Showing posts with label FAMINE. Show all posts
Showing posts with label FAMINE. Show all posts

Wednesday, 12 May 2021

FAMINE AND KUNJARAMMA `S CHALLENGE ,POOR DEATH ,MADURAI

 


FAMINE AND KUNJARAMMA `S CHALLENGE ,POOR DEATH ,MADURAI



ஒரு மாத #லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா?

1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது.

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. 

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.

மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.




தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து,  வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர். அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது. ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர். அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர். ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள். தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,

ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம். நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு

எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.

கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள்,யாரைப் பற்றிப் பேச

யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு 

விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய்.

தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள். எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.

மாமதுரை மக்கள்.


BRITISH -INDIA -RULERS OF THIEFS MURDERED 40 LAKHS PEOPLE IN THE NAME OF ARTIFICIAL FAMINE CREATED

 

BRITISH -INDIA  -RULERS OF THIEFS

MURDERED 40 LAKHS PEOPLE IN THE NAME OF ARTIFICIAL FAMINE CREATED


வெள்ளைக்காரத் திருடர்கள் வழங்கிய பொற்கால ஆட்சி- சர்ச்சில் செய்த 40 லட்சம் கொலைகள்:


சர்ச்சிலின் அறியாத இன்னொரு முகம்!

1943ன் வங்கப் பெரும் பஞ்சம்:

இன்றும் கூட இந்தியாவில் சிலர், வெள்ளக்காரனே நம்மள ஆண்டிருக்கலாம்..அவன் ஆட்சியில சுபிட்சமா இருந்திச்சி என்றெல்லாம் கூறுவதைக் கேட்கலாம்.

அடிமைகளை, ஆண்டான்கள் எப்படி நடத்தினர் என்கிற வரலாறு புரியாமல் பேசுகின்ற மூடத்தனமான பேச்சு இது.

1942-43 ல் இரண்டாம் உலகப்போர் மும்ம்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்த வங்கப் பஞ்சம், இந்தியத்துணைக்கண்டத்தின் ஈடு இணையற்றப் பேரழிவாகும்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வஞ்சகத்தால் கிட்டத்தட்ட 40 லட்சம் பேரின் உயிரை வாங்கிய இந்தப் பெரும் பஞ்சம் பற்றி, நமது வரலாற்று நூல்களில் ஓரிரு வரிகளே இருக்கும். உலகப் போரின் உச்சத்திலே, ஹிட்லர் எனும் ஜெர்மானிய கொலை வெறியனால், யூதர்கள், ஸ்லோவேக்கியர் மற்றும் ரோமா இன மக்கள் 60 இலட்சம் பேர், 12 ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். ஆனால், நாகரீகக் காவலர்கள் என்று பீற்றிக் கொள்ளும் பிரிட்டிஷார் சர்ச்சில் எனும் மனிதாபிமானமற்ற கொலைகாரத் தலைவரின் ஆணைப்படி, ஒரே ஆண்டில் 40 இலட்சம் இந்தியரைக் குரூரமாகக் கொன்று குவித்தனர்.

இந்த வங்கப் பஞ்சத்தை ஆஸ்திரேலிய அறிவியலறிஞர் டாக்டர்.கிதியோன் போய்லா, மனிதன் உருவாக்கிய ஹோலோகாஸ்ட் என்கிறார்.

1942ல் வங்கத்தில் பசுமைப் புரட்சியே நிகழ்ந்தது. உணவு வகைகளும், தானியங்களும் அதிக அளவில் விளைந்தன. இருப்பினும், அவை எல்லாம்,

பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப் படவேண்டும் என்ரு சர்ச்சில் உத்தரவு போடவே, மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் மாபெரும் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்தப் பஞ்சம் பற்றி ஆய்ந்த மதுஸ்ரீ முகர்ஜி, உயிர் பிழைத்த சிலரைச் சந்தித்து அந்தக் கொடுமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். ” பெரும்பாலான பெற்றோர், பட்டினியால் வாடிய தம் குழந்தைகளை ஆற்றிலும் குளங்களிலும் வீசி எறிந்தனர். பலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை புரிந்து கொண்டனர். அரிசி வடித்த கஞ்சிக்காகப் பிச்சையெடுத்தவர் பலர். இலை தழைகளை உண்டு உயிர் பிழைத்தோரும் உண்டு. இறந்தவர்களை எரிக்கக் கூட எவருக்கும் தெம்பில்லை. 

நாய்களும் ஓநாய்களும் இறந்தவர் உடல்களைச் சாப்பிட்டன.


கொல்கத்தாவிற்குப் பிழைக்கப் போன ஆண்கள் தப்பித்துக் கொண்டனர். பெண்கள் எல்லோரும் குடும்பத்தை காக்க விபச்சாரிகளாய் மாறினர்.

அன்னையர் கொலை செய்தனர். பெண்கள் விபச்சாரிகளாயினர். தந்தைகள் பெண்களை விலை பேசி விற்றனர்.

லேசிக் சர்ஜரியைக் கண்டுபிடித்த மணி பவுமிக்கின் பாட்டி அவரது உணவைப் பேரனுக்குக் கொடுத்ததால், பட்டினியால் செத்ததை இன்றும் மறக்க முடியாது என்கிறார்.

சர்ச்சில் நினைத்திருந்தால் இரண்டே இரண்டு கப்பல்களில் உணவுப் பொருள் வழங்கி இத்தனை உயிர்களைக் காத்திருக்க முடியும். ஆனால், அவரது செக்ரடரி எவ்வளவோ சொல்லியும், அமெரிக்க அதிபரே அறிவுறுத்தியும் கூட ஆணவமாக மறுத்து விட்டார்.

ஹிட்லரின் ஆதரவாளராக விளங்கிய சுபாஷ் சந்திர போஸ், பர்மாவில் இருந்து உணவுப் பொருள் அனுப்ப விழைந்தார். ஆனால் பிரிட்டிஷ் ரகசிய

சென்சாரோ இந்தச் செய்தியை பிரிட்டனுக்கு அனுப்பவே இல்லை.

இந்திய பர்மிய செயலாளராக இருந்த லீபோல்ட் ஏமரி, சர்ச்சிலின் இந்த இட்லர் குணத்தை அறவே வெறுத்தார். 

இந்திய உணவுப் பொருள்களை பிரிட்டிஷ் மற்றும் கிரேக்க வீரர்களுக்கு அனுப்புவது பற்றி கொஞ்சமும் குற்ற உணர்வற்று இருந்த சர்ச்சில், வலிமையான போர் வீரர்களுக்குத்தான் உணவு தேவை. நோஞ்சான் பெங்காலிகளுக்கு அல்ல எனத்திமிராய்க் கூறினார்.

ஏமரியும், வைசிராய் ஆர்சிபால்ட் வேவலும் வங்காலத்துக்கு உணவு வேண்டும் எனக் கேட்ட போது, அந்த காந்தி இன்னும் சாகவில்லையா என்றாராம், சர்ச்சில்.

வேவல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இது போல் ஒரு பஞ்சம் ஏற்பட்டதே இலாஇ. ஹாலந்திற்கு உணவு வேண்டுமெனில் கப்பல்கள் உடனே புறப்படும். ஆனால் பெங்கால் விஷயத்தில் மட்டுமே இது போன்ற குரூரம் காட்டப் படுகின்றது என இலண்டனுக்குத் தெரிவித்தார்.


இத்தனைக்கும் போர் நேரத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து உணவுப் பொருள்களோடு சென்ற கப்பல்கள் வேண்டுமென்றே இந்தியாவைத்தவிர்த்துச் சென்றன என்கிற ஆதாரத்தை முகர்ஜி கண்டுபிடித்துள்ளார்.

இந்தியர்கள் முயல்களைப் போல குட்டி போடுகின்றனர் என போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்தில் சர்ச்சில் கூறியுள்ளார்.

ஏமரியிடம், இந்தியர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள்”என்று கூறியிருக்கிறார் சர்ச்சில். ஜெர்மானியர்களுக்கு அடுத்த காட்டுமிராண்டிகள் இந்தியர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

சர்ச்சில் ஒரு இனவெறியாளர் மட்டுமல்ல பொய்யரும் கூட.

மைக் டேவிஸ் எனும் ஆராய்ச்சியாளர், பிரிட்டிஷ் ஆண்ட 120 ஆண்டுகளில், இந்தியாவில் 31 கொடூரமான பஞ்சங்கள் ஏற்பட்டன. அதற்கு முற்பட்ட, 2000 ஆண்டுகளில் 17 பஞ்சங்களே ஏற்பட்டன என்கிறார். 

இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர் இந்தப் பஞ்சங்களில் இறந்துள்ளனர். இவையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த கொலைகளே என்கிறார் டேவிஸ்.

”இந்தியர்களை பிரிட்டிஷார் நடத்திய விதம் சரியானது..உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தினை இப்படித்தான் நடத்த வேண்டும்” என இட்லர் பாராட்டியிருக்கிறார்.

இந்தியப் போர்வீரர்களின் வீரத்தால் தன் 1945 போரை பிரிட்டன் வென்றது. இருந்தும் பொதுமக்களின் உயிரை மிகவும் துச்சமாக நினைத்தது.

இத்தனை கோடி மக்களின் மரணத்திற்கு இன்று வரை பிரிட்டன் மன்னிப்புக் கேட்கவில்லை.

இதுதான் உயர்ந்த இனத்தின் அடையாளமா? 

இதுதான் அந்த வெள்ளைக்காரத் திருடர்கள் வழங்கிய பொற்கால ஆட்சியா?#ரெபெல்ரவி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுச்சி நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில்

போர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.

இவரது இயற்பெயர் ‘சர் வின்ஸ்டன் லியோனர்டு ஸ்பென்ஸர் சர்ச்சில்’ என்பதாகும்.

இங்கிலாந்தில் உள்ள பிரௌன் ஹீம் அரண்மனையில் 1874-ஆம் ஆண்டு நவம்பர் 30 – ம் நாள் சர்ச்சில் பிறந்தார்.

சர்ச்சிலின் தந்தை இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பனராக இருந்தார். இந்த இருந்த அதே பாராளுமன்றத்தில் அவருக்குப் பின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

அதன் பின் இங்கிலாந்து தேசத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமராகவும் சர்ச்சில் பொறுப்பேற்று, உலகத் தலைவர்களில் ஒருவராகவும், உலக மேதைகளில் ஒருவராகவும் புகழ் பெற்றார்.

சர்ச்சிலின் தாய் அமெரிக்காவில் பிறந்தவர்.

சிறுவயதில் சர்ச்சிலுக்கு விளையாட்டிலும், குறும்புத்தனங்களிலும் இருந்த ஈடுபாடு, படிப்பில் செல்லவில்லை. அதனால் சர்ச்சில் ஒரு விடுதியில் சேர்க்கப்பட்டார். அங்கும் சர்ச்சிலின் கவனம் படிப்பின் பக்கம் திரும்பவில்லை.

எட்டாம் வகுப்பில் சர்ச்சில் மூன்று முறை தோற்றார். ‘விடா முயற்சி வெற்றிக்கு வழி’ என்பதற்கு ஏற்ப மூன்றாவது முறை நுழைவுத் தேர்வை எழுதி சர்ச்சில் வெற்றி பெற்றார்.

காலம் செல்லச் செல்ல கல்வியின் மீது சர்ச்சிலின் கவனம் சென்றது. நுழைவுத் தேர்வில் சராசரி மாணவனுக்கும் கீழே இருந்த சர்ச்சில், முயன்று முயன்று முன்னேறினார். 150 மாணவர்கள் படித்த வகுப்பில், சர்ச்சில் எட்டவாது இடத்தைப் பிடித்தார்.

