Showing posts with label KUSHPOO. Show all posts
Showing posts with label KUSHPOO. Show all posts

Thursday, 15 October 2020

KUSHPOO ,THE EVER GREEN LEGEND

 


KUSHPOO ,THE EVER GREEN LEGEND

`அரசியல் கேள்விகள் மட்டும் இப்போ வேண்டாமே' என்ற வேண்டுகோளுடன் பேசினார் குஷ்பு.



நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் குஷ்புவுக்கு, `அண்ணாத்த' 200-வது படம். `பா.ஜ.க-வில் இணையப்போகிறார்' என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. இந்த நிலையில், உத்தரபிரதேசம் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பி.ஜே.பிக்கு எதிராக ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இரண்டு தலைமுறைகள் கடந்தும்கூட எவர்கிரீன் நாயகியாக இருக்கும் குஷ்புவிடம் எப்போது பேட்டிக்கு அணுகினாலும் சுவாரஸ்யமான பதில்களுக்குப் பஞ்சமிருக்காது.

'அண்ணாத்த' படக்குழுவினருடன் குஷ்பு

'அண்ணாத்த' படக்குழுவினருடன் குஷ்பு

தற்போது டெல்லியில் இருப்பவரிடம் பேசினோம். `அரசியல் கேள்விகள் மட்டும் இப்போ வேண்டாமே' என்ற வேண்டுகோளுடன் பேசினார்.



``நான் நடிச்ச படங்கள் பத்தி எப்போதும் கணக்கு வெச்சிருக்கிறதில்லை. `அண்ணாத்த' என்னோட 200-வது படம்னு நீங்க சொல்லியிருக்கும் தகவல் எனக்கு இன்ப அதிர்ச்சி. அதுவும், ரஜினி சாருடன் பெரிய பேனர்ல நடிக்கிற இந்தப் படம் என் கரியர்ல முக்கியமான அடையாளத்தைக் கொடுத்திருக்குனு நினைக்கிறப்போ பெருமையா இருக்கு. அப்பா இல்லாத குடும்பம். 16 வயசுல குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை. வைராக்கியத்துடன் நடிச்சேன்.


குஷ்பு


குஷ்பு

பெண் குழந்தைகளுக்குத் தாயின் அரவணைப்பு ரொம்ப முக்கியம். கணவர் சினிமாவுல வேலை செய்றதால, மகள்களுடன் முழுமையா நேரம் செலவிட நினைச்சேன். அதனாலதான், `பெரியார்' படத்துக்குப் பிறகு சினிமாவுல இருந்து ஒதுங்கியிருந்தேன். என்னோட விருப்பத்துக்கு ஏற்ப சின்னத்திரையில் மட்டும் அவ்வப்போது வேலை செஞ்சேன். ஆனாலும், மக்கள் என்மேல காட்டும் அன்பு குறையாதது எனக்கே ஆச்சர்யம்தான். இதை நான் இழக்க விரும்பலை. படம் பண்ணாம இருந்தாலும்கூட பரவாயில்லை. எனக்கு முக்கியத்துவம் இல்லாத ரோல்கள்ல நடிக்கக்கூடாதுனு உறுதியா இருக்கேன். `அண்ணாத்த' படத்தில் என் நடிப்பு பெரிசா பேசப்படும்" என்றவர், தனது நாஸ்டாலஜி சினிமா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.



- `` `தர்மத்தின் தலைவன்' ரிலீஸ் டைம் அண்ணாசாலையில பெரிய பேனர் வெச்சிருந்தாங்க. அதை ஒருநாள் பார்க்கிறப்போ, ரஜினி, பிரபு, சுஹாசினி மூவரின் போட்டோதான் பிரதானமா இருந்துச்சு. `அய்யய்யோ! இந்தப் படத்துல நாம நடிச்சதே தெரியாமப் போச்சே. தெலுங்கு, கன்னடத்தில் நம்ம படங்கள் வெள்ளி விழா கொண்டாடுது. இனி தமிழில் பேசப்படக்கூடிய ரோல்லதான் நடிக்கணும்'னு அந்த இடத்துல முடிவு பண்ணினேன். நிறைய ஹிட்ஸ் கிடைச்சது.


குடும்பத்தினருடன் குஷ்பு


குடும்பத்தினருடன் குஷ்பு

- நான் எங்க போனாலும் பெரிய ஹீரோவுக்கு இணையான கூட்டம் கூடும். ஒருசமயம், `குஷ்புவுக்குக் கோயில் கட்டியிருக்காங்க'னு வைரலா நியூஸ் பரவுச்சு. நடிப்புக்காக ஓடின வேகத்துல அதைப் பெரிசா எடுத்துக்கலை. மூணு வருஷத்துக்குப் பிறகுதான், அந்த விஷயத்தை உணர்ந்தேன். ஆனா, எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியலை. `மக்கள் ஏன் நம்ம மேல இவ்வளவு அன்பு காட்டுறாங்க?'னு எனக்குள் கேள்வி எழுந்துச்சு. மக்களின் அன்புக்கு உண்மையா இருக்கணும்னு தமிழில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.


- அதற்காக, மற்ற மொழிகளில் மிகச் சிறந்த வெற்றிப்பட வாய்ப்புகளையும் மறுத்தேன். கன்னடம் மற்றும் தெலுங்கிலும் `சின்னதம்பி' படம் ரீமேக் செய்யப்பட, முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்துச்சு. அப்போ `அண்ணாமலை' மற்றும் `சிங்காரவேலன்'னு முக்கியமான ரெண்டு வாய்ப்புகள் வரவே, அவற்றையே தேர்வுசெஞ்சேன்.


