Showing posts with label KARNATAKA. Show all posts
Showing posts with label KARNATAKA. Show all posts

Sunday, 13 June 2021

AMIRDESHWARAR, TEMPLE , AMIRTHAPURAM ,KARNATAKA

 


AMIRDESHWARAR TEMPLE ,

AMIRTHAPURAM KARNATAKA


அமிர்தேஸ்வரர் கோயில்..

இக்கோயில்,கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன்கூடிய இக் கோயில் போசளர் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது.
இக்கோயில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம் ஒன்றினூடாகத் திறந்த பெரிய மண்டபத்துடன் இணைக்கப்பட்டள்ளது. நடுத்தர அளவினதாகிய இக் கட்டிடம், மண்டப அமைப்பிலும் அளவிலும், பேளவாடியில் உள்ள விஜயநகரக் கோயிலுடன் ஒப்பிடத் தக்கதாக உள்ளது.
திறந்த மண்டபம் 29 தூண் இடைவெளிகளையும், மூடிய பண்டபம் 9 தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. சுவரின் அடிப்பகுதி பழைய ஹோய்சாலப் பாணியில் அமைந்துள்ளது.


இக் கோயில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றில் இந்து இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. பல ஹோய்சாலக் கோயில்களில் காணும் நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட சிறிய சிற்பப் பலகைகள் போலன்றி இவை பெரியவையாக உள்ளன. தென் புறச் சுவரில் காணப்படும் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும், 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற ஹோய்சாலச் சிற்பியும் கட்டிடக் கலைஞருமான ருவாரி மலிதம்மா இக் கோயிலின் மண்டபக் கூரைச் சிற்பங்களில் பணிபுரிந்ததன் மூலமே தனது தொழிலில் காலடி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
அமைவிடம்,
சிக்மகளூரிலிருந்து 67 கி. மீ. தொலைவிலும், ஹசனிலிந்த்து 110 கி. மீ, தொலைவிலும், சிமோகாவிலிருந்து 35 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோயில் ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் படைத்தலைவரால் துங்கபத்திரை ஆற்றாங்கரையில் 1196ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது
Gengaraj Ramaraj

Sunday, 14 June 2020

AMIRDESWARAR TEMPLE ,IN KARNATAKA








AMIRDESWARAR TEMPLE ,IN KARNATAKA
        • அமிர்தேஸ்வரர் கோயில்..

இக்கோயில்,கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன்கூடிய இக் கோயில் போசளர் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது.

இக்கோயில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம் ஒன்றினூடாகத் திறந்த பெரிய மண்டபத்துடன் இணைக்கப்பட்டள்ளது. நடுத்தர அளவினதாகிய இக் கட்டிடம், மண்டப அமைப்பிலும் அளவிலும், பேளவாடியில் உள்ள விஜயநகரக் கோயிலுடன் ஒப்பிடத் தக்கதாக உள்ளது.

திறந்த மண்டபம் 29 தூண் இடைவெளிகளையும், மூடிய பண்டபம் 9 தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. சுவரின் அடிப்பகுதி பழைய ஹோய்சாலப் பாணியில் அமைந்துள்ளது.

இக் கோயில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றில் இந்து இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. பல ஹோய்சாலக் கோயில்களில் காணும் நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட சிறிய சிற்பப் பலகைகள் போலன்றி இவை பெரியவையாக உள்ளன. தென் புறச் சுவரில் காணப்படும் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும், 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற ஹோய்சாலச் சிற்பியும் கட்டிடக் கலைஞருமான ருவாரி மலிதம்மா இக் கோயிலின் மண்டபக் கூரைச் சிற்பங்களில் பணிபுரிந்ததன் மூலமே தனது தொழிலில் காலடி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

அமைவிடம்,
சிக்மகளூரிலிருந்து 67 கி. மீ. தொலைவிலும், ஹசனிலிந்த்து 110 கி. மீ, தொலைவிலும், சிமோகாவிலிருந்து 35 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இக்கோயில் ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் படைத்தலைவரால் துங்கபத்திரை ஆற்றாங்கரையில் 1196ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது






ஷிமோகாவிலிருந்து அதிகாலையிலேயே கிளம்ப வேண்டுமென்பது திட்டம். ஆனால் யானா குகையிலிருந்து வந்து சேர்வதற்கே பதினொரு மணி கடந்துவிட்டது. அதற்குப் பிறகும் ஒரு கும்பல் அமர்ந்து இந்தியாவை உய்விப்பதைப்பற்றிய ஆழமான விவாதங்களில் ஈடுபட்டிருந்தது எனக்கு மறுநாள் காலையில்தான் தெரியவந்தது. தூக்கத்தை வைத்து விளையாடக்கூடாது என்பது என் எண்ணம் என்பதால் நான் உடனே படுத்துத் தூங்கிவிட்டேன். இரு ஓட்டுநர்களும் இரவில் இரண்டு மணிநேரம் தான் தூங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் மறுநாள் காலையில் தான் தெரிந்தது.

வழக்கறிஞராகிய நண்பர் சக்தி கிருஷ்ணன் தூங்கும் வழக்கம் உடையவரா என்பதே எனக்கு சந்தேகம். ராஜமாணிக்கம் பகலில் அரசியலும் இரவில் இலக்கியமும் என்று வாழ்பவராதலால் அவருக்கும் தூக்கம் பெரிதாகத் தேவைப்படுவதில்லை. வழக்கமாக நாங்கள் ஓட்டுநர்களை வாடகைக்கு வைப்பதே வழக்கம். அவர்கள் பயணங்களில் ஓட்டுநர் வேலைமட்டுமே செய்யவேண்டும். மலையேறுவதற்கெல்லாம் வரக்கூடாது. அவர்கள் நன்கு துயில்வதையும் கவனத்தில்கொள்வோம். இப்போதெல்லாம் இந்த நெறிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கின்றன. உரிமையாளரே ஓட்டும் வண்டிகளில் செல்வதனால் செலவு குறைகிறது. ஆனால் ஆபத்து கூடுகிறது.



கிளம்பி, காரில் ஏறும்போது எட்டு மணியாகிவிட்டது. மணிகண்டனுக்கும் ஷிமோகா ரவிக்கும் மைசூரிலிருந்து மாலை மூன்றரை மணிக்கு ரயில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனக்கு ஈரோட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு இரவு பத்தரை மணிக்கு ரயில். போய்விடலாம், ஒன்றும் பிரச்னையில்லை என்றார் கிருஷ்ணன்.

ஓய்வாக வழியிலேயே காலை உணவை அருந்திவிட்டு காரில் சென்றோம். இசை பற்றியும் இலக்கியம் பற்றியும் விவாதங்கள். வழக்கமாக ஒரே வண்டியில் பயணம் செய்யும் போது விவாதங்களுக்கொரு தொடர்ச்சி இருக்கும். இரு வண்டிகள் என்னும்போது நான் வண்டிகளில் மாறி மாறி ஏறிக்கொண்டேன்.ஆகவே ஒரு தொடர்ச்சியின்மை எப்போதும் இருந்து கொண்டிருந்தது. எங்கள் விவாதங்கள் பெரும்பாலும் விளையாட்டுத் தன்மை கொண்டதாகவும், தன்னியல்பாகவே தீவிரமடைவதாகவும் இருக்கும். அதாவது ஏதாவது சொல்வதற்கிருந்தால் மட்டுமே தீவிரமான விவாதம் நிகழவேண்டுமென்பது விதி.



ஒரு முழு நாளும் காருக்குள் இருந்து கொண்டிருப்பது என்பது உண்மையில் ஒரு அரிய அனுபவம். அந்தக் கார் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம்தான் அங்கே அமரச்செய்கிறது. காரின் நான்கு சன்னல்களையும் நான்கு ஒளித்திரைகளாக அமைத்து அதை ஓரிடத்திலே நிறுத்தி அதற்குள் பகல் முழுக்க அமர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னால் நம்மால் முடியுமா என்ன?

