Showing posts with label MOUNT. Show all posts
Showing posts with label MOUNT. Show all posts

Sunday, 19 April 2020

INDONESIA,MOUNT TAMBORA RELEASED LAVA 1815 APRIL 10-11



INDONESIA,MOUNT  TAMBORA RELEASED 
LAVA 1815 APRIL 10-11



ஏப்ரல் 28-ம் தேதி மைனஸ் 3 டிகிரியான வெப்பநிலை: 1815-ம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த அதிசயம்

சென்னையில் எப்போதும் 3 பருவநிலைகளே உள்ளன. வெப்பம், அதிவெப்பம், மெலும் வெப்பம் என்ற 3 நிலைகளையே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் சென்னையில் கடும் கோடையான ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜியத்துக்கும் கீழே வெப்ப நிலை சென்றது என்று நான் கூறினால் மக்கள் என்னை நம்புவார்களா?

இவ்வாறு கூறினால், இது ஒரு முட்டாள்கள் தின ஜோக் என்று தட்டிக் கழித்து விடுவார்கள் என்பதே உண்மை. ஆனால் சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில், கோடை மாதமான ஏப்ரலில் வெப்ப நிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்றது. அதாவது 1815-ம் ஆண்டு ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்தது.
Caldera of Mount Tambora

1815, ஏப்ரல் 24-ம் தேதி காலை வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 28-ம் தேதி மைனஸ் 3 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்தது. பனிப்பொழிவு கூட இருந்ததாக சில ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது சற்று மிகைப்படுத்தலாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

1815, ஏப்ரல் 28-ம் தேதி வெப்ப நிலை மைனஸ் 3 டிகிரிக்கு சென்றதற்கான காரணம், இந்தோனேசியாவில் தொலைதூரம் இருந்த மவுண்ட் தம்போரா என்ற எரிமலை வெடித்துச் சிதறியதே. அப்போது மவுண்ட் தம்போரா இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் உயரமான சிகரம். 4300 மீ உயரம் கொண்டது இந்த மவுண்ட் தம்போரா.

1815, ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் எரிமலைக் குழம்பான லாவா வெடித்துக் கிளம்பியது. இந்த எரிமலை வெடித்த சப்தம் சுமார் 2,000 கிமீ தொலைவிலிருந்தவர்களுக்கும் கேட்டது என்று கூறப்படுகிறது. லாவா வழிந்து ஓடியதிலும், வெடிப்பின் தீவிரத்திலும் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

இன்று வரையிலும் மவுண்ட் தம்போரா எரிமலை வெடிப்புதான் எரிமலை வெடிப்பு வரலாற்றில் மிகப்பெரியதாக கருதப்பட்டு வருகிறது.
Estimated depth of volcanic ashfall
during the 1815 eruption—the outermost
 region (1 cm) reached 
Borneo and
the 
Sulawesi islands

அதன் பிறகு Tambora: The Eruption That Changed The World, என்று கிலன் டி’ஆர்சி உட் என்பவர் எழுதிய கட்டுரை இதனை விளக்கும் போது, “தம்போரா வெடிப்பின் சாம்பல் புகை மண்டலத் திரை மேகத்துக்கும் மேல் மிகப்பெரியதாகக் காணப்பட்டது. காற்றுடன் மேற்கு நோக்கி அது நகரத் தொடங்கியது... தம்போராவின் சாம்பல் புகை வங்காள விரிகுடா பக்கம் சில நாட்களில் வந்து சேர்ந்தது” என்று விவரித்துள்ளார்.

2 வாரங்களுக்குப் பிறகு இதன் விளைவை சென்னைதான் முதலில் உணர்ந்தது. வெப்ப நிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் இறங்கியது. எரிமலை சாம்பல் ராட்சத புகையில் உள்ள காற்றின் மூலக்கூறுகள் பூமியிலிருந்து வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதமும் குளிருக்காக குரங்கு தொப்பிகளையும், காதுகளை அடைக்கும் மப்ளரையும் அணிந்து கொள்ளும் நம் மக்கள் அப்போது என்ன செய்திருப்பார்கள்? ஆனால் காலனிய கிழக்கிந்திய கம்பெனியின் எந்த ஒரு ஆவணமும் இது பற்றி எதையும் பதிவு செய்யவில்லை. சுனாமி பற்றி குறிப்புகள் இல்லை.