- `நாட்டாமை' படத்தின் `கொட்டாப்பாக்கு' பாடல் ஷூட்டிங் ஊட்டியில் நடந்துச்சு. அப்போ மழை வரவே, மொத்த யூனிட்டும் கிளம்பிட்டாங்க. சரத்குமார் சாரின் புது சஃபாரி வண்டியில் அவருடன் நானும் கே.எஸ்.ரவிக்குமார் சாரும் கொட்டும் மழையில் உலா வந்தோம். ஒரே குடையின் கீழ், ஒரே தட்டில் மூணு பேரும் சாப்பிட்டோம். அதில், அன்பு நிறைந்திருந்துச்சு. `காதலன்' பட `பேட்ட ராப்' பாடலுக்கு மூணு பேரும் மழையில் டான்ஸ் ஆடினோம்.



கமலுடன் குஷ்பு

கமலுடன் குஷ்பு

-`ஜாதி மல்லி' ஷூட்டிங் தருணம். கே.பாலச்சந்தர் சாரும் நானும் ஒரே ஜீப்ல ஊரை வலம்வந்ததுடன், கார்ட்ஸ் விளையாடியதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். `கேப்டன் மகள்' ஷூட்டிங் ஸ்பாட். பாரதிராஜா சாருக்கு பாம்புன்னா ரொம்பவே பயம்; எனக்கு பயமில்லை. ஒருமுறை, ஷூட்டிங்குக்காக கொண்டுவரப்பட்ட ரெண்டு பாம்புகளை என் ரெண்டு கையிலயும் பிடிச்சுகிட்டு, அவரைத் துரத்தி பயமுறுத்தினேன். `நான் ஹார்ட் அட்டாக்ல செத்துப்போயிட்டா, அதுக்கு நீதான் காரணம்'னு சொல்லிச் கத்திகிட்டே யூனிட்டை வலம் வந்தார்.



- பி.வாசு சார் படங்கள்ல அதிகம் நடிச்சேன். கொடைக்கானல்ல `நடிகன்' பட ஷூட்டிங் நடக்குது. லேக்ல காலைநேரம் படர்ந்திருக்கும் பனி, ஆறு மணிக்குச் சூரிய ஒளி பட்டதும் மறைஞ்சுடும். லொக்கேஷனுக்கு பத்து நிமிஷம் தாமதமா போயிட்டேன். மொத்த யூனிட் முன்னாடியும், வாசு சார் என்னைக் கண்டபடி திட்டினார். அவமானத்துல ரொம்ப அழுதேன். அவர் மேல எனக்குக் கோபம் போகச் சிலநாள் ஆச்சு. ஒருநாள் அவர் வருவதைப் பார்த்து முகத்தைக் கோபமா வெச்சுகிட்டு, புக் படிச்சுகிட்டு இருந்தேன். பக்கத்துல வந்தவர், தலைகீழா இருந்த புக்கை திருப்பி வெச்சு, `இப்போ படி. நல்லா புரியும்'னு சொன்னார்.



'பெரியார்' படத்தில் குஷ்பு

'பெரியார்' படத்தில் குஷ்பு

- ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் மாதிரியே, ஒரு துணியை வாயில கடிச்சுகிட்டு, மத்தவங்ககிட்ட அவர்போலவே பேசி இமிடேட் பண்ணினேன். எல்லோருக்கும் ஆச்சர்யம். திரும்பிப் பார்த்தா, வாசு சார் நிற்கிறார். நான் ஷாக் ஆக, அவர் சிரிச்சுட்டார்.


- எனக்கு முட்டை மஞ்சள் கரு ரொம்பப் பிடிக்கும். அதனால விஜயகாந்த் சார் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டுட்டு, மஞ்சள் கருவை எனக்குக் கொடுப்பார்.


- `குஷ்புவுக்குக் காரமா சாப்பிட்டா அழுகை வந்திடும். காரமில்லாத சாப்பாட்டைக் கொடுங்க'னு எனக்காக சத்யராஜ் சார் மெனக்கெடுவார்.

.



- ராஜீவ் காந்தி மரணமடைந்த நேரம், `கிழக்குக்கரை' ஷூட்டிங் நடக்குது. டிராவல், சாப்பாடுனு எந்த வசதியும் இல்லாம ஷூட்டிங் கெஸ்ட் அவுஸ்ல இருந்தோம். அந்த நாலு நாளுமே, வெறும் பிரெட், முட்டைதான் சாப்பாடு. இப்படி நூற்றுக்கணக்கான நினைவுகளைச் சொல்லலாம். அந்த மாதிரியெல்லாம் இன்றைய சினிமா சூழலில் நடக்குமா? எங்க காலத்தில் இருந்த ஒற்றுமை, இந்தக் காலத்துல நடிகர்களிடம் இருக்குமான்னு தெரியலை. எங்க காலத்தை சினிமா உலகின் பொற்காலம்னு சொல்வேன்." - உற்சாகம் குறையாமல் பேசுபவருக்கு, நிறைவேறாத சினிமா ஆசை ஒன்றும் இருக்கிறதாம்.


மணிரத்னத்துடன் குஷ்பு


மணிரத்னத்துடன் குஷ்பு

-``நான் 1987-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். ரஜினி சார், கமல் சார்கூட ஜோடியா நடிக்கணும்ங்கிறது அப்போதைய நடிகைகளின் சினிமா ஆசைகளாக இருக்கும். அந்த ஆசை எனக்கு விரைவாகவே நிறைவேறுச்சு. பிறகு, அப்போதைய முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்கள்லயும் நடிச்சேன். மணிரத்னம் சாரின் `அலைபாயுதே' படத்தில் நடிச்ச திருப்தி கிடைச்சிருக்கு. ஆனா, அவர் படத்தில் ஹீரோயினா நடிக்காதது எனக்கு இதுவரை நிறைவேறாத சினிமா ஆசை.