இராணுவப் பயிற்சி முடிந்ததும் சர்ச்சில் காலாட் படையில் சேர்ந்தார். பணியின் காரணமாக அவர் இந்தியாவிற்கும் வந்தார். சிறிது காலத்தில் இந்தப் பணியில் சர்ச்சிலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் தாய் நாடு திரும்பினார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளிவந்த ‘மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிக்கையில் பணியாற்ற சர்ச்சில் சென்றார். அப்போது தென்னாப்பிரிக்காவில் போர் தொடங்கியது.போர் முனைச் செய்திகளைச் சேகரிக்கும் பணியில் சர்ச்சில் ஈடுபட்டார். அதைக் கண்ட அந்த நாட்டு அரசு சர்ச்சிலை சிறையில் அடைத்தது. ஒரு நாள் அந்தச் சிறையிலிருந்து சர்ச்சில் தப்பினார்.

இனி தமது தாயகத்திற்குச் செல்வதென்றும், அரசியலில் ஈடுபடுவதென்றும் முடிவு செய்த ச்சசில் இங்கிலாந்து திரும்பினார்.

1900 – ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்ச்சில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவே சர்ச்சிலின் முதல் அரசியல நுழைவு. அப்போது அவருக்கு வயது 26. இதிலிருந்து தான் சர்ச்சலின் பொது வாழ்க்கை தொடங்கியது.

சர்ச்சில் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். கேட்போர் வியக்கும் அளவுக்கு ஆங்கிலத்தில் உரையாற்றும் ஆற்றல் வாயந்தவர். அதனால், தமது மேடைப் பேச்சைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்க சர்ச்சில் திட்டமிட்டார்.

ஏனெனில், அப்போது இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது. அந்த ஊதியத்தை கொண்டு பொது வாழ்க்கையில் உழைக்க முடியாது. அதனால் மேடைப் பேச்சின் வழியாக வருமானம் திரட்ட வேண்டிய அவசியம் சர்ச்சிலுக்கு ஏற்பட்டது.

அமெரிக்கா சென்று சர்ச்சில் ஐந்து மாதங்கள் தங்கினார். ஞாயிறு தவிர மற்ற நாட்களி எல்லாம் மேடையில்முழங்கினார். அவர் எதிர்பார்த்த வருமானத்தைவிட அதிகத்தொகை கிடைத்து.

தாயகம் திரும்பினார். தாம் கொண்டு வந்த பணத்தையெல்லாம் அரசியல் பணிகளுக்கு சர்ச்சில் செலவிட்டார்.. எழுத்தாளர்கள் எல்லாம் மக்களைக் கவரும் வகையில் பேசிவிட முடியாது. மேடையில் சிறப்பாகப் பேசுபவர்கள் எல்லாம் சிறந்த எழுத்தாளர்களாக உருவாகிவிட இயலாது. ஒரு சிலருக்குத்தான் எழுத்தும் பேச்சும் இணைந்து மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றுத் தரும் அத்தகைய சிறப்பு வின்ஸ்டன் சர்ச்சிலிடம் இருந்தது.

மேடைப் பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையைக் கடைப்பிடிப்பர். ஒருவர் எழுச்சியோடு பேசி மக்களிடம் வரவேற்பைப் பெறுவர்; மற்றொருவர் இலக்கியத்தை இணைத்துப் பேசி மக்களைக் கவர்வர்.

வின்ஸ்டன் சர்ச்சில் தம் மேடைச்சொற்பொழிவைக் கொண்ட விதம் புதுமையானதாகும்… இன்றைய சொற்பொழிவாளர்களும் கடைபிடிக்க வேண்டியவையாகும்.

சர்ச்சில் மேடையில் சிறப்பாகப் பேசியதற்கு, “நான் மேடையில் ஏறியதும் முன்வரிசையில் இருப்பவர்களை எல்லாம் மூடர்கள் என்று எண்ணிக் கொள்வேன்! நான் அப்படி எண்ணிக் கொள்வதால் என் உள்ளத்திலிருந்து தங்கு தடையின்றி வார்த்தைகள் வெளிப்படும்.

அதே நேரத்தில் ஆங்காங்கே நின்று கொண்டு எனது சொற்பொழிவுகளைக் கேட்போரை நான் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டேன்… நான் அப்படி எண்ணிக் கொள்வதால், வரலாற்றுப் பிழையின்றி என்னால் பேச முடிகிறது… மொத்தத்தில் மூடர்களும் அறிவாளிகளும் நிறைந்த அவையில் பேசுகிறோம் என்று நான் எண்ணிக் கொள்வதால் இரண்டு தரப்பாரையும் திருப்திப்படுத்தும் வகையில் எனது சொற்பொழிவை அமைத்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த அணுகுமுறைகள் வின்ஸ்டன் சர்ச்சில் மேடை முழக்கத்திற்குத் தனித்துவத்தைத் தேடித் தந்தது.!

முதல் உலக மகாயுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் இங்கிலாந்து வெற்றி காண, சர்ச்சிலின் அறிவும், ஆற்றலும் அவசியம் என இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவு செய்த்து.

அதனால் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு சர்ச்சிலிடம் ஒப்படைகப்பட்டது. இங்கிலாந்தின் வெற்றிக்காக சர்ச்சில் இரவு பகலாக உழைத்தார். இருப்பினும் சக அரசியல்வாதிகளின் பொறாமைத் தீக்கு சர்ச்சில் பலியானார்.

அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்ட சர்ச்சில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வி சர்ச்சிலைச சோர்வடையச் செய்தது. அதனால் அரசியல் பணிகளிலிருந்து சர்ச்சில் மெல்ல மெல்ல ஒதுங்கினார்.

‘சும்மா இருப்பது என்பது முடிவுக்கு வந்த சர்ச்சில், எழுத்துப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

‘உலக நெருக்கடி’ என்ற தலைப்பில் சர்ச்சில் ஒரு நூலை எழுதினார். இந்த நூல் இங்கிலாந்து மக்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அதனால் அதே தலைப்பில் நான்கு பாகங்களை சர்ச்சில் எழுதினார். அந்த நூல்களும் அவருக்குப் பெருமை தேடித் தந்தன.

அடுத்து, ‘மார்லபோவின் வாழ்வும் காலமும்’ என்ற தலைப்பில் சர்ச்சில ஒரு நூலை எழுதினார். எழுத்தாற்றலுக்கு இன்றும் சான்றாகத் திகழ்வது இந்த நூலே.

சர்ச்சிலின் நூல்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைக் கண்ட பத்திரிக்கையாளர்கள், சர்ச்சிலின் கட்டுரைகளுக்கு அவர் வீட்டின் முன் காத்துக் கிடக்கின்ற நிலை வந்தது.

இங்கிலாந்திலிருந்து வெளிவந்த மிகப்பெரிய பத்திரிக்கைகள் எல்லாம் சர்ச்சிலின் கட்டுரைகளை வெளியிட்டு பெருமையடைந்தன. இந்த வழியாகவும் சர்ச்சிலுக்கு வருமானம் வந்தது.

மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர் ஆகிவற்றிலிருந்து ஒதுங்கி இருந்த சர்ச்சில் எழுத்துத் தொழிலில் ஈடுபட்டு சாதனை படைத்தார். இந்த நேரத்தில் ஓவியம் வரைவதிலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.

‘முயன்றால் முடியாதது எது?’ – இது சர்ச்சிலின் தாரக மந்திரமாயிற்று. ஓவியமும் சர்ச்சிலுக்கு மிகச்சிறப்பாக வந்தது இங்கிலாந்து மக்கள் சர்ச்சிலின் ஓவியத்திலுள்ள தனித் தன்மைகளைக் கண்டு வியந்தனர்.

ஓயாத உழைப்பும், விடா முயற்சியும், எடுத்த காரியத்தில் வெற்றி காண வேண்டும் என்ற ஆவலும் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவன் புகழ் உச்சிக்குப் போவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்பதற்கு சர்ச்சில் மிகச் சிறந்த சான்றாகும்.

அடுத்து வந்த தேர்தலில் சர்ச்சில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.

ஜெர்மன் சர்வாதிகாரி முஸோலினி படையும் ஒன்று சேர்ந்து உலகத்தையே கைப்பற்ற முயன்றன. அதன் முதல் கட்டமாக 1939-ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப்படைகள் போலந்தின் மீது போர் தொடுத்தன.

போலந்தைக் கைப்பற்றிய ஹிட்லர் இங்கிலாந்தையும் கைப்பற்ற முயன்றான். அதை அறிந்த இங்கிலாந்தும், பிரானசும் ஜெர்மனிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தன.

இங்கிலாந்து அரசு ஹிட்லரையும் முஸோலினியையும் எதிர்ப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை யோசித்தது. இது உலகத்தை இரண்டாவது மகாயுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்று எண்ணின.

இந்தச் சோதனையான கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு சர்ச்சில் ஏற்பதே சரியானதாகும் என்ற முடிவுக்கு வந்தனர். அதன்படி சர்ச்சில் மீண்டும் பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள்? எத்தனை மேடு பள்ளங்கள்? அதை எல்லாம் கடந்து வந்த மனிதனே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறான். அந்த வகையில் சர்ச்சில் தமது வாழ்க்கையில் எத்தனை சிக்கல்களை எதிர்நோக்கினார் என்பதை அவரது வாழ்க்கை முழுவதும் காணலாம்.

அரசியலில் நுழைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர்; அதற்குப் பின் வந்த உலக மகாயுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சர்; அதன்பின் வந்த தேர்தலில் தோல்வி; மீண்டும் பாதுகாப்பு அமைச்சர் பதவி என்று வண்டிச்சக்கரம் போன்று சர்ச்சிலின் வாழ்க்கை அமைந்தது.

கிடைத்த பொறுப்புகளில் தனக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு சர்ச்சில் செயல்பட்டார். எதிரிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக எடை போட்டு அதற்குத் தக்கபடி சர்ச்சில் செயல்படுவதில் கைதேர்ந்தவர், அதனால் தான் மீண்டும் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பதவி சர்ச்சிலைத் தேடி வந்தது.

உலகம் எதிர்பார்த்தது போன்று இரண்டாம் உலகப் போர் வந்து சேர்ந்தது. உலகை தமது காலடியில் கொண்டு வர வேண்டும் என்ற பேராசையால் ஹிட்லரும், முஸோலினியும் உலகப் போருக்கு காரணமாயினர். எதிரிப் படைகளை தடுப்பதிலும், எதிரி நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பதிலும் சர்ச்சில் தனிக் கவனம் செலுத்தினார். அதற்காக அவர் இரவு பகலாக உழைத்தார். ‘உழைப்பு என்றாவதொரு நாள் ஜெயித்தே தீரும்’ என்பதற்கு ஏற்ப இங்கிலாந்தின் பிரதமர் பதவியும் சர்ச்சிலைத் தேடி வந்தது.

பிரதமர் பதவியை ஏற்றதும் ஹிட்லர் – முஸோலினிக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டும் பணியில் சர்ச்சில் ஈடுபட்டார். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய வலுவோடு ஹிட்லர் படையை சர்ச்சில் எதிர்த்து நின்றார்.

ஹிட்லரின் விமானப்படை இங்கிலாந்துக்குள் புகுந்து குண்டுமழை பொழிந்தன.. சர்ச்சிலின் வீட்டுக்கு அருகிலும் குண்டு விழுந்தது. அப்போதும் ஒரு இராணுவ வீரனுக்குரிய கம்பீரத்தோடு, படை வீரர்களுக்கு வழிகாட்டுவதிலும், பொது மக்களுக்குத் தைரியம் கொடுப்பதிலும் சர்ச்சில் ஈடுபட்டார். அவரின் இந்தக் குணங்கள் அனைவராலும் வியந்து பேசப்பட்டது.