தம்போராவின் சாம்பல் மேகம் உலகம் முழுதும் பரவி 1816-ம் ஆண்டை ‘கோடையில்லாத ஆண்டாக’ மாற்றியது. சென்னை உட்பட இந்தியாவின் பெரும்பகுதிகளில் பருவமழை இல்லை. பயிர் செய்தல் கடும் தோல்வி கண்டது. காலரா, பஞ்சம் இந்தியாவில் பரவியது. இப்போது அந்தப் பெரும்பஞ்சம் எரிமலை நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டதாக தற்போது பண்டிதர்கள் கூறுகின்றனர். தம்போரா எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உலகம் முழுதும் 70,000த்துக்கும் மேற்பட்டோர் அழிந்தனர்.

1815, ஆகஸ்ட் மாதம் தம்போரா எரிமலை வெடிப்புக்குப் பிறகு ஜாவாவிலிருந்து காதரீனா என்ற கப்பல் சென்னைக்கு வந்தது. அப்போது தி மெட்ராஸ் கூரியர் அதன் மாஸ்டரை பேட்டி கண்டனர். அவர் தம்போரா எரிமலை சாம்பலை ஒரு பையில் கொண்டு வந்தார். அது பிறகு கொல்கத்தாவுக்கு மேலும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை 1815 ஏப்ரலில் சென்னையில் மைனஸ் 3 டிகிரிக்கு வெப்ப நிலை குறைந்ததை தம்போரா எரிமலை வெடிப்புடன் தொடர்புபடுத்தவில்லை.

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: முத்துக்குமார்

Monday, 25 June 2018

MOUNT BATTEN PRABHU , LAST GOVERNOR GENERAL OF INDIA BORN 1900 JUNE 25-1979 AUGUST 2





MOUNT BATTEN PRABHU , 
LAST GOVERNOR GENERAL OF INDIA 
BORN 1900 JUNE 25-1979 AUGUST 27




லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900

இந்துக்களை கொலைசெய்ய தூண்டினான் ஜின்னா .ஏராளமானோர் மடிந்தனர் அதன் பின்னரே நேரு ,பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதம் தந்தார் மவுண்ட் பேட்டன் பிரபு எடுத்துச்சொல்லியும் செவிட்டு நாய் ஆனான் ஜின்னா .அதே போல் காஸ்மீர் அரசரையும் எச்சரித்தார் .இந்தியாவிடம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று .சீனா ,பாக்கிஸ்தான் ,இந்தியா என்று மூன்று பக்க ஆபத்தையும் விவரித்தார் .

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பே ட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுந ராகவும் (Governor-General) இருந்தவர்.

மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

லண்டன்: முன்னாள் இந்திய பிரதமர் நேருவும், தனது தாய் எட்வினாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் பமிலா ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்று வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது நடந்த சம்பவங்க ளை மையமாக வைத்து படம் எடுத்துள்ளனர்.

குரிந்தர் சதா இயக்கியுள்ள ஹாலிவுட் படமான வைஸ்ரா ய்ஸ் ஹவுஸில் ஹ்யூ போன்வில் மவுண்ட்பேட்டன் பிரபுவாக நடித்துள்ளார். இந்நிலை யில் படம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் லேடி பமிலா ஹிக்ஸ் கூறுகையில்,

மவுண்ட்பேட்டன் வைஸ்ராய்ஸ் ஹவுஸ் படத்தில் மவுண்ட்பேட்டனாக நடித்துள்ள ஹ்யூ போன்வில் பார்க்க என் தந்தையை போன்று இல்லை. இருப்பினும் அழகாக நடித்துள்ளார்.