லாக்டெளன் எனக்கு சிறப்பா போச்சு. வீட்டில் பல மாதமா வேலைக்காரங்க இல்லை. எல்லா வேலைகளையும் நானேதான் செஞ்சேன். சாப்பிடுறது, விளையாடுறது, டிவி பார்க்கிறதுனு மொத்தக் குடும்பமும் ஒண்ணாவே நேரம் செலவிட்டோம். இப்படியான சூழல் லாக்டெளனால்தான் சாத்தியமாச்சு.

போன வாரம்தான் என்னுடைய 50-வது பிறந்தநாளை எளிமையா கொண்டாடினேன். அன்னைக்கு இரவு 12 மணிக்குக் குடும்பத்தினர், ஹிப்ஹாப் ஆதி உட்பட பலர் சர்ப்ரைஸ் வாழ்த்துச் சொல்லி கேக் கட் பண்ண ஏற்பாடு செய்தாங்க. பிறந்தநாள் வரும்போதுதான் வயசு கூடிட்டே போற ஞாபகமே வருது" என்று புன்னகைக்கிறார் குஷ்பு!


குஷ்பு நடித்திருக்கும் படங்களில் உங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் / எது? ஒரு ரசிகராக குஷ்பு என்றதும் நினைவுக்கு வருவது என்ன? ஏன்? கீழே கமென்ட் செய்யுங்கள்.

விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்...


Monday, 12 October 2020

KUSHPOO , ACTRESS POLITICAL HISTORY - DMK TO BJP VIA CONGRESS

 

KUSHPOO , ACTRESS POLITICAL HISTORY 

- DMK TO BJP VIA CONGRESS




`காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணையப்போகிறார் குஷ்பு' என்ற வதந்தியை உண்மையாக்கியிருக்கிறார் நடிகை குஷ்பு. திரையுலகிலிருந்து தமிழக அரசியல் வரையிலான அவரது பயணங்கள் குறித்த மீள்பார்வை இந்தக் கட்டுரை. ``காங்கிரஸ் கட்சியில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு, `நான் பா.ஜ.க-வில் சேரப்போவதாக’ச் சிலர் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கடந்த வாரம் டெல்லியில் பேட்டி கொடுத்த குஷ்பு, இப்போது அதே டெல்லியில், பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.


.

தமிழ்த் திரையுலகில், 80-களின் இறுதியில் இளம் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பு, 90-களில் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தார். கோயில் கட்டும் அளவுக்கு, கதாநாயகர்களுக்கு ஈடான ரசிகர்களைக்கொண்டிருந்தவர். திரையுலகில் பிரபலமாக இருந்தபோதே, அ.தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டி.வி-யில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு, சின்னத்திரை தொடர்களிலும் பிஸியான நடிகையாக வலம்வந்தார்.இந்த நிலையில்தான், தமிழக அரசியலுக்குள்ளும் காலடி எடுத்துவைக்க நினைத்தார். ஜெயா டி.வி-யில் நிகழ்ச்சித் தொகுப்பு, ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டிப் பேசிய பேச்சுகள் என குஷ்புவின் செயல்பாடுகளைவைத்து அவரது அரசியல் ஈர்ப்பை கணித்தவர்கள், `அ.தி.மு.க-வில் இணைவார் குஷ்பு' என்று ஆரூடம் எழுதினர். ஆனால், அவரோ யாருமே எதிர்பாராதவகையில், தடாலடியாக தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

.




அங்கேயும்கூட, 2013-ம் ஆண்டில், கட்சியின் தலைமை குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, தி.மு.க தொண்டர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதையடுத்து கட்சியிலிருந்து விலகியவர், 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி, சோனியா காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டில், அப்போது மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளராகவும் தன்னைக் காட்டிக்கொண்டார். இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குப் பிறகு பொறுப்பேற்றவர்கள், தன்னைப் பெரிதாக மதிக்கவில்லை என்ற மனக்குறை அவருக்குள் எழ ஆரம்பித்தது. இதை வெளிப்படுத்தும்விதமாக, ``காங்கிரஸ் கட்சியை நம்பி நான் இல்லை'', ``தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் என்னை மதிப்பதில்லை'' என்று தனது அதிருப்திகளை அவ்வப்போது பேட்டியாகக் கொடுத்துவந்தார்.ஆனால், கட்சித் தரப்பிலோ, ``கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்தாலும்கூட, மாநில அளவிலான கட்சிச் செயல்பாடுகளில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. தேர்தல் சமயங்களில் மட்டுமே தலைகாட்டுகிறார். மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான போராட்டக் களங்களில் கலந்துகொள்வதையே தவிர்க்கிறார்'' என்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. ஆனால், குஷ்புவோ ``ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் தலைவர் அல்ல... அவர்தான் எந்நாளும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்!'' என்றார் அதிரடியாக. மேலும், கட்சிக் கொள்கைகளுக்கு மாறான தனது தனிப்பட்ட கருத்துகளையும் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.



.

`முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இனியும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று கூறி `முத்தலாக் தடைச் சட்டத்தை'க் கொண்டுவந்தது மத்திய பா.ஜ.க அரசு. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்துவந்தபோதும், ``பெண்களின் உரிமையைக் காக்குவிதத்தில், முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்று கூறி முத்தலாக் தடைச் சட்டத்தை ஆதரித்தார் குஷ்பு. இது குறித்து, கடந்த 2017-ம் ஆண்டு விகடன் டிஜிட்டல் தளத்தில், ``முத்தலாக் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான உங்களது கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?’’ என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,``நான் எப்போதும் கட்சிக்கு எதிராகப் பேசியதே கிடையாது. `மாற்றங்கள் வர வேண்டும். அந்த மாற்றங்களும் அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்களை அழைத்துப் பேசியே கொண்டுவரப்பட வேண்டும்’ என்றுதான் நாங்கள் எல்லோருமே சொல்லிவருகிறோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே அம்பேத்கர் தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அதாவது, அவரவர் மத நம்பிக்கைகள் சார்ந்து முடிவு எடுக்கக்கூடிய உரிமைகள் மக்களுக்கு இருக்கின்றன. காலங்கள் மாறும்போது, மாற்றங்களும் வரும். அது எந்தவிதமான மாற்றம் என்பதை அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.


பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைகளின் ஒன்றான, `பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரின் உரிமையைப் பறிக்கும் செயல்' எனக் கூறி எதிர்க்கட்சிகள் ஒருசேர எதிர்ப்பு குரல் எழுப்பிவந்த வேளையிலும், ஆதரவுக் குரல் கொடுத்து அனைவரையும் அதிரவைத்தார் குஷ்பு.

2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ஆனாலும் `தலைவராக ராகுல் காந்திதான் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்' என்ற ஆதரவுக் குரல்கள் கட்சிக்குள் பெரும்பான்மையாக இருந்துவரும் சூழலிலும், ``அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜோதிராதித்ய சிந்தியா அல்லது சச்சின் பைலட் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம்’' என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்து கட்சியின் அகில இந்தியத் தலைமையின் வெறுப்பையும் சம்பாதித்தார்.அண்மையில், பா.ஜ.க கொண்டுவந்திருந்த `புதிய கல்விக் கொள்கை'யின் மும்மொழித் திட்டம் தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பு சூழலை உருவாக்கியிருக்கும் நிலையிலும்கூட, புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத்தை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டார் வட இந்தியரான குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறான அவரது கருத்துகள் மாநிலத் தலைமைக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. `காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால், அதன் பெயர் முதிர்சியின்மை. விரக்தி, ஒழுக்கமின்மையிலிருந்து வருகிறது. விரக்திக்குச் சிறந்த மருந்து யோகா!' என்று ட்விட்டரிலேயே காரசார பதிலடி கொடுத்தார் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆனால், இப்படிச் சொந்தக் கட்சிக்குள்ளாகவே அவர் தெரிவித்துவரும் எதிர்க் கருத்துகள் குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம், `அது என்னுடைய நேரடியான கருத்து இல்லை' என்றோ அல்லது `இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்றோ வார்த்தை ஜாலங்களினால் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்திவந்தார் குஷ்பு.



சொந்தக் கட்சிக்குள்ளாகவே கலகக் கருத்துகளை வெளியிட்டுவந்தவர், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வை விட்டுவைப்பாரா என்ன... பா.ஜ.க-வையும் அதன் தலைவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் வதம் செய்தார்.``தாம்பரத்தைத் தாண்டினா தாமரைன்னா என்னன்னு யாருக்கும் தெரியாது'' என்று சில வருடங்களுக்கு முன்னர் கிண்டலடித்தவர், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ``ஹெச்.ராஜா லெவலுக்குப் பேச வேண்டுமென்றால், பாதாளச் சாக்கடையில் இறங்கி நின்றுதான் பேச வேண்டும்'' என்று நேரடியாகப் போட்டுத் தாக்கியிருந்தார். அண்மையில், ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், ``ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பது என் கௌரவத்துக்கு இழுக்கு” என்று `கெத்து' காட்டியிருந்தார்.



பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசும்போது, ``பிரதமர் மோடி, ஆடம்பரமாக 10 லட்சம் ரூபாய் செலவில் ஆடை அணிகிறார்; உலகம் சுற்றும் வாலிபராக இருக்கிறார். மோடி மஸ்தான் வேலை காட்டி, ஆட்சியைப் பிடித்தவர் நரேந்திர மோடி'' என்றெல்லாம் கடந்த காலங்களில், மிகக் கடுமையான வார்த்தைகளில் விளாசியிருக்கிறார் குஷ்பு.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதுநாள்வரை தன்னை ஒரு பகுத்தறிவாளராகக் காட்டிவந்தவர் குஷ்பு. மேலும், `நான் ஒரு பெரியாரிஸ்ட்' என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவர். `பெரியார்' திரைப்படத்தில் மணியம்மை பாத்திரத்தில் தான் நடித்திருந்ததைப் பற்றிப் பேசும்போது, அதைத் தனது திரையுலக வாழ்வின் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.



காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்தபோதெல்லாம், `பா.ஜ.க-வில் இணைகிறார் குஷ்பு' என்ற செய்திகள் படபடக்கும். ஆனால், `காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக எனது தனிப்பட்ட கருத்துகளை நான் தெரிவிப்பதாலேயே பா.ஜ.க-வில் நான் இணையப்போவதாக எண்ணிவிடாதீர்கள். அது ஒருபோதும் நடக்காது' என்று திட்டவட்டமாகப் பேசிவந்தவர் குஷ்பு..


இயல்பாகவே முற்போக்குச் சிந்தனைகளைக்கொண்டிருந்த குஷ்பு, இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தும் பா.ஜ.க-வில் தற்போது அடைக்கலமாகியிருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.இப்போதும்கூட, 'குஷ்புவின் கணவர் சுந்தர்.சி-க்கு பணப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கணவர் கொடுத்த அழுத்தத்தினாலேயே அவர் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்' என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை குஷ்புதான் வாய் திறந்து சொல்ல வேண்டும்!


.


Sunday, 31 December 2017

PRABHU , TAMIL ACTOR BORN 1956 DECEMBER 25 / OR DECEMBER 31



PRABHU , TAMIL ACTOR BORN 
1956 DECEMBER 25 / OR DECEMBER 31




Prabhu (born 25 December 1956) is an Indian film actor, businessman and producer who has predominantly appeared in Tamil language films and also in a few Malayalam and Telugu films. He is the son of veteran actor Sivaji Ganesan, while his son Vikram Prabhu is also a Tamil actor. After making his debut in Sangili (1982), the actor has played a series of leading and supporting roles, earning the Best Actor award recognition by the Tamil Nadu state for his portrayal in Chinna Thambi (1992).
Career[edit source]
After leaving Bishop Cottons school in Bangalore, Prabhu got involved in film production as an executive producer and worked alongside his uncle and mentor V. C. Shanmugam, who insisted that Prabhu learnt the film making process through a disciplined way, giving him general tasks such as pulling up chairs for artistes. 