சர்ச்சிலின் தலைமையும், இங்கிலாந்து மக்களின் எழுச்சியும், தேச நாடுகளின் ஒத்துழைப்பும் ஜெர்மன் படையை தோல்வியடையச் செய்தன. உலக நாடுகள் எல்லாம் சர்ச்சிலின் தீரத்தையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தன.

இங்கிலாந்தின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்த சர்ச்சில் 1965-ல் மறைந்தார்.

அவருடைய உண்மையான தகப்பனார் அரச வம்சத்தில் ஒருவர் அவரிடம் சர்ச்சிலின் தாயார் துணைவியராய் இருந்தார் .கர்ப்பம் உற்றதும் ஸ்பென்சர் குடும்பத்தில் வேறொருவருக்கு மணம் முடிக்கப்பட்டார்

சர்ச்சிலின் அறியாத இன்னொரு முகம்!

1943ன் வங்கப் பெரும் பஞ்சம்:

சர்ச்சில் செய்த 40 லட்சம் கொலைகள்:

இன்றும் கூட இந்தியாவில் சிலர், வெள்ளக்காரனே நம்மள ஆண்டிருக்கலாம்..அவன் ஆட்சியில சுபிட்சமா இருந்திச்சி என்றெல்லாம் கூறுவதைக் கேட்கலாம்.

அடிமைகளை, ஆண்டான்கள் எப்படி நடத்தினர் என்கிற வரலாறு புரியாமல் பேசுகின்ற மூடத்தனமான பேச்சு இது.

1942-43 ல் இரண்டாம் உலகப்போர் மும்ம்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்த வங்கப் பஞ்சம், இந்தியத்துணைக்கண்டத்தின் ஈடு இணையற்றப் பேரழிவாகும்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வஞ்சகத்தால் கிட்டத்தட்ட 40 லட்சம் பேரின் உயிரை வாங்கிய இந்தப் பெரும் பஞ்சம் பற்றி, நமது வரலாற்று நூல்களில் ஓரிரு வரிகளே இருக்கும். உலகப் போரின் உச்சத்திலே, ஹிட்லர் எனும் ஜெர்மானிய கொலை வெறியனால், யூதர்கள், ஸ்லோவேக்கியர் மற்றும் ரோமா இன மக்கள் 60 இலட்சம் பேர், 12 ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். ஆனால், நாகரீகக் காவலர்கள் என்று பீற்றிக் கொள்ளும் பிரிட்டிஷார் சர்ச்சில் எனும் மனிதாபிமானமற்ற கொலைகாரத் தலைவரின் ஆணைப்படி, ஒரே ஆண்டில் 40 இலட்சம் இந்தியரைக் குரூரமாகக் கொன்று குவித்தனர்.

இந்த வங்கப் பஞ்சத்தை ஆஸ்திரேலிய அறிவியலறிஞர் டாக்டர்.கிதியோன் போய்லா, மனிதன் உருவாக்கிய ஹோலோகாஸ்ட் என்கிறார்.

1942ல் வங்கத்தில் பசுமைப் புரட்சியே நிகழ்ந்தது. உணவு வகைகளும், தானியங்களும் அதிக அளவில் விளைந்தன. இருப்பினும், அவை எல்லாம்,

பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப் படவேண்டும் என்ரு சர்ச்சில் உத்தரவு போடவே, மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் மாபெரும் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்தப் பஞ்சம் பற்றி ஆய்ந்த மதுஸ்ரீ முகர்ஜி, உயிர் பிழைத்த சிலரைச் சந்தித்து அந்தக் கொடுமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். ” பெரும்பாலான பெற்றோர், பட்டினியால் வாடிய தம் குழந்தைகளை ஆற்றிலும் குளங்களிலும் வீசி எறிந்தனர். பலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை புரிந்து கொண்டனர். அரிசி வடித்த கஞ்சிக்காகப் பிச்சையெடுத்தவர் பலர். இலை தழைகளை உண்டு உயிர் பிழைத்தோரும் உண்டு. இறந்தவர்களை எரிக்கக் கூட எவருக்கும் தெம்பில்லை. 

நாய்களும் ஓநாய்களும் இறந்தவர் உடல்களைச் சாப்பிட்டன.

கொல்கத்தாவிற்குப் பிழைக்கப் போன ஆண்கள் தப்பித்துக் கொண்டனர். பெண்கள் எல்லோரும் குடும்பத்தை காக்க விபச்சாரிகளாய் மாறினர்.

அன்னையர் கொலை செய்தனர். பெண்கள் விபச்சாரிகளாயினர். தந்தைகள் பெண்களை விலை பேசி விற்றனர்.

லேசிக் சர்ஜரியைக் கண்டுபிடித்த மணி பவுமிக்கின் பாட்டி அவரது உணவைப் பேரனுக்குக் கொடுத்ததால், பட்டினியால் செத்ததை இன்றும் மறக்க முடியாது என்கிறார்.

சர்ச்சில் நினைத்திருந்தால் இரண்டே இரண்டு கப்பல்களில் உணவுப் பொருள் வழங்கி இத்தனை உயிர்களைக் காத்திருக்க முடியும். ஆனால், அவரது செக்ரடரி எவ்வளவோ சொல்லியும், அமெரிக்க அதிபரே அறிவுறுத்தியும் கூட ஆணவமாக மறுத்து விட்டார்.

ஹிட்லரின் ஆதரவாளராக விளங்கிய சுபாஷ் சந்திர போஸ், பர்மாவில் இருந்து உணவுப் பொருள் அனுப்ப விழைந்தார். ஆனால் பிரிட்டிஷ் ரகசிய

சென்சாரோ இந்தச் செய்தியை பிரிட்டனுக்கு அனுப்பவே இல்லை.

இந்திய பர்மிய செயலாளராக இருந்த லீபோல்ட் ஏமரி, சர்ச்சிலின் இந்த இட்லர் குணத்தை அறவே வெறுத்தார். 

இந்திய உணவுப் பொருள்களை பிரிட்டிஷ் மற்றும் கிரேக்க வீரர்களுக்கு அனுப்புவது பற்றி கொஞ்சமும் குற்ற உணர்வற்று இருந்த சர்ச்சில், வலிமையான போர் வீரர்களுக்குத்தான் உணவு தேவை. நோஞ்சான் பெங்காலிகளுக்கு அல்ல எனத்திமிராய்க் கூறினார்.

ஏமரியும், வைசிராய் ஆர்சிபால்ட் வேவலும் வங்காலத்துக்கு உணவு வேண்டும் எனக் கேட்ட போது, அந்த காந்தி இன்னும் சாகவில்லையா என்றாராம், சர்ச்சில்.

வேவல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இது போல் ஒரு பஞ்சம் ஏற்பட்டதே இலாஇ. ஹாலந்திற்கு உணவு வேண்டுமெனில் கப்பல்கள் உடனே புறப்படும். ஆனால் பெங்கால் விஷயத்தில் மட்டுமே இது போன்ற குரூரம் காட்டப் படுகின்றது என இலண்டனுக்குத் தெரிவித்தார்.

இத்தனைக்கும் போர் நேரத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து உணவுப் பொருள்களோடு சென்ற கப்பல்கள் வேண்டுமென்றே இந்தியாவைத்தவிர்த்துச் சென்றன என்கிற ஆதாரத்தை முகர்ஜி கண்டுபிடித்துள்ளார்.

இந்தியர்கள் முயல்களைப் போல குட்டி போடுகின்றனர் என போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்தில் சர்ச்சில் கூறியுள்ளார்.

ஏமரியிடம், இந்தியர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள்”என்று கூறியிருக்கிறார் சர்ச்சில். ஜெர்மானியர்களுக்கு அடுத்த காட்டுமிராண்டிகள் இந்தியர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

சர்ச்சில் ஒரு இனவெறியாளர் மட்டுமல்ல பொய்யரும் கூட.

மைக் டேவிஸ் எனும் ஆராய்ச்சியாளர், பிரிட்டிஷ் ஆண்ட 120 ஆண்டுகளில், இந்தியாவில் 31 கொடூரமான பஞ்சங்கள் ஏற்பட்டன. அதற்கு முற்பட்ட, 2000 ஆண்டுகளில் 17 பஞ்சங்களே ஏற்பட்டன என்கிறார். 

இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர் இந்தப் பஞ்சங்களில் இறந்துள்ளனர். இவையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த கொலைகளே என்கிறார் டேவிஸ்.

”இந்தியர்களை பிரிட்டிஷார் நடத்திய விதம் சரியானது..உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தினை இப்படித்தான் நடத்த வேண்டும்” என இட்லர் பாராட்டியிருக்கிறார்.

இந்தியப் போர்வீரர்களின் வீரத்தால் தன் 1945 போரை பிரிட்டன் வென்றது. இருந்தும் பொதுமக்களின் உயிரை மிகவும் துச்சமாக நினைத்தது.

இத்தனை கோடி மக்களின் மரணத்திற்கு இன்று வரை பிரிட்டன் மன்னிப்புக் கேட்கவில்லை.

இதுதான் உயர்ந்த இனத்தின் அடையாளமா? 

இதுதான் அந்த வெள்ளைக்காரத் திருடர்கள் வழங்கிய பொற்கால ஆட்சியா?#ரெபெல்ரவி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுச்சி நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில்

போர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.

இவரது இயற்பெயர் ‘சர் வின்ஸ்டன் லியோனர்டு ஸ்பென்ஸர் சர்ச்சில்’ என்பதாகும்.

இங்கிலாந்தில் உள்ள பிரௌன் ஹீம் அரண்மனையில் 1874-ஆம் ஆண்டு நவம்பர் 30 – ம் நாள் சர்ச்சில் பிறந்தார்.

சர்ச்சிலின் தந்தை இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பனராக இருந்தார். இந்த இருந்த அதே பாராளுமன்றத்தில் அவருக்குப் பின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

அதன் பின் இங்கிலாந்து தேசத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமராகவும் சர்ச்சில் பொறுப்பேற்று, உலகத் தலைவர்களில் ஒருவராகவும், உலக மேதைகளில் ஒருவராகவும் புகழ் பெற்றார்.

சர்ச்சிலின் தாய் அமெரிக்காவில் பிறந்தவர்.

சிறுவயதில் சர்ச்சிலுக்கு விளையாட்டிலும், குறும்புத்தனங்களிலும் இருந்த ஈடுபாடு, படிப்பில் செல்லவில்லை. அதனால் சர்ச்சில் ஒரு விடுதியில் சேர்க்கப்பட்டார். அங்கும் சர்ச்சிலின் கவனம் படிப்பின் பக்கம் திரும்பவில்லை.

எட்டாம் வகுப்பில் சர்ச்சில் மூன்று முறை தோற்றார். ‘விடா முயற்சி வெற்றிக்கு வழி’ என்பதற்கு ஏற்ப மூன்றாவது முறை நுழைவுத் தேர்வை எழுதி சர்ச்சில் வெற்றி பெற்றார்.

காலம் செல்லச் செல்ல கல்வியின் மீது சர்ச்சிலின் கவனம் சென்றது. நுழைவுத் தேர்வில் சராசரி மாணவனுக்கும் கீழே இருந்த சர்ச்சில், முயன்று முயன்று முன்னேறினார். 150 மாணவர்கள் படித்த வகுப்பில், சர்ச்சில் எட்டவாது இடத்தைப் பிடித்தார்.