உண்மையில் கார் நவீனகாலகட்டத்தின் ஓர் அற்புதம். இத்தனை சிறிய உலோகக்கோளத்திற்குள் இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக அமர்ந்திருக்கும் வாய்ப்பு மனித குலத்தில் முன்னால் எவருக்கேனும் கிடைத்திருக்கிறதா என்பதே ஆச்சரியம் தான். இருக்கலாம், பெரிய கோட்டைகளில் காவல்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் சிறிய குமிழிகள் மூன்று நான்கு பேர் அமர்ந்து கொள்ளும் வசதி கொண்டவை. கார்ப் பயணங்கள் குடும்ப ஒற்றுமைக்கு இயல்பாக உதவக்கூடியவை. அத்தனை சிறிய பகுதிக்குள் ஒரு குடும்பம் முழுநாளும் அமர்ந்திருக்கையில் அவர்கள் ஒருவரை ஒருவர் மிக நெருங்கி வருகிறார்கள். யார் கண்டது? சில குடும்பங்களில் அப்படி நெருங்கி வருவதே மேலும் கசப்பை உருவாக்குவதாக அமையலாம்.



வழியில் அமிர்தேஸ்வர் ஆலயத்தை பார்த்துவிட்டு செல்லலாம் என்பது கிருஷ்ணனின் திட்டம். ஒருநாள் முழுக்க எதையுமே பார்க்காமல் செல்வது அளிக்கும் சலிப்பிலிருந்து தப்புவதற்காக. சிக்கமங்களூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அமிர்தபுரா கர்நாடகத்தில் ஒரு முக்கியமான ஆலயம். தமிழகத்தில் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் அறுபதாண்டு நிறைவுக்கும் எண்பதாண்டு நிறைவுக்கும் சென்று வழிபட வேண்டிய ஆலயமாக இருக்கிறது. அதைப்போன்ற ஒரு ஆலயம் அமிர்தேஸ்வரர்.

1196- ல் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வீரவல்லாளரின் தளகர்த்தராகிய அமிர்தேஸ்வர தண்டநாயகரால் கட்டப்பட்டது இந்த ஆலயம் என்று சொல்லப்படுகிறது. இன்றும் புகழ் பெற்ற ஆலயம் என்று சொல்லும் போது சற்று புதிய ஆலயமாக இருக்கும் என்ற எண்ணம் எப்படியோ வந்து கொண்டிருந்தது. ஆனால் இறங்கி முதல் பார்வையிலேயே ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணமாகிய ஒரு ஆலயத்தின் முன் வந்து நிற்பதை அறிந்தோம். திரிகுடாச்சல வடிவமுடைய கோயில் இப்போது ஒரு கோபுரமே உள்ளது.



ஹொய்ச்சாள பாணி கோயில்களின் வழக்கப்படி மொத்தக் கோயிலும் ஒரு பெரிய நகை போல ஒவ்வொரு சிறு பகுதியும் நுணுக்கமான சிற்பங்கள் அடர்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயம். சிற்பக்குவியல். சிற்பம் பூத்த மரம். பிற ஆலயங்களிலிருந்து உடனடியாக மாறுபட்டுத் தோன்றியது இதன் அடித்தளம் முழுக்க கோபுரங்கள் செறிந்திருப்பது போல் செதுக்கப்பட்டிருந்தமைதான். நூற்றுக்கணக்கான கோபுரங்களால் வானில் தாங்கி நிறுத்தப்படும் ஓர் ஆலயம் போல் அது தோன்றியது. கோபுரங்கள் நாகர திராவிட பாணி அமைப்பைச் சார்ந்தவை.

இவ்வாலயத்தின் சுற்றுச் சுவரில் மகாபாரதமும் ராமாயணமும் நுணுக்கமான சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அக்காலத்தைய காமிக்ஸ் நூலைப்படிப்பது போல இத்தகைய ஓவியங்களில் அந்த சிறிய பகுதியை அவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதம் ஆச்சரியமூட்டுவது. எந்த இடமும் வீணடிக்கப்படாமல் பிம்பங்கள் ஒன்றுக்குள் ஒன்று செருகப்பட்டு ஒரு படலமாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தனை சிற்பங்களிலும் உயிரசைவு ததும்பிக் கொண்டிருந்தது..புகழ்பெற்ற ஹொய்ய்ச்சாள சிற்பியான ரேவூரி மல்லித்தாமா செதுக்கிய தொடக்க காலக் கோயில் இது என்று சொல்லப்படுகிறது



முகபாவனைகள் மிகக்கூரியவையாக அமைந்திருந்தன. ராவணனின் கம்பீரமும், அனுமனின் விரைவும், ராமனின் நிதானமும் இத்தனை சிறிய அளவுக்குள் எழுந்து வருவதென்பது சிற்பக்கலையில் ஓர் அற்புதமே. வானரங்கள் தாண்டும் கடல் நான்கு கணு அகலமே கொண்ட ஒரு பட்டையாக செதுக்கப்பட்டிருக்கும் கற்பனை. அதில் முதலைகளும் மீன்களும் நாவாய்களும் நீந்திக்கொண்டிருக்கின்றன.