Prabhu's father, actor Sivaji Ganesan, had initially expressed reluctance in allowing Prabhu to pursue an acting career, but through his work in the industry, he began to receive offers from film-makers to feature in their films.[2][3][4] He subsequently made his acting debut in C. V. Rajendran's Sangili (1982), a remake of the Hindi film Kalicharan, where he was cast in a supporting role. By the time Sangili released, Prabhu was working on six films, including Charuhasan's Pudhiya Sangamam and Gangai Amaren's romantic film Kozhi Koovuthu, which became his first commercially successful venture. After featuring in about thirty films, including nineteen with his father including Santhippu, Mirudhanga Chakravarthy and Neethibathi, Prabhu's career graph registered a drop and he began to reconsider the type of films he had signed. He opted against featuring in films co-starring his father and consciously began to choose subjects rather than accept as many offers as possible.

Among the first films he signed after taking the break included G. M. Kumar's Aruvadai Naal (1986) and Manivannan's Paalaivana Rojakkal, alongside Sathyaraj, both proving successful. Subsequently, the following period saw a series of commercial successes in 1988 for the actor, notably S. P. Muthuraman's Guru Sishyan with Rajinikanth, Mani Ratnam's Agni Nakshatram with Karthik and P. Vasu's family drama En Thangachi Padichava.

[2] The success of the latter film prompted more successful collaborations in the same genre between Prabhu and Vasu with Chinna Thambi (1991) and Senthamizh Pattu (1992) also receiving a similar reception, with the actor earning the Best Actor award recognition by the Tamil Nadu state. He subsequently worked in his hundredth film R. V. Udayakumar's Rajakumaran, before portraying well received roles in K. Balachander's romantic film Duet (1994) and Priyadarshan's Malayalam period film Kaalapani (1996) alongside Mohanlal. Prabhu went through another barren spell in the late 1990s, when several films after the success of Panchalankurichi failed to do well, prompting another image change away from his village do-gooder roles.[2] Moving away from action films, Prabhu selected scripts which would appeal to family audiences in the early 2000s and collaborated with film-makers including Rama Narayanan and T. P. Gajendran, working in a series of minimum guarantee return films.[5]

Prabhu then made another career change and began accepting film offers in which he would play a supporting rather than the leading role and featured alongside Kamal Haasan and then Rajinikanth in two big budget ventures Vasool Raja MBBS (2004) and his home production Chandramukhi (2005).[6] Since then, he has gained acclaim portraying characters including a caring guardian in Unakkum Enakkum, Thaamirabharani and Ayan, while he has also been seen in detective roles in action films, notably Billa (2007) and then Kanthaswamy (2009). He has also played other acclaimed supporting roles in Mani Ratnam's Raavanan (2010) and Aishwarya Dhanush's 3 (2012), while he has ventured into playing similar roles in Telugu, Kannada and Malayalam films.[7]

Personal life[edit source]
Prabhu was born to actor Sivaji Ganesan and Kamala.[8][9] His elder brother Ramkumar is a film producer and he has two sisters Shanthi and Thenmozhi. Prabhu is married to Punitha and has two children: a son Vikram and daughter Aishwarya. 


Kushboo was candid enough to say that after being in a live-in relationship for four-and-a-half years, they got married on September 12, 1993, at the house they had bought in Poes Garden.

Later, they have been separated due to torture and pressure from Sivaji family.Within 10-14 days Kushpoo take off her Mangalya and gave interview in news paper. As the marriage was held in secret ,so there is no necessity for divorse.[10]

The former made his acting debut in the 2012 film Kumki.


’ரஜினி-கமல் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்’ - ராமேஸ்வரத்தில் பிரபு பேட்டி


 ரஜினி-கமல் இருவரும் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நடிகர் பிரபு ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் கோயிலில் நடிகர் பிரபு குடும்பத்துடன் சாமி தரிசனம்

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'துப்பாக்கி முனை ' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதிகளில் நடந்துவருகிறது. இந்நிலையில், நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன், இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். ராமேஸ்வரம், அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் நடிகர் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  ''ராமேஸ்வரம் கோயில் மிகவும் பிரமாண்ட கோயிலாக விளங்குகிறது. எனது குடும்பத்துடன் இங்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகள்குறித்து நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அதற்கான இடம் இதுவல்ல.

ரஜினியும், கமலும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனது உடன் பிறவாச் சகோதரர்களான அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்பேன். எனது மகன் விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படங்களில் இதுவரை நான் நடித்தது இல்லை. அதற்கான வாய்ப்பை நானாக கேட்க மாட்டேன். அதே நேரத்தில் அவர்களே என்னை அழைத்தால் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார். 
பிரபுவுடன் அவரது மனைவி, மகன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். சிவாஜி-பிரபு ரசிகர் மன்ற நிர்வாகிகள் தேவதாஸ், பால்ராஜ், சண்முகம் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

Monday, 3 July 2017

TEN REAL HUSBAND-WIFE OF TAMIL FILM INDUSTRY






தமிழ் சினிமாவின் சூப்பர்10 காதல்ஜோடிகள்




திரையில் என்னதான் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் பாஷையில் சொன்னால், சிலரை பார்த்தவுடன் மட்டும் மனசுக்குள் பலப் எரிந்து காதுக்குள் மணி ஒலித்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்குகிறது. அது சரி, ஆனால் காதல் வந்த எல்லாரும் மணம் முடிப்பது இல்லையே..மணம் முடித்த அனைவரும் சேர்ந்து வாழ்வதும் இல்லை. திரையில் ஆயிரம் ஜோடிகள் டிஜிட்டல் வண்ணங்களில் ட்யூலிப் தோட்டத்துக்கு நடுவில் அஸ்கு லஸ்கா பாடினாலும் ஒன்றாக வாழும் வாழ்க்கை சில ஜோடிகளுக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஆரம்பகட்ட கிசு கிசுக்களை தாண்டி, போராட்டம், குழப்பம் எல்லாவற்றையும் கடந்து  நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூப்பர் ஜோடிகளின் பட்டியல் இது.