இராணுவப் பயிற்சி முடிந்ததும் சர்ச்சில் காலாட் படையில் சேர்ந்தார். பணியின் காரணமாக அவர் இந்தியாவிற்கும் வந்தார். சிறிது காலத்தில் இந்தப் பணியில் சர்ச்சிலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் தாய் நாடு திரும்பினார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளிவந்த ‘மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிக்கையில் பணியாற்ற சர்ச்சில் சென்றார். அப்போது தென்னாப்பிரிக்காவில் போர் தொடங்கியது.போர் முனைச் செய்திகளைச் சேகரிக்கும் பணியில் சர்ச்சில் ஈடுபட்டார். அதைக் கண்ட அந்த நாட்டு அரசு சர்ச்சிலை சிறையில் அடைத்தது. ஒரு நாள் அந்தச் சிறையிலிருந்து சர்ச்சில் தப்பினார்.

இனி தமது தாயகத்திற்குச் செல்வதென்றும், அரசியலில் ஈடுபடுவதென்றும் முடிவு செய்த ச்சசில் இங்கிலாந்து திரும்பினார்.

1900 – ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்ச்சில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவே சர்ச்சிலின் முதல் அரசியல நுழைவு. அப்போது அவருக்கு வயது 26. இதிலிருந்து தான் சர்ச்சலின் பொது வாழ்க்கை தொடங்கியது.

சர்ச்சில் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். கேட்போர் வியக்கும் அளவுக்கு ஆங்கிலத்தில் உரையாற்றும் ஆற்றல் வாயந்தவர். அதனால், தமது மேடைப் பேச்சைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்க சர்ச்சில் திட்டமிட்டார்.

ஏனெனில், அப்போது இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது. அந்த ஊதியத்தை கொண்டு பொது வாழ்க்கையில் உழைக்க முடியாது. அதனால் மேடைப் பேச்சின் வழியாக வருமானம் திரட்ட வேண்டிய அவசியம் சர்ச்சிலுக்கு ஏற்பட்டது.

அமெரிக்கா சென்று சர்ச்சில் ஐந்து மாதங்கள் தங்கினார். ஞாயிறு தவிர மற்ற நாட்களி எல்லாம் மேடையில்முழங்கினார். அவர் எதிர்பார்த்த வருமானத்தைவிட அதிகத்தொகை கிடைத்து.

தாயகம் திரும்பினார். தாம் கொண்டு வந்த பணத்தையெல்லாம் அரசியல் பணிகளுக்கு சர்ச்சில் செலவிட்டார்.. எழுத்தாளர்கள் எல்லாம் மக்களைக் கவரும் வகையில் பேசிவிட முடியாது. மேடையில் சிறப்பாகப் பேசுபவர்கள் எல்லாம் சிறந்த எழுத்தாளர்களாக உருவாகிவிட இயலாது. ஒரு சிலருக்குத்தான் எழுத்தும் பேச்சும் இணைந்து மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றுத் தரும் அத்தகைய சிறப்பு வின்ஸ்டன் சர்ச்சிலிடம் இருந்தது.

மேடைப் பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையைக் கடைப்பிடிப்பர். ஒருவர் எழுச்சியோடு பேசி மக்களிடம் வரவேற்பைப் பெறுவர்; மற்றொருவர் இலக்கியத்தை இணைத்துப் பேசி மக்களைக் கவர்வர்.

வின்ஸ்டன் சர்ச்சில் தம் மேடைச்சொற்பொழிவைக் கொண்ட விதம் புதுமையானதாகும்… இன்றைய சொற்பொழிவாளர்களும் கடைபிடிக்க வேண்டியவையாகும்.

சர்ச்சில் மேடையில் சிறப்பாகப் பேசியதற்கு, “நான் மேடையில் ஏறியதும் முன்வரிசையில் இருப்பவர்களை எல்லாம் மூடர்கள் என்று எண்ணிக் கொள்வேன்! நான் அப்படி எண்ணிக் கொள்வதால் என் உள்ளத்திலிருந்து தங்கு தடையின்றி வார்த்தைகள் வெளிப்படும்.

அதே நேரத்தில் ஆங்காங்கே நின்று கொண்டு எனது சொற்பொழிவுகளைக் கேட்போரை நான் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டேன்… நான் அப்படி எண்ணிக் கொள்வதால், வரலாற்றுப் பிழையின்றி என்னால் பேச முடிகிறது… மொத்தத்தில் மூடர்களும் அறிவாளிகளும் நிறைந்த அவையில் பேசுகிறோம் என்று நான் எண்ணிக் கொள்வதால் இரண்டு தரப்பாரையும் திருப்திப்படுத்தும் வகையில் எனது சொற்பொழிவை அமைத்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த அணுகுமுறைகள் வின்ஸ்டன் சர்ச்சில் மேடை முழக்கத்திற்குத் தனித்துவத்தைத் தேடித் தந்தது.!

முதல் உலக மகாயுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் இங்கிலாந்து வெற்றி காண, சர்ச்சிலின் அறிவும், ஆற்றலும் அவசியம் என இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவு செய்த்து.

அதனால் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு சர்ச்சிலிடம் ஒப்படைகப்பட்டது. இங்கிலாந்தின் வெற்றிக்காக சர்ச்சில் இரவு பகலாக உழைத்தார். இருப்பினும் சக அரசியல்வாதிகளின் பொறாமைத் தீக்கு சர்ச்சில் பலியானார்.

அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்ட சர்ச்சில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வி சர்ச்சிலைச சோர்வடையச் செய்தது. அதனால் அரசியல் பணிகளிலிருந்து சர்ச்சில் மெல்ல மெல்ல ஒதுங்கினார்.

‘சும்மா இருப்பது என்பது முடிவுக்கு வந்த சர்ச்சில், எழுத்துப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

‘உலக நெருக்கடி’ என்ற தலைப்பில் சர்ச்சில் ஒரு நூலை எழுதினார். இந்த நூல் இங்கிலாந்து மக்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அதனால் அதே தலைப்பில் நான்கு பாகங்களை சர்ச்சில் எழுதினார். அந்த நூல்களும் அவருக்குப் பெருமை தேடித் தந்தன.

அடுத்து, ‘மார்லபோவின் வாழ்வும் காலமும்’ என்ற தலைப்பில் சர்ச்சில ஒரு நூலை எழுதினார். எழுத்தாற்றலுக்கு இன்றும் சான்றாகத் திகழ்வது இந்த நூலே.

சர்ச்சிலின் நூல்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைக் கண்ட பத்திரிக்கையாளர்கள், சர்ச்சிலின் கட்டுரைகளுக்கு அவர் வீட்டின் முன் காத்துக் கிடக்கின்ற நிலை வந்தது.

இங்கிலாந்திலிருந்து வெளிவந்த மிகப்பெரிய பத்திரிக்கைகள் எல்லாம் சர்ச்சிலின் கட்டுரைகளை வெளியிட்டு பெருமையடைந்தன. இந்த வழியாகவும் சர்ச்சிலுக்கு வருமானம் வந்தது.

மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர் ஆகிவற்றிலிருந்து ஒதுங்கி இருந்த சர்ச்சில் எழுத்துத் தொழிலில் ஈடுபட்டு சாதனை படைத்தார். இந்த நேரத்தில் ஓவியம் வரைவதிலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.

‘முயன்றால் முடியாதது எது?’ – இது சர்ச்சிலின் தாரக மந்திரமாயிற்று. ஓவியமும் சர்ச்சிலுக்கு மிகச்சிறப்பாக வந்தது இங்கிலாந்து மக்கள் சர்ச்சிலின் ஓவியத்திலுள்ள தனித் தன்மைகளைக் கண்டு வியந்தனர்.

ஓயாத உழைப்பும், விடா முயற்சியும், எடுத்த காரியத்தில் வெற்றி காண வேண்டும் என்ற ஆவலும் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவன் புகழ் உச்சிக்குப் போவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்பதற்கு சர்ச்சில் மிகச் சிறந்த சான்றாகும்.

அடுத்து வந்த தேர்தலில் சர்ச்சில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.

ஜெர்மன் சர்வாதிகாரி முஸோலினி படையும் ஒன்று சேர்ந்து உலகத்தையே கைப்பற்ற முயன்றன. அதன் முதல் கட்டமாக 1939-ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப்படைகள் போலந்தின் மீது போர் தொடுத்தன.

போலந்தைக் கைப்பற்றிய ஹிட்லர் இங்கிலாந்தையும் கைப்பற்ற முயன்றான். அதை அறிந்த இங்கிலாந்தும், பிரானசும் ஜெர்மனிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தன.

இங்கிலாந்து அரசு ஹிட்லரையும் முஸோலினியையும் எதிர்ப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை யோசித்தது. இது உலகத்தை இரண்டாவது மகாயுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்று எண்ணின.

இந்தச் சோதனையான கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு சர்ச்சில் ஏற்பதே சரியானதாகும் என்ற முடிவுக்கு வந்தனர். அதன்படி சர்ச்சில் மீண்டும் பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள்? எத்தனை மேடு பள்ளங்கள்? அதை எல்லாம் கடந்து வந்த மனிதனே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறான். அந்த வகையில் சர்ச்சில் தமது வாழ்க்கையில் எத்தனை சிக்கல்களை எதிர்நோக்கினார் என்பதை அவரது வாழ்க்கை முழுவதும் காணலாம்.

அரசியலில் நுழைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர்; அதற்குப் பின் வந்த உலக மகாயுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சர்; அதன்பின் வந்த தேர்தலில் தோல்வி; மீண்டும் பாதுகாப்பு அமைச்சர் பதவி என்று வண்டிச்சக்கரம் போன்று சர்ச்சிலின் வாழ்க்கை அமைந்தது.

கிடைத்த பொறுப்புகளில் தனக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு சர்ச்சில் செயல்பட்டார். எதிரிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக எடை போட்டு அதற்குத் தக்கபடி சர்ச்சில் செயல்படுவதில் கைதேர்ந்தவர், அதனால் தான் மீண்டும் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பதவி சர்ச்சிலைத் தேடி வந்தது.

உலகம் எதிர்பார்த்தது போன்று இரண்டாம் உலகப் போர் வந்து சேர்ந்தது. உலகை தமது காலடியில் கொண்டு வர வேண்டும் என்ற பேராசையால் ஹிட்லரும், முஸோலினியும் உலகப் போருக்கு காரணமாயினர். எதிரிப் படைகளை தடுப்பதிலும், எதிரி நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பதிலும் சர்ச்சில் தனிக் கவனம் செலுத்தினார். அதற்காக அவர் இரவு பகலாக உழைத்தார். ‘உழைப்பு என்றாவதொரு நாள் ஜெயித்தே தீரும்’ என்பதற்கு ஏற்ப இங்கிலாந்தின் பிரதமர் பதவியும் சர்ச்சிலைத் தேடி வந்தது.

பிரதமர் பதவியை ஏற்றதும் ஹிட்லர் – முஸோலினிக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டும் பணியில் சர்ச்சில் ஈடுபட்டார். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய வலுவோடு ஹிட்லர் படையை சர்ச்சில் எதிர்த்து நின்றார்.

ஹிட்லரின் விமானப்படை இங்கிலாந்துக்குள் புகுந்து குண்டுமழை பொழிந்தன.. சர்ச்சிலின் வீட்டுக்கு அருகிலும் குண்டு விழுந்தது. அப்போதும் ஒரு இராணுவ வீரனுக்குரிய கம்பீரத்தோடு, படை வீரர்களுக்கு வழிகாட்டுவதிலும், பொது மக்களுக்குத் தைரியம் கொடுப்பதிலும் சர்ச்சில் ஈடுபட்டார். அவரின் இந்தக் குணங்கள் அனைவராலும் வியந்து பேசப்பட்டது.

சர்ச்சிலின் தலைமையும், இங்கிலாந்து மக்களின் எழுச்சியும், தேச நாடுகளின் ஒத்துழைப்பும் ஜெர்மன் படையை தோல்வியடையச் செய்தன. உலக நாடுகள் எல்லாம் சர்ச்சிலின் தீரத்தையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தன.

