார்.

3. என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம்தான் பின்னாளில் ‘சதி லீலாவதி(1936)’ என்ற படமாகத் தயாரிக்கப்பட்டது. அதில்தான் அறிமுகமானார் தங்கவேலு.

4. சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி, பல நாடகங்களை நடத்திய தங்கவேலு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் 1994-வரை தொடர்ந்து நாடகங்களில் நடித்திருக்கிறார்.

5. தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார்.

6. ‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயர் முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது.

7. கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் வரை சுமார் 1,000 படங்களில் நடித்திருக்கிறார்.

8. நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

9. கடந்த 1994-ம் ஆண்டு தமது 77-வது வயதில் மறைந்த தங்கவேலு தி.மு.கவின் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் மறைந்தபோது தி.மு.கவின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

10. தங்கவேலுவின் முதல் மனைவி ராஜாமணி அம்மாள். அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மனைவி நடிகை எம்.சரோஜாவுக்கு ஒரே மகள்.

LATHA MANGESHKAR , HINDI ,PLAYBACK, SINGER, BORN, 1929, SEPTEMBER 28

 

LATHA MANGESHKAR  

HINDI PLAYBACK SINGER 

BORN 1929 SEPTEMBER 28



.லதா மங்கேஷ்கர் அவர்கள், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியாவார். மேலும் இந்தியாவில் பாலிவுட் பின்னணிப் பாடகியாகப் புகழ் பெற்று விளங்கும் ஆஷா போஸ்லே அவர்களின் சகோதரி ஆவார். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள அவர், இந்திய ரசிகர்களால் “இசைக் குயில்” எனவும் போற்றப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கும் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.


பிறப்பு: செப்டம்பர் 28, 1929


இடம்: இந்தூர், மத்தியப்பிரதேச மாநிலம், இந்தியா


பணி: திரைப்பட பின்னணிப் பாடகி


நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு

இந்தியாவின் ‘இசைக் குயில்’ என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் அவர்கள், 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் மகளாக ஒரு “கோமன்டக் மராட்டிய” குடும்பத்தில் பிறந்தார்.





ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றம் நாடக கலைஞராகவும் இருந்தார். இதனால் தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார். பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.


இசைப் பயணம்


1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.


1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.


இவர் பாடிய குறிப்பிடத்தக்க சில படங்கள்


‘சஜா’ (1951), ‘பைஜு பவ்ரா’ (1952), ‘ஆக் ஆஹ்’ (1953), ‘ஸ்ரீ 420’ (1955), ‘தேவதாஸ்’ (1955), ‘கதவு எண் 44’ (1955), ‘சோரி சோரி’ (1956), ‘முகல் ஆஸம்’ (1960), ‘கோஹினூர்’ (1960), ‘சோடே நவாப்’ (1961), ‘பரஸ்மணி’ (1963), ‘பூத் பங்களா’ (1965), ‘பட்னி பட்னி’ (1966), ‘அபிலாஷா’ (1969), ‘ கேரவன்’ (1971), ‘காதி பதங்’ (1971), ‘ அமர் பிரேம்’ (1972), ‘ஆன்ந்தி’ (1975), ‘சாந்தினி’ (1989), ‘லம்ஹே’ (1991), ‘தர்’ (1993), ‘யேஹ் தில்லகி’ (1994), ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995), ‘ஹை தலாக் தில்’ (1997), ‘மொகபத்தீன்’ (2000), ‘முஜ்சே ரோஸ்ட்டி கரோகே’ (2002), ‘சாரா’ (2004), ‘தில் சே’ (1998), ‘ஒன் 2 க 4 ‘ (2001), ‘புகார்’ (2000), ‘ஜுபைதா’ (2001), ‘ரங் தே பசந்தி (2006), ‘லகான்’ (2001), ‘அனார்கலி’, ‘அல்பேலா’, ‘ஆஷா’, ‘அடாலட்’, ‘ரயில் மேடை’, ‘சாச்சா ஜிந்தாபாத்’ போன்ற திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் பலரையும் கவர்ந்தது எனலாம்.


தேசிய விருது


1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.


சிறந்த பாடல்கள்


லதா மங்கேஷ்கர் அவர்கள் பாடிய பல பாடல்கள் இன்றளவும் இந்திய ரசிகர்களால் கவரப்பட்டு வருகிறது. நௌஷாத் இசையில் ‘முகல் ஆஸம்’ (1960) என்ற திரைப்படத்தில் “பியார் கியா டு டர்ணா கியா” என்ற பாடல், தில் அப்னா அவுர் ப்ரீத் பரய் (1960) என்ற திரைப்படத்தில் “அஜீப் தாஸ்டீன் ஹை யே” என்ற பாடல், வழிகாட்டி (1965) திரைப்படத்தில் “பியா டோசே” என்ற பாடல், ஜீவல் தீப் (1967) என்ற திரைப்படத்தில் “ஹோதொன் பே அஸி பாத்” என்ற பாடல், அன்பாத் (1962) திரைப்படத்தில் “ஆப் கி நழ்ரோன் நே சம்ஜா” என்ற பாடல், மாயா (1961), திரைப்படத்தில் “டாஸ்வீர் தேரி தில் மெய்ன்” என்ற பாடல், பிரேம் பூஜாரி (1970) திரைப்படத்தில் “ரங்கீலா ரெ” என்ற பாடல், ஷர்மீளா (1971) திரைப்படத்தில் “கஹில்டே ஹைன் குல் யாஹன்” என்ற பாடல், அபிமன் (1973) திரைப்படத்தில் “பியா பினா” போன்ற பாடல்கள் நாடுமுழுவதும் பெரும் புகழை பெற்றுத்தந்தது என கூறலாம்.


ஆல்பங்கள்


1961 ல் பஜனை பாடல்கள் அடங்கிய “அல்லாஹ் தேரா நாம்” மற்றும் “பிரபு தேரா நாம்” என்ற இரண்டு ஆல்பத்தை வெளியிட்டார். 1974ல் ‘மீராபாய்” பஜன்ஸ்’, ‘சான்வரே ரங் ராச்சி’, மற்றும் ‘உத் ஜா ரெ காக’, 2007ல் “சாத்கி” என்ற ஆல்பத்தையும், 2012 ஆம் ஆண்டு அவருடைய சொந்த பெயரில் (எல்.எம்) ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.


லதா அவர்கள், 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திரைப்படம் சாராத சில ஆல்பங்களையும் வெளியிட்டார். காலிப் கஜல், மராத்திய நாட்டுப்புற இசையில் ஒரு ஆல்பமும், சாந் துக்காராம் பற்றிய “அபாங்க்ஸ்” என்ற ஆல்பமும் இதில் அடங்கும்.


தயாரிப்பு மற்றும் இசைத் துறையில் ஈடுபாடு


ஒரு பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியுள்ளார். 1953 ஆம் ஆண்டு “வாடல்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பிறகு, அதே ஆண்டு சி. ராமச்சந்திராவுன் இணைந்து ‘ஜஹாஞ்ச்கார்’, ‘காஞ்சன்’ (1955) மற்றும் ‘லேகின்’ (1990) என்ற இந்தித் திரைப்படத்தையும் வெளியிட்டார். மகராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை “சதி மனசே” என்ற திரைப்படத்திற்காகவும், “ஐராநிச்ய தேவா துலா” என்ற பாடலுக்காக சிறந்த பாடகர் விருதையும் பெற்றார். 1960ல் “ராம் ராம் பவ்ஹான” என்ற திரைப்படத்தின் மூலம் இசையாமைப்பாளராக கால்பதித்த அவர், 1963ல் ‘மராத்தா டிட்டுகா மேல்வாவ’ மற்றும் ‘மொஹித்யஞ்சி மஞ்சுளா’, ‘சதி மானசே’ (1965), ‘தம்படி மதி’ (1969) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


பிற சிறப்புகள்


1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்தனா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.


விருதுகளும் அங்கீகாரங்களும்


1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” வழங்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.

1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.

1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.

1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது.

1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது.

1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது.

2000 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது.

2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பட்டது.