அமிர்தேஸ்வரா ஆலயத்தில் பிரம்மாவின் சன்னிதி மிக முக்கியமானதாக பக்தர்களால் கருதப்படுகிறது. அங்குதான் ஆயுளுக்கான பூசைகள் நடைபெறுகின்றன. ஆனால் அதைவிட எனக்கு முக்கியமானதாகத் தோன்றியது. அங்கிருக்கும் சரஸ்வதியின் சன்னிதி. முதற்பார்வையில் ஒரு திடுக்கிடலை உருவாக்கியது அச்சிலை. சரஸ்வதிக்கு அத்தனை பெரிய அழகிய முதன்மைச் சிற்பத்தை நான் பார்த்ததில்லை.

 



கருவறையில் அமர்ந்திருக்கும் அன்னை கரிய பளபளப்புடன் தோன்றினாள். வழக்கமான சரஸ்வதி சிற்பங்களில் இருக்கும் நளினமும் மென்மையும் இதில் இல்லை. துர்க்கைகளுக்குரிய கம்பீரமும் நிமிர்வும் கொண்ட தோற்றம். அமுதகலமும் எழுத்தாணியும் படைக்கலங்களும் ஏந்திய கைகள். கலை இந்த நிமிர்வுடன் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. குழையும் கலை உலகை வளைத்து அள்ள முடியாது. நிமிர்ந்து வெல்லும் கலையே காலத்தை துளியென காலடியில் உணரும் ஆற்றல் கொண்டது.

உண்மையில் இப்பயணத்தில் எதைத் தேடி வந்தேனோ அதை இங்கு இந்த சாரதையின் முன்னால் நான் அடைந்தேன். மூகாம்பிகை அன்னையை சரஸ்வதியாகவும் வழங்கும் வழக்கம் கேரளத்தில் உண்டு. நாராயண குரு சாரதாம்பிகையை வர்கலாவில் பிரதிஷ்டை செய்திருக்கிறார். சாரதாஷ்டகம் என்ற பெயரில் அன்னையைத் துதித்து ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். கேரளத்தில் கல்வித் தொடக்கம் நிகழ்த்துவதற்கான முக்கியமான ஆலயமாக இன்று அது உள்ளது.



கல்விக்கும் கலைக்குமான அன்னை. மூன்று அன்னையரில் என் நோக்கில் அவளே முதன்மையானவள் ஆட்டுவிக்கும் மோகினி அரவணைக்கும் அன்னையும் பிரியாத் துணைவியும் ஆனவள். அங்கிருந்து தொடங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.

பெலவாடியை நினைவுறுத்துவது அமிர்தபுரியின் ஆலயம். பெலவாடியின் தனிச்சிறப்பே அதில் உள்ள அழகிய தூண்களின் பளபளப்புதான். ஹொய்ச்சாள கட்டிடக்கலை ஐந்து சிறப்பம்சங்களைக் கொண்டதென்று சொல்லலாம்.

சோப்புக்கல்லில் செதுக்கப்பட்ட நுண்சிற்பங்கள் இடவெளியின்றிசெ செறிந்த புறக்கட்டுமானம்.
வட்ட வடிவமான உட்குடைவுக் கூரை கவிழ்ந்த முகமண்டபங்கள்.
உருளையிலிட்டுச் சுழற்றி உருவாக்கப்பட்ட அடுக்கடுக்கான வட்டங்களால் ஆன பளபளக்கும் தூண்கள்.
திரிகுடாச்சலம் என்னும் மூன்று கோபுர அமைப்பு கொண்ட கருவறை
உயரமற்ற மேலே குடத்தில் சென்று முடியும் தட்சிண-நாகர என்று சொல்லப்படும் பணியிலான கோபுரங்கள்.
இவற்றில் விழிகளில் என்றும் தங்கி நிற்பது இத்தூண்களே. கல்லில் நீரை கொண்டு வந்திருக்கும் வித்தை என்று இவற்றைச் சொல்லலாம். கரிய சலவைக் கல் உருட்டி வழுவழுப்பாக்கப்பட்டு, கண்ணாடிக்கு நிகரான ஒளியேற்றப்பட்டு உருவான தூண்கள் இவை . அடுக்கடுக்காக  குளிரொளியுடன் நிறைந்த தூண்களின் நடுவே நின்றிருக்கையில் குளிர்ந்த நீர்ச்சுனை ஒன்றுக்குள் புகுந்துவிட்ட உணர்வை அடைந்தேன். நான்கு புறமும் சாய்மானங்கள் கொண்ட பெரிய திண்ணையில் அமர்ந்து இத்தூண்களைப்பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெரிய தியான அனுபவம் போல்