தந்தை என் தந்தை அவரது இளமை காலத்தை ரஷ்யாவை சேர்ந்த அவரின் அங்கிள், ஆன்ட்டியுடன் பெரிய பெரிய கட்டிடங்களில் வாழ்ந்தார். அதனால் டெல்லி வீடு அவருக்கு பெரியதாக தெரியவில்லை.

எட்வினா வைஸ்ராய்ஸ் ஹவுஸ் படத்தில் ஜிலியன் ஆண்டர்சன் என் தாய் எட்வினா கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். என் தாய் போன்றே நடக்க முயற்சித்துள்ளார்.

நேரு என் தாய் எட்வினாவும், முன்னாள் இந்திய பிரதமர் நேருவும் உயிருக்கு உயிராக காதலித்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே செக்ஸ் இல்லை.


மவுன்ட் பேட்டன் மறைந்த தினம் இன்று. இந்தியாவின் வரலாற்றில் இந்தியாவின் பிரிவினைக்கு நேரடி சாட்சியாக அமைந்த ஒரு முக்கியமான ஆளுமை இவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் உருவான காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு உலகப்போர் சமயத்தில் முஸ்லீம் லீக் உதவிகரமாக இருந்தது. அப்பொழுதே தனிநாடு கோரிக்கையை ஜின்னா வைக்க பார்க்கலாம் என்கிற ரீதியில் பதில் சொன்னார் ஆங்கிலேய கவர்னர். அதற்கு முந்திய தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் வென்றிருந்தபடியால் முஸ்லீம் லீகுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அது மறுத்திருந்தது.

ஆங்காங்கே கனன்று கொண்டிருந்த பிளவுகளை பெரிதாக்கும் வேலையை ஜின்னாவும் அவரின் கட்சியும் கச்சிதமாக செய்தன. இதற்கு ஹிந்து மதவாத அமைப்புகளின் செயல்கள் இன்னும் வேகம் தந்தன. இந்தியாவிற்கு விடுதலை தரலாம் என்று தொழிலாளர் கட்சி இங்கிலாந்தில் ஆட்சிக்கு வந்ததும் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிற்கு விடுதலை என்று காங்கிரஸ் சொல்ல,பிரித்து கொடுத்துவிட்டு போ என்றது முஸ்லீம் லீக்.

எண்ணி ஐந்தே வருடங்களில் பாகிஸ்தான் கோரிக்கையில் பிடிவாதமானது லீக். முஸ்லீம்கள் தொகுதிகள் பெருவாரியாக 1946 தேர்தலில் வென்றது அக்கட்சி. நேரடி செயல்பாட்டு தினம் என்று அறிவித்தார் ஜின்னா. முதல்வராக இருந்த முஸ்லீம் லீகின் சுஹ்ரவர்தியே கலவரங்களை முன்னின்று நடத்தினார். வங்கம் ரத்தமயமானது. பஞ்சாப்,தற்கால பாகிஸ்தான் என்று வன்முறை தீ பரவ ஆரம்பித்தது. வேவல் பிரபு பைத்தியக்காரர்களின் விடுதி என்று குறிப்பு எழுதி வைத்திருந்தார். யாரை அடுத்த வைஸ்ராயாக அனுப்பலாம் என்று யோசித்தார் அட்லி.

பர்மாவில் ஜப்பானுக்கு எதிரான போரில் தலைமை தாங்கிய மவுன்ட்பேட்டனை அழைத்தார். அவர் இரண்டு கோரிக்கைகள் வைத்தார். தனிவிமானம்,கூடவே முடிவுகளை அடிக்கடி அரசுக்கு தெரியப்படுத்தும் கட்டாயமின்மை ஆகியவையே அது.அதற்கு ஒப்புக்கொண்டார் அட்லி. இந்தியா வந்த மவுன்ட்பேட்டன் எவ்வளவு முயன்றும் ஜின்னாவை அசைக்க முடியவில்லை.