10 ) ஜெமினி கணேசன்- சாவித்திரி
ஆடாத மனமும் ஆடுதே...

இது மிஸ்ஸியம்மா காலத்து காதல். கறுப்பு வெள்ளையில் நடந்த ரொமான்ஸ்  காவியம்.  'கண்களின் வார்த்தைகள் புரியாதோ?' என்று பைஜாமா ஜிப்பா போட்டபடி ஜெமினி ரொமான்ஸ் பார்வை பார்த்து கேட்டது சாவித்ரிக்கு மட்டுமே புரிந்தது போலும். காதல் மன்னனுக்கு நடிகையர் திலகம் சாவித்திரி  மூன்றாவது மனைவி! காதல் வரும்போது மனத்தைக் கட்டுப்படுத்த நித்யானந்தாவுக்கு கூட முடியாத போது காதல் மன்னனுக்கு அது சாத்தியமா என்ன ?!  இவர்களின் கல்யாணம், நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் சாவித்திரி லக்ஸ் சோப் விளம்பரத்துக்கு ' சாவித்திரி கணேஷ்' என்று கையொப்பமிட்ட போதே நல்லுலகுக்கு தெரிய வந்தது. விஜய சாமுண்டீஸ்வரி, சதீஷ்குமார் என்று இந்த அழகான ஜோடிக்கு இரண்டு குழந்தைகள். பிறகு ஜெமினியுடனான   மனக்கசப்பால் சாவித்ரி குடிக்கு அடிமையானதும் கோமா நிலைக்கு சென்று மீளாமலே 46  வயதில் இறந்ததும் இந்த காதல் கதையின் சோகமான இறுதி அத்தியாயம்.

09 ) மணிரத்னம்- சுஹாசினி
நீ அழகா இருக்கேன்னு நினைக்கல..லவ் பண்ணனும்னு நினைக்கல...ஆனா இதெல்லாம் நடந்திடிச்சே..!

மணி ரத்னத்தின் படைப்புகளில் சிறந்தது ரோஜாவா பாம்பேயா என்றால் நந்தன் என்று தான் தோன்றுகிறது. இந்த ஜோடியின் அறிவாளிக் குழந்தை. இப்போது வளர்ந்து விட்ட இந்த இளைஞன், கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக வேலை செய்யும் அளவுக்கு மனப்பக்குவமும், அரசியலை கரைத்து குடித்த அறிவும் கொண்ட ஒரு வாரிசு நம்பர் 1. இந்த மகனை வளர்த்து எடுத்த விதத்தில் இருந்து இந்த ஜோடியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். குஷ்பூவின் கற்பு பிரச்சனையில் துணிந்து குஷ்பூவை ஆதரித்துக் கருத்து சொல்லிய ஒரே குரல் சுஹாசினியுடையது. சரியோ பிழையோ மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி சர்ச்சைகளைக் குவிக்கும் ஒரு பெண்ணுக்கு, நடிப்பு இயக்கம் வசனகர்த்தா  என்று பல தளங்களில் இயங்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்ற ஒரு கணவராக மணி அமைந்தது தான் இந்த ஜோடியின் அதிகம்  சக்சஸ் ஆன திருமண வாழ்க்கையின் சூட்சுமமோ என்னவோ? மணி பொதுவாக தன்  படங்களில் வைக்கும் வசன ஸ்க்ரிப்ட் போல தான் வீட்டிலும் பேசுவார் போலும்! 

08)  எம்.ஜி.ஆர்- ஜானகி 


இரத்தத்தின் ரத்தம்...?
இந்த மலைக்கள்ளன் மனத்தை திருடிய மருத நாட்டு இளவரசி, எம்.ஜி.ஆர். மேல் கொண்ட காதலால் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு எம்.ஜி.ஆருடன் வாழ்க்கையை மைத்தவர்.இருவரும் முதலமைச்சர்கள், ஜானகி தமிழ் நாட்டின் முதல் பெண் சி.எம். ( முதல் ' அம்மா?' ) ' நாடோடி மன்னன்' இல் புரட்சித் தலைவரும் எம்.என்.ராஜமும் போட்டி போட்டு கொண்டு தங்கள் சொத்தை நாட்டு  மக்களுக்கு வழங்குவார்களே, அது போல நிஜத்தில் எம்.ஜி.ஆருக்கு அமைந்த ஜோடி.