 

111

அமிர்தேஸ்வர லிங்கத்தை வணங்கி அங்கிருந்து கிளம்பினோம். எண்ணியது போலவே மணிகண்டனும் ஷிமோகா ரவியும் மைசூரில் ரயில் பிடிக்கவில்லை. நாங்கள் உள்ளே நுழையும்போதே நான்கு மணி ஆகிவிட்டிருந்தது. மதிய உணவை உண்பதற்கு அவ்வளவு பிந்திவிட்டது. ஒர் அசைவ உணவகத்தில் சாப்பிட்டோம். வழக்கமாக எங்கள் பயணத்தில் அசைவ உணவு முழுமையாகத் தவிர்க்கப்படும் – செலவு கருதி. இம்முறை அசைவப் பிரியரும் உணவின்றி வாழ்வில்லை என்ற கொள்கை கொண்டவருமாகிய செல்வேந்திரன் ஒவ்வொரு முறையும் அசைவ உணவிற்காகத் துடித்துக் கொண்டிருந்தமையால் அனேகமாக எல்லா நாட்களிலுமே செலவேரிய அசைவ உணவுகளை உண்டோம்.

மைசூரிலிருந்து ஈரோடுக்கு சத்தியமங்கலம் வழியாக செல்ல வேண்டும். ”செல்ல முடியும். ஆனால் சாலை நெரிசலின்றி இருக்கவேண்டும்” என்றார் கிருஷ்ணன். ”இருக்க வாய்ப்பில்லை” என்று சேர்த்துக்கொள்ளாவிட்டால் அவர் கிருஷ்ணனே அல்ல. சத்தியமங்கலத்தை அணுகியபோது மகிழ்ச்சியுடன் “செல்ல முடியாது .சாலை நெரிசலாக இருக்கிறது” என்றார். சக்தி கிருஷ்ணன் காரிலேயே திருச்சி வந்து பேருந்தை பிடிக்கலாம் என்று திட்டமிட்டேன்.

unnamed

ஆனால் எண்ணியதை விட விரைவாக போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இரவு பத்து மணிக்கெல்லாம் ஈரோடு ரயில் நிலையம் வந்துவிட்டோம் கோவைக்கும் திருப்பூருக்கும் செல்லும் கும்பல் சத்தியமங்கலத்தை தாண்டிய உடனே பிரிந்தது. சக்தி கிருஷ்ணன் என்னை ஈரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். ரயிலில் ஏறி படுத்தவுடன் முதலில் விழிகளுக்குள் எழுந்து வரும் சித்திரம் எதுவென எண்ணினேன். எண்ணியது போலவே அது சாரதையின் கரிய புன்னகைதான்.



.

Friday, 17 April 2020

SOWMYA ,KARNATAKA SINGER BORN 1969 APRIL 16


SOWMYA ,KARNATAKA SINGER 
BORN 1969 APRIL 16



.சௌம்யா (பி. ஏப்ரல் 16, 1969) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
இவர் முதலில் தனது தந்தை ஸ்ரீநிவாசனிடமிருந்து ஆரம்பகால இசைப் பயிற்சி பெற்றார். தொடர்ந்து எஸ். இராமநாதனிடமும், டி. முக்தாவிடமும் இசை பயின்றார்.

கலை வாழ்க்கை
வேதியியல் பட்டதாரியான இவர், 'இந்திய இசையில்' முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார்; இசை பற்றிய சொற்பொழிவுகள், பட்டறை, கற்பித்தல் நிகழ்த்தி வருகிறார். இவர் அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, கனடா, ஆஸ்திரேலியா, ஃகொங்கொங், சிங்கப்பூர், நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.