காந்தி உங்களை முதலில் கொண்டு போய் எளிமையான குடிசையில் விடுதலை கிடைத்ததும் அமர வைக்க வேண்டும் எளிமை முக்கியம் என்று பயமுறுத்தி விட்டுப்போய் இருந்தார். அவரை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது. தன்னின் பிணத்தின் மீது தான் பிரிவினை நடக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருந்தார். நேரு மற்றும் படேல் ஆகியோரிடம் அனுமதி பெற்று விட்டார் மவுன்ட்பேட்டன். அதை காந்தியிடம் சொன்ன பொழுது என் இந்தியா என்னோடு இல்லை,நான் இருளில் உழல்கிறேன் என்று காந்தி சொன்னார்.

நாட்டை துண்டாடுவது என்று ஆனதும் வேகமாக காரியங்கள் துவங்கின. ஜூன் மூன்று அன்று பிரிவினை என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பொழுது இருமாத காலத்துக்குள் விடுதலை என்று அறிவித்தார் இந்த மனிதர். காரணம் அவரிடம் பர்மாவில் ஜப்பானின் படைகள் சரணடைந்த தினத்தன்று விடை பெற்றால் நன்றாக இருக்கும் என்றே இத்திட்டம். இரண்டு மாதத்துக்கும் குறைவான காலத்தில் எல்லாமும் பிரிக்கப்பட்டது. மக்கள்,இடங்கள்,பொருட்கள்,நதிகள் எல்லாமும். ரட்கிளிப் எனும் மனிதர் அமர்த்தப்பட்டார். வேகமாக பிரித்து கொடுங்கள் என்றுவிட்டார் மவுன்ட்பேட்டன்.

மவுண்ட்பேட்டனுக்கு ஜின்னா இன்னம் சில மாதத்தில் இறந்துவிடுவார் என்கிற ரகசியம் அப்பொழுது தெரியாது. அதுமட்டும் தெரிந்து இருந்தால் தான் பிரிவினைக்கே ஒத்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன் என்று நள்ளிரவில் சுதந்திரம் நூல் ஆசிரியர்களிடம் பதிவு செய்கிறார். நேருவுக்கும் அவரின் மனைவிக்கும் இருந்த நட்பு தான் அவரை இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது செங்கோட்டையில் கொடியேற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது. அவர் இந்தியாவுக்கு பல்வேறு சமஸ்தானங்கள் கிடைப்பதை உறுதி செய்தார்.

மவுண்ட்பேட்டனின் முக்கியமான தோல்விகள் என்னென்ன என்று பார்த்தால் பிரிவினையின் பொழுது ஆங்கிலேயரை பத்திரமாக காப்பாற்றி நாட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருந்த மனிதர் இந்தியர்களை காப்பதில் அந்த அளவுக்கு முனைப்பு காட்டவில்லை என்பதும்,பிரிவினையை திட்டமிட்டு படிப்படியாக நிகழ்த்தாமல் செய்ததும் குறிக்கத்தக்கன. இந்தியாவின் பிரிவினையை தான் பிரிட்டன் விரும்பியது என்பது உண்மை. அதை கச்சிதமாக இவர் செய்து வைத்தார்.. ஜின்னா அப்படி நினைக்கவில்லை. இந்த பிரிவினை தற்காலிகமானது என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. மும்பையில் இருந்த தன்னுடைய வீட்டை இன்னொருவருக்கு (ஹைதராபாத் நிஜாமுக்கு ) விற்க மறுக்கிற அளவுக்கு. அவர் ஒரு கட்டத்தில் இந்தியாவின் பகுதி,பாகிஸ்தானின் பகுதி,இரண்டிலும் சேராத பகுதி ஆகிய மூன்றும் இணைந்த யூனியனில் இருக்க இசைந்தார் என்பதை நோக்க வேண்டும்.

மவுண்ட்பேட்டன் இறுதியில் வன்முறையால் உயிர் இழந்தார் என்பது சோகமான முடிவு. அதை நிகழ்த்தியது அவர் நாட்டில் இருந்த பிரிவினைவாதிகள்