07  )  அஜித்-ஷாலினி



 அஜித், தமிழ் சினிமாவின் மோஸ்ட்  ஹான்ட்சம் ஹீரோ. ஷாலினி, பேபி ஆக இருந்ததில் இருந்தே தமிழ் மக்கள் பார்த்து வளர்ந்த பக்கத்து வீட்டுப் பெண். நடித்தது ஒரே ஒரு படம். அதுக்குள் அஜித் வானத்தில் பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எப்படி எப்படி நியாயம்?! அஜித் கிசுகிசுக்கப்படாத நடிகைகள் குறைவு. ஹீராவுடன் நீண்ட காலக் காதல், சுவாதி தற்கொலைக்கு முயன்றது என்று ப்ளே பாய் இமேஜ் வைத்திருந்த  அஜித், ஷாலினியை கண்டதும் தலைகீழாக மாறி பொறுப்பான கணவனாக நல்ல அப்பாவாக மாறியது கொலிவூட் எதிர்பார்க்காத ஆச்சர்யம். வயது வித்தியாசம், வேறு மதம், அஜித் இன்  பழைய ரெகார்ட்  என்று காதலுக்கு ஆப்பு உறுதி  என்று காத்திருந்த மீடியாக்களின் வாயை மூடிவிட்டு இந்த ஜோடி நடத்தும் காதல் வாழ்வுக்கு அனோஷ்கா என்ற குட்டி தேவதை சாட்சி.  ஷாலினி ஒரு முறை சொல்லி இருந்தது, " சில நேரம் தனியா இருக்கணும் போல தோணும், சில நேரம் பிரெண்ட்ஸ் கூட  டைம் ஸ்பென்ட் பண்ணனும் எண்டு தோணும், அந்த நேரங்களில 2  பேரும் புரிஞ்சுகிட்டு     இருப்போம், எப்பவும் மத்தவங்க என்னோட தான் இருக்கணும் எண்டு 2  பேருமே நினைக்கிறது இல்ல.." 

06  ) ரோஜா- செல்வமணி 


தெலுங்கானாவை பிரிச்சாலும்  எங்களை பிரிக்க முடியாது!
செம்பருத்தி போல இருந்தா யாருக்கு தான் பிடிக்காது? அண்ணன்களுக்கு மத்தியில்   செல்லமாக வளர்ந்த  ரோஜாவை தன் வீட்டு தோட்டத்தில் நட செல்வமணிக்கு ஆசை வந்தது போலும். தன்னை அறிமுகப்படுத்திய செல்வமணியை நீண்ட காலமாக காதலித்து வந்த ரோஜாவும் செல்வமணியும் ஒரு கட்டத்தில்  பல பிரச்சனைகளால் பிரிந்து விட முடிவெடுத்து ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் பிரிவை அறிவித்து விட முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த பாரதி ராஜா, மேடையில் வைத்து இருவரின் ஆடை தலைப்புகளையும் முடிந்து கலாட்டா செய்ததும், அறிவிக்க நினைத்திரிந்த முடிவை அறிவிக்க முடியாது போனதாக ரோஜா ஒரு பேட்டியில்  சொல்லி இருந்தார்.  தெலுங்கு தேச அரசியலில் தீவிரம் காட்டிய ரோஜாவுக்கு  செல்வமணி ஒரு பெரிய பலம். 

05 )  குஷ்பூ- சுந்தர்
கடவுளே  இவங்க இன்னிக்கு கற்பு பத்தி ஏதும் சொல்லாம இருக்கணுமே...?!



காமடி படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த சுந்தர்.சி. , தான் ஒரு அதிரடி ஆக்க்ஷன் படத்தை தன் வீட்டுக்குள்ளேயே இயக்க வேண்டி வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். திருமணத்துக்கு முன்னரான உறவு குறித்து கருத்து சொன்ன குற்றத்துக்காக செருப்பு மாலை, விளக்குமாறுகளோடு தமிழகமே கூச்சல் போட்ட போதும், 27  வழக்குகளை சந்திக்க வேண்டி வந்த போதும் சுந்தர் உள்ளத்தை அள்ளித் தா என்று கேட்டது தப்போ என்று சிந்திக்காமல் குஷ்புவுக்கு தோள் கொடுத்தது தான் இந்த திருமண வாழ்வின் சக்சஸ்.  குஷ்பு பிரபுவிடம் சகஜமாக பழகும் ஒரு அழகான சூழலை ஏற்படுத்தி  இருப்பதை பார்க்கும் போது, டாக்டர் ஷாலினியின் பாஷையில் சொன்னால், சுந்தர் ஒரு 'ஆல்பா ' ஆண். ஒரு வார்த்தை தமிழ் தெரியாமல் வந்து இன்று மதம், மொழி, ஊர் என்று முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் வாழ்க்கையை அமைத்து சந்தோஷமாக வாழும் குஷ்பூ - சுந்தர் காதல் ஒரு அழகான ஓவியம். 

04  )  தேவயானி- ராஜகுமாரன் 


'அபி'யும் நானும்....
அழகான நடிகைகள் ஹான்ட்சம்மான , சக்சஸ்புல்லான  இயக்குனரை காதலிப்பது வழமை, அது அமலா போல்-விஜய் வரை தொடர்கிறது. ஆனால் ஒரே ஒரு வெற்றிப்படம் மட்டுமே கொடுத்த, உருவத்தில் தனக்கு சற்றும் பொருத்தமில்லாத, வேறு மொழி பேசுகின்ற, வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இயக்குநருக்காக, வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி மதில் ஏறி  தாண்டி வந்து இயக்குனர் ராஜகுமாரனை கைப்பிடித்த வித்தியாசமான காதல் இது. அதுவும் அவர் ஒரு உதவி இயக்குனராக மட்டும் இருந்த நிலையிலேயே  காதல் தொடங்கியது தன் இன்னும் வியக்க வைக்கிறது. ராஜகுமாரன் தன்னிடம் இல்லாதவைகளை எல்லாம் அன்பால் நிரப்பி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பிரபலமான, பிசியான   நடிகை- பிரபலம் அற்ற கணவன் என்னும் போது வழமையாக வரும் எந்த வித ஈகோ மோதல்களும் இல்லாமல் இனிய இரண்டு பெண் குழந்தைகளோடு இந்த ஜோடி  நடத்தும் வாழ்க்கை ஒரு உதாரணம் . 'காதலுடன்' படம் ப்ளாப்  ஆனாலும் இந்த ஜோடி சூப்பர்  ஹிட் ! 

03 )  என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ.மதுரம் 


உன் மேல நான் மயங்கி ஒரு வாரம் ஆச்சுதடி..!
இருவரின் பெயரையும் தனித் தனியே பிரித்து சொல்ல முடியாத அளவுக்கு சினிமாவில் சேர்ந்தே பாப்புலரரான ஜோடி. ஆனால் இவர்களின் காதலின் சிறப்புக்கு அதுவல்ல காரணம். இன்பத்தில் சேர்ந்திருப்பது சாதாரணமானது. என்.எஸ்.கிருஷ்ணன் லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த காலங்களில் கணவரின் விடுதலைக்காக மதுரம் நிகழ்த்திய போராட்டம் ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை  விட உயர்வானது. அதனால் தான் என்.எஸ்.கே. மனைவி இறந்த பிறகு ஒரு தூபி எழுப்பினார். இருவருக்கும் பிறந்த குழந்தை இறந்த பிறகு, மதுரத்துக்கு குழந்தை இல்லாமல் போக, தன் தங்கை வேம்பு வை தன் கணவருக்கே திருமணம் முடித்து வைத்தார் மதுரம். ( மதுரம்-வேம்பு; பெயரில் என்ன ஒரு வேற்றுமை!) 

02 )   சூர்யா- ஜோதிகா
கலாபக் காதலி...!

' ஒளி மயமான '  நடிகருக்கும் ' ஒளி மயமான'  நடிகைக்கும் இடையே நெருக்கம் என்று ' உயிரிலே கலந்தது' படத்தில் நடிக்கும் போது வந்த அந்த வீக்கான கிசு கிசுவை சிவகுமார் கூட நம்பி இருக்க மாட்டார். ' சூர்யா போல நைஸ் ஆ பேசற ஜென்டில்மேன் ஐ இண்டஸ்ட்ரில பார்த்ததே இல்ல' என்று ஜோ பெட்டி கொடுக்கும் போது கூட தமிழ் கூறும் நல்லுலகம் நம்பவில்லை. நெருக்கம் நட்பாகி ' காக்க காக்க' வில் காதலானதும்   தான் உலகம் விழித்துக் கொண்டது. ஜோதிகாவுக்கு அக்கா இருவருமே நடிகைகள், வேறு மாநிலம், அதிலும் தாய் ஒரு முறை விவாகரத்து பெற்றவர். சிவகுமார் குடும்பமோ வெகு பாரம்பரியமான மார்க்கண்டேயர் குடும்பம்.  கிளம்பிய கடுமையான எதிர்ப்பை சமாளித்து, பெற்றார் சம்மதத்துடன் திருமணம் செய்வதற்காக கிட்டத்தட்ட 4  வருடங்கள் காதலித்து, நீண்ட காலப் போராட்டத்துக்கு பிறகு ஜோ என் மகள் என்று அதே சிவகுமார் வாயால் சொல்ல வைத்தது இந்த காதல் ஜோடியின் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி.முழு தமிழ் நாடும் இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்று விரும்பியது. இன்று நொடிக்கு நூறு  முறை ஜோ ஜோ என்று புகழ் பாடும் சூர்யா, தியாவை  இடுப்பில்  தூக்கியபடி வளம் வரும் ஜோ, அப்புறம் லேட்டஸ்ட் வரவு தேவ், கார்த்தி திருமணத்தில் பொறுப்பான அண்ணன் அண்ணி பதவி என்று இந்த அழகான ஜோடியின்  வாழ்க்கை " ஜில்லுன்னு ஒரு காதல் "!

01  ) கமல்-கௌதமி
அபிராமிங்கிறதுக்கு  பதிலா  கௌதமின்னு வச்சிருக்கணும் !

 இரண்டு மனங்களுக்கு இடையில் உருவாகும் நேசமும் காதலும் திருமணம் என்ற ஒரு ஏற்பாட்டால்  மட்டுமே முழுமை அடையுமா? ஒருவரைக் காதலிக்கிறோம், அளவில்லாமல் அன்பு செய்கின்றோம் என்றால் , அந்த அன்பிற்கு இடையில் திருமணம் என்ற சட்ட ஏற்பாடு, அல்லது சம்பிரதாயம் எங்கிருந்து வந்து முளைக்கும்? திருமணம் செய்யவில்லை என்ற ஒரு காரணத்துக்காக இருக்கின்ற காதல் இல்லை என்று ஆகி விடுமா? ஏற்கனவே இரண்டு திருமணங்களின் பிரிவின் பின் கமலும், ஒரு விவாகரத்தின் பின் கௌதமியும், இருவரின் குழந்தைகளோடும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது, குறிப்பாக இந்த உறவில் அவர்களின் குழந்தைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தோஷமாக வாழ்வது, எழுத்தில் விவாகப்பதிவு வைத்திருக்கும், அம்மி மிதித்து தாலி கட்டி வாழ்பவர்களிடம் கூட காண முடியாதது.   கௌதமி கான்சர் வந்து சிகிச்சையில் இருந்த காலகட்டத்திலும், திருமணம் என்ற பந்தம் இல்லாத காரணத்தால் இலகுவாக விலகிச் சென்றுவிட முடியும் என்ற போதிலும், கூடவே இருந்து கமல் தோள் கொடுத்து, சிகிச்சை முறையின் ஒவ்வொரு படிநிலையையும் ஒளிப்பதிவு செய்து, கௌதமி மீண்டும் பழைய வாழ்க்கைக்கு பொலிவோடு மீண்டு வர துணை நின்றதுக்கு காரணம், இருவரும் மற்றவர் நம்மவர் என்று நினைத்தது தான். சமூகத்தின் எதிர்ப்புக்களுக்காக சமரசம் செய்ய  போலியான முகமூடிகள் அணியாமல் விட்டதற்காக இந்த அபூர்வக் காதலர்களுக்கு முதல் இடம்.