விருதுகள்[1]
இசைப் பேரொளி, 1996; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்
யுவ கலா பாரதி, 1990; வழங்கியது: பாரத் கலாச்சார்
நாத ஒலி, 2001; வழங்கியது: நாத இன்பம்
எம். எல். வி. விருது (சிறந்த இளம் பாடகர்), 1986; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
டி. கே. பட்டம்மாள் விருது, 1988; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
அரியக்குடி அறக்கட்டளை விருது, 1996; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
சிறந்த பெண் பாடகர் (வளர்ந்த கலைஞர்), 2000; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
சிறந்த பெண் பாடகர் (வளர்ந்த கலைஞர்), 2001; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
சங்கீத சூடாமணி விருது, 2010 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை

Tuesday, 1 May 2018

CAVE TEMPLES OF KARNATAKA







CAVE TEMPLES OF KARNATAKA



இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்..

கர்நாடக மாநிலம் முழுக்கவே பல்வேறு சிற்பக்கலைகள் ,குகைகள் கொண்ட கோவில்கள் மிக அதிகம்.. இதில் சாலுக்கிய மன்னர்கள்களின் ராஜ்ஜியத்தின் தலைநகரமான பாதாமி , பட்டாடக்கல்லு , அய்ஹோலே போன்ற ஊர்கள் மிக அருமை..இதில் சிறப்பு என்னவென்றால் இது 5 முதல்-8ம் நூற்றாண்டுகளில் வம்சாவளிகளாக கட்டப்பட்டதாகும்..
முதலில் நாங்கள் சென்ற பாதாமி(பதாமி) ஐ பார்ப்போம்..
திராவிடர் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட குகை கோவில்கள் கொண்ட நகரம்.. இந்த சிறு நகரம் முழுக்க பாதாம் நிறத்தில்( கரடுமுரடான standstone பாறைகள் நிறைந்து இருப்பதால் இந்த ஊருக்கு பாதாமி என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்..பதாமி என்றும் கூறுகிறார்கள்..
இந்த குகை கோவில் சிற்பங்கள், சாலுக்கிய மன்னன், புலிகேசி -1 கி.பி.543ம் ஆண்டு பாதாமிக்கு தலைநகரத்தை மாற்றிய போதிலிருந்து அமைக்கப்பட்டுள்ளன.. இந்த குகை கோவில்களை அவர்கள் உருவாக்கியது, இயற்கையாகவே தென்னகத்தில் இருந்த படை எடுத்து வந்த பல்லவ நாட்டு எதிரிகளிடம் இருந்து காத்து கொள்ள அமைந்தது சிறப்பாகும்..

மிகப்பெரிய sandstone மலையை ,மிக எளிய பொருட்களை கொண்டு குடைந்து சிற்பங்களை அமைத்துள்ளது மிக அற்புதம்..இதில் standstone என்பது சற்று sensitive ஆன கற்களாகும்.. இதை சற்று வேகமாகவோ,தவறாகவோ செதுக்கினால்,கல் இரண்டாக உடைந்து போக வாய்ப்புகள் அதிகம்.. இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் அங்கிருக்கும் சிற்பங்கள் , தூண்கள் மற்றும் குடைந்தெடுத்த குகைக்குள் அமைக்கப்பட்டிருப்பது மிக அழகு.. மொத்தம் 4 குகை கோவில்கள் அருகருகே இருக்கின்றது.. இதில் மேல் ஏறுவது சிரமம் ஏதுமில்லை..ஆபத்தும் இல்லை.. யார் வேண்டுமானாலும் சென்று வரலாம்..