இங்கிலாந்தின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்த சர்ச்சில் 1965-ல் மறைந்தார்.

வெள்ளைக்காரத் திருடர்கள் வழங்கிய பொற்கால ஆட்சி ர் அவரிடம் சர்ச்சிலின் தாயார் துணைவியராய் இருந்தார் .கர்ப்பம் உற்றதும் ஸ்பென்சர் குடும்பத்தில் வேறொருவருக்கு மணம் முடிக்கப்பட்டார்


Monday, 21 October 2019

FAMINE IN BRITISH INDIA 1876-78




FAMINE IN  BRITISH INDIA 1876-78

Map of the British Indian Empire
(1880), showing the different 
provinces
 and native states, including those
affected by the Great Famine of 1876–1878.


The Great Famine of 1876–1878 (also the Southern India famine of 1876–1878 or the Madras famine of 1877) was a famine in India under Crown rule. It began in 1876 after an intense drought resulting in crop failure in the Deccan Plateau.[1] It affected south and southwestern India (the British presidencies of Madras and Bombay, and the princely states of Mysore and Hyderabad) for a period of two years. In its second year famine also spread northward to some regions of the Central Provinces and the North-Western Provinces, and to a small area in the Punjab.[2] The famine ultimately covered an area of 670,000 square kilometres (257,000 sq mi) and caused distress to a population totalling 58,500,000.[2] The death toll from this famine is estimated to be in the range of 5.5 million people.[3

Preceding events
Grain destined for export stacked
on Madras beaches (February 1877).

Grain destined for export stacked on Madras beaches (February 1877).
In part, the Great Famine may have been caused by an intense drought resulting in crop failure in the Deccan Plateau.[1] It was part of a larger pattern of drought and crop failure across India, China, South America and parts of Africa caused by an interplay between a strong El Niño and an active Indian Ocean Dipole that led to between 19 and 50 million deaths.[4]

The regular export of grain by the colonial government continued; during the famine the viceroy, Lord Lytton, oversaw the export to England of a record 6.4 million hundredweight (320,000 tons) of wheat, which made the region more vulnerable. The cultivation of alternate cash crops, in addition to the commodification of grain, played a significant role in the events.[5][6]
Engraving from The Graphic,
October 1877, showing two forsaken
children in the 
Bellary district
of the 
Madras Presidency.

The famine occurred at a time when the colonial government was attempting to reduce expenses on welfare. Earlier, in the Bihar famine of 1873–74, severe mortality had been avoided by importing rice from Burma. The Government of Bengal and its Lieutenant-Governor, Sir Richard Temple, were criticised for excessive expenditure on charitable relief.[7] Sensitive to any renewed accusations of excess in 1876, Temple, who was now Famine Commissioner for the Government of India,[2] insisted not only on a policy of laissez faire with respect to the trade in grain,[8] but also on stricter standards of qualification for relief and on more meagre relief rations.[2] Two kinds of relief were offered: "relief works" for able-bodied men, women, and working children, and gratuitous (or charitable) relief for small children, the elderly, and the indigent.[9]

Famine and relief
Engraving from The Graphic,
October 1877, showing the plight of
animals as well as humans in Bellary district.

Engraving from The Graphic, October 1877, showing two forsaken children in the Bellary district of the Madras Presidency.

Engraving from The Graphic, October 1877, showing the plight of animals as well as humans in Bellary district.

People waiting for famine relief in Bangalore. From the Illustrated London News (20 October 1877).

A contemporary print showing the distribution of relief in Bellary, Madras Presidency. From the Illustrated London News (1877).

Famine stricken people during the famine of 1876-78 in Bangalore.
People waiting for famine relief
 in 
Bangalore. From the Illustrated
London News
 (20 October 1877).

The insistence on more rigorous tests for qualification, however, led to strikes by "relief workers" in the Bombay presidency.[2] In January 1877, Temple reduced the wage for a day's hard work in the relief camps in Madras and Bombay[10]—this 'Temple wage' consisted of 450 grams (1 lb) of grain plus one anna for a man, and a slightly reduced amount for a woman or working child,[11] for a "long day of hard labour without shade or rest."[12] The rationale behind the reduced wage, which was in keeping with a prevailing belief of the time, was that any excessive payment might create 'dependency' (or "demoralisation" in contemporaneous usage) among the famine-afflicted population.[10]

Temple's recommendations were opposed by some officials, including William Digby and the physician W. R. Cornish, Sanitary Commissioner for the Madras Presidency.[13] Cornish argued for a minimum of 680 grams (1.5 lb) of grain and, in addition, supplements of vegetables and protein, especially if the individuals were performing strenuous labour in the relief works.[13] However, Lytton supported Temple, who argued that "everything must be subordinated to the financial consideration of disbursing the smallest sum of money."[14]
A contemporary print showing the
distribution of relief in 
BellaryMadras Presidency.
From the 
Illustrated
London News
 (1877).

In March 1877 the provincial government of Madras increased the ration halfway towards Cornish's recommendations, to 570 grams (1.25 lb) of grain and 43 grams (1.5 oz) of protein in the form of daal (pulses).[13] Meanwhile, many more people had succumbed to the famine.[15] In other parts of India, such as the United Provinces, where relief was meagre, the resulting mortality was high.[15] In the second half of 1878, an epidemic of malaria killed many more who were already weakened by malnutrition.[15]

By early 1877, Temple proclaimed that he had put "the famine under control". Digby noted that "a famine can scarcely be said to be adequately controlled which leaves one-fourth of the people dead."[14]

All in all, the Government of India spent Rs. 8 1/30 million in relieving 700 million units (1 unit = relief for 1 person for 1 day) in British India and, in addition, another Rs. 7.2 million in relieving 72 million units in the princely states of Mysore and Hyderabad.[15] Revenue (tax) payments to the amount of Rs. 6 million were either not enforced or postponed until the following year, and charitable donations from Great Britain and the colonies totaled Rs. 8.4 million.[15] However, this cost was minuscule per capita; for example, the expenditure incurred in the Bombay Presidency was less than one-fifth of that in the Bihar famine of 1873–74, which affected a smaller area and did not last as long.[12]
Famine stricken people
during the famine of 1876-78 in Bangalore.


Famine in Mysore State
Two years before the famine of 1876, heavy rain destroyed ragi crops (a type of millet) in Kolar and Bangalore. Scant rainfall the following year resulted in drying up of lakes, affecting food stock. As a result of the famine, the population of the state decreased by 874,000 (in comparison with the 1871 census).

Sir Richard Temple was sent by the British India Government as Special Famine Commissioner to oversee the relief works of the Mysore government. To deal with the famine, the government of Mysore started relief kitchens. A large number of people journeyed to Bangalore, when relief was available. These people had to work on the Bangalore-Mysore railway line in exchange for food and grains. The Mysore government imported large quantities of grain from the neighbouring British ruled Madras Presidency. Grazing in forests was allowed temporarily, and new tanks were constructed and old tanks repaired. The Dewan of Mysore State, C. V. Rungacharlu, in his Dasara speech estimated the cost to the state at 160 lakhs, with the state incurring a debt of 80 lakhs.[16]

Aftermath
The mortality in the famine was in the range of 5.5 million people.[3] The excessive mortality and the renewed questions of "relief and protection" that were asked in its wake, led directly to the constituting of the Famine Commission of 1880 and to the eventual adoption of the Indian Famine Codes.[15] After the famine, a large number of agricultural labourers and handloom weavers in South India emigrated to British tropical colonies to work as indentured labourers in plantations.[17] The excessive mortality in the famine also neutralized the natural population growth in the Bombay and Madras presidencies during the decade between the first and second censuses of British India in 1871 and 1881 respectively.[18] The famine lives on in the Tamil and other literary traditions.[19] A large number of Kummi folk songs describing this famine have been documented.[20]

The Great Famine had a lasting political impact on events in India. Among the British administrators in India who were unsettled by the official reactions to the famine and, in particular by the stifling of the official debate about the best form of famine relief, were William Wedderburn and A. O. Hume.[21] Less than a decade later, they would found the Indian National Congress and, in turn, influence a generation of Indian nationalists. Among the latter were Dadabhai Naoroji and Romesh Chunder Dutt for whom the Great Famine would become a cornerstone of the economic critique of the British Raj.[21]

In his book Late Victorian Holocausts, Mike Davis called the famine a "colonial genocide" perpetrated by Great Britain.[how?] Some, including Niall Ferguson, dispute this judgement,[how?] while others, including Adam Jones, affirm it.[how?][22][23][undue weight? – discuss]

See also
Famines, Epidemics, and Public Health in the British Raj
Timeline of major famines in India during British rule
Company rule in India
Famine in India
Drought in India
Great Famine (Ireland)
Bengal famine of 1943
El Niño-Southern Oscillation
William Digby
Late Victorian Holocausts
Northern Chinese Famine of 1876–79

Great Eastern Crisis



Friday, 20 October 2017

BRITISH ABSORBED INDIAN WEALTH AND FLEW AWAY


BRITISH ABSORBED 
INDIAN WEALTH AND FLEW AWAY



சார் , பிரிட்டீஷ் அரசு வரவில்லை என்றால் நீங்கலாம் படிச்சுருக்க முடியாது. ரயில், மருத்துவம், கல்வி கிடைத்திருக்க அவன் தான் காரணம்? இப்படி பொதுவாக கிருஷ்தவ மதம் மாற்றும் பாதிரியார்கள் , பெரியார்(ஈவேரா) பகுத்தறிவு கூட்டங்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறதா? இதைபற்றி உங்கள் விளக்கம் மாரிதாஸ்?{கேள்வி: கார்த்திக்}
-
1912ல் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் வெளியிடப்படுகிறது. அது என்னவென்றால் இந்திய நிறுவனங்கள் எதுவும் ரயில் இஞ்சின் சார்ந்த எந்த உற்பத்தியும் செய்ய கூடாது, முழுமையாக தடை செய்கிறோம். எதற்கு இந்திய நிறுவனங்கள் தயாரிக்க கூடாது?
1843ல் ரயில் பிரிட்டீஷ் ரயில் இந்தியாவில் அனுமதித்த போது என்ன காரணம் என்று அவர்களே வெளியிட்டு உள்ளனர். அந்த விவகாரத்தை பின்னர் விளக்குகிறேன். பின்னர் மெல்ல 1860களில் ரயில் இந்தியாவில் முழுமையாக ஓட தொடங்கின. இந்த நேரம் அந்த ரயில் இஞ்சீன் பழுதுபார்க்கும் வேலை சில நேரம் இந்தியர்களிடம் கொடுக்கபட்டது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் 

1900களை தாண்டியும் கூட 90% ரயில் ஊழியர்கள் இந்தியர்கள் தான். இஞ்சின் ஓட்டுவது, ஸ்டேசன் மாஸ்டர் என்று அனைத்து பெரிய பொறுப்பிலும் ஆங்கிலேயர் இருந்தனர். இந்தியர்களுக்கு எந்த ஊதிய உயர்வும் கிடையாது, எந்த பதவி உயர்வும் கிடையாது - சம்பளம் மிக மிக மிக குறைவு.
இந்த நிலையிலும் பழுதுபார்க்கும் வேலை 1862ல் இந்தியர்கள் செய்ய அனுமதி அளித்த அடுத்த 10 வருடத்தில் இந்தியர்கள் தாங்களே ரயில் இஞ்சின் தயாரிக்கும் அளவுக்கு திறமை பெற்று - இஞ்சின் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதாவது கற்றுகொள்வது கொஞ்சம் அதிகம் ஆர்வம் உள்ள ஆட்கள் இவர்கள். எனவே 1878களில் Indian locomotives உற்பத்தி அதிகம் ஆக - உடனே தடை செய்தார்கள் பிரிட்டீஷ். இத்தனைக்கும் மிக மிக குறைந்த செலவில் செய்த போதும் தடை விதிக்கபட்டது. காரணம் அவர்கள் தொழில்நுட்பம் இந்தியர்கள் கைக்கு செல்ல கூடாது. ஆனால் இந்தியர்கள் உழைப்பில் கிடைக்கும் வருமானம் மட்டும் இவர்களுக்கு தேவை. 

இது அனைத்து துறைகளிலும் நடந்த உண்மை. அதாவது இவர்கள் எந்த தொழில் நுட்பத்தையும் இந்தியர்க்கு கொடுத்துவிட்டு போகவில்லை.
ரயிவே துறையில் கிடைத்த வருமானம் முழுக்க பிரிட்டிஷ் அரசுக்கு சென்றது. அதை என்ன இந்தியாவிலா முதலீடாக செய்தனர்??? இல்லை கிடைத்தா லாபத்தில் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தனரா????
எடுத்துக்காட்டுக்கு 90,000இந்திய மக்கள் வருமானமும் அன்று ஒரு பிரிட்டீஷ் ஸ்டேட் செகரட்டரி ஒரு மாத சம்பளமும் ஒன்று.

ரயில்வே துறையில் இந்தியர்கள் நாயை விட கேவலமாக வேலை பார்த்து பற்றி என்னால் இன்னும் அதிகம் பேச முடியும். இன்று இந்தியாவிடம் இருக்கும் அத்தனை தொழில்நுட்பமும் இந்தியா தானே உருவாக்கிக்கொண்ட விஷயம். இந்தியர்கள் முட்டாள்கள் இல்லை வாய்ப்புகள் கொடுக்காமல் மறுக்கபட்டு ஒடுக்கப்பட என்ன செய்ய முடியும் இந்தியவர்களால்? இதை இத்தோடு விட்டு விட்டு அடுத்து ஆடை உற்பத்திக்கு செல்வோம்.

ஆடை உற்பத்தி ?

பிரிட்டீஸ் விட்டு செல்லும் போது இந்தியாவில் வீட்டுக்கு 1,2 சேலை கூட கிடையாது. அந்த அளவுக்கு ஆடை என்பதே ஆடம்பரம் என்ற நிலையில் மிக கொடூரமான ஒரு பெரும் அழிவை இந்தியர்களின் ஆடை உற்பத்தி தொழிலில் உருவாக்கி இருந்தார். 

இந்தியர்கள் தான் உலகத்தில் பருத்தி விளைச்சல் , அதை எடுத்து நூல் செய்து , நூலைகொண்டு ஆடை நெய்யும் புத்திசாலித்தனம் முதலில் பெற்றவர்கள். woven ஆடைகளும் பிரமாதமாக செய்வார்கள். இதை பெரும்பாலான கிரேக்க வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏறக்குறைய 3000வருடம் மேலாக இந்த நாட்டில் நல்ல பருத்தி ஆடைகளை இவர்கள் உடுத்தினர், அதை சார்ந்த தொழில் நுட்பம் இவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக இருந்துவந்தது. அலெக்சாண்டர் வரலாற்றில் இதன் குறிப்புகள் உண்டு. பெங்கால் , ஆந்திரா , தமிழ் நாடு, குஜராத் என்று எல்லா இடங்களிலும் 17ஆம் நுற்றாண்டு இறுதி வரை கூட மற்றநாடுகளுக்கு ஏற்றுமதி நடந்தது. இதற்கு பக்கா ஆதாரங்கள் இந்தியாவிடம் உண்டு. துருக்கி , ஜாவா , சீனா , ஜப்பான் என்று ஏற்றுமதி ஆனா வரலாறு உண்டு.

சரி ஏன் அவை அடியோடு அழிந்து போனது???

வேறு என்ன காரணம் பிரிட்டீஷ். இவர்கள் காலனிநாடுகளில் எங்கேயும் இந்தியர்கள் ஆடை இறக்குமதிக்கு 70%முதல் 80%வரை வரி விதித்தனர். அது ஏன்? ஏன் என்றால் பிரிட்டீஷ் உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் ஆடை விலை மிக மிக அதிகம், அதே ஆடை இந்தியர்கள் மிக குறைந்த செலவில் ஏற்றுமதி செய்ய உலகமே இந்தியர்களை விரும்பியது. அதை எப்படி தடுப்பது???? போடுடா வரியை... எவனும் இந்தியர்கள் ஆடையை வாங்க கூடாது , வாங்க முடியாது. அந்த அளவு விலை ஏறியது.
தொழில் போட்டிக்கு வக்கு இல்லாத பிரிட்டிஷ் தொழில்சாலைகள் அதிகாரம் கொண்டு இந்திய தொழில்சாலைகளை ஒடுக்கினர்.
காலணி நாடுகளில் இந்தியர்கள் நெய்த ஆடைக்கு பல மடங்கு வரி விதிக்க - என்ன மிச்சம் இருக்கும் இந்திய தொழிலாளர்க்கு? வியாபாரிகளுக்கு? நாசம் அல்ல - சர்வ நாசம் ஆகிப்போனது இந்த அற்புதமான மக்களின் ஆடை செய்யும் தொழில்நுட்பம், வியாபாரம்.

பெங்கால் பகுதியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 16,000,000 அதாவது இன்றைய மதிப்பில் சுமார் லட்சம் கோடி வருமானம் ஈட்டிய நாட்கள் 17ஆம் நூற்றாண்டு. {2469.0% விலை தங்கள் குறைவாக கிடைத்த காலம். அதாவது சுமார் 1கிராம் தங்கம் 1.7ரூபாயாக இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என்று கொஞ்சம் கற்பனை செய்யவும்.}
{15ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை கூட இந்தியா முழுவதும் தங்கம் அதிகம் கிடைக்க காரணமே இந்தியர்களின் வியாபார திறமையும் , தொழில் திறமையும் தான். அதை வாஸ்கோடகாம வந்த பொழுதே குறிப்பாக அறியலாம். பின்னர் இந்த தேசம் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர் அனைவரும். இந்தியா சென்றால் தங்கம் நிச்சயம் கிடைக்கும் என்ற பேராசையில் இந்த தேசம் சூறையாடியது உலகமே.}
ஆக இறுதியில் தனக்கே ஆடை இல்லாமல் நின்றான் இந்தியன். இதை இப்படி எடுத்துகொள்ளுங்கள் உலகத்தில் 4ல் ஒருவர் இந்தியாவில் உற்பத்தியான ஆடையை அணிந்தனர் 17ஆம் நூற்றாண்டு வரை அது தான் உண்மை. 18 ஆம் நுற்றாண்டு தொடக்கத்தில் - அப்படி இருந்த நாடு தொழில் வளர்ச்சி நாசம் ஆகி நடுதெருவுக்கு வந்தது இந்த முட்டாள் தனமான பிரிட்டீஷ் வியாபார உக்தியால்.

ஏன் முட்டாள்கள் என்கிறேன்???? இங்கே காலணி நாடுகளில் வியாபாரம் நல்ல நிலையில் இருந்தால் தானே வரி வழூல் செய்து பிரிட்டீஷ் ஆட்சியரும் நல்லா இருக்குலாம் காலணி நாட்டு மக்களும் நல்லா இருக்காலம். அப்போ இந்திய தொழில் வளர்ச்சி மறைமுகமாக அவர்களுக்கும் லாபம் தானே? ஆனால் தாங்கள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் , தாங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் - இந்தியர்கள் அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முட்டாள் தனமான அதிகார புத்தியால் பொருளாதாரம் நாசம் ஆகி போனது.

ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால்:




1865களில் அமெரிக்கன் சிவில் வார் ஆரம்பித்த நேரத்தில், இரண்டாவது முதல் உலக போர் ஆரம்பமான காலத்தில் இந்த இரண்டு காலத்திலும் ஏற்றுமதி கட்டுபாடுகளை தளர்த்தியது பிரிட்டீஷ் - அந்த இரண்டு நேரத்திலும் இந்தியர்கள் மீண்டு எழுந்து மீண்டும் உலக சந்தையை பிடித்தனர். அதாவது 1865ல் தளரத்திய உடன் மீண்டும் எங்கள் இந்தியர்கள் ஆடை உற்பத்திக்கு பெரிய அளவில் தேவை உருவாக 1896ல் மொத்த உலக உற்பத்தியல் இந்தியர்கள் 8-9% பங்களிப்பை வழங்கினர். ஆனால் மீண்டும் முடக்கிவிட்டனர். அடுத்து முதல் உலகப்போர் முடிவில் 1936ல் உலக ஆடைகள் உற்பத்தியில் இந்தியர்களின் பங்கு என்ன தெரியுமோ ? 68%. அதாவது உலகத்தில் 10ல் 7பேர் இந்தியர்கள் ஆடையை அணியும் அளவுக்கு பெரும் வளர்சி பெற , மீண்டும் ஆடை உற்பத்தி, இறக்குமதிக்கு மீண்டும் வரி கொண்டு நசிக்கி நாசம் செய்தனர் பிரிட்டீஷ்.
அமெரிக்கன் ஆயுதங்களை தயாரிப்பதில் வெற்றிபெற்ற ஒரே காரணம் தான் பிரிட்டிஷ் கீழ் இந்தியா வர காரணம். வேறு எந்த காரணமும் இல்லை. தொழில் , வியாபாரம் எல்லாமே இந்தியர்கள் பலமடங்கு அவர்களை விட முன்னேறிய சமூகமாக இருந்தனர். இது தான் அசைக்க முடியாத உண்மை.

கல்வி???

அந்த கல்லூரி இந்த கல்லூரி கட்டி கொடுத்தான் என்ற கூப்பாடு இருக்கட்டும் 200 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு கல்வி கொடுத்துவிட்டு சென்றான் என்றால் எடுத்து புள்ளிவிவரம் பாருங்கள். 1947இந்தியா சுதந்திரம் வாங்கும் பொது 12% தான் படித்தவர்கள் என்று கூறுவது கூட சரியான கணிப்பு அல்ல , உண்மையில் அது 7%க்கும் கீழ்.
அதாவது 200வருடம் இந்த பிரிட்டீஷ் ஆட்சியில் 7% படித்து முன்னேறி இருந்தோம். 1947க்கு பின் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்த இந்த கடந்த 60வருடத்தில் ஏறக்குறைய 80% படித்தவர்கள் என்ற நிலையை எட்டிவிட்டோம். இந்த விசயத்தில் யார் சிறந்தவர்கள்????

இந்த கல்வி முறையே அவன் கொடுத்த பிச்சை என்று பேசும் விச பாம்புகள் இந்த பாதரியார்களுக்கு நான் கூற விரும்புவது கொஞ்சம் 12ஆம் நூற்றாண்டுவரை கொரியா , சீனா , இந்தோனேசியா என்று ஆசியா முழுவதும் சில ஐரோப்பிய தேச தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் எங்கே படித்தவர்கள் என்று கொஞ்சம் விவரம் தேடி படிக்கவும்.
நாலாந்தா , விகரமாசிலா , ஓடந்தபுரி , மகவிஹரா என்று நாங்கள் தான் உலகம் முழுவதும் கல்விகளை சென்று சேர்த்தவர்கள். 12ஆம் நூற்றாண்டு வரை உலகமே கல்விக்கு இந்தியா தான் சிறந்த இடமாக இருந்தது.
2,000ஆசிரியர்கள் , 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்தது உலகத்தில் எங்க நாலந்தா கல்வி கூடத்தில் தான். அது ஏதோ இன்று நேற்று அல்ல - 1200கிபி வரை நன்றாவே இயங்கியது. இது போல பல்கலைக்கழகம் சென்று கல்வி பயின்ற ஆசிரியர்கள் பின்னர் அங்கிருந்து பிரிந்து குருகுலம் நடத்தி கல்வியை கொடுப்பது இந்த இந்தியாவின் கலாச்சாரம்.
ராஜா ராம்மோகன் ராய் 19ஆம் நுற்றாண்டில் கிராமங்களில் பள்ளிகள் தொடங்கி கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்ததாக எங்களுக்கு வரலாறு இருக்கு. இது போல பல மனிதர்கள் பல முயற்சிகள் கிராமங்களில் செய்தனர்.

அதாவது எல்லோரும் காசி , நலந்தா என்று சென்று படித்துவிட்டு பின்னர் நாடு , ஊர் திரும்பி மக்களுக்கு கல்வி கொடுப்பது என்று சுமார் 2000வருட பழைய குருகுல கல்விமுறை இந்த இந்தியாவில் இருந்தது. உலகம் முழுவது 12ஆம் வகுப்பு வரை படிப்பதே காரணம் இந்தியாவில் குருகுல கல்வி 12ஆண்டுகள் சொல்லி கொடுத்த பாதிப்பு தான் ஒழிய வேறு இல்லை.
{ஜாதி கொண்டு கல்வி மறுக்கும் கீழ்தரமான புத்தி என்னவோ இந்தியார்களுக்கு 800கிபிக்கு பின் தான் வந்திருக்க வேண்டும். ஏன் என்றால் அதுவரை அனைவருமே கல்வி கூடங்களுக்கு சென்று படித்த வரலாறு உண்டு. குலம் என்பது பிறப்பால் அல்ல என்ற விஷயம் மறந்து- பிறப்பால் ஜாதியஅடையாளம் என்ற கட்டமைப்பு என்று உருவானதோ அன்று நாசமாக தொடங்கியது இந்த மண். அதற்காக பிரிட்டீஷ் ரெம்ப நல்லவன் கிடையாது. அங்கேயும் அடிமைகள் காலச்சரம் இருந்து வந்தது.}

சரி எதனால் கல்விமுறை இங்கே பிரிட்டீஷ் கொண்டுவந்தது?

1820களில் மிக பெரிய அளவில் பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து நாடுகளிலும் மதம் மாற்றும் வேலைக்கு அனுப்பபட்டார்கள், அவர்கள் Evangelist. இந்த Evangelist வேலை மதம் மாற்றுவது - பிரிவினைகளை உருவாக்கி அதன் மூலம் மதம் மாற்ற வேண்டும். இங்கே மட்டும் அல்ல அனைத்து காலணி நாடுகளிலும் இந்த கூட்டம் சென்று வேகமாக வேலை செய்தது. எனவே ஆங்கிலம் கட்டாயம் ஆக்கபட்டது, அவர்கள் கூறும் வரலாறு தான் படிக்க வேண்டும் என்ற நிலை உருவானது.
இன்றுவரை வாஸ்கோடா காமா முதல் முதலில் இந்தியா வந்தார் என்று தான் படிக்கிறோம். என்ன செய்ய? அவர் வருவதற்கு முன்பே இந்தியர்களின் வர்த்தகம் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருந்தது என்பதற்கு மிக பல ஆதாரங்கள் உண்டு. இன்னும் சொல்வதானால் வாஸ்கோடாகாம வரும் போது இங்கே இந்திய மன்னர்கள் அரபு வணிகர்கள் , இந்தோனேசிய வணிகர்கள எல்லோரும் இருந்ததாக தானே கூறியுள்ளார். ஆனாலும் அவர் தான் முதலில் வந்தார். யாருக்கு? பிரிட்டீஷ் காரர்களுக்கு ஒரு போர்சுக்கள் காரர் வந்தது தான் முதல் வரலாறு. எங்களுக்கு அல்ல. ஆனாலும் நாங்கள் இந்த வரலாற்றை படித்து தொலையவேண்டியதாக உள்ளது. 
அதுக்கு காரணம் நேரு.
இன்னொரு சுவாரசியமான விஷயம் :

எகிப்த மன்னன் Ramesses II இறந்த பதபடுத்தபட்ட உடலில் இருந்து தற்போது கெய்ரோ மியுசியமில் உள்ளது. அந்த உடலில் x-ray examination செய்யபட்டபோது கிடைத்த தகவல்படி - அதில் பயன்படுத்த பட்டுள்ளது "மிளகு". அதாவது கிரேக்கம் , ரோமன் என்று எந்த பழைய நாகரீகமும் இந்திய நாகரிகத்துடன் வணிகம் செய்து வந்ததற்கு பல ஆதாரம் உண்டு - அது எவ்வளவு பழமையானது என்று இதை வைத்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த மிளகு வரலாறு கொஞ்சம் படிங்க நாங்க யார் என்பது தெரியும்.
எனவே நோக்கம் மதம் மாற்றவேண்டும் , தங்கள் வரலாறு தான் உலக வரலாறாக படிக்கவேண்டும் , தாங்கள் சொல்வது தான் இந்திய வரலாறு என்று இருக்க வேண்டும் என்ற கேடுகெட்ட புத்தி. நாங்கள் இங்கிலீஷ் மேனின் காப்பி ஆகி போனோம். Imitative Englishmen என்பது தான் பெருமை என்று ஆகிபோக மதம் மாற்றுவது எளிதாகி போனது. அதனால் எங்கள் பாரம்பரிய கல்வி முறை அழிந்தது. இப்போ பலருக்கு வாஸ்கோட காமா தான் பெரிய ஆள். அவர் எதனால் வந்தால் வந்து என்ன அட்டுழியம் செய்தார் என்பதெல்லாம் பலருக்கு தெரியாது.
பிஜேபி சமிபத்தில் வரலாற்றை மாற்றி எழுதுவதாக கூப்பாடு போடும் வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கதறவேண்டும்???? ஏன் என்றால் பிஜேபி உண்மையான வரலாற்றை மாற்றி எழுத விரும்புகிறார்கள். சும்மா ரயில் , மருத்துவம் , கல்வி என்று பிரிட்டீஷ் ஒரு முகத்தை மட்டும் நடத்துவது தான் இங்கே இருக்கும் பெரிய தவறு என்று மாற்றி உண்மையை எழுத கூச்சல் போடுகிறார்கள்.

மருத்துவமனைகள்?
1782, 92, 1803 , 1804 , 1820 தொட்டு இரண்டாண்டுக்கு ஒருமுறை வறட்சியும் வறுமையும் மக்களை வாட்டி வதைக்க காரணம் என்ன? 1838வரை நம்மிடம் தெளிவான தகவல்கள் இருக்கு. அதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் கூட்டம் கூட்டமாக மக்கள் இறந்து போக அதற்கு எந்த விததிலும் தடுக்கும் முயற்சி எடுக்காமல் விட்டுவிட்டு வரியை மட்டும் கராறாக பெற துடித்தனர் பிரிடீஷ்.

இந்தியாவில் தொடர்ந்து வரட்சி , வறுமை , நோய் தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் பரவ காரணமே இந்த முட்டாள் பிரிட்டீஷ் அரசு தான். என்ன சொல்கிறீர் முட்டாளா??
ஆம் , இந்தியார்கள் உழைப்பின் மூலம் பிரிடீஷ் அரசுக்கு 1922களில் வந்த வருமானம் மொத்த வருமானத்தில் 64%. அதாவது பிரிட்டீஷ் உலகம் முழவதும் காலணி நாடுகள் நடத்தலாம் ஆனால் வருமானம் கொட்டியது இந்தியாவில் தான். 100ரூபாயில் 64 ரூபாய் இந்த மக்களை ரத்தம் போல உறிஞ்சி தான் வாழ்ந்தனர்.

அப்படி வருமானம் கிடைக்கும் இந்த மக்கள் கொஞ்சமாது நல்ல இருந்தா தானே இன்னும் வருமானம் அதிகம் ஆகும்??? உழைப்பவன் நாசம் ஆகிவிட எங்கிருந்து வருமானம் கிடைக்கும்????? இந்த அறிவு இல்லாமல் காலரா , அம்மை என்று பரவினால் என்ன ஆகும்?
சென்னை ஒரிஸா பிகார் பம்பாய் என்று இந்தியா முழுவதும் வறுமையில் அதாவது உணவு இன்று இறந்தவர்கள் 1700- 1900 குள்ளாக மட்டும் சுமார் 2.5கோடி மக்கள் இறந்து போனார்கள். 


இந்த மாதிரி ஒரு கேவலமாக ஆட்சியை உலகத்தில் எவனும் இதற்கு முன்னர் கொடுத்திருக்க மாட்டான். 1900-1947குள்ளாக 1.5கோடி மக்கள் வறுமை காரணமாக இறந்தனர். மன்னர்கள் காலத்தில் இப்படி இறந்ததாக வரலாறு கிடையாது. அம்மை , மலேரியா போன்ற கொல்லை நோய்கள் பரவியது உண்டு. ஆனால் வறுமை இப்படி இருந்தது இல்லை.

இன்னொரு சுவாரசியமான தகவல்:

1866ல் ஒரிஸாவில் மிக பெரிய வறட்சி,. மக்கள் உணவுக்கு ஏங்கும் நிலையில் பிரிட்டன் அந்த பகுதியில் விளைந்த அரிசி சுமார் 1லட்சம் கிலோ அரிசியை பிரிட்டீஷ்க்கு ஏற்றுமதி செய்தது.. இங்கே பட்டினி சாவு , ஆனால் அவனுக்கு இங்கே உழைத்த மக்களின் அரிசி மட்டும் எந்த தடையும் இல்லாமல் சென்றது.
{1519-1939வரை சுமார் 53,00,000அடிமைகள் கொண்ட காலணி நாடுகளில் அடிப்படை கட்டுமான வேலைகள் , விவசாயம் என்று அனைத்து பார்த்தனர். அடிமைகள் என்றால் எல்லோருக்கும் ஆப்ரிக்க அடிமைகள் மட்டும் தான் நியாபகம் வரும். ஆனால் ஆப்ரிக்க மக்க 58% என்றால் இந்தியர்கள் 32% அடிமைகளாக உழைத்தார்கள். யார் குரல் கொடுத்தார் இவர்களுக்கு???}
பின்னர் இது பெரிய அளவு இந்தியாவில் உற்பத்தி பாதிப்பினை உருவாக்க - நேரடியாக பிரிடீஷ் வருமானம் வீழ்ச்சி கண்டது. என்ன செய்வர்??

மக்களுக்கு மருத்துவம் கொடுக்க முடிவு செய்தனர். எப்படி??? அப்போதும் இந்த மக்களிடம் இருந்த பழைய மருத்துவமுறைகளை முற்றிலும் அழிக்கும் வேலையும் , நல்ல தரமான மருத்துவ குறிப்புகளை இந்த மக்களிடம் இருந்து திருடும் வேலையும் தான் செய்தனர். எனவே காலனிநாடுகளில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை முதலீடு செய்வது மிக முக்கியம். அது மக்கள் நல்லா இருக்கணும் என்று காரணம் அல்ல - அப்போ தான் அரசுக்கு வருமானம் கூடும்.
சரி இப்படி அத கட்டுனேன் இதை கட்டுனேன் என்று கூறும் கூட்டம் கொஞ்சமாது பொருளாதார அறிவு இருக்கும் கூட்டமா???? நம்மிடம் 100ரூபாய் வருமானம் பெற்றால் நமக்கு எவ்வளவு செலவு செய்தான் என்று பார்கக்வேண்டுமா இல்லையா?

பிரிட்டீஷ் நமக்கு நம் வருமானத்தில் செலவு செய்தது வெறும் 0.2%கூட கிடையாது. அந்த முதலீட்டில் தான் இந்த மருத்துவமனை , கல்வி நிலையங்கள் எல்லாம் வந்தன. அப்போ பிரிட்டீஸ் அரசுக்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்று கொஞ்சம் சிந்திக்கவும். அறிவு , நாட்டின் மீது அக்கரை இருக்கும் எந்த மனிதனுக்கும் இதன நியாயம் புரியும், மத பற்றால் இந்த நாட்டை விட்டுவிட்டு காசாவையும் , ஜெருசலம் , பாலஸ்தீனம் என்று இன்னொரு நாட்டின் மண்ணை புனிதம் என்று கருதும் யாருக்கும் இது புரியாது.

இந்தியர்கள் வேறு என்ன செய்தோம்??

இந்தியர்களை அடிமைகளாக பிஜி , தென் ஆப்ரிக்க, மலேசியா, சிங்கபூர் என்று உலகம் முழுவதும் எடுத்து சென்று ஒரு கழுதைவியை விட மோசமாக வேலை வாங்கியதை பற்றிய வரலாறு படிக்கவும்??? அங்கே விவாசாயம் செய்ய கூறி செய்த கொடுமைகளை தெரியுமா?? தென் ஆப்ரிக்க மண்ணில் இந்த மக்கள் கரும்பு தோட்டத்தில் பட்ட கஷ்டம் ஒருவராது இங்கே அறிவார்களா??
அதாவது எந்த நாட்டிலும் இருந்து அடிமைகள் இங்கே வரவில்லை , இந்த மக்கள் தான் பிரிட்டீஷ் காலணி நாடுகளுக்கு சென்று அடிமைகளாக விவசாயம் முதல் தொழில்துறை வரை அனைத்தையும் செய்தனர். ஏன்???? ஏன் என்றால் இயற்கையாக இவர்கள் விவசாயம் முதல் வியாபாரம் வரை அத்துபடி. அதை அதிகாரம் கொண்டு சுரண்டினர் பிரிட்டீஷ் ஆட்சிர்கள்.

ராஜராஜ சோழன் காலத்துக்கு முன்பிருந்தே கப்பல் கட்டும் தொழில் நுட்பம் இங்கே இந்தியருக்கு கைவந்த கலை. மராட்டிய சிவாஜியிடம் 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் இருந்தன. கல்கொத்தா கப்பல் கட்டும் தொழிலுக்கு மிக பிரசித்திபெற்ற இடம். இப்படி வணிக ரீதியாக உயர்ந்த அளவில் இருந்த மக்களை கொண்டு 300க்கும் மேற்பட்ட கப்பல்களை சரக்கு சுமந்து செல்ல செய்ய கூறி அடிமை தனம் செய்த பிரிட்டீஸ் ஒரு ஒரு கப்பலை ஏற்றுமதி செய்ய இந்தியர்களுக்கு அனுமதி வழங்கியதா??? எங்கள் வா உ சிதம்ரம் பிள்ளை போன்றவர்கள் எடுத்த முயற்சியை நாசம் செய்ததோடு சிறை அல்லவா அடைத்தனர்.
தொழில் போட்டி என்றால் நேரடியாக மோதவேண்டும்.
போட்டுக்கு இந்தியர்கள் வளரவே கூடாது அடிமை அடிமை அடிமை என்று ஆக்கிவிட்ட இந்த பிரிட்டிஸ் அரசை இன்று தூக்கி கொண்டாடுகிறான் இந்த நியூஸ் 7 செய்தி சேனலில் திரியும் ஒரு ஒநாய்... காரணம் என்ன??? மதம் மதம், அவர் கிருஷ்டவ மதம் அவனை இந்த பூமியை புனிதம் என்று மதிக்க பழக்கவில்லை.
உலக போரில் இந்தியர்கள் இல்லை என்றால் இந்த பிரிட்டீஸ் அதன் நேச நாடுகள் ஒன்னும் இல்லாமல் ஹிட்லரிடம் அடிவாங்கி அழிந்து போகி இருக்குமே அந்த உண்மை ஏன் மறைக்கிறார்கள் பிரிட்டீஷ்???
பிரிட்டீஷ் வெற்றிக்கு யார் காரணம் - குட்டியா இந்தியர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைதத்தா????

ஜெர்மனி ஏன் தோற்றது??? காரணம் அவர்களிடம் போருக்கு தேவையான ஆயுதங்கள் , ஆடைகள் என்று அனைத்தையும் உற்பத்தி செய்து வீரர்களுக்கு அனுப்ப பெரிய அளவு labour இல்லை. ஆனால் பிரிட்டீஷ் அரசுக்கு 1,40,00,000 இந்தியர்கள் வேலை செய்தோம்.. அது மட்டுமா 25லட்சம் வீரர்கள் பிரிடீஷ் அரசுக்காக போரில் இறங்கினர் , இது தவிர் கப்பல் விமான படை என்று எல்லாவற்றிலும் கடைமட்ட ஊழியர்கள் இந்தியர்கள் தான். சுமார் 2கோடிக்கும் மேல். அதாவது ஜெர்மனி வேறு 3.5லட்சம் ஊழியர்களை கொண்டு தன் படைக்கு தேவையான உற்பத்தியை செய்ய , பிரிட்டீஷ் படைக்கு 1.5கோடி ஊழியர்கள் இந்தியாவில் வேலை செய்தனர்.




மீண்டும் கூறுகிறேன் வேறு எந்த நாட்டினரும் இந்த வேலையில் இல்லை. முழுக்க முழுக்க labour force பிரிடீஷ்க்கு கிடைத்தது இந்தியர்களிடம் தான். அது தான் முதுகெலும்பு வீரர்களுக்கு. ஆனால் எங்கள் நாட்டில் நாங்களே எங்களுக்கு அங்கீகாரம் இல்லாத ஒரு படிப்பை பள்ளிகளில் படிக்கிறோம்.
அந்த புண்ணியம் எங்கள் நேரு , நேரு குடும்பத்தை சாரும். தமிழ் நாட்டில் அதையும் விட கேவலமான திராவிட கட்சிகள் வரலாறு தானே படிக்கிறோம். வைக்கம் வீரர் ஈவே ராமசாமி என்று இன்றுவரை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வரலாறு நடத்தி மக்களை முட்டாள் ஆக்கும் கூட்டம் திராவிட கட்சிகள். இப்படி இருந்தால் எது தான் விளங்காது?

என்னால் ஒரு பதிவில் மொத்தமும் வெளியிட முடியாத நாசமான வரலாறு இந்தியர்களுடையது.


இறுதியாக :
1947ல் விடுதலை. அதன் பின் சரியோ தவறோ சட்டம் ஆட்சியர் எல்லாம் விடுங்கள். ஆனால் மக்கள் சுதந்திரம் கிடைக்க மீண்டும் எழுந்து உழைத்தனர். இன்று?

இன்று உலகத்தின் 4வது மிக பெரிய ராணுவம் இந்தியர்களுடையது;
உலகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், மிக பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6இடத்தில்
textile exporters மீண்டும் இந்தியர்கள் 3ஆவது இடத்தை பிடித்துவிட்டோம்.
Space Research Organisations என்று எடுத்து பார்த்தால் - இந்தியா 5இடத்தில் உள்ளது.
கல்வி ? 7% என்று விட்டு சென்ற பிரிட்டீஷ் - இன்று 80%நெருங்கிவிட்டோம்.
பிரிட்டீஸ் தான் இந்தியாவில் கிரிக்கெட் சொல்லி கொடுத்தேங்க - இரண்டும் முறை உலக கோப்பையை வாங்கிவிட்டோம்.
{இந்த கட்டுரை எழுதும் போது உலகத்தின் global hunger index இந்தியர்கள் 100இடத்தில் இருபதாக செய்திகள் வெளிவருகின்றன. அதற்கு காரணம் அரசு அல்ல . ஏன் என்றால் உலகத்தின் பெரிய ஆளவு உணவு ஏற்றமதி செய்யும் நாடுகளில் முக முக்கியமானது இந்திய. இந்தியாவில் ரேசன் கடைகளில் இலவச உண்டு தொட்டு பள்ளிகளில் கூட இலவச உணவு உண்டு. பிரச்சனை மக்களுக்கு ஆரோக்கியமான உணவு எடுக்கும் பழக்கம் உருவாகவில்லை என்று தான் global hunger index தெளிவாக கூறுகிறது. அதை தனியாக் விளக்குகிறேன். உடனே இந்தியாவை அவமானம் செய்ய ஒரு கூட்டம் ஓடி வரும்.}

இன்னும் ஆயிரம் சாதனைகளை சொல்லி கொண்டே செல்லலாம். மிக மிக முக்கியம் இந்தியர்களிடம் இன்று இருக்கும் சாதனைகள் 99.9% பிரிடீஷ் அரசுக்கு எந்த சொந்தமும் கிடையாது அது ரயில்வே முதல் மருத்துவம் வரை. அது நாங்கள் 1947க்கு பின்னர் எங்கள் முயற்சியால் உருவாக்கி கொண்டது தவிர எவனுடைய பிச்சையில் வாழவில்லை. தெற்காசியாவில் எங்கள் தயவு இல்லாமல் எந்த அணுவும் நகராது - உலகத்தில் இந்தியாவை தவிக்கமுடியா சக்தியாக உருவாக்கியுள்ளோம்.
இந்த நாட்டை இந்த மண்ணின் அருமை, தியாகம், புகழ் என்று இவ்வளவு தெரியாமல் ஏன் இந்த கிருஸ்தவ மதம் மாற்றும் மக்களுக்கு பிரிட்டீஸ் பெரிதாக தெரிகிறது???
காரணம் - அவர் கொண்ட மதம் என்றால் இவர்களை விட கேவலமான ஒரு ஈன பிறவி இந்த மனித குலத்தில் வேறு கிடையாது. இப்படி நாட்டை நாசம் செய்த பிரிட்டீஸ் அரசை உயர்வாக பேசி திரியும் யாரையும் "தூக்கில் போடுங்கள் இல்லை சட்டம் கொண்டு சுட்டு தள்ளுங்கள்" என்று கூறுவேன்.
எதற்கு இவ்வளவு வெறி, கோபம்?
பிரிடீஷ் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் ஒருமுறை வரி கட்டாத காரணத்தால் கல்கொத்தாவில் ஒரு வியாபாரியின் மனைவியை நாடு தெருவில் ஆடையை கழற்றி, நிர்வாணம் ஆக்கி பின்னர் செய்த கொடுமையை நான் படித்த போது தோன்றியது "இந்த அளவு மக்கள் தியாகத்தை, மதம் மாறிய ஒரே காரணத்தால் ஒருவன் பிரிடீஷ்க்கு வக்காலத்து வாங்குவான் என்றால் அவன் ஏன் உயிருடன் இங்கே இருக்கவேண்டும்?".
அதாவது நன்கு புரிந்து கொள்ளுங்கள் எனக்கு கோபம் பிரிடீஷ் மக்கள் மீது கிடையாது. அது வரலாறு , அவர்களுடைய முன்னோர் செய்த குற்றம். எனவே இன்று இருப்பவர்களிடம் நான் காட்டுவது ஏற்புடையது அல்ல. ஆனால் அதை சரி என்று வக்காலத்து வாங்கும் இங்கே இருக்கும் இந்த மதம் மாற்றும் கூட்டத்தை, பெரியார் என்ற ஈவே ராமசாமி கூட்டத்தை நான் வெறுக்கிறேன். இவர்கள் அழித்தொழிக்க பட வேண்டும் என்பேன்.
வரலாற்றை படித்துவிட்டு மனசாட்சியுடன் பேசுங்கள் - நான் (மாரிதாஸ்) கொண்ட இந்த கோபத்தின் நியாயம் புரியும்.