ஆஜா ரெ பர்தேசி (மதுமதி 1958), கஹி தீப் ஜலே கஹி தில் (பீஸ் சால் பாத் 1962), தும்ஹீ மேரே மந்திர் தும்ஹீ மெரி (க்ஹண்ட 1965), ஆப் முஜிகே அசே லக்னே லகே (ஜீனே கி ராஹ் 1969), தீதி தேரா தீவார் தீவானா (ஹம் ஆப்கே ஹே ஹைன் கோன் 1994) போன்ற பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

லதா மங்கேஷ்கர் அவர்கள், பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருதுகள் என மேலும் பல விருதுகளை பெற்று, இன்றளவும் புகழ் பெற்ற பாடகியாக விளங்கி வருகிறார்

SASIKUMAR TAMIL ACTOR BORN 1974 SEPTEMBER 28

 


SASIKUMAR TAMIL ACTOR 

BORN 1974 SEPTEMBER 28



.சசிகுமார் (பிறப்பு: செப்டம்பர் 28, 1974) [1] தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.[2]இளமைக்காலம்

சசிகுமார் கொடைக்கானலில் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிக நிர்வாகப் படிப்பை படித்து முடித்தார். அவர் 20 வயதில் தன் மாமா கந்தசாமியிடம் திரைப்படங்களில் பணிபுரிந்தார், அவர் சேது(1999) படத்தை தயாரித்தவர். சசிகுமார் இந்த படத்திற்கான உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அங்கு அவர் அமீரிடம் அறிமுகமானார், மேலும் அவருக்காக ஒரு பெயரை உருவாக்கவும் உதவினார். அவர் மௌனம் பேசியதே(2002) மற்றும் ராம்(2005) படத்தில் இயக்குனர் அமீருக்கு உதவினார். அமீரின் பருத்திவீரன்(2007) இன் ஆரம்ப கட்டங்களில் அவர் சுப்பிரமணியபுரம் படத்திற்கான தனது அடித்தளத்தைத் தொடங்கினார்.[



"சுசீந்திரனுக்குக் கபடி பற்றி ரொம்ப நல்லா தெரியும்; அவரே ஒரு கபடி வீரர்தான். முக்கியமா இது பெண்கள் கபடி பற்றிய கதை என்பதால், உடனே ஓகே சொல்லிட்டேன். 'முருகானந்தம்' கேரக்டர்ல நானும், 'சவடமுத்து' கேரக்டர்ல பாரதிராஜா சாரும் நடிச்சிருக்கோம். சவடமுத்து கேரக்டர், சுசீந்திரனின் அப்பாவைப் பிரதிபலிக்கும் கேரக்டர். நான், பாரதிராஜா சார், ஹீரோயின் மீனாட்சி தவிர, நிஜக் கபடி வீராங்கனைகள் பலபேர் நடிச்சிருக்காங்க.'' - 'கென்னடி க்ளப்' குறித்து உற்சாகமாகப் பேசுகிறார் சசிகுமார்.


"பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம்?"


"மறக்கவே முடியாத பசுமையான நினைவு அது. ஏன்னா, அவர் படங்களைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா, அவர்கூட எனக்கு அவ்வளவா பழக்கமில்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப எனர்ஜியா இருப்பார். வசனங்களை எப்படிப் பேசணும், நடிக்கணும்னு கவனமா இருப்பார். என் படங்களைப் பற்றியும் ஸ்பாட்ல பேசுவார். படத்துல நான் அவரை ஐயான்னு கூப்பிடுவேன். படத்துல எனக்கு அவர் கபடி சொல்லிக்கொடுக்கிற ஒரு காட்சி இருக்கும். அதைத் திரையில பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும்."



"வாழ்வியல் சினிமாக்களை அப்படித்தான் பண்ண முடியும்!" - சசிகுமார் 'ஷார்ப்' பேட்டி

" 'நாடோடிகள் 2' படம் பற்றி?"


" 'நாடோடிகள்' படத்துக்குக் கிடைச்ச அதே வரவேற்பு, இந்தப் படத்துக்கும் கிடைக்கும். இதுல காதலையும் சொல்லியிருக்கோம்; சமூகப் பிரச்னைகளையும் பேசியிருக்கோம். படத்துல என் கேரக்டர் பெயர், ஜீவானந்தம். அஞ்சலி பெயர், செங்கொடி. இதைக் கேட்கும்போதே, படம் எந்த அளவுக்கு சமூகப் பிரச்னைகளைப் பேசியிருக்கும்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்."


"சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கிற சினிமாக்களை எப்படிப் பார்க்கிறீங்க?"



"கேள்வி கேட்குற நீங்கதான் சினிமாவில் சாதி இருக்குன்னு சொல்றீங்க. சினிமாவுல இருக்கிற நாங்க யாரும் சொல்றதில்லை. சாதி இருக்கக்கூடாதுன்னுதான் நாங்க எல்லோரும் போராடுறோம். என்மேலயே சாதிப் படங்கள்ல நடிக்கிறேன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. ஒவ்வொரு இயக்குநரும் கதை சொல்ல வர்றப்போ, அவங்களோட கலாசாரம், அவங்க வாழ்ந்த வாழ்வியலைத்தான் எடுத்துக்கிட்டு வர்றாங்க. அப்படித்தான் வாழ்வியல் சினிமாக்களைப் பண்ணவும் முடியும். பா.இரஞ்சித் அவருடைய வாழ்வியல் பற்றித்தான் படங்கள்ல பேசுறார். அதேபோல் முத்தையாவும் அவருடைய வாழ்வியல் பற்றித்தான் படங்கள்ல பேசுறார்.


என்கிட்ட கதை சொல்ல வர்ற இயக்குநர்களிடம் 'நீங்க என்ன சாதி'ன்னு நான் கேட்டதில்லை; நானும் இந்த சாதின்னு அவங்ககிட்ட சொன்னதில்லை. கதையைக் கேட்டுட்டு, அவர் யார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கார்னு மட்டும்தான் கேட்பேன். ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்ககூட பழகும்போது தான், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்னு தெரியவரும். வேற எதையும் நான் கேட்கவும் மாட்டேன். ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால, சாதி பார்த்துப் பழகுற ஆளா நான் வளரல. சினிமாவுக்கு வெளியே இருக்கிறவங்கதான் இதைப் பெருசுபடுத்திப் பேசுறாங்க. உள்ளே இருக்கிறவங்க கண்டுக்கிறதில்ல. மத்தபடி, சாதி சார்ந்த விஷயங்களைத் தவிர்த்துட்டுப் போறதுதான் நல்லது."


"வாழ்வியல் சினிமாக்களை அப்படித்தான் பண்ண முடியும்!" - சசிகுமார் 'ஷார்ப்' பேட்டி

"விஜய் சேதுபதியின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?"


" 'சுந்தரபாண்டியன்'ல அவர் நடிக்கும்போது ஹீரோவா அவர் நடிச்ச ரெண்டு படம் ரிலீஸாகியிருந்தது. அவருடைய 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் ரிலீஸுக்காகக் காத்திருந்தது. அதனால, படத்துல வில்லனா நடிக்க ஆட்சேபனை ஏதும் இருக்கான்னு கேட்டேன். 'அதெல்லாம் இல்லை; எல்லா கேரக்டரும் பண்ண ஆசை'ன்னு சொன்னார். தன்னை ஒரு இமேஜுக்குள்ள அடக்கிக்க விஜய் சேதுபதி என்னைக்கும் ஆசைப்பட்டதில்லை."


" 'சுப்ரமணியபுரம்' படம் பாலிவுட் வரைக்கும் ரீச் ஆனது. பாலிவுட்ல நடிக்க, படம் இயக்க வாய்ப்புகள் ஏதும் வந்ததுண்டா?"


" 'சுப்ரமணியபுரம்' படம் ரிலீஸான சமயத்துல எனக்கு பாலிவுட்டில் படம் இயக்குற வாய்ப்பு வந்தது. அந்த நேரத்துல அனுராக் காஷ்யப் என்னோட 'சுப்ரமணியபுரம்' பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான், 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்' எடுத்தார். இதை அவரே பல இடங்கள்ல சொல்லியிருக்கார். 'பேட்ட' ஷூட்டிங்ல நவாஜுதீன் சித்திக் 'ஓ... நீங்கதானா அவர்! அனுராக் உங்க படத்தைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். அந்தக் கழுத்தறுக்கிற காட்சியை நான் மறக்கவே மாட்டேன். 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்'ல நடிக்கும்போது, உங்க படத்தின் டிவிடி-யைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்'னு சொல்லி, 'சுப்ரமணியபுரம்' பற்றி ரொம்ப நேரம் பேசினார்."

.

RANBIR KAPOOR HINDI ACTOR BORN 1982 SEPTEMBER 28

 

RANBIR KAPOOR HINDI ACTOR 

BORN 1982 SEPTEMBER 28



.ரன்பீர் கபூர் (ஆங்கிலம்:Ranbir Kapoor, இந்தி: रणबीर कपूर, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பிறந்தார்) பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகராவார். அவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சாவரியா என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்காக அவர் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.


ஆரம்பகால வாழ்க்கை

ரன்பீர் கபூர், நடிகர்களான ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங் தம்பதியருக்குப் பிறந்தார். இவர் ப்ரித்திவிராஜ் கபூரின் கொள்ளுப்பேரனும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான ராஜ் கபூரின் பேரனும் ஆவார். ரன்பீர் ரித்திமா கபூரின் சகோதரராவார். ரந்தீர் கபூர் மற்றும் ராஜீவ் கபூர் ஆகியோர் அவருடைய சித்தப்பாக்கள். கரீஷ்மா கபூர், கரீனா கபூர் மற்றும் நிகில் நந்தா உள்ளிட்டவர்கள் அவரது பிரபல உறவினர்கள் ஆவர். ரன்பீர் குழந்தைப்பருவத்தில் மும்பையின் மாஹிம் என்ற இடத்திலுள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் பயின்றார். பின்னர் நியூயார்க்கில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் அண்ட் பிலிம் இன்ஸ்டியூட்டில் மெத்தட் ஆக்டிங் என்னும் நடிப்பு முறையைக் கற்றுக்கொண்டார்.[2]



தொழில் வாழ்க்கை

ரன்பீர் நடிகராகும் முன்பு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார். அப்போது அவர் பிளாக் (2005) திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்டார். பின்னர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியான சாவரியா (Saawariya) திரைப்படத்தில் ரன்பீர் அறிமுகமானார். அப்படத்தில் ரன்பீர் புதுமுக நடிகை சோனம் கபூருடன் நடித்தார். அத்திரைப்படம் வசூலில் வெற்றிபெறாவிட்டாலும்,[3] காதல் வயப்பட்ட பாடகர் ரன்பீர் ராஜ் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டு விமர்சனங்களைப் பெற்றார். விமர்சகர் தரன் ஆதர்ஷ் "ரன்பீர் கபூர் மிகத்திறமை வாய்ந்தவர், இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆம், அவர் அழகாக இருக்கிறார், ஆனால் நீங்கள் திரைப்படம் முடிந்து திரும்பும்போது அவரது நடிப்பு மட்டுமே உங்கள் மனதில் நிற்கும். இவர் அறிமுகத் திரைப்படத்திலேயே இவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால், இவர் தான் வரும் ஆண்டுகளில் கபூர் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கப்போகிறார். ஓர் அறிமுக நடிகருக்கு இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் [sic]."[4]



ரன்பீர், சித்தார்த் ஆனந்தின் பச்னா ஏ ஹசீனோ என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் பிபாஷா பாசு, மினிஸ்ஷா லம்பா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோருடன் நடித்தார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளிவந்த அத்திரைப்படம் வசூலில் ஓரளவு வெற்றி பெற்றது.[5] 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான அவரது அடுத்த திரைப்படமான வேக் அப் சித், இந்தியாவிலும் அதேபோல வெளிநாடுகளிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. அக்டோபர் 15 ஆம் தேதி கணக்கின்படி, அப்படத்தின் முதல் வாரயிறுதி வசூல் ரூ. 215 மில்லியன் (ரூ. 21.5 கோடி) ஆகும். அதில் இந்தியாவில் மட்டும் ரூ. 170 மில்லியன் (ரூ. 17 கோடி) வசூலானது. ஐக்கிய இராச்சியத்தில் 165,934 டாலர் வசூலித்த இத்திரைப்படம் அமெரிக்க ஒன்றியத்தில் 355,532 டாலர் வசூலைப் பெற்றது. கரன் ஜோஹர் தயாரித்த இத்திரைப்படத்தை அய்யன் முகர்ஜி இயக்கினார்.



ரன்பீர், கத்ரீனா கைஃப்புடன் இணைந்து நடிக்கும் அஜாப் ப்ரேம் கி காசப் கஹானி என்ற ராஜ்குமார் சந்தோஷியின் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்திருந்தது.[6] ஷிமித் அமீனின் ராக்கெட் சிங்: சேல்ஸ்மேன் ஆஃப் த இயர், அஜய் தேவ்கன் மற்றும் கத்ரீனா கைஃப்புடன் [7] இணைந்து நடிக்கும் பிரகாஷ் ஷாவின் ராஜ்னீதி மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் நடிக்கும் சித்தார்த் ஆனந்தின் அடுத்த படமான அஞ்சானா அஞ்சானி ஆகியவை அவரின் எதிர்காலத் திரைப்படங்களாகும்.


ரன்பீர் தான் இதுவரை நடித்ததிலேயே சித் பாத்திரமே நடிப்பதற்குக் சவாலான பாத்திரமாக இருந்தது என்று கூறுவார். தான் நிஜ வாழ்க்கையில் சித் கதாப்பாத்திரம் போல இல்லை என்பது நம்பமுடியாவிட்டாலும் அதுவே உண்மை என்றும் கூறினார்.[8]

.



RANBIR KAPOOR WON BOLLYWOOD RACE,
MISSED BY RISHI KAPOOR 
BORN 1982 SEPTEMBER 28






Ranbir Kapoor (pronounced [rəˈɳbiːr kəˈpuːr]; born 28 September 1982) is an Indian actor. Through his career in Bollywood films, he has become one of the most popular celebrities and one of the highest-paid actors in India. He is the recipient of several awards, including five Filmfare Awards.


The son of actors Rishi and Neetu, and the grandson of actor-director Raj, Kapoor pursued film-making and method acting at the School of Visual Arts and the Lee Strasberg Theatre and Film Institute, respectively. He subsequently assisted Sanjay Leela Bhansali on the film Black (2005). Kapoor made his acting debut with Bhansali's tragic romance Saawariya (2007), a box office flop but notable for earning him his first Filmfare Award—Best Male Debut. He was awarded the Filmfare Critics Award for Best Actor for his performances in three films of 2009—the coming-of-age film Wake Up Sid, the comedy Ajab Prem Ki Ghazab Kahani, and the drama Rocket Singh: Salesman of the Year.


Kapoor won two consecutive Best Actor awards at Filmfare for portraying a troubled musician in the drama Rockstar (2011) and a deaf-mute man in the comedy-drama Barfi! (2012). A starring role in the romantic comedy Yeh Jawaani Hai Deewani (2013), one of the highest-grossing Bollywood films, established him as a leading Bollywood actor. However, he followed it by starring in a series of films that under-performed at the box office, although his performance in the romantic drama Tamasha (2015) was praised.

In addition to acting in films, Kapoor supports charities and causes. He is the co-founder of the production company Picture Shuru Productions, and is a co-owner of the Indian Super League football team Mumbai City FC.

Early life and background


Ranbir Kapoor was born on 28 September 1982 in Mumbai to Rishi and Neetu, both actors of the Hindi film industry.[1] He is the great-grandson of Prithviraj and the grandson of actor-director Raj.[2] His elder sister, Riddhima (born 1980), is an interior and fashion designer.[3][4] The actresses Karisma and Kareena are his first cousins.[5] Kapoor was educated at the Bombay Scottish School in Mahim. As a student, he found little interest in academics and would rank low among his peers.[6][7]


Ranbir Kapoor is posing with his father and mother
Kapoor with his parents Rishi (right) and Neetu in 2013

Kapoor has been vocal about how his parent's troubled marriage affected him as a child: "Sometimes the fights would get really bad. I would be sitting on the steps, my head between my knees, till five or six in the morning, waiting for them to stop".[8] These experiences led to a "reservoir of emotions building up inside [him]", which he said compelled him to develop an interest in film.[8] In his early years, Kapoor was close to his mother, but had a dysfunctional relationship with his father.[6][9] After completing his tenth standard examinations, he worked as an assistant director to his father on the film Aa Ab Laut Chalen (1999), during which he developed a closer bond with him.[9]

After completing his pre-university education from the H.R. College of Commerce and Economics,[6] Kapoor relocated to New York City to learn film-making at the School of Visual Arts, and subsequently pursued method acting at the Lee Strasberg Theatre and Film Institute.[10][11] In film school, Kapoor directed and starred in two short films, entitled Passion to Love and India 1964.[10][12] The loneliness of living alone in New York City coupled with his experience in film school, which he described as "useless", inspired him to pursue a career in Bollywood.[8][13] Upon returning to Mumbai, Kapoor was hired as an assistant director to Sanjay Leela Bhansali on the 2005 film Black. He described the experience: "I was getting beaten up, abused, doing everything from cleaning the floor to fixing the lights from 7 am to 4 am, but I was learning every day."[10] He later remarked that his motive for working on Black was to get Bhansali to offer him an acting job.[9]

Career
Debut and initial success (2007–10)



Following the release of Black, Bhansali cast Kapoor as the protagonist of his 2007 tragic romance Saawariya, alongside Sonam Kapoor and Rani Mukerji. The film tells the story of a tramp, played by him, who falls obsessively in love with a woman awaiting the return of her lover. In an interview with the news and entertainment portal Rediff.com, Kapoor stated that his character was written as a tribute to his grandfather's iconic roles as a tramp.[14] Saawariya was the first Indian film to be produced by a Hollywood studio (Sony Pictures Entertainment), and was a highly anticipated release.[15] However, film critics were disappointed with the picture with BBC's Jaspreet Pandohar calling it a "misfire on a massive scale".[16] CNN-IBN's Rajeev Masand considered it "contrived and fake", but was impressed by Kapoor's "affable charm" and wrote that "he’s got that star quality to him which is so rare to find."[17] At the box office, Saawariya failed to earn profits.[18] However, at the annual Filmfare Awards ceremony, Kapoor was awarded a Best Male Debut trophy.[19]

Despite the commercial failure of Saawariya, Kapoor was contracted by Yash Raj Films for a primary role in the Siddharth Anand-directed romantic comedy Bachna Ae Haseeno (2008).[20] The film was his first commercial success, in which his role was that of a womaniser who is romantically involved with three women, played by Bipasha Basu, Minissha Lamba, and Deepika Padukone, at different stages of his life.[21] Rachel Saltz of The New York Times expressed mixed views on his performance, but predicted that his "puppy-dog sweetness" would "serve him well as a Bollywood leading man".[22]


In 2009, Kapoor had three film releases. In Dharma Productions's Wake Up Sid, a coming of age film from director Ayan Mukerji, Kapoor portrayed Siddharth "Sid" Mehra, a rich, lazy teenager whose life undergoes a series of changes after interacting with an ambitious journalist (played by Konkana Sen Sharma). When Mukerji narrated the then-untitled script of the film to him, Kapoor came up with the title himself.[23] The media expressed doubt on the film's financial prospect as it depicted a romantic relationship between a younger man and an older woman.[24] It eventually emerged as a sleeper hit and garnered acclaim from the critics.[25] Taran Adarsh of Bollywood Hungama reviewed that Kapoor's performance in the film proved that he was "amongst the best in the business today".[26]

Kapoor next starred opposite Katrina Kaif in Ajab Prem Ki Ghazab Kahani, a slapstick comedy from director Rajkumar Santoshi, that emerged as the fourth highest-grossing Bollywood film of 2009.[27] Film critic Gaurav Malani praised Kapoor's flair for comedy, but criticised his "over-excited husky baritone".[28] Kapoor's final release that year was the Shimit Amin-directed Rocket Singh: Salesman of the Year, a drama about a sardar who aspires to be a salesman.[29] Film critic Mayank Shekhar praised the film and found Kapoor's performance to be "astonishingly sincere", but the film earned little at the box office.[30][31] Kapoor later professed to being highly disappointed by the film's commercial failure.[32] At the 55th Filmfare Awards, Kapoor was awarded the Filmfare Critics Award for Best Actor for his performances in all three of his 2009 releases, and he also received two Best Actor nominations at the ceremony for Wake Up Sid and Ajab Prem Ki Ghazab Kahani.[33]



Prakash Jha's big-budget ensemble political thriller Raajneeti was Kapoor's first release of 2010. The film, which starred Nana Patekar, Ajay Devgn, Arjun Rampal, Manoj Bajpayee, Katrina Kaif and Sarah Thompson in prominent roles, was inspired by the Indian epic The Mahabharata and Mario Puzo's 1969 novel The Godfather.[34] Kapoor's role was of Samar Pratap (based on the characters of Arjuna and Michael Corleone), the youngest heir of an Indian political dynasty, who is reluctantly drawn to politics after the assassination of his father. Kapoor described it as his first complex role and considered it a departure from the "lover boy roles" that he had previously played.[29] Nikhat Kazmi of The Times of India reviewed: "The film finally belongs to Ranbir Kapoor who perfects the art of minimalism—and literally grows before your eyes—as the simmering volcano that cannot be held back, once it erupts."[35] Robert Abele of the Los Angeles Times, however, was more critical of his performance which he considered "stony rather than calculating—especially jarring compared to the histrionic turns around him".[36] Indian trade journalists were apprehensive of Raajneeti recovering its ₹600 million (US$8.9 million) investment.[37] The film, however, proved to be a major commercial success with worldwide earnings of over ₹1.43 billion (US$21 million).[38] Kapoor received a third Best Actor nomination at Filmfare for the film.[19]



Later that same year, Kapoor collaborated with Priyanka Chopra on Anand's Anjaana Anjaani, a comedy-drama involving two strangers who vow to commit suicide on New Year's Eve. The film was a moderate financial success, but garnered little praise from the critics.[39][40] Rajeev Masand noted that Kapoor "struggles with a badly-defined role" and NDTV's Anupama Chopra concluded: "Ranbir tries hard to salvage the film, dropping his shirt several times but even his lovingly shot chest can’t save the film."[41][42]

Critical acclaim (2011–2013)

Following an item number in the children's film Chillar Party (2011), Kapoor took on the role of Janardhan "Jordan" Jakhar in Imtiaz Ali's Rockstar, a drama that follows the journey of an aspiring musician from a humble background to international stardom. In preparation for the role, Kapoor lived with a Jat family in Pitam Pura and studied their mannerisms.[43] He additionally learned to play the guitar and practiced extensively at A.R. Rahman's (the film's music composer) music studio.[44]

As part of the film's promotional activity, Kapoor performed at a live concert in Mumbai.[45] Film critics were polarised on their view of the film, but were unanimous in their praise for Kapoor;[46] Aniruddha Guha of Daily News and Analysis was particularly impressed with the film and thought that Kapoor's portrayal was one of "Hindi cinema’s most accomplished performances by a lead actor".[47] For the role, Kapoor won both the Best Actor and Best Actor (Critics) trophies at the 57th Filmfare Awards ceremony, along with Best Actor awards at Screen and IIFA.[19] With a gross revenue of ₹1.07 billion (US$16 million), Rockstar was one of the top-grossing Hindi films of the year.[48]

Ranbir Kapoor looks directly at the camera


The 2012 romantic comedy Barfi! was Kapoor's first release to earn over ₹1 billion (US$15 million) at the domestic box office.[49][50] Directed by Anurag Basu, the film (set in the 1970s) tells the story of its titular protagonist (a deaf and mute man, played by Kapoor) who falls in love with a woman who is already engaged (played by Ileana D'Cruz) and later, an autistic girl (played by Priyanka Chopra). In preparation, Kapoor observed the work of actors Roberto Benigni, Charlie Chaplin, and his grandfather.[51] Barfi! received praise from the critics, and the performances of the three lead actors were acclaimed.[52] Ronnie Scheib of Variety praised Kapoor for successfully channeling Chaplin in "tone and affect", and Raja Sen of Rediff.com wrote that "he does very strongly indeed with this Chaplin-tribute role, bestowing his character with heart every step of the way".[53][54] The film was submitted as India’s official entry for the 85th Academy Awards, and was screened at the Marrakech and Busan International Film Festivals.[55][56][57] Kapoor won second consecutive Best Actor awards at the Filmfare, Screen, and IIFA Award ceremonies.[19]


Kapoor achieved further success in 2013 when he reunited with director Ayan Mukerji for the romantic comedy Yeh Jawaani Hai Deewani co-starring Deepika Padukone, Kalki Koechlin, and Aditya Roy Kapoor. He was cast as Kabir "Bunny" Thapar, a commitment-phobic photographer, a character Kapoor found to be an extension of himself.[58] His pairing with Padukone, after their highly publicised break-up, led to hype surrounding the film's release.[59][60] Yeh Jawaani Hai Deewani emerged as one of the highest-grossing Bollywood films of all time with earnings of ₹3.02 billion (US$45 million), proving to be Kapoor's third consecutive commercial success in three years and earned him another Best Actor nomination at Filmfare.[61][62][63] 

Film critics found the film to be "riddled with clichés", but praised both Kapoor and Padukone, with Daily News and Analysis' Tushar Joshi labelling their on-screen chemistry as "unsurpassable".[64][65] Kapoor's second release of 2013 was the action-comedy film Besharam in which he played a petty thief, alongside Pallavi Sharda and his parents.[66] The film met with an overwhelming negative reception and emerged as a failure; Sudhish Kamath of The Hindu described it as "Kapoor's hall of shame".[67][68][69]

Personal life


Kapoor has been vocal about his personal life, and has stated that the his parents' marriage taught him how complex a relationship can be.[8] He had his first serious relationship while in the seventh grade, and suffered from depression when it ended.[13] While filming Bachna Ae Haseeno in 2008, Kapoor began dating his co-star Deepika Padukone.[87] The relationship attracted substantial media coverage in India and they speculated on an impending engagement.[88] However, the couple broke up a year later.[89] Kapoor maintained that the split was amicable, though the media widely reported that the split was due to infidelity on Kapoor's part.[90][91] Kapoor later confessed: "Yes, I have, out of immaturity, out of inexperience, out of taking advantage of certain temptations, out of callousness."[92] Later in 2015, Kapoor stated that they both had resolved the conflict and had moved on with their lives.[93] Since the split, he has been reticent to publicly discuss his personal life.[8][90][94]


Rumours of an affair with Katrina Kaif first emerged during the production of Ajab Prem Ki Ghazab Kahani in 2009.[95][96] In August 2013, a set of paparazzi photographs of Kapoor and Kaif at a beach in Spain were published by Stardust.[97] Although Kapoor initially declined to speak of the relationship,[98] he admitted to it in 2015: "Both of us are sure about our relationship and if we don't open about it now, it would be showing disrespect to the relationship."[99] As of February 2016, the media reported that they had broken up.[100]

Sunday, 14 June 2020

SUDHA TELUGU ACTRESS BORN 1944 SEPTEMBER 28



               SUDHA TELUGU ACTRESS BORN 1944 SEPTEMBER 28



Sudha is a well known Telugu cum Tamil mother role artist. She is popular in Tamil industry for her role in Duet with Prabhu and Ramesh Aravind. Sudha usually performed in character roles, when she was young. She has acted as the sister for almost all the top heroes and also has acted as their mother after few years. Sudha was seen in the film Guru Sishyan as the sister of Rajini and Prabhu. Later she acted as Prabhu’s stepmother in the movie Duet, directed by Balachander. From the late 80's till now, Sudha has performed many roles that expose her acting talent. She has also acted as a mother goddess in Raghavendra Mahatmyam.

Whatever character she undertakes, Sudha holds on to that role tightly and lives as the character in a natural way. She has done hundreds of movies as the mother of the Heroes and Heroines, and her role is always appreciated. She is very choosy in her roles and always looks at the importance of her role. In Kanden Kadhalai, she did the mother role for the heroine Tamannaah, and that role got a good response too. Her debut movie in Telugu was Gang Leader in 1991. Ishtam, Manmadhudu, Allari, Nuvve Nuvve, Naga, Dil, Janaki Weds Sriram, TheeradhaVilayattu Pillai and Oka Laila Kosam are her popular movies.

    
Character Actor, Sudha has become highly popular with her mother roles in many Telugu movies and she is one of the popular and most sought after actors in the Telugu Cinema. She acted with big heroes and small ones as well in more than 750 films. In a recent interaction with a popular youtube channel she shared some interesting facts about her life.
Sudha said she is still alive because of Akkineni Nagarjuna. During one of the shoots, Sudha was having heavy pain in the stomach and actor was able to recognize it as Appendicitis. Immediately, the actress was taken to a near by hospital and got her Appendix operated. On another occasion, when Sudha got injured on sets of Ravoyi Chandamama and she was in immovable condition, Nagarjuna immediately arranged his personal doctor to look after her. She thanks him for that and said she will be indebted for life.

The actress also shared her experience with K.Balachander and said when her initial foray into industry as a lead did not workout, it is KB sir who suggested her to take up supporting roles. She thanks him for that suggestion and got highly emotional talking about Uday Kiran. She said the actor was like her son and if she adopted him after his mother's death, she could have saved him.


Thursday, 26 October 2017

SARUMATHI ALIAS K.YOGANATHAN EELAM WRITER BORN ON 1947,OCTOBER 26



SARUMATHI ALIAS K.YOGANATHAN  EELAM WRITER 
BORN ON 1947,OCTOBER 26




சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) பிறந்த நாள்  அக்டோபர் 26,1947







நமது காலத்தைய மகத்தான கவிஞர்களில் ஒருவரான சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) 28.09.1998 அன்று இறந்தார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகினையே கவலைக் கடலில் மூழ்கச் செய்தது. கண்ணீர் சிந்தாத இலக்கிய நெஞ்சங்களே இல்லை. ஆனால் வருட காலங்கள் உருண்டோடி விட்டன சாருமதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர் வரித்திருந்த மக்கள் இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்ற வகையில் சாருமதியின் பங்களிப்பினை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியது சமகால தேவையாகும்.
ஒருவருடைய வாழ்க்கை அவருடைய குடும்ப மட்டத்திற்கு மேலாக சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே நிலக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டு விட்டதென்றால் அம் மனிதன் வாழ்க்கை ஏதோ ஒருவகையிலும் அளவிலும் சமூக பயன்பாடு மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற்ச்சிகிறார்கள். இதனால் அத்தகையோரின் வாழ்வும் பணியும் இன்றைய நிகழ்வாகின்றது. கவிஞர் சாருமதி அவர்களும் இவ்வாறுதான் இன்றைய நிகழ்வாகின்றார்.
இறந்த மனிதனின் வாழ்வும் நினைவுகளும் இன்றைய பிரச்சனைகளோடு இயைபுடையதாகின்ற போது அவர்கள் பற்றிய தேடல், ஆய்வுகள், மதிப்பீடுகள் என்பன முக்கியத்துவம் உடையதாகின்றது. அவ்வகையில் சாருமதியின் பங்களிப்பினை புரிந்துக் கொள்வதற்கும் அவர் பொறுத்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவரது கொள்கையை நடைமுறையை பட்டைத் தீட்ட முனைந்த சமூக பின்புலம் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகும். இப்பின்புலத்தில் க. யோகநாதன், சாருமதியாக பரிணாமம் அடைந்த கதை வரலாற்றினை நோக்குவோம்.
யோகநாதன் சாருமதியான சமூக பின்புலம்:-

70 களின் இறுதியிலும் 80 களின் தொடக்கத்திலும் தோழர் கிருஷ்ண குட்டி, சுபத்திரன் முதலானோர் தலைமையிலான மக்கள் இயக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மக்கள் மத்தியில் வேர்கொண்டு கிளை பரப்பிய போது பல்வேறு ஆளுமைகளை - புத்திஜீவிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் விவசாயிகள் என தன் நோக்கி வேகமாக ஆகிர்ஷித்திருந்தது. அவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆளுமை சுவடுகளில் ஒருவர் தான் கவிஞர் சாருமதி.
தானுண்டு, தனது குடும்பமுண்டு என்ற நிலையில் வாழ்த்து அந்திம காலத்தில் தமது குடும்ப பெருமைகளை முன்னெடுக்கும் வாரிசாகவும் வளர வேண்டும் என்ற தமது குடும்பத்தாரின் எதிர்ப்பர்ப்புகளுக்கும் முழக்கு போட்டு விட்டு, அவர்களின் எதிர்ப்பினையும் கடந்து ஓர் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கியவர் சாருமதி. 

இந்தியாவில் தோன்றி வளர்ந்த நகசல் பாரி இயக்கத்தின் தலைவரான சாருமஜிம்த்தாரானால் ஆதரிக்கப்பட்ட யோகநாதன் சாருமதி என தமது பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். இந்திய நக்கல் பாரி இயக்கத்தின் போக்கினையும் நோக்கினையும் எந்தளவு உணர்ந்திருந்தார் என்பதோ அல்லது அத்தகைய சிந்தனை போர்களை எந்தளவு தமது சூழலில் பிரயோகித்தார் என்பதும் வினாவிற்குரியதாகும். அவரது எழுத்துக்களில் அத்தகைய சிந்தனை வெளிப்படாது என்பதை கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.

1970 களில் மட்டகளப்பு பிரதேசத்தில் முகிழ்ந்த புதிய அரசியல் முனைப்புகிளின் பின்னணியில் தனது பாத்திரத்தைத் தீர்க்கமாய் தெளிவாய் வகுத்துக் கொண்டவர். சாருமதி வாழ்வில் பல சமரசங்களையும் கைவிட்டு சிதைந்த சிதைவுறுகின்ற மனித குலத்தின் கம்பீரத்தையும் யௌவனத்தையும் தேக்கி தர முற்பட்டது இவரது வாழ்வு. காலப்போக்கில் பல தோழர்களின் பிரிவு குறிப்பாக தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் மறைவு, இலங்கையில் மட்டுமன்று உலகலாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்களின் தளர்ச்சி, வடகிழக்கில் ஏற்பட்ட மிதவாத அரசியலின் மேலாதிக்கம், ஆயுத அச்சுறுத்தல் இவற்றுடன் தனக்கு கிடைத்த அரசின் சம்பளம் என்பனவற்றுடன் தமது நடவடிக்கைகளுக்கு முழக்கு போட்டிருக்கலாம். மக்கள் இயக்க நடவடிக்கைகளையும் தத்துவார்த்த போராட்டங்களையும் முன்னெடுத்த பலர் இம்மாற்றங்களோடு தடம்புரண்டு போக சாருமதி சற்றே அந்நியப்பட்டு மக்கள் நலன் சார்ந்த பதாகையை அவ்வவ் காலக்கட்டங்களில் முன்னெடுத்து வந்துள்ளார்.

இ;வ்விடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில் குறித்ததோர் காலகட்ட ஆர்பரிப்பில் மக்கள் இயக்கங்களுடன் தன்னை இணைத்திருந்த கவிஞர் அத்தகைய சூழல் இல்லாத காலக்கட்டங்களிலும் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டு வந்துள்ளார். என்பது அவரது மிக முக்கியமான சமூக பங்களிப்பாகும். அந்தவகையில் ஓர் காலக்கட்டத்தின் இடைவெளியை நிரப்பியவர் சாருமதி என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை

இத்தகைய பின்ணனியில் தான் சாருமதியின் இலக்கிய சிந்தனைகளும் கோட்பாடுகளும் செழுமைப்படுத்தப்பட்டன. சாருமதியின் சமூக பங்களிப்பு குறித்த கட்டுரையினை ஆய்வு வசதி கருதி பின்வருமாறு வகுத்துக் கூற விழைகின்றேன்.

சாருமதி பல கனதியான கவிதைகளை இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார். இவரது கவிதைகள் குமரன் தாயகம் தீர்த்திக்கரை, நந்தலாலா, வயல், பூவரசு ஆகிய இதழ்களை அலங்கரிப்பதில் சிறப்பான பங்களிப்பினைச் செய்துள்ளது. “கருத்துக்கள் வானத்திலிருந்து வருகின்றனவையல்ல. அவை மக்கள் மத்தியிலிருந்தே வருகின்றன” என்ற மக்கள் இலக்கிய கோட்பாட்;டை வரித்துக் கொண்ட கவிஞர் மக்களையே வரலாற்றின் பிரமக்களாகக் கொண்டு தமது கவிதைகளை தீட்ட முனைந்துள்ளார். தமது கவிதையின் தார்மிகம் குறித்தும் அதன் பிறப்பு குறித்து அவரது உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றன.


அடிமைகளாய் நாங்கள
கவிதைக்கு
அடியெடுத்து பாடவில்லை
விடுதலையின் கீதங்களை
விண்ணதிரும் கலைக்கோஷங்களாய்
நிலையெடுத்துப் பாடுகின்றோம்
ஆயிரம் விலைக் கொடுத்தாலும்
நாங்கள்
கவியை விற்று
பிழைக்க மாட்டோம்
அழுகுரலில் பாட மாட்டோம்
ஆழதழுது ஓயமாட்டோம்
மலைபோல் துன்பங்களை
முதுகினில் ராகத்தை
விடாது இசைத்திடுவோம்.
அடிகளுக்கு அஞ்ச மாட்டோம்
அப்பாவித் தனங்களினால்
எடுபிடியாய் ஆனோரும்
எம் வர்க்கம் ஆயிருந்தால்
அவர்களிடையேயும்
பாட்டாளிவர்க்க அரசியலை
கொண்டு செல்வோம்.
துப்பாக்கிக் குண்டுகளால்
துடி துடித்து இறந்தாலும்
உழைக்கும்
வர்க்கத்தின் விடுதலையை
இறுதி மூச்சிலும் கோஷிப்போம்
நடைமுறைக்கே முதலிடம்
தாம் கொடுத்து பாட்டிசைப்போம்
இயந்திரத்தே இல்லாத
சில்லும் பல்லுமாக
இலக்கியங்கள்
படைக்க மாட்டோம்

கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் உலகிலுள்ள படைப்புகிலே மேலான படைப்பு மனிதனாவான். அதனால் தான் மனிதமன் என்ற சொல் அவருக்கு கம்பீரமாக ஒலிக்கின்றது அத்தகைய மனித குலத்தின் கம்பீரத்தை அதன் நாகரிகத்தை மேற்குறித்த வரிகள் எமக்கு அழகுற படம்பிடித்துக் காட்டுகின்றன. சாருமதியில் காணக்கிட்டும் மனித நேயம் என்பது இக்கவிஞனின் நுண் உணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட வர்க்கத்தின் போர் முகமாய் எழுகின்ற இவரது கவிதைகள் மிகுந்த நிசர்சனங்களாய் விளங்குகின்றன.
இனம், மதம், மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து புதியதோர் நாகரிகத்திற்க்காய் அவரது வரிகள் இவ்வாறு நகர்கின்றன.

ஒன்றாய் தொழில் புரிந்தோம்
ஓர் அலுவலகமே சென்றோம்
என்றாலும் எம்மிடையே
எத்தொடர்பும் இருந்ததில்லை
பண்டா நீ சிங்களவன்
பரம்பரை இனவெறியன்
என்றாலும் நான் குறைவோ
என் குரலும் தமிழ் ஈழம்
..........
சி}ங்களப் பெருமையில்
சிந்தித்து வாழ்ந்த நீ
நஞ்சுடன் கலந்தாயென
நாளிதழ் சொன்னது
.......
என்றைக்கும் நானும்
உன் போல் நஞ்சிடம்
தஞ்சம் புக வேண்டி வருமோ!
வறுமையும் வாழ்க்கையும்
உனக்கும் எனக்கும்
ஒன்றென்பதை என்னால் இப்போது தான்
இனம் கான முடிகின்றது
......
தனிச் சிங்களப் பெருமைகள்
உனது தற்கொலையை
தடுக்க முடியாமல் போன போதுதான்
எனது “தமிழ் கனவுகள்”
தகரத் தொடங்கின
என்றாவது ஒரு நாளில்
எமது ஆத்மாக்கள்
ஒன்றாகியே தீர வேண்டும்.

இனக்குரோதம், வகுப்புவாத வெறி இவற்றின் மத்தியிலும் ஆங்காங்கு உழைக்கும் மக்களின் உணர்வு வர்க்க அடிப்படையில் தோய்ந்ததாக இருக்க முடியும் என்பதை சாருமதியின் மேற்குறித்த வரிகள் வெளிக்கொணர்கின்றன.
குறித்தோர் காலச் சூழலில் உழைக்கும் மக்களின் போர்குணத்தை தீவிரமாகப் பாடிய கவிஞர் இனவாதம் இனக் குரோதம் என்பன கேவலமானதோர் அரசியலின் பின்னனியில் மோசமானதோர் நிலையினை எட்டியபோது அத்தகைய முரண்பாடுகளிலிருந்து அந்நியப் படாமலும் தெலைதூர தீவுகளுக்குள் ஒதுங்கி விடாமலும் அதே சமயம் இயங்கியல் பார்வையிலிருந்து அந்நியப்பட்டாலும் தமது சரித்திர தூரிகையை இவ்வாறு நகர்த்தி செல்கின்றார்.

“தெருவில் பிணங்கள்
தூக்கி வீசப்பட்டிருந்தன
அவைகளின் உதிரத் தொடர்புகள்
துடித்துக் கதறி
ஓர் இனத்தின் கோலத்தை
தம் ஓலத்தில்
உரித்தாக்கி கொண்டன.”

இனவொருக்கு முறை என்பது வர்க்க விடுதலைக்கு அப்பாற்பட்டது என எதிர்க்கொண்டது என எதிர் கொண்ட வரட்டு மார்க்ஸிசவாதிகளிலிருந்தும் அதே சமயம் வர்க்க விடுதலை சாத்தியமற்றது இனவிடுதலைப் போராட்டமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு எனக் கொண்டு தடம் புரண்ட இடதுசாரிகளின் ஊறைகளிலிருந்தும் அந்நியப்பட்டு இனவொருக்கு முறையினை மார்க்ஸிய நிலை நின்று எதிர்கொண்டமை சாருமதியின் இயங்கியல் பார்வைக்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
சாருமதியின் இந்நோக்கும் போக்குமானது காலநகர்வோடு பரந்து விசாலிக்கின்றது. மக்களை ஒட்டியதாய் கிளைப்பரப்புகின்றது. இவரது சுனி ஒரு கலக்காரி எனும் கவிதை லோகாபா பழங்குடியைச் சேர்ந்த சுனில் கொத்தாவின் தற்கொலைக் குறித்து பாடுகின்றது. வங்காளப் பல்கலைக்கழகமொன்றில் ஆ.யு கற்கைநெறியை தொடர்ந்த மாணவியான இவர் இங்கு இடம்பெற்ற சாதி, பால் ரீதியாக இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராகத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிகழ்வு குறித்து சாருமதியின் வரிகள் இவ்வாறு அமைகின்றன.

மாதவியும்
மனிதப் பிறவிதானே
கானல் வரி பாடி
அவளை
மேசையென்று செல்லி
விலகி போன
கோவலன் மட்டுமென்ன
கற்புக்கு அரசனா.....?
.......
இந்தியாவின்
இந்து சனாதனம்
அசிங்கங்களின் குப்பைத் தொட்டி
சுனி
அதையே கண்டனம் செய்தாள்
தன்னைத் தானே
கொன்று போட்டதாய்...!

ஆயிரம் ஆண்டுகளாய் சொல்லித்தும் போன இந்நிய பண்பாட்டையும் இந்து கடமையான சனாதனத்தின் பயன்பாடுகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கினறார். கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் பொதுவில் சராசரி புத்திஜீவிகளின் அரசியல் கடமையான சமூக முரண்பாடுகளை சமரசம் செய்தல், நியாயப்படுத்தல். அழகுப்படுத்தல் எனும் புண்மைகளைத் தாண்டி இக்கவிஞனின் கவிதைகள் தனக்கே உரித்தான ஒளிப்பிழம்பை ஏற்றி துணிவுடன் நடக்கிறது.

பெண்ணியம் குறித்து கதைத்த போது அதனை வெறுமனே பெண்ணியத்துடன் மட்டும் நிறுத்தி விடுவதாக அவரது வரிகள் அமையவில்லை. அவ்வுணர்வு கள்  சமூகவிடுதலையுடன் ஒட்டியதாய் வேர்கொண்டு கிளைப் பரப்புகின்றது.

விண்வெளி
இராச்சியம் வருக
இங்கு வீழ்ந்தோரெல்லாம்
மீண்டு எழுக
எந்த மனிதர்கட்கும்
சிலுவை
இல்லை என்றுதான் மொழிக.
எங்கும் இராமர்கள் திரிக
ஆயின்
எந்த சீதையும் நெருப்பில்
வெந்துபடாது இருக்க
வேண்டிய விளைகளை சொரிக
...........
சிந்திய குருதியில் குளிதது
வானில் சீக்கிரம்
உதயம் நிகழ்க.

இவ்வரிகளில் கலைத்துவம் சற்றே குறைப்பட்டிருப்பினும் பெண்ணியம் கூறும் பலரும் வாழ்விலிருந்து அந்நியப்பட்ட வழியினைக் காட்டி நிற்க, இவர் வாழ்வை நிராகரிக்காமல் விரக்தியில் மூழ்காமல் அதேசமயம் பெண்னை எந்த சமரசத்திற்கும் உட்படுத்தாமல் தமது சரித்திர தூரிகை கொண்டு புதியதோர் சித்திரத்தை இவ்வாறு தீட்ட முனைந்துள்ளார்.
பெண்விடுதலை சமூக விடுதலையுடன் ஒட்டிப்பார்க்கின்ற கவிஞர் அதனை மரபு, பண்பாடு என்பவற்றுடன் கூடிய வடிவத்தினை கொண்டே ஆக்கியிருப்பது கவிதைக்கு மேலும் வலிமை சேர்க்கின்றது. சமூகத்தின் பன்மைகளைச் சாடுகின்றபோது ஆந்தைக் கூட்டங்களுக்கும் இருளின் ஆத்மாக்களுக்கும் எதிராய் இவர் கவித்தீ உமிழ்வது அதியமானதொன்றல்ல.
மக்களின் நளனிலிரு அந்நியமுறாமல் தீட்டப்பட்டிருக்கும் இவரது கவிதைகளில் காணக்கிட்டும் வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கை, நேர்மை என்பன திடுக்கிட்டவைக்கும் அளவிற்கு வளம் சேர்;ப்பதாக அமைகின்றது. சித்தாந்த தெளிவும், சிருஷ்டிகர திறனும் ஒருங்கிணைந்துள்ளமையே இதற்கான அடிப்படை எனலாம்.
இவையனைத்தும் சமூக மாற்றங்களின் வரலாற்று ரீதியான நியதியை குறித்து நிற்கின்றன. சாருமதியின் கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இவை இலங்கை தமிழ் கவிதை வளர்ச்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும். முயற்சியாக அமையும்.
சஞ்சிகை ஆசிரியர்

சாருமதி 90 களின் ஆரம்பத்தில் ‘ வயல்’ என்ற இதழை நடத்தி வந்தார். மக்கள் இலக்கிய செல்நெறியை சிதையாதவகையில் முன்னெடுப்பதிலும் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுகின்ற பணியினை இச் சஞ்சிகை சிறப்பாகவே ஆற்றி வந்துள்ளது.6 இதழ்களே வெளிவந்த போதும் மக்கள் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான பங்களிப்பினை நல்கியுள்ளது. சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இலக்கிய கர்த்தாக்களின் படங்களைக் கொண்டு அலங்கரிக்கின்ற மரபினை தமிழகத்தில் ‘சாந்தி’ சரவஸ்தி போன்ற இதழ்கள் தோற்றுவித்தன. சாருமதியை ஆசிரியராக கொண்டு வெளிவந்த வயல் சஞ்சிகையும் இப்போக்கினை பின்பற்றியிருந்தன.
குறிப்பிட்ட ஓர் காலம் வெம்மை சூழ் கொண்டபோது குறிப்பிட்டவர்க்கத்தின் போர் முகமாய் அர்ப்பரித்து நின்ற தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் படங்களை அட்டைப்படங்களாக வெளிக்கொணர்வதில் முனைப்புக் காட்டிய வயல் சஞ்சிகை தமது இலக்கிய தளத்தினையும் தெளிவாக இனம் காட்டி நின்றது. பூவரசு போன்ற இலக்கிய வட்டங்களுடன் இணைந்து பூவரசு சஞ்சிகையை வெளியிடுவதிலும் சாருமதியின் பங்களிப்பு முக்கியமானது. பூவரசின் தாரக மந்திரம் இவ்வாறு அமைந்திருந்தது. “கோடையினை வென்றே குடையாகிப் பூமிக்கு பாலூட்டும் பூவரசுகள்” 2 வது இதழின் அட்டைப்படம் இத்தாரகமந்திரத்தை நிறைவூட்டுவதாக அமைந்துள்ளது. மட்டகளப்பு பிரதேசம் சார்ந்த கலை இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்ததில் பூவரசிற்கு முக்கிய இடமுண்டு.

ஆசிரியர்

சாருமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆசிரியராக கடமையாற்றியமையால் அமர்ந்த கருத்துக்களை முன்னெடுத்து செல்வதில் கூடிய கரிசனைக் காட்டினார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று பழமை பேணுவதே இலக்கிய கல்வியெனப் போதித்து வந்த பண்டிதர்களிடையே சாருமதியின் சமூகம் சார்ந்த பார்வை மாணவர்களிடையே புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தது. மாணவர்களுக்கு கலை இலக்கியம் சம்பந்தமான குறிப்புகள் புத்தகங்கள் என்பவற்றினை கொடுத்து உதவியதுடன் பின்னேரங்களில் மாணவர்கள் நண்பர்களுடன் கூடி கலந்துரையாடலை மேற்கொள்வதும் இவரது முக்கிய செயற்பாடுகளின் ஒன்றாக அமைந்திருந்தது. தாம் ஏற்றுக் கொண்ட கொள்கையினை வெறும் கல்வி நாகரிக போக்காக கொண்டு தலைவீங்கி திரிகின்ற உளநோயாளராக அல்லாமல் அவற்றினை மாறிவருகின்ற உலக சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கவும் அதனை புதிய தலைமுறைக்கு தேக்கி தரவும் முனைகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்ததில் சாருமதிக்கு முக்கிய இடமுண்டு.
வெளியீட்டாளர்:-
ஒரு தொகுப்பு பெருமளவுக்குக் கவிதை எழுதிய சாருமதி தனக்கு ஒரு தொகுப்பை போட்டுக் கொள்ளாமல் சுபத்திரன் கவிதைகளை தொகுத்து வெளியிட்டமை அவரது தன்முனைப்பற்ற நாகரிகத்தினைக் காட்டுவதுடன் இன்றைய மக்கள் இலக்கியத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பாகவும் அமைந்துள்ளது. 1960 களில் வடக்கில் இடம்பெற்ற தீண்டாமையை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது அதன் அடுத்தக்கட்ட பரிணாமமான இனவிடுதலை போராட்டத்தையும் இணைத்து முன்னெடுத்தியிருக்குமாயின் ஆனால் இப்போராட்டத்திற்கு சேரன் போன்ற தவறான கவிஞர்கள் கிடைத்தமையினால் இன்று மஹாகவி உரித்திரமூர்த்தி போன்றோர் மறுக்கண்டு பிடிப்பு செய்யப்படுகின்றார். இன்று மஹாகவி உருத்திரமூர்த்தியை அளவுக்கு மீறி தூக்கி பிடிப்பதன் நோக்கம் பசுபதி சுபத்திரன் போன் மக்கள் இலக்கிய கவிஞர்களை இருட்டியடிப்பு செய்வதாகவே அமைந்துள்ளது. மக்கள் இலக்கிய கோட்பாட்டை தகர்த்துவவதில் பல நண்பர்களும் எதிரிகளாக மாறியுள்ள இன்றைய சூழலில் சுபாத்திரனின் கவிதைகளை தொகுத்து வெளியீட்டமை காலத்தின் தேவையை நாகரிமானதோர் தளத்தில் நின்று பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தது.

பிற முயற்சிகள்:-

சாருமதி அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், ஆற்றிய சொற்பொழிவுகள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்பன தொகுக்கப்பட்டு வெளியிடப்படல் அவசியமான ஒன்றாகும். இவை சாருமதி குறித்து முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு உதவும்.
சாருமதியின் கட்டுரைகள் அவ்வப்போது வயல்பூவரசு சஞ்சிகைகளில் தலைக்காட்டும். பழந்தமிழ் இலக்கிய பரிட்சயமும் நவீன இலக்கிய நோக்கும் சாருமதியில் ஆழமாகவே வேரூண்றியிருந்தது.
1990 களின் ஆரம்பத்தில் மட்டகளப்பிலே இலக்கிய மேதினம் ஒன்றினை நடத்தினார். திருமதி சித்திரலேகா மௌனகுரு பெண்னியம் தொடர்பாகவும் ந. இரவிந்திரன் அவர்கள் சமகால இலக்கிய செல்நெறி தொடர்பாகவும் உரையாற்றினார்கள் இலக்கிய மே தினம் குறித்து சாருமதியின் கூற்று இவ்வாறு வெளியீட்டிருந்தது
“மேதினம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்குரிய நாளாகும். உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை இலக்கிய ரீதியாக முன்னெடுக்கும் எம் போன்றோராலும் இத்தினத்தை மறந்து நிற்க முடியாது.
இவ்வாறு சிறப்புமிக்கதோர் இலக்கிய மேதினத்தை இலங்கை இலக்கிய வரலாற்றில் அறிமுகப்படுத்தியமை பெருமை சாருமதியை சாரும்
சாருமதி மக்கள் ஐக்கிய முன்னஸிக் கோட்பாட்டினை வலியுறுத்தியதுடன் அதனையே நடைமுறையிலும் கடைப்பிடித்து வந்தார். இவர் யாழ் பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த கால முதல் இறக்கும் வரை இந்த நடைமுறையை பின்பற்றி வந்தார். என்பதற்கொருவர் தேசம் தழுவியவகையில் இலக்கிய நண்பர்களை கொண்டிருந்தமை இதற்குதக்க எடுத்துக்காட்டாகும். குறிப்பாக தேசிய கலை இலக்கிய பேரவை, நந்தாலா இலக்கிய வட்டம், புதிய சிந்தனைக் கலை இலக்கிய பேரவை முதலிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார்.

சமூக செயற்பாட்டுத்தளத்திலான பலவீனங்கள்:-

கவிஞர் என்றவகையில் சமூக மாற்ற போராட்டங்களுக்கு காத்திரமான பங்களிப்பினை நல்கிய சாருமதி சமூக செயற்பாட்டு தளங்களில் பல தவறுகளுக்கு உள்ளானவராகவும் காணப்படுகின்றார். சஞ்சிகையாளர் பதிப்பாளர் என்கின்றவகையில் அச்சகத்துறையின்; பால் எத்தகைய சக்திகளை சாருமதி அணித்திரட்டியிருந்தார் என்பது குறித்த ஒரு விமர்சன பார்வையை முன்வைத்தல் இவ்விடத்தில் அவசியமானதாகின்றது. ஒரு இலக்கிய அமைப்பையோ சமூக - பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த தக்க அணியையோ காத்திரமான வகையில் அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை என்பதே உண்மையாகும்.

சரியான கோட்பாட்டுத் தெளிவும் உறுதியான அமைப்பாக்க நடைமுறைகளில்லாமையும் இதற்கான அடிப்படை காரணமாகும். அவர் இறுதிவரை இயங்கிய அமைப்புகள் என்பவை உதிரிகளின் கூட்டு என்கின்ற அளவில் செயற்பட்டனவேயன்றிச் சமூகமாற்ற சக்திக்கான ஸ்தாபனக் கட்டமைப்புகளாகத் துலங்கவில்லை.

அவர் சுபத்திரனுடன் செயற்பட்ட அவரது ஆரம்பக்காலங்கள் சுபத்திரன் சண்முகதாசன் தலைமையிலான கம்பூனிஸ்ட் கட்சி மீது விரக்திப்பட்டுக் கவிதைகள் படைத்துக் கொண்டிருந்த துரதிஷடமானதொரு காலமாகும். உட்கட்சி போராட்டத்தைச் சரியான முறையில் முன்வைக்கவும் முடியாமல் வெளியேறி சுதந்திரமாக கட்சி கட்டமைப்பை உருவாக்கவும் முடியாமல் விரக்தியின் ஓலங்களாக அந்தக் கவிதைள் அமைந்தன. சுபத்திரன் கவிதைகளை அற்புதமாக தொகுத்தளித்த சாருமதி இக் கவிதைகளை தனிப்பகுதியாக வகைப்படுத்தியிருந்தமையையும் அவதானிக்க முடியும். அதன் மீது தீர்க்கமான சமூகவியல் அணுகுமுறையுடனான விமர்சனத்தை சாருமதியால் முன்வைக்க முடியவில்லை.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்குதலும் முக்கியமானதொன்றாகும். சாருமதி உருவாகிய தமது செயற்பாடுகளை முன்னெடுத்த மட்டகளப்பு சமூக அமைப்பினை ஏனைய யாழ்ப்பாண மலையக சமூக அமைப்புகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது சமூக முரண்பாடுகள் கூர்மையாடைந்த ஒன்றாக காணப்படவில்லை. அத்துடன் சாருமதியின் காலம் என்பதும் உழைக்கும் மக்கள் சார்பான இயக்கங்கள் தளர்ச்சியடைந்திருந்த காலகட்டமாகும். சுபத்திரன் அவர்களின் தற்கொலை சம்பவம் கூட இந்த பின்னணியில் வைத்து நோக்கப்பட வேண்டியதொ ன்றாகும். இக்காலத்துச் சூழலில் வைத்துதான் சாருமதியின் தவறுகளும் நோக்கப்பட வேண்டும். சாருமதியின் பலவீனத்தை விட அவரது சமூக பங்களிப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிபெற்று நிற்கின்றன என்பதே இங்கு பிரதானமான அம்சமாகும்.

வரலாற்றில் சமூகமாற்றத்திற்காக செயற்பட்ட இயக்கங்கள் தனிமனிதர்கள் இத்தகைய பலவீனங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் உட்பட்ட வந்துள்ளனர் என்பதையும் அவை காலத்தால் களையப்பட்டு பலமாக மாற்றப்பட்டு வெற்றிகளாக்கப்பட்டவையும் வரலாற்றை நேர்மையுடன் அணுகுபவர்களால் உணரமுடியும்.

முடிவுரை:-

கவிஞனாக ஆசிரியனாக சஞ்சிகையாளராக பரிணமித்த சாருமதியின் பங்களிப்பு மகத்தானது சாருமதி தன் காலக்கட்டத்தில் எதிர் நோக்க முரண்பாடுகளை கண்டு அதற்கு அடங்கி போகாமலும் அம்முரண்பாடுகளிலிருந்து விலகி நின்ற தத்துவ ஞானியாகவும் இல்லாமல் அவர் அம் முரண்பாடுகளை எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வினையும் முன்வைக்க முனைந்த சமூக விஞ்ஞானியாகவும் காணப்படுகின்றார். சாருமதியை பொறுத்த கனதியான ஆழமான ஆய்வுகள் வெளிவரவேண்டியது அவசியமானதாகும். அவரது வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட அடுத்த
தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும்.

இறுதியாக நாற்பத்தொரு வயதினை ஒருவரின் இறப்பு வயதாக கொள்வது துயரகரமானது அதிலும் உழைக்கும் மக்களின் பதாகையை உயர்த்திப் பிடித்த இம்மனிதனின் இறப்பு மிக மிக துயரமானது. சாருமதியின் பதாகையை தடம் புரளாது முன்னெடுத்து செல்வதே மாணவர்கள், நண்பர்களின் மிக முக்கியமான பணியாகும். இதுவே மறைந்த கவிஞருக்காய் நாம் ஆற்றும் அஞ்சலி

- லெனின் மதிவானம்