கீழே ஒரு அகஸ்த்தியர் தீர்த்தக்குளமும் , அதில் பழங்கால புத்தநாதர் கோவிலும் அமைந்திருக்கின்றன.. இதை மேலிருந்து பார்த்தால்,பச்சை நிற குளத்தில் இருப்பது மிக அழகாக இருக்கின்றது..
குகைக்கு மேலே 18ம் நூற்றாண்டுகளில் திப்பு சுல்தான் அமைத்த கோட்டை இருக்கின்றது..ஆனால் மேலே சென்று வருவது சிரமம் என்பதால் நாங்கள் செல்லவில்லை..
இந்த ஊருக்குள் நுழையும் போதே அங்கிருக்கும் பிரம்மாண்ட பாறைகள் , சந்து சந்தாக குறுகிய பாதைகள் கொண்ட தெருக்கள் , மிக பழமையான வீடுகள் , தொழில்நுட்பங்கள் பெரிதாக இல்லாத பழங்கால கிராம வாழ்க்கை , இவற்றையெல்லாம் பார்க்கும் போது நமது எண்ணங்கள் , கற்பனைகள் பின்னோக்கி பயனிக்கும் என்பதில் சந்தேகமில்லை..
தகவல்கள்:
நாங்கள் சுற்றி பார்த்த வரையில் ரோடுகள் இந்த ஏரியாவை பொறுத்தவரையில் மோசமே.. எங்கேயும் வழிகாட்டிகள் கிடையாது.. சுற்றியும் 1960 களில் பார்ப்பது போன்ற பழைய கிராமங்களே இருக்கின்றன..நாங்கள் பாதாமிக்கு வந்து சேர இருட்டி விட்டது , கிட்டதட்ட 20-30kmக்கு ஆள் நடமாட்டமே இல்லை.. பயணமும் சற்று த்ரில்லிங்காக இருந்தது..
அங்கிருக்கும் கிராம மக்களும் பழமை மாறாமல் மராத்தி மக்களை போல் உடை அனிந்து இருக்கின்றனர்..அங்கே மராட்டி மொழியே அதிகம் பேசப்படுகின்றது...இவை அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது..

பதாமி நகரத்தை தவிர எங்கேயும் பெரிய வீடு என்று ஒன்று கூட இல்லை..அனைத்தும் சிறிய வீடுகளே..தொழில்கள் எதுவும் சிறப்பாக இருப்பதாக தெரியவில்லை , விவசாயம்(வெங்காயம் , கம்பு , சோளம் , ராகி, செவ்வந்தி பூ), எருமை மாடு மேய்பது மட்டுமே அதிகம் தெரிந்தது..
கோவில்,குகைகளை அரசாங்கம் சுத்தமாகவே வைத்துள்ளது.. இருந்தாலும் செல்லும் வழியெல்லாம் மிகக்குறுகிய ரோடுகள் , அசுத்தமானவையாக இருக்கின்றன..
இந்த மூன்று ஊர்களையும் ஒரே நாளில் பார்த்து முடிக்கலாம்.. சிற்பக்கலை , வரலாற்றில் விருப்பம் அதிகம் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் தங்கியிருந்து பார்க்கலாம்..
இந்த ஊர்கள் 30 கி.மி. சுற்றலவில் இருக்கின்றன..
இந்த ஊர்களுக்கு செல்லும் போது பதாமி யில் மட்டுமே தங்க முடியும்.. மற்ற இரண்டு ஊர்களில் எந்த வசதியும் இல்லை... உணவகங்கள் கூட பதாமியில் மட்டும் தான் உள்ளது.. மற்றபடி ஏதாவது தேவையென்றால் பதாமியிலேயே வாங்கிக்கவும்.. இல்லையென்றால் சிரமம் தான்..
விடுதிகளை பொறுத்தவரையில் இரண்டு மூன்று சுமாரானவை இருக்கின்றன.. ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இருக்கின்றன..ஆனால்,அவைகள் சற்று outer ல் உள்ளாதால் முடிந்தளவு நேரமாகவே சென்று விடுவது நல்லது..
இந்த இடங்களுக்கு சென்று வர நினைப்பவர்கள் கூடவே hampi ஐயும் வரும் போது பார்த்துவிட்டு வருவது சிறந்தது..
இந்த இடங்கள பெங்களூருவிலிருந்து வடக்கே 513 கி.மி.கள் வரும்.. பதாமியிலிருந்து ஹம்பிக்கு(பெங்களூர் வழி) கிட்டதட்ட 120 கி.மி. வரும்..
பெங்களூரிலிருந்து ஒரு ரயில் பதாமிக்கு செல்கிறது.( golgumbaz express)
இவ்விடங்களை வாகனங்கள் இருந்தால் நாமே சென்று பார்த்து வரலாம்.. இருந்தாலும் கைடுகள் வைத்துக்கொள்வது சிறந்தது..
